காஞ்சி காமகோடி மகான் மகா சுவாமிகளின் சொற்பொழிவுகளிடமிருந்து எடுக்கப்பட்ட
ஆன்மீக பொன்மொழிகள்,
காஞ்சி காமகோடி மகான் மகா சுவாமிகளின் சொற்பொழிவுகளிடமிருந்து எடுக்கப்பட்ட ஆன்மீக பொன்மொழிகள்,
1) சாஸ்திரங்களைத் தெளிவாக அறிந்து அதன்படி மக்களை வழிநடத்தி அதை அஞுசரிப்பவர்தான் ஆசார்யார்
2) சாஸ்திரம் மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் அவர் வித்வான்தான்
3) சாஸ்திரம் மட்டடும் தெரிந்தால் அவர் - வித்வான். சாஸ்திரம் அஞுபவிப்பவர் - ஞானி சாஸ்திரம் உபதேசம் செய்பவர் - பிரசாரகர்
4) முதலில் அழகாகத் தோன்யதுதான் அப்புறம் உபத்திரமாக போகிறது
5) அவரவர்கள் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் செளக்கியம்
6) பரமாத்மாவிடம் நம்மையறியாமல் சித்தத்தை சேர்ப்பதுதான் பக்தி
7) உண்மை என்பது அறிவுதான் என்றால் அறிகிற அந்த சக்தியே உண்மை - அதுவே சத்தியம்
8) ஆசைகளை அடக்கி, மாயையை உடைத்தெறி
9) நிறைநது நின்ற ஒன்றை தெரிந்து விட்டால் நிறைந்து போகிறது.
10) சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீட்சண்யம் இருக்கும்
11) மனத்தை அடக்கி, நிலைநிறுத்தி ஈசனிடம் சேர்ப்பது பிராணாயமம் , தியானம் நிஷ்னம் - இதை சொல்வது யோக பாதம்
12) மனத்தை வெற்றி கொண்டவர் உலகத்தை வெற்றி கொள்வான். அந்த வெற்றிக்கு உதவுவது ஞானம்,
13) ஈசனை தவிர வேறு பொருள் இல்லை என்ற அனுபவம் வந்து விட்டால் ஆசைக்கு இடமில்லை,
14) தினமும் கொஞ்ச நேரமாவது சிவ நாமம் சொன்னால் எல்லா சேமமும் கிடைக்கும்.
15) பிறக்கு உதவி செய்யும் போது, இருவரும் மனநிறைவு பெறுவர் 16) நல்ல எண்ணங்கள் இருந்தால் நல்ல செயல்கள் தானாகப் பெருகும்.
17) பரோபகாரம் எதுவும் செய்யாத நாளெல்லாம் நாம் இருந்தும் செத்த நாளே 18) அன்பில்லா வாழ்கை வீண் வியர்த்தம்.
19) சாந்தம் வந்தால் எல்லா பற்றும் போய்வடும்.
20) அழிவில்லாத கடவுடளிடம் செலுத்தும் அன்புக்க அழவேது?
21, நிறை வேறாத ஆசைகளின் இரண்டு உருவங்கள் தான் துக்கமும், கோபமும்.
22. நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக் கொண்டு பிறருக்கு உபதேசம் செய்தால் அது பிரயோசனப்படாது.
23. கல்விக்கு இரண்டு அம்சங்கள் உண்டு ஒன்று- குருபக்தி, மற்றொன்று விநயம் ,
24. தாய், தந்தை , குரு இம்மூவரிடமும் அசையா பக்தி கொண்டால் மேன்மை தரும்.
25. மான, அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டை செய்தல் வேண்டும்.
26. எக்காலத்திலும், எவ்விஷயத்திலும் திருப்தியை ஏற்படுத்தக் கூடிய தானம் - ஞான தானம்.
27.உபகாரம் செய்தால் நமக்கு சித்திக்கிற சித்த சுத்தியே பிரயோசனம் 28. கீர்த்தனம் என்றால் பகவான் புகழைப் பாடுவது,
29. வழிபாடு தனியாகச் செய்வதைவிட கூட்டு வழிபாட்டில் உற்சாகம் இருக்கிறது.
30. வாக்கு, மனம், சரீரம், மூன்றும் ஒருவருக்கு சத்தியத்திலே நிலைதது விட்டால் அவர் சொல்வதெல்லாம் சத்தியமாகி விடும்.
31, பக்தியுடன் மனசை கடந்து விட்டால் ஞானம்
32. "தான்" என்பதே இல்லையேல் ஒருவன் பரமாத்வே ஆகிவிடுகிறான் அதுதான் அத்வைதம் .
33. சேக்கிழார் ரொம்ப அழகாக வேதத்தை ஒரு பெரிய நதியாகவும் அதிலே சைவம் வைஷ்ணவம் முதலிய சம்பிரதாயங்களை பல படித்துறைகளாகவும் சொல்லியிருக்கிறார்.
34. வியாதியை போக்க - வைத்தியன். யாகம் வாங்க - பணக்காரன். துக்கம், பிறவிப்பிணி நீக்க - பரமேஸ்வரன் .
35. நாம் செய்கின்ற காரியங்களை சுத்தமாக சித்த சுத்தியோடு தர்மமான முறையில் செய்ய ஈஸ்வர பக்தி வேண்டும்.
36. சேராததை முடித்து வைப்பது எதுவோ அதுதான் மாயை, எது இன்னதென்று சொல்ல முடியாததே அதுதான் மாயை.
37. பரன் என்றால் பெரியவர் பரம புருஷன் என்றால் பெரிய ஆள் - பெரிய ஆள் என்பதே பெருமாள் என்றானது.
38. பிறப்பு என்பது காமனால் உண்டாகிறது. இறப்பு என்பது காலனால் உண்டாகிறது.
39. பிறவி என்று எடுத்துவிட்டால் ஆனந்தம் எப்போதோ கொஞ்சம்தான் ஆனால் துக்கம்தான் அதிகமாக இருக்கிறது.
40, அழியாத வஸ்துவினிடத்தில் பரியம் வைத்தால் அந்த பரியம் அழியாமல் இருக்கும்.
41. ஒன்றை ஆராய்ந்து ஒன்றை அறிகிற ஒன்றை செய்கிற, சக்தி யெல்லாம் ஈஸ்வர சக்தியிலிருந்து பிரகாசிக்கின்றன.
42. குருவினடத்திலே அபசாரம் பண்ணி விட்டு ஈஸ்வரவனிடத்தில் போனால் ஒன்றும் நடக்காது.
43. தெய்வ பக்தி, குருபக்தி ஆகிய இரண்டும் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
44. விஞ்ஞான அறிவின் மூலம் வெளியில் இருக்கிற எத்தனையோ பூதங்களை அடக்கும் நாம் நம்மை ஆட்டி வைக்கும் மனம் என்னும் பூதத்தை அடக்க முடியவில்லை..
45, கஷ்டத்தையோ, துக்கத்தையோ, காமத்தையோ தெரிந்து கொள்ள அறிவு சக்தி இல்லையெனில் வாழ்வில் பிரயோசனம் இல்லை.
46. புறக்கண்ணால் பார்க்க முடியாததை எல்லாம் அகக் கண்ணால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பார்த்து விடலாம்,
47. தவறுகளுக்கு எல்லாம் பிராயசித்தமாக இருப்பது காயத்ரி ஜபம்
48. ஓர் அழகியை பார்த்தால் காமம் வரும் துஷ்டனை நினைத்தால் கோபம் வரும் பரமனை நினைத்தால் மனசு சுத்தமாகும்
49. மனசு அடங்கினால் சுவாசம் அடங்கி உள் உணர்ச்சிக்கு ஏற்றபடி வெளிக் காரியங்கள் நடப்பதை பார்க்கலாம்.
50.பக்தி வர வேண்டுமானால் சாந்தம் வரவேண்டும், சத்தியம் வரவேண்டுமானால் சிவச் சின்னங்களை அணிய வேண்டும்.
51விதிப்படி மூச்சை வெளியே விடுவதானலும் உள்ளே அடக்குவதனாலும் அமைதி பெறும்.
52 தயை (ஈகை) உள்ள இருதயமே வெளியில் தெரியும் அழகு .
53 நாக்கை சுத்தமாக்க சிவநாமம். இருதயத்தை சுத்தமாக்க - சிவபக்தி - தியானம்.
54 சிவ என்ற இரண்டு எழுத்தை சொன்னாலே பாவம் விலகும்.
55 பஸ்மம், ருத்திராட்சம், வில்வம் ஸ்படிகம் ,லிங்கம் , பஞ்சாட்சரம் ஆகியஐந்தும் சிவ சின்னங்கள.
56 மூச்சி இல்லாமல் மனிதன் இல்லை வேதம் இல்லாமல் ஈசுவரன் இல்லை 57 ஞானம் என்ற நெருப்பினாலே உலகங்களை எல்லாம் எரித்து விடலாம் சிவம் தான் மிஞ்சும்.
58 காரியங்களுடைய காரணத்தை தேடிக் கொண்டு போனால் கடைசியில் கிடைப்பது மெய்யான பொருள்.
59 நாம் எத்தனையோ காரியங்களை செய்து வருகிறோம், ஆனால் நாம் செய்கிறோம் என்ற அகம்பாவம் நமக்கு வரக்கூடாது.
60 நமக்கு அகம்பாவம் இல்லை என நினைத்தாலேயே அகம்பாவம் இல்லாத உயர்ந்த குணத்திலிருந்தே அகம்பாவம் வந்து விடுகிறது.
61 உண்மை என்பது வெண்மை அந்த வெண்மை என்பது நீறு அந்த திருநீறு தான் ஆண்டவன்.
62 உண்மை பொருளை பூசிக் கொண்டால் உண்மை பொருளின் நினைவு வரும் அதனால்தான் நீறு பூச சொல்கிறது சைவம்.
63 சித்தம் என்ற நிலைக் கண்ணாடி மூலம் பரம்பொருள் என்ற உண்மை வஸ்துவை பார்க்கவேண்டும்.
64 நல்லது - காரணம் இல்லாத அருள். கஷ்டம் - காரணத்துக்காக ஏற்படும் அருள்.
65 உண்மையிலேயே நம்முடைய கெட்ட குணம் எவ்வளவு நல்ல குணம் எவ்வளவு என்று பிரித்துப் பார்த்தால் கெட்ட குணமே மலைபோல் இருக்கும்
66 ஒரு முகப்படுத்த சித்தம் ஆடாமல் இருக்க வேண்டும் கெட்ட எண்ணம் என்ற அழுக்கு படிந்திருந்தால் ஒன்றும் தெரியாது.
67 தினமும் படுக்கும் முன் அன்று நாம் செய்த தப்பை குறித்துக் கொண்டு நாளை முதல் பண்ணாமல் இருக்க பகவானை பிராத்திக்க வேண்டும்.
68 நாம் பண்ணின பாவத்திற்காக அழுது கொண்டிராமல் அந்தமாதிரி புத்தியைஇனி கொடுக்கவேண்டாம் என பிராத்திப்பது நமது கடமை.
69 ஆண்டவன்தான் இந்த உலகத்திற்கு எல்லாம் மேலான காரணம் அவன் ஒருவனே உண்மை பொருள்.
70 வாழ்வில் ஆனந்தம் வேண்டுமென்றால் உண்மையான அந்த பொருளுக்காகத்தான் வாழ வேண்டும் .
71 இந்த பொய்யான உடம்பிற்கு மெய் என்று பெயர் பெயராவது மெய் என்று இருக்கட்டும் இந்த உடம்பிற்கு,
72 ஒரே தெய்வத்தை பல ரூபத்தில் வழிபடுவது பல தெய்வங்கள் இருப்பதாக என்னுவதாகாது
73 அன்டை வீட்டுக்காரனை சகோதரானாக நினை
74 விரோதியை ந்ண்பனாக நினை ,
75 உன்னிடம் மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறாயோ அப்படியே மற்றவர்களிடமும் நீயும் இரு .
76 சாப்பிடுகிறவனை விட சாப்பாடு போட்டவனுக்குத்தான் அதிக ஆனந்தம் இருக்கிறது.
77 மந்திரங்கள் எல்லாவற்றிக்கும் மூலமாக இருப்பது பிரணவம் .
78 திரு நீறும் திருமண்ணும் ஒரே தத்துவத்தைதான் காட்டுகின்றன.
79 நமக்கு சரீரம் தான், உயிர் தெரியவில்லை, அதனால் தான் சரீரத்திற்கு மெய் என்று பெயர் வைத்தார்கள் .
80 நமக்கு தெரியாமல் இருக்கின்ற உயிர் போய் விட்டதனால் அப்பவும் இந்த மெய் (உடம்பு) ஒன்றுக்கும் பிரயோசனமற்றபெர்ய்யாகி விடுகிறது.
81 பக்தி பண்ணுவதற்கு பலன் பக்தியால் கிடைக்கிற மன நிறைவுதான் .
82 சுக துக்கங்களில் சலனமடையாமல் தானும் மற்றவர்களையும் ஆனந்தமாக இருக்க செய்வது தான் யோகம் .
83 சித்த சுத்தி மோட்சத்திலேயே கொண்டு போய் சேர்க்கும்
84 தனது என்ற விருப்பு வெறுப்பில்லாமல் சாஸ்திரத்திற்கு கட்டுபடுவது முக்கியம்
85 ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது,
86 நம் கோபம் எதிராளியை மாற்றாது அவனுக்கும் நம்மிடம் கோபத்தை உண்டாக்குவதுதான் அதன் பலன் .
87 ஒருவன் தப்புப் பண்ணிகிறான் என்றால் கோபம் கொள்கிறோமே அப்படியானால் நாம் தப்பு பண்ணாதவர்களா?
88 அன்பினாலேயே பிறரை மாற்றுவது தான் நமக்கு பெருமை அதுதான் நிலைத்து நிற்கும்
89 நாம் தப்பே செய்யவில்லை யென்றால் அன்பு மயமாகி விடுவோம்
90 நம் கோபத்தினால் நமக்கே தான் தீங்கு செய்து கொள்கிறோம்
91 அன்பு நமக்கு ஆனந்தம் எதிராளிக்கும் ஆனந்தம்.
92 ஆசை என்று அலைந்தால் சாந்தி என்பதே ஒருநாளும் இல்லை.
93 துக்கம் உன்னிடம் ஒட்டாமல் பிரிந்து தள்ளிவிட்டால் அதுவே யோகம்
94 கானல் நீர் போன்றதே உலக மாயையும்
95 ஆசைக்கும் துவேசத்துக்கும் காரணம் அகங்காரம் அது தொலைந்தால் எந்தக் காரியத்திலும் உயர்வு தாழ்வு தெரியாது
96 நமக்கு அது வேண்டும் இதுவேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிறவரையில் நாம் தரித்ததிரர்கள் தான் .
97 எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே நமக்கு பிரமானம்.
98 தியானம் பண்ணாமல் வெறும் பூசை மட்டும் செய்தால் மதத்தை வளர்க்க முடியாது .
99 துக்கம், கோபம் இவற்றோடு உயிர் பிரிந்தால் அதே தன்மையோடே ஜனனம் வரும் .
100 ஜன்னம் எடுத்தது ஜன்மத்தை போக்கிக் கொள்ளத்தான்,
101 மூச்சு இல்லாமல் மனிதன்இல்லை சேதம் இல்லாமல் ஈஸ்வரன் இல்லை
திருச்சிற்றம்பலம் ... ஓம் நமசிவாய ஓம்.
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
ஆன்மீக பொன்மொழிகள்,
காஞ்சி காமகோடி மகான் மகா சுவாமிகளின் சொற்பொழிவுகளிடமிருந்து எடுக்கப்பட்ட ஆன்மீக பொன்மொழிகள்,
1) சாஸ்திரங்களைத் தெளிவாக அறிந்து அதன்படி மக்களை வழிநடத்தி அதை அஞுசரிப்பவர்தான் ஆசார்யார்
2) சாஸ்திரம் மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் அவர் வித்வான்தான்
3) சாஸ்திரம் மட்டடும் தெரிந்தால் அவர் - வித்வான். சாஸ்திரம் அஞுபவிப்பவர் - ஞானி சாஸ்திரம் உபதேசம் செய்பவர் - பிரசாரகர்
4) முதலில் அழகாகத் தோன்யதுதான் அப்புறம் உபத்திரமாக போகிறது
5) அவரவர்கள் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் செளக்கியம்
6) பரமாத்மாவிடம் நம்மையறியாமல் சித்தத்தை சேர்ப்பதுதான் பக்தி
7) உண்மை என்பது அறிவுதான் என்றால் அறிகிற அந்த சக்தியே உண்மை - அதுவே சத்தியம்
8) ஆசைகளை அடக்கி, மாயையை உடைத்தெறி
9) நிறைநது நின்ற ஒன்றை தெரிந்து விட்டால் நிறைந்து போகிறது.
10) சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீட்சண்யம் இருக்கும்
11) மனத்தை அடக்கி, நிலைநிறுத்தி ஈசனிடம் சேர்ப்பது பிராணாயமம் , தியானம் நிஷ்னம் - இதை சொல்வது யோக பாதம்
12) மனத்தை வெற்றி கொண்டவர் உலகத்தை வெற்றி கொள்வான். அந்த வெற்றிக்கு உதவுவது ஞானம்,
13) ஈசனை தவிர வேறு பொருள் இல்லை என்ற அனுபவம் வந்து விட்டால் ஆசைக்கு இடமில்லை,
14) தினமும் கொஞ்ச நேரமாவது சிவ நாமம் சொன்னால் எல்லா சேமமும் கிடைக்கும்.
15) பிறக்கு உதவி செய்யும் போது, இருவரும் மனநிறைவு பெறுவர் 16) நல்ல எண்ணங்கள் இருந்தால் நல்ல செயல்கள் தானாகப் பெருகும்.
17) பரோபகாரம் எதுவும் செய்யாத நாளெல்லாம் நாம் இருந்தும் செத்த நாளே 18) அன்பில்லா வாழ்கை வீண் வியர்த்தம்.
19) சாந்தம் வந்தால் எல்லா பற்றும் போய்வடும்.
20) அழிவில்லாத கடவுடளிடம் செலுத்தும் அன்புக்க அழவேது?
21, நிறை வேறாத ஆசைகளின் இரண்டு உருவங்கள் தான் துக்கமும், கோபமும்.
22. நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக் கொண்டு பிறருக்கு உபதேசம் செய்தால் அது பிரயோசனப்படாது.
23. கல்விக்கு இரண்டு அம்சங்கள் உண்டு ஒன்று- குருபக்தி, மற்றொன்று விநயம் ,
24. தாய், தந்தை , குரு இம்மூவரிடமும் அசையா பக்தி கொண்டால் மேன்மை தரும்.
25. மான, அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டை செய்தல் வேண்டும்.
26. எக்காலத்திலும், எவ்விஷயத்திலும் திருப்தியை ஏற்படுத்தக் கூடிய தானம் - ஞான தானம்.
27.உபகாரம் செய்தால் நமக்கு சித்திக்கிற சித்த சுத்தியே பிரயோசனம் 28. கீர்த்தனம் என்றால் பகவான் புகழைப் பாடுவது,
29. வழிபாடு தனியாகச் செய்வதைவிட கூட்டு வழிபாட்டில் உற்சாகம் இருக்கிறது.
30. வாக்கு, மனம், சரீரம், மூன்றும் ஒருவருக்கு சத்தியத்திலே நிலைதது விட்டால் அவர் சொல்வதெல்லாம் சத்தியமாகி விடும்.
31, பக்தியுடன் மனசை கடந்து விட்டால் ஞானம்
32. "தான்" என்பதே இல்லையேல் ஒருவன் பரமாத்வே ஆகிவிடுகிறான் அதுதான் அத்வைதம் .
33. சேக்கிழார் ரொம்ப அழகாக வேதத்தை ஒரு பெரிய நதியாகவும் அதிலே சைவம் வைஷ்ணவம் முதலிய சம்பிரதாயங்களை பல படித்துறைகளாகவும் சொல்லியிருக்கிறார்.
34. வியாதியை போக்க - வைத்தியன். யாகம் வாங்க - பணக்காரன். துக்கம், பிறவிப்பிணி நீக்க - பரமேஸ்வரன் .
35. நாம் செய்கின்ற காரியங்களை சுத்தமாக சித்த சுத்தியோடு தர்மமான முறையில் செய்ய ஈஸ்வர பக்தி வேண்டும்.
36. சேராததை முடித்து வைப்பது எதுவோ அதுதான் மாயை, எது இன்னதென்று சொல்ல முடியாததே அதுதான் மாயை.
37. பரன் என்றால் பெரியவர் பரம புருஷன் என்றால் பெரிய ஆள் - பெரிய ஆள் என்பதே பெருமாள் என்றானது.
38. பிறப்பு என்பது காமனால் உண்டாகிறது. இறப்பு என்பது காலனால் உண்டாகிறது.
39. பிறவி என்று எடுத்துவிட்டால் ஆனந்தம் எப்போதோ கொஞ்சம்தான் ஆனால் துக்கம்தான் அதிகமாக இருக்கிறது.
40, அழியாத வஸ்துவினிடத்தில் பரியம் வைத்தால் அந்த பரியம் அழியாமல் இருக்கும்.
41. ஒன்றை ஆராய்ந்து ஒன்றை அறிகிற ஒன்றை செய்கிற, சக்தி யெல்லாம் ஈஸ்வர சக்தியிலிருந்து பிரகாசிக்கின்றன.
42. குருவினடத்திலே அபசாரம் பண்ணி விட்டு ஈஸ்வரவனிடத்தில் போனால் ஒன்றும் நடக்காது.
43. தெய்வ பக்தி, குருபக்தி ஆகிய இரண்டும் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
44. விஞ்ஞான அறிவின் மூலம் வெளியில் இருக்கிற எத்தனையோ பூதங்களை அடக்கும் நாம் நம்மை ஆட்டி வைக்கும் மனம் என்னும் பூதத்தை அடக்க முடியவில்லை..
45, கஷ்டத்தையோ, துக்கத்தையோ, காமத்தையோ தெரிந்து கொள்ள அறிவு சக்தி இல்லையெனில் வாழ்வில் பிரயோசனம் இல்லை.
46. புறக்கண்ணால் பார்க்க முடியாததை எல்லாம் அகக் கண்ணால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பார்த்து விடலாம்,
47. தவறுகளுக்கு எல்லாம் பிராயசித்தமாக இருப்பது காயத்ரி ஜபம்
48. ஓர் அழகியை பார்த்தால் காமம் வரும் துஷ்டனை நினைத்தால் கோபம் வரும் பரமனை நினைத்தால் மனசு சுத்தமாகும்
49. மனசு அடங்கினால் சுவாசம் அடங்கி உள் உணர்ச்சிக்கு ஏற்றபடி வெளிக் காரியங்கள் நடப்பதை பார்க்கலாம்.
50.பக்தி வர வேண்டுமானால் சாந்தம் வரவேண்டும், சத்தியம் வரவேண்டுமானால் சிவச் சின்னங்களை அணிய வேண்டும்.
51விதிப்படி மூச்சை வெளியே விடுவதானலும் உள்ளே அடக்குவதனாலும் அமைதி பெறும்.
52 தயை (ஈகை) உள்ள இருதயமே வெளியில் தெரியும் அழகு .
53 நாக்கை சுத்தமாக்க சிவநாமம். இருதயத்தை சுத்தமாக்க - சிவபக்தி - தியானம்.
54 சிவ என்ற இரண்டு எழுத்தை சொன்னாலே பாவம் விலகும்.
55 பஸ்மம், ருத்திராட்சம், வில்வம் ஸ்படிகம் ,லிங்கம் , பஞ்சாட்சரம் ஆகியஐந்தும் சிவ சின்னங்கள.
56 மூச்சி இல்லாமல் மனிதன் இல்லை வேதம் இல்லாமல் ஈசுவரன் இல்லை 57 ஞானம் என்ற நெருப்பினாலே உலகங்களை எல்லாம் எரித்து விடலாம் சிவம் தான் மிஞ்சும்.
58 காரியங்களுடைய காரணத்தை தேடிக் கொண்டு போனால் கடைசியில் கிடைப்பது மெய்யான பொருள்.
59 நாம் எத்தனையோ காரியங்களை செய்து வருகிறோம், ஆனால் நாம் செய்கிறோம் என்ற அகம்பாவம் நமக்கு வரக்கூடாது.
60 நமக்கு அகம்பாவம் இல்லை என நினைத்தாலேயே அகம்பாவம் இல்லாத உயர்ந்த குணத்திலிருந்தே அகம்பாவம் வந்து விடுகிறது.
61 உண்மை என்பது வெண்மை அந்த வெண்மை என்பது நீறு அந்த திருநீறு தான் ஆண்டவன்.
62 உண்மை பொருளை பூசிக் கொண்டால் உண்மை பொருளின் நினைவு வரும் அதனால்தான் நீறு பூச சொல்கிறது சைவம்.
63 சித்தம் என்ற நிலைக் கண்ணாடி மூலம் பரம்பொருள் என்ற உண்மை வஸ்துவை பார்க்கவேண்டும்.
64 நல்லது - காரணம் இல்லாத அருள். கஷ்டம் - காரணத்துக்காக ஏற்படும் அருள்.
65 உண்மையிலேயே நம்முடைய கெட்ட குணம் எவ்வளவு நல்ல குணம் எவ்வளவு என்று பிரித்துப் பார்த்தால் கெட்ட குணமே மலைபோல் இருக்கும்
66 ஒரு முகப்படுத்த சித்தம் ஆடாமல் இருக்க வேண்டும் கெட்ட எண்ணம் என்ற அழுக்கு படிந்திருந்தால் ஒன்றும் தெரியாது.
67 தினமும் படுக்கும் முன் அன்று நாம் செய்த தப்பை குறித்துக் கொண்டு நாளை முதல் பண்ணாமல் இருக்க பகவானை பிராத்திக்க வேண்டும்.
68 நாம் பண்ணின பாவத்திற்காக அழுது கொண்டிராமல் அந்தமாதிரி புத்தியைஇனி கொடுக்கவேண்டாம் என பிராத்திப்பது நமது கடமை.
69 ஆண்டவன்தான் இந்த உலகத்திற்கு எல்லாம் மேலான காரணம் அவன் ஒருவனே உண்மை பொருள்.
70 வாழ்வில் ஆனந்தம் வேண்டுமென்றால் உண்மையான அந்த பொருளுக்காகத்தான் வாழ வேண்டும் .
71 இந்த பொய்யான உடம்பிற்கு மெய் என்று பெயர் பெயராவது மெய் என்று இருக்கட்டும் இந்த உடம்பிற்கு,
72 ஒரே தெய்வத்தை பல ரூபத்தில் வழிபடுவது பல தெய்வங்கள் இருப்பதாக என்னுவதாகாது
73 அன்டை வீட்டுக்காரனை சகோதரானாக நினை
74 விரோதியை ந்ண்பனாக நினை ,
75 உன்னிடம் மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறாயோ அப்படியே மற்றவர்களிடமும் நீயும் இரு .
76 சாப்பிடுகிறவனை விட சாப்பாடு போட்டவனுக்குத்தான் அதிக ஆனந்தம் இருக்கிறது.
77 மந்திரங்கள் எல்லாவற்றிக்கும் மூலமாக இருப்பது பிரணவம் .
78 திரு நீறும் திருமண்ணும் ஒரே தத்துவத்தைதான் காட்டுகின்றன.
79 நமக்கு சரீரம் தான், உயிர் தெரியவில்லை, அதனால் தான் சரீரத்திற்கு மெய் என்று பெயர் வைத்தார்கள் .
80 நமக்கு தெரியாமல் இருக்கின்ற உயிர் போய் விட்டதனால் அப்பவும் இந்த மெய் (உடம்பு) ஒன்றுக்கும் பிரயோசனமற்றபெர்ய்யாகி விடுகிறது.
81 பக்தி பண்ணுவதற்கு பலன் பக்தியால் கிடைக்கிற மன நிறைவுதான் .
82 சுக துக்கங்களில் சலனமடையாமல் தானும் மற்றவர்களையும் ஆனந்தமாக இருக்க செய்வது தான் யோகம் .
83 சித்த சுத்தி மோட்சத்திலேயே கொண்டு போய் சேர்க்கும்
84 தனது என்ற விருப்பு வெறுப்பில்லாமல் சாஸ்திரத்திற்கு கட்டுபடுவது முக்கியம்
85 ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது,
86 நம் கோபம் எதிராளியை மாற்றாது அவனுக்கும் நம்மிடம் கோபத்தை உண்டாக்குவதுதான் அதன் பலன் .
87 ஒருவன் தப்புப் பண்ணிகிறான் என்றால் கோபம் கொள்கிறோமே அப்படியானால் நாம் தப்பு பண்ணாதவர்களா?
88 அன்பினாலேயே பிறரை மாற்றுவது தான் நமக்கு பெருமை அதுதான் நிலைத்து நிற்கும்
89 நாம் தப்பே செய்யவில்லை யென்றால் அன்பு மயமாகி விடுவோம்
90 நம் கோபத்தினால் நமக்கே தான் தீங்கு செய்து கொள்கிறோம்
91 அன்பு நமக்கு ஆனந்தம் எதிராளிக்கும் ஆனந்தம்.
92 ஆசை என்று அலைந்தால் சாந்தி என்பதே ஒருநாளும் இல்லை.
93 துக்கம் உன்னிடம் ஒட்டாமல் பிரிந்து தள்ளிவிட்டால் அதுவே யோகம்
94 கானல் நீர் போன்றதே உலக மாயையும்
95 ஆசைக்கும் துவேசத்துக்கும் காரணம் அகங்காரம் அது தொலைந்தால் எந்தக் காரியத்திலும் உயர்வு தாழ்வு தெரியாது
96 நமக்கு அது வேண்டும் இதுவேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிறவரையில் நாம் தரித்ததிரர்கள் தான் .
97 எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே நமக்கு பிரமானம்.
98 தியானம் பண்ணாமல் வெறும் பூசை மட்டும் செய்தால் மதத்தை வளர்க்க முடியாது .
99 துக்கம், கோபம் இவற்றோடு உயிர் பிரிந்தால் அதே தன்மையோடே ஜனனம் வரும் .
100 ஜன்னம் எடுத்தது ஜன்மத்தை போக்கிக் கொள்ளத்தான்,
101 மூச்சு இல்லாமல் மனிதன்இல்லை சேதம் இல்லாமல் ஈஸ்வரன் இல்லை
திருச்சிற்றம்பலம் ... ஓம் நமசிவாய ஓம்.
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
மகா சிவராத்திரி வரலாறு
மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது
அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம்.
ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்
படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி பூஜை ,அர்ச்சனை செய்தாள்.
தான் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் `சிவராத்திரி‘
என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.
சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் - மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; சிவனைப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க அருள் புரியுமாறு அன்னை வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
வேட்டையாடச் சென்ற வேடன் ஒருவன் சிவராத்திரி. வில்வ மரத்தடியில் இருந்த சிவலிங்கம் மீது உறக்கம் வராமல் இருக்க பறித்துப் போட்ட வில்வ இலைகள் அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு வில்வார்ச்சனையால் - அறியாமல் செய்த அர்ச்சனையே ஒரு வேடனை நாட்டின் மன்னன் ஆகும் அளவிற்கு உயர்த்தியது.
எனவே பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை
பிறவி எடுத்தாலும் . அவர்களது சந்ததியும் செல்வவளத்துடன் திகழும்
பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அன்னை பார்வதி தேவி , சிவபெருமானை நோக்கிக்
கடுந்தவமியற்றி இடப்பாகத்தில் இடம் பெற்று உமையொருபாகனானது.
அர்ஜுனன் தவம் செய்து பாசுபத அஸ்திரம் பெற்ற நாள் ...
.கண்ணப்பர் தன் கண்களை சிவபெருமானுக்கு அப்பி
கண்ணப்ப நாயனாராகி திருக்காளத்தி என்னும்
புண்ணிய திருதலத்தில் முத்தி பெற்ற திருநாள் .
பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து கங்கையை
பூமிக்கு வரவழைத்த நாள் சிவராத்திரி ..
தன் பக்தன் மார்க்கண்டேயருக்காக காலதேவனை
தண்டித்து என்றும் பதினாறாக வரம் அளித்த நாள் ..
மனித உடலில் சக்தி இயல்பாகவே சிவராத்திரி
நாளில் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.
ஆதியந்தமிலாமல் எங்கும் நிறைந்திருக்கும்
வெறுமையும் இருளுமான சிவனவனை நாடி நாம்
செல்லத் தேவையில்லை,
சிவன் நம்மை நாடி வருகிற அற்புதத்தை நமக்கு உணர்த்திவிடும்
சீர் மிகுந்த சிறப்புறு நாள் சிவராத்திரி !
மாசிமகா சிவராத்திரி தேரோட்டம், அமாவாசை யொட்டி, இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சுவாமி, அம்மன் எழுந்தருளி, தீர்த்தவாரி
நிகழ்ச்சி நடைபெறும் ..
மஹா சிவராத்திரி 10 நாள் பெருவிழாவாக தேரோட்டத்துடன் நடைபெறும் தலங்கள் ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ இராமேஸ்வரம் ,ஸ்ரீ கோகர்ணம் .
மந்திர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது வலிதாங்கமுடியாது வாசுகிப் பாம்பு நஞ்சைக் கக்கவே, தேவர்களைக் காக்கும் பொருட்டு, அவ் விடத்தை சிவபெருமான் அருந்தி நீலகண்டரான காலமும் சிவராத்திரிதான் ...
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது
அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம்.
ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்
படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி பூஜை ,அர்ச்சனை செய்தாள்.
தான் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் `சிவராத்திரி‘
என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.
சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் - மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; சிவனைப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க அருள் புரியுமாறு அன்னை வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
வேட்டையாடச் சென்ற வேடன் ஒருவன் சிவராத்திரி. வில்வ மரத்தடியில் இருந்த சிவலிங்கம் மீது உறக்கம் வராமல் இருக்க பறித்துப் போட்ட வில்வ இலைகள் அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு வில்வார்ச்சனையால் - அறியாமல் செய்த அர்ச்சனையே ஒரு வேடனை நாட்டின் மன்னன் ஆகும் அளவிற்கு உயர்த்தியது.
எனவே பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை
பிறவி எடுத்தாலும் . அவர்களது சந்ததியும் செல்வவளத்துடன் திகழும்
பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அன்னை பார்வதி தேவி , சிவபெருமானை நோக்கிக்
கடுந்தவமியற்றி இடப்பாகத்தில் இடம் பெற்று உமையொருபாகனானது.
அர்ஜுனன் தவம் செய்து பாசுபத அஸ்திரம் பெற்ற நாள் ...
.கண்ணப்பர் தன் கண்களை சிவபெருமானுக்கு அப்பி
கண்ணப்ப நாயனாராகி திருக்காளத்தி என்னும்
புண்ணிய திருதலத்தில் முத்தி பெற்ற திருநாள் .
பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து கங்கையை
பூமிக்கு வரவழைத்த நாள் சிவராத்திரி ..
தன் பக்தன் மார்க்கண்டேயருக்காக காலதேவனை
தண்டித்து என்றும் பதினாறாக வரம் அளித்த நாள் ..
மனித உடலில் சக்தி இயல்பாகவே சிவராத்திரி
நாளில் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.
ஆதியந்தமிலாமல் எங்கும் நிறைந்திருக்கும்
வெறுமையும் இருளுமான சிவனவனை நாடி நாம்
செல்லத் தேவையில்லை,
சிவன் நம்மை நாடி வருகிற அற்புதத்தை நமக்கு உணர்த்திவிடும்
சீர் மிகுந்த சிறப்புறு நாள் சிவராத்திரி !
மாசிமகா சிவராத்திரி தேரோட்டம், அமாவாசை யொட்டி, இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சுவாமி, அம்மன் எழுந்தருளி, தீர்த்தவாரி
நிகழ்ச்சி நடைபெறும் ..
மஹா சிவராத்திரி 10 நாள் பெருவிழாவாக தேரோட்டத்துடன் நடைபெறும் தலங்கள் ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ இராமேஸ்வரம் ,ஸ்ரீ கோகர்ணம் .
மந்திர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது வலிதாங்கமுடியாது வாசுகிப் பாம்பு நஞ்சைக் கக்கவே, தேவர்களைக் காக்கும் பொருட்டு, அவ் விடத்தை சிவபெருமான் அருந்தி நீலகண்டரான காலமும் சிவராத்திரிதான் ...
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
திருமுறை கூறும் இறையன்பு
தற்காலத்தில் பக்தி அதிகமாக வளர்ந்திருக்கிறது என்று பலரும் கூறக் கேட்டிருக்கிறோம். அவ்வாறு அதிகமான பக்தி எத்தகைத்தது என்பது கேள்வி குறியாகவே உள்ளது. இறைவன் பால் கொள்ளும் இறையன்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்று நம் மூதாதையர்கள் மற்றும் ஞானிகள், சித்தர்கள் கூறிய நெறி என்ன? அவ் நெறி தற்போது கடைபிடிக்கப்பட்டு இறையன்பு உள்ளதா ? என்றால் அதுவும் வியக்கத்தக்கதாகவே உள்ளது.
இவ்வுலகத் தேவைகளை நிறைவேற்றித் தருபவராக இறைவரை எண்ணுவதை இறைவர் விரும்பவில்லை என்பது திருமுறைகள் கூறும் உண்மை.
நாம் ஆலயங்களிலும் வீடுகளிலும் இறைவரைத் தொழகிறோம். பொன் வேண்டி, பொருள் வேண்டி, மற்றும் இம்மைப் போகங்கள் வேண்டி இறைவரை வழிபடுகிறோம். உலக பொருள்களை விரும்பி இறைவரிடம் வேண்டும் நாம் இறைவரை விரும்பி வேண்டி வழிபடுவதில்லை. கடவுளின் அவதாரங்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் போலிகள் முதற்கொண்டு சாதாரண மனிதர் வரை அழிக்கூடிய பொன் பொருளைத்தான் விரும்புகிறார்கள்.
பக்தி என்பது இம்மையின் இன்பமாய் வாழ்வதற்குரிய பொருள்களை இறைவரிடம் கேட்பது இல்லை. அந்தப் பரம்பொருளையே விரும்பிக் கேட்பதுதான் பக்தி என்கின்றனர் உண்மை ஞானிகள்.
பரம் பொருளைத் தவிர வேறு ஒன்றையும் விரும்பாமையே பக்தியாகும். சிலர் இவ்வுலக வாழ்விற்குப் பின் சுவர்க்கம் பெற வேண்டும் என்று வழிபடுகிறார்கள். இவ்வுலக இன்பத்தைப் போல பலமடங்கு அதிகமான இன்பத்தை தரும் இடமாக சுவர்க்கத்தை நாம் கருதுகிறோம. இது நம்முடைய அறியாமையே ஆகும். உண்மை ஞானிகள் எப்படி பக்தி செய்து காட்டினார்கள் என்பதை மணிவாசகர் ஒரு பாடலைக் கொண்ட காண்போம்.
"யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பதனுக்கு என் கடவேன்
வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்து இரேன்
தேனேயும் மலர்க் கொன்றைச் சிவனே ! எம்பெருமான் எம்
மானே ! உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே." திரு வாசகம்
இப்பாடலின் கருத்து: இந்த உலகில் பிறப்பதற்கோ, இறப்பதற்கோ நான் அஞ்சவில்லை. வானுலக இன்பம் பெறினும் அதனை நான் விரும்ப மாட்டேன். இம்மண்ணுலகை ஆள்வதையும் ஒரு பொருளாக எண்ணுவது இல்லை. தேன் பொருந்திய கொன்றை மலர் அணிந்த சிவபெருமானாரே ! தங்களின் திருவருள் என்று கிடைக்கும் என்று ஏங்கி நிற்கின்றேன்.
வானுலக இன்பத்தையும் வேண்டாம், என்பவர்கள் உண்மை ஞானிகள். திருநாவுக்கரசு சுவாமிகள்இறைவரிடம் கேட்டுள்ள வரம் யாது எனக் காண்போம்.
"புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என்மனத்தே
வழுவாதிருக்க வரம் தர வேண்டும்" .................
எந்தப் பிறப்பு எடுத்தாலும் சரி, தேவதேவா! தங்களின் திருவடியை மறவாதிருக்க வரம் மட்டுமே தாருங்கள் என்று வேண்டியுள்ளதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.
" கண்டு எந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அது வேண்டேன் "............. காரைக்கால் அம்மையார் திருவந்தாதி
அண்டம் ஆளும் பேற்றினை அளித்தால்கூட அதை நாம் விரும்ப மாட்டேன் என்று சொல்லும் காரைக்கால் அம்மையாரின் உன்னதமான பக்தியை நாம் மனத்தில் இறத்தல் வேண்டும்.
இறையருள் ஒன்றை மட்டுமே விரும்பும்அடியார் பெருமக்களுக்கு இந்திர பதவி, வானுலகம் சுவர்க்கம், நரகம், குபேர பதவி ஆகியவற்றைப் பற்றி சிறிதும் அக்கறை இருப்பதில்லை. அவை யாவும் அற்பமாகி விடுகின்றன அத்தூயவர்கட்கு.
சிவபெருமானார் மீது அன்பு செலுத்துவது ஒன்றே பிறவிப்பயன் என்று வாழ்ந்து காட்டியவர்கள் அருளாளர்கள்.
வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்படுபவன் கரையை நாடுவது போலவும்,
கோடை வெயிலில் நடப்பவன் மரநிழலை நாடுவது போலவும்,
மழைக்கு அஞ்சியவன் வீட்டை நாடுவது போலவும்,
ஏழை செல்வந்தனை நாடுவது போலவும்,
அடர்ந்த இருளிலே தவிப்பவன் விளக்கை நாடுவது போலவும்,
குளிரிலே நடுங்குபவன் நெருப்பை நாடுவது போலவும்,
இறைவருடைய
திருவருளை நாடுவது தான் பக்தியாகும்.
இதை விடுத்து பலப்பல சடங்குகள் செய்வதுதான் பக்தி என்று எண்ணி வாழ்நாளை வீழ்நாளாக்கி வருகிறோம் நாம்.
மூவாயிரம் ஆண்டு தவம் இருந்த திருமூலர் கூறும் கருத்து,
"என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடுஉருகிஅகம் குழைவார்க்குஅன்றி
என்போல் மணியினை எய்த வொண்ணாதே" திருமந்திரம்
கருத்து: நம் எலும்புகளையே விறகாக ஆக்கி, நெருப்பு மூட்டி, அதில்நம் உடல் சதைகளை இட்டு வறுத்து எடுத்துக் கடுந்தவம் செய்தால் இறையை உணர்ந்திட முடியாது. உடலை எவ்வளவு வருத்தினாலும் பயன் இல்லை. இதனை நன்கு மனதில் நாம் கொள்ள வேண்டும். உள்ளத்தில்உண்டாகும் அன்பின் மிகுதியினால் அகம் குழைய வேண்டும். அன்பு என்பது தன்னலம் இல்லாத தன்மை ஆகும். தன்னலப்பற்றை நீக்கி, கருணை மிகும் பொழுது உள்ளம் மென்மையாகிவிடுகிறது, இத்தன்மையே உருகிய நிலை என்பர்.
வெண்ணெய் உருகினால் நறுமணம் வெளிப்படும்
தங்கம் உருகினால் கல் பதியும்,
உள்ளம் உருகினால் இறையருள் பதியும்.
தீய குணங்கள் யாவும் நீங்கி நற்குணங்கள் மட்டுமே நிறைந்த உள்ளம் மென்மையான - உருகிய உள்ளம் எனலாம்.
" என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி
அன்பு எனும் ஆறு கரையது புரள
நண்பலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண் துளி அரும்பச்
சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி!! .......... திருவாசகம்
கருத்து: இறைவரைக் காண வேண்டும் என்ற மிகுதியான ஏக்கத்தால் உள்ளம் உருகுகிறது. அதன் பயனாய் உடலும் உருகுகின்றது. இறைவர் மீது உண்டாகும் அன்பு கரை பரண்டு ஓடும் ஆற்று வெள்ளம் போல் பெருகுகின்றது. ஐம்புலன்களும் ஒன்று சேர்ந்து " பெருமானாரே ! " என்று புலம்பும்பொழுது சொற்கள் தடுமாறுகின்றன, உரோமங்கள் சிலிர்க்கின்றன. கைகள் பூவின் மொட்டுப்போல் குவிகின்றன. இதயம் மலர்ந்து விரிகின்றது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுகின்றது. இத்தகைய சாயா அன்பினை (இடையறா அன்பினை) நாள்தோறும் வளர்க்கும் பக்தர்களின் தாயாக நின்று அருளுகிறார் இறைவர்.
"ஆர்வம் உடையவர் காண்பர் அரன் தன்னை
ஈரம் உடையவர் காண்பர்இணையடி" .......... திருமந்திரம்
ஈரம் மெய்மையாக இருந்து இரண்டு பொருட்களை ஒட்டுவதற்கு எவ்வாறு உதவுகிறதோ, அதுபோல அன்பு மென்மையாக இருந்து நம்மை இறைவருடன் இணைக்கத் துணைபுரிகின்றது. எனவே அன்பிற்கு ஈரம் என்று பெயர்.
இத்தகைய அன்பினைத் தளராமல் செலுத்துவோர்க்கு தாயாக இருந்து அருள்புரிவார் இறைவர்.
நாம் இறைவரிடம் கேட்க வேண்டியது " புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்அடி என்மனத்தே வழுவாதிருக்க வரம் தாருங்கள்" என்பது தான். உலகப் பொன் பொருள் போகங்கள் அல்ல என்பதை உணர்ந்து பக்தி நெறி நின்று பிறவியை ஒழிப்போமாக.
திருச்சிற்றம்பலம் -- ஓம் நமசிவாய !
மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
தற்காலத்தில் பக்தி அதிகமாக வளர்ந்திருக்கிறது என்று பலரும் கூறக் கேட்டிருக்கிறோம். அவ்வாறு அதிகமான பக்தி எத்தகைத்தது என்பது கேள்வி குறியாகவே உள்ளது. இறைவன் பால் கொள்ளும் இறையன்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்று நம் மூதாதையர்கள் மற்றும் ஞானிகள், சித்தர்கள் கூறிய நெறி என்ன? அவ் நெறி தற்போது கடைபிடிக்கப்பட்டு இறையன்பு உள்ளதா ? என்றால் அதுவும் வியக்கத்தக்கதாகவே உள்ளது.
இவ்வுலகத் தேவைகளை நிறைவேற்றித் தருபவராக இறைவரை எண்ணுவதை இறைவர் விரும்பவில்லை என்பது திருமுறைகள் கூறும் உண்மை.
நாம் ஆலயங்களிலும் வீடுகளிலும் இறைவரைத் தொழகிறோம். பொன் வேண்டி, பொருள் வேண்டி, மற்றும் இம்மைப் போகங்கள் வேண்டி இறைவரை வழிபடுகிறோம். உலக பொருள்களை விரும்பி இறைவரிடம் வேண்டும் நாம் இறைவரை விரும்பி வேண்டி வழிபடுவதில்லை. கடவுளின் அவதாரங்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் போலிகள் முதற்கொண்டு சாதாரண மனிதர் வரை அழிக்கூடிய பொன் பொருளைத்தான் விரும்புகிறார்கள்.
பக்தி என்பது இம்மையின் இன்பமாய் வாழ்வதற்குரிய பொருள்களை இறைவரிடம் கேட்பது இல்லை. அந்தப் பரம்பொருளையே விரும்பிக் கேட்பதுதான் பக்தி என்கின்றனர் உண்மை ஞானிகள்.
பரம் பொருளைத் தவிர வேறு ஒன்றையும் விரும்பாமையே பக்தியாகும். சிலர் இவ்வுலக வாழ்விற்குப் பின் சுவர்க்கம் பெற வேண்டும் என்று வழிபடுகிறார்கள். இவ்வுலக இன்பத்தைப் போல பலமடங்கு அதிகமான இன்பத்தை தரும் இடமாக சுவர்க்கத்தை நாம் கருதுகிறோம. இது நம்முடைய அறியாமையே ஆகும். உண்மை ஞானிகள் எப்படி பக்தி செய்து காட்டினார்கள் என்பதை மணிவாசகர் ஒரு பாடலைக் கொண்ட காண்போம்.
"யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பதனுக்கு என் கடவேன்
வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்து இரேன்
தேனேயும் மலர்க் கொன்றைச் சிவனே ! எம்பெருமான் எம்
மானே ! உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே." திரு வாசகம்
இப்பாடலின் கருத்து: இந்த உலகில் பிறப்பதற்கோ, இறப்பதற்கோ நான் அஞ்சவில்லை. வானுலக இன்பம் பெறினும் அதனை நான் விரும்ப மாட்டேன். இம்மண்ணுலகை ஆள்வதையும் ஒரு பொருளாக எண்ணுவது இல்லை. தேன் பொருந்திய கொன்றை மலர் அணிந்த சிவபெருமானாரே ! தங்களின் திருவருள் என்று கிடைக்கும் என்று ஏங்கி நிற்கின்றேன்.
வானுலக இன்பத்தையும் வேண்டாம், என்பவர்கள் உண்மை ஞானிகள். திருநாவுக்கரசு சுவாமிகள்இறைவரிடம் கேட்டுள்ள வரம் யாது எனக் காண்போம்.
"புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என்மனத்தே
வழுவாதிருக்க வரம் தர வேண்டும்" .................
எந்தப் பிறப்பு எடுத்தாலும் சரி, தேவதேவா! தங்களின் திருவடியை மறவாதிருக்க வரம் மட்டுமே தாருங்கள் என்று வேண்டியுள்ளதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.
" கண்டு எந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அது வேண்டேன் "............. காரைக்கால் அம்மையார் திருவந்தாதி
அண்டம் ஆளும் பேற்றினை அளித்தால்கூட அதை நாம் விரும்ப மாட்டேன் என்று சொல்லும் காரைக்கால் அம்மையாரின் உன்னதமான பக்தியை நாம் மனத்தில் இறத்தல் வேண்டும்.
இறையருள் ஒன்றை மட்டுமே விரும்பும்அடியார் பெருமக்களுக்கு இந்திர பதவி, வானுலகம் சுவர்க்கம், நரகம், குபேர பதவி ஆகியவற்றைப் பற்றி சிறிதும் அக்கறை இருப்பதில்லை. அவை யாவும் அற்பமாகி விடுகின்றன அத்தூயவர்கட்கு.
சிவபெருமானார் மீது அன்பு செலுத்துவது ஒன்றே பிறவிப்பயன் என்று வாழ்ந்து காட்டியவர்கள் அருளாளர்கள்.
வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்படுபவன் கரையை நாடுவது போலவும்,
கோடை வெயிலில் நடப்பவன் மரநிழலை நாடுவது போலவும்,
மழைக்கு அஞ்சியவன் வீட்டை நாடுவது போலவும்,
ஏழை செல்வந்தனை நாடுவது போலவும்,
அடர்ந்த இருளிலே தவிப்பவன் விளக்கை நாடுவது போலவும்,
குளிரிலே நடுங்குபவன் நெருப்பை நாடுவது போலவும்,
இறைவருடைய
திருவருளை நாடுவது தான் பக்தியாகும்.
இதை விடுத்து பலப்பல சடங்குகள் செய்வதுதான் பக்தி என்று எண்ணி வாழ்நாளை வீழ்நாளாக்கி வருகிறோம் நாம்.
மூவாயிரம் ஆண்டு தவம் இருந்த திருமூலர் கூறும் கருத்து,
"என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடுஉருகிஅகம் குழைவார்க்குஅன்றி
என்போல் மணியினை எய்த வொண்ணாதே" திருமந்திரம்
கருத்து: நம் எலும்புகளையே விறகாக ஆக்கி, நெருப்பு மூட்டி, அதில்நம் உடல் சதைகளை இட்டு வறுத்து எடுத்துக் கடுந்தவம் செய்தால் இறையை உணர்ந்திட முடியாது. உடலை எவ்வளவு வருத்தினாலும் பயன் இல்லை. இதனை நன்கு மனதில் நாம் கொள்ள வேண்டும். உள்ளத்தில்உண்டாகும் அன்பின் மிகுதியினால் அகம் குழைய வேண்டும். அன்பு என்பது தன்னலம் இல்லாத தன்மை ஆகும். தன்னலப்பற்றை நீக்கி, கருணை மிகும் பொழுது உள்ளம் மென்மையாகிவிடுகிறது, இத்தன்மையே உருகிய நிலை என்பர்.
வெண்ணெய் உருகினால் நறுமணம் வெளிப்படும்
தங்கம் உருகினால் கல் பதியும்,
உள்ளம் உருகினால் இறையருள் பதியும்.
தீய குணங்கள் யாவும் நீங்கி நற்குணங்கள் மட்டுமே நிறைந்த உள்ளம் மென்மையான - உருகிய உள்ளம் எனலாம்.
" என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி
அன்பு எனும் ஆறு கரையது புரள
நண்பலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண் துளி அரும்பச்
சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி!! .......... திருவாசகம்
கருத்து: இறைவரைக் காண வேண்டும் என்ற மிகுதியான ஏக்கத்தால் உள்ளம் உருகுகிறது. அதன் பயனாய் உடலும் உருகுகின்றது. இறைவர் மீது உண்டாகும் அன்பு கரை பரண்டு ஓடும் ஆற்று வெள்ளம் போல் பெருகுகின்றது. ஐம்புலன்களும் ஒன்று சேர்ந்து " பெருமானாரே ! " என்று புலம்பும்பொழுது சொற்கள் தடுமாறுகின்றன, உரோமங்கள் சிலிர்க்கின்றன. கைகள் பூவின் மொட்டுப்போல் குவிகின்றன. இதயம் மலர்ந்து விரிகின்றது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுகின்றது. இத்தகைய சாயா அன்பினை (இடையறா அன்பினை) நாள்தோறும் வளர்க்கும் பக்தர்களின் தாயாக நின்று அருளுகிறார் இறைவர்.
"ஆர்வம் உடையவர் காண்பர் அரன் தன்னை
ஈரம் உடையவர் காண்பர்இணையடி" .......... திருமந்திரம்
ஈரம் மெய்மையாக இருந்து இரண்டு பொருட்களை ஒட்டுவதற்கு எவ்வாறு உதவுகிறதோ, அதுபோல அன்பு மென்மையாக இருந்து நம்மை இறைவருடன் இணைக்கத் துணைபுரிகின்றது. எனவே அன்பிற்கு ஈரம் என்று பெயர்.
இத்தகைய அன்பினைத் தளராமல் செலுத்துவோர்க்கு தாயாக இருந்து அருள்புரிவார் இறைவர்.
நாம் இறைவரிடம் கேட்க வேண்டியது " புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்அடி என்மனத்தே வழுவாதிருக்க வரம் தாருங்கள்" என்பது தான். உலகப் பொன் பொருள் போகங்கள் அல்ல என்பதை உணர்ந்து பக்தி நெறி நின்று பிறவியை ஒழிப்போமாக.
திருச்சிற்றம்பலம் -- ஓம் நமசிவாய !
மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
கழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார்
மலைநாட்டிலே, இராஜதானியாகிய மகோதையென்னும் பெயரையுடைய கொடுங்கோளூரிலே, சேரர்குடியிலே பெருமாக் கோதையாரென்றும் பெயரையுடைய ஒரு சற்புத்திரர் சைவநெறி வாழும்படி அவதரித்தார்.
இகத்திலே இப்படிப் பட்டதொரு எதுவுமின்றிப் பூர்வஜன்ம சிவபூஜா புண்ணிய பலத்தினாலே தேகாதியாகிய சர்வவஸ்துக்களிலும் வரும் வைராக்கியம் என்னும் பத்துவகை வைராக்கியங்களுள் இறுதியில் நின்ற நிருகேதுகமாகிய உத்தமவைராக்கியத்தையுடையவராகி, சிவபெருமானுடைய திருவடியை அடைதல் வேண்டுமெனக்கருதி, இராஜபுத்திரருக்குரிய தொழில்களைச் செய்தலின்றி, திருவஞ்சைக்களமென்னுஞ் சிவஸ்தலத்தை அடைந்து, "பரமசிவன் சுவதந்திரர், நாம் பரதந்திரர்" என்று உணர்ந்து, சிவாதீனமாய் நின்று, தினந்தோறும் பிராம முகூர்த்தத்தில் எழுந்து, ஸ்நானம்பண்ணி அநுட்டானஞ் செய்து கொண்டு, திருநந்தனவனம் வைத்தல், பூக்கள் பறித்தல், திருமாலை கட்டல், திருவலகிடல், திருமெழுக்கிடல், திருப்பாட்டுப்பாடல் முதலிய த் திருத்தொண்டுகளைச் செய்வாராயினார்.
இப்படி நிகழுங் காலத்திலே, செங்கோற்பொறையன் என்னுஞ் சேரமகாராஜனுக்கு யோக முயற்சியைச் செய்யவேண்டுமென்று தெளிந்து, அரசியற்றுதலினின்று நீங்கி, தவஞ்செய்யும் பொருட்டுத் தபோவனத்தை அடைந்தான், இவ்வாறு இருக்கும் காலத்தில் மந்திரிமார்கள் சிலநாள் ஆலோசித்துத் தெளிந்து, திருவஞ்சைக்களத்திலே திருத்தொண்டுசெய்து கொண்டிருக்கின்ற அச்சேரர் மரபிற்கு முதல்வராகிய பெருமாக்கோதை யாரிடத்திலேபோய், அவரை வணங்கி நின்று, "இம்மலைநாட்டை நீரே முடிசூடி அரசியற்றல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்ய; பெருமாக்கோதையார் "இவர்கள் வார்த்தை இன்பமயாகிய திருத்தொண்டுக்கு இடையூறாயிருக்கின்றது. சிவபத்தியிலே சிறிதும் வழுவாது அரசியற்றுதற்குத் திருவருள் உளதாயின், இதனை எம்பெருமானுக்கு விண்ணப்பஞ்செய்து அறிவேன்" என்று ஆலயத்தினுள்ளே பிரவேசித்து, சிவபெருமானை வணங்கி விண்ணப்பஞ்செய்து, அவருடைய திருவருளினாலே அவரிடத்தே வைத்த பத்திவழுவாது அரசியற்றுஞ் சத்தியையும், யாரும் யாவும் கழறினவைகளனைத்தையும் அறியும் அறிவையும், பாசமில்லாத மகாபராகிரமத்தையும் பெருங் கொடையையும், அரசருக்கு உரியபடை வாகனமுதலிய வெல்லாவற்றையும் கைவரப் பெற்று, நமஸ்கரித்துக்கொண்டு, புறத்தணைந்து, மந்திரிமார்களுடைய வேண்டுகோளுக்கு உடன்பட்டார். மந்திரிமார்கள் பெருங்களிப்புடையர்களாகி, அவரை நமஸ்கரித்தார்கள். இவ்வாறாக கழறிற்றறிவாராகிய அப்பெருமாக்கோதையார், ஆன்மார்க்களெல்லாம் உய்யும் பொருட்டுச் சுபதினத்திலே சுபமுகூர்த்தத்திலே முடி சூடினார்.
திருவெண்ணீரு பூண்டாரை சிவனாடியார் எனல்
இவ்வாறு இருக்கும் காலத்தில் அரசராகிய சேரமான் வண்ணார் ஒருவர் தனது அழுக்குத்துணிகளை துவைப்பதற்கு , ஒருவண்ணான் தோளிலே உவர்ப்பொதி சுமந்துகொண்டு தமக்கு முன்னே வரக்கண்டு, அவனுடைய சரீரம் மழையினாலே கரைந்த உவர் ஊறப்பெற்று வெளுத்திருத்தலால், விபூதியை உத்தூளனஞ் செய்த சிவனடியாரது திருவேடம்போலுதலை உணர்ந்து, தான் வந்த யானையை விட்டு இறங்கி, தான் சுமந்து வந்த உவர்
பொதியால் உடம்ெபல்லாம் திருநீறு பூசியது ேபால் கண்டு அவரை சிவனடியார் என்றே ெகாண்டு, அவரின் காலில் வழுந்து வணங்கினார். உடனே அந்த வண்ணாரோ தேவரீர் அடியேன் அடிவண்ணான் என்னை தொழுவது முறையன்று என்று பணிவுடன் ேவண்டியும், அவரை சிவனாடியராகவே கொண்டு மரியாதை செய்தார்,
திருச்சிலம் பொலியை கேட்டல்
சேரமான் பெருமான் நாயனார் உண்மையநுபவ ரீதியாகவே தமது சிவபூசை முடிவில் திருச்சிலம் போசை கேட்டு வந்தார் என்பது, இறைவன் திருவிளையாடலால்,
சேரமான்பெருமாணாயனார், ஒருநாள் முன்போலப் பூஜாந்தத்திலே சபாநாயகருடைய திருச்சிலம்பொலி தமக்குக் கேளாதொழிய, மனமயங்கி, 'அடியேன் யாது பிழை செய்தேனோ" என்று பொருமி "இனி இந்தத் தேகத்தினால் அடையும் பேரின்பம் யாது" என்று உடைவாளை உருவித் தமது மார்பிலே நாட்ட, சபாநாயகர் விரைந்து திருச்சிலம்பொலியைக் கேட்பித்தார். உடனே நாயனார் உடைவாளை அகற்றி நமஸ்காரம் பண்ணித் தோத்திரஞ்செய்து, "எம்பெருமானே! அத்திருவருளை முன் செய்யாதொழிந்தது என்னை" என்றார். ஒருநாள் அது கேளா தொழிய நேர்ந்தமையைச் சகிக்கலாற்றாது அவர் தம்மைத் தாமே உடைவாளால் தீர்த்துக் கொள்ள முயன்றதும் அதைச் சகிக்கலாற்றா நிலையிற் சிவபெருமான் விரைந்து அது அவர்க்குக் கேட்க அருளியதுடன் தமது திருவிளையாடல் அந்தரங்கம் புலப்பட அவருக்குச் சமாதான விளக்கந் தெரிவித்த ருளியதுமான செய்தியாற் புலனாகும். அது குறித்து சிவனாரே அவர் முன் தோன்றி , அடியேன் உன்னைப் போல் ஒரு பக்தன் வன்தொண்டன் திருநாவாலூரான் பக்தியில் உறுகியதன் நிமித்தம் உனக்கு சிலம்பொலி செய்ய மறந்தேன் என்று பின் தன் நிலை உணர்ந்து மனம் மாறி, அப்பக்தன் விபரம் அறிந்து சுந்தரரர் என்பதை அறிந்து அவர் பால் அன்பு கொண்டு சுந்தரரை நண்பராகக் கொண்டார். சிவனாரும் சேரமான் மீது கருணை கூர்ந்து என்னை தில்லையிலே வந்துகாண கூறினார், அதன்படி ேசரமான் தில்ைல ெசன்று இறைவரை தரிசித்து பொன்வண்ணத்தந்தாதி பாடியருளினார், அதன் ஒரு பாடல்
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே
பொருள் ; தன்னைக் கண்ட எனது மேனியின் நிறம் அங்ஙனம் கண்டபின் எந்த நிறமாயிற்றோ அந்த நிறத்தையே தனது இயற்கை நிறமாக உடைய இறைவனுக்கு மேனி, எப்பொழுதும் பொன்னின் நிறம் என்ன நிறமோ அந்த நிறமே.
தாழ்ந்து தொங்குகின்ற சடைகள், விட்டு விளங்குகின்ற மின்னல் என்ன நிறமோ அந்த நிறமே.
பெரிய இடப ஊர்தி, வெள்ளி மலை என்ன நிறம் வடிவோ அந்த நிறம் வடிவுகளே.
ஆலவாயான் அனுப்பிய மடல்
இப்படி நிகழுங்காலத்திலே, பாண்டிநாட்டிலே மதுரையில் எழுந்தருளியிருக்குஞ் சோமசுந்தரக்கடவுள் தம்மை அன்பினோடும் இசைப்பாட்டினாலே துதிக்கின்ற பாணபத்திரருக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடுத்தருளுதற்குத் திருவுளங்கொண்டு, இரவில் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "உனக்குப்பொன் இரத்தினம் பட்டாடை முதலியவைகளெல்லாவற்றையும் நீ வேண்டியபடி குறைவின்றித் தரும்பொருட்டு, நம்மேல் எப்பொழுதும் அன்புடையனாகிய சேரனுக்கு ஓலை தருவோம் தாழ்க்காமற்போய் வா" என்று அருளிச் செய்து,
"மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பானிற வரிச்சிற
கன்னம் பயில்பொழி லால வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்முப் படியெனப் பாவலர்க்
குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க
பண்பா லியாழ்பயில் பாண பத்திரன்
றன்போ லென்பா லன்பன் றன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே"
என்னுந் திருப்பாசுரத்தை வரைந்த திருமுகத்தைக் (மடல்) கொடுத்தருளினார்.
பாணபத்திரர் அத்திருமுகத்தைத் தலைமேற்கொண்டு, அப்பொழுதே புறப்பட்டு, மலைநாட்டிற்சென்று, கொடுங்கோளுரை அடைந்து, மாளிகைக்கு முன்வந்து, சேரமான் பெருமாணாயனாருக்கு அறிவித்தார். உடனே சேரமான் பாணபத்திரை வணங்கி மிகுந்த அன்பினோடுங் கண்ணீர் சொரிய எழுந்து மாளிகைக்குப் புறத்தில் வந்து, பாணபத்திரரைப் பல முறை வணங்கி, "சுவாமி! தேவரீர் அடியேனை ஒருபொருளென மதித்துத் திருமுகங் கொண்டு வந்தீரே" என்றார்.
மந்திரிமார்களை நோக்கி, "நம்முடைய குல மாளிகையில் இருக்கின்ற பண்டாரமுழுதையும் பொதி செய்து ஆளின்மேல் ஏற்றிக் கொண்டு வாருங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க; அவர்கள் ஏற்றிக் கொண்டுவந்து வணங்கினார்கள். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்கு அந்தத் தனங்களை வெவ்வேறாகக் காட்டி, "சுவாமீ! தேவரீர் இவைகளையும் யானை குதிரை தேர் காலாள் என்னுஞ் சதுரங்கங்களையும் அடியேனுடைய அரசையுங் கைக்கொண்டருளும்" என்று சொல்ல, பாணபத்திரர் தமக்குச் சேரமான்பெருமாணாயனார் தந்த தனங்களெல்லாவற்றையுங் கண்டு, மனமகிழ்ந்து, அதிசயித்து, அவரைநோக்கி, "சுவாமீ! அடியேன் எனக்கு வேண்டுவனவற்றை மாத்திரங்கொள்ளும் பொருட்டே சிவாஞ்ஞை அரசையும் அரசுறுப்பையும் தேவரீரே கைக்கொண்டருளும்" என்று சொல்லி வணங்கினார். சேரமான்பெருமாணாயனாரும் சிவாஞ்ஞையை மறுத்தற்கு அஞ்சி, அதற்கு உடன்பட்டார் பாணபத்திரர்தனங்களெல்லாவற்றையும் யானை குதிரை உள்ளிட்டனவற்றுள் வேண்டுவனவற்றையுங்கொண்டு, ஓர் யானைமேல் ஏறிக்கொண்டுபோனார். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்குப் பின் கண்ணீர் சொரிய, கைதொழுது கொண்டு செல்ல, பாணபத்திரர் நகர்ப்புறத்தில் அவரிடத்திலே விடைபெற்றுக்கொண்டு போய், மதுரையை அடைந்தார்.
சேரமான்பெருமாணாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரும்,
கைலாசம் அடைதல்
சேரமான்பெருமாணாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரும், திருக்கைலாசத்தின் தெற்குவாயிலுக்கு முன் போனவுடனே, குதிரையினின்றும் யானையினின்றும் இறங்கி, பலவாயில்களையும் கடந்து, திருவணுக்கன்றிரு வாயிலை அடைந்தார்கள். அங்கே சேரமான்பெருமாணாயனார் தடைப்பட்டு நிற்க; சுந்தரமூர்த்திநாயனார் உள்ளே போய்ச் சிவசந்நிதானத்திலே விழுந்துநமஸ்கரித்து எழுந்து, ஸ்தோத்திரம்பண்ணி, "சுவாமீ! தேவரீருடைய திருவடிகளை அடையும் பொருட்டுச் சேரமான்பெருமான் திருவணுக்கன்றிருவாயிலின் புறத்திலே வந்து நிற்கின்றார்" என்று விண்ணப்பஞ்செய்தார். பரமசிவன் சேரமான்பெருமாணாயனாரை உள்ளே அழைப்பிக்க; அவர் விரைந்து வந்து சந்நிதானத்திலே நமஸ்கரித்துத் தோத்திரம்பண்ணினார். பரமசிவன் திருமுறுவல்செய்து, "இங்கே நாம் அழையாதிருக்க, நீ வந்ததென்னன" என்று அருளி செய்ய, சேரமான்பெருமாணாயனார் அஞ்சலி செய்து நின்று, "சுவாமீ! சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து அவர் ஏறிய வெள்ளையானைக்குமுன் அவரைச் சேவித்துக்கொண்டு வந்தேன். தேவரீர் பொழிகின்ற பெருங்கருணைவெள்ளம் முன்கொண்டு புகுதலால், திருமுன்பு வரப்பெற்றேன். இனி ஒரு விண்ணப்பம் உண்டு, அரிபிரமேந்திராதிதேவர்களாலும் முனிவர்களாலும் வேதங்களாலும் துதிக்கப்படுதற்கு அரிய பெருமையையுடைய தேவரீர்மேல் அன்பினாலே தேவரீரது திருவருள்கொண்டு திருவுலாப்பாடினேன். அதனைத் தேவரீர் திருச்செவி சாத்தல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்தார். அப்பொழுது சிவபெருமான் "சேரனே! அவ்வுலாவைச் சொல்லு" என்று திருவாய்மலர்ந்தருள; சேரமான்பெருமாணாயனாரும் அதனைக் கேட்பித்தார். சிவபெருமான் அதற்கு அருள்செய்து, "நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு" என்று திருவாய்மலர்ந்தருளினார். சேரமான்பெருமாணாயனார் சிவகணநாதராகிச் சுவாமியைச் சேவிப்பாராயினார். அவர் அருளிச்செய்த திருக்கைலாயஞானவுலாவைத் திருக்கைலாசகிரியிலே அன்று கேட்ட மாசாத்தரானவர் அதனைத்தரித்து, தமிழ்நாட்டிலே உள்ள திருப்பிடவூரிலே, வெளிப்படச்சொல்லி, பூமியிலே விளங்கும் பொருட்டு நாட்டியருளினார்.
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
மலைநாட்டிலே, இராஜதானியாகிய மகோதையென்னும் பெயரையுடைய கொடுங்கோளூரிலே, சேரர்குடியிலே பெருமாக் கோதையாரென்றும் பெயரையுடைய ஒரு சற்புத்திரர் சைவநெறி வாழும்படி அவதரித்தார்.
இகத்திலே இப்படிப் பட்டதொரு எதுவுமின்றிப் பூர்வஜன்ம சிவபூஜா புண்ணிய பலத்தினாலே தேகாதியாகிய சர்வவஸ்துக்களிலும் வரும் வைராக்கியம் என்னும் பத்துவகை வைராக்கியங்களுள் இறுதியில் நின்ற நிருகேதுகமாகிய உத்தமவைராக்கியத்தையுடையவராகி, சிவபெருமானுடைய திருவடியை அடைதல் வேண்டுமெனக்கருதி, இராஜபுத்திரருக்குரிய தொழில்களைச் செய்தலின்றி, திருவஞ்சைக்களமென்னுஞ் சிவஸ்தலத்தை அடைந்து, "பரமசிவன் சுவதந்திரர், நாம் பரதந்திரர்" என்று உணர்ந்து, சிவாதீனமாய் நின்று, தினந்தோறும் பிராம முகூர்த்தத்தில் எழுந்து, ஸ்நானம்பண்ணி அநுட்டானஞ் செய்து கொண்டு, திருநந்தனவனம் வைத்தல், பூக்கள் பறித்தல், திருமாலை கட்டல், திருவலகிடல், திருமெழுக்கிடல், திருப்பாட்டுப்பாடல் முதலிய த் திருத்தொண்டுகளைச் செய்வாராயினார்.
இப்படி நிகழுங் காலத்திலே, செங்கோற்பொறையன் என்னுஞ் சேரமகாராஜனுக்கு யோக முயற்சியைச் செய்யவேண்டுமென்று தெளிந்து, அரசியற்றுதலினின்று நீங்கி, தவஞ்செய்யும் பொருட்டுத் தபோவனத்தை அடைந்தான், இவ்வாறு இருக்கும் காலத்தில் மந்திரிமார்கள் சிலநாள் ஆலோசித்துத் தெளிந்து, திருவஞ்சைக்களத்திலே திருத்தொண்டுசெய்து கொண்டிருக்கின்ற அச்சேரர் மரபிற்கு முதல்வராகிய பெருமாக்கோதை யாரிடத்திலேபோய், அவரை வணங்கி நின்று, "இம்மலைநாட்டை நீரே முடிசூடி அரசியற்றல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்ய; பெருமாக்கோதையார் "இவர்கள் வார்த்தை இன்பமயாகிய திருத்தொண்டுக்கு இடையூறாயிருக்கின்றது. சிவபத்தியிலே சிறிதும் வழுவாது அரசியற்றுதற்குத் திருவருள் உளதாயின், இதனை எம்பெருமானுக்கு விண்ணப்பஞ்செய்து அறிவேன்" என்று ஆலயத்தினுள்ளே பிரவேசித்து, சிவபெருமானை வணங்கி விண்ணப்பஞ்செய்து, அவருடைய திருவருளினாலே அவரிடத்தே வைத்த பத்திவழுவாது அரசியற்றுஞ் சத்தியையும், யாரும் யாவும் கழறினவைகளனைத்தையும் அறியும் அறிவையும், பாசமில்லாத மகாபராகிரமத்தையும் பெருங் கொடையையும், அரசருக்கு உரியபடை வாகனமுதலிய வெல்லாவற்றையும் கைவரப் பெற்று, நமஸ்கரித்துக்கொண்டு, புறத்தணைந்து, மந்திரிமார்களுடைய வேண்டுகோளுக்கு உடன்பட்டார். மந்திரிமார்கள் பெருங்களிப்புடையர்களாகி, அவரை நமஸ்கரித்தார்கள். இவ்வாறாக கழறிற்றறிவாராகிய அப்பெருமாக்கோதையார், ஆன்மார்க்களெல்லாம் உய்யும் பொருட்டுச் சுபதினத்திலே சுபமுகூர்த்தத்திலே முடி சூடினார்.
திருவெண்ணீரு பூண்டாரை சிவனாடியார் எனல்
இவ்வாறு இருக்கும் காலத்தில் அரசராகிய சேரமான் வண்ணார் ஒருவர் தனது அழுக்குத்துணிகளை துவைப்பதற்கு , ஒருவண்ணான் தோளிலே உவர்ப்பொதி சுமந்துகொண்டு தமக்கு முன்னே வரக்கண்டு, அவனுடைய சரீரம் மழையினாலே கரைந்த உவர் ஊறப்பெற்று வெளுத்திருத்தலால், விபூதியை உத்தூளனஞ் செய்த சிவனடியாரது திருவேடம்போலுதலை உணர்ந்து, தான் வந்த யானையை விட்டு இறங்கி, தான் சுமந்து வந்த உவர்
பொதியால் உடம்ெபல்லாம் திருநீறு பூசியது ேபால் கண்டு அவரை சிவனடியார் என்றே ெகாண்டு, அவரின் காலில் வழுந்து வணங்கினார். உடனே அந்த வண்ணாரோ தேவரீர் அடியேன் அடிவண்ணான் என்னை தொழுவது முறையன்று என்று பணிவுடன் ேவண்டியும், அவரை சிவனாடியராகவே கொண்டு மரியாதை செய்தார்,
திருச்சிலம் பொலியை கேட்டல்
சேரமான் பெருமான் நாயனார் உண்மையநுபவ ரீதியாகவே தமது சிவபூசை முடிவில் திருச்சிலம் போசை கேட்டு வந்தார் என்பது, இறைவன் திருவிளையாடலால்,
சேரமான்பெருமாணாயனார், ஒருநாள் முன்போலப் பூஜாந்தத்திலே சபாநாயகருடைய திருச்சிலம்பொலி தமக்குக் கேளாதொழிய, மனமயங்கி, 'அடியேன் யாது பிழை செய்தேனோ" என்று பொருமி "இனி இந்தத் தேகத்தினால் அடையும் பேரின்பம் யாது" என்று உடைவாளை உருவித் தமது மார்பிலே நாட்ட, சபாநாயகர் விரைந்து திருச்சிலம்பொலியைக் கேட்பித்தார். உடனே நாயனார் உடைவாளை அகற்றி நமஸ்காரம் பண்ணித் தோத்திரஞ்செய்து, "எம்பெருமானே! அத்திருவருளை முன் செய்யாதொழிந்தது என்னை" என்றார். ஒருநாள் அது கேளா தொழிய நேர்ந்தமையைச் சகிக்கலாற்றாது அவர் தம்மைத் தாமே உடைவாளால் தீர்த்துக் கொள்ள முயன்றதும் அதைச் சகிக்கலாற்றா நிலையிற் சிவபெருமான் விரைந்து அது அவர்க்குக் கேட்க அருளியதுடன் தமது திருவிளையாடல் அந்தரங்கம் புலப்பட அவருக்குச் சமாதான விளக்கந் தெரிவித்த ருளியதுமான செய்தியாற் புலனாகும். அது குறித்து சிவனாரே அவர் முன் தோன்றி , அடியேன் உன்னைப் போல் ஒரு பக்தன் வன்தொண்டன் திருநாவாலூரான் பக்தியில் உறுகியதன் நிமித்தம் உனக்கு சிலம்பொலி செய்ய மறந்தேன் என்று பின் தன் நிலை உணர்ந்து மனம் மாறி, அப்பக்தன் விபரம் அறிந்து சுந்தரரர் என்பதை அறிந்து அவர் பால் அன்பு கொண்டு சுந்தரரை நண்பராகக் கொண்டார். சிவனாரும் சேரமான் மீது கருணை கூர்ந்து என்னை தில்லையிலே வந்துகாண கூறினார், அதன்படி ேசரமான் தில்ைல ெசன்று இறைவரை தரிசித்து பொன்வண்ணத்தந்தாதி பாடியருளினார், அதன் ஒரு பாடல்
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே
பொருள் ; தன்னைக் கண்ட எனது மேனியின் நிறம் அங்ஙனம் கண்டபின் எந்த நிறமாயிற்றோ அந்த நிறத்தையே தனது இயற்கை நிறமாக உடைய இறைவனுக்கு மேனி, எப்பொழுதும் பொன்னின் நிறம் என்ன நிறமோ அந்த நிறமே.
தாழ்ந்து தொங்குகின்ற சடைகள், விட்டு விளங்குகின்ற மின்னல் என்ன நிறமோ அந்த நிறமே.
பெரிய இடப ஊர்தி, வெள்ளி மலை என்ன நிறம் வடிவோ அந்த நிறம் வடிவுகளே.
ஆலவாயான் அனுப்பிய மடல்
இப்படி நிகழுங்காலத்திலே, பாண்டிநாட்டிலே மதுரையில் எழுந்தருளியிருக்குஞ் சோமசுந்தரக்கடவுள் தம்மை அன்பினோடும் இசைப்பாட்டினாலே துதிக்கின்ற பாணபத்திரருக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடுத்தருளுதற்குத் திருவுளங்கொண்டு, இரவில் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "உனக்குப்பொன் இரத்தினம் பட்டாடை முதலியவைகளெல்லாவற்றையும் நீ வேண்டியபடி குறைவின்றித் தரும்பொருட்டு, நம்மேல் எப்பொழுதும் அன்புடையனாகிய சேரனுக்கு ஓலை தருவோம் தாழ்க்காமற்போய் வா" என்று அருளிச் செய்து,
"மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பானிற வரிச்சிற
கன்னம் பயில்பொழி லால வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்முப் படியெனப் பாவலர்க்
குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க
பண்பா லியாழ்பயில் பாண பத்திரன்
றன்போ லென்பா லன்பன் றன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே"
என்னுந் திருப்பாசுரத்தை வரைந்த திருமுகத்தைக் (மடல்) கொடுத்தருளினார்.
பாணபத்திரர் அத்திருமுகத்தைத் தலைமேற்கொண்டு, அப்பொழுதே புறப்பட்டு, மலைநாட்டிற்சென்று, கொடுங்கோளுரை அடைந்து, மாளிகைக்கு முன்வந்து, சேரமான் பெருமாணாயனாருக்கு அறிவித்தார். உடனே சேரமான் பாணபத்திரை வணங்கி மிகுந்த அன்பினோடுங் கண்ணீர் சொரிய எழுந்து மாளிகைக்குப் புறத்தில் வந்து, பாணபத்திரரைப் பல முறை வணங்கி, "சுவாமி! தேவரீர் அடியேனை ஒருபொருளென மதித்துத் திருமுகங் கொண்டு வந்தீரே" என்றார்.
மந்திரிமார்களை நோக்கி, "நம்முடைய குல மாளிகையில் இருக்கின்ற பண்டாரமுழுதையும் பொதி செய்து ஆளின்மேல் ஏற்றிக் கொண்டு வாருங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க; அவர்கள் ஏற்றிக் கொண்டுவந்து வணங்கினார்கள். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்கு அந்தத் தனங்களை வெவ்வேறாகக் காட்டி, "சுவாமீ! தேவரீர் இவைகளையும் யானை குதிரை தேர் காலாள் என்னுஞ் சதுரங்கங்களையும் அடியேனுடைய அரசையுங் கைக்கொண்டருளும்" என்று சொல்ல, பாணபத்திரர் தமக்குச் சேரமான்பெருமாணாயனார் தந்த தனங்களெல்லாவற்றையுங் கண்டு, மனமகிழ்ந்து, அதிசயித்து, அவரைநோக்கி, "சுவாமீ! அடியேன் எனக்கு வேண்டுவனவற்றை மாத்திரங்கொள்ளும் பொருட்டே சிவாஞ்ஞை அரசையும் அரசுறுப்பையும் தேவரீரே கைக்கொண்டருளும்" என்று சொல்லி வணங்கினார். சேரமான்பெருமாணாயனாரும் சிவாஞ்ஞையை மறுத்தற்கு அஞ்சி, அதற்கு உடன்பட்டார் பாணபத்திரர்தனங்களெல்லாவற்றையும் யானை குதிரை உள்ளிட்டனவற்றுள் வேண்டுவனவற்றையுங்கொண்டு, ஓர் யானைமேல் ஏறிக்கொண்டுபோனார். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்குப் பின் கண்ணீர் சொரிய, கைதொழுது கொண்டு செல்ல, பாணபத்திரர் நகர்ப்புறத்தில் அவரிடத்திலே விடைபெற்றுக்கொண்டு போய், மதுரையை அடைந்தார்.
சேரமான்பெருமாணாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரும்,
கைலாசம் அடைதல்
சேரமான்பெருமாணாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரும், திருக்கைலாசத்தின் தெற்குவாயிலுக்கு முன் போனவுடனே, குதிரையினின்றும் யானையினின்றும் இறங்கி, பலவாயில்களையும் கடந்து, திருவணுக்கன்றிரு வாயிலை அடைந்தார்கள். அங்கே சேரமான்பெருமாணாயனார் தடைப்பட்டு நிற்க; சுந்தரமூர்த்திநாயனார் உள்ளே போய்ச் சிவசந்நிதானத்திலே விழுந்துநமஸ்கரித்து எழுந்து, ஸ்தோத்திரம்பண்ணி, "சுவாமீ! தேவரீருடைய திருவடிகளை அடையும் பொருட்டுச் சேரமான்பெருமான் திருவணுக்கன்றிருவாயிலின் புறத்திலே வந்து நிற்கின்றார்" என்று விண்ணப்பஞ்செய்தார். பரமசிவன் சேரமான்பெருமாணாயனாரை உள்ளே அழைப்பிக்க; அவர் விரைந்து வந்து சந்நிதானத்திலே நமஸ்கரித்துத் தோத்திரம்பண்ணினார். பரமசிவன் திருமுறுவல்செய்து, "இங்கே நாம் அழையாதிருக்க, நீ வந்ததென்னன" என்று அருளி செய்ய, சேரமான்பெருமாணாயனார் அஞ்சலி செய்து நின்று, "சுவாமீ! சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து அவர் ஏறிய வெள்ளையானைக்குமுன் அவரைச் சேவித்துக்கொண்டு வந்தேன். தேவரீர் பொழிகின்ற பெருங்கருணைவெள்ளம் முன்கொண்டு புகுதலால், திருமுன்பு வரப்பெற்றேன். இனி ஒரு விண்ணப்பம் உண்டு, அரிபிரமேந்திராதிதேவர்களாலும் முனிவர்களாலும் வேதங்களாலும் துதிக்கப்படுதற்கு அரிய பெருமையையுடைய தேவரீர்மேல் அன்பினாலே தேவரீரது திருவருள்கொண்டு திருவுலாப்பாடினேன். அதனைத் தேவரீர் திருச்செவி சாத்தல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்தார். அப்பொழுது சிவபெருமான் "சேரனே! அவ்வுலாவைச் சொல்லு" என்று திருவாய்மலர்ந்தருள; சேரமான்பெருமாணாயனாரும் அதனைக் கேட்பித்தார். சிவபெருமான் அதற்கு அருள்செய்து, "நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு" என்று திருவாய்மலர்ந்தருளினார். சேரமான்பெருமாணாயனார் சிவகணநாதராகிச் சுவாமியைச் சேவிப்பாராயினார். அவர் அருளிச்செய்த திருக்கைலாயஞானவுலாவைத் திருக்கைலாசகிரியிலே அன்று கேட்ட மாசாத்தரானவர் அதனைத்தரித்து, தமிழ்நாட்டிலே உள்ள திருப்பிடவூரிலே, வெளிப்படச்சொல்லி, பூமியிலே விளங்கும் பொருட்டு நாட்டியருளினார்.
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
ஞாலத்தைக்காக்க குமரன் எடுத்த பற்றற்ற கோலம்" பழனிஆண்டி"
முருகன் ஒரு ஞானக் கடவுள். உலகை சுற்றுவதற்கு பதிலாக உமா மகேஸ்வரனை சுற்றிவந்தாலே போதுமானது என்ற தத்துவம் அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும்? உயர்ந்த தத்துவத்தை உலகுக்கு உணர்த் அம்மையப்பனையே சுற்றி வந்து கனியை பெற்றுக் கொண்ட அண்ணன் கணபதியிடம், ஞானமே வடிவமான குமரன் கோபம் கொள்வானா? இப்படிப் பட்ட வரலாற்றை நம் குழந்தைகளுக்கு சொன்னால் கடவுளிடம் கோபமும் தாபமும் இருந்தால் மனிதர்களிடம் இருக்காதா? என்று எண்ண மாட்டார்களா?. இந்த சம்பவத்தை ஆராய்ந்து பார்த்த பெரியவர்கள், அதில் அடங்கியுள்ள தத்துவத்தை தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
நாரதர் தேவலோக மாங்கனியைக் சிவனாரிடம் கொடுத்து அதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்ததுமே, ஞானக்குழந்தைகளான கணபதி, முருகன் இருவரும் சட்டென்று " தாங்கள் ஸர்வேஸ்வரன் இது தங்களுக்கே உரியது " என்றார்கள்.
ஆனால் ஈஸ்வரனோ, மூத்தவன் நீ இந்தா, கனி உனக்கு என்று கணபதியிடம் கொடுத்தார்.
இல்லை, இளையவன் அவன், அவனுக்குக் கொடுங்கள் என்றார் முருகப்பெருமான்.
இப்படிப்படித்தான் ஆரம்பித்தது, அப்போது ஒரு வேடிக்கையான நாடகம் நடத்த விரும்பினார் நாரத முனி. இது வெறும் பழமன்று, ஞானப்பழம் தகுதி உடையவர்களுக்கே இது சேர வேண்டும் என்றார். ஈசன் சிந்தித்தார், உங்களில்உலகை முதலில் சுற்றி வருபவர் யாரோ, அவருக்கே இந்த பழம், அப்புறம் போட்டியில் வென்றவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் இதைக் கொடுக்கட்டும் என்று பிரச்னைக்கு மற்றொரு புதிய பரிமானத்தை உருவாக்கினார்.
உலகை சுற்ற வேண்டும் என்றாலும், ஈசன் படைத்த ஏழு உலகங்களையும் வலம் வர மயிலேறி புறப்பட்டார், முருகன். கணபதியோ, எல்லா உலகங்களையும் தன்னுக்குள்ளே அடக்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவசக்தியை சுற்றி அம்மையப்பனை வலம் வந்து , கந்தன் வரும்முன்பே கனியை பெற்றுக் கொண்டார் கணபதி.
கந்தன் வந்தார், அண்ணன் கையில் கனியைக் கண்டார். அது எப்படி அவருக்கு கிடைத்தது என்பதை தெரிந்து கொண்டார். உமா மகேஸ்வரனே உலகங்கள் அனைத்தும் என்ற உண்மை தனக்கு தெரியாமல் போனதை ஒரு கணம் எண்ணினார். அதற்கான காரணத்தை ஆராய்ந்தார், அண்ணன் கணபதி பிரணவ வடிவம், ஞானஸ்வரூபன், அவரிடமே இதற்கு காரணம் கேட்டார்,
அனைத்து உலகங்களையும் அம்மையப்பனில் காணும் ஆற்றல் விநாயகருக்கு இருந்தது, தவத்தின் பலனாய் பெற்ற ஞானம்தான் அந்த ஆற்றலுக்கு காரணம் என்பதை உணர்ந்தார். அதன் தொடர்பாக ப்ரம்மண்யனான தாம், ஸூப்ரமண்யமாக விரும்பினார். அதற்காக அவர் மேற்கொண்ட தவக் கோலமே பழனியாண்டி ரூபம்.
அண்ணனைப் போலத் தானும் தவமியற்றி, ஞானஸ்கந்தனாக விரும்பியதன் விளைவே அந்த ஆண்டி வேடம். சூரனை அழிக்கும் வீர சக்தியுடன் சிவனாரின் நெற்றிக்கண்ணில் உதித்த குமரன், ஞானக்கடவுளாகி, ஞாலத்தை காக்க எடுத்துக் கொண்ட பற்றற்ற திருக்கோலம் பழநி ஆண்டிக் கோலம், " கனி கிடைக்கவில்லை " என்ற கோபத்தில் ஆண்டியாக வில்லை. தன்னை வழிபடுவோர்க்கு எல்லாம் அதனை வழங்குவதற்காக விரும்பி, ஏற்றுக் கொண்ட வடிவமே அந்த பரதேசி வடிவம். கந்தனின்தவம் தொடங்கியது. பிரணவம் அவருள் அடங்கியது, ஞானம் அவர் மூச்சாயிற்று. அழகும் அறிவும் அவருள் ஒளிவீசியது. இப்போது இறைவன் ஈஸ்வரன் தன் திருக்குமரனின் ஞானத் தவத்தின் பயனை அறிய விரும்பினார். தன் மகன் குமரனை அழைத்தார். " ஓம்கார பிரணவத்தின் உண்மைப் பொருளை உன் தவத்தால் உணர்ந்து கொண்டாயா? என்று வினவினார்.
ஆம் தந்தையே என்றார் குமரன். எங்கே கூறு பார்க்கலாம் என்றார் ஈஸ்வரன்.
ஒரு ஆசிரியர் மாணவனைப் பார்த்து " பத்தும் இரண்டும் எத்தனை?" என்று கேட்டால் கூட்டல் கணக்கு ஆசிரியருக்கு தெரியவில்லை என்று அர்த்தமாகாது. மாணவனுக்கு தெரியுமா? என்று சோதித்து பார்க்கத்தான் அந்த கேள்வி. இப்போது அந்த ஆசிரியர் நிலையில் நின்றுதான் பரமேஸ்வரன் முருகப்பெருமானிடம் கேட்டார். கேள்விக்கு பதில் தெரிந்த மாணவன் போன்று தான் முருகன் பதில் கூறினார். ஆனால் பிரணத்தை எங்கே எப்படி, எந்த பாவத்தில் சொல்ல வேண்டும் என்ற நியதியில் தான் ஈஸ்வரன் மடியில் அமர்ந்து, காதில் ஓதினார், குருவாக அல்ல, குருவுக்கு சீடனாகத்தான், ஓதினார் குமரன். இதனை தவறாக " ஈஸ்வரனுக்கே ஓம்கார பொருள் கூறினார் " என்பது சிவ அபஸ்தம்.
நடந்த சமயத்தின் மூலம் தந்தைக்கு தன் அறிவின் திறத்தை உணர்த்தினார் முருகன். ஈஸ்வரனும், ப்ரம்மண்யனை ஸூப்ரமண்யன் என்று உணர்ந்து கொண்டார். இது வே சுப்ரமண்யன் சிவபெருமானுக்கு ஓம்கார பிரணவத்தை உபதேசித்த வரலாறு, இந்த நிகழ்வே தஞ்சை மாவட்ட த்திலுள்ள சுவாமிமலை.
அசுரர்களை அழிக்க மட்டுமல்ல, தர்மத்தை காக்கவும், தோன்றியவர் முருகன். அநீதியை அழிக்கவும், சக்தியை பிறக்கும் போதே பெற்றவர் இவர். பின்னர் தர்மத்தைக் காக்கும் ஞானத்தை தன் தவத்தினால் பெற்றார். நமக்கெல்லாம் ஞானத்தை அள்ளி வழங்க, தன்னையே ஆண்டியாக்கி கொண்டே தனிப்பெரும் தெய்வம் முருகப் பெருமான்.
திருச்சிற்றம்பலம்
மேலும் ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
முருகன் ஒரு ஞானக் கடவுள். உலகை சுற்றுவதற்கு பதிலாக உமா மகேஸ்வரனை சுற்றிவந்தாலே போதுமானது என்ற தத்துவம் அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும்? உயர்ந்த தத்துவத்தை உலகுக்கு உணர்த் அம்மையப்பனையே சுற்றி வந்து கனியை பெற்றுக் கொண்ட அண்ணன் கணபதியிடம், ஞானமே வடிவமான குமரன் கோபம் கொள்வானா? இப்படிப் பட்ட வரலாற்றை நம் குழந்தைகளுக்கு சொன்னால் கடவுளிடம் கோபமும் தாபமும் இருந்தால் மனிதர்களிடம் இருக்காதா? என்று எண்ண மாட்டார்களா?. இந்த சம்பவத்தை ஆராய்ந்து பார்த்த பெரியவர்கள், அதில் அடங்கியுள்ள தத்துவத்தை தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
நாரதர் தேவலோக மாங்கனியைக் சிவனாரிடம் கொடுத்து அதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்ததுமே, ஞானக்குழந்தைகளான கணபதி, முருகன் இருவரும் சட்டென்று " தாங்கள் ஸர்வேஸ்வரன் இது தங்களுக்கே உரியது " என்றார்கள்.
ஆனால் ஈஸ்வரனோ, மூத்தவன் நீ இந்தா, கனி உனக்கு என்று கணபதியிடம் கொடுத்தார்.
இல்லை, இளையவன் அவன், அவனுக்குக் கொடுங்கள் என்றார் முருகப்பெருமான்.
இப்படிப்படித்தான் ஆரம்பித்தது, அப்போது ஒரு வேடிக்கையான நாடகம் நடத்த விரும்பினார் நாரத முனி. இது வெறும் பழமன்று, ஞானப்பழம் தகுதி உடையவர்களுக்கே இது சேர வேண்டும் என்றார். ஈசன் சிந்தித்தார், உங்களில்உலகை முதலில் சுற்றி வருபவர் யாரோ, அவருக்கே இந்த பழம், அப்புறம் போட்டியில் வென்றவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் இதைக் கொடுக்கட்டும் என்று பிரச்னைக்கு மற்றொரு புதிய பரிமானத்தை உருவாக்கினார்.
உலகை சுற்ற வேண்டும் என்றாலும், ஈசன் படைத்த ஏழு உலகங்களையும் வலம் வர மயிலேறி புறப்பட்டார், முருகன். கணபதியோ, எல்லா உலகங்களையும் தன்னுக்குள்ளே அடக்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவசக்தியை சுற்றி அம்மையப்பனை வலம் வந்து , கந்தன் வரும்முன்பே கனியை பெற்றுக் கொண்டார் கணபதி.
கந்தன் வந்தார், அண்ணன் கையில் கனியைக் கண்டார். அது எப்படி அவருக்கு கிடைத்தது என்பதை தெரிந்து கொண்டார். உமா மகேஸ்வரனே உலகங்கள் அனைத்தும் என்ற உண்மை தனக்கு தெரியாமல் போனதை ஒரு கணம் எண்ணினார். அதற்கான காரணத்தை ஆராய்ந்தார், அண்ணன் கணபதி பிரணவ வடிவம், ஞானஸ்வரூபன், அவரிடமே இதற்கு காரணம் கேட்டார்,
அனைத்து உலகங்களையும் அம்மையப்பனில் காணும் ஆற்றல் விநாயகருக்கு இருந்தது, தவத்தின் பலனாய் பெற்ற ஞானம்தான் அந்த ஆற்றலுக்கு காரணம் என்பதை உணர்ந்தார். அதன் தொடர்பாக ப்ரம்மண்யனான தாம், ஸூப்ரமண்யமாக விரும்பினார். அதற்காக அவர் மேற்கொண்ட தவக் கோலமே பழனியாண்டி ரூபம்.
அண்ணனைப் போலத் தானும் தவமியற்றி, ஞானஸ்கந்தனாக விரும்பியதன் விளைவே அந்த ஆண்டி வேடம். சூரனை அழிக்கும் வீர சக்தியுடன் சிவனாரின் நெற்றிக்கண்ணில் உதித்த குமரன், ஞானக்கடவுளாகி, ஞாலத்தை காக்க எடுத்துக் கொண்ட பற்றற்ற திருக்கோலம் பழநி ஆண்டிக் கோலம், " கனி கிடைக்கவில்லை " என்ற கோபத்தில் ஆண்டியாக வில்லை. தன்னை வழிபடுவோர்க்கு எல்லாம் அதனை வழங்குவதற்காக விரும்பி, ஏற்றுக் கொண்ட வடிவமே அந்த பரதேசி வடிவம். கந்தனின்தவம் தொடங்கியது. பிரணவம் அவருள் அடங்கியது, ஞானம் அவர் மூச்சாயிற்று. அழகும் அறிவும் அவருள் ஒளிவீசியது. இப்போது இறைவன் ஈஸ்வரன் தன் திருக்குமரனின் ஞானத் தவத்தின் பயனை அறிய விரும்பினார். தன் மகன் குமரனை அழைத்தார். " ஓம்கார பிரணவத்தின் உண்மைப் பொருளை உன் தவத்தால் உணர்ந்து கொண்டாயா? என்று வினவினார்.
ஆம் தந்தையே என்றார் குமரன். எங்கே கூறு பார்க்கலாம் என்றார் ஈஸ்வரன்.
ஒரு ஆசிரியர் மாணவனைப் பார்த்து " பத்தும் இரண்டும் எத்தனை?" என்று கேட்டால் கூட்டல் கணக்கு ஆசிரியருக்கு தெரியவில்லை என்று அர்த்தமாகாது. மாணவனுக்கு தெரியுமா? என்று சோதித்து பார்க்கத்தான் அந்த கேள்வி. இப்போது அந்த ஆசிரியர் நிலையில் நின்றுதான் பரமேஸ்வரன் முருகப்பெருமானிடம் கேட்டார். கேள்விக்கு பதில் தெரிந்த மாணவன் போன்று தான் முருகன் பதில் கூறினார். ஆனால் பிரணத்தை எங்கே எப்படி, எந்த பாவத்தில் சொல்ல வேண்டும் என்ற நியதியில் தான் ஈஸ்வரன் மடியில் அமர்ந்து, காதில் ஓதினார், குருவாக அல்ல, குருவுக்கு சீடனாகத்தான், ஓதினார் குமரன். இதனை தவறாக " ஈஸ்வரனுக்கே ஓம்கார பொருள் கூறினார் " என்பது சிவ அபஸ்தம்.
நடந்த சமயத்தின் மூலம் தந்தைக்கு தன் அறிவின் திறத்தை உணர்த்தினார் முருகன். ஈஸ்வரனும், ப்ரம்மண்யனை ஸூப்ரமண்யன் என்று உணர்ந்து கொண்டார். இது வே சுப்ரமண்யன் சிவபெருமானுக்கு ஓம்கார பிரணவத்தை உபதேசித்த வரலாறு, இந்த நிகழ்வே தஞ்சை மாவட்ட த்திலுள்ள சுவாமிமலை.
அசுரர்களை அழிக்க மட்டுமல்ல, தர்மத்தை காக்கவும், தோன்றியவர் முருகன். அநீதியை அழிக்கவும், சக்தியை பிறக்கும் போதே பெற்றவர் இவர். பின்னர் தர்மத்தைக் காக்கும் ஞானத்தை தன் தவத்தினால் பெற்றார். நமக்கெல்லாம் ஞானத்தை அள்ளி வழங்க, தன்னையே ஆண்டியாக்கி கொண்டே தனிப்பெரும் தெய்வம் முருகப் பெருமான்.
திருச்சிற்றம்பலம்
மேலும் ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
கந்தபுராணம் கூறும் சுலோகம் " கள்ளிளும் கொடியது காமத்யே"
"உள்ளினும் சுட்டிடும் உணரும் கேள்வியில்
கொள்ளிலும் சுட்டிடும் குறுகி மற்றதைத்
தள்ளினும் சுட்டிடும் தன்மை ஈதினால்
கள்ளினும் கொடியது காமத்தீயதே" -- கந்தபுராணம்
திரை நட்சத்திரங்கள் நேருக்கு நேராகப் பார்க்காவிட்டாலும்கூட, திரைப்படிங்களில் அவர்கள் டூயர் பாடி ஆடுவதை பார்க்கும் போது, நம் மனது நிலைகொள்ளாது தவிக்கிறது. அந்த நடிகர்இடத்திலோ, நடிகை இடத்திலோநம்மை நிறுத்தி வைத்துக் கற்பனையாக டூயட் பாடத் தோன்றுகிறது.
நிழலைப் பார்க்கும் நமக்கே இப்படி இருந்தால், நிஜத்தில் நெருங்கி நடிக்கும் நடிக-நடிகையருக்கு எப்படி இருக்கும்??
பெற்ற தகப்பான இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு, தன் மகளையே தொட்டுப் பேசக்கூடாது என்கிறது சாஸ்திரம். காரணம் , காமம் அந்த அளவுக்கு வலிமையானது. காமத்தை வெல்லவேண்டும் என்றால், மனக்கட்டுப்பாடு அவசியம்.
ஒரு தடவை ஒரு நடுத்தர வயது இளைஞன், இராமகிருஸ்ண பரமஹம்சரிடம் என்னால் காமத்தீயை அடக்க முடியவில்லை, அதனை வெல்ல என்ன செய்யவது என்றான். அதற்கு குருதேவர் ஒரு கதை மூலம் விளக்கினாராம், ஒருவன் தனது இஸ்டப்பிராணியாக , செல்லப்பிராணியான ஒரு நாயினை வளர்த்தான், அது எப்போதும் அவன் எஜமானன் கூடவே இருந்து பழக்கமாகிவிட்டது, உண்ணும்போதும், உறங்கும் போதும் அவனுடைய ஒட்டி உறவாடிக்கொண்டே இருந்ததாம், இப்படி இருக்கும் போது, ஒரு வைத்தியர், இப்படி நாயுடன் ஒட்டி உறவாடுவது உனக்கு நல்லதல்ல, எனவே அதன் பழக்க வழக்கங்களை மாற்றிவிடு. என்று கூறி சென்றுள்ளார், அதன் பின் அவன் அந்த நாயுடன் ஒட்டி உறவாடுவதை சற்று விலக்கியுள்ளான், ஆனால் நாயோ அதனை புரிந்து கொள்ளவில்லை? ஏனெனில் அது மனிதனைப்போல் அதற்கு புரிந்து கொள்ளும் தன்மை யற்றது தானே! . எனவே, இதனிடமிருந்து விலகி இருக்க அவன் அதனை அடித்து துன்புரித்தியும் அது அதன் பழைய செய்கையிலிருந்து மாறுபட மறுத்தது. இருப்பினும் இதன்செய்கை தொடர்ச்சியாகஇருந்தபடியால் நாய் சற்று அவனிடமிருந்து விலக ஆரம்பித்து, ஒட்டி உறவாடுவது குறைந்து விட்டது. இதற்கு பல காலம் பிடித்தது. இப்படி உயிருள்ள ஜீவனை பிரிப்பதற்கே பல காலம் ஆகும் போது, உயிரற்ற காம உணர்ச்சியினை கட்டுப்படுத்த - விலக்க நாயின் தொடர்பிலிருந்து விலகுவது போல் பல காலம் கழித்து விடா முயற்சி செய்து, அதன் பிடியிலிருந்து விடுபடலாம், என்றார் இராமகிருஷ்ணர், எனவே காமத்தீயிலிருந்து விலகுவது அவ்வளவு எளிதல்ல, என்று விளக்கினார்.
முற்காலத்தில் மாமுனிவர்கள் ஆள் அரவமற்ற காட்டில் தவம் செய்து கொண்டிருந்தபோதே மனம் தடுமாறியதை இதிகாச புராணங்கள் விரவாகச் சொல்லி யிருக்கின்றன.
மாயை என்பவள் காசிப முனிவரை மயக்கி, அசுர குலத்தை அதிகரிக்க நினைத்தாள், அதற்காக, காசிப முனிவர் தவம் செய்து கொண்டிருந்த காட்டில் சூழ்நிலையையே தனது மாய சக்தியால் மாற்றினாள். அழகான சின்னஞ்சிறு குன்றுகள்,வாசம் வீசும் மலர்களைக் கொண்ட மரம், செடிகள்,கொடிகள் நீருற்றுக்கள், அருவிகள்,அழகும் ருசியும் நிறைந்த பழ மரங்கள், மனத்திற்கு ரம்மியமான இளம் தென்றல் காற்று, இனிமையான ஓசையை எழுப்பும் பறவைகள், என அத்தனையும் அங்கே உருவாக்கினாள். மாயை, கடும் தவத்தில் இருந்த காசிபரின் உடல் , சுற்றுபப்புறத்தில் நிகழ்ந்த இந்த மாற்றத்தினால் மனம் தவ நிலையை விட்டு தடுமாற ஆரம்பித்தது. யாராக இருந்தாலும் என்ன? அனைவருக்கும் உடம்பின் வசப்பட்டவர்கள்தானே?
காசிப முனிவர் கண்களை திறந்தார்,எதிரில் ஆகாயத்திலிருந்து நழுவி விழுந்த வானவில்லை போல அழகு ததும்ப நின்றிருந்தாள் மாயை. அப்புறம், என்ன.......... காசிப முனிவருக்கும், மாயைக்கும் சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகாசுரன் , அஜமுகி என்ற அசுரக் கும்பல் பிறந்தது.
தன் எண்ணம் நிறைவேறியது கண்டு மாயை மகிழ்ச்சி அடைந்தாள். காசிபரை விட்டு புறப்பட தீர்மானித்தாள். பின்னே காசிபருடன் குடும்ப நடத்தவா அவள் வந்தாள். அவள் எண்ணிய எண்ணம் ஈடேறியது. மாயை மாயமானாள்.
மாயை புறப்படுவதைக்கண்டு காசிபர் மனம் கலங்கினார், மாயையோ, " முனிவரே ! நான் அசுர குலத்தை விருத்தி செய்யவே வந்தேன். உங்களோடு வாழ்க்கை நடத்த வரவில்ைலை. நான் மாயை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். என்று கூறிவிட்டு மறைந்தாள்.
அவள் மறைந்ததும், அவளால் உண்டாக்கப்பட்ட ரம்மியமான கானகமும் அனைத்தும் மறைந்து விட்டது. ஆனால் காசிபரால் பழைய நிலையை அடைய முடியவில்லை. மாயையின் பிரிவை எண்ணி அவர் துயரத்தில் ஆழ்ந்தார். அப்போது காசிபரின் தந்தையான பிரம்மா அங்கு வந்தார், மகனின் நிலை கண்டு, அதற்கான காரணத்தை விசாரித்தார். காசிபர்நடந்ததை விவரித்தார் அதைக் கேட்ட பிரம்மதேவருக்கு மனம் கூசியது. " காசிபா ! வேதங்களிலும், கலை ஞானங்களிலும், கரைகண்ட நீ, காம வலையில் சிக்கலாமா? அறிவிழந்து, மூடர்களைப்போல், புலம்பிக் கொண்டிருக்கிறாயே! .. உலகிலேயே இரண்டு பொருட்கள் மிகவும் கொடுமையானது, ஒன்று கள், மற்றொன்று - காமம், இந்த இரண்டில் கள்ளைவிட மிகவும் கொடுமையானது காமம். கள்ளானது அருந்தினால்தான் போதை ஏறும், தீங்கை விளைவிக்கும். ஆனால் காமமோ, மனத்தில் நினைத்தாலே ஆளைக் கொன்றுவிடும்.காமம் நினைத்தாலும் சுடும், கண்டாலும் சுடும். கேட்டாலும் சுடும். அடைந்தாலும் சுடும், நீக்கினாலும் சுடும். இப்படிப்பட்ட தன்மையால் காமத்தீயானது கள்ளை விடக் கொடுமையானது, எல்லாவிதமான துன்பங்களையும் தந்து, வாட்டி வதைக்கும் காமத்தை அறிவுள்ளவர்கள் நினையார்?
நீ விரும்பிய மாயை என்பவள் வஞ்சனையே வடிவானவள், அவளுடன் சேர்ந்ததன் மூலம் நீ அளவில்லாத பாவத்தை செய்து விட்டாய், அந்த பாவம் நீங்கவதற்காக நீ முன்பு போல தவத்தை செய் " என்று காசிபருக்கு நீண்ட அறிவுரை யும், ஆசியும் கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார் பிரம்மன்.
உண்மையை உணர்ந்த காசிபர் அதன் பின் சிறந்த, முறையில் தவத்தை செய்து, சிவத்தை சேர்ந்தார்.
யோசித்து பாருங்கள், விஸ்வாமித்திரர்,துர்வாசர், முதலான ரிஷிகளே காம வலையில் அகப்பட்டு, அல்லல் பட்டபோது நாமெல்லாம் எந்த மூலை?
ராவணன் கயிலாய மலையையே அசைத்தவன், தலைசிறந்த வீரன், உத்தமமான மனைவி, நல்ல பிள்ளை என அனைத்தும் இருந்தும் காமம் தானே ராவணனை வீழ்த்தியது.
மாமுனிவர்கள் கூட மங்கையர்களின் மையல் வலையில் வீழ்ந்து மனம் கலங்கியதைச் சொல்லி இதிகாச புராணங்கள் நமக்கு பாடம் நடத்தி இருக்கின்றன.
இதனைத்தானே கந்தபுராணம் இந்த பாடலில் கூறியுள்ளது.
உள்ளினும் சுட்டிடும்உணரும் கேள்வியல்
...................
கள்ளினும் கொடியது காமத்தீயதே! " என்கிறது.
எனவே காமத்தீயினை அடக்கிட மனத்தூய்மையும், மன உறுதியும், விடா முயற்சியும் வேண்டும்.
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
"உள்ளினும் சுட்டிடும் உணரும் கேள்வியில்
கொள்ளிலும் சுட்டிடும் குறுகி மற்றதைத்
தள்ளினும் சுட்டிடும் தன்மை ஈதினால்
கள்ளினும் கொடியது காமத்தீயதே" -- கந்தபுராணம்
திரை நட்சத்திரங்கள் நேருக்கு நேராகப் பார்க்காவிட்டாலும்கூட, திரைப்படிங்களில் அவர்கள் டூயர் பாடி ஆடுவதை பார்க்கும் போது, நம் மனது நிலைகொள்ளாது தவிக்கிறது. அந்த நடிகர்இடத்திலோ, நடிகை இடத்திலோநம்மை நிறுத்தி வைத்துக் கற்பனையாக டூயட் பாடத் தோன்றுகிறது.
நிழலைப் பார்க்கும் நமக்கே இப்படி இருந்தால், நிஜத்தில் நெருங்கி நடிக்கும் நடிக-நடிகையருக்கு எப்படி இருக்கும்??
பெற்ற தகப்பான இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு, தன் மகளையே தொட்டுப் பேசக்கூடாது என்கிறது சாஸ்திரம். காரணம் , காமம் அந்த அளவுக்கு வலிமையானது. காமத்தை வெல்லவேண்டும் என்றால், மனக்கட்டுப்பாடு அவசியம்.
ஒரு தடவை ஒரு நடுத்தர வயது இளைஞன், இராமகிருஸ்ண பரமஹம்சரிடம் என்னால் காமத்தீயை அடக்க முடியவில்லை, அதனை வெல்ல என்ன செய்யவது என்றான். அதற்கு குருதேவர் ஒரு கதை மூலம் விளக்கினாராம், ஒருவன் தனது இஸ்டப்பிராணியாக , செல்லப்பிராணியான ஒரு நாயினை வளர்த்தான், அது எப்போதும் அவன் எஜமானன் கூடவே இருந்து பழக்கமாகிவிட்டது, உண்ணும்போதும், உறங்கும் போதும் அவனுடைய ஒட்டி உறவாடிக்கொண்டே இருந்ததாம், இப்படி இருக்கும் போது, ஒரு வைத்தியர், இப்படி நாயுடன் ஒட்டி உறவாடுவது உனக்கு நல்லதல்ல, எனவே அதன் பழக்க வழக்கங்களை மாற்றிவிடு. என்று கூறி சென்றுள்ளார், அதன் பின் அவன் அந்த நாயுடன் ஒட்டி உறவாடுவதை சற்று விலக்கியுள்ளான், ஆனால் நாயோ அதனை புரிந்து கொள்ளவில்லை? ஏனெனில் அது மனிதனைப்போல் அதற்கு புரிந்து கொள்ளும் தன்மை யற்றது தானே! . எனவே, இதனிடமிருந்து விலகி இருக்க அவன் அதனை அடித்து துன்புரித்தியும் அது அதன் பழைய செய்கையிலிருந்து மாறுபட மறுத்தது. இருப்பினும் இதன்செய்கை தொடர்ச்சியாகஇருந்தபடியால் நாய் சற்று அவனிடமிருந்து விலக ஆரம்பித்து, ஒட்டி உறவாடுவது குறைந்து விட்டது. இதற்கு பல காலம் பிடித்தது. இப்படி உயிருள்ள ஜீவனை பிரிப்பதற்கே பல காலம் ஆகும் போது, உயிரற்ற காம உணர்ச்சியினை கட்டுப்படுத்த - விலக்க நாயின் தொடர்பிலிருந்து விலகுவது போல் பல காலம் கழித்து விடா முயற்சி செய்து, அதன் பிடியிலிருந்து விடுபடலாம், என்றார் இராமகிருஷ்ணர், எனவே காமத்தீயிலிருந்து விலகுவது அவ்வளவு எளிதல்ல, என்று விளக்கினார்.
முற்காலத்தில் மாமுனிவர்கள் ஆள் அரவமற்ற காட்டில் தவம் செய்து கொண்டிருந்தபோதே மனம் தடுமாறியதை இதிகாச புராணங்கள் விரவாகச் சொல்லி யிருக்கின்றன.
மாயை என்பவள் காசிப முனிவரை மயக்கி, அசுர குலத்தை அதிகரிக்க நினைத்தாள், அதற்காக, காசிப முனிவர் தவம் செய்து கொண்டிருந்த காட்டில் சூழ்நிலையையே தனது மாய சக்தியால் மாற்றினாள். அழகான சின்னஞ்சிறு குன்றுகள்,வாசம் வீசும் மலர்களைக் கொண்ட மரம், செடிகள்,கொடிகள் நீருற்றுக்கள், அருவிகள்,அழகும் ருசியும் நிறைந்த பழ மரங்கள், மனத்திற்கு ரம்மியமான இளம் தென்றல் காற்று, இனிமையான ஓசையை எழுப்பும் பறவைகள், என அத்தனையும் அங்கே உருவாக்கினாள். மாயை, கடும் தவத்தில் இருந்த காசிபரின் உடல் , சுற்றுபப்புறத்தில் நிகழ்ந்த இந்த மாற்றத்தினால் மனம் தவ நிலையை விட்டு தடுமாற ஆரம்பித்தது. யாராக இருந்தாலும் என்ன? அனைவருக்கும் உடம்பின் வசப்பட்டவர்கள்தானே?
காசிப முனிவர் கண்களை திறந்தார்,எதிரில் ஆகாயத்திலிருந்து நழுவி விழுந்த வானவில்லை போல அழகு ததும்ப நின்றிருந்தாள் மாயை. அப்புறம், என்ன.......... காசிப முனிவருக்கும், மாயைக்கும் சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகாசுரன் , அஜமுகி என்ற அசுரக் கும்பல் பிறந்தது.
தன் எண்ணம் நிறைவேறியது கண்டு மாயை மகிழ்ச்சி அடைந்தாள். காசிபரை விட்டு புறப்பட தீர்மானித்தாள். பின்னே காசிபருடன் குடும்ப நடத்தவா அவள் வந்தாள். அவள் எண்ணிய எண்ணம் ஈடேறியது. மாயை மாயமானாள்.
மாயை புறப்படுவதைக்கண்டு காசிபர் மனம் கலங்கினார், மாயையோ, " முனிவரே ! நான் அசுர குலத்தை விருத்தி செய்யவே வந்தேன். உங்களோடு வாழ்க்கை நடத்த வரவில்ைலை. நான் மாயை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். என்று கூறிவிட்டு மறைந்தாள்.
அவள் மறைந்ததும், அவளால் உண்டாக்கப்பட்ட ரம்மியமான கானகமும் அனைத்தும் மறைந்து விட்டது. ஆனால் காசிபரால் பழைய நிலையை அடைய முடியவில்லை. மாயையின் பிரிவை எண்ணி அவர் துயரத்தில் ஆழ்ந்தார். அப்போது காசிபரின் தந்தையான பிரம்மா அங்கு வந்தார், மகனின் நிலை கண்டு, அதற்கான காரணத்தை விசாரித்தார். காசிபர்நடந்ததை விவரித்தார் அதைக் கேட்ட பிரம்மதேவருக்கு மனம் கூசியது. " காசிபா ! வேதங்களிலும், கலை ஞானங்களிலும், கரைகண்ட நீ, காம வலையில் சிக்கலாமா? அறிவிழந்து, மூடர்களைப்போல், புலம்பிக் கொண்டிருக்கிறாயே! .. உலகிலேயே இரண்டு பொருட்கள் மிகவும் கொடுமையானது, ஒன்று கள், மற்றொன்று - காமம், இந்த இரண்டில் கள்ளைவிட மிகவும் கொடுமையானது காமம். கள்ளானது அருந்தினால்தான் போதை ஏறும், தீங்கை விளைவிக்கும். ஆனால் காமமோ, மனத்தில் நினைத்தாலே ஆளைக் கொன்றுவிடும்.காமம் நினைத்தாலும் சுடும், கண்டாலும் சுடும். கேட்டாலும் சுடும். அடைந்தாலும் சுடும், நீக்கினாலும் சுடும். இப்படிப்பட்ட தன்மையால் காமத்தீயானது கள்ளை விடக் கொடுமையானது, எல்லாவிதமான துன்பங்களையும் தந்து, வாட்டி வதைக்கும் காமத்தை அறிவுள்ளவர்கள் நினையார்?
நீ விரும்பிய மாயை என்பவள் வஞ்சனையே வடிவானவள், அவளுடன் சேர்ந்ததன் மூலம் நீ அளவில்லாத பாவத்தை செய்து விட்டாய், அந்த பாவம் நீங்கவதற்காக நீ முன்பு போல தவத்தை செய் " என்று காசிபருக்கு நீண்ட அறிவுரை யும், ஆசியும் கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார் பிரம்மன்.
உண்மையை உணர்ந்த காசிபர் அதன் பின் சிறந்த, முறையில் தவத்தை செய்து, சிவத்தை சேர்ந்தார்.
யோசித்து பாருங்கள், விஸ்வாமித்திரர்,துர்வாசர், முதலான ரிஷிகளே காம வலையில் அகப்பட்டு, அல்லல் பட்டபோது நாமெல்லாம் எந்த மூலை?
ராவணன் கயிலாய மலையையே அசைத்தவன், தலைசிறந்த வீரன், உத்தமமான மனைவி, நல்ல பிள்ளை என அனைத்தும் இருந்தும் காமம் தானே ராவணனை வீழ்த்தியது.
மாமுனிவர்கள் கூட மங்கையர்களின் மையல் வலையில் வீழ்ந்து மனம் கலங்கியதைச் சொல்லி இதிகாச புராணங்கள் நமக்கு பாடம் நடத்தி இருக்கின்றன.
இதனைத்தானே கந்தபுராணம் இந்த பாடலில் கூறியுள்ளது.
உள்ளினும் சுட்டிடும்உணரும் கேள்வியல்
...................
கள்ளினும் கொடியது காமத்தீயதே! " என்கிறது.
எனவே காமத்தீயினை அடக்கிட மனத்தூய்மையும், மன உறுதியும், விடா முயற்சியும் வேண்டும்.
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
பட்டினத்து அடிகள்
பட்டினத்து அடிகள்
பன்னிரு திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பன்னிருவராவரில் பட்டினத்து அடிகள் ஒருவராவார். இவர் ஒரு சிறந்த சிவனடியார். இவருடைய குருபூஜை நாள் 30.07,2015
இன்றைய நாளில் அன்னாரின் துறவர வாழ்க்கை பற்றி நாம் சற்று நினைவு ெகாள்வோம்.
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் இவர் அவதரித்தார். பெற்றோர் திருவெண்காடர் எனப் பெயர் சூட்டி வளர்த்தனர். திருவெண்காடர் வளர்ந்து சிறந்து வாணிகத்தால் பெரும் பொருள் ஈட்டி சிவபத்தியில் சிறந்தவராய், சிவனடியார்களுக்கு வேண்டுவன அளிக்கும் பண்பினராய் விளங்கினார். நிறைந்த செல்வம் உடையவராய் வாழ்ந்து வந்த இவருக்கு இளம் வயதிலேயே துறவர வாழ்வு கொண்டதால் இவருக்கு மக்கட் செல்வம் வாய்த்திலது.
திருவெண்காடரின் மகனாக வந்தடைந்த மருதவாணர் வளர்ந்து சிறந்து வாணிபத்தில் வல்லவராய்ப் பெரும் பொருள் ஈட்டித் தம் பெற்றோரை மகிழ்வித்து வந்தார். வணிகர் சிலருடன் கடல் கடந்து சென்று வாணிபம் புரிந்து பெரும் பொருள் ஈட்டி திருக்கோயில் பணிகட்கும், சிவனடியார்கட்கும் அளித்து வந்தார். அவ்வாறு கடல் வாணிபம் செய்து வரும்போது ஒருமுறை வணிகர்கள் பலரோடு கடல் கடந்து சென்றவர் அங்கிருந்து எருமுட்டைகளையும் தவிட்டையுமே வாங்கித் தம் மரக்கலத்தில் நிரப்பிக்கொண்டு ஊர் திரும்பினார்.
வழியில் அனைவர் மரக்கலங்களும் காற்றில் திசைமாறிப் போயின. உடன் வந்த வணிகர்கள் உணவு சமைத்தற்கு இவரிடம் கடனாக எரு மூட்டைகளை வாங்கிப் பயன்படுத்தி உணவு சமைத்தனர். சில நாட்கள் கழித்து அனைவரும் காவிரிப்பூம்பட்டினம் மீண்டனர்.
அவருடன் சென்ற நண்பர்கள் தான் கொண்டு சென்ற செல்வத்தை எல்லாம் செலவழித்து விட்டு மருதவாணர் எருமூட்ைடகளை வாங்கிவந்துள்ளார் என கேலி செய்தனா். ஆனால் அவரின் தந்தையார் அதனை நம்பாமல் மூட்டைகளை பிரித்து பார்த்ததில் அதில வைரமும் தங்கத்தூள்களும் இருப்பதை அறிந்தாா். சில நாட்கள் கழித்து அதுவும் மறைந்து மறுபடியும் எரு மூட்டைகளாக மாறியது.இதனால் கோபம் கொண்ட தந்தையார் மகனை திட்ட அதனால் பற்றற்ற நிலை ெபற்று துறவறம் கொண்ட மருதவாணர் என்ற பட்டிணத்து அடிகளார், காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என எழுதிய ஓலையினைக் ெகாண்ட பேழையை தன் தாயிடம் கொடுத்து விட்டு துறவறம் பூண்டார்.
சிவசமாதி
திருவெண்காட்டு அடிகள் திருஒற்றியூரில் தங்கியிருந்த போது, கடற்கரையில் விளையாடும் சிறுவர்களோடு தாமும் சேர்ந்து மணலில் புதைதல் பின் வெளிப்படல் போன்ற விளையாட்டுக்களை நிகழ்த்தினார். முடிவில் சிறுவர்களைக் கொண்டு மணலால் தன்னை மூடச் செய்தார். நெடுநேரம் ஆகியும் அவர் வெளிப்படாதிருத்தலைக் கண்டு சிறுவர்கள் மணலை அகழ்ந்து பார்த்தபோது அடிகள் சிவ லிங்கமாக வெளிப்பட்டருளினார்.
செல்வந்தராக வாழ்ந்த பட்டிணத்து அடிகள் பாடிய எளிய பாடல்கள் அனைவரையும் மனம்உருக வைக்கும் பாடல்கள்
பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே
தனக்கென்று எதுவும் வேண்டுமென்று வைத்துக் கொள்வது இல்லை. ஒரு பாடலில் தனக்கு உடுத்த, வெயில் மழை, குளிருக்கு, பழைய வேட்டி ஒன்று உண்டு, பசித்தபோது உணவு கொடுக்க சிவனுண்டு, உறங்க திண்ணை உண்டு என்று பாடியுள்ளார்.
பட்டிணத்து அடிகளாரின் பற்றற்ற வாழ்வுக்கு அளவே கிடையாது, ஒரு தடவை அடிகளார், அறுவடை செய்த வயலில் வரப்பில் தலை வைத்து படுத்திருந்தார், அவ்வழியே வந்த பெண்கள் இருவர், அடிகளா்ர் படுத்திருப்பதை முற்றும் துறந்த பின்னும் இன்னும் தன் ெசல்வ செழிப்பில் தூங்குவது ேபால், தலையை வரப்பில் வைத்தல்லவா படுத்துள்ளார் என்றனா், உடனே இதனை கேட்ட அடிகளார், தலையை தரையில் வைத்து படுத்திருந்தார், மீண்டும் இப்ெபண்கள் அவ்வழியே திரும்பி வரும் போது இதனைக் கண்டு, மேலும் அடிகளார், நாம் பேசுவதைத்தானே கவனிததுள்ளார், துறவிக்கு ஏன் நாம் பேசுவதை கேட்டார் என்றனா். அவர்களின் கூற்றையும் அடிகளார் எடுத்துக் கொண்டு பிணம் போல் வாழவேண்டிய இந்த ஊன் உடம்பிற்கு வம்பு பேசுவதை ேகட்பது தவறுதானே என உணர்ந்தார். இதன் பொருட்டு அவரின் பாடல்
பட்டினத்தார் கூறுகிறார் கேளுங்கள் ...
“”பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சை எல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்
தாய்போல் கருதி தமர்போல் அனைவருக்குந் தாழ்மை சொல்லி
சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே
மேலும் தனது உடம்பை நரி, புழு, கழுகு,மண் திண்பதற்கான புழுத்துப்போகும் உடலை வீணே வளர்ப்பது ஏனோ ? என்கிறார்.
திருச்சிற்றம்பலம்
ேமலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
பட்டினத்து அடிகள்
பன்னிரு திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பன்னிருவராவரில் பட்டினத்து அடிகள் ஒருவராவார். இவர் ஒரு சிறந்த சிவனடியார். இவருடைய குருபூஜை நாள் 30.07,2015
இன்றைய நாளில் அன்னாரின் துறவர வாழ்க்கை பற்றி நாம் சற்று நினைவு ெகாள்வோம்.
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் இவர் அவதரித்தார். பெற்றோர் திருவெண்காடர் எனப் பெயர் சூட்டி வளர்த்தனர். திருவெண்காடர் வளர்ந்து சிறந்து வாணிகத்தால் பெரும் பொருள் ஈட்டி சிவபத்தியில் சிறந்தவராய், சிவனடியார்களுக்கு வேண்டுவன அளிக்கும் பண்பினராய் விளங்கினார். நிறைந்த செல்வம் உடையவராய் வாழ்ந்து வந்த இவருக்கு இளம் வயதிலேயே துறவர வாழ்வு கொண்டதால் இவருக்கு மக்கட் செல்வம் வாய்த்திலது.
திருவெண்காடரின் மகனாக வந்தடைந்த மருதவாணர் வளர்ந்து சிறந்து வாணிபத்தில் வல்லவராய்ப் பெரும் பொருள் ஈட்டித் தம் பெற்றோரை மகிழ்வித்து வந்தார். வணிகர் சிலருடன் கடல் கடந்து சென்று வாணிபம் புரிந்து பெரும் பொருள் ஈட்டி திருக்கோயில் பணிகட்கும், சிவனடியார்கட்கும் அளித்து வந்தார். அவ்வாறு கடல் வாணிபம் செய்து வரும்போது ஒருமுறை வணிகர்கள் பலரோடு கடல் கடந்து சென்றவர் அங்கிருந்து எருமுட்டைகளையும் தவிட்டையுமே வாங்கித் தம் மரக்கலத்தில் நிரப்பிக்கொண்டு ஊர் திரும்பினார்.
வழியில் அனைவர் மரக்கலங்களும் காற்றில் திசைமாறிப் போயின. உடன் வந்த வணிகர்கள் உணவு சமைத்தற்கு இவரிடம் கடனாக எரு மூட்டைகளை வாங்கிப் பயன்படுத்தி உணவு சமைத்தனர். சில நாட்கள் கழித்து அனைவரும் காவிரிப்பூம்பட்டினம் மீண்டனர்.
அவருடன் சென்ற நண்பர்கள் தான் கொண்டு சென்ற செல்வத்தை எல்லாம் செலவழித்து விட்டு மருதவாணர் எருமூட்ைடகளை வாங்கிவந்துள்ளார் என கேலி செய்தனா். ஆனால் அவரின் தந்தையார் அதனை நம்பாமல் மூட்டைகளை பிரித்து பார்த்ததில் அதில வைரமும் தங்கத்தூள்களும் இருப்பதை அறிந்தாா். சில நாட்கள் கழித்து அதுவும் மறைந்து மறுபடியும் எரு மூட்டைகளாக மாறியது.இதனால் கோபம் கொண்ட தந்தையார் மகனை திட்ட அதனால் பற்றற்ற நிலை ெபற்று துறவறம் கொண்ட மருதவாணர் என்ற பட்டிணத்து அடிகளார், காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என எழுதிய ஓலையினைக் ெகாண்ட பேழையை தன் தாயிடம் கொடுத்து விட்டு துறவறம் பூண்டார்.
சிவசமாதி
திருவெண்காட்டு அடிகள் திருஒற்றியூரில் தங்கியிருந்த போது, கடற்கரையில் விளையாடும் சிறுவர்களோடு தாமும் சேர்ந்து மணலில் புதைதல் பின் வெளிப்படல் போன்ற விளையாட்டுக்களை நிகழ்த்தினார். முடிவில் சிறுவர்களைக் கொண்டு மணலால் தன்னை மூடச் செய்தார். நெடுநேரம் ஆகியும் அவர் வெளிப்படாதிருத்தலைக் கண்டு சிறுவர்கள் மணலை அகழ்ந்து பார்த்தபோது அடிகள் சிவ லிங்கமாக வெளிப்பட்டருளினார்.
செல்வந்தராக வாழ்ந்த பட்டிணத்து அடிகள் பாடிய எளிய பாடல்கள் அனைவரையும் மனம்உருக வைக்கும் பாடல்கள்
பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே
தனக்கென்று எதுவும் வேண்டுமென்று வைத்துக் கொள்வது இல்லை. ஒரு பாடலில் தனக்கு உடுத்த, வெயில் மழை, குளிருக்கு, பழைய வேட்டி ஒன்று உண்டு, பசித்தபோது உணவு கொடுக்க சிவனுண்டு, உறங்க திண்ணை உண்டு என்று பாடியுள்ளார்.
பட்டிணத்து அடிகளாரின் பற்றற்ற வாழ்வுக்கு அளவே கிடையாது, ஒரு தடவை அடிகளார், அறுவடை செய்த வயலில் வரப்பில் தலை வைத்து படுத்திருந்தார், அவ்வழியே வந்த பெண்கள் இருவர், அடிகளா்ர் படுத்திருப்பதை முற்றும் துறந்த பின்னும் இன்னும் தன் ெசல்வ செழிப்பில் தூங்குவது ேபால், தலையை வரப்பில் வைத்தல்லவா படுத்துள்ளார் என்றனா், உடனே இதனை கேட்ட அடிகளார், தலையை தரையில் வைத்து படுத்திருந்தார், மீண்டும் இப்ெபண்கள் அவ்வழியே திரும்பி வரும் போது இதனைக் கண்டு, மேலும் அடிகளார், நாம் பேசுவதைத்தானே கவனிததுள்ளார், துறவிக்கு ஏன் நாம் பேசுவதை கேட்டார் என்றனா். அவர்களின் கூற்றையும் அடிகளார் எடுத்துக் கொண்டு பிணம் போல் வாழவேண்டிய இந்த ஊன் உடம்பிற்கு வம்பு பேசுவதை ேகட்பது தவறுதானே என உணர்ந்தார். இதன் பொருட்டு அவரின் பாடல்
பட்டினத்தார் கூறுகிறார் கேளுங்கள் ...
“”பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சை எல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்
தாய்போல் கருதி தமர்போல் அனைவருக்குந் தாழ்மை சொல்லி
சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே
மேலும் தனது உடம்பை நரி, புழு, கழுகு,மண் திண்பதற்கான புழுத்துப்போகும் உடலை வீணே வளர்ப்பது ஏனோ ? என்கிறார்.
திருச்சிற்றம்பலம்
ேமலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
தண்டியடிகள் நாயன்மார் வரலாறு
சோழநாட்டில் தலைசிறந்த நகரம் திருவாரூர், ஆரூரில் பிறந்தவர்கள் யாவருமு சிவகணங்களாகவர். திருவாரூரில் பிறந்தால் முத்தி காசியில் இறந்தால் முத்தி என்பவர். திருவிடங்கத் தலங்கள் ஏழினுள் முதன்மையாக தலம், திருமகள் பூசித்து பேறு பெற்றதலம் திருவாரூர்.
பல்பிறவிப் புண்ணியத்தால் தண்டியடிகள் நாயனார் திருவாரூரில் அவதரித்தார். இவர் பிறவியிலேயே கண் இழந்தவர். ஆரூர் இறவைரை அக் கண்ணால் வழிபடும் அன்புடையவர் இவர். திருவாரூரில் எழுந்தருளியுள்ள புற்றிடங்கொண்ட புண்ணயரைப் பலகாலும் வலம் வருவார். திருஐந்தெழுத்தினை ஓதிக் கொண்டே திருப்பணிகள் பல செய்யவார்.
திருக்கோயிலின் மேற்புறத்தில் உள்ள திருக்குளத்தை சுற்றிச் சமணர்களுடைய ஆதிக்கம் நிறைந்திருந்தன. இதனால் திருக்குளம் பழுதுபட்டது. கண்ணில்லாத தண்டிணடிகள் குளத்தினை தூர்வாரி சுத்தம்செய்ய முயன்றார், ஆனால் அவரோ கண் பார்வையற்ற நிலையில் குளத்தை எவ்வாறு சுத்தம் செய்வது என்ற எண்ணத்தில தன் உத்தியை கையாண்டு குளத்தின் நடுவே தறியை ( கொம்பினையும் ) நட்டார். குளக்கரையில் மேட்டுப்பகுதியில் ஒரு தறியையும் நட்டார். இரு கொம்புகளக்கும் இடையே கயிறு கட்டினார். அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டே குளத்தில் உள்ள மண்ணைக் கூடையில் சுமந்து கரைமேல் கொட்டினார்.
இதனைக் கண்ட சமணர்கள் " மண்ணை வெட்டும்பொழுது சிற்றுயிர்கள் மாண்டுவிடும் ஆதலால் குளத்தில மண் வெட்ட வேண்டாம் " என்று தடுத்தனர், தண்டியடிகள் இதனைப் பொருட்படுத்தாமல் திருப்பணியை செய்தார்." கண்ணில்லா உமக்கு காதும் இல்லையா? " என்று எல்லி நகையாடினர் சமணர்கள், " சிவபெருமானது திருவருளால் உலகமெல்லாம் அறியும் படி நான் கண் பெற்றால் நீங்கள் யாது செய்வீர்கள்? " என்று தண்டியடிகள் கேட்டார். சமணர்கள் " நாங்கள் யாவரும் இந்த ஊரை விட்டே ஓடி விடுகிறோம்," என்றனர். அத்துடன் நில்லாது, தண்டியடிகள் வைத்திருந்த மண்வெட்டி, கூடை ஆகியவற்றை பிடுங்கி எறிந்தார்கள்
நாயனார் மனம் வெதும்பினார். ஆரூர் பெருமானின் முன்னின்று, " அடியேனது துன்பத்தை நீக்கி அருள்புரிதல் வேண்டும்." என்று கண்ணீர் சொரிந்து தொழுதார்.
ஆழமான வழிபாடு ஆண்டவரை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. கண்ணுதற் கடவுள் அன்றிரவு தண்டியடிகள் கனவிலே தோன்றி, " அன்பனே கவலை விடுக ! நாளை உமது கண்கள் ஒளிபெறும் உமது திருப்பணியைத் தடுத்தவர்கள் கண்களை இழப்பர்," என்றுஅருளிச் செய்தார். அன்றிரவே சோழ மன்னன் கனவிலும் தோன்றி " தண்டியடிகள் நானாரின் குறையை தீர்ப்பாயக " என்று பணித்து மறைந்தருளினார்.
பொழுது விடிந்த உடன் அரசன் தண்டியடிகளிடம் வந்து தான் கண்ட கனவு நிலையைக் கூறி வணங்கினார், தண்டியடிகள் நிகழ்ந்தவற்றை எல்லாம் கூறினார்,
மறுநாள் தண்டியடிகளும் மன்னனும் குளக்கைரையை அடந்தார்கள், " சிவபெருமானே பரம்பொருள் அவரது அடிமையாக இருப்பது உண்மையானால் உலகர் முன் என் கண்கள் ஒளிபெறட்டும் " என்று கூறி திருஐந்தெழுத்தினை ஓதிக் கொண்டே திருக்குளத்தில மூழ்கினார் தண்டியடிகள்.
கண் பெற்று எழுந்தார், தேவர்கள் பூமழை பொழிந்தனர். சமணர்கள் கண்களை இழந்தனார். முன்பு ஒப்புக்கொண்டவாறு சமணர்கள் திருவாரூரை விட்டு நீங்கினார்கள். தண்டியடிகள் வழக்கம் போல முக்கட் பெருமானுக்குத் தொண்டுகள் செய்து சிவபதம் நண்ணினார்.
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
சோழநாட்டில் தலைசிறந்த நகரம் திருவாரூர், ஆரூரில் பிறந்தவர்கள் யாவருமு சிவகணங்களாகவர். திருவாரூரில் பிறந்தால் முத்தி காசியில் இறந்தால் முத்தி என்பவர். திருவிடங்கத் தலங்கள் ஏழினுள் முதன்மையாக தலம், திருமகள் பூசித்து பேறு பெற்றதலம் திருவாரூர்.
பல்பிறவிப் புண்ணியத்தால் தண்டியடிகள் நாயனார் திருவாரூரில் அவதரித்தார். இவர் பிறவியிலேயே கண் இழந்தவர். ஆரூர் இறவைரை அக் கண்ணால் வழிபடும் அன்புடையவர் இவர். திருவாரூரில் எழுந்தருளியுள்ள புற்றிடங்கொண்ட புண்ணயரைப் பலகாலும் வலம் வருவார். திருஐந்தெழுத்தினை ஓதிக் கொண்டே திருப்பணிகள் பல செய்யவார்.
திருக்கோயிலின் மேற்புறத்தில் உள்ள திருக்குளத்தை சுற்றிச் சமணர்களுடைய ஆதிக்கம் நிறைந்திருந்தன. இதனால் திருக்குளம் பழுதுபட்டது. கண்ணில்லாத தண்டிணடிகள் குளத்தினை தூர்வாரி சுத்தம்செய்ய முயன்றார், ஆனால் அவரோ கண் பார்வையற்ற நிலையில் குளத்தை எவ்வாறு சுத்தம் செய்வது என்ற எண்ணத்தில தன் உத்தியை கையாண்டு குளத்தின் நடுவே தறியை ( கொம்பினையும் ) நட்டார். குளக்கரையில் மேட்டுப்பகுதியில் ஒரு தறியையும் நட்டார். இரு கொம்புகளக்கும் இடையே கயிறு கட்டினார். அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டே குளத்தில் உள்ள மண்ணைக் கூடையில் சுமந்து கரைமேல் கொட்டினார்.
இதனைக் கண்ட சமணர்கள் " மண்ணை வெட்டும்பொழுது சிற்றுயிர்கள் மாண்டுவிடும் ஆதலால் குளத்தில மண் வெட்ட வேண்டாம் " என்று தடுத்தனர், தண்டியடிகள் இதனைப் பொருட்படுத்தாமல் திருப்பணியை செய்தார்." கண்ணில்லா உமக்கு காதும் இல்லையா? " என்று எல்லி நகையாடினர் சமணர்கள், " சிவபெருமானது திருவருளால் உலகமெல்லாம் அறியும் படி நான் கண் பெற்றால் நீங்கள் யாது செய்வீர்கள்? " என்று தண்டியடிகள் கேட்டார். சமணர்கள் " நாங்கள் யாவரும் இந்த ஊரை விட்டே ஓடி விடுகிறோம்," என்றனர். அத்துடன் நில்லாது, தண்டியடிகள் வைத்திருந்த மண்வெட்டி, கூடை ஆகியவற்றை பிடுங்கி எறிந்தார்கள்
நாயனார் மனம் வெதும்பினார். ஆரூர் பெருமானின் முன்னின்று, " அடியேனது துன்பத்தை நீக்கி அருள்புரிதல் வேண்டும்." என்று கண்ணீர் சொரிந்து தொழுதார்.
ஆழமான வழிபாடு ஆண்டவரை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. கண்ணுதற் கடவுள் அன்றிரவு தண்டியடிகள் கனவிலே தோன்றி, " அன்பனே கவலை விடுக ! நாளை உமது கண்கள் ஒளிபெறும் உமது திருப்பணியைத் தடுத்தவர்கள் கண்களை இழப்பர்," என்றுஅருளிச் செய்தார். அன்றிரவே சோழ மன்னன் கனவிலும் தோன்றி " தண்டியடிகள் நானாரின் குறையை தீர்ப்பாயக " என்று பணித்து மறைந்தருளினார்.
பொழுது விடிந்த உடன் அரசன் தண்டியடிகளிடம் வந்து தான் கண்ட கனவு நிலையைக் கூறி வணங்கினார், தண்டியடிகள் நிகழ்ந்தவற்றை எல்லாம் கூறினார்,
மறுநாள் தண்டியடிகளும் மன்னனும் குளக்கைரையை அடந்தார்கள், " சிவபெருமானே பரம்பொருள் அவரது அடிமையாக இருப்பது உண்மையானால் உலகர் முன் என் கண்கள் ஒளிபெறட்டும் " என்று கூறி திருஐந்தெழுத்தினை ஓதிக் கொண்டே திருக்குளத்தில மூழ்கினார் தண்டியடிகள்.
கண் பெற்று எழுந்தார், தேவர்கள் பூமழை பொழிந்தனர். சமணர்கள் கண்களை இழந்தனார். முன்பு ஒப்புக்கொண்டவாறு சமணர்கள் திருவாரூரை விட்டு நீங்கினார்கள். தண்டியடிகள் வழக்கம் போல முக்கட் பெருமானுக்குத் தொண்டுகள் செய்து சிவபதம் நண்ணினார்.
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
திருமுறைகள் வெளி வர வித்திட்டவர்கள்<BR> சைவத்தின் ஆனிவேராகக் கருதப்படும் பன்னிரு திருமுறைகள் இன்று எல்லாராலும் பாடப்படும் தேவாரப் பதிகங்கள் இன்று நம்மால் ஓதி ஆராதிக்க வித்திட்டவர்கள் சங்க கால சோழ மன்னர்கள் வம்சாவழியினருக்கே சாரும்.தென் தமிழ்நாட்டில் சோழ சாம்ராஜ்யத்தில் செங்கோலாட்சி வந்த இராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை பிராட்டியார் தான் முதன் முதலில் இந்த தேவாரப்பதிகங்கள் இருப்பதை கண்டறிந்து அதனை நமக்கெல்லாம் கிடைக்கச் செய்து, இறைவனின் திருவருளை பெற தேவாரப்பதிகங்கள் புத்துயிர் பெற செய்தவர்கள். இந்த குந்தவை பிராட்டியார் ஒருநாள் தன் நகரிலுள்ள சிவலாயத்தில் சிவதரிசனம்செய்ய சென்றபோது, கோவிலில் பூ தொடுக்கும் ஒரு சிறுவன் பூவை தொடுத்தவாறு அப்பரின் தேவாரப்பாடலான " குனிந்த புருவமும் கொவ்வைச்செவ்வாயில் குவின் சிறிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீரும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இந்மாநிலத்தே " என்ற பதியத்தை இராகத்தோடு பாடுவதை கேட்ட இளவரசி, அவனை அருகில் அழைத்து இந்த பாடல்கள் எங்கு கற்றாய் இது யாருடைய பாடல்கள் என வினவினார், அதற்கு அச்சிறுவன் இது திருநாவுக்கரசர் பெருமான் பாடிய தேவாரப்பதிகப் பாடல் இதனை எனது தந்தையார் எனக்கு பயின்று கொடுத்ததை சிவனார் சந்நதியில் அனுதினமும் பாடி மகிழ்வேன் என்றான். இந்த பாடல்கள் மட்டும்தான் தெரியுமா ? இன்னும் பாடல்கள் உள்ளனவா என்றதற்கு சிறுவன் எனது தந்தையாரிடம் வினவினீர்களானால் தங்களுக்கு வேண்டிய விபரங்கள் தெரியும் என்றான். உடனே அவனின் தந்தையை அனுகி இதன் விபரங்களை சேகரித்தார். இது சைவ சமய சிவனடியார்களால் தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டு இது தற்போது இருக்கும் இடம் தெரியாமல் மறைத்து வைக்கப் பட்டுள்ளது. அதன் பதிகப்பாடல்கள் ஒன்றிரண்டுதான் எனக்கு தெரியும் மீதமுள்ள பாடல்கள் நம்பியாண்டார் நம்பி என்னும் சிவனடியார் ஒருவர் உள்ளார் அவரிடம் கண்டு தெளிவு பெறலாம் என்று விபரங்கள் கூறியனுப்பினார் குந்தவை பிராட்டியாரை. உடனே குந்தவை பிராட்டியார் தன் சகோதரன் இராஜராஜசோழனிடம் இது பற்றி கூறி தேவாரப்பதிகங்கள் எங்கிருந்தாலும் அதன் பிரதிகளை கண்டுபிடித்தருளிட உத்தரவு இட்டார், மன்னரின் சேனைகளும் இதனை தேடும் பணியில் ஈடுபட்டதுடன் நம்பியாண்டார் நம்பிகளையும் காண மன்னனே நேரில் சென்றார், மேலும் இந்த தேவாரப்பதிகப்பாடல்கள் கொண்ட ஏடுகள் எங்கும் கிடைக்கிறதா என்பதையும் அறிய பல திக்குகளுக்கு தன் பணியாளர்களை நியமித்தான்.<BR> மன்னன் தேடிச்செல்லும் நம்பியடிகள் ஒருநாள் தான் முறையாக வழிபடும் பொல்லாப் பிள்ளையார் என்ற திருக்கோவிலுக்கு செல்லமுடியாத சூழ்நிலையில் நம்பியடிகளின் பாலகன் நம்பி என்ற பள்ளி செல்லும் சிறுவனை தன் பொருட்டு பொல்லாப் பிள்ளையாருக்கு அபிசேக ஆராதனை செய்யும் பொருட்டு அனுப்பி வைத்தார்கள் அவனுடைய தாயார். அவனும் பிள்ளையாருக்கு அபிசேகம்செய்ய வேண்டிய பொருட்களையும், அவருக்கு படையல் பொருளான கொழுக்கட்டையையும் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். சிறுவன் நம்பி பொல்லா பிள்ளையார் கோவிலுக்கு சென்று விநாயக பெருமானுக்கு எண்ணெய் அபிசேகம் செய்து, நீரால் அபிசேகம் செய்து தான் கொண்டு வந்த வஸ்திரங்களால் அலங்காரம் செய்து தான் கொண்டுவந்த படையல் நெய்வேத்திய பொருட்களான கொழுக்கட்டையை படைத்து பிள்ளையாரை உண்ண வேண்டினான். பிள்ளையார் உண்ண மாட்டார் என்பது அவனுக்கு தெரியத தால் அவன் மேலும் மேலும் அரைகூவி பிள்ளையாரை சாப்பிட வேண்டினான். பாலகன் பலமுறை கெஞ்சியும் தரிசனம் அளிக்காத பிள்ளையாரை தான் படைத்த கொழுக்கட்டையை உண்ணா விடில் தான் இங்கே மாண்டு விடுவதாகவும் பிள்ளையாரின் காலில் முட்டி மோதினான், உடனே பிள்ளையார் அவனுக்கு தரிசனம் கொடுத்து படைத்த கொழுக்கட்டை வேத்தியங்களை உண்டு மகிழ்ந்தார். பிள்ளையார் தான் படைத்த கொழுக்கட்டைகளை உண்ட சந்தோசத்தில் தான் கொண்டு வந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். அவனுடைய தாயார் விநாயகருக்கு படைத்த கொழுக்கட்டைகளை எங்கே என்று அன்னை கேட்க அவனே விநாயகர் உண்ட செய்தியை கூறினான் ஆனால் அன்னை அதனை நம்ப வில்லை. பாலகன் பொய் சொல்கிறான் என்றே நம்பினார்கள். இது பற்றி ஆராவாரம் ஏற்பட்டது. உடனே எல்லோரும் பிள்ளையார் உண்டதை உன்னால் நிரூபிக்க முடியுமா? என்று வினவ , அவனே தான் இன்னும் ஒரு முறை பிள்ளையாருக்கு படைத்து அவர்தான் உண்டார் என்பதை நிருக்கிறேன் என்று கூறி மறுபடியும் பொல்லா பிள்ளையாருக்கு கொழுக்கட்டை படைத்து பிள்ளையாரை உண்ண வேண்டினான். இதன்படி பலமுறை வேண்டி பிள்ளையார் வராத நிலையில் மறுபடியும் சிறுவன் பிள்ளையாரை உருக்கத்துடன் வேண்டி தான் வரவில்லை எனில் தான் இங்கே இறந்து விடுவேன் என்று வேண்ட உடனே பிள்ளையார் தரிசனம்எல்லாருக்கு கிடைத்து கொழுக்கட்டையையும் உண்டு சென்றார், இச்செய்தி சோழ மன்னன் வரை பரவியது , எனவே மன்னனும் நம்பியாண்டரின் பாலகனை சந்தித்து தேவாரப்பதிகங்கள் எங்கு உள்ளன. என்று விநாயகரிடமே கேட்டு சொல்ல கூறினார், அதன்படி பிள்ளையார் தரிசனம் கொடுத்து தேவாரப்பதிகங்கள் யாவும் சிதம்பரத்தில் நடராஜர் கோவிலில் ஓதுவாரகளின் பொறுப்பில் உள்ளது. என செய்தி கிடைத்தவுடன் மன்னன் அங்கு சென்று, சிதம்பரம் ஓதுவார்களிடம் வினவினார், அவர்கள் மூவரின் தேவாரப்பதிகங்கள் நடராஜபெருமானின் சன்னதியில் உள்ள அறையில் உள்ளது, என்றும், அது அந்த மூவர்கள் வந்தால்தான் தங்களால் எடுத்துக் கொடுக்க முடியுமென கூறினார்கள். மன்னன் யோசனை செய்தான் சித்தி முத்தியடைந்த மூவரை எப்படி அழைத்து வருவது எப்படி தேவாரப்பதியங்களை பெறுவது என்று மனம்வருந்திக் கொண்டிருக்கும் போது ஒரு சித்தர், மறைந்த மூவரின் விக்ரங்களை உருவாக்கி அவர்களை ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வாருங்கள் உங்களுக்கு தேவாரப்பதியங்கள் கிடைக்கும் என அருள் வாக்கு கிடைத்தது. மன்னரும் அதன்படி மூவரின் விக்கரங்களை உருவாக்கி அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றார், ஓதுவார்களால் மறுப்பு எதுவும் சொல்ல முடியவில்லை, ஏனனெனில் இது வெறும் விக்கிரங்கள் என்றால் கோவிலில் குடிகொண்டிருக்கும் நடராஜபெருமானும் விக்கிரமாகத்தானே தெரியும், உடனே மூவர் பெருமக்களும் நடராஜர் சன்னதி வந்தவுடன், அறையில் தேவாரப்பதியங்கள் கொண்ட நூல் ஆடைகளால் மூடப்பட்டிருந்த மூட்டையை எடுத்து கொடுத்தனர் , அதில் சுமார் 10 ஆயிரம் கொண்ட ஏடுகள் காரையானால் அரிக்கப்பட்டு மீதம் இருந்த சுமார் 6000 ஒலைச்சுவடுகள் தான் எஞ்சியிருந்தன, அதனை கொண்டு வந்து அதற்கு பூஜைகள் செய்து தேவாரப்பதிகங்களை முறைப்படுத்தி உலகிற்கு வெளியிட்ட பெருமை சோழ மன்னர்களுக்கே சார்ந்தது.<BR> திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம் ஓம்<BR> மேலும் பல ஆன்மீக தகவலுக்கு<BR> http://vpoompalani05.blogspot.in/<BR> http://vpoompalani05.wordpress.com<BR> http://www.vpoompalani05.weebly.com
பிரம்ம ஞானம் பெறுதல்
பிரம்ம ஞானம் பெற ஒருவர் ஐந்து பொருள்களை சரண் செய்தல் வேண்டும்.அவையாவன:
1. ஐந்து பிராணன்கள் ( ஐம்புலன்களின் சக்திகள்)
2. ஐந்து புலன் அறிவு
3. மனம்
4.அறிவு
5. தான் என்ற அகந்தை
பிரம்ம ஞானம்பெறுவது என்பது தன்னைத்தான் அறிதல் என்ற அடிப்படை தத்துவம் கொண்டதாகும். இது ஒரு கத்தி முனையில நடப்பது போன்றது. எல்லோராலும் அவரவர் வாழ்நாளில் பிரம்ம ஞானத்தை பெறுதல் என்பது அரிது. அதற்காக சில முக்கிய குணநலன்களை பெற்றிருக்க வேண்டும் மிகமிக அவசியம்
பிரம்ம ஞானம் பெறும் முறை:
1.விடுதலை பெற மனமார்த்த ஆவல் :
" தான் விடுதலை கட்டாயம் அடைந்தே தீருவேன் " என்ற உறுதியுடன் வேறொன்றும் வேண்டாதவரே ஆன்மீக வாழ்க்கைக்கு தகுதி உடையவர் ஆவர்
2.இகபரப் பொருள்கள் மீது விரக்தி :
பொருள்கள் மீது விரக்தி பற்றற்ற நிலை பெற முடியாதவர்களுக்கு ஆன்மீக உலகில் நுழைய உரிமை கிடையாது
3, உள்நோக்கு சிந்தனை :
ஐம்புலன்களைக் கொண்டு நாம் வெளிப்புறத்தை அறிகிறோம், புறப்பொருள்களை நோக்கிறோம். தன்னைத்தான் உணர விரும்புகிறவன் முதலில் "தன்னை தானறிய " முற்பட வேண்டும்.
4, பாவங்களிலிருந்து வெளிப்படல்:
ஒருவன் தீயச் செயல்களை ஒழித்து மன அமைதி பெற்றாலொழிய அறிவளவில் கூட தன்னை தான் உணர்தல் என்பது இயலாத காரியம்
5. நற்குண நற்செயல்கள்:
உள்நோக்கு, தவம், உண்மையுடன் கூடிய வாழ்வு பெற்றிருந்தாலொழிய கடவுளை அறிய முடியாது
6, நல்லவை, இனியவை:
நல்லவை, எனபன ஆன்ம விவகாரங்களுக்கு உரியவை. இனியவை யாவும் இவ்வுலகில் சுகபோக வாழ்வுக்கு தேவை. இரண்டும் மனிதனை அண்டி வருகின்றன. இவற்றில் ஒன்றை மட்டும் மனிதன் சிந்தித்து பெற வேண்டும். அறிவுடையவன் நல்லவற்றையே நாடிட அறிவுபெற முயலாதவன் தன் பேராசை, அதீத பற்று இவை காரணமாக இனியவற்றையே நாடுகிறான்.
7. மனம் புலன் ஆகியவற்றை கட்டுப்படுத்துதல்:
உடல் ஒரு தேர், அறிவு ஒரு தேரோட்டி தான் என்பது தேரினுள் அமர்ந்திருக்கும் எஜமான் மனம் என்பது கடிவாளம் ஆகும். புலன்கள் குதிரைகள், புலன்றி பொருள்கள் என்பவை தேரோடும் பாதை, மனிதன் தன்னைத்தான் அறிந்து, அறிவு எனும் தேரோட்டியின் துணை கொண்டு மனமாகிய கடிவாளத்தை கட்டுப்படுத்தி புலன் அடக்கத்தோடு நல்வழியைப் பின்பற்றினால் அவனது பயணம் நன்கு முடிவ பெற்று, அவன் சேர வேண்டிய இடம் ( அதாவது எங்கும் நிறைந்த பரம்பொருளின் இருப்பிடமாகிய கைலாசம் ) அடைய முடியும்.
8, அகத்தூய்மை,:
உள்ளத்தூய்மை பெற்றவரே விவேகமும், வைராக்கியமும் பெற்று தன்னைத் தான் உணர முடியும். தான் என்பது போய் ஆசை அறவே நீங்கி, உள்ளத் தூய்மை ஏற்பட்டால் அன்றி தன்னைத்தானறிதல் என்பது இயலாத ஒன்று.
9. குருவின் முக்கியத்துவம்:
தன்னைத் தானுணர்ந்த ஒரு சற்குருவால் மட்டுமே உதாரண புருசனாக விளங்கித் தன் சீடனையும் படிப்படியாக ஆன்மீக முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும்
10. இறையருள் :
யாரொருவனை இறைவன் தன் பக்தனாக , அடியாராக ஏற்றுக் கொள்கிறாரோ அந்த அதிர்ஸ்டசாலி மட்டும்தான் விவேகமும், வைராக்கியமும் பெற்று சம்சார சாகரத்தை பாதுகாப்பாக கடந்து இறைவனின் திருவடிகளை அடைய முடியும். எனவே இறைவனருள் பெறுவது எல்லவற்றைக் காட்டிலும் முக்கியம்.
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய நம
மேலும் பல ஆன்மீக தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
பிரம்ம ஞானம் பெற ஒருவர் ஐந்து பொருள்களை சரண் செய்தல் வேண்டும்.அவையாவன:
1. ஐந்து பிராணன்கள் ( ஐம்புலன்களின் சக்திகள்)
2. ஐந்து புலன் அறிவு
3. மனம்
4.அறிவு
5. தான் என்ற அகந்தை
பிரம்ம ஞானம்பெறுவது என்பது தன்னைத்தான் அறிதல் என்ற அடிப்படை தத்துவம் கொண்டதாகும். இது ஒரு கத்தி முனையில நடப்பது போன்றது. எல்லோராலும் அவரவர் வாழ்நாளில் பிரம்ம ஞானத்தை பெறுதல் என்பது அரிது. அதற்காக சில முக்கிய குணநலன்களை பெற்றிருக்க வேண்டும் மிகமிக அவசியம்
பிரம்ம ஞானம் பெறும் முறை:
1.விடுதலை பெற மனமார்த்த ஆவல் :
" தான் விடுதலை கட்டாயம் அடைந்தே தீருவேன் " என்ற உறுதியுடன் வேறொன்றும் வேண்டாதவரே ஆன்மீக வாழ்க்கைக்கு தகுதி உடையவர் ஆவர்
2.இகபரப் பொருள்கள் மீது விரக்தி :
பொருள்கள் மீது விரக்தி பற்றற்ற நிலை பெற முடியாதவர்களுக்கு ஆன்மீக உலகில் நுழைய உரிமை கிடையாது
3, உள்நோக்கு சிந்தனை :
ஐம்புலன்களைக் கொண்டு நாம் வெளிப்புறத்தை அறிகிறோம், புறப்பொருள்களை நோக்கிறோம். தன்னைத்தான் உணர விரும்புகிறவன் முதலில் "தன்னை தானறிய " முற்பட வேண்டும்.
4, பாவங்களிலிருந்து வெளிப்படல்:
ஒருவன் தீயச் செயல்களை ஒழித்து மன அமைதி பெற்றாலொழிய அறிவளவில் கூட தன்னை தான் உணர்தல் என்பது இயலாத காரியம்
5. நற்குண நற்செயல்கள்:
உள்நோக்கு, தவம், உண்மையுடன் கூடிய வாழ்வு பெற்றிருந்தாலொழிய கடவுளை அறிய முடியாது
6, நல்லவை, இனியவை:
நல்லவை, எனபன ஆன்ம விவகாரங்களுக்கு உரியவை. இனியவை யாவும் இவ்வுலகில் சுகபோக வாழ்வுக்கு தேவை. இரண்டும் மனிதனை அண்டி வருகின்றன. இவற்றில் ஒன்றை மட்டும் மனிதன் சிந்தித்து பெற வேண்டும். அறிவுடையவன் நல்லவற்றையே நாடிட அறிவுபெற முயலாதவன் தன் பேராசை, அதீத பற்று இவை காரணமாக இனியவற்றையே நாடுகிறான்.
7. மனம் புலன் ஆகியவற்றை கட்டுப்படுத்துதல்:
உடல் ஒரு தேர், அறிவு ஒரு தேரோட்டி தான் என்பது தேரினுள் அமர்ந்திருக்கும் எஜமான் மனம் என்பது கடிவாளம் ஆகும். புலன்கள் குதிரைகள், புலன்றி பொருள்கள் என்பவை தேரோடும் பாதை, மனிதன் தன்னைத்தான் அறிந்து, அறிவு எனும் தேரோட்டியின் துணை கொண்டு மனமாகிய கடிவாளத்தை கட்டுப்படுத்தி புலன் அடக்கத்தோடு நல்வழியைப் பின்பற்றினால் அவனது பயணம் நன்கு முடிவ பெற்று, அவன் சேர வேண்டிய இடம் ( அதாவது எங்கும் நிறைந்த பரம்பொருளின் இருப்பிடமாகிய கைலாசம் ) அடைய முடியும்.
8, அகத்தூய்மை,:
உள்ளத்தூய்மை பெற்றவரே விவேகமும், வைராக்கியமும் பெற்று தன்னைத் தான் உணர முடியும். தான் என்பது போய் ஆசை அறவே நீங்கி, உள்ளத் தூய்மை ஏற்பட்டால் அன்றி தன்னைத்தானறிதல் என்பது இயலாத ஒன்று.
9. குருவின் முக்கியத்துவம்:
தன்னைத் தானுணர்ந்த ஒரு சற்குருவால் மட்டுமே உதாரண புருசனாக விளங்கித் தன் சீடனையும் படிப்படியாக ஆன்மீக முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும்
10. இறையருள் :
யாரொருவனை இறைவன் தன் பக்தனாக , அடியாராக ஏற்றுக் கொள்கிறாரோ அந்த அதிர்ஸ்டசாலி மட்டும்தான் விவேகமும், வைராக்கியமும் பெற்று சம்சார சாகரத்தை பாதுகாப்பாக கடந்து இறைவனின் திருவடிகளை அடைய முடியும். எனவே இறைவனருள் பெறுவது எல்லவற்றைக் காட்டிலும் முக்கியம்.
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய நம
மேலும் பல ஆன்மீக தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
மனித்தப் பிறவி வேண்டுவதே .............
"குனித்த புருவமும் கொவ்வாய் செவ்வாய் ............. " என்ற அப்பர் தேவாரப்படாலில் நான்காவது அடியில் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே " என்கிறார், இறைவன் படைப்பில் எண்ணற்ற உயிரனங்கள் உள்ளன. மற்றும் தேவர், அசுரர், கந்தர்வர், பித்தியாதரர் போன்ற தேவலோக வாசிகளும் மற்றும் ஈரேழு புவனங்களைச் சார்ந்த பலரும் உள்ளனர், இருப்பினும் எல்லாவற்றிலும் தலைசிறந்தது மானிடப்பிறவியே என்பது பெரியோர் அறிந்த முடிவு.
ஒவ்வொர் உயிரும் பிறப்பு, இறப்பு, என்ற சுழலில் சிக்கித் தவிக்கின்றன. ஒவ்வொரு பிறவியிலும், ஆத்மா அந்த உடலின் செயல்களுக்கு ஏற்ப சுவர்க்கம் அல்லது நரகத்தை அடைகின்றது, எனினும் எல்லா உயிர்களுக்கும் உண்ணல், உறங்கல், சுகபோகம், இனப்பெருக்கம் என்ற ஆசைகள் உண்டு. ஆனால் மனிதனுக்கு மட்டும் இவற்றுடன் பகுத்தறிதல் என்ற ஒப்பற்ற சிறப்பு ஆற்றலை இறைவன் அளித்துள்ளான். எனவே மனிதப் பிறவியில் மட்டுமே ஞானத்தின் துணைகொண்டு நன்மை, தீமை, புண்ணியம் பாவம் என்பவற்றை உயர்த்துணர்ந்து இறைவனை அடையும் முயற்சி செய்ய இயலும். வெற்றி காணவும் முடியும். இறைவனுடன் இரண்டறக் கலத்தல் என்பது மனிதனால் மட்டுமே முடியும். என்பதாலேயே மனிதப் பிறவியில் அவசியத்தை அப்பர் பெருமான் வலியுறுத்தியிருக்கிறார் இந்த பாடல் மூலம்.
உடலைப் பேணுதல்:
இப்படி பெற்றெடுத்த உடலையும், உயிரையும் நன்கு பாதுகாக்க வேண்டும், இந்த உடல் எலும்பும், தோலும் ரத்தமும், சீழும் சளியும், கலந்த ஒரு கலப்படமான கூட்டமைப்பு. முன்னது மூன்றும் உயிர் உடல் இயக்கத்திற்கு இன்றியமையாதவை. பின்னது இரண்டும் தவிர்க்க முடியாதவை. அத்துடன் நேர் மாறான பலனைத் தருபவை. இடுக்கண்களிலிருந்து விடுபட வேண்டுமெனில் உள்ளக்கோவிலில் இறைவனை இருத்தி,, அவனை உயிருக்கு உயிராக உணர்ந்து வீடுபேற்றினை அடைய முடியும். எனவே தான் " உடம்பார் அழிமின், உயிரார் அழிவார்" என்றும் உடம்மை வளர்த்தேனே உயிரை வளர்த்தேனே " என்றும் திருமூலர் கூறினார், எனவே உடலையும் உயிரையும் பேணிக் காக்காவிட்டால் இறைவன் தரிசனம் கிடைக்காது போய்விடும்.
உடலின் மீது அக்கறை இல்லாதிருத்தல் மற்றும் எதிலும் பற்றுக் கொண்டு அவதியுறுவது போன்ற போக்கினைக் கைவிடுத்து சரியான முறையில் உடலைப் பேணி வளர்க்க வேண்டும். சுவரை வைத்து கொண்டு தானே சித்திரம் எழுத முடியும்? நாம் பெற்ற பேறு இந்த மனிதப் பிறவி , எல்லோரும் பிறந்தனர், இறந்தனர் என்று இல்லாமல் இறைவனை தரிசித்து அவனிடம் சரண்புகுதல் என்பது ஒரு சிலரே பெறும் பெரிய பாக்கியமாகும், நாம் பிறவி எடுத்த நோக்கமே முன் பிறவியில் செய்த பாவச் செயல்களை இப்பிறவில் செய்யும் புண்ணிய செயல்களால் களைவதன் பொருட்டே. எனவே எடுத்த பிறவியினை புண்ணிய காரியங்கள் செய்ய பயன்படுத்தல் வேண்டும். இதனையே அவ்வை " அரிது அரிது மானிடராய் பிறத்தல், அவ்வாறு பிறந்தாக்கால், கூன் செவிடு, குருடு அற்று பிறத்தல் அரிது என்றார், மேற்படி பேறு பெற எல்லாருமு சிறிதும் காலம் தாழ்த்தாமல் உடனே நல் காரியங்களில் இறங்க வேண்டும். இதற்கு எளிய வழி என்னவென்றால் தக்கதோர் குருவைத் தேடிப்பிடித்தல் வேண்டும். குருவில்லாத வாழ்க்கை குருட்டு வாழ்க்கையாகும். நம்மை வழிநடத்திச் செல்வ நல்ல குருவால்தான் முடியும் எனவே நல்ல குருவை தேடி சரணடைய வேண்டும்.
துறவற வாழ்க்கை நடத்தத் தகுதி உள்ளோர் யார்? அவர்கள் அன்றாட வாழ்க்கை எத்தன்மையது போன்ற பலவற்றிக்கு காரணம் காட்டுகிறார் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர். "துறவறம் என்ற பகுதியில் பத்து குறள்களில் இரத்தல் இழிவு ஈதல் நன்று, எனினும் இரந்து வாழக்கூடியவர் யார்? மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை அறவே நீக்கியவர், மற்றும் பெண், புகழ், பணம் வெறுத்தவர்களே பிச்சை எடுத்து வாழலாம் , இதனை உஞ்சவிருத்தி என்பர்.
அடுத்து ஐம்பெரும் பாவம் அகற்றினோர், அதாவது பொடிசெய்தல், அரைத்தல், பாத்திரங்கள் கழுவுதல், பெருக்கி தூய்மை செய்தல் அடுப்பு எரித்தல, என்ற ஐந்தும் செய்யாதவர்களும் இரந்து உண்ணலாம், இச்செயல்களால் சிறு புழு பூச்சிகள் அழிவது நடப்பதால் இவை பாவச்செயல்களாக கருதப்படுகிறது. இத்தகைய பாவங்களுக்கு பிராயச் சித்தமாக ஐந்து வகையான தியாகங்களை சாத்திரங்கள் காட்டுகின்றன. அவை 1) பிரம்மயஜ்ஞம், அல்லது வேத அத்யயனம், 2. பித்ரு யஜ்ஞம், 3. தேவ யஜ்ஞம், 4. பூதயஜ்ஞம், 5. மனுஸ்ய அதிதியஜ்ஞம், அதாவது வேதம் ஓதுதல், பெற்றோருக்கு திதி செய்தல், தேவர்களுக்கான வேள்வி , பூதங்களை திருப்திபடுத்துதல் (பலி) விருந்தினரை உபசரித்தல் என்பன. மேற்கண்ட நெறிகளை இல்லறம் நடத்துவோர்க்கு எடுத்துக் காட்டி அவர்கள் செவ்வனே செய்ய வழிகாட்டி உதவுவர் நம் குருமார்கள். எனவே நாம் எடுத்த மானிடப் பிறப்பை நல் குருநாதர் வழிகாட்டுதல மூலம் முற்பிறப்பில் செய்த பாவங்களை அகற்ற இப்பிறவியினை பயன் கொளல் வேண்டும்.
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீக தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
"குனித்த புருவமும் கொவ்வாய் செவ்வாய் ............. " என்ற அப்பர் தேவாரப்படாலில் நான்காவது அடியில் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே " என்கிறார், இறைவன் படைப்பில் எண்ணற்ற உயிரனங்கள் உள்ளன. மற்றும் தேவர், அசுரர், கந்தர்வர், பித்தியாதரர் போன்ற தேவலோக வாசிகளும் மற்றும் ஈரேழு புவனங்களைச் சார்ந்த பலரும் உள்ளனர், இருப்பினும் எல்லாவற்றிலும் தலைசிறந்தது மானிடப்பிறவியே என்பது பெரியோர் அறிந்த முடிவு.
ஒவ்வொர் உயிரும் பிறப்பு, இறப்பு, என்ற சுழலில் சிக்கித் தவிக்கின்றன. ஒவ்வொரு பிறவியிலும், ஆத்மா அந்த உடலின் செயல்களுக்கு ஏற்ப சுவர்க்கம் அல்லது நரகத்தை அடைகின்றது, எனினும் எல்லா உயிர்களுக்கும் உண்ணல், உறங்கல், சுகபோகம், இனப்பெருக்கம் என்ற ஆசைகள் உண்டு. ஆனால் மனிதனுக்கு மட்டும் இவற்றுடன் பகுத்தறிதல் என்ற ஒப்பற்ற சிறப்பு ஆற்றலை இறைவன் அளித்துள்ளான். எனவே மனிதப் பிறவியில் மட்டுமே ஞானத்தின் துணைகொண்டு நன்மை, தீமை, புண்ணியம் பாவம் என்பவற்றை உயர்த்துணர்ந்து இறைவனை அடையும் முயற்சி செய்ய இயலும். வெற்றி காணவும் முடியும். இறைவனுடன் இரண்டறக் கலத்தல் என்பது மனிதனால் மட்டுமே முடியும். என்பதாலேயே மனிதப் பிறவியில் அவசியத்தை அப்பர் பெருமான் வலியுறுத்தியிருக்கிறார் இந்த பாடல் மூலம்.
உடலைப் பேணுதல்:
இப்படி பெற்றெடுத்த உடலையும், உயிரையும் நன்கு பாதுகாக்க வேண்டும், இந்த உடல் எலும்பும், தோலும் ரத்தமும், சீழும் சளியும், கலந்த ஒரு கலப்படமான கூட்டமைப்பு. முன்னது மூன்றும் உயிர் உடல் இயக்கத்திற்கு இன்றியமையாதவை. பின்னது இரண்டும் தவிர்க்க முடியாதவை. அத்துடன் நேர் மாறான பலனைத் தருபவை. இடுக்கண்களிலிருந்து விடுபட வேண்டுமெனில் உள்ளக்கோவிலில் இறைவனை இருத்தி,, அவனை உயிருக்கு உயிராக உணர்ந்து வீடுபேற்றினை அடைய முடியும். எனவே தான் " உடம்பார் அழிமின், உயிரார் அழிவார்" என்றும் உடம்மை வளர்த்தேனே உயிரை வளர்த்தேனே " என்றும் திருமூலர் கூறினார், எனவே உடலையும் உயிரையும் பேணிக் காக்காவிட்டால் இறைவன் தரிசனம் கிடைக்காது போய்விடும்.
உடலின் மீது அக்கறை இல்லாதிருத்தல் மற்றும் எதிலும் பற்றுக் கொண்டு அவதியுறுவது போன்ற போக்கினைக் கைவிடுத்து சரியான முறையில் உடலைப் பேணி வளர்க்க வேண்டும். சுவரை வைத்து கொண்டு தானே சித்திரம் எழுத முடியும்? நாம் பெற்ற பேறு இந்த மனிதப் பிறவி , எல்லோரும் பிறந்தனர், இறந்தனர் என்று இல்லாமல் இறைவனை தரிசித்து அவனிடம் சரண்புகுதல் என்பது ஒரு சிலரே பெறும் பெரிய பாக்கியமாகும், நாம் பிறவி எடுத்த நோக்கமே முன் பிறவியில் செய்த பாவச் செயல்களை இப்பிறவில் செய்யும் புண்ணிய செயல்களால் களைவதன் பொருட்டே. எனவே எடுத்த பிறவியினை புண்ணிய காரியங்கள் செய்ய பயன்படுத்தல் வேண்டும். இதனையே அவ்வை " அரிது அரிது மானிடராய் பிறத்தல், அவ்வாறு பிறந்தாக்கால், கூன் செவிடு, குருடு அற்று பிறத்தல் அரிது என்றார், மேற்படி பேறு பெற எல்லாருமு சிறிதும் காலம் தாழ்த்தாமல் உடனே நல் காரியங்களில் இறங்க வேண்டும். இதற்கு எளிய வழி என்னவென்றால் தக்கதோர் குருவைத் தேடிப்பிடித்தல் வேண்டும். குருவில்லாத வாழ்க்கை குருட்டு வாழ்க்கையாகும். நம்மை வழிநடத்திச் செல்வ நல்ல குருவால்தான் முடியும் எனவே நல்ல குருவை தேடி சரணடைய வேண்டும்.
துறவற வாழ்க்கை நடத்தத் தகுதி உள்ளோர் யார்? அவர்கள் அன்றாட வாழ்க்கை எத்தன்மையது போன்ற பலவற்றிக்கு காரணம் காட்டுகிறார் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர். "துறவறம் என்ற பகுதியில் பத்து குறள்களில் இரத்தல் இழிவு ஈதல் நன்று, எனினும் இரந்து வாழக்கூடியவர் யார்? மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை அறவே நீக்கியவர், மற்றும் பெண், புகழ், பணம் வெறுத்தவர்களே பிச்சை எடுத்து வாழலாம் , இதனை உஞ்சவிருத்தி என்பர்.
அடுத்து ஐம்பெரும் பாவம் அகற்றினோர், அதாவது பொடிசெய்தல், அரைத்தல், பாத்திரங்கள் கழுவுதல், பெருக்கி தூய்மை செய்தல் அடுப்பு எரித்தல, என்ற ஐந்தும் செய்யாதவர்களும் இரந்து உண்ணலாம், இச்செயல்களால் சிறு புழு பூச்சிகள் அழிவது நடப்பதால் இவை பாவச்செயல்களாக கருதப்படுகிறது. இத்தகைய பாவங்களுக்கு பிராயச் சித்தமாக ஐந்து வகையான தியாகங்களை சாத்திரங்கள் காட்டுகின்றன. அவை 1) பிரம்மயஜ்ஞம், அல்லது வேத அத்யயனம், 2. பித்ரு யஜ்ஞம், 3. தேவ யஜ்ஞம், 4. பூதயஜ்ஞம், 5. மனுஸ்ய அதிதியஜ்ஞம், அதாவது வேதம் ஓதுதல், பெற்றோருக்கு திதி செய்தல், தேவர்களுக்கான வேள்வி , பூதங்களை திருப்திபடுத்துதல் (பலி) விருந்தினரை உபசரித்தல் என்பன. மேற்கண்ட நெறிகளை இல்லறம் நடத்துவோர்க்கு எடுத்துக் காட்டி அவர்கள் செவ்வனே செய்ய வழிகாட்டி உதவுவர் நம் குருமார்கள். எனவே நாம் எடுத்த மானிடப் பிறப்பை நல் குருநாதர் வழிகாட்டுதல மூலம் முற்பிறப்பில் செய்த பாவங்களை அகற்ற இப்பிறவியினை பயன் கொளல் வேண்டும்.
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீக தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
பிச்சைக்காரனும் அறிவாளியே
(வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)
முந்தைய சோழநாட்டில் மன்னன் நகர்வலம் சென்று கிராமங்களில் சஞ்சாரம் செய்தபோது, வறட்சியான பகுதியில் சஞ்சாரம் செய்து வரும் ேபாது தனக்கு குடிக்க தண்ணீர் கூட அருந்த முடியாத நிலையில் வந்து கொண்டிருந்த போது ஊருக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் மட்டும் பச்சை பசேரென உளள பயிரினைக் கண்டு மனம் மகிழ்ந்து அது என்ன பயிர் என்ன அறிய மந்திரியுடன் பார்க்க முற்பட்டபோது அது நல்ல தளீர் விட்ட வெள்ளரி என்று கண்டு மனம் மகிழ்ந்து அந்த வெள்ளரியின் பிஞ்சுகளை பறித்து மந்திரியிடம் வேண்டினான். அப்போது இதனைக் கவனித்துக் ெகாண்டிருந்த ஒரு குருட்டு பிச்சைக்காரன் மன்னன் கூறியதை ேகட்டு சிரித்தான். உடனே மன்னன் எதற்கு சிரிக்கிறாய் என்று ேகட்க அதற்கு அந்த குருடன் " இது சாப்பிட கசப்புத்தன்ைம காண்ட போய் வெள்ளரி இதை உண்ண முடியாது " என்றான், உடனே அரசர் நீதான் குருடன் ஆயிற்றே உனக்கு எப்படி இது தெரியும் என கேட்க இதற்கு அந்த பிச்சைக்கார குருடன் " ஊருக்கு அருகாைமயில் இருக்கும் இந்த வாழிப்பான வெள்ளரி யாரும் உண்ணாமல் விட்டு ைவத்திருப்பதிலிருந்தே இவ்வளவு செழிப்பான வெள்ளரிப்பிஞ்சு பேய் வெள்ளரி என்றும் இதனை உண்ண இயலாது என்பதைக் கண்டு கொண்ேடன், இது உங்களுக்கு தெரியவில்ைலயே என வியந்து சிரிக்கிறேன் என்றான், உடனே அரசர் இவ்வளவு புத்திசாலியான குருடன் பிச்சை எடுக்கிறானே என எண்ணி அரசர் தம் நகரில் உள்ள தர்ம சாலையில் தங்க வைக்கவும் அவனுக்கு ஒவ்ெவாரு நாளும் ஒருவேளைக்கு தயிர் சாதம் வழங்கவும் உத்தரவிட்டு அவனை தன்னுடன் அழைத்துச் சென்று தங்க வைத்தார். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் மன்னரின் அரன்மனைக்கு ஒரு ரத்தின வியாபாரி அரசரிடம் இரு வைரக்கற்களைக் கொண்டு வந்து " மன்னா இதில் இரண்டில் ஒன்றுதான் விலை மதிக்க முடியாத வைரம் மற்ெறான்னு போலி இதில் எது அசல் எது போலி என்று தங்களால் அறிந்து ெகாண்டால் இதனை தங்களிடமே ஒப்படைக்கிறேன் என்றால், அதனை அறிய தன்னாலும் தன் மந்திரிகளாலும் அடையாளம் காண இயலவில்ைல உடனே தன் பாதுகாப்பில் தர்மசாலையில் உள்ள அந்த குருட்டு பிச்சைக்காரனை அழைத்து வரக் கூறினார், அதன்படி அழைத்து வரப்பட்டு, இந்த வைரங்களில் எது அசல் எது போலி என்று கண்டறிய கூறினார் மன்னர், உடனே அந்த பிச்சைக்காரன் இந்த வைரங்களை சற்று ேநரம் வெயில் வைக்க கூறினான், பின் இதனை தொட்டு தடவிப்பார்த்தான், அதில் சூடான கல் போலி என்றும் சற்றும் சுடாத கல் வைரம் என்றும் அடையாளம் காட்டடினான் இதனை அந்த வைர வியாபாரியும் ஒப்புக்கொண்டான் . இதனை எவ்வாறு அறிந்தாய் என்று மன்னன்
கேட்க அதற்கு குருடன் உண்ைமயான வைரம் வெயிலுன் உஷ்ணத்தை தன்னுள் அடக்கிக் ெகாள்ளும் ேபாலி தன் உஷ்ணத்தை வெளியிட்டு விடும், இந்த தன்ைமயைக் கொண்டு அறிந்தேன். என்றான். உடனே மன்னன் அந்த பிச்சைக்காரனுக்கு தினமும் தயிர் சாதத்துடன் சாம்பார் சாதமும் வழங்க உத்தரவு இட்டார்.
சில் காலம் கழித்து மன்னன் அரன்மனைக்கு ஒரு சிற்ப வியாபாரி மூன்று ஒரே மாதிரியான தங்கப்பதுமைகளைக் ெகாண்டு வந்து இந்த பதுமைகளில் எது சிறந்தது? என்று கூறினால் இந்த மூன்று தங்கப்பதுமைகளும் தங்களுக்கே சொந்தம் என்றான். உடனே மன்னனுக்கு இதனை கண்டு எப்படியும் கண்டறிந்து அடைந்திட ஆசை ெகாண்டு தன் மந்திரி பிரதானிகளிடம் இது பற்றி கண்டறிய வினவினால் எல்லோரும் பார்த்தது விட்டு தங்களால் உண்மையை காண இயலவில்லை என்று கூறிவிட்டனா், உடனே தன் தர்ம சாலையில் உள்ள அந்த குருட்டு பிச்சைக்காரனை அழைத்து வரக் கூறினார், அதன்படி அழைத்து வரப்பட்டான், அவனிடம் இந்த தங்கப்பதுமைகளி்ல் எது சிறந்தது என்று கேட்டனா், உடனே அவனும் இந்த மூன்று பதுமைகளையும் தன் கைகளால் தடவிப்பார்த்தான் எல்லாம் ஒன்று போல் உள்ளது என அறிந்தான், பின் ஒரு சிறிய நூலைக் கொண்டு வரக்கூறினான், அந்த நூலின் ஒரு நுனியை ஒரு பதுமையின் ஒரு காதில் நுழைத்தான் அநத நூல் நுனி மறு காது வழியாக வந்தது பின் மற்றொரு பதுமையின் காதில் நூலின் நுனியை நுழைத்தான் அது அந்த பதுமையின் வாய் வழியாக வெளிவந்தது. பின் மற்றொரு பதுமையில் நூலின் நுனியை நுழைத்தான் அது உள்ளே செல்லவிலலை. உடனே மன்னா இந்த பதுமைதான் சிறந்தது என்றான். எப்படி சிறந்தது என்கிறாய் என்றனர், சபையோர், அதற்கு அந்த குருடன் முதலில் உள்ள பதுமையை ஒப்பானவர்கள் எந்த ெசய்தியையும் தன் காது வழியாக வாங்கி உடனே மறந்து விடுவார்கள் இவர்களால் எந்த பிரயோசனமும் கிடையாது, மற்ெறாரு பதுமையைப் போன்றவர்கள் தான் கேட்டதை உடனே தன் வாய் வழியாக எல்லோரிடம் கூறி பறைசாற்றி விடுவார்கள் எனவே இது போன்றோரும் சமுதாயத்திற்கு பயன் அற்றவர்கள், மூன்றாவதான பதுமைபோன்ற வர்கள் தான் கேட்டதை யாரிடமும் எளிதில் வெளியிட மாட்டார்கள் எனவே இவர்கள் தான் சிறந்தவர்கள் எனவே இந்த பதுமைதான் சிறந்தது என்றான், எனவே பதுமைவியாபாரியும் இதனை ஒப்புக்கொண்டு இந்த தங்கப் பதுமைகளை மன்னனிடமே ஒப்படைத்து விட்டான், உடனே மன்னன் இந்த பிச்சைக்காரனுக்கு இனி மூன்று வேளையும் உணவு கொடுங்கள் என்று பணித்தார், இருப்பினும் மன்னனுக்கு இவ்வளவு திறமைசாலியான இவனிடம் நிறைய திறமைகள் மறந்து கிடப்பதை அறிந்து தன்னைப் பற்றிய ஒரு உண்மையை அறிய அவனை தனது இரகிய அந்தரங்க அறைக்கு அழைத்தச் சென்று தன்னைப்பற்றி ஒரு உண்மையை அறிய எண்ணிணான், தன்னை ஒரு வேலைக்காரின் தாய்ப்பால் குடித்து வளர்ந்ததாக கூறிகிறார்களோ அது உண்மையா? என்பதை எனக்கு விளக்கு என்றான் அந்த பிச்சைக்கார குருடனிடம், மன்னா இதற்குத்தான இந்த பீடிகை , இதில் எந்த கருத்தும்வேறுபாடே கிடையாதே இது பரிபூர்ண உண்மை என்றான் , உடனே இதை எப்படி உறுதியாக கூறுகிறாய் என்றான்,. அதற்கு அந்த பிச்சைக்காரன் தங்கள் செயல்கள் மூலமே கண்டு ெகாண்டேன் என்றான், அது என்ன செயல் என்று கேட்க " மன்னா தாங்கள் என்னிடம் ஒவ்வொரு நிகழ்விலும் உண்மைத்தன்மையினைக் கண்டறிந்தவுடன் எனக்கு அளிக்கும் பரிசு ஒரு பிச்சைக்காரி கொடுப்பது போன்று தான் எனக்கு ஆனையிட்டீர்கள்? ஒரு பரோஉபகாரி செயலின் கூற்றன்று, இதிலிருந்து தாங்கள் ஒரு பிச்சைக்காரின் பாலை அருந்திதான் வளர்ந்திருப்பீர்களென அறிந்து கொண்டேன், என்றான், எனவே பிச்சைக்கார குருடனும் அறிவாளியாக் கூட இருப்பான், அவன் சிறு வயதில் அருந்திய உண்ைமயான தாய்ப்பாலின் அன்பு வழியாகத்தான் அவன் குணம் அமையும்.
தாய்ப்பால் குடித்தால் ஞானம் வளரும்
சம்பந்தர் அன்னை பராசக்தியின் தாய் பால் அருந்தினார் அவர் சிறந்த ஞானியானார். தற்காலத்தில் குழந்தைகள் புட்டிப்பால் குடிப்பாதால் வயது பருவத்தில் புட்டியைத் தேடுகின்றனர்.
திருசிற்றம்பலம். ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
(வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)
முந்தைய சோழநாட்டில் மன்னன் நகர்வலம் சென்று கிராமங்களில் சஞ்சாரம் செய்தபோது, வறட்சியான பகுதியில் சஞ்சாரம் செய்து வரும் ேபாது தனக்கு குடிக்க தண்ணீர் கூட அருந்த முடியாத நிலையில் வந்து கொண்டிருந்த போது ஊருக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் மட்டும் பச்சை பசேரென உளள பயிரினைக் கண்டு மனம் மகிழ்ந்து அது என்ன பயிர் என்ன அறிய மந்திரியுடன் பார்க்க முற்பட்டபோது அது நல்ல தளீர் விட்ட வெள்ளரி என்று கண்டு மனம் மகிழ்ந்து அந்த வெள்ளரியின் பிஞ்சுகளை பறித்து மந்திரியிடம் வேண்டினான். அப்போது இதனைக் கவனித்துக் ெகாண்டிருந்த ஒரு குருட்டு பிச்சைக்காரன் மன்னன் கூறியதை ேகட்டு சிரித்தான். உடனே மன்னன் எதற்கு சிரிக்கிறாய் என்று ேகட்க அதற்கு அந்த குருடன் " இது சாப்பிட கசப்புத்தன்ைம காண்ட போய் வெள்ளரி இதை உண்ண முடியாது " என்றான், உடனே அரசர் நீதான் குருடன் ஆயிற்றே உனக்கு எப்படி இது தெரியும் என கேட்க இதற்கு அந்த பிச்சைக்கார குருடன் " ஊருக்கு அருகாைமயில் இருக்கும் இந்த வாழிப்பான வெள்ளரி யாரும் உண்ணாமல் விட்டு ைவத்திருப்பதிலிருந்தே இவ்வளவு செழிப்பான வெள்ளரிப்பிஞ்சு பேய் வெள்ளரி என்றும் இதனை உண்ண இயலாது என்பதைக் கண்டு கொண்ேடன், இது உங்களுக்கு தெரியவில்ைலயே என வியந்து சிரிக்கிறேன் என்றான், உடனே அரசர் இவ்வளவு புத்திசாலியான குருடன் பிச்சை எடுக்கிறானே என எண்ணி அரசர் தம் நகரில் உள்ள தர்ம சாலையில் தங்க வைக்கவும் அவனுக்கு ஒவ்ெவாரு நாளும் ஒருவேளைக்கு தயிர் சாதம் வழங்கவும் உத்தரவிட்டு அவனை தன்னுடன் அழைத்துச் சென்று தங்க வைத்தார். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் மன்னரின் அரன்மனைக்கு ஒரு ரத்தின வியாபாரி அரசரிடம் இரு வைரக்கற்களைக் கொண்டு வந்து " மன்னா இதில் இரண்டில் ஒன்றுதான் விலை மதிக்க முடியாத வைரம் மற்ெறான்னு போலி இதில் எது அசல் எது போலி என்று தங்களால் அறிந்து ெகாண்டால் இதனை தங்களிடமே ஒப்படைக்கிறேன் என்றால், அதனை அறிய தன்னாலும் தன் மந்திரிகளாலும் அடையாளம் காண இயலவில்ைல உடனே தன் பாதுகாப்பில் தர்மசாலையில் உள்ள அந்த குருட்டு பிச்சைக்காரனை அழைத்து வரக் கூறினார், அதன்படி அழைத்து வரப்பட்டு, இந்த வைரங்களில் எது அசல் எது போலி என்று கண்டறிய கூறினார் மன்னர், உடனே அந்த பிச்சைக்காரன் இந்த வைரங்களை சற்று ேநரம் வெயில் வைக்க கூறினான், பின் இதனை தொட்டு தடவிப்பார்த்தான், அதில் சூடான கல் போலி என்றும் சற்றும் சுடாத கல் வைரம் என்றும் அடையாளம் காட்டடினான் இதனை அந்த வைர வியாபாரியும் ஒப்புக்கொண்டான் . இதனை எவ்வாறு அறிந்தாய் என்று மன்னன்
கேட்க அதற்கு குருடன் உண்ைமயான வைரம் வெயிலுன் உஷ்ணத்தை தன்னுள் அடக்கிக் ெகாள்ளும் ேபாலி தன் உஷ்ணத்தை வெளியிட்டு விடும், இந்த தன்ைமயைக் கொண்டு அறிந்தேன். என்றான். உடனே மன்னன் அந்த பிச்சைக்காரனுக்கு தினமும் தயிர் சாதத்துடன் சாம்பார் சாதமும் வழங்க உத்தரவு இட்டார்.
சில் காலம் கழித்து மன்னன் அரன்மனைக்கு ஒரு சிற்ப வியாபாரி மூன்று ஒரே மாதிரியான தங்கப்பதுமைகளைக் ெகாண்டு வந்து இந்த பதுமைகளில் எது சிறந்தது? என்று கூறினால் இந்த மூன்று தங்கப்பதுமைகளும் தங்களுக்கே சொந்தம் என்றான். உடனே மன்னனுக்கு இதனை கண்டு எப்படியும் கண்டறிந்து அடைந்திட ஆசை ெகாண்டு தன் மந்திரி பிரதானிகளிடம் இது பற்றி கண்டறிய வினவினால் எல்லோரும் பார்த்தது விட்டு தங்களால் உண்மையை காண இயலவில்லை என்று கூறிவிட்டனா், உடனே தன் தர்ம சாலையில் உள்ள அந்த குருட்டு பிச்சைக்காரனை அழைத்து வரக் கூறினார், அதன்படி அழைத்து வரப்பட்டான், அவனிடம் இந்த தங்கப்பதுமைகளி்ல் எது சிறந்தது என்று கேட்டனா், உடனே அவனும் இந்த மூன்று பதுமைகளையும் தன் கைகளால் தடவிப்பார்த்தான் எல்லாம் ஒன்று போல் உள்ளது என அறிந்தான், பின் ஒரு சிறிய நூலைக் கொண்டு வரக்கூறினான், அந்த நூலின் ஒரு நுனியை ஒரு பதுமையின் ஒரு காதில் நுழைத்தான் அநத நூல் நுனி மறு காது வழியாக வந்தது பின் மற்றொரு பதுமையின் காதில் நூலின் நுனியை நுழைத்தான் அது அந்த பதுமையின் வாய் வழியாக வெளிவந்தது. பின் மற்றொரு பதுமையில் நூலின் நுனியை நுழைத்தான் அது உள்ளே செல்லவிலலை. உடனே மன்னா இந்த பதுமைதான் சிறந்தது என்றான். எப்படி சிறந்தது என்கிறாய் என்றனர், சபையோர், அதற்கு அந்த குருடன் முதலில் உள்ள பதுமையை ஒப்பானவர்கள் எந்த ெசய்தியையும் தன் காது வழியாக வாங்கி உடனே மறந்து விடுவார்கள் இவர்களால் எந்த பிரயோசனமும் கிடையாது, மற்ெறாரு பதுமையைப் போன்றவர்கள் தான் கேட்டதை உடனே தன் வாய் வழியாக எல்லோரிடம் கூறி பறைசாற்றி விடுவார்கள் எனவே இது போன்றோரும் சமுதாயத்திற்கு பயன் அற்றவர்கள், மூன்றாவதான பதுமைபோன்ற வர்கள் தான் கேட்டதை யாரிடமும் எளிதில் வெளியிட மாட்டார்கள் எனவே இவர்கள் தான் சிறந்தவர்கள் எனவே இந்த பதுமைதான் சிறந்தது என்றான், எனவே பதுமைவியாபாரியும் இதனை ஒப்புக்கொண்டு இந்த தங்கப் பதுமைகளை மன்னனிடமே ஒப்படைத்து விட்டான், உடனே மன்னன் இந்த பிச்சைக்காரனுக்கு இனி மூன்று வேளையும் உணவு கொடுங்கள் என்று பணித்தார், இருப்பினும் மன்னனுக்கு இவ்வளவு திறமைசாலியான இவனிடம் நிறைய திறமைகள் மறந்து கிடப்பதை அறிந்து தன்னைப் பற்றிய ஒரு உண்மையை அறிய அவனை தனது இரகிய அந்தரங்க அறைக்கு அழைத்தச் சென்று தன்னைப்பற்றி ஒரு உண்மையை அறிய எண்ணிணான், தன்னை ஒரு வேலைக்காரின் தாய்ப்பால் குடித்து வளர்ந்ததாக கூறிகிறார்களோ அது உண்மையா? என்பதை எனக்கு விளக்கு என்றான் அந்த பிச்சைக்கார குருடனிடம், மன்னா இதற்குத்தான இந்த பீடிகை , இதில் எந்த கருத்தும்வேறுபாடே கிடையாதே இது பரிபூர்ண உண்மை என்றான் , உடனே இதை எப்படி உறுதியாக கூறுகிறாய் என்றான்,. அதற்கு அந்த பிச்சைக்காரன் தங்கள் செயல்கள் மூலமே கண்டு ெகாண்டேன் என்றான், அது என்ன செயல் என்று கேட்க " மன்னா தாங்கள் என்னிடம் ஒவ்வொரு நிகழ்விலும் உண்மைத்தன்மையினைக் கண்டறிந்தவுடன் எனக்கு அளிக்கும் பரிசு ஒரு பிச்சைக்காரி கொடுப்பது போன்று தான் எனக்கு ஆனையிட்டீர்கள்? ஒரு பரோஉபகாரி செயலின் கூற்றன்று, இதிலிருந்து தாங்கள் ஒரு பிச்சைக்காரின் பாலை அருந்திதான் வளர்ந்திருப்பீர்களென அறிந்து கொண்டேன், என்றான், எனவே பிச்சைக்கார குருடனும் அறிவாளியாக் கூட இருப்பான், அவன் சிறு வயதில் அருந்திய உண்ைமயான தாய்ப்பாலின் அன்பு வழியாகத்தான் அவன் குணம் அமையும்.
தாய்ப்பால் குடித்தால் ஞானம் வளரும்
சம்பந்தர் அன்னை பராசக்தியின் தாய் பால் அருந்தினார் அவர் சிறந்த ஞானியானார். தற்காலத்தில் குழந்தைகள் புட்டிப்பால் குடிப்பாதால் வயது பருவத்தில் புட்டியைத் தேடுகின்றனர்.
திருசிற்றம்பலம். ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
ஆதி சித்தர்கள்
பதினென் சித்தர்கள்வரலாற்றில் சித்தர்களுக்கெல்லாம் ஆதியாய், தீட்சை பெறாத சித்தர்களுக்கெல்லாம் மூலகாரணமாக காரணமானவர்கள் குரு தட்சணாமூர்த்தி, சுப்பிரமணிய சித்தர், நந்தி தேவர் ஆகிய மூவர்கள், இவர்கள் சித்தர் பரம்பரையனர் அல்லர், சித்தர்கள் தோன்றுவதற்கு மூல காரணமானவர்கள். இவர்கள் பதினென் சித்தர்கள் எண்ணிக்கையில் சேராதவர்கள்.
1. குருதட்சணாமூர்த்தி : இவர் ஆதியும் அந்தமும் ,அருவமும், உருவமும், அருவுருவமும் அல்லாத ஞான மயமான மூலப்பொருளின் வெளிப்பாடே ஆவர், இவர் குரு தட்சணாமூர்த்தி வடிவத்தில் முதல் ஞானாசிரியராக வெளிப்பட்டு சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் கல்லால மரத்தடியில் மோன நிலையில் இருந்து சூன்ய மயமான சுத்த பரஞானத்தை சொல்லாமல் சொல்லி புரிய வைத்தே பிரபஞ்சத்தின் முதல் உபதேசமாகும். இவர் சித்தர் பரம்பரை தோன்றுவதற்கே முதல் வித்திட்டவர் ஆவார்.
சிவபரம்பொருளின் முதல் அவதாரமே குருதட்சணாமூர்த்தி, இவர் எட்டு சீடர்களுக்கு ஆன்மீக ஞானத்தை உபதேசம் செய்திருக்கிறார், நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரம பாதர், திருமூலர் என்று திருமந்திர பாடல் வாயிலாக நாம் அறிய திருமூலரே கூறியுள்ளார், பாடல் 68,
நந்தி அருள் பெற்ற நாதரை நாடின் ............. என்னோடு எண்பருமே "
2, சுப்பிரமணிய சித்தர்: சிவனாரின் தவஞான நிலையில் ஆக்ஞை பீடமான அவருடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப பொறிகளாக வெளிப்பட்ட ஞான ஒளி விளக்கே சுப்பிரமணிய சித்து. பஞ்ச முக சிவத்தின் ஆக்ஞை மையத்திலிருந்து பிரபஞ்ச ஆற்றலின் உன்னத நிலையான ஆறுமுக சிவமாக இந்த சித்து வெளிப்பட்டது. இந்த சித்து மனித இதயமான அகத்திற்கு உணர்த்திய உன்னத ஞானமே சுப்பிரமணியஞானம். ஒரு உண்மை குரு முகமாக இந்த ஞானத்தை ெபெறுபவர்கள் யாவருமே அகத்தியர்கள்தான். அகத்தியம் என்ற சொல் ஒரு காரணப் பெயர், அதை அகம் - தீ - அர் என பிரித்தால் அது ஞானத்தீயையே இதயமாக கொண்டவர் என்று பொருள் படும். இந்த அகத்தீயை தன்மயமாக கொண்டவர் சுப்பிரமணிய சித்து. இந்த காரணப் பெயர் சு - பிரம்ம - மணி - அர் என பிரிந்து " தூய பரவெளி முழுவதும் ஊடுருவி நிறைந்துள்ள இரத்தின மயமான ஞானப் பேரொளியாக உள்ளவர் என்று பொருள் படும். இவரது அகத்தீயை முழுவதுமாக உள்வாங்கி எங்கும் பிரதிபலித்து வரும் பண்பின் உருவமாக வெளிப்பாடே அகத்தியர். அகத்தியம் என்பது ஒவ்வொரு மனிதனின் உண்மையான ஆன்ம தரிசனமே ஆகும். இதுவே மகா நட்சித்திரமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. ஆகவே அகத்தியர் என்ற முனிவர் - சித்தர் சுப்பிரமணிய ஞானத்தை முழுமையாக தெரிய வைப்பதே இந்த அகத்தியர் வரலாறு என்பதையும் உணரலாம்.
3, நந்தி தேவர் : சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு நேர் எதிரில் லிங்கத்திற்கு சம உயரத்தில் லிங்கத்தையே பார்த்த வண்ணம் நந்தி தேவர் அமர்ந்திருப்பார். நந்தியின் அனுமதி பெற்றுத்தான் சிவதரிசனம் செய்யவேண்டும் என்பதும், நந்திக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் நந்திதேவனை மறைத்து நின்று சுவாமி தரிசனம் செய்யக் கூடாது என்பதும் சைவ மரபு. காரணம் நந்தி சிவத்திடமிருந்து பிரிக்க முடியாத ஓர் அங்கம் என்பதே. இடைவிடாது வாசி ஓட்டம் (உள் சுவாசம், வெளிச் சுவாசம் ) நடைப் பெற்றுக் கொண்டுள்ளது. சிவமும் நந்தியும் பிரிக்க முடியாத ஒன்று என்று காண்க.
ஆதிகுரு தட்சணாமூர்த்தியான பரம்பொருளிடம் முதலில் தீட்சை பெற்றவர்கள் எண்மர், அவர்களில் நந்திகள் நால்வர் என திருமூலர் குறிப்பிடுகிறார். அந்த நால்வர் முறையே சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் என்பவராவர். இந்த நந்திகள் நாலவரும் குருதட்சணாமூர்த்தியிடம் மோகன தீட்சை பெற்றவர்கள். இவர்கள் நால்வரில் நந்திதேவர் ஒருவரல்லர் , என்பதை உணரவேண்டும். இவர் திருக்கயிலாய பரம்பரையை சேர்ந்தவர், சிவனாருக்கு வாயில் காப்பவராகவும், வாகனமாகவும் இருந்தவர் இந்த நந்தியம் பெருமான்.
தோற்றம்: தஞ்சையிலுள்ள திருவையாறு தலத்தில் சிலாத முனிவர் என்பவர் நந்தியம் பெருமானின் தந்தையாவார். அவருடைய மனைவி சாருட்சன என்ற சித்ரவதி என்ற அம்மையார் . இந்ந தம்பதியருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லை. இத்தருணத்தில் சப்தரிஷிகள் இவருடைய ஆசரமத்திற்கு உணவருந்த வந்தனர், அப்போது சிலாத முனிவருக்கு மகப்பேறு இல்லாததை அறிந்து குழந்தைச் செல்வம் இல்லாத ஆசரமத்தில நாங்கள் உணவருந்துவதில்லை என கூறி உணவருந்தாமலே திரும்பிவிட்டனர் இது கண்டு தம்பதியர் மிக மனம் வருந்தி தங்களுக்கு மகப்பேறு வேண்டி சிலாத முனிவர் கடும் தவம் மேற்கொண்டார், இவரின் தவத்தினை கண்டு மனம்இரங்கிய சிவனார் " முனிவரே உங்களுக்கு கருவில் இருந்து பிறவாத திருமகன் ஒருவன் கிடைப்பான் அவன் எனக்கு சமமானவன் மரணமில்லாதவன் என்னை வழிபடுகிறவர்கள் அவனையும் வழிபடுவார்கள் "என்று கூறி மறைந்தார். அதன்படி சிலாத முனிவர் ஒருநாள் பூமியை தோண்டும் போது ஒளிவடிமான பிரகாசிக்கும் பேழையில் நந்தி தேவர் கிடைத்தார், நந்தி தேவருக்கு எட்டு வயது ஆகும் போது மரணமில்லாத வாழ்வு பெற எட்டு கோடி ஜபம் செய்து அழிவில்லா வாழ்நாளை பெற்றதுடன் கயிலையில் சிவத்தொண்டு செய்யவும் காவலனாகவும் இறைவருக்கு வாகனமாகவும் இருக்கும் வாய்ப்பு பெற்றார், இவரே சிவனாரின் நேர் மெய் காவலனாகவும் இறைவரின் சம அந்தஸ்து பெற்று சிவனடியார்களுக்கு இன்றும் அருள்பாலித்து வருகிறார்.
திருச்சிற்றம்பலம்
நன்றி : பதினென் சித்தர்கள் வரலாறு
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
பதினென் சித்தர்கள்வரலாற்றில் சித்தர்களுக்கெல்லாம் ஆதியாய், தீட்சை பெறாத சித்தர்களுக்கெல்லாம் மூலகாரணமாக காரணமானவர்கள் குரு தட்சணாமூர்த்தி, சுப்பிரமணிய சித்தர், நந்தி தேவர் ஆகிய மூவர்கள், இவர்கள் சித்தர் பரம்பரையனர் அல்லர், சித்தர்கள் தோன்றுவதற்கு மூல காரணமானவர்கள். இவர்கள் பதினென் சித்தர்கள் எண்ணிக்கையில் சேராதவர்கள்.
1. குருதட்சணாமூர்த்தி : இவர் ஆதியும் அந்தமும் ,அருவமும், உருவமும், அருவுருவமும் அல்லாத ஞான மயமான மூலப்பொருளின் வெளிப்பாடே ஆவர், இவர் குரு தட்சணாமூர்த்தி வடிவத்தில் முதல் ஞானாசிரியராக வெளிப்பட்டு சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் கல்லால மரத்தடியில் மோன நிலையில் இருந்து சூன்ய மயமான சுத்த பரஞானத்தை சொல்லாமல் சொல்லி புரிய வைத்தே பிரபஞ்சத்தின் முதல் உபதேசமாகும். இவர் சித்தர் பரம்பரை தோன்றுவதற்கே முதல் வித்திட்டவர் ஆவார்.
சிவபரம்பொருளின் முதல் அவதாரமே குருதட்சணாமூர்த்தி, இவர் எட்டு சீடர்களுக்கு ஆன்மீக ஞானத்தை உபதேசம் செய்திருக்கிறார், நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரம பாதர், திருமூலர் என்று திருமந்திர பாடல் வாயிலாக நாம் அறிய திருமூலரே கூறியுள்ளார், பாடல் 68,
நந்தி அருள் பெற்ற நாதரை நாடின் ............. என்னோடு எண்பருமே "
2, சுப்பிரமணிய சித்தர்: சிவனாரின் தவஞான நிலையில் ஆக்ஞை பீடமான அவருடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப பொறிகளாக வெளிப்பட்ட ஞான ஒளி விளக்கே சுப்பிரமணிய சித்து. பஞ்ச முக சிவத்தின் ஆக்ஞை மையத்திலிருந்து பிரபஞ்ச ஆற்றலின் உன்னத நிலையான ஆறுமுக சிவமாக இந்த சித்து வெளிப்பட்டது. இந்த சித்து மனித இதயமான அகத்திற்கு உணர்த்திய உன்னத ஞானமே சுப்பிரமணியஞானம். ஒரு உண்மை குரு முகமாக இந்த ஞானத்தை ெபெறுபவர்கள் யாவருமே அகத்தியர்கள்தான். அகத்தியம் என்ற சொல் ஒரு காரணப் பெயர், அதை அகம் - தீ - அர் என பிரித்தால் அது ஞானத்தீயையே இதயமாக கொண்டவர் என்று பொருள் படும். இந்த அகத்தீயை தன்மயமாக கொண்டவர் சுப்பிரமணிய சித்து. இந்த காரணப் பெயர் சு - பிரம்ம - மணி - அர் என பிரிந்து " தூய பரவெளி முழுவதும் ஊடுருவி நிறைந்துள்ள இரத்தின மயமான ஞானப் பேரொளியாக உள்ளவர் என்று பொருள் படும். இவரது அகத்தீயை முழுவதுமாக உள்வாங்கி எங்கும் பிரதிபலித்து வரும் பண்பின் உருவமாக வெளிப்பாடே அகத்தியர். அகத்தியம் என்பது ஒவ்வொரு மனிதனின் உண்மையான ஆன்ம தரிசனமே ஆகும். இதுவே மகா நட்சித்திரமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. ஆகவே அகத்தியர் என்ற முனிவர் - சித்தர் சுப்பிரமணிய ஞானத்தை முழுமையாக தெரிய வைப்பதே இந்த அகத்தியர் வரலாறு என்பதையும் உணரலாம்.
3, நந்தி தேவர் : சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு நேர் எதிரில் லிங்கத்திற்கு சம உயரத்தில் லிங்கத்தையே பார்த்த வண்ணம் நந்தி தேவர் அமர்ந்திருப்பார். நந்தியின் அனுமதி பெற்றுத்தான் சிவதரிசனம் செய்யவேண்டும் என்பதும், நந்திக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் நந்திதேவனை மறைத்து நின்று சுவாமி தரிசனம் செய்யக் கூடாது என்பதும் சைவ மரபு. காரணம் நந்தி சிவத்திடமிருந்து பிரிக்க முடியாத ஓர் அங்கம் என்பதே. இடைவிடாது வாசி ஓட்டம் (உள் சுவாசம், வெளிச் சுவாசம் ) நடைப் பெற்றுக் கொண்டுள்ளது. சிவமும் நந்தியும் பிரிக்க முடியாத ஒன்று என்று காண்க.
ஆதிகுரு தட்சணாமூர்த்தியான பரம்பொருளிடம் முதலில் தீட்சை பெற்றவர்கள் எண்மர், அவர்களில் நந்திகள் நால்வர் என திருமூலர் குறிப்பிடுகிறார். அந்த நால்வர் முறையே சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் என்பவராவர். இந்த நந்திகள் நாலவரும் குருதட்சணாமூர்த்தியிடம் மோகன தீட்சை பெற்றவர்கள். இவர்கள் நால்வரில் நந்திதேவர் ஒருவரல்லர் , என்பதை உணரவேண்டும். இவர் திருக்கயிலாய பரம்பரையை சேர்ந்தவர், சிவனாருக்கு வாயில் காப்பவராகவும், வாகனமாகவும் இருந்தவர் இந்த நந்தியம் பெருமான்.
தோற்றம்: தஞ்சையிலுள்ள திருவையாறு தலத்தில் சிலாத முனிவர் என்பவர் நந்தியம் பெருமானின் தந்தையாவார். அவருடைய மனைவி சாருட்சன என்ற சித்ரவதி என்ற அம்மையார் . இந்ந தம்பதியருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லை. இத்தருணத்தில் சப்தரிஷிகள் இவருடைய ஆசரமத்திற்கு உணவருந்த வந்தனர், அப்போது சிலாத முனிவருக்கு மகப்பேறு இல்லாததை அறிந்து குழந்தைச் செல்வம் இல்லாத ஆசரமத்தில நாங்கள் உணவருந்துவதில்லை என கூறி உணவருந்தாமலே திரும்பிவிட்டனர் இது கண்டு தம்பதியர் மிக மனம் வருந்தி தங்களுக்கு மகப்பேறு வேண்டி சிலாத முனிவர் கடும் தவம் மேற்கொண்டார், இவரின் தவத்தினை கண்டு மனம்இரங்கிய சிவனார் " முனிவரே உங்களுக்கு கருவில் இருந்து பிறவாத திருமகன் ஒருவன் கிடைப்பான் அவன் எனக்கு சமமானவன் மரணமில்லாதவன் என்னை வழிபடுகிறவர்கள் அவனையும் வழிபடுவார்கள் "என்று கூறி மறைந்தார். அதன்படி சிலாத முனிவர் ஒருநாள் பூமியை தோண்டும் போது ஒளிவடிமான பிரகாசிக்கும் பேழையில் நந்தி தேவர் கிடைத்தார், நந்தி தேவருக்கு எட்டு வயது ஆகும் போது மரணமில்லாத வாழ்வு பெற எட்டு கோடி ஜபம் செய்து அழிவில்லா வாழ்நாளை பெற்றதுடன் கயிலையில் சிவத்தொண்டு செய்யவும் காவலனாகவும் இறைவருக்கு வாகனமாகவும் இருக்கும் வாய்ப்பு பெற்றார், இவரே சிவனாரின் நேர் மெய் காவலனாகவும் இறைவரின் சம அந்தஸ்து பெற்று சிவனடியார்களுக்கு இன்றும் அருள்பாலித்து வருகிறார்.
திருச்சிற்றம்பலம்
நன்றி : பதினென் சித்தர்கள் வரலாறு
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
சிவ ரூபமே சித்தர்களின் சிந்தனை
உலகம் தோன்றவும், உயிர்கள் தோன்றவும், மூலப் பொருளான தொண்ணூற்றாறு தத்துவங்கள் தேவைப்படுகின்றன. இந்த தத்துவங்கள் நீங்கினால் யாவும்அழிந்து விடும். மறுபடியும் உலகம் தோன்ற இந்த தத்துவங்கள் தோன்ற வேண்டும். தத்துவங்களுக்கெல்லாம் காரணமானவர் ஐந்தெழுத்தாகிய இறைவன். இறைவனின் ஒரே மூலமந்திரம் ஐந்தெழுத்தான " நமசிவாய " என்ற மந்திரப் பொருள்.
ந - பிரம்மன் படைக்கும் தொழிலை செய்பவர்
ம - திருமால் காக்கும் தொழிலை செய்பவர்
சி - உருத்திரன் அழிக்கும் தொழிலை செய்பவர்
வா - மகேஸ்வரன் மறைத்தல் தொழிலை செய்பவர்
ய - சதாசிவம் அருள் புரியும தொழிலை செய்பவர்.
நமசிவாய என்று உச்சரித்துத் தியானம் செய்தாலே இறைவனைக் காண முடியும் என்று உணர முடிகிறது அல்லவா?
உலக இச்சையையும், உடல் இச்சையையும் கடந்தவன் ஞானி. உடலின் பஞ்ச பூதங்களை அடக்கித தன்னுள் இறைவனைக் கண்டு இறைவனைக் காணும் வழியினை மக்களுக்கு உபதேசிப்பவர்கள் சித்தர்கள். பலனைக் கருதி தெய்வத்தை நினைப்பவன் ஞானத்தை அடையமுடியாது. ஞானத்தை அடைய விரும்பி, தெய்வத்தை நினைப்பவனுக்கு சித்தி கிடைக்கிறது.
மண், பெண், பொன் என்ற மூவாசைகளில் மனதை பறி கொடுத்தால் இறைவன் அருள் பெறுவது எப்போது? பற்றற்றவரகளை பற்றிக் கொள்வான் இறைவன் என்பது சித்தரின் வாக்கு, சித்தர்களின் சிந்தனை எப்போதும் சிவ ரூபத்திலேயே நிலைத்திருக்கும்.
ஆசையின் ஆரம்பமே துன்பத்துக்கு ஆரம்பம். ஆசையை மனதில் இருந்து துரத்திவிட்டால் அதுவே இன்பத்தின் ஆரம்பமாக அமைந்து விடும். மனிதனுக்கு துன்பம் நேர்ந்தால் விதி என்கிறோம். நாம் செய்த பழியை விதியின் மேல் போடுகிறோம், ஆசைக்கு காரணமான துன்பத்ததைத் தவிர்க்க நம்மால் முடியும், அதுதான் மதி. ஆசையை மதியுடன் சேர்ந்து விரட்டினால் விதியால் என்ன செய்யமுமுடியும். சிந்தித்துப் பார்த்தால் தெளிவு பெறும்.
சித்தர்கள் சிரஞ்சிவித்தன்மை பெற்றவர்கள் என்றும், இன்றும் அரூபமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் நம்பப் படுகிறது. மலைகளிலும் காடுகளிலும், மனிதர்கள் ஆரவாரமான கூச்சல் சத்தம் இல்லாத இடங்களில் சித்தர்கள் இருக்கின்றனர் என்று பார்த்தவர்கள் கூறுகின்றனர். திருவண்ணாமலை, மலைப்பகுதிகளிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் மகாலிங்க மலை என்ற சதுரகிரி மலைகளிலும் சித்தர்கள் நடமாட்டத்தை பார்த்ததாகவும் அவர்கள்மனிதர்களைக் கண்டு கொள்ளாமல் நடந்து சென்றார்கள் என்று ஆதிவாசிகள் கூறுகின்றனர்.
மலைகளில் மாடு மேய்க்கச் சென்ற சிறுவர்கள், யாரோ இலைகளின் மேல் நடந்து செல்லும் சத்தத்தைக் கேட்டதாகக் கூறி இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அரூபமாக சித்தர்கள் நடந்து செல்லும் காலடி ஓசை என்று பெரியவர்கள் கூறுகிறார்கள், சித்தர்கள் எப்போதும் ஒரே இடத்ததில் இருப்பதில்லை, தங்குவதும்இல்லை. அவர்கள் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒரு மனிதன் வாழ்நாளில் சித்தரை சந்தித்து ஆசி பெற்று விட்டால், தெய் கடாட்சகம் கிடைத்ததைப் போன்று பலன்களை பெறுவான், சித்தர்கள் உடற்கூற்றை பற்றி ஆராய்ந்து வரும் நோய்களையும், அதற்குரிய சிகிச்சைகளையும் நூல் வடிவில் தந்து இருக்கிறார்கள். சித்தர்கள் எழுதிய மருத்துவக் குறிப்பு பற்றியும், வசிக, மாந்திரக, தந்திர யோகங்களைப்பற்றியும் கண்ட நூல்கள் சில கிடைத்தனவற்றை கீழ்கண்ட "இ "வலைதலத்திலிருந்து தரவிரக்கம் செய்து கற்றுப்பாருங்கள், சித்தர்களின் அரிய பெரிய கருத்துக்களை காணலாம்,
www.siththar.com/home/upload/kokoham.pdf
www.siththar.com/home/upload/thirumantheramalai.pdf
www.siththar.com/home/upload/mantheram.pdf
http://noolaham.net/project/46/4598/4598.pdf
http://www.subaonline.net/thfebooks/THFagathiyarkarpachasthiram.pdf
https://ia700202.us.archive.org/22/items/Manikkavasagar/Manikkavasagar.pdf
https://ia700602.us.archive.org/22/items/ManthirangalEndralEnna/ManthirangalEndralEnna.pdf
http://www.siththar.com/home/upload/agathiyarAntharankaTheedchaavethi.pdf
http://www.siththar.com/home/upload/siththarmaiporul.pdf
http://www.siththar.com/home/upload/akathiyar12000.pdf
http://www.siththar.com/home/upload/amuthakalasam.pdf
http://www.siththar.com/home/upload/muppukuru.pdf
http://www.siththar.com/home/upload/agasthiyarPanneruKaandam200.pdf
http://www.siththar.com/home/upload/agathiyarGhanakaviyam1000.pdf
http://www.siththar.com/home/upload/agasthiyarPanneruKaandam200.pdf
http://www.tamilwin.info/home/upload/nayanavethe.pdf
http://www.tamilwin.info/home/upload/amuthakalaigynam.pdf
http://www.tamilwin.info/home/upload/akathiyarPooranaSuthiram.pdf
http://www.tamilwin.info/home/upload/bogharSarakuVaippu.pdf
http://www.tamilwin.info/home/upload/siththarThathuvam.pdf - with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/akathiyar300.pdf - with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/ganasaranool.pdf - with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/nantheesar300.pdf - with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/bogharJannashagara.pdf
மனிதனுக்கு ஏற்படும் சாதாரண நோய் முதல் அசாதாரண நோய்கள் வரை ஆராய்ந்தறிந்து அவர்களுக்கு வைத்திய முறைகளை கூறயுள்ளார்கள், இதில் மிகவும் பிரபலமானது அகத்தியர் வைத்திய சித்தர்வைத்திய முறைகள்.
மனிதன் பிறக்கு போதே இறக்கும் நாளும் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. எத்தனை யோ, விதமான மனிதர்களின் தலையெழுத்தை பனை ஒலைகளில் அகத்தியர், காகபுஜண்டர், போகர், வசிஸ்டர் ப்ருகு போன்ற சித்தர்கள் எழுதி வைத்து இருக்கின்றாரகள். சில ஒலைச்சுவடிகள் கிடைத்து இருக்கின்றன. அவைகளில் நமது தலையெழுத்தை துல்லியமான முறையில் அவர்ரவர்களுக்கு உண்டான நிகழ்வுகள் கூறப்பட்டு இன்றும் அகத்தியர் ஜீவநாடி சோதிடம் என்று அறிந்து வருகிறோம்,
பிறக்கும் போதே, சித்தர்களாக எவரும் பிறப்பதில்லை. வாழும் முறையில் இறைவனை அறிந்தே தீருவது என்ற வைராக்கியத்துடன் உடலையும், மனதையும், வசப்படுத்திக் கொண்டவர்களே சித்தர்கள்.
எத்தனையோ, மனச்சஞ்சலங்களுக்கு இடையே வாழும் நாம் சித்தரகளாவது கடினம், ஆனால் சித்தர்கள் செய்து காட்டிய யோகப்பயிற்சிகளையும, தியானப் பயிற்சிகளையும் செய்து, உடலையும் ,மனதையும், சுத்தமாக்கி நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும், சித்தி தரும் சித்தர்களின் வாழ்க்கை நமக்கு பாடமாக அமையும் என்பதில் சந்தேமில்லை. எனவே சித்தர்களின் சிந்தனை எப்பொழும் சிவரூபமே என்பதை உணர்வோம். சித்தர்களின் வாக்கு தெய்வ வாக்கு !!
சித்தர்களின் சிந்தனையை ஏற்போம்,! சிவ ரூபத்தை தரிசிப்போம் !!
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
சிவ ரூபமே சித்தர்களின் சிந்தனை
உலகம் தோன்றவும், உயிர்கள் தோன்றவும், மூலப் பொருளான தொண்ணூற்றாறு தத்துவங்கள் தேவைப்படுகின்றன. இந்த தத்துவங்கள் நீங்கினால் யாவும்அழிந்து விடும். மறுபடியும் உலகம் தோன்ற இந்த தத்துவங்கள் தோன்ற வேண்டும். தத்துவங்களுக்கெல்லாம் காரணமானவர் ஐந்தெழுத்தாகிய இறைவன். இறைவனின் ஒரே மூலமந்திரம் ஐந்தெழுத்தான " நமசிவாய " என்ற மந்திரப் பொருள்.
ந - பிரம்மன் படைக்கும் தொழிலை செய்பவர்
ம - திருமால் காக்கும் தொழிலை செய்பவர்
சி - உருத்திரன் அழிக்கும் தொழிலை செய்பவர்
வா - மகேஸ்வரன் மறைத்தல் தொழிலை செய்பவர்
ய - சதாசிவம் அருள் புரியும தொழிலை செய்பவர்.
நமசிவாய என்று உச்சரித்துத் தியானம் செய்தாலே இறைவனைக் காண முடியும் என்று உணர முடிகிறது அல்லவா?
உலக இச்சையையும், உடல் இச்சையையும் கடந்தவன் ஞானி. உடலின் பஞ்ச பூதங்களை அடக்கித தன்னுள் இறைவனைக் கண்டு இறைவனைக் காணும் வழியினை மக்களுக்கு உபதேசிப்பவர்கள் சித்தர்கள். பலனைக் கருதி தெய்வத்தை நினைப்பவன் ஞானத்தை அடையமுடியாது. ஞானத்தை அடைய விரும்பி, தெய்வத்தை நினைப்பவனுக்கு சித்தி கிடைக்கிறது.
மண், பெண், பொன் என்ற மூவாசைகளில் மனதை பறி கொடுத்தால் இறைவன் அருள் பெறுவது எப்போது? பற்றற்றவரகளை பற்றிக் கொள்வான் இறைவன் என்பது சித்தரின் வாக்கு, சித்தர்களின் சிந்தனை எப்போதும் சிவ ரூபத்திலேயே நிலைத்திருக்கும்.
ஆசையின் ஆரம்பமே துன்பத்துக்கு ஆரம்பம். ஆசையை மனதில் இருந்து துரத்திவிட்டால் அதுவே இன்பத்தின் ஆரம்பமாக அமைந்து விடும். மனிதனுக்கு துன்பம் நேர்ந்தால் விதி என்கிறோம். நாம் செய்த பழியை விதியின் மேல் போடுகிறோம், ஆசைக்கு காரணமான துன்பத்ததைத் தவிர்க்க நம்மால் முடியும், அதுதான் மதி. ஆசையை மதியுடன் சேர்ந்து விரட்டினால் விதியால் என்ன செய்யமுமுடியும். சிந்தித்துப் பார்த்தால் தெளிவு பெறும்.
சித்தர்கள் சிரஞ்சிவித்தன்மை பெற்றவர்கள் என்றும், இன்றும் அரூபமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் நம்பப் படுகிறது. மலைகளிலும் காடுகளிலும், மனிதர்கள் ஆரவாரமான கூச்சல் சத்தம் இல்லாத இடங்களில் சித்தர்கள் இருக்கின்றனர் என்று பார்த்தவர்கள் கூறுகின்றனர். திருவண்ணாமலை, மலைப்பகுதிகளிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் மகாலிங்க மலை என்ற சதுரகிரி மலைகளிலும் சித்தர்கள் நடமாட்டத்தை பார்த்ததாகவும் அவர்கள்மனிதர்களைக் கண்டு கொள்ளாமல் நடந்து சென்றார்கள் என்று ஆதிவாசிகள் கூறுகின்றனர்.
மலைகளில் மாடு மேய்க்கச் சென்ற சிறுவர்கள், யாரோ இலைகளின் மேல் நடந்து செல்லும் சத்தத்தைக் கேட்டதாகக் கூறி இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அரூபமாக சித்தர்கள் நடந்து செல்லும் காலடி ஓசை என்று பெரியவர்கள் கூறுகிறார்கள், சித்தர்கள் எப்போதும் ஒரே இடத்ததில் இருப்பதில்லை, தங்குவதும்இல்லை. அவர்கள் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒரு மனிதன் வாழ்நாளில் சித்தரை சந்தித்து ஆசி பெற்று விட்டால், தெய் கடாட்சகம் கிடைத்ததைப் போன்று பலன்களை பெறுவான், சித்தர்கள் உடற்கூற்றை பற்றி ஆராய்ந்து வரும் நோய்களையும், அதற்குரிய சிகிச்சைகளையும் நூல் வடிவில் தந்து இருக்கிறார்கள். சித்தர்கள் எழுதிய மருத்துவக் குறிப்பு பற்றியும், வசிக, மாந்திரக, தந்திர யோகங்களைப்பற்றியும் கண்ட நூல்கள் சில கிடைத்தனவற்றை கீழ்கண்ட "இ "வலைதலத்திலிருந்து தரவிரக்கம் செய்து கற்றுப்பாருங்கள், சித்தர்களின் அரிய பெரிய கருத்துக்களை காணலாம்,
www.siththar.com/home/upload/kokoham.pdf
www.siththar.com/home/upload/thirumantheramalai.pdf
www.siththar.com/home/upload/mantheram.pdf
http://noolaham.net/project/46/4598/4598.pdf
http://www.subaonline.net/thfebooks/THFagathiyarkarpachasthiram.pdf
https://ia700202.us.archive.org/22/items/Manikkavasagar/Manikkavasagar.pdf
https://ia700602.us.archive.org/22/items/ManthirangalEndralEnna/ManthirangalEndralEnna.pdf
http://www.siththar.com/home/upload/agathiyarAntharankaTheedchaavethi.pdf
http://www.siththar.com/home/upload/siththarmaiporul.pdf
http://www.siththar.com/home/upload/akathiyar12000.pdf
http://www.siththar.com/home/upload/amuthakalasam.pdf
http://www.siththar.com/home/upload/muppukuru.pdf
http://www.siththar.com/home/upload/agasthiyarPanneruKaandam200.pdf
http://www.siththar.com/home/upload/agathiyarGhanakaviyam1000.pdf
http://www.siththar.com/home/upload/agasthiyarPanneruKaandam200.pdf
http://www.tamilwin.info/home/upload/nayanavethe.pdf
http://www.tamilwin.info/home/upload/amuthakalaigynam.pdf
http://www.tamilwin.info/home/upload/akathiyarPooranaSuthiram.pdf
http://www.tamilwin.info/home/upload/bogharSarakuVaippu.pdf
http://www.tamilwin.info/home/upload/siththarThathuvam.pdf - with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/akathiyar300.pdf - with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/ganasaranool.pdf - with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/nantheesar300.pdf - with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/bogharJannashagara.pdf
மனிதனுக்கு ஏற்படும் சாதாரண நோய் முதல் அசாதாரண நோய்கள் வரை ஆராய்ந்தறிந்து அவர்களுக்கு வைத்திய முறைகளை கூறயுள்ளார்கள், இதில் மிகவும் பிரபலமானது அகத்தியர் வைத்திய சித்தர்வைத்திய முறைகள்.
மனிதன் பிறக்கு போதே இறக்கும் நாளும் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. எத்தனை யோ, விதமான மனிதர்களின் தலையெழுத்தை பனை ஒலைகளில் அகத்தியர், காகபுஜண்டர், போகர், வசிஸ்டர் ப்ருகு போன்ற சித்தர்கள் எழுதி வைத்து இருக்கின்றாரகள். சில ஒலைச்சுவடிகள் கிடைத்து இருக்கின்றன. அவைகளில் நமது தலையெழுத்தை துல்லியமான முறையில் அவர்ரவர்களுக்கு உண்டான நிகழ்வுகள் கூறப்பட்டு இன்றும் அகத்தியர் ஜீவநாடி சோதிடம் என்று அறிந்து வருகிறோம்,
பிறக்கும் போதே, சித்தர்களாக எவரும் பிறப்பதில்லை. வாழும் முறையில் இறைவனை அறிந்தே தீருவது என்ற வைராக்கியத்துடன் உடலையும், மனதையும், வசப்படுத்திக் கொண்டவர்களே சித்தர்கள்.
எத்தனையோ, மனச்சஞ்சலங்களுக்கு இடையே வாழும் நாம் சித்தரகளாவது கடினம், ஆனால் சித்தர்கள் செய்து காட்டிய யோகப்பயிற்சிகளையும, தியானப் பயிற்சிகளையும் செய்து, உடலையும் ,மனதையும், சுத்தமாக்கி நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும், சித்தி தரும் சித்தர்களின் வாழ்க்கை நமக்கு பாடமாக அமையும் என்பதில் சந்தேமில்லை. எனவே சித்தர்களின் சிந்தனை எப்பொழும் சிவரூபமே என்பதை உணர்வோம். சித்தர்களின் வாக்கு தெய்வ வாக்கு !!
சித்தர்களின் சிந்தனையை ஏற்போம்,! சிவ ரூபத்தை தரிசிப்போம் !!
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
நமக்கு கடவுள் வேண்டுமா?
ஒவ்வொரு நாளும் நாம் இந்த கேள்வியை கேட்போம்.. " நமக்கு கடவுள் வேணடுமா?" நாம் சமயத்தைப் பற்றி பேசும் பொழுது நாம் உயர்ந்த நிலையை எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு போதிக்கும் போது , நாம் இந்த கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும், பல தடவைகளில் எனக்கு கடவுள் வேண்டாம், என்று காண்கிறோம், எனக்கு உணவு வேண்டும், மிமிகப் பசியாய் இருக்கும் போது ஒரு சிறு ரொட்டி துண்டாவது இல்லையெனில் பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிடுகிறோம், சற்று தொடர்ச்சியாக டீ, காபி குடித்தவர்கள், அந்தந்த நேரத்தில் அதனை அருந்தாவிடில் எதனையே பங்கரமாக இழந்து விட்டதாக உணர்கிறோம், தங்க, வைர நகை கிடைக்கவில்லை எனில் பணக்காரப் பெண்மணிகள் பைத்தியம் ஆகிவிடுகிறார்கள். ஆனால் கடவுளுக்காக அதே கவலையை அவர்கள் யாரும் காட்டுவதில்லை.
பிரபஞ்சத்தில் உள்ள ஒரே உண்மைப் பொருள் அதுதான் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. இதற்கு உதாரணமாக ஒரு மூதுரை உண்டு, " நான் வேடனானால் காண்டாமிருகத்தை வேட்டையாடுவேன், நாள் கொள்ளைக்காரன் ஆகிவிட்டால் அரசனின் பொக்கிசத்தையே கொள்ளையிடுவேன், " " பிச்சைக்காரனை கொள்ளை யடிப்பதிலோ, எறும்பை வேட்டையாடுவதிலோ, என்ன பயன்? ஆகவே அன்பு செலுத்த வேண்டுமானால் கடவுளிடம் அன்பு செலுத்துங்கள், எதிலும் உச்சம் பெற உணர்வு உள்ளுங்கள், உயர்வு தானே வரும், எறும்பையும் பிச்சக்காரனிடத்திலும் என்ன கிடைக்கும் எனவே உள்ளவதெல்லாம் உயர்உள்ளல் என்ற முதுமொழி உணர்த்தும்.
குறிக்கோளை ( கடவுளை )அடையும் வழி, (Our Aim)
ஒவ்வொரு அறிவியலையும் கற்பதற்கு முறைகள் இருப்பன போன்று ஒவ்வொரு சமயமும் அதற்கான வழிவகைகளை வகுத்துள்ளன.
சமயத்தின் குறிக்கோளை அடைவதற்கான மார்க்கங்களை நாம் யோகம் என்கிறோம், நாம் கூறுகின்ற பலவகை யோகங்கள் மனிதர்களின் இயல்புக்கும், குணத்திற்கும் ஏற்றபடி வெவ்வேறாக உள்ளன. இந்த மார்க்கங்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.
1, கர்ம யோகம்
செயல்களினாலும், கடமைகளை செய்வதாலும், ஒருவர் தனது தெய்வத் தன்மையை உணரும் மார்க்கம் இது
2. பக்தி யோகம்
வழிபாட்டையும் பக்தியையும், ஒரு இஷ்ட தெய்வத்தினிடத்தில் அல்லது சித்தர்களிடம் செலுத்தித் தெய்வத் தெய்வத்தன்மை பெறுதல்.
3. இராஜயோகம்
மனத்தை அடக்கி ஆள்வதால் தெய்வத்தன்மை அடைதல்
4. ஞான யோகம்
அறிவினால் (அல்லது சித்தத்தினால்) தெய்வத்தன்மையை உணர்ந்து முக்தி பெறுதல்.
இவை ஒரே குறிக்கோளான கடவுளை அடைய செய்யும் வெவ்வோறு பாதைகள்.
திருச்சிற்றம்பலம் - ஒம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
உலகம் தோன்றவும், உயிர்கள் தோன்றவும், மூலப் பொருளான தொண்ணூற்றாறு தத்துவங்கள் தேவைப்படுகின்றன. இந்த தத்துவங்கள் நீங்கினால் யாவும்அழிந்து விடும். மறுபடியும் உலகம் தோன்ற இந்த தத்துவங்கள் தோன்ற வேண்டும். தத்துவங்களுக்கெல்லாம் காரணமானவர் ஐந்தெழுத்தாகிய இறைவன். இறைவனின் ஒரே மூலமந்திரம் ஐந்தெழுத்தான " நமசிவாய " என்ற மந்திரப் பொருள்.
ந - பிரம்மன் படைக்கும் தொழிலை செய்பவர்
ம - திருமால் காக்கும் தொழிலை செய்பவர்
சி - உருத்திரன் அழிக்கும் தொழிலை செய்பவர்
வா - மகேஸ்வரன் மறைத்தல் தொழிலை செய்பவர்
ய - சதாசிவம் அருள் புரியும தொழிலை செய்பவர்.
நமசிவாய என்று உச்சரித்துத் தியானம் செய்தாலே இறைவனைக் காண முடியும் என்று உணர முடிகிறது அல்லவா?
உலக இச்சையையும், உடல் இச்சையையும் கடந்தவன் ஞானி. உடலின் பஞ்ச பூதங்களை அடக்கித தன்னுள் இறைவனைக் கண்டு இறைவனைக் காணும் வழியினை மக்களுக்கு உபதேசிப்பவர்கள் சித்தர்கள். பலனைக் கருதி தெய்வத்தை நினைப்பவன் ஞானத்தை அடையமுடியாது. ஞானத்தை அடைய விரும்பி, தெய்வத்தை நினைப்பவனுக்கு சித்தி கிடைக்கிறது.
மண், பெண், பொன் என்ற மூவாசைகளில் மனதை பறி கொடுத்தால் இறைவன் அருள் பெறுவது எப்போது? பற்றற்றவரகளை பற்றிக் கொள்வான் இறைவன் என்பது சித்தரின் வாக்கு, சித்தர்களின் சிந்தனை எப்போதும் சிவ ரூபத்திலேயே நிலைத்திருக்கும்.
ஆசையின் ஆரம்பமே துன்பத்துக்கு ஆரம்பம். ஆசையை மனதில் இருந்து துரத்திவிட்டால் அதுவே இன்பத்தின் ஆரம்பமாக அமைந்து விடும். மனிதனுக்கு துன்பம் நேர்ந்தால் விதி என்கிறோம். நாம் செய்த பழியை விதியின் மேல் போடுகிறோம், ஆசைக்கு காரணமான துன்பத்ததைத் தவிர்க்க நம்மால் முடியும், அதுதான் மதி. ஆசையை மதியுடன் சேர்ந்து விரட்டினால் விதியால் என்ன செய்யமுமுடியும். சிந்தித்துப் பார்த்தால் தெளிவு பெறும்.
சித்தர்கள் சிரஞ்சிவித்தன்மை பெற்றவர்கள் என்றும், இன்றும் அரூபமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் நம்பப் படுகிறது. மலைகளிலும் காடுகளிலும், மனிதர்கள் ஆரவாரமான கூச்சல் சத்தம் இல்லாத இடங்களில் சித்தர்கள் இருக்கின்றனர் என்று பார்த்தவர்கள் கூறுகின்றனர். திருவண்ணாமலை, மலைப்பகுதிகளிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் மகாலிங்க மலை என்ற சதுரகிரி மலைகளிலும் சித்தர்கள் நடமாட்டத்தை பார்த்ததாகவும் அவர்கள்மனிதர்களைக் கண்டு கொள்ளாமல் நடந்து சென்றார்கள் என்று ஆதிவாசிகள் கூறுகின்றனர்.
மலைகளில் மாடு மேய்க்கச் சென்ற சிறுவர்கள், யாரோ இலைகளின் மேல் நடந்து செல்லும் சத்தத்தைக் கேட்டதாகக் கூறி இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அரூபமாக சித்தர்கள் நடந்து செல்லும் காலடி ஓசை என்று பெரியவர்கள் கூறுகிறார்கள், சித்தர்கள் எப்போதும் ஒரே இடத்ததில் இருப்பதில்லை, தங்குவதும்இல்லை. அவர்கள் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒரு மனிதன் வாழ்நாளில் சித்தரை சந்தித்து ஆசி பெற்று விட்டால், தெய் கடாட்சகம் கிடைத்ததைப் போன்று பலன்களை பெறுவான், சித்தர்கள் உடற்கூற்றை பற்றி ஆராய்ந்து வரும் நோய்களையும், அதற்குரிய சிகிச்சைகளையும் நூல் வடிவில் தந்து இருக்கிறார்கள். சித்தர்கள் எழுதிய மருத்துவக் குறிப்பு பற்றியும், வசிக, மாந்திரக, தந்திர யோகங்களைப்பற்றியும் கண்ட நூல்கள் சில கிடைத்தனவற்றை கீழ்கண்ட "இ "வலைதலத்திலிருந்து தரவிரக்கம் செய்து கற்றுப்பாருங்கள், சித்தர்களின் அரிய பெரிய கருத்துக்களை காணலாம்,
www.siththar.com/home/upload/kokoham.pdf
www.siththar.com/home/upload/thirumantheramalai.pdf
www.siththar.com/home/upload/mantheram.pdf
http://noolaham.net/project/46/4598/4598.pdf
http://www.subaonline.net/thfebooks/THFagathiyarkarpachasthiram.pdf
https://ia700202.us.archive.org/22/items/Manikkavasagar/Manikkavasagar.pdf
https://ia700602.us.archive.org/22/items/ManthirangalEndralEnna/ManthirangalEndralEnna.pdf
http://www.siththar.com/home/upload/agathiyarAntharankaTheedchaavethi.pdf
http://www.siththar.com/home/upload/siththarmaiporul.pdf
http://www.siththar.com/home/upload/akathiyar12000.pdf
http://www.siththar.com/home/upload/amuthakalasam.pdf
http://www.siththar.com/home/upload/muppukuru.pdf
http://www.siththar.com/home/upload/agasthiyarPanneruKaandam200.pdf
http://www.siththar.com/home/upload/agathiyarGhanakaviyam1000.pdf
http://www.siththar.com/home/upload/agasthiyarPanneruKaandam200.pdf
http://www.tamilwin.info/home/upload/nayanavethe.pdf
http://www.tamilwin.info/home/upload/amuthakalaigynam.pdf
http://www.tamilwin.info/home/upload/akathiyarPooranaSuthiram.pdf
http://www.tamilwin.info/home/upload/bogharSarakuVaippu.pdf
http://www.tamilwin.info/home/upload/siththarThathuvam.pdf - with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/akathiyar300.pdf - with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/ganasaranool.pdf - with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/nantheesar300.pdf - with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/bogharJannashagara.pdf
மனிதனுக்கு ஏற்படும் சாதாரண நோய் முதல் அசாதாரண நோய்கள் வரை ஆராய்ந்தறிந்து அவர்களுக்கு வைத்திய முறைகளை கூறயுள்ளார்கள், இதில் மிகவும் பிரபலமானது அகத்தியர் வைத்திய சித்தர்வைத்திய முறைகள்.
மனிதன் பிறக்கு போதே இறக்கும் நாளும் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. எத்தனை யோ, விதமான மனிதர்களின் தலையெழுத்தை பனை ஒலைகளில் அகத்தியர், காகபுஜண்டர், போகர், வசிஸ்டர் ப்ருகு போன்ற சித்தர்கள் எழுதி வைத்து இருக்கின்றாரகள். சில ஒலைச்சுவடிகள் கிடைத்து இருக்கின்றன. அவைகளில் நமது தலையெழுத்தை துல்லியமான முறையில் அவர்ரவர்களுக்கு உண்டான நிகழ்வுகள் கூறப்பட்டு இன்றும் அகத்தியர் ஜீவநாடி சோதிடம் என்று அறிந்து வருகிறோம்,
பிறக்கும் போதே, சித்தர்களாக எவரும் பிறப்பதில்லை. வாழும் முறையில் இறைவனை அறிந்தே தீருவது என்ற வைராக்கியத்துடன் உடலையும், மனதையும், வசப்படுத்திக் கொண்டவர்களே சித்தர்கள்.
எத்தனையோ, மனச்சஞ்சலங்களுக்கு இடையே வாழும் நாம் சித்தரகளாவது கடினம், ஆனால் சித்தர்கள் செய்து காட்டிய யோகப்பயிற்சிகளையும, தியானப் பயிற்சிகளையும் செய்து, உடலையும் ,மனதையும், சுத்தமாக்கி நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும், சித்தி தரும் சித்தர்களின் வாழ்க்கை நமக்கு பாடமாக அமையும் என்பதில் சந்தேமில்லை. எனவே சித்தர்களின் சிந்தனை எப்பொழும் சிவரூபமே என்பதை உணர்வோம். சித்தர்களின் வாக்கு தெய்வ வாக்கு !!
சித்தர்களின் சிந்தனையை ஏற்போம்,! சிவ ரூபத்தை தரிசிப்போம் !!
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
சிவ ரூபமே சித்தர்களின் சிந்தனை
உலகம் தோன்றவும், உயிர்கள் தோன்றவும், மூலப் பொருளான தொண்ணூற்றாறு தத்துவங்கள் தேவைப்படுகின்றன. இந்த தத்துவங்கள் நீங்கினால் யாவும்அழிந்து விடும். மறுபடியும் உலகம் தோன்ற இந்த தத்துவங்கள் தோன்ற வேண்டும். தத்துவங்களுக்கெல்லாம் காரணமானவர் ஐந்தெழுத்தாகிய இறைவன். இறைவனின் ஒரே மூலமந்திரம் ஐந்தெழுத்தான " நமசிவாய " என்ற மந்திரப் பொருள்.
ந - பிரம்மன் படைக்கும் தொழிலை செய்பவர்
ம - திருமால் காக்கும் தொழிலை செய்பவர்
சி - உருத்திரன் அழிக்கும் தொழிலை செய்பவர்
வா - மகேஸ்வரன் மறைத்தல் தொழிலை செய்பவர்
ய - சதாசிவம் அருள் புரியும தொழிலை செய்பவர்.
நமசிவாய என்று உச்சரித்துத் தியானம் செய்தாலே இறைவனைக் காண முடியும் என்று உணர முடிகிறது அல்லவா?
உலக இச்சையையும், உடல் இச்சையையும் கடந்தவன் ஞானி. உடலின் பஞ்ச பூதங்களை அடக்கித தன்னுள் இறைவனைக் கண்டு இறைவனைக் காணும் வழியினை மக்களுக்கு உபதேசிப்பவர்கள் சித்தர்கள். பலனைக் கருதி தெய்வத்தை நினைப்பவன் ஞானத்தை அடையமுடியாது. ஞானத்தை அடைய விரும்பி, தெய்வத்தை நினைப்பவனுக்கு சித்தி கிடைக்கிறது.
மண், பெண், பொன் என்ற மூவாசைகளில் மனதை பறி கொடுத்தால் இறைவன் அருள் பெறுவது எப்போது? பற்றற்றவரகளை பற்றிக் கொள்வான் இறைவன் என்பது சித்தரின் வாக்கு, சித்தர்களின் சிந்தனை எப்போதும் சிவ ரூபத்திலேயே நிலைத்திருக்கும்.
ஆசையின் ஆரம்பமே துன்பத்துக்கு ஆரம்பம். ஆசையை மனதில் இருந்து துரத்திவிட்டால் அதுவே இன்பத்தின் ஆரம்பமாக அமைந்து விடும். மனிதனுக்கு துன்பம் நேர்ந்தால் விதி என்கிறோம். நாம் செய்த பழியை விதியின் மேல் போடுகிறோம், ஆசைக்கு காரணமான துன்பத்ததைத் தவிர்க்க நம்மால் முடியும், அதுதான் மதி. ஆசையை மதியுடன் சேர்ந்து விரட்டினால் விதியால் என்ன செய்யமுமுடியும். சிந்தித்துப் பார்த்தால் தெளிவு பெறும்.
சித்தர்கள் சிரஞ்சிவித்தன்மை பெற்றவர்கள் என்றும், இன்றும் அரூபமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் நம்பப் படுகிறது. மலைகளிலும் காடுகளிலும், மனிதர்கள் ஆரவாரமான கூச்சல் சத்தம் இல்லாத இடங்களில் சித்தர்கள் இருக்கின்றனர் என்று பார்த்தவர்கள் கூறுகின்றனர். திருவண்ணாமலை, மலைப்பகுதிகளிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் மகாலிங்க மலை என்ற சதுரகிரி மலைகளிலும் சித்தர்கள் நடமாட்டத்தை பார்த்ததாகவும் அவர்கள்மனிதர்களைக் கண்டு கொள்ளாமல் நடந்து சென்றார்கள் என்று ஆதிவாசிகள் கூறுகின்றனர்.
மலைகளில் மாடு மேய்க்கச் சென்ற சிறுவர்கள், யாரோ இலைகளின் மேல் நடந்து செல்லும் சத்தத்தைக் கேட்டதாகக் கூறி இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அரூபமாக சித்தர்கள் நடந்து செல்லும் காலடி ஓசை என்று பெரியவர்கள் கூறுகிறார்கள், சித்தர்கள் எப்போதும் ஒரே இடத்ததில் இருப்பதில்லை, தங்குவதும்இல்லை. அவர்கள் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒரு மனிதன் வாழ்நாளில் சித்தரை சந்தித்து ஆசி பெற்று விட்டால், தெய் கடாட்சகம் கிடைத்ததைப் போன்று பலன்களை பெறுவான், சித்தர்கள் உடற்கூற்றை பற்றி ஆராய்ந்து வரும் நோய்களையும், அதற்குரிய சிகிச்சைகளையும் நூல் வடிவில் தந்து இருக்கிறார்கள். சித்தர்கள் எழுதிய மருத்துவக் குறிப்பு பற்றியும், வசிக, மாந்திரக, தந்திர யோகங்களைப்பற்றியும் கண்ட நூல்கள் சில கிடைத்தனவற்றை கீழ்கண்ட "இ "வலைதலத்திலிருந்து தரவிரக்கம் செய்து கற்றுப்பாருங்கள், சித்தர்களின் அரிய பெரிய கருத்துக்களை காணலாம்,
www.siththar.com/home/upload/kokoham.pdf
www.siththar.com/home/upload/thirumantheramalai.pdf
www.siththar.com/home/upload/mantheram.pdf
http://noolaham.net/project/46/4598/4598.pdf
http://www.subaonline.net/thfebooks/THFagathiyarkarpachasthiram.pdf
https://ia700202.us.archive.org/22/items/Manikkavasagar/Manikkavasagar.pdf
https://ia700602.us.archive.org/22/items/ManthirangalEndralEnna/ManthirangalEndralEnna.pdf
http://www.siththar.com/home/upload/agathiyarAntharankaTheedchaavethi.pdf
http://www.siththar.com/home/upload/siththarmaiporul.pdf
http://www.siththar.com/home/upload/akathiyar12000.pdf
http://www.siththar.com/home/upload/amuthakalasam.pdf
http://www.siththar.com/home/upload/muppukuru.pdf
http://www.siththar.com/home/upload/agasthiyarPanneruKaandam200.pdf
http://www.siththar.com/home/upload/agathiyarGhanakaviyam1000.pdf
http://www.siththar.com/home/upload/agasthiyarPanneruKaandam200.pdf
http://www.tamilwin.info/home/upload/nayanavethe.pdf
http://www.tamilwin.info/home/upload/amuthakalaigynam.pdf
http://www.tamilwin.info/home/upload/akathiyarPooranaSuthiram.pdf
http://www.tamilwin.info/home/upload/bogharSarakuVaippu.pdf
http://www.tamilwin.info/home/upload/siththarThathuvam.pdf - with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/akathiyar300.pdf - with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/ganasaranool.pdf - with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/nantheesar300.pdf - with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/bogharJannashagara.pdf
மனிதனுக்கு ஏற்படும் சாதாரண நோய் முதல் அசாதாரண நோய்கள் வரை ஆராய்ந்தறிந்து அவர்களுக்கு வைத்திய முறைகளை கூறயுள்ளார்கள், இதில் மிகவும் பிரபலமானது அகத்தியர் வைத்திய சித்தர்வைத்திய முறைகள்.
மனிதன் பிறக்கு போதே இறக்கும் நாளும் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. எத்தனை யோ, விதமான மனிதர்களின் தலையெழுத்தை பனை ஒலைகளில் அகத்தியர், காகபுஜண்டர், போகர், வசிஸ்டர் ப்ருகு போன்ற சித்தர்கள் எழுதி வைத்து இருக்கின்றாரகள். சில ஒலைச்சுவடிகள் கிடைத்து இருக்கின்றன. அவைகளில் நமது தலையெழுத்தை துல்லியமான முறையில் அவர்ரவர்களுக்கு உண்டான நிகழ்வுகள் கூறப்பட்டு இன்றும் அகத்தியர் ஜீவநாடி சோதிடம் என்று அறிந்து வருகிறோம்,
பிறக்கும் போதே, சித்தர்களாக எவரும் பிறப்பதில்லை. வாழும் முறையில் இறைவனை அறிந்தே தீருவது என்ற வைராக்கியத்துடன் உடலையும், மனதையும், வசப்படுத்திக் கொண்டவர்களே சித்தர்கள்.
எத்தனையோ, மனச்சஞ்சலங்களுக்கு இடையே வாழும் நாம் சித்தரகளாவது கடினம், ஆனால் சித்தர்கள் செய்து காட்டிய யோகப்பயிற்சிகளையும, தியானப் பயிற்சிகளையும் செய்து, உடலையும் ,மனதையும், சுத்தமாக்கி நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும், சித்தி தரும் சித்தர்களின் வாழ்க்கை நமக்கு பாடமாக அமையும் என்பதில் சந்தேமில்லை. எனவே சித்தர்களின் சிந்தனை எப்பொழும் சிவரூபமே என்பதை உணர்வோம். சித்தர்களின் வாக்கு தெய்வ வாக்கு !!
சித்தர்களின் சிந்தனையை ஏற்போம்,! சிவ ரூபத்தை தரிசிப்போம் !!
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
நமக்கு கடவுள் வேண்டுமா?
ஒவ்வொரு நாளும் நாம் இந்த கேள்வியை கேட்போம்.. " நமக்கு கடவுள் வேணடுமா?" நாம் சமயத்தைப் பற்றி பேசும் பொழுது நாம் உயர்ந்த நிலையை எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு போதிக்கும் போது , நாம் இந்த கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும், பல தடவைகளில் எனக்கு கடவுள் வேண்டாம், என்று காண்கிறோம், எனக்கு உணவு வேண்டும், மிமிகப் பசியாய் இருக்கும் போது ஒரு சிறு ரொட்டி துண்டாவது இல்லையெனில் பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிடுகிறோம், சற்று தொடர்ச்சியாக டீ, காபி குடித்தவர்கள், அந்தந்த நேரத்தில் அதனை அருந்தாவிடில் எதனையே பங்கரமாக இழந்து விட்டதாக உணர்கிறோம், தங்க, வைர நகை கிடைக்கவில்லை எனில் பணக்காரப் பெண்மணிகள் பைத்தியம் ஆகிவிடுகிறார்கள். ஆனால் கடவுளுக்காக அதே கவலையை அவர்கள் யாரும் காட்டுவதில்லை.
பிரபஞ்சத்தில் உள்ள ஒரே உண்மைப் பொருள் அதுதான் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. இதற்கு உதாரணமாக ஒரு மூதுரை உண்டு, " நான் வேடனானால் காண்டாமிருகத்தை வேட்டையாடுவேன், நாள் கொள்ளைக்காரன் ஆகிவிட்டால் அரசனின் பொக்கிசத்தையே கொள்ளையிடுவேன், " " பிச்சைக்காரனை கொள்ளை யடிப்பதிலோ, எறும்பை வேட்டையாடுவதிலோ, என்ன பயன்? ஆகவே அன்பு செலுத்த வேண்டுமானால் கடவுளிடம் அன்பு செலுத்துங்கள், எதிலும் உச்சம் பெற உணர்வு உள்ளுங்கள், உயர்வு தானே வரும், எறும்பையும் பிச்சக்காரனிடத்திலும் என்ன கிடைக்கும் எனவே உள்ளவதெல்லாம் உயர்உள்ளல் என்ற முதுமொழி உணர்த்தும்.
குறிக்கோளை ( கடவுளை )அடையும் வழி, (Our Aim)
ஒவ்வொரு அறிவியலையும் கற்பதற்கு முறைகள் இருப்பன போன்று ஒவ்வொரு சமயமும் அதற்கான வழிவகைகளை வகுத்துள்ளன.
சமயத்தின் குறிக்கோளை அடைவதற்கான மார்க்கங்களை நாம் யோகம் என்கிறோம், நாம் கூறுகின்ற பலவகை யோகங்கள் மனிதர்களின் இயல்புக்கும், குணத்திற்கும் ஏற்றபடி வெவ்வேறாக உள்ளன. இந்த மார்க்கங்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.
1, கர்ம யோகம்
செயல்களினாலும், கடமைகளை செய்வதாலும், ஒருவர் தனது தெய்வத் தன்மையை உணரும் மார்க்கம் இது
2. பக்தி யோகம்
வழிபாட்டையும் பக்தியையும், ஒரு இஷ்ட தெய்வத்தினிடத்தில் அல்லது சித்தர்களிடம் செலுத்தித் தெய்வத் தெய்வத்தன்மை பெறுதல்.
3. இராஜயோகம்
மனத்தை அடக்கி ஆள்வதால் தெய்வத்தன்மை அடைதல்
4. ஞான யோகம்
அறிவினால் (அல்லது சித்தத்தினால்) தெய்வத்தன்மையை உணர்ந்து முக்தி பெறுதல்.
இவை ஒரே குறிக்கோளான கடவுளை அடைய செய்யும் வெவ்வோறு பாதைகள்.
திருச்சிற்றம்பலம் - ஒம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
காய கல்பம் சாப்பிட்ட சித்தர்கள்
வேதங்களால் அறிய்ப்பட வேண்டியவன் நானே வேதத்தை செய்தவனும் வேதத்தை உணர்ந்தவனும் நானே , எனக்கு புண்ணியமும் இல்லை, பாவமும் இ்ல்லை, பிறவியும் இ்ல்லை, என்று வேத்ங்களே இறைவன் மூலம் அசரீரியாக கூறியதாக அறிகிறோம். ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்கள் இறைவனை அடையும் மார்க்கமாக கருதப்படுகின்றன. இந்த வேதங்களை அறிந்து கொண்டவர்கள் சித்தர்கள்.
உலகம் தோன்றுவதற்கு முன் அரூபமாக ஜோதி வடிவத்தில் இறைவன் இருந்தான், உலகை படைக்க அந்த ஒளி வட்டத்துக்குள் பிரகாசித்த சக்தி என்ற ஒளிச்சுடரே சிவலிஙக ரூபம், அந்த சிவலிங்க ஜோதியே மனித உடலில் உயிராக இருந்து இயங்குகிறது என்ற உண்மையை கண்டறிந்து உலகுக்கு அறிவித்த சித்தர்கள், இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டில்தான் வாழ்ந்தார்கள்.
வேதங்களை வேதாந்தம் என்று கூறுகிறோம், வேதாந்தத்தை ஆதாரமாக கொண்டு தவம் செய்து இறைவனைத் தரிசித்து, தமது சரீரத்தை கட்டுப்படுத்தி பிற்ப்பை அறுத்து பேரின்ப நிலை அடைந்த சித்தர்கள் கூறிய உபதேசமே சித்தாந்தம்.
காயகல்ங்களைச் சாப்பிட்டு, மூலிகைத் தைலங்களை உடல் முழுவதும் பூசிக் கொண்டால் பிறப்பும், இறப்பும் இல்லாத நிலை
ஏற்படும். உடலின் நிறம் நீலமாக மாறிவிடும், சுவாசம், முன்னும் பின்னும் ஓடாமல் நிலைத்து விடும், நரை, திரை, மூப்பு பிணியனைத்தும் மறைந்து விடும். துர்க்குணம் எல்லாம் நற்குணங்களாகும், இந்த மனித உடலோடு பல யுகங்கள் மரணமில்லாது வாழ முடியும், சுழுமுனை சுவாசத்தை நம்பியவர்கள் சூரிய்க் கலையை விடாதிருந்தோர், பிரம்ம நிலையை கண்டோர் ஒருக்காலும் மரணமடைய மாட்டார்கள்.
என்று கூறினார் சித்தர் அகத்திய மகான்.
காயகல்பம் என்றால் என்ன? காயம் என்றால் உடல், கல்பம் என்றால் ஆயுளை நீடிக்க செய்யும் மூலிகை மருந்து. இதைக் கண்டுபிடித்துச் சாப்பிட்ட சித்தர்கள் ஆயிரம் ஆ்ண்டுகள் வாழ்ந்தார்கள் என்று சரித்திரம் கூறுகிறது.
மூலிகையின் மகிமை பற்றி இராமாயண காலத்திலிருந்தே நாம் அறியப்படுகிறோம், இராவணன் மகன் இந்திர சித் பிரம்மாஸ்திரத்தால் லட்சுமணன் மூர்ச்சித்த போது அனுமான் சஞ்சிவீ மலையிலுள்ள மூலிகைக்காக சஞ்சிவீ மலையையே கொண்டு வந்து லட்சுமணனும் வாணரர்களும் உயிர் பிழைத்த வரலாறு நாம்எல்லோரும் அறிந்ததே. சித்தர்கள் அத்தைய மூலிகை யைக் கண்டு அறிந்து சூரணம் செய்து வைத்திருந்தார்கள், இறந்தவர்கள் மூக்கில் அந்த சூரணத்தை போட்டு ஊதினால் எழுந்து விடுவார்கள், அந்த அதிசய மூலிகைகளை கண்டறிந்து உடல் உபாதைகளைப் போக்கினார்கள் சித்தர்கள்.
ஆஞ்சநேயர் கடல் வழியாக இலங்கைக்கு பறந்தார் என்று படித்திருக்கிறோம். அதே போல் சித்தர்கள் வானில் பறந்திருக்கிறார்கள், மூலிகைகளால் செய்யப்பட்ட குளிகையை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரிக்கு பறந்து ெசன்று செம்பை தங்கமாக்கும் ரசக் குளிகைகளைக் கொண்டு வந்தார் சித்தர் போகர், இதைப் ேபாலவே பல சித்தர்கள் வானில் பறந்திருக்கின்றனர்.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
வேதங்களால் அறிய்ப்பட வேண்டியவன் நானே வேதத்தை செய்தவனும் வேதத்தை உணர்ந்தவனும் நானே , எனக்கு புண்ணியமும் இல்லை, பாவமும் இ்ல்லை, பிறவியும் இ்ல்லை, என்று வேத்ங்களே இறைவன் மூலம் அசரீரியாக கூறியதாக அறிகிறோம். ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்கள் இறைவனை அடையும் மார்க்கமாக கருதப்படுகின்றன. இந்த வேதங்களை அறிந்து கொண்டவர்கள் சித்தர்கள்.
உலகம் தோன்றுவதற்கு முன் அரூபமாக ஜோதி வடிவத்தில் இறைவன் இருந்தான், உலகை படைக்க அந்த ஒளி வட்டத்துக்குள் பிரகாசித்த சக்தி என்ற ஒளிச்சுடரே சிவலிஙக ரூபம், அந்த சிவலிங்க ஜோதியே மனித உடலில் உயிராக இருந்து இயங்குகிறது என்ற உண்மையை கண்டறிந்து உலகுக்கு அறிவித்த சித்தர்கள், இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டில்தான் வாழ்ந்தார்கள்.
வேதங்களை வேதாந்தம் என்று கூறுகிறோம், வேதாந்தத்தை ஆதாரமாக கொண்டு தவம் செய்து இறைவனைத் தரிசித்து, தமது சரீரத்தை கட்டுப்படுத்தி பிற்ப்பை அறுத்து பேரின்ப நிலை அடைந்த சித்தர்கள் கூறிய உபதேசமே சித்தாந்தம்.
காயகல்ங்களைச் சாப்பிட்டு, மூலிகைத் தைலங்களை உடல் முழுவதும் பூசிக் கொண்டால் பிறப்பும், இறப்பும் இல்லாத நிலை
ஏற்படும். உடலின் நிறம் நீலமாக மாறிவிடும், சுவாசம், முன்னும் பின்னும் ஓடாமல் நிலைத்து விடும், நரை, திரை, மூப்பு பிணியனைத்தும் மறைந்து விடும். துர்க்குணம் எல்லாம் நற்குணங்களாகும், இந்த மனித உடலோடு பல யுகங்கள் மரணமில்லாது வாழ முடியும், சுழுமுனை சுவாசத்தை நம்பியவர்கள் சூரிய்க் கலையை விடாதிருந்தோர், பிரம்ம நிலையை கண்டோர் ஒருக்காலும் மரணமடைய மாட்டார்கள்.
என்று கூறினார் சித்தர் அகத்திய மகான்.
காயகல்பம் என்றால் என்ன? காயம் என்றால் உடல், கல்பம் என்றால் ஆயுளை நீடிக்க செய்யும் மூலிகை மருந்து. இதைக் கண்டுபிடித்துச் சாப்பிட்ட சித்தர்கள் ஆயிரம் ஆ்ண்டுகள் வாழ்ந்தார்கள் என்று சரித்திரம் கூறுகிறது.
மூலிகையின் மகிமை பற்றி இராமாயண காலத்திலிருந்தே நாம் அறியப்படுகிறோம், இராவணன் மகன் இந்திர சித் பிரம்மாஸ்திரத்தால் லட்சுமணன் மூர்ச்சித்த போது அனுமான் சஞ்சிவீ மலையிலுள்ள மூலிகைக்காக சஞ்சிவீ மலையையே கொண்டு வந்து லட்சுமணனும் வாணரர்களும் உயிர் பிழைத்த வரலாறு நாம்எல்லோரும் அறிந்ததே. சித்தர்கள் அத்தைய மூலிகை யைக் கண்டு அறிந்து சூரணம் செய்து வைத்திருந்தார்கள், இறந்தவர்கள் மூக்கில் அந்த சூரணத்தை போட்டு ஊதினால் எழுந்து விடுவார்கள், அந்த அதிசய மூலிகைகளை கண்டறிந்து உடல் உபாதைகளைப் போக்கினார்கள் சித்தர்கள்.
ஆஞ்சநேயர் கடல் வழியாக இலங்கைக்கு பறந்தார் என்று படித்திருக்கிறோம். அதே போல் சித்தர்கள் வானில் பறந்திருக்கிறார்கள், மூலிகைகளால் செய்யப்பட்ட குளிகையை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரிக்கு பறந்து ெசன்று செம்பை தங்கமாக்கும் ரசக் குளிகைகளைக் கொண்டு வந்தார் சித்தர் போகர், இதைப் ேபாலவே பல சித்தர்கள் வானில் பறந்திருக்கின்றனர்.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
சாம்பலில் இருந்து வந்த சித்தர் கோரக்கர்
மனித உடல் கூறுகளைப் பற்றி சித்தர்கள் பாடல்களாகப் பாடி வைத்திருக்கிறார்கள்
ஐம்பூலங்களால் ஆன உடம்பில் எத்தனை ஒட்டைகள், ஒன்பது வாசல்கள் என நவத்துவாரங்கள் என பாடியுள்ளனர், கண்கள் இரண்டு, செவிகள் இரண்டு, நாசி துவாரங்கள் இரண்டு, வாய், சிறுநீர் துவாரம், மலத்துவாரம்,என ஒன்பது வாசல்கள் என்றனர், உடலில் எழுபத்திரண்டாயிரம் நரம்புகள், உடலைத் தாங்க முதுகெழும்புத்தண்டு, எட்டு நீண்ட எலும்புகளுடன்இணைக்கப்பட்ட எழுபது எலும்புகள் என கண்டறிந்துள்ளனர்,
விஞ்ஞான காலத்திற்க முன்பே உடல்கூறுகளின் ரகசியங்களையும், ஏதாவது பாகம் பழுது பட்டால் செய்ய வேண்டிய சிகிச்சைகளையும் அறிந்தவர்கள் சித்தர்கள், இதனாலேயே அவ் வைத்தியத்திற்கு சித்தர் வைத்தியம் (சித்த வைத்தியம்) என வழங்கப்படுகிறது.
வட இந்தியாவைச் சேர்ந்த கோரக்கர் என்ற சித்தரைப்பற்றி பார்ப்போம்.
சிவபெருமானும் பார்வதிதேவியும் பூவுலகில் சஞ்சரித்து வரும்போது கடற்கரையில் அமர்ந்து சிவபெருமான் பார்வதி தேவிக்கு தாரக மந்திரம் உபதேசித்தார், பார்வதி தேவி சற்று நேரம் தூக்கத்தில் ஆழ்ந்தார், அதை அறிந்த சிவபெருமான் மந்திரத்தை உபதேசித்துக் கொண்டே இருந்தார், கடற்கறையில் ஒரத்தில் பெரிய மீன்களுக்கு பயந்து ஒரு மீன்குஞ்சு தண்ணீரில் இருந்தது. அப்போது அந்த மீன்குஞ்சு, சிவபெருமான் கூறிய தாரக மந்திரத்தைக் கேட்டது, மந்திரத்தை கேட்ட அந்த மீன்குஞ்சு மனிதனாக மாறியது.
இதைப்பார்த்த சிவபெருமான் மீனாகஇருந்து மனிதனாக மாறியவனுக்கு மச்சேந்திரன் என்று பெயர் சூட்டி, ஞானத்தை போதித்தார், ஞானம் பெற்ற மச்சேந்திரன் சித்தராகி ஞான வழியை மக்களுக்கு போதித்த கொண்டு இருந்தார்.
ஒரு கிராமத்தை சித்தர் மச்சேந்திரன் கடந்த போது, ஒரு வீட்டு வாசலில் கவலையோடு ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவர் சித்தரைப் பார்த்ததும் அவசரமாக உள்ளே சென்று உணவை எடுத்து வந்து அவருக்கு கொடுத்தார். அவளது முக வாட்டத்தைப் பார்த்த சித்தர் உனக்கு என்ன மனக்குறை என்று வினவினார்,
எனக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை என்றாள்.
சித்தர் சிறிது திருநீற்றை கொடுத்து இந்த திருநீற்றை பாலில் கலந்து குடி குழந்தை பாக்கியம் கிடைக்கும், என்று கூறி ஆசிர்வதித்தார், நற்செய்தி கேட்ட பெண் முகமலர்ந்து சித்தரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். வெளியூர் சென்ற கணவன் வீடு திரும்பியதும் நடந்த நிகழ்வுகளை கூறினாள். அவனோ உனக்கு திருநீறு கொடுத்தவன் உண்மையான துறவியா? என்பது உனக்கு எப்படி தெரியும்? அந்த திருநீற்றை அடுப்பில் போட்டுவிடு என்றான், சிவன் நமக்கு நல்வழீகாட்டுவான் என்றான். கணவன் சொல்லை மறுக்க முடியாத நிலையில் திருநீற்றை அடுப்பில் போட்டாள் மனைவி.
இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்தன, அந்தப் பெண்ணுக்கு குழந்தைப்பாக்கியம் அதன் பின் கிடைக்க வில்லை. சிவத்தலங்களை தரிசித்து விட்டு மீண்டும் அந்த கிராமத்தின் வழியாக வந்தார் சித்தர் மச்சேந்திரன்.தான் திருநீற்றை கொடுத்த பெண் வீட்டுக்கு வந்து கதவைத்தட்டினார், கதவைத்திறந்த பெண் சித்தரை அடையாளம் கண்டு கொண்டு வணங்கினாள்.
சித்தரோ வீட்டின் உள்ளே பார்த்தபடி உன் மகன் எங்கே அவனை அழை நான் பேச வேண்டும் என்றார். அவளோ, எனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றாள். நான் தந்த விபூதி என்னவாயிற்று என்றார், உடனே அப்பெண் " என்னை மன்னியுங்கள், தாங்கள் கொடுத்த திருநீற்றை அடுப்பில் போட்டு விட்டேன் என்றாள், எந்த அடுப்பில் என்றார் சித்தர், இந்த அடுப்பில் தான் போட்டேன் இந்த சாம்பலை இங்கே தான் கொட்டினேன் என்று அவ்விடத்தைக் காட்டினாள். உடனே அவ்விடத்தின் அருகில் நின்று சித்தர் " கோராக்கா வெளியே வா! என்றார், என்றைக்கு திருநீறு கொடுத்தாரோ, அன்று முதல் இன்று வரை எவ்வளவு காலங்கள் ஆனதோ அத்தனை காலங்களில் ஏற்பட்ட வளர்ச்சியோடு அந்த சாம்பலில் இருந்து குழந்தை வெளிப்பட்டது. அந்தக் குழந்தைக்கு "கோரக்கர்" என்று பெயர்சூட்டினார், அவனை தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் சித்தர்.
கோரக்கர் எட்டு வயது ஆகும்போதே சித்தரோடு சேர்ந்து அவர் கற்றுக் கொடுக்கும் மந்திரங்களை கற்று குருவுக்கு மிஞ்சின சிஷ்யராக திகழ்ந்தார். சித்தர் மச்சேந்திரனுக்கு மீனாக இருக்கும் போது சிவபெருமான் உபதேசித்த மந்திரங்களையும் உபதேசித்தார். நிறைகுடம் போல் அறிந்தவற்றை வெளிக்காட்டாமல் சிறந்த ஞானியாக வாழ்ந்தார் கோரக்கர் சித்தர். குருநாதருக்கு உணவு வேண்டி வீடுகளில் பிச்சை வேண்டி குருவிற்கு உணவு அளித்தார், ஒரு நாள் பிச்சை எடுக்கும் போது ஒரு வீட்டில் வடை கிடைத்தது. அதை தம் குருநாதருக்கு கொடுத்தார். மறுநாளும் குருநாதர் அதேவீட்டில் வடை வாங்கி வர அனுப்பினார், ஆனால் அந்த வீட்டில் வடை கேட்டார். ஆனால் அந்த பெண் இன்று வடை இல்லை. அரிச்சாதம் தான் உள்ளது. என்றார். அதற்கு கோரக்கர் என் குருநாதர் வடைதான் கேட்டார் என்றார், உடனே அந்த பெண்மணி நல்ல வேளை உன் குருநாதர் வடைதான் கேட்டார், உன் கண்ணை கேட்டால் என்ன செய்வாய் என்றாள். கேட்ட மாத்திரத்தில் சற்றும் தாமதிக்காமல் கண்ணை தோண்டி எடுத்து, அந்த பெண்ணிடம் கொடுத்தார்., குருபத்தி எப்படிப்பட்டது என்பதை விளக்குவதைப் போல் இருந்தது அச்செயல். ஆசிரம் திரும்பிய கோரக்காரரை குருநாத சித்தர் பார்த்து திடுக்கிட்டார். எங்கே உன் கண் என்றார், உடனே கோரக்கார் நடந்த நிகழ்ச்சியை விளக்கினார். கோரக்கரின் குருபக்தியை பார்த்து வியந்த சித்தர், தன் சக்தியால் இழந்த கண்ணை திரும்பக் கிடைக்கச் செய்தார்.
இருவரும் சிவத்தலங்களை தரிசித்து வரும்போது, கேரள தேசத்தில் அந்நாட்டு மன்னனின் மகளை மணந்தார் சித்தர்.
கோரக்கர் தன் குருநாதரிடம் நாம் இங்கே வந்து அதிக காலம் ஆகிவிட்டது. நமது ஆசிரமம் செல்ல வேண்டினார். உடனே குருநாத சித்தர் தன் மனைவியிடம் விடைபெற்று கோரக்கருடன் ஆசிரமம் புறப்பட்டார், அப்போது அவரின் மனைவி தன் கணவரிடம் கோரக்காரருக்கு தெரியாமல் ஒரு தங்க் கட்டியைகொடுத்தர்ர்,
மடியில் கனம் இருந்தால் மனதில் பயம் வருவது இயற்கைதானே. வழியெல்லாம் கோரக்காரரிடம் இங்கு கள்ளர் பயம் உண்டா என கேட்டுக் கொண்டே வந்தார், கோரக்காருக்கு பயத்தின் காரணம் தெரிந்து விட்டது. அன்று இரவு ஒரு இடத்தில் தூங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தூங்கும் போது அதனை கோரக்காரருக்கு தெரியாமல் வைத்து விட்டு சித்தர் தூங்கினார். அப்போது கோரக்கார் சித்தர் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டியை எடுத்து கண்காணாதஇடத்தில் புதைத்து விட்டார், தங்கக் கட்டி எடுத்த இடத்தில் அதே எடையுள்ள கல்லை வைத்துவிட்டார்,
காலையில் எழுந்த சித்தர் தங்கக் கட்டி இருந்த இடத்தில் கல் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார், உடனே தன் சீடன் கோரக்கரிடம் என்னுடைய தங்கக் கட்டியை நீ அபகரித்துக்கொண்டாய் , நீ என் சீடனாக இருக்கும் தகுதியை இழந்து விட்டாய் என்று கூறினார்,
கோரக்கரோ அமைதியாக அங்கே இருந்த மலைமீது ஏறி கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை தெளித்து தான் நின்றிருந்த மலையையே தங்கக் கட்டியாக மாற்றினார். குருவே தங்கள் தங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
சித்தராக வாழும் பேற்றினை இழந்து அறியாமையின் பிடியில் சிக்கிய எனக்கு நல்வழிகாட்டிவிட்டாய் என்று வாழ்த்தினார் மச்சேந்திரன். அதன் பின் குருவை பிரிந்து சென்ற கோரக்கர் தவத்தில ஈடுபட்டார். அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார்.
சித்தர் கோரக்கர் பேரூரில் ஜீவ சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. இவரை சனிக்கிழமை வழிபட்டால் சனி தோசங்கள் நீங்கும். வீண் பயம் அகன்று தைரியம் உண்டாகும்.
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
மனித உடல் கூறுகளைப் பற்றி சித்தர்கள் பாடல்களாகப் பாடி வைத்திருக்கிறார்கள்
ஐம்பூலங்களால் ஆன உடம்பில் எத்தனை ஒட்டைகள், ஒன்பது வாசல்கள் என நவத்துவாரங்கள் என பாடியுள்ளனர், கண்கள் இரண்டு, செவிகள் இரண்டு, நாசி துவாரங்கள் இரண்டு, வாய், சிறுநீர் துவாரம், மலத்துவாரம்,என ஒன்பது வாசல்கள் என்றனர், உடலில் எழுபத்திரண்டாயிரம் நரம்புகள், உடலைத் தாங்க முதுகெழும்புத்தண்டு, எட்டு நீண்ட எலும்புகளுடன்இணைக்கப்பட்ட எழுபது எலும்புகள் என கண்டறிந்துள்ளனர்,
விஞ்ஞான காலத்திற்க முன்பே உடல்கூறுகளின் ரகசியங்களையும், ஏதாவது பாகம் பழுது பட்டால் செய்ய வேண்டிய சிகிச்சைகளையும் அறிந்தவர்கள் சித்தர்கள், இதனாலேயே அவ் வைத்தியத்திற்கு சித்தர் வைத்தியம் (சித்த வைத்தியம்) என வழங்கப்படுகிறது.
வட இந்தியாவைச் சேர்ந்த கோரக்கர் என்ற சித்தரைப்பற்றி பார்ப்போம்.
சிவபெருமானும் பார்வதிதேவியும் பூவுலகில் சஞ்சரித்து வரும்போது கடற்கரையில் அமர்ந்து சிவபெருமான் பார்வதி தேவிக்கு தாரக மந்திரம் உபதேசித்தார், பார்வதி தேவி சற்று நேரம் தூக்கத்தில் ஆழ்ந்தார், அதை அறிந்த சிவபெருமான் மந்திரத்தை உபதேசித்துக் கொண்டே இருந்தார், கடற்கறையில் ஒரத்தில் பெரிய மீன்களுக்கு பயந்து ஒரு மீன்குஞ்சு தண்ணீரில் இருந்தது. அப்போது அந்த மீன்குஞ்சு, சிவபெருமான் கூறிய தாரக மந்திரத்தைக் கேட்டது, மந்திரத்தை கேட்ட அந்த மீன்குஞ்சு மனிதனாக மாறியது.
இதைப்பார்த்த சிவபெருமான் மீனாகஇருந்து மனிதனாக மாறியவனுக்கு மச்சேந்திரன் என்று பெயர் சூட்டி, ஞானத்தை போதித்தார், ஞானம் பெற்ற மச்சேந்திரன் சித்தராகி ஞான வழியை மக்களுக்கு போதித்த கொண்டு இருந்தார்.
ஒரு கிராமத்தை சித்தர் மச்சேந்திரன் கடந்த போது, ஒரு வீட்டு வாசலில் கவலையோடு ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவர் சித்தரைப் பார்த்ததும் அவசரமாக உள்ளே சென்று உணவை எடுத்து வந்து அவருக்கு கொடுத்தார். அவளது முக வாட்டத்தைப் பார்த்த சித்தர் உனக்கு என்ன மனக்குறை என்று வினவினார்,
எனக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை என்றாள்.
சித்தர் சிறிது திருநீற்றை கொடுத்து இந்த திருநீற்றை பாலில் கலந்து குடி குழந்தை பாக்கியம் கிடைக்கும், என்று கூறி ஆசிர்வதித்தார், நற்செய்தி கேட்ட பெண் முகமலர்ந்து சித்தரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். வெளியூர் சென்ற கணவன் வீடு திரும்பியதும் நடந்த நிகழ்வுகளை கூறினாள். அவனோ உனக்கு திருநீறு கொடுத்தவன் உண்மையான துறவியா? என்பது உனக்கு எப்படி தெரியும்? அந்த திருநீற்றை அடுப்பில் போட்டுவிடு என்றான், சிவன் நமக்கு நல்வழீகாட்டுவான் என்றான். கணவன் சொல்லை மறுக்க முடியாத நிலையில் திருநீற்றை அடுப்பில் போட்டாள் மனைவி.
இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்தன, அந்தப் பெண்ணுக்கு குழந்தைப்பாக்கியம் அதன் பின் கிடைக்க வில்லை. சிவத்தலங்களை தரிசித்து விட்டு மீண்டும் அந்த கிராமத்தின் வழியாக வந்தார் சித்தர் மச்சேந்திரன்.தான் திருநீற்றை கொடுத்த பெண் வீட்டுக்கு வந்து கதவைத்தட்டினார், கதவைத்திறந்த பெண் சித்தரை அடையாளம் கண்டு கொண்டு வணங்கினாள்.
சித்தரோ வீட்டின் உள்ளே பார்த்தபடி உன் மகன் எங்கே அவனை அழை நான் பேச வேண்டும் என்றார். அவளோ, எனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றாள். நான் தந்த விபூதி என்னவாயிற்று என்றார், உடனே அப்பெண் " என்னை மன்னியுங்கள், தாங்கள் கொடுத்த திருநீற்றை அடுப்பில் போட்டு விட்டேன் என்றாள், எந்த அடுப்பில் என்றார் சித்தர், இந்த அடுப்பில் தான் போட்டேன் இந்த சாம்பலை இங்கே தான் கொட்டினேன் என்று அவ்விடத்தைக் காட்டினாள். உடனே அவ்விடத்தின் அருகில் நின்று சித்தர் " கோராக்கா வெளியே வா! என்றார், என்றைக்கு திருநீறு கொடுத்தாரோ, அன்று முதல் இன்று வரை எவ்வளவு காலங்கள் ஆனதோ அத்தனை காலங்களில் ஏற்பட்ட வளர்ச்சியோடு அந்த சாம்பலில் இருந்து குழந்தை வெளிப்பட்டது. அந்தக் குழந்தைக்கு "கோரக்கர்" என்று பெயர்சூட்டினார், அவனை தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் சித்தர்.
கோரக்கர் எட்டு வயது ஆகும்போதே சித்தரோடு சேர்ந்து அவர் கற்றுக் கொடுக்கும் மந்திரங்களை கற்று குருவுக்கு மிஞ்சின சிஷ்யராக திகழ்ந்தார். சித்தர் மச்சேந்திரனுக்கு மீனாக இருக்கும் போது சிவபெருமான் உபதேசித்த மந்திரங்களையும் உபதேசித்தார். நிறைகுடம் போல் அறிந்தவற்றை வெளிக்காட்டாமல் சிறந்த ஞானியாக வாழ்ந்தார் கோரக்கர் சித்தர். குருநாதருக்கு உணவு வேண்டி வீடுகளில் பிச்சை வேண்டி குருவிற்கு உணவு அளித்தார், ஒரு நாள் பிச்சை எடுக்கும் போது ஒரு வீட்டில் வடை கிடைத்தது. அதை தம் குருநாதருக்கு கொடுத்தார். மறுநாளும் குருநாதர் அதேவீட்டில் வடை வாங்கி வர அனுப்பினார், ஆனால் அந்த வீட்டில் வடை கேட்டார். ஆனால் அந்த பெண் இன்று வடை இல்லை. அரிச்சாதம் தான் உள்ளது. என்றார். அதற்கு கோரக்கர் என் குருநாதர் வடைதான் கேட்டார் என்றார், உடனே அந்த பெண்மணி நல்ல வேளை உன் குருநாதர் வடைதான் கேட்டார், உன் கண்ணை கேட்டால் என்ன செய்வாய் என்றாள். கேட்ட மாத்திரத்தில் சற்றும் தாமதிக்காமல் கண்ணை தோண்டி எடுத்து, அந்த பெண்ணிடம் கொடுத்தார்., குருபத்தி எப்படிப்பட்டது என்பதை விளக்குவதைப் போல் இருந்தது அச்செயல். ஆசிரம் திரும்பிய கோரக்காரரை குருநாத சித்தர் பார்த்து திடுக்கிட்டார். எங்கே உன் கண் என்றார், உடனே கோரக்கார் நடந்த நிகழ்ச்சியை விளக்கினார். கோரக்கரின் குருபக்தியை பார்த்து வியந்த சித்தர், தன் சக்தியால் இழந்த கண்ணை திரும்பக் கிடைக்கச் செய்தார்.
இருவரும் சிவத்தலங்களை தரிசித்து வரும்போது, கேரள தேசத்தில் அந்நாட்டு மன்னனின் மகளை மணந்தார் சித்தர்.
கோரக்கர் தன் குருநாதரிடம் நாம் இங்கே வந்து அதிக காலம் ஆகிவிட்டது. நமது ஆசிரமம் செல்ல வேண்டினார். உடனே குருநாத சித்தர் தன் மனைவியிடம் விடைபெற்று கோரக்கருடன் ஆசிரமம் புறப்பட்டார், அப்போது அவரின் மனைவி தன் கணவரிடம் கோரக்காரருக்கு தெரியாமல் ஒரு தங்க் கட்டியைகொடுத்தர்ர்,
மடியில் கனம் இருந்தால் மனதில் பயம் வருவது இயற்கைதானே. வழியெல்லாம் கோரக்காரரிடம் இங்கு கள்ளர் பயம் உண்டா என கேட்டுக் கொண்டே வந்தார், கோரக்காருக்கு பயத்தின் காரணம் தெரிந்து விட்டது. அன்று இரவு ஒரு இடத்தில் தூங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தூங்கும் போது அதனை கோரக்காரருக்கு தெரியாமல் வைத்து விட்டு சித்தர் தூங்கினார். அப்போது கோரக்கார் சித்தர் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டியை எடுத்து கண்காணாதஇடத்தில் புதைத்து விட்டார், தங்கக் கட்டி எடுத்த இடத்தில் அதே எடையுள்ள கல்லை வைத்துவிட்டார்,
காலையில் எழுந்த சித்தர் தங்கக் கட்டி இருந்த இடத்தில் கல் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார், உடனே தன் சீடன் கோரக்கரிடம் என்னுடைய தங்கக் கட்டியை நீ அபகரித்துக்கொண்டாய் , நீ என் சீடனாக இருக்கும் தகுதியை இழந்து விட்டாய் என்று கூறினார்,
கோரக்கரோ அமைதியாக அங்கே இருந்த மலைமீது ஏறி கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை தெளித்து தான் நின்றிருந்த மலையையே தங்கக் கட்டியாக மாற்றினார். குருவே தங்கள் தங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
சித்தராக வாழும் பேற்றினை இழந்து அறியாமையின் பிடியில் சிக்கிய எனக்கு நல்வழிகாட்டிவிட்டாய் என்று வாழ்த்தினார் மச்சேந்திரன். அதன் பின் குருவை பிரிந்து சென்ற கோரக்கர் தவத்தில ஈடுபட்டார். அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார்.
சித்தர் கோரக்கர் பேரூரில் ஜீவ சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. இவரை சனிக்கிழமை வழிபட்டால் சனி தோசங்கள் நீங்கும். வீண் பயம் அகன்று தைரியம் உண்டாகும்.
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
திருமுறைகள் கூறும் இக்காலத்திற்கான அறவுரைகள்;
தாய் தந்தையரை தெய்வாகப் போற்றுதல்:
கடவுள் நிலை அறிந்து அம்மயமான மூவர் பெருமக்கள் அருளிய பாடல்களைத் தேவாரம் எனத் தொகுத்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து மற்ற அருளாளர்கள் பாடிய பாடல்களையும் சேர்த்து பன்னிரு திருமுறைகளாக தொகுத்துள்ளார்கள்.
இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட திருமுறைப்பாடல்களை அருளிய அருளாளர்கள் மனித உணர்வு (சீவபோதம்) அகன்ற, இறை உணர்வில் ( சிவபோதத்தில் ) மூழ்கிய நிலையில் பிறந்தவை இப்பாடல்கள்.
சாதாரண அறிவு கொண்டு பாடப்பட்டவை அல்ல. இறைவருடைய அருளால் பாடப்பட்டவை திருமுறைப்பாடல்கள்.
" வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை" - திருஞான சம்பந்தர்
இப்படிப்பட்ட அருளாளர்கள் மூலம் இறைவர் அருளிய திருமுறைப்பாடல்களில் தற்கால முறைக்கு ஏற்ப பலப்பல அறவுரைகள் சிலவற்றை இங்கே காண்போம்.
தாயும் தந்தையும் கண்கண்ட தெய்வமாக போற்றப் பட வேண்டும். பத்து மாதங்களாகத் தாய் - தந்தையின் மூலம் கிடைத்த அணுவின் கருவை சுமக்கிறாள். தாய் கருவுற்றருக்கும் காலங்களில் படும் துன்பங்கட்கு எதனையும் ஈடாக சொல்ல முடியாது. பிள்ளைப் பேறு என்பது மறு பிறப்பு எனலாம். பிள்ளை பெற்ற பிறகு தாயின் பங்கு குழந்தை வளர்ப்பில் மிக கவனமும் அதிகமாகும். குழந்தைகளுக்கு உடல் நலமில்லை என்றால் தாய் மருந்து உண்டு , தான் தரும் தாய்ப் பால் மூலம் குழந்தைக்கு மருந்தளிக்கிறாள். பிள்ளைகட்கு வேண்டியனவற்றை செய்வதில் தந்தையின் பங்கும் அதிகமாகும். பிள்ளைகளை நல்வர்களாக வளர்க்க தாய்தந்தை படும் பாடு செல்லில் அடங்கா.
பன்னிரு திருமுறைகளில் தாயும் தந்தையும் முதல் தெய்வங்கள் என போற்றப்படுகின்றன.தாய் தந்தையர்களை அப்பன் ஈஸ்வரான நினைத்தாலும் சரி, அண்ணல் ஈஸ்வரனை தாய் தந்தையர்களாக நினைத்தாலும் சரி , எது எப்படியாயினும்
" அப்பன் நீ அம்மை நீ" - என்கிறார் நாவுக்கரசர்
"தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே" என்கிறார் ஞானசம்பந்தர்
"எம் எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே" - சம்பந்தர்
"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே" என்கிறார் மாணிக்க வாசகர்
ஒருமுறை பெற்றோரை வணங்கினால் நூறு முறை கங்கையில் நீராடியதற்கு சமமாகும்.
சான்றோர்களை போற்றுதல் வேண்டும்
காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து சென்ற ஆலங்காடு தலத்தை தம் கால்களால் மிதிக்க அஞ்சினார், திருஞான சம்பந்தர் திரு ஆலங்காட்டிற்கு அருகில் உள்ள பழையனூர் என்னும் ஊரில் தங்கினார், இரவில் ஆலங்காட்டு இறைவர் திருஞான சம்பந்தர் கனவில் காட்சி அளித்து தம்மை பாட ஆலயத்திற்கு வரும்படி கூறியருளினார். தமக்கு முன்னோடியாக தமிழ் பதிகம் பாடி முக்தி பெற்ற காரைக்கால் அம்மையாரைப் போற்றிய காரணத்தால் இறைவருடைய காட்சி கிடைக்கப் பெற்றார் சம்பந்தர் சுவாமிகள்.
இவருக்கு பிறகு அவதரித்தவர் சுந்தர மூர்த்தி சுவாமிகள், இவர் திருஞான சம்பந்தர் காட்டிய வழியைப் பற்றி நடந்தவர். இப் பெருமானார், திருநாவுக்கரசர் சுவாமிகள் கைகளால் உழவாரப்பணி செய்த திருவதிகை வீரட்டாணத்தை வழிபடுவதற்கு வந்தார். ஆனால் அப்பதியை தம் கால்களால் மிதிக்க அஞ்சி வீரட்டாணத்திற்கு அருகில் உள்ள சித்தவடம் என்னுமிடத்தில் இரவு தங்கினார், அன்றிரவு இறைவர் தமது திருவடியை சுந்தரர் தலைமீது சூட்டிக் கருணை புரிந்தார்.
திருஞான சம்பந்தர் அவதாரம் செய்த தலமாகிய சீர்காழியை மிதிக்க அஞ்சி ஊரின் வெளிப்புறத்தே நின்று பதிகம் பாடி வழிபட்டார் சுந்தரர். சீர்காழியில் எழுந்தருளியுள்ள தோணியப்பர் சுந்தரருக்கு இருந்த இடத்திலேயே காட்சி கொடுத்தருளினார். சான்றோர்களைப் போற்றிவதால் நாம் அடையும் நலன்களை அளவிட முடியாது. இப்பண்பு இளைஞர்களிடையே பரவ வேண்டும், இவர்கள் நலம் பல பெற்று வாழ்வார்கள்.
கூர்த்த அறிவு பெற ஐந்தெழுத்தை ஓத வேண்டும்;
திருமால், பிரம்மன், தேவேந்திரன் மற்றும் தேவர்கள் யாவரும் நஞ்சினை கண்டு பயந்து ஓடினார்கள், இப்படிப்பட்ட நஞ்சினை திருவைந்தெழுத்தை (சிவாயநம) சொல்லி அருந்தி நலமுடன் திகழ்ந்தார் திருநாவுக்கரசர். ஐந்தெழுத்தை சொல்லி கல்லையும் கடலில் மிதக்க செய்தவர் இவர். இவர் அருளியுள்ள அறவுரையினைக் காண்போம்.
"பூரியா வரும் புண்ணியம் பொய்கெடும்
கூரிதாய அறிவு கைகூடிடும்
சீரியார் பயில் சேறையுட் செந்நெறி
நாரி பாகன் தன் நாமம் நவிலவே" ( 5-77-1)
"கூரிதாய அறிவு கைகூடிடும்" என்னும் திருவாக்கினை மனத்தில் கொள்ள வேண்டும். காலை, மாலை, இரவு வேளையில் 108 முறை "சிவாயநம" என்னும் ஆதி மந்திரத்தை சொல்லுவார்களானால் யாவரும் நன்மதிப்பு பெற்று உயர்வர் என்பது திண்ணம்.
தீயன செய்யாதிருத்தல்:
"..... செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே" (7-35-4)
நாம் செய்யும் நன்மை தீமைகள் மறுமையில் வரும் என்பதே பெரும்பாலோர் கூறும் உண்மை. ஆனால்இம்மையில் செய்த தீமைகள் இம்மையிலேயே நம்மை வந்தடையும் என்ற உண்மையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறியுள்ளார்கள்
இளமையில் எந்த உயிருக்கும் தீமை செய்யக் கூடாது என்னும் பண்பினை வளர்த்து கொள்ள வேண்டும்.இதுவே முதுமை வரை தொடரும். தீமை செய்யா வினையை வளர்த்துக் கொள்ளும். எனவே எப்பிறப்பிலும் தீமை வரா என்பது திண்ணம்.
யாவரையும் வணங்க கற்றுக் கொள்ள வேண்டும்.
"தலையே நீ வணங்காய்" என்றார் திருநாவுக்கரசர்
இளமையிலேயே கடவுள், பெற்றோர், ஆசிரியர், மற்றும் சான்றோர் ஆகியவர்களை வணங்க கற்றுக் கொள்ள வேண்டும். வணங்க தலைப்படும் பொழுதே வளர்ச்சி நம் பக்கம் திரும்பும், வளைந்து கொடுக்கும் நாணல் வளர்கிறது. நிமிர்ந்து நிற்கும் மரம் வேருடன் தண்ணீரால் சாய்க்கப்படுகிறது. என்பதை உணர வேண்டும்.
வாயினால் வாழ்த்தல் வேண்டும்
" வாயே வாழ்த்து கண்டாய்" - நாவுக்கரசர்
முதலில் நம்மைக் காக்கும் கடவுளை வாயினால் வாழ்த்தப்பாட பழகிக் கொள்ள வேண்டும். வாயில் அபத்தமான சொற்கள் இளமையில் பழகிக் கொள்ள வேண்டும். எதிர்காலம் இனிமையாக அமையும், வாழ்த்துவதன் மூலம் நாம் நலமாக வாழலாம். இது மறுக்க முடியாத உண்மை.
நல்லவர்களுடன் நட்புக் கொள்ள வேண்டும்:
" பரவுமின் பணிமின் பணிவாரோடே
விரவுமின் விரவாரை விடுமினே" (5-43-5)
" உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவர்
உறவு கலவாமை வேண்டும்" ராமலிங்க அடிகள்
நல்ல சிவபக்தி உடையவர்களுடன் மட்டுமே நட்புக் கொள்ள வேண்டும். இவர்கள் தீயவென்பன கனவிலும், நினைவிலா சிந்தைத்தூய மாந்தர் ஆவர். நல்ல உள்ளம் கொண்டவர்களுடன் நட்புக் கொண்டால் நாமும் நல்லவர்களாகவே வளர்வோம், தீயவர்களின் நட்பு வேண்டவேண்டாம் என்கிறார் திருநாவுக்கரசர். " சேரிடம் அறிந்து சேர்" என்னும் பழமொழியை மனத்தில் கொள்ள வேண்டும்.
புறங்கூறுதல் வேண்டவே வேண்டாம்
" அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்வியனாகிப் பிறர் பொருள் வல்வன்மின்" திருமுறை 10
மனிதராகப் பிறந்த நாம் பொறாமையின் காரணமாக மற்றவர்களை பற்றி புறங்கூறுதல் பெரும் பாவமாகும். இதனால் நமது புண்ணியம் குறையும். அத்துடன் யாரைப் பற்றி புறங்கூறினோமோ அவர் செய்த பாவத்தின் ஒரு பகுதி நம்மை வந்தடையும்.
நலம் பெற நன்மைகள் மட்டுமே செய்தல் வேண்டும்
" இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையினாலே முடிந்தது" - திருமுறை 10.
இப்பிறவியில் நமக்கு அமைந்துள்ள வாழ்க்கை நாம் ஏற்கனவே செய்துள்ள நல்வினை தீவினைகளின் பலனே ஆகும் என்கிறார் திருமூலர்
"தீங்கு வந்து அடையுமாறு நன்மைதான் சேருமாறும்
தாங்கள் செய்வினையினாலே தத்தமக்கு ஆயஅல்லால்
ஆங்கவை பிறரால் வாரா அமுதம் நஞ்சு இரண்டினுக்கும்
ஓங்கிய சுவையின் பேதம் உதவினோர் சிலரும் உண்டோ"
முள் விதையை விதைத்தால் அறுவடை முள்ளாகத்தான் இருக்கும். கனியாக இராது. வினை விைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழியை ஞாபகம் கொளல் வேண்டும்.
இருப்பதைக் கொடுக்கப் பழக வேண்டும்
இல்லாதவர்கட்கு கொடுத்தால் இறைவர் நமக்கு தவறாமல் வாரி வழங்குவார் என்கிறார் நாவுக்கரசர்
"இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாம் கடும்நரகங்கள் வைத்தார்" திருமுறை 4
செல்வம் இருந்தால் இல்லாதவர்கட்கு கொடுத்துப் பழக வேண்டும். இளமையில் பழகுவது பசுமரத்தில ஆனி அடித்தது போல வந்துவிடும்.
பொய் நீக்கி உண்மையைக் கொள்ள வேண்டும்
" பொய்யஞ்சி வாய்மைகள் பேசி புகழ்புரிந்தார்க்கு அருள் செய்யும்
ஐயஞ்சின்அப்புறத்தானும் ஆருர் அமர்ந்த அம்மானே" நாவுககரசர்
சிறுவயது முதலே பொய் பேசாமல் உண்மையைப் பேசி பழகிக் கொள்ள வேண்டும். இதுவே சான்றோராக்கும். உண்மை தான் கடவுள் , பொய்தான் சாத்தான். உண்மைதான் உயர்வினைத் தரும்.
இனியனவே நினைக்க வேண்டும்
நல்லன நினைத்தால் நல்லன நடக்கும் என்பது முதியோர் வாக்கு.
"இனிய நினையாதார்க்கு இன்னாதானை" திருமுறை 6
நம்முடைய நினைவு அல்லது எண்ணங்கள் விதைகள், செயல்கள் எண்ணங்களின் கனிகள். சிறுவயதிலேயே நல்லனவற்றை நினைக்கப் பழகிக்கொண்டால் வாழ்வின் சூழலே இனியதாய் அமையும்.
வெறுப்பு, கவலை, பேராசை, பயம், பகைமை, பொறாமை போன்ற கீழான எண்ணங்களை மனத்திலிருந்து அகற்றி விடுங்கள். கொடுக்கும் குணம், ஈகை, அன்பு,, நேர்மை, இரக்கம், உண்மை முதலிய உணர்வுகளை மனதில் ஏற்றுங்கள்
உங்கள் சிந்தனைக்கு ஏற்ப செயல்கள் அமைகின்றன. செயல்களே உம்முடைய விதியை வருங்கால வாழ்வை நிர்ணயிக்கின்றன. நீங்கள் எதைப்பற்றி சிந்திக்கின்றீர்களோ அதுவாகிறீர்கள். வாழ்வில் நன்மை பெற விரும்பும் நீங்கள் இனியவற்றையே சிந்திப்பீர்களானால் உங்கள் வாழ்வில் உயர்வு கட்டாயம் உண்டு.
எந்த எண்ணமும் அதற்கு ஒத்த எண்ணங்ளளை தன்பால் ஈர்க்கிறது, இதுதான் நியதி, வாழ்வும் வளத்துடன் அமையும், நாடுமு வலிமையுடன் நிகழும்.
திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவய ஓம்
நன்றி: தமிழ்வேதம்
மேலும் ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
தாய் தந்தையரை தெய்வாகப் போற்றுதல்:
கடவுள் நிலை அறிந்து அம்மயமான மூவர் பெருமக்கள் அருளிய பாடல்களைத் தேவாரம் எனத் தொகுத்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து மற்ற அருளாளர்கள் பாடிய பாடல்களையும் சேர்த்து பன்னிரு திருமுறைகளாக தொகுத்துள்ளார்கள்.
இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட திருமுறைப்பாடல்களை அருளிய அருளாளர்கள் மனித உணர்வு (சீவபோதம்) அகன்ற, இறை உணர்வில் ( சிவபோதத்தில் ) மூழ்கிய நிலையில் பிறந்தவை இப்பாடல்கள்.
சாதாரண அறிவு கொண்டு பாடப்பட்டவை அல்ல. இறைவருடைய அருளால் பாடப்பட்டவை திருமுறைப்பாடல்கள்.
" வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை" - திருஞான சம்பந்தர்
இப்படிப்பட்ட அருளாளர்கள் மூலம் இறைவர் அருளிய திருமுறைப்பாடல்களில் தற்கால முறைக்கு ஏற்ப பலப்பல அறவுரைகள் சிலவற்றை இங்கே காண்போம்.
தாயும் தந்தையும் கண்கண்ட தெய்வமாக போற்றப் பட வேண்டும். பத்து மாதங்களாகத் தாய் - தந்தையின் மூலம் கிடைத்த அணுவின் கருவை சுமக்கிறாள். தாய் கருவுற்றருக்கும் காலங்களில் படும் துன்பங்கட்கு எதனையும் ஈடாக சொல்ல முடியாது. பிள்ளைப் பேறு என்பது மறு பிறப்பு எனலாம். பிள்ளை பெற்ற பிறகு தாயின் பங்கு குழந்தை வளர்ப்பில் மிக கவனமும் அதிகமாகும். குழந்தைகளுக்கு உடல் நலமில்லை என்றால் தாய் மருந்து உண்டு , தான் தரும் தாய்ப் பால் மூலம் குழந்தைக்கு மருந்தளிக்கிறாள். பிள்ளைகட்கு வேண்டியனவற்றை செய்வதில் தந்தையின் பங்கும் அதிகமாகும். பிள்ளைகளை நல்வர்களாக வளர்க்க தாய்தந்தை படும் பாடு செல்லில் அடங்கா.
பன்னிரு திருமுறைகளில் தாயும் தந்தையும் முதல் தெய்வங்கள் என போற்றப்படுகின்றன.தாய் தந்தையர்களை அப்பன் ஈஸ்வரான நினைத்தாலும் சரி, அண்ணல் ஈஸ்வரனை தாய் தந்தையர்களாக நினைத்தாலும் சரி , எது எப்படியாயினும்
" அப்பன் நீ அம்மை நீ" - என்கிறார் நாவுக்கரசர்
"தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே" என்கிறார் ஞானசம்பந்தர்
"எம் எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே" - சம்பந்தர்
"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே" என்கிறார் மாணிக்க வாசகர்
ஒருமுறை பெற்றோரை வணங்கினால் நூறு முறை கங்கையில் நீராடியதற்கு சமமாகும்.
சான்றோர்களை போற்றுதல் வேண்டும்
காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து சென்ற ஆலங்காடு தலத்தை தம் கால்களால் மிதிக்க அஞ்சினார், திருஞான சம்பந்தர் திரு ஆலங்காட்டிற்கு அருகில் உள்ள பழையனூர் என்னும் ஊரில் தங்கினார், இரவில் ஆலங்காட்டு இறைவர் திருஞான சம்பந்தர் கனவில் காட்சி அளித்து தம்மை பாட ஆலயத்திற்கு வரும்படி கூறியருளினார். தமக்கு முன்னோடியாக தமிழ் பதிகம் பாடி முக்தி பெற்ற காரைக்கால் அம்மையாரைப் போற்றிய காரணத்தால் இறைவருடைய காட்சி கிடைக்கப் பெற்றார் சம்பந்தர் சுவாமிகள்.
இவருக்கு பிறகு அவதரித்தவர் சுந்தர மூர்த்தி சுவாமிகள், இவர் திருஞான சம்பந்தர் காட்டிய வழியைப் பற்றி நடந்தவர். இப் பெருமானார், திருநாவுக்கரசர் சுவாமிகள் கைகளால் உழவாரப்பணி செய்த திருவதிகை வீரட்டாணத்தை வழிபடுவதற்கு வந்தார். ஆனால் அப்பதியை தம் கால்களால் மிதிக்க அஞ்சி வீரட்டாணத்திற்கு அருகில் உள்ள சித்தவடம் என்னுமிடத்தில் இரவு தங்கினார், அன்றிரவு இறைவர் தமது திருவடியை சுந்தரர் தலைமீது சூட்டிக் கருணை புரிந்தார்.
திருஞான சம்பந்தர் அவதாரம் செய்த தலமாகிய சீர்காழியை மிதிக்க அஞ்சி ஊரின் வெளிப்புறத்தே நின்று பதிகம் பாடி வழிபட்டார் சுந்தரர். சீர்காழியில் எழுந்தருளியுள்ள தோணியப்பர் சுந்தரருக்கு இருந்த இடத்திலேயே காட்சி கொடுத்தருளினார். சான்றோர்களைப் போற்றிவதால் நாம் அடையும் நலன்களை அளவிட முடியாது. இப்பண்பு இளைஞர்களிடையே பரவ வேண்டும், இவர்கள் நலம் பல பெற்று வாழ்வார்கள்.
கூர்த்த அறிவு பெற ஐந்தெழுத்தை ஓத வேண்டும்;
திருமால், பிரம்மன், தேவேந்திரன் மற்றும் தேவர்கள் யாவரும் நஞ்சினை கண்டு பயந்து ஓடினார்கள், இப்படிப்பட்ட நஞ்சினை திருவைந்தெழுத்தை (சிவாயநம) சொல்லி அருந்தி நலமுடன் திகழ்ந்தார் திருநாவுக்கரசர். ஐந்தெழுத்தை சொல்லி கல்லையும் கடலில் மிதக்க செய்தவர் இவர். இவர் அருளியுள்ள அறவுரையினைக் காண்போம்.
"பூரியா வரும் புண்ணியம் பொய்கெடும்
கூரிதாய அறிவு கைகூடிடும்
சீரியார் பயில் சேறையுட் செந்நெறி
நாரி பாகன் தன் நாமம் நவிலவே" ( 5-77-1)
"கூரிதாய அறிவு கைகூடிடும்" என்னும் திருவாக்கினை மனத்தில் கொள்ள வேண்டும். காலை, மாலை, இரவு வேளையில் 108 முறை "சிவாயநம" என்னும் ஆதி மந்திரத்தை சொல்லுவார்களானால் யாவரும் நன்மதிப்பு பெற்று உயர்வர் என்பது திண்ணம்.
தீயன செய்யாதிருத்தல்:
"..... செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே" (7-35-4)
நாம் செய்யும் நன்மை தீமைகள் மறுமையில் வரும் என்பதே பெரும்பாலோர் கூறும் உண்மை. ஆனால்இம்மையில் செய்த தீமைகள் இம்மையிலேயே நம்மை வந்தடையும் என்ற உண்மையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறியுள்ளார்கள்
இளமையில் எந்த உயிருக்கும் தீமை செய்யக் கூடாது என்னும் பண்பினை வளர்த்து கொள்ள வேண்டும்.இதுவே முதுமை வரை தொடரும். தீமை செய்யா வினையை வளர்த்துக் கொள்ளும். எனவே எப்பிறப்பிலும் தீமை வரா என்பது திண்ணம்.
யாவரையும் வணங்க கற்றுக் கொள்ள வேண்டும்.
"தலையே நீ வணங்காய்" என்றார் திருநாவுக்கரசர்
இளமையிலேயே கடவுள், பெற்றோர், ஆசிரியர், மற்றும் சான்றோர் ஆகியவர்களை வணங்க கற்றுக் கொள்ள வேண்டும். வணங்க தலைப்படும் பொழுதே வளர்ச்சி நம் பக்கம் திரும்பும், வளைந்து கொடுக்கும் நாணல் வளர்கிறது. நிமிர்ந்து நிற்கும் மரம் வேருடன் தண்ணீரால் சாய்க்கப்படுகிறது. என்பதை உணர வேண்டும்.
வாயினால் வாழ்த்தல் வேண்டும்
" வாயே வாழ்த்து கண்டாய்" - நாவுக்கரசர்
முதலில் நம்மைக் காக்கும் கடவுளை வாயினால் வாழ்த்தப்பாட பழகிக் கொள்ள வேண்டும். வாயில் அபத்தமான சொற்கள் இளமையில் பழகிக் கொள்ள வேண்டும். எதிர்காலம் இனிமையாக அமையும், வாழ்த்துவதன் மூலம் நாம் நலமாக வாழலாம். இது மறுக்க முடியாத உண்மை.
நல்லவர்களுடன் நட்புக் கொள்ள வேண்டும்:
" பரவுமின் பணிமின் பணிவாரோடே
விரவுமின் விரவாரை விடுமினே" (5-43-5)
" உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவர்
உறவு கலவாமை வேண்டும்" ராமலிங்க அடிகள்
நல்ல சிவபக்தி உடையவர்களுடன் மட்டுமே நட்புக் கொள்ள வேண்டும். இவர்கள் தீயவென்பன கனவிலும், நினைவிலா சிந்தைத்தூய மாந்தர் ஆவர். நல்ல உள்ளம் கொண்டவர்களுடன் நட்புக் கொண்டால் நாமும் நல்லவர்களாகவே வளர்வோம், தீயவர்களின் நட்பு வேண்டவேண்டாம் என்கிறார் திருநாவுக்கரசர். " சேரிடம் அறிந்து சேர்" என்னும் பழமொழியை மனத்தில் கொள்ள வேண்டும்.
புறங்கூறுதல் வேண்டவே வேண்டாம்
" அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்வியனாகிப் பிறர் பொருள் வல்வன்மின்" திருமுறை 10
மனிதராகப் பிறந்த நாம் பொறாமையின் காரணமாக மற்றவர்களை பற்றி புறங்கூறுதல் பெரும் பாவமாகும். இதனால் நமது புண்ணியம் குறையும். அத்துடன் யாரைப் பற்றி புறங்கூறினோமோ அவர் செய்த பாவத்தின் ஒரு பகுதி நம்மை வந்தடையும்.
நலம் பெற நன்மைகள் மட்டுமே செய்தல் வேண்டும்
" இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையினாலே முடிந்தது" - திருமுறை 10.
இப்பிறவியில் நமக்கு அமைந்துள்ள வாழ்க்கை நாம் ஏற்கனவே செய்துள்ள நல்வினை தீவினைகளின் பலனே ஆகும் என்கிறார் திருமூலர்
"தீங்கு வந்து அடையுமாறு நன்மைதான் சேருமாறும்
தாங்கள் செய்வினையினாலே தத்தமக்கு ஆயஅல்லால்
ஆங்கவை பிறரால் வாரா அமுதம் நஞ்சு இரண்டினுக்கும்
ஓங்கிய சுவையின் பேதம் உதவினோர் சிலரும் உண்டோ"
முள் விதையை விதைத்தால் அறுவடை முள்ளாகத்தான் இருக்கும். கனியாக இராது. வினை விைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழியை ஞாபகம் கொளல் வேண்டும்.
இருப்பதைக் கொடுக்கப் பழக வேண்டும்
இல்லாதவர்கட்கு கொடுத்தால் இறைவர் நமக்கு தவறாமல் வாரி வழங்குவார் என்கிறார் நாவுக்கரசர்
"இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாம் கடும்நரகங்கள் வைத்தார்" திருமுறை 4
செல்வம் இருந்தால் இல்லாதவர்கட்கு கொடுத்துப் பழக வேண்டும். இளமையில் பழகுவது பசுமரத்தில ஆனி அடித்தது போல வந்துவிடும்.
பொய் நீக்கி உண்மையைக் கொள்ள வேண்டும்
" பொய்யஞ்சி வாய்மைகள் பேசி புகழ்புரிந்தார்க்கு அருள் செய்யும்
ஐயஞ்சின்அப்புறத்தானும் ஆருர் அமர்ந்த அம்மானே" நாவுககரசர்
சிறுவயது முதலே பொய் பேசாமல் உண்மையைப் பேசி பழகிக் கொள்ள வேண்டும். இதுவே சான்றோராக்கும். உண்மை தான் கடவுள் , பொய்தான் சாத்தான். உண்மைதான் உயர்வினைத் தரும்.
இனியனவே நினைக்க வேண்டும்
நல்லன நினைத்தால் நல்லன நடக்கும் என்பது முதியோர் வாக்கு.
"இனிய நினையாதார்க்கு இன்னாதானை" திருமுறை 6
நம்முடைய நினைவு அல்லது எண்ணங்கள் விதைகள், செயல்கள் எண்ணங்களின் கனிகள். சிறுவயதிலேயே நல்லனவற்றை நினைக்கப் பழகிக்கொண்டால் வாழ்வின் சூழலே இனியதாய் அமையும்.
வெறுப்பு, கவலை, பேராசை, பயம், பகைமை, பொறாமை போன்ற கீழான எண்ணங்களை மனத்திலிருந்து அகற்றி விடுங்கள். கொடுக்கும் குணம், ஈகை, அன்பு,, நேர்மை, இரக்கம், உண்மை முதலிய உணர்வுகளை மனதில் ஏற்றுங்கள்
உங்கள் சிந்தனைக்கு ஏற்ப செயல்கள் அமைகின்றன. செயல்களே உம்முடைய விதியை வருங்கால வாழ்வை நிர்ணயிக்கின்றன. நீங்கள் எதைப்பற்றி சிந்திக்கின்றீர்களோ அதுவாகிறீர்கள். வாழ்வில் நன்மை பெற விரும்பும் நீங்கள் இனியவற்றையே சிந்திப்பீர்களானால் உங்கள் வாழ்வில் உயர்வு கட்டாயம் உண்டு.
எந்த எண்ணமும் அதற்கு ஒத்த எண்ணங்ளளை தன்பால் ஈர்க்கிறது, இதுதான் நியதி, வாழ்வும் வளத்துடன் அமையும், நாடுமு வலிமையுடன் நிகழும்.
திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவய ஓம்
நன்றி: தமிழ்வேதம்
மேலும் ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
நாலுபேர் சென்ற வழியில் தான் நாமும் செல்லவேண்டும்
நம்முடைய பெரியவர்கள் " நாலுபேர் போன வழியில் செல்லுங்கள் , புதிய வழி தேவையில்லை," என்று கூறியுள்ளார்கள். இதன் உட்பொருள் தெரியாத காரணத்தால் இன்று மக்கள் பலப்பல வேண்டாத வழிகளில் சென்று பொருள் நட்டமும், துன்பமும் அனுபவிக்கின்றார்கள்.
திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு பேர் சென்ற வழியில் செல்ல வேண்டும்.
இந்த நான்கு அருளாளர்களும், கடவுள் நிலையறிந்து அம்மயமானவர்கள். இந்த நான்கு பெருமக்களும் காட்டிய வழி முழுமுதற் பொருளாம் சிவபெருமானாரை வழிபடுவதே ஆகும்.
ஆதியும் அந்தமும் முதலும் முடிவும் பிறப்பும் இறப்பும் தாயும் தந்தையும் இல்லாதது எதுவோ அதுவே முழுமுதற் பொருள் அல்லது பெரும் தெய்வம் ஆகும், இத்தகைய ஒப்புயர்வற்ற சிறப்புடையவர் சிவபெருமானார் ஒருவரே. பிற தெய்வங்கள் எல்லாம் பிறக்கும் இறக்கும். தேனைப்படும் மேல் வினையும் செய்யும்.
அறிந்தும், அறியாமலும் செய்த நம்முடைய பழைய வினைகள் யாவும் நீக்கி, இம்மையில் நலன்களையும், மறுமையில் முத்தியையும் அளிக்கும் கடவுள் சிவபெருமானார் ஒருவரே ஆகும்.
ஒரு ஊருக்கு ஒரே தலைவர்தான். ஒரு மாவட்டத்திற்கு ஒரே ஆட்சியர் தான். ஒரு மாநிலத்திற்கு ஒரே முதலமைச்சர்தான். ஒரு நாட்டிற்கு ஒரே பிரதம மந்திரிதான். இதைப்போல உலகைக் காத்தருளுவதற்கும் ஒரே கடவுள்தான். இரண்டு இருக்க முடியாது. அத்தகைய கடவுளை நால்வர் பெருமக்கள் " சிவம்" என்றார்கள். சிவபெருமான் அன்றி மற்ற தெய்வங்களை மறந்தும் தொழாதவர்கள் இப்பெருமக்கள்.
" பேரிடர் பெருகியோர் பிணிவரினும்
சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்" - சம்பந்தர் தமிழ் திருமுறை 3
சிவபெருமானாரை வணங்கினால் திதிகள், கோள்கள், நட்சித்திரங்கள் ஆகிய யாவும் நல்லவனவே செய்யும் என்கிறார் ஓதாமல் உணர்ந்த திருஞான சம்பந்தர் சுவாமிகள்.
" என்பொடு கொம்பொடு ஆமை இவைமார் பிலங்க எருதேறி யேழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்துஎன் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே." - சம்பந்தர் ( கோளாறு பதிகம்)
இதன் தெளிவுரை: எலும்பு, பன்றிக் கொம்பு, ஆமை ஓடு, ஆகியன மார்பில் இலங்கப் பொன் போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்த மலர் மாலை, கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்து, உமையுடன் சிவபெருமானார் எருதேறி வந்து உள்ளத்ததில் எழுந்தருளியிருப்பதால், அசுவனி முதலாக உள்ள நட்சத்திரங்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு,பதிென்ட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் , பிறவுமான நட்சித்திரங்கள் அடியார்கட்கு நல்லனவற்றையே செய்யும்.
"உருவளர் பவளமேனி யொளி நீறணிந்து உமையோடு வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே." சம்பந்தர்
தெளிவுறை:அழகிய பவளம் போன்ற திருமேனியல் ஒளியுடைய திருவெண்ணீற்றை அணிந்து, நறுமணம் பொருந்திய கொன்றை, சந்திரன் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபெருமானார் உமையுடன் வெள்ளை விடைமீது ஏறிவந்து, என் உள்ளத்தில் குடிகொண்டுள்ள காரணத்தால் திருமகள் துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையும், மற்றும் பிற நல்லனவற்றையும் அடியார்கட்டு அளிப்பார்.
திருநாவுக்கரசர் சுவாமிகள் காட்டிய வழி:
" என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம் இருநிலத்தில் எமக்குஎதிர் ஆவரும் இல்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்
ஒன்றினால் குறையுடையோம் அல்லோ மன்றே உறுபிணியார் செறலொழிந்திட்டு ஓடிப்போனார்
பொற்றினார் தலைமாலை அணிந்த சென்னிப் புண்ணியனை நண்ணிய புண்ணியத்து ளோமே,"
தெளிவுரை: இறந்த பிரம்ம விட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்துள்ள புண்ணியராகிய சிவபெருமானாருடைய திருவடியே சேரப் பெற்றோம், ஆதலால் யாவர்க்கும் என்றும் நாம் பின் வாங்க மாட்டோம். நமக்க இப்பூமியில் இணையானவர் யாரும் இல்லை. சிறுதெய்வங்களை வணங்கவே மாட்டோம். ஒரு குறையும் இல்லை. நோய்களும் நம்மை விட்டுத் தொலைந்தன.
சுந்தரமூர்த்தி சுவாமிகள்:
" விரையார் கொன்றையினாய் விமலா இனி உன்னையல்லால்
உரையேன் நாவதனால் உடலில் உயிர் உள்ளளவும்
திரையார் தண்கழனித் திருமேற்றளி உறையும்
அரையா உன்னையல்லால் அறிந்து ஏத்துமாட்டேனே." - சுந்தரர் த,வே, 7
தெளிவுரை: நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவரே, தூயவரே, அலைகள் நிறைந்த குளிர்ந்த கழனிகள், நிறைந்த கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற முழுமுதற் பொருளே, அடியேன் என் உடலில் உள்ளவரையில் தங்களையன்றி பிறரை "கடவுள்" என்று என் நாவினால் சொல்ல மாட்டேன். தங்களையன்றி பிறரை மதித்து போற்றவும் மாட்டேன்.
மாணிக்க வாசகர்:
"கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருவருளாலே இருக்கப் பெறின் இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே."
தெளிவுரை: சிறந்த தலைவரே, இறைவரே, இந்திரன் திருமால், பிரமன் ஆகியோர்களின் பதவியைக் கொடுத்தாலும், கொள்ள மாட்டேன் என் குடிப்பெருமையே அழிந்தாலும் (அழியாது என்பது பொருள்) தங்களுடைய அடியார்களுடன் மட்டுமே நட்பு கொள்வேன், அதனால் நரகமே வந்தாலும் அதனை ஏற்பேன்.
தங்களுடைய திருவருளால் இருக்க நேர்ந்தால் தங்களையன்றி வேறு தெய்வங்களை மனத்தாலும் நினைக்க மாட்டேன்.
" சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன்" - தமிழ் திருமுறை 8
நால்வர் பெருமக்கள் காட்டிய பாதை அல்லது நாலு பேர் சென்ற பாதை முழுமுதற் பொருளாய் விளங்கும் சிவபெருமானாரை மட்டுமே வழிபட்டு நலம் பெறுவதாகும்,மறந்தும் பிற சிறு தெய்வங்களை எந்நிலையிலும் வழிபடாத நிலையாகும்.
நால்வரும் கூறியுள்ள மந்திரம்:
நால்வரும் "சிவாய நம " என்னும் மகாமந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியுள்ளார்கள்,
"கொலவாரேனும் குணம்பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத்தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே," - சம்பந்தர் தேவாரம்
கொலைத் தொழிலில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும், நற்குணமும், நல்லொழுக்கமும் இல்லாவர் ஆயினும் திருஐந்தெழுத்தை ( சிவாயநம) உச்சரிப்பார்களேயானால் எல்லா விதத் தீங்குகளின்றும் நீங்குவர், செலவில்லாத எளிய வழி, உரிய வழியும் இதுவே ஆகும்.
சடங்கு, சம்பிரதாயம், ஆகியவற்றை விடுத்து, நாலுபேர் ( நாலவர் பெருமக்கள்) சென்ற வழியில் நாமும் சென்று பிறவிப் பயனை அடைவோம்.
திருச் சிற்றம்பலம் - தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!!
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
நம்முடைய பெரியவர்கள் " நாலுபேர் போன வழியில் செல்லுங்கள் , புதிய வழி தேவையில்லை," என்று கூறியுள்ளார்கள். இதன் உட்பொருள் தெரியாத காரணத்தால் இன்று மக்கள் பலப்பல வேண்டாத வழிகளில் சென்று பொருள் நட்டமும், துன்பமும் அனுபவிக்கின்றார்கள்.
திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு பேர் சென்ற வழியில் செல்ல வேண்டும்.
இந்த நான்கு அருளாளர்களும், கடவுள் நிலையறிந்து அம்மயமானவர்கள். இந்த நான்கு பெருமக்களும் காட்டிய வழி முழுமுதற் பொருளாம் சிவபெருமானாரை வழிபடுவதே ஆகும்.
ஆதியும் அந்தமும் முதலும் முடிவும் பிறப்பும் இறப்பும் தாயும் தந்தையும் இல்லாதது எதுவோ அதுவே முழுமுதற் பொருள் அல்லது பெரும் தெய்வம் ஆகும், இத்தகைய ஒப்புயர்வற்ற சிறப்புடையவர் சிவபெருமானார் ஒருவரே. பிற தெய்வங்கள் எல்லாம் பிறக்கும் இறக்கும். தேனைப்படும் மேல் வினையும் செய்யும்.
அறிந்தும், அறியாமலும் செய்த நம்முடைய பழைய வினைகள் யாவும் நீக்கி, இம்மையில் நலன்களையும், மறுமையில் முத்தியையும் அளிக்கும் கடவுள் சிவபெருமானார் ஒருவரே ஆகும்.
ஒரு ஊருக்கு ஒரே தலைவர்தான். ஒரு மாவட்டத்திற்கு ஒரே ஆட்சியர் தான். ஒரு மாநிலத்திற்கு ஒரே முதலமைச்சர்தான். ஒரு நாட்டிற்கு ஒரே பிரதம மந்திரிதான். இதைப்போல உலகைக் காத்தருளுவதற்கும் ஒரே கடவுள்தான். இரண்டு இருக்க முடியாது. அத்தகைய கடவுளை நால்வர் பெருமக்கள் " சிவம்" என்றார்கள். சிவபெருமான் அன்றி மற்ற தெய்வங்களை மறந்தும் தொழாதவர்கள் இப்பெருமக்கள்.
" பேரிடர் பெருகியோர் பிணிவரினும்
சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்" - சம்பந்தர் தமிழ் திருமுறை 3
சிவபெருமானாரை வணங்கினால் திதிகள், கோள்கள், நட்சித்திரங்கள் ஆகிய யாவும் நல்லவனவே செய்யும் என்கிறார் ஓதாமல் உணர்ந்த திருஞான சம்பந்தர் சுவாமிகள்.
" என்பொடு கொம்பொடு ஆமை இவைமார் பிலங்க எருதேறி யேழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்துஎன் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே." - சம்பந்தர் ( கோளாறு பதிகம்)
இதன் தெளிவுரை: எலும்பு, பன்றிக் கொம்பு, ஆமை ஓடு, ஆகியன மார்பில் இலங்கப் பொன் போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்த மலர் மாலை, கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்து, உமையுடன் சிவபெருமானார் எருதேறி வந்து உள்ளத்ததில் எழுந்தருளியிருப்பதால், அசுவனி முதலாக உள்ள நட்சத்திரங்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு,பதிென்ட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் , பிறவுமான நட்சித்திரங்கள் அடியார்கட்கு நல்லனவற்றையே செய்யும்.
"உருவளர் பவளமேனி யொளி நீறணிந்து உமையோடு வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே." சம்பந்தர்
தெளிவுறை:அழகிய பவளம் போன்ற திருமேனியல் ஒளியுடைய திருவெண்ணீற்றை அணிந்து, நறுமணம் பொருந்திய கொன்றை, சந்திரன் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபெருமானார் உமையுடன் வெள்ளை விடைமீது ஏறிவந்து, என் உள்ளத்தில் குடிகொண்டுள்ள காரணத்தால் திருமகள் துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையும், மற்றும் பிற நல்லனவற்றையும் அடியார்கட்டு அளிப்பார்.
திருநாவுக்கரசர் சுவாமிகள் காட்டிய வழி:
" என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம் இருநிலத்தில் எமக்குஎதிர் ஆவரும் இல்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்
ஒன்றினால் குறையுடையோம் அல்லோ மன்றே உறுபிணியார் செறலொழிந்திட்டு ஓடிப்போனார்
பொற்றினார் தலைமாலை அணிந்த சென்னிப் புண்ணியனை நண்ணிய புண்ணியத்து ளோமே,"
தெளிவுரை: இறந்த பிரம்ம விட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்துள்ள புண்ணியராகிய சிவபெருமானாருடைய திருவடியே சேரப் பெற்றோம், ஆதலால் யாவர்க்கும் என்றும் நாம் பின் வாங்க மாட்டோம். நமக்க இப்பூமியில் இணையானவர் யாரும் இல்லை. சிறுதெய்வங்களை வணங்கவே மாட்டோம். ஒரு குறையும் இல்லை. நோய்களும் நம்மை விட்டுத் தொலைந்தன.
சுந்தரமூர்த்தி சுவாமிகள்:
" விரையார் கொன்றையினாய் விமலா இனி உன்னையல்லால்
உரையேன் நாவதனால் உடலில் உயிர் உள்ளளவும்
திரையார் தண்கழனித் திருமேற்றளி உறையும்
அரையா உன்னையல்லால் அறிந்து ஏத்துமாட்டேனே." - சுந்தரர் த,வே, 7
தெளிவுரை: நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவரே, தூயவரே, அலைகள் நிறைந்த குளிர்ந்த கழனிகள், நிறைந்த கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற முழுமுதற் பொருளே, அடியேன் என் உடலில் உள்ளவரையில் தங்களையன்றி பிறரை "கடவுள்" என்று என் நாவினால் சொல்ல மாட்டேன். தங்களையன்றி பிறரை மதித்து போற்றவும் மாட்டேன்.
மாணிக்க வாசகர்:
"கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருவருளாலே இருக்கப் பெறின் இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே."
தெளிவுரை: சிறந்த தலைவரே, இறைவரே, இந்திரன் திருமால், பிரமன் ஆகியோர்களின் பதவியைக் கொடுத்தாலும், கொள்ள மாட்டேன் என் குடிப்பெருமையே அழிந்தாலும் (அழியாது என்பது பொருள்) தங்களுடைய அடியார்களுடன் மட்டுமே நட்பு கொள்வேன், அதனால் நரகமே வந்தாலும் அதனை ஏற்பேன்.
தங்களுடைய திருவருளால் இருக்க நேர்ந்தால் தங்களையன்றி வேறு தெய்வங்களை மனத்தாலும் நினைக்க மாட்டேன்.
" சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன்" - தமிழ் திருமுறை 8
நால்வர் பெருமக்கள் காட்டிய பாதை அல்லது நாலு பேர் சென்ற பாதை முழுமுதற் பொருளாய் விளங்கும் சிவபெருமானாரை மட்டுமே வழிபட்டு நலம் பெறுவதாகும்,மறந்தும் பிற சிறு தெய்வங்களை எந்நிலையிலும் வழிபடாத நிலையாகும்.
நால்வரும் கூறியுள்ள மந்திரம்:
நால்வரும் "சிவாய நம " என்னும் மகாமந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியுள்ளார்கள்,
"கொலவாரேனும் குணம்பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத்தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே," - சம்பந்தர் தேவாரம்
கொலைத் தொழிலில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும், நற்குணமும், நல்லொழுக்கமும் இல்லாவர் ஆயினும் திருஐந்தெழுத்தை ( சிவாயநம) உச்சரிப்பார்களேயானால் எல்லா விதத் தீங்குகளின்றும் நீங்குவர், செலவில்லாத எளிய வழி, உரிய வழியும் இதுவே ஆகும்.
சடங்கு, சம்பிரதாயம், ஆகியவற்றை விடுத்து, நாலுபேர் ( நாலவர் பெருமக்கள்) சென்ற வழியில் நாமும் சென்று பிறவிப் பயனை அடைவோம்.
திருச் சிற்றம்பலம் - தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!!
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
பாவங்கள் தீர்தர நல்வினை நல்குவார் எம்பெருமானார்
" பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப் பல்கணம் நின்று பணியச்
சாவமதாகிய மால்வரை கொண்டு தண்மதில் மூன்றம்எரித்த
தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீதில் பெருந்துறையாரே." சம்பந்தர் தேவாரம் - 1
மூவர்மற்றும் தேவர்கள் ஆகிய அனைவருக்கும் தலைவராய் விளங்கும் சிவபெருமானார் நம்முடைய பாவங்கள் தொலைவதன் பொருட்டு நல்வினைகள் செய்வதற்கு அருள் புரிகின்றார் என்கிறார் திருஞான சம்பந்தர்.
" அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருப்பது உன்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து பிரான்கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்துஎமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்" - சம்பந்தர் தேவாரம்
நாம் முற்பிறவிகளில் செய்துள்ள வினைகளுக்கு ஏற்பவே இப்பிறவியில் நோய் மற்றும் இன்ப துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். இந்த உண்மையை யாவரும் அறிவோம், இப்பிறவியில் நமக்கு வரும் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு உரிய வழியை தேடாமல் இருப்பது நம்முடைய குறையே ஆகும். புண்ணிய செயல்களை செய்து சிவபெருமானுடைய திருவடியை போற்றுவோம், இவ்வாறு செய்தால், நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மீது ஆணை.
நாம் பலபிறவிகளில் செய்துள்ள மொத்த தீவினைகளின் பயனை அனுபவிப்பது என்பது இயலாத ஒன்றாகும். நாம் தாங்க மாட்டோம். என்பது சிவபொருமானாருக்கு நன்கு தெரியும். இதன் பொருட்டு நல்வினைகளை செய்து பாவங்களை தீர்ப்பதற்கு பலப்பல சந்தர்ப்பங்களை இறைவர் நமக்கு அருளியுள்ளார். இந்த அரிய சந்தர்பங்களை பயன்படுத்தி நாம் புண்ணியங்களை பெருக்கி கொள்ள வேண்டும். புண்ணிய செயல்களில் மனம் பழகப்பழக பாவங்கள் செய்யும் நிலை இல்லாமல் போகும்.
பாவச் செயல்களைச் செய்வதற்கு மனம் கூசும், இப்படி பாவங்களிலிருந்து விலகி, புண்ணியச் செயல்களில் மட்டும் ஈடுபடும் ஆன்மாக்களின் மீது இறையருள் தானே பதியும். இறையருள் பதிந்த ஆன்மா பிறவா நிலையை அடையும். இதனையே "முத்திப்பேறு" என்கிறோம்.
பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பெற்ற கைதி, தன் தவற்றை உணர்ந்து சிறையில் நல்லபடியாக நடந்து கொண்டால் அவனுடைய சிறைவாசம் குறைக்கப்படுவதுபோல் நம் செய்த பாவச் செயல்களை உணர்ந்து நல்லொழுத்துடன் வாழ்ந்தால் இறைவர் நம் பாவங்களை குறைத்து புண்ணியச் செயல்களாக மாற்றுவார். அநேக பாவங்கள் செய்திருந்தாலும் அவற்றை தவறு என்றுணர்ந்து அவற்றிலிருந்து உய்வடையும் பொருட்டு நல்வினைகளைச் செய்தால் இனிமேல் தீவினைகள் நம்மை பாதிக்காமலிருக்கும் என்பதை மேற்கண்ட பாடல் வாயிலாக நாம்அறியலாம்.
இனி நம் பாவங்கள் தீர்தர செய்ய வேண்டிய சில நல்வினைகள் யாவை என்பதைக் காண்போம்.
1. சிவாலயத் திருப்பணிகள்:
சிவபெருமானார் எழுந்தருளியுள்ள சிவலாயங்களை புதுப்பித்தல், மிக மேலான நல்வினை - புண்ணியச் செயல் ஆகும். பூசையில்லாமல் விடப்பட்டதும், சிதலமடைந்ததுமான சிவலாயங்களை திருப்பணி செய்து, பூசைகள் நடைபெற வழிவகுப்பது தலையான நல்வினையாகும். இதனை வலியுறுத்தும் பதினொராம் திருமுறைப்பாடல்.
"காணீர் கதியொன்றும் கல்லீர் எழுந்தஞ்சும் வல்ல வண்ணம்
பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டுப்
பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீர்
வீணீர் எளதோ மருதப் பிரான்கழல் மேவுதற்கே. - பட்டினத்தடிகள் மும்மணிக்கோவை
மருதப்பெருமானாராகிய சிவனாரின் திருவருளைப் பெறுவதற்கு கீழ்கண்ட ஐந்து நல்வினைகளை (புண்ணியங்களை) செய்ய வேண்டும் என்கிறார் கடவுள் நிலையறிந்து அம்மயமான பட்டினத்து அடிகள்
1. திருஐந்தெழுத்தினை ஓதுதல்
2,சிவலாயத் திருப்பணிகளை செய்தல்
3, சிவபெருமானுடைய திருப்புகழினை பேசி மகிழ்தல்
4,உருத்திராட்சம் அணிந்து கொள்வது
5, உடலில் திருவெண்ணீறு அணிந்து மகிழ்தல்
2, சிவலாயத்தை தூய்மை ெசெய்தல்:
சிவபெருமானார் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஆலங்களை பெருக்குதல், மெழுகுதல், தேவையற்ற மரம், செடி, கொடிகளை அகற்றி தூய்மை செய்தல் ஆகிய நல்வினை செயல்களாகும்.
அன்று மலர்ந்த பூக்களை எடுத்து மாலையாக தொடுத்தல், வாயாரப் புகழ்ந்து பாடுதல், தலையால் வணங்குதல், செலவில்லாத புண்ணியச் செயல்களாகும், இவற்றை இயம்பி நிற்கும் அரிய தமிழ் திருமுறை பாடல்.
"நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே. " திருநாவுக்கரசர் தமிழ் திருமுறை - 6
3, மலர் தொண்டு செய்தல்:
சிவலாயத்திற்கு வேண்டிய பூக்களை கொடுத்து உதவுதல் மேலான புண்ணியமாகும். ஆலயத்தில் உள்ள பூக்களை அதிகாலையில் எடுத்து, மாலையாக தொடுத்தளிக்கலாம். நம் வீட்டில் பூச்செடிகள் வைத்தும், பூக்கும் பூக்களை ஆலயத்திற்கு அளிக்கலாம், நறுமணமுள்ள மலர்களையே ஆலயத்திற்கு அளிக்க வேண்டும், " நறுமாமலர் கொய்து" என்பார் அப்பர் அடிகள்.
4, இறைவருடைய திருநாமத்தைச் சிந்தித்தல்:
" நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே" - சுந்தரர்
காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே. - சம்பந்தர் தேவாரம் 3
"பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே" - நாவுக்கரசர்
நம்முடை ய தீவினைகளை நீக்கி, நல்வினை பெருகுவதற்கு இறைவருடைய திருநாமத்தை சிந்தித்தல் (செபித்தல்) அவசியமாகும். பெரும் பொருள் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. பாவங்கள் தொலைந்து நல்வினை பெருக உரிய வழியும், எளிய வழியும் இதுவே எனலாம். ஒரு நாளைக்கு காலை, நண்பகல், மாலை இரவு என நான்கு வேளைகளிலும் ஓதி நலம் பெறலாம்.
5. சிவலாய வழிபாடு மற்றும் சிவத்தல யாத்ததிரை செய்தல்:
பெற்ற பயன்களில் தலையாயது சிவபெருமானாருடைய ஆலயத்தை வலம் வந்து மலர் தூவி வழிபடுவது என்கிறார் அப்பர் சுவாமிகள்.
"ஆக்கையால் பயன் என் அரன் கோயில் வலம் வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இவ் ஆக்கையால் பயன் என். - நாவுக்கரசர்
குறைந்தது ஒருநாளைக்கு இரண்டு வேளையாவது ஆலயம் சென்று தொழ வேண்டும். என்பது அப்பர் பெருமானார் அருள்வாக்கு. மனிதன் தவிர மற்ற உயிரிகள் இதனை செய்ய இயலா. மனிதப் பிறவியில் மட்டுமே இது முடியும்.
"நாடு நகரமும் நல்திருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெருமான் என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே, - திருமூலர் திருமந்திரம்
சிவத்தலயாத்திரை செய்வது நல்வினை பெறுவதற்கு சிறந்த வழியாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், பட்டினத்து அடிகள் போன்ற பலரும் சிவத்தல யாத்திரை செய்துள்ளதை நாம் அறிவோம்,
6, சிவலாயத்தில் விளக்கேற்றல்:
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்" திருநாவுக்கரசர்
நமிநந்தி அடிகள், கலிய நாயனார், கணம்புல்லர்,ஆகியோர், சிவலாயத்தில் தொடர்ந்து விளக்கேற்றி நற்பேறு பெற்றதை பெரியபுராணம் வாய்லாக அறியலாம், கலய நாயனார் சிவலாயத்தில் " குங்குலியம்" எனப்படும் நறுமணத்தை அளிக்கும் திருத்தொண்டினைச் செய்து நலம் பெற்றார், இவ்வாறு இயன்ற சிவத்தொண்டுகளை செய்து நல்வினைகளைப் பெறலாம்.
7. தமிழ் வேதப் பதியங்களை பாராயணம் செய்தல்:
மிகச் சிறந்த புண்ணியச் செயல் இதுவும் ஒன்றாகும், நம்முடைய பழைய வினைகள் யாவும் இல்லாது ஒழியும் என்கிறார் ஞான சம்பந்தர்.
" ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசமபந்தன்உரை செய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே." சம்பந்தர்
பதிகப பாராயணமும் மனிதப் பிறவியில் தான் இயலும். பேசும் திறம் பெற்ற நாம் இதை செய்தே ஆக வேண்டும்.
"...... வருங்கலை ஞான சமபந்தன் தமிழின்
ஒலிகெழுமாலை யென்றுரை செய்த பத்தும்
உண்மையினால் நினைந்து ஏத்தவல்லார் மேல்
மெலிகெழுதுயர் அடையா வினைசிந்தும்
விண்ணவர் ஆற்றலின் மிகப் பெறுவாரே".
கலைஞானம் மிகுந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருக்கழுமலப்பதிகத்தை உண்மையான அன்புடன் நினைந்து பாராயணம் செய்பவர்கட்குச் சோர்வை அளிக்கும் துன்பங்கள் வாரா. வினைகள் அழியும். விண்ணவர்கள் மேம்பட்ட ஆற்றலை பெறுவார்கள்.
" தமிழ் நாடு ஞானசம்பந்தன் சொல்லிவை
பாடுவார்க்கு இல்லை பாவமே."
8. அடியார் தொண்டு செய்தல்:
சிவபெருமானாரை இடைவிடாது மனத்தில் நினைந்து வாழும் சிவனடியார்களை " நடமாடக்கோயில்" என்கிறார், திருமூல நாயனார். இத்ததையவர்கட்கு எந்த உதவியைச் செய்தாலும் அது இறைவருக்கு சென்று சேரும் என்கிறார்.
"நடமாடக் கோயில் நம்பற்கு ஒன்று ஈயின்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே." - திருமந்திரம்
மெய்பொருள் நாயனார் எப்படி வாழ்ந்தார் என்று பெரிய புராணம் கூறுவதைக் காண்போம்.
"தேடியமாடு நீடுசெல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று
நாடியமனத்தோடு நாயன்மார் அணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவறக் கொடுத்து வந்தார். பெரியபுராணம் திருமறை 12
சித்த்தை சிவன்பால் வைத்த சிவனருட் செல்வர்கள் மெய்பொருள் நாயனாரிடம் ஏதேனும் வேண்டும் என்று வந்தபோது குறைவின்றி கொடுத்து வாழ்ந்தார் என்கிறது , இத்துடன் சிவனாடியார் பிள்ளைக்கரி கேட்டபோது தன் பிள்ளையே கறியாக்கி சமைத்து கொடுத்த சிறுத்தொண்ட நாயனார் வழியாகவும், சிவனாடியார் தொண்டே மகேசன் தொண்டு வாழ்ந்த அப்பூதியடிகள் வரலாற்றின் மூலம் சிவனடியார் தொண்டின் பெறுமையை நன்கு அறியலாம்.
9. சான்றோர்களுடன் மட்டுமே சேரவேண்டும்:
சான்றோர்களுடன் தான் உறவு வேண்டும் என்று வள்ளலார் கூற்று
ஒருமையுடன் நின் திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தன் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பதிலிருந்து சான்றோர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்று அறியலாம்
"வென்றிலேன் புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகந் தன்னுள்
சென்றிலன் ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்" திருமறை 4
புலன்களை வென்ற சான்றோர்களுடன் தொடர்பு கொண்டு வாழ வேண்டும். மனம் நல்லதில் மட்டும் நாட்டம் கொள்ளும், நல்லதில் மட்டும் நாட்டம் கொள்ளும் வழியைத்தான் திருநாவுக்கரசர் "செந்நெறி" என்கிறார். இத்துடன் சுந்தரரும் " உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே." என்கிறார்.
10. ஏழை எளியவர்கட்கு உதவுதல்:
ஒருவரிடம் தேவைக்கு மேல் செல்வத்தை இறைவர் அளிப்பதன் காரணம் ஏழைகட்கு உதவுவதற்குத்தான் என்கிறார் திருநாவுக்கரசர் இப்படி உதவினால் இறைவர் மேலும் மேலும் செல்வத்தை அளிப்பார் என்றும் கூறியுள்ளார, அப்படி தேவைக்கு மேல் சேர்ந்துள்ள செல்வத்தை ஏழை எளிய மக்களுக்கு அளிக்காதவர்கட்குக் கடும் நரகங்களை வைத்துள்ளார் இறைவர் என்றம் அருளியுள்ளதை நாம் சிந்திக்க வேண்டும். ஏழைகளையும் படைத்து நம்மிடம் தேவைக்கு மிஞ்சிய செல்வத்தையும் அளித்து நல்வினை தேடிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆம். இதனால் நம் பாவங்கள் தீரும். நாம் செய்த தீவினைகள் நம்மை வந்து தீண்டா. இவற்றையெல்லாம் இயம்பி நிற்கும் நாவரசரின் அரிய பாடல்
" இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பர் தங்கட் கெல்லாம் கடும் நரகங்கள் வைத்தார்," - அப்பர் தேவாரம்
" யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" - திருமூலர் திருமந்திரம்
கொடுத்துக் கொடுத்துப் பழகிவிட்டால் பிறர் பொருள் மீது ஆசை வராது. ஆசைதான் பாவச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது. ஆசை அழியுமானால் தீவினை செய்யாமல் வாழலாம்.
11. பிராணிகட்கு உணவிடுதல்:
உலகத்தில் உள்ள உயிரினங்கள் மற்றும்தாவரங்கள் ஆகிய யாவும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழும்படி இறைவர் படைத்துள்ளார். மனித வாழ்வில் பிராணிகள் பங்கு அதிகம். இவற்றிக்கு அன்றாடம் ஒருபிடி உணவு கொடுப்பது பாவங்கள் தீரும் வழியாகும். " யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை" - திருமூலர் திருமந்திரம் கூறும் வாக்கு
பிராணிகளில் பசு மட்டும் அல்ல, காகத்திற்கு உணவிடுவது நம் இந்துமதத்தின் ஒரு மரபாகவே உள்ளது. மேலும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் வளர்ப்பதும் இதன் நோக்கம் தான்.எனவேதான் ஆன்மீகத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் வாகனமாக ஒவ்வொரு பிராணிகளை இணைத்துள்ளார்கள் முன்னோர்கள்
12. தாவரங்கள் வளர்த்தல்:
உலகம் நலமாக திகழ்வதற்கு தாவரங்கள் பங்கு மிகமிக அதிகமாகும். உலக உயிர்கள் வாழ்வதற்கு இவற்றின் பங்கு
தவிர்க்க முடியாத ஒன்றாகும். சுவாசிக்கும் காற்று முதல் உயிர் வாழ்க்கைக்கு தேவையான யாவற்றையும் தாவரங்கள் தான் நமக்கு தருகின்றன. இதனை உணர்ந்த ஞானிகள் தாவரங்களைப் போற்றி பாதுகாப்பது பெரும் புண்ணியம் என்று கூறியுள்ளார்கள்.
"கரகத்தால் நீர்அட்டி காவினை வளர்ப்பீர்" - திருமூலர் திருமந்திரம்
நான்காம் நூற்றாண்டிலேயே ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ள தமிழர்களின் தொலை நோக்கு பார்வையைப் பாராட்ட வேண்டும். ஓவ்வொரு சிவாலயத்திலும் "தலமரம்" என்று சொல்லி மரங்களை தெய்வமாகவே போற்றியுள்ளதை நாம் மனத்தில் கொள்ளவேண்டும், மரம் வளர்ப்பது பாவங்களை தீர்க்கும் நல்வினையாகும்.
13, உலக நன்மைக்கு வேண்டுவது:
இறைவருடைய கருனையால் நடத்தப்படும் இந்த உலகமே இறைமயம் தான். உலகம் நலமாக இருக்க வேண்டும் என்று நாம் மனதால் வேண்டவேண்டும், நாம் நலமாக வாழ்வோம். உலகத்தில் நாமும் ஒருவர்தான், இதனை விளக்கும் பாடல்
"வையம் நீடுக மாமழை மன்னுக
மெய்விரும்பிய அன்பர் விளங்குக
சைவநன்னெறிதாம் தழைத்து ஓங்குக
தெய்வ வென்திருநீறு சிறக்கவே"
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசுசெய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்" பன்னிரு திருமுறையில் சேக்கிழார் அவர்களின் கடைசி வாழ்த்து பாடல்
வழிதெரியாதவர்கட்கு வழிகாட்டலாம். அறியாமையில்உள்ளவர்கட்கு நல்ல அறவுரைகள் வழங்கலாம், பிரிந்த இருவரைச் சேர்த்து வைக்கலாம், நடைபாதையில் கிடக்கும் வேண்டாத தீங்குவிளைவிக்கும் பொருட்களை அப்புறப் படுத்தலாம். இனிய சொல்லே பேசுதல், இப்படி செலவில்லாத ஏராளமான நல்வினைச் செயல்களைச் செய்யலாம், நாம் தவறுகளைச் செய்யும் பொழுது இறைவர் மனசாட்சியாய் இருந்து " இதுதவறு" என்று உணர்த்துகிறார். ஆணவம் மற்றும் பேராசை காரணமாக நாம்தான் அதைப் பொருட்படுத்தாமல் செயல்படுகிறோம், " பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி" என்னும் தொடரை மனத்தில் வைத்து, உலகிற்கு நலம் தரும் புண்ணியச் செயல்களை மட்டுமே செய்து வரவேண்டும், மறந்தும் மற்ற உயிர்கட்கு தீமையைச் செய்துவிடக் கூடாது, கருணை நிறைந்த ஆன்மா இறைவருடைய கருணையை எளிதில் பெற்றுவிடுகிறது, செல்வம் நிறைந்தவர்கள் , பொருட் செல்வங்களாலும், அதனால் முடியாதவர்கள் தங்களால் முடிந்த அளவு சேவை மனப்பான்மையையும் கொண்டு பிறர் மனம் நோக வண்ணம் இனிது பேசியும் , உதவிகள் செய்தும், முடிந்த அளவு உழவாரப்பணிகள் செய்து, பாவச்செயல்ளை தீர்க்க வல்ல புண்ணிச் செயல்கள் செய்து, நாமும் நலமுடன் வாழ்ந்து, பிறரையும் நலமுடன் வாழச்செய்து, இறையருளைப் பெற்று இனிவரும் பிறவிக்கும் காரணமாய் அமைந்து மேலான நிலையை அடைய உதவுபவை இப்புண்ணிய செயல்களே என்பதை அறிந்து செயல்படுவோம்.
திருச்சிற்றம்பலம்
நன்றி: தமிழ்வேதம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
" பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப் பல்கணம் நின்று பணியச்
சாவமதாகிய மால்வரை கொண்டு தண்மதில் மூன்றம்எரித்த
தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீதில் பெருந்துறையாரே." சம்பந்தர் தேவாரம் - 1
மூவர்மற்றும் தேவர்கள் ஆகிய அனைவருக்கும் தலைவராய் விளங்கும் சிவபெருமானார் நம்முடைய பாவங்கள் தொலைவதன் பொருட்டு நல்வினைகள் செய்வதற்கு அருள் புரிகின்றார் என்கிறார் திருஞான சம்பந்தர்.
" அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருப்பது உன்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து பிரான்கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்துஎமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்" - சம்பந்தர் தேவாரம்
நாம் முற்பிறவிகளில் செய்துள்ள வினைகளுக்கு ஏற்பவே இப்பிறவியில் நோய் மற்றும் இன்ப துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். இந்த உண்மையை யாவரும் அறிவோம், இப்பிறவியில் நமக்கு வரும் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு உரிய வழியை தேடாமல் இருப்பது நம்முடைய குறையே ஆகும். புண்ணிய செயல்களை செய்து சிவபெருமானுடைய திருவடியை போற்றுவோம், இவ்வாறு செய்தால், நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மீது ஆணை.
நாம் பலபிறவிகளில் செய்துள்ள மொத்த தீவினைகளின் பயனை அனுபவிப்பது என்பது இயலாத ஒன்றாகும். நாம் தாங்க மாட்டோம். என்பது சிவபொருமானாருக்கு நன்கு தெரியும். இதன் பொருட்டு நல்வினைகளை செய்து பாவங்களை தீர்ப்பதற்கு பலப்பல சந்தர்ப்பங்களை இறைவர் நமக்கு அருளியுள்ளார். இந்த அரிய சந்தர்பங்களை பயன்படுத்தி நாம் புண்ணியங்களை பெருக்கி கொள்ள வேண்டும். புண்ணிய செயல்களில் மனம் பழகப்பழக பாவங்கள் செய்யும் நிலை இல்லாமல் போகும்.
பாவச் செயல்களைச் செய்வதற்கு மனம் கூசும், இப்படி பாவங்களிலிருந்து விலகி, புண்ணியச் செயல்களில் மட்டும் ஈடுபடும் ஆன்மாக்களின் மீது இறையருள் தானே பதியும். இறையருள் பதிந்த ஆன்மா பிறவா நிலையை அடையும். இதனையே "முத்திப்பேறு" என்கிறோம்.
பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பெற்ற கைதி, தன் தவற்றை உணர்ந்து சிறையில் நல்லபடியாக நடந்து கொண்டால் அவனுடைய சிறைவாசம் குறைக்கப்படுவதுபோல் நம் செய்த பாவச் செயல்களை உணர்ந்து நல்லொழுத்துடன் வாழ்ந்தால் இறைவர் நம் பாவங்களை குறைத்து புண்ணியச் செயல்களாக மாற்றுவார். அநேக பாவங்கள் செய்திருந்தாலும் அவற்றை தவறு என்றுணர்ந்து அவற்றிலிருந்து உய்வடையும் பொருட்டு நல்வினைகளைச் செய்தால் இனிமேல் தீவினைகள் நம்மை பாதிக்காமலிருக்கும் என்பதை மேற்கண்ட பாடல் வாயிலாக நாம்அறியலாம்.
இனி நம் பாவங்கள் தீர்தர செய்ய வேண்டிய சில நல்வினைகள் யாவை என்பதைக் காண்போம்.
1. சிவாலயத் திருப்பணிகள்:
சிவபெருமானார் எழுந்தருளியுள்ள சிவலாயங்களை புதுப்பித்தல், மிக மேலான நல்வினை - புண்ணியச் செயல் ஆகும். பூசையில்லாமல் விடப்பட்டதும், சிதலமடைந்ததுமான சிவலாயங்களை திருப்பணி செய்து, பூசைகள் நடைபெற வழிவகுப்பது தலையான நல்வினையாகும். இதனை வலியுறுத்தும் பதினொராம் திருமுறைப்பாடல்.
"காணீர் கதியொன்றும் கல்லீர் எழுந்தஞ்சும் வல்ல வண்ணம்
பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டுப்
பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீர்
வீணீர் எளதோ மருதப் பிரான்கழல் மேவுதற்கே. - பட்டினத்தடிகள் மும்மணிக்கோவை
மருதப்பெருமானாராகிய சிவனாரின் திருவருளைப் பெறுவதற்கு கீழ்கண்ட ஐந்து நல்வினைகளை (புண்ணியங்களை) செய்ய வேண்டும் என்கிறார் கடவுள் நிலையறிந்து அம்மயமான பட்டினத்து அடிகள்
1. திருஐந்தெழுத்தினை ஓதுதல்
2,சிவலாயத் திருப்பணிகளை செய்தல்
3, சிவபெருமானுடைய திருப்புகழினை பேசி மகிழ்தல்
4,உருத்திராட்சம் அணிந்து கொள்வது
5, உடலில் திருவெண்ணீறு அணிந்து மகிழ்தல்
2, சிவலாயத்தை தூய்மை ெசெய்தல்:
சிவபெருமானார் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஆலங்களை பெருக்குதல், மெழுகுதல், தேவையற்ற மரம், செடி, கொடிகளை அகற்றி தூய்மை செய்தல் ஆகிய நல்வினை செயல்களாகும்.
அன்று மலர்ந்த பூக்களை எடுத்து மாலையாக தொடுத்தல், வாயாரப் புகழ்ந்து பாடுதல், தலையால் வணங்குதல், செலவில்லாத புண்ணியச் செயல்களாகும், இவற்றை இயம்பி நிற்கும் அரிய தமிழ் திருமுறை பாடல்.
"நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே. " திருநாவுக்கரசர் தமிழ் திருமுறை - 6
3, மலர் தொண்டு செய்தல்:
சிவலாயத்திற்கு வேண்டிய பூக்களை கொடுத்து உதவுதல் மேலான புண்ணியமாகும். ஆலயத்தில் உள்ள பூக்களை அதிகாலையில் எடுத்து, மாலையாக தொடுத்தளிக்கலாம். நம் வீட்டில் பூச்செடிகள் வைத்தும், பூக்கும் பூக்களை ஆலயத்திற்கு அளிக்கலாம், நறுமணமுள்ள மலர்களையே ஆலயத்திற்கு அளிக்க வேண்டும், " நறுமாமலர் கொய்து" என்பார் அப்பர் அடிகள்.
4, இறைவருடைய திருநாமத்தைச் சிந்தித்தல்:
" நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே" - சுந்தரர்
காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே. - சம்பந்தர் தேவாரம் 3
"பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே" - நாவுக்கரசர்
நம்முடை ய தீவினைகளை நீக்கி, நல்வினை பெருகுவதற்கு இறைவருடைய திருநாமத்தை சிந்தித்தல் (செபித்தல்) அவசியமாகும். பெரும் பொருள் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. பாவங்கள் தொலைந்து நல்வினை பெருக உரிய வழியும், எளிய வழியும் இதுவே எனலாம். ஒரு நாளைக்கு காலை, நண்பகல், மாலை இரவு என நான்கு வேளைகளிலும் ஓதி நலம் பெறலாம்.
5. சிவலாய வழிபாடு மற்றும் சிவத்தல யாத்ததிரை செய்தல்:
பெற்ற பயன்களில் தலையாயது சிவபெருமானாருடைய ஆலயத்தை வலம் வந்து மலர் தூவி வழிபடுவது என்கிறார் அப்பர் சுவாமிகள்.
"ஆக்கையால் பயன் என் அரன் கோயில் வலம் வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இவ் ஆக்கையால் பயன் என். - நாவுக்கரசர்
குறைந்தது ஒருநாளைக்கு இரண்டு வேளையாவது ஆலயம் சென்று தொழ வேண்டும். என்பது அப்பர் பெருமானார் அருள்வாக்கு. மனிதன் தவிர மற்ற உயிரிகள் இதனை செய்ய இயலா. மனிதப் பிறவியில் மட்டுமே இது முடியும்.
"நாடு நகரமும் நல்திருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெருமான் என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே, - திருமூலர் திருமந்திரம்
சிவத்தலயாத்திரை செய்வது நல்வினை பெறுவதற்கு சிறந்த வழியாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், பட்டினத்து அடிகள் போன்ற பலரும் சிவத்தல யாத்திரை செய்துள்ளதை நாம் அறிவோம்,
6, சிவலாயத்தில் விளக்கேற்றல்:
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்" திருநாவுக்கரசர்
நமிநந்தி அடிகள், கலிய நாயனார், கணம்புல்லர்,ஆகியோர், சிவலாயத்தில் தொடர்ந்து விளக்கேற்றி நற்பேறு பெற்றதை பெரியபுராணம் வாய்லாக அறியலாம், கலய நாயனார் சிவலாயத்தில் " குங்குலியம்" எனப்படும் நறுமணத்தை அளிக்கும் திருத்தொண்டினைச் செய்து நலம் பெற்றார், இவ்வாறு இயன்ற சிவத்தொண்டுகளை செய்து நல்வினைகளைப் பெறலாம்.
7. தமிழ் வேதப் பதியங்களை பாராயணம் செய்தல்:
மிகச் சிறந்த புண்ணியச் செயல் இதுவும் ஒன்றாகும், நம்முடைய பழைய வினைகள் யாவும் இல்லாது ஒழியும் என்கிறார் ஞான சம்பந்தர்.
" ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசமபந்தன்உரை செய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே." சம்பந்தர்
பதிகப பாராயணமும் மனிதப் பிறவியில் தான் இயலும். பேசும் திறம் பெற்ற நாம் இதை செய்தே ஆக வேண்டும்.
"...... வருங்கலை ஞான சமபந்தன் தமிழின்
ஒலிகெழுமாலை யென்றுரை செய்த பத்தும்
உண்மையினால் நினைந்து ஏத்தவல்லார் மேல்
மெலிகெழுதுயர் அடையா வினைசிந்தும்
விண்ணவர் ஆற்றலின் மிகப் பெறுவாரே".
கலைஞானம் மிகுந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருக்கழுமலப்பதிகத்தை உண்மையான அன்புடன் நினைந்து பாராயணம் செய்பவர்கட்குச் சோர்வை அளிக்கும் துன்பங்கள் வாரா. வினைகள் அழியும். விண்ணவர்கள் மேம்பட்ட ஆற்றலை பெறுவார்கள்.
" தமிழ் நாடு ஞானசம்பந்தன் சொல்லிவை
பாடுவார்க்கு இல்லை பாவமே."
8. அடியார் தொண்டு செய்தல்:
சிவபெருமானாரை இடைவிடாது மனத்தில் நினைந்து வாழும் சிவனடியார்களை " நடமாடக்கோயில்" என்கிறார், திருமூல நாயனார். இத்ததையவர்கட்கு எந்த உதவியைச் செய்தாலும் அது இறைவருக்கு சென்று சேரும் என்கிறார்.
"நடமாடக் கோயில் நம்பற்கு ஒன்று ஈயின்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே." - திருமந்திரம்
மெய்பொருள் நாயனார் எப்படி வாழ்ந்தார் என்று பெரிய புராணம் கூறுவதைக் காண்போம்.
"தேடியமாடு நீடுசெல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று
நாடியமனத்தோடு நாயன்மார் அணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவறக் கொடுத்து வந்தார். பெரியபுராணம் திருமறை 12
சித்த்தை சிவன்பால் வைத்த சிவனருட் செல்வர்கள் மெய்பொருள் நாயனாரிடம் ஏதேனும் வேண்டும் என்று வந்தபோது குறைவின்றி கொடுத்து வாழ்ந்தார் என்கிறது , இத்துடன் சிவனாடியார் பிள்ளைக்கரி கேட்டபோது தன் பிள்ளையே கறியாக்கி சமைத்து கொடுத்த சிறுத்தொண்ட நாயனார் வழியாகவும், சிவனாடியார் தொண்டே மகேசன் தொண்டு வாழ்ந்த அப்பூதியடிகள் வரலாற்றின் மூலம் சிவனடியார் தொண்டின் பெறுமையை நன்கு அறியலாம்.
9. சான்றோர்களுடன் மட்டுமே சேரவேண்டும்:
சான்றோர்களுடன் தான் உறவு வேண்டும் என்று வள்ளலார் கூற்று
ஒருமையுடன் நின் திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தன் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பதிலிருந்து சான்றோர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்று அறியலாம்
"வென்றிலேன் புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகந் தன்னுள்
சென்றிலன் ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்" திருமறை 4
புலன்களை வென்ற சான்றோர்களுடன் தொடர்பு கொண்டு வாழ வேண்டும். மனம் நல்லதில் மட்டும் நாட்டம் கொள்ளும், நல்லதில் மட்டும் நாட்டம் கொள்ளும் வழியைத்தான் திருநாவுக்கரசர் "செந்நெறி" என்கிறார். இத்துடன் சுந்தரரும் " உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே." என்கிறார்.
10. ஏழை எளியவர்கட்கு உதவுதல்:
ஒருவரிடம் தேவைக்கு மேல் செல்வத்தை இறைவர் அளிப்பதன் காரணம் ஏழைகட்கு உதவுவதற்குத்தான் என்கிறார் திருநாவுக்கரசர் இப்படி உதவினால் இறைவர் மேலும் மேலும் செல்வத்தை அளிப்பார் என்றும் கூறியுள்ளார, அப்படி தேவைக்கு மேல் சேர்ந்துள்ள செல்வத்தை ஏழை எளிய மக்களுக்கு அளிக்காதவர்கட்குக் கடும் நரகங்களை வைத்துள்ளார் இறைவர் என்றம் அருளியுள்ளதை நாம் சிந்திக்க வேண்டும். ஏழைகளையும் படைத்து நம்மிடம் தேவைக்கு மிஞ்சிய செல்வத்தையும் அளித்து நல்வினை தேடிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆம். இதனால் நம் பாவங்கள் தீரும். நாம் செய்த தீவினைகள் நம்மை வந்து தீண்டா. இவற்றையெல்லாம் இயம்பி நிற்கும் நாவரசரின் அரிய பாடல்
" இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பர் தங்கட் கெல்லாம் கடும் நரகங்கள் வைத்தார்," - அப்பர் தேவாரம்
" யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" - திருமூலர் திருமந்திரம்
கொடுத்துக் கொடுத்துப் பழகிவிட்டால் பிறர் பொருள் மீது ஆசை வராது. ஆசைதான் பாவச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது. ஆசை அழியுமானால் தீவினை செய்யாமல் வாழலாம்.
11. பிராணிகட்கு உணவிடுதல்:
உலகத்தில் உள்ள உயிரினங்கள் மற்றும்தாவரங்கள் ஆகிய யாவும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழும்படி இறைவர் படைத்துள்ளார். மனித வாழ்வில் பிராணிகள் பங்கு அதிகம். இவற்றிக்கு அன்றாடம் ஒருபிடி உணவு கொடுப்பது பாவங்கள் தீரும் வழியாகும். " யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை" - திருமூலர் திருமந்திரம் கூறும் வாக்கு
பிராணிகளில் பசு மட்டும் அல்ல, காகத்திற்கு உணவிடுவது நம் இந்துமதத்தின் ஒரு மரபாகவே உள்ளது. மேலும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் வளர்ப்பதும் இதன் நோக்கம் தான்.எனவேதான் ஆன்மீகத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் வாகனமாக ஒவ்வொரு பிராணிகளை இணைத்துள்ளார்கள் முன்னோர்கள்
12. தாவரங்கள் வளர்த்தல்:
உலகம் நலமாக திகழ்வதற்கு தாவரங்கள் பங்கு மிகமிக அதிகமாகும். உலக உயிர்கள் வாழ்வதற்கு இவற்றின் பங்கு
தவிர்க்க முடியாத ஒன்றாகும். சுவாசிக்கும் காற்று முதல் உயிர் வாழ்க்கைக்கு தேவையான யாவற்றையும் தாவரங்கள் தான் நமக்கு தருகின்றன. இதனை உணர்ந்த ஞானிகள் தாவரங்களைப் போற்றி பாதுகாப்பது பெரும் புண்ணியம் என்று கூறியுள்ளார்கள்.
"கரகத்தால் நீர்அட்டி காவினை வளர்ப்பீர்" - திருமூலர் திருமந்திரம்
நான்காம் நூற்றாண்டிலேயே ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ள தமிழர்களின் தொலை நோக்கு பார்வையைப் பாராட்ட வேண்டும். ஓவ்வொரு சிவாலயத்திலும் "தலமரம்" என்று சொல்லி மரங்களை தெய்வமாகவே போற்றியுள்ளதை நாம் மனத்தில் கொள்ளவேண்டும், மரம் வளர்ப்பது பாவங்களை தீர்க்கும் நல்வினையாகும்.
13, உலக நன்மைக்கு வேண்டுவது:
இறைவருடைய கருனையால் நடத்தப்படும் இந்த உலகமே இறைமயம் தான். உலகம் நலமாக இருக்க வேண்டும் என்று நாம் மனதால் வேண்டவேண்டும், நாம் நலமாக வாழ்வோம். உலகத்தில் நாமும் ஒருவர்தான், இதனை விளக்கும் பாடல்
"வையம் நீடுக மாமழை மன்னுக
மெய்விரும்பிய அன்பர் விளங்குக
சைவநன்னெறிதாம் தழைத்து ஓங்குக
தெய்வ வென்திருநீறு சிறக்கவே"
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசுசெய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்" பன்னிரு திருமுறையில் சேக்கிழார் அவர்களின் கடைசி வாழ்த்து பாடல்
வழிதெரியாதவர்கட்கு வழிகாட்டலாம். அறியாமையில்உள்ளவர்கட்கு நல்ல அறவுரைகள் வழங்கலாம், பிரிந்த இருவரைச் சேர்த்து வைக்கலாம், நடைபாதையில் கிடக்கும் வேண்டாத தீங்குவிளைவிக்கும் பொருட்களை அப்புறப் படுத்தலாம். இனிய சொல்லே பேசுதல், இப்படி செலவில்லாத ஏராளமான நல்வினைச் செயல்களைச் செய்யலாம், நாம் தவறுகளைச் செய்யும் பொழுது இறைவர் மனசாட்சியாய் இருந்து " இதுதவறு" என்று உணர்த்துகிறார். ஆணவம் மற்றும் பேராசை காரணமாக நாம்தான் அதைப் பொருட்படுத்தாமல் செயல்படுகிறோம், " பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி" என்னும் தொடரை மனத்தில் வைத்து, உலகிற்கு நலம் தரும் புண்ணியச் செயல்களை மட்டுமே செய்து வரவேண்டும், மறந்தும் மற்ற உயிர்கட்கு தீமையைச் செய்துவிடக் கூடாது, கருணை நிறைந்த ஆன்மா இறைவருடைய கருணையை எளிதில் பெற்றுவிடுகிறது, செல்வம் நிறைந்தவர்கள் , பொருட் செல்வங்களாலும், அதனால் முடியாதவர்கள் தங்களால் முடிந்த அளவு சேவை மனப்பான்மையையும் கொண்டு பிறர் மனம் நோக வண்ணம் இனிது பேசியும் , உதவிகள் செய்தும், முடிந்த அளவு உழவாரப்பணிகள் செய்து, பாவச்செயல்ளை தீர்க்க வல்ல புண்ணிச் செயல்கள் செய்து, நாமும் நலமுடன் வாழ்ந்து, பிறரையும் நலமுடன் வாழச்செய்து, இறையருளைப் பெற்று இனிவரும் பிறவிக்கும் காரணமாய் அமைந்து மேலான நிலையை அடைய உதவுபவை இப்புண்ணிய செயல்களே என்பதை அறிந்து செயல்படுவோம்.
திருச்சிற்றம்பலம்
நன்றி: தமிழ்வேதம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
பிறவாமையைப் பெறுவதற்கு எளிய வழி
ஒரு நாள் திருநாவுக்கரசு சுவாமிகள் சிவலாயம் ஒன்றில் திருப்பணி முடித்து வருங்கால் தன் எதிரில் ஒரு பெரியவர் அப்பர் பெருமானிடம் அய்யா முதுமை அடைந்து விட்டேன், எனக்கு விரைவில் பிறப்பற்ற இறப்பு கிடைக்குமா? என்று வினவினார், அப்பர் சுவாமிகளிடம். உடனே அப்பர் சுவாமிகள் அப்பெரியவரிடம் கேட்டார், " அய்யா ! தாங்கள் இந்நாள் வரை தினமும் ஒருபொழுதேனும் இறைவனின் திருநாமமாகிய திருஐந்தெழுத்தை வாயாரா கூறி வந்துள்ளீர்களா?, அனுதினமும் இறைவனுடைய பெருமைகளையும், கேட்டும் ஏனையோருக்கு கூறியும் பாடியும் உள்ளீர்களா? , தினமும் உணவு அருந்தும் முன் அருகிலுள்ள சிவலாயம் சென்று வலம் வந்து அவரை சேவித்துள்ளீர்களா? , இறைவனுக்கு மலர் பறித்து அவன் பாதங்களில் சமர்த்துள்ளீர்களா?, சைவ நெறியின் அடையாள சின்னமாகிய அனுதினமும், சிவாயநம என்று கூறி திருநீரு அணிந்து வந்துள்ளீர்களா?, சிவத்தின் அடையாள சின்னமான உத்திராட்சம் அணிந்து வந்துள்ளீர்களா?" என்றார், அதற்கு அப்பெரியவர் அய்யா இவற்றை எல்லாம் ஒருநாளும் ஒரு பொழுதேனும் செய்ததும்இல்லை, கேட்டதும் இல்லை என்றார், உடனே அப்பர் பெருமான் மனம் நொந்து " அய்யா, இவ்வளவு காலமும் இதையெல்லாம் செய்யாமல் வீணாக காலத்தை கழித்து விட்டீரே ! கிடைத்தற்கரிய வாய்ப்பை இதுவரை நலுவ விட்டுவிட்டேரே! செய்த பாவங்களை குறைக்க எடுத்த மனிதப் பிறவியை வீணே துலைத்து விட்டு மேலும் மேலும் பாவ சுமைகளை ஏந்தியுள்ளீர்களே ! " என்றார். இதன் பொருட்டு அப்பர் பெருமான் பாடிய பாடல்
"திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்
ஒருகாலுந் திருக்கோவில் சூழாராகில்
உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில்
அருநோய்கள் கெட வெண்ணீ றணியாராகில்
அளியற்றார் பிறந்த வாறு ஏதோ என்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே " நாவுக்கரசர் தமிழ் வேதம் 6
இறைவருடைய திருநாமமாகிய திரு ஐந்தெழுத்தை சொல்லாமலும், இறைவருடைய பெருமைகளை ஒரு முறையாவது பேசாமலும், தினமும் ஒருமுறையாவது சிவாலயத்தை வலம் வராமலும் , உண்பதற்கு முன் இறைவருக்கு மலர் பறித்து இடாமலும், சைவ சின்னமான திருவெண்ணீரு அணியாமலும் வாழ்பவர்கள் நோய்களால் துன்புற்று இறப்பர், மீண்டும் மீண்டும் பிறப்பர், அப்பிறவியிலும் பயனின்றி மீண்டும் இறப்பர், இதுவே இவர்களுக்கு தொழிலாகி விடும்.
மிக முக்கியமான செயல் திருஐந்தெழுத்தைச் சொல்லுவதாகும், இதனால் நோய்களும் நீங்கும், இனிமேல் பிறக்கவும் நேரிடாது. இதனை சொல்பவர், திருநாமத்தை சொல்லி (சிவாயநம) (நமசிவாய) செபித்து, பிறவாமையை அடைய திருநாவுக்கரசர் சுவாமிகள் ஆவார்,
பெரும் பொருள் செலவு செய்து அர்த்தமற்ற சடங்குகள் ஆரவாரத்துடன் செய்வதால் பிறவாமையைப் பெற்றுவிட முடியாது.
திருச்சிற்றம்பலம்
நன்றி: தமிழ்வேதம்
மேலும் பல ஆன்மீகத் தகவல்களுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
ஒரு நாள் திருநாவுக்கரசு சுவாமிகள் சிவலாயம் ஒன்றில் திருப்பணி முடித்து வருங்கால் தன் எதிரில் ஒரு பெரியவர் அப்பர் பெருமானிடம் அய்யா முதுமை அடைந்து விட்டேன், எனக்கு விரைவில் பிறப்பற்ற இறப்பு கிடைக்குமா? என்று வினவினார், அப்பர் சுவாமிகளிடம். உடனே அப்பர் சுவாமிகள் அப்பெரியவரிடம் கேட்டார், " அய்யா ! தாங்கள் இந்நாள் வரை தினமும் ஒருபொழுதேனும் இறைவனின் திருநாமமாகிய திருஐந்தெழுத்தை வாயாரா கூறி வந்துள்ளீர்களா?, அனுதினமும் இறைவனுடைய பெருமைகளையும், கேட்டும் ஏனையோருக்கு கூறியும் பாடியும் உள்ளீர்களா? , தினமும் உணவு அருந்தும் முன் அருகிலுள்ள சிவலாயம் சென்று வலம் வந்து அவரை சேவித்துள்ளீர்களா? , இறைவனுக்கு மலர் பறித்து அவன் பாதங்களில் சமர்த்துள்ளீர்களா?, சைவ நெறியின் அடையாள சின்னமாகிய அனுதினமும், சிவாயநம என்று கூறி திருநீரு அணிந்து வந்துள்ளீர்களா?, சிவத்தின் அடையாள சின்னமான உத்திராட்சம் அணிந்து வந்துள்ளீர்களா?" என்றார், அதற்கு அப்பெரியவர் அய்யா இவற்றை எல்லாம் ஒருநாளும் ஒரு பொழுதேனும் செய்ததும்இல்லை, கேட்டதும் இல்லை என்றார், உடனே அப்பர் பெருமான் மனம் நொந்து " அய்யா, இவ்வளவு காலமும் இதையெல்லாம் செய்யாமல் வீணாக காலத்தை கழித்து விட்டீரே ! கிடைத்தற்கரிய வாய்ப்பை இதுவரை நலுவ விட்டுவிட்டேரே! செய்த பாவங்களை குறைக்க எடுத்த மனிதப் பிறவியை வீணே துலைத்து விட்டு மேலும் மேலும் பாவ சுமைகளை ஏந்தியுள்ளீர்களே ! " என்றார். இதன் பொருட்டு அப்பர் பெருமான் பாடிய பாடல்
"திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்
ஒருகாலுந் திருக்கோவில் சூழாராகில்
உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில்
அருநோய்கள் கெட வெண்ணீ றணியாராகில்
அளியற்றார் பிறந்த வாறு ஏதோ என்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே " நாவுக்கரசர் தமிழ் வேதம் 6
இறைவருடைய திருநாமமாகிய திரு ஐந்தெழுத்தை சொல்லாமலும், இறைவருடைய பெருமைகளை ஒரு முறையாவது பேசாமலும், தினமும் ஒருமுறையாவது சிவாலயத்தை வலம் வராமலும் , உண்பதற்கு முன் இறைவருக்கு மலர் பறித்து இடாமலும், சைவ சின்னமான திருவெண்ணீரு அணியாமலும் வாழ்பவர்கள் நோய்களால் துன்புற்று இறப்பர், மீண்டும் மீண்டும் பிறப்பர், அப்பிறவியிலும் பயனின்றி மீண்டும் இறப்பர், இதுவே இவர்களுக்கு தொழிலாகி விடும்.
மிக முக்கியமான செயல் திருஐந்தெழுத்தைச் சொல்லுவதாகும், இதனால் நோய்களும் நீங்கும், இனிமேல் பிறக்கவும் நேரிடாது. இதனை சொல்பவர், திருநாமத்தை சொல்லி (சிவாயநம) (நமசிவாய) செபித்து, பிறவாமையை அடைய திருநாவுக்கரசர் சுவாமிகள் ஆவார்,
பெரும் பொருள் செலவு செய்து அர்த்தமற்ற சடங்குகள் ஆரவாரத்துடன் செய்வதால் பிறவாமையைப் பெற்றுவிட முடியாது.
திருச்சிற்றம்பலம்
நன்றி: தமிழ்வேதம்
மேலும் பல ஆன்மீகத் தகவல்களுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
ஆத்ம தண்டனை
அயோத்தியில் ஸ்ரீராமபிரான் தன் நாட்டு மக்களின் மனநிலை அறிய விரும்பினார், ஆகவே ஒரு நாள் அவர் அரசகோலகளின்றி சாதாரண மனிதனைப் போல தம்பி லட்சுமணனையும் அழைத்துக் கொண்டு ஊரை வலம் வந்து கொண்டிருந்தார், அவரின் மனம் தொட்ட காட்சியினை கண்டார்.
பசுமை நிறைந்த வனத்தின் ஒரத்தில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அங்கே பல நாடுகள் கடந்து வந்த வெளியூரைச் சேர்ந்த துறவி ஒருவர் புதிதாக வந்திருந்தார், துறவி ஆற்றில் நன்றாக அமிழ்ந்து ஸ்நானம் செய்தார், ஆசார - அனுஷ்டானங்களை முடித்து பிறகு பையில் இருந்து சமித்துக்களை எடுத்து தீ வளர்த்தார். இவர் ஹோமம் செய்யப் போகிறார் என்று நினைத்த ராமபிரானுக்கு மறுபட்ட செயல் நடந்தது. அந்த துறவி இரண்டு பாத்திரங்களை எடுத்து அவற்றில் நீரை நிறைத்து மற்றொன்றில் மாவைப் போட்டு நீரைத் தெளித்து பிசைந்து அந்த மாவினால் ஆறு ரொட்டிகளைச் செய்தார்.
முதல் இரண்டு ரொட்டியில் நெய்யைத்தடவியும், இரண்டில் தேனையும் தடவியும், மீதி இரண்டில் ஊறுகாையைத் தடவியும் தீயில் வாட்டினார், பிறகு கரையில் அமர்ந்து ஜபம் செய்தார், சிறிது நேரம் கழித்து கண்விழித்தார், துறவி ரொட்டி தட்டை எடுத்தார், அந்த நேரத்தில் அவ்வழியாக ஓர் ஊனமுற்றவர் சென்று கொண்டிருந்தார், துறவி அவரை அழைத்து ஊறுகாய் தடவிய இரண்டு ரொட்டிகளைக் கொடுத்தார், அடுத்த நான்கு ரொட்டிகளில் தேன் தடவிய இரண்டு ரொட்டிகளை எடுத்தார், அப்போது அவ்வழியாக வந்த சிறுமிக்கு கொடுத்தார், அடுத்து நெய் தடவியதை எடுத்தார், ஆற்றில் மீன்களுக்கு இரண்டு ரொட்டிகளை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப் போட்டுவிட்டு மூட்டையை பழையபடியே கட்டி வைத்துவிட்டு அடுப்பில் இருந்த சாம்பலை எடுத்து தண்ணீரில் கரைத்து மடமடவென்று அருந்திவிட்டு அந்த கிண்ணத்தை பையில் வைத்துவிட்டு யாத்திரைக்கு புறப்பட்டார் துறவி. இந்த காட்சியை கண்ட ஸ்ரீராமபிரான் ஆச்சரியப்பட்டு, விபரம் புரியாமல் அவரை நெருங்கி " சுவாமி நீங்கள் செய்த மூன்று வகையான ஆறு ரொட்டிகளையும் மூன்று விதமானத் தானம் செய்து விட்டீர்கள், பிறகு அடுப்பு சாம்பலை நீரில் கரைத்து அருந்திவிட்டு பயணம் செய்யப் புறப்பட்டுவிட்டீர்கள், நீங்கள் ஏன்இவ்வாறு செய்தீர்கள் என்று புரியவில்லை? விளக்கம் தருக என வேண்டினார்,
" ஆமாம் அப்பா, நான் ஸ்நானம் செய்த பின் ஜபம் செய்யும் போது இப்படி ஓடியது இரண்டு ரொட்டியைத் தேன் தடவியும், இரண்டை நெய்த் தடவியும், சாப்பிட வேண்டும் என்று மனம் விரும்பியது, அதை திருப்திபடுத்தவே அந்த ரொட்டிகளை செய்தேன்,என்றார், துறவி, பிறகு ஏன் சுவாமி நீங்கள் அவற்றை உட்கொள்ளவில்லை? என்று ராமர் கேட்டார்,
துறவியாகிய நான் எல்லா புலன்களையும் அடக்கிவிட்டேன் ஆனால் மனதை மட்டும் வெல்ல சிறிது சிரமப்பட்டேன், அதன் விளைவாகவே ரொட்டி செய்தேன் மனதை சமாதனப்படுத்திவிட்டேன் உடனே .............. " சாம்பலாகப் (மண்ணாக) போகும் இந்த சரீரத்திற்குள் இருந்து கொண்டு உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப் போல நான் கூறுவதை கேட்காமல் என் பாழ் மனமே, இன்று உனக்கு இந்தச சாம்பல்தான் ஆகாரம் என்று மனத்திற்கு தண்டனை அளித்தேன், என்று விளக்கம் கூறினார், சலனப்படும் மனதை அடக்கினால் ஆசை நீங்கப் பெறும், என்பதை உணராலாம். பற்று நீக்கின் தானம் வளரும், ஆத்மா சுகப்படும்.நன்றி: படித்தததில் பிடித்தது அமைதி தரும் ஆன்மீகம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
அயோத்தியில் ஸ்ரீராமபிரான் தன் நாட்டு மக்களின் மனநிலை அறிய விரும்பினார், ஆகவே ஒரு நாள் அவர் அரசகோலகளின்றி சாதாரண மனிதனைப் போல தம்பி லட்சுமணனையும் அழைத்துக் கொண்டு ஊரை வலம் வந்து கொண்டிருந்தார், அவரின் மனம் தொட்ட காட்சியினை கண்டார்.
பசுமை நிறைந்த வனத்தின் ஒரத்தில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அங்கே பல நாடுகள் கடந்து வந்த வெளியூரைச் சேர்ந்த துறவி ஒருவர் புதிதாக வந்திருந்தார், துறவி ஆற்றில் நன்றாக அமிழ்ந்து ஸ்நானம் செய்தார், ஆசார - அனுஷ்டானங்களை முடித்து பிறகு பையில் இருந்து சமித்துக்களை எடுத்து தீ வளர்த்தார். இவர் ஹோமம் செய்யப் போகிறார் என்று நினைத்த ராமபிரானுக்கு மறுபட்ட செயல் நடந்தது. அந்த துறவி இரண்டு பாத்திரங்களை எடுத்து அவற்றில் நீரை நிறைத்து மற்றொன்றில் மாவைப் போட்டு நீரைத் தெளித்து பிசைந்து அந்த மாவினால் ஆறு ரொட்டிகளைச் செய்தார்.
முதல் இரண்டு ரொட்டியில் நெய்யைத்தடவியும், இரண்டில் தேனையும் தடவியும், மீதி இரண்டில் ஊறுகாையைத் தடவியும் தீயில் வாட்டினார், பிறகு கரையில் அமர்ந்து ஜபம் செய்தார், சிறிது நேரம் கழித்து கண்விழித்தார், துறவி ரொட்டி தட்டை எடுத்தார், அந்த நேரத்தில் அவ்வழியாக ஓர் ஊனமுற்றவர் சென்று கொண்டிருந்தார், துறவி அவரை அழைத்து ஊறுகாய் தடவிய இரண்டு ரொட்டிகளைக் கொடுத்தார், அடுத்த நான்கு ரொட்டிகளில் தேன் தடவிய இரண்டு ரொட்டிகளை எடுத்தார், அப்போது அவ்வழியாக வந்த சிறுமிக்கு கொடுத்தார், அடுத்து நெய் தடவியதை எடுத்தார், ஆற்றில் மீன்களுக்கு இரண்டு ரொட்டிகளை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப் போட்டுவிட்டு மூட்டையை பழையபடியே கட்டி வைத்துவிட்டு அடுப்பில் இருந்த சாம்பலை எடுத்து தண்ணீரில் கரைத்து மடமடவென்று அருந்திவிட்டு அந்த கிண்ணத்தை பையில் வைத்துவிட்டு யாத்திரைக்கு புறப்பட்டார் துறவி. இந்த காட்சியை கண்ட ஸ்ரீராமபிரான் ஆச்சரியப்பட்டு, விபரம் புரியாமல் அவரை நெருங்கி " சுவாமி நீங்கள் செய்த மூன்று வகையான ஆறு ரொட்டிகளையும் மூன்று விதமானத் தானம் செய்து விட்டீர்கள், பிறகு அடுப்பு சாம்பலை நீரில் கரைத்து அருந்திவிட்டு பயணம் செய்யப் புறப்பட்டுவிட்டீர்கள், நீங்கள் ஏன்இவ்வாறு செய்தீர்கள் என்று புரியவில்லை? விளக்கம் தருக என வேண்டினார்,
" ஆமாம் அப்பா, நான் ஸ்நானம் செய்த பின் ஜபம் செய்யும் போது இப்படி ஓடியது இரண்டு ரொட்டியைத் தேன் தடவியும், இரண்டை நெய்த் தடவியும், சாப்பிட வேண்டும் என்று மனம் விரும்பியது, அதை திருப்திபடுத்தவே அந்த ரொட்டிகளை செய்தேன்,என்றார், துறவி, பிறகு ஏன் சுவாமி நீங்கள் அவற்றை உட்கொள்ளவில்லை? என்று ராமர் கேட்டார்,
துறவியாகிய நான் எல்லா புலன்களையும் அடக்கிவிட்டேன் ஆனால் மனதை மட்டும் வெல்ல சிறிது சிரமப்பட்டேன், அதன் விளைவாகவே ரொட்டி செய்தேன் மனதை சமாதனப்படுத்திவிட்டேன் உடனே .............. " சாம்பலாகப் (மண்ணாக) போகும் இந்த சரீரத்திற்குள் இருந்து கொண்டு உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப் போல நான் கூறுவதை கேட்காமல் என் பாழ் மனமே, இன்று உனக்கு இந்தச சாம்பல்தான் ஆகாரம் என்று மனத்திற்கு தண்டனை அளித்தேன், என்று விளக்கம் கூறினார், சலனப்படும் மனதை அடக்கினால் ஆசை நீங்கப் பெறும், என்பதை உணராலாம். பற்று நீக்கின் தானம் வளரும், ஆத்மா சுகப்படும்.நன்றி: படித்தததில் பிடித்தது அமைதி தரும் ஆன்மீகம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
தீபாராதனை
உலகம் முழுவதும் நிறைந்த இறைவனை ஆவாஹனம் செய்து வழிபடும் இடம் ஆலயம். ஆன்மா என்பது ஜோதி வடிவம் ஆகும், இதை எளிமையாக உணர்த்துவதுதான் ஆலங்களில் தீபாராதனை வழிபாடு நடக்கிறது. தீபாவளித் திருநாள், கருத்திகைத் திருநாள் என்று துவங்கி இல்லத்தில் தினமும் நாம் செய்யும் தீபாராதனை வரையில் தினமும் பூசை மற்றும் பண்டிகைகள் என்று அனைத்துமே தீபாராதனையில் சமர்ப்பணம் ஆகிவிடுகிறது. இதில் குறிப்பாக ஆலய தீபாராதனைகளில் ஒரு நீண்ட தத்துவமே அடங்கி உள்ளது. ஆலயத்தில் அலங்கரிக்கப்பட்ட மூர்த்திகளுக்கு முன்பு திரையிடப் படுகிறது. இறைவனின் உள்ளத்தில் உலக சிருஷ்டிசெய்யும் எண்ணத்தை இது தெரிவிக்கிறது. திரைக்கு உள்ளே முதலில் குருக்கள் பூஜையைத் தொடங்க மணியை அடிக்கிறார். எல்லையில்லா பிரம்மத்திடம் முதலில் ஒலி (ஓம்) பிறக்கிறது. மணி நாதத் தத்துவத்தை நினைவுபடுத்துகிறது. இது ஒரு காரணம் ,மற்றொன்று, உலகாயத வேலைகளில் மூழ்கியிருக்கும் மக்கள் மணியோசை கேட்டு தெய்வ சிந்தனையில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் மணி அடிக்கப் படுகிறது. பின்னர் திரை விலக்கி ஒரு தீபம் காட்டப்படுகிது, தமஸோமா ஜ்யோதிர்கமய"என்பது வேதவாக்கியம், இருளிலிருந்து ஒளிக்கு அழைத்து செல் என்பது இதன் பொருள்.
நம்மை மாயை என்ற அஞ்ஞான இருள் விலக்கி, ஞான ஒளி பிரகாசிக்க செய்ய வேண்டும் என்பதே தீபாராதனையின் தத்துவத்தின் முதல்படி, ஒரே பரம்பொருள் பல மூர்த்திகளாக விளங்கின்றன. அதைத்தான் "ஏகம் சத் - விப்ராபஹூதா வதந்தி " என்று வேதத்தில் கூறப்படுகிறது. எனவே ஈசனை எந்த உருவில் வணங்கினாலும் அது இறுதியில் ஒரு பரம்பொருளையே போய் சேரும் என்பதும் இதன் தத்துவக் கருத்தாகும்.
"ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க" - திருவாசகம்
ஒன்றே! பல உருவே! அருவே! - அபிராமி அந்தாதி
" ஏக நானேனெவ்வுயிர்களுந்தானே
யென்பதும் அன்பினுக்கெளியவன்" - திரு விளையாடல் புராணம்
பின்னர் ஐந்து தட்டுகள் உள்ள தீபம் காட்டப்படுகின்றன. சிவபெருமானின் ஐந்து முகங்களையும், அதிலிருந்து பஞ்ச பூதங்கள் படைக்கப்படுவதையும் உணர்த்துகின்றன.
" பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி!
நீரிடை நான்காய் திகழந்தாய் போற்றி!
தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி! - திருவாசகம்
திட விசும்பு, எரி ,வளி, நீர், நிலம், இவை மிகைப்படா பொருள் முழுவதுமாய் அவை அவைதோறும் உடல் மிசை உயிரேனக் காத்து எங்கும் பரந்துளன் - நம்மாழ்வார் (திருவாய்மொழி)
முதன் முதல் பிரம்ம ஒசையாகி ஓங்காரமாய் இருந்து பிறகு ஒளியாக பல தீபமாகி ஆத்மாக்களாக மாறி புல்-பூண்டு ெசெடி - தாவரம் முதல் தேவர்கள் வரையில் பலவாக மாறியது, ஒரே பரம் பொருளிலிருந்து அனைத்தும் தோன்றியது என்பதையே அடுக்கு ஆரத்தியில்தீபங்கள் பல தட்டுக்களில் இருந்தாலும் அவை உருவமற்ற ஒரே பரம்பொருளின் வடிவத்தை குறிப்பிடுகிறது.
அடுத்து கும்ப ஆர்த்தி கும்பம் உலகத்தையும் அதன் மீதுள்ள தீபம் அதை இயக்கும் சக்தியையும் குறிக்கிறது.
"(அண்டம்) சிறியவாகப் பெரியோன்" - திருவாசகம்
"அண்டம் ஒர் அணுவும் பெருமை கொண்டு" - திருவிசைப்பா
அண்டங்கள் எல்லாம் அணுவாக
அணுக்களெல்லாம் அண்டங்களாகப்
பெரிதாய் சிறிதாயினானும் " திருவிளையாடல் புராணம்
" வெளிப்படையாக இல்லாத உருவம் கொண்ட நான் உலகமெங்கும் பரவியிருக்கிறேன் , சகல ஜீவ கோடிகளும் என்னுள் அடங்கியுள்ளன " - கீதை
" உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே " - கம்பராமாயணம்
உலகம் முழுவதையும் படைத்து காத்து அழிக்கும் விளையாட்டே என்று செய்யும் தலைவரின் திருவடிகளுக்கே நாங்கள் அடைக்கலம் என்கிறது.
அடுத்தபடி நாக தீபம் ஊர்வனவற்றையும் , மயுர தீபம், பறவை இனத்தையும், குக்குட தீபம் ரிஷப தீபம், கஜ தீபம் கால்நடை இனத்தையும், புருஷா மிருக தீபம் மிருகம் கலந்த நரசிம்ம ரூபத்தையும் நினைபடுத்தவும், பருஷதீபம் பிறவியின் பெருமையை:
"உடம்பினை பெற்றப் பயனாவது எல்லாம்
உடம்பினில் உத்தமனைக் காண்" - ஒளவை குறள்
புல்லாகி பூண்டாய் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதாராய் பேயாய் கணங்களாய்
வல் அசுராகி முனிவாராய் தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் " - திருவாசகம்
உயிரின் வளர்ச்சிக்கு இறைவன் அடிப்படை என்பதை எல்லா உயிர்களிலும் ஆத்மா சுடர் உள்ளது என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது. இவைகள் உருவத்தில் வேறுபட்டிருந்தாலும் பஞ்ச பூதங்களுக்கு உட்பட்டு இயங்குகின்றன என்பதை உணர்த்தும் வகையில் அவற்றின் மீது பிரடையும் அதில் ஐந்து தீபங்களும் அமைந்துள்ளன.
காற்றில் பெருவலி இருவராகி மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர், தீயதனில் மூவர், விண்ணகத்தில் ஒருவர் - அப்பர்
இப்படியாக ஒரே பரம்பொருளிலிருந்து தோன்றி ஆத்மா பல நிலைகளைக் கடந்து சிந்தனையால் இறைவனை அறிந்து கொள்கிறது.
" சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்" - திருவாசகம்
இந்த ஆன்மா ஒரே ஆர்த்தியாக காட்டப்பட்டு அதன் பக்குவ நிலையை உணர்த்தும் பொருட்டு அத்ன மீது விபூதி தெளிக்கப்படுகிறது. " ஈறிலாதவன் ஈசன் ஒருவனே" - அப்பர் , விபூதி என்பது நமது நிலையை உயர்த்தும் நிலையை சுந்தரமாவது நீறு என்று சம்பந்தர் கூற்றை அறியலாம்
அடுத்தபடியாக ஏழு கிளைகளையுடைய கற்பூர ஆர்த்தி காட்டப்படுகிறது, மனிதன் ஏழு நிலையைக் கடந்தவன் என்பதை எடுத்துக் காட்டுகிறது, இறை அருள் என்ற விபூதி கைவர பெற்ற உயிர் பத்து வித குணங்களைக் கொள்கிது.
இவை : 1, தத்துவ ரூபம், 2,த்ததுதரிசனம், 3,தத்துவ சக்தி, 4. ஆன்மா ரூபம், 5. ஆம்மதரிசனம், 6. ஆன்சுத்தி, 7. சிவரூபம், 8.சிவதரிசனம் 9. சிவயோகம், 10. சிவபோகம், என்பன
இதைக் குறிக்கும் வகையில் இரண்டு மூன்று நான்கு, ஐந்து ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து , பதினொன்று என்று வரிசையாக தீபங்களாக காட்டப்படுகின்றன.
" எங்கும் நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்" குதம்பை சித்தர்
பக்குவம் அடைந்த ஜீவன் இறைவன் சொரூப நிலையைப் பெறுவதால் இறை வடிவமாகப் போற்றப்படுகிறது.
எட்டுத்திசைகளிலும் உள்ளவர்கள் போற்றுவதைக் குறிக்கும் வகையில் அஷ்டமங்கலம் காட்டப் படுகிறது.
" எல்லாம் உனக்கே" என்று இறைவனிடம் கூறி தன்னையே இறைவனிடம் அர்ப்பணிப்பதன் சின்னமே பூசையின் முடிவில் காட்டப்படும் கற்பூர தீபம்.
பூசை முறையில் இந்த தியான பாவனை உச்சகட்டமாகும். தியானத்தின் சின்னமாக மற்ற வழிபாடுகளில் ஏதாவது ஒன்று பிரசாதமாக மிஞ்சும், ஆனால் கற்பூரமம் எரிந்து தீர்ந்தால் அதில் ஒன்றும் மிஞ்சாது. எல்லாவற்றையும் சமர்ப்பித்துக் கொள்வதையும், மேலான தியாகத்தையும் விளக்குகின்ற சிறந்த எடுத்துக் காடடாக விளங்குகிறது. " தீதனையாக் கற்பூர தீபமென நான் அகண்ட சோதியுடன் ஒன்றித்துத் துரிசறுப்ப தெந்நாளோ" தாயுமானவர் ,
ஆகவே ஆலய தீபாராதனையில் இத்தனை தத்துவங்கள் அடங்கியுள்ளன, என்பதை அறிவோம்,
திருச்சிற்றம்பலம்
நன்றி: அமைதிதரும் ஆன்மீகம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
உலகம் முழுவதும் நிறைந்த இறைவனை ஆவாஹனம் செய்து வழிபடும் இடம் ஆலயம். ஆன்மா என்பது ஜோதி வடிவம் ஆகும், இதை எளிமையாக உணர்த்துவதுதான் ஆலங்களில் தீபாராதனை வழிபாடு நடக்கிறது. தீபாவளித் திருநாள், கருத்திகைத் திருநாள் என்று துவங்கி இல்லத்தில் தினமும் நாம் செய்யும் தீபாராதனை வரையில் தினமும் பூசை மற்றும் பண்டிகைகள் என்று அனைத்துமே தீபாராதனையில் சமர்ப்பணம் ஆகிவிடுகிறது. இதில் குறிப்பாக ஆலய தீபாராதனைகளில் ஒரு நீண்ட தத்துவமே அடங்கி உள்ளது. ஆலயத்தில் அலங்கரிக்கப்பட்ட மூர்த்திகளுக்கு முன்பு திரையிடப் படுகிறது. இறைவனின் உள்ளத்தில் உலக சிருஷ்டிசெய்யும் எண்ணத்தை இது தெரிவிக்கிறது. திரைக்கு உள்ளே முதலில் குருக்கள் பூஜையைத் தொடங்க மணியை அடிக்கிறார். எல்லையில்லா பிரம்மத்திடம் முதலில் ஒலி (ஓம்) பிறக்கிறது. மணி நாதத் தத்துவத்தை நினைவுபடுத்துகிறது. இது ஒரு காரணம் ,மற்றொன்று, உலகாயத வேலைகளில் மூழ்கியிருக்கும் மக்கள் மணியோசை கேட்டு தெய்வ சிந்தனையில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் மணி அடிக்கப் படுகிறது. பின்னர் திரை விலக்கி ஒரு தீபம் காட்டப்படுகிது, தமஸோமா ஜ்யோதிர்கமய"என்பது வேதவாக்கியம், இருளிலிருந்து ஒளிக்கு அழைத்து செல் என்பது இதன் பொருள்.
நம்மை மாயை என்ற அஞ்ஞான இருள் விலக்கி, ஞான ஒளி பிரகாசிக்க செய்ய வேண்டும் என்பதே தீபாராதனையின் தத்துவத்தின் முதல்படி, ஒரே பரம்பொருள் பல மூர்த்திகளாக விளங்கின்றன. அதைத்தான் "ஏகம் சத் - விப்ராபஹூதா வதந்தி " என்று வேதத்தில் கூறப்படுகிறது. எனவே ஈசனை எந்த உருவில் வணங்கினாலும் அது இறுதியில் ஒரு பரம்பொருளையே போய் சேரும் என்பதும் இதன் தத்துவக் கருத்தாகும்.
"ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க" - திருவாசகம்
ஒன்றே! பல உருவே! அருவே! - அபிராமி அந்தாதி
" ஏக நானேனெவ்வுயிர்களுந்தானே
யென்பதும் அன்பினுக்கெளியவன்" - திரு விளையாடல் புராணம்
பின்னர் ஐந்து தட்டுகள் உள்ள தீபம் காட்டப்படுகின்றன. சிவபெருமானின் ஐந்து முகங்களையும், அதிலிருந்து பஞ்ச பூதங்கள் படைக்கப்படுவதையும் உணர்த்துகின்றன.
" பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி!
நீரிடை நான்காய் திகழந்தாய் போற்றி!
தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி! - திருவாசகம்
திட விசும்பு, எரி ,வளி, நீர், நிலம், இவை மிகைப்படா பொருள் முழுவதுமாய் அவை அவைதோறும் உடல் மிசை உயிரேனக் காத்து எங்கும் பரந்துளன் - நம்மாழ்வார் (திருவாய்மொழி)
முதன் முதல் பிரம்ம ஒசையாகி ஓங்காரமாய் இருந்து பிறகு ஒளியாக பல தீபமாகி ஆத்மாக்களாக மாறி புல்-பூண்டு ெசெடி - தாவரம் முதல் தேவர்கள் வரையில் பலவாக மாறியது, ஒரே பரம் பொருளிலிருந்து அனைத்தும் தோன்றியது என்பதையே அடுக்கு ஆரத்தியில்தீபங்கள் பல தட்டுக்களில் இருந்தாலும் அவை உருவமற்ற ஒரே பரம்பொருளின் வடிவத்தை குறிப்பிடுகிறது.
அடுத்து கும்ப ஆர்த்தி கும்பம் உலகத்தையும் அதன் மீதுள்ள தீபம் அதை இயக்கும் சக்தியையும் குறிக்கிறது.
"(அண்டம்) சிறியவாகப் பெரியோன்" - திருவாசகம்
"அண்டம் ஒர் அணுவும் பெருமை கொண்டு" - திருவிசைப்பா
அண்டங்கள் எல்லாம் அணுவாக
அணுக்களெல்லாம் அண்டங்களாகப்
பெரிதாய் சிறிதாயினானும் " திருவிளையாடல் புராணம்
" வெளிப்படையாக இல்லாத உருவம் கொண்ட நான் உலகமெங்கும் பரவியிருக்கிறேன் , சகல ஜீவ கோடிகளும் என்னுள் அடங்கியுள்ளன " - கீதை
" உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே " - கம்பராமாயணம்
உலகம் முழுவதையும் படைத்து காத்து அழிக்கும் விளையாட்டே என்று செய்யும் தலைவரின் திருவடிகளுக்கே நாங்கள் அடைக்கலம் என்கிறது.
அடுத்தபடி நாக தீபம் ஊர்வனவற்றையும் , மயுர தீபம், பறவை இனத்தையும், குக்குட தீபம் ரிஷப தீபம், கஜ தீபம் கால்நடை இனத்தையும், புருஷா மிருக தீபம் மிருகம் கலந்த நரசிம்ம ரூபத்தையும் நினைபடுத்தவும், பருஷதீபம் பிறவியின் பெருமையை:
"உடம்பினை பெற்றப் பயனாவது எல்லாம்
உடம்பினில் உத்தமனைக் காண்" - ஒளவை குறள்
புல்லாகி பூண்டாய் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதாராய் பேயாய் கணங்களாய்
வல் அசுராகி முனிவாராய் தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் " - திருவாசகம்
உயிரின் வளர்ச்சிக்கு இறைவன் அடிப்படை என்பதை எல்லா உயிர்களிலும் ஆத்மா சுடர் உள்ளது என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது. இவைகள் உருவத்தில் வேறுபட்டிருந்தாலும் பஞ்ச பூதங்களுக்கு உட்பட்டு இயங்குகின்றன என்பதை உணர்த்தும் வகையில் அவற்றின் மீது பிரடையும் அதில் ஐந்து தீபங்களும் அமைந்துள்ளன.
காற்றில் பெருவலி இருவராகி மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர், தீயதனில் மூவர், விண்ணகத்தில் ஒருவர் - அப்பர்
இப்படியாக ஒரே பரம்பொருளிலிருந்து தோன்றி ஆத்மா பல நிலைகளைக் கடந்து சிந்தனையால் இறைவனை அறிந்து கொள்கிறது.
" சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்" - திருவாசகம்
இந்த ஆன்மா ஒரே ஆர்த்தியாக காட்டப்பட்டு அதன் பக்குவ நிலையை உணர்த்தும் பொருட்டு அத்ன மீது விபூதி தெளிக்கப்படுகிறது. " ஈறிலாதவன் ஈசன் ஒருவனே" - அப்பர் , விபூதி என்பது நமது நிலையை உயர்த்தும் நிலையை சுந்தரமாவது நீறு என்று சம்பந்தர் கூற்றை அறியலாம்
அடுத்தபடியாக ஏழு கிளைகளையுடைய கற்பூர ஆர்த்தி காட்டப்படுகிறது, மனிதன் ஏழு நிலையைக் கடந்தவன் என்பதை எடுத்துக் காட்டுகிறது, இறை அருள் என்ற விபூதி கைவர பெற்ற உயிர் பத்து வித குணங்களைக் கொள்கிது.
இவை : 1, தத்துவ ரூபம், 2,த்ததுதரிசனம், 3,தத்துவ சக்தி, 4. ஆன்மா ரூபம், 5. ஆம்மதரிசனம், 6. ஆன்சுத்தி, 7. சிவரூபம், 8.சிவதரிசனம் 9. சிவயோகம், 10. சிவபோகம், என்பன
இதைக் குறிக்கும் வகையில் இரண்டு மூன்று நான்கு, ஐந்து ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து , பதினொன்று என்று வரிசையாக தீபங்களாக காட்டப்படுகின்றன.
" எங்கும் நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்" குதம்பை சித்தர்
பக்குவம் அடைந்த ஜீவன் இறைவன் சொரூப நிலையைப் பெறுவதால் இறை வடிவமாகப் போற்றப்படுகிறது.
எட்டுத்திசைகளிலும் உள்ளவர்கள் போற்றுவதைக் குறிக்கும் வகையில் அஷ்டமங்கலம் காட்டப் படுகிறது.
" எல்லாம் உனக்கே" என்று இறைவனிடம் கூறி தன்னையே இறைவனிடம் அர்ப்பணிப்பதன் சின்னமே பூசையின் முடிவில் காட்டப்படும் கற்பூர தீபம்.
பூசை முறையில் இந்த தியான பாவனை உச்சகட்டமாகும். தியானத்தின் சின்னமாக மற்ற வழிபாடுகளில் ஏதாவது ஒன்று பிரசாதமாக மிஞ்சும், ஆனால் கற்பூரமம் எரிந்து தீர்ந்தால் அதில் ஒன்றும் மிஞ்சாது. எல்லாவற்றையும் சமர்ப்பித்துக் கொள்வதையும், மேலான தியாகத்தையும் விளக்குகின்ற சிறந்த எடுத்துக் காடடாக விளங்குகிறது. " தீதனையாக் கற்பூர தீபமென நான் அகண்ட சோதியுடன் ஒன்றித்துத் துரிசறுப்ப தெந்நாளோ" தாயுமானவர் ,
ஆகவே ஆலய தீபாராதனையில் இத்தனை தத்துவங்கள் அடங்கியுள்ளன, என்பதை அறிவோம்,
திருச்சிற்றம்பலம்
நன்றி: அமைதிதரும் ஆன்மீகம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
அணிகலன்களின் தத்துவங்கள்
சாதாரணமாக நாம் அணியும் "அணிகலன்" களில் ஆண்டவனை அறியும் - அடையும் வழிகளைச் சொன்னவர்கள் நமது ஆன்றோர்கள். அணிகளும், அணி கலன்களும் ஆடைகளும் புருசனாம் ஸ்ரீ பகவானை நினைக்க வைக்கும் நினைவு முத்திரைகள் ஆகும். அணிகலன்கள் கூறும் அர்த்தமுள்ள தத்துவங்களை ஒவ்வொன்றாக ஆய்ந்து அறிவோமானால் அது பல தத்துவங்களை நமக்கு புலப்படுத்தும்.
மலர்கள்:
மலர்களை முதலில் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்துதான் பிறகு நாம் அணியவேண்டும், மலர்களைப் போல மானிடனும் பலப் பருவங்களை கடந்து இளமைப் பருவம் அடைகிறான், முடி நரைப்பது என்ற செயல் மானிடர்களக்கு மட்டுமே உண்டு, நரை வந்து விட்டால் துன்பமும் வரத்தொடங்கிவிடும். ஆகவே மலர் வாடும் முன் சமர்ப்பணம் செய்து விடுவது போலவே, இளமை முடிந்து முதுமைத் துவக்கத்தின் முத்திரையாம் நரை, நரை வரும் முன்பே மாந்தர்களே உள்ளம் என்ற மலரைப் பகவானுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள் என மலர்த் தத்துவம் கூறுகிறது.
திலகம்:
நமது பாரத தேசத்து பெண்களின் அணிகலன்களுக்கு எல்லாம் அழகுகூட்டுவது குங்குமம் ஆகும், அதனால்தான் குழந்தைப் பருவத்தில் நெற்றியில் அஞ்சனத் திலகமும், பின் பருவம் மடைந்தபின் சாந்துப் பொட்டும், திருமணம் ஆனதும் மஞ்சள் குங்குமத் திலகமும் அணியப்படுகிறது. திலகம் இட்டுக் கொள்வதால் நெற்றியில் வசிப்பதாக வேதங்கள் சொன்ன அலட்சுமியினால் ஏற்படக்கூடிய தீமைகள் விலகி நீண்ட ஆயுளும் சகல பாக்யங்களும் பெருகும். சுமங்கலி பெண்கள் நெற்றியில் குங்குமத்திலகமிட்டுப் பின்னர் தலையில் வகிடு தொடங்கும் பகுதியில் திலகம் அணிகின்றனர் அதுவே உச்சித் திலகம்.பிரமதேவனின் எழுத்தை அழிக்கும் திறன் கற்புத்தீயின் வடிவமான குங்குமத் திலகத்திற்கு உண்டு. சுமங்கலிப் பெண்கள் நிச்சயம் குங்குமத் திலகம் அணிய வேண்டும்.
திருமண்:
ஸ்ரீ வைணவர்கள் அணியும் திருமண்ணை சரீரத்தின் பன்னிரு உறுப்புகளில் அணியும் போது ஸ்ரீமன் நாராயணனின் பன்னிரு திருநாமங்களைக் கூறியவாறு அணிவதனால் திருமண் அணிந்த நிலையை திருநாமம் என்றே அன்புடன் மனித குலம் அழைக்கிறது. திரு என்றால் ஸ்ரீமகா விஷ்ணுவையும் மண் என்றால் பூமியில் சேரப் போகும் சரீரத்தையும் குறிக்கும், நாம் ஜீவன் அந்தர்யாமியான ஸ்ரீ பகவானின் ஒர்அம்சம். தினமும் ஸ்ரீ பகவானின் திருநாமங்களைக் கூறியவாறு திருமண் அணிந்துகொள்ளவேண்டும். இல்லையேல் அரிதான மானிடப்பிறவி வீணாகும் எனபதை கூறுகிறது திருமண் தத்துவம்.
திரு நீறு:
சரீரத்தின் பதினான்கு இடங்களில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும், திருநீற்றை ஒருவருக்கு தரும்போதும், நாம் அணியும் போதும் சிவபொருமானுடைய ஐந்தெழுத்தை "நமசிவாய" என்னும் மந்திரத்தை ஓதுதல் வேண்டும். அதனால் திருநீற்றுக்கு பஞ்சாட்சரம் என்ற பெயரும் அமைந்தது. சிவனின் உருவமான ஜோதியின் மறு உருவமே திருநீறு, திருநீற்றை நெற்றியில் இட்டால் விஞ்ஞான, அஞ்ஞான மருத்துவ ரீதியாகவும் பற்பல பலன்கள் கூறப்படுகின்றன. " மனிதா உன் சரீரம் வாக்கு மனம் இம்மூன்றும் நிர்மலமாக , வெண்மையாக தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக திருநீறு அணிந்து கொள் என்கிறது திருநீற்றுத் தத்துவம்.
சந்தனம்:
சந்தனம் இயற்கையான தாவரத்திலிருந்து கிடைப்பது. அதன் நறுமனம் மிக ரம்மியமானது. சந்தனம் போல் நறுமணம் போன்று நற்குணங்களைக் கொண்டவனாக இரு என்பதை விளக்கிறது சந்தனத்தத்துவம்.
தோடு:
மாதர்கள் அணியும் ஆபரங்களுள் முக்கியமானது தோடு. " தோடுடைய செவியன்" என்று 1ஆம் திருமுறையில் திரு ஞானசம்பந்தர் தோடு அணியும் சக்தியையும், சக்தியை இடப்பாகமாக கொண்ட சிவனையும் சேர்த்துப் பாடியுள்ளது தோடு மாந்தர்களின் கூற்றுக்கு உதாரணமாக தத்துவத்தை காட்டுகிறது.
" தேவா ரென்பர்தம் பாவையர்க் கன்று
காதோலைப் பாவித்த தயவாளர்" - மதுரை கலம்பகம் 29ம் பாடல்
சிவபொருமான் விஷத்தை உண்டு தேவமகளிரின் மாங்கல்யத்தை போன்ற காதோலையை காப்பாற்றிய தயாபரன் ஆனான் என்று குமரகுருபரர் கூறினார், பதிவிரதைகள் ஒருபோதும் தோடின்றி இருக்கக் கூடாது என்கிறது அருணா மோதினீ.எல்லா செல்வங்களைவிட சிறந்த செல்வம்செவிச் செல்வம் என்கிறார் வள்ளுவர், அந்த செவிச் செல்வத்தை உணரும் உறுப்பணியும் அணிகலமே தோடு என்பதாகும், குருநாதனின் ஞான மொழிகளுடன் ஸ்ரீ பகவானின் திரு நாமங்களும் ஒன்றிணைந்து நம் செவியில் என்றென்றும் ஒலிக்க வேண்டும் , அப்போது சாதாரண செவி திருமகள் வீற்றிருக்கும் செல்வச் செவி ஆகும்.
மூக்குத்தி:
மூக்குத்தியதிலும் கல்வாழை விசிறி போன்ற மூக்குத்தி விசேஷச் சக்தி வாய்ந்தது. காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி, திருச்சானூர் அலமேலு, கன்னியகுமரி வாலையம்மன் இவ்வாறு எந்தத் தேவியரைத் தரிசனம் செய்தாலும் மூக்குத்தி இல்லாத அன்னையாக பார்க்கவே முடியாது. காரணம் தெய்வீக சுமங்கல ஆபரணங்களில் மூக்குத்தியும் மங்கல பொருள்களில் ஒன்று. சுவாசத்துடன் கலப்பது போல எல்லா நறுமணத்தையும் சுவாசம் செய்யும் போது ஸ்ரீபகவானுக்கு அர்ப்பணம் செய்வது போல நினைத்து விடு. இரு விழிப்பார்வைகளை நாசியில் செலுத்தி விடு. மனம் வாக்கு காயம் இம்மூன்றும் ஒருநிலைப்படுத்தி யோகம் செய் என்று மூக்குத்தி தத்துவம் கூறுகிறது. இக் கருத்தையே உட்கருத்துடன் கொண்டு செளந்தர்யலஹரி 61ஆம சுலோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் கூறியுள்ளார்.
கண் மை:
" குரு க்ரு பாஞ்சல பாயோ மேரே பாயி" என்ற பாடலில் சகோதரா குருதேவரின் அருள் நோக்கு என்ற கண் மை யை நீ அணிந்து கொண்டால்தான் பிறவி பூரணம் ஆகும் , எல்லா இடங்களிலும்ஸ்ரீ ராமனின் வடிவம் தெரியும் என்கிறார் கபீர்தாசர். "கருப்பு வண்ணனாயினும் அஞ்ஞான இருளை போக்கும் சிறந்த ஞான தீபம் ஸ்ரீ கிருஷ்ணபிரான் என்கிறது ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம். பக்தி என்ற கண்மையை அணிந்த பின் அஞ்ஞானம் என்ற இருள் அகன்று நீக்கமற எங்கும் கண்ணனின் வடிவமே தெரியும் என்பதை " கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்கவே" என்கிறார் நம்மாழ்வார். கண்மை கூறும் அரிய தத்துவம் " என்னை அணியும் போது இறைவனின் கருமை நீலத்திரு மேனியையும், அவர் தெய்வீக லீலைகளையும் நினைத்துக் கொண்டு அணிந்து கொள் அப்போதுதான் நமக்கு பிறவிப் பயன் கிட்டும்.
திருமாங்கல்ய நாண்:
திருமணத்தில் முக்கியமானது திருமாங்கல்ய நாண் கட்டுவதுதான். அதைத்தான் மங்களசூத்திரம் தாலி, மாங்கல்ய சரடு என்று பலவகையான அழைப்பார்கள். திரு என்றால் திருமகளை நினைவுபடுத்தும், மாங்கல்யம் என்பது ஆத்மாவின் நாயகனான இறைவனை நினைவு படுத்தும். மா- என்றால் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆத்மா என்று பொருள்
கலயம் என்றால் கலசம் - பாதுகாப்பு என்று பொருள். வடமொழியில் புருசன் என்றால் ஆத்மா என்று பொருள் , கணவன் தான் மனைவியினுடைய ஆத்மா என்பதால் தான் கணவனை புருசன் என்று அழைத்தார்கள்.
மாங்கல்யம் தந்த நாநே, மாங்கல்ய மந்திரத்தின் கருத்து - இதை உன் கழுத்தில் கட்டுகிறேன், செளபாக்கியவதியே நீ நூறு ஆண்டுகள் சுமங்கலியாக சுகமாக வாழ்ந்திருப்பாயாக என்பது தான் அதன் கருத்து.
மூன்று முடிச்சு என்பது மூன்று குணங்களையும் கடந்து விடச் சொல்கிறது. மற்றொரு தத்துவம் " பெண்ணே உன் உடல் பொருள், ஆவி மூன்றுக்கும் நான் பொறுப்பேற்கிறேன்" என்று கணவன் கூறுவதாகக் கருத்து. பிறிதொரு தத்துவம் கணவன் பெரியோர்கள், தெய்வம் ஆகிய மூன்றுக்கும் கட்டுபட்டவன் ஆகஇருப்பான் என்பதற்கு நான் பொறுப்பு என்று கணவனே மூன்று முடிச்சு போட்டு உறுதி கூறுவதாக கருத்து.
திருமாங்கல்ய சரடின் நிறம் மஞ்சளாக இருக்க வேண்டியதன் தத்துவம் - மஞ்சள் நிறம் தெய்வீக நிறம், மஞ்சள் கிழங்கு மாங்கல்ய சரடு உடன் இணைத்து திருமணம் செய்விப்பதும் உண்டு. தீவினை என்கிற கிருமிகளை அழிக்கம் சக்தியின் வடிவம் தான் மஞ்சள்.
ஆடைகள்:
முடிவில்லாத சிவபிரானுக்கு திசைகளே ஆடைகள் ஆகும் என்கிறார் திருமூலர்,சிவபிரானார் திகம்பரமாக உள்ளார் என்று மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சொல்கிறது. திக் - அம்பரம் - திசையாகிய ஆடை என்று பொருள்
அத்திசைகள் பகலில் வெண்ணிறமாகவும், இரவில் கருநிறம் உடையதாகவும், அந்திப்பொழுதில் செந்நிறமடைந்து செவ்வாடையாகவும் சிவபெருானுக்கு அமைகிறது. என்கிறார் நான் மணிமாலையில் குமரகுருபரர்
"ஆத்மாவிற்கு சரீரம் என்பது ஆடையைப் போன்றது என்றும் அவை நைந்து போன பின் ஆத்மா பதிய சரீரத்தை அடையும் என்றும் பகவத் கீதை அருளிகிறது.
வளைகாப்புத் தத்துவம்:
வளை என்றால் வட்டத்தையும் பாசம், பக்தி, சங்கு,அன்பு சக்கரம், சங்கம் போன்றவற்றையும் குறிக்கும், திருமணம் நடந்ததும், மணமக்களுக்கு கையில் காப்பு கட்டுவார்கள் பெண்ணுக்கு தற்காப்பு வேண்டும், அவளைக் காப்பேன் என்ற உத்தரவாதத்திற்காகவே கணவன் கையில் காப்பு கட்டப்படுகிறது. காப்பேன் என்ற உறுதியுடன் காப்புக் கட்டப்பெற்ற கணவன் அன்புடன் வாழ்க்கை நடத்தினார் என்பதற்கு அடையாளமாக அம்மங்கை தாய்மை அடைந்து விட்டால் ஒரு குறித்த காலத்தில் சுமங்கலிப் பெண்கள் பலரும் கூடி வளையல்களை அணிவிப்பார்கள், இந்த செயலில் ஒரு மிகப் பெரிய தத்துவக் கருத்தே அடங்கி இருக்கிறது. " பெண்ணே கணவனிடம் காட்டிய பாசத்தினால் உன்னை சுற்றி ஒரு வட்டம் நீயே இட்டுக் கொண்டாய், அதுவே தாய்மை ஆகும், வளைந்த நிலையில் உள்ள சங்கு சக்கர வடிவம் கொண்ட இந்த வளையல்களை தீர்க்க சுமங்கலியாக நாங்கள் உனக்கு வளையல் அணிவித்தல் என்ற காப்புச் செய்கிறோம். அந்த வளைகாப்புக்கு காரணமான ஸ்ரீமன் நாராயணனே உனக்கு பாதுகாப்பு என்று சுமங்கலிகள் வாழ்த்துவதைப் போலும் - பிறக்கப் போகும் குழந்தை ஆதியந்தம் இல்லா வளையல் வட்டம் போல் உனக்கு ஆதியந்தமில்லா பெரும் வழியைக் காட்ட ட்டும், என்று வளைகாப்புத் தத்துவம் சொல்கிறது.
உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று திருவாசகத்தில் கூறியுள்ளதை போல பெண்ணே உன் கையில் அடைக்கலமான வளையல் உனக்கு எதை நினைவூட்டுகிறது தெரியுமா? உன்னை நம்பிப் பிறக்கப் போகம் குழந்தையைக் காப்பாற்றுவாய் அது போல் வட்டமான இந்த புவியை இறைவன் காப்பாறகிறான், என்கிறது.
வளைகாப்பு வளையல்
உலகம் பூஜ்ய வடிவம் அதைப் படைத்த இறைவனும் பூஜ்ய வடிவம், பூஜ்யம் என்பது ஆதியந்தமற்றது. வளையல் பூஜ்யத்தின் வடிவம் அதுபோல தாய்மையானது இன்பமும் பற்றும் இல்லாத பரிபூரண அன்பு நிலையான பூஜ்ய ரூபமாகும், வளை - காப்பு - அன்பினால் கிடைத்த மேலான ஐஸ்வர்யம் - அன்புக்கு ஐந்து ஞானேந்திரியங்கள் வலது கை விரல்களிலும் அடங்கிவிடும் என்பது கருத்து.
ஒட்டியாணம்:
குழந்தையாகப் பிறந்தது முதல் அரைஞான் அணிவிப்பது ஆதி கால முதல் தொடரும் பழக்கம், தங்கத்தினால் வெள்ளியால் கருப்பு கயிற்றினால் இது அணியப்படுகிறது. யோகத்தில் இறங்கினால் தான் ஞானம் கிட்டும், ஞானம் கிடைத்தால்தான் பிறவித் தொடரிலிருந்து விடுதலை அடைய முடியும், யோகத்தின் முதல் படி அளவாக நடப்பது ஆகும். உணவில் உறக்கத்தில் உறவில் நடப்பதில் பேசுவதில் இப்படி எல்லா செயல்களிலும் அளவாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீமத் பகவத் கீதை அருளுகிறது. அறை என்றால் பாதி இடை, வயிறு என்று பொருள் தராசு முள்ளைப் போன்றது அரைஞாண் , சரீரம் பெருக்காது, மெலிந்து இருக்க வேண்டும் என்பதை அரைஞான் நினைவு படுத்தும் அளவுகோல் ஆகிறது.
யோகப்பயிற்சி செய், சரீரத்தை பாதுகாத்திடு, மீண்டும் மனிதப் பிறவி கிடைப்பது அரிது என்கிறது இந்த அரைஞாண்.
கொலுசு:
இன்று கொலுசு என்று அழைக்கப்படும் பாத அணியை கிண்கிணி என்று அன்று அழைத்தார்கள், பெரியாழ்வாரின் திருமொழி அருணகிரி நாதரின் கந்தரலங்காரம் போன்ற பல திருநூல்களில் கொலுசை புகழ்ந்து பாடியுள்ளதைக் காணலாம், " கீதம் தெய்வீக வடிவம்" நடை கூட தெய்வீகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் திருமகள் அவர்களிடம் குடியிருப்பாள், நிதானமாக நடந்தால் கொலுசிலிருந்து தெய்வீக ஓசை வரும், அந்த ஓசையை கேட்டதும், கணபதி, கந்தன், கண்ணன், ராமன், ஐயப்பன் போன்றவர்கள் குழந்தையாக இருந்து நடந்தால் வரும் கொலசின் ஓசையை போலவே உள்ளதே என்று சிந்தனை தெய்வீகமாக மாறிவிட வேண்டும், அப்போது நம் மனக் கண்ணில் அந்த தெய்வீக வடிவங்கள் தெரிய வேண்டும், என்பதே கொலுசு கூறும் கோபுரத்தத்துவம்.
மெட்டி:
திருமங்கை என்ற மன்னனை ஆழ்வாராக மாற்றிய பெருமை மெட்டியையே சாரும், பெண்ணுக்கு பெருமையும், மங்கலமும் தரக்கூடிய அணிகலன்களுள் முக்கியமானது இந்த சின்ன மெட்டி. திருமணம் ஆனதும் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் பெண்கள் மெட்டி அணிவர், அந்த விரலில் மட்டும் மெட்டி அணிய வேண்டும், என்று பெரியோர்கள் சொல்லி வைத்ததற்கு காரணம் உண்டு. கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இம்மெட்டி நடக்கும் போது அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகின்றது, அதனால்தான் திருமணத்தில் பெண்கள் காலில் மெட்டியை அணிகின்றனர். காலில் கீழ்ப்பகுதியில் இதயம் முதல் மூளை நரம்புகள் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் மிக நுண்ணிய நரம்பு ஸ்தானம்உள்ளன.
மெட்டி தேய்ந்த பிறகு தூக்கி எறியக் கூடாது. அதை அப்படியே கடையில் கொடுத்து உருக்கி வரும் புது வெள்ளியால் தான் மறுபடியும் மெட்டி செய்ய வேண்டும். எந்த காரணம் கொண்டும் மெட்டியை காலிலிருந்து நீக்கலாகாது என்பர் பெரியோர்கள். அக்காலத்தில் மணமகனுக்கும் மெட்டி உண்டு என்று திருமங்கை ஆழ்வாரின் வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது.
திருசிற்றம்பலம்
நன்றி: அமைதி தரும் ஆன்மீகம் என்ற நூல்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
சாதாரணமாக நாம் அணியும் "அணிகலன்" களில் ஆண்டவனை அறியும் - அடையும் வழிகளைச் சொன்னவர்கள் நமது ஆன்றோர்கள். அணிகளும், அணி கலன்களும் ஆடைகளும் புருசனாம் ஸ்ரீ பகவானை நினைக்க வைக்கும் நினைவு முத்திரைகள் ஆகும். அணிகலன்கள் கூறும் அர்த்தமுள்ள தத்துவங்களை ஒவ்வொன்றாக ஆய்ந்து அறிவோமானால் அது பல தத்துவங்களை நமக்கு புலப்படுத்தும்.
மலர்கள்:
மலர்களை முதலில் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்துதான் பிறகு நாம் அணியவேண்டும், மலர்களைப் போல மானிடனும் பலப் பருவங்களை கடந்து இளமைப் பருவம் அடைகிறான், முடி நரைப்பது என்ற செயல் மானிடர்களக்கு மட்டுமே உண்டு, நரை வந்து விட்டால் துன்பமும் வரத்தொடங்கிவிடும். ஆகவே மலர் வாடும் முன் சமர்ப்பணம் செய்து விடுவது போலவே, இளமை முடிந்து முதுமைத் துவக்கத்தின் முத்திரையாம் நரை, நரை வரும் முன்பே மாந்தர்களே உள்ளம் என்ற மலரைப் பகவானுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள் என மலர்த் தத்துவம் கூறுகிறது.
திலகம்:
நமது பாரத தேசத்து பெண்களின் அணிகலன்களுக்கு எல்லாம் அழகுகூட்டுவது குங்குமம் ஆகும், அதனால்தான் குழந்தைப் பருவத்தில் நெற்றியில் அஞ்சனத் திலகமும், பின் பருவம் மடைந்தபின் சாந்துப் பொட்டும், திருமணம் ஆனதும் மஞ்சள் குங்குமத் திலகமும் அணியப்படுகிறது. திலகம் இட்டுக் கொள்வதால் நெற்றியில் வசிப்பதாக வேதங்கள் சொன்ன அலட்சுமியினால் ஏற்படக்கூடிய தீமைகள் விலகி நீண்ட ஆயுளும் சகல பாக்யங்களும் பெருகும். சுமங்கலி பெண்கள் நெற்றியில் குங்குமத்திலகமிட்டுப் பின்னர் தலையில் வகிடு தொடங்கும் பகுதியில் திலகம் அணிகின்றனர் அதுவே உச்சித் திலகம்.பிரமதேவனின் எழுத்தை அழிக்கும் திறன் கற்புத்தீயின் வடிவமான குங்குமத் திலகத்திற்கு உண்டு. சுமங்கலிப் பெண்கள் நிச்சயம் குங்குமத் திலகம் அணிய வேண்டும்.
திருமண்:
ஸ்ரீ வைணவர்கள் அணியும் திருமண்ணை சரீரத்தின் பன்னிரு உறுப்புகளில் அணியும் போது ஸ்ரீமன் நாராயணனின் பன்னிரு திருநாமங்களைக் கூறியவாறு அணிவதனால் திருமண் அணிந்த நிலையை திருநாமம் என்றே அன்புடன் மனித குலம் அழைக்கிறது. திரு என்றால் ஸ்ரீமகா விஷ்ணுவையும் மண் என்றால் பூமியில் சேரப் போகும் சரீரத்தையும் குறிக்கும், நாம் ஜீவன் அந்தர்யாமியான ஸ்ரீ பகவானின் ஒர்அம்சம். தினமும் ஸ்ரீ பகவானின் திருநாமங்களைக் கூறியவாறு திருமண் அணிந்துகொள்ளவேண்டும். இல்லையேல் அரிதான மானிடப்பிறவி வீணாகும் எனபதை கூறுகிறது திருமண் தத்துவம்.
திரு நீறு:
சரீரத்தின் பதினான்கு இடங்களில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும், திருநீற்றை ஒருவருக்கு தரும்போதும், நாம் அணியும் போதும் சிவபொருமானுடைய ஐந்தெழுத்தை "நமசிவாய" என்னும் மந்திரத்தை ஓதுதல் வேண்டும். அதனால் திருநீற்றுக்கு பஞ்சாட்சரம் என்ற பெயரும் அமைந்தது. சிவனின் உருவமான ஜோதியின் மறு உருவமே திருநீறு, திருநீற்றை நெற்றியில் இட்டால் விஞ்ஞான, அஞ்ஞான மருத்துவ ரீதியாகவும் பற்பல பலன்கள் கூறப்படுகின்றன. " மனிதா உன் சரீரம் வாக்கு மனம் இம்மூன்றும் நிர்மலமாக , வெண்மையாக தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக திருநீறு அணிந்து கொள் என்கிறது திருநீற்றுத் தத்துவம்.
சந்தனம்:
சந்தனம் இயற்கையான தாவரத்திலிருந்து கிடைப்பது. அதன் நறுமனம் மிக ரம்மியமானது. சந்தனம் போல் நறுமணம் போன்று நற்குணங்களைக் கொண்டவனாக இரு என்பதை விளக்கிறது சந்தனத்தத்துவம்.
தோடு:
மாதர்கள் அணியும் ஆபரங்களுள் முக்கியமானது தோடு. " தோடுடைய செவியன்" என்று 1ஆம் திருமுறையில் திரு ஞானசம்பந்தர் தோடு அணியும் சக்தியையும், சக்தியை இடப்பாகமாக கொண்ட சிவனையும் சேர்த்துப் பாடியுள்ளது தோடு மாந்தர்களின் கூற்றுக்கு உதாரணமாக தத்துவத்தை காட்டுகிறது.
" தேவா ரென்பர்தம் பாவையர்க் கன்று
காதோலைப் பாவித்த தயவாளர்" - மதுரை கலம்பகம் 29ம் பாடல்
சிவபொருமான் விஷத்தை உண்டு தேவமகளிரின் மாங்கல்யத்தை போன்ற காதோலையை காப்பாற்றிய தயாபரன் ஆனான் என்று குமரகுருபரர் கூறினார், பதிவிரதைகள் ஒருபோதும் தோடின்றி இருக்கக் கூடாது என்கிறது அருணா மோதினீ.எல்லா செல்வங்களைவிட சிறந்த செல்வம்செவிச் செல்வம் என்கிறார் வள்ளுவர், அந்த செவிச் செல்வத்தை உணரும் உறுப்பணியும் அணிகலமே தோடு என்பதாகும், குருநாதனின் ஞான மொழிகளுடன் ஸ்ரீ பகவானின் திரு நாமங்களும் ஒன்றிணைந்து நம் செவியில் என்றென்றும் ஒலிக்க வேண்டும் , அப்போது சாதாரண செவி திருமகள் வீற்றிருக்கும் செல்வச் செவி ஆகும்.
மூக்குத்தி:
மூக்குத்தியதிலும் கல்வாழை விசிறி போன்ற மூக்குத்தி விசேஷச் சக்தி வாய்ந்தது. காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி, திருச்சானூர் அலமேலு, கன்னியகுமரி வாலையம்மன் இவ்வாறு எந்தத் தேவியரைத் தரிசனம் செய்தாலும் மூக்குத்தி இல்லாத அன்னையாக பார்க்கவே முடியாது. காரணம் தெய்வீக சுமங்கல ஆபரணங்களில் மூக்குத்தியும் மங்கல பொருள்களில் ஒன்று. சுவாசத்துடன் கலப்பது போல எல்லா நறுமணத்தையும் சுவாசம் செய்யும் போது ஸ்ரீபகவானுக்கு அர்ப்பணம் செய்வது போல நினைத்து விடு. இரு விழிப்பார்வைகளை நாசியில் செலுத்தி விடு. மனம் வாக்கு காயம் இம்மூன்றும் ஒருநிலைப்படுத்தி யோகம் செய் என்று மூக்குத்தி தத்துவம் கூறுகிறது. இக் கருத்தையே உட்கருத்துடன் கொண்டு செளந்தர்யலஹரி 61ஆம சுலோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் கூறியுள்ளார்.
கண் மை:
" குரு க்ரு பாஞ்சல பாயோ மேரே பாயி" என்ற பாடலில் சகோதரா குருதேவரின் அருள் நோக்கு என்ற கண் மை யை நீ அணிந்து கொண்டால்தான் பிறவி பூரணம் ஆகும் , எல்லா இடங்களிலும்ஸ்ரீ ராமனின் வடிவம் தெரியும் என்கிறார் கபீர்தாசர். "கருப்பு வண்ணனாயினும் அஞ்ஞான இருளை போக்கும் சிறந்த ஞான தீபம் ஸ்ரீ கிருஷ்ணபிரான் என்கிறது ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம். பக்தி என்ற கண்மையை அணிந்த பின் அஞ்ஞானம் என்ற இருள் அகன்று நீக்கமற எங்கும் கண்ணனின் வடிவமே தெரியும் என்பதை " கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்கவே" என்கிறார் நம்மாழ்வார். கண்மை கூறும் அரிய தத்துவம் " என்னை அணியும் போது இறைவனின் கருமை நீலத்திரு மேனியையும், அவர் தெய்வீக லீலைகளையும் நினைத்துக் கொண்டு அணிந்து கொள் அப்போதுதான் நமக்கு பிறவிப் பயன் கிட்டும்.
திருமாங்கல்ய நாண்:
திருமணத்தில் முக்கியமானது திருமாங்கல்ய நாண் கட்டுவதுதான். அதைத்தான் மங்களசூத்திரம் தாலி, மாங்கல்ய சரடு என்று பலவகையான அழைப்பார்கள். திரு என்றால் திருமகளை நினைவுபடுத்தும், மாங்கல்யம் என்பது ஆத்மாவின் நாயகனான இறைவனை நினைவு படுத்தும். மா- என்றால் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆத்மா என்று பொருள்
கலயம் என்றால் கலசம் - பாதுகாப்பு என்று பொருள். வடமொழியில் புருசன் என்றால் ஆத்மா என்று பொருள் , கணவன் தான் மனைவியினுடைய ஆத்மா என்பதால் தான் கணவனை புருசன் என்று அழைத்தார்கள்.
மாங்கல்யம் தந்த நாநே, மாங்கல்ய மந்திரத்தின் கருத்து - இதை உன் கழுத்தில் கட்டுகிறேன், செளபாக்கியவதியே நீ நூறு ஆண்டுகள் சுமங்கலியாக சுகமாக வாழ்ந்திருப்பாயாக என்பது தான் அதன் கருத்து.
மூன்று முடிச்சு என்பது மூன்று குணங்களையும் கடந்து விடச் சொல்கிறது. மற்றொரு தத்துவம் " பெண்ணே உன் உடல் பொருள், ஆவி மூன்றுக்கும் நான் பொறுப்பேற்கிறேன்" என்று கணவன் கூறுவதாகக் கருத்து. பிறிதொரு தத்துவம் கணவன் பெரியோர்கள், தெய்வம் ஆகிய மூன்றுக்கும் கட்டுபட்டவன் ஆகஇருப்பான் என்பதற்கு நான் பொறுப்பு என்று கணவனே மூன்று முடிச்சு போட்டு உறுதி கூறுவதாக கருத்து.
திருமாங்கல்ய சரடின் நிறம் மஞ்சளாக இருக்க வேண்டியதன் தத்துவம் - மஞ்சள் நிறம் தெய்வீக நிறம், மஞ்சள் கிழங்கு மாங்கல்ய சரடு உடன் இணைத்து திருமணம் செய்விப்பதும் உண்டு. தீவினை என்கிற கிருமிகளை அழிக்கம் சக்தியின் வடிவம் தான் மஞ்சள்.
ஆடைகள்:
முடிவில்லாத சிவபிரானுக்கு திசைகளே ஆடைகள் ஆகும் என்கிறார் திருமூலர்,சிவபிரானார் திகம்பரமாக உள்ளார் என்று மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சொல்கிறது. திக் - அம்பரம் - திசையாகிய ஆடை என்று பொருள்
அத்திசைகள் பகலில் வெண்ணிறமாகவும், இரவில் கருநிறம் உடையதாகவும், அந்திப்பொழுதில் செந்நிறமடைந்து செவ்வாடையாகவும் சிவபெருானுக்கு அமைகிறது. என்கிறார் நான் மணிமாலையில் குமரகுருபரர்
"ஆத்மாவிற்கு சரீரம் என்பது ஆடையைப் போன்றது என்றும் அவை நைந்து போன பின் ஆத்மா பதிய சரீரத்தை அடையும் என்றும் பகவத் கீதை அருளிகிறது.
வளைகாப்புத் தத்துவம்:
வளை என்றால் வட்டத்தையும் பாசம், பக்தி, சங்கு,அன்பு சக்கரம், சங்கம் போன்றவற்றையும் குறிக்கும், திருமணம் நடந்ததும், மணமக்களுக்கு கையில் காப்பு கட்டுவார்கள் பெண்ணுக்கு தற்காப்பு வேண்டும், அவளைக் காப்பேன் என்ற உத்தரவாதத்திற்காகவே கணவன் கையில் காப்பு கட்டப்படுகிறது. காப்பேன் என்ற உறுதியுடன் காப்புக் கட்டப்பெற்ற கணவன் அன்புடன் வாழ்க்கை நடத்தினார் என்பதற்கு அடையாளமாக அம்மங்கை தாய்மை அடைந்து விட்டால் ஒரு குறித்த காலத்தில் சுமங்கலிப் பெண்கள் பலரும் கூடி வளையல்களை அணிவிப்பார்கள், இந்த செயலில் ஒரு மிகப் பெரிய தத்துவக் கருத்தே அடங்கி இருக்கிறது. " பெண்ணே கணவனிடம் காட்டிய பாசத்தினால் உன்னை சுற்றி ஒரு வட்டம் நீயே இட்டுக் கொண்டாய், அதுவே தாய்மை ஆகும், வளைந்த நிலையில் உள்ள சங்கு சக்கர வடிவம் கொண்ட இந்த வளையல்களை தீர்க்க சுமங்கலியாக நாங்கள் உனக்கு வளையல் அணிவித்தல் என்ற காப்புச் செய்கிறோம். அந்த வளைகாப்புக்கு காரணமான ஸ்ரீமன் நாராயணனே உனக்கு பாதுகாப்பு என்று சுமங்கலிகள் வாழ்த்துவதைப் போலும் - பிறக்கப் போகும் குழந்தை ஆதியந்தம் இல்லா வளையல் வட்டம் போல் உனக்கு ஆதியந்தமில்லா பெரும் வழியைக் காட்ட ட்டும், என்று வளைகாப்புத் தத்துவம் சொல்கிறது.
உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று திருவாசகத்தில் கூறியுள்ளதை போல பெண்ணே உன் கையில் அடைக்கலமான வளையல் உனக்கு எதை நினைவூட்டுகிறது தெரியுமா? உன்னை நம்பிப் பிறக்கப் போகம் குழந்தையைக் காப்பாற்றுவாய் அது போல் வட்டமான இந்த புவியை இறைவன் காப்பாறகிறான், என்கிறது.
வளைகாப்பு வளையல்
உலகம் பூஜ்ய வடிவம் அதைப் படைத்த இறைவனும் பூஜ்ய வடிவம், பூஜ்யம் என்பது ஆதியந்தமற்றது. வளையல் பூஜ்யத்தின் வடிவம் அதுபோல தாய்மையானது இன்பமும் பற்றும் இல்லாத பரிபூரண அன்பு நிலையான பூஜ்ய ரூபமாகும், வளை - காப்பு - அன்பினால் கிடைத்த மேலான ஐஸ்வர்யம் - அன்புக்கு ஐந்து ஞானேந்திரியங்கள் வலது கை விரல்களிலும் அடங்கிவிடும் என்பது கருத்து.
ஒட்டியாணம்:
குழந்தையாகப் பிறந்தது முதல் அரைஞான் அணிவிப்பது ஆதி கால முதல் தொடரும் பழக்கம், தங்கத்தினால் வெள்ளியால் கருப்பு கயிற்றினால் இது அணியப்படுகிறது. யோகத்தில் இறங்கினால் தான் ஞானம் கிட்டும், ஞானம் கிடைத்தால்தான் பிறவித் தொடரிலிருந்து விடுதலை அடைய முடியும், யோகத்தின் முதல் படி அளவாக நடப்பது ஆகும். உணவில் உறக்கத்தில் உறவில் நடப்பதில் பேசுவதில் இப்படி எல்லா செயல்களிலும் அளவாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீமத் பகவத் கீதை அருளுகிறது. அறை என்றால் பாதி இடை, வயிறு என்று பொருள் தராசு முள்ளைப் போன்றது அரைஞாண் , சரீரம் பெருக்காது, மெலிந்து இருக்க வேண்டும் என்பதை அரைஞான் நினைவு படுத்தும் அளவுகோல் ஆகிறது.
யோகப்பயிற்சி செய், சரீரத்தை பாதுகாத்திடு, மீண்டும் மனிதப் பிறவி கிடைப்பது அரிது என்கிறது இந்த அரைஞாண்.
கொலுசு:
இன்று கொலுசு என்று அழைக்கப்படும் பாத அணியை கிண்கிணி என்று அன்று அழைத்தார்கள், பெரியாழ்வாரின் திருமொழி அருணகிரி நாதரின் கந்தரலங்காரம் போன்ற பல திருநூல்களில் கொலுசை புகழ்ந்து பாடியுள்ளதைக் காணலாம், " கீதம் தெய்வீக வடிவம்" நடை கூட தெய்வீகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் திருமகள் அவர்களிடம் குடியிருப்பாள், நிதானமாக நடந்தால் கொலுசிலிருந்து தெய்வீக ஓசை வரும், அந்த ஓசையை கேட்டதும், கணபதி, கந்தன், கண்ணன், ராமன், ஐயப்பன் போன்றவர்கள் குழந்தையாக இருந்து நடந்தால் வரும் கொலசின் ஓசையை போலவே உள்ளதே என்று சிந்தனை தெய்வீகமாக மாறிவிட வேண்டும், அப்போது நம் மனக் கண்ணில் அந்த தெய்வீக வடிவங்கள் தெரிய வேண்டும், என்பதே கொலுசு கூறும் கோபுரத்தத்துவம்.
மெட்டி:
திருமங்கை என்ற மன்னனை ஆழ்வாராக மாற்றிய பெருமை மெட்டியையே சாரும், பெண்ணுக்கு பெருமையும், மங்கலமும் தரக்கூடிய அணிகலன்களுள் முக்கியமானது இந்த சின்ன மெட்டி. திருமணம் ஆனதும் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் பெண்கள் மெட்டி அணிவர், அந்த விரலில் மட்டும் மெட்டி அணிய வேண்டும், என்று பெரியோர்கள் சொல்லி வைத்ததற்கு காரணம் உண்டு. கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இம்மெட்டி நடக்கும் போது அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகின்றது, அதனால்தான் திருமணத்தில் பெண்கள் காலில் மெட்டியை அணிகின்றனர். காலில் கீழ்ப்பகுதியில் இதயம் முதல் மூளை நரம்புகள் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் மிக நுண்ணிய நரம்பு ஸ்தானம்உள்ளன.
மெட்டி தேய்ந்த பிறகு தூக்கி எறியக் கூடாது. அதை அப்படியே கடையில் கொடுத்து உருக்கி வரும் புது வெள்ளியால் தான் மறுபடியும் மெட்டி செய்ய வேண்டும். எந்த காரணம் கொண்டும் மெட்டியை காலிலிருந்து நீக்கலாகாது என்பர் பெரியோர்கள். அக்காலத்தில் மணமகனுக்கும் மெட்டி உண்டு என்று திருமங்கை ஆழ்வாரின் வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது.
திருசிற்றம்பலம்
நன்றி: அமைதி தரும் ஆன்மீகம் என்ற நூல்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
திருஐந்தெழுத்தின் பெருமை
தமிழ் வேதங்களான திருமுறைகள் கூறும் திருஐந்தெழுத்தின் பெருமையினை தேவாரப்பதியங்களில் தனித்தனி பதியங்களாகக் கண்டாலும் நம் மனத்தில் சிறப்பு பெறும் இடங்கள்
திருமந்திரத்தில் திருமூலர் கூறும் பெருமை:
"உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி நமஎன்று நாமத்தை
விச்சுமின் விச்சி விரசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயகனாகுமே. திருமந்திரம்
இரவும் பகலும் சந்திக்கும் நேரம் காலை, உச்சிப் பொழுது, மற்றும் மாலை ஆகிய மூன்று காலங்களிலும் சிவாயநம என்னும் ஆதி மந்திரத்தை சொல்லி சிவபெருமானாரை வழிபட வேண்டும்.
காலை - சூரியன், உச்சி - நெருப்பு, மாலை - சந்திரன் என்றவாறு இந்த மூன்று வேளைகளிலும் மூன்று கண்களாக சூரியன், நெருப்பு, சந்திரன் நினைந்து வழிபட்டால் இந்த மூவரையும் சேர்த்து வணங்குவதே ஆகும்,
திரு ஐந்தெழுத்தின் சொல்லும் வகையும பயனும்:
எளிய வாது செய்வார் எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்
தெளிய ஓதி சிவாயநம என்னும்
குளிகை இட்டுப் பொன்னாக்குவன் இக்கூட்டையே. திருமந்திரம்
வீணாக விவாதம் செய்வதை விட்டுவிட்டு அஞ்ஞான இருளை நீக்கும் ஞான ஒளியாகிய ( அறிவுமயமான) சிவபெருமானாரை மனத்தில் நினைந்து உருகும் மனத்துடன் ஐந்தெழுத்தை கணிக்க வேண்டும் (செபித்தல்)
நாமாவளியைச் சிந்திக்கும் பொழுது மனதில் வேறு நினைவுகள் இருக்கக் கூடாது. சிவாயநம என்னும் மந்திரத்திற்குரிய சிவபெருமானாரையே நினைத்து உருகிய உள்ளத்துடன் செபித்தல் வேண்டும்.
இதனால் ஆணவம் நீங்கும், ஆணவம் நீங்கிய உயிர் சிவமாய் விளங்கும், இரசகுளிகையால் செம்பில் உள்ள களிம்பு நீங்கி செம்பு பொன்னாவது போல என்று உணர்க. உயிர் சிவமானால் உடம்பும் சிவகாயமேயாகும்.
தேவாரப்பதிகத்தில் திருநாவுக்கரசர்:
"சித்தம் ஒருக்கிச் சிவாயநம என்றிருக்கின் அல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே" - திருமறை 4 - பதிகம் 94 பாடல் 5
உனதருளால் திருவாய்ப் பொலியச்
சிவாயநம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர்அரனே, பாடல் 6
செலவில்லாத எளிய வழி இதுவாகும் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று வேளையாவது செபித்தல் வேண்டும்.
மந்திரமும் நான்கு வேதங்களும் திருஐந்தெழுத்தே ஆகும்
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே, - திருமறை 3 பதி 22, பாடல் 2
மந்திரங்களாகவும், நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று, அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருஐந்தெழுத்தே ஆகும்.
செந்தீ வளர்த்திச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும் காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் சிவாயநம என்னும் ஐந்தெழுத்தே.
சுந்தரர் பெருமான்
" நற்றவா உனை நான் மறக்கினும்
சொல்லுமு நா நமச்சிவாயவே - சுந்தரர்
நாம் மறந்தாலும் நம்முடைய நாவில் ஐந்தெழுத்தே வெளிப்ட வேண்டும், இடரினும் தளரினும்,தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும், திருஐந்தெழுத்தே நம் வாயில் வெளிப்பட வேண்டும், இதனால் பிறவியில்லாமல் போகும்,
திருச்சிற்றம்பலம்
நன்றி: தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
தமிழ் வேதங்களான திருமுறைகள் கூறும் திருஐந்தெழுத்தின் பெருமையினை தேவாரப்பதியங்களில் தனித்தனி பதியங்களாகக் கண்டாலும் நம் மனத்தில் சிறப்பு பெறும் இடங்கள்
திருமந்திரத்தில் திருமூலர் கூறும் பெருமை:
"உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி நமஎன்று நாமத்தை
விச்சுமின் விச்சி விரசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயகனாகுமே. திருமந்திரம்
இரவும் பகலும் சந்திக்கும் நேரம் காலை, உச்சிப் பொழுது, மற்றும் மாலை ஆகிய மூன்று காலங்களிலும் சிவாயநம என்னும் ஆதி மந்திரத்தை சொல்லி சிவபெருமானாரை வழிபட வேண்டும்.
காலை - சூரியன், உச்சி - நெருப்பு, மாலை - சந்திரன் என்றவாறு இந்த மூன்று வேளைகளிலும் மூன்று கண்களாக சூரியன், நெருப்பு, சந்திரன் நினைந்து வழிபட்டால் இந்த மூவரையும் சேர்த்து வணங்குவதே ஆகும்,
திரு ஐந்தெழுத்தின் சொல்லும் வகையும பயனும்:
எளிய வாது செய்வார் எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்
தெளிய ஓதி சிவாயநம என்னும்
குளிகை இட்டுப் பொன்னாக்குவன் இக்கூட்டையே. திருமந்திரம்
வீணாக விவாதம் செய்வதை விட்டுவிட்டு அஞ்ஞான இருளை நீக்கும் ஞான ஒளியாகிய ( அறிவுமயமான) சிவபெருமானாரை மனத்தில் நினைந்து உருகும் மனத்துடன் ஐந்தெழுத்தை கணிக்க வேண்டும் (செபித்தல்)
நாமாவளியைச் சிந்திக்கும் பொழுது மனதில் வேறு நினைவுகள் இருக்கக் கூடாது. சிவாயநம என்னும் மந்திரத்திற்குரிய சிவபெருமானாரையே நினைத்து உருகிய உள்ளத்துடன் செபித்தல் வேண்டும்.
இதனால் ஆணவம் நீங்கும், ஆணவம் நீங்கிய உயிர் சிவமாய் விளங்கும், இரசகுளிகையால் செம்பில் உள்ள களிம்பு நீங்கி செம்பு பொன்னாவது போல என்று உணர்க. உயிர் சிவமானால் உடம்பும் சிவகாயமேயாகும்.
தேவாரப்பதிகத்தில் திருநாவுக்கரசர்:
"சித்தம் ஒருக்கிச் சிவாயநம என்றிருக்கின் அல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே" - திருமறை 4 - பதிகம் 94 பாடல் 5
உனதருளால் திருவாய்ப் பொலியச்
சிவாயநம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர்அரனே, பாடல் 6
செலவில்லாத எளிய வழி இதுவாகும் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று வேளையாவது செபித்தல் வேண்டும்.
மந்திரமும் நான்கு வேதங்களும் திருஐந்தெழுத்தே ஆகும்
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே, - திருமறை 3 பதி 22, பாடல் 2
மந்திரங்களாகவும், நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று, அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருஐந்தெழுத்தே ஆகும்.
செந்தீ வளர்த்திச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும் காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் சிவாயநம என்னும் ஐந்தெழுத்தே.
சுந்தரர் பெருமான்
" நற்றவா உனை நான் மறக்கினும்
சொல்லுமு நா நமச்சிவாயவே - சுந்தரர்
நாம் மறந்தாலும் நம்முடைய நாவில் ஐந்தெழுத்தே வெளிப்ட வேண்டும், இடரினும் தளரினும்,தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும், திருஐந்தெழுத்தே நம் வாயில் வெளிப்பட வேண்டும், இதனால் பிறவியில்லாமல் போகும்,
திருச்சிற்றம்பலம்
நன்றி: தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
தமிழகத்துச் சிவஞானியார்
தமிழகத்து சிறந்த சிவஞானியாராகத் திகழ்ந்தவர் தருமை ஆதீன 13 வது சந்நிதானம் தவத்திரு ஞான சம்பந்த தேசிகர் ஆவார், தவத்திரு ஞான சம்பந்த தேசிகர் காசிக் கங்கை நீரைத் தங்கள் ஆன்மார்த்த மூர்த்தியின் திருமுன்பிற்கு வருவித்து, அதில் தமக்கு முற்பட்ட மகா சந்நிதானங்களையும் நினைந்து நினைந்து மூழ்கியவர், இச்செயலுக்கு பெரிதும் முன்னின்று உதவியவர், ஆதீனத்திருக்கூட்டத்து அடியவருள் ஒருவராகிய விருத்தாசலத் தம்பிரான் சுவாமிகள். மகா சந்நிதானம் அவர்கள் தம் ஆன்மார்த்த மூர்த்தியுடன் காசியாத்திரை சென்று திரும்புவதில் இடர்பாடுகள் உள்ளன என எண்ணினார், " தமது ஆதீனத் திருக்கூட்டத்தில் யாரேனும் கங்கையைத் தருமைக்கு கொண்டுவரும் ஆற்றல் படைத்தவர் ஒருவராகினும் இல்லையோ" என்று கேட்டார்கள்.
அச்சமயத்தில் அங்கிருந்த விருத்தாசலத்தம்பிரான் மாசிலாமணி தேசிகர் சுவாமிகள் " திருவருளையும் குருவருளையும் துணைக் கொண்டு அடியேன் இப்பணியை நிறைவேற்றுகிறேன், " என்றார், அதன்படி குருமகா சந்நிதானத்திடம் உத்தரவு பெற்றுக் கொண்டு திருவாங்கூர் மன்னரது ஆட்சிக்குட்பட்ட பத்மநாதபுரத்திற்கு சென்றார்கள். அங்குள்ள சிவலாயத்திற்கு சென்று சிவபெருமானார் திருமுன் நின்று தம்மை மறந்து சாராங்கி வாத்தியத்துடன் திருமுறைப்பாடல்களை கண்ணீர் மல்க இனிமையாக பாடி பரவச முற்றிருந்தார், இந்நிலையில் இவருடைய தோளில் இறைவர் நின்று நடனம் புரிந்தார், ஆலய வழிபாட்டிற்காக வந்த அரசன் இக்காட்சியினைக் கண்டு வியந்து போனார், தம்பிரான் சுவாமிகளை வணங்கி அரண்மனைக்கு அழைத்து சென்று உபசரித்து " அடியேனால் ஆகத்தக்க பணி ஏதேனும் உண்டோ? " என கேட்டார், தம்பிரான் சுவாமிகள் கங்கை நீர் தருமைக்கு வரவேண்டிய நிலைமையை தெரிவித்தார்கள், உடனே அரசன் யானைகள் ஒட்டங்கள், பலவற்றை அனுப்பி அளவற்ற பாத்திரங்களால் கங்கை நீரைக் கொணரச் செய்து தருமை ஆதீனத்தின் பூசை முற்றத்தில் ஏராளமாக நிரப்பி வைக்கப்பட்டது.
முன் கூறியது போல குருமகாசந்நிதானம் அவர்கள் கங்கை நீரில் மூழ்கி மகிழ்ந்தார்கள்,
இதிலிருந்து நாம் உணரக்கூடியவை:
விருத்தாசலத் தம்பிரான் சுவாமிகள் திருமுறைகள் மீது அளவற்ற பற்றுக் கொண்டவர் சாரங்கி வாத்தியம் வாசிப்பதிலும் வல்லவர், தம்முடைய அரிய வேலை கங்கை நீரைக் கொண்டு வருவது என்பதே தனது ஆத்மானந்த குறிக்கோளும், மகா சந்நிதானத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவது தனது பொறுப்பு என்று உணர்ந்தார்,
பத்மநாபபுரம் சிவலாயத்தில் எழுந்தருளியுள்ள இறைவர் முன்பு திருமுறைப் பாடல்களை சாரங்கி மூலம் இசைத்து பாடி உள்ளம் உருகினார், தம்மையே மறந்திருந்தார், அந்நிலையில் அரசரை அங்கே வரவழைத்தது இறையருள் , திருமுறைப் பாடல்கள் இறையாற்றலை நாம் உணர்வதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முதலில் இறைவர் மீதும் தாம் எடுத்துக் கொண்ட பணி மீதும் உறுதியான நம்பிக்கை , திருமுறைப்பாடல்கள் இறைவரை ஈர்க்கும் என்ற தளராத எண்ணம், இத்துடன் அப்பாடல்களில் மனம் ஒன்றி பாட வேண்டும் ,இறைவரை நம்பால் கொண்டு வரும் ஆற்றல் பெற்றவை நம் தமிழ் வேத திருமுறைப்பாடல்கள்.
" தம்மை மறந்து நின்னை நினைப்பவர்
செம்மை மனத்திலும் தில்லை மன்றிலும் நடமாடும் அம்பலவாண!" - கோயில் நான் மணிகமாலை பட்டினத்து அடிகள்
நன்றி ! தமிழ் வேதம்
திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு:
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
தமிழகத்து சிறந்த சிவஞானியாராகத் திகழ்ந்தவர் தருமை ஆதீன 13 வது சந்நிதானம் தவத்திரு ஞான சம்பந்த தேசிகர் ஆவார், தவத்திரு ஞான சம்பந்த தேசிகர் காசிக் கங்கை நீரைத் தங்கள் ஆன்மார்த்த மூர்த்தியின் திருமுன்பிற்கு வருவித்து, அதில் தமக்கு முற்பட்ட மகா சந்நிதானங்களையும் நினைந்து நினைந்து மூழ்கியவர், இச்செயலுக்கு பெரிதும் முன்னின்று உதவியவர், ஆதீனத்திருக்கூட்டத்து அடியவருள் ஒருவராகிய விருத்தாசலத் தம்பிரான் சுவாமிகள். மகா சந்நிதானம் அவர்கள் தம் ஆன்மார்த்த மூர்த்தியுடன் காசியாத்திரை சென்று திரும்புவதில் இடர்பாடுகள் உள்ளன என எண்ணினார், " தமது ஆதீனத் திருக்கூட்டத்தில் யாரேனும் கங்கையைத் தருமைக்கு கொண்டுவரும் ஆற்றல் படைத்தவர் ஒருவராகினும் இல்லையோ" என்று கேட்டார்கள்.
அச்சமயத்தில் அங்கிருந்த விருத்தாசலத்தம்பிரான் மாசிலாமணி தேசிகர் சுவாமிகள் " திருவருளையும் குருவருளையும் துணைக் கொண்டு அடியேன் இப்பணியை நிறைவேற்றுகிறேன், " என்றார், அதன்படி குருமகா சந்நிதானத்திடம் உத்தரவு பெற்றுக் கொண்டு திருவாங்கூர் மன்னரது ஆட்சிக்குட்பட்ட பத்மநாதபுரத்திற்கு சென்றார்கள். அங்குள்ள சிவலாயத்திற்கு சென்று சிவபெருமானார் திருமுன் நின்று தம்மை மறந்து சாராங்கி வாத்தியத்துடன் திருமுறைப்பாடல்களை கண்ணீர் மல்க இனிமையாக பாடி பரவச முற்றிருந்தார், இந்நிலையில் இவருடைய தோளில் இறைவர் நின்று நடனம் புரிந்தார், ஆலய வழிபாட்டிற்காக வந்த அரசன் இக்காட்சியினைக் கண்டு வியந்து போனார், தம்பிரான் சுவாமிகளை வணங்கி அரண்மனைக்கு அழைத்து சென்று உபசரித்து " அடியேனால் ஆகத்தக்க பணி ஏதேனும் உண்டோ? " என கேட்டார், தம்பிரான் சுவாமிகள் கங்கை நீர் தருமைக்கு வரவேண்டிய நிலைமையை தெரிவித்தார்கள், உடனே அரசன் யானைகள் ஒட்டங்கள், பலவற்றை அனுப்பி அளவற்ற பாத்திரங்களால் கங்கை நீரைக் கொணரச் செய்து தருமை ஆதீனத்தின் பூசை முற்றத்தில் ஏராளமாக நிரப்பி வைக்கப்பட்டது.
முன் கூறியது போல குருமகாசந்நிதானம் அவர்கள் கங்கை நீரில் மூழ்கி மகிழ்ந்தார்கள்,
இதிலிருந்து நாம் உணரக்கூடியவை:
விருத்தாசலத் தம்பிரான் சுவாமிகள் திருமுறைகள் மீது அளவற்ற பற்றுக் கொண்டவர் சாரங்கி வாத்தியம் வாசிப்பதிலும் வல்லவர், தம்முடைய அரிய வேலை கங்கை நீரைக் கொண்டு வருவது என்பதே தனது ஆத்மானந்த குறிக்கோளும், மகா சந்நிதானத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவது தனது பொறுப்பு என்று உணர்ந்தார்,
பத்மநாபபுரம் சிவலாயத்தில் எழுந்தருளியுள்ள இறைவர் முன்பு திருமுறைப் பாடல்களை சாரங்கி மூலம் இசைத்து பாடி உள்ளம் உருகினார், தம்மையே மறந்திருந்தார், அந்நிலையில் அரசரை அங்கே வரவழைத்தது இறையருள் , திருமுறைப் பாடல்கள் இறையாற்றலை நாம் உணர்வதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முதலில் இறைவர் மீதும் தாம் எடுத்துக் கொண்ட பணி மீதும் உறுதியான நம்பிக்கை , திருமுறைப்பாடல்கள் இறைவரை ஈர்க்கும் என்ற தளராத எண்ணம், இத்துடன் அப்பாடல்களில் மனம் ஒன்றி பாட வேண்டும் ,இறைவரை நம்பால் கொண்டு வரும் ஆற்றல் பெற்றவை நம் தமிழ் வேத திருமுறைப்பாடல்கள்.
" தம்மை மறந்து நின்னை நினைப்பவர்
செம்மை மனத்திலும் தில்லை மன்றிலும் நடமாடும் அம்பலவாண!" - கோயில் நான் மணிகமாலை பட்டினத்து அடிகள்
நன்றி ! தமிழ் வேதம்
திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு:
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
சிவ சக்தியின் தத்துவங்கள்
உலகம், உயிர்கள் என்று அனைத்துமே ஒரு மூலப்பொருளில் இருந்தே தோன்றியது. உலகப்பிலானே எல்லா உலகமுடைய ஒரு மூர்த்தி திருவாய்மொழி, அதுவே பரப்பிரம்மம் எனப்பட்டது. அது ஆன், பெண், என்ற பலவேறுபாடு அற்றது. "ஆணல்லன், பெண்ல்லள்" (திருவாய் மொழி 2-5-10), அந்தப் பிரப்பிரம்மமே சிவம் என்று பிறகு சுட்டப்பட்டது. அந்தப் பரப்பிரம்மம் உலகசிருஸ்டியை நினைத்து ஆண, பெண் என்று தன்னையே பிறப்பித்தது, "பெண்ணாகி ஆணாய்" - திருவாசகம்
சிவம் என்ற மூலப்பொருள் சிவன் ஆனது. சக்தி பெண்வடிவமாக மாறியது, இந்த நிலையில் சிவத்துள் சக்தியும், சக்தியுள் சிவமும் ஒன்றை ஒன்று மருவி உலகின் படைப்பு ஆரம்பம் ஆனது. இந்த உலகம் முதல் அனைத்துமே சிவ-சக்தியின் தத்துவமே ஆகும், (கீதை 14-3-4) சிவசக்தி ஐக்கியத்தை குறிக்கும், அர்த்த நாரீசுவர வடிவம் சிவனின் ஒருகூறு. இதனை மாதொரு பிரான் - என்கிறார் திருவாசகம் மாணிக்கவாசகர் பெருமானார். சிவ சக்தியின் தத்துவத்தில் சிவனிடத்தில் சக்தி சமபங்காக அடங்கியுள்ளதாக காட்டுகிறது. இதைப் போலவே சக்தி தத்துவத்தில் யோகமாயைத் தத்துவம் , சக்திக்குள் சிவம் போலவே சக்தி தத்துவத்தில் யோகமாயைத் தத்துவம் சக்திக்குள் சிவன் அடங்கிய தத்துவமாக குறிக்கிறது. இதனை யோகமளை என்று குறிப்பது வழக்கம்.
"சிவ" என்ற சொல் சிவனையும், சக்தியையும் குறிக்கும், "சி" என்பது சிவனையும் "வ" என்பது சக்திையும் குறிக்கும், சி வலிமையானது, வ மென்மையானது. சிவ சொரூபம் அனைத்து பொருட்களிலும் காணப்படும், நமது சமய ஆலயங்களில் ஒரு நீண்ட வெள்ளைக்கோடும் ஒரு நீண்ட சிவப்புக்கோடும் கலந்தவாறு வர்ணம் பூசியிருப்பதை காணலாம் அல்லவா? அது இதன் தத்துவத்தைக் குறிப்பதே ஆகும். சிவம் சக்தி இன்றி உலகமும் உடலும் இல்லை என்பதே இதன் தத்துவம். முதலில் தாவம் பற்றி காண்போம், உலகில் ஒரே வடிவத்தில் ஆண் (சிவம்) இயல்பும், பெண் (சக்தி) இயல்பும் இரண்டுமே சேர்ந்திருக்கின்றன, ஒரே மலரிலும் ஆண்பாகம்,(மகரந்தம்) பெண்பாகம் (சூலகம்)இரண்டுமே கலந்து இருக்கிறது. இவ்விரண்டின் சரிபாதிக் கூட்டுறவால் புதிய விதை உண்டாகிறது, சங்கமங்களுள் ஒவ்வொரு உயிரும், அதனதன் தாய் தந்தையரின் பாதிப்பாதி அம்சத்தைப் பெற்றே உண்டாகிறது. சைத்தன்யம் - ஜடம் ஆகிய இரண்டு தத்துவங்களை உடையது. "உயிர்த்தத்துவம் சிவம், உடல் தத்துவம் சக்தி, உயிரும் , உடலும் சேர்ந்ததே இயற்கையின் திட்டத்தை அமைக்கின்றன என்பார் சுவாமி சித்பவானந்தர்,
ஆலயங்களின் சுவர்களில் மட்டும் வெள்ளையும் சிவப்பும் மாறி இருக்கவில்லையா? இல்லங்களில் இடப்படும் கோலங்களில் கூட வெள்ளைக் கோலத்துடன் காவி என்ற சிவப்பும் கலந்துதானே கோலம் போடுகின்றனர், கோலத்தில் முதலில் இடப்படும் புள்ளிகள் சிவதத்துவம் ஆகும், பிறகு இடப்படும் கோலமும் காவியும் சக்தி தத்துவமாகும்.
நம் உடலில் வெள்ளை அணுக்களும், சிவப்பு அணுக்களும் சேர்ந்ததே நமது உடல் இயக்கம், அதுமட்டுமா ஜீவ (சக்தி) பொருள் வெண்ணிறமான சுக்கிலம் என்பட்டன, பெண்மையில் கருப்பையில் உள்ள சுரோணிதம் சிவப்பு நிறம், இவை இணைந்தால் ஆலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் பரப்பரும்மம் உண்டாகிறது, (தாயின் கருவறையிலும் இதுதானே)
இல்லறத்தில் கணவன் மனைவி இணைந்தால் ஒரு தாயின் கர்ப்பக்கிருகத்தில் (கர்ப்பத்தில்) ஆணு மற்ற பெண்ணுமற்ற பரப்பிரம்மம் உண்டாகிறது. பிறகுதான் ஆண் - பெண் என்ற நிலையை பெறுகிறது. சிவம் - சக்தி என்ற இரண்டு (இவையின் ) வடிவமே நம் உடலின் உறுப்புகள் ஆகும்.
நமது உடலில் ( சிவம் - உயிர், சக்தி - உடல்) சிவசக்தி செயல்கள் இரண்டு
மூளை இரண்டு - பெருமூளை, சிறுமூளை
கண் இரண்டு - இடது, வலது
காது இரண்டு
இமை இரண்டு - மேல் இமை, கீழ் இமை
மூக்கு இரண்டு வலது, இடது
கண்ணம் இரண்டு - வலது, இடது
வாய் இரண்டு - மேல் வாய் கீழ்வாய்
பல்வரிசை இரண்டு - மேல், கீழ் வரிசை
நாக்கு இரண்டு - வெளிநாக்கு உள்நாக்கு
தொண்டை குழாய் இரண்டு - உணவுக்கு, காற்றுக்கு
நுரையீரல் இரண்டு - வலது இடது
குடல் 2 - பெருங்குடல் , சிறுகுடல்
கால்கள் இரண்டு - வலது, இடது
தோல் இரண்டு - அகத்தோல் புறத்தோல்
குருதி - வெள்ளை, சிவப்பு
இதயம் 2 - வலது ஆரிக்கள், இடது ஆரிக்கள்
இடது புறம் சக்தியின் இருப்பிடம், அதில் இருதயம் மண்ணீரல் முதலிய உறுப்புகளும் வலதுபுறத்தில் சிவபெருமானின் இருப்பிடம், இங்கு கல்லீரல், பித்தப்பை, குடல் வால், ஆகிய உறுப்புக்கள் இருப்பது இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம், உடலில் இருக்க வேண்டிய உறுப்புக்ள் அனைத்துமே சரியாக இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும், இந்த புவியை கொஞ்சம் நோக்குவோம், தட்பமும், வெப்பமும் சேர்ந்து எங்கும் காணப்படுகிறது. இதுவும் சிவசக்தி தத்துவமாகும் தட்பவெப்ப நிலை
ஒரு மலர் மலராக இருக்க வேண்டும் என்றால் குளிர்ச்சியும், சூடும் சமமாக இருக்க வேண்டும், மலர் வாடினால் குளிர்ச்சி ( சக்தி) குறைந்து விட்டது என்றும், மலர் அழுகிவிட்டால் சூடு (சிவம்) குறைந்துவிட்டது என்றும் அர்த்தம். எனவே சூடு ஆகிய சிவமும், குளிர்ச்சி ஆகிய சக்தியும், ஒன்றையொன்று விட்டுவிடாமல் கலந்து மலரில் இருந்தால்தான் மலர் அழகுடன் இருக்கும், என்பது சிவசக்தி தத்துவம்.
நமது சரீரத்தில் தட்பமும் ( சக்தியும்) வெப்பமும்( சிவனும்) அமைந்திருக்கின்றன, சூடு குறைந்தால் உயிர் உடம்பில் (சக்தியில்) நிலைபெறுவதில்லை. சூடு குறைய சிவமாகிய உயிர் சவமாகிவிடுவார், சூடும் குளிர்ச்சியும் எல்லையற்றிருக்குமானால் அங்கு உயிர்கள் தோன்றுவதில்லை. உதாரணமாக, சூடு (சிவம்) குறைந்த, வடதுருவப்பிரதேசங்களிலும், குளிர்ச்சி (சக்தி) குறைந்த சகாராவிலும் உயிர்கள் இடர்ப்பட்டுத்தான் வாழ்கின்றன, "பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்" - திருவாசம் 7-10,
தட்பத்தின் சூக்கும ஆற்றல் சக்தி - வெப்பத்தின் சூக்கும ஆற்றல் சிவம், இந்த இரு பொருள்களும் ஒரே பொருளின் இரு பகுதிகள் ஆகும். உடலில் குளிர்ச்சி அதிகமானால், சளி சம்பந்தமான நோய்களும், சூடு அதிகமானால் சுரம், மஞ்சள் காமாலை, முதலிய நோய்களும் தோன்றும், ஆகவே சக்தியும சிவமும் சமமாக இருப்பதே ஆரோக்கியம் ஆகும்.
"எது ஒன்றுமில்லையோ அதுதான் உலகம்" " எது உலகமோ அது ஒன்றில்லை" என்பதே சிவசக்தியின் மூலத் தத்துவமாகும், இந்த வாக்கியம் வேதத்தின் சாரம் ஆகும், ஆயிரம் ஆயிரம் செலவு செய்து பலமணி நேரம் உழைத்து ஒரு திருமணம் நடக்கிறது, அதன் சாரன் என்ன? திருமாங்கல்யத்தின் மூன்று முடிச்சுக்களுக்குத்தான், அதை நினைத்துப்பார்த்தால் ஒருசில நிமிட உறவுதான், அந்த சில நிமிட உறவு இல்லை என்றால் உலகம்இல்லை. ஆனால் அதுவே வாழ்க்கையில்லை, சிவமும் சக்தியுமே உலகம் ஆகும். அரிசி - பொருள், உமி - ஒன்றுமில்லை இப்படி இருந்தாலும், அரிசியை விடடு உமி பிரித்துவிட்டால் அரிசியை நிலத்தில இட்டால் முளைப்பதில்லை, உமியும் முளைப்பதில்லை, உமியின் துணைகொண்டு அரிச முளையாகிறது, ஒன்றுக்கும் பற்றாத பூஜ்யத்தை ( சிவத்தை) துணை கொள்வதால் எண் ( சக்தி) வளர்ச்சியடைகின்றது, என்பார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். பல மணி நேர உழைப்பின் சாரம் சம்பளமே ஆகும், அது வடிவத்தில் சிறியது,மதிப்பு பெரியது. ஆண் , பெண் சமம்,பெண்ணுக்கு ஆண் சமம், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதே வாழ்வின் சாரம்சம், தனித்த நிலையில் சக்தியை வழிபடும் மரபு பண்டைய சைவ உலகில் காணப்படவில்லை. சிவபெருமானின் ஒரு கூறாகவே சக்தியை கொள்வார்கள்.
திருக்கயிலையில் சிவபெருமானின் அருகில் காளையும், பராசக்தியும் அருகில் சிங்கமும் அமர்ந்திருப்பதைக் காணலாம், சிறிது சிந்தித்துப் பார்த்தால் இதில் வினோதம் ஒன்று இருப்பது விளங்கும், அவற்றின் இயல்புகள் ஒன்றுக்கு ஒன்று முரன்பட்டவை, ஒரே உலகில் அவைகள் வாழ்கின்றன அல்லவா?
இது கயிலையில் மட்டுமல்ல, காணும்இடம் எங்கும் இயற்கையில் இதே காட்சிதான், பகல்-இரவு, துன்பம்- இன்பம், உயர்வு-தாழ்வு, தட்பம்-வெப்பம், என்ற சிவசக்தி தத்துவமே உலகம் ஆகும். சிவத்திடம் சக்தியையும், சக்தியிடம் சிவத்தையும், ஒன்றாகவே உள்ள தத்துவத்தை தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ், கம்பராமாயணம், மற்றும் பல்வேறு திருமுறைகளில் இன்றும் காண முடிகிறது. ஆகவே நாமும், சிவ -சக்தியை வழிபட்டு தெய்வீக குணங்களை கடைப்பிடித்து ஞான ( சிவ-சக்தி) நிலை அடைவோம்.
திருச்சிற்றம்பலம் - ஒம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
உலகம், உயிர்கள் என்று அனைத்துமே ஒரு மூலப்பொருளில் இருந்தே தோன்றியது. உலகப்பிலானே எல்லா உலகமுடைய ஒரு மூர்த்தி திருவாய்மொழி, அதுவே பரப்பிரம்மம் எனப்பட்டது. அது ஆன், பெண், என்ற பலவேறுபாடு அற்றது. "ஆணல்லன், பெண்ல்லள்" (திருவாய் மொழி 2-5-10), அந்தப் பிரப்பிரம்மமே சிவம் என்று பிறகு சுட்டப்பட்டது. அந்தப் பரப்பிரம்மம் உலகசிருஸ்டியை நினைத்து ஆண, பெண் என்று தன்னையே பிறப்பித்தது, "பெண்ணாகி ஆணாய்" - திருவாசகம்
சிவம் என்ற மூலப்பொருள் சிவன் ஆனது. சக்தி பெண்வடிவமாக மாறியது, இந்த நிலையில் சிவத்துள் சக்தியும், சக்தியுள் சிவமும் ஒன்றை ஒன்று மருவி உலகின் படைப்பு ஆரம்பம் ஆனது. இந்த உலகம் முதல் அனைத்துமே சிவ-சக்தியின் தத்துவமே ஆகும், (கீதை 14-3-4) சிவசக்தி ஐக்கியத்தை குறிக்கும், அர்த்த நாரீசுவர வடிவம் சிவனின் ஒருகூறு. இதனை மாதொரு பிரான் - என்கிறார் திருவாசகம் மாணிக்கவாசகர் பெருமானார். சிவ சக்தியின் தத்துவத்தில் சிவனிடத்தில் சக்தி சமபங்காக அடங்கியுள்ளதாக காட்டுகிறது. இதைப் போலவே சக்தி தத்துவத்தில் யோகமாயைத் தத்துவம் , சக்திக்குள் சிவம் போலவே சக்தி தத்துவத்தில் யோகமாயைத் தத்துவம் சக்திக்குள் சிவன் அடங்கிய தத்துவமாக குறிக்கிறது. இதனை யோகமளை என்று குறிப்பது வழக்கம்.
"சிவ" என்ற சொல் சிவனையும், சக்தியையும் குறிக்கும், "சி" என்பது சிவனையும் "வ" என்பது சக்திையும் குறிக்கும், சி வலிமையானது, வ மென்மையானது. சிவ சொரூபம் அனைத்து பொருட்களிலும் காணப்படும், நமது சமய ஆலயங்களில் ஒரு நீண்ட வெள்ளைக்கோடும் ஒரு நீண்ட சிவப்புக்கோடும் கலந்தவாறு வர்ணம் பூசியிருப்பதை காணலாம் அல்லவா? அது இதன் தத்துவத்தைக் குறிப்பதே ஆகும். சிவம் சக்தி இன்றி உலகமும் உடலும் இல்லை என்பதே இதன் தத்துவம். முதலில் தாவம் பற்றி காண்போம், உலகில் ஒரே வடிவத்தில் ஆண் (சிவம்) இயல்பும், பெண் (சக்தி) இயல்பும் இரண்டுமே சேர்ந்திருக்கின்றன, ஒரே மலரிலும் ஆண்பாகம்,(மகரந்தம்) பெண்பாகம் (சூலகம்)இரண்டுமே கலந்து இருக்கிறது. இவ்விரண்டின் சரிபாதிக் கூட்டுறவால் புதிய விதை உண்டாகிறது, சங்கமங்களுள் ஒவ்வொரு உயிரும், அதனதன் தாய் தந்தையரின் பாதிப்பாதி அம்சத்தைப் பெற்றே உண்டாகிறது. சைத்தன்யம் - ஜடம் ஆகிய இரண்டு தத்துவங்களை உடையது. "உயிர்த்தத்துவம் சிவம், உடல் தத்துவம் சக்தி, உயிரும் , உடலும் சேர்ந்ததே இயற்கையின் திட்டத்தை அமைக்கின்றன என்பார் சுவாமி சித்பவானந்தர்,
ஆலயங்களின் சுவர்களில் மட்டும் வெள்ளையும் சிவப்பும் மாறி இருக்கவில்லையா? இல்லங்களில் இடப்படும் கோலங்களில் கூட வெள்ளைக் கோலத்துடன் காவி என்ற சிவப்பும் கலந்துதானே கோலம் போடுகின்றனர், கோலத்தில் முதலில் இடப்படும் புள்ளிகள் சிவதத்துவம் ஆகும், பிறகு இடப்படும் கோலமும் காவியும் சக்தி தத்துவமாகும்.
நம் உடலில் வெள்ளை அணுக்களும், சிவப்பு அணுக்களும் சேர்ந்ததே நமது உடல் இயக்கம், அதுமட்டுமா ஜீவ (சக்தி) பொருள் வெண்ணிறமான சுக்கிலம் என்பட்டன, பெண்மையில் கருப்பையில் உள்ள சுரோணிதம் சிவப்பு நிறம், இவை இணைந்தால் ஆலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் பரப்பரும்மம் உண்டாகிறது, (தாயின் கருவறையிலும் இதுதானே)
இல்லறத்தில் கணவன் மனைவி இணைந்தால் ஒரு தாயின் கர்ப்பக்கிருகத்தில் (கர்ப்பத்தில்) ஆணு மற்ற பெண்ணுமற்ற பரப்பிரம்மம் உண்டாகிறது. பிறகுதான் ஆண் - பெண் என்ற நிலையை பெறுகிறது. சிவம் - சக்தி என்ற இரண்டு (இவையின் ) வடிவமே நம் உடலின் உறுப்புகள் ஆகும்.
நமது உடலில் ( சிவம் - உயிர், சக்தி - உடல்) சிவசக்தி செயல்கள் இரண்டு
மூளை இரண்டு - பெருமூளை, சிறுமூளை
கண் இரண்டு - இடது, வலது
காது இரண்டு
இமை இரண்டு - மேல் இமை, கீழ் இமை
மூக்கு இரண்டு வலது, இடது
கண்ணம் இரண்டு - வலது, இடது
வாய் இரண்டு - மேல் வாய் கீழ்வாய்
பல்வரிசை இரண்டு - மேல், கீழ் வரிசை
நாக்கு இரண்டு - வெளிநாக்கு உள்நாக்கு
தொண்டை குழாய் இரண்டு - உணவுக்கு, காற்றுக்கு
நுரையீரல் இரண்டு - வலது இடது
குடல் 2 - பெருங்குடல் , சிறுகுடல்
கால்கள் இரண்டு - வலது, இடது
தோல் இரண்டு - அகத்தோல் புறத்தோல்
குருதி - வெள்ளை, சிவப்பு
இதயம் 2 - வலது ஆரிக்கள், இடது ஆரிக்கள்
இடது புறம் சக்தியின் இருப்பிடம், அதில் இருதயம் மண்ணீரல் முதலிய உறுப்புகளும் வலதுபுறத்தில் சிவபெருமானின் இருப்பிடம், இங்கு கல்லீரல், பித்தப்பை, குடல் வால், ஆகிய உறுப்புக்கள் இருப்பது இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம், உடலில் இருக்க வேண்டிய உறுப்புக்ள் அனைத்துமே சரியாக இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும், இந்த புவியை கொஞ்சம் நோக்குவோம், தட்பமும், வெப்பமும் சேர்ந்து எங்கும் காணப்படுகிறது. இதுவும் சிவசக்தி தத்துவமாகும் தட்பவெப்ப நிலை
ஒரு மலர் மலராக இருக்க வேண்டும் என்றால் குளிர்ச்சியும், சூடும் சமமாக இருக்க வேண்டும், மலர் வாடினால் குளிர்ச்சி ( சக்தி) குறைந்து விட்டது என்றும், மலர் அழுகிவிட்டால் சூடு (சிவம்) குறைந்துவிட்டது என்றும் அர்த்தம். எனவே சூடு ஆகிய சிவமும், குளிர்ச்சி ஆகிய சக்தியும், ஒன்றையொன்று விட்டுவிடாமல் கலந்து மலரில் இருந்தால்தான் மலர் அழகுடன் இருக்கும், என்பது சிவசக்தி தத்துவம்.
நமது சரீரத்தில் தட்பமும் ( சக்தியும்) வெப்பமும்( சிவனும்) அமைந்திருக்கின்றன, சூடு குறைந்தால் உயிர் உடம்பில் (சக்தியில்) நிலைபெறுவதில்லை. சூடு குறைய சிவமாகிய உயிர் சவமாகிவிடுவார், சூடும் குளிர்ச்சியும் எல்லையற்றிருக்குமானால் அங்கு உயிர்கள் தோன்றுவதில்லை. உதாரணமாக, சூடு (சிவம்) குறைந்த, வடதுருவப்பிரதேசங்களிலும், குளிர்ச்சி (சக்தி) குறைந்த சகாராவிலும் உயிர்கள் இடர்ப்பட்டுத்தான் வாழ்கின்றன, "பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்" - திருவாசம் 7-10,
தட்பத்தின் சூக்கும ஆற்றல் சக்தி - வெப்பத்தின் சூக்கும ஆற்றல் சிவம், இந்த இரு பொருள்களும் ஒரே பொருளின் இரு பகுதிகள் ஆகும். உடலில் குளிர்ச்சி அதிகமானால், சளி சம்பந்தமான நோய்களும், சூடு அதிகமானால் சுரம், மஞ்சள் காமாலை, முதலிய நோய்களும் தோன்றும், ஆகவே சக்தியும சிவமும் சமமாக இருப்பதே ஆரோக்கியம் ஆகும்.
"எது ஒன்றுமில்லையோ அதுதான் உலகம்" " எது உலகமோ அது ஒன்றில்லை" என்பதே சிவசக்தியின் மூலத் தத்துவமாகும், இந்த வாக்கியம் வேதத்தின் சாரம் ஆகும், ஆயிரம் ஆயிரம் செலவு செய்து பலமணி நேரம் உழைத்து ஒரு திருமணம் நடக்கிறது, அதன் சாரன் என்ன? திருமாங்கல்யத்தின் மூன்று முடிச்சுக்களுக்குத்தான், அதை நினைத்துப்பார்த்தால் ஒருசில நிமிட உறவுதான், அந்த சில நிமிட உறவு இல்லை என்றால் உலகம்இல்லை. ஆனால் அதுவே வாழ்க்கையில்லை, சிவமும் சக்தியுமே உலகம் ஆகும். அரிசி - பொருள், உமி - ஒன்றுமில்லை இப்படி இருந்தாலும், அரிசியை விடடு உமி பிரித்துவிட்டால் அரிசியை நிலத்தில இட்டால் முளைப்பதில்லை, உமியும் முளைப்பதில்லை, உமியின் துணைகொண்டு அரிச முளையாகிறது, ஒன்றுக்கும் பற்றாத பூஜ்யத்தை ( சிவத்தை) துணை கொள்வதால் எண் ( சக்தி) வளர்ச்சியடைகின்றது, என்பார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். பல மணி நேர உழைப்பின் சாரம் சம்பளமே ஆகும், அது வடிவத்தில் சிறியது,மதிப்பு பெரியது. ஆண் , பெண் சமம்,பெண்ணுக்கு ஆண் சமம், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதே வாழ்வின் சாரம்சம், தனித்த நிலையில் சக்தியை வழிபடும் மரபு பண்டைய சைவ உலகில் காணப்படவில்லை. சிவபெருமானின் ஒரு கூறாகவே சக்தியை கொள்வார்கள்.
திருக்கயிலையில் சிவபெருமானின் அருகில் காளையும், பராசக்தியும் அருகில் சிங்கமும் அமர்ந்திருப்பதைக் காணலாம், சிறிது சிந்தித்துப் பார்த்தால் இதில் வினோதம் ஒன்று இருப்பது விளங்கும், அவற்றின் இயல்புகள் ஒன்றுக்கு ஒன்று முரன்பட்டவை, ஒரே உலகில் அவைகள் வாழ்கின்றன அல்லவா?
இது கயிலையில் மட்டுமல்ல, காணும்இடம் எங்கும் இயற்கையில் இதே காட்சிதான், பகல்-இரவு, துன்பம்- இன்பம், உயர்வு-தாழ்வு, தட்பம்-வெப்பம், என்ற சிவசக்தி தத்துவமே உலகம் ஆகும். சிவத்திடம் சக்தியையும், சக்தியிடம் சிவத்தையும், ஒன்றாகவே உள்ள தத்துவத்தை தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ், கம்பராமாயணம், மற்றும் பல்வேறு திருமுறைகளில் இன்றும் காண முடிகிறது. ஆகவே நாமும், சிவ -சக்தியை வழிபட்டு தெய்வீக குணங்களை கடைப்பிடித்து ஞான ( சிவ-சக்தி) நிலை அடைவோம்.
திருச்சிற்றம்பலம் - ஒம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
பூனையை வேதம் சொல்ல வைத்த சித்தர் போகர்
பழனி முருகன் கோவிலில் உள்ள முருகன் சிலை நவ பாசானத்தால் ஆனது என்று நமக்கெல்லாம் தெரியும், ஆனால் அந்த சிலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாது. சதுரகிரி தலப்புராண நூலில் கூறப்பட்டுள்ள வரலாற்றை படித்துப் பார்த்தால் முருகன் சிலை போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது.
சித்தர் போகர், இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரம் அறிந்தவர். உலோகங்களை ரசவாதத்தினால் பொன்னாக்கும் வித்தை அறிந்தவர், திருசெங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வர் நவபாசானத்தால் உருவாக்கியவர் போகரே. அவருடைய பூர்வீகம் சீன நாடு. தாய் தந்தையர் சலவைத் தொழிலாளிகள் என்றும் வரலாற்றில் காணலாம். எதனால் அப்படி குறிப்பிட்டு இஇருக்கிறார்கள் என்றால் அவர் எழுதியுள்ள தமிழ் மொழியில் எழுதியிருப்பதை விட சீன மொழியில் எழுதி இருப்பது அதிகம், போகர் எப்படி சித்தர் ஆனார் என்பதைப் பார்ப்போம்.
மேருமலையில் சுற்றி போகர் வந்து கொண்டு இருந்தபோது ஒன்பது சித்தர்கள் ஐயக்கியமாகி இருந்த இடம் கண்ணில் பட்டது, அவர் மனதில் ஏதோ தோன்ற அந்த சமாதிகளின் முன்பு அன்ன ஆகாரமின்றி அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தவம் இருந்தார், சில காலம் கழித்து சமாதியில் இருந்து 9 சித்தர்களும் அவருக்கு தரிசனம் கொடுத்து இறந்தவர்களை பிழைக்க வைக்கும் காயகல்ப முறையை உபதேசம் செய்தார்கள்.
இந்த சஞ்சீவி மந்திரத்தை யாரால் மக்களுக்கு நன்மை கிடைக்குமோ அவர்களுக்கு மட்டுமே உபதேசம் செய் என்று கூறி மீண்டும் சமாதியில் ஐயக்கிமாகிவிட்டார்கள். பின் போகர் அங்கிருந்து கிளம்பி சிவலிங்கம் உள்ள தலங்களை தரிசித்து வந்துகொண்டிருந்தார். அடர்ந்த காட்டை கடந்து வரும்போது ஒரு புற்று கண்ணில் பட்டது புற்றின் அருகே சென்றபோது மூச்சுக் காற்று வருவதை உணர்ந்தார். புற்றின் முன்னே ஏன், எதற்கு என்று அறியாமலேயே மனத்தின் கட்டளைப்படி தியானத்தில் அமர்ந்தார். பல நாட்கள் தியான நிலையிலேயே அமர்ந்து இருந்தார். ஒருநாள் காலை பொழுதில் புற்றை உடைத்துக் கொண்டு ஒரு முனிவர் வந்து போகரின் தியானத்தை கலைத்தார். கண்களை கூசச் செய்யும் பிரகாசமான முகத்தையுடைய அந்த முனிவரைப் பார்த்ததும் போகர் வணங்கினார். அந்த முனிவர் " போகரே உன்னால் மக்களுக்கு நன்மை உண்டாகட்டும்" என்று கூறி அருகே இருந்த மரத்தை காட்டி மரத்திலுள்ள பழங்கள் பழுத்து குலுங்கி இருந்த நிலையைக் காட்டி அந்த பழத்தை சாப்பிட்டால் பசி என்பதே அணுகாது. நீ செய்யும் தவத்திற்கு பெரும் துணையாக இருக்கும் என்று கூறி பேசும் சிலை ஒன்றையும் கொடுத்து விட்டு மீண்டும் புற்றில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்தார்.
சிலையை கையில் வாங்கிக் கொண்ட போகர் அருகிலுள்ள முனிவர் காட்டிய மரத்தின் பழங்களை எடுத்து சாப்பிட்டார். மனம் மட்டுமல்ல, உடலும் இளமையாக மாறியது. கையில் இருந்த சிலை, இளமையான மாற்ற வைத்த பழத்தின் ரகசியத்தையும், மற்றும பல மூலிகைகளின் ரகசியத்தையும் கூறியது,ஆச்சிரயத்தில் ஆழ்ந்த போகர், சிலையை தரையில் வைத்து விடடு அருகே அமர்ந்தார், அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு பள்ளத்தில் அந்த சிலை மறைந்தது.
சிவன் சித்தத்தை தெளியவைத்தார், எனறு நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். அவர் பெரிய சித்தர் என்பதை அறியாமல் எதிரில் வந்த அந்தனர்கள் சிலர் போகரின் கோலத்தைக் கண்டு ஏளனம் செய்தனர், போகரோ அவர்களின் ஏழ்மையை போக்க எண்ணினார், ஞானத்தை உபதேசிக்க வேண்டும்என்று நினைத்தார், உடனே சற்று தூரத்தில் ஒரு பூனை ஒன்று கண்ணில் பட்டது, பூனை அருகே அமர்ந்து வேதத்தை அதன் காதில் ஓதி, பேசும் திறனை கொடுத்தார்.
பூனை வேத மந்திரங்களை வீதியில் அமர்ந்து கூறத் தொடங்கியது. இதைப் பார்த்த அந்தணர்கள் போகர் பித்தனல்ல. சித்தர் என்பதை புரிந்து கொண்டு எங்களை மன்னிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் போகரை தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர், அவருக்கு அன்னமிட்டு மகிழ்வித்தனர். மனதில் சந்தோசத்துடன் அவர்கள் வீடுகளில் இருந்த உலோக பொருட்களை ரசவாதத்தினால் தங்கமாக மாற்றினார், அந்தணர்கள் சித்தரின் திறன் கண்டு அதிசயத்தினர். வேதங்களை உபதேசித்து எல்லோரையும் மேன்மையுறச் செய்தார். பழனிமலையில் தவம் செய்யும் போது முருகப் பெருமான் அவருக்கு காட்சி கொடுத்து என்னை விக்ரமாக செய்து இந்த இடத்தில் பிரதிஸ்டை செய் என்று கூறி மறைந்தார். அதன் படி நவபாசானம் என்ற ஒன்பது வித மூலிகை கலவையால் முருகனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். அதன் பின் பழனி மலையிலேயே வாழ்ந்த சித்தர் அங்கேயே ஜீவ சமாதி ஆனார். இன்றும பழனி மலையில் உள்ள கோவிலின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் சித்தர் போகரின் ஜீவசமாதி உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிரம்ப பெற்றவர் சித்தர் போகர், செவ்வாய் தோசம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் இவரை வழிபட்டால் செவ்வாய் தோசம் நீங்கி நல்அருள் பெறுவர்.
திருசிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
பழனி முருகன் கோவிலில் உள்ள முருகன் சிலை நவ பாசானத்தால் ஆனது என்று நமக்கெல்லாம் தெரியும், ஆனால் அந்த சிலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாது. சதுரகிரி தலப்புராண நூலில் கூறப்பட்டுள்ள வரலாற்றை படித்துப் பார்த்தால் முருகன் சிலை போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது.
சித்தர் போகர், இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரம் அறிந்தவர். உலோகங்களை ரசவாதத்தினால் பொன்னாக்கும் வித்தை அறிந்தவர், திருசெங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வர் நவபாசானத்தால் உருவாக்கியவர் போகரே. அவருடைய பூர்வீகம் சீன நாடு. தாய் தந்தையர் சலவைத் தொழிலாளிகள் என்றும் வரலாற்றில் காணலாம். எதனால் அப்படி குறிப்பிட்டு இஇருக்கிறார்கள் என்றால் அவர் எழுதியுள்ள தமிழ் மொழியில் எழுதியிருப்பதை விட சீன மொழியில் எழுதி இருப்பது அதிகம், போகர் எப்படி சித்தர் ஆனார் என்பதைப் பார்ப்போம்.
மேருமலையில் சுற்றி போகர் வந்து கொண்டு இருந்தபோது ஒன்பது சித்தர்கள் ஐயக்கியமாகி இருந்த இடம் கண்ணில் பட்டது, அவர் மனதில் ஏதோ தோன்ற அந்த சமாதிகளின் முன்பு அன்ன ஆகாரமின்றி அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தவம் இருந்தார், சில காலம் கழித்து சமாதியில் இருந்து 9 சித்தர்களும் அவருக்கு தரிசனம் கொடுத்து இறந்தவர்களை பிழைக்க வைக்கும் காயகல்ப முறையை உபதேசம் செய்தார்கள்.
இந்த சஞ்சீவி மந்திரத்தை யாரால் மக்களுக்கு நன்மை கிடைக்குமோ அவர்களுக்கு மட்டுமே உபதேசம் செய் என்று கூறி மீண்டும் சமாதியில் ஐயக்கிமாகிவிட்டார்கள். பின் போகர் அங்கிருந்து கிளம்பி சிவலிங்கம் உள்ள தலங்களை தரிசித்து வந்துகொண்டிருந்தார். அடர்ந்த காட்டை கடந்து வரும்போது ஒரு புற்று கண்ணில் பட்டது புற்றின் அருகே சென்றபோது மூச்சுக் காற்று வருவதை உணர்ந்தார். புற்றின் முன்னே ஏன், எதற்கு என்று அறியாமலேயே மனத்தின் கட்டளைப்படி தியானத்தில் அமர்ந்தார். பல நாட்கள் தியான நிலையிலேயே அமர்ந்து இருந்தார். ஒருநாள் காலை பொழுதில் புற்றை உடைத்துக் கொண்டு ஒரு முனிவர் வந்து போகரின் தியானத்தை கலைத்தார். கண்களை கூசச் செய்யும் பிரகாசமான முகத்தையுடைய அந்த முனிவரைப் பார்த்ததும் போகர் வணங்கினார். அந்த முனிவர் " போகரே உன்னால் மக்களுக்கு நன்மை உண்டாகட்டும்" என்று கூறி அருகே இருந்த மரத்தை காட்டி மரத்திலுள்ள பழங்கள் பழுத்து குலுங்கி இருந்த நிலையைக் காட்டி அந்த பழத்தை சாப்பிட்டால் பசி என்பதே அணுகாது. நீ செய்யும் தவத்திற்கு பெரும் துணையாக இருக்கும் என்று கூறி பேசும் சிலை ஒன்றையும் கொடுத்து விட்டு மீண்டும் புற்றில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்தார்.
சிலையை கையில் வாங்கிக் கொண்ட போகர் அருகிலுள்ள முனிவர் காட்டிய மரத்தின் பழங்களை எடுத்து சாப்பிட்டார். மனம் மட்டுமல்ல, உடலும் இளமையாக மாறியது. கையில் இருந்த சிலை, இளமையான மாற்ற வைத்த பழத்தின் ரகசியத்தையும், மற்றும பல மூலிகைகளின் ரகசியத்தையும் கூறியது,ஆச்சிரயத்தில் ஆழ்ந்த போகர், சிலையை தரையில் வைத்து விடடு அருகே அமர்ந்தார், அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு பள்ளத்தில் அந்த சிலை மறைந்தது.
சிவன் சித்தத்தை தெளியவைத்தார், எனறு நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். அவர் பெரிய சித்தர் என்பதை அறியாமல் எதிரில் வந்த அந்தனர்கள் சிலர் போகரின் கோலத்தைக் கண்டு ஏளனம் செய்தனர், போகரோ அவர்களின் ஏழ்மையை போக்க எண்ணினார், ஞானத்தை உபதேசிக்க வேண்டும்என்று நினைத்தார், உடனே சற்று தூரத்தில் ஒரு பூனை ஒன்று கண்ணில் பட்டது, பூனை அருகே அமர்ந்து வேதத்தை அதன் காதில் ஓதி, பேசும் திறனை கொடுத்தார்.
பூனை வேத மந்திரங்களை வீதியில் அமர்ந்து கூறத் தொடங்கியது. இதைப் பார்த்த அந்தணர்கள் போகர் பித்தனல்ல. சித்தர் என்பதை புரிந்து கொண்டு எங்களை மன்னிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் போகரை தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர், அவருக்கு அன்னமிட்டு மகிழ்வித்தனர். மனதில் சந்தோசத்துடன் அவர்கள் வீடுகளில் இருந்த உலோக பொருட்களை ரசவாதத்தினால் தங்கமாக மாற்றினார், அந்தணர்கள் சித்தரின் திறன் கண்டு அதிசயத்தினர். வேதங்களை உபதேசித்து எல்லோரையும் மேன்மையுறச் செய்தார். பழனிமலையில் தவம் செய்யும் போது முருகப் பெருமான் அவருக்கு காட்சி கொடுத்து என்னை விக்ரமாக செய்து இந்த இடத்தில் பிரதிஸ்டை செய் என்று கூறி மறைந்தார். அதன் படி நவபாசானம் என்ற ஒன்பது வித மூலிகை கலவையால் முருகனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். அதன் பின் பழனி மலையிலேயே வாழ்ந்த சித்தர் அங்கேயே ஜீவ சமாதி ஆனார். இன்றும பழனி மலையில் உள்ள கோவிலின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் சித்தர் போகரின் ஜீவசமாதி உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிரம்ப பெற்றவர் சித்தர் போகர், செவ்வாய் தோசம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் இவரை வழிபட்டால் செவ்வாய் தோசம் நீங்கி நல்அருள் பெறுவர்.
திருசிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
திருமுறைகளில் வாழ்வியல்
இந்த உடம்பும் உலக வாழ்வும் நிலையில்லாதன என்பதை யாவரும் அறிவோம். பலப்பல நூல்களும் இதைச் சொல்கின்றன. பத்தாவது தமிழ்வேதமாகிய திருமந்திரமும் யாக்கை நிலையாமையைப் பற்றி கூறுகின்றது,
ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கி பிணமென்று பேரிட்டு
சூரையங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே. திருமந்திரம்
நிலையில்லா இந்த உடம்பையும் உலகையும் இறைவர் நமக்கு அளித்துள்ளார் என்றால், அதில் ஒரு நோக்கம் கட்டாயம் இருக்கும், இறைவருடைய செயல் நமக்கு எப்பொழுதும் நன்மையையே அளிக்கும், நிலையில்லா இந்த உடம்பையும் உலகையும்பயன்படுத்தி நிலையான புண்ணியங்களை பெற்றிட வேண்டும். புண்ணியத்தின் பயனாக ஆன்மாக்கள் மேல் நிலை அடையும்,
இன்று கொல் அன்று கொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.
இறப்பு இன்றுவரும் நாளைவரும் என்று எண்ணி இருக்க வேண்டாம், எமன் பின்புறத்திலேயே நின்று கொண்டிருக்கின்றார், என்று நினைத்துத் தீய செயல்களை விட்டு விலக வேண்டும், அவரவர் தகுதிக்கு ஏற்ப மாண்புடைய சான்றோர் போற்றிய தருமங்களை செய்ய வேண்டும்.
குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி
நொந்து இருமி ஏங்கி நுரைத் தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை. ஐடிகள் காடவர்கோன் திருமுறை 11
கோழை (சளி) தொண்டையில் மிகுதியாகி அடைத்து வாய்வழியே வந்து உயிர் உடலைவிட்டு பிரிவதன் முன் திருவையாற்றில் எழுந்தருளியுள்ள சிவபொருமானாரை வழிபட்டு சிவபுண்ணியத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் நாயனார்,
நிலையில்லா இந்த உடலைப் பெற்ற நாம் வாழும்வழி:
எப்போதும் புண்ணியங்களையே செய்தல் வேண்டும்
பாவங்களை செய்யாமலிருக்க வேண்டும்
நல்லவர்களுடன் மட்டுமே சேர வேண்டும்
நல்லவர் அல்லாதவர்களுடன் ஒருபோதும் சேரக்கூடாது
அகந்தை இன்றி இருக்க வேண்டும்
ஆடம்பரமின்றி இருத்தல் வேண்டும்
இரவில் சுற்றுவதும் பகலில் தூங்குவதும் கூடாது
ஐம்புலங்களையும் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும்
அதிக உணவு உட்கொள்ளல் உண்ணாமல் இருத்தல் கூடாது
கொலை களவு கெட்ட பழக்கவழக்கங்கள் செய்யாதிருக்க வேண்டும்
தற்புகழ்ச்சி கூடாது
பிறரை நிந்தித்தல் கூடாது
கிடைத்ததைக் கொண்டு மன நிறைவுடன் வாழ வேண்டும்
தமிழ் வேதங்கள் அன்றாடம் ஓதுதல் வேண்டும்
பிறருக்கு நன்மை தரக்கூடியதையே செய்தல் , பேசுதல் வேண்டும்
எந்த உயிருக்கும் தீமை செய்யாதிருக்க வேண்டும்
எல்லோரிடமும் எளிமையாக பழகுதல் வேண்டும்
இனிமையாக பேச வேண்டும்
உண்மையையே பேச வேண்டும்
ஏழைகளுக்கு உதவ வேண்டும்
வரும் துன்பங்களை நம் வினையால் வந்தவை என்ற தாங்கிக் கொள்ள வேண்டும்
பிறரிடம் உள்ள நல்லனவற்றை மட்டுமே பார்க்க வேண்டும்
யாரைக் கண்டும் பொறாமைப் படாமலிருக்க வேண்டும்
பிறருக்கு தானம் கொடுக்கும் பொழுது , கர்வம் இல்லாமல் கொடுக்க வேண்டும்
அன்னையை தெய்வமாக போற்ற வேண்டும்
தந்தைத் தெய்வமாக போற்ற வேண்டும்
குருஅல்லது ஆசிரியரை தெய்வமாக போற்ற வேண்டும்
வீட்டிற்கு வரும் புதியவரை (எளியவர்) தெய்வமாக போற்ற வேண்டும்
சிவ நாமத்தை( சிவாயநம) எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்
ஆவை அனைத்தும் தமிழ் வேதங்களில் ஆங்காங்கே கூறப்படும் கருத்துக்கள்
அழியும் இவ்வுடம்பைக் கொண்டு அழியாத - உடன் வரும் புண்ணியங்களைச் செய்து பலப்பல நன்மைகளையும் இனி பிறா நிலையும் வீடு பேறும் அடையலாம்,
திருச் சிற்றம்பலம் - ஒம் நமசிவாய நம
நன்றி: தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
இந்த உடம்பும் உலக வாழ்வும் நிலையில்லாதன என்பதை யாவரும் அறிவோம். பலப்பல நூல்களும் இதைச் சொல்கின்றன. பத்தாவது தமிழ்வேதமாகிய திருமந்திரமும் யாக்கை நிலையாமையைப் பற்றி கூறுகின்றது,
ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கி பிணமென்று பேரிட்டு
சூரையங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே. திருமந்திரம்
நிலையில்லா இந்த உடம்பையும் உலகையும் இறைவர் நமக்கு அளித்துள்ளார் என்றால், அதில் ஒரு நோக்கம் கட்டாயம் இருக்கும், இறைவருடைய செயல் நமக்கு எப்பொழுதும் நன்மையையே அளிக்கும், நிலையில்லா இந்த உடம்பையும் உலகையும்பயன்படுத்தி நிலையான புண்ணியங்களை பெற்றிட வேண்டும். புண்ணியத்தின் பயனாக ஆன்மாக்கள் மேல் நிலை அடையும்,
இன்று கொல் அன்று கொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.
இறப்பு இன்றுவரும் நாளைவரும் என்று எண்ணி இருக்க வேண்டாம், எமன் பின்புறத்திலேயே நின்று கொண்டிருக்கின்றார், என்று நினைத்துத் தீய செயல்களை விட்டு விலக வேண்டும், அவரவர் தகுதிக்கு ஏற்ப மாண்புடைய சான்றோர் போற்றிய தருமங்களை செய்ய வேண்டும்.
குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி
நொந்து இருமி ஏங்கி நுரைத் தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை. ஐடிகள் காடவர்கோன் திருமுறை 11
கோழை (சளி) தொண்டையில் மிகுதியாகி அடைத்து வாய்வழியே வந்து உயிர் உடலைவிட்டு பிரிவதன் முன் திருவையாற்றில் எழுந்தருளியுள்ள சிவபொருமானாரை வழிபட்டு சிவபுண்ணியத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் நாயனார்,
நிலையில்லா இந்த உடலைப் பெற்ற நாம் வாழும்வழி:
எப்போதும் புண்ணியங்களையே செய்தல் வேண்டும்
பாவங்களை செய்யாமலிருக்க வேண்டும்
நல்லவர்களுடன் மட்டுமே சேர வேண்டும்
நல்லவர் அல்லாதவர்களுடன் ஒருபோதும் சேரக்கூடாது
அகந்தை இன்றி இருக்க வேண்டும்
ஆடம்பரமின்றி இருத்தல் வேண்டும்
இரவில் சுற்றுவதும் பகலில் தூங்குவதும் கூடாது
ஐம்புலங்களையும் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும்
அதிக உணவு உட்கொள்ளல் உண்ணாமல் இருத்தல் கூடாது
கொலை களவு கெட்ட பழக்கவழக்கங்கள் செய்யாதிருக்க வேண்டும்
தற்புகழ்ச்சி கூடாது
பிறரை நிந்தித்தல் கூடாது
கிடைத்ததைக் கொண்டு மன நிறைவுடன் வாழ வேண்டும்
தமிழ் வேதங்கள் அன்றாடம் ஓதுதல் வேண்டும்
பிறருக்கு நன்மை தரக்கூடியதையே செய்தல் , பேசுதல் வேண்டும்
எந்த உயிருக்கும் தீமை செய்யாதிருக்க வேண்டும்
எல்லோரிடமும் எளிமையாக பழகுதல் வேண்டும்
இனிமையாக பேச வேண்டும்
உண்மையையே பேச வேண்டும்
ஏழைகளுக்கு உதவ வேண்டும்
வரும் துன்பங்களை நம் வினையால் வந்தவை என்ற தாங்கிக் கொள்ள வேண்டும்
பிறரிடம் உள்ள நல்லனவற்றை மட்டுமே பார்க்க வேண்டும்
யாரைக் கண்டும் பொறாமைப் படாமலிருக்க வேண்டும்
பிறருக்கு தானம் கொடுக்கும் பொழுது , கர்வம் இல்லாமல் கொடுக்க வேண்டும்
அன்னையை தெய்வமாக போற்ற வேண்டும்
தந்தைத் தெய்வமாக போற்ற வேண்டும்
குருஅல்லது ஆசிரியரை தெய்வமாக போற்ற வேண்டும்
வீட்டிற்கு வரும் புதியவரை (எளியவர்) தெய்வமாக போற்ற வேண்டும்
சிவ நாமத்தை( சிவாயநம) எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்
ஆவை அனைத்தும் தமிழ் வேதங்களில் ஆங்காங்கே கூறப்படும் கருத்துக்கள்
அழியும் இவ்வுடம்பைக் கொண்டு அழியாத - உடன் வரும் புண்ணியங்களைச் செய்து பலப்பல நன்மைகளையும் இனி பிறா நிலையும் வீடு பேறும் அடையலாம்,
திருச் சிற்றம்பலம் - ஒம் நமசிவாய நம
நன்றி: தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
சிந்தனைக்கு சில
பிற உயிர்கட்குத் தீமை செய்வது என்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் தீமையாகும்
நம்முடைய விதியை நிர்ணயிப்பது நம்முடைய செயல்களே ஆகும் அறிவுடையவன்தீய செயல்களிலிருந்து விலகுவான்.
நம்வீட்டில் அயலர். ஆதரவு அற்றவர், ஏழை உறவினர், இப்படி யாராவது உணவு உண்டு பசியாற வேண்டும். இதனால் நாம் அடையும் நன்மைகள் பலவாகும்.
கூட்டு வழிபாடு என்பது, அன்றாடம் நீராடுவது போன்றதாகும், இதயத்தில் தூய்மை இல்லாதவன் இறைவரை நெருங்கவே முடியாது.
பொய, பொறாமை, சூது புறங்கூறுதல், கஞ்சத்தனம், பேராசை, ஆகிய வேண்டாக் குணங்கள் இறைவழிபாட்டினால்மட்டுமே போக்கலாம்.
நற்குணங்கள்நிறையப்பெற்ற சான்றோர்களுக்கு செய்த சிறிய உபகாரமும் பெரும் பயன் தரும்.
தீயவர்களுக்கு செய்த பெரிய உபகாரமும் தீமையையே உண்டாக்கும். புல்லும் மாடு தின்றால் பாலாகும், பாம்பு குடித்தால் பாலும் விசமாகும்,
இரக்கம் உடையவராய் இருக்கலாம், ஆனால் ஏமாளியாய் இருக்கக்கூடாது,
சந்தேகம் சந்தோசத்தைக் கெடுக்கும்.
திருச்சிற்றம்பலம்
நன்றி ; தமிழ் வேதம்
பிற உயிர்கட்குத் தீமை செய்வது என்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் தீமையாகும்
நம்முடைய விதியை நிர்ணயிப்பது நம்முடைய செயல்களே ஆகும் அறிவுடையவன்தீய செயல்களிலிருந்து விலகுவான்.
நம்வீட்டில் அயலர். ஆதரவு அற்றவர், ஏழை உறவினர், இப்படி யாராவது உணவு உண்டு பசியாற வேண்டும். இதனால் நாம் அடையும் நன்மைகள் பலவாகும்.
கூட்டு வழிபாடு என்பது, அன்றாடம் நீராடுவது போன்றதாகும், இதயத்தில் தூய்மை இல்லாதவன் இறைவரை நெருங்கவே முடியாது.
பொய, பொறாமை, சூது புறங்கூறுதல், கஞ்சத்தனம், பேராசை, ஆகிய வேண்டாக் குணங்கள் இறைவழிபாட்டினால்மட்டுமே போக்கலாம்.
நற்குணங்கள்நிறையப்பெற்ற சான்றோர்களுக்கு செய்த சிறிய உபகாரமும் பெரும் பயன் தரும்.
தீயவர்களுக்கு செய்த பெரிய உபகாரமும் தீமையையே உண்டாக்கும். புல்லும் மாடு தின்றால் பாலாகும், பாம்பு குடித்தால் பாலும் விசமாகும்,
இரக்கம் உடையவராய் இருக்கலாம், ஆனால் ஏமாளியாய் இருக்கக்கூடாது,
சந்தேகம் சந்தோசத்தைக் கெடுக்கும்.
திருச்சிற்றம்பலம்
நன்றி ; தமிழ் வேதம்
பாம்பாட்டிச் சித்தர் / வரலாறு
தமிழகம் போற்றும் சித்தர் பெருமக்களில் பாம்பாட்டிச் சித்தரும் ஒருவர் ஆவார். பாம்புகளைப் பிடிப்பது, படமெடுத்து ஆட வைத்து வேடிக்கை காட்டுவது இவரது தொழிலாகும். எத்தகைய பெரிய, கொடிய பாம்பாக இருந்தாலும் அதனை இவர் வெகு எளிதாகப் பிடித்து விடும் ஆற்றல் பெற்றவர். பாம்பு விஷத்தை முறிக்கும் மூலிகைகள் பலவற்றை இவர் நன்கறிந்திருந்தார். இவர் கோவைக்கு அருகிலுள்ள மருதமலையில் அந்தக் காலத்திலேயே விஷமுறிவு வைத்தியம் மற்றும் ஆய்வுக் கூடம் ஒன்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.ஒரு நாள் மலை மீது பெரிய நாகப்பாம்பு ஒன்றைப் பிடிக்க வேண்டி விரைந்து சென்றபோது இவர் சட்டை முனியைக் கண்டார்.
இவ்விருவரின் சந்திப்பு பற்றி போக முனிவர் தம் போகர் 7000-ல்,
புற்றருகில் சென்றுமல்லோ சித்தர் தாமும்
பனிதமுள்ள நவரத்தினப் பாம்பு தன்னை
வெற்றியுடன் தான் பிடிக்கப் போகும்போது
வேதாந்தச் சட்டைமுனி அங்கிருந்தார்.
என்று கூறுகிறார்.
மேலும் சட்டை முனி தாம் கண்ட பாம்பாட்டிக்கு உபதேசம் செய்தருளினார். இதனால் காடுகளில் கொடிய பாம்புகளை பிடித்து நாடு நகரங்களில் சென்று பாம்புகலை ஆட வைத்து வேடிக்கை காட்டிப் பிழைப்பு நடத்தி வந்த பாம்பாட்டி சட்டை முனியின் பேரருளால் மெய்ஞ்ஞானப் பாலூண்டு நானிலம் போற்றும் சித்தராக மாறினார். சிறிது காலத்துக்கு சமாதி நிலையில் இருந்த பாம்பாட்டிச் சித்தர் பின் வெளிவந்து சித்துக்கள் பல புரிந்தபடி தேச சஞ்சாரம் செய்து வந்தார்.
ஒருநாள் அந்நாட்டு மன்னர் இறந்து போனார். அது கண்ட இவர் அவனுடம்பில் கூடு விட்டு கூடு பாய்ந்து அவரது மனைவியுடன் இருந்தபோது செத்த பாம்பு ஒன்றை உயிர்ப்பித்து ஆட வைத்தார். அதனால் இவர் பாம்பாட்டிச் சித்தர் என்ற பெயரைப் பெற்றார் என்று கூறுவோரும் உண்டு. வேறு சிலர் இவர் மன்னரது மனைவியுடன் அதிக நாட்கள் தங்கி விட்டதால், இவரது சீடர்கள் பாம்பாட்டிகளைப் போன்று வேடமிட்டு அரண்மனைக்குள் புகுந்து பாம்புகளை ஆட வைத்துப் பாடிய பாடல்களைக் கேட்டுத் தாம் யார் என்ற உண்மையை உணர்ந்து தம் பழைய உடம்பினுள் பிரவேசித்தார் என்று கூறுகின்றனர்.
எது எப்படி என்றாலும் இவரது வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது என்றே கூறலாம். ஒரு சமயம் பாண்டிய நாட்டின் எல்லைப் பகுதியில் இருந்த காடு ஒன்றில் ஏராளமான கொடிய பாம்புகள் இருந்தன. அப்போது பயந் என்பதை அறியாத இளைஞன் ஒருவன் அக்காட்டு வழியே வந்தான். படமெடுத்து ஆடிய நாகம் ஒன்றினை அவன் வரும் வழியில் கண்டான். அதன் ஆட்டம் அவனை வெகுவாகக் கவர்ந்தது. வெகுவாக ரசித்துச் சிரித்தான். அப்போது அக்கொடிய நாகம் அவன் மீது சீறிப் பாய்ந்தது. அது கண்டு கலங்காத அவன் அதனைப் பிடித்துத் தரையில் ஓங்கியடித்தான். அதனால் அப்பாம்பு இறந்து போனது.
ஊர் திரும்பியவன் தன் நண்பர்களிடம் காட்டில் நடந்ததைக் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டான். அப்போது அவனது நண்பர்கள் மிரண்டு, “அடேய்! அந்தக் காட்டு வழியே இனிமேல் போகாதே! கொடிய விஷப் பாம்புகள் அங்கு ஏராளமாக உள்ளன” என்று எச்சரித்தனர். ஆனால் அவனோ அவர்களது கூற்றை அலட்சியம் செய்தான்.
அடுத்த நாள் அவன் மீண்டும் காட்டுக்குள் வந்தான். அவனெதிரே சில பாம்புகள் வந்தன. அவற்றையும் அவன் கொன்றான். காலப்போக்கில் அவன் பாம்புகளைக் கொல்வதைத் தன் பொழுது போக்காகவே கொண்டான். ஒருநாள் மருத்துவர்கள் சிலர் வந்து இவனைச் சந்தித்தனர். “தம்பி!! நவரத்தினம் போன்று ஜொலிக்கும் குட்டையான பாம்பு ஒன்றிருக்கிறது. அதன் தலைப்பகுதியுள் மாணிக்கம் இருக்கும். அப்பாம்பு இரவுப் பொழுதில் மட்டுமே நடமாடும். அதனுடைய விஷம் ஒரு மருந்துக்குத் தேவைப்படுகிறது. பாம்புகளை எளிதில் பிடிப்பவனான நீ அப்பாம்பைப் பிடித்துக் கொடு” என்றார்.
அதற்குச் சம்மதித்த இளைஞன் உடனே காட்டுக்கு விரைந்து சென்றான். கண்ணில் தென்பட்ட புற்றுகளை எல்லாம் இடித்து அப்பாம்பைத் தேடினான். ஆனால் அது அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அப்பாம்பைத் தேடி மேலும் அவன் காட்டுக்குள் முன்னேறிச் சென்றான். சற்று நேரத்தில் எவரோ வாய் விட்டுச் சிரிக்கும் சிரிப்பொலி காடு முழுவதுமாக எதிரொலித்தது. அதுகேட்ட அவன், “யார் அது? சிரித்தது யார் ? எவராக இருந்தாலும் சரி…. என் முன்னே வா….. என்று உரக்கக் கத்தினான்.”
அப்போது ஒளியுடம்போடு சித்தர் ஒருவர் அவன் முன்பாக வந்து நின்றார். தன் எதிரே வந்து நின்றவரைக் கண்டதும் இளைஞன் வியந்தான். “இப்படியும் ஓர் உடம்பு இருக்குமா? என்று எண்ணியவாறு, நீங்கள் யார்? எதற்காக நீங்கள் சிரித்தீர்கள்? என்று வினவினான். அதற்க்கு அவர் “இளைஞனே! நான் சித்தர் பரம்பரையில் வந்தவன்! எதற்கும் உதவாத உன் செயலைப் பார்த்தேன். சிரிக்கத் தோன்றியது சிரித்தேன்” என்றார்.
சித்தர் கூறியதைக் கேட்ட இளைஞன், ஐயா… மாணிக்கக் கல்லைக் கொண்ட பாம்பைத் தேடி அலைவது பயனற்ற செயலா? என்று கேட்டான். அதற்கு அச்சித்தர், இளைஞனே…. பயம் என்னவென்றே தெரியாதவன் நீ.. வீரனான நீ விவேகம் இல்லாது இருக்கலாமா? உல்லாசமான உயர்ந்த ஒரு பாம்பு உன் உடம்பில் குடியிருக்கிறது. மனித உடம்புள் இருக்கும் அப்பாம்பை எவருமே அறியவில்லை. உனக்கும் தெரிய வில்லை. அதை ஆட்டுவிப்பவனே அறிஞன் ஆவான். அப்பாம்பை அடக்கி ஆளும் சிறப்பைப் பெற்றவர்களே சித்தர்கள். மற்றவர்கள் எல்லாரும் அப்பாம்புக்கு அடிமைப்பட்ட பைத்தியங்களே… என்றுரைத்துச் சிரித்தார்.
பயம் என்றால் என்னவென்றே அறியாத அந்த இளைஞன், முதன் முதலாக அச்சம் கொண்டு சித்தர் பெருமானை நோக்கினான். நடுக்கமுடன் அவரை வணங்க முயற்சித்தும் அவனால் இயலவில்லை. சட்டென அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கியவன் “சுவாமி! எனக்குள் ஓர் பாம்பு உள்ளது என்ற தகவலை இன்றுதான் உங்களால் நான் அறிந்தேன். ஆனால் அது என்ன பாம்பு என்று எனக்குப் புரியவில்லை. தயவு கூர்ந்து எனக்கு அது பற்றி விளக்குவீர்களா?” என்று வேண்டினான்
அவனது வேண்டுதலை ஏற்ற சித்தர் பெருமான், “மனித உடல் ஓர் அற்புதம்ப் படைப்பு! இவ்வுடம்புள் காலம் காலமாக ஓர் பாம்பு உறக்க நிலையில் மூலாதாரச் சக்கரத்தில் உள்ளது. அதனை குண்டலினி என்ரு கூறுவர். சிவத்தை உணர்வு நிலையில் வாழும் பண்பாளர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். சுவாசம் ஒடுங்கினால் குண்டலினி என்னும் அப்பாம்பு சீறி எழும். தியானத்தின் வாயிலாக அதனை ஆட்டிப் படைக்கலாம். இதனால் ஆன்மா சித்தி அடையும்” என்றார்.
“சுவாமி, மாபெரும் இரகசியத்தை நான் இன்று மாதவச் சீலரான தங்கள் மூலம் அறிந்து கொண்டேன். தாங்கல் காட்டியருளிய வழியை இனி நான் கடைப்பிடிப்பேன். இது சத்தியம்!” என்றான்.
“மகனே! அவ்வாறு செய்தாயானால் நீ வெற்றி பெறுவாய்!” என்றுரைத்த சித்தர் பெருமான் அருள் ஒளியை அந்த இளைஞன் மீது பாய்ச்சியருளிவிட்டு சட்டென மறைந்தருளினார். அந்த இளைஞன் சந்தித்த சித்தர் பெருமானே சட்டைமுனி ஆவார்.
சித்தர் பெருமான் சென்ற திசை நோக்கி வணங்கிய இளைஞன் அங்கிருந்த அத்தி மரத்தடியில் அமர்ந்து, சித்தர் பெருமான் உரைத்து அருளியபடி தியானத்தில் அமர்ந்தான். தியான முடிவில், குண்டலினி சக்தியை முற்றிலுமாக உணர்ந்து அனுபவித்தான். “ஆஹா! பரமானந்தம் அளிக்கும் இந்த மெய்ஞ்ஞான சுகத்தை இதுநாள் வரையில் நாம் அறியாது இருந்தோமே!” என்று வேதனைப்பட்டான். அப்போது அவனுக்கு உபதேசித்தருளிய சித்தர் பெருமானான சட்டைமுனி அவன் முன்பாகத் தோன்றி, “மகனே! நான் உனக்கு உபதேசம் செய்தருளினேனே தவிர உன் பெயரைக் கூட நான் தெரிந்து கொள்ளவில்லை! நீயாவது உன் பெயரைக் கூறியிருக்கலாமே?” என்றார்.
அதற்கு அவன் “சுவாமி! கொடிய பாம்புகளை மட்டுமே பிடித்து ஆட வைத்துக் கொண்டிருந்த நான் குண்டலினிச் சக்தியால் உலகையே என்னுள் காணும் சக்தியை உபதேசித் தருளியவர் தாங்கள்! தங்களிடம் என் பெயரை என்னவென்று நான் கூறுவது? முன்பும் (பாம்பு) இப்போதும் (குண்டலினிப் பாம்பு) பாம்பைத் தான் பிடித்து என் விருப்பப்படி ஆட்டுவிக்கிறேன். அதனால் சுவாமி! என் பெயர் பாம்பாட்டி என்றே வைத்துக் கொள்ளுங்கள்” என்றான். அது கேட்டுச் சிரித்த சட்டைமுனி “ஆஹா! நீ நல்ல பெயரைக் கூறினாய். நீ பாம்பாட்டிச் சித்தனே! நீ வாழ்வாயாக!” என்றுரைத்து மறைந்தருளினார்.
தம் குருதேவரான சட்டையின் அருளாசியால் பாம்பாட்டிச் சித்தர் தியானத்தில் மீண்டும் ஆழ்ந்தார். சிறகடித்துப் பறந்து வந்து சித்திகள் அவரிடம் இரண்டறக் கலந்தன. கண்களைத் திறந்தார். அவருள் இருந்த சித்திகள்யாவும் வெளிப்பட்டன. இரும்பு செம்பானது, செம்பு பொன் ஆனது, மணல் சுவை மிகுந்த சர்க்கரையானது. தன் கரங்களால் கூழாங்கற்களை எடுத்து உற்றுப் பார்த்தார். உடனே அவை ஒளி வீசும் நவரத்தினக் கற்களாக மாறின.
அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் சிரித்தார். என்ன வாழ்க்கை இது… நவரத்தினக் கல் கொண்ட பாம்பைத் தேடி நான் அலைந்தேன். அது கிடைக்கவே இல்லை. இப்போது சாதாரண கூழாங்கற்களையே நவரத்தினக் கற்களாக மாற்றிடும் சித்து வேலை தானாக என்னிடம் வந்துள்ளது. இதுதான் காலத்தின் கோலம் போலும். ச்சே…. வேண்டவே வேண்டாம் இவை… என்று கூறி அக்கற்களை வீசியெறிந்தார்.
தான் சந்தித்த மானிடர்களுக்குப் பாம்பாட்டிச் சித்தர் உபதேசம் செய்தருளினார். ஆனால் அவரிடம் வந்தோர் அனைவரும் அவரிடம் நடித்துத் தங்களது வாழ்வை வளமாக்கிக் கொண்டார்களே தவிர, நல்லவற்றை கடைப்பிடிப்பதில் அவர்கள் முயலவில்லை. அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் பெரிதும் வேதனைப் பட்டார். என்ன மனிதர்கள் இவர்கள்…. வயிற்றுப் பசிக்கு மட்டுமே இவர்கள் அலைகிறார்களே ஒழிய ஆன்மா என்று ஒன்று உண்டு. அதன் பசியை போக்க வேண்டும் என்று எண்ணம் துளியளவு கூட இல்லாதிருக்கிறார்களே… என்று அவர் வருந்தினார்.
இரவு, பகல் என அலைந்து திரிந்தார். பலரின் வியாதிகளைப் போக்கியருளினார். வறுமையால் வாடித் துன்புறும் ஏழை எளியோருக்கு இரசவாதம் மூலம் பொன்னைச் செய்து அவர்களது வறுமையைப் பாம்பாட்டிச் சித்தர் போக்கியருளினார்.
மன்னர் ஒருவர் கீழ்மக்களது சேர்க்கையால் செய்யத் தகாதவற்றை எல்லாம் செய்தார். இதனால் அம்மன்னரது உடல் இளைத்து மெலிந்தது. அடையாளமே தெரியாதவாறு அவர் உடல் இளைத்ததால் மிகவும் அவதிப்பட்டார். ஒருநாள் அம்மன்னர் நடந்து செல்லும் போது, கால் இடறிக் கீழே விழுந்தார். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை. ஆம்… இவர் இறந்து போனார். கலைகள் பலவற்றைக் கற்றறிந்த உத்தமக் குல மகளான அரசி, ஐயோ, எவ்வளவோ சொல்லியும் நீங்கள் திருந்தவே இல்லையே, இப்போது என்னைத் தனியே தவிக்கவிட்டுவிட்டுச் சென்று விட்டீர்களே… என்று கதறி அழுதாள். அரசியின் துயரைக் கண்டு குடிமக்களும் அமைச்சர்களும் மிகவும் வருந்தினர்.
அரண்மனையில் இருந்து வெளிவந்த அழுகை ஒலி விண்ணை எட்டியது. பாம்பாட்டிச் சித்தரின் செவிகளில் இந்த அழுகை ஒலி விழுந்தது. உடனே அவர் விண்ணில் இருந்து பூமிக்கு வந்தார். பூமியை அடைந்ததும் அவர் தம் உடலை ஒருபுறமாக வைத்துவிட்டு, செத்த பாம்பு ஒன்றை எடுத்து இறந்த மன்னர் உடலைச் சுற்றி அழுது கொண்டிருந்தவர்களின் மத்தியில் வீசியெறிந்தார். தங்களிடையே விழுந்தது செத்த பாம்பு என்பதை அறியாது அனைவரும் அலறியடித்து ஓடினர். பாம்பாட்டிச் சித்தர் அருவமாக இறந்த மன்னர் உடலருகே வந்தார். உடனே மன்னர் உடம்பினுள் அவர் கூடு விட்டு கூடு பாயும் கலைப்படி புகுந்தார்
உடனே இறந்த மன்னரின் உடம்பு உயிர் பெற்று மெல்ல அசைந்தது. கண்கள் சட்டெனத் திறந்தன. அரசர் எழுந்து அமர்ந்தார். அது கண்டு அரசியும், அமைச்சர்களும், கூடியிருந்தோரும், மன்னர் இறக்கவில்லை. உயிருடன்தான் உள்ளார், என்று மகிழ்ந்து கூவினர். அரசி தன் கழுத்தில் அணிந்திருந்த திருமாங்கல்யத்தை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். மிகவும் மகிழ்ந்த அவள் அவரைத் தழுவிடத் தனது கரங்களை நீட்டினாள்.
அதுகண்டு சட்டென விலகிய மன்னர் அங்கு தரையில் கிடந்த உயிரற்ற பாம்பின் உடலைப் பார்த்து, எழு பாம்பே… நான் எழுந்து விட்டேன். நீயும் எழுந்திருக்கலாமே என்றார். உடனே செத்த பாம்பு உயிர் பெற்று மெல்ல நெளிந்து நகர்ந்தது. அனைவரும் அது கண்டு வியந்தனர்.
பாம்பு வெளியே செல்ல முற்படுவதைக் கண்ட மன்னர், பாம்பே… எங்கே போகிறாய் நீ.. என்ன அரவரம் உனக்கு உன் மனைவி, மக்கள் நினைவு வந்து விட்டதோ.. சீச்சீ…. செத்துப் போன நீ இப்போது உயிர் பெற்றுச் செல்கிறாய் ஏமாறாதே உருப்படும் வழியைப் பார் என்றார். அவரது கூற்று ஆடு பாம்பே, ஆடு பாம்பே… என்று முடியும் பாடல்களாகவே வெளி வந்தன. அரிய உபதேசங்களைக் கொண்ட அப்பாடல்களுக்கு ஏற்றபடி அப்பாம்பும் படமெடுத்து ஆடியது. மன்னரது பாடல்களையும் அவர் பாடியதற்கு ஏற்ப பாம்பு படமெடுத்து ஆடியதையும் கண்டு அனைவரும் வியந்தனர். மன்னர் உருவில் இருப்பவர் பாம்பாட்டிச் சித்தரே என்பதை உணராது அவர்கள் குழப்பம் அடைந்தனர்.
மன்னரது பாடல்களைக் கேட்ட அரசி, ஒரு நாட்டையே ஆளும் நம் மன்னர் செத்துப் பிழைத்த பின் தத்துவமழையாகப் பொழிகிறாரே… இது எப்படி. என்று புரியாது தவித்தாள். அரசியின் எண்ணத்தை உணர்ந்த மன்னர், செல்வத்தில் மூழ்கிச் சீர் கெட்டுப் போவதில் என்ன லாபம் உண்டாகப் போகிறது. பரமனையே நினை. பேரின்பம் கிட்டும். என்று பாடலாகப் பாடினார். என்ன விந்தை இது. நான் உள்ளத்தில் நினைத்ததைப் பாடலாகப் பாடுகிறாரே… எப்படி. பாலும், பழமும் உண்டு எந்நேரமும் பெண் மோகத்தில் மூழ்கிய இவர், பரமனை சிந்தையில் வை, என்று கூறுகிறாரே… என்று வியந்தாள் அரசி.
உடனே மன்னர் உருவிலிருந்த சித்தர் பாலும், பழமும் விழுங்கிய வாய், உயிர் போன பின், மண்ணையும் விழுங்கும் இதனை நீ மறக்கலாகுமா. என்று பொருள்படுமாறு பாடினார். அதுகேட்டு அரசி ஓர் முடிவுக்கு வந்தவளாய், சுவாமி உண்மையை மறைக்காது கூறுங்கள் தாங்கள் எங்களின் மன்னர் தானா அல்லது உத்தமமான ஓர் ஆத்மா என் மன்னரின் உடம்புள் புகுந்துள்ளதா. என்று பணிவுடன் கேட்டாள்.
அதற்கு மன்னராக இருந்த சித்தர், அரசியை நீ ஒரு விவேகி, அதனாலேயே நீ உண்மையை உணர்ந்து கொண்டாய். அறிவு என்ற அங்குசம் கொண்டு கோபம் என்னும் மதயானையைக் கொன்றவர்கள் நாங்கள், உன் கணவன் இறந்ததால் அழுது கொண்டிருந்த உனது அவல நிலையை மாற்றவே யாம் இறந்த உன் மன்னரது உடம்புள் புகுந்தோம் எமது பெயர் பாம்பாட்டிச் சித்தன் என்பதாகும், என்று கூறினார்.
அதுகேட்டு அரசி மெய்சிலிர்த்து சுவாமி என் துயரத்தை போக்கியருள வந்த தெய்வம் தாங்கள், இனி இந்த என் அரசரின் உடலின் நிலை என்னவாகும். நான் உய்ய என்ன செய்ய வேண்டும். வழிகாட்டி அருளவேண்டும் என்று பணிவுடன் வேண்டினாள்.
மனம் என்னும் குதிரையை அறிவு என்ற கடிவாளம் கொண்டு அடக்கிடு கோபத்தை விட்டொழி தெளிவு உனக்கு தானாக வரும், என்று சித்தர் உபதேசித்தருளினார். அவர் உபதேசம் செய்து முடித்ததும் மன்னரது உடல் உயிரற்ற உடலாகச் சட்டெனக் கீழே விழுந்தது. மன்னரது உடம்புள் இருந்து நீங்கிய பாம்பாட்டிச் சித்தர் மீண்டும் தம் உடம்புள் புகுந்தார். அதுவரை படமெடுத்து ஆடிக் கொண்டிருந்த பாம்பும் அங்கிருந்து அகன்று சென்றது.
அங்கிருந்த அனைவரும் பயத்துடனும், வியப்புடனும் நிகழ்ந்தவை அனைத்தையும் கண்டனர். சித்தர் உபதேசத்தைத் தன் சிந்தையில் வைத்த அரசி, முறைப்படி மன்னரின் இறுதிக் கடன்களைச் செய்து முடித்தாள். பின் சித்தரது வழியில் வாழ்ந்து முக்தியடைந்தாள்.
பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் சித்தி அடைந்தார் என்றும் துவாரகையில் சித்தியடைந்தார் என்றும் பல செய்திகள் கூறப்படுகின்றன. திருக்கோகா்ணத்தில் பிறந்த பாம்பாட்டி சித்தர் பாண்டிய நாட்டில் வாழ்ந்தார் என்றும் மருத மலையில் வாழ்ந்தார் என்றும் முரண்பட்ட பல தகவல்கள் உள்ளன. ஆனாலும் அவர் மருதமலையில் வாழ்ந்தவர்தான் என்பதற்கு ஆதாரமாக அங்கு பாம்பாட்டிச் சித்தர் குகை, சுனை முதலானைவை உள்ளன.
திரு சிற்றம்பலம்
நன்றி ; தமிழ் கடல்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
தமிழகம் போற்றும் சித்தர் பெருமக்களில் பாம்பாட்டிச் சித்தரும் ஒருவர் ஆவார். பாம்புகளைப் பிடிப்பது, படமெடுத்து ஆட வைத்து வேடிக்கை காட்டுவது இவரது தொழிலாகும். எத்தகைய பெரிய, கொடிய பாம்பாக இருந்தாலும் அதனை இவர் வெகு எளிதாகப் பிடித்து விடும் ஆற்றல் பெற்றவர். பாம்பு விஷத்தை முறிக்கும் மூலிகைகள் பலவற்றை இவர் நன்கறிந்திருந்தார். இவர் கோவைக்கு அருகிலுள்ள மருதமலையில் அந்தக் காலத்திலேயே விஷமுறிவு வைத்தியம் மற்றும் ஆய்வுக் கூடம் ஒன்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.ஒரு நாள் மலை மீது பெரிய நாகப்பாம்பு ஒன்றைப் பிடிக்க வேண்டி விரைந்து சென்றபோது இவர் சட்டை முனியைக் கண்டார்.
இவ்விருவரின் சந்திப்பு பற்றி போக முனிவர் தம் போகர் 7000-ல்,
புற்றருகில் சென்றுமல்லோ சித்தர் தாமும்
பனிதமுள்ள நவரத்தினப் பாம்பு தன்னை
வெற்றியுடன் தான் பிடிக்கப் போகும்போது
வேதாந்தச் சட்டைமுனி அங்கிருந்தார்.
என்று கூறுகிறார்.
மேலும் சட்டை முனி தாம் கண்ட பாம்பாட்டிக்கு உபதேசம் செய்தருளினார். இதனால் காடுகளில் கொடிய பாம்புகளை பிடித்து நாடு நகரங்களில் சென்று பாம்புகலை ஆட வைத்து வேடிக்கை காட்டிப் பிழைப்பு நடத்தி வந்த பாம்பாட்டி சட்டை முனியின் பேரருளால் மெய்ஞ்ஞானப் பாலூண்டு நானிலம் போற்றும் சித்தராக மாறினார். சிறிது காலத்துக்கு சமாதி நிலையில் இருந்த பாம்பாட்டிச் சித்தர் பின் வெளிவந்து சித்துக்கள் பல புரிந்தபடி தேச சஞ்சாரம் செய்து வந்தார்.
ஒருநாள் அந்நாட்டு மன்னர் இறந்து போனார். அது கண்ட இவர் அவனுடம்பில் கூடு விட்டு கூடு பாய்ந்து அவரது மனைவியுடன் இருந்தபோது செத்த பாம்பு ஒன்றை உயிர்ப்பித்து ஆட வைத்தார். அதனால் இவர் பாம்பாட்டிச் சித்தர் என்ற பெயரைப் பெற்றார் என்று கூறுவோரும் உண்டு. வேறு சிலர் இவர் மன்னரது மனைவியுடன் அதிக நாட்கள் தங்கி விட்டதால், இவரது சீடர்கள் பாம்பாட்டிகளைப் போன்று வேடமிட்டு அரண்மனைக்குள் புகுந்து பாம்புகளை ஆட வைத்துப் பாடிய பாடல்களைக் கேட்டுத் தாம் யார் என்ற உண்மையை உணர்ந்து தம் பழைய உடம்பினுள் பிரவேசித்தார் என்று கூறுகின்றனர்.
எது எப்படி என்றாலும் இவரது வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது என்றே கூறலாம். ஒரு சமயம் பாண்டிய நாட்டின் எல்லைப் பகுதியில் இருந்த காடு ஒன்றில் ஏராளமான கொடிய பாம்புகள் இருந்தன. அப்போது பயந் என்பதை அறியாத இளைஞன் ஒருவன் அக்காட்டு வழியே வந்தான். படமெடுத்து ஆடிய நாகம் ஒன்றினை அவன் வரும் வழியில் கண்டான். அதன் ஆட்டம் அவனை வெகுவாகக் கவர்ந்தது. வெகுவாக ரசித்துச் சிரித்தான். அப்போது அக்கொடிய நாகம் அவன் மீது சீறிப் பாய்ந்தது. அது கண்டு கலங்காத அவன் அதனைப் பிடித்துத் தரையில் ஓங்கியடித்தான். அதனால் அப்பாம்பு இறந்து போனது.
ஊர் திரும்பியவன் தன் நண்பர்களிடம் காட்டில் நடந்ததைக் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டான். அப்போது அவனது நண்பர்கள் மிரண்டு, “அடேய்! அந்தக் காட்டு வழியே இனிமேல் போகாதே! கொடிய விஷப் பாம்புகள் அங்கு ஏராளமாக உள்ளன” என்று எச்சரித்தனர். ஆனால் அவனோ அவர்களது கூற்றை அலட்சியம் செய்தான்.
அடுத்த நாள் அவன் மீண்டும் காட்டுக்குள் வந்தான். அவனெதிரே சில பாம்புகள் வந்தன. அவற்றையும் அவன் கொன்றான். காலப்போக்கில் அவன் பாம்புகளைக் கொல்வதைத் தன் பொழுது போக்காகவே கொண்டான். ஒருநாள் மருத்துவர்கள் சிலர் வந்து இவனைச் சந்தித்தனர். “தம்பி!! நவரத்தினம் போன்று ஜொலிக்கும் குட்டையான பாம்பு ஒன்றிருக்கிறது. அதன் தலைப்பகுதியுள் மாணிக்கம் இருக்கும். அப்பாம்பு இரவுப் பொழுதில் மட்டுமே நடமாடும். அதனுடைய விஷம் ஒரு மருந்துக்குத் தேவைப்படுகிறது. பாம்புகளை எளிதில் பிடிப்பவனான நீ அப்பாம்பைப் பிடித்துக் கொடு” என்றார்.
அதற்குச் சம்மதித்த இளைஞன் உடனே காட்டுக்கு விரைந்து சென்றான். கண்ணில் தென்பட்ட புற்றுகளை எல்லாம் இடித்து அப்பாம்பைத் தேடினான். ஆனால் அது அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அப்பாம்பைத் தேடி மேலும் அவன் காட்டுக்குள் முன்னேறிச் சென்றான். சற்று நேரத்தில் எவரோ வாய் விட்டுச் சிரிக்கும் சிரிப்பொலி காடு முழுவதுமாக எதிரொலித்தது. அதுகேட்ட அவன், “யார் அது? சிரித்தது யார் ? எவராக இருந்தாலும் சரி…. என் முன்னே வா….. என்று உரக்கக் கத்தினான்.”
அப்போது ஒளியுடம்போடு சித்தர் ஒருவர் அவன் முன்பாக வந்து நின்றார். தன் எதிரே வந்து நின்றவரைக் கண்டதும் இளைஞன் வியந்தான். “இப்படியும் ஓர் உடம்பு இருக்குமா? என்று எண்ணியவாறு, நீங்கள் யார்? எதற்காக நீங்கள் சிரித்தீர்கள்? என்று வினவினான். அதற்க்கு அவர் “இளைஞனே! நான் சித்தர் பரம்பரையில் வந்தவன்! எதற்கும் உதவாத உன் செயலைப் பார்த்தேன். சிரிக்கத் தோன்றியது சிரித்தேன்” என்றார்.
சித்தர் கூறியதைக் கேட்ட இளைஞன், ஐயா… மாணிக்கக் கல்லைக் கொண்ட பாம்பைத் தேடி அலைவது பயனற்ற செயலா? என்று கேட்டான். அதற்கு அச்சித்தர், இளைஞனே…. பயம் என்னவென்றே தெரியாதவன் நீ.. வீரனான நீ விவேகம் இல்லாது இருக்கலாமா? உல்லாசமான உயர்ந்த ஒரு பாம்பு உன் உடம்பில் குடியிருக்கிறது. மனித உடம்புள் இருக்கும் அப்பாம்பை எவருமே அறியவில்லை. உனக்கும் தெரிய வில்லை. அதை ஆட்டுவிப்பவனே அறிஞன் ஆவான். அப்பாம்பை அடக்கி ஆளும் சிறப்பைப் பெற்றவர்களே சித்தர்கள். மற்றவர்கள் எல்லாரும் அப்பாம்புக்கு அடிமைப்பட்ட பைத்தியங்களே… என்றுரைத்துச் சிரித்தார்.
பயம் என்றால் என்னவென்றே அறியாத அந்த இளைஞன், முதன் முதலாக அச்சம் கொண்டு சித்தர் பெருமானை நோக்கினான். நடுக்கமுடன் அவரை வணங்க முயற்சித்தும் அவனால் இயலவில்லை. சட்டென அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கியவன் “சுவாமி! எனக்குள் ஓர் பாம்பு உள்ளது என்ற தகவலை இன்றுதான் உங்களால் நான் அறிந்தேன். ஆனால் அது என்ன பாம்பு என்று எனக்குப் புரியவில்லை. தயவு கூர்ந்து எனக்கு அது பற்றி விளக்குவீர்களா?” என்று வேண்டினான்
அவனது வேண்டுதலை ஏற்ற சித்தர் பெருமான், “மனித உடல் ஓர் அற்புதம்ப் படைப்பு! இவ்வுடம்புள் காலம் காலமாக ஓர் பாம்பு உறக்க நிலையில் மூலாதாரச் சக்கரத்தில் உள்ளது. அதனை குண்டலினி என்ரு கூறுவர். சிவத்தை உணர்வு நிலையில் வாழும் பண்பாளர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். சுவாசம் ஒடுங்கினால் குண்டலினி என்னும் அப்பாம்பு சீறி எழும். தியானத்தின் வாயிலாக அதனை ஆட்டிப் படைக்கலாம். இதனால் ஆன்மா சித்தி அடையும்” என்றார்.
“சுவாமி, மாபெரும் இரகசியத்தை நான் இன்று மாதவச் சீலரான தங்கள் மூலம் அறிந்து கொண்டேன். தாங்கல் காட்டியருளிய வழியை இனி நான் கடைப்பிடிப்பேன். இது சத்தியம்!” என்றான்.
“மகனே! அவ்வாறு செய்தாயானால் நீ வெற்றி பெறுவாய்!” என்றுரைத்த சித்தர் பெருமான் அருள் ஒளியை அந்த இளைஞன் மீது பாய்ச்சியருளிவிட்டு சட்டென மறைந்தருளினார். அந்த இளைஞன் சந்தித்த சித்தர் பெருமானே சட்டைமுனி ஆவார்.
சித்தர் பெருமான் சென்ற திசை நோக்கி வணங்கிய இளைஞன் அங்கிருந்த அத்தி மரத்தடியில் அமர்ந்து, சித்தர் பெருமான் உரைத்து அருளியபடி தியானத்தில் அமர்ந்தான். தியான முடிவில், குண்டலினி சக்தியை முற்றிலுமாக உணர்ந்து அனுபவித்தான். “ஆஹா! பரமானந்தம் அளிக்கும் இந்த மெய்ஞ்ஞான சுகத்தை இதுநாள் வரையில் நாம் அறியாது இருந்தோமே!” என்று வேதனைப்பட்டான். அப்போது அவனுக்கு உபதேசித்தருளிய சித்தர் பெருமானான சட்டைமுனி அவன் முன்பாகத் தோன்றி, “மகனே! நான் உனக்கு உபதேசம் செய்தருளினேனே தவிர உன் பெயரைக் கூட நான் தெரிந்து கொள்ளவில்லை! நீயாவது உன் பெயரைக் கூறியிருக்கலாமே?” என்றார்.
அதற்கு அவன் “சுவாமி! கொடிய பாம்புகளை மட்டுமே பிடித்து ஆட வைத்துக் கொண்டிருந்த நான் குண்டலினிச் சக்தியால் உலகையே என்னுள் காணும் சக்தியை உபதேசித் தருளியவர் தாங்கள்! தங்களிடம் என் பெயரை என்னவென்று நான் கூறுவது? முன்பும் (பாம்பு) இப்போதும் (குண்டலினிப் பாம்பு) பாம்பைத் தான் பிடித்து என் விருப்பப்படி ஆட்டுவிக்கிறேன். அதனால் சுவாமி! என் பெயர் பாம்பாட்டி என்றே வைத்துக் கொள்ளுங்கள்” என்றான். அது கேட்டுச் சிரித்த சட்டைமுனி “ஆஹா! நீ நல்ல பெயரைக் கூறினாய். நீ பாம்பாட்டிச் சித்தனே! நீ வாழ்வாயாக!” என்றுரைத்து மறைந்தருளினார்.
தம் குருதேவரான சட்டையின் அருளாசியால் பாம்பாட்டிச் சித்தர் தியானத்தில் மீண்டும் ஆழ்ந்தார். சிறகடித்துப் பறந்து வந்து சித்திகள் அவரிடம் இரண்டறக் கலந்தன. கண்களைத் திறந்தார். அவருள் இருந்த சித்திகள்யாவும் வெளிப்பட்டன. இரும்பு செம்பானது, செம்பு பொன் ஆனது, மணல் சுவை மிகுந்த சர்க்கரையானது. தன் கரங்களால் கூழாங்கற்களை எடுத்து உற்றுப் பார்த்தார். உடனே அவை ஒளி வீசும் நவரத்தினக் கற்களாக மாறின.
அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் சிரித்தார். என்ன வாழ்க்கை இது… நவரத்தினக் கல் கொண்ட பாம்பைத் தேடி நான் அலைந்தேன். அது கிடைக்கவே இல்லை. இப்போது சாதாரண கூழாங்கற்களையே நவரத்தினக் கற்களாக மாற்றிடும் சித்து வேலை தானாக என்னிடம் வந்துள்ளது. இதுதான் காலத்தின் கோலம் போலும். ச்சே…. வேண்டவே வேண்டாம் இவை… என்று கூறி அக்கற்களை வீசியெறிந்தார்.
தான் சந்தித்த மானிடர்களுக்குப் பாம்பாட்டிச் சித்தர் உபதேசம் செய்தருளினார். ஆனால் அவரிடம் வந்தோர் அனைவரும் அவரிடம் நடித்துத் தங்களது வாழ்வை வளமாக்கிக் கொண்டார்களே தவிர, நல்லவற்றை கடைப்பிடிப்பதில் அவர்கள் முயலவில்லை. அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் பெரிதும் வேதனைப் பட்டார். என்ன மனிதர்கள் இவர்கள்…. வயிற்றுப் பசிக்கு மட்டுமே இவர்கள் அலைகிறார்களே ஒழிய ஆன்மா என்று ஒன்று உண்டு. அதன் பசியை போக்க வேண்டும் என்று எண்ணம் துளியளவு கூட இல்லாதிருக்கிறார்களே… என்று அவர் வருந்தினார்.
இரவு, பகல் என அலைந்து திரிந்தார். பலரின் வியாதிகளைப் போக்கியருளினார். வறுமையால் வாடித் துன்புறும் ஏழை எளியோருக்கு இரசவாதம் மூலம் பொன்னைச் செய்து அவர்களது வறுமையைப் பாம்பாட்டிச் சித்தர் போக்கியருளினார்.
மன்னர் ஒருவர் கீழ்மக்களது சேர்க்கையால் செய்யத் தகாதவற்றை எல்லாம் செய்தார். இதனால் அம்மன்னரது உடல் இளைத்து மெலிந்தது. அடையாளமே தெரியாதவாறு அவர் உடல் இளைத்ததால் மிகவும் அவதிப்பட்டார். ஒருநாள் அம்மன்னர் நடந்து செல்லும் போது, கால் இடறிக் கீழே விழுந்தார். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை. ஆம்… இவர் இறந்து போனார். கலைகள் பலவற்றைக் கற்றறிந்த உத்தமக் குல மகளான அரசி, ஐயோ, எவ்வளவோ சொல்லியும் நீங்கள் திருந்தவே இல்லையே, இப்போது என்னைத் தனியே தவிக்கவிட்டுவிட்டுச் சென்று விட்டீர்களே… என்று கதறி அழுதாள். அரசியின் துயரைக் கண்டு குடிமக்களும் அமைச்சர்களும் மிகவும் வருந்தினர்.
அரண்மனையில் இருந்து வெளிவந்த அழுகை ஒலி விண்ணை எட்டியது. பாம்பாட்டிச் சித்தரின் செவிகளில் இந்த அழுகை ஒலி விழுந்தது. உடனே அவர் விண்ணில் இருந்து பூமிக்கு வந்தார். பூமியை அடைந்ததும் அவர் தம் உடலை ஒருபுறமாக வைத்துவிட்டு, செத்த பாம்பு ஒன்றை எடுத்து இறந்த மன்னர் உடலைச் சுற்றி அழுது கொண்டிருந்தவர்களின் மத்தியில் வீசியெறிந்தார். தங்களிடையே விழுந்தது செத்த பாம்பு என்பதை அறியாது அனைவரும் அலறியடித்து ஓடினர். பாம்பாட்டிச் சித்தர் அருவமாக இறந்த மன்னர் உடலருகே வந்தார். உடனே மன்னர் உடம்பினுள் அவர் கூடு விட்டு கூடு பாயும் கலைப்படி புகுந்தார்
உடனே இறந்த மன்னரின் உடம்பு உயிர் பெற்று மெல்ல அசைந்தது. கண்கள் சட்டெனத் திறந்தன. அரசர் எழுந்து அமர்ந்தார். அது கண்டு அரசியும், அமைச்சர்களும், கூடியிருந்தோரும், மன்னர் இறக்கவில்லை. உயிருடன்தான் உள்ளார், என்று மகிழ்ந்து கூவினர். அரசி தன் கழுத்தில் அணிந்திருந்த திருமாங்கல்யத்தை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். மிகவும் மகிழ்ந்த அவள் அவரைத் தழுவிடத் தனது கரங்களை நீட்டினாள்.
அதுகண்டு சட்டென விலகிய மன்னர் அங்கு தரையில் கிடந்த உயிரற்ற பாம்பின் உடலைப் பார்த்து, எழு பாம்பே… நான் எழுந்து விட்டேன். நீயும் எழுந்திருக்கலாமே என்றார். உடனே செத்த பாம்பு உயிர் பெற்று மெல்ல நெளிந்து நகர்ந்தது. அனைவரும் அது கண்டு வியந்தனர்.
பாம்பு வெளியே செல்ல முற்படுவதைக் கண்ட மன்னர், பாம்பே… எங்கே போகிறாய் நீ.. என்ன அரவரம் உனக்கு உன் மனைவி, மக்கள் நினைவு வந்து விட்டதோ.. சீச்சீ…. செத்துப் போன நீ இப்போது உயிர் பெற்றுச் செல்கிறாய் ஏமாறாதே உருப்படும் வழியைப் பார் என்றார். அவரது கூற்று ஆடு பாம்பே, ஆடு பாம்பே… என்று முடியும் பாடல்களாகவே வெளி வந்தன. அரிய உபதேசங்களைக் கொண்ட அப்பாடல்களுக்கு ஏற்றபடி அப்பாம்பும் படமெடுத்து ஆடியது. மன்னரது பாடல்களையும் அவர் பாடியதற்கு ஏற்ப பாம்பு படமெடுத்து ஆடியதையும் கண்டு அனைவரும் வியந்தனர். மன்னர் உருவில் இருப்பவர் பாம்பாட்டிச் சித்தரே என்பதை உணராது அவர்கள் குழப்பம் அடைந்தனர்.
மன்னரது பாடல்களைக் கேட்ட அரசி, ஒரு நாட்டையே ஆளும் நம் மன்னர் செத்துப் பிழைத்த பின் தத்துவமழையாகப் பொழிகிறாரே… இது எப்படி. என்று புரியாது தவித்தாள். அரசியின் எண்ணத்தை உணர்ந்த மன்னர், செல்வத்தில் மூழ்கிச் சீர் கெட்டுப் போவதில் என்ன லாபம் உண்டாகப் போகிறது. பரமனையே நினை. பேரின்பம் கிட்டும். என்று பாடலாகப் பாடினார். என்ன விந்தை இது. நான் உள்ளத்தில் நினைத்ததைப் பாடலாகப் பாடுகிறாரே… எப்படி. பாலும், பழமும் உண்டு எந்நேரமும் பெண் மோகத்தில் மூழ்கிய இவர், பரமனை சிந்தையில் வை, என்று கூறுகிறாரே… என்று வியந்தாள் அரசி.
உடனே மன்னர் உருவிலிருந்த சித்தர் பாலும், பழமும் விழுங்கிய வாய், உயிர் போன பின், மண்ணையும் விழுங்கும் இதனை நீ மறக்கலாகுமா. என்று பொருள்படுமாறு பாடினார். அதுகேட்டு அரசி ஓர் முடிவுக்கு வந்தவளாய், சுவாமி உண்மையை மறைக்காது கூறுங்கள் தாங்கள் எங்களின் மன்னர் தானா அல்லது உத்தமமான ஓர் ஆத்மா என் மன்னரின் உடம்புள் புகுந்துள்ளதா. என்று பணிவுடன் கேட்டாள்.
அதற்கு மன்னராக இருந்த சித்தர், அரசியை நீ ஒரு விவேகி, அதனாலேயே நீ உண்மையை உணர்ந்து கொண்டாய். அறிவு என்ற அங்குசம் கொண்டு கோபம் என்னும் மதயானையைக் கொன்றவர்கள் நாங்கள், உன் கணவன் இறந்ததால் அழுது கொண்டிருந்த உனது அவல நிலையை மாற்றவே யாம் இறந்த உன் மன்னரது உடம்புள் புகுந்தோம் எமது பெயர் பாம்பாட்டிச் சித்தன் என்பதாகும், என்று கூறினார்.
அதுகேட்டு அரசி மெய்சிலிர்த்து சுவாமி என் துயரத்தை போக்கியருள வந்த தெய்வம் தாங்கள், இனி இந்த என் அரசரின் உடலின் நிலை என்னவாகும். நான் உய்ய என்ன செய்ய வேண்டும். வழிகாட்டி அருளவேண்டும் என்று பணிவுடன் வேண்டினாள்.
மனம் என்னும் குதிரையை அறிவு என்ற கடிவாளம் கொண்டு அடக்கிடு கோபத்தை விட்டொழி தெளிவு உனக்கு தானாக வரும், என்று சித்தர் உபதேசித்தருளினார். அவர் உபதேசம் செய்து முடித்ததும் மன்னரது உடல் உயிரற்ற உடலாகச் சட்டெனக் கீழே விழுந்தது. மன்னரது உடம்புள் இருந்து நீங்கிய பாம்பாட்டிச் சித்தர் மீண்டும் தம் உடம்புள் புகுந்தார். அதுவரை படமெடுத்து ஆடிக் கொண்டிருந்த பாம்பும் அங்கிருந்து அகன்று சென்றது.
அங்கிருந்த அனைவரும் பயத்துடனும், வியப்புடனும் நிகழ்ந்தவை அனைத்தையும் கண்டனர். சித்தர் உபதேசத்தைத் தன் சிந்தையில் வைத்த அரசி, முறைப்படி மன்னரின் இறுதிக் கடன்களைச் செய்து முடித்தாள். பின் சித்தரது வழியில் வாழ்ந்து முக்தியடைந்தாள்.
பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் சித்தி அடைந்தார் என்றும் துவாரகையில் சித்தியடைந்தார் என்றும் பல செய்திகள் கூறப்படுகின்றன. திருக்கோகா்ணத்தில் பிறந்த பாம்பாட்டி சித்தர் பாண்டிய நாட்டில் வாழ்ந்தார் என்றும் மருத மலையில் வாழ்ந்தார் என்றும் முரண்பட்ட பல தகவல்கள் உள்ளன. ஆனாலும் அவர் மருதமலையில் வாழ்ந்தவர்தான் என்பதற்கு ஆதாரமாக அங்கு பாம்பாட்டிச் சித்தர் குகை, சுனை முதலானைவை உள்ளன.
திரு சிற்றம்பலம்
நன்றி ; தமிழ் கடல்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
உடல் ஒரு ஓட்டைப்பாண்டம்
முக்தி அடைவதற்கு மூன்று வழிகள் உண்டு. அவை கர்ம யோகம், ஞானயோகம், பக்தியோகம் என்பன. கர்ம யோகத்தை உடலாலும்,ஞானயோகத்தை அறிவினாலும் பக்தியோகத்தை மனதினாலும் வசப்படுத்தலாம். சித்தர்கள் வாழும் காலத்திலேயே மனதாலும் உடலாலும் முக்தி அடைந்தார்கள், நாற்றம் பிடித்தஅழுக்கு உடம்பை ஆபாசக்கொட்டிலை மாமிசம் நிறைந்த ஓட்டைத்துருத்தியை சோறிட்டு அடைக்கம தோற்பை - தசவாயுக்களாலும் நிறையப்பெற்ற நிலையற்ற பாத்திரமாகிய உடம்பின் மேல் நேசம் கொண்டு இத்தனை காலம் சுமந்து திரிந்து விட்டேனே என்று நினைக்கும் சித்தர்கள் அகக்கண்ணால் இறைவனைக் காணும் வல்லமை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறக்கும் போது எதையும் கொண்டு போக முடியாது என்று உலகத்தை உணர்ந்தவர்கள் பக்தி மார்க்கத்தில் ஞானத்தை செலுத்தி துன்பவலை என்ற பாசக்கட்டை அறுத்தெறிந்து வாழக்கற்றுக்கொண்டாவர்கள் சித்தர்கள்.
ஐம்புலங்களால் நாம் அறியும் அறிவு ஐந்து. ஆத்ம அறிவைச் சேர்த்து ஆறறிவு. மிருகங்குளுக்கு நான்கு அறிவு. சீவனை சேர்த்தால் ஐந்து அறிவு. பறவைகளுக்கு அறிவு மூன்று. மார்பினால் நகரும் பிராணிகளுக்கு (ஊர்வன) இரண்டு அறிவு. தாவரங்களுக்கு ஒரு அறிவு.இப்படி அறிந்து தெளிந்து கூறியவர்கள் சித்தர்கள். ஒரு சித்தர் " இந்த உடல் ஓட்டைப் பாண்டம் ஒன்றுக்கும் உதவாது என்று நினைத்து இருந்தேன், ஆனால் இந்த உடம்புக்குள்ளே தான் இறைவன் இருக்கிறான் என்பதைக் கண்டு கொண்டேன் உடலே கோயில் சீவனே சீவன் என்பதை உணர்ந்து கொண்டேன் இந்த உடம்பு அழிந்து விட்டால் உயிரும் அழிந்து விடுமே அதன்பின் ஞானத்தை எங்கே உணரமுடியும் அதனோடு எப்படி சேர முடியும் என்று அரிய விளக்கத்தை கூறியிருக்கிறார் திருமூலர் திருமந்திரத்தில்
"உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினையான் இருந்து ஓம்புகின்றேனே." என்கிறார்
பித்தனைப் போல் வாழ்ந்த சித்தர் " இவ்வுலகில் நிலையாக வாழ்வாய் என்று நினைப்பது மாயை, நீ ஒரு நாள் இறக்கத்தான் போகிறாய் உடம்பு உன்னுடையது என்று வளர்த்து சந்தோசப்படுகிறாயே அது உன்னுடையதா? நாய் நரி, கழுகு ஆகியவை நம்முடையது என்று ஆனந்தப்படுகிறதே, நீ இறந்தபின் கொடிய கழுகுக் கூட்டம் பறந்து வந்து உன் உடம்பை சின்னா பின்னமாக்கி கொத்தி தின்னத்தானே போகிறது, 9 துவாரங்களுடைய தோல் பையாகிய இந்த உடம்பின் மீது ஆசை வைக்காதே" என்று கூறுகிறார், மேலும் கூறுகிறார்
" காக்கை கவரில்என் கண்டார் பழிக்கில்என்
பால்துளி பெய்யில்என் பல்லோர் பழிச்சில்என்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டு போனஇக் கூட்டையே".
தோலால் ஆன இப்பையாம் இவ்வுடம்பினுள் உயிராகிய கூத்தன் இருந்துகொண்டு செய்ய வேண்டிய தொழில்களை செய்து முடித்து, வினைகளை அனுபவிக்குமாறு செய்கிறான், இப்படி செய்யும் உயிர் உடலை விட்டுப் போன பிறகு பிணமாக போன பின் அதனை காக்கை கவர்ந்தால் என்ன? பார்த்தவர்கள் பழித்துப் பேசினால் என்ன? பாலைத்துளியாகத் கொட்டினால் என்ன? பலரும் அப்பிணத்தை புகழ்ந்து பேசினால் என்ன? கழுகும் காக்கையும் மண்ணும் தின்னும் உடல்தானே அது.
காலத்தை தனக்குள் கட்டுப்படுத்தி மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து காட்டியவர்கள் சித்தர்கள். இரும்தையே ரசவாதத்தினால் பொன்னாக்கினார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். நவக்கிரங்களை மாற்றி அமைக்கும் சக்தி படைத்தார்கள் சித்தர்கள். இயற்கையின் சக்திக்கு மாறாக மூச்சடக்கி வானத்தில் பறந்த சித்தர்களும் தண்ணீர்மேல் நடந்தவர்களும் இருக்கிறார்கள்.
மக்களின் நன்மைக்காக இவைகளை பயன்படுத்தினார்களே தவிர, அவர்களுக்கு என்று எதையும் செய்யவில்லை, யோகம் ஞானம், வைத்திய சாஸ்திரங்களையும் நமக்காக அருளியிருக்கிறார்கள், சித்தர்கள் நம் நாட்டில் எத்தனையே பேர் இருந்திருக்கிறார்கள்,நாம் பதிென்ட்டு சித்தர்களை முதல் சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம், அவர்களோடு நில்லாது அவர்களின் தீட்சத் - ஞான உபதேசம்பெற்று அவரகளின் சீடர்களாகவும் அறிய பல நிகழ்வுகளைச் செய்து சித்தி விளயாட்டுகள் பல புரிந்து ஜீவ சமாதி அடைந்த சித்தர்களும் ஏராளமானபேர்கள் உண்டு என்பதை பல வரலாறுகள் வழியாக அறியலாம்.
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
முக்தி அடைவதற்கு மூன்று வழிகள் உண்டு. அவை கர்ம யோகம், ஞானயோகம், பக்தியோகம் என்பன. கர்ம யோகத்தை உடலாலும்,ஞானயோகத்தை அறிவினாலும் பக்தியோகத்தை மனதினாலும் வசப்படுத்தலாம். சித்தர்கள் வாழும் காலத்திலேயே மனதாலும் உடலாலும் முக்தி அடைந்தார்கள், நாற்றம் பிடித்தஅழுக்கு உடம்பை ஆபாசக்கொட்டிலை மாமிசம் நிறைந்த ஓட்டைத்துருத்தியை சோறிட்டு அடைக்கம தோற்பை - தசவாயுக்களாலும் நிறையப்பெற்ற நிலையற்ற பாத்திரமாகிய உடம்பின் மேல் நேசம் கொண்டு இத்தனை காலம் சுமந்து திரிந்து விட்டேனே என்று நினைக்கும் சித்தர்கள் அகக்கண்ணால் இறைவனைக் காணும் வல்லமை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறக்கும் போது எதையும் கொண்டு போக முடியாது என்று உலகத்தை உணர்ந்தவர்கள் பக்தி மார்க்கத்தில் ஞானத்தை செலுத்தி துன்பவலை என்ற பாசக்கட்டை அறுத்தெறிந்து வாழக்கற்றுக்கொண்டாவர்கள் சித்தர்கள்.
ஐம்புலங்களால் நாம் அறியும் அறிவு ஐந்து. ஆத்ம அறிவைச் சேர்த்து ஆறறிவு. மிருகங்குளுக்கு நான்கு அறிவு. சீவனை சேர்த்தால் ஐந்து அறிவு. பறவைகளுக்கு அறிவு மூன்று. மார்பினால் நகரும் பிராணிகளுக்கு (ஊர்வன) இரண்டு அறிவு. தாவரங்களுக்கு ஒரு அறிவு.இப்படி அறிந்து தெளிந்து கூறியவர்கள் சித்தர்கள். ஒரு சித்தர் " இந்த உடல் ஓட்டைப் பாண்டம் ஒன்றுக்கும் உதவாது என்று நினைத்து இருந்தேன், ஆனால் இந்த உடம்புக்குள்ளே தான் இறைவன் இருக்கிறான் என்பதைக் கண்டு கொண்டேன் உடலே கோயில் சீவனே சீவன் என்பதை உணர்ந்து கொண்டேன் இந்த உடம்பு அழிந்து விட்டால் உயிரும் அழிந்து விடுமே அதன்பின் ஞானத்தை எங்கே உணரமுடியும் அதனோடு எப்படி சேர முடியும் என்று அரிய விளக்கத்தை கூறியிருக்கிறார் திருமூலர் திருமந்திரத்தில்
"உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினையான் இருந்து ஓம்புகின்றேனே." என்கிறார்
பித்தனைப் போல் வாழ்ந்த சித்தர் " இவ்வுலகில் நிலையாக வாழ்வாய் என்று நினைப்பது மாயை, நீ ஒரு நாள் இறக்கத்தான் போகிறாய் உடம்பு உன்னுடையது என்று வளர்த்து சந்தோசப்படுகிறாயே அது உன்னுடையதா? நாய் நரி, கழுகு ஆகியவை நம்முடையது என்று ஆனந்தப்படுகிறதே, நீ இறந்தபின் கொடிய கழுகுக் கூட்டம் பறந்து வந்து உன் உடம்பை சின்னா பின்னமாக்கி கொத்தி தின்னத்தானே போகிறது, 9 துவாரங்களுடைய தோல் பையாகிய இந்த உடம்பின் மீது ஆசை வைக்காதே" என்று கூறுகிறார், மேலும் கூறுகிறார்
" காக்கை கவரில்என் கண்டார் பழிக்கில்என்
பால்துளி பெய்யில்என் பல்லோர் பழிச்சில்என்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டு போனஇக் கூட்டையே".
தோலால் ஆன இப்பையாம் இவ்வுடம்பினுள் உயிராகிய கூத்தன் இருந்துகொண்டு செய்ய வேண்டிய தொழில்களை செய்து முடித்து, வினைகளை அனுபவிக்குமாறு செய்கிறான், இப்படி செய்யும் உயிர் உடலை விட்டுப் போன பிறகு பிணமாக போன பின் அதனை காக்கை கவர்ந்தால் என்ன? பார்த்தவர்கள் பழித்துப் பேசினால் என்ன? பாலைத்துளியாகத் கொட்டினால் என்ன? பலரும் அப்பிணத்தை புகழ்ந்து பேசினால் என்ன? கழுகும் காக்கையும் மண்ணும் தின்னும் உடல்தானே அது.
காலத்தை தனக்குள் கட்டுப்படுத்தி மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து காட்டியவர்கள் சித்தர்கள். இரும்தையே ரசவாதத்தினால் பொன்னாக்கினார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். நவக்கிரங்களை மாற்றி அமைக்கும் சக்தி படைத்தார்கள் சித்தர்கள். இயற்கையின் சக்திக்கு மாறாக மூச்சடக்கி வானத்தில் பறந்த சித்தர்களும் தண்ணீர்மேல் நடந்தவர்களும் இருக்கிறார்கள்.
மக்களின் நன்மைக்காக இவைகளை பயன்படுத்தினார்களே தவிர, அவர்களுக்கு என்று எதையும் செய்யவில்லை, யோகம் ஞானம், வைத்திய சாஸ்திரங்களையும் நமக்காக அருளியிருக்கிறார்கள், சித்தர்கள் நம் நாட்டில் எத்தனையே பேர் இருந்திருக்கிறார்கள்,நாம் பதிென்ட்டு சித்தர்களை முதல் சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம், அவர்களோடு நில்லாது அவர்களின் தீட்சத் - ஞான உபதேசம்பெற்று அவரகளின் சீடர்களாகவும் அறிய பல நிகழ்வுகளைச் செய்து சித்தி விளயாட்டுகள் பல புரிந்து ஜீவ சமாதி அடைந்த சித்தர்களும் ஏராளமானபேர்கள் உண்டு என்பதை பல வரலாறுகள் வழியாக அறியலாம்.
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
திருவண்ணாமலை அதிசயம்
திருவண்ணாமலை அதிசயம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !
திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.
நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் !
அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.
ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.
மூன்று இளையனார்!
இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.
அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.
அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.
கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.
காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.
ஒன்பது கோபுரங்கள்!
கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).
சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.
கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.
மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.
உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்!
திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.
அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
மலையளவு பயன்!
நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.
கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.
கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.
பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.
பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.
அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.
கார்த்திகை ஜோதி மகத்துவம்!
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.
தீபத் திருவிழா!
உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும். தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாக நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலா வருவார்கள். சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர். இதை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள்.
பரணி தீபம்!
பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.
மகாதீபம்!
மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக "அண்ணாமலைக்கு அரோஹரா' எனக்கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள்.
ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள்.
தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.
திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந் துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும்.
லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!
“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருவண்ணாமலை அதிசயம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !
திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.
நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் !
அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.
ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.
மூன்று இளையனார்!
இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.
அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.
அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.
கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.
காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.
ஒன்பது கோபுரங்கள்!
கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).
சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.
கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.
மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.
உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்!
திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.
அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
மலையளவு பயன்!
நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.
கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.
கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.
பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.
பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.
அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.
கார்த்திகை ஜோதி மகத்துவம்!
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.
தீபத் திருவிழா!
உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும். தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாக நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலா வருவார்கள். சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர். இதை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள்.
பரணி தீபம்!
பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.
மகாதீபம்!
மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக "அண்ணாமலைக்கு அரோஹரா' எனக்கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள்.
ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள்.
தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.
திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந் துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும்.
லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!
“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சித்தர் திருமூலர்
கூடுவிட்டு கூடுபாய்ந்த சித்தர்களுள் மிகவும் பிரசித்த பெற்று கூடு மாறிய உடம்புடன் கொண்ட பெயரினைக் கொண்டவர் திருமூலர் என்ற சித்தர், மூலக்குருவாம் தட்சினாமூர்த்தியிடம் ஞான உபதேசம் பெற்ற நந்திகள் நால்வருடன் சேர்த்து எண் சித்தர்களில் ஒருவர் சுந்தரர் என்ற ஞானசித்தர் திருமூலர், உடம்பை சுருக்கி சிறிய அணுவாக மாற்றும் அணிமா சக்தியை பெற்றவர் திருமூலர் என்ற சித்தர்,, பிற்காலத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்பட்டவர், கைலாயத்துக்கு சென்று சிவனை தரிசித்து பேற்றைப் பெற்றவர், சித்தர்களில் முதன்மையானவர், திருமூலர் மூவாயிரம் மந்திரங்களைச் செய்ததோடு முந்நூறு மந்திரம், முப்பது உபதேசம் என்னும் நூல்களை செய்தருளியுள்ளார்,
"மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்
மூலன் உரைசெய்தமுந்நூறு மந்திரம்
மூலன் உரைசெய்த முப்பது பதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றுமே,
இந்நூல்களோடு இன்றி வைத்தியம் பற்றியும் இவரின் பாடல்களில் காணலாம்,
சிவத்தலங்களில் சிவபெருமானைப்பற்றி பாடி காலத்தை கழித்துக் கொண்டு மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது,ஒருமுறை திருவாடுதுறைக் கடக்கும் போது , சாத்தனூர் என்னும்ஊரைக் கடக்கும் போது மாடு மேய்த்துக் கொண்டு இருந்த மூலன் என்ற இடையன்இறந்து கிடப்பதையும், அதனைக் கண்ட பசுக்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டு இருப்பதைக் கண்டார், பசுக்களுக்கு மூலனிடம் ஏற்பட்டு இருந்த தாய்ப்பாசத்தினை சித்தர் கண்டு மனம் இளகினார, பசுக்களின் மேல் இரக்கம் கொண்டு மாடுமேய்த்த மூலன் என்ற மாடு மேய்ப்பவனின் உடலுக்கு உயிர்ப்பிக்க முடிவு செய்தார், தனியாக ஒரிடத்ததில் தன் உடம்பில் உள்ள உயிரை கூடுவிட்டு கூடுபாய்ந்து மூலனின் உடம்பில் சேர்ந்து மூலனாக மாறினார், சித்தர், அன்றிலிருந்து சுந்தரர் என்ற சித்தர் திருமூலர் சித்தரானார், இறந்து கிடந்த இடையன் மூலன் தூக்கித்தில் எழுவதுபோல் எழுந்தான், மூலன் எழுந்ததால் மாடுகளும் கன்றுகளும் உற்சாகம் அடைந்து தங்கள் கால்ளைத் தூக்கி அன்பை வெளிப்படுத்தின, மாடுகள் வழிகாட்டிக் கொண்டு செல்ல மூலன் வீட்டை அடைந்தான், கொட்டிலில் மாடுகளை அடைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த மூலனுக்கு அதிர்ச்சி காத்ததிருந்தது. மூலனின் மனைவி கணவன் வீடு திரும்பி விட்டதால் சந்தோசத்துடன் தொடுவதற்கு முற்பட்டாள், மூலனின் உடலில் இருப்பது சித்தர் அல்லவா? எனவே அவர் ஒரடி பின்நோக்கி நகர்ந்து என்னை த் தொடதே நான் உன் கணவன் அல்ல என்று தெரிவித்தார்,கணவன் அல்ல என்று கணவனே கூறியதைக் கேட்ட மூலனின் மனைவி ஊர் பெரியோர்களிடம் தன் நிலை பற்றி கூறினார் மன்றாடினாள், பின் ஊர் பெரியவர்களிடம் சித்தர் தான் ஒரு சித்தர் எனவும் மாடுமேய்க்கும் இடையனான மூலன் இறந்து கிடந்தததையும் அதற்கு ஆவினங்களுக்காக மனம் இறங்கி இவ்வாறு செய்தததையும் ஊர் பெரியவர்களிடம் விவரித்தார் சித்தர், இதனை அறிந்த ஊர் பெரியவர்கள் மூலன் வடிவில் இருப்பது சித்தர் தான் என்பதை இடையனின் மனைவிக்கு உணர்த்தினார் மூலனாக இருந்த சித்தர் திருமூலர் உண்மையான சித்தர் என்பதை அறிந்து ஊர் பெரியவர்கள் அவரை வணங்கினார்கள், பின் திருமூலர் தன் உடல் இருந்த இடத்திற்கு சென்றார், அங்கே தன் உடல் காணப்படாதது கண்டு அதிர்ச்சியுற்றார், மிருகங்கள் தன் உடலை இழுத்து சென்றுவிட்டதோ? இல்லை மூலனின் உடலில் இருக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம் போலும் என்று நினைத்த திருமூலர் திருவாடுதறை கோவிலுக்கு மேற்கே இருந்த அரசமரத்தடியில் தியான நிலையில் அமர்ந்தார், அங்கே பலகாலம் இருந்து திருமந்திரத்தை இயற்றினார், திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டதாக இருந்தது, மூலனின் உடம்பில் புகுந்ததால் திருமூலர் சித்தர் என்று அழைக்கப்பட்டார், அவர் பெருமையை வெளிப்படுத்த திருவாடுதுறையில் அவருக்கு ஒரு கோவில் ஏற்படுத்தப்பட்டது.
சித்தர்கள் சராசரி மனிதர்கள் அல்ல, தாங்கள் அறிந்த ஆத்ம தத்துவங்களை யோக சாதனைகளையும் உலகில் அனுபவங்களையும் பாடியிருக்கிறார்கள், அப்பாடல்களை கேட்கும்போது ஏதோ ஒன்றுமறிாத பித்தன் பாடடியிருப்பது போல் தோன்றினாலும் அதன் உள்ளே சென்று பொருளை அறியும்போது வியப்பு ஏற்படுகிறது.. ஒரு சித்தர் பாடிய பாடலை மேலோட்டமாக பார்த்தால் ஏதோ டப்பாங்குத்து பாடல் போல் தோன்றினாலும் அதன் உள்பொருள் நமக்கு மெய் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது,
"நந்தவனத்தில் ஒர்ஆண்டி அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி."
குயவனாக உருவகப்படுத்தப்படும் பிரம்மாவிடம் ஜீவன் என்னும் ஒரு ஆண்டி பத்து மாதமாக வேண்டி கருப்பையில் இருந்து , உடல் என்னும் தோண்டியைக் கொண்டு வந்து உலகத்தில் பலவாறாகவும் கூத்தாடிக் கடைசியில் அந்த உடலாகிய தோண்டிடைய போட்டு உடைக்கிறான் என்ற மாபெரும் தத்துவம் இந்த நான்கு வரிப்பாடல் வாய்லாக வெளிப்படுகிறது, இதனால் தானே இரண்டு வரிப்பாடல்களை இயற்றி திருவள்ளுவரும் சித்தராக வர்ணிக்கப்படுகிறார்,
சித்தர் திருமூலர் சிதம்பரம், திருவாடுதுறை ஆகிய தலங்களில் ஜீவசமாதியானதாக கூறப்படுகிறது, குருபகவானின் அருள் ஆதிக்கம் பெற்றவராக இருப்பதால் இவரை வியாழக்கிழமை தோறும் வழிபட்டால் குருபகவானின் அனுக்கிரகம் பெறமுடியும் குருவினால் ஏற்படும் தோசங்களிலிருந்து தப்பிக்க முடியும்.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமச்சிவாய ஓம்
மேலும்பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
கூடுவிட்டு கூடுபாய்ந்த சித்தர்களுள் மிகவும் பிரசித்த பெற்று கூடு மாறிய உடம்புடன் கொண்ட பெயரினைக் கொண்டவர் திருமூலர் என்ற சித்தர், மூலக்குருவாம் தட்சினாமூர்த்தியிடம் ஞான உபதேசம் பெற்ற நந்திகள் நால்வருடன் சேர்த்து எண் சித்தர்களில் ஒருவர் சுந்தரர் என்ற ஞானசித்தர் திருமூலர், உடம்பை சுருக்கி சிறிய அணுவாக மாற்றும் அணிமா சக்தியை பெற்றவர் திருமூலர் என்ற சித்தர்,, பிற்காலத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்பட்டவர், கைலாயத்துக்கு சென்று சிவனை தரிசித்து பேற்றைப் பெற்றவர், சித்தர்களில் முதன்மையானவர், திருமூலர் மூவாயிரம் மந்திரங்களைச் செய்ததோடு முந்நூறு மந்திரம், முப்பது உபதேசம் என்னும் நூல்களை செய்தருளியுள்ளார்,
"மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்
மூலன் உரைசெய்தமுந்நூறு மந்திரம்
மூலன் உரைசெய்த முப்பது பதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றுமே,
இந்நூல்களோடு இன்றி வைத்தியம் பற்றியும் இவரின் பாடல்களில் காணலாம்,
சிவத்தலங்களில் சிவபெருமானைப்பற்றி பாடி காலத்தை கழித்துக் கொண்டு மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது,ஒருமுறை திருவாடுதுறைக் கடக்கும் போது , சாத்தனூர் என்னும்ஊரைக் கடக்கும் போது மாடு மேய்த்துக் கொண்டு இருந்த மூலன் என்ற இடையன்இறந்து கிடப்பதையும், அதனைக் கண்ட பசுக்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டு இருப்பதைக் கண்டார், பசுக்களுக்கு மூலனிடம் ஏற்பட்டு இருந்த தாய்ப்பாசத்தினை சித்தர் கண்டு மனம் இளகினார, பசுக்களின் மேல் இரக்கம் கொண்டு மாடுமேய்த்த மூலன் என்ற மாடு மேய்ப்பவனின் உடலுக்கு உயிர்ப்பிக்க முடிவு செய்தார், தனியாக ஒரிடத்ததில் தன் உடம்பில் உள்ள உயிரை கூடுவிட்டு கூடுபாய்ந்து மூலனின் உடம்பில் சேர்ந்து மூலனாக மாறினார், சித்தர், அன்றிலிருந்து சுந்தரர் என்ற சித்தர் திருமூலர் சித்தரானார், இறந்து கிடந்த இடையன் மூலன் தூக்கித்தில் எழுவதுபோல் எழுந்தான், மூலன் எழுந்ததால் மாடுகளும் கன்றுகளும் உற்சாகம் அடைந்து தங்கள் கால்ளைத் தூக்கி அன்பை வெளிப்படுத்தின, மாடுகள் வழிகாட்டிக் கொண்டு செல்ல மூலன் வீட்டை அடைந்தான், கொட்டிலில் மாடுகளை அடைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த மூலனுக்கு அதிர்ச்சி காத்ததிருந்தது. மூலனின் மனைவி கணவன் வீடு திரும்பி விட்டதால் சந்தோசத்துடன் தொடுவதற்கு முற்பட்டாள், மூலனின் உடலில் இருப்பது சித்தர் அல்லவா? எனவே அவர் ஒரடி பின்நோக்கி நகர்ந்து என்னை த் தொடதே நான் உன் கணவன் அல்ல என்று தெரிவித்தார்,கணவன் அல்ல என்று கணவனே கூறியதைக் கேட்ட மூலனின் மனைவி ஊர் பெரியோர்களிடம் தன் நிலை பற்றி கூறினார் மன்றாடினாள், பின் ஊர் பெரியவர்களிடம் சித்தர் தான் ஒரு சித்தர் எனவும் மாடுமேய்க்கும் இடையனான மூலன் இறந்து கிடந்தததையும் அதற்கு ஆவினங்களுக்காக மனம் இறங்கி இவ்வாறு செய்தததையும் ஊர் பெரியவர்களிடம் விவரித்தார் சித்தர், இதனை அறிந்த ஊர் பெரியவர்கள் மூலன் வடிவில் இருப்பது சித்தர் தான் என்பதை இடையனின் மனைவிக்கு உணர்த்தினார் மூலனாக இருந்த சித்தர் திருமூலர் உண்மையான சித்தர் என்பதை அறிந்து ஊர் பெரியவர்கள் அவரை வணங்கினார்கள், பின் திருமூலர் தன் உடல் இருந்த இடத்திற்கு சென்றார், அங்கே தன் உடல் காணப்படாதது கண்டு அதிர்ச்சியுற்றார், மிருகங்கள் தன் உடலை இழுத்து சென்றுவிட்டதோ? இல்லை மூலனின் உடலில் இருக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம் போலும் என்று நினைத்த திருமூலர் திருவாடுதறை கோவிலுக்கு மேற்கே இருந்த அரசமரத்தடியில் தியான நிலையில் அமர்ந்தார், அங்கே பலகாலம் இருந்து திருமந்திரத்தை இயற்றினார், திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டதாக இருந்தது, மூலனின் உடம்பில் புகுந்ததால் திருமூலர் சித்தர் என்று அழைக்கப்பட்டார், அவர் பெருமையை வெளிப்படுத்த திருவாடுதுறையில் அவருக்கு ஒரு கோவில் ஏற்படுத்தப்பட்டது.
சித்தர்கள் சராசரி மனிதர்கள் அல்ல, தாங்கள் அறிந்த ஆத்ம தத்துவங்களை யோக சாதனைகளையும் உலகில் அனுபவங்களையும் பாடியிருக்கிறார்கள், அப்பாடல்களை கேட்கும்போது ஏதோ ஒன்றுமறிாத பித்தன் பாடடியிருப்பது போல் தோன்றினாலும் அதன் உள்ளே சென்று பொருளை அறியும்போது வியப்பு ஏற்படுகிறது.. ஒரு சித்தர் பாடிய பாடலை மேலோட்டமாக பார்த்தால் ஏதோ டப்பாங்குத்து பாடல் போல் தோன்றினாலும் அதன் உள்பொருள் நமக்கு மெய் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது,
"நந்தவனத்தில் ஒர்ஆண்டி அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி."
குயவனாக உருவகப்படுத்தப்படும் பிரம்மாவிடம் ஜீவன் என்னும் ஒரு ஆண்டி பத்து மாதமாக வேண்டி கருப்பையில் இருந்து , உடல் என்னும் தோண்டியைக் கொண்டு வந்து உலகத்தில் பலவாறாகவும் கூத்தாடிக் கடைசியில் அந்த உடலாகிய தோண்டிடைய போட்டு உடைக்கிறான் என்ற மாபெரும் தத்துவம் இந்த நான்கு வரிப்பாடல் வாய்லாக வெளிப்படுகிறது, இதனால் தானே இரண்டு வரிப்பாடல்களை இயற்றி திருவள்ளுவரும் சித்தராக வர்ணிக்கப்படுகிறார்,
சித்தர் திருமூலர் சிதம்பரம், திருவாடுதுறை ஆகிய தலங்களில் ஜீவசமாதியானதாக கூறப்படுகிறது, குருபகவானின் அருள் ஆதிக்கம் பெற்றவராக இருப்பதால் இவரை வியாழக்கிழமை தோறும் வழிபட்டால் குருபகவானின் அனுக்கிரகம் பெறமுடியும் குருவினால் ஏற்படும் தோசங்களிலிருந்து தப்பிக்க முடியும்.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமச்சிவாய ஓம்
மேலும்பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
சித்தர்களின் ஜீவ சமாதிகள்
சித்தர்கள் எத்தனையோ பேர் இருந்து இருக்கலாம், ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சித்தர்களே வெளி உலகத்திற்கு அடையாளம் காணப்பட்டு அவர்களின் பெயர்களும் ஐக்கியமான தலங்களும் பிரபலமாகி நாம் இன்றளவும் அவர்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபட்டால்அவர்களின் நல்ஆசி நமக்கு கிடைத்து ஒரு தெய்வீக உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறியலாம், அதில் முக்கியமான ஜீவசமாதிகள் பழனி முருகன் கோவிலில் அமைந்துள்ள போகரின் ஜீவசமாதி, சிதம்பரம் திருமூலரின் சமாதி, மதுரையில் சுநதரானந்தர் சமாதி, திருப்பரங்குன்றம் மச்ச முனிவர்சமாதி, பாம்பாட்டி சித்தர் சங்கரங்கன்கோவில், கரூர் கரூர் சித்தர், போன்று சித்தர் ஐக்கியமான தலங்களில் உள்ள அவர்களது ஜீவ சமாதிகளை வழிபடும் போது நம் குறைகளை நிச்சயம் தீர்ப்பார்கள், என்று நம்பப்படுகிறது.
மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் மறைந்துவிடும் ஆற்றல் பெற்ற சித்தர்கள் இரண்டு மூன்ற இடங்களில் சமாதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஆராய்ந்தால் அதற்கு விடை வருகிறது. சித்தர்கள் மூச்சை அடக்கி சிலகாலம் மண்ணுக்குள் தங்கிஇருந்து விட்டு வந்தால், அரிய சக்தி கிடைக்கும் என்று எண்ணினார்கள். இதனால் அவர்கள் பலமுறை அந்த நிலையை அடைந்து இருக்கிறார்கள், உதாரணமாக பாம்பாட்டி சித்தர் மருதமலை, சங்கரன்கோவில் விருத்தாசலம் ஆகிய இடங்களில் ஜீவசமாதியானதாக கூறுகிறார்கள், மூன்று முறை மண்ணுக்குள் இருந்த இடங்களே இந்த மூன்று சமாதிகளும், மண்ணில் பல ஆண்டுகள் தவம் இருக்கும் போது உடல் அழுகிவிடாதா? காடுகளில் தனியே தவம் இருக்கும்போது மமிருகங்கள் தின்றுவிடாதா? என்ற கேள்விகள் எழுவது இயற்கைதானே?
மண்ணுக்குள் இருந்தாலும் மண் தீண்டாததால் உடல் அழுகாது, காட்டில் தவத்தில் இருக்கும் போது காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்தாலும் உடலில் சூடு ஏறாது, கொடிய விசப்பாம்புகள் தீண்டினாலும், உடலில் விசம் ஏறாது, காட்டாற்று வெள்ளம் வந்தாலும், தவம் செய்யும் சித்தர்களை விட்டு விலகி ஒடும், தவப்பயனால் சிவனை அறிந்து ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் என்றும் பதினாறு வயது தோற்றத்திலேயே காட்சி அளித்தார்கள் என்ற நூல்களில் கூறப்பட்டு உள்ளது. தசையும எலும்பும் நரம்பும் நோயினால் பாழ்பட்டு விட்டதே இதற்கு பரிகாரம் இல்லையா? என்று நினைக்கும் மனிதர்கள் இப்படிப்பட்ட மகான்களான சித்தர்களை வணங்கினால் வாழ்வில் திருப்பம் ஏற்படும், நாம் உலக வாழ்க்கையில் ஊறி கிடக்கும் சாதாராணமானவர்கள் , நம்மால் நம்மையே அறிய முடியவில்லையே! பஞ்ச பூதங்களை அறிந்து மனதில் நிறுத்தி தியானம் மூலமாகப் பார்த்தால் ஞானம் தோன்றும் அந்த ஞானத்தினால் இறைவன் கண்களுக்கு தென்படுவான், அத்தகைய ஞானத்தை அடைந்தவர்கள் சித்தர்கள் சித்தத்தை வென்றவர்கள் சித்தர்கள் என்று கூறலாம்,
அக்னியும் வாயும் இல்லாவிட்டால் உயிர் என்பதே இல்லை, உடல் இல்லாவிட்டால் உயிர் என்பதை எப்படி அடையாளம் காணமுடியும். உடலின் இயக்கங்கள் பஞ்ச பூதங்களால் ஏற்படுகிறது, காது கண், நாக்கு, மூக்கு தோல் இவைகள் வெளிப்படையாக செயல் படுவதில்லை, கண்களினால் நாம் பார்க்கிறோம், காதுகளினால் ஒலியை கேட்டும், நாக்கினால் சுவைத்தும், மூக்கினால் முகர்ந்தும் தொடுவதால் பரிச உணர்வைப் பெறுகிறோம், ஆகையால் இவைகள் ஞான இயந்திரங்கள் என்று அழைக்கப்படுகிறது. வெளிப்படையாக செயல்புரியும் இந்திரியங்களைக் கன்ம இந்திரங்கள் என்கிறோம், அவைகள் வாய், கால்,கை, குறி, குதம் என்பன ஆகும்,
மனம் புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவை கரணங்கள் இவைகள் எல்லாம் ஆத்ம தத்துவங்களாகும், இவைகளை அறிந்தவர்களுக்கு வாசி சித்தயாகும் , வாசியின் உண்மையை புரிந்தவர்களுக்கு இணையானவர் யாரும் கிடையாது, காலம் நியதி, கலை, வித்தை, அராகம், மாயை என்பவை வித்தியாசமான தத்துவங்களாகும்,
காலம் என்பது சென்ற காலத்தின் எல்லையையும் நிகழ்காலத்தின் பலத்தையும் எதிர்காலத்தின் தன்மைகளையும் புரியச் செய்வது.
நியதி என்பது கன்மத்தின் அளவை நிச்சயம் பண்ணி நிறுத்துவது
கலை என்பது ஆணவத்தை குறைத்து ஆன்மாவை செயல்பட தூண்டுவது ஆகும்
வித்தை என்பது ஆன்மாவுக்கு அறிவை கொடுப்பது.
அராகம் என்பது அடைந்தவற்றை குறைவாகத் தோன்ற செய்து மேலும் அடையவேண்டும் என்று வேட்கையினைத் தூண்டுவது,
மாயை என்பது சிந்திக்க விடாமல் மயக்கத்தை தருவது,
வெட்ட வெளியிலே ஒன்றுமில்லா சூனியத்தை எங்கும் பரவி நிற்கும் இறைவடிவமாக பார்த்துகளிப்புறுபவர்கள், ஆத்ம தத்துவங்கள் மூலம் தன்னைத் தானே உணர்ந்தவர்கள் உடலில் இருந்து ஆத்மா பிரியும் நேரத்தை அறிந்தும் ஆத்மாவைத் தமக்குள் அடக்கி வைத்தும் ஜீவசமாதியானவர்களே சித்தர்கள். அதனால் தான் சித்தர்கள் ஐயக்கியமான இடங்களை ஜீவசமாதி என்று குறிப்பிடுகிறார்கள்.
ஜீவசமாதியை வழிபாடும்போது நம்மையறியாமல் ஒரு பத்துணர்ச்சி ஏற்படுகிறதே? நம்மிடம் ஏற்படும் புத்துணர்ச்சியின் - வைப்பிரேசன் - பொருள் என்ன என்று சிந்தித்தால் நமது உடம்பு தெய்வீக உணர்வுகளை உணர்வதே ஆகும், சித்தர்கள் நமக்கு அருள் பாலிக்கிறார்கள் என்றும் சொல்லலாம், தேவையில்லாத கற்பனைகளை நினைத்துக் கொண்டு வாழும் நம் மனதுக்கு ஆறுதலாக சித்தர்களின் சமாதிகள் அமைந்திருக்கின்றன என்றால் வியப்பில்லை. எல்லாம் அந்த சிவனின் அருள் பெற்று ஜீவசமாதியானவர்களின் நினைவு கொண்டு அவர்களின் தெய்வீக அருள்பெறுவோம்,
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
சித்தர்கள் எத்தனையோ பேர் இருந்து இருக்கலாம், ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சித்தர்களே வெளி உலகத்திற்கு அடையாளம் காணப்பட்டு அவர்களின் பெயர்களும் ஐக்கியமான தலங்களும் பிரபலமாகி நாம் இன்றளவும் அவர்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபட்டால்அவர்களின் நல்ஆசி நமக்கு கிடைத்து ஒரு தெய்வீக உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறியலாம், அதில் முக்கியமான ஜீவசமாதிகள் பழனி முருகன் கோவிலில் அமைந்துள்ள போகரின் ஜீவசமாதி, சிதம்பரம் திருமூலரின் சமாதி, மதுரையில் சுநதரானந்தர் சமாதி, திருப்பரங்குன்றம் மச்ச முனிவர்சமாதி, பாம்பாட்டி சித்தர் சங்கரங்கன்கோவில், கரூர் கரூர் சித்தர், போன்று சித்தர் ஐக்கியமான தலங்களில் உள்ள அவர்களது ஜீவ சமாதிகளை வழிபடும் போது நம் குறைகளை நிச்சயம் தீர்ப்பார்கள், என்று நம்பப்படுகிறது.
மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் மறைந்துவிடும் ஆற்றல் பெற்ற சித்தர்கள் இரண்டு மூன்ற இடங்களில் சமாதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஆராய்ந்தால் அதற்கு விடை வருகிறது. சித்தர்கள் மூச்சை அடக்கி சிலகாலம் மண்ணுக்குள் தங்கிஇருந்து விட்டு வந்தால், அரிய சக்தி கிடைக்கும் என்று எண்ணினார்கள். இதனால் அவர்கள் பலமுறை அந்த நிலையை அடைந்து இருக்கிறார்கள், உதாரணமாக பாம்பாட்டி சித்தர் மருதமலை, சங்கரன்கோவில் விருத்தாசலம் ஆகிய இடங்களில் ஜீவசமாதியானதாக கூறுகிறார்கள், மூன்று முறை மண்ணுக்குள் இருந்த இடங்களே இந்த மூன்று சமாதிகளும், மண்ணில் பல ஆண்டுகள் தவம் இருக்கும் போது உடல் அழுகிவிடாதா? காடுகளில் தனியே தவம் இருக்கும்போது மமிருகங்கள் தின்றுவிடாதா? என்ற கேள்விகள் எழுவது இயற்கைதானே?
மண்ணுக்குள் இருந்தாலும் மண் தீண்டாததால் உடல் அழுகாது, காட்டில் தவத்தில் இருக்கும் போது காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்தாலும் உடலில் சூடு ஏறாது, கொடிய விசப்பாம்புகள் தீண்டினாலும், உடலில் விசம் ஏறாது, காட்டாற்று வெள்ளம் வந்தாலும், தவம் செய்யும் சித்தர்களை விட்டு விலகி ஒடும், தவப்பயனால் சிவனை அறிந்து ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் என்றும் பதினாறு வயது தோற்றத்திலேயே காட்சி அளித்தார்கள் என்ற நூல்களில் கூறப்பட்டு உள்ளது. தசையும எலும்பும் நரம்பும் நோயினால் பாழ்பட்டு விட்டதே இதற்கு பரிகாரம் இல்லையா? என்று நினைக்கும் மனிதர்கள் இப்படிப்பட்ட மகான்களான சித்தர்களை வணங்கினால் வாழ்வில் திருப்பம் ஏற்படும், நாம் உலக வாழ்க்கையில் ஊறி கிடக்கும் சாதாராணமானவர்கள் , நம்மால் நம்மையே அறிய முடியவில்லையே! பஞ்ச பூதங்களை அறிந்து மனதில் நிறுத்தி தியானம் மூலமாகப் பார்த்தால் ஞானம் தோன்றும் அந்த ஞானத்தினால் இறைவன் கண்களுக்கு தென்படுவான், அத்தகைய ஞானத்தை அடைந்தவர்கள் சித்தர்கள் சித்தத்தை வென்றவர்கள் சித்தர்கள் என்று கூறலாம்,
அக்னியும் வாயும் இல்லாவிட்டால் உயிர் என்பதே இல்லை, உடல் இல்லாவிட்டால் உயிர் என்பதை எப்படி அடையாளம் காணமுடியும். உடலின் இயக்கங்கள் பஞ்ச பூதங்களால் ஏற்படுகிறது, காது கண், நாக்கு, மூக்கு தோல் இவைகள் வெளிப்படையாக செயல் படுவதில்லை, கண்களினால் நாம் பார்க்கிறோம், காதுகளினால் ஒலியை கேட்டும், நாக்கினால் சுவைத்தும், மூக்கினால் முகர்ந்தும் தொடுவதால் பரிச உணர்வைப் பெறுகிறோம், ஆகையால் இவைகள் ஞான இயந்திரங்கள் என்று அழைக்கப்படுகிறது. வெளிப்படையாக செயல்புரியும் இந்திரியங்களைக் கன்ம இந்திரங்கள் என்கிறோம், அவைகள் வாய், கால்,கை, குறி, குதம் என்பன ஆகும்,
மனம் புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவை கரணங்கள் இவைகள் எல்லாம் ஆத்ம தத்துவங்களாகும், இவைகளை அறிந்தவர்களுக்கு வாசி சித்தயாகும் , வாசியின் உண்மையை புரிந்தவர்களுக்கு இணையானவர் யாரும் கிடையாது, காலம் நியதி, கலை, வித்தை, அராகம், மாயை என்பவை வித்தியாசமான தத்துவங்களாகும்,
காலம் என்பது சென்ற காலத்தின் எல்லையையும் நிகழ்காலத்தின் பலத்தையும் எதிர்காலத்தின் தன்மைகளையும் புரியச் செய்வது.
நியதி என்பது கன்மத்தின் அளவை நிச்சயம் பண்ணி நிறுத்துவது
கலை என்பது ஆணவத்தை குறைத்து ஆன்மாவை செயல்பட தூண்டுவது ஆகும்
வித்தை என்பது ஆன்மாவுக்கு அறிவை கொடுப்பது.
அராகம் என்பது அடைந்தவற்றை குறைவாகத் தோன்ற செய்து மேலும் அடையவேண்டும் என்று வேட்கையினைத் தூண்டுவது,
மாயை என்பது சிந்திக்க விடாமல் மயக்கத்தை தருவது,
வெட்ட வெளியிலே ஒன்றுமில்லா சூனியத்தை எங்கும் பரவி நிற்கும் இறைவடிவமாக பார்த்துகளிப்புறுபவர்கள், ஆத்ம தத்துவங்கள் மூலம் தன்னைத் தானே உணர்ந்தவர்கள் உடலில் இருந்து ஆத்மா பிரியும் நேரத்தை அறிந்தும் ஆத்மாவைத் தமக்குள் அடக்கி வைத்தும் ஜீவசமாதியானவர்களே சித்தர்கள். அதனால் தான் சித்தர்கள் ஐயக்கியமான இடங்களை ஜீவசமாதி என்று குறிப்பிடுகிறார்கள்.
ஜீவசமாதியை வழிபாடும்போது நம்மையறியாமல் ஒரு பத்துணர்ச்சி ஏற்படுகிறதே? நம்மிடம் ஏற்படும் புத்துணர்ச்சியின் - வைப்பிரேசன் - பொருள் என்ன என்று சிந்தித்தால் நமது உடம்பு தெய்வீக உணர்வுகளை உணர்வதே ஆகும், சித்தர்கள் நமக்கு அருள் பாலிக்கிறார்கள் என்றும் சொல்லலாம், தேவையில்லாத கற்பனைகளை நினைத்துக் கொண்டு வாழும் நம் மனதுக்கு ஆறுதலாக சித்தர்களின் சமாதிகள் அமைந்திருக்கின்றன என்றால் வியப்பில்லை. எல்லாம் அந்த சிவனின் அருள் பெற்று ஜீவசமாதியானவர்களின் நினைவு கொண்டு அவர்களின் தெய்வீக அருள்பெறுவோம்,
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
சித்தர் இடைக்காடர்
தாயின் அடிமைத் தளையை நீக்க அமிர்த்தைக் கொண்டுவர கருடன் பறந்த போது ஏற்பட்ட காற்றினால் கிரகங்களே இடம் மாறிச் சென்றுவிட்டன என்பது வரலாற்று சுவடிகள்
பூலோகத்தில் மழை பொய்த்து விட்ட நிலையில் கிரகங்களை மாற்றி வைத்தார் ஒரு சித்தர், தொண்டை நாட்டில் பொதிகை மலைச்சாரலில் உள்ள இடைக்காடு என்ற ஊரில் இடையர் ஆடு மாடுகளை நேசித்து வளர்த்து வந்தார், ஊர்மக்கள் அவரை இடைக்காடர் என்று அழைத்து வந்தனர், மலைப்பகுதியில் இடைக்காடர் ஆடு மாடுகளை மேய்த்து கொண்டு இருந்த போது கந்தல் உடை கலைந்த தலைமுடியோடு எதையும் எதிர்பார்க்காத மனதை உடையவர் ஒருவர் அங்கே வந்தார், அவரை வரவேற்ற இடைக்காடர் தான் வைத்திருந்த உணவை கொடுத்து பசியாறக் கூறினார், ஜீவன் என்ற பசுவின் மடியில் இருந்து பாலைக் கறந்து கொடுத்து பருகச் சொன்னார், அவர் யார் என்று அறியாமலேயே அவரை நன்கு உபசரித்தார், அவர் சாதாரண மனிதரல்ல, சித்தர்களில் முதன்மையானவர்,
தனக்கு செய்த தொண்டால் மகிழ்ந்த அந்த சித்தர் இடைகாடருக்கு ஞான உபதேசம் செய்தார், இடைக்காடர் ஞான உபதேசம் பெற்று சித்தரானார், அவரை மக்கள் இடைக்காட்டு சித்தர் என அழைக்கலானர், சித்தர் ஆன பின் அவர் மனதில் நடக்கப்போகும் நிகழ்வுகள் தெரிந்தன. அந்த நாட்டில் பன்னிரண்டு ஆண்டு காலம் மழை பெய்யாமல் பஞ்சம் தலை விரித்தாடியது,மக்களும் கால்நடைகளும் அழிவார்கள் என்பதை அவர்மனது அவருக்கு முன்கூட்டியேகூறியது, அதை உணர்ந்த சித்தர், தன்னுடைய ஆடுகளுக்கு எருக்கிலை கொடுத்து பழக்கினார், எருக்லை குருவரகு என்ற தானியத்தை சேற்றோடு குழைத்து தன் குடிசையின் சுவற்றை உடைத்து விட்டு புதிய சுவர் எழுப்பினார், எருக்கிலை குருவரகு சேற்றுக் கலலையால் எழுப்பட்ட சுவர் உறுதியாக நின்றது. சித்தரின் மனதில் தோன்றியபடியே அந்த நாட்டில் மழை இல்லாமல் பஞ்சம் நீடித்தது, அதனால் மனிதர்களும் கால்நடைகளும் அழிய தொடங்கின. பூமியில் வெடிப்புகள் பாளங்கள் தோன்றின, ஆனால் சித்தருக்கோ அவரது ஆடுகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது, அவருடைய ஆடுகள் எருக்கிலையும் குருவரகு தானியத்தையும் சேற்றில்குழைத்து சுவர் எழுப்பி இருந்த சுவரில் எங்கும் மேய்ச்சலுக்கு செல்லமுடியாத ஆடுகள் அந்த சுவரில் உடம்பைத் தேய்த்து அப்போது சுவரிலிருந்து சிதறும் தானியங்களை அவரும் அவராது கால்நடைகளும் உண்டு பசியாறின. இந்த அதிசயத்தை காண நவக்கிரக நாயகர்கள் வந்தனர், அவர்களுக்கு ஆட்டுப்பாலில் குருவரகை பாகம் செய்து விருந்து கொடுத்தார், அதைச் சாப்பிட்டவுடன் நவக்கிர நாயகர்கள் மயங்கி உறங்க தொடங்கினர், அவர்கள் இடம் மாறி இருந்ததால்தானே மழை பொய்த்தது, பஞ்சத்தால் நாட்டைத் துடிக்க வைத்துக் கொண்டு இருக்கும் கிரகங்கள் இவர்கள் தானே மழை பெய்வதற்கு எப்படி கிரகங்கள் இருக்க வேண்டுமோ அவ்வாறு அக் கிரகங்களை அமைத்தார், கிரகங்கள் சரியான இடத்தில் அமைந்தவுடன் மழை பொழிய ஆரம்பித்தது, நவக்கிரக நாயகர்கள் வழித்தெழுந்தனர், சித்தர்கள் எதையும் சாதிக்க முடியும் என்று மழை பொய்த்து இருந்த நாட்டில் மழை பொழிய வைத்து நாட்டினை செழிக்க வைத்தார் இடைக்காடர் என்ற சித்தர்.
இடைக்காட்டு சித்தர் திருவண்ணாமலையில் ஐயக்கியமானர், என வரலாறு கூறுகிறது. நவக்கரகங்களில் புதன் பகவானின் அம்சமாக இருப்பவர் என்று அறியப்படுகிறது, இதனால் அவரை புதன் கிழமை வணங்கினால் புதன் பகவானால் ஏற்படக்கூடிய தோசங்கள் விலகும் என்று நம்பப்படுகிறது
தென்னாடுடைய சிவனே போற்றி!
ஒம் நமசிவாய நம!
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
தாயின் அடிமைத் தளையை நீக்க அமிர்த்தைக் கொண்டுவர கருடன் பறந்த போது ஏற்பட்ட காற்றினால் கிரகங்களே இடம் மாறிச் சென்றுவிட்டன என்பது வரலாற்று சுவடிகள்
பூலோகத்தில் மழை பொய்த்து விட்ட நிலையில் கிரகங்களை மாற்றி வைத்தார் ஒரு சித்தர், தொண்டை நாட்டில் பொதிகை மலைச்சாரலில் உள்ள இடைக்காடு என்ற ஊரில் இடையர் ஆடு மாடுகளை நேசித்து வளர்த்து வந்தார், ஊர்மக்கள் அவரை இடைக்காடர் என்று அழைத்து வந்தனர், மலைப்பகுதியில் இடைக்காடர் ஆடு மாடுகளை மேய்த்து கொண்டு இருந்த போது கந்தல் உடை கலைந்த தலைமுடியோடு எதையும் எதிர்பார்க்காத மனதை உடையவர் ஒருவர் அங்கே வந்தார், அவரை வரவேற்ற இடைக்காடர் தான் வைத்திருந்த உணவை கொடுத்து பசியாறக் கூறினார், ஜீவன் என்ற பசுவின் மடியில் இருந்து பாலைக் கறந்து கொடுத்து பருகச் சொன்னார், அவர் யார் என்று அறியாமலேயே அவரை நன்கு உபசரித்தார், அவர் சாதாரண மனிதரல்ல, சித்தர்களில் முதன்மையானவர்,
தனக்கு செய்த தொண்டால் மகிழ்ந்த அந்த சித்தர் இடைகாடருக்கு ஞான உபதேசம் செய்தார், இடைக்காடர் ஞான உபதேசம் பெற்று சித்தரானார், அவரை மக்கள் இடைக்காட்டு சித்தர் என அழைக்கலானர், சித்தர் ஆன பின் அவர் மனதில் நடக்கப்போகும் நிகழ்வுகள் தெரிந்தன. அந்த நாட்டில் பன்னிரண்டு ஆண்டு காலம் மழை பெய்யாமல் பஞ்சம் தலை விரித்தாடியது,மக்களும் கால்நடைகளும் அழிவார்கள் என்பதை அவர்மனது அவருக்கு முன்கூட்டியேகூறியது, அதை உணர்ந்த சித்தர், தன்னுடைய ஆடுகளுக்கு எருக்கிலை கொடுத்து பழக்கினார், எருக்லை குருவரகு என்ற தானியத்தை சேற்றோடு குழைத்து தன் குடிசையின் சுவற்றை உடைத்து விட்டு புதிய சுவர் எழுப்பினார், எருக்கிலை குருவரகு சேற்றுக் கலலையால் எழுப்பட்ட சுவர் உறுதியாக நின்றது. சித்தரின் மனதில் தோன்றியபடியே அந்த நாட்டில் மழை இல்லாமல் பஞ்சம் நீடித்தது, அதனால் மனிதர்களும் கால்நடைகளும் அழிய தொடங்கின. பூமியில் வெடிப்புகள் பாளங்கள் தோன்றின, ஆனால் சித்தருக்கோ அவரது ஆடுகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது, அவருடைய ஆடுகள் எருக்கிலையும் குருவரகு தானியத்தையும் சேற்றில்குழைத்து சுவர் எழுப்பி இருந்த சுவரில் எங்கும் மேய்ச்சலுக்கு செல்லமுடியாத ஆடுகள் அந்த சுவரில் உடம்பைத் தேய்த்து அப்போது சுவரிலிருந்து சிதறும் தானியங்களை அவரும் அவராது கால்நடைகளும் உண்டு பசியாறின. இந்த அதிசயத்தை காண நவக்கிரக நாயகர்கள் வந்தனர், அவர்களுக்கு ஆட்டுப்பாலில் குருவரகை பாகம் செய்து விருந்து கொடுத்தார், அதைச் சாப்பிட்டவுடன் நவக்கிர நாயகர்கள் மயங்கி உறங்க தொடங்கினர், அவர்கள் இடம் மாறி இருந்ததால்தானே மழை பொய்த்தது, பஞ்சத்தால் நாட்டைத் துடிக்க வைத்துக் கொண்டு இருக்கும் கிரகங்கள் இவர்கள் தானே மழை பெய்வதற்கு எப்படி கிரகங்கள் இருக்க வேண்டுமோ அவ்வாறு அக் கிரகங்களை அமைத்தார், கிரகங்கள் சரியான இடத்தில் அமைந்தவுடன் மழை பொழிய ஆரம்பித்தது, நவக்கிரக நாயகர்கள் வழித்தெழுந்தனர், சித்தர்கள் எதையும் சாதிக்க முடியும் என்று மழை பொய்த்து இருந்த நாட்டில் மழை பொழிய வைத்து நாட்டினை செழிக்க வைத்தார் இடைக்காடர் என்ற சித்தர்.
இடைக்காட்டு சித்தர் திருவண்ணாமலையில் ஐயக்கியமானர், என வரலாறு கூறுகிறது. நவக்கரகங்களில் புதன் பகவானின் அம்சமாக இருப்பவர் என்று அறியப்படுகிறது, இதனால் அவரை புதன் கிழமை வணங்கினால் புதன் பகவானால் ஏற்படக்கூடிய தோசங்கள் விலகும் என்று நம்பப்படுகிறது
தென்னாடுடைய சிவனே போற்றி!
ஒம் நமசிவாய நம!
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எவ்வாறு?
நம் உடம்பிலுள்ள எதிர்மறை சக்திகளை ஆத்ம சக்தியில் அடக்கி ஒடுக்கி உடன்பாட்டு சக்திகளை அபிவிருத்தி செய்து தன் அறிவைக் கொண்டு சமனப்படுத்தி ஒளியை அதாவது ஜோதியை காண்பதே மெய்யறிவின் சாதனையாகும், அஷ்டாங்க யோகத்தின் ஐந்தாவது நிலை " ப்ரத்தியாகாரம்" என்ற சாதனையின் விளக்கத்தையும் அறிய வேண்டும், தன்மனதினை ஒன்று கூட்டவோ, பிரிக்கவோ சக்தி பெற்றவன் தான் ப்ரத்தியாகாரம் எனும் கட்டுப்பாட்டினை அடைய முடியும், இந்த பலன்களை ஆசையுடைய பொருள்களை நிதர்ஸனம் செய்தும், புலன்களை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் பயிற்சியாகும், இதனையே திருவள்ளுவர்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்திர்
ஒழுக்கம் நெறி நின்றார் நீடுவாழ்வார் - என்கிறார்
ஐம்புலங்களை அடக்கி ஒழுக்க நெறி நிற்பவர் நீண்டகாலம் தன்மையர் என்கிறார், இன்னும் ஒருபடி மேல் சென்று பத்திரகரியார் ஆங்காரம் உள்ளக்கி ஐம்புலங்களை சுட்டருத்து தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்று புலம்புகிறார். எனவே தூங்காமல் தூங்கி சுகம் பெற தன் இச்சையை இச்சைப்படி விடாது கட்டுக்குள் கொண்டுவரும் சாதனைதான் ப்ரத்தியாகாரம் என்பது, இப்படி ஆற்றல் ஒன்றுபடுத்தி சாதனை புரிந்தால் எல்லாமே கட்டுக்குள் அடங்கும்.
உடல், உள்ளம், அறிவு இம்மூன்றம்ஒன்றோடொன்று ஒன்றி நின்றால் சாதனையில் வெற்றி பெறமுடியும், இந்திரியங்களையும் பல விஷயங்களிலிருந்தும் விலகி ஆண்டவனிடம் திருப்ப வேண்டும், அப்பர் தேவராத்தில் தலையே நீ வணங்காய், கண்களே இறைவனை காண்க என்றெல்லாம் பாடியிருப்பதும் உடல் உறுப்புகளை பரமேஸ்வரன் பால் ஈடுபடுத்தும் பிரத்தியாகாரமே, இதனால் விஷப்பற்று அறவே நீங்கும், சிவஞான சித்தர் இலக்கண விளக்க பரம்பரை ஸ்ரீ சிதம்பரநாத தேசிகர் உரையில் பின்கண்ட பாடல் அதை விளக்கிறது.
1, சகமார்ககம் புலனொடுங்கி
2,தத்துவ வொளி இரண்டு சலப்பற்று
3,முச்சதுர மூலாதாரங்கள் அகமார்க்க மறிந்து
4,அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்து அனைந்து போய் மேலேற
5,அலர்மதி மண்டலத்தின் முகமார்க்க அமுதுண்டு
6, அலமுட்டத் தேக்கி
7, முழுச் சோதி நினைத்திருந்து
8,தன்முதலாக வினைகளுக்கு
9, மார்க்க அஷ்டாங்கயோக முற்றும்
10, உழத்தலுந்தவர் சிவன் தன் உருவத்தை பெறுவர்,
என்றபடி சகமார்க்கம் புலனொடுக்கம் சாதனையால் நாம் செய்யமுடியாதது எதுவுமில்லை, சகமார்க்கம் என்பது பக்தி மார்க்கத்தினைவிட கஷ்டமானது ஏனெனில் அந்நிலை உலகத்தோடு ஒட்டியும், ஒட்டாமலும் கத்திமேல் உட்கார்ந்து சாதனை புரிவது போல், ஏனனெனின் ஆமை எப்படி புலன்களை நினைத்த மாத்திரத்தில் தன் அவயங்களை உள்ளடக்கி கொள்கிறதோ அதுபோல் புலன்களின் ஆசைகள் நிஷ்காமியம் செய்யக் கூடிய நிலைதான் ப்ரத்தியாகாரம், சைவ சமய குருமார்களில் சுந்தரரர் இரு மனைவியர்கள் இருந்தும் இந்த மார்க்கத்தை அனுஷ்டிக்கிறார் என்றால் அவரின் திண்மை என்னவென்பது? தன்னிலைக்கு கட்டுபட்டு கொண்டுவருபவனுக்கு கைவல்யம் ஆகாதது எதுவுமில்லை, எனவே ஐம்பொறிகளின் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம், என்ற ஐந்தினைதத்துவங்களால் ஒடுக்க வேண்டும், என்று ஒளவை பராட்டியாரும் கூறுகிறார்,
நினைப்பு மறுப்பு நெடும் பசியும் மற்றால்
அனைத்துலகும் வீடாமது - ஒளவை குறள்
தேகத்ததின் கண்ணுண்டாகும் சங்கல்பமும் யாவற்றையும் அறிய வொட்டாது மறைத்திருக்க கூடியது, பசியும் ஒழித்த விடத்த எல்லா உலகுக்கும் தேகமானது உறைவிடமாகும்,
நினைப்பு: சங்கற்ப பலத்ததினால் எண்ணிய கருமத்தை முடிக்கலாம்
ஞானத்தினால் : சங்கற்ப நாசத்தால் மனம் வலவையடையும் பிந்து பலம்படும் ஞான கர்மத்துக்கு உதவி செய்யும்
மறப்பு: மனம் வாக்கு காயங்களாலுண்டாகும், உழைப்புக்கு ஆறுதல் செய்வதில் பேர்பெற்றது.
ஞானத்தினால் மறப்பாற்றால்தான் 14 உலகங்களையும் தன்னையுமறியலாம்,
பசி : பசியானது உணவு சுவை உட்கொள்ளுவதற்கு சமிக்ஞையாக விருப்பத்தோடு உண்ட உணவை ஜீரணித்து அதை பக்குவம் செய்து சுக்கிலம், நாதம், மலமாக பிரிக்கும் பசியின்மை நேரிட்டால் மேற்சொன்னவைகளுக்கு எதிரிடையை உண்டாக்கும்,
ஞானத்தினால் பசி யொழிந்தால் அமுத தன்மை உண்டாகிறது, பலம் தேகபலம் உண்டாகிறது, பஞ்சேந்திரயங்களை அகமுக விவகாரத்தில் செலுத்தும் சூட்சும தத்துவங்களுக்கும் ஸ்தூல தத்துவங்களக்கும் பலத்தை கொடுக்கும் அமிர்த ஊற்று சுரக்கும்
எனவே இறவாமல் வாழும் வழி ஜீவ அமிர்தத்தை பருகுவதே, அந்த அமிர்தம் நம் உடலில் பெருக்கி பசிதாகம் கால ம்ருத்யு ( பற்றாததும் ) என்றும் சிரஞ்சீவியாக வாழும் வழியினை நம் சங்கற்ப பலத்தால் பெற வேண்டும் நாம் இச்சிக்கப்படும் பொருளுடையது ஆனது காமியதவம் அப்படி இச்சிக்கப்படாத விரும்பும் தவம் நிஷ்காமமிய தவம் எனப்படும், காமிய தவம், சித்தியும், நிஷ்காமிய தவம் முத்தியும் கொடுக்கும், வைராக்கியம் என்ற மனேசக்தி பெருகினால் ஆத்ம சாதனையால் வெற்றியடைய முடியும்,
ஆசை அடக்கி ஐம்புலங்களை இழுத்து பிடித்தால் அடங்காத குதிரைகளான புலன்களை கடிவாளம் போட்டு இழுத்து பிடித்து சாதனை புரியலாம், வெளி விவகாரத்தில் இந்திரியங்களை பலத்காரமாக உள்முகப்டுத்துதல் ப்ரத்தியாகாரம், எதிலும் பலனை எதிர்பார்க்காமல் கரும பலனை அனுஷ்சித்து ப்ரத்தியாகாரம், எதை பார்த்தாலுமு அதையெல்லாம் ஆத்மா என பாவிப்பது ப்ரத்தியாகாரம்,
எனவே ஆசைஅடக்கி ஐம்புலங்களையும் வென்று, மனத்தினை கட்டுப்டுத்தி சும்மா இருந்து சுகம் பெறுவதே தூங்காமல் தூங்கும் நிலை,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எவ்வாறு?
நம் உடம்பிலுள்ள எதிர்மறை சக்திகளை ஆத்ம சக்தியில் அடக்கி ஒடுக்கி உடன்பாட்டு சக்திகளை அபிவிருத்தி செய்து தன் அறிவைக் கொண்டு சமனப்படுத்தி ஒளியை அதாவது ஜோதியை காண்பதே மெய்யறிவின் சாதனையாகும், அஷ்டாங்க யோகத்தின் ஐந்தாவது நிலை " ப்ரத்தியாகாரம்" என்ற சாதனையின் விளக்கத்தையும் அறிய வேண்டும், தன்மனதினை ஒன்று கூட்டவோ, பிரிக்கவோ சக்தி பெற்றவன் தான் ப்ரத்தியாகாரம் எனும் கட்டுப்பாட்டினை அடைய முடியும், இந்த பலன்களை ஆசையுடைய பொருள்களை நிதர்ஸனம் செய்தும், புலன்களை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் பயிற்சியாகும், இதனையே திருவள்ளுவர்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்திர்
ஒழுக்கம் நெறி நின்றார் நீடுவாழ்வார் - என்கிறார்
ஐம்புலங்களை அடக்கி ஒழுக்க நெறி நிற்பவர் நீண்டகாலம் தன்மையர் என்கிறார், இன்னும் ஒருபடி மேல் சென்று பத்திரகரியார் ஆங்காரம் உள்ளக்கி ஐம்புலங்களை சுட்டருத்து தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்று புலம்புகிறார். எனவே தூங்காமல் தூங்கி சுகம் பெற தன் இச்சையை இச்சைப்படி விடாது கட்டுக்குள் கொண்டுவரும் சாதனைதான் ப்ரத்தியாகாரம் என்பது, இப்படி ஆற்றல் ஒன்றுபடுத்தி சாதனை புரிந்தால் எல்லாமே கட்டுக்குள் அடங்கும்.
உடல், உள்ளம், அறிவு இம்மூன்றம்ஒன்றோடொன்று ஒன்றி நின்றால் சாதனையில் வெற்றி பெறமுடியும், இந்திரியங்களையும் பல விஷயங்களிலிருந்தும் விலகி ஆண்டவனிடம் திருப்ப வேண்டும், அப்பர் தேவராத்தில் தலையே நீ வணங்காய், கண்களே இறைவனை காண்க என்றெல்லாம் பாடியிருப்பதும் உடல் உறுப்புகளை பரமேஸ்வரன் பால் ஈடுபடுத்தும் பிரத்தியாகாரமே, இதனால் விஷப்பற்று அறவே நீங்கும், சிவஞான சித்தர் இலக்கண விளக்க பரம்பரை ஸ்ரீ சிதம்பரநாத தேசிகர் உரையில் பின்கண்ட பாடல் அதை விளக்கிறது.
1, சகமார்ககம் புலனொடுங்கி
2,தத்துவ வொளி இரண்டு சலப்பற்று
3,முச்சதுர மூலாதாரங்கள் அகமார்க்க மறிந்து
4,அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்து அனைந்து போய் மேலேற
5,அலர்மதி மண்டலத்தின் முகமார்க்க அமுதுண்டு
6, அலமுட்டத் தேக்கி
7, முழுச் சோதி நினைத்திருந்து
8,தன்முதலாக வினைகளுக்கு
9, மார்க்க அஷ்டாங்கயோக முற்றும்
10, உழத்தலுந்தவர் சிவன் தன் உருவத்தை பெறுவர்,
என்றபடி சகமார்க்கம் புலனொடுக்கம் சாதனையால் நாம் செய்யமுடியாதது எதுவுமில்லை, சகமார்க்கம் என்பது பக்தி மார்க்கத்தினைவிட கஷ்டமானது ஏனெனில் அந்நிலை உலகத்தோடு ஒட்டியும், ஒட்டாமலும் கத்திமேல் உட்கார்ந்து சாதனை புரிவது போல், ஏனனெனின் ஆமை எப்படி புலன்களை நினைத்த மாத்திரத்தில் தன் அவயங்களை உள்ளடக்கி கொள்கிறதோ அதுபோல் புலன்களின் ஆசைகள் நிஷ்காமியம் செய்யக் கூடிய நிலைதான் ப்ரத்தியாகாரம், சைவ சமய குருமார்களில் சுந்தரரர் இரு மனைவியர்கள் இருந்தும் இந்த மார்க்கத்தை அனுஷ்டிக்கிறார் என்றால் அவரின் திண்மை என்னவென்பது? தன்னிலைக்கு கட்டுபட்டு கொண்டுவருபவனுக்கு கைவல்யம் ஆகாதது எதுவுமில்லை, எனவே ஐம்பொறிகளின் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம், என்ற ஐந்தினைதத்துவங்களால் ஒடுக்க வேண்டும், என்று ஒளவை பராட்டியாரும் கூறுகிறார்,
நினைப்பு மறுப்பு நெடும் பசியும் மற்றால்
அனைத்துலகும் வீடாமது - ஒளவை குறள்
தேகத்ததின் கண்ணுண்டாகும் சங்கல்பமும் யாவற்றையும் அறிய வொட்டாது மறைத்திருக்க கூடியது, பசியும் ஒழித்த விடத்த எல்லா உலகுக்கும் தேகமானது உறைவிடமாகும்,
நினைப்பு: சங்கற்ப பலத்ததினால் எண்ணிய கருமத்தை முடிக்கலாம்
ஞானத்தினால் : சங்கற்ப நாசத்தால் மனம் வலவையடையும் பிந்து பலம்படும் ஞான கர்மத்துக்கு உதவி செய்யும்
மறப்பு: மனம் வாக்கு காயங்களாலுண்டாகும், உழைப்புக்கு ஆறுதல் செய்வதில் பேர்பெற்றது.
ஞானத்தினால் மறப்பாற்றால்தான் 14 உலகங்களையும் தன்னையுமறியலாம்,
பசி : பசியானது உணவு சுவை உட்கொள்ளுவதற்கு சமிக்ஞையாக விருப்பத்தோடு உண்ட உணவை ஜீரணித்து அதை பக்குவம் செய்து சுக்கிலம், நாதம், மலமாக பிரிக்கும் பசியின்மை நேரிட்டால் மேற்சொன்னவைகளுக்கு எதிரிடையை உண்டாக்கும்,
ஞானத்தினால் பசி யொழிந்தால் அமுத தன்மை உண்டாகிறது, பலம் தேகபலம் உண்டாகிறது, பஞ்சேந்திரயங்களை அகமுக விவகாரத்தில் செலுத்தும் சூட்சும தத்துவங்களுக்கும் ஸ்தூல தத்துவங்களக்கும் பலத்தை கொடுக்கும் அமிர்த ஊற்று சுரக்கும்
எனவே இறவாமல் வாழும் வழி ஜீவ அமிர்தத்தை பருகுவதே, அந்த அமிர்தம் நம் உடலில் பெருக்கி பசிதாகம் கால ம்ருத்யு ( பற்றாததும் ) என்றும் சிரஞ்சீவியாக வாழும் வழியினை நம் சங்கற்ப பலத்தால் பெற வேண்டும் நாம் இச்சிக்கப்படும் பொருளுடையது ஆனது காமியதவம் அப்படி இச்சிக்கப்படாத விரும்பும் தவம் நிஷ்காமமிய தவம் எனப்படும், காமிய தவம், சித்தியும், நிஷ்காமிய தவம் முத்தியும் கொடுக்கும், வைராக்கியம் என்ற மனேசக்தி பெருகினால் ஆத்ம சாதனையால் வெற்றியடைய முடியும்,
ஆசை அடக்கி ஐம்புலங்களை இழுத்து பிடித்தால் அடங்காத குதிரைகளான புலன்களை கடிவாளம் போட்டு இழுத்து பிடித்து சாதனை புரியலாம், வெளி விவகாரத்தில் இந்திரியங்களை பலத்காரமாக உள்முகப்டுத்துதல் ப்ரத்தியாகாரம், எதிலும் பலனை எதிர்பார்க்காமல் கரும பலனை அனுஷ்சித்து ப்ரத்தியாகாரம், எதை பார்த்தாலுமு அதையெல்லாம் ஆத்மா என பாவிப்பது ப்ரத்தியாகாரம்,
எனவே ஆசைஅடக்கி ஐம்புலங்களையும் வென்று, மனத்தினை கட்டுப்டுத்தி சும்மா இருந்து சுகம் பெறுவதே தூங்காமல் தூங்கும் நிலை,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
உடம்பிலுள்ள எதிர்மறை சக்திகளை ஆத்ம சக்தியில் அடக்கி ஒடுக்கி உடன்பாட்டு சக்திகளை அபிவிருத்தி செய்து தன் அறிவைக் கொண்டு சமனப்படுத்தி ஒளியை அதாவது ஜோதியை காண்பதே மெய்யறிவின் சாதனையாகும், அஷ்டாங்க யோகத்தின் ஐந்தாவது நிலை " ப்ரத்தியாகாரம்" என்ற சாதனையின் விளக்கத்தையும் அறிய வேண்டும், தன்மனதினை ஒன்று கூட்டவோ, பிரிக்கவோ சக்தி பெற்றவன் தான் ப்ரத்தியாகாரம் எனும் கட்டுப்பாட்டினை அடைய முடியும், இந்த பலன்களை ஆசையுடைய பொருள்களை நிதர்ஸனம் செய்தும், புலன்களை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் பயிற்சியாகும், இதனையே திருவள்ளுவர்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்திர்
ஒழுக்கம் நெறி நின்றார் நீடுவாழ்வார் - என்கிறார்
ஐம்புலங்களை அடக்கி ஒழுக்க நெறி நிற்பவர் நீண்டகாலம் தன்மையர் என்கிறார், இன்னும் ஒருபடி மேல் சென்று பத்திரகரியார் ஆங்காரம் உள்ளக்கி ஐம்புலங்களை சுட்டருத்து தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்று புலம்புகிறார். எனவே தூங்காமல் தூங்கி சுகம் பெற தன் இச்சையை இச்சைப்படி விடாது கட்டுக்குள் கொண்டுவரும் சாதனைதான் ப்ரத்தியாகாரம் என்பது, இப்படி ஆற்றல் ஒன்றுபடுத்தி சாதனை புரிந்தால் எல்லாமே கட்டுக்குள் அடங்கும்.
உடல், உள்ளம், அறிவு இம்மூன்றம்ஒன்றோடொன்று ஒன்றி நின்றால் சாதனையில் வெற்றி பெறமுடியும், இந்திரியங்களையும் பல விஷயங்களிலிருந்தும் விலகி ஆண்டவனிடம் திருப்ப வேண்டும், அப்பர் தேவராத்தில் தலையே நீ வணங்காய், கண்களே இறைவனை காண்க என்றெல்லாம் பாடியிருப்பதும் உடல் உறுப்புகளை பரமேஸ்வரன் பால் ஈடுபடுத்தும் பிரத்தியாகாரமே, இதனால் விஷப்பற்று அறவே நீங்கும், சிவஞான சித்தர் இலக்கண விளக்க பரம்பரை ஸ்ரீ சிதம்பரநாத தேசிகர் உரையில் பின்கண்ட பாடல் அதை விளக்கிறது.
1, சகமார்ககம் புலனொடுங்கி
2,தத்துவ வொளி இரண்டு சலப்பற்று
3,முச்சதுர மூலாதாரங்கள் அகமார்க்க மறிந்து
4,அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்து அனைந்து போய் மேலேற
5,அலர்மதி மண்டலத்தின் முகமார்க்க அமுதுண்டு
6, அலமுட்டத் தேக்கி
7, முழுச் சோதி நினைத்திருந்து
8,தன்முதலாக வினைகளுக்கு
9, மார்க்க அஷ்டாங்கயோக முற்றும்
10, உழத்தலுந்தவர் சிவன் தன் உருவத்தை பெறுவர்,
என்றபடி சகமார்க்கம் புலனொடுக்கம் சாதனையால் நாம் செய்யமுடியாதது எதுவுமில்லை, சகமார்க்கம் என்பது பக்தி மார்க்கத்தினைவிட கஷ்டமானது ஏனெனில் அந்நிலை உலகத்தோடு ஒட்டியும், ஒட்டாமலும் கத்திமேல் உட்கார்ந்து சாதனை புரிவது போல், ஏனனெனின் ஆமை எப்படி புலன்களை நினைத்த மாத்திரத்தில் தன் அவயங்களை உள்ளடக்கி கொள்கிறதோ அதுபோல் புலன்களின் ஆசைகள் நிஷ்காமியம் செய்யக் கூடிய நிலைதான் ப்ரத்தியாகாரம், சைவ சமய குருமார்களில் சுந்தரரர் இரு மனைவியர்கள் இருந்தும் இந்த மார்க்கத்தை அனுஷ்டிக்கிறார் என்றால் அவரின் திண்மை என்னவென்பது? தன்னிலைக்கு கட்டுபட்டு கொண்டுவருபவனுக்கு கைவல்யம் ஆகாதது எதுவுமில்லை, எனவே ஐம்பொறிகளின் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம், என்ற ஐந்தினைதத்துவங்களால் ஒடுக்க வேண்டும், என்று ஒளவை பராட்டியாரும் கூறுகிறார்,
நினைப்பு மறுப்பு நெடும் பசியும் மற்றால்
அனைத்துலகும் வீடாமது - ஒளவை குறள்
தேகத்ததின் கண்ணுண்டாகும் சங்கல்பமும் யாவற்றையும் அறிய வொட்டாது மறைத்திருக்க கூடியது, பசியும் ஒழித்த விடத்த எல்லா உலகுக்கும் தேகமானது உறைவிடமாகும்,
நினைப்பு: சங்கற்ப பலத்ததினால் எண்ணிய கருமத்தை முடிக்கலாம்
ஞானத்தினால் : சங்கற்ப நாசத்தால் மனம் வலவையடையும் பிந்து பலம்படும் ஞான கர்மத்துக்கு உதவி செய்யும்
மறப்பு: மனம் வாக்கு காயங்களாலுண்டாகும், உழைப்புக்கு ஆறுதல் செய்வதில் பேர்பெற்றது.
ஞானத்தினால் மறப்பாற்றால்தான் 14 உலகங்களையும் தன்னையுமறியலாம்,
பசி : பசியானது உணவு சுவை உட்கொள்ளுவதற்கு சமிக்ஞையாக விருப்பத்தோடு உண்ட உணவை ஜீரணித்து அதை பக்குவம் செய்து சுக்கிலம், நாதம், மலமாக பிரிக்கும் பசியின்மை நேரிட்டால் மேற்சொன்னவைகளுக்கு எதிரிடையை உண்டாக்கும்,
ஞானத்தினால் பசி யொழிந்தால் அமுத தன்மை உண்டாகிறது, பலம் தேகபலம் உண்டாகிறது, பஞ்சேந்திரயங்களை அகமுக விவகாரத்தில் செலுத்தும் சூட்சும தத்துவங்களுக்கும் ஸ்தூல தத்துவங்களக்கும் பலத்தை கொடுக்கும் அமிர்த ஊற்று சுரக்கும்
எனவே இறவாமல் வாழும் வழி ஜீவ அமிர்தத்தை பருகுவதே, அந்த அமிர்தம் நம் உடலில் பெருக்கி பசிதாகம் கால ம்ருத்யு ( பற்றாததும் ) என்றும் சிரஞ்சீவியாக வாழும் வழியினை நம் சங்கற்ப பலத்தால் பெற வேண்டும் நாம் இச்சிக்கப்படும் பொருளுடையது ஆனது காமியதவம் அப்படி இச்சிக்கப்படாத விரும்பும் தவம் நிஷ்காமமிய தவம் எனப்படும், காமிய தவம், சித்தியும், நிஷ்காமிய தவம் முத்தியும் கொடுக்கும், வைராக்கியம் என்ற மனேசக்தி பெருகினால் ஆத்ம சாதனையால் வெற்றியடைய முடியும்,
ஆசை அடக்கி ஐம்புலங்களை இழுத்து பிடித்தால் அடங்காத குதிரைகளான புலன்களை கடிவாளம் போட்டு இழுத்து பிடித்து சாதனை புரியலாம், வெளி விவகாரத்தில் இந்திரியங்களை பலத்காரமாக உள்முகப்டுத்துதல் ப்ரத்தியாகாரம், எதிலும் பலனை எதிர்பார்க்காமல் கரும பலனை அனுஷ்சித்து ப்ரத்தியாகாரம், எதை பார்த்தாலுமு அதையெல்லாம் ஆத்மா என பாவிப்பது ப்ரத்தியாகாரம்,
எனவே ஆசைஅடக்கி ஐம்புலங்களையும் வென்று, மனத்தினை கட்டுப்டுத்தி சும்மா இருந்து சுகம் பெறுவதே தூங்காமல் தூங்கும் நிலை,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
நம் உடம்பிலுள்ள எதிர்மறை சக்திகளை ஆத்ம சக்தியில் அடக்கி ஒடுக்கி உடன்பாட்டு சக்திகளை அபிவிருத்தி செய்து தன் அறிவைக் கொண்டு சமனப்படுத்தி ஒளியை அதாவது ஜோதியை காண்பதே மெய்யறிவின் சாதனையாகும், அஷ்டாங்க யோகத்தின் ஐந்தாவது நிலை " ப்ரத்தியாகாரம்" என்ற சாதனையின் விளக்கத்தையும் அறிய வேண்டும், தன்மனதினை ஒன்று கூட்டவோ, பிரிக்கவோ சக்தி பெற்றவன் தான் ப்ரத்தியாகாரம் எனும் கட்டுப்பாட்டினை அடைய முடியும், இந்த பலன்களை ஆசையுடைய பொருள்களை நிதர்ஸனம் செய்தும், புலன்களை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் பயிற்சியாகும், இதனையே திருவள்ளுவர்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்திர்
ஒழுக்கம் நெறி நின்றார் நீடுவாழ்வார் - என்கிறார்
ஐம்புலங்களை அடக்கி ஒழுக்க நெறி நிற்பவர் நீண்டகாலம் தன்மையர் என்கிறார், இன்னும் ஒருபடி மேல் சென்று பத்திரகரியார் ஆங்காரம் உள்ளக்கி ஐம்புலங்களை சுட்டருத்து தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்று புலம்புகிறார். எனவே தூங்காமல் தூங்கி சுகம் பெற தன் இச்சையை இச்சைப்படி விடாது கட்டுக்குள் கொண்டுவரும் சாதனைதான் ப்ரத்தியாகாரம் என்பது, இப்படி ஆற்றல் ஒன்றுபடுத்தி சாதனை புரிந்தால் எல்லாமே கட்டுக்குள் அடங்கும்.
உடல், உள்ளம், அறிவு இம்மூன்றம்ஒன்றோடொன்று ஒன்றி நின்றால் சாதனையில் வெற்றி பெறமுடியும், இந்திரியங்களையும் பல விஷயங்களிலிருந்தும் விலகி ஆண்டவனிடம் திருப்ப வேண்டும், அப்பர் தேவராத்தில் தலையே நீ வணங்காய், கண்களே இறைவனை காண்க என்றெல்லாம் பாடியிருப்பதும் உடல் உறுப்புகளை பரமேஸ்வரன் பால் ஈடுபடுத்தும் பிரத்தியாகாரமே, இதனால் விஷப்பற்று அறவே நீங்கும், சிவஞான சித்தர் இலக்கண விளக்க பரம்பரை ஸ்ரீ சிதம்பரநாத தேசிகர் உரையில் பின்கண்ட பாடல் அதை விளக்கிறது.
1, சகமார்ககம் புலனொடுங்கி
2,தத்துவ வொளி இரண்டு சலப்பற்று
3,முச்சதுர மூலாதாரங்கள் அகமார்க்க மறிந்து
4,அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்து அனைந்து போய் மேலேற
5,அலர்மதி மண்டலத்தின் முகமார்க்க அமுதுண்டு
6, அலமுட்டத் தேக்கி
7, முழுச் சோதி நினைத்திருந்து
8,தன்முதலாக வினைகளுக்கு
9, மார்க்க அஷ்டாங்கயோக முற்றும்
10, உழத்தலுந்தவர் சிவன் தன் உருவத்தை பெறுவர்,
என்றபடி சகமார்க்கம் புலனொடுக்கம் சாதனையால் நாம் செய்யமுடியாதது எதுவுமில்லை, சகமார்க்கம் என்பது பக்தி மார்க்கத்தினைவிட கஷ்டமானது ஏனெனில் அந்நிலை உலகத்தோடு ஒட்டியும், ஒட்டாமலும் கத்திமேல் உட்கார்ந்து சாதனை புரிவது போல், ஏனனெனின் ஆமை எப்படி புலன்களை நினைத்த மாத்திரத்தில் தன் அவயங்களை உள்ளடக்கி கொள்கிறதோ அதுபோல் புலன்களின் ஆசைகள் நிஷ்காமியம் செய்யக் கூடிய நிலைதான் ப்ரத்தியாகாரம், சைவ சமய குருமார்களில் சுந்தரரர் இரு மனைவியர்கள் இருந்தும் இந்த மார்க்கத்தை அனுஷ்டிக்கிறார் என்றால் அவரின் திண்மை என்னவென்பது? தன்னிலைக்கு கட்டுபட்டு கொண்டுவருபவனுக்கு கைவல்யம் ஆகாதது எதுவுமில்லை, எனவே ஐம்பொறிகளின் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம், என்ற ஐந்தினைதத்துவங்களால் ஒடுக்க வேண்டும், என்று ஒளவை பராட்டியாரும் கூறுகிறார்,
நினைப்பு மறுப்பு நெடும் பசியும் மற்றால்
அனைத்துலகும் வீடாமது - ஒளவை குறள்
தேகத்ததின் கண்ணுண்டாகும் சங்கல்பமும் யாவற்றையும் அறிய வொட்டாது மறைத்திருக்க கூடியது, பசியும் ஒழித்த விடத்த எல்லா உலகுக்கும் தேகமானது உறைவிடமாகும்,
நினைப்பு: சங்கற்ப பலத்ததினால் எண்ணிய கருமத்தை முடிக்கலாம்
ஞானத்தினால் : சங்கற்ப நாசத்தால் மனம் வலவையடையும் பிந்து பலம்படும் ஞான கர்மத்துக்கு உதவி செய்யும்
மறப்பு: மனம் வாக்கு காயங்களாலுண்டாகும், உழைப்புக்கு ஆறுதல் செய்வதில் பேர்பெற்றது.
ஞானத்தினால் மறப்பாற்றால்தான் 14 உலகங்களையும் தன்னையுமறியலாம்,
பசி : பசியானது உணவு சுவை உட்கொள்ளுவதற்கு சமிக்ஞையாக விருப்பத்தோடு உண்ட உணவை ஜீரணித்து அதை பக்குவம் செய்து சுக்கிலம், நாதம், மலமாக பிரிக்கும் பசியின்மை நேரிட்டால் மேற்சொன்னவைகளுக்கு எதிரிடையை உண்டாக்கும்,
ஞானத்தினால் பசி யொழிந்தால் அமுத தன்மை உண்டாகிறது, பலம் தேகபலம் உண்டாகிறது, பஞ்சேந்திரயங்களை அகமுக விவகாரத்தில் செலுத்தும் சூட்சும தத்துவங்களுக்கும் ஸ்தூல தத்துவங்களக்கும் பலத்தை கொடுக்கும் அமிர்த ஊற்று சுரக்கும்
எனவே இறவாமல் வாழும் வழி ஜீவ அமிர்தத்தை பருகுவதே, அந்த அமிர்தம் நம் உடலில் பெருக்கி பசிதாகம் கால ம்ருத்யு ( பற்றாததும் ) என்றும் சிரஞ்சீவியாக வாழும் வழியினை நம் சங்கற்ப பலத்தால் பெற வேண்டும் நாம் இச்சிக்கப்படும் பொருளுடையது ஆனது காமியதவம் அப்படி இச்சிக்கப்படாத விரும்பும் தவம் நிஷ்காமமிய தவம் எனப்படும், காமிய தவம், சித்தியும், நிஷ்காமிய தவம் முத்தியும் கொடுக்கும், வைராக்கியம் என்ற மனேசக்தி பெருகினால் ஆத்ம சாதனையால் வெற்றியடைய முடியும்,
ஆசை அடக்கி ஐம்புலங்களை இழுத்து பிடித்தால் அடங்காத குதிரைகளான புலன்களை கடிவாளம் போட்டு இழுத்து பிடித்து சாதனை புரியலாம், வெளி விவகாரத்தில் இந்திரியங்களை பலத்காரமாக உள்முகப்டுத்துதல் ப்ரத்தியாகாரம், எதிலும் பலனை எதிர்பார்க்காமல் கரும பலனை அனுஷ்சித்து ப்ரத்தியாகாரம், எதை பார்த்தாலுமு அதையெல்லாம் ஆத்மா என பாவிப்பது ப்ரத்தியாகாரம்,
எனவே ஆசைஅடக்கி ஐம்புலங்களையும் வென்று, மனத்தினை கட்டுப்டுத்தி சும்மா இருந்து சுகம் பெறுவதே தூங்காமல் தூங்கும் நிலை,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எவ்வாறு?
நம் உடம்பிலுள்ள எதிர்மறை சக்திகளை ஆத்ம சக்தியில் அடக்கி ஒடுக்கி உடன்பாட்டு சக்திகளை அபிவிருத்தி செய்து தன் அறிவைக் கொண்டு சமனப்படுத்தி ஒளியை அதாவது ஜோதியை காண்பதே மெய்யறிவின் சாதனையாகும், அஷ்டாங்க யோகத்தின் ஐந்தாவது நிலை " ப்ரத்தியாகாரம்" என்ற சாதனையின் விளக்கத்தையும் அறிய வேண்டும், தன்மனதினை ஒன்று கூட்டவோ, பிரிக்கவோ சக்தி பெற்றவன் தான் ப்ரத்தியாகாரம் எனும் கட்டுப்பாட்டினை அடைய முடியும், இந்த பலன்களை ஆசையுடைய பொருள்களை நிதர்ஸனம் செய்தும், புலன்களை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் பயிற்சியாகும், இதனையே திருவள்ளுவர்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்திர்
ஒழுக்கம் நெறி நின்றார் நீடுவாழ்வார் - என்கிறார்
ஐம்புலங்களை அடக்கி ஒழுக்க நெறி நிற்பவர் நீண்டகாலம் தன்மையர் என்கிறார், இன்னும் ஒருபடி மேல் சென்று பத்திரகரியார் ஆங்காரம் உள்ளக்கி ஐம்புலங்களை சுட்டருத்து தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்று புலம்புகிறார். எனவே தூங்காமல் தூங்கி சுகம் பெற தன் இச்சையை இச்சைப்படி விடாது கட்டுக்குள் கொண்டுவரும் சாதனைதான் ப்ரத்தியாகாரம் என்பது, இப்படி ஆற்றல் ஒன்றுபடுத்தி சாதனை புரிந்தால் எல்லாமே கட்டுக்குள் அடங்கும்.
உடல், உள்ளம், அறிவு இம்மூன்றம்ஒன்றோடொன்று ஒன்றி நின்றால் சாதனையில் வெற்றி பெறமுடியும், இந்திரியங்களையும் பல விஷயங்களிலிருந்தும் விலகி ஆண்டவனிடம் திருப்ப வேண்டும், அப்பர் தேவராத்தில் தலையே நீ வணங்காய், கண்களே இறைவனை காண்க என்றெல்லாம் பாடியிருப்பதும் உடல் உறுப்புகளை பரமேஸ்வரன் பால் ஈடுபடுத்தும் பிரத்தியாகாரமே, இதனால் விஷப்பற்று அறவே நீங்கும், சிவஞான சித்தர் இலக்கண விளக்க பரம்பரை ஸ்ரீ சிதம்பரநாத தேசிகர் உரையில் பின்கண்ட பாடல் அதை விளக்கிறது.
1, சகமார்ககம் புலனொடுங்கி
2,தத்துவ வொளி இரண்டு சலப்பற்று
3,முச்சதுர மூலாதாரங்கள் அகமார்க்க மறிந்து
4,அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்து அனைந்து போய் மேலேற
5,அலர்மதி மண்டலத்தின் முகமார்க்க அமுதுண்டு
6, அலமுட்டத் தேக்கி
7, முழுச் சோதி நினைத்திருந்து
8,தன்முதலாக வினைகளுக்கு
9, மார்க்க அஷ்டாங்கயோக முற்றும்
10, உழத்தலுந்தவர் சிவன் தன் உருவத்தை பெறுவர்,
என்றபடி சகமார்க்கம் புலனொடுக்கம் சாதனையால் நாம் செய்யமுடியாதது எதுவுமில்லை, சகமார்க்கம் என்பது பக்தி மார்க்கத்தினைவிட கஷ்டமானது ஏனெனில் அந்நிலை உலகத்தோடு ஒட்டியும், ஒட்டாமலும் கத்திமேல் உட்கார்ந்து சாதனை புரிவது போல், ஏனனெனின் ஆமை எப்படி புலன்களை நினைத்த மாத்திரத்தில் தன் அவயங்களை உள்ளடக்கி கொள்கிறதோ அதுபோல் புலன்களின் ஆசைகள் நிஷ்காமியம் செய்யக் கூடிய நிலைதான் ப்ரத்தியாகாரம், சைவ சமய குருமார்களில் சுந்தரரர் இரு மனைவியர்கள் இருந்தும் இந்த மார்க்கத்தை அனுஷ்டிக்கிறார் என்றால் அவரின் திண்மை என்னவென்பது? தன்னிலைக்கு கட்டுபட்டு கொண்டுவருபவனுக்கு கைவல்யம் ஆகாதது எதுவுமில்லை, எனவே ஐம்பொறிகளின் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம், என்ற ஐந்தினைதத்துவங்களால் ஒடுக்க வேண்டும், என்று ஒளவை பராட்டியாரும் கூறுகிறார்,
நினைப்பு மறுப்பு நெடும் பசியும் மற்றால்
அனைத்துலகும் வீடாமது - ஒளவை குறள்
தேகத்ததின் கண்ணுண்டாகும் சங்கல்பமும் யாவற்றையும் அறிய வொட்டாது மறைத்திருக்க கூடியது, பசியும் ஒழித்த விடத்த எல்லா உலகுக்கும் தேகமானது உறைவிடமாகும்,
நினைப்பு: சங்கற்ப பலத்ததினால் எண்ணிய கருமத்தை முடிக்கலாம்
ஞானத்தினால் : சங்கற்ப நாசத்தால் மனம் வலவையடையும் பிந்து பலம்படும் ஞான கர்மத்துக்கு உதவி செய்யும்
மறப்பு: மனம் வாக்கு காயங்களாலுண்டாகும், உழைப்புக்கு ஆறுதல் செய்வதில் பேர்பெற்றது.
ஞானத்தினால் மறப்பாற்றால்தான் 14 உலகங்களையும் தன்னையுமறியலாம்,
பசி : பசியானது உணவு சுவை உட்கொள்ளுவதற்கு சமிக்ஞையாக விருப்பத்தோடு உண்ட உணவை ஜீரணித்து அதை பக்குவம் செய்து சுக்கிலம், நாதம், மலமாக பிரிக்கும் பசியின்மை நேரிட்டால் மேற்சொன்னவைகளுக்கு எதிரிடையை உண்டாக்கும்,
ஞானத்தினால் பசி யொழிந்தால் அமுத தன்மை உண்டாகிறது, பலம் தேகபலம் உண்டாகிறது, பஞ்சேந்திரயங்களை அகமுக விவகாரத்தில் செலுத்தும் சூட்சும தத்துவங்களுக்கும் ஸ்தூல தத்துவங்களக்கும் பலத்தை கொடுக்கும் அமிர்த ஊற்று சுரக்கும்
எனவே இறவாமல் வாழும் வழி ஜீவ அமிர்தத்தை பருகுவதே, அந்த அமிர்தம் நம் உடலில் பெருக்கி பசிதாகம் கால ம்ருத்யு ( பற்றாததும் ) என்றும் சிரஞ்சீவியாக வாழும் வழியினை நம் சங்கற்ப பலத்தால் பெற வேண்டும் நாம் இச்சிக்கப்படும் பொருளுடையது ஆனது காமியதவம் அப்படி இச்சிக்கப்படாத விரும்பும் தவம் நிஷ்காமமிய தவம் எனப்படும், காமிய தவம், சித்தியும், நிஷ்காமிய தவம் முத்தியும் கொடுக்கும், வைராக்கியம் என்ற மனேசக்தி பெருகினால் ஆத்ம சாதனையால் வெற்றியடைய முடியும்,
ஆசை அடக்கி ஐம்புலங்களை இழுத்து பிடித்தால் அடங்காத குதிரைகளான புலன்களை கடிவாளம் போட்டு இழுத்து பிடித்து சாதனை புரியலாம், வெளி விவகாரத்தில் இந்திரியங்களை பலத்காரமாக உள்முகப்டுத்துதல் ப்ரத்தியாகாரம், எதிலும் பலனை எதிர்பார்க்காமல் கரும பலனை அனுஷ்சித்து ப்ரத்தியாகாரம், எதை பார்த்தாலுமு அதையெல்லாம் ஆத்மா என பாவிப்பது ப்ரத்தியாகாரம்,
எனவே ஆசைஅடக்கி ஐம்புலங்களையும் வென்று, மனத்தினை கட்டுப்டுத்தி சும்மா இருந்து சுகம் பெறுவதே தூங்காமல் தூங்கும் நிலை,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
உடம்பிலுள்ள எதிர்மறை சக்திகளை ஆத்ம சக்தியில் அடக்கி ஒடுக்கி உடன்பாட்டு சக்திகளை அபிவிருத்தி செய்து தன் அறிவைக் கொண்டு சமனப்படுத்தி ஒளியை அதாவது ஜோதியை காண்பதே மெய்யறிவின் சாதனையாகும், அஷ்டாங்க யோகத்தின் ஐந்தாவது நிலை " ப்ரத்தியாகாரம்" என்ற சாதனையின் விளக்கத்தையும் அறிய வேண்டும், தன்மனதினை ஒன்று கூட்டவோ, பிரிக்கவோ சக்தி பெற்றவன் தான் ப்ரத்தியாகாரம் எனும் கட்டுப்பாட்டினை அடைய முடியும், இந்த பலன்களை ஆசையுடைய பொருள்களை நிதர்ஸனம் செய்தும், புலன்களை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் பயிற்சியாகும், இதனையே திருவள்ளுவர்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்திர்
ஒழுக்கம் நெறி நின்றார் நீடுவாழ்வார் - என்கிறார்
ஐம்புலங்களை அடக்கி ஒழுக்க நெறி நிற்பவர் நீண்டகாலம் தன்மையர் என்கிறார், இன்னும் ஒருபடி மேல் சென்று பத்திரகரியார் ஆங்காரம் உள்ளக்கி ஐம்புலங்களை சுட்டருத்து தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்று புலம்புகிறார். எனவே தூங்காமல் தூங்கி சுகம் பெற தன் இச்சையை இச்சைப்படி விடாது கட்டுக்குள் கொண்டுவரும் சாதனைதான் ப்ரத்தியாகாரம் என்பது, இப்படி ஆற்றல் ஒன்றுபடுத்தி சாதனை புரிந்தால் எல்லாமே கட்டுக்குள் அடங்கும்.
உடல், உள்ளம், அறிவு இம்மூன்றம்ஒன்றோடொன்று ஒன்றி நின்றால் சாதனையில் வெற்றி பெறமுடியும், இந்திரியங்களையும் பல விஷயங்களிலிருந்தும் விலகி ஆண்டவனிடம் திருப்ப வேண்டும், அப்பர் தேவராத்தில் தலையே நீ வணங்காய், கண்களே இறைவனை காண்க என்றெல்லாம் பாடியிருப்பதும் உடல் உறுப்புகளை பரமேஸ்வரன் பால் ஈடுபடுத்தும் பிரத்தியாகாரமே, இதனால் விஷப்பற்று அறவே நீங்கும், சிவஞான சித்தர் இலக்கண விளக்க பரம்பரை ஸ்ரீ சிதம்பரநாத தேசிகர் உரையில் பின்கண்ட பாடல் அதை விளக்கிறது.
1, சகமார்ககம் புலனொடுங்கி
2,தத்துவ வொளி இரண்டு சலப்பற்று
3,முச்சதுர மூலாதாரங்கள் அகமார்க்க மறிந்து
4,அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்து அனைந்து போய் மேலேற
5,அலர்மதி மண்டலத்தின் முகமார்க்க அமுதுண்டு
6, அலமுட்டத் தேக்கி
7, முழுச் சோதி நினைத்திருந்து
8,தன்முதலாக வினைகளுக்கு
9, மார்க்க அஷ்டாங்கயோக முற்றும்
10, உழத்தலுந்தவர் சிவன் தன் உருவத்தை பெறுவர்,
என்றபடி சகமார்க்கம் புலனொடுக்கம் சாதனையால் நாம் செய்யமுடியாதது எதுவுமில்லை, சகமார்க்கம் என்பது பக்தி மார்க்கத்தினைவிட கஷ்டமானது ஏனெனில் அந்நிலை உலகத்தோடு ஒட்டியும், ஒட்டாமலும் கத்திமேல் உட்கார்ந்து சாதனை புரிவது போல், ஏனனெனின் ஆமை எப்படி புலன்களை நினைத்த மாத்திரத்தில் தன் அவயங்களை உள்ளடக்கி கொள்கிறதோ அதுபோல் புலன்களின் ஆசைகள் நிஷ்காமியம் செய்யக் கூடிய நிலைதான் ப்ரத்தியாகாரம், சைவ சமய குருமார்களில் சுந்தரரர் இரு மனைவியர்கள் இருந்தும் இந்த மார்க்கத்தை அனுஷ்டிக்கிறார் என்றால் அவரின் திண்மை என்னவென்பது? தன்னிலைக்கு கட்டுபட்டு கொண்டுவருபவனுக்கு கைவல்யம் ஆகாதது எதுவுமில்லை, எனவே ஐம்பொறிகளின் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம், என்ற ஐந்தினைதத்துவங்களால் ஒடுக்க வேண்டும், என்று ஒளவை பராட்டியாரும் கூறுகிறார்,
நினைப்பு மறுப்பு நெடும் பசியும் மற்றால்
அனைத்துலகும் வீடாமது - ஒளவை குறள்
தேகத்ததின் கண்ணுண்டாகும் சங்கல்பமும் யாவற்றையும் அறிய வொட்டாது மறைத்திருக்க கூடியது, பசியும் ஒழித்த விடத்த எல்லா உலகுக்கும் தேகமானது உறைவிடமாகும்,
நினைப்பு: சங்கற்ப பலத்ததினால் எண்ணிய கருமத்தை முடிக்கலாம்
ஞானத்தினால் : சங்கற்ப நாசத்தால் மனம் வலவையடையும் பிந்து பலம்படும் ஞான கர்மத்துக்கு உதவி செய்யும்
மறப்பு: மனம் வாக்கு காயங்களாலுண்டாகும், உழைப்புக்கு ஆறுதல் செய்வதில் பேர்பெற்றது.
ஞானத்தினால் மறப்பாற்றால்தான் 14 உலகங்களையும் தன்னையுமறியலாம்,
பசி : பசியானது உணவு சுவை உட்கொள்ளுவதற்கு சமிக்ஞையாக விருப்பத்தோடு உண்ட உணவை ஜீரணித்து அதை பக்குவம் செய்து சுக்கிலம், நாதம், மலமாக பிரிக்கும் பசியின்மை நேரிட்டால் மேற்சொன்னவைகளுக்கு எதிரிடையை உண்டாக்கும்,
ஞானத்தினால் பசி யொழிந்தால் அமுத தன்மை உண்டாகிறது, பலம் தேகபலம் உண்டாகிறது, பஞ்சேந்திரயங்களை அகமுக விவகாரத்தில் செலுத்தும் சூட்சும தத்துவங்களுக்கும் ஸ்தூல தத்துவங்களக்கும் பலத்தை கொடுக்கும் அமிர்த ஊற்று சுரக்கும்
எனவே இறவாமல் வாழும் வழி ஜீவ அமிர்தத்தை பருகுவதே, அந்த அமிர்தம் நம் உடலில் பெருக்கி பசிதாகம் கால ம்ருத்யு ( பற்றாததும் ) என்றும் சிரஞ்சீவியாக வாழும் வழியினை நம் சங்கற்ப பலத்தால் பெற வேண்டும் நாம் இச்சிக்கப்படும் பொருளுடையது ஆனது காமியதவம் அப்படி இச்சிக்கப்படாத விரும்பும் தவம் நிஷ்காமமிய தவம் எனப்படும், காமிய தவம், சித்தியும், நிஷ்காமிய தவம் முத்தியும் கொடுக்கும், வைராக்கியம் என்ற மனேசக்தி பெருகினால் ஆத்ம சாதனையால் வெற்றியடைய முடியும்,
ஆசை அடக்கி ஐம்புலங்களை இழுத்து பிடித்தால் அடங்காத குதிரைகளான புலன்களை கடிவாளம் போட்டு இழுத்து பிடித்து சாதனை புரியலாம், வெளி விவகாரத்தில் இந்திரியங்களை பலத்காரமாக உள்முகப்டுத்துதல் ப்ரத்தியாகாரம், எதிலும் பலனை எதிர்பார்க்காமல் கரும பலனை அனுஷ்சித்து ப்ரத்தியாகாரம், எதை பார்த்தாலுமு அதையெல்லாம் ஆத்மா என பாவிப்பது ப்ரத்தியாகாரம்,
எனவே ஆசைஅடக்கி ஐம்புலங்களையும் வென்று, மனத்தினை கட்டுப்டுத்தி சும்மா இருந்து சுகம் பெறுவதே தூங்காமல் தூங்கும் நிலை,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
பஞ்ச பூதங்களால் ஆனது உடம்பு
பஞ்ச பூதங்களால் ஆனது உடம்பு
அசுத்த மாயையிலிருந்து மெய்,வாய்,கண்,மூக்கு,செவி, ஆகிய ஐம்பொறிகளும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலங்களும் வாய், கை, கால், கருவாய்,எருவாய் என்ற ஐந் தொழில் உறுப்புகுளும் உடம்பு என்ற தத்துவத்தில் பிரதிபலிக்கிறது, சித்தமே அனைத்து தத்துவங்களின் தோற்றமாக இருக்கிறது.
உடம்பின் உள்ளே ஓடி ஓடி கலந்துள்ள பரம்பொருளைத் தேடித்தேடி கிடைக்காமல் வாழ்வைத் தொலைத்தவர்கள் பலர். பரம்பொருள் எங்கேயும் இல்லை, உடம்பு என்ற கோவில்தான் உள்ளது, ஐம்புலங்களை வசப்படுத்தினால் பரம்பொருளை நாம் உணரமுடியும்.இதனை திருமந்திரத்தில் திருமூலர்
" உள்ளம் பெருங்கோவில் ஊன்உடம் பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தோர்க்கு சீவன் சிவலிங்ம்
கள்ளப் பலன் ஐந்தும் காள மணிவிளக்கே. " திருமூலர்
நமது மனமே பெரிய கோவில் அக கோவிலின் மூலட்டானம் தசையால் ஆன உடம்பு அன்பர்கள் குறிப்பறிந்து கொடுத்தருளும் இறைவனுக்கு வாயே கோபுர வாசல், நன்கு அறிந்த ஞானிகட்கு ஆன்மாவே சிவலிங்கமாகும், மனத்தை திருட்டு வழியில் இழுத்துச் செல்லும் ஐந்து புலங்களும் அழகிய விளக்காகும்,ஆலய அமைப்பு ஆண்டவன் இருப்பு யாவும் நம் உடலிலேயே உள என்பதாகும், இறைவன் ஆன்மாக்கின் பக்குவம் அறிந்து தேவைகளை கொடுத்து உதவுவதால் வள்ளல் எனப்பட்டான்,
இதேபோல் இன்னும் ஒரு பாடல் மூலம் ஐம்பெரும் பூதங்களால் அமைந்ததே உடம்பு என திருமந்திர பாடல்
" உரம் அடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய தன்முலை மேவியகீழ் அங்கி
கருமுலை மீமிசை கைக்கீழில் காலாம்
விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே."
உடம்பைத் தாங்கும் பாதங்கள் மண் ஆகும், பாதம் முதல் கொப்பூழ் வரை நீர் ஆகும், கொப்பூழிலிருந்து மார்பு வரை பொருந்ததியது தீயாகும், மார்பிலிருந்து தோள் வரை காற்றாகும், கழுத்துக்கு மேல் ஆகாயமாம், உலகம் மண், நீர்,தீ, காற்று, ஆகிய ஐந்து பொருட்களால் ஆனது அதுபோல உடலங்களும் ஐம்பெரும்பூதங்களால் ஆனவை.
மனித உடலை ஞான சூத்திரம் என்ற நூலில் குறிப்பிட்டு இருப்பதைப் பார்ப்போம், மனிதனுடைய முதுகுத்தண்டு மகாமேரு மலை போன்றது,அதன் உச்சி என்பது இரு புருவங்களும் கூடும் இடமான நெற்றி நடுநிலையாகும், நடுநிலைக்கு நேராக உச்சி குழுயையும் உண்ணாக்கையும் இணைத்துக் கொண்டு ஒரு நுண்ணிய துவாரம் இருக்கிறது. அதற்கு பிரம்மரந்திரம் என்று பெயர், அந்த துவாரத்தின் உள்ளே நெற்றியில் இருந்து ஏழு திரைகளுக்கு அப்பால் அமுத கலைகள் நிறைந்தும் பகலும், இரவும் அற்றதும், சத்-சித்-ஆனந்த சிற்சக்தியான சிவலிங்க சொரூபமான ஜீவன் ஜோதியாக ஒளிர்கிறது, மனித இயக்கத்ததிற்கு சீவன் இதுவே. ஆதியும் அந்தமுமாய் விளங்கும் சிவலிங்கம் ஜோதியே இறைவன், நம் உடம்புக்குள் இருப்பதைக் காண முயற்சிக்க வேண்டும், இந்த முயற்சியில் வெற்றி கண்டவர்கள் சித்தர்கள். நெற்றி நடுநிலையில் இறைவனை தாம் தெளிவாக கண்டதாகவும் அதனால் நெற்றியில் திருநீறு குங்குமம், சந்தனம், கஷ்தூரி முதலியவைகளைஇட்டு கொண்டு இறைவனை வழிபடுவதாகவும் சித்தர் தன்வந்திரி ஒரு பாடல் மூலம் கூறியிருக்கிறார். நெற்றியில் திருநீறு குங்குமம், ஏன் இட்டு கொள்ள வேண்டும் என்பது புரிகிறது அல்லவா? சித்தர்களைப்போல ஞானப் பயிற்சியால் உடம்புக்குள்ளே இறைவனைக் கண்டு முத்தி பெறுவோம்,
நாம் நமது குடும்பம் என்பது சந்தோசமானது என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே மரணம் நம்மை ஆட்கொண்டு விடுகிறது, உடல் தரையில் கிடக்கிறது. ஆனால் உயிர் எங்கோ போய் விடுகிறது. வாழ்க்கை நிலையில்லாதது, என்று தினமும் கண்டு கொண்டு இருந்தாலும், வாழ்க்கை மாயை என்பதை உணர மறுக்கிறோம்.
பஞ்சபூதங்களால் உடம்பை நாம்அறிய முயற்சிக்காமல் பரம்பொருளைக் காண வேண்டி எங்கெங்கோ தேடினால் கிடைக்கமா? மனதைத் திறந்து தேடினால் பரம்பொருளைக் காண முடியும், யோகியர்கள் ஜீவாத்மா, பரமாத்மாவிடம் ஐக்கியம் அடைவதை யோகம் என்று கூறுகிறார்கள். யோகத்தை அடைய எட்டு வழிகள் என்றும்கூறி இருக்கிறார்கள். இயமம், ஆசனம், பிராணயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற நிலைகளாகும்.
இயமம்: இயமம் என்பது அகிம்சை, சத்தியம், களவின்மை, பிரம்மச்சரியம், சம்மார்க்கம், தயை, பொறுமை, துணிவுடைமை, மிதமான உணவு,செளசம், என்று பத்து அம்சங்களாக வரையறுக்கப்பட்டு உள்ளது.
நியமம்: நியமம் என்பது தவம், மகிழ்ச்சி, தெய்வ நம்பிக்கை, நாணம், தானம், தேவபூசை, சித்தாந்த சிரவணம், புத்தி, ஜபம், ஹோமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசனம்: ஆசனம் என்பது பத்மாசனம், சுவஸ்திகாசனம், பத்ராசனம், வஜ்ராசனம், வீராசனம் என்று கூறப்பட்டுள்ளது.
பிராணாயமம்: பிராணாயமம் என்பது பிராண வாயுவை கட்டுப்படுத்தி தன் முயற்சியால் இயங்க வைப்பது, அதில் இரண்டு வகை அடிக்கடி வெளியே செல்கிற காற்றை பதினாறு மாத்திரை கால அளவு ஜபத்தியானாதிகளோடு உள்ளே வாங்கி, ஜபத்தியானங்கள் செய்து சகர்ப்பம் என்று கூறப்படுகிறது, ஜபத்தியானங்கள் இல்லாமல் பிராணாயம பயிற்சிகளை பயிலும் போது உடல் வியர்க்குமானால் அதமம் என்றும், நடுங்கினால் மத்திமம் என்றும் தரையை விட்டு எழும்புமானால் உத்தமம் என்றும் கூறப்படுகிறது, அதற்கு விகர்ப்பம் என்று பெயர்,
பிரத்யாஹாரம்: பிரத்யாஹாரம் என்பது உத்தம குணங்கள் நிரம்பப் பெற்று தான் எண்ணிய விருப்பங்களை அடையும் வரையில் இந்திரயங்களை வெளியே செல்லவிடாமல் தடுத்து தன் வசப்படுத்திக் கொள்வதாகும்,
தாரணை: தாரணை என்பது பிராண வாயுவை கால் கட்டை விரல்கள், முழங்கால்கள் தொடைகள் மூலாதாரம், இருதயம் போன்ற இடங்களில் விதிமுறையாக நிறுத்துவது,
தியானம்: தியானம் என்பது இறைவனோடு மனதை லயிக்க செய்து அசைவற்றிருக்கும் நிலையாகும்.
சமாதி: சமாதி என்பது ஜீவாத்மா ஆனவன் பரமாத்மாவில் இருந்து வேறுபட்டவன் அல்ல என்று சமத்துவ ஐக்கிய பாவனை செய்து கொண்டு எப்போதும் இருக்கும் நிலையாகும்,
இவைகளையே அஷ்டாங்க யோக லட்சணம் என்று யோகிகள் கூறுகிறார்கள்,
ஜீவாத்மாக்கள் இறைவனை காண முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள், அவர்களில் ஒரு சிலர் தங்களுடைய ஆத்ம சாதனைகளால் இறைவனைக் கண்டு கொள்கிறார்கள், பூலோகத்தில் அவர்களை சித்தர்கள் என்கிறோம், எட்டு வகையான பெரும் சக்திகள் அஷ்டமா சித்திகள் என்று அழைக்கப்படுகிறது. அவைகளாவன, அனிமா,மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசித்துவம், பிராகாமியம், ஈசத்துவம் என்பன,
அனிமா என்றால் உடலை சுருக்கி சிறிய அணுவைப் போல் மாறுவது,
மகிமா என்பது மேருமலையைப்போல உருவத்தை பெரியதாக்குவது
இலகுமா என்பது உருவத்தின் எடையை காற்றைப்போல் இலேசாக்குவது
கரிமா என்றால் எடையைப் பளுவாக்குவது
பிராப்தி என்றால் எல்லாவற்றையும் ஆளுதல்
வசித்துவம் என்றால் மற்றவர்களை வசப்படுத்தும் தன்மையை பெறுவது
பிராகாமியம் என்றால் ஒரு உடம்பில் இருக்கும் ஜீவன் வேறு உடம்புக்குள் புகுவது (கூடுவிட்டு கூடு பாய்வது)
ஈசத்துவம் விரும்பியதை அடைந்து அனுபவிப்பது
இத்தனை சக்திகளை தமக்குள் கொண்டவர்கள் தங்கள் ஆத்ம சாதனைகளால்அழிவற்ற அமர நிலையை அடைந்தவரகளே சித்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
ஓம் நமச்சிவாயம் - திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
பஞ்ச பூதங்களால் ஆனது உடம்பு
அசுத்த மாயையிலிருந்து மெய்,வாய்,கண்,மூக்கு,செவி, ஆகிய ஐம்பொறிகளும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலங்களும் வாய், கை, கால், கருவாய்,எருவாய் என்ற ஐந் தொழில் உறுப்புகுளும் உடம்பு என்ற தத்துவத்தில் பிரதிபலிக்கிறது, சித்தமே அனைத்து தத்துவங்களின் தோற்றமாக இருக்கிறது.
உடம்பின் உள்ளே ஓடி ஓடி கலந்துள்ள பரம்பொருளைத் தேடித்தேடி கிடைக்காமல் வாழ்வைத் தொலைத்தவர்கள் பலர். பரம்பொருள் எங்கேயும் இல்லை, உடம்பு என்ற கோவில்தான் உள்ளது, ஐம்புலங்களை வசப்படுத்தினால் பரம்பொருளை நாம் உணரமுடியும்.இதனை திருமந்திரத்தில் திருமூலர்
" உள்ளம் பெருங்கோவில் ஊன்உடம் பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தோர்க்கு சீவன் சிவலிங்ம்
கள்ளப் பலன் ஐந்தும் காள மணிவிளக்கே. " திருமூலர்
நமது மனமே பெரிய கோவில் அக கோவிலின் மூலட்டானம் தசையால் ஆன உடம்பு அன்பர்கள் குறிப்பறிந்து கொடுத்தருளும் இறைவனுக்கு வாயே கோபுர வாசல், நன்கு அறிந்த ஞானிகட்கு ஆன்மாவே சிவலிங்கமாகும், மனத்தை திருட்டு வழியில் இழுத்துச் செல்லும் ஐந்து புலங்களும் அழகிய விளக்காகும்,ஆலய அமைப்பு ஆண்டவன் இருப்பு யாவும் நம் உடலிலேயே உள என்பதாகும், இறைவன் ஆன்மாக்கின் பக்குவம் அறிந்து தேவைகளை கொடுத்து உதவுவதால் வள்ளல் எனப்பட்டான்,
இதேபோல் இன்னும் ஒரு பாடல் மூலம் ஐம்பெரும் பூதங்களால் அமைந்ததே உடம்பு என திருமந்திர பாடல்
" உரம் அடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய தன்முலை மேவியகீழ் அங்கி
கருமுலை மீமிசை கைக்கீழில் காலாம்
விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே."
உடம்பைத் தாங்கும் பாதங்கள் மண் ஆகும், பாதம் முதல் கொப்பூழ் வரை நீர் ஆகும், கொப்பூழிலிருந்து மார்பு வரை பொருந்ததியது தீயாகும், மார்பிலிருந்து தோள் வரை காற்றாகும், கழுத்துக்கு மேல் ஆகாயமாம், உலகம் மண், நீர்,தீ, காற்று, ஆகிய ஐந்து பொருட்களால் ஆனது அதுபோல உடலங்களும் ஐம்பெரும்பூதங்களால் ஆனவை.
மனித உடலை ஞான சூத்திரம் என்ற நூலில் குறிப்பிட்டு இருப்பதைப் பார்ப்போம், மனிதனுடைய முதுகுத்தண்டு மகாமேரு மலை போன்றது,அதன் உச்சி என்பது இரு புருவங்களும் கூடும் இடமான நெற்றி நடுநிலையாகும், நடுநிலைக்கு நேராக உச்சி குழுயையும் உண்ணாக்கையும் இணைத்துக் கொண்டு ஒரு நுண்ணிய துவாரம் இருக்கிறது. அதற்கு பிரம்மரந்திரம் என்று பெயர், அந்த துவாரத்தின் உள்ளே நெற்றியில் இருந்து ஏழு திரைகளுக்கு அப்பால் அமுத கலைகள் நிறைந்தும் பகலும், இரவும் அற்றதும், சத்-சித்-ஆனந்த சிற்சக்தியான சிவலிங்க சொரூபமான ஜீவன் ஜோதியாக ஒளிர்கிறது, மனித இயக்கத்ததிற்கு சீவன் இதுவே. ஆதியும் அந்தமுமாய் விளங்கும் சிவலிங்கம் ஜோதியே இறைவன், நம் உடம்புக்குள் இருப்பதைக் காண முயற்சிக்க வேண்டும், இந்த முயற்சியில் வெற்றி கண்டவர்கள் சித்தர்கள். நெற்றி நடுநிலையில் இறைவனை தாம் தெளிவாக கண்டதாகவும் அதனால் நெற்றியில் திருநீறு குங்குமம், சந்தனம், கஷ்தூரி முதலியவைகளைஇட்டு கொண்டு இறைவனை வழிபடுவதாகவும் சித்தர் தன்வந்திரி ஒரு பாடல் மூலம் கூறியிருக்கிறார். நெற்றியில் திருநீறு குங்குமம், ஏன் இட்டு கொள்ள வேண்டும் என்பது புரிகிறது அல்லவா? சித்தர்களைப்போல ஞானப் பயிற்சியால் உடம்புக்குள்ளே இறைவனைக் கண்டு முத்தி பெறுவோம்,
நாம் நமது குடும்பம் என்பது சந்தோசமானது என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே மரணம் நம்மை ஆட்கொண்டு விடுகிறது, உடல் தரையில் கிடக்கிறது. ஆனால் உயிர் எங்கோ போய் விடுகிறது. வாழ்க்கை நிலையில்லாதது, என்று தினமும் கண்டு கொண்டு இருந்தாலும், வாழ்க்கை மாயை என்பதை உணர மறுக்கிறோம்.
பஞ்சபூதங்களால் உடம்பை நாம்அறிய முயற்சிக்காமல் பரம்பொருளைக் காண வேண்டி எங்கெங்கோ தேடினால் கிடைக்கமா? மனதைத் திறந்து தேடினால் பரம்பொருளைக் காண முடியும், யோகியர்கள் ஜீவாத்மா, பரமாத்மாவிடம் ஐக்கியம் அடைவதை யோகம் என்று கூறுகிறார்கள். யோகத்தை அடைய எட்டு வழிகள் என்றும்கூறி இருக்கிறார்கள். இயமம், ஆசனம், பிராணயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற நிலைகளாகும்.
இயமம்: இயமம் என்பது அகிம்சை, சத்தியம், களவின்மை, பிரம்மச்சரியம், சம்மார்க்கம், தயை, பொறுமை, துணிவுடைமை, மிதமான உணவு,செளசம், என்று பத்து அம்சங்களாக வரையறுக்கப்பட்டு உள்ளது.
நியமம்: நியமம் என்பது தவம், மகிழ்ச்சி, தெய்வ நம்பிக்கை, நாணம், தானம், தேவபூசை, சித்தாந்த சிரவணம், புத்தி, ஜபம், ஹோமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசனம்: ஆசனம் என்பது பத்மாசனம், சுவஸ்திகாசனம், பத்ராசனம், வஜ்ராசனம், வீராசனம் என்று கூறப்பட்டுள்ளது.
பிராணாயமம்: பிராணாயமம் என்பது பிராண வாயுவை கட்டுப்படுத்தி தன் முயற்சியால் இயங்க வைப்பது, அதில் இரண்டு வகை அடிக்கடி வெளியே செல்கிற காற்றை பதினாறு மாத்திரை கால அளவு ஜபத்தியானாதிகளோடு உள்ளே வாங்கி, ஜபத்தியானங்கள் செய்து சகர்ப்பம் என்று கூறப்படுகிறது, ஜபத்தியானங்கள் இல்லாமல் பிராணாயம பயிற்சிகளை பயிலும் போது உடல் வியர்க்குமானால் அதமம் என்றும், நடுங்கினால் மத்திமம் என்றும் தரையை விட்டு எழும்புமானால் உத்தமம் என்றும் கூறப்படுகிறது, அதற்கு விகர்ப்பம் என்று பெயர்,
பிரத்யாஹாரம்: பிரத்யாஹாரம் என்பது உத்தம குணங்கள் நிரம்பப் பெற்று தான் எண்ணிய விருப்பங்களை அடையும் வரையில் இந்திரயங்களை வெளியே செல்லவிடாமல் தடுத்து தன் வசப்படுத்திக் கொள்வதாகும்,
தாரணை: தாரணை என்பது பிராண வாயுவை கால் கட்டை விரல்கள், முழங்கால்கள் தொடைகள் மூலாதாரம், இருதயம் போன்ற இடங்களில் விதிமுறையாக நிறுத்துவது,
தியானம்: தியானம் என்பது இறைவனோடு மனதை லயிக்க செய்து அசைவற்றிருக்கும் நிலையாகும்.
சமாதி: சமாதி என்பது ஜீவாத்மா ஆனவன் பரமாத்மாவில் இருந்து வேறுபட்டவன் அல்ல என்று சமத்துவ ஐக்கிய பாவனை செய்து கொண்டு எப்போதும் இருக்கும் நிலையாகும்,
இவைகளையே அஷ்டாங்க யோக லட்சணம் என்று யோகிகள் கூறுகிறார்கள்,
ஜீவாத்மாக்கள் இறைவனை காண முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள், அவர்களில் ஒரு சிலர் தங்களுடைய ஆத்ம சாதனைகளால் இறைவனைக் கண்டு கொள்கிறார்கள், பூலோகத்தில் அவர்களை சித்தர்கள் என்கிறோம், எட்டு வகையான பெரும் சக்திகள் அஷ்டமா சித்திகள் என்று அழைக்கப்படுகிறது. அவைகளாவன, அனிமா,மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசித்துவம், பிராகாமியம், ஈசத்துவம் என்பன,
அனிமா என்றால் உடலை சுருக்கி சிறிய அணுவைப் போல் மாறுவது,
மகிமா என்பது மேருமலையைப்போல உருவத்தை பெரியதாக்குவது
இலகுமா என்பது உருவத்தின் எடையை காற்றைப்போல் இலேசாக்குவது
கரிமா என்றால் எடையைப் பளுவாக்குவது
பிராப்தி என்றால் எல்லாவற்றையும் ஆளுதல்
வசித்துவம் என்றால் மற்றவர்களை வசப்படுத்தும் தன்மையை பெறுவது
பிராகாமியம் என்றால் ஒரு உடம்பில் இருக்கும் ஜீவன் வேறு உடம்புக்குள் புகுவது (கூடுவிட்டு கூடு பாய்வது)
ஈசத்துவம் விரும்பியதை அடைந்து அனுபவிப்பது
இத்தனை சக்திகளை தமக்குள் கொண்டவர்கள் தங்கள் ஆத்ம சாதனைகளால்அழிவற்ற அமர நிலையை அடைந்தவரகளே சித்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
ஓம் நமச்சிவாயம் - திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
ஈசனை பேசா நாள் எல்லாம் பிறவா நாளே
பெறுதற்கரிய பிறப்பு மானிடப்பிறப்பு, அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அவ்வாறு பிறந்தாலும், கூன், செவிடு, குருடு அற்று பிறப்பது அரிது, என்பது அவ்வையின் திருவாக்கு. இப்படி பெறுதற்கரிய மானிடப் பிறப்பை பிறந்து விட்டால் அப்பிறப்பில் செய்யத பாவ கர்ம வினைகளையும், முற்பிறப்பில் பெற்ற பாவ கர்மங்களையும், இப்பிறப்பு புண்ணியத்தால் ஈசனை நினைந்து, தொழுது, புகழ்பரப்பி நம்பாவ கர்ம வினைகளை குறைத்துக் கொள்ள வேண்டும், வள்ளல் பெருமானும் ஈசனை " அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டும், எப்போதும் எங்கு சென்றாலும், எவ்வேளையிலும், உன்னை மறவாமலும், உனது புகழை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமென இறைவனிடம் வேண்டினார், இதன் நிமித்தமாக பட்டிணத்து அடிகளார் ஈசனை - நமச்சிவய மந்திரத்தை - நினையாமலும், கற்காமலும் சொல்லாமலும் இப்பிறப்பில் இருந்ததை மன்னித்து அருள கச்சியப்ப ஏகாம்பர நாதனை வேண்டும் பாடல்
" கல்லாப்பிழையும், கருதாப்பிழையும், கசிந்துருகி
நில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி யேகம்பனே."
ஈசனுடைய திருநாமமாகிய நமசிவாய என்ற அஞ்செழுத்தை கல்லாததும், கருதாததும் கசிந்துருகாமலும் நினையாமலும், அனுதினமும் இமைப்பொழுதும் சொல்லாததும், துதியாததும், தொழாததும் ஆகிய எல்லாப்பிழைகளையும் பொறுத்தருள வேண்டுக்கூறுகிறார், எனவே இறைவனுடைய திருநாமத்தை எப்போதும் சொல்லாமல்இருப்பது பிழையாகும் , அப்படி பிழைகள் செய்து நம் கர்ம வினைகள் இப்பிறவியிலும் மேலும் மேலும் சேர்ப்பது பிறப்பின் பயனை ஏய்த முடியாது, நம் பாவ வினைகள் கழியாது, இப்பிறப்பிலும் முற்பிறப்பிலும் நம் பாவ கர்மங்களை களைய ஈசனை திருஐந்தெழுத்து மந்திரமான நமச்சிவ மந்திரத்தை இமைப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருந்தால் நம் கர்ம வினைகள் அதற்கொப்ப களையப்படும், இவ்வாறு இல்லை யெனில் அரிதற்கரிய இம்மானிட பிறப்பை பிறந்தும் பிறவா நிலையைத்தான் நாம் பெற்றதாவோம் என்று அப்பர் பெருமானார், 6ம் திருமுறையில் தில்லையம்பலனை வேண்டி பாடிய திருத்தாண்டப்பதிகம் பாடலில்
"கற்றானைக் கங்கை வார்சடையான் தன்னைக்
காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை
ஆருரும் புகுவானை அறிந்தோம் அன்றே
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதனை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாள் எல்லாம் பிறவவா நாளே.
எல்லாம் வல்லவன் கங்கையை கொண்டவன், நீண்ட சடையை உடையவன், காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சூழி என்ற திருத்தலத்தை உகந்தருளி இருப்பவன், பொருள் அற்றவருக்கும், அலந்தாருக்கும் அருள்பவன், தனக்கு உவமை இல்லாதவன், தேவர்களால் வணங்கி போற்றப்படுபவன், திருவாரூரில் உகந்து தங்கி யிருப்பவன் ஆகிய எம் பெருமானை எல்லோருக்கும் மேலானவன் என்று தெரிந்தும், அப்பேர்பட்ட எம்பிரானை - ஈசனை - அவன் நாமமாகிய நமச்சிவ எனும் மந்திரத்தை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
பெறுதற்கரிய பிறப்பு மானிடப்பிறப்பு, அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அவ்வாறு பிறந்தாலும், கூன், செவிடு, குருடு அற்று பிறப்பது அரிது, என்பது அவ்வையின் திருவாக்கு. இப்படி பெறுதற்கரிய மானிடப் பிறப்பை பிறந்து விட்டால் அப்பிறப்பில் செய்யத பாவ கர்ம வினைகளையும், முற்பிறப்பில் பெற்ற பாவ கர்மங்களையும், இப்பிறப்பு புண்ணியத்தால் ஈசனை நினைந்து, தொழுது, புகழ்பரப்பி நம்பாவ கர்ம வினைகளை குறைத்துக் கொள்ள வேண்டும், வள்ளல் பெருமானும் ஈசனை " அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டும், எப்போதும் எங்கு சென்றாலும், எவ்வேளையிலும், உன்னை மறவாமலும், உனது புகழை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமென இறைவனிடம் வேண்டினார், இதன் நிமித்தமாக பட்டிணத்து அடிகளார் ஈசனை - நமச்சிவய மந்திரத்தை - நினையாமலும், கற்காமலும் சொல்லாமலும் இப்பிறப்பில் இருந்ததை மன்னித்து அருள கச்சியப்ப ஏகாம்பர நாதனை வேண்டும் பாடல்
" கல்லாப்பிழையும், கருதாப்பிழையும், கசிந்துருகி
நில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி யேகம்பனே."
ஈசனுடைய திருநாமமாகிய நமசிவாய என்ற அஞ்செழுத்தை கல்லாததும், கருதாததும் கசிந்துருகாமலும் நினையாமலும், அனுதினமும் இமைப்பொழுதும் சொல்லாததும், துதியாததும், தொழாததும் ஆகிய எல்லாப்பிழைகளையும் பொறுத்தருள வேண்டுக்கூறுகிறார், எனவே இறைவனுடைய திருநாமத்தை எப்போதும் சொல்லாமல்இருப்பது பிழையாகும் , அப்படி பிழைகள் செய்து நம் கர்ம வினைகள் இப்பிறவியிலும் மேலும் மேலும் சேர்ப்பது பிறப்பின் பயனை ஏய்த முடியாது, நம் பாவ வினைகள் கழியாது, இப்பிறப்பிலும் முற்பிறப்பிலும் நம் பாவ கர்மங்களை களைய ஈசனை திருஐந்தெழுத்து மந்திரமான நமச்சிவ மந்திரத்தை இமைப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருந்தால் நம் கர்ம வினைகள் அதற்கொப்ப களையப்படும், இவ்வாறு இல்லை யெனில் அரிதற்கரிய இம்மானிட பிறப்பை பிறந்தும் பிறவா நிலையைத்தான் நாம் பெற்றதாவோம் என்று அப்பர் பெருமானார், 6ம் திருமுறையில் தில்லையம்பலனை வேண்டி பாடிய திருத்தாண்டப்பதிகம் பாடலில்
"கற்றானைக் கங்கை வார்சடையான் தன்னைக்
காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை
ஆருரும் புகுவானை அறிந்தோம் அன்றே
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதனை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாள் எல்லாம் பிறவவா நாளே.
எல்லாம் வல்லவன் கங்கையை கொண்டவன், நீண்ட சடையை உடையவன், காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சூழி என்ற திருத்தலத்தை உகந்தருளி இருப்பவன், பொருள் அற்றவருக்கும், அலந்தாருக்கும் அருள்பவன், தனக்கு உவமை இல்லாதவன், தேவர்களால் வணங்கி போற்றப்படுபவன், திருவாரூரில் உகந்து தங்கி யிருப்பவன் ஆகிய எம் பெருமானை எல்லோருக்கும் மேலானவன் என்று தெரிந்தும், அப்பேர்பட்ட எம்பிரானை - ஈசனை - அவன் நாமமாகிய நமச்சிவ எனும் மந்திரத்தை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
திருமுறை தேவாரப்பாடல் கூறும் சுகப் பிரசவம்
பெண்கள் பிள்ளை பேறு காலங்களில் சுகப் பிரசவம் அடையும் பொருட்டும், பிள்ளைப்பேறு பெறு அடையும் பொருட்டும் ஞானசம்பந்தர் தேவாரப்பாடல்களில் இதற்காகவே சில பதியங்கள் முக்கிய திருத்தலங்களில் பாடியுள்ளார், கருவுற்ற தாய் மார்களின் கருவேலைப்பளுவினாலோ, பயத்தினாலோ, விதி வசத்தினாலோ, கலையாமல் பாதுகாத்துத் தரும் அற்புதப்பதியங்களில் ஒன்று திருக்காவூரில் எழுந்தருளியுள்ள கர்ப்பபுரீஸ்வரர் உடனுறை கருக்காத்த நாயகி ஐ வேண்டி பாடியுள்ள இப்பதிக பாடல்களை கருவூற்ற பெண்கள் பாராயணம் செய்து அனுதினமும் பாடி பூசித்து வந்தால் சுகப்பிரசவம் அடைவார்கள் என்பது தொன்று தொட்டு நம்பப்படும் தெய்வ நம்பிக்கை.
"முத்திலங்கு முறுவல் உமை அஞ்சவவே
மத்த யானை மறுகவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருவாவூர் எம்
அத்தர் வண்ணம்அழலும் அழல் வண்ணமே."
முத்துப் போன்ற புன்னகை உடைய உமாதேவியார்அஞ்சும்படியான யானையின் தோலினை ஆடையாக அணிந்துள்ள திருக்காவூரில் எழுந்தருளியுள்ள ஈசனார், நெருப்பை ஒத்த செஞ்சனல் கொண்ட சென்னிறம் கொண்டவர் ஆவார்,
"வெந்த நீறு மெய் பூசிய வேதியன்
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மெளவல் கமழுங் கருகாவூர் எம்
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே."
திருநீறு மெய் முழுவதும் பூசியுள்ள வேதியன் என் ஈசன், சிந்தையில் இருத்தி நினைக்கின்றவர்களின் மனத்தில் நின்று அவர்கள் விரும்பும் செல்வத்தை அருள்புரிபவன், நறுமணம் கமழும் முல்லை மலர்கள் பூத்திருக்கும் திருக்காவூரில் எழுந்தருளியிருக்கும் என் தந்தையான ஈசன், எரிகின்ற செந்தணலின் செந்தீயின் நிறத்தை கொண்டவன்,
மேலும் மற்றும் திருத்தலமான சிற்றேமம் என்னும் சிவத்தலத்தில் பாடியுள்ள பதிகப்பாடல்கள் மூலமும் சுகப்பிரசவமும் பிள்ளைப்பேறும் கிடைக்கும் என்பதை அங்கு நடந்த வரலாற்று கதை வழியாகவும் நம்பப்படுகிறது.
இத்தலம் திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடல் பெற்றதலமாகும, சிற்றேமம் என்ற தலத்தில் வாழ்ந்த வணிகர் பொருளீட்டும் பொருட்டு வேறு நாடு சென்றார் , அச்சமயம் அவர் மனைவி கருவுற்றிருந்தாள், அப்பெண் சிவத்தொண்டு செய்து வாழ்ந்து வந்தாள், கணவன் வருவதற்குக் காலம் கடந்தமையால் வாழ்க்கை நடத்த இவளல் இயலவில்லை, இறைவனிடம் மனம் ஒன்றி வழிபட்டு முறையிட்டாள், நாள்தோறும் ஒரு பொற்காசு வைத்துஉதவினார் இத்தலத்து ஈசன், ஆதலால் இவருக்கு பொன்வைத்த நாதர் எனப் போற்றப்படுகிறார், இறைவி அகிலாண்ட ஈசுவரியம்மன்,
பிள்ளைப் பேற்றுக்காலம் வந்ததும் இறைவருடைய ஆணைப்படி இறைவி, அகிலாண்டேசுவரியே தாயாக வந்து உதவி செய்தாள் என்பது அத்திருத்தலத்தின் வரலாறு. இத்தலத்து பதிகத்தை கருவுற்ற தாய்மார்கள் அன்றாடம் படித்து வந்தால், இறையருளால் பிள்ளைப்பேறு இனிதே எளிதாக நடைபெறும் என்பது தின்னம்.
" நிறைவெண்திங்கள் வாள்முக மாதர் பாட நீள்சடைக்
குறைவெண்திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
சிறைவண்டுயாழ்செய் பைம்பொழிற் பழனம்சூழ் சிற்றேமத்தான்
இறைவன் என்றே உலகெலாம் ஏத்தநின்ற பெருமானே,"
முழுநிலவு போன்ற ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் இசைபாட சடை முடியில் பிறைச் சந்திரனை அணிந்து நடனம் ஆடும் இயல்புடையவராய், சிறகுகளையுடைய வண்டுகள் யாழ் போன்ற ஒலிக்கும் பசுமையான சோலைகளும் வயல்களும் சூழ்ந்த சிற்றேமத்தில் வீற்றிருக்கும் இறைவர், உலகெலாம் ஏத்திப்போற்றுகின்றசிவபெருமானார் ஆவாரே,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
பெண்கள் பிள்ளை பேறு காலங்களில் சுகப் பிரசவம் அடையும் பொருட்டும், பிள்ளைப்பேறு பெறு அடையும் பொருட்டும் ஞானசம்பந்தர் தேவாரப்பாடல்களில் இதற்காகவே சில பதியங்கள் முக்கிய திருத்தலங்களில் பாடியுள்ளார், கருவுற்ற தாய் மார்களின் கருவேலைப்பளுவினாலோ, பயத்தினாலோ, விதி வசத்தினாலோ, கலையாமல் பாதுகாத்துத் தரும் அற்புதப்பதியங்களில் ஒன்று திருக்காவூரில் எழுந்தருளியுள்ள கர்ப்பபுரீஸ்வரர் உடனுறை கருக்காத்த நாயகி ஐ வேண்டி பாடியுள்ள இப்பதிக பாடல்களை கருவூற்ற பெண்கள் பாராயணம் செய்து அனுதினமும் பாடி பூசித்து வந்தால் சுகப்பிரசவம் அடைவார்கள் என்பது தொன்று தொட்டு நம்பப்படும் தெய்வ நம்பிக்கை.
"முத்திலங்கு முறுவல் உமை அஞ்சவவே
மத்த யானை மறுகவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருவாவூர் எம்
அத்தர் வண்ணம்அழலும் அழல் வண்ணமே."
முத்துப் போன்ற புன்னகை உடைய உமாதேவியார்அஞ்சும்படியான யானையின் தோலினை ஆடையாக அணிந்துள்ள திருக்காவூரில் எழுந்தருளியுள்ள ஈசனார், நெருப்பை ஒத்த செஞ்சனல் கொண்ட சென்னிறம் கொண்டவர் ஆவார்,
"வெந்த நீறு மெய் பூசிய வேதியன்
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மெளவல் கமழுங் கருகாவூர் எம்
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே."
திருநீறு மெய் முழுவதும் பூசியுள்ள வேதியன் என் ஈசன், சிந்தையில் இருத்தி நினைக்கின்றவர்களின் மனத்தில் நின்று அவர்கள் விரும்பும் செல்வத்தை அருள்புரிபவன், நறுமணம் கமழும் முல்லை மலர்கள் பூத்திருக்கும் திருக்காவூரில் எழுந்தருளியிருக்கும் என் தந்தையான ஈசன், எரிகின்ற செந்தணலின் செந்தீயின் நிறத்தை கொண்டவன்,
மேலும் மற்றும் திருத்தலமான சிற்றேமம் என்னும் சிவத்தலத்தில் பாடியுள்ள பதிகப்பாடல்கள் மூலமும் சுகப்பிரசவமும் பிள்ளைப்பேறும் கிடைக்கும் என்பதை அங்கு நடந்த வரலாற்று கதை வழியாகவும் நம்பப்படுகிறது.
இத்தலம் திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடல் பெற்றதலமாகும, சிற்றேமம் என்ற தலத்தில் வாழ்ந்த வணிகர் பொருளீட்டும் பொருட்டு வேறு நாடு சென்றார் , அச்சமயம் அவர் மனைவி கருவுற்றிருந்தாள், அப்பெண் சிவத்தொண்டு செய்து வாழ்ந்து வந்தாள், கணவன் வருவதற்குக் காலம் கடந்தமையால் வாழ்க்கை நடத்த இவளல் இயலவில்லை, இறைவனிடம் மனம் ஒன்றி வழிபட்டு முறையிட்டாள், நாள்தோறும் ஒரு பொற்காசு வைத்துஉதவினார் இத்தலத்து ஈசன், ஆதலால் இவருக்கு பொன்வைத்த நாதர் எனப் போற்றப்படுகிறார், இறைவி அகிலாண்ட ஈசுவரியம்மன்,
பிள்ளைப் பேற்றுக்காலம் வந்ததும் இறைவருடைய ஆணைப்படி இறைவி, அகிலாண்டேசுவரியே தாயாக வந்து உதவி செய்தாள் என்பது அத்திருத்தலத்தின் வரலாறு. இத்தலத்து பதிகத்தை கருவுற்ற தாய்மார்கள் அன்றாடம் படித்து வந்தால், இறையருளால் பிள்ளைப்பேறு இனிதே எளிதாக நடைபெறும் என்பது தின்னம்.
" நிறைவெண்திங்கள் வாள்முக மாதர் பாட நீள்சடைக்
குறைவெண்திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
சிறைவண்டுயாழ்செய் பைம்பொழிற் பழனம்சூழ் சிற்றேமத்தான்
இறைவன் என்றே உலகெலாம் ஏத்தநின்ற பெருமானே,"
முழுநிலவு போன்ற ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் இசைபாட சடை முடியில் பிறைச் சந்திரனை அணிந்து நடனம் ஆடும் இயல்புடையவராய், சிறகுகளையுடைய வண்டுகள் யாழ் போன்ற ஒலிக்கும் பசுமையான சோலைகளும் வயல்களும் சூழ்ந்த சிற்றேமத்தில் வீற்றிருக்கும் இறைவர், உலகெலாம் ஏத்திப்போற்றுகின்றசிவபெருமானார் ஆவாரே,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
பன்னிரு திருமுறைகளின் பாடல்கள் பாடுவதன் பெருமை
பன்னிரு திருமுறைகளின் பாடல்கள் பாடுவதன் பெருமை
திருமுறை பாடல்கள் யாவும் அறிவு கொண்டு பாடப்பட்டவை அல்ல, அவை சிவபெருமானாரே தக்க அருளாளர்கள் மூலமாக பாடியவை என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.
"வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை"
இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட அருளாளர்கள் சீவபோதம் (மனித உணர்வு ) அகன்று , சிவபோதத்தில் ( இறை உணர்வு ) மூழ்கிய நிலையில் பிறந்தவை திருமுறைப்பாடல்கள். இந்த உண்மையை திருஞானசம்பந்தர் திருவாக்கினால் அறியலாம்.
"தன்இயல்பு இல்லா சண்பையர் கோன் சீர்ச்சம்பந்தன் இன்னிசை ஈரைந்து "
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாகிய சிவபரம் பொருளால் ஆட்கொள்ளப்பட்டு அவருடைய கருணை வெள்ளத்தில் மூழ்கி திளைத்த அருளாளர்கள் தாம் பெற்ற பேரின்பத்தினை நாமும் பெறுதல் வேண்டும் என்னும் நல்ல உயர்ந்த நோக்கத்துடன் அருளப்பட்டவைதான் தேவாரத்திருமுறைகள்.
அந்த அருளாளர்கள் பெற்ற பேரின்பம் அவர்களுடைய உள்ளத்தினின்றும் தோத்திரப்பாடல்களாக ஊற்றெடுத்து பெருவெள்ளமாக தமிழகம் எங்கும் பரவி ஓடியது. இப்பாடல்கள் யாவும் மனித இனம் நலம் பெறுவதற்காகவே இன்றளவும் நின்று நிலவுகின்றன. தமிழ் வேத திருமுறைப்பாடல்கள் பாடுவதால்,
1, இறையருள் தானே கைகூடும் என்கிறார் திருஞானசம்பந்தர்
" பாடி நின்று ஆடுவார் அழையாமே அருள் நல்குமே" என்கிறார்
தமிழ் திருமுறைப்பாடல்களை மனம் கசிந்து பாடியும் தம்மை மறந்து ஆடுதலையும் செய்யும் அன்பர்களுக்கு சிவபெருமானார் தாமே முன்னின்று அருள் புரிவார்.
2, நம்முடைய வினை விரைவில் நீங்கிவிடும்
" பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் ஓட்டினார் வினை ஒல்லையே" - சம்பந்தர்
கடவுளை வணங்கம் பொழுது பாடல்கள் பாடி வணங்க வேண்டும் என்கிறார் சம்பந்தர், நமக்காக பிறரைப் பாட செய்வது வழிபாடு ஆகாது, நமக்காக பிறர் சாப்பிட முடியாதன்றோ!
நம் வாயினால் பாடி பணிந்தால் நம்முடைய வினைகள் விரைவில் நீங்கிவிடும்
3, சிவகதி (பிறவாமை ) கிடைக்கும்
" ஞானசம்பந்ன் சொல்
சித்தம் சேரச் செப்பு மாந்தர் தீவினை நோயிலராய்
ஒத்தமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவாரே"
" அந்திவண்ணன் தன்னை அழகார் ஞானசம்பந்தன் சொல்
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே"
மனம் ஒன்றே வேண்டும் என்கிறார் சம்பந்தர், மனம் பாடலில் திளைக்க வேண்டும், அப்படி பாடினால் தீவினைகள் நீங்கும், தேவர் உலகில் இன்பமாய் வாழ்ந்து பிறப்பும் இறப்பும் இல்லாத சிவப்பேற்றை (சிவகதி) அடையலாம்.
4. மறுபிறப்பு இல்லையாகும்,
திருஞானசம்பந்தரிடம் ஒருவர் " இறவாமலிருக்க வழி சொல்லுங்கள் " எனக் கேட்டார். அதற்கு சம்பந்தர் " இது என்ன பெரிய காரியம் பிறவாமல் இருந்தால் இறப்பு வராது" என்றார்,
அவர் பிறவாமலிருக்க வழியை கூறுங்கள் என்றார் " தமிழ் வேத திருமுறைப்பாடல்கள் பாடிக்கொண்டு வந்தால் மீண்டும் பிறப்பு இல்லையாகும், " என்றார் சம்பந்தர்
"கடியார்ந்த பொழிற் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே"
வந்தால் போக வேண்டும் வாங்கினால் கொடுக்க வேண்டும், பிறந்தால் இறக்க வேண்டும், பிறக்க வில்லை என்றால் இறக்க வேண்டியதில்லை அல்லவா?
5, பாடுவர்கட்கு அருளும் வகைகள் எல்லை இல்லாதன
விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகும்
துளக்கில் நல்மலர் தொடுத்தால் தூயவிண் ஏறலாம்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்
அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே" - அப்பர் அடிகளார்
சிவாலயத்தை பெருக்கித் தூய்மை செய்பவர் வாழ்வில் துன்பம் ஒழிந்து இன்பமடைவர்
சிவாலயத்தை மெழுகினால் பெருக்குவதால் கிடைக்கும் பயனைவிட பத்து மடங்கு அதிக நலம் பெறலாம்
அன்று மலர்ந்த தூய, நறுமண மலர்களை எடுத்து மாலையாக்கி சாத்துவோர் மேலான சிவலோக வாழ்வை பெறுவர்
இறைவரை வாயார வாழ்த்தி பாடல்கள் பாடினால் அளவில்லா நலன்களை இறைவர் அருளுவார்
" கீதம் சொன்னார்க்கு அளப்பில் அடிகள் தாம் அருளுமாறே" என்றாகும்
6. எல்லாவகை செல்வங்களையும் பெறலாம்
"செல்வன்ஞானசம்பந்தன் செந்தமிழ்
செல்வமாம் இவை செப்பவே" - சம்பந்தர்
அருட்செலவராக விளங்கும் ஞான சம்பந்தர் அருளிய இச் செந்தமிழ் பாடல்களை பாடினால் எல்லா வகை செல்வங்ளையும் பெறலாம். அருட்செல்வம், பொருட்செல்வம், மக்கட் செல்வம, முத்திச் செல்வம் ஆகிய யாவற்றையும் பெறலாம்,
இம்மையில் பொருட்செல்வத்தையும் மறுமையில் முத்திச் செல்வத்தையும் அளிக்கும் அளவிலா ஆற்றல் உடையவை தமிழ் வேத திருமுறை தேவாரப் பாடல்கள்
வாயாரப்பாடுவோம்! வளங்கள் பல பெறுவோம் !!
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
பன்னிரு திருமுறைகளின் பாடல்கள் பாடுவதன் பெருமை
திருமுறை பாடல்கள் யாவும் அறிவு கொண்டு பாடப்பட்டவை அல்ல, அவை சிவபெருமானாரே தக்க அருளாளர்கள் மூலமாக பாடியவை என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.
"வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை"
இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட அருளாளர்கள் சீவபோதம் (மனித உணர்வு ) அகன்று , சிவபோதத்தில் ( இறை உணர்வு ) மூழ்கிய நிலையில் பிறந்தவை திருமுறைப்பாடல்கள். இந்த உண்மையை திருஞானசம்பந்தர் திருவாக்கினால் அறியலாம்.
"தன்இயல்பு இல்லா சண்பையர் கோன் சீர்ச்சம்பந்தன் இன்னிசை ஈரைந்து "
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாகிய சிவபரம் பொருளால் ஆட்கொள்ளப்பட்டு அவருடைய கருணை வெள்ளத்தில் மூழ்கி திளைத்த அருளாளர்கள் தாம் பெற்ற பேரின்பத்தினை நாமும் பெறுதல் வேண்டும் என்னும் நல்ல உயர்ந்த நோக்கத்துடன் அருளப்பட்டவைதான் தேவாரத்திருமுறைகள்.
அந்த அருளாளர்கள் பெற்ற பேரின்பம் அவர்களுடைய உள்ளத்தினின்றும் தோத்திரப்பாடல்களாக ஊற்றெடுத்து பெருவெள்ளமாக தமிழகம் எங்கும் பரவி ஓடியது. இப்பாடல்கள் யாவும் மனித இனம் நலம் பெறுவதற்காகவே இன்றளவும் நின்று நிலவுகின்றன. தமிழ் வேத திருமுறைப்பாடல்கள் பாடுவதால்,
1, இறையருள் தானே கைகூடும் என்கிறார் திருஞானசம்பந்தர்
" பாடி நின்று ஆடுவார் அழையாமே அருள் நல்குமே" என்கிறார்
தமிழ் திருமுறைப்பாடல்களை மனம் கசிந்து பாடியும் தம்மை மறந்து ஆடுதலையும் செய்யும் அன்பர்களுக்கு சிவபெருமானார் தாமே முன்னின்று அருள் புரிவார்.
2, நம்முடைய வினை விரைவில் நீங்கிவிடும்
" பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் ஓட்டினார் வினை ஒல்லையே" - சம்பந்தர்
கடவுளை வணங்கம் பொழுது பாடல்கள் பாடி வணங்க வேண்டும் என்கிறார் சம்பந்தர், நமக்காக பிறரைப் பாட செய்வது வழிபாடு ஆகாது, நமக்காக பிறர் சாப்பிட முடியாதன்றோ!
நம் வாயினால் பாடி பணிந்தால் நம்முடைய வினைகள் விரைவில் நீங்கிவிடும்
3, சிவகதி (பிறவாமை ) கிடைக்கும்
" ஞானசம்பந்ன் சொல்
சித்தம் சேரச் செப்பு மாந்தர் தீவினை நோயிலராய்
ஒத்தமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவாரே"
" அந்திவண்ணன் தன்னை அழகார் ஞானசம்பந்தன் சொல்
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே"
மனம் ஒன்றே வேண்டும் என்கிறார் சம்பந்தர், மனம் பாடலில் திளைக்க வேண்டும், அப்படி பாடினால் தீவினைகள் நீங்கும், தேவர் உலகில் இன்பமாய் வாழ்ந்து பிறப்பும் இறப்பும் இல்லாத சிவப்பேற்றை (சிவகதி) அடையலாம்.
4. மறுபிறப்பு இல்லையாகும்,
திருஞானசம்பந்தரிடம் ஒருவர் " இறவாமலிருக்க வழி சொல்லுங்கள் " எனக் கேட்டார். அதற்கு சம்பந்தர் " இது என்ன பெரிய காரியம் பிறவாமல் இருந்தால் இறப்பு வராது" என்றார்,
அவர் பிறவாமலிருக்க வழியை கூறுங்கள் என்றார் " தமிழ் வேத திருமுறைப்பாடல்கள் பாடிக்கொண்டு வந்தால் மீண்டும் பிறப்பு இல்லையாகும், " என்றார் சம்பந்தர்
"கடியார்ந்த பொழிற் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே"
வந்தால் போக வேண்டும் வாங்கினால் கொடுக்க வேண்டும், பிறந்தால் இறக்க வேண்டும், பிறக்க வில்லை என்றால் இறக்க வேண்டியதில்லை அல்லவா?
5, பாடுவர்கட்கு அருளும் வகைகள் எல்லை இல்லாதன
விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகும்
துளக்கில் நல்மலர் தொடுத்தால் தூயவிண் ஏறலாம்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்
அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே" - அப்பர் அடிகளார்
சிவாலயத்தை பெருக்கித் தூய்மை செய்பவர் வாழ்வில் துன்பம் ஒழிந்து இன்பமடைவர்
சிவாலயத்தை மெழுகினால் பெருக்குவதால் கிடைக்கும் பயனைவிட பத்து மடங்கு அதிக நலம் பெறலாம்
அன்று மலர்ந்த தூய, நறுமண மலர்களை எடுத்து மாலையாக்கி சாத்துவோர் மேலான சிவலோக வாழ்வை பெறுவர்
இறைவரை வாயார வாழ்த்தி பாடல்கள் பாடினால் அளவில்லா நலன்களை இறைவர் அருளுவார்
" கீதம் சொன்னார்க்கு அளப்பில் அடிகள் தாம் அருளுமாறே" என்றாகும்
6. எல்லாவகை செல்வங்களையும் பெறலாம்
"செல்வன்ஞானசம்பந்தன் செந்தமிழ்
செல்வமாம் இவை செப்பவே" - சம்பந்தர்
அருட்செலவராக விளங்கும் ஞான சம்பந்தர் அருளிய இச் செந்தமிழ் பாடல்களை பாடினால் எல்லா வகை செல்வங்ளையும் பெறலாம். அருட்செல்வம், பொருட்செல்வம், மக்கட் செல்வம, முத்திச் செல்வம் ஆகிய யாவற்றையும் பெறலாம்,
இம்மையில் பொருட்செல்வத்தையும் மறுமையில் முத்திச் செல்வத்தையும் அளிக்கும் அளவிலா ஆற்றல் உடையவை தமிழ் வேத திருமுறை தேவாரப் பாடல்கள்
வாயாரப்பாடுவோம்! வளங்கள் பல பெறுவோம் !!
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்
பைரவர்
சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும். அதற்கு தடைகளும், இடையூறுகளும் வருவது இயற்கையே.இதற்கு காரணம் நமது கர்மவினைகளே. கர்மவினைகளை அழிக்க பல எளிய வழிகள் உண்டு. கர்மவினைகளை அழிக்கும் செயலே இயற்கைக்கு மாறான ஒன்றாகும். நாம் பிறந்த இந்த பூமியானது ஒரு கர்ம பூமி. இதில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் தம் கர்ம வினைகளை தொலைக்க பிறந்தவர்களே. இந்த கர்மவினைகள் இரண்டாகும்.அவை நல்வினை மற்றும் தீவினை ஆகும். நல்வினை மற்றும் தீவினை இவற்றை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். இது தான் விதி என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் விதியை மதியால் வெல்லலாம். ஆம் மதி என்பது இங்கே முதலில் சந்திரனையும் பின்பு அதே சொல் நமது அறிவையும் குறிக்கிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் மதி என்கிற சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் அவர் தம் அறிவின் துணை கொண்டு விதியை வெல்லுவார் என்பது திண்ணம். சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருப்பது என்பது நல்ல நிலை என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஷட்பல நிர்ணயம் என்றொரு கணக்கீடு இருக்கிறது. அதன் படி சந்திரனின் பலம் நன்றாக இருந்தால் அவர் விதியை மதியால் வெல்லுவார்.
மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது. பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே. நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை. இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை.
முதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி). இறுதியாக வரும் சிவ வடிவம் பைரவர். பைரவர் என்றால் எந்த பைரவர் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. இந்த இரண்டு சிவ வடிவங்கள் மொத்தம் உள்ள 64சிவ வடிவங்களிலும், வழிபாட்டிற்குரிய 25 சிவ வடிவங்களிலும் மிக மிக முக்கியமானவை. தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிவாலயங்களிலும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள் வழங்கும் வடிவங்கள் ஆகும். தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய சிவ வடிவங்களும் சென்னியில் பிறையை சூடியவர்கள். இவர்களது தலையில் மூன்றாம் பிறை சந்திரனை நாம் காணலாம்.
தட்சணாமூர்த்தி சிவபெருமானின் யோகவடிவம். ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர். சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பானவர். தென் திசையை நோக்குபவர். இவரை வழிபடுவது மிகவும் எளிது. இவரை வழிபட கடினமான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் உண்டாகும். நமது கர்மவினைகள் படிப்படியாக நீங்கும். மந்திர செபம் செய்பவர்களுக்கு உகந்த கடவுள் இவரே. இவரை வழிபட மனம் அமைதி பெறும். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். மந்திர செபம் செய்பவர்களின் மந்திர செபங்களுக்கு சக்தியை தருபவரும் இவரே. மனநிம்மதியை தருபவரும் இவரே.
“ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”
மேற்கண்ட மந்திரம் தட்சணாமூர்த்தியின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும். பின்பு வீடு வந்து இரவு8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும். இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது. தட்சணாமூர்த்தியின் முன்பு எவ்வித தோஷமும், பாவமும் நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்.
கடைசியாக வருபவர் கர்மவினைகளை தன் பார்வையாலே எரிக்கும் வல்லமை கொண்ட பைரவர் ஆவார். இவரே சிவத்தலத்தில் இறுதி சிவ வடிவம் ஆவார். பைரவர்களுள் சொர்ணபைரவரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர். மற்ற அனைத்து பைரவ வடிவங்கள் கோவிலிலோ அல்லது காடுகளிலோ அல்லது மலைகளிலோ வைத்து வழிபடத்தக்கன. பைரவ வடிவம் சிவ வழிபாட்டில் ஏற்படும் கர்மவினை பாதிப்புகளை நீக்க வல்ல வடிவம் ஆகும். பைரவரை தொடர்ந்து வழிபடுவதால் மட்டுமே நாம் செய்யும் சிவ வழிபாட்டின் பலனை அடையமுடியும்.பைரவரே நவக்கோள்களின் அதிபதி ஆவார். சிவ வழிபாட்டின் பலனை நமக்கு தருமாறு நவக்கோள்களுக்கு ஆணையிடும் தலைவரும் பைரவரே ஆவார். இவரை வழிபடாமல் இருந்தால் நமக்கு சிவ வழிபாட்டின் பலன் கிடைக்காது.பைரவரே காலத்தையும், காலனையும் வென்றவர். காலகாலர் என்ற பெயரை கொண்டவரும் பைரவரே ஆவார். தெற்கு திசை நோக்கும் பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
பைரவர் சிவபெருமானின் கோபமே உருவான ருத்ர வடிவம். பைரவர் நம்மை நவக்கோள்களின் பாதிப்பிலிருந்து காப்பார். கர்மவினைகளை வேரோடு சாய்ப்பார். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். சிவ வழிபாட்டின் இறுதி நிலையே பைரவர் வழிபாடு ஆகும்.எத்தனையோ பிறவிகளில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே பைரவர் வழிபாடு செய்கின்றனர். முதலில் காலபைரவரை வழிபாடு செய்யும் அனைவரும் படிப்படியாக சொர்ணபைரவர் வழிபாடும் செய்வார்கள். பின்பு இரண்டு வழிபாடுகளும் தொடர்ந்து செய்வார்கள். இறுதியில் சொர்ணபைரவர் வழிபாடு மட்டும் செய்வார்கள். இது தான் பைரவர் வழிபாட்டின் ரகசியம் ஆகும். தன் கர்ம வினைகளை முற்றிலும் நீக்கி பிறவியில்லா பெருநிலையை அடைய தகுதி படைத்தவர்களே பைரவர் வழிபாட்டை தொடர்ந்து செய்கிறார்கள். கர்மவினைகளை அழித்து முக்தியை அடைகிறார்கள். பைரவரை வழிபாடு செய்வது மிகவும் எளிது.
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சொர்ணபைரவாய ஹும் பட் ஸ்வாஹா”
மேற்கண்ட மந்திரம் சொர்ணபைரவரின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும். (ஆம் தட்சணாமூர்த்தி சந்நிதியில் தான் செபிக்க வேண்டும்). பின்பு வீடு வந்து இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும். இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது. சொர்ணபைரவரின் அருள் கிட்டினால் சகல தோஷங்களும், பாவங்களும் நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
பைரவர்
சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும். அதற்கு தடைகளும், இடையூறுகளும் வருவது இயற்கையே.இதற்கு காரணம் நமது கர்மவினைகளே. கர்மவினைகளை அழிக்க பல எளிய வழிகள் உண்டு. கர்மவினைகளை அழிக்கும் செயலே இயற்கைக்கு மாறான ஒன்றாகும். நாம் பிறந்த இந்த பூமியானது ஒரு கர்ம பூமி. இதில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் தம் கர்ம வினைகளை தொலைக்க பிறந்தவர்களே. இந்த கர்மவினைகள் இரண்டாகும்.அவை நல்வினை மற்றும் தீவினை ஆகும். நல்வினை மற்றும் தீவினை இவற்றை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். இது தான் விதி என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் விதியை மதியால் வெல்லலாம். ஆம் மதி என்பது இங்கே முதலில் சந்திரனையும் பின்பு அதே சொல் நமது அறிவையும் குறிக்கிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் மதி என்கிற சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் அவர் தம் அறிவின் துணை கொண்டு விதியை வெல்லுவார் என்பது திண்ணம். சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருப்பது என்பது நல்ல நிலை என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஷட்பல நிர்ணயம் என்றொரு கணக்கீடு இருக்கிறது. அதன் படி சந்திரனின் பலம் நன்றாக இருந்தால் அவர் விதியை மதியால் வெல்லுவார்.
மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது. பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே. நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை. இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை.
முதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி). இறுதியாக வரும் சிவ வடிவம் பைரவர். பைரவர் என்றால் எந்த பைரவர் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. இந்த இரண்டு சிவ வடிவங்கள் மொத்தம் உள்ள 64சிவ வடிவங்களிலும், வழிபாட்டிற்குரிய 25 சிவ வடிவங்களிலும் மிக மிக முக்கியமானவை. தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிவாலயங்களிலும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள் வழங்கும் வடிவங்கள் ஆகும். தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய சிவ வடிவங்களும் சென்னியில் பிறையை சூடியவர்கள். இவர்களது தலையில் மூன்றாம் பிறை சந்திரனை நாம் காணலாம்.
தட்சணாமூர்த்தி சிவபெருமானின் யோகவடிவம். ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர். சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பானவர். தென் திசையை நோக்குபவர். இவரை வழிபடுவது மிகவும் எளிது. இவரை வழிபட கடினமான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் உண்டாகும். நமது கர்மவினைகள் படிப்படியாக நீங்கும். மந்திர செபம் செய்பவர்களுக்கு உகந்த கடவுள் இவரே. இவரை வழிபட மனம் அமைதி பெறும். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். மந்திர செபம் செய்பவர்களின் மந்திர செபங்களுக்கு சக்தியை தருபவரும் இவரே. மனநிம்மதியை தருபவரும் இவரே.
“ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”
மேற்கண்ட மந்திரம் தட்சணாமூர்த்தியின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும். பின்பு வீடு வந்து இரவு8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும். இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது. தட்சணாமூர்த்தியின் முன்பு எவ்வித தோஷமும், பாவமும் நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்.
கடைசியாக வருபவர் கர்மவினைகளை தன் பார்வையாலே எரிக்கும் வல்லமை கொண்ட பைரவர் ஆவார். இவரே சிவத்தலத்தில் இறுதி சிவ வடிவம் ஆவார். பைரவர்களுள் சொர்ணபைரவரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர். மற்ற அனைத்து பைரவ வடிவங்கள் கோவிலிலோ அல்லது காடுகளிலோ அல்லது மலைகளிலோ வைத்து வழிபடத்தக்கன. பைரவ வடிவம் சிவ வழிபாட்டில் ஏற்படும் கர்மவினை பாதிப்புகளை நீக்க வல்ல வடிவம் ஆகும். பைரவரை தொடர்ந்து வழிபடுவதால் மட்டுமே நாம் செய்யும் சிவ வழிபாட்டின் பலனை அடையமுடியும்.பைரவரே நவக்கோள்களின் அதிபதி ஆவார். சிவ வழிபாட்டின் பலனை நமக்கு தருமாறு நவக்கோள்களுக்கு ஆணையிடும் தலைவரும் பைரவரே ஆவார். இவரை வழிபடாமல் இருந்தால் நமக்கு சிவ வழிபாட்டின் பலன் கிடைக்காது.பைரவரே காலத்தையும், காலனையும் வென்றவர். காலகாலர் என்ற பெயரை கொண்டவரும் பைரவரே ஆவார். தெற்கு திசை நோக்கும் பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
பைரவர் சிவபெருமானின் கோபமே உருவான ருத்ர வடிவம். பைரவர் நம்மை நவக்கோள்களின் பாதிப்பிலிருந்து காப்பார். கர்மவினைகளை வேரோடு சாய்ப்பார். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். சிவ வழிபாட்டின் இறுதி நிலையே பைரவர் வழிபாடு ஆகும்.எத்தனையோ பிறவிகளில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே பைரவர் வழிபாடு செய்கின்றனர். முதலில் காலபைரவரை வழிபாடு செய்யும் அனைவரும் படிப்படியாக சொர்ணபைரவர் வழிபாடும் செய்வார்கள். பின்பு இரண்டு வழிபாடுகளும் தொடர்ந்து செய்வார்கள். இறுதியில் சொர்ணபைரவர் வழிபாடு மட்டும் செய்வார்கள். இது தான் பைரவர் வழிபாட்டின் ரகசியம் ஆகும். தன் கர்ம வினைகளை முற்றிலும் நீக்கி பிறவியில்லா பெருநிலையை அடைய தகுதி படைத்தவர்களே பைரவர் வழிபாட்டை தொடர்ந்து செய்கிறார்கள். கர்மவினைகளை அழித்து முக்தியை அடைகிறார்கள். பைரவரை வழிபாடு செய்வது மிகவும் எளிது.
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சொர்ணபைரவாய ஹும் பட் ஸ்வாஹா”
மேற்கண்ட மந்திரம் சொர்ணபைரவரின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும். (ஆம் தட்சணாமூர்த்தி சந்நிதியில் தான் செபிக்க வேண்டும்). பின்பு வீடு வந்து இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும். இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது. சொர்ணபைரவரின் அருள் கிட்டினால் சகல தோஷங்களும், பாவங்களும் நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
மாணிக்க வாசகர் கண்ட அதிசயம்
மாணிக்க வாசகர் கண்ட அதிசயம்
உலகில் இறைவனைப்பற்றிய சிந்தனை இல்லாதவன் வறியவன் ஆகிறான். ஏழ்மையன் ஆகிறான். இந்த ஏழைமை எதனால் வருகிறது என்பதை இவ்வாறு நமக்கு மாணிக்க வாசகப் பெருமான் அழகாக விளக்குகிறார். நாமோ செல்வம் இல்லாதவன் மட்டுமே ஏழை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதனால்தான் ,திருஞான சம்பந்தரும் ,"செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே" என்று அருளினார். ஏழைமை என்பதற்கு அறியாமை என்று பொருள் கொள்வோரும் உளர். சிவபெருமானைப் பற்றிய எண்ணம் முதலில் அவன் அருளாலே நமக்கு ஏற்படவேண்டும். அதிலும் அவனது பஞ்சாக்ஷரத்தை எண்ணி எண்ணி அனுதினமும் ஜபம் செய்ய வேண்டும்.
வேதம் நான்கில் நடுநாயகமாய் , மெய்ப்பொருளாய், எல்லாத் தீங்கையும் நீக்கும் அரு மருந்தாய், பந்தபாசம் அறுக்க வல்லதாய், இயமன் தூதர்களையும் நெருங்க விடாமல் செய்வதாய் விளங்கும் சிவ பஞ்சாக்ஷரத்தை ஜபிக்க நமக்கு நல்வினைப்பயன் இருக்க வேண்டும். அத்தகைய பேறு தனக்கு இல்லையே என்று உருகுவார் மணிவாசகர்.
" எண்ணிலேன் திருநாம அஞ்சு எழுத்தும் என் ஏழைமை அதனாலே " என்பது அவ்வுயர்ந்த வரிகள்
கலைகளைக் கற்பவர்கள் எல்லோரும் ஞானிகள் ஆகிவிட மாட்டார்கள். தாம் கற்ற அக்கலைகளை சிவார்ப்பணமாகச் செய்வோரே உண்மை ஞானிகள்.
" கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே; கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே." என்பது அப்பர் வாக்கு.
ஆகவே கலைகளைக் கற்ற சிவ ஞானிகள் பால் அணுகினால் நமக்கும் அந்த ஞானிகளின் அருள் கிடைக்கும். அதற்கு நாம் நல்வினை செய்திருக்க வேண்டும் அல்லவா? இதைத்தான்,
" நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே " என்ற திருவாசக வரிகள் இந்தக் கருத்தை நமக்கு அறிவிக்கின்றன.
உலகத்து உயிர்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் உழல்பவை. உலக வாழ்க்கை முடிந்ததும் மண்ணோடு மண்ணாக ஆகும் தன்மை உடையவை. மீண்டும் பிறவா நெறி தர வல்ல கடவுளை சிந்திக்காமலும், கலைஞானிகளைச் சென்று அடையாமலும் வீணே காலத்தைக் கழிப்பவை. கடவுள் அருள் இருந்தால் மட்டுமே கரை ஏறக்கூடியவை. நமக்கும் அந்த அருள் கிடைக்குமா என்று ஒவ்வொரு நாளும் ஏங்குவோருக்கு நிச்சயம் சிவனருள் கிட்டும். பிறவிப் பிணி தீரும். இப்படி ஒன்றுக்கும் பற்றாத நமக்கும் அருள் வழங்கத் தயாராக இருப்பது அவனது வற்றாத மாப்பெருங் கருணையை அல்லவா காட்டுகிறது! இதை விட அதிசயம் ஒன்று இருக்க முடியுமா?
கருணைக் கடலான கலாதரன் தன்னை ஆட்கொண்டதோடு, தனது உயர்ந்த பழைய அடியார் கூட்டத்தோடு சேர்த்து வைத்தது அதை விட அற்புதம் தானே என்று நெகிழ்கிறார் குருநாதர்.
" மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை
அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே."
என்ற திருவாசக வரிகள் கல் நெஞ்சையும் உருக்குவதாக உள்ளன.
முழுப்பாடல் இதோ:
" எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும் என் ஏழைமை அதனாலே
நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே
மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை
அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.
மாணிக்க வாசகர் கண்ட அதிசயம்
உலகில் இறைவனைப்பற்றிய சிந்தனை இல்லாதவன் வறியவன் ஆகிறான். ஏழ்மையன் ஆகிறான். இந்த ஏழைமை எதனால் வருகிறது என்பதை இவ்வாறு நமக்கு மாணிக்க வாசகப் பெருமான் அழகாக விளக்குகிறார். நாமோ செல்வம் இல்லாதவன் மட்டுமே ஏழை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதனால்தான் ,திருஞான சம்பந்தரும் ,"செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே" என்று அருளினார். ஏழைமை என்பதற்கு அறியாமை என்று பொருள் கொள்வோரும் உளர். சிவபெருமானைப் பற்றிய எண்ணம் முதலில் அவன் அருளாலே நமக்கு ஏற்படவேண்டும். அதிலும் அவனது பஞ்சாக்ஷரத்தை எண்ணி எண்ணி அனுதினமும் ஜபம் செய்ய வேண்டும்.
வேதம் நான்கில் நடுநாயகமாய் , மெய்ப்பொருளாய், எல்லாத் தீங்கையும் நீக்கும் அரு மருந்தாய், பந்தபாசம் அறுக்க வல்லதாய், இயமன் தூதர்களையும் நெருங்க விடாமல் செய்வதாய் விளங்கும் சிவ பஞ்சாக்ஷரத்தை ஜபிக்க நமக்கு நல்வினைப்பயன் இருக்க வேண்டும். அத்தகைய பேறு தனக்கு இல்லையே என்று உருகுவார் மணிவாசகர்.
" எண்ணிலேன் திருநாம அஞ்சு எழுத்தும் என் ஏழைமை அதனாலே " என்பது அவ்வுயர்ந்த வரிகள்
கலைகளைக் கற்பவர்கள் எல்லோரும் ஞானிகள் ஆகிவிட மாட்டார்கள். தாம் கற்ற அக்கலைகளை சிவார்ப்பணமாகச் செய்வோரே உண்மை ஞானிகள்.
" கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே; கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே." என்பது அப்பர் வாக்கு.
ஆகவே கலைகளைக் கற்ற சிவ ஞானிகள் பால் அணுகினால் நமக்கும் அந்த ஞானிகளின் அருள் கிடைக்கும். அதற்கு நாம் நல்வினை செய்திருக்க வேண்டும் அல்லவா? இதைத்தான்,
" நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே " என்ற திருவாசக வரிகள் இந்தக் கருத்தை நமக்கு அறிவிக்கின்றன.
உலகத்து உயிர்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் உழல்பவை. உலக வாழ்க்கை முடிந்ததும் மண்ணோடு மண்ணாக ஆகும் தன்மை உடையவை. மீண்டும் பிறவா நெறி தர வல்ல கடவுளை சிந்திக்காமலும், கலைஞானிகளைச் சென்று அடையாமலும் வீணே காலத்தைக் கழிப்பவை. கடவுள் அருள் இருந்தால் மட்டுமே கரை ஏறக்கூடியவை. நமக்கும் அந்த அருள் கிடைக்குமா என்று ஒவ்வொரு நாளும் ஏங்குவோருக்கு நிச்சயம் சிவனருள் கிட்டும். பிறவிப் பிணி தீரும். இப்படி ஒன்றுக்கும் பற்றாத நமக்கும் அருள் வழங்கத் தயாராக இருப்பது அவனது வற்றாத மாப்பெருங் கருணையை அல்லவா காட்டுகிறது! இதை விட அதிசயம் ஒன்று இருக்க முடியுமா?
கருணைக் கடலான கலாதரன் தன்னை ஆட்கொண்டதோடு, தனது உயர்ந்த பழைய அடியார் கூட்டத்தோடு சேர்த்து வைத்தது அதை விட அற்புதம் தானே என்று நெகிழ்கிறார் குருநாதர்.
" மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை
அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே."
என்ற திருவாசக வரிகள் கல் நெஞ்சையும் உருக்குவதாக உள்ளன.
முழுப்பாடல் இதோ:
" எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும் என் ஏழைமை அதனாலே
நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே
மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை
அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.
மதுரை கூன் பாண்டியனின் வெப்பு நோய் நீக்கியது
ஞானசம்பந்தனின் திருநீற்றுப்பதிகம்
தென்னாடுடைய சிவனே போற்றி என்று பதினென் திருமுறையில் போற்றி புகழப்படும் தென்பாண்டி நாட்டில் சைவ சமயம் வலிவிழந்து சமண சமயம் பரவி சமணர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய நேரத்தில் பாண்டிய மன்னாக இருந்த கூன்பாண்டியன் சமண சமயத்தை தழுவிஇருந்த காரணத்தால் சமணர்களின் ஆதிக்கம் தழைத்தோங்கி நின்றதோடு, திருநீறு பூசிய சைவ சமயத்தை சார்ந்தவர்களைக் கண்டால் சமணர்கள் கண்டுமுட்டி என தீண்டத்தாகாதவர்களாக அவமரியாதை செய்து வந்தனர், அந்நிலையில் பாண்டிய மன்னனின் பட்டத்தரசி மங்கையர்கரசியாரும், அமைச்சராகிய குலச்சிறையாரும் சைவ நெறியில் நின்றார்கள், அத்தருணத்தில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருமறைக்காட்டில் தங்கி இருந்தனர், அப்போது பாண்டியனின் பட்டத்தரசியும் அமைச்சரும் சமணர்களின் ஆதிக்கத்தை பொறுக்க முடியாமல் சைவ சமயத்தை தழைத்திட செய்ய தம் பணியாட்களை அவர்களின் பால் அனுப்பி பாண்டிய நாட்டிற்கு அழைத்து வரும்படி செய்தார்கள், அப்போது அப்பர் பெருமானும் ஞானசம்பந்தரிடம் பாண்டியநாட்டில் சைவம் மறைந்து தீவிர வாத சமணம் ஓங்கி வளர்ந்துள்ள நிலையில் சமணர்கள் எதையும் செய்வார்கள் எனவே நாளும் கோளும் அறிந்து சென்று சைவத்தை நிலைநிறுத்த வேண்டினார், அப்போது நாள் என்செய்யும் கோள் என்செய்யும் நமச்சிவாய என்பதற்கு என கூறி கோளாறு பதிகம் பாடி பணியாட்களிடம் மதுரையில் சைவத்தின் நிலையினையும் அறிந்த பின் பாண்டிய நாட்டு பணியாளர்களுடன் பாண்டியநாட்டு மதுரை சென்றார்,மங்கையர்கரசியாரும் குலச்சிறையாரும் மதுரை சொக்கநாதர் ஆலகயத்தில் சம்பந்தரின் வருகைக்காக காத்து இருந்தனர், ஞானசம்பந்தர் வருகைகண்டு இருவரும் கண்களில் நீர்பொழிய சம்பந்தரின் காலில் விழுந்து வணங்கினர் , பின் அவர்கள் இருவரையும் திருமடத்தில் தங்க வைத்தனர், இதை அறிந்த சமணர்கள் மன்னனிடம் ஒடோடி வந்து " மதுரைக்கு அந்தன சிறுவன் ஒருவன் சிவஞானம் பெற்றவனாம் அவன் சமண சமயத்தை அவதூறு செய்யும் நோக்கில் எங்களை வாதில் வெல்ல வந்துள்ளானாம் ' என வாய்க்கு வந்ததையெல்லாம் மன்னனிடம் கூறினார்கள், இதைக் கேட்ட மன்னன் மனம் கொதித்தது. அவனை வேரிலே கிள்ளியேறிய யாதாவது செய்யுங்கள் என சமண மதத்துறவிகளிடம் கூறினார், உடனே சமணர்கள் தங்கள் மந்திரத்தால் சம்பந்தர் தங்கிய மடம் தீ பிடிக்குமாறு மந்திரம் செபித்தனர், ஆனால் ஆதி மந்திரம் ஐந்தெழுத்து ஓதுவார் பார்க்கும் திசையில் கூட மற்ற மந்திரங்கள் வலிமை நிற்காதல்லவா? சமணர்களின் மந்திரம் பலிக்கமாற் போயிற்று, அடியார்கள் பலர் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இரவோடு இரவாக அம்மடத்திற்கு ஆட்களைக் கொண்டு தீயிட்டார்கள், அப்பாதர்களின் செயலை அறிந்தார் சம்பந்தர், ஆ என்ன கொடுமை எனப்பதறினார், உடனே திரு ஆலவாய் மேவிய ஐயனை எண்ணித் துதித்தார், பைந்தமிழ் பதிகம் பாடினார்.
"செய்யனே திரு ஆலவாய் மேவிய
ஐயனே அஞ்சலென்றருள் செய்யெனைப்
பொய்ய ராம் அமணர் கொளுவுஞ்சுடர்
பையவே சென்று பாண்டியற்காகவே - த, வேதம் 3
இதற்கெல்லாம் காரணம் பாண்டிய மன்னன் தான் என உணர்ந்தார் சமணர்கள் இட்ட தீ பையவே சென்று பாணடியற்காக என பாடிய உடனே பாண்டியனை வெப்பு நோய் பற்றியது, வெப்பு நோய்யால் மன்னன் உடல் கருகியது, அனல் பெருகியது, அருகில் எவரும் நெருங்க முடியவில்ைல், என்ன மருந்தும் பயனில்லை, சமணர்கள் மயிற் தொகையால் தடவியும் மந்திரங்கள் பல கூறியும் அரசரின் வெப்பு நோயினை குறைக்க முயற்சித்தார்கள் ஆனாலும் பயனின்றி வெப்பு நோய் கூடியது, நடந்த செய்தியெல்லாம் அறிந்து மிகவும் வேதனைப்பட்டார்கள் அரசியும் மந்திரியாரும், வேந்தனுக்கு வெப்பு நோய் வந்ததை கேட்டனர் பரிதவித்தனர், செய்வதறியாது திகைத்து மன்னனிடம் ஞான சம்பந்தரின் வரவும் அவரின் பெருமையினையும் பக்குவமாக எடுத்துரைத்தனர், அச்செய்தியை கேட்ட மாத்திரத்தில் மன்னனின் வெப்பு நோயின் தாக்கம் குறையும் தன்மையினை மன்னன் உணர்ந்தான்,
எனது வெப்பு நோயை நீக்குபவர் யாரோ அவர் பக்கம் சேர்வேன் என மன்னன் முடிவு செய்தான், அமைச்சரும் அரசியாரும் திருஞானசம்பந்தரிடம் சென்று விழுந்து வணங்கி " பெருமானே சமணர்கள் செய்த தீமை வெப்பு நோயாக மன்னனை பற்றிக் கொண்டது சமணர்களால் அந்நோயை தீர்க்க முடியவில்லை, தேவரீர் உடற் பிணியை அகற்றியருளல் வேண்டும் என கண்ணீர் மல்க விண்ணப்பம் செய்து மன்னனிடம் அழைத்து வந்தார்கள், மன்னரின் எதிரே இருந்த மணிப்பீடத்தில் அமர்ந்தார் சம்பந்தர், சிவஞானச் செல்வரின் பார்வை பட்ட மாத்திரத்தில் வெப்பு நோய் தீவிரம் அடங்கியது, மன்னரின் இடபக்கத்தில் உள்ள நோயை சமணர்களும் வலது பாகத்தில் உள்ள நோயை சம்பந்தரும் நீக்குவது என முடிவு செய்தார்கள், சமணர்கள் தமது மந்திரத்தை சொல்லி மயிற்பீலியால் தடவினார்கள், வெப்பு நோய் மேன்மேலும் வளர்ந்தது,
சம்பந்தர் " மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செநதூர் வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே" எனும் பதிகம் பாடி திருநீற்றை மன்னின் வலப்பக்கத்தில் பூசினார் வெப்பு நோய் இருந்த இடம்தெரியாமல் நீங்கிற்று, இடப்புறத்தில் மேலும் அதிகமாயிற்று, மன்னனின் வேண்டு கோளின்படி இடப்பக்கத்திலும் திருநீற்றைப் பூசினார், மன்னன் உய்ந்தான், சமணர்கள் வெட்கி தலைகுனிந்தார்கள், கண்டுமுட்டி எனக்கூறும் சமணர்கள் திருநீற்றைக்கண்டதும் ஓடி ஒதுங்கினர்,மன்னரும், மங்கையர்கரசியாரும், அமைச்சரும் மனம் மகிழ்நதனர், பாண்டியநாட்டில் சமயம் தழைக்க இவ்வாறு நீர்விட்டு சமயம் தழைக்க செய்தனர்,
தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
ஞானசம்பந்தனின் திருநீற்றுப்பதிகம்
தென்னாடுடைய சிவனே போற்றி என்று பதினென் திருமுறையில் போற்றி புகழப்படும் தென்பாண்டி நாட்டில் சைவ சமயம் வலிவிழந்து சமண சமயம் பரவி சமணர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய நேரத்தில் பாண்டிய மன்னாக இருந்த கூன்பாண்டியன் சமண சமயத்தை தழுவிஇருந்த காரணத்தால் சமணர்களின் ஆதிக்கம் தழைத்தோங்கி நின்றதோடு, திருநீறு பூசிய சைவ சமயத்தை சார்ந்தவர்களைக் கண்டால் சமணர்கள் கண்டுமுட்டி என தீண்டத்தாகாதவர்களாக அவமரியாதை செய்து வந்தனர், அந்நிலையில் பாண்டிய மன்னனின் பட்டத்தரசி மங்கையர்கரசியாரும், அமைச்சராகிய குலச்சிறையாரும் சைவ நெறியில் நின்றார்கள், அத்தருணத்தில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருமறைக்காட்டில் தங்கி இருந்தனர், அப்போது பாண்டியனின் பட்டத்தரசியும் அமைச்சரும் சமணர்களின் ஆதிக்கத்தை பொறுக்க முடியாமல் சைவ சமயத்தை தழைத்திட செய்ய தம் பணியாட்களை அவர்களின் பால் அனுப்பி பாண்டிய நாட்டிற்கு அழைத்து வரும்படி செய்தார்கள், அப்போது அப்பர் பெருமானும் ஞானசம்பந்தரிடம் பாண்டியநாட்டில் சைவம் மறைந்து தீவிர வாத சமணம் ஓங்கி வளர்ந்துள்ள நிலையில் சமணர்கள் எதையும் செய்வார்கள் எனவே நாளும் கோளும் அறிந்து சென்று சைவத்தை நிலைநிறுத்த வேண்டினார், அப்போது நாள் என்செய்யும் கோள் என்செய்யும் நமச்சிவாய என்பதற்கு என கூறி கோளாறு பதிகம் பாடி பணியாட்களிடம் மதுரையில் சைவத்தின் நிலையினையும் அறிந்த பின் பாண்டிய நாட்டு பணியாளர்களுடன் பாண்டியநாட்டு மதுரை சென்றார்,மங்கையர்கரசியாரும் குலச்சிறையாரும் மதுரை சொக்கநாதர் ஆலகயத்தில் சம்பந்தரின் வருகைக்காக காத்து இருந்தனர், ஞானசம்பந்தர் வருகைகண்டு இருவரும் கண்களில் நீர்பொழிய சம்பந்தரின் காலில் விழுந்து வணங்கினர் , பின் அவர்கள் இருவரையும் திருமடத்தில் தங்க வைத்தனர், இதை அறிந்த சமணர்கள் மன்னனிடம் ஒடோடி வந்து " மதுரைக்கு அந்தன சிறுவன் ஒருவன் சிவஞானம் பெற்றவனாம் அவன் சமண சமயத்தை அவதூறு செய்யும் நோக்கில் எங்களை வாதில் வெல்ல வந்துள்ளானாம் ' என வாய்க்கு வந்ததையெல்லாம் மன்னனிடம் கூறினார்கள், இதைக் கேட்ட மன்னன் மனம் கொதித்தது. அவனை வேரிலே கிள்ளியேறிய யாதாவது செய்யுங்கள் என சமண மதத்துறவிகளிடம் கூறினார், உடனே சமணர்கள் தங்கள் மந்திரத்தால் சம்பந்தர் தங்கிய மடம் தீ பிடிக்குமாறு மந்திரம் செபித்தனர், ஆனால் ஆதி மந்திரம் ஐந்தெழுத்து ஓதுவார் பார்க்கும் திசையில் கூட மற்ற மந்திரங்கள் வலிமை நிற்காதல்லவா? சமணர்களின் மந்திரம் பலிக்கமாற் போயிற்று, அடியார்கள் பலர் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இரவோடு இரவாக அம்மடத்திற்கு ஆட்களைக் கொண்டு தீயிட்டார்கள், அப்பாதர்களின் செயலை அறிந்தார் சம்பந்தர், ஆ என்ன கொடுமை எனப்பதறினார், உடனே திரு ஆலவாய் மேவிய ஐயனை எண்ணித் துதித்தார், பைந்தமிழ் பதிகம் பாடினார்.
"செய்யனே திரு ஆலவாய் மேவிய
ஐயனே அஞ்சலென்றருள் செய்யெனைப்
பொய்ய ராம் அமணர் கொளுவுஞ்சுடர்
பையவே சென்று பாண்டியற்காகவே - த, வேதம் 3
இதற்கெல்லாம் காரணம் பாண்டிய மன்னன் தான் என உணர்ந்தார் சமணர்கள் இட்ட தீ பையவே சென்று பாணடியற்காக என பாடிய உடனே பாண்டியனை வெப்பு நோய் பற்றியது, வெப்பு நோய்யால் மன்னன் உடல் கருகியது, அனல் பெருகியது, அருகில் எவரும் நெருங்க முடியவில்ைல், என்ன மருந்தும் பயனில்லை, சமணர்கள் மயிற் தொகையால் தடவியும் மந்திரங்கள் பல கூறியும் அரசரின் வெப்பு நோயினை குறைக்க முயற்சித்தார்கள் ஆனாலும் பயனின்றி வெப்பு நோய் கூடியது, நடந்த செய்தியெல்லாம் அறிந்து மிகவும் வேதனைப்பட்டார்கள் அரசியும் மந்திரியாரும், வேந்தனுக்கு வெப்பு நோய் வந்ததை கேட்டனர் பரிதவித்தனர், செய்வதறியாது திகைத்து மன்னனிடம் ஞான சம்பந்தரின் வரவும் அவரின் பெருமையினையும் பக்குவமாக எடுத்துரைத்தனர், அச்செய்தியை கேட்ட மாத்திரத்தில் மன்னனின் வெப்பு நோயின் தாக்கம் குறையும் தன்மையினை மன்னன் உணர்ந்தான்,
எனது வெப்பு நோயை நீக்குபவர் யாரோ அவர் பக்கம் சேர்வேன் என மன்னன் முடிவு செய்தான், அமைச்சரும் அரசியாரும் திருஞானசம்பந்தரிடம் சென்று விழுந்து வணங்கி " பெருமானே சமணர்கள் செய்த தீமை வெப்பு நோயாக மன்னனை பற்றிக் கொண்டது சமணர்களால் அந்நோயை தீர்க்க முடியவில்லை, தேவரீர் உடற் பிணியை அகற்றியருளல் வேண்டும் என கண்ணீர் மல்க விண்ணப்பம் செய்து மன்னனிடம் அழைத்து வந்தார்கள், மன்னரின் எதிரே இருந்த மணிப்பீடத்தில் அமர்ந்தார் சம்பந்தர், சிவஞானச் செல்வரின் பார்வை பட்ட மாத்திரத்தில் வெப்பு நோய் தீவிரம் அடங்கியது, மன்னரின் இடபக்கத்தில் உள்ள நோயை சமணர்களும் வலது பாகத்தில் உள்ள நோயை சம்பந்தரும் நீக்குவது என முடிவு செய்தார்கள், சமணர்கள் தமது மந்திரத்தை சொல்லி மயிற்பீலியால் தடவினார்கள், வெப்பு நோய் மேன்மேலும் வளர்ந்தது,
சம்பந்தர் " மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செநதூர் வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே" எனும் பதிகம் பாடி திருநீற்றை மன்னின் வலப்பக்கத்தில் பூசினார் வெப்பு நோய் இருந்த இடம்தெரியாமல் நீங்கிற்று, இடப்புறத்தில் மேலும் அதிகமாயிற்று, மன்னனின் வேண்டு கோளின்படி இடப்பக்கத்திலும் திருநீற்றைப் பூசினார், மன்னன் உய்ந்தான், சமணர்கள் வெட்கி தலைகுனிந்தார்கள், கண்டுமுட்டி எனக்கூறும் சமணர்கள் திருநீற்றைக்கண்டதும் ஓடி ஒதுங்கினர்,மன்னரும், மங்கையர்கரசியாரும், அமைச்சரும் மனம் மகிழ்நதனர், பாண்டியநாட்டில் சமயம் தழைக்க இவ்வாறு நீர்விட்டு சமயம் தழைக்க செய்தனர்,
தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எவ்வாறு?
நம் உடம்பிலுள்ள எதிர்மறை சக்திகளை ஆத்ம சக்தியில் அடக்கி ஒடுக்கி உடன்பாட்டு சக்திகளை அபிவிருத்தி செய்து தன் அறிவைக் கொண்டு சமனப்படுத்தி ஒளியை அதாவது ஜோதியை காண்பதே மெய்யறிவின் சாதனையாகும், அஷ்டாங்க யோகத்தின் ஐந்தாவது நிலை " ப்ரத்தியாகாரம்" என்ற சாதனையின் விளக்கத்தையும் அறிய வேண்டும், தன்மனதினை ஒன்று கூட்டவோ, பிரிக்கவோ சக்தி பெற்றவன் தான் ப்ரத்தியாகாரம் எனும் கட்டுப்பாட்டினை அடைய முடியும், இந்த பலன்களை ஆசையுடைய பொருள்களை நிதர்ஸனம் செய்தும், புலன்களை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் பயிற்சியாகும், இதனையே திருவள்ளுவர்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்திர்
ஒழுக்கம் நெறி நின்றார் நீடுவாழ்வார் - என்கிறார்
ஐம்புலங்களை அடக்கி ஒழுக்க நெறி நிற்பவர் நீண்டகாலம் தன்மையர் என்கிறார், இன்னும் ஒருபடி மேல் சென்று பத்திரகரியார் ஆங்காரம் உள்ளக்கி ஐம்புலங்களை சுட்டருத்து தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்று புலம்புகிறார். எனவே தூங்காமல் தூங்கி சுகம் பெற தன் இச்சையை இச்சைப்படி விடாது கட்டுக்குள் கொண்டுவரும் சாதனைதான் ப்ரத்தியாகாரம் என்பது, இப்படி ஆற்றல் ஒன்றுபடுத்தி சாதனை புரிந்தால் எல்லாமே கட்டுக்குள் அடங்கும்.
உடல், உள்ளம், அறிவு இம்மூன்றம்ஒன்றோடொன்று ஒன்றி நின்றால் சாதனையில் வெற்றி பெறமுடியும், இந்திரியங்களையும் பல விஷயங்களிலிருந்தும் விலகி ஆண்டவனிடம் திருப்ப வேண்டும், அப்பர் தேவராத்தில் தலையே நீ வணங்காய், கண்களே இறைவனை காண்க என்றெல்லாம் பாடியிருப்பதும் உடல் உறுப்புகளை பரமேஸ்வரன் பால் ஈடுபடுத்தும் பிரத்தியாகாரமே, இதனால் விஷப்பற்று அறவே நீங்கும், சிவஞான சித்தர் இலக்கண விளக்க பரம்பரை ஸ்ரீ சிதம்பரநாத தேசிகர் உரையில் பின்கண்ட பாடல் அதை விளக்கிறது.
1, சகமார்ககம் புலனொடுங்கி
2,தத்துவ வொளி இரண்டு சலப்பற்று
3,முச்சதுர மூலாதாரங்கள் அகமார்க்க மறிந்து
4,அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்து அனைந்து போய் மேலேற
5,அலர்மதி மண்டலத்தின் முகமார்க்க அமுதுண்டு
6, அலமுட்டத் தேக்கி
7, முழுச் சோதி நினைத்திருந்து
8,தன்முதலாக வினைகளுக்கு
9, மார்க்க அஷ்டாங்கயோக முற்றும்
10, உழத்தலுந்தவர் சிவன் தன் உருவத்தை பெறுவர்,
என்றபடி சகமார்க்கம் புலனொடுக்கம் சாதனையால் நாம் செய்யமுடியாதது எதுவுமில்லை, சகமார்க்கம் என்பது பக்தி மார்க்கத்தினைவிட கஷ்டமானது ஏனெனில் அந்நிலை உலகத்தோடு ஒட்டியும், ஒட்டாமலும் கத்திமேல் உட்கார்ந்து சாதனை புரிவது போல், ஏனனெனின் ஆமை எப்படி புலன்களை நினைத்த மாத்திரத்தில் தன் அவயங்களை உள்ளடக்கி கொள்கிறதோ அதுபோல் புலன்களின் ஆசைகள் நிஷ்காமியம் செய்யக் கூடிய நிலைதான் ப்ரத்தியாகாரம், சைவ சமய குருமார்களில் சுந்தரரர் இரு மனைவியர்கள் இருந்தும் இந்த மார்க்கத்தை அனுஷ்டிக்கிறார் என்றால் அவரின் திண்மை என்னவென்பது? தன்னிலைக்கு கட்டுபட்டு கொண்டுவருபவனுக்கு கைவல்யம் ஆகாதது எதுவுமில்லை, எனவே ஐம்பொறிகளின் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம், என்ற ஐந்தினைதத்துவங்களால் ஒடுக்க வேண்டும், என்று ஒளவை பராட்டியாரும் கூறுகிறார்,
நினைப்பு மறுப்பு நெடும் பசியும் மற்றால்
அனைத்துலகும் வீடாமது - ஒளவை குறள்
தேகத்ததின் கண்ணுண்டாகும் சங்கல்பமும் யாவற்றையும் அறிய வொட்டாது மறைத்திருக்க கூடியது, பசியும் ஒழித்த விடத்த எல்லா உலகுக்கும் தேகமானது உறைவிடமாகும்,
நினைப்பு: சங்கற்ப பலத்ததினால் எண்ணிய கருமத்தை முடிக்கலாம்
ஞானத்தினால் : சங்கற்ப நாசத்தால் மனம் வலவையடையும் பிந்து பலம்படும் ஞான கர்மத்துக்கு உதவி செய்யும்
மறப்பு: மனம் வாக்கு காயங்களாலுண்டாகும், உழைப்புக்கு ஆறுதல் செய்வதில் பேர்பெற்றது.
ஞானத்தினால் மறப்பாற்றால்தான் 14 உலகங்களையும் தன்னையுமறியலாம்,
பசி : பசியானது உணவு சுவை உட்கொள்ளுவதற்கு சமிக்ஞையாக விருப்பத்தோடு உண்ட உணவை ஜீரணித்து அதை பக்குவம் செய்து சுக்கிலம், நாதம், மலமாக பிரிக்கும் பசியின்மை நேரிட்டால் மேற்சொன்னவைகளுக்கு எதிரிடையை உண்டாக்கும்,
ஞானத்தினால் பசி யொழிந்தால் அமுத தன்மை உண்டாகிறது, பலம் தேகபலம் உண்டாகிறது, பஞ்சேந்திரயங்களை அகமுக விவகாரத்தில் செலுத்தும் சூட்சும தத்துவங்களுக்கும் ஸ்தூல தத்துவங்களக்கும் பலத்தை கொடுக்கும் அமிர்த ஊற்று சுரக்கும்
எனவே இறவாமல் வாழும் வழி ஜீவ அமிர்தத்தை பருகுவதே, அந்த அமிர்தம் நம் உடலில் பெருக்கி பசிதாகம் கால ம்ருத்யு ( பற்றாததும் ) என்றும் சிரஞ்சீவியாக வாழும் வழியினை நம் சங்கற்ப பலத்தால் பெற வேண்டும் நாம் இச்சிக்கப்படும் பொருளுடையது ஆனது காமியதவம் அப்படி இச்சிக்கப்படாத விரும்பும் தவம் நிஷ்காமமிய தவம் எனப்படும், காமிய தவம், சித்தியும், நிஷ்காமிய தவம் முத்தியும் கொடுக்கும், வைராக்கியம் என்ற மனேசக்தி பெருகினால் ஆத்ம சாதனையால் வெற்றியடைய முடியும்,
ஆசை அடக்கி ஐம்புலங்களை இழுத்து பிடித்தால் அடங்காத குதிரைகளான புலன்களை கடிவாளம் போட்டு இழுத்து பிடித்து சாதனை புரியலாம், வெளி விவகாரத்தில் இந்திரியங்களை பலத்காரமாக உள்முகப்டுத்துதல் ப்ரத்தியாகாரம், எதிலும் பலனை எதிர்பார்க்காமல் கரும பலனை அனுஷ்சித்து ப்ரத்தியாகாரம், எதை பார்த்தாலுமு அதையெல்லாம் ஆத்மா என பாவிப்பது ப்ரத்தியாகாரம்,
எனவே ஆசைஅடக்கி ஐம்புலங்களையும் வென்று, மனத்தினை கட்டுப்டுத்தி சும்மா இருந்து சுகம் பெறுவதே தூங்காமல் தூங்கும் நிலை,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
சுயநலம் உள்ளவைர கஷ்டேம!
பக்திேவறு, கர்மம் ேவறு அல்ல; கர்மம் ேவறு, ஞானம் ேவறு அல்ல. அைனத்தும்
ஒேர குறிக்ேகாளான இைறவைன அைடவதற்கான வழிகேள ஆகும். அவரவர்
தன்ைமக்கு ஏற்ப எந்த வழிையப் பின்பற்றினாலும் இறுதியில் அைடயேவண்டிய
லட்சியம் எல்ேலாருக்கும் ஒன்றுதான்.
* வாழ்வில் நாம் படும் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் அடிப்பைட காரணம்
நான் ேவறு, நீ ேவறு என்ற இரட்ைட மேனாபாவம் தான். மனதில் சுயநலம்
இருக்கும் வைர துன்பத்திலிருந்து விலக முடியாது. சுயநலம் உள்ள இடத்தில்
என்றும் அைமதி இருப்பதில்ைல.
* குரு ஒருவைரத் ேதடு. அவரது திருவடித் தாமைரகளில் திடமான பக்தி
ெகாண்டவனாகிப் பிறவித் துன்பத்திலிருந்து விைரவில் விடுபடு. குருவருளில்
நம்பிக்ைக ெகாண்டு மனைத அடக்கப் பழகினால், உள்ளத்தில் உைறந்திருக்கும்
ெதய்வத்ைதக் காணலாம்.
* ெசல்வத்தாலும், சுற்றத்தாலும், இளைமயாலும் யாரும் கர்வம் ெகாள்ளாதீர்கள்.
என்ைறக்காவது ஒருநாள் இைவெயல்லாம் நம்ைம விட்டு விலகிச் ெசன்று
விடும். அதனால், வாழ்நாளுக்குள் கடவுைள அறிய முற்படுங்கள்.
* குழந்ைதகள் விைளயாடிக் களிக்கிறார்கள். வாலிபர்கள் ெபண்ணின்பத்ைத
நாடுகிறார்கள். வேயாதிகர்கள் கவைலயில் கழிக்கிறார்கள். ஆனால், கடவுளின்
மீது பற்றுைவக்க மறந்து விடுகிறார்கள்.
நாம் சிவம் என்பதை குறிக்கும் விதமாக நமசிவய என்றார்கள். காரணம் நாம் ஐந்து பொருள்களின் தொகுப்பு. ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பொருள் ந என்பது நீரை, ம என்பது மண்ணை, சி என்பது நெருப்பை, வ என்பது காற்றை, யா என்பது வானை குறிக்க அடையாளமாக வைத்து பயன்படுத்தினார்கள்.
படமுடியாது இனித் துயரம் படமுடியாது
பட்டது எல்லாம் போதும் இந்தப் பயம் தீர்த்து இப்பொழுது என்
உடல் உயிர் ஆதியை எலாம் நீ எடுத்துக் கொண்டு உன்
உடல் உயிர் ஆதியை எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய்
வடலுறு சிற்றம் பலத்தே வாழ்வாய் என் கண்ணுன்
மணியே என் குரு மணியே மாணிக்க மணியே
நடன சிகாமணியே என் நவமணியே ஞான
நன்மணியே பொன் மணியே நடராஜ மணியே ... வள்ளல்பெருமான்
நம் உடம்பிலுள்ள எதிர்மறை சக்திகளை ஆத்ம சக்தியில் அடக்கி ஒடுக்கி உடன்பாட்டு சக்திகளை அபிவிருத்தி செய்து தன் அறிவைக் கொண்டு சமனப்படுத்தி ஒளியை அதாவது ஜோதியை காண்பதே மெய்யறிவின் சாதனையாகும், அஷ்டாங்க யோகத்தின் ஐந்தாவது நிலை " ப்ரத்தியாகாரம்" என்ற சாதனையின் விளக்கத்தையும் அறிய வேண்டும், தன்மனதினை ஒன்று கூட்டவோ, பிரிக்கவோ சக்தி பெற்றவன் தான் ப்ரத்தியாகாரம் எனும் கட்டுப்பாட்டினை அடைய முடியும், இந்த பலன்களை ஆசையுடைய பொருள்களை நிதர்ஸனம் செய்தும், புலன்களை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் பயிற்சியாகும், இதனையே திருவள்ளுவர்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்திர்
ஒழுக்கம் நெறி நின்றார் நீடுவாழ்வார் - என்கிறார்
ஐம்புலங்களை அடக்கி ஒழுக்க நெறி நிற்பவர் நீண்டகாலம் தன்மையர் என்கிறார், இன்னும் ஒருபடி மேல் சென்று பத்திரகரியார் ஆங்காரம் உள்ளக்கி ஐம்புலங்களை சுட்டருத்து தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்று புலம்புகிறார். எனவே தூங்காமல் தூங்கி சுகம் பெற தன் இச்சையை இச்சைப்படி விடாது கட்டுக்குள் கொண்டுவரும் சாதனைதான் ப்ரத்தியாகாரம் என்பது, இப்படி ஆற்றல் ஒன்றுபடுத்தி சாதனை புரிந்தால் எல்லாமே கட்டுக்குள் அடங்கும்.
உடல், உள்ளம், அறிவு இம்மூன்றம்ஒன்றோடொன்று ஒன்றி நின்றால் சாதனையில் வெற்றி பெறமுடியும், இந்திரியங்களையும் பல விஷயங்களிலிருந்தும் விலகி ஆண்டவனிடம் திருப்ப வேண்டும், அப்பர் தேவராத்தில் தலையே நீ வணங்காய், கண்களே இறைவனை காண்க என்றெல்லாம் பாடியிருப்பதும் உடல் உறுப்புகளை பரமேஸ்வரன் பால் ஈடுபடுத்தும் பிரத்தியாகாரமே, இதனால் விஷப்பற்று அறவே நீங்கும், சிவஞான சித்தர் இலக்கண விளக்க பரம்பரை ஸ்ரீ சிதம்பரநாத தேசிகர் உரையில் பின்கண்ட பாடல் அதை விளக்கிறது.
1, சகமார்ககம் புலனொடுங்கி
2,தத்துவ வொளி இரண்டு சலப்பற்று
3,முச்சதுர மூலாதாரங்கள் அகமார்க்க மறிந்து
4,அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்து அனைந்து போய் மேலேற
5,அலர்மதி மண்டலத்தின் முகமார்க்க அமுதுண்டு
6, அலமுட்டத் தேக்கி
7, முழுச் சோதி நினைத்திருந்து
8,தன்முதலாக வினைகளுக்கு
9, மார்க்க அஷ்டாங்கயோக முற்றும்
10, உழத்தலுந்தவர் சிவன் தன் உருவத்தை பெறுவர்,
என்றபடி சகமார்க்கம் புலனொடுக்கம் சாதனையால் நாம் செய்யமுடியாதது எதுவுமில்லை, சகமார்க்கம் என்பது பக்தி மார்க்கத்தினைவிட கஷ்டமானது ஏனெனில் அந்நிலை உலகத்தோடு ஒட்டியும், ஒட்டாமலும் கத்திமேல் உட்கார்ந்து சாதனை புரிவது போல், ஏனனெனின் ஆமை எப்படி புலன்களை நினைத்த மாத்திரத்தில் தன் அவயங்களை உள்ளடக்கி கொள்கிறதோ அதுபோல் புலன்களின் ஆசைகள் நிஷ்காமியம் செய்யக் கூடிய நிலைதான் ப்ரத்தியாகாரம், சைவ சமய குருமார்களில் சுந்தரரர் இரு மனைவியர்கள் இருந்தும் இந்த மார்க்கத்தை அனுஷ்டிக்கிறார் என்றால் அவரின் திண்மை என்னவென்பது? தன்னிலைக்கு கட்டுபட்டு கொண்டுவருபவனுக்கு கைவல்யம் ஆகாதது எதுவுமில்லை, எனவே ஐம்பொறிகளின் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம், என்ற ஐந்தினைதத்துவங்களால் ஒடுக்க வேண்டும், என்று ஒளவை பராட்டியாரும் கூறுகிறார்,
நினைப்பு மறுப்பு நெடும் பசியும் மற்றால்
அனைத்துலகும் வீடாமது - ஒளவை குறள்
தேகத்ததின் கண்ணுண்டாகும் சங்கல்பமும் யாவற்றையும் அறிய வொட்டாது மறைத்திருக்க கூடியது, பசியும் ஒழித்த விடத்த எல்லா உலகுக்கும் தேகமானது உறைவிடமாகும்,
நினைப்பு: சங்கற்ப பலத்ததினால் எண்ணிய கருமத்தை முடிக்கலாம்
ஞானத்தினால் : சங்கற்ப நாசத்தால் மனம் வலவையடையும் பிந்து பலம்படும் ஞான கர்மத்துக்கு உதவி செய்யும்
மறப்பு: மனம் வாக்கு காயங்களாலுண்டாகும், உழைப்புக்கு ஆறுதல் செய்வதில் பேர்பெற்றது.
ஞானத்தினால் மறப்பாற்றால்தான் 14 உலகங்களையும் தன்னையுமறியலாம்,
பசி : பசியானது உணவு சுவை உட்கொள்ளுவதற்கு சமிக்ஞையாக விருப்பத்தோடு உண்ட உணவை ஜீரணித்து அதை பக்குவம் செய்து சுக்கிலம், நாதம், மலமாக பிரிக்கும் பசியின்மை நேரிட்டால் மேற்சொன்னவைகளுக்கு எதிரிடையை உண்டாக்கும்,
ஞானத்தினால் பசி யொழிந்தால் அமுத தன்மை உண்டாகிறது, பலம் தேகபலம் உண்டாகிறது, பஞ்சேந்திரயங்களை அகமுக விவகாரத்தில் செலுத்தும் சூட்சும தத்துவங்களுக்கும் ஸ்தூல தத்துவங்களக்கும் பலத்தை கொடுக்கும் அமிர்த ஊற்று சுரக்கும்
எனவே இறவாமல் வாழும் வழி ஜீவ அமிர்தத்தை பருகுவதே, அந்த அமிர்தம் நம் உடலில் பெருக்கி பசிதாகம் கால ம்ருத்யு ( பற்றாததும் ) என்றும் சிரஞ்சீவியாக வாழும் வழியினை நம் சங்கற்ப பலத்தால் பெற வேண்டும் நாம் இச்சிக்கப்படும் பொருளுடையது ஆனது காமியதவம் அப்படி இச்சிக்கப்படாத விரும்பும் தவம் நிஷ்காமமிய தவம் எனப்படும், காமிய தவம், சித்தியும், நிஷ்காமிய தவம் முத்தியும் கொடுக்கும், வைராக்கியம் என்ற மனேசக்தி பெருகினால் ஆத்ம சாதனையால் வெற்றியடைய முடியும்,
ஆசை அடக்கி ஐம்புலங்களை இழுத்து பிடித்தால் அடங்காத குதிரைகளான புலன்களை கடிவாளம் போட்டு இழுத்து பிடித்து சாதனை புரியலாம், வெளி விவகாரத்தில் இந்திரியங்களை பலத்காரமாக உள்முகப்டுத்துதல் ப்ரத்தியாகாரம், எதிலும் பலனை எதிர்பார்க்காமல் கரும பலனை அனுஷ்சித்து ப்ரத்தியாகாரம், எதை பார்த்தாலுமு அதையெல்லாம் ஆத்மா என பாவிப்பது ப்ரத்தியாகாரம்,
எனவே ஆசைஅடக்கி ஐம்புலங்களையும் வென்று, மனத்தினை கட்டுப்டுத்தி சும்மா இருந்து சுகம் பெறுவதே தூங்காமல் தூங்கும் நிலை,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
சுயநலம் உள்ளவைர கஷ்டேம!
பக்திேவறு, கர்மம் ேவறு அல்ல; கர்மம் ேவறு, ஞானம் ேவறு அல்ல. அைனத்தும்
ஒேர குறிக்ேகாளான இைறவைன அைடவதற்கான வழிகேள ஆகும். அவரவர்
தன்ைமக்கு ஏற்ப எந்த வழிையப் பின்பற்றினாலும் இறுதியில் அைடயேவண்டிய
லட்சியம் எல்ேலாருக்கும் ஒன்றுதான்.
* வாழ்வில் நாம் படும் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் அடிப்பைட காரணம்
நான் ேவறு, நீ ேவறு என்ற இரட்ைட மேனாபாவம் தான். மனதில் சுயநலம்
இருக்கும் வைர துன்பத்திலிருந்து விலக முடியாது. சுயநலம் உள்ள இடத்தில்
என்றும் அைமதி இருப்பதில்ைல.
* குரு ஒருவைரத் ேதடு. அவரது திருவடித் தாமைரகளில் திடமான பக்தி
ெகாண்டவனாகிப் பிறவித் துன்பத்திலிருந்து விைரவில் விடுபடு. குருவருளில்
நம்பிக்ைக ெகாண்டு மனைத அடக்கப் பழகினால், உள்ளத்தில் உைறந்திருக்கும்
ெதய்வத்ைதக் காணலாம்.
* ெசல்வத்தாலும், சுற்றத்தாலும், இளைமயாலும் யாரும் கர்வம் ெகாள்ளாதீர்கள்.
என்ைறக்காவது ஒருநாள் இைவெயல்லாம் நம்ைம விட்டு விலகிச் ெசன்று
விடும். அதனால், வாழ்நாளுக்குள் கடவுைள அறிய முற்படுங்கள்.
* குழந்ைதகள் விைளயாடிக் களிக்கிறார்கள். வாலிபர்கள் ெபண்ணின்பத்ைத
நாடுகிறார்கள். வேயாதிகர்கள் கவைலயில் கழிக்கிறார்கள். ஆனால், கடவுளின்
மீது பற்றுைவக்க மறந்து விடுகிறார்கள்.
நாம் சிவம் என்பதை குறிக்கும் விதமாக நமசிவய என்றார்கள். காரணம் நாம் ஐந்து பொருள்களின் தொகுப்பு. ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பொருள் ந என்பது நீரை, ம என்பது மண்ணை, சி என்பது நெருப்பை, வ என்பது காற்றை, யா என்பது வானை குறிக்க அடையாளமாக வைத்து பயன்படுத்தினார்கள்.
படமுடியாது இனித் துயரம் படமுடியாது
பட்டது எல்லாம் போதும் இந்தப் பயம் தீர்த்து இப்பொழுது என்
உடல் உயிர் ஆதியை எலாம் நீ எடுத்துக் கொண்டு உன்
உடல் உயிர் ஆதியை எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய்
வடலுறு சிற்றம் பலத்தே வாழ்வாய் என் கண்ணுன்
மணியே என் குரு மணியே மாணிக்க மணியே
நடன சிகாமணியே என் நவமணியே ஞான
நன்மணியே பொன் மணியே நடராஜ மணியே ... வள்ளல்பெருமான்
சிவம் காக்கும்
சிவம் காக்கும்
நாகேந்திரன் திடுக்கிட்டார். அவருடைய அதுநாள் வரையிலான ஜாதகம் படித்தலில் இப்படி ஓர் அதிர்ச்சி அவருக்கு ஏற்பட்டதேயில்லை. மீண்டும் கட் டங்களைத் தன் ஆள்காட்டி விரலால் தடவித்தடவி, சுற்றிச் சுற்றி வந்து சோதித்தார். இல்லை; வாய்ப்பே இல்லை. அன்றிரவு அந்த ஜாதகக்காரன் மரணத்தைத் தழுவுவதை யாராலும் தடுக்கமுடியாது. இன்னும் சில மணிநேரத்தில் தன் விதி முடியப்போவதை உணராமல் அவன்தான் எவ்வளவு வெகுளியாக அவரை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்! அவனிடம் எப்படி உண்மை யைச் சொல்வது? தன்னுடைய தர்மசங்கடத்தை மிகவும் உன்னிப்பாக அவனுடைய ஜாதகத்தை ஆராய்வது போன்ற முகபாவனையில் மறைத்துக் கொண்டார் நாகேந்திரன்.
அவனைத் தவிர்க்க வேண்டும். இன்னும் ஒரு சில மணிநேரங்களுக்குள் அவனுக்குதான் என்ன நற்பயன்கள் விளைந்துவிடப் போகின்றன? அப்ப டியே விளைந்தாலும் அதை அனுபவிப்பதற்குள்தான் அவனுடைய வாழ்வு முடிந்துவிடுமே! ஆனால் இந்த துர்ப்பலனைத் தன் வாயால் சொல்லத்தான் வேண்டுமா? தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவனைப் பார்த்து, “இந்தாப்பா, உன்னோட ஜாதகத்தை நான் ரொம்பவும் அலசிப்பார்க்க வேண்டியிருக்கு. அதனால் இப்ப உடனே உனக்கு உன் ஜாதகப் பலன்களை முழுமையாகச் சொல்ல என்னால் முடியலே. அதனால நாளைக்குக் கார்த்தால நீ வா. உனக்கு விவரமா சொல்றேன்” என்று கூறி அனுப்பி வைத்தார்.
அவன் போனதும், நாகேந்திரனின் மனைவி அவரை எதிர்கொண்டாள். “நீங்க என்ன சொன்னாலும் அது நடக்கும். ஒரு ஜாதகத்தைப் படித்து பலிக் கக்கூடிய பலனா சொல்ற உங்க வாய், அவனை நாளைக்கு வரச்சொல்லியிருக்கு. அவனோட ஜாதகத்தை நீங்க கூட்டி, கழிச்சுக் கணக்குப் போட்டுத் தடுமாறிண்டிருந்ததை நான் உள்ளேருந்து கவனிச்சுண்டுதான் வந்தேன். அவனை அனுப்பினதுக்கும் ஏதோ உள்ளர்த்தம் இருக்கு. ஏன், அவனுக்கு என்ன கெடுதல் நேரப்போறது?” என்று பதைபதைப்புடன் கேட்டாள். “கெடுதலா? இந்த ஜாதகப்படி அவன் இன்னிக்கு ராத்திரியே எமனுக்கு விருந்தாளியாய் போகப்போறான். அதை என் வாயால சொல்ல எனக்குத் திராணியில்லே. அதான், இன்றுபோய், நாளை வான்னுட்டேன்” தயங்கியபடி சொன்னார் நாகேந்திரன்.
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
“அடக்கடவுளே!” என்று பதறித் துடித்தாள் மனைவி. “நாளைக்கா வரச் சொன்னீங்க? அப்படியானால் அவன் ஜாதகப்படியான மரண சம்பவம் இன் னிக்கு ராத்திரி நடக்காதா? உங்க வாக்கு இதுவரைக்கும் பலிச்சது போல, அவன் நாளைக்கு நிச்சயம் வருவானே...” “அதெப்படி, அதெப்படி?” நாகேந்திரன் தடுமாறினார். என் வாக்கு பலிக்கணும்னா அவன் நாளைக்கு வரணும். அவன் ஜாதகம் பலிக்குமானா அவனால வரமுடியாது. அதாவது, என் கணக்கு சரியாகும். கணக்கு சரியாகுமா; வாக்கு பலிக்குமா? மொத்தத்தில் அன்றிரவு அவருக்கும் சரி, அவருடைய மனைவிக்கும் சரி, தூக்கம் போச்சு! விஜயன் தன் கிராமத்தை நோக்கி நடந்தான்.
மாலை வேளை மயங்கிக் கொண்டிருந்தது. இரவுக்குள் கிராமத்துக்குப் போய்விடலாம். இரவு தூங்கிவிட்டு, காலையில் மீண்டும் புறப்பட்டு ஜோதிட ரைப் பார்க்க வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டான். இருட்டு கருமையை அதிகரித்துக் கொண்டே வந்தது. இருட்டுக்குக் கார்மேகமும் துணை புரிந்தது. நட்சத்திரங்களும் சந்திரனும் மேகங்களை ஊடுருவ முடியாமல் தவித்தன. கருமை வலுக்க வலுக்க, அந்தப் பிராந்தியமே கொஞ்சம் சொஞ்சமாகக் குளுமைக்கு வந்தது. சில்லென்று வீசிய காற்று, மண்வாசனையையும் சுமந்து வந்தது. மழை, பன்னீர்த்துளித் தூறலாய் சுகமாய்த்தான் ஆரம்பித்தது. ஆனால் அதுவே நீள் கம்பிகளாகி வானத்தையும் பூமியையும் இணைக்க ஆரம்பித்த போதுதான் அவன் புகலிடம் தேடினான். மழையோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொண்டு அவனை விரட்டி மகிழ்ந்தன.
அதோ! ஒரு மண்டபம். பாழடைந்த மண்டபம்தான். ஆனாலும் பரவாயில்லை. ஆபத்துக்குப் பாவமில்லை. நனையாமல் தன்னைக் காத்துக்கொண்டால் தான் மறுநாள் மீண்டும் வந்து ஜோதிடரைப் பார்க்க முடியும். ஒரு வேளை மழை, குளிர் காரணமாக உடல் சுகவீனமுற்று அவரைப் பார்க்க முடியாம லேயே போய் விடுமோ? அவன் கண்களில் இப்போது மழை. ஆனால் ஒதுங்கப் போன இடமும் அவனைப் பார்த்து கேலி செய்தது. கலகலத்துப் போயிருந்த அந்தப் பாழடைந்த மண்டபத்தின் விரிசல்களினூடே மின்னல் அவனை மிரட்டியது. ஓர் இடி விழுந்தாலும் போதும் பொலபொலவென்று உதிர்ந்துவிடும் அந்த மண்டபம்.
ஆனால் அந்த மண்டபத்துக்குள்ளே- அது என்ன பீடம்? ஓ! அது ஒரு சிவலிங்கம். என்ன கொடுமை இது? சிலந்திக்கூடுகள் தம் இழைகளால் லிங்கத்தைச் சுற்றிக்கொண்டு, எந்த மார்க்கண்டேயனுக்காகப் போரிட்டுக் கொண்டிருக்கின்றன?
எமனுடைய பாசக் கயிறு போலத் தோற்றமளித்த அந்த சிலந்தி வலைப்பின்னல்களை அவன் தன் கைகளாலேயே அறுத்து அகற்றினான். லிங்கத்தின் மீது படிந்திருந்த தூசிகளும் தும்பும், மேலே நேராக விதான ஓட்டை வழியாக விழுந்து கொண்டிருந்த மழைத்தண்ணீரில் கரைந்தோடி லிங்கத்திற்குப் புதுப்பொலிவு கொடுத்துக் கொண்டிருந்தது. “அடடா... இந்த சிவாலயம் இப்படி எழில்கெட்டுப் போயிருக்கிறதே! எனக்கு மட்டும் வசதி இருந்தால், இந்த ஆலயத்தை உடனே புனருத்தாரணம் செய்வேனே!” என்று அங்கலாயத்துப் புழுங்கினான் விஜயன். நான் உழைப்பேன். அதிகம் சம்பாதிப்பேன். என் வருவாயைக் கொண்டு இந்தப் பாழடைந்த மண்டபத்தைப் புதுப்பிப்பேன். இந்த சிவலிங்கத்தைத் தூய்மைப்படுத்துவேன்.
மண்டபத்தைச் சுற்றிலும் நந்தவனம் அமைப்பேன். ராஜகோபுரம் கட்டுவேன். கோபுரம், ராஜகோபுரம், உட்பிராகாரங்கள், பெரியமணி மண்டபம், புதுப்பிக்கப்பட்ட ஆவுடையார், அதன்மீது புதுமெருகு கொண்ட சிவலிங்கம்... அடடா... புதிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய் வேன். மங்கல ஒலி முழங்க, வேதியர் புடைசூழ திருக்குடம் ஏந்தி கோயிலை பவனி வருவேன். சாரத்தில் ஏறி திருமஞ்சனம் செய்வித்து கும்பாபிஷே கம் செய்வேன். சுற்றுவட்டார கிராமத்து மக்களெல்லாம் திரண்டு வந்து கூடுவார்கள். அடடா... அப்போதுதான் எவ்வளவு பிரமாண்டமாக இந்தக் கோயில் வளர்ந்திருக்கும்! எத்தனை லட்சம் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவார்கள்! அவர்களுடைய துயரெல்லாவற்றையும் இங்கு எழுந்தருளியி ருக்கும் எம்பெருமான் எப்படியெல்லாம் தீர்த்துவைப்பார்! எம் நாயகன்தான் எவ்வளவு கம்பீரமாக கொலுவீற்றிருப்பார்!
தினசரி ஆகமங்கள் என்ன, திரு விழாக்கள் என்ன, பண்டிகைகள் என்ன, எவ்வளவு கோலாகலமாக இந்தக் கோயில் கொண்டாடப்படும்! எவ்வளவோ தருமங்கள் இக்கோயில் மூலமா கச் செய்யப்படும்! அதில் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும்தான் எத்தனை ஆயிரம்பேர் பயனடைவார்கள்.விஜயனின் கற்பனை எல்லை கடந்து போயிற்று. மானசீகமாகவே கோயில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்திவிட்டான். அந்த சிவனுக்கு பிரதோஷ காலத் தில் பாலால், பன்னீரால், பச்சரிசிமாவால், கரும்புச்சாறால் அபிஷேகம் பண்ணி ஆனந்தம் கொண்டான். பளீரென்று ஒரு மின்னல். கற்பனை கலைந்தது. அதிர்ச்சியுடன் கண் விழித்தான். விரிசல் விட்ட விதானத்திலிருந்து மின்னல் பேரொளி. அந்த ஒளியில் அவன் கண்டதுதான் என்ன?
மிகப் பெரியதாகப் படமெடுத்தபடி அவனைப் பார்த்து சீறிக்கொண்டிருந்தது ஒரு கருநாகப் பாம்பு. அவன் சுதாரித்துக் கொள்வதற்குள் எம்பி அவன் மீது பாய்ந்தது.
பளிச்சென்று ஒதுங்கி, அந்த மண்டபத்தைவிட்டு வெளியே ஓடி வந்து விழுந்தான் விஜயன். பேரிடி ஒன்று விழுந்தது. அந்த அதிர்ச்சியில் மண்டபம் கிடுகிடுத்து, லேசாக முட்டு கொடுத்து கொண்டிருந்த தூண்கள் நழுவ, ஏற்கனவே சிதிலமடைந்திருந்த மேல்விதானம் அப்படியே ‘பொக்’கென்று கீழே விழுந்தது. எந்த பாதிப்பும் இல்லாமல் சிவலிங்கம் மட்டும், கொட்டும் மழை அபிஷேகத்தில் திளைத்தபடி அவனைப் பார்த்துப் பாசமாய் சிரித்தது. அப்போதைக்குத் தான் உயிர் தப்பிவிட்டாலும், மறுநாள் பொழுது விடிந்ததும் ஜோதிடரைப் போய்பார்த்து அவர் குறித்துக் கொடுக்கும் ஆகம விதி களின்படி இந்தக் கோயிலைக் கட்டி, கும்பாபிஷேகமும் செய்ய வேண்டும் என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டான் விஜயன்.
தன் கிராமத்தை நோக்கி மழையையும் பொருட்படுத்தாமல் நடந்தான். பொழுது புலர்ந்தது. வாசல் கதவைத் திறந்த நாகேந்திரன் திடுக்கிட்டார். வாசலில் காத்திருப்பது யார்? நேற்று யாருடைய ஜாதகத்தைப் படித்து யாருடைய விதி நேற்றோடு முடிந்ததென்று மனசுக்குள் கணக்குப் போட்டு அனுப்பி வைத்தாரோ, அதே கிராமத்தான். இவன் சாகவில்லை. என் கணக்கு தப்பா? இதுநாள் வரை நான் படித்த ஜோதிடக்கலை, தன் அனுபவம், இதுவரை கொஞ்சம்கூடப் பொய்க்காத தன் கணிப்பு, அதெல்லாம், அந்த ஜோதிட அறிவெல்லாம் இவனுடன் ஏற்பட்ட அனுபவத்தில் மாயையாகிவிட்டதா? படித்ததெல்லாம் வீணா? ஆனாலும் அவனை வரவேற்று, முன்னறையில் அமர்த்தி, தன் ஜோதிட ஆய்வு கூடத்திற்குப் போனார் நாகேந்திரன்.
உயரே வைத்திருக்கும் அவனு டைய ஜாதகத்தை எம்பி எடுக்க முனைந்தபோது ஒரு ஓலைச்சுவடி கீழே விழுந்தது. விழுந்து பிரிந்தது. குனிந்து அதை எடுக்கப்போன நாகேந்திரன், பளிச்சென்று தெரிந்த வாசகங்களைப் படித்தார். “எவன் ஒருவன் மானசீகமாக சிவன் கோயிலுக்கு ராஜ கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்கிறானோ அவனுக்கு மரணம் தள்ளிப்போகிறது.” உடலே சிலிர்த்தது அவருக்கு. விஜயன் மரணத்தை அப்போதைக்கு வென்றுவிட்டான். அப்படியானால் அவன் மானசீகமாக சிவன் கோயில் ஒன்றிற்கு கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறான். ஆவல் பொறுக்க மாட்டாமல் அவன் தன்னை சந்தித்த இரண்டு வேளைகளுக்கு இடையே நடந்ததென்ன என்று கேட்டார்.
விஜயன் விரிவாக நடந்ததை விளக்கிச் சொன்னான். தன்னைத் தழுவி இறையருள் வேண்டிய மார்க்கண்டேயனை யமனுடைய பாசக்கயிற்றிலிருந்து மீட்டார் சிவன். விஜயனைப் பொறுத்தவரை தன்மீது படர்ந்திருந்த சிலந்தி வலைக் கயிற்றை அறுத்துத் தள்ளிய சேவைக்காக அவனை மண்டப இடிபாட்டிலிருந்து விரட்டி அவன் உயிரையும் காத்திருக்கிறார் என்பதை ஜோதிடர் நாகேந்திரன் புரிந்து கொண்டார்.
சிவம் காக்கும்
நாகேந்திரன் திடுக்கிட்டார். அவருடைய அதுநாள் வரையிலான ஜாதகம் படித்தலில் இப்படி ஓர் அதிர்ச்சி அவருக்கு ஏற்பட்டதேயில்லை. மீண்டும் கட் டங்களைத் தன் ஆள்காட்டி விரலால் தடவித்தடவி, சுற்றிச் சுற்றி வந்து சோதித்தார். இல்லை; வாய்ப்பே இல்லை. அன்றிரவு அந்த ஜாதகக்காரன் மரணத்தைத் தழுவுவதை யாராலும் தடுக்கமுடியாது. இன்னும் சில மணிநேரத்தில் தன் விதி முடியப்போவதை உணராமல் அவன்தான் எவ்வளவு வெகுளியாக அவரை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்! அவனிடம் எப்படி உண்மை யைச் சொல்வது? தன்னுடைய தர்மசங்கடத்தை மிகவும் உன்னிப்பாக அவனுடைய ஜாதகத்தை ஆராய்வது போன்ற முகபாவனையில் மறைத்துக் கொண்டார் நாகேந்திரன்.
அவனைத் தவிர்க்க வேண்டும். இன்னும் ஒரு சில மணிநேரங்களுக்குள் அவனுக்குதான் என்ன நற்பயன்கள் விளைந்துவிடப் போகின்றன? அப்ப டியே விளைந்தாலும் அதை அனுபவிப்பதற்குள்தான் அவனுடைய வாழ்வு முடிந்துவிடுமே! ஆனால் இந்த துர்ப்பலனைத் தன் வாயால் சொல்லத்தான் வேண்டுமா? தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவனைப் பார்த்து, “இந்தாப்பா, உன்னோட ஜாதகத்தை நான் ரொம்பவும் அலசிப்பார்க்க வேண்டியிருக்கு. அதனால் இப்ப உடனே உனக்கு உன் ஜாதகப் பலன்களை முழுமையாகச் சொல்ல என்னால் முடியலே. அதனால நாளைக்குக் கார்த்தால நீ வா. உனக்கு விவரமா சொல்றேன்” என்று கூறி அனுப்பி வைத்தார்.
அவன் போனதும், நாகேந்திரனின் மனைவி அவரை எதிர்கொண்டாள். “நீங்க என்ன சொன்னாலும் அது நடக்கும். ஒரு ஜாதகத்தைப் படித்து பலிக் கக்கூடிய பலனா சொல்ற உங்க வாய், அவனை நாளைக்கு வரச்சொல்லியிருக்கு. அவனோட ஜாதகத்தை நீங்க கூட்டி, கழிச்சுக் கணக்குப் போட்டுத் தடுமாறிண்டிருந்ததை நான் உள்ளேருந்து கவனிச்சுண்டுதான் வந்தேன். அவனை அனுப்பினதுக்கும் ஏதோ உள்ளர்த்தம் இருக்கு. ஏன், அவனுக்கு என்ன கெடுதல் நேரப்போறது?” என்று பதைபதைப்புடன் கேட்டாள். “கெடுதலா? இந்த ஜாதகப்படி அவன் இன்னிக்கு ராத்திரியே எமனுக்கு விருந்தாளியாய் போகப்போறான். அதை என் வாயால சொல்ல எனக்குத் திராணியில்லே. அதான், இன்றுபோய், நாளை வான்னுட்டேன்” தயங்கியபடி சொன்னார் நாகேந்திரன்.
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
“அடக்கடவுளே!” என்று பதறித் துடித்தாள் மனைவி. “நாளைக்கா வரச் சொன்னீங்க? அப்படியானால் அவன் ஜாதகப்படியான மரண சம்பவம் இன் னிக்கு ராத்திரி நடக்காதா? உங்க வாக்கு இதுவரைக்கும் பலிச்சது போல, அவன் நாளைக்கு நிச்சயம் வருவானே...” “அதெப்படி, அதெப்படி?” நாகேந்திரன் தடுமாறினார். என் வாக்கு பலிக்கணும்னா அவன் நாளைக்கு வரணும். அவன் ஜாதகம் பலிக்குமானா அவனால வரமுடியாது. அதாவது, என் கணக்கு சரியாகும். கணக்கு சரியாகுமா; வாக்கு பலிக்குமா? மொத்தத்தில் அன்றிரவு அவருக்கும் சரி, அவருடைய மனைவிக்கும் சரி, தூக்கம் போச்சு! விஜயன் தன் கிராமத்தை நோக்கி நடந்தான்.
மாலை வேளை மயங்கிக் கொண்டிருந்தது. இரவுக்குள் கிராமத்துக்குப் போய்விடலாம். இரவு தூங்கிவிட்டு, காலையில் மீண்டும் புறப்பட்டு ஜோதிட ரைப் பார்க்க வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டான். இருட்டு கருமையை அதிகரித்துக் கொண்டே வந்தது. இருட்டுக்குக் கார்மேகமும் துணை புரிந்தது. நட்சத்திரங்களும் சந்திரனும் மேகங்களை ஊடுருவ முடியாமல் தவித்தன. கருமை வலுக்க வலுக்க, அந்தப் பிராந்தியமே கொஞ்சம் சொஞ்சமாகக் குளுமைக்கு வந்தது. சில்லென்று வீசிய காற்று, மண்வாசனையையும் சுமந்து வந்தது. மழை, பன்னீர்த்துளித் தூறலாய் சுகமாய்த்தான் ஆரம்பித்தது. ஆனால் அதுவே நீள் கம்பிகளாகி வானத்தையும் பூமியையும் இணைக்க ஆரம்பித்த போதுதான் அவன் புகலிடம் தேடினான். மழையோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொண்டு அவனை விரட்டி மகிழ்ந்தன.
அதோ! ஒரு மண்டபம். பாழடைந்த மண்டபம்தான். ஆனாலும் பரவாயில்லை. ஆபத்துக்குப் பாவமில்லை. நனையாமல் தன்னைக் காத்துக்கொண்டால் தான் மறுநாள் மீண்டும் வந்து ஜோதிடரைப் பார்க்க முடியும். ஒரு வேளை மழை, குளிர் காரணமாக உடல் சுகவீனமுற்று அவரைப் பார்க்க முடியாம லேயே போய் விடுமோ? அவன் கண்களில் இப்போது மழை. ஆனால் ஒதுங்கப் போன இடமும் அவனைப் பார்த்து கேலி செய்தது. கலகலத்துப் போயிருந்த அந்தப் பாழடைந்த மண்டபத்தின் விரிசல்களினூடே மின்னல் அவனை மிரட்டியது. ஓர் இடி விழுந்தாலும் போதும் பொலபொலவென்று உதிர்ந்துவிடும் அந்த மண்டபம்.
ஆனால் அந்த மண்டபத்துக்குள்ளே- அது என்ன பீடம்? ஓ! அது ஒரு சிவலிங்கம். என்ன கொடுமை இது? சிலந்திக்கூடுகள் தம் இழைகளால் லிங்கத்தைச் சுற்றிக்கொண்டு, எந்த மார்க்கண்டேயனுக்காகப் போரிட்டுக் கொண்டிருக்கின்றன?
எமனுடைய பாசக் கயிறு போலத் தோற்றமளித்த அந்த சிலந்தி வலைப்பின்னல்களை அவன் தன் கைகளாலேயே அறுத்து அகற்றினான். லிங்கத்தின் மீது படிந்திருந்த தூசிகளும் தும்பும், மேலே நேராக விதான ஓட்டை வழியாக விழுந்து கொண்டிருந்த மழைத்தண்ணீரில் கரைந்தோடி லிங்கத்திற்குப் புதுப்பொலிவு கொடுத்துக் கொண்டிருந்தது. “அடடா... இந்த சிவாலயம் இப்படி எழில்கெட்டுப் போயிருக்கிறதே! எனக்கு மட்டும் வசதி இருந்தால், இந்த ஆலயத்தை உடனே புனருத்தாரணம் செய்வேனே!” என்று அங்கலாயத்துப் புழுங்கினான் விஜயன். நான் உழைப்பேன். அதிகம் சம்பாதிப்பேன். என் வருவாயைக் கொண்டு இந்தப் பாழடைந்த மண்டபத்தைப் புதுப்பிப்பேன். இந்த சிவலிங்கத்தைத் தூய்மைப்படுத்துவேன்.
மண்டபத்தைச் சுற்றிலும் நந்தவனம் அமைப்பேன். ராஜகோபுரம் கட்டுவேன். கோபுரம், ராஜகோபுரம், உட்பிராகாரங்கள், பெரியமணி மண்டபம், புதுப்பிக்கப்பட்ட ஆவுடையார், அதன்மீது புதுமெருகு கொண்ட சிவலிங்கம்... அடடா... புதிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய் வேன். மங்கல ஒலி முழங்க, வேதியர் புடைசூழ திருக்குடம் ஏந்தி கோயிலை பவனி வருவேன். சாரத்தில் ஏறி திருமஞ்சனம் செய்வித்து கும்பாபிஷே கம் செய்வேன். சுற்றுவட்டார கிராமத்து மக்களெல்லாம் திரண்டு வந்து கூடுவார்கள். அடடா... அப்போதுதான் எவ்வளவு பிரமாண்டமாக இந்தக் கோயில் வளர்ந்திருக்கும்! எத்தனை லட்சம் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவார்கள்! அவர்களுடைய துயரெல்லாவற்றையும் இங்கு எழுந்தருளியி ருக்கும் எம்பெருமான் எப்படியெல்லாம் தீர்த்துவைப்பார்! எம் நாயகன்தான் எவ்வளவு கம்பீரமாக கொலுவீற்றிருப்பார்!
தினசரி ஆகமங்கள் என்ன, திரு விழாக்கள் என்ன, பண்டிகைகள் என்ன, எவ்வளவு கோலாகலமாக இந்தக் கோயில் கொண்டாடப்படும்! எவ்வளவோ தருமங்கள் இக்கோயில் மூலமா கச் செய்யப்படும்! அதில் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும்தான் எத்தனை ஆயிரம்பேர் பயனடைவார்கள்.விஜயனின் கற்பனை எல்லை கடந்து போயிற்று. மானசீகமாகவே கோயில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்திவிட்டான். அந்த சிவனுக்கு பிரதோஷ காலத் தில் பாலால், பன்னீரால், பச்சரிசிமாவால், கரும்புச்சாறால் அபிஷேகம் பண்ணி ஆனந்தம் கொண்டான். பளீரென்று ஒரு மின்னல். கற்பனை கலைந்தது. அதிர்ச்சியுடன் கண் விழித்தான். விரிசல் விட்ட விதானத்திலிருந்து மின்னல் பேரொளி. அந்த ஒளியில் அவன் கண்டதுதான் என்ன?
மிகப் பெரியதாகப் படமெடுத்தபடி அவனைப் பார்த்து சீறிக்கொண்டிருந்தது ஒரு கருநாகப் பாம்பு. அவன் சுதாரித்துக் கொள்வதற்குள் எம்பி அவன் மீது பாய்ந்தது.
பளிச்சென்று ஒதுங்கி, அந்த மண்டபத்தைவிட்டு வெளியே ஓடி வந்து விழுந்தான் விஜயன். பேரிடி ஒன்று விழுந்தது. அந்த அதிர்ச்சியில் மண்டபம் கிடுகிடுத்து, லேசாக முட்டு கொடுத்து கொண்டிருந்த தூண்கள் நழுவ, ஏற்கனவே சிதிலமடைந்திருந்த மேல்விதானம் அப்படியே ‘பொக்’கென்று கீழே விழுந்தது. எந்த பாதிப்பும் இல்லாமல் சிவலிங்கம் மட்டும், கொட்டும் மழை அபிஷேகத்தில் திளைத்தபடி அவனைப் பார்த்துப் பாசமாய் சிரித்தது. அப்போதைக்குத் தான் உயிர் தப்பிவிட்டாலும், மறுநாள் பொழுது விடிந்ததும் ஜோதிடரைப் போய்பார்த்து அவர் குறித்துக் கொடுக்கும் ஆகம விதி களின்படி இந்தக் கோயிலைக் கட்டி, கும்பாபிஷேகமும் செய்ய வேண்டும் என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டான் விஜயன்.
தன் கிராமத்தை நோக்கி மழையையும் பொருட்படுத்தாமல் நடந்தான். பொழுது புலர்ந்தது. வாசல் கதவைத் திறந்த நாகேந்திரன் திடுக்கிட்டார். வாசலில் காத்திருப்பது யார்? நேற்று யாருடைய ஜாதகத்தைப் படித்து யாருடைய விதி நேற்றோடு முடிந்ததென்று மனசுக்குள் கணக்குப் போட்டு அனுப்பி வைத்தாரோ, அதே கிராமத்தான். இவன் சாகவில்லை. என் கணக்கு தப்பா? இதுநாள் வரை நான் படித்த ஜோதிடக்கலை, தன் அனுபவம், இதுவரை கொஞ்சம்கூடப் பொய்க்காத தன் கணிப்பு, அதெல்லாம், அந்த ஜோதிட அறிவெல்லாம் இவனுடன் ஏற்பட்ட அனுபவத்தில் மாயையாகிவிட்டதா? படித்ததெல்லாம் வீணா? ஆனாலும் அவனை வரவேற்று, முன்னறையில் அமர்த்தி, தன் ஜோதிட ஆய்வு கூடத்திற்குப் போனார் நாகேந்திரன்.
உயரே வைத்திருக்கும் அவனு டைய ஜாதகத்தை எம்பி எடுக்க முனைந்தபோது ஒரு ஓலைச்சுவடி கீழே விழுந்தது. விழுந்து பிரிந்தது. குனிந்து அதை எடுக்கப்போன நாகேந்திரன், பளிச்சென்று தெரிந்த வாசகங்களைப் படித்தார். “எவன் ஒருவன் மானசீகமாக சிவன் கோயிலுக்கு ராஜ கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்கிறானோ அவனுக்கு மரணம் தள்ளிப்போகிறது.” உடலே சிலிர்த்தது அவருக்கு. விஜயன் மரணத்தை அப்போதைக்கு வென்றுவிட்டான். அப்படியானால் அவன் மானசீகமாக சிவன் கோயில் ஒன்றிற்கு கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறான். ஆவல் பொறுக்க மாட்டாமல் அவன் தன்னை சந்தித்த இரண்டு வேளைகளுக்கு இடையே நடந்ததென்ன என்று கேட்டார்.
விஜயன் விரிவாக நடந்ததை விளக்கிச் சொன்னான். தன்னைத் தழுவி இறையருள் வேண்டிய மார்க்கண்டேயனை யமனுடைய பாசக்கயிற்றிலிருந்து மீட்டார் சிவன். விஜயனைப் பொறுத்தவரை தன்மீது படர்ந்திருந்த சிலந்தி வலைக் கயிற்றை அறுத்துத் தள்ளிய சேவைக்காக அவனை மண்டப இடிபாட்டிலிருந்து விரட்டி அவன் உயிரையும் காத்திருக்கிறார் என்பதை ஜோதிடர் நாகேந்திரன் புரிந்து கொண்டார்.
உலகையே வெல்லும் சக்தி
காமமாகிய இச்சை தோன்றாமற் செய்து தக்க ஆசனத்திலிருந்து, நாம ரூபத்தை நாடும் மனத்தை இருதயம்பரத்திலிருந்து, புற விடயங்களை நீக்கி விகற்பமில்லாமல் தன் சொரூபத்தை நாடி வெளி ஒலி தானே தானாய் ஒத்து வரும் நிலைதனை நிருவிகற்ப மாகுதல் தியான நிலையாகும்.
நீண்ட நேரம் ஆசனத்திலிருந்து தியானம் செய்ய வேண்டுமாதலால், தக்க ஆசனம் அமைத்துக் கொள்ள வேண்டும், உடலுக்கு ஊறு விளைவிக்காதும், உஷ்ணததை கொடுக்காததும், தியானத்தினால் உடலில் காந்த சக்தி பாய்வதாலும், அந்த சக்தி பூமியில் ஆகர்ஷணம் செய்யாமலும், ஆசனம் அமைத்துக் கொள்ள வேண்டும்,நாடி நரம்புகள் வேறுபாட்டை அடைந்து புது இயக்கம், உடலில் தோன்றும், இது பெரும்பாலும் இது முதுகெலும்புப் பகுதியில் உண்டாகும், ஆதலால் தலையும் உடலும், மார்பும் ஒரே நேர்கோட்டில் இருக்கத்தக்க ஆசனமே ஏற்றது,இதில் பத்மாசனமே மிகச் சிறந்தது.
தியானம் செய்யவதற்கு சரியான இடம் மிக அவசியம் இயற்கை சூழ்நிலையில் நல்ல காற்றோட்டமான சஞ்சலனமற்ற நிசப்தமான இடமும், ஏற்றதாகும், தர்பை ஆசனம்,உடலில் ஏற்படும் ஆற்றலை பூமிக்குள் ஈர்க்காது, இலகுவான பத்மாசனம் சித்தாசனம் போன்றவைகளில் எதேனும் ஏன்றை கைக் கொள்ள வேண்டும், புலித்தோல், துணி ஆசனமும் யோகசனம் செய்ய சிறப்புடையது, எண்ண அலைகளை ஆர்ப்பரிக்காது ஒரே மனமாக முனைப்பட்டு சாதனை புரிய வேண்டும், சபல எண்ணங்களையெல்லாம் நசிக்க செய்து நீண்ட தவமிருந்து வெற்றியடைய வேண்டும், இப்படி நீண்ட காலமாக சாதனை புரிந்து இறையருள் பெற்றவர்கள் முனிவர்களும் ஆச்சாரியர்களும் ஆழ்வார்களும் ஆவர்,
வேகமாக ஓடும் மனிதன், திடீரென்று ஓடுதிசையில் இருந்து மறுதிசைக்கு உடனே மாறமுடியாது, சிறிது சிறதாக வேகம் குறைத்துத்தான் திசை திருப்ப வேண்டும், அதுபோல இந்திரயங்கள் மிக வேகத்துடன் விஷசுகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பவர்களளை திசை திருப்பி, மாற்றி தியானத்தில் ஈடுபடுத்தவே ஆசனங்கள்.
நான்காம் நிலை பிராணாயாமம் சாதனையால் தோஷங்களை போக்கி மனதில் உண்டாகின்ற சஞ்சலமாகின்ற கில்மிஷத்தை களைகின்றது, கில்விஷத்தை நீக்கின் பவித்ராமான ஆத்மாவை சிந்திக்க வைக்கிறது, அப்படி சிந்தனையுடன் மூச்சை உள்ளிழுத்து,நிறுத்தி வெளியிடும் சாதைக்கு பூரகம் - கும்பகம்- ரேசகம் என்ற மூன்று பிரிவுகளாக உடையதுதான் பிராணயாமம்.
இந்த உடலுக்கு உயிர் முக்கியம், அதுதான் காற்று எனப்படும் ப்ராணன் , அது நாடி நரம்பு 96 தத்துவத்தையும் மயிர்க்கால்கள் வழியாகவும் பாய்ந்து கொண்டிருக்கிறது. அதை வீணாக்ககாமல் பிராணயாமம் என்ற முறையில் பதனப்படுத்தினால் நீண்ட காலம் உயிர் வாழலாம், பிராணனை வசப்படுத்தினால் பசி, தாகம், முதலியன அடக்க முடியும், எப்பேர்ப்பட்ட குளிரையும், கடுமையான உஷ்ணத்தையும், தாங்கும், சக்தி கிடைக்கும்,எனவே பிராணயாமம் சித்தியடைந்தவர்களின் சக்தி அபூர்வமானது,
வெளியே உள்ள காற்றை குறிப்பிட்ட நேரம் வரை உள்ளே இழுப்பது பூரகம் எனப்படும், அதேபோல் உள்ளே இழுக்கப் பட்ட காற்றை குறிப்பிட்ட நேரம் நிறுத்தி, சாதனை புரிவது கும்பகமாகும், உள்ளே தடுத்து நிறுத்தி வைத்த காற்றை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வெளியேற்றுவது ரேசகமாகும், நாம் உள்ளே வாங்கிய காற்றை நான்கு விநாடி நேரமாவது இழுக்க வேண்டும், அப்படி உள்ளே காற்றை எட்டு விநாடியாவது கும்பகம் செய்ய வேண்டும், பின்னர் கும்பித்த வாயுவை எட்டு விநாடி நேரம் ரேசகம் செய்யது மூச்சுக் காற்றை வெளியேற்ற வேண்டும், இப்படி செய்யும்பயிற்ச ஒரு மனிதன் முதலில் கைக் கொள்ள வேண்டி சராசரி பயிற்சியாகும், ஆனால் பயிற்சி சாதனையால் கைவல்லியாகி அதே உள்ளே இழுக்கும் வாயுவை பதினாறு விநாடியாகவும், கும்பகத்தை நிறுத்தி வைப்பதை அறுபத்தி நான்கு விநாடி கும்பித்து, பின்னர் வெளியே விடும் ரேசகத்தை முப்பத்திரண்டாக பயிற்சியில் கொண்டு வரமுடியும் என்று திருமந்திரத்தில் திருமூலர் விளக்குகின்றார்,
"ஏறுதல் பூரகம் ஈரெட்டுவாமகத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்தி ரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகமாமே, ----- என்கிறார்.
மனம் பிராண வாயுவின் சஞ்சாரத்திற்கு ஏற்ப விஷ சுகங்களில் சஞ்சரிக்கும், அந்த சலனத்தை நிறுத்தவே நல்ல காற்று பிராணாயாமத்தின் மூலம் உள்ளே நிறைய தேக்கி வைக்கிறது, ப்ராணன் நமக்கு உணவு நீர், காற்று சூரியன் மூலம் கிடைக்கிறது, அது எங்கும் நிறைந்த பொருள், அது நிலை சக்தியாகவோ சலன சக்தியாகவோ இருக்கலாம், நரம்பு மண்டலங்களின் மூலம் பிராணன் உட்கிரகித்து கொள்ளப்படுகிறது, நம் தேவைக்கு வேண்டியது போக எஞ்சிய பிராணன் மூளையிலும், நரம்பு மண்டலத்திலும் சேர்த்து வைக்கப்படுகிறது.பிராணயமம் ,மனோமயம் ,அன்னமயம், இம் மூன்றும் சுத்தப்படுத்தப்பட்டால் எதுவும் சாத்தியமாகும், பிராணயாமம் தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்தது, தெய்வீக சக்திகளை விழிக்க செய்கிறது. பிராணயாமம் செய்ய செய்ய மின் சக்தி பாய்வதை உணரலாம், மனதில் உற்சாகம் உண்டாகும், மனதில் நினைத்ததை சாதிக்கக் கூடிய சித்தியுண்டாகும், ப்ராணன் உடலில் தொழிலாகவும், நரம்பிலுள்ள ஓட்டமாகவும், வலிமையாகவும் தோன்றுவது, பிராணசக்தி எண்ணம், முதலான இழிந்த சக்தி அனைத்தும் பிராணனின் வெளித்தோற்றம், நாம் மூச்சு விடும் காற்று ஒரு நாளைக்கு எண்ணிக்கை 21600 மூச்சாகும், இம் மூச்சுக்களை ஆறு ஆதாரங்களில் ஒவ்வொன்றிலும் கணக்கிட்டுள்ளார்கள், இதைத்தான் சித்தர்கள் வேகாக்கால், சாகாக்கால் என்று சொல்வது வழக்கம், அழியாத காற்று என்று அர்த்தம், இது பிராணாயமத்தின் தத்துவத்தை குறிக்கிறது, இதனையே சித்தர்களின் பரிபாசையாக கூறியுள்ளார்கள், இதனை ராமலிங்க சுவாமிகள் தனது பாடல் வரிகளில்
" சாகா கல்வித்தரம் அறிதல் வேண்டும்
வேகாது கால் உணர்தல் வேண்டும் உடன் சாகாத்
தலையறிதல் வேண்டும் தனியருளில் உண்மை
நிலையடைதல் வேண்டும் நிலத்து " என்கிறார்,
சுவாசிக்கின்ற காற்று பனிரெண்டு மாத்திரை அளவு வெளியேற்றியபின் எட்டு மாத்திரை அளவே மீளத்திருப்பி உட்புகுகிறது, இதனால் பதினாலு மாத்திரை காற்று நஷ்டமாகிறது, இதை திருமூலர்
"ஈராறு கால் கொண்டு எழுந்த புரவியை
பேராமல் கட்டிப் பெரிதுண்ண வல்லீரேல்
நீராயிரமும் நிலமாயிரத் தாண்டும்
பேராது காயம் பிரான் நந்தி ஆணையே. என்கிறார்,
பதினாறு மாத்திரை அளவு சுவாசம் உள்ளிழுக்கப்பட்டால் சமனம் ஆகும், நஷ்டமாகும் வாயுவை நான்கு மாத்திரை அளவு உள்ளே அதிகப்படியாக உட்கொள்வதால் பெறலாம், இதனால் சுவாசத்தின் அளவை சமனப்படுத்தி விடலாம், நல் காற்றோட்டமுள்ள அரையைதேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும், வயிற்றில் நிறைவான உணவு உண்ட நிலை தவிர்க்கப்பட வேண்டும், உடலை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள ேவ்ண்டும், பயிற்சி முடிந்த ஒரு மணி நேரம் கழித்தே நீர் குடிக்க வேண்டும்,
பிராணயாமத்தின் சாதனையால் சாதாரண நிலை மாறி உடலில் அபூர்வ புத்துணர்ச்சி பல சாதனைகள் புரிய வேண்டும் என்ற வைராக்கியம் இருக்க வேண்டும், இதனால் நோய் அணுகா நிலையும், நல்ல நினைவாற்றலும், நல் கிரகணமான சக்தியும் "தூர சிரவணங்கள் " அதாவது வெகுதூரத்தில் நடக்கும் சம்பவங்களை கிரகித்து பார்க்கும் நிலையும் உண்டாகும், இந்த சக்தியும் உயர் சக்தியும் உயிர் ஒட்டமும் ஒன்றாகும், இந்த அபூர்வ சக்தியினால் ஜலத்தை பிராணவாயு , ஜல வாயு என்ற இரு வாயுக்காளாக பிரிக்கலாம், இதன் துணை கொண்டே ராமலிங்க அடிகள் தன் உடலை வாயுவில் கரைத்து மறைந்துள்ளார்கள் என்பது கூற்று. தினமும் காலை, மாலை அப்பியாசம் செய்து வருவதும், சிறிது சிறதாக பயிற்சியை அதிகரித்து, அதிகமாக்கி உடலில் புத்துணர்ச்சியை உண்டாக்கி பழக்கப்படுத்திக் கொண்டால் இதுவே மூலாதாரக் குண்டலியை எழுப்பி நம் உடம்பில் ஆத்ம சக்தியை உண்டாக்கும், என்பது தின்னம் எனவே உலகின் அரிய சக்தியான தியான பயிற்சியில் பிராணயாமம் பயிற்சி செய்து ஆத்ம நிலையை பெறலாம் வாழ்வில் எதையும் வெல்லும் சக்தி பெறலாம்,
திருச் சிற்றம்பலம் .. ஓம் நமச்சிவாயம் ஓம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
காமமாகிய இச்சை தோன்றாமற் செய்து தக்க ஆசனத்திலிருந்து, நாம ரூபத்தை நாடும் மனத்தை இருதயம்பரத்திலிருந்து, புற விடயங்களை நீக்கி விகற்பமில்லாமல் தன் சொரூபத்தை நாடி வெளி ஒலி தானே தானாய் ஒத்து வரும் நிலைதனை நிருவிகற்ப மாகுதல் தியான நிலையாகும்.
நீண்ட நேரம் ஆசனத்திலிருந்து தியானம் செய்ய வேண்டுமாதலால், தக்க ஆசனம் அமைத்துக் கொள்ள வேண்டும், உடலுக்கு ஊறு விளைவிக்காதும், உஷ்ணததை கொடுக்காததும், தியானத்தினால் உடலில் காந்த சக்தி பாய்வதாலும், அந்த சக்தி பூமியில் ஆகர்ஷணம் செய்யாமலும், ஆசனம் அமைத்துக் கொள்ள வேண்டும்,நாடி நரம்புகள் வேறுபாட்டை அடைந்து புது இயக்கம், உடலில் தோன்றும், இது பெரும்பாலும் இது முதுகெலும்புப் பகுதியில் உண்டாகும், ஆதலால் தலையும் உடலும், மார்பும் ஒரே நேர்கோட்டில் இருக்கத்தக்க ஆசனமே ஏற்றது,இதில் பத்மாசனமே மிகச் சிறந்தது.
தியானம் செய்யவதற்கு சரியான இடம் மிக அவசியம் இயற்கை சூழ்நிலையில் நல்ல காற்றோட்டமான சஞ்சலனமற்ற நிசப்தமான இடமும், ஏற்றதாகும், தர்பை ஆசனம்,உடலில் ஏற்படும் ஆற்றலை பூமிக்குள் ஈர்க்காது, இலகுவான பத்மாசனம் சித்தாசனம் போன்றவைகளில் எதேனும் ஏன்றை கைக் கொள்ள வேண்டும், புலித்தோல், துணி ஆசனமும் யோகசனம் செய்ய சிறப்புடையது, எண்ண அலைகளை ஆர்ப்பரிக்காது ஒரே மனமாக முனைப்பட்டு சாதனை புரிய வேண்டும், சபல எண்ணங்களையெல்லாம் நசிக்க செய்து நீண்ட தவமிருந்து வெற்றியடைய வேண்டும், இப்படி நீண்ட காலமாக சாதனை புரிந்து இறையருள் பெற்றவர்கள் முனிவர்களும் ஆச்சாரியர்களும் ஆழ்வார்களும் ஆவர்,
வேகமாக ஓடும் மனிதன், திடீரென்று ஓடுதிசையில் இருந்து மறுதிசைக்கு உடனே மாறமுடியாது, சிறிது சிறதாக வேகம் குறைத்துத்தான் திசை திருப்ப வேண்டும், அதுபோல இந்திரயங்கள் மிக வேகத்துடன் விஷசுகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பவர்களளை திசை திருப்பி, மாற்றி தியானத்தில் ஈடுபடுத்தவே ஆசனங்கள்.
நான்காம் நிலை பிராணாயாமம் சாதனையால் தோஷங்களை போக்கி மனதில் உண்டாகின்ற சஞ்சலமாகின்ற கில்மிஷத்தை களைகின்றது, கில்விஷத்தை நீக்கின் பவித்ராமான ஆத்மாவை சிந்திக்க வைக்கிறது, அப்படி சிந்தனையுடன் மூச்சை உள்ளிழுத்து,நிறுத்தி வெளியிடும் சாதைக்கு பூரகம் - கும்பகம்- ரேசகம் என்ற மூன்று பிரிவுகளாக உடையதுதான் பிராணயாமம்.
இந்த உடலுக்கு உயிர் முக்கியம், அதுதான் காற்று எனப்படும் ப்ராணன் , அது நாடி நரம்பு 96 தத்துவத்தையும் மயிர்க்கால்கள் வழியாகவும் பாய்ந்து கொண்டிருக்கிறது. அதை வீணாக்ககாமல் பிராணயாமம் என்ற முறையில் பதனப்படுத்தினால் நீண்ட காலம் உயிர் வாழலாம், பிராணனை வசப்படுத்தினால் பசி, தாகம், முதலியன அடக்க முடியும், எப்பேர்ப்பட்ட குளிரையும், கடுமையான உஷ்ணத்தையும், தாங்கும், சக்தி கிடைக்கும்,எனவே பிராணயாமம் சித்தியடைந்தவர்களின் சக்தி அபூர்வமானது,
வெளியே உள்ள காற்றை குறிப்பிட்ட நேரம் வரை உள்ளே இழுப்பது பூரகம் எனப்படும், அதேபோல் உள்ளே இழுக்கப் பட்ட காற்றை குறிப்பிட்ட நேரம் நிறுத்தி, சாதனை புரிவது கும்பகமாகும், உள்ளே தடுத்து நிறுத்தி வைத்த காற்றை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வெளியேற்றுவது ரேசகமாகும், நாம் உள்ளே வாங்கிய காற்றை நான்கு விநாடி நேரமாவது இழுக்க வேண்டும், அப்படி உள்ளே காற்றை எட்டு விநாடியாவது கும்பகம் செய்ய வேண்டும், பின்னர் கும்பித்த வாயுவை எட்டு விநாடி நேரம் ரேசகம் செய்யது மூச்சுக் காற்றை வெளியேற்ற வேண்டும், இப்படி செய்யும்பயிற்ச ஒரு மனிதன் முதலில் கைக் கொள்ள வேண்டி சராசரி பயிற்சியாகும், ஆனால் பயிற்சி சாதனையால் கைவல்லியாகி அதே உள்ளே இழுக்கும் வாயுவை பதினாறு விநாடியாகவும், கும்பகத்தை நிறுத்தி வைப்பதை அறுபத்தி நான்கு விநாடி கும்பித்து, பின்னர் வெளியே விடும் ரேசகத்தை முப்பத்திரண்டாக பயிற்சியில் கொண்டு வரமுடியும் என்று திருமந்திரத்தில் திருமூலர் விளக்குகின்றார்,
"ஏறுதல் பூரகம் ஈரெட்டுவாமகத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்தி ரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகமாமே, ----- என்கிறார்.
மனம் பிராண வாயுவின் சஞ்சாரத்திற்கு ஏற்ப விஷ சுகங்களில் சஞ்சரிக்கும், அந்த சலனத்தை நிறுத்தவே நல்ல காற்று பிராணாயாமத்தின் மூலம் உள்ளே நிறைய தேக்கி வைக்கிறது, ப்ராணன் நமக்கு உணவு நீர், காற்று சூரியன் மூலம் கிடைக்கிறது, அது எங்கும் நிறைந்த பொருள், அது நிலை சக்தியாகவோ சலன சக்தியாகவோ இருக்கலாம், நரம்பு மண்டலங்களின் மூலம் பிராணன் உட்கிரகித்து கொள்ளப்படுகிறது, நம் தேவைக்கு வேண்டியது போக எஞ்சிய பிராணன் மூளையிலும், நரம்பு மண்டலத்திலும் சேர்த்து வைக்கப்படுகிறது.பிராணயமம் ,மனோமயம் ,அன்னமயம், இம் மூன்றும் சுத்தப்படுத்தப்பட்டால் எதுவும் சாத்தியமாகும், பிராணயாமம் தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்தது, தெய்வீக சக்திகளை விழிக்க செய்கிறது. பிராணயாமம் செய்ய செய்ய மின் சக்தி பாய்வதை உணரலாம், மனதில் உற்சாகம் உண்டாகும், மனதில் நினைத்ததை சாதிக்கக் கூடிய சித்தியுண்டாகும், ப்ராணன் உடலில் தொழிலாகவும், நரம்பிலுள்ள ஓட்டமாகவும், வலிமையாகவும் தோன்றுவது, பிராணசக்தி எண்ணம், முதலான இழிந்த சக்தி அனைத்தும் பிராணனின் வெளித்தோற்றம், நாம் மூச்சு விடும் காற்று ஒரு நாளைக்கு எண்ணிக்கை 21600 மூச்சாகும், இம் மூச்சுக்களை ஆறு ஆதாரங்களில் ஒவ்வொன்றிலும் கணக்கிட்டுள்ளார்கள், இதைத்தான் சித்தர்கள் வேகாக்கால், சாகாக்கால் என்று சொல்வது வழக்கம், அழியாத காற்று என்று அர்த்தம், இது பிராணாயமத்தின் தத்துவத்தை குறிக்கிறது, இதனையே சித்தர்களின் பரிபாசையாக கூறியுள்ளார்கள், இதனை ராமலிங்க சுவாமிகள் தனது பாடல் வரிகளில்
" சாகா கல்வித்தரம் அறிதல் வேண்டும்
வேகாது கால் உணர்தல் வேண்டும் உடன் சாகாத்
தலையறிதல் வேண்டும் தனியருளில் உண்மை
நிலையடைதல் வேண்டும் நிலத்து " என்கிறார்,
சுவாசிக்கின்ற காற்று பனிரெண்டு மாத்திரை அளவு வெளியேற்றியபின் எட்டு மாத்திரை அளவே மீளத்திருப்பி உட்புகுகிறது, இதனால் பதினாலு மாத்திரை காற்று நஷ்டமாகிறது, இதை திருமூலர்
"ஈராறு கால் கொண்டு எழுந்த புரவியை
பேராமல் கட்டிப் பெரிதுண்ண வல்லீரேல்
நீராயிரமும் நிலமாயிரத் தாண்டும்
பேராது காயம் பிரான் நந்தி ஆணையே. என்கிறார்,
பதினாறு மாத்திரை அளவு சுவாசம் உள்ளிழுக்கப்பட்டால் சமனம் ஆகும், நஷ்டமாகும் வாயுவை நான்கு மாத்திரை அளவு உள்ளே அதிகப்படியாக உட்கொள்வதால் பெறலாம், இதனால் சுவாசத்தின் அளவை சமனப்படுத்தி விடலாம், நல் காற்றோட்டமுள்ள அரையைதேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும், வயிற்றில் நிறைவான உணவு உண்ட நிலை தவிர்க்கப்பட வேண்டும், உடலை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள ேவ்ண்டும், பயிற்சி முடிந்த ஒரு மணி நேரம் கழித்தே நீர் குடிக்க வேண்டும்,
பிராணயாமத்தின் சாதனையால் சாதாரண நிலை மாறி உடலில் அபூர்வ புத்துணர்ச்சி பல சாதனைகள் புரிய வேண்டும் என்ற வைராக்கியம் இருக்க வேண்டும், இதனால் நோய் அணுகா நிலையும், நல்ல நினைவாற்றலும், நல் கிரகணமான சக்தியும் "தூர சிரவணங்கள் " அதாவது வெகுதூரத்தில் நடக்கும் சம்பவங்களை கிரகித்து பார்க்கும் நிலையும் உண்டாகும், இந்த சக்தியும் உயர் சக்தியும் உயிர் ஒட்டமும் ஒன்றாகும், இந்த அபூர்வ சக்தியினால் ஜலத்தை பிராணவாயு , ஜல வாயு என்ற இரு வாயுக்காளாக பிரிக்கலாம், இதன் துணை கொண்டே ராமலிங்க அடிகள் தன் உடலை வாயுவில் கரைத்து மறைந்துள்ளார்கள் என்பது கூற்று. தினமும் காலை, மாலை அப்பியாசம் செய்து வருவதும், சிறிது சிறதாக பயிற்சியை அதிகரித்து, அதிகமாக்கி உடலில் புத்துணர்ச்சியை உண்டாக்கி பழக்கப்படுத்திக் கொண்டால் இதுவே மூலாதாரக் குண்டலியை எழுப்பி நம் உடம்பில் ஆத்ம சக்தியை உண்டாக்கும், என்பது தின்னம் எனவே உலகின் அரிய சக்தியான தியான பயிற்சியில் பிராணயாமம் பயிற்சி செய்து ஆத்ம நிலையை பெறலாம் வாழ்வில் எதையும் வெல்லும் சக்தி பெறலாம்,
திருச் சிற்றம்பலம் .. ஓம் நமச்சிவாயம் ஓம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
அஸ்டமா சித்திக்ள்
கிடைத்தற்கரிய பிறவி மனிதப் பிறவி, இப்பிறவியில் நம் கரும வினைகளை குறைத்து பிறவா நிலை எனும் வீடுபேற்றை அடைய குரு அருள் கொண்டு திரு அருள் பெற, சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் வழிகளை பின்பற்றி யோகிகளான ஞானிகள் அஸ்டாமா சிக்திகள் என்னும் 8 சித்திகளை பெற்ற சித்தர் பெருமக்களே ஆவர், இதனை திருமூலர் திருமந்திரத்தில்
அணிமாதி சிக்திகள் ஆனவ கூறல்
அணுவின் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாயம் மேவில்
அணுவின் தனை எங்கும் தான் ஆதல் என்று எட்டே,
1) அணிமா: அணுவின் அணுவாகும், சித்தி அணுமா அடுத்தவர் கண்ணுக்கு தெரியாது இருத்தல்,அணுவைப் போல மிக நுன்னிய நிலைக்கு உடலைக் கொண்டு சென்று கண்களுக்கு புலப்படாதருத்தல்
2)மகிமா: ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது, பெரியதினும் பெரியதாகும் சித்தி மகிமா,உடலை மலையைப் போல பிரமாண்டமாகப் பெரியதாக்குதல்
3)இலகிமா: உடலை லெகுவாக்கி கொளல், புகைபோல மிகமிக நொய்தாகச் செய்தலும், விளங்குவதும், கனமான பொருட்களை பஞ்சுபோல லெகுவாக செய்தலும்,உடையது இலகிமா. காற்றைப் போல உடலை லேகுவாக்கி, இந்நிலையில் காற்றில் மிதப்பதும், தண்ணீரில் நடப்பதும் சாத்தியமாகும் கொண்ட சித்தி.
4, கரிமா: அசைக்க முடியாத தன்மை, உடலை கடினமானதாக இயக்கிக் கொள்ளல்,இதுவே கரிமா சித்தி
5,பிராப்தி:நினைத்த நேரத்தில் எங்கும் செல்லல் மேலுள்ள ஆகாயத்தை தீண்டுதல், பூமியில் இருந்து கொண்டே விரல் நுனியால் சந்திரனை தொடும்தன்மை கொண்ட சித்தி. இயற்கை சக்திகளையும், மற்ற எல்லா பொருட்களையும் தன் வசப்படுத்துதல் தன்மன சக்தியினால் எதனையும் மாற்றுதலும், அடைதலும் கொண்ட சித்தி,
6, வசித்துவம்:எல்லாவற்றையும் தன் வசப்படுத்தி எங்கும் தானாக இருக்கும் சித்தி,அனைத்து உயிரினங்களையும்தன் வசம் வசியப்படுத்துதல்
7,பிரகாமியம்: ஐம் பூதங்களிலும் வியாபித்து எழுதல், கூடுவிட்டு கூடு பாயும் தன்மை கொண்ட சித்தி
8,ஈசத்துவம்: அனைத்தையும் தன்வசப்படுத்துதல் உயிர்கெல்லாம் தலைவனாகுதல், படைத்தல், காத்தல், அழித்தல் மறைத்தல், அருளல், ஆகிய ஐந்தொழில்களான செயல்களை செய்யும் சித்தி, இதுவே இறை சக்தி என்ற ஈசத்துவ சித்தி,
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
கிடைத்தற்கரிய பிறவி மனிதப் பிறவி, இப்பிறவியில் நம் கரும வினைகளை குறைத்து பிறவா நிலை எனும் வீடுபேற்றை அடைய குரு அருள் கொண்டு திரு அருள் பெற, சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் வழிகளை பின்பற்றி யோகிகளான ஞானிகள் அஸ்டாமா சிக்திகள் என்னும் 8 சித்திகளை பெற்ற சித்தர் பெருமக்களே ஆவர், இதனை திருமூலர் திருமந்திரத்தில்
அணிமாதி சிக்திகள் ஆனவ கூறல்
அணுவின் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாயம் மேவில்
அணுவின் தனை எங்கும் தான் ஆதல் என்று எட்டே,
1) அணிமா: அணுவின் அணுவாகும், சித்தி அணுமா அடுத்தவர் கண்ணுக்கு தெரியாது இருத்தல்,அணுவைப் போல மிக நுன்னிய நிலைக்கு உடலைக் கொண்டு சென்று கண்களுக்கு புலப்படாதருத்தல்
2)மகிமா: ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது, பெரியதினும் பெரியதாகும் சித்தி மகிமா,உடலை மலையைப் போல பிரமாண்டமாகப் பெரியதாக்குதல்
3)இலகிமா: உடலை லெகுவாக்கி கொளல், புகைபோல மிகமிக நொய்தாகச் செய்தலும், விளங்குவதும், கனமான பொருட்களை பஞ்சுபோல லெகுவாக செய்தலும்,உடையது இலகிமா. காற்றைப் போல உடலை லேகுவாக்கி, இந்நிலையில் காற்றில் மிதப்பதும், தண்ணீரில் நடப்பதும் சாத்தியமாகும் கொண்ட சித்தி.
4, கரிமா: அசைக்க முடியாத தன்மை, உடலை கடினமானதாக இயக்கிக் கொள்ளல்,இதுவே கரிமா சித்தி
5,பிராப்தி:நினைத்த நேரத்தில் எங்கும் செல்லல் மேலுள்ள ஆகாயத்தை தீண்டுதல், பூமியில் இருந்து கொண்டே விரல் நுனியால் சந்திரனை தொடும்தன்மை கொண்ட சித்தி. இயற்கை சக்திகளையும், மற்ற எல்லா பொருட்களையும் தன் வசப்படுத்துதல் தன்மன சக்தியினால் எதனையும் மாற்றுதலும், அடைதலும் கொண்ட சித்தி,
6, வசித்துவம்:எல்லாவற்றையும் தன் வசப்படுத்தி எங்கும் தானாக இருக்கும் சித்தி,அனைத்து உயிரினங்களையும்தன் வசம் வசியப்படுத்துதல்
7,பிரகாமியம்: ஐம் பூதங்களிலும் வியாபித்து எழுதல், கூடுவிட்டு கூடு பாயும் தன்மை கொண்ட சித்தி
8,ஈசத்துவம்: அனைத்தையும் தன்வசப்படுத்துதல் உயிர்கெல்லாம் தலைவனாகுதல், படைத்தல், காத்தல், அழித்தல் மறைத்தல், அருளல், ஆகிய ஐந்தொழில்களான செயல்களை செய்யும் சித்தி, இதுவே இறை சக்தி என்ற ஈசத்துவ சித்தி,
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
"சத்" "சித்" "ஆனந்தம்"
ஒரு முகப்பட்ட மனத்தினால் அறிய முடியாததை அறிந்து கொள்ளும் திறன் உண்டாகிறது. இது மனோதத்துவ ரகசியனம், ஜீவனை இயக்குவது மனம். இந்த மனம் பண்பட்டால் தான் உயர்வு, ஒன்றை தானாக அறிவது மனத்தினால்தான்.பிறரால் அறிவது வாக்குகளால், இவை இரண்டின் துணையில்லாமல் எதையும் அறியமுடியாது, இந்த மனத்தால் பிரம்மத்தையும் அறியமுடியாது. பிரம்மத்திற்கு மனம் , சரீரம் போன்றதே. மனத்தின் உள்ளேயிருந்து கொண்டு ஆள்வது பிரம்மமே.
எழுகின்ற எண்ணங்களை ஒய்வு பெறவைப்பதாலே சுகம் உண்டாகிறது. விருப்பு வெறுப்பாகிய எண்ணத் தோற்றமே துக்கம், எண்ண ஒடுக்கமே சுகம், எண்ணங்களே சுகத்திற்கு சத்ரு, எண்ணங்கள் ஒய்ந்தால்தான் சுகம், தானேதான் சுகம் என்பதை உணர்ந்தால் மனம் அடங்கும், சுகத்தை அனுபவிக்க வேண்டும், அற்ப காமனாய் இராதே. பூர்ண காமனாய் இரு, உன்னுள்ளே உனது இயல்பாகவே இருந்து "சத்" விளங்கிக் கொண்டிருக்கிறது. "சித்" தான் நீ. ஆனந்தத்தை அடையும் போது சச்சி தானந்தமாகிறாய். மனம் இரண்டு விதமாக ஒடுங்கும், தற்காலிகமாக ஒடுங்கும் நிலைக்கு மனோலயம் என்று பெயர், எண்ணங்களே மனம் எண்ணங்களே பல கோடி " நான்" என்கிற எண்ணமே எல்லா எண்ணங் களுக்கும் ஆணிவேர், " நான்" என்கிற இந்த எண்ணத்தை அழித்தால் எல்லா எண்ணங்களையும் அழித்து விடலாம், மனத்தினால் கேட்பது, பார்ப்பது, நுகர்வது போன்ற பல காரியங்கள் மனத்தால் நடைபெறுகிறது, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று நான்கு பிரிவுகள்:
1 எந்த காரியத்தையும் செய்து முடிக்க காரணமாய் இருப்பதுவும் புத்தியின் தூண்டுதலால்,
2, நின்ற செயல்படுவது சித்தம்
3, நான் செய்கிறேன் என்று நினைப்பது அகங்காரம்
4, எப்படி முடியுமோ என்று தவிப்பது மனம்
மூன்று அவஸ்வதைகளின் குண பேதங்கள்
மனிதனுக்கு மூன்று நிலை இயற்கை மாறுதல்கள் உண்டு, அவையாதெனில்
விழிப்பு நிலை - ஜாக்ரத்
உறக்க நிலை - ஸுஷுப்தி
கனவு நிலை -ஸ்வப்னம்
கனவு நிலையில் உண்டாகின்ற மாறுதல்களை விஞ்ஞானிகள் பலவித ஆராய்ச்சி செய்துள்ளனர், இந்த ஆராய்ச்சியின் பயனாக இம்மூன்று நிலைகளில் தனியான வேறுபட்ட நிலையை இருப்பதை உணர்ந்தனர், ஒரு குணத்ததில் சாந்த குணம் இருக்கிறது. மற்றொரு நிலையில் கோபம் இருக்கிறது. ஆனால் இரண்டு நிலைகளிலும் இருப்பவர் ஒருவனே, இந்த மாதிரி அவஸ்தை பேதங்களில் ஒன்றுக்கொன்று விரோதமான காரியங்களை செய்தாலும் வேறு வேறு விதமான தேகமும், மனதும் இருந்தாலும், எல்லா அவஸ்தைகளிலும் இருப்பவன் ஒருவன் ஒருவனே யோகியானவன் இந்த மூன்று நிலைகளை கடந்து தெய்வ நிலை என்கிற தனக்குதானாய் இருப்பவன், ஒரு அவஸ்தை இருக்கும் போது மற்றொன்று அங்கு இருப்பதில்லை, விழிப்பு நிலையிருக்கும் போது கனவு நிலை இல்லை. கனவு நிலை இருக்கும் போது உறக்க நிலை இல்லை. உறக்க நிலை இருக்கும் போது விழிப்பு நிலை இல்லை. இந்த மூன்று அவஸ்தைகளிலும், தொடர்ந்து இருந்து , அவைகளிடமிருந்து வேறாக நின்று அவைகளின் இருக்கைக்கும், இன்மைக்கும் சாட்சியாய் இருப்பதுதான் துரியமாகிய ஆத்மா , " நான் " அது எக்காலத்திலும் அறிவில்லாதது. இந்த அவஸ்தை மூன்றம் ஒன்றாக நிகழ்வது இல்லை. ஆகையால் மித்தை - பொய் மாறாமல் தொடர்ந்து இருக்கும் இந்த அவஸ்தைகள் தோன்றப்பட்ன.
ஒரே தீபத்தில் மூன்று நிறங்கள் தோன்றுவது போல், விழிப்பு, நிலையில் கருவி காரணங்களும் சாட்சியாகவும், உறககத்தில் தனக்குத்தான் சாட்சியாகவும், துரியத்தில் அகண்டகாரமான சொரூப வடிவமாக விளங்கும், அதற்கு அன்னியமாக ஒன்றுமில்லை. இந்த மூன்று அவஸ்தைகளிலும் தொடர்ந்து எவ்வித அறிவாகிய ஆத்மா, தன்னிடம் ஆரோபமுல்லாமல் இருக்கும் நிலைதான் துரியவஸ்தை, இது நான்காவது உறக்கத்தில் அஞ்ஞானத்தின் மறைப்பு இருக்கிறது, இந் மறைப்பு இல்லாமல் தான்தானாக இருக்கும் சொரூப ஆனந்த அனுபவமே துரியம் என்பது, அதைத்தான் தூங்காமல் தூக்கம் என்பதாகும், ஆத்மா என்பதை உணர்த்துவதற்காக துரியம், இந்த துரியமான ஆத்மாவே, எல்லா உருவங்களிலும் ஊடுருவி இருக்கிறது, இப்படி இருப்பதாலேயே இதற்கு சத்தியம், ஞானம், ஆனந்தம், நித்யம்,பூரணம் என்று எல்லா மகரிஷிகளால் கொடுக்கப்பட்டது, எனவே மனதை ஒருநிலைப்படுத்த சாதனைகளை தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்திரியங்களை கட்டுபடுத்தி மனதை அடக்கினால் எல்லா காரியங்களுமே சித்திக்கம், புலனடக்கத்துடன் சத்யமும் அகிம்ஸை அவசியம் இருக்க வேண்டும், அஷ்டாங்க யோகத்தின் மூன்றாம் நிலை இதுவே. ஆஸனம் யமம், நியமம், எல்லாவற்றிக்கும் நிலையான இருப்பிடம் வேண்டும், உடலுக்கு வருத்தமில்லா இருக்கையை அமைத்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் இந்திரியங்களை அடக்குவதற்கு ஒருவித வழியாகும், சரீரததில் பல மாறுதல்கள் தியானத்தின் போது ஏற்படும், இந்த மாறுதல்களே சச் சித் தானந்தம் என்பதாகும்,
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
ஒரு முகப்பட்ட மனத்தினால் அறிய முடியாததை அறிந்து கொள்ளும் திறன் உண்டாகிறது. இது மனோதத்துவ ரகசியனம், ஜீவனை இயக்குவது மனம். இந்த மனம் பண்பட்டால் தான் உயர்வு, ஒன்றை தானாக அறிவது மனத்தினால்தான்.பிறரால் அறிவது வாக்குகளால், இவை இரண்டின் துணையில்லாமல் எதையும் அறியமுடியாது, இந்த மனத்தால் பிரம்மத்தையும் அறியமுடியாது. பிரம்மத்திற்கு மனம் , சரீரம் போன்றதே. மனத்தின் உள்ளேயிருந்து கொண்டு ஆள்வது பிரம்மமே.
எழுகின்ற எண்ணங்களை ஒய்வு பெறவைப்பதாலே சுகம் உண்டாகிறது. விருப்பு வெறுப்பாகிய எண்ணத் தோற்றமே துக்கம், எண்ண ஒடுக்கமே சுகம், எண்ணங்களே சுகத்திற்கு சத்ரு, எண்ணங்கள் ஒய்ந்தால்தான் சுகம், தானேதான் சுகம் என்பதை உணர்ந்தால் மனம் அடங்கும், சுகத்தை அனுபவிக்க வேண்டும், அற்ப காமனாய் இராதே. பூர்ண காமனாய் இரு, உன்னுள்ளே உனது இயல்பாகவே இருந்து "சத்" விளங்கிக் கொண்டிருக்கிறது. "சித்" தான் நீ. ஆனந்தத்தை அடையும் போது சச்சி தானந்தமாகிறாய். மனம் இரண்டு விதமாக ஒடுங்கும், தற்காலிகமாக ஒடுங்கும் நிலைக்கு மனோலயம் என்று பெயர், எண்ணங்களே மனம் எண்ணங்களே பல கோடி " நான்" என்கிற எண்ணமே எல்லா எண்ணங் களுக்கும் ஆணிவேர், " நான்" என்கிற இந்த எண்ணத்தை அழித்தால் எல்லா எண்ணங்களையும் அழித்து விடலாம், மனத்தினால் கேட்பது, பார்ப்பது, நுகர்வது போன்ற பல காரியங்கள் மனத்தால் நடைபெறுகிறது, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று நான்கு பிரிவுகள்:
1 எந்த காரியத்தையும் செய்து முடிக்க காரணமாய் இருப்பதுவும் புத்தியின் தூண்டுதலால்,
2, நின்ற செயல்படுவது சித்தம்
3, நான் செய்கிறேன் என்று நினைப்பது அகங்காரம்
4, எப்படி முடியுமோ என்று தவிப்பது மனம்
மூன்று அவஸ்வதைகளின் குண பேதங்கள்
மனிதனுக்கு மூன்று நிலை இயற்கை மாறுதல்கள் உண்டு, அவையாதெனில்
விழிப்பு நிலை - ஜாக்ரத்
உறக்க நிலை - ஸுஷுப்தி
கனவு நிலை -ஸ்வப்னம்
கனவு நிலையில் உண்டாகின்ற மாறுதல்களை விஞ்ஞானிகள் பலவித ஆராய்ச்சி செய்துள்ளனர், இந்த ஆராய்ச்சியின் பயனாக இம்மூன்று நிலைகளில் தனியான வேறுபட்ட நிலையை இருப்பதை உணர்ந்தனர், ஒரு குணத்ததில் சாந்த குணம் இருக்கிறது. மற்றொரு நிலையில் கோபம் இருக்கிறது. ஆனால் இரண்டு நிலைகளிலும் இருப்பவர் ஒருவனே, இந்த மாதிரி அவஸ்தை பேதங்களில் ஒன்றுக்கொன்று விரோதமான காரியங்களை செய்தாலும் வேறு வேறு விதமான தேகமும், மனதும் இருந்தாலும், எல்லா அவஸ்தைகளிலும் இருப்பவன் ஒருவன் ஒருவனே யோகியானவன் இந்த மூன்று நிலைகளை கடந்து தெய்வ நிலை என்கிற தனக்குதானாய் இருப்பவன், ஒரு அவஸ்தை இருக்கும் போது மற்றொன்று அங்கு இருப்பதில்லை, விழிப்பு நிலையிருக்கும் போது கனவு நிலை இல்லை. கனவு நிலை இருக்கும் போது உறக்க நிலை இல்லை. உறக்க நிலை இருக்கும் போது விழிப்பு நிலை இல்லை. இந்த மூன்று அவஸ்தைகளிலும், தொடர்ந்து இருந்து , அவைகளிடமிருந்து வேறாக நின்று அவைகளின் இருக்கைக்கும், இன்மைக்கும் சாட்சியாய் இருப்பதுதான் துரியமாகிய ஆத்மா , " நான் " அது எக்காலத்திலும் அறிவில்லாதது. இந்த அவஸ்தை மூன்றம் ஒன்றாக நிகழ்வது இல்லை. ஆகையால் மித்தை - பொய் மாறாமல் தொடர்ந்து இருக்கும் இந்த அவஸ்தைகள் தோன்றப்பட்ன.
ஒரே தீபத்தில் மூன்று நிறங்கள் தோன்றுவது போல், விழிப்பு, நிலையில் கருவி காரணங்களும் சாட்சியாகவும், உறககத்தில் தனக்குத்தான் சாட்சியாகவும், துரியத்தில் அகண்டகாரமான சொரூப வடிவமாக விளங்கும், அதற்கு அன்னியமாக ஒன்றுமில்லை. இந்த மூன்று அவஸ்தைகளிலும் தொடர்ந்து எவ்வித அறிவாகிய ஆத்மா, தன்னிடம் ஆரோபமுல்லாமல் இருக்கும் நிலைதான் துரியவஸ்தை, இது நான்காவது உறக்கத்தில் அஞ்ஞானத்தின் மறைப்பு இருக்கிறது, இந் மறைப்பு இல்லாமல் தான்தானாக இருக்கும் சொரூப ஆனந்த அனுபவமே துரியம் என்பது, அதைத்தான் தூங்காமல் தூக்கம் என்பதாகும், ஆத்மா என்பதை உணர்த்துவதற்காக துரியம், இந்த துரியமான ஆத்மாவே, எல்லா உருவங்களிலும் ஊடுருவி இருக்கிறது, இப்படி இருப்பதாலேயே இதற்கு சத்தியம், ஞானம், ஆனந்தம், நித்யம்,பூரணம் என்று எல்லா மகரிஷிகளால் கொடுக்கப்பட்டது, எனவே மனதை ஒருநிலைப்படுத்த சாதனைகளை தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்திரியங்களை கட்டுபடுத்தி மனதை அடக்கினால் எல்லா காரியங்களுமே சித்திக்கம், புலனடக்கத்துடன் சத்யமும் அகிம்ஸை அவசியம் இருக்க வேண்டும், அஷ்டாங்க யோகத்தின் மூன்றாம் நிலை இதுவே. ஆஸனம் யமம், நியமம், எல்லாவற்றிக்கும் நிலையான இருப்பிடம் வேண்டும், உடலுக்கு வருத்தமில்லா இருக்கையை அமைத்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் இந்திரியங்களை அடக்குவதற்கு ஒருவித வழியாகும், சரீரததில் பல மாறுதல்கள் தியானத்தின் போது ஏற்படும், இந்த மாறுதல்களே சச் சித் தானந்தம் என்பதாகும்,
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
http://poomalai-karthicraja.blogspot.in/
ஆன்மீக சிந்தனைகள் சில
மனத்தூய்மை பெறுவதும், பிறருக்கு உதவி செய்வதும்தான் எல்லா வழிபாட்டின் சாரமாகும்
தாய்தந்தையரிடம் கடவுளைக் காணாதவர்கள் கோயிலில் காண முடியாது
இறைவழிபாடு அல்லது பிராத்தனை என்பது, இறைவருடன் நாம் தொடர்பு கொள்வதற்கான ஒரு சாதனமாகும்
ஒரு மதமும் நாடும் முன்னேற வேண்டுமானால் மூட நம்பிக்கை ஒழிய வேண்டும்
நல்ல எண்ணமோ நல்ல செயலோ என்றும் வீணாவதில்லை
இரக்கமற்ற அறிவை விட அறிவற்ற இரக்கமே மேலானது
இனிய வார்த்தை இரும்புக் கதவையும் திறந்து விடும்
நற்குணங்கள் யாவும் கடவுளை நெருங்க உதவும் சாதனங்களாகும்
வளர்ச்சி அடைவதுதான் வாழ்க்கை, அந்த வளர்ச்சிக்கு அன்பு, நேர்மை, பொறுமை ஆகியன வேண்டும்
வெறுப்பு அரக்க குணம், மன்னிப்பது மனித குணம், மறப்பது தெய்வ குணம்
எப்பொழுதும் கொடுத்து வாழ வேண்டும், ஒருபோதும் கெடுத்து வாழக்கூடாது
பிறக்கு உதவி ெசய்ய நாம் எப்பொழுதும் தயாராக இருந்தால், நமக்கு உதவி செய்ய இறைவர் காத்திருப்பார்,
கஷ்டத்திலும் நேர்மையாக இரு, நீ ஏமாற்றப் பட்டாலும், பிறரை ஏமாற்றதே
தெய்வ நம்பிக்கை உன்னை கைவிடாது,
ஒருவனை நீ எந்த வார்த்தை சொல்லி திட்டுகிறாயோ, அதே வார்த்தையில் எப்போதாவது ஒருமுறை நீ திட்டப்படுவாய்
பாவம் என்பது நீ செய்யும் தீமை
புண்ணியம் என்பது நீ செய்யும் நன்மை,
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகச் சிந்தனைக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
ஆன்மீக சிந்தனைகள் சில
மனத்தூய்மை பெறுவதும், பிறருக்கு உதவி செய்வதும்தான் எல்லா வழிபாட்டின் சாரமாகும்
தாய்தந்தையரிடம் கடவுளைக் காணாதவர்கள் கோயிலில் காண முடியாது
இறைவழிபாடு அல்லது பிராத்தனை என்பது, இறைவருடன் நாம் தொடர்பு கொள்வதற்கான ஒரு சாதனமாகும்
ஒரு மதமும் நாடும் முன்னேற வேண்டுமானால் மூட நம்பிக்கை ஒழிய வேண்டும்
நல்ல எண்ணமோ நல்ல செயலோ என்றும் வீணாவதில்லை
இரக்கமற்ற அறிவை விட அறிவற்ற இரக்கமே மேலானது
இனிய வார்த்தை இரும்புக் கதவையும் திறந்து விடும்
நற்குணங்கள் யாவும் கடவுளை நெருங்க உதவும் சாதனங்களாகும்
வளர்ச்சி அடைவதுதான் வாழ்க்கை, அந்த வளர்ச்சிக்கு அன்பு, நேர்மை, பொறுமை ஆகியன வேண்டும்
வெறுப்பு அரக்க குணம், மன்னிப்பது மனித குணம், மறப்பது தெய்வ குணம்
எப்பொழுதும் கொடுத்து வாழ வேண்டும், ஒருபோதும் கெடுத்து வாழக்கூடாது
பிறக்கு உதவி ெசய்ய நாம் எப்பொழுதும் தயாராக இருந்தால், நமக்கு உதவி செய்ய இறைவர் காத்திருப்பார்,
கஷ்டத்திலும் நேர்மையாக இரு, நீ ஏமாற்றப் பட்டாலும், பிறரை ஏமாற்றதே
தெய்வ நம்பிக்கை உன்னை கைவிடாது,
ஒருவனை நீ எந்த வார்த்தை சொல்லி திட்டுகிறாயோ, அதே வார்த்தையில் எப்போதாவது ஒருமுறை நீ திட்டப்படுவாய்
பாவம் என்பது நீ செய்யும் தீமை
புண்ணியம் என்பது நீ செய்யும் நன்மை,
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகச் சிந்தனைக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
அறிந்தும் அறியாமலும் செய்யும் வினைகள் நம்மை காக்க உதவும் பாடல்
" ேகாலமா மங்கை தன்னைக் கொண்டொரு கோல மாய
சீலமேஅறியமாட்டேன் செய்வினை மூடி நின்று
ஞாலமாம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய்
ஆலமா நஞ்சம் உண்ட ஆவடு துறையுளானே. "
ஆலகால விடத்தை உண்ட ஆவடுதுறையில் எழுந்தருளியுள்ள பெருமானே, அழகிய பார்வதிையப் பாகமாக கொண்ட அம்மையப்பாய் விளங்கும் தங்களின் அறியாதவன் நான்.
நான்செய்யும் இருவினையும் என்னைச் சூழ்ந்து, இவ்வுலப் பந்த பாசத்துள் அழுத்தித் துன்பப்படுத்தாத வகையில் எளியேனை காத்தருள் புரியுங்கள். நான் அறிந்தும் அறியாமலும் செய்யும் வினைகள் யாவும் என்னை வந்து தாக்காமலிருக்க உதவி அருள வேண்டுகிறேன்,
தலைக்கு வந்தது, தலைமுடியுடன் போனது புண்ணியம் என்று கிராமங்களில் பேசுவார்கள். இதைப் போல நம் வினை நம்மைத் தொடரும் என்றாலும் தாங்கக் கூடிய அளவினதாக அமையும்,
திருச்சிற்றம்பம்
நன்றி ; தமிழ்வேதம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
" ேகாலமா மங்கை தன்னைக் கொண்டொரு கோல மாய
சீலமேஅறியமாட்டேன் செய்வினை மூடி நின்று
ஞாலமாம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய்
ஆலமா நஞ்சம் உண்ட ஆவடு துறையுளானே. "
ஆலகால விடத்தை உண்ட ஆவடுதுறையில் எழுந்தருளியுள்ள பெருமானே, அழகிய பார்வதிையப் பாகமாக கொண்ட அம்மையப்பாய் விளங்கும் தங்களின் அறியாதவன் நான்.
நான்செய்யும் இருவினையும் என்னைச் சூழ்ந்து, இவ்வுலப் பந்த பாசத்துள் அழுத்தித் துன்பப்படுத்தாத வகையில் எளியேனை காத்தருள் புரியுங்கள். நான் அறிந்தும் அறியாமலும் செய்யும் வினைகள் யாவும் என்னை வந்து தாக்காமலிருக்க உதவி அருள வேண்டுகிறேன்,
தலைக்கு வந்தது, தலைமுடியுடன் போனது புண்ணியம் என்று கிராமங்களில் பேசுவார்கள். இதைப் போல நம் வினை நம்மைத் தொடரும் என்றாலும் தாங்கக் கூடிய அளவினதாக அமையும்,
திருச்சிற்றம்பம்
நன்றி ; தமிழ்வேதம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
உன்னையே நீ அறிவாய்
ஆத்மீகர்கள் இறுதிகாலத்தில் எண்ணுகிற எண்ணத்திற்கு ஏற்ப அவனுக்கு அடுத்தபிறவி வாய்க்கிறது. அதனால் பிறவா நிலை எனும் பேரின்ப நிலை எய்த இடைவிடா ஈஸ்வர சிந்தனையுடையவனாக இருப்பதுதான் விசேசம். தாராள குணமும் சரளமான சுபாவமும் ஒருவனுக்கு அவனவன் தவத்தின் பயனாக வந்தவை என்பதை அறியவும், எந்த உணர்ச்சிக்கும் இடம் கொடாது சித்தம் கலங்காது நிலையான திறம் பெற்றவனே உண்மையான ஆன்மீகவாதியாக வாழமுடியும். இவற்றிக்கெல்லாம் வழிவகுக்கும் மனோசக்தியும் தேவரகசியங்களையும் பெறக்கூடியதே தியானம்.
மனிதனாக பிறந்த எவருக்கும் உலக விதிப்படி மூன்று கடமைகள் உண்டு. முதல் கடமை பெற்றோர்கள் நம்மை பிறப்பித்து வளர்த்தனால் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் உண்டு, அவையாதெனில் நற்குலத்து நங்கையை மணந்து தன் வம்சத்திற்கு வளமளிக்கும் மக்களைப் ெப்ற்று பித்ருக்குகளை அளிக்க செய்து,மற்றொன்று உலகமனைத்தும் சிறந்த பண்பாட்டை பரப்பவல்ல திருமறைகளை முனிவர்கள், சித்தர்கள்நமக்கு அறிய பொக்கிசமாக தந்துவிட்டு போனதை அவர்களுக்கு பிரதி உபகாரமாக செய்ய வேண்டிய கடமை அந்த மறைகளை ஓதி எங்கும் பெருண்மைகளை பரவச் செய்து சித்தர்களுக்கு ஆனந்தத்தை விளைவிப்பதன் மூலம் அவர்கள் ஆசியை பெறவேண்டும். மூன்றாவதாக இறைவன் அளித்துள்ள நன்மைகளை உலகுக்கு பயன்படுத்தி உயர்ந்த பொருட்களை தேவர்களுக்கு கொடுப்பதாகிய வேள்விகளை செய்து இறைவனின் அனுக்கிரம் பெறவேண்டியதாகும். மூன்றுகடமைகளுடன் பிறந்த மனிதனுக்கு உத்தமகுணம் மற்றும் சத்துவகுணம் அமைந்தவனாக ஆகிறான். அபூர்வ சத்துவகுணம் கொண்டவன், பொறுமையும், பொறுப்பும் நிதானமும் உடையவனாகவும் இருப்பான். மண்ணுயிரும் தன்னுயிர் போல் பாவிக்கும் உத்தமகுணமுடையவனாய் ஈகை, இரக்கம், தர்மகுணத்தவனாய், அடியார்களிடம்அன்பு செலுத்துபவனாகவும், சாஸ்திர சம்பந்தங்களை கற்றுணர்ந்து அவற்றினை ஆராய்ந்து அதன் பேருண்மைகளை பிறர்க்கு போதிக்கும் குணமுள்ளவனாகவும் சாஸ்திர சம்பந்தங்களுக்கு விரோதமாக நடக்காதவனாய், குருவிடம் பக்தி செலுத்துபவனாகவும், பெரும் நிலை எய்த தவம் போன்ற பரமார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவனாகவும் இருப்பான்.
இரண்டாவதான ரஜோகுணம் - அதிகார தன்மையும் தான் என்ற மமதையும் எதையும் சாதித்திட வேண்டும் என்ற பிடிவாதமும், துஸ்டத்தனமான மனிதர்களின் சகவாசமும், தன்னைவிட பலம் குறைந்தவனை தன் அதிகாரத்தால் அதட்டி பணிய வைப்பதும், எந்தநேரமும் பணமே பெரிதெனவும் அதை சம்பாதிப்பதிலேயே காலம் கழிப்பனாகவும், கொடூர செயலையுடைய தெய்வங்களை ஆராதிப்பனும் ஆவான்.
மூன்றாவதாக தமோ குணமுடையவன் - மிருகங்களையும் தன்னைவிட பலம் குறைந்தவர்களை வதைப்பதும், கொலை பாவங்களுக்கு அஞ்சாதவனுமாயும், பொய், களவு, சூது செய்பவனும் மயக்கமுறும் கள், போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாயும், புலால் உண்ணுவனுமாகவும், எதையும் பகுத்தறிந்து செயல்படாதவனாகவும் சோம்பல் உடையவனாகவும் நியாயத்திற்கு புறம்பானவனாகவும் பூத பிசாசு கணங்களை பூசிப்பதும் எப்போதும் கெடுதலே செய்து வனதேவதைகளை வணங்குவனாகவும், நிதானமின்றி நடப்பவனாகவும் இயற்கை விதிகளுக்கு புறம்பாக நடப்பவனுமாக இருப்பான்.
எனவே நற்குணமுடைய பெரியோர்களுடன் கூட்டு கொள்ள வேண்டும் என்று ஆதிசங்கரர் கூறுகிறார், சாத்மீக குணமும் தெய்வீக பண்பும் பெரியவர்கள் கூட்டுறவும் பெற்றால் அவர்களது அன்பும், பரிவும் நம்மை உத்தம குணங்களை உண்டாக்கி இறையருள் பெறச்செய்யும், பெரியவர்களின் கூட்டு சேர்ப்பதால் குரு அருள் பெறமுடியும், குருவின் அருளின்றி ஞான நெறிகளையும் தெய்வ சக்திகளையும் பெறமுடியாது. எல்லாவற்றிக்கும் ஒளி விளக்காய் திகழும் குருவின் பாதாசாரங்களை சரணடைந்தால் புரியாத விசயங்களையும் புரிகின்றபடி வழிகாட்டுவார்.
தானம் - மானம் குலம் திருவாய்த்தாலும்
தானே வருமோ முக்தி குருவின்றி ஏது முக்தி ?
குருவின் அருள் கிடைத்தால் எல்லா பாவங்களும் கதிரவனைக்கண்ட பனிபோல் விலகும். குருவானவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும என்ற விதிப்படி, காமகுரோதாதி, துர்குணங்களற்றவாய், வேதாந்த, சித்தாந்தங்களை சாஸ்திரப்பியாசம் செய்து அதன் உண்மைப் பொருளை உணர்ந்தவராய், பனிரெண்டு வருடம் பிரம்ம நிஸ்டை செய்து பிரம்ம சொரூபமாகவே விளங்குபவராக உள்ளவர்எவரோ அவரே சத்குருவாகும். குருமார்கள் எண் வகையானவர்கள் எனவே அவர்களை அஸ்ட குருமார்கள் என்பார்கள்.
போத குரு ; சாஸ்திரங்களை போதிப்பவர்
வேதகுரு : தத்துவார்த்தைகளை கூறுபவர்
நிசித்த குரு: வசிகம் போன்ற வித்தைகளை போதிப்பவர்
காமியக்குரு : இம்மை, மறுமை இன்பத்தை போதிப்பவர்
சூசக குரு : நித்யம்,அநித்தியம் எனும் விவேகத்தை போதிப்பவர்
வாசக குரு: ஆன்மாவில் விருப்பம் உண்டாக செய்பவர்
காரணகுரு: ஜீவப்பிரம்ம ஜக்கியத்தை ஞான உபதேசம் செய்பவர்
விகிதகுரு : சீடர்தம் ஐயம் நீக்குவது நித்தியமாயுள்ள மோட்சம் அடைய அருள் செய்பவர்
இவ்வாறு ஒவ்வொரு குருவிடம் ஒவ்வொரு சக்தியும் சித்தியும் இருக்கும். அந்த சித்திகளைநாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் , இதற்கு பணிவும் குருபக்தியும் இருந்தால்தான் முடியும்
ஒரே மனத்துடன் இடைவிடாது, யோகத்தை பயிலவேண்டும். தியானம் உடல் வலிமைக்கும் மன அமைதிக்கும் தியானம் உதவுகிறது. தியானத்தினால் யோகம் அறிய தகுந்தது, யோகத்தின் சாதனையே வாயுவை கட்டுப்படுத்துவதுதான், இந்த வாயு நாசமடைந்தால் பிணமாகிறது, உயிரற்ற உடலால் செயலாவத யாதொன்றும் இல்லை. ஜீவனிருக்கும் உடல்தான் எல்லா இயக்கங்களையும் செய்ய முடியும். இந்த ஜீவனான பிராணனை தன் வசத்தில் கட்டுப்படுத்தி தன் வழியே செயல்பட வைத்தது, நம் சித்த கணங்களை சாதனைகளால் சாதித்து அற்புதமான சக்தியினை உணர்த்தி மகிமையைக் காட்டியவர்கள் நம் சித்த பெருமக்கள். பஞ்ச பூத சக்தி தத்துவத்தை அறிந்து அவர்கள் தன் உடலே பஞ்ச பூத சக்தியினால் இயக்கப்படுகிறது என்பதை உணர்ந்து அதை தன் வயப்படுத்தி, தானே தனக்கு ஒரு முடிவை ஏற்படுத்த சக்தியுடையவனாயிருந்தார்கள் சித்தர்கள். இறந்த உடலில் ஜீவன் விலகி விட்டபின் அந்த உடல் எந்த விதமான செயலையும் செய்யாது ஜடமாகிவிடுகிறது. உடலில் ஜீவன் உள்ளளவும் அவன் செயற்கரிய செயலகளை செய்தான், உலகம் போற்றும் விஞ்ஞானத்தையும்,மருத்துவத்தையும் கண்டறிந்தான். ஜீவன் பிரிந்த பின் கீழே ஜடமாக கிடக்கிறான், இதை அறிந்த அவன் அறிவு இது எப்படி நிகழ்கிறது தூங்கும் போது கூட ஒடிக்கொண்டிருக்கும் மூச்சு இறந்த பின்னர் அதனுள் இயங்குவது இல்லை. என்று சிந்திக்கின்றான். அந்த ஆராயும் உள்ளமே, ஆத்ம விசாரம் என்பதாகும், இந்த உடலில் மூச்சு (ப்ராணன்) உள்ளளவும்இயக்கம் இயங்குகிறது. வேலைப் பழு அதிகமாகும் போது கூடுதலான மூச்சும் ஓய்வின்போது குறைவான மூச்சும் நடைபெறுகிறது. ஓவ்வொரு நாளும் மூச்சைக் குறைத்து தன்வசப்படுத்துகிறான், அப்படி தன் வயப்படுத்தியவன் தான் அற்புதங்களையும் நிகழ்த்தும் சித்தனாம்.
"உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லிரேல்
விருத்தரும் பால ராவர் மேனியும் சிவந்திடும்
அருட்டரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே. சிவவாக்கியர்
யமம், நியமம், நேம நிஸ்டங்களை அனுசரித்து சாதனை புரிந்து வாயுவை பிரம்ம மந்திரத்தில் ஏற்றுவது சாத்தியமாகும்போது அபூர்வ சக்திகடளை பெறும் நிலை உண்டாகிறது,
குருதீட்சை :
ஈசன் கொடாததை குரு கொடுப்பார் என்பது வாக்கு. குருவே சகல கல்வி வித்தைகளுக்கும் என்றும் குறையாத நிதி , பாவப் பிணியைப் போக்கும் பரம பருசனான வைத்தியர், சகலத்திற்கும் ஆச்சாரியார் இவரே சுவாமிநாதன், குரு பிரம்மா குருவிஷ்ணு, குருதேவே மகேஷ்வரன் , இத்தகைய குரு நமக்கு கிடைக்க வேண்டும், குரு தன் சிடனுக்கு பலவிதமான தீட்சயைகள் மூலம் அனுகிரகம் செய்விப்பார்,.
குரு சீடனை ஞானக்கண்ணால் ஸ்பரிசிப்பது நயன தீட்சை,
விரல்களால் தொட்டு ஸ்பரிசிப்பது ஸ்பரிச தீட்சை
உள்மனதால் நேசிப்பது மானஸ தீட்சை
மந்திர உபதேசம் செய்து கொடுப்பது வாசக தீட்சை
யோக மார்க்கத்தால் சிடனின் இதயத்தில் பிரவேசிப்பது யோக தீட்சை
ஹோமம் செய்து அக்கினியால் தீட்சை கொடுப்பது அவந்திரி தீட்சை
மனத்தால் மானசீகமாக சங்கல்பம் செய்து உபதேசிப்பது ஞான தீட்சை
குண்டலினி சக்தியை கிளப்பும் தந்திரங்களை போதிப்பது கிரியா தீட்சை
வேத ஆகமங்கள் பயிற்றுவித்து அனுகிரகம் செய்வது சபீசா தீட்சை
தன் பாதத்தை தலையில் வைத்து உபதேசிப்பது திருவடி தீட்சை
உலக ஜீவர்கள் உய்யும் பொருட்டு மனத்திற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்ட ஆண்டவனாக காட்சியளிக்கிறார், மனம் வடிவமில்லாத ஒன்றை பற்றாது, கொடி எப்படி கொம்பை பற்றி படர்வதைப்போல் மனம் நாம ருப நாட்டமுடையது.நாம் இறைவனைப் போய் அடையலாம் என்று என்ன தவமிருந்தாலும் முடியாது, ஆனால் அவனே கருணை மிகுதியால் நம்மிடம் ஓடோடி வளந்து ஆட்கொள்ளுவான். யோகத்தின் முடிவே ஞானம், யோகம் பல படித்தரங்களை கொண்டது, அவை குருவின் மூலம்அறிந்த சாதனை புரிய வேண்டும். பதஞ்சலி முனிவரின் அஷ்டாங்க யோகத்தில் இவை விரிவாக உள்ளது, அவை யமம்,நியமம், ஆசனம்,பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற விதிகளின்படி கையாண்டு மனிதனாக பிறந்த நமக்கு மனம் வாக்கு, காயம் முதலியனவாற்றில் மாசு படிந்துள்ளது, இந்த மாசு நீங்கினால் தான் மேன்மை அடைய முடியும் பூமியிலிருந்து தங்கம் வெட்டி எடுத்து அக்கினியிட்டு தூயதாக்குவதுபோல் நம் எண்ணங்களிலும் அக்கினி என்ற நெருப்பை எழுப்பி அதை யமம், நியமம், என்ற கிராமப்படி எரித்து அந்த மாசுக்களை அக்ற்ற வேண்டும், இதனை அவ்வை :
பிறந்தலொன்றின்றிப் பிறவாமை வேண்டி
அறுத்துருவ மாற்றியிரு. என்கிறார்,
பிறப்பை கொடுக்கும் விரோதமான எண்ணங்களையும் செயலையும் அதன் மூல காரணங்களையும் அடியோடு அழித்து விடு என்கிறார், அவ்வாறு செய்வதின் மூலம் பிறவியை கொடுக்கும் பாவத்தை செய்யாமல் ஒழித்து விடலாம்.இந்த சரீரத்தில் ஆத்மா உள்ளது, அதுவே தாழ்வை அடைந்து பிறக்கிருதியின் குணங்களால் மூடப்பட்டிருக்கிறது, அப்படிமூடப் பட்டிருப்பதால் தனக்குள்ளே இருக்கும் ஆன்மாவை காண்பது அரியதாகிறது, அவ்வாத்மா இது என்னுடையது என்று எண்ணிக்கொணட, தான் செய்த கருமங்களின் பயனில் கட்டுண்டு தாழ்மை அடைந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளத் தெரியாமல் சுற்றி சுற்றி வருகின்றது, பற்றற்றான் பற்றிய இறைவனை பற்றினால்தான் ஆத்ம ஞானம் அடையமுடியும், எல்லாக் காலங்களிலும் சாத்மீக உணவாகவே உண்ணப் பழகிக்கொள்ள வேண்டும்,
ஒருவேளை உண்பவன் யோகி
இருவேளை உண்பவன் போகி
மூன்றுவேளை உண்பவன் ரோகி
என்பார்கள், எல்லாவற்றிக்கும் ஒரே சீராக உடலை வைத்திருப்பதற்கும் தியானத்தில் சாதனை புரிவதற்கும் கட்டுப்பாடு அவசியம், மனிதன் மூன்றின் சேர்க்கையால் உண்டானவன், மனம், ஆத்மா, தேகம் ஆகியவற்றால் உண்டானவன், ஆத்மாவை தவிர மற்ற இரண்டும் நோய்களுக்கு காரணமாகின்றன. தேகத்திற்கு வரும் வியாதிகளால் உடல் பாதிக்கப்படுகிறது, எனவே அதை நவீன விஞ்ஞானமும் நிருபித்துள்ளது. உடல் உபாதைகளுக்கு காரணமாயிருக்கின்ற புற இச்சைகளை அகற்ற வேண்டும், மனிதனுக்கு நான்கு நிலைகளுடைய மனம் உண்டு, புறமனம், நடுமனம், அடிமனம் செயலற்றிருக்கும் மனம் என்பன. புறமனம் சிற்றின்பத்தை விருத்தியுடையது,மனஒடுங்கி ஆன்மாவில் லயித்திருப்பது, நடுமனம், விருத்தி, மனம் ஆத்மாமவில் லயமாவது யோகம், இது அடிமனம், நான்காவது மனம் பிரம்ம நிஷ்டையிருப்பது, எனவே மனத்தை அடக்கி ஆன்மாவில் லயத்திருக்க உடலுடன் மனத்தையும் சீர்செய்யவேண்டும், அப்போதுதான் உன் உள்ளே இருக்கும் ஆன்மாவை நாம் காண இயலும்.
திருச்சிற்றம்பலம்
மேலும் சில ஆன்மீக தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
ஆத்மீகர்கள் இறுதிகாலத்தில் எண்ணுகிற எண்ணத்திற்கு ஏற்ப அவனுக்கு அடுத்தபிறவி வாய்க்கிறது. அதனால் பிறவா நிலை எனும் பேரின்ப நிலை எய்த இடைவிடா ஈஸ்வர சிந்தனையுடையவனாக இருப்பதுதான் விசேசம். தாராள குணமும் சரளமான சுபாவமும் ஒருவனுக்கு அவனவன் தவத்தின் பயனாக வந்தவை என்பதை அறியவும், எந்த உணர்ச்சிக்கும் இடம் கொடாது சித்தம் கலங்காது நிலையான திறம் பெற்றவனே உண்மையான ஆன்மீகவாதியாக வாழமுடியும். இவற்றிக்கெல்லாம் வழிவகுக்கும் மனோசக்தியும் தேவரகசியங்களையும் பெறக்கூடியதே தியானம்.
மனிதனாக பிறந்த எவருக்கும் உலக விதிப்படி மூன்று கடமைகள் உண்டு. முதல் கடமை பெற்றோர்கள் நம்மை பிறப்பித்து வளர்த்தனால் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் உண்டு, அவையாதெனில் நற்குலத்து நங்கையை மணந்து தன் வம்சத்திற்கு வளமளிக்கும் மக்களைப் ெப்ற்று பித்ருக்குகளை அளிக்க செய்து,மற்றொன்று உலகமனைத்தும் சிறந்த பண்பாட்டை பரப்பவல்ல திருமறைகளை முனிவர்கள், சித்தர்கள்நமக்கு அறிய பொக்கிசமாக தந்துவிட்டு போனதை அவர்களுக்கு பிரதி உபகாரமாக செய்ய வேண்டிய கடமை அந்த மறைகளை ஓதி எங்கும் பெருண்மைகளை பரவச் செய்து சித்தர்களுக்கு ஆனந்தத்தை விளைவிப்பதன் மூலம் அவர்கள் ஆசியை பெறவேண்டும். மூன்றாவதாக இறைவன் அளித்துள்ள நன்மைகளை உலகுக்கு பயன்படுத்தி உயர்ந்த பொருட்களை தேவர்களுக்கு கொடுப்பதாகிய வேள்விகளை செய்து இறைவனின் அனுக்கிரம் பெறவேண்டியதாகும். மூன்றுகடமைகளுடன் பிறந்த மனிதனுக்கு உத்தமகுணம் மற்றும் சத்துவகுணம் அமைந்தவனாக ஆகிறான். அபூர்வ சத்துவகுணம் கொண்டவன், பொறுமையும், பொறுப்பும் நிதானமும் உடையவனாகவும் இருப்பான். மண்ணுயிரும் தன்னுயிர் போல் பாவிக்கும் உத்தமகுணமுடையவனாய் ஈகை, இரக்கம், தர்மகுணத்தவனாய், அடியார்களிடம்அன்பு செலுத்துபவனாகவும், சாஸ்திர சம்பந்தங்களை கற்றுணர்ந்து அவற்றினை ஆராய்ந்து அதன் பேருண்மைகளை பிறர்க்கு போதிக்கும் குணமுள்ளவனாகவும் சாஸ்திர சம்பந்தங்களுக்கு விரோதமாக நடக்காதவனாய், குருவிடம் பக்தி செலுத்துபவனாகவும், பெரும் நிலை எய்த தவம் போன்ற பரமார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவனாகவும் இருப்பான்.
இரண்டாவதான ரஜோகுணம் - அதிகார தன்மையும் தான் என்ற மமதையும் எதையும் சாதித்திட வேண்டும் என்ற பிடிவாதமும், துஸ்டத்தனமான மனிதர்களின் சகவாசமும், தன்னைவிட பலம் குறைந்தவனை தன் அதிகாரத்தால் அதட்டி பணிய வைப்பதும், எந்தநேரமும் பணமே பெரிதெனவும் அதை சம்பாதிப்பதிலேயே காலம் கழிப்பனாகவும், கொடூர செயலையுடைய தெய்வங்களை ஆராதிப்பனும் ஆவான்.
மூன்றாவதாக தமோ குணமுடையவன் - மிருகங்களையும் தன்னைவிட பலம் குறைந்தவர்களை வதைப்பதும், கொலை பாவங்களுக்கு அஞ்சாதவனுமாயும், பொய், களவு, சூது செய்பவனும் மயக்கமுறும் கள், போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாயும், புலால் உண்ணுவனுமாகவும், எதையும் பகுத்தறிந்து செயல்படாதவனாகவும் சோம்பல் உடையவனாகவும் நியாயத்திற்கு புறம்பானவனாகவும் பூத பிசாசு கணங்களை பூசிப்பதும் எப்போதும் கெடுதலே செய்து வனதேவதைகளை வணங்குவனாகவும், நிதானமின்றி நடப்பவனாகவும் இயற்கை விதிகளுக்கு புறம்பாக நடப்பவனுமாக இருப்பான்.
எனவே நற்குணமுடைய பெரியோர்களுடன் கூட்டு கொள்ள வேண்டும் என்று ஆதிசங்கரர் கூறுகிறார், சாத்மீக குணமும் தெய்வீக பண்பும் பெரியவர்கள் கூட்டுறவும் பெற்றால் அவர்களது அன்பும், பரிவும் நம்மை உத்தம குணங்களை உண்டாக்கி இறையருள் பெறச்செய்யும், பெரியவர்களின் கூட்டு சேர்ப்பதால் குரு அருள் பெறமுடியும், குருவின் அருளின்றி ஞான நெறிகளையும் தெய்வ சக்திகளையும் பெறமுடியாது. எல்லாவற்றிக்கும் ஒளி விளக்காய் திகழும் குருவின் பாதாசாரங்களை சரணடைந்தால் புரியாத விசயங்களையும் புரிகின்றபடி வழிகாட்டுவார்.
தானம் - மானம் குலம் திருவாய்த்தாலும்
தானே வருமோ முக்தி குருவின்றி ஏது முக்தி ?
குருவின் அருள் கிடைத்தால் எல்லா பாவங்களும் கதிரவனைக்கண்ட பனிபோல் விலகும். குருவானவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும என்ற விதிப்படி, காமகுரோதாதி, துர்குணங்களற்றவாய், வேதாந்த, சித்தாந்தங்களை சாஸ்திரப்பியாசம் செய்து அதன் உண்மைப் பொருளை உணர்ந்தவராய், பனிரெண்டு வருடம் பிரம்ம நிஸ்டை செய்து பிரம்ம சொரூபமாகவே விளங்குபவராக உள்ளவர்எவரோ அவரே சத்குருவாகும். குருமார்கள் எண் வகையானவர்கள் எனவே அவர்களை அஸ்ட குருமார்கள் என்பார்கள்.
போத குரு ; சாஸ்திரங்களை போதிப்பவர்
வேதகுரு : தத்துவார்த்தைகளை கூறுபவர்
நிசித்த குரு: வசிகம் போன்ற வித்தைகளை போதிப்பவர்
காமியக்குரு : இம்மை, மறுமை இன்பத்தை போதிப்பவர்
சூசக குரு : நித்யம்,அநித்தியம் எனும் விவேகத்தை போதிப்பவர்
வாசக குரு: ஆன்மாவில் விருப்பம் உண்டாக செய்பவர்
காரணகுரு: ஜீவப்பிரம்ம ஜக்கியத்தை ஞான உபதேசம் செய்பவர்
விகிதகுரு : சீடர்தம் ஐயம் நீக்குவது நித்தியமாயுள்ள மோட்சம் அடைய அருள் செய்பவர்
இவ்வாறு ஒவ்வொரு குருவிடம் ஒவ்வொரு சக்தியும் சித்தியும் இருக்கும். அந்த சித்திகளைநாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் , இதற்கு பணிவும் குருபக்தியும் இருந்தால்தான் முடியும்
ஒரே மனத்துடன் இடைவிடாது, யோகத்தை பயிலவேண்டும். தியானம் உடல் வலிமைக்கும் மன அமைதிக்கும் தியானம் உதவுகிறது. தியானத்தினால் யோகம் அறிய தகுந்தது, யோகத்தின் சாதனையே வாயுவை கட்டுப்படுத்துவதுதான், இந்த வாயு நாசமடைந்தால் பிணமாகிறது, உயிரற்ற உடலால் செயலாவத யாதொன்றும் இல்லை. ஜீவனிருக்கும் உடல்தான் எல்லா இயக்கங்களையும் செய்ய முடியும். இந்த ஜீவனான பிராணனை தன் வசத்தில் கட்டுப்படுத்தி தன் வழியே செயல்பட வைத்தது, நம் சித்த கணங்களை சாதனைகளால் சாதித்து அற்புதமான சக்தியினை உணர்த்தி மகிமையைக் காட்டியவர்கள் நம் சித்த பெருமக்கள். பஞ்ச பூத சக்தி தத்துவத்தை அறிந்து அவர்கள் தன் உடலே பஞ்ச பூத சக்தியினால் இயக்கப்படுகிறது என்பதை உணர்ந்து அதை தன் வயப்படுத்தி, தானே தனக்கு ஒரு முடிவை ஏற்படுத்த சக்தியுடையவனாயிருந்தார்கள் சித்தர்கள். இறந்த உடலில் ஜீவன் விலகி விட்டபின் அந்த உடல் எந்த விதமான செயலையும் செய்யாது ஜடமாகிவிடுகிறது. உடலில் ஜீவன் உள்ளளவும் அவன் செயற்கரிய செயலகளை செய்தான், உலகம் போற்றும் விஞ்ஞானத்தையும்,மருத்துவத்தையும் கண்டறிந்தான். ஜீவன் பிரிந்த பின் கீழே ஜடமாக கிடக்கிறான், இதை அறிந்த அவன் அறிவு இது எப்படி நிகழ்கிறது தூங்கும் போது கூட ஒடிக்கொண்டிருக்கும் மூச்சு இறந்த பின்னர் அதனுள் இயங்குவது இல்லை. என்று சிந்திக்கின்றான். அந்த ஆராயும் உள்ளமே, ஆத்ம விசாரம் என்பதாகும், இந்த உடலில் மூச்சு (ப்ராணன்) உள்ளளவும்இயக்கம் இயங்குகிறது. வேலைப் பழு அதிகமாகும் போது கூடுதலான மூச்சும் ஓய்வின்போது குறைவான மூச்சும் நடைபெறுகிறது. ஓவ்வொரு நாளும் மூச்சைக் குறைத்து தன்வசப்படுத்துகிறான், அப்படி தன் வயப்படுத்தியவன் தான் அற்புதங்களையும் நிகழ்த்தும் சித்தனாம்.
"உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லிரேல்
விருத்தரும் பால ராவர் மேனியும் சிவந்திடும்
அருட்டரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே. சிவவாக்கியர்
யமம், நியமம், நேம நிஸ்டங்களை அனுசரித்து சாதனை புரிந்து வாயுவை பிரம்ம மந்திரத்தில் ஏற்றுவது சாத்தியமாகும்போது அபூர்வ சக்திகடளை பெறும் நிலை உண்டாகிறது,
குருதீட்சை :
ஈசன் கொடாததை குரு கொடுப்பார் என்பது வாக்கு. குருவே சகல கல்வி வித்தைகளுக்கும் என்றும் குறையாத நிதி , பாவப் பிணியைப் போக்கும் பரம பருசனான வைத்தியர், சகலத்திற்கும் ஆச்சாரியார் இவரே சுவாமிநாதன், குரு பிரம்மா குருவிஷ்ணு, குருதேவே மகேஷ்வரன் , இத்தகைய குரு நமக்கு கிடைக்க வேண்டும், குரு தன் சிடனுக்கு பலவிதமான தீட்சயைகள் மூலம் அனுகிரகம் செய்விப்பார்,.
குரு சீடனை ஞானக்கண்ணால் ஸ்பரிசிப்பது நயன தீட்சை,
விரல்களால் தொட்டு ஸ்பரிசிப்பது ஸ்பரிச தீட்சை
உள்மனதால் நேசிப்பது மானஸ தீட்சை
மந்திர உபதேசம் செய்து கொடுப்பது வாசக தீட்சை
யோக மார்க்கத்தால் சிடனின் இதயத்தில் பிரவேசிப்பது யோக தீட்சை
ஹோமம் செய்து அக்கினியால் தீட்சை கொடுப்பது அவந்திரி தீட்சை
மனத்தால் மானசீகமாக சங்கல்பம் செய்து உபதேசிப்பது ஞான தீட்சை
குண்டலினி சக்தியை கிளப்பும் தந்திரங்களை போதிப்பது கிரியா தீட்சை
வேத ஆகமங்கள் பயிற்றுவித்து அனுகிரகம் செய்வது சபீசா தீட்சை
தன் பாதத்தை தலையில் வைத்து உபதேசிப்பது திருவடி தீட்சை
உலக ஜீவர்கள் உய்யும் பொருட்டு மனத்திற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்ட ஆண்டவனாக காட்சியளிக்கிறார், மனம் வடிவமில்லாத ஒன்றை பற்றாது, கொடி எப்படி கொம்பை பற்றி படர்வதைப்போல் மனம் நாம ருப நாட்டமுடையது.நாம் இறைவனைப் போய் அடையலாம் என்று என்ன தவமிருந்தாலும் முடியாது, ஆனால் அவனே கருணை மிகுதியால் நம்மிடம் ஓடோடி வளந்து ஆட்கொள்ளுவான். யோகத்தின் முடிவே ஞானம், யோகம் பல படித்தரங்களை கொண்டது, அவை குருவின் மூலம்அறிந்த சாதனை புரிய வேண்டும். பதஞ்சலி முனிவரின் அஷ்டாங்க யோகத்தில் இவை விரிவாக உள்ளது, அவை யமம்,நியமம், ஆசனம்,பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற விதிகளின்படி கையாண்டு மனிதனாக பிறந்த நமக்கு மனம் வாக்கு, காயம் முதலியனவாற்றில் மாசு படிந்துள்ளது, இந்த மாசு நீங்கினால் தான் மேன்மை அடைய முடியும் பூமியிலிருந்து தங்கம் வெட்டி எடுத்து அக்கினியிட்டு தூயதாக்குவதுபோல் நம் எண்ணங்களிலும் அக்கினி என்ற நெருப்பை எழுப்பி அதை யமம், நியமம், என்ற கிராமப்படி எரித்து அந்த மாசுக்களை அக்ற்ற வேண்டும், இதனை அவ்வை :
பிறந்தலொன்றின்றிப் பிறவாமை வேண்டி
அறுத்துருவ மாற்றியிரு. என்கிறார்,
பிறப்பை கொடுக்கும் விரோதமான எண்ணங்களையும் செயலையும் அதன் மூல காரணங்களையும் அடியோடு அழித்து விடு என்கிறார், அவ்வாறு செய்வதின் மூலம் பிறவியை கொடுக்கும் பாவத்தை செய்யாமல் ஒழித்து விடலாம்.இந்த சரீரத்தில் ஆத்மா உள்ளது, அதுவே தாழ்வை அடைந்து பிறக்கிருதியின் குணங்களால் மூடப்பட்டிருக்கிறது, அப்படிமூடப் பட்டிருப்பதால் தனக்குள்ளே இருக்கும் ஆன்மாவை காண்பது அரியதாகிறது, அவ்வாத்மா இது என்னுடையது என்று எண்ணிக்கொணட, தான் செய்த கருமங்களின் பயனில் கட்டுண்டு தாழ்மை அடைந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளத் தெரியாமல் சுற்றி சுற்றி வருகின்றது, பற்றற்றான் பற்றிய இறைவனை பற்றினால்தான் ஆத்ம ஞானம் அடையமுடியும், எல்லாக் காலங்களிலும் சாத்மீக உணவாகவே உண்ணப் பழகிக்கொள்ள வேண்டும்,
ஒருவேளை உண்பவன் யோகி
இருவேளை உண்பவன் போகி
மூன்றுவேளை உண்பவன் ரோகி
என்பார்கள், எல்லாவற்றிக்கும் ஒரே சீராக உடலை வைத்திருப்பதற்கும் தியானத்தில் சாதனை புரிவதற்கும் கட்டுப்பாடு அவசியம், மனிதன் மூன்றின் சேர்க்கையால் உண்டானவன், மனம், ஆத்மா, தேகம் ஆகியவற்றால் உண்டானவன், ஆத்மாவை தவிர மற்ற இரண்டும் நோய்களுக்கு காரணமாகின்றன. தேகத்திற்கு வரும் வியாதிகளால் உடல் பாதிக்கப்படுகிறது, எனவே அதை நவீன விஞ்ஞானமும் நிருபித்துள்ளது. உடல் உபாதைகளுக்கு காரணமாயிருக்கின்ற புற இச்சைகளை அகற்ற வேண்டும், மனிதனுக்கு நான்கு நிலைகளுடைய மனம் உண்டு, புறமனம், நடுமனம், அடிமனம் செயலற்றிருக்கும் மனம் என்பன. புறமனம் சிற்றின்பத்தை விருத்தியுடையது,மனஒடுங்கி ஆன்மாவில் லயித்திருப்பது, நடுமனம், விருத்தி, மனம் ஆத்மாமவில் லயமாவது யோகம், இது அடிமனம், நான்காவது மனம் பிரம்ம நிஷ்டையிருப்பது, எனவே மனத்தை அடக்கி ஆன்மாவில் லயத்திருக்க உடலுடன் மனத்தையும் சீர்செய்யவேண்டும், அப்போதுதான் உன் உள்ளே இருக்கும் ஆன்மாவை நாம் காண இயலும்.
திருச்சிற்றம்பலம்
மேலும் சில ஆன்மீக தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
ஆசை
ஆசைகள் அற்ற இடத்தில் குற்ற்கள் அற்றுப் போகின்றன. குற்றங்களும் பாவங்களும் அற்றுப் போய் விட்டால், அனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன. அனுபவங்கள் இல்லையென்றால் நன்மை தீமைகளை காண இயலாது. ஆகவே தவறுகள் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். இறைவன் ஆசையை தூண்டி விடுகின்றான், ஆசை நம்மை ஆட்டிப் படைப்பது நம் மனமே . உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படி யெல்லாம் ஆட்டி படைக்கிறது, என்று யோசித்துப் பாருங்கள். மனத்துடன் நடத்தும போராட்டம் என்றும் ஒய்வதில்லை. விழிப்பு நிலையிலும், உறங்கும் நிலையிலும் கூட மனத்தின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை. எனவே,
அனைத்து சாஸ்தரங்களும் வேதங்களும் மனதை அடக்கும் வழிமுறைகளை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் நிலையை ஆண்டவனிடம் தான் கேட்டு பெற வேண்டும்.
உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வாறு அனுபவித்தாலும், ஒருவனுக்கு நிரந்தர திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் இந்த ஆசையை விட்டுவிட இடம் தருவதில்லை.
காய்ந்த எலும்புத்துண்டை கடித்த நாய் தன் வாயிலிருந்து வந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாக கடித்து துன்ப்படுவது போல, மனிதனும் ஆசைகளை பெருக்கி கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.
பாலைவனத்தில் காணப்பெறும் கானல் நீர் போன்றே இல்லாத - கிடைக்காத ஒன்றுக்கு ஆைச்பட்டு துன்பம் கொள்கின்றனர் மனிதர்கள்.
வாழ்வில் கிடைக்கும் இன்பங்கள் யாவும் நம்மை ஏற்றமடையக்கூடியதே, அவை நிரந்தரமனவை அல்ல.
நம் மனித வாழ்வே அற்பமானது அந்த வாழ்வு சுகப்பட ஆண்டவனே ஆசையை தூண்டிவிடுகின்றான், ஏனெனில் இந்த அற்ப காலத்தில் கர்ம வினைகள் மூலம் பிறப்பற்ற வாழ்வை தூண்டவே ஆசை, பாசங்களிலிருந்து விடுபட்டு பற்றற்ற வாழ்வு பெறவே இவ்வாறு செய்கிறான்,
மண்ணாசை வளர்ந்தால் கொலையில் விழுகிறது.
பொன்னாசை வளர்ந்தால் களவு நடக்கிறது
பெண்ணாசை வளர்ந்தால் பாபம் நிகழ்கிறது
மூன்று ஆசைகளையும் அற்றவர் மனிதர்களில் மிகமிக சிலரே ஆவர், ஆகவேதான் பற்றற்ற வாழ்வை இந்துமதம் போதிக்கிறது. அதற்காக முற்றும் துறந்து சந்நியாசி ஆவதல்ல,
இருப்பது போதும் வருவது வரட்டும் போவது போகட்டும்
மிஞ்சுவது மிஞ்சட்டும் என்று ஆசை என்ற சபலங்களுக்கு ஆட்பாடதிருத்தல், பற்றற்ற வாழ்க்கை பரம் பொருள் மீது ஆசை வைத்தால் நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது. ஆண்டவன் மீது பாரத்தை சுமத்தி வருவது வரட்டும் என்பவனே பற்றற்ற நிலைக்கு ஆரம்பம் , இறைவன் மீது ஆசை மிகமிக பற்றற்ற வாழ்வு தானகவே உண்டாகும், இதுவே இந்து மதம் கூறும் வேத சாஸ்திரம்.
திருச்சிற்றம்பலம்
மேலும் சில ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.vpoompalani05.weebly.com.
ஆசைகள் அற்ற இடத்தில் குற்ற்கள் அற்றுப் போகின்றன. குற்றங்களும் பாவங்களும் அற்றுப் போய் விட்டால், அனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன. அனுபவங்கள் இல்லையென்றால் நன்மை தீமைகளை காண இயலாது. ஆகவே தவறுகள் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். இறைவன் ஆசையை தூண்டி விடுகின்றான், ஆசை நம்மை ஆட்டிப் படைப்பது நம் மனமே . உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படி யெல்லாம் ஆட்டி படைக்கிறது, என்று யோசித்துப் பாருங்கள். மனத்துடன் நடத்தும போராட்டம் என்றும் ஒய்வதில்லை. விழிப்பு நிலையிலும், உறங்கும் நிலையிலும் கூட மனத்தின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை. எனவே,
அனைத்து சாஸ்தரங்களும் வேதங்களும் மனதை அடக்கும் வழிமுறைகளை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் நிலையை ஆண்டவனிடம் தான் கேட்டு பெற வேண்டும்.
உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வாறு அனுபவித்தாலும், ஒருவனுக்கு நிரந்தர திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் இந்த ஆசையை விட்டுவிட இடம் தருவதில்லை.
காய்ந்த எலும்புத்துண்டை கடித்த நாய் தன் வாயிலிருந்து வந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாக கடித்து துன்ப்படுவது போல, மனிதனும் ஆசைகளை பெருக்கி கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.
பாலைவனத்தில் காணப்பெறும் கானல் நீர் போன்றே இல்லாத - கிடைக்காத ஒன்றுக்கு ஆைச்பட்டு துன்பம் கொள்கின்றனர் மனிதர்கள்.
வாழ்வில் கிடைக்கும் இன்பங்கள் யாவும் நம்மை ஏற்றமடையக்கூடியதே, அவை நிரந்தரமனவை அல்ல.
நம் மனித வாழ்வே அற்பமானது அந்த வாழ்வு சுகப்பட ஆண்டவனே ஆசையை தூண்டிவிடுகின்றான், ஏனெனில் இந்த அற்ப காலத்தில் கர்ம வினைகள் மூலம் பிறப்பற்ற வாழ்வை தூண்டவே ஆசை, பாசங்களிலிருந்து விடுபட்டு பற்றற்ற வாழ்வு பெறவே இவ்வாறு செய்கிறான்,
மண்ணாசை வளர்ந்தால் கொலையில் விழுகிறது.
பொன்னாசை வளர்ந்தால் களவு நடக்கிறது
பெண்ணாசை வளர்ந்தால் பாபம் நிகழ்கிறது
மூன்று ஆசைகளையும் அற்றவர் மனிதர்களில் மிகமிக சிலரே ஆவர், ஆகவேதான் பற்றற்ற வாழ்வை இந்துமதம் போதிக்கிறது. அதற்காக முற்றும் துறந்து சந்நியாசி ஆவதல்ல,
இருப்பது போதும் வருவது வரட்டும் போவது போகட்டும்
மிஞ்சுவது மிஞ்சட்டும் என்று ஆசை என்ற சபலங்களுக்கு ஆட்பாடதிருத்தல், பற்றற்ற வாழ்க்கை பரம் பொருள் மீது ஆசை வைத்தால் நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது. ஆண்டவன் மீது பாரத்தை சுமத்தி வருவது வரட்டும் என்பவனே பற்றற்ற நிலைக்கு ஆரம்பம் , இறைவன் மீது ஆசை மிகமிக பற்றற்ற வாழ்வு தானகவே உண்டாகும், இதுவே இந்து மதம் கூறும் வேத சாஸ்திரம்.
திருச்சிற்றம்பலம்
மேலும் சில ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.vpoompalani05.weebly.com.
மெய் அறிவே பேரின்பம்
மனிதனாக பிறந்த எவனுக்கும் வினை விடாது பற்றும், அந்த வினைப்பயனை, துயரங்களை பிறவி யெடுக்க வைக்கும் வினை இந்த ஸ்தூல சரீரத்தினால் சாதனை புரிந்தால், சுட்சும சரீரத்தில் , பிறவி மறுபடியும் பிறக்காது செய்து விடும். சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தவன் மனிதன், அப்படி சிந்திக்கத் தெரிந்த மனிதனின் சிந்தனை முழுவதும் செயலாவதில்லை. கோடிக்கணக்கான மக்களுள் சிலரது சிந்தனை வளம்தான் செயலாகிறது,அத்தகைய செயற்கரிய செயல்கள் புரிந்தவர்கள்தான் ஞானியர்களும் சித்தர்களும்.
இப்பிரபஞ்ச இயக்கத்தில் சிறந்தது வாயு ஆகும். இந்த வாயு நின்று விட்டால் உலக இயக்கமும் உயிர் வாழும் சீவராசிகளும் தாவர ஐங்கமங்களும் அழிந்து விடும். ஓடும் மனம் ஒடுங்கிவிட்டால் உள்ளம் அமுத கடலாகும். ஒடுங்குவது எங்ஙனம்? அலைபாயும் மனதை அலைய விடாது ஒருநிலைப்படுத்தும் சாதனை யோகமாகும். இதுவே நம்முள் தெய்வீகத் தன்மையை ஏற்படுத்தும்.
மனிதன் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாைசை ஆகிய மூன்று ஆசைகள் மீது பற்றுக் கொண்டவன். இந்த ஆசையே அவன் உணர்ந்த தெய்வீக அடைய தடையாகும், மண்ணாசை வளர்ந்தால் கொலையில் விழுகிறது. பொன்னாசை வளர்ந்தால் களவில் முடிகிறது, பெண்ணாசை வளர்ந்தால் பாபம் நிகழ்கிறது, மூன்று ஆசைகளையும் அற்றவர்கள் மனிதர்களில் குறைவே ஆகும், ஆகவேதான் பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதிக்கின்றது.ஆசையில் பற்று இல்லாதவனுக்கு மறுபிறவி இல்லை. அவன்தான் பிறவி பெருங்கடலை தாண்ட முடியும். எனவேதான் அருணகிரி நாதர் திருப்புகழில் மாவேழ் சன்னங்கெட மாயைவிடா மூவேவடனை " என்று பாடுகிறார், எனவே பிறந்து இந்த உலகில் வாழ்வதற்கு ஆசையே காரணமாகும்.
செல்வம் நிலையான காரணமாக துக்கத்தையே தருகின்றன. எனவே எதிலும் அளவுடன் சம்பாதித்து, அளவுடன் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். நேர்மை, ஒழுக்கம், தெய்வ வழிபாடு, பெருந்தன்மை உயிர்களிடம்இரக்கம், போன்ற உத்தம குணங்களுடன் வாழ்பவனுக்கு துன்பம் ஏது? ஒழுக்கத்திலும், அறிவிலும், அன்பிலும் உயர்ந்த பெரியோர்கள் நட்பைப் பெறுவதும், செல்வம் வந்தபோது ெசெருக்கு அடையாமல் தெய்வ திருவருள் பெற்ற மெய் அன்பர்கள் நூல்களை ஆராய்ந்து அதன்படி நடப்பதும், மற்றவர்குளுக்கும் போதிப்பதும், தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களுக்கும் அளித்து பேரின்ப நலையை அடைய வேண்டும். உத்தம குணத்தவனாய் இருக்க வேண்டும். வீணாக வேண்டாத கேள்விகளை கேட்டு தெய்வத்தை பற்றி எதுவும் புரியாதவர்கள், விதண்டாவாதம் செய்து தானும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடும் மனிதர்களிடம் பழகாது இருக்க கற்றுக் கொள்ளவேண்டும். எல்லா சீவன்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும், சீவனிடம் கருனை வந்தால் ஈஸ்வரனிடம் பற்று உண்டாகும், ஈஸ்வரப் பற்றால் ஆசாபாசங்கள் தோசங்கள் அகன்று விடும். ஆசை முதலிய தோசங்கள் அகன்று விட்டால் நிராசை என்ற நிலைபெறும், சீவாத்மாவினை அறியும் தன்மை உண்டாகும். அறிவு வடிவமான பேரின்ப நிலையை அடைந்து துன்பம் ஒழிந்து இன்பம் பெறலாம். அருள் கடாட்சம் பெற்று பேரின்ப ம் அளித்து பேதமற்ற சொரூபமாமனந்தத்தில் அமருவர் என்பது விதியாகும்.
மனிதனுக்கு உயர்ந்த நிலை எய்த பல அறிவான வழிகள் உண்டு. அவை இசையறிவு, இயலறிவு, சுயஅறிவு, ஐயஅறிவு, உடலறிவு, உயிரறிவு, உலகறிவு முதலியன. இவற்றில் மேன்மையான மெய்அறிவை அறிபவனே அழியாத சீவமுத்தியைஅடைகின்றான். அந்த பேரின்ப பெரிய நிலை அடையவது எப்படி? என்று பக்தி மார்க்கத்தில்வாழ்நது முக்தியடைந்த நாயன்மார்கள் சித்தர்கள், ஆழ்வார்கள் வாழ்ந்து காட்டி நமக்கு வழிகாட்டி சென்றுள்ளார்கள். அந்த பக்தி மார்க்கமே முதல்படியாகும், மேன்மையடைய விரும்பும் மனிதனுக்கு சத்ஸங்கம் தேவார இசைப்பாடல்கள், பசனை போன்ற இறை வழிகளே முக்திக்கு வழி வகுக்கின்றன. பக்தியின்று முக்திக்கு வழிவகுக்காது.
பரமார்த்திக்க மார்க்கத்தை கடைபிடித்து, பிறருக்கு போதித்து முக்தி அடைந்த சைவ சமய குரவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆவர்கள், இவர்களின் தேவார பண்ணிசையகளையும் பக்த சேவைகளையும் செய்து மேன்மையடைய வழிகோள வேண்டும். இறைவனுடைய அரிய, பெரிய திருவிளையாடல்களையும்,அடியார்களை ஆட்கொண்ட கதைகளையும் கூறி நம்மை பரவசப்படுத்தி அவ்வழி நடக்க வழிகோழியுள்ளார்கள். அவ்வழியே நடந்தவர்களுக்கு இறைவனே குருபகவானாக வந்து உபதேசித்தார்கள் என்பது உண்மை. இதுபோன்ற அதிசயங்கள் அனேகம் உண்டு.
இறைவனின் கருணையால் பிறப்பது அருள், அன்பின்றி அருள் சுரக்காது. அருளினால் இம்மை மறுமை என்ற இரு பயனும் அடையலாம், ஞானம்பெற்ற மகான்கள் தமக்குரிய நாள் வரும் வரை நம்மோடு நடமாடி நல்ல வழிகாட்டியாக இருந்து பிறவிப் பயனை பெற வழி வகுப்பார்கள். அவர்களை இனம் கண்டு தரிசித்து அவர்களின் அன்பையும் ஆசியையும்இறையருளையும் பெற்றுய்வோம்.
திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.vpoompalani05.weebly.com.
மனிதனாக பிறந்த எவனுக்கும் வினை விடாது பற்றும், அந்த வினைப்பயனை, துயரங்களை பிறவி யெடுக்க வைக்கும் வினை இந்த ஸ்தூல சரீரத்தினால் சாதனை புரிந்தால், சுட்சும சரீரத்தில் , பிறவி மறுபடியும் பிறக்காது செய்து விடும். சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தவன் மனிதன், அப்படி சிந்திக்கத் தெரிந்த மனிதனின் சிந்தனை முழுவதும் செயலாவதில்லை. கோடிக்கணக்கான மக்களுள் சிலரது சிந்தனை வளம்தான் செயலாகிறது,அத்தகைய செயற்கரிய செயல்கள் புரிந்தவர்கள்தான் ஞானியர்களும் சித்தர்களும்.
இப்பிரபஞ்ச இயக்கத்தில் சிறந்தது வாயு ஆகும். இந்த வாயு நின்று விட்டால் உலக இயக்கமும் உயிர் வாழும் சீவராசிகளும் தாவர ஐங்கமங்களும் அழிந்து விடும். ஓடும் மனம் ஒடுங்கிவிட்டால் உள்ளம் அமுத கடலாகும். ஒடுங்குவது எங்ஙனம்? அலைபாயும் மனதை அலைய விடாது ஒருநிலைப்படுத்தும் சாதனை யோகமாகும். இதுவே நம்முள் தெய்வீகத் தன்மையை ஏற்படுத்தும்.
மனிதன் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாைசை ஆகிய மூன்று ஆசைகள் மீது பற்றுக் கொண்டவன். இந்த ஆசையே அவன் உணர்ந்த தெய்வீக அடைய தடையாகும், மண்ணாசை வளர்ந்தால் கொலையில் விழுகிறது. பொன்னாசை வளர்ந்தால் களவில் முடிகிறது, பெண்ணாசை வளர்ந்தால் பாபம் நிகழ்கிறது, மூன்று ஆசைகளையும் அற்றவர்கள் மனிதர்களில் குறைவே ஆகும், ஆகவேதான் பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதிக்கின்றது.ஆசையில் பற்று இல்லாதவனுக்கு மறுபிறவி இல்லை. அவன்தான் பிறவி பெருங்கடலை தாண்ட முடியும். எனவேதான் அருணகிரி நாதர் திருப்புகழில் மாவேழ் சன்னங்கெட மாயைவிடா மூவேவடனை " என்று பாடுகிறார், எனவே பிறந்து இந்த உலகில் வாழ்வதற்கு ஆசையே காரணமாகும்.
செல்வம் நிலையான காரணமாக துக்கத்தையே தருகின்றன. எனவே எதிலும் அளவுடன் சம்பாதித்து, அளவுடன் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். நேர்மை, ஒழுக்கம், தெய்வ வழிபாடு, பெருந்தன்மை உயிர்களிடம்இரக்கம், போன்ற உத்தம குணங்களுடன் வாழ்பவனுக்கு துன்பம் ஏது? ஒழுக்கத்திலும், அறிவிலும், அன்பிலும் உயர்ந்த பெரியோர்கள் நட்பைப் பெறுவதும், செல்வம் வந்தபோது ெசெருக்கு அடையாமல் தெய்வ திருவருள் பெற்ற மெய் அன்பர்கள் நூல்களை ஆராய்ந்து அதன்படி நடப்பதும், மற்றவர்குளுக்கும் போதிப்பதும், தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களுக்கும் அளித்து பேரின்ப நலையை அடைய வேண்டும். உத்தம குணத்தவனாய் இருக்க வேண்டும். வீணாக வேண்டாத கேள்விகளை கேட்டு தெய்வத்தை பற்றி எதுவும் புரியாதவர்கள், விதண்டாவாதம் செய்து தானும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடும் மனிதர்களிடம் பழகாது இருக்க கற்றுக் கொள்ளவேண்டும். எல்லா சீவன்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும், சீவனிடம் கருனை வந்தால் ஈஸ்வரனிடம் பற்று உண்டாகும், ஈஸ்வரப் பற்றால் ஆசாபாசங்கள் தோசங்கள் அகன்று விடும். ஆசை முதலிய தோசங்கள் அகன்று விட்டால் நிராசை என்ற நிலைபெறும், சீவாத்மாவினை அறியும் தன்மை உண்டாகும். அறிவு வடிவமான பேரின்ப நிலையை அடைந்து துன்பம் ஒழிந்து இன்பம் பெறலாம். அருள் கடாட்சம் பெற்று பேரின்ப ம் அளித்து பேதமற்ற சொரூபமாமனந்தத்தில் அமருவர் என்பது விதியாகும்.
மனிதனுக்கு உயர்ந்த நிலை எய்த பல அறிவான வழிகள் உண்டு. அவை இசையறிவு, இயலறிவு, சுயஅறிவு, ஐயஅறிவு, உடலறிவு, உயிரறிவு, உலகறிவு முதலியன. இவற்றில் மேன்மையான மெய்அறிவை அறிபவனே அழியாத சீவமுத்தியைஅடைகின்றான். அந்த பேரின்ப பெரிய நிலை அடையவது எப்படி? என்று பக்தி மார்க்கத்தில்வாழ்நது முக்தியடைந்த நாயன்மார்கள் சித்தர்கள், ஆழ்வார்கள் வாழ்ந்து காட்டி நமக்கு வழிகாட்டி சென்றுள்ளார்கள். அந்த பக்தி மார்க்கமே முதல்படியாகும், மேன்மையடைய விரும்பும் மனிதனுக்கு சத்ஸங்கம் தேவார இசைப்பாடல்கள், பசனை போன்ற இறை வழிகளே முக்திக்கு வழி வகுக்கின்றன. பக்தியின்று முக்திக்கு வழிவகுக்காது.
பரமார்த்திக்க மார்க்கத்தை கடைபிடித்து, பிறருக்கு போதித்து முக்தி அடைந்த சைவ சமய குரவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆவர்கள், இவர்களின் தேவார பண்ணிசையகளையும் பக்த சேவைகளையும் செய்து மேன்மையடைய வழிகோள வேண்டும். இறைவனுடைய அரிய, பெரிய திருவிளையாடல்களையும்,அடியார்களை ஆட்கொண்ட கதைகளையும் கூறி நம்மை பரவசப்படுத்தி அவ்வழி நடக்க வழிகோழியுள்ளார்கள். அவ்வழியே நடந்தவர்களுக்கு இறைவனே குருபகவானாக வந்து உபதேசித்தார்கள் என்பது உண்மை. இதுபோன்ற அதிசயங்கள் அனேகம் உண்டு.
இறைவனின் கருணையால் பிறப்பது அருள், அன்பின்றி அருள் சுரக்காது. அருளினால் இம்மை மறுமை என்ற இரு பயனும் அடையலாம், ஞானம்பெற்ற மகான்கள் தமக்குரிய நாள் வரும் வரை நம்மோடு நடமாடி நல்ல வழிகாட்டியாக இருந்து பிறவிப் பயனை பெற வழி வகுப்பார்கள். அவர்களை இனம் கண்டு தரிசித்து அவர்களின் அன்பையும் ஆசியையும்இறையருளையும் பெற்றுய்வோம்.
திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.vpoompalani05.weebly.com.
இந்து சமய சம்பிராதயங்கள் 3
இந்து சமய சம்பிராதயங்களில் பெண்கள் கவனிக்க வேண்டிய சில சாஸ்திர சம்பிரதாயங்களாக வழிமுறைகளை வகுத்துள்ளனர், இந்த சம்பிரதாயங்கள் யாவும் இன்றளவும் சில சைவ சமய வகுப்பினர்கள் கட்டாயம் இன்றளவும கையாண்டு கடைபிடித்து வருவதை நாம் காணலாம், இருப்பினும் இன்னும் இலைமறை காய்மறையாக உள்ள சிலவற்றை மங்கையர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டியது அவசியப்படுகிறது,
1) பெண்கள் கணவன் தூங்கிய பின்பு தூங்கி கணவன் விழிப்பதற்கு முன்பு எழுந்துவிட வேண்டும்.
2, சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து முற்றத்தில் பெருக்கி பசுஞ் சாணந் தெளித்து கோலமிட வேண்டும்.
3, கோலமிடுவதற்கு மஞ்சள் கலந்த அரிசிமாவு, பச்சிலைப் பொடி, குங்குமம் கலந்த அரிசி மாவு இவற்றால் கோலமிட வேண்டும்,
4, சுபகாரியங்களுக்கு ஒரு கோடும், அசுப காரியங்களுக்கு இரண்டு கோடும் போட்டு கோலம் போடக்கூடாது.
5, பூஜை அறை, சமையறை, சாப்பிடுமிடத்தை நாள்தோறும் கழுவுதல் வேண்டும்
6, அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, மாதப்பிறப்பு வெள்ளிக்கிழமை, பிற விசேச தினங்களில் வீடு முழுவதும் கழுவ வேண்டும்,
7. மண் பாண்டங்களை குளிக்கும் முன்பு தொடக்கூடாது.
8. தாமிரப் பாத்திரங்களை புளியினாலும், வெஙகலம் பித்தளை பாத்திரங்களை சாம்பலாலும் ஈயப் பாத்திரங்களை சாணத்தாலும், எவர் சில்வர் பீங்கான் பாத்திரத்தை அரப்பு பொடியினாலும் சுத்தப்படுத்தவேண்டும்,
9. குளித்த பின்பு தான் குடிநீர் எடுக்க வேண்டும்
10. தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வர வேண்டும் தோளிலும், தலையிலும் சுமக்கக் கூடாது.
11. சூரிய அஸ்தமன சமயங்களில் மாலை நேரங்களில் கைகால் கழுவி கட்டாயம் விளக்கேற்றி வைக்க வேண்டும்
12. உரல் ,அம்மி, முறம், வாசற்படி உலக்கை இவற்றின் மீது உட்காரக் கூடாது.
13, வீட்டுவிலக்கான முதல் 3 நாட்கள் வீட்டு வேலை ஒன்றும் செய்யக்கூடாது. 5வது நாளில் கணவனை வணங்கி விட்டு வீட்டுப் பணிகளில் ஈடுபடலாம், அன்று கணவனோடு சேர்வது சிறப்பு.
14. விருந்து மற்றும் விசேச நாட்கிளில் வாழையில் உணவு படைத்து பரிமாருதல் மிக சிறப்பு
15. வாழையிலையில் அடியில் சிறிது அரிந்துரிட்டு ( தடிமனான தண்டு) கழுவி விட்டு இலையை போட வேண்டும், சாப்பிடுவர்களின் வலதுபக்கம் இலையின் அடிப்பாகமும், இடக்பக்கம் இலையின் நுனிப்பாகம் இருக்கும்படி போட வேண்டும்.
16, எதையும் கையால் படைக்கக் கூடாது.
17, சாதம், கறி, முதலியவற்றை மண்பாண்டத்தில்வைத்தோ, அல்லது அடுப்பில் வைத்த பாத்திரத்தை வைத்தோ படைத்தல் கூடாது.
18. வீட்டுக்கு வந்த புது மறுமகளையும், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் இவர்களை முதலில் சாப்பிட சொல்ல வேண்டும்
19. சாப்பிடும் போது நீர் குடிக்கக் கூடாது. உண்ட பின் தான் குடிக்க வேண்டும்.
20. உணவு அருந்திய பின் குளிக்க கூடாது, மிகவும் தேவைப்பட்டால் 5 நாழிகை (2மணி) கழித்து குளிக்கலாம்
21,ஒருவர் தலையில் முடிந்த பூவைத் தன்தலையில் வைக்கக் கூடாது.
22. தலையில் சூடிய மலரை தானே எடுத்தெரியக் கூடாது
23. கணவரோடு இருக்கும் பெண்கள் தனியாக தாங்கள் மட்டும்விரதம் இருக்கக் கூடாது, கணவரோடு சேர்ந்தே விரதம் இருக்க வேண்டும்.
24. தர்ம சிந்தனை, ஆன்மீக ஆர்வம், தவம், வாய்மை, மன்னித்தல், கருணை, பிறர் பொருளை விரும்பாமை, இக்குணங்கள் பெண்கள் பெரிதும் பின்பற்ற வேண்டிய குணங்கள்.
25. தீபம் ஏற்றுதல்:
காலையில் உதய காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனதுக்கு முன்பும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும்
விளக்கின் திரி 2 திரியினை இணைத்து ஏற்றுவது உத்தமம், தீபத்தை கிழக்கு முகமாக இருக்கும் படி வைத்து தீபமிடேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்கு பார்த்து தீபம் ஏற்றக்கூடாது. தீபம் ஏற்றுபவர் எப்போதும் கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும்.
தீபத்திரிகள் வகைகளும் குணங்களும்
பஞ்சுத்திரி - மங்களம்
வாழைத்தண்டு திரி - புத்திர பாக்கியம்
பட்டு நூல்திரி - எல்லாவித சுபங்களும்
தாமரை நூல் திரி - லட்சுமி கடாட்சம்
எண்ணெய் வகைகள்
நல்லெண்ணை - யமபயம் அகலும்
தேங்காய் , இலுப்பை எண்ணெய் - தேக ஆரோக்கியம்,செல்வம் தரும்
நெய் தீபம் - சகல செளபாக்கியம்
விளக்கு வகை:
வெங்கல விளக்கு - பாவம் தீரும்
அகல் விளக்கு - சக்தி தரும்
குத்து விளக்கு - சகல செளபாக்கியம்
தீபம் ஏற்றிவிட்டு மூன்று சக்திகள் மற்றும் குலதெய்வங்களை மனதில் தியானித்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.
தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல் , ஒரு பூவின் காம்பால் அணைக்க வேண்டும்.
சுப மங்கலம்
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.weebly.com/weebly/main.
இந்து சமய சம்பிராதயங்களில் பெண்கள் கவனிக்க வேண்டிய சில சாஸ்திர சம்பிரதாயங்களாக வழிமுறைகளை வகுத்துள்ளனர், இந்த சம்பிரதாயங்கள் யாவும் இன்றளவும் சில சைவ சமய வகுப்பினர்கள் கட்டாயம் இன்றளவும கையாண்டு கடைபிடித்து வருவதை நாம் காணலாம், இருப்பினும் இன்னும் இலைமறை காய்மறையாக உள்ள சிலவற்றை மங்கையர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டியது அவசியப்படுகிறது,
1) பெண்கள் கணவன் தூங்கிய பின்பு தூங்கி கணவன் விழிப்பதற்கு முன்பு எழுந்துவிட வேண்டும்.
2, சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து முற்றத்தில் பெருக்கி பசுஞ் சாணந் தெளித்து கோலமிட வேண்டும்.
3, கோலமிடுவதற்கு மஞ்சள் கலந்த அரிசிமாவு, பச்சிலைப் பொடி, குங்குமம் கலந்த அரிசி மாவு இவற்றால் கோலமிட வேண்டும்,
4, சுபகாரியங்களுக்கு ஒரு கோடும், அசுப காரியங்களுக்கு இரண்டு கோடும் போட்டு கோலம் போடக்கூடாது.
5, பூஜை அறை, சமையறை, சாப்பிடுமிடத்தை நாள்தோறும் கழுவுதல் வேண்டும்
6, அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, மாதப்பிறப்பு வெள்ளிக்கிழமை, பிற விசேச தினங்களில் வீடு முழுவதும் கழுவ வேண்டும்,
7. மண் பாண்டங்களை குளிக்கும் முன்பு தொடக்கூடாது.
8. தாமிரப் பாத்திரங்களை புளியினாலும், வெஙகலம் பித்தளை பாத்திரங்களை சாம்பலாலும் ஈயப் பாத்திரங்களை சாணத்தாலும், எவர் சில்வர் பீங்கான் பாத்திரத்தை அரப்பு பொடியினாலும் சுத்தப்படுத்தவேண்டும்,
9. குளித்த பின்பு தான் குடிநீர் எடுக்க வேண்டும்
10. தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வர வேண்டும் தோளிலும், தலையிலும் சுமக்கக் கூடாது.
11. சூரிய அஸ்தமன சமயங்களில் மாலை நேரங்களில் கைகால் கழுவி கட்டாயம் விளக்கேற்றி வைக்க வேண்டும்
12. உரல் ,அம்மி, முறம், வாசற்படி உலக்கை இவற்றின் மீது உட்காரக் கூடாது.
13, வீட்டுவிலக்கான முதல் 3 நாட்கள் வீட்டு வேலை ஒன்றும் செய்யக்கூடாது. 5வது நாளில் கணவனை வணங்கி விட்டு வீட்டுப் பணிகளில் ஈடுபடலாம், அன்று கணவனோடு சேர்வது சிறப்பு.
14. விருந்து மற்றும் விசேச நாட்கிளில் வாழையில் உணவு படைத்து பரிமாருதல் மிக சிறப்பு
15. வாழையிலையில் அடியில் சிறிது அரிந்துரிட்டு ( தடிமனான தண்டு) கழுவி விட்டு இலையை போட வேண்டும், சாப்பிடுவர்களின் வலதுபக்கம் இலையின் அடிப்பாகமும், இடக்பக்கம் இலையின் நுனிப்பாகம் இருக்கும்படி போட வேண்டும்.
16, எதையும் கையால் படைக்கக் கூடாது.
17, சாதம், கறி, முதலியவற்றை மண்பாண்டத்தில்வைத்தோ, அல்லது அடுப்பில் வைத்த பாத்திரத்தை வைத்தோ படைத்தல் கூடாது.
18. வீட்டுக்கு வந்த புது மறுமகளையும், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் இவர்களை முதலில் சாப்பிட சொல்ல வேண்டும்
19. சாப்பிடும் போது நீர் குடிக்கக் கூடாது. உண்ட பின் தான் குடிக்க வேண்டும்.
20. உணவு அருந்திய பின் குளிக்க கூடாது, மிகவும் தேவைப்பட்டால் 5 நாழிகை (2மணி) கழித்து குளிக்கலாம்
21,ஒருவர் தலையில் முடிந்த பூவைத் தன்தலையில் வைக்கக் கூடாது.
22. தலையில் சூடிய மலரை தானே எடுத்தெரியக் கூடாது
23. கணவரோடு இருக்கும் பெண்கள் தனியாக தாங்கள் மட்டும்விரதம் இருக்கக் கூடாது, கணவரோடு சேர்ந்தே விரதம் இருக்க வேண்டும்.
24. தர்ம சிந்தனை, ஆன்மீக ஆர்வம், தவம், வாய்மை, மன்னித்தல், கருணை, பிறர் பொருளை விரும்பாமை, இக்குணங்கள் பெண்கள் பெரிதும் பின்பற்ற வேண்டிய குணங்கள்.
25. தீபம் ஏற்றுதல்:
காலையில் உதய காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனதுக்கு முன்பும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும்
விளக்கின் திரி 2 திரியினை இணைத்து ஏற்றுவது உத்தமம், தீபத்தை கிழக்கு முகமாக இருக்கும் படி வைத்து தீபமிடேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்கு பார்த்து தீபம் ஏற்றக்கூடாது. தீபம் ஏற்றுபவர் எப்போதும் கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும்.
தீபத்திரிகள் வகைகளும் குணங்களும்
பஞ்சுத்திரி - மங்களம்
வாழைத்தண்டு திரி - புத்திர பாக்கியம்
பட்டு நூல்திரி - எல்லாவித சுபங்களும்
தாமரை நூல் திரி - லட்சுமி கடாட்சம்
எண்ணெய் வகைகள்
நல்லெண்ணை - யமபயம் அகலும்
தேங்காய் , இலுப்பை எண்ணெய் - தேக ஆரோக்கியம்,செல்வம் தரும்
நெய் தீபம் - சகல செளபாக்கியம்
விளக்கு வகை:
வெங்கல விளக்கு - பாவம் தீரும்
அகல் விளக்கு - சக்தி தரும்
குத்து விளக்கு - சகல செளபாக்கியம்
தீபம் ஏற்றிவிட்டு மூன்று சக்திகள் மற்றும் குலதெய்வங்களை மனதில் தியானித்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.
தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல் , ஒரு பூவின் காம்பால் அணைக்க வேண்டும்.
சுப மங்கலம்
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.weebly.com/weebly/main.
நம் உடலே ஆலயம்
" உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம் பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தோர்க்கச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் கான மணிவிளக்கே. " திருமூலர் திருமந்திரம்,
ஆலய அமைப்பு ஆண்டவன் இருப்பு யாவும் நம்உடலிலேயே உள என்பது இம்மந்திரக் கருத்து. இறைவன் ஆன்மாக்களின் பக்குவம் அறிந்து தேவைகளை கொடுத்து உதவுவதால் வள்ளல் எனப்பட்டான். களை என்னும் சொல்லுக்கு அழகு எனபது பொருள் அச்சொல் காள என ஈண்டு திரிந்தது, நமது மனமே கோவில் அக் கோவிலின் மூலட்டானம் தசையால் ஆன உடம்பு , இறைவருக்கு வாயே கோபுர வாசல், நன்கு அறிந்த ஞானிகட்குஆன்மாவே சிவலிங்கம், மனத்தை திருட்டு வழியில் இழுத்துச் செல்லும் ஐந்து புலன்களும் அழகிய விளக்காகும்.
பக்தியின் பெருக்கு பேரின்ப நிலை அந்த பேரின்பத்தை அடைந்த மகான்கள், தான் காண்பவைகளையெல்லாம் சிவ வடிவமாகவே காண்பார்கள். சேரமான் அரசர், தன் பரிவாரங்களுடன் யானை மீது ஏறி நகர்வலம் வரும்போது, சிவனடியார்களை காண நேரிடும்போது உடனே கீழே இறங்கி ஓடோடி சென்று வணங்கி வரவேற்பார், அப்படிப் பட்ட அரசர் தான் ஒரு மன்னன் என்பதையும் மறந்து உவர்மண் சுமந்து வரும் வண்ணான், மழையினால் நனைந்த , அவன் தலையிலிருந்து உவர்மண் மழைக்கு கரைந்து, தேகம் முழுவதும் விபூதி பூசியது போன்ற தோற்றம் கண்டு, யானை மீது வந்த அரசர், அடியார் தான் வருகின்றார் என்று யானையை விட்டு இறங்கி ஓடோடி சென்று அவரை வணங்கினார், அவ் வண்ணான் " ஐயா நான் ஒரு அடி வண்ணான் நீங்களே மன்னர் " என்று அலறி கூனிக் குறுகி நின்கின்றான், அம்மன்னன் தேவரீர் திரு நீற்று வடிவத்தை அடியேனுக்கு நினைப்பித்தீர்களே, " அடியேன் அடி சேரன் என்றார் அரசர். அவரின் பக்தியின் பேரின்பத்தை கண்ட பரிவாரங்களும் மந்திரிகளும் பேருவகை கொண்டார்கள். என்று பெரிய புராண வரலாறு கூறுகிறது. எந்த நிலையிலும் இறைவனை காணும் நிலைதான் பக்தி நிலையாகும்,அருணகிரியார் திருப்புகழில் தன்னை உருக்கி பாடுகின்றார், பக்தியால்யான் உன்னை பலகாலும் பற்றியே மா திருப்புகழைப் பாடியே உனைக் காண வேண்டும் என்கிறார்.
அந்த பக்தியே, முக்தி எனும் பிறவா நிலைகக்கு கொண்டு செல்லும், பிறவா நிலையினை அடைய சாதனை தத்துவம் தேவை, இந்த உடலையேஆலயமாக பரிமளிக்க வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற கிராமப்படி, இந்த திரேகத்தையும், அதனுள் ஒளிரும் ஆத்மாவையும் போற்ற வேண்டும் . எனவே தான் நம்முடன் வாழ்ந்த சித்தர்கள் அவ்வகையில் தன் மெய் அறிவினால் கற்பங்களை உண்டு பல்லாயிரக்கணக்கான, ஆண்டுகள் வாழ்ந்து இந் பிரபஞ்ச்ததுக்கும் வருங்கால சந்ததியார்க்கும் அரும்பெரும்அறிவு களஞ்சியங்களை பரம்பரையாக குரு சீடர் மூலமாகவோ பனை ஓலைகள் மூலமாகவோ தந்துவிட்டு போய் உள்ளார்கள். அவற்றின் உட்பொருளை அறிவின் திறன் கொண்டு ஆராய்ந்து, மற்றவர்களுக்கும் உபதேசித்தும், அறிவின் உட்பொருளை அறிய செய்ய வேண்டுமென்றும், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று கூறி வழிவகுத்து சென்றுள்ளார்கள்.
நம் உடம்பில் ஐம் புலங்களில் எது மூலசத்தியாக விளங்குகிறதோ அதுதான் ஆத்மா, ஒருவன் இறந்து விட்டால் இவை இயங்குவது இல்லை. எனவே சரீரத்தை போற்றி காத்து இந்த சரீரத்தின் மூலம்பல அரிய பெரிய சாதனைகள் புரிய வேண்டும், எனவே உடல் எந்தவிதமான உபாதைகளின்றம் பிணிகளிலிருந்தும்பாதுகாத்து வாழ்ந்து வந்துள்ளார்கள். இதைத்தான் திருமூலர் தனது திருமந்திரத்தில்
" உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம்சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் " என்று உடலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கியுள்ளர். உடம்பும், உயிரும் மிகமிக இன்றியமையாதன ஆதலின் அவற்றின் சிறப்பு நோக்கி உடம்பையும் வளர்த்தேன் உயிரையும் வளர்த்தேன் என்கிறார்.
தேகத்திலுள்ள ஆத்மா வானது அழிவற்ற பொருள், தேகத்தோடு பிறந்த தேகம் நீங்கியவுடன் மறுபடியும் பஞ்ச பூத சக்திகளில் சம்பந்தப்பட வேண்டியுள்ளது. அதை தேகத்தோடு கலப்பிக்க வேண்டும். இது வித்தை போதிக்கும் தந்திரமாகும், அந்த கர்மத்தை செய்வதினால் தேகம் அழியாது, செத்தால் பிறக்க வேண்டும், பிறந்தால் இறக்க வேண்டும். உலக வழக்கத்தை சொற்கள் அறிந்து பிறந்த தேகத்தை, காப்பாற்ற வேண்டிய தந்திரங்கள் அறிவதே, ஆத்மாவை அறிந்து தேகத்தை லயிக்க செய்யும் கர்மமாகும்.அது முடியாவிட்டால் சாவது நிச்சயம்,
செத்தால் பிறக்க வேண்டும், அதை தடுப்பதற்கு தேகத்திலிருந்துதான் அந்த கர்மத்தை செய்யமுடியும், புழு , பூண்டு வடிவத்தில் இருந்தால் இந்த கர்ம வினைகளை செய்ய இயலாதல்லவா? அப்படி சாதனையால் செய்து இந்த சூச்சும தேககத்தை பிரிக்கும் தந்திரத்தை அறிய வேண்டும்.சித்தர்களும் ஞானிகளும் இதை கண்டு கொண்டு உலகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவேதான் உடலையும் உள்ளத்தையும் கட்டுபாடுகளுடன் உட்படுத்தி தன்னை மேலான இயல்புடையவனாக மாற்ற வேண்டும், சிந்தையிலும் சொல்லிலும், செயலிலும் கோணல் இல்லாத தன்மையே நேர்மை அடைய வழிபிறக்கும், தேக சுகத்திற்கு வசப்பட்டு புற இச்சைகளையும் சாஸ்திரத்தின் ஆணை மீறி நடப்பவனுக்கும் ஏது மேன்மை? அவன் சுகம் பெற முடியாது, முக்தி என்னும் பேரின்பம் அடையமுடியாது.
" உடம்பினை பெற்ற பயனாவதெல்லா
முடம்பினிலுத்தமனைக் காண் " என்கிறார் அவ்வையார்.
தேகம் எடுத்ததின் பயன், புற இச்சைகளையும் மனை, மக்கள், காசு பணம், போன்ற சொத்துக்களை சம்பாதித்து அவற்றிலே மூழ்கி வயதான காலத்தில தள்ளாமையாலும், வியாதியினாலும் பிடிக்கப்பட்டு உழல்வதற்கல்ல, உன்னிலே ஒருவன் உள்ளான், அவனை நீ கண்டால் அறிவு சுடர் விட்டு, மூப்பு பிணி, சாக்காடு என்ற அவத்தை நீக்கி ஆணவம் கன்மை, மாயை நீக்கி பேரின்ப பெருவாழ்வு வாழலாம், என்கிறார்,
இந்த ஊன் உடம்பே ஆலயம் என்றாலும், அச்சரீரம் தன் அளவில் தேவ ஆலயம் ஆகிவிடாது, இந்த சரீரத்தை எப்படி மனிதன்பயன்படுத்துகின்றானோ அதை அனுசரித்து உடல் தேவ ஆலயமாக ஆகிறது. எனவே தான் உடம்புக்கு ஊறு வராது நேர்மைக்கு பங்கம் இலாது வாழ வேண்டும், எனவே உண்ணும்உணவு குடிக்கும்பானம் இவைகளை நெறிப்படுத்த வேண்டும். இந்த உடம்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டுமே யொழிய இந்த உடம்பை நினைக்க கூடாது. உடலில் உள்ள அபூர்வ செயல்கள், செயல் இழந்துவிட்டால் இந்த உடல் பயனற்றதாகிவிடும். ஆகவேதான் இந்த உடலை கொண்டே நாம் மேலான நிலையை அடைய வேண்டும். என்ற குறிக்கோளினைக் கொண்டு நல்ல சிந்தனையுடன் இந்த உடம்பை இயற்கை விதிகளுக்கு புறம்பாக ஓம்ப வேண்டும்,
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து, உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்
திருசிற்றம்பலம் ஒம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீக தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.weebly.com/weebly/main.
" உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம் பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தோர்க்கச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் கான மணிவிளக்கே. " திருமூலர் திருமந்திரம்,
ஆலய அமைப்பு ஆண்டவன் இருப்பு யாவும் நம்உடலிலேயே உள என்பது இம்மந்திரக் கருத்து. இறைவன் ஆன்மாக்களின் பக்குவம் அறிந்து தேவைகளை கொடுத்து உதவுவதால் வள்ளல் எனப்பட்டான். களை என்னும் சொல்லுக்கு அழகு எனபது பொருள் அச்சொல் காள என ஈண்டு திரிந்தது, நமது மனமே கோவில் அக் கோவிலின் மூலட்டானம் தசையால் ஆன உடம்பு , இறைவருக்கு வாயே கோபுர வாசல், நன்கு அறிந்த ஞானிகட்குஆன்மாவே சிவலிங்கம், மனத்தை திருட்டு வழியில் இழுத்துச் செல்லும் ஐந்து புலன்களும் அழகிய விளக்காகும்.
பக்தியின் பெருக்கு பேரின்ப நிலை அந்த பேரின்பத்தை அடைந்த மகான்கள், தான் காண்பவைகளையெல்லாம் சிவ வடிவமாகவே காண்பார்கள். சேரமான் அரசர், தன் பரிவாரங்களுடன் யானை மீது ஏறி நகர்வலம் வரும்போது, சிவனடியார்களை காண நேரிடும்போது உடனே கீழே இறங்கி ஓடோடி சென்று வணங்கி வரவேற்பார், அப்படிப் பட்ட அரசர் தான் ஒரு மன்னன் என்பதையும் மறந்து உவர்மண் சுமந்து வரும் வண்ணான், மழையினால் நனைந்த , அவன் தலையிலிருந்து உவர்மண் மழைக்கு கரைந்து, தேகம் முழுவதும் விபூதி பூசியது போன்ற தோற்றம் கண்டு, யானை மீது வந்த அரசர், அடியார் தான் வருகின்றார் என்று யானையை விட்டு இறங்கி ஓடோடி சென்று அவரை வணங்கினார், அவ் வண்ணான் " ஐயா நான் ஒரு அடி வண்ணான் நீங்களே மன்னர் " என்று அலறி கூனிக் குறுகி நின்கின்றான், அம்மன்னன் தேவரீர் திரு நீற்று வடிவத்தை அடியேனுக்கு நினைப்பித்தீர்களே, " அடியேன் அடி சேரன் என்றார் அரசர். அவரின் பக்தியின் பேரின்பத்தை கண்ட பரிவாரங்களும் மந்திரிகளும் பேருவகை கொண்டார்கள். என்று பெரிய புராண வரலாறு கூறுகிறது. எந்த நிலையிலும் இறைவனை காணும் நிலைதான் பக்தி நிலையாகும்,அருணகிரியார் திருப்புகழில் தன்னை உருக்கி பாடுகின்றார், பக்தியால்யான் உன்னை பலகாலும் பற்றியே மா திருப்புகழைப் பாடியே உனைக் காண வேண்டும் என்கிறார்.
அந்த பக்தியே, முக்தி எனும் பிறவா நிலைகக்கு கொண்டு செல்லும், பிறவா நிலையினை அடைய சாதனை தத்துவம் தேவை, இந்த உடலையேஆலயமாக பரிமளிக்க வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற கிராமப்படி, இந்த திரேகத்தையும், அதனுள் ஒளிரும் ஆத்மாவையும் போற்ற வேண்டும் . எனவே தான் நம்முடன் வாழ்ந்த சித்தர்கள் அவ்வகையில் தன் மெய் அறிவினால் கற்பங்களை உண்டு பல்லாயிரக்கணக்கான, ஆண்டுகள் வாழ்ந்து இந் பிரபஞ்ச்ததுக்கும் வருங்கால சந்ததியார்க்கும் அரும்பெரும்அறிவு களஞ்சியங்களை பரம்பரையாக குரு சீடர் மூலமாகவோ பனை ஓலைகள் மூலமாகவோ தந்துவிட்டு போய் உள்ளார்கள். அவற்றின் உட்பொருளை அறிவின் திறன் கொண்டு ஆராய்ந்து, மற்றவர்களுக்கும் உபதேசித்தும், அறிவின் உட்பொருளை அறிய செய்ய வேண்டுமென்றும், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று கூறி வழிவகுத்து சென்றுள்ளார்கள்.
நம் உடம்பில் ஐம் புலங்களில் எது மூலசத்தியாக விளங்குகிறதோ அதுதான் ஆத்மா, ஒருவன் இறந்து விட்டால் இவை இயங்குவது இல்லை. எனவே சரீரத்தை போற்றி காத்து இந்த சரீரத்தின் மூலம்பல அரிய பெரிய சாதனைகள் புரிய வேண்டும், எனவே உடல் எந்தவிதமான உபாதைகளின்றம் பிணிகளிலிருந்தும்பாதுகாத்து வாழ்ந்து வந்துள்ளார்கள். இதைத்தான் திருமூலர் தனது திருமந்திரத்தில்
" உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம்சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் " என்று உடலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கியுள்ளர். உடம்பும், உயிரும் மிகமிக இன்றியமையாதன ஆதலின் அவற்றின் சிறப்பு நோக்கி உடம்பையும் வளர்த்தேன் உயிரையும் வளர்த்தேன் என்கிறார்.
தேகத்திலுள்ள ஆத்மா வானது அழிவற்ற பொருள், தேகத்தோடு பிறந்த தேகம் நீங்கியவுடன் மறுபடியும் பஞ்ச பூத சக்திகளில் சம்பந்தப்பட வேண்டியுள்ளது. அதை தேகத்தோடு கலப்பிக்க வேண்டும். இது வித்தை போதிக்கும் தந்திரமாகும், அந்த கர்மத்தை செய்வதினால் தேகம் அழியாது, செத்தால் பிறக்க வேண்டும், பிறந்தால் இறக்க வேண்டும். உலக வழக்கத்தை சொற்கள் அறிந்து பிறந்த தேகத்தை, காப்பாற்ற வேண்டிய தந்திரங்கள் அறிவதே, ஆத்மாவை அறிந்து தேகத்தை லயிக்க செய்யும் கர்மமாகும்.அது முடியாவிட்டால் சாவது நிச்சயம்,
செத்தால் பிறக்க வேண்டும், அதை தடுப்பதற்கு தேகத்திலிருந்துதான் அந்த கர்மத்தை செய்யமுடியும், புழு , பூண்டு வடிவத்தில் இருந்தால் இந்த கர்ம வினைகளை செய்ய இயலாதல்லவா? அப்படி சாதனையால் செய்து இந்த சூச்சும தேககத்தை பிரிக்கும் தந்திரத்தை அறிய வேண்டும்.சித்தர்களும் ஞானிகளும் இதை கண்டு கொண்டு உலகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவேதான் உடலையும் உள்ளத்தையும் கட்டுபாடுகளுடன் உட்படுத்தி தன்னை மேலான இயல்புடையவனாக மாற்ற வேண்டும், சிந்தையிலும் சொல்லிலும், செயலிலும் கோணல் இல்லாத தன்மையே நேர்மை அடைய வழிபிறக்கும், தேக சுகத்திற்கு வசப்பட்டு புற இச்சைகளையும் சாஸ்திரத்தின் ஆணை மீறி நடப்பவனுக்கும் ஏது மேன்மை? அவன் சுகம் பெற முடியாது, முக்தி என்னும் பேரின்பம் அடையமுடியாது.
" உடம்பினை பெற்ற பயனாவதெல்லா
முடம்பினிலுத்தமனைக் காண் " என்கிறார் அவ்வையார்.
தேகம் எடுத்ததின் பயன், புற இச்சைகளையும் மனை, மக்கள், காசு பணம், போன்ற சொத்துக்களை சம்பாதித்து அவற்றிலே மூழ்கி வயதான காலத்தில தள்ளாமையாலும், வியாதியினாலும் பிடிக்கப்பட்டு உழல்வதற்கல்ல, உன்னிலே ஒருவன் உள்ளான், அவனை நீ கண்டால் அறிவு சுடர் விட்டு, மூப்பு பிணி, சாக்காடு என்ற அவத்தை நீக்கி ஆணவம் கன்மை, மாயை நீக்கி பேரின்ப பெருவாழ்வு வாழலாம், என்கிறார்,
இந்த ஊன் உடம்பே ஆலயம் என்றாலும், அச்சரீரம் தன் அளவில் தேவ ஆலயம் ஆகிவிடாது, இந்த சரீரத்தை எப்படி மனிதன்பயன்படுத்துகின்றானோ அதை அனுசரித்து உடல் தேவ ஆலயமாக ஆகிறது. எனவே தான் உடம்புக்கு ஊறு வராது நேர்மைக்கு பங்கம் இலாது வாழ வேண்டும், எனவே உண்ணும்உணவு குடிக்கும்பானம் இவைகளை நெறிப்படுத்த வேண்டும். இந்த உடம்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டுமே யொழிய இந்த உடம்பை நினைக்க கூடாது. உடலில் உள்ள அபூர்வ செயல்கள், செயல் இழந்துவிட்டால் இந்த உடல் பயனற்றதாகிவிடும். ஆகவேதான் இந்த உடலை கொண்டே நாம் மேலான நிலையை அடைய வேண்டும். என்ற குறிக்கோளினைக் கொண்டு நல்ல சிந்தனையுடன் இந்த உடம்பை இயற்கை விதிகளுக்கு புறம்பாக ஓம்ப வேண்டும்,
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து, உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்
திருசிற்றம்பலம் ஒம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீக தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.weebly.com/weebly/main.
இந்து தர்ம சாஸ்திரங்கள் கூறும் பயனுள்ள சம்பிரதாயங்கள்:2
இந்து தர்ம சாஸ்திரங்களில் நம் முன்னோர்களால் வகுத்தறியப்பட்டு சில சாஸ்திர சம்பிரதாயங்கள் இன்றளவும் நம்மால் பின்பற்றப்பட்டு வருகின்றன, இருப்பினும் நம் முன்னோர்களால் சாஸ்திர ரீதியாக கடைப்பிடிக்கப்பட்டவை தற்போது இக்கால சூழ்நிலைக்கு ஏற்ப சற்று ஏறக்குறையவும் இன்றளவும் நடைபெறுகிறது, சாஸ்திர முறைப்படி கூறப்பட்ட சம்பிரதாயங்களை அன்றாட வாழ்க்கைக்கு ஆன்மீக ரீதியாக கடைபிடிப்பது அவசியமாகிறது,
"அரிது அரிது மானிடாய் பிறப்பது அரிது" என்கிறார் அவ்வைப் பிராட்டியார், ஆறறிவு பெற்ற மனிதனால் மட்டுமே சிந்தித்து செயல்பட்டு ஆன்மீக வழி நடந்து, பிறவிப் பெருங்கடலைக் கடக்க இயலும், மறுபிறவியில்லாத நிலையை அடைய உதவுவது இந்த மானிடப்பிறவியின் வாயிலாகத்தான் முடியும், சைவ சித்தாந்த பெரியோர்களும் முற்பிறவியில பெற்ற கர்ம வினைகளை தீர்க்க இந்த மானிடப் பிறவி நமக்கு அளிக்கப்பட்டுள்ளது, இந்த அரிய பிறவியில் ஆன்ம ஞானம்பெற்று வீடு பேறு என்ற பிறவா நிலையை அடையமுடியும்,
" கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடுவாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய்",
என்று அபிராமி பட்டர் பாடினார்,ஒவ்வொரு மனிதனும் தனக்கு கிடைக்க வேண்டுவதெல்லாம் அவர் கேட்ட இத்தனை வரங்களையெல்லாம் தான் இத்தனை இன்பங்களையும் செல்வங்களையும் பெற்று ஒரு மனிதன் ஆன்மீக நிலையை அடையவும் ஒழுக்க நெறி நடந்து, பிறர்க்கு சான்றாக நடந்து பின்வரும் தலைமுறைக்கு வழிகாட்டவும் தனது ஆன்மீக நிலையை மேம்படுத்தவும் வேத காலந் தொட்டு , நமது முன்னோர்களும் ரிசிகளும் சோதிட வல்லுநர்களும் சமயப் பெருந்தகைகளும் நமக்கு எத்தனையோ தத்துவங்களையும் உபதேசங்களையும் சாஸ்திரங்களையும் அருளி யிருக்கிறார்கள். ஒரு மனிதன் பிறந்தது முதல் பள்ளிக்கு சென்று வித்தை பயின்று திருமணம் புரிந்து காதல் விளையாடி, குழந்தை பெற்று , செல்வம் தேடி, ஆன்மீக பாதையில் சென்று மறுமையடையும் வரை, அவன் அன்றாடம் செய்யவேண்டிய கடமைகளையும் பின் பற்ற வேண்டிய நம் இந்து மத சம்பிரதாயங்கள் என்னென்ன வென்றும் எப்படி செய்ய வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்கள், இறந்தவுடன் அவனுடைய உடலுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் அவன் ஆத்மா சாந்தி அடைய வேண்டி செய்ய வேண்டிய சாஸ்திரங்களையும் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள்.
மனித உடல் உயிர் பிரியும தருவாயில் செய்யவேண்டிய சம்பிரதாயங்கள்:
இறக்கும் தருணம் வந்துவிட்டால் மரணப்படுக்கையில் இருந்தால் அவனை கட்டிலில் படுக்க விடக் கூடாது, உள் வீட்டிலும் படுக்க வைக்க கூடாது, தரையில் தர்ப்பையை போட்டு அதன் மீது அவனை படுக்க வைக்க வேண்டும், கட்டிலில் படுத்து கொண்டே உயிரை விட்டால் நரகதி அடைவர், ஒரு மனிதன் பிறக்கும் போதும் இறக்கும் போதும் பூமாதேவியின் மடியிலேயே நடக்க வேண்டும், தற்காலத்தில் வசதிக்காக எளிதாக பிரசவம் பார்க்க பெரும்பாலும் பிரசவ விடுதிகளில் கட்டிலில் தான் பிரசவங்கள் நடக்கின்றன, இறக்கும் போகும் மனிதனுக்கு துளசி, சாளக்கிராமம் போன்ற உத்தம பொருட்களை கண்ணில் காட்டவும், சிவ நாமத்தை அவரது வலது காதில் ஓத வேண்டும்,
புண்ணிய சாலிகளுக்கு முகத்திலுள்ள துவாரங்கள் மூலமாகவும், சித்தர் ஞானிகளுக்கு சிரசு வழியாகவும், பாவிகளுக்கு மலஜல துவாரம் வழியாகவும் உயிர் பிரியும்,
உயிர் பிரிந்த பின் செய்ய வேண்டி சடங்குகள்:
பிராணன் போன பின்பு, தலையை தெற்குப் புறமாக வைத்து படுக்க வைக்க வேண்டும், பெண்கள் தலையை விரித்துக் கொண்டு தெற்கு நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும், ஒருவன் இறந்தவுடன் ஒரு யாமம் (சுமார் 3 மணி நேரம்) கழிந்த பின்பு அப்புறப்படுத்த வேண்டும், இரவு 9 நாழிகைக்கு மேல் தகனம் செய்யக் கூடாது,
இறந்த உடலுக்கு கொள்ளி வைப்பது யார்?
பிறவியில் மூத்தவனே கொள்ளி வைக்க வேண்டும், அவன் இல்லாவிடில் இருப்பவர்களுள் மூத்தவன் கர்மஞ் செய்ய வேண்டும், எல்லா பிரேத காரியங்களிலும் ஈரத்துணியுடன் இருக்க வேண்டும், கொள்ளி வைப்பவர் அக்கினியை சட்டியில் எடுத்துக் கொண்டு முதலில் புறப்பட வேண்டும் அக்கினிக்கு பின் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும்,மற்றவர்கள் பிரேத்ததை தொடர்ந்து வரவேண்டும், பிள்ளைக்கு 2 வயதுக்குள் கர்மஞ் செய்ய நேரிட்டால் பக்கத்திலிருக்கும் வேறொருவர் செய்யலாம், 3 வயது முதல் 7 வயது வரை கொள்ளியை பையனே கொள்ளி வைக்க சொல்லி, பிற காரியங்களை நெருங்கிய உறவினர்கள் செய்யலாம், தகனம் செய்யுமிடத்தில் பிரேதத்தை தெற்குப்புறம் தலையிருக்கும்படி வைக்க வேண்டும், இதற்கான காரியம் செய்பவர்களும் அவருடைய தாயாதி வழியினரும் இறந்தவருக்கு வாய்கரிசி 3 முறை போட வேண்டும், சிதையின் கிழக்குப் புறத்தில் மேற்கு நோக்கி நின்று கொண்டு பிரேதத்தின் மார்பில் அக்கியை இட வேண்டும், பிறகு சிதையின் வடக்கு புறம் தெற்குநோக்கி நின்று கொண்டு அக்கினியை தொழுது மூன்று முறை ஓம் என் உச்சரிக்க வேண்டும், சிதைக்கு தீயிட்ட பின் திரும்பி பார்க்காது சென்று விட வேண்டும், பின் தலைமுழுகி ஸ்தானம் செய்ய வேண்டும், பின் உறவின்களுடன் வீட்டுக்கு செல்ல வேண்டும், பின் 10 வது நாள், அல்லது 16 வது நாள் கழித்து உரிய காரியங்களை செய்ய வேண்டும், காரியங்கள் செய்யும் வீட்டில் பசுஞ் சாணத்தால் மெழுகி புன்யாக வசனம் செய்யவும்,
சித்தி பெற்ற உடல், ஞானிகள் உடலை புதைக்கத்தான்வேண்டும், அதாவது சமாதி செய்தல் வேண்டும், சிறு குழந்தைகள் இறந்தாலும் புதைக்கத்தான் வேண்டும், தகனம் செய்தல் கூடாது,
ஒருவனுக்கு பெற்ற தாய் தந்தை இறநதால் ஒரு வருடம் வரை தீட்டு உண்டு. மனைவி இறந்தால் 3 மாதமும் சகோதர்களுக்கு ஒன்றை மாதமும் தாயாதிகள் இறந்தால் ஒரு மாதமும் தீட்டு உண்டு, இந்த தீட்டு நாட்களில் கோவில்களுக்கு செல்லக் கூடாது, சுபகாரியம் செய்யக் கூடாது, நேர்த்திக் கடன் செலுத்தக் கூடாது, தீட்டுக்காலம் முடிந்த பின் சிராத்தம் செய்ய வேண்டும், சிரார்த்தின் போது மனைவியும் உடன் இருக்க வேண்டும், இறந்த திதியை கணக்கிட்டு சிரார்த்தம் வருடாவருடம் பித்தருக்களுக்கு செய்ய வேண்டும, பிதுர்தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் சிறிது எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும்,
திருச்சிற்றம்பல்
ஒம் நமசிவாயம்
பிற ஆன்மீக தகவல்களுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.weebly.com/weebly/main.
இந்து தர்ம சாஸ்திரங்களில் நம் முன்னோர்களால் வகுத்தறியப்பட்டு சில சாஸ்திர சம்பிரதாயங்கள் இன்றளவும் நம்மால் பின்பற்றப்பட்டு வருகின்றன, இருப்பினும் நம் முன்னோர்களால் சாஸ்திர ரீதியாக கடைப்பிடிக்கப்பட்டவை தற்போது இக்கால சூழ்நிலைக்கு ஏற்ப சற்று ஏறக்குறையவும் இன்றளவும் நடைபெறுகிறது, சாஸ்திர முறைப்படி கூறப்பட்ட சம்பிரதாயங்களை அன்றாட வாழ்க்கைக்கு ஆன்மீக ரீதியாக கடைபிடிப்பது அவசியமாகிறது,
"அரிது அரிது மானிடாய் பிறப்பது அரிது" என்கிறார் அவ்வைப் பிராட்டியார், ஆறறிவு பெற்ற மனிதனால் மட்டுமே சிந்தித்து செயல்பட்டு ஆன்மீக வழி நடந்து, பிறவிப் பெருங்கடலைக் கடக்க இயலும், மறுபிறவியில்லாத நிலையை அடைய உதவுவது இந்த மானிடப்பிறவியின் வாயிலாகத்தான் முடியும், சைவ சித்தாந்த பெரியோர்களும் முற்பிறவியில பெற்ற கர்ம வினைகளை தீர்க்க இந்த மானிடப் பிறவி நமக்கு அளிக்கப்பட்டுள்ளது, இந்த அரிய பிறவியில் ஆன்ம ஞானம்பெற்று வீடு பேறு என்ற பிறவா நிலையை அடையமுடியும்,
" கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடுவாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய்",
என்று அபிராமி பட்டர் பாடினார்,ஒவ்வொரு மனிதனும் தனக்கு கிடைக்க வேண்டுவதெல்லாம் அவர் கேட்ட இத்தனை வரங்களையெல்லாம் தான் இத்தனை இன்பங்களையும் செல்வங்களையும் பெற்று ஒரு மனிதன் ஆன்மீக நிலையை அடையவும் ஒழுக்க நெறி நடந்து, பிறர்க்கு சான்றாக நடந்து பின்வரும் தலைமுறைக்கு வழிகாட்டவும் தனது ஆன்மீக நிலையை மேம்படுத்தவும் வேத காலந் தொட்டு , நமது முன்னோர்களும் ரிசிகளும் சோதிட வல்லுநர்களும் சமயப் பெருந்தகைகளும் நமக்கு எத்தனையோ தத்துவங்களையும் உபதேசங்களையும் சாஸ்திரங்களையும் அருளி யிருக்கிறார்கள். ஒரு மனிதன் பிறந்தது முதல் பள்ளிக்கு சென்று வித்தை பயின்று திருமணம் புரிந்து காதல் விளையாடி, குழந்தை பெற்று , செல்வம் தேடி, ஆன்மீக பாதையில் சென்று மறுமையடையும் வரை, அவன் அன்றாடம் செய்யவேண்டிய கடமைகளையும் பின் பற்ற வேண்டிய நம் இந்து மத சம்பிரதாயங்கள் என்னென்ன வென்றும் எப்படி செய்ய வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்கள், இறந்தவுடன் அவனுடைய உடலுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் அவன் ஆத்மா சாந்தி அடைய வேண்டி செய்ய வேண்டிய சாஸ்திரங்களையும் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள்.
மனித உடல் உயிர் பிரியும தருவாயில் செய்யவேண்டிய சம்பிரதாயங்கள்:
இறக்கும் தருணம் வந்துவிட்டால் மரணப்படுக்கையில் இருந்தால் அவனை கட்டிலில் படுக்க விடக் கூடாது, உள் வீட்டிலும் படுக்க வைக்க கூடாது, தரையில் தர்ப்பையை போட்டு அதன் மீது அவனை படுக்க வைக்க வேண்டும், கட்டிலில் படுத்து கொண்டே உயிரை விட்டால் நரகதி அடைவர், ஒரு மனிதன் பிறக்கும் போதும் இறக்கும் போதும் பூமாதேவியின் மடியிலேயே நடக்க வேண்டும், தற்காலத்தில் வசதிக்காக எளிதாக பிரசவம் பார்க்க பெரும்பாலும் பிரசவ விடுதிகளில் கட்டிலில் தான் பிரசவங்கள் நடக்கின்றன, இறக்கும் போகும் மனிதனுக்கு துளசி, சாளக்கிராமம் போன்ற உத்தம பொருட்களை கண்ணில் காட்டவும், சிவ நாமத்தை அவரது வலது காதில் ஓத வேண்டும்,
புண்ணிய சாலிகளுக்கு முகத்திலுள்ள துவாரங்கள் மூலமாகவும், சித்தர் ஞானிகளுக்கு சிரசு வழியாகவும், பாவிகளுக்கு மலஜல துவாரம் வழியாகவும் உயிர் பிரியும்,
உயிர் பிரிந்த பின் செய்ய வேண்டி சடங்குகள்:
பிராணன் போன பின்பு, தலையை தெற்குப் புறமாக வைத்து படுக்க வைக்க வேண்டும், பெண்கள் தலையை விரித்துக் கொண்டு தெற்கு நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும், ஒருவன் இறந்தவுடன் ஒரு யாமம் (சுமார் 3 மணி நேரம்) கழிந்த பின்பு அப்புறப்படுத்த வேண்டும், இரவு 9 நாழிகைக்கு மேல் தகனம் செய்யக் கூடாது,
இறந்த உடலுக்கு கொள்ளி வைப்பது யார்?
பிறவியில் மூத்தவனே கொள்ளி வைக்க வேண்டும், அவன் இல்லாவிடில் இருப்பவர்களுள் மூத்தவன் கர்மஞ் செய்ய வேண்டும், எல்லா பிரேத காரியங்களிலும் ஈரத்துணியுடன் இருக்க வேண்டும், கொள்ளி வைப்பவர் அக்கினியை சட்டியில் எடுத்துக் கொண்டு முதலில் புறப்பட வேண்டும் அக்கினிக்கு பின் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும்,மற்றவர்கள் பிரேத்ததை தொடர்ந்து வரவேண்டும், பிள்ளைக்கு 2 வயதுக்குள் கர்மஞ் செய்ய நேரிட்டால் பக்கத்திலிருக்கும் வேறொருவர் செய்யலாம், 3 வயது முதல் 7 வயது வரை கொள்ளியை பையனே கொள்ளி வைக்க சொல்லி, பிற காரியங்களை நெருங்கிய உறவினர்கள் செய்யலாம், தகனம் செய்யுமிடத்தில் பிரேதத்தை தெற்குப்புறம் தலையிருக்கும்படி வைக்க வேண்டும், இதற்கான காரியம் செய்பவர்களும் அவருடைய தாயாதி வழியினரும் இறந்தவருக்கு வாய்கரிசி 3 முறை போட வேண்டும், சிதையின் கிழக்குப் புறத்தில் மேற்கு நோக்கி நின்று கொண்டு பிரேதத்தின் மார்பில் அக்கியை இட வேண்டும், பிறகு சிதையின் வடக்கு புறம் தெற்குநோக்கி நின்று கொண்டு அக்கினியை தொழுது மூன்று முறை ஓம் என் உச்சரிக்க வேண்டும், சிதைக்கு தீயிட்ட பின் திரும்பி பார்க்காது சென்று விட வேண்டும், பின் தலைமுழுகி ஸ்தானம் செய்ய வேண்டும், பின் உறவின்களுடன் வீட்டுக்கு செல்ல வேண்டும், பின் 10 வது நாள், அல்லது 16 வது நாள் கழித்து உரிய காரியங்களை செய்ய வேண்டும், காரியங்கள் செய்யும் வீட்டில் பசுஞ் சாணத்தால் மெழுகி புன்யாக வசனம் செய்யவும்,
சித்தி பெற்ற உடல், ஞானிகள் உடலை புதைக்கத்தான்வேண்டும், அதாவது சமாதி செய்தல் வேண்டும், சிறு குழந்தைகள் இறந்தாலும் புதைக்கத்தான் வேண்டும், தகனம் செய்தல் கூடாது,
ஒருவனுக்கு பெற்ற தாய் தந்தை இறநதால் ஒரு வருடம் வரை தீட்டு உண்டு. மனைவி இறந்தால் 3 மாதமும் சகோதர்களுக்கு ஒன்றை மாதமும் தாயாதிகள் இறந்தால் ஒரு மாதமும் தீட்டு உண்டு, இந்த தீட்டு நாட்களில் கோவில்களுக்கு செல்லக் கூடாது, சுபகாரியம் செய்யக் கூடாது, நேர்த்திக் கடன் செலுத்தக் கூடாது, தீட்டுக்காலம் முடிந்த பின் சிராத்தம் செய்ய வேண்டும், சிரார்த்தின் போது மனைவியும் உடன் இருக்க வேண்டும், இறந்த திதியை கணக்கிட்டு சிரார்த்தம் வருடாவருடம் பித்தருக்களுக்கு செய்ய வேண்டும, பிதுர்தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் சிறிது எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும்,
திருச்சிற்றம்பல்
ஒம் நமசிவாயம்
பிற ஆன்மீக தகவல்களுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.weebly.com/weebly/main.
இந்து தர்ம சாஸ்திரங்கள் கூறும் பயனுள்ள சம்பிரதாயங்கள்:
1), கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது.
2, தனது இடது கையால் எண்ணெய் தேய்த்தல், இடது கையால் அன்னம் இடுதல், இடது கையால் படுக்கை விரித்தல் கூடாத பழக்கவழக்கம்,
3, குரு, நோயாளி, கர்ப்பிணி,மருத்துவர் சந்நியாசி முதலியோர்களுக்கு ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவி செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும்.
4,சகோதர, சகோதரிகள் தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.
5,பசு, தேர், நெய்குடம், அரசு, வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் குறுக்கிட்டால் அதனை வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்,
6, குடும்பஸ்தன் ஒரு கையை தரையில் ஊன்றியக் கொண்டு உணவு உண்ணக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது,
7, கன்ளுக்குட்டியின் கயிறை தாண்டக்கூடாது,தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்க கூடாது.
8, நெருப்பை வாயால் ஊதக்கூடாது,
9, குழந்தை யில்லாதவன், திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணுடன் வாழுபவன், மனைவியை இழந்தவன் இவர்களை சுப காரிய நிகழ்வுகளில் முன்னிறுத்தக் கூடாது,
10, சாப்பிடும் போது முதலில் இனிப்பு, உவர்ப்பு , புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு பின்பு நீர்அருந்த வேண்டும்,
11, கணவன் சாப்பிட்ட பின்பே மனைவி சாப்பிட வேண்டும், திருமணத்திலும் பந்தியிலும், பிரயாணத்திலும் சேர்ந்து சாப்பிடலாம்,
12, உள்ளாடை யின்றி வீட்டின் நிலைப்படியை தாண்டக்கூடாது, ஆன்மீக சடங்குகளில் கலந்து கொள்ளவோ, கோவிலுக்கு செல்லவோ கூடாது.
13, சாப்பிட்ட பின் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும், வெற்றிலையின் நுனி, நரம்பு, காம்பு கிள்ளி எறிந்து விட வேண்டும்,
14, சுண்ணாம்பு இல்லாத வேற்றிலையோ, வெறும் பாக்கோ போடக்கூடாது, சுண்ணம்பு வெற்றிலையின் பின் பக்கம்தான் தடவ வேண்டும்.
15, குரு,சோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இவற்றிக்கு செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது,
16, தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும், இரண்டு கையாலும் சொரிதல் கட்டாயம் கூடாது,
17, இருகையாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக் கூடாது,
18, வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.
19, பேசும் போது துரும்பைக் கிள்ளக் கூடாது, பேசுவர் துண்டிப்பாதாக தோன்றும்,
20, ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.
21, வடக்கிலும், கோணத்திசையிலும், தலைவைத்து படுக்கக் கூடாது, நடக்கும் போது முடியை உலர்த்தக் கூடாது,
22, குடும்பப் பெண்கள் தலைமுடியை விரித்து போட்டுக் கொண்டு வெளியில் செல்லவோ சுபகாரியங்களிலுக்கு செல்லவோ கூடாது,
23, ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது,
24, சிகரெட், பீடி தீ துண்டுகளை அணைக்காமல் தரையில் போட்டு காலால் தேய்க்கக் கூடாது,
25, பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது, இவை அனைத்தும் கூடா நட்பு
26, பெற்றதாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறர்மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயசித்தமற்ற பாவங்கள்
27,அங்ககீனம் உள்ளவர்வரகள், வறுமையில் உள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்ட கூடாது,
28, பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை ஆசனம் இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.
29, பிணப்புகை, இளவெயில் தீப நிழல் இவை நம்மீது படக்கூடாது.
30, பசுமாட்டினை காலால் உதைப்பது, அடிப்பது கூடாது,
31, பசு மாட்டிற்கு ( கோமாதா) பசும்புல் ஒரு கைப்படியாவது கொடுப்பது சிறந்தது, " யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை " திருமூலர் மந்திரம்
32, உண்ணும் போது பிறர் பார்த்திருக்க உண்ணக் கூடாது, " யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி" பிறருக்கு ஈந்து உண்ணல் வேண்டும்,
33, பகலில் உறங்குவது , உடலுறவு கொள்வது கூடாது,
34, தூங்குபவரை தீடீரென்ற எழுப்பக் கூடாது, தூங்கும் குழந்தையை பார்த்து ரசிக்கக் கூடாது.
35,தலை, முகம் இவற்றின் முடியை காரணமில்லாமல் வளர்க்கக் கூடாது.
36, வீட்டிற்குள் நுழையும் போது வாசல் வழியாகத்தான் நுழைய வேண்டும்
37, கையால் மோரை குழப்பக் கூடாது.
38, தாம்பத்திய சுகம் அனுபவிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மனைவியுடைய மர்ம, உறுப்புக்களையும், பிற பெண்களுடையதையும்பார்க்க கூடாது.
39, நம்மை ஒருவர் கேட்காத வரையில் நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது,
தொகுத்தவர்
வை, பூமாலை, சுந்தரபாண்டியம்
மேலும் ஆன்மீகச் செய்திகளுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.weebly.com/weebly/main.
1), கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது.
2, தனது இடது கையால் எண்ணெய் தேய்த்தல், இடது கையால் அன்னம் இடுதல், இடது கையால் படுக்கை விரித்தல் கூடாத பழக்கவழக்கம்,
3, குரு, நோயாளி, கர்ப்பிணி,மருத்துவர் சந்நியாசி முதலியோர்களுக்கு ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவி செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும்.
4,சகோதர, சகோதரிகள் தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.
5,பசு, தேர், நெய்குடம், அரசு, வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் குறுக்கிட்டால் அதனை வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்,
6, குடும்பஸ்தன் ஒரு கையை தரையில் ஊன்றியக் கொண்டு உணவு உண்ணக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது,
7, கன்ளுக்குட்டியின் கயிறை தாண்டக்கூடாது,தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்க கூடாது.
8, நெருப்பை வாயால் ஊதக்கூடாது,
9, குழந்தை யில்லாதவன், திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணுடன் வாழுபவன், மனைவியை இழந்தவன் இவர்களை சுப காரிய நிகழ்வுகளில் முன்னிறுத்தக் கூடாது,
10, சாப்பிடும் போது முதலில் இனிப்பு, உவர்ப்பு , புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு பின்பு நீர்அருந்த வேண்டும்,
11, கணவன் சாப்பிட்ட பின்பே மனைவி சாப்பிட வேண்டும், திருமணத்திலும் பந்தியிலும், பிரயாணத்திலும் சேர்ந்து சாப்பிடலாம்,
12, உள்ளாடை யின்றி வீட்டின் நிலைப்படியை தாண்டக்கூடாது, ஆன்மீக சடங்குகளில் கலந்து கொள்ளவோ, கோவிலுக்கு செல்லவோ கூடாது.
13, சாப்பிட்ட பின் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும், வெற்றிலையின் நுனி, நரம்பு, காம்பு கிள்ளி எறிந்து விட வேண்டும்,
14, சுண்ணாம்பு இல்லாத வேற்றிலையோ, வெறும் பாக்கோ போடக்கூடாது, சுண்ணம்பு வெற்றிலையின் பின் பக்கம்தான் தடவ வேண்டும்.
15, குரு,சோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இவற்றிக்கு செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது,
16, தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும், இரண்டு கையாலும் சொரிதல் கட்டாயம் கூடாது,
17, இருகையாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக் கூடாது,
18, வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.
19, பேசும் போது துரும்பைக் கிள்ளக் கூடாது, பேசுவர் துண்டிப்பாதாக தோன்றும்,
20, ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.
21, வடக்கிலும், கோணத்திசையிலும், தலைவைத்து படுக்கக் கூடாது, நடக்கும் போது முடியை உலர்த்தக் கூடாது,
22, குடும்பப் பெண்கள் தலைமுடியை விரித்து போட்டுக் கொண்டு வெளியில் செல்லவோ சுபகாரியங்களிலுக்கு செல்லவோ கூடாது,
23, ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது,
24, சிகரெட், பீடி தீ துண்டுகளை அணைக்காமல் தரையில் போட்டு காலால் தேய்க்கக் கூடாது,
25, பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது, இவை அனைத்தும் கூடா நட்பு
26, பெற்றதாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறர்மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயசித்தமற்ற பாவங்கள்
27,அங்ககீனம் உள்ளவர்வரகள், வறுமையில் உள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்ட கூடாது,
28, பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை ஆசனம் இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.
29, பிணப்புகை, இளவெயில் தீப நிழல் இவை நம்மீது படக்கூடாது.
30, பசுமாட்டினை காலால் உதைப்பது, அடிப்பது கூடாது,
31, பசு மாட்டிற்கு ( கோமாதா) பசும்புல் ஒரு கைப்படியாவது கொடுப்பது சிறந்தது, " யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை " திருமூலர் மந்திரம்
32, உண்ணும் போது பிறர் பார்த்திருக்க உண்ணக் கூடாது, " யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி" பிறருக்கு ஈந்து உண்ணல் வேண்டும்,
33, பகலில் உறங்குவது , உடலுறவு கொள்வது கூடாது,
34, தூங்குபவரை தீடீரென்ற எழுப்பக் கூடாது, தூங்கும் குழந்தையை பார்த்து ரசிக்கக் கூடாது.
35,தலை, முகம் இவற்றின் முடியை காரணமில்லாமல் வளர்க்கக் கூடாது.
36, வீட்டிற்குள் நுழையும் போது வாசல் வழியாகத்தான் நுழைய வேண்டும்
37, கையால் மோரை குழப்பக் கூடாது.
38, தாம்பத்திய சுகம் அனுபவிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மனைவியுடைய மர்ம, உறுப்புக்களையும், பிற பெண்களுடையதையும்பார்க்க கூடாது.
39, நம்மை ஒருவர் கேட்காத வரையில் நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது,
தொகுத்தவர்
வை, பூமாலை, சுந்தரபாண்டியம்
மேலும் ஆன்மீகச் செய்திகளுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.weebly.com/weebly/main.
தமிழ் திருமறைகள் கூறும் வைத்தியம்
தமிழ் திருமறைகள் மற்றும் தமிழ் பாசுரங்களையும், மந்திரங்களையும் அனுதினமும் ஜெபித்தும், மானிடர் படும் நோய் நொடி துன்பங்களிலிருந்து தங்களை விடுவித்து அதற்குரிய பலாபலன்கள் அடைந்துள்ளனர் நம்முன்னோர்கள், அவைகள் அக்காலத்திற்கு பொருந்துமா? என்பதை நினைப்பதை விட நடந்து அனுபவித்து கூறிய செய்திகள் உண்மையானவைகளாகவே நமக்கு தோன்றுகின்றன. அது மட்டுமன்றி தமிழ் மறைகள் மூலம் சித்தர் பெருமக்கள் அததற்கென மூலிகைகள் மூலம் சித்த வைத்திய முறைகளையும் கையாண்டது அகத்தியர் தொகுத்த சித்த வைத்திய முறைகளைக் கொண்டு அறியலாம். தமிழ் மறை நூல் ஆசிரியர் கள் தொகுத்துப் பாடி அடைந்த பலாபலன்கள் அவர்கள் கூற்றின் வாய்லாக நாம் அறியலாம்,
அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியை அனுதினமும் பாராயணம் செய்தால் சகல தோசங்களும் நீங்கி, சந்தோசமும் செல்வமும் மோட்சமும் சித்திக்கும், தீராத நோய்களும் தீர திருஞானசம்பந்தர் பாடிய திருநீற்றுப்பதிகப் பாடல்களை பாடி இந்து சமயத்தின் அடையாளமான திருநீற்றை நெற்றி யில் அணிந்து சகல நோய்களையும் தீர்ககலாம் என்கிறார் சம்பந்தர், பாண்டிய மன்னனுக்கு சூட்டுநோய் நீக்க திருநீற்றை பூசி அவரைக் குணப்படுத்தி " மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு " எனறு ஆரம்பித்து
" ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயன் திருநீற்றைப்
போற்றி பகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றி த் தென்னன் உடல் உற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும வல்லவர் நல்லவர் தாமே, என்று எல்லா நோய்கள் தீரவும் இதனைப் பாடி இத்திருநீற்றை அணிந்தால் எல்லாப்பிணிகளும் தீரும் என்கிறார், முயலக நோய் என்னும் முடக்குவாத நோய் நீங்க ' துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர் சடை சுற்றி " என்ற பாடலைப் பாடினால் அவர் கூற்றுப்படி " நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி நற்றமிழ் ஞானசம்பந்தன் தகைமலி தண்டமிழ் கொண்டவை ஏத்தச சாரகிலா வினைதானே", என்கிறார், அதுபோல் முன்வினைகள் நீங்கவும் எலும்பு முறிவு முதலியன குணமடையவும் ஒதவேண்டிய பதிகம் " விங்கவிளை கழனிமிகு கடைசியர்கள் ,,,,,,,,,,,, எனத் தொடங்கி " மடைகொள் புனலோடு வயல் கூடுபொழில் மாகறல் உளான் அடியையே உடைய தமிழ் பத்தும் உணர்வார்அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே" என்கிறார், அத்துடன் சொரி, படை, மேகம், அம்மை போன்ற பலவகை உடற்பிணிகள் அகல ஓதவேண்டிய பதிகம் " மின்னுமா மேகங்கள் பொழிந்து இழிந்து அருவி .............. என்று தொடங்கி " தங்கையால் தொழுது தம் நாவின் மேற்கொள்வார் தவநெறி சென்று அமருலகம் ஆள்பவரே. " என்று அருளியுள்ளார், அதுபோலவே
திருநாவுக்கரசர் சுவாமிகள் பாம்பு கடியால் இறந்த குழந்தையை உயிர்பிக்க பாடிய பாடல் கொண்ட விடந்தீர்த்த திருப்பதிகம் " ஒன்றுகொலாம் என்ற பாடல் பாடி பாம்பு ( நஞ்சு) தீர்க்க பயன் பெறலாம், கண்பார்வை இழந்தபோது வன்தொண்டர் என்ற சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய " மீளா அடிமை உமக்கே ஆளாய் " என்ற பாடல் பதிகங்களைக் கொண்டு கண்சம்பந்தான நோய்களை குணமடைய செய்யலாம், ஊமை திக்குவாய் முதலியன நீங்கவும் நன்றாக பேசவும் உதவும் பதிகப் பாடல் திரு மாணிக்கவாசகர்அருளிய " பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் " என்ற பாடல் கொண்டு நல்ல பேச்சிதிறன் கொண்ட குழந்தைகள் அமையவும், ஊமை குழந்தைகள் பேச செய்யவும் இப்பாடல்ளை பாராணம் செய்தால் விரைவில் குணம் பெறலாம், நவக்கிரகங்களால் ஏற்படும் தோசம் நீங்க " மாசறு திங்கள் " என்ற கோளறு பதிகம் தினசரி பாடி பாராயணம் செய்யலாம்,
அருணகிரிநாதர் அருளிய
" நாளென் செயும் வினைதான் என்செயுமென நாடிவந்த
கோள் என்செயும் கொடுங் கூற்றென் செயும் குமரரே சரிரு
தாளும் சிலம்பும் சதங்கையும தண்டையுஞ் சண்முகமும்
தோளுங் கடம்புமெனக்கு முன்னே வந்து தோன்றிடினே, " என்ற கந்தர் அலங்காரப் பாடலைதினமும் பாடினால் துன்பங்கள் தவிர்க்கலாம்
பூர்வ ஜென்ம பாவத்தால் வாழ்க்கையில் எப்போதும் கஸ்டத்தையே அனுபவிப்பவர்கள் " சேல்பட்டழிந்து செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் " என்ற கந்தர்அலங்கார பாடலை பாராயணம் செய்யலாம், வாழ்க்கையில் வழிதெரியாமல் தவிக்கும் போதும் பிரயாணம் செல்லும் போதும் வழித் துணைக்காக பயம் நீங்க பாடும் பாடல் " விழிக்கு துணை திருமென் மலர்ப் பாதங்கள் ,,,,,,,,,,,,,,,,,,,, வழிக்குத் துணை வடிவேலுஞ் செங்கோடன் மயூரமுமே." என்ற பாடலை பாராயணம் செய்யலாம்,
இவ்வாறு ஏகப்பட்ட பாசுரங்களும் பாடல்களும், சுலோகங்களும் உள்ளன, இவற்றை பாராயணம் செய்வதால் சகலவித அனுகூலமும் கிட்டும், சிவகவசம், சக்தி கவசம், நமக்கு வாழ்வின் சிறந்த கவசமாக பாதுகாக்கும், சகலா வல்லி கல்வி மாலை பாடினால் சகல கலைகளும் தேர்ச்சி உண்டாகும், நவரத்தின மாலாவை பாடினால் செலவம் சேரும், கனகதாரா தோத்திரம் பாடினால் மகாலட்சுமி அருள் கிட்டும், செளந்தர்ய லகரி பாடினால் அற்புதமான சக்திகளும் அநேக நன்மைகளும் கிடைக்கும், எனவே அனுதினமும் ஏதேனும் ஒரு தோத்திரப் பாாடல் அல்லது சுலோகங்களை கூறி பாடி எல்லா வல்ல இறையருள் உய்து நலமுடன் வாழ்வோம்,
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.weebly.com/weebly/main.
தமிழ் திருமறைகள் மற்றும் தமிழ் பாசுரங்களையும், மந்திரங்களையும் அனுதினமும் ஜெபித்தும், மானிடர் படும் நோய் நொடி துன்பங்களிலிருந்து தங்களை விடுவித்து அதற்குரிய பலாபலன்கள் அடைந்துள்ளனர் நம்முன்னோர்கள், அவைகள் அக்காலத்திற்கு பொருந்துமா? என்பதை நினைப்பதை விட நடந்து அனுபவித்து கூறிய செய்திகள் உண்மையானவைகளாகவே நமக்கு தோன்றுகின்றன. அது மட்டுமன்றி தமிழ் மறைகள் மூலம் சித்தர் பெருமக்கள் அததற்கென மூலிகைகள் மூலம் சித்த வைத்திய முறைகளையும் கையாண்டது அகத்தியர் தொகுத்த சித்த வைத்திய முறைகளைக் கொண்டு அறியலாம். தமிழ் மறை நூல் ஆசிரியர் கள் தொகுத்துப் பாடி அடைந்த பலாபலன்கள் அவர்கள் கூற்றின் வாய்லாக நாம் அறியலாம்,
அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியை அனுதினமும் பாராயணம் செய்தால் சகல தோசங்களும் நீங்கி, சந்தோசமும் செல்வமும் மோட்சமும் சித்திக்கும், தீராத நோய்களும் தீர திருஞானசம்பந்தர் பாடிய திருநீற்றுப்பதிகப் பாடல்களை பாடி இந்து சமயத்தின் அடையாளமான திருநீற்றை நெற்றி யில் அணிந்து சகல நோய்களையும் தீர்ககலாம் என்கிறார் சம்பந்தர், பாண்டிய மன்னனுக்கு சூட்டுநோய் நீக்க திருநீற்றை பூசி அவரைக் குணப்படுத்தி " மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு " எனறு ஆரம்பித்து
" ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயன் திருநீற்றைப்
போற்றி பகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றி த் தென்னன் உடல் உற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும வல்லவர் நல்லவர் தாமே, என்று எல்லா நோய்கள் தீரவும் இதனைப் பாடி இத்திருநீற்றை அணிந்தால் எல்லாப்பிணிகளும் தீரும் என்கிறார், முயலக நோய் என்னும் முடக்குவாத நோய் நீங்க ' துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர் சடை சுற்றி " என்ற பாடலைப் பாடினால் அவர் கூற்றுப்படி " நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி நற்றமிழ் ஞானசம்பந்தன் தகைமலி தண்டமிழ் கொண்டவை ஏத்தச சாரகிலா வினைதானே", என்கிறார், அதுபோல் முன்வினைகள் நீங்கவும் எலும்பு முறிவு முதலியன குணமடையவும் ஒதவேண்டிய பதிகம் " விங்கவிளை கழனிமிகு கடைசியர்கள் ,,,,,,,,,,,, எனத் தொடங்கி " மடைகொள் புனலோடு வயல் கூடுபொழில் மாகறல் உளான் அடியையே உடைய தமிழ் பத்தும் உணர்வார்அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே" என்கிறார், அத்துடன் சொரி, படை, மேகம், அம்மை போன்ற பலவகை உடற்பிணிகள் அகல ஓதவேண்டிய பதிகம் " மின்னுமா மேகங்கள் பொழிந்து இழிந்து அருவி .............. என்று தொடங்கி " தங்கையால் தொழுது தம் நாவின் மேற்கொள்வார் தவநெறி சென்று அமருலகம் ஆள்பவரே. " என்று அருளியுள்ளார், அதுபோலவே
திருநாவுக்கரசர் சுவாமிகள் பாம்பு கடியால் இறந்த குழந்தையை உயிர்பிக்க பாடிய பாடல் கொண்ட விடந்தீர்த்த திருப்பதிகம் " ஒன்றுகொலாம் என்ற பாடல் பாடி பாம்பு ( நஞ்சு) தீர்க்க பயன் பெறலாம், கண்பார்வை இழந்தபோது வன்தொண்டர் என்ற சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய " மீளா அடிமை உமக்கே ஆளாய் " என்ற பாடல் பதிகங்களைக் கொண்டு கண்சம்பந்தான நோய்களை குணமடைய செய்யலாம், ஊமை திக்குவாய் முதலியன நீங்கவும் நன்றாக பேசவும் உதவும் பதிகப் பாடல் திரு மாணிக்கவாசகர்அருளிய " பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் " என்ற பாடல் கொண்டு நல்ல பேச்சிதிறன் கொண்ட குழந்தைகள் அமையவும், ஊமை குழந்தைகள் பேச செய்யவும் இப்பாடல்ளை பாராணம் செய்தால் விரைவில் குணம் பெறலாம், நவக்கிரகங்களால் ஏற்படும் தோசம் நீங்க " மாசறு திங்கள் " என்ற கோளறு பதிகம் தினசரி பாடி பாராயணம் செய்யலாம்,
அருணகிரிநாதர் அருளிய
" நாளென் செயும் வினைதான் என்செயுமென நாடிவந்த
கோள் என்செயும் கொடுங் கூற்றென் செயும் குமரரே சரிரு
தாளும் சிலம்பும் சதங்கையும தண்டையுஞ் சண்முகமும்
தோளுங் கடம்புமெனக்கு முன்னே வந்து தோன்றிடினே, " என்ற கந்தர் அலங்காரப் பாடலைதினமும் பாடினால் துன்பங்கள் தவிர்க்கலாம்
பூர்வ ஜென்ம பாவத்தால் வாழ்க்கையில் எப்போதும் கஸ்டத்தையே அனுபவிப்பவர்கள் " சேல்பட்டழிந்து செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் " என்ற கந்தர்அலங்கார பாடலை பாராயணம் செய்யலாம், வாழ்க்கையில் வழிதெரியாமல் தவிக்கும் போதும் பிரயாணம் செல்லும் போதும் வழித் துணைக்காக பயம் நீங்க பாடும் பாடல் " விழிக்கு துணை திருமென் மலர்ப் பாதங்கள் ,,,,,,,,,,,,,,,,,,,, வழிக்குத் துணை வடிவேலுஞ் செங்கோடன் மயூரமுமே." என்ற பாடலை பாராயணம் செய்யலாம்,
இவ்வாறு ஏகப்பட்ட பாசுரங்களும் பாடல்களும், சுலோகங்களும் உள்ளன, இவற்றை பாராயணம் செய்வதால் சகலவித அனுகூலமும் கிட்டும், சிவகவசம், சக்தி கவசம், நமக்கு வாழ்வின் சிறந்த கவசமாக பாதுகாக்கும், சகலா வல்லி கல்வி மாலை பாடினால் சகல கலைகளும் தேர்ச்சி உண்டாகும், நவரத்தின மாலாவை பாடினால் செலவம் சேரும், கனகதாரா தோத்திரம் பாடினால் மகாலட்சுமி அருள் கிட்டும், செளந்தர்ய லகரி பாடினால் அற்புதமான சக்திகளும் அநேக நன்மைகளும் கிடைக்கும், எனவே அனுதினமும் ஏதேனும் ஒரு தோத்திரப் பாாடல் அல்லது சுலோகங்களை கூறி பாடி எல்லா வல்ல இறையருள் உய்து நலமுடன் வாழ்வோம்,
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.weebly.com/weebly/main.
தமிழ் வேதங்களில் தனிமனித ஒழுக்கம்
"கூறுமின் ஈசனைச் செய்மின் குற்றேவல் குளிர்மின் கண்கள்
தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின் செற்றம்
ஆறுமின் வேட்கை அறுமின் அவலம் இவை நெறியா
ஏறுமின் வானத்து இருமின் விருந்தாய் இமையவர்க்கே, --- பொன் வண்ணத்து அந்தாதி (தமிழ் வேதம் 11 )
தனிமனிதர்களின் தொகுப்பு அல்லது கூட்டம் தான் சமுதாயம் என்பது. வானுலகில் இன்புற்றிருப்பதற்கு உரிய வழி பொருளற்ற சடங்குகளும் சம்பிரதாயங்களும் இப்பாடலில் சொல்லப்படவில்லை என்பதை நாம் தெளிவாக கொள்ள வேண்டும்
சேரமான் பெருமாள் நாயனார் உடலுடன் கயிலையை அடைந்தவர். அவர் சொல்வதைத்தான் நாம் கொள்ள வேண்டும். அமெரிக்கா சென்றவர் சொல்லும் வழியைத்தான் அமெரிக்கா செல்ல இருப்பவர் கேட்க வேண்டும்.சமயக் கொள்கைகளை தங்களின் சுயலாபத்திற்காக வளைத்துக் கொண்டவர்களின் சொற்களை கேட்டு ஏமாந்து போகிறவர்கள் அப்பாவிகள்.
வளர்ந்த நாடுகளைவிட தமிழர்கள் ஆதிகாலம் தொட்டே உயர்ந்த பண்பாட்டுடனும், தனி மனித ஒழுக்கத்தை இறைவழிபாட்டுடன் இணைத்துக் கூறினார்கள் வாழ்ந்தும் காட்டினார்கள். காரணம் இறைவழிபாட்டினை மனித வாழ்விலிருந்து பிரித்து விடமுடியாது, இறையுணர்வு இல்லையானால் மனிதன் மிருகமாக வாழநேரிடும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் நமது சிவஞானியர்கள். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேரமான் பெருமான் நாயனார் தமிழகத்தில் மூவேந்தர்களில் சேரர் குடியில் தோன்றி சிவ வழிபாடு செய்து வந்தவர், இவருடைய சிவபூசையின் முடிவில் நடராசப் பெருமான் சிலம்பொலி கேட்கச் செய்தார். ஆழ்ந்த இறைபக்தியுடைய இப்பெருமானார் அருளியுள்ள இப்பாடலில் பொதிந்துள்ள தனி மனித ஒழுக்க கோட்பாடுகளைக்காண்போம்.
1,கூறுமின் ஈசனை: முழுமதற் பொருளாய் விளங்கும் சிவபெருமானாரைத் துதியுங்கள் பிற்ப்பும்,இறப்பும் இல்லா பெருந்தெய்வம் ஆகும். மற்றவையெல்லாம் சிறுதெய்வங்கள் எனப்படும், சிறு தெய்வங்கள் யாவும் பிறக்கும் இறக்கும் வேதனைப்படும் மேல்வினையும் செய்யும், ஒரு நாட்டிற்கு பிரதம மந்திர் இருப்பது போல அகில உலகங்களுக்கு எல்லாம் ஒரே கடவுள் தான். இரண்டு இல்லை, அந்த பிறப்பு இறப்பு இல்லாதவர் அவரே சிவம் என்கிறார், சிறுதெய்வ வழிபாடு மக்களிடையே பரவுமானால் உயர்ந்த பண்பாடு போய்விடும், சிறுதெய்வ வழிபாட்டால் உயிர்பலி இடுதல் போன்ற பண்பாடற்ற தலைதூக்கும் அதனாலேயே ஆரம்பத்திலேயே பெருந்தெய்வ வழிபாட்டைக் கூறியுள்ளார்.
2, செய்மின் குற்றேவல்: சிறு சிறு தொண்டுகளைச் செய்யச் சொல்கிறார். சிவாலயத்தை தூய்மை செய்தல், மலர் எடுத்தல் வலம் வருதல் போன்ற சிறுசிறு தொண்டுகள் செய்வதால் மனத்தில் அன்பு வளரும் தன்னலம் குறையும் ஆணவம் மறையும்.
3, குளிர்மின் கண்கள்: இறைவருடைய திருஉருவத்தைக் கண்டு கண்கள் குளிர வேண்டும் இதனால் நம்மிடம் உள்ள மிருகப் பண்பு குறையும் மனித நேயம் பெருகும்.
4,தேறுமின் சித்தம்: மனத்தை ஒரு நிலையில் நிறுத்துங்கள் என்பதை கவனிக்க வேண்டும் நாம். மனம் போகும் போக்கில் அலையவிடக் கூடாது, மனம் தான்மனிதனுடைய எல்லா செயல்களுக்கும் காரணம். அதை நம்கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்கிறார்,
5, தெளிமின் சிவனை: முழுமுதற் பொருள் எது என்பதில் ஒரு தெளிவு வேண்டும், பிறப்பும்இறப்பும் இல்லாதவரும் காலத்தை கடந்து நிற்பவரும் சிவபெருமானார்ஒருவரே என்பதில் தெளிவு வேண்டும்.
" சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடுஒப்பார் இங்கு யாவரும் இல்லை -- திருமூலர்
" அயனும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்றில்லை - திருமூலர்
இந்த தெளிவு இல்லாத பாமர மக்கள் சிறுதெய்வ வழிபாட்டில் சிக்கித் தவிப்பதை போலி வேடதாரிகளை நம்பி மோசம் போவதையும் இன்றை சூழ்நிலை. பெருந்தெய்வமான சிவபெருமானாரால் முடியாத ஒரு செயலை சிறுதெய்வங்கள் செய்து விட முடியாது என்னும் தெளிவு நமக்கு வேண்டும்.
6, செறுமின் செற்றம்: பகைமை உணர்வை நீக்க வேண்டும். பகைமை உணர்வுதான் இன்றைய காலத்தில் எல்லா கொடுமைகளுக்கும் காரணம் என்பதை நாம் அறிவோம். மனித இனம் மாதவ நிலையை அடைவதற்கு பெரும் தடையாக இருப்பது பகைமை உணர்வுதான். கணவன் மனைவியிடையே பிரிவு உற்றார் உறவினரிடையே சண்டை, சமுதாயத்தில் சண்டை மாநிலங்களுக்கிடையே சண்டை, மதவாதிகளிடையே சண்டை நாடுகளுக்கிடையே கடும் போர் ஆகிய யாவற்றிக்கும் காரணம் பகைமை உணர்வுதான்.ஆக சாதி,மதம்,மொழி, இனம் நாடு ஆகியவற்றால் மனித இனம் வேறபட காரணம் பகைமை உணர்வே.
7, ஆறுமின் வேட்கை : ஆசையை அடக்குங்கள் என்கிறார் நாயனார்
ஆசையுடையவன் விலங்கு
அன்புடையவன் மனிதன்
அருள் உடையவன் தேவன்
உரியது அல்லாதவற்றை விரும்புவது தான்மட்டும நலமாக வாழ வேண்டும் என எண்ணுவது ஆசையாகும், ஆசை வளர வளர மனித மனம் மிருகத்தன்மை அடையும் ஆசை மிகும் பொழுது நல்லது தீயது என்பதே தெரியாமல் போய்விடும்.
"ஈசனோடாயினும் ஆசையை அறுமின் - திருமூலர்
இவ்வுலக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இறைவழிபாடு கூடாது என்கிறார் திருமூலர்
பிறரை கெடுத்து தான் வாழ நினைக்க கூடாது இதனால் சமுதாய சீரழிவு ஏற்படும். இத்தகைய ஆசையை ஒழிக்க வேண்டும்.
8, அறுமின் அவலம்: துன்பத்திலிருந்து நீங்க வேண்டும், துன்பத்தில் முழ்கிவிடக் கூடாது. இன்பமும் துன்பமும் காட்டாற்று வெள்ளம் போல் விரைவில் நீங்கிவிடும்.
துன்பப்படுவதால் உடலில் நோய் பெருகும் வாழும் நாள் குறையும், இறைமை என்ற பேரின்ப வெள்ளத்திலிருந்து பிரிந்து வந்த ஒரு துளிதான் நாம். நமக்கு உள்ளும் புறமும் வள்ளலாய் இறைவர் விளங்குகிறார். விரைவில் நலம் பெறுவோம் என்று உறுதியாக நம்பினால் துன்பத்திலிருந்து விடுபடுவது எளிதே ஆகும்.
இதுபோன்ற கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு மட்டுமா பொருந்தும்? உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும், இத்தகைய கருத்துக்கள் சாதி,சமயம்,இனம், மொழி நாடு ஆகியவற்றை கடந்தவையல்லவா?
திருசிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
"கூறுமின் ஈசனைச் செய்மின் குற்றேவல் குளிர்மின் கண்கள்
தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின் செற்றம்
ஆறுமின் வேட்கை அறுமின் அவலம் இவை நெறியா
ஏறுமின் வானத்து இருமின் விருந்தாய் இமையவர்க்கே, --- பொன் வண்ணத்து அந்தாதி (தமிழ் வேதம் 11 )
தனிமனிதர்களின் தொகுப்பு அல்லது கூட்டம் தான் சமுதாயம் என்பது. வானுலகில் இன்புற்றிருப்பதற்கு உரிய வழி பொருளற்ற சடங்குகளும் சம்பிரதாயங்களும் இப்பாடலில் சொல்லப்படவில்லை என்பதை நாம் தெளிவாக கொள்ள வேண்டும்
சேரமான் பெருமாள் நாயனார் உடலுடன் கயிலையை அடைந்தவர். அவர் சொல்வதைத்தான் நாம் கொள்ள வேண்டும். அமெரிக்கா சென்றவர் சொல்லும் வழியைத்தான் அமெரிக்கா செல்ல இருப்பவர் கேட்க வேண்டும்.சமயக் கொள்கைகளை தங்களின் சுயலாபத்திற்காக வளைத்துக் கொண்டவர்களின் சொற்களை கேட்டு ஏமாந்து போகிறவர்கள் அப்பாவிகள்.
வளர்ந்த நாடுகளைவிட தமிழர்கள் ஆதிகாலம் தொட்டே உயர்ந்த பண்பாட்டுடனும், தனி மனித ஒழுக்கத்தை இறைவழிபாட்டுடன் இணைத்துக் கூறினார்கள் வாழ்ந்தும் காட்டினார்கள். காரணம் இறைவழிபாட்டினை மனித வாழ்விலிருந்து பிரித்து விடமுடியாது, இறையுணர்வு இல்லையானால் மனிதன் மிருகமாக வாழநேரிடும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் நமது சிவஞானியர்கள். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேரமான் பெருமான் நாயனார் தமிழகத்தில் மூவேந்தர்களில் சேரர் குடியில் தோன்றி சிவ வழிபாடு செய்து வந்தவர், இவருடைய சிவபூசையின் முடிவில் நடராசப் பெருமான் சிலம்பொலி கேட்கச் செய்தார். ஆழ்ந்த இறைபக்தியுடைய இப்பெருமானார் அருளியுள்ள இப்பாடலில் பொதிந்துள்ள தனி மனித ஒழுக்க கோட்பாடுகளைக்காண்போம்.
1,கூறுமின் ஈசனை: முழுமதற் பொருளாய் விளங்கும் சிவபெருமானாரைத் துதியுங்கள் பிற்ப்பும்,இறப்பும் இல்லா பெருந்தெய்வம் ஆகும். மற்றவையெல்லாம் சிறுதெய்வங்கள் எனப்படும், சிறு தெய்வங்கள் யாவும் பிறக்கும் இறக்கும் வேதனைப்படும் மேல்வினையும் செய்யும், ஒரு நாட்டிற்கு பிரதம மந்திர் இருப்பது போல அகில உலகங்களுக்கு எல்லாம் ஒரே கடவுள் தான். இரண்டு இல்லை, அந்த பிறப்பு இறப்பு இல்லாதவர் அவரே சிவம் என்கிறார், சிறுதெய்வ வழிபாடு மக்களிடையே பரவுமானால் உயர்ந்த பண்பாடு போய்விடும், சிறுதெய்வ வழிபாட்டால் உயிர்பலி இடுதல் போன்ற பண்பாடற்ற தலைதூக்கும் அதனாலேயே ஆரம்பத்திலேயே பெருந்தெய்வ வழிபாட்டைக் கூறியுள்ளார்.
2, செய்மின் குற்றேவல்: சிறு சிறு தொண்டுகளைச் செய்யச் சொல்கிறார். சிவாலயத்தை தூய்மை செய்தல், மலர் எடுத்தல் வலம் வருதல் போன்ற சிறுசிறு தொண்டுகள் செய்வதால் மனத்தில் அன்பு வளரும் தன்னலம் குறையும் ஆணவம் மறையும்.
3, குளிர்மின் கண்கள்: இறைவருடைய திருஉருவத்தைக் கண்டு கண்கள் குளிர வேண்டும் இதனால் நம்மிடம் உள்ள மிருகப் பண்பு குறையும் மனித நேயம் பெருகும்.
4,தேறுமின் சித்தம்: மனத்தை ஒரு நிலையில் நிறுத்துங்கள் என்பதை கவனிக்க வேண்டும் நாம். மனம் போகும் போக்கில் அலையவிடக் கூடாது, மனம் தான்மனிதனுடைய எல்லா செயல்களுக்கும் காரணம். அதை நம்கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்கிறார்,
5, தெளிமின் சிவனை: முழுமுதற் பொருள் எது என்பதில் ஒரு தெளிவு வேண்டும், பிறப்பும்இறப்பும் இல்லாதவரும் காலத்தை கடந்து நிற்பவரும் சிவபெருமானார்ஒருவரே என்பதில் தெளிவு வேண்டும்.
" சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடுஒப்பார் இங்கு யாவரும் இல்லை -- திருமூலர்
" அயனும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்றில்லை - திருமூலர்
இந்த தெளிவு இல்லாத பாமர மக்கள் சிறுதெய்வ வழிபாட்டில் சிக்கித் தவிப்பதை போலி வேடதாரிகளை நம்பி மோசம் போவதையும் இன்றை சூழ்நிலை. பெருந்தெய்வமான சிவபெருமானாரால் முடியாத ஒரு செயலை சிறுதெய்வங்கள் செய்து விட முடியாது என்னும் தெளிவு நமக்கு வேண்டும்.
6, செறுமின் செற்றம்: பகைமை உணர்வை நீக்க வேண்டும். பகைமை உணர்வுதான் இன்றைய காலத்தில் எல்லா கொடுமைகளுக்கும் காரணம் என்பதை நாம் அறிவோம். மனித இனம் மாதவ நிலையை அடைவதற்கு பெரும் தடையாக இருப்பது பகைமை உணர்வுதான். கணவன் மனைவியிடையே பிரிவு உற்றார் உறவினரிடையே சண்டை, சமுதாயத்தில் சண்டை மாநிலங்களுக்கிடையே சண்டை, மதவாதிகளிடையே சண்டை நாடுகளுக்கிடையே கடும் போர் ஆகிய யாவற்றிக்கும் காரணம் பகைமை உணர்வுதான்.ஆக சாதி,மதம்,மொழி, இனம் நாடு ஆகியவற்றால் மனித இனம் வேறபட காரணம் பகைமை உணர்வே.
7, ஆறுமின் வேட்கை : ஆசையை அடக்குங்கள் என்கிறார் நாயனார்
ஆசையுடையவன் விலங்கு
அன்புடையவன் மனிதன்
அருள் உடையவன் தேவன்
உரியது அல்லாதவற்றை விரும்புவது தான்மட்டும நலமாக வாழ வேண்டும் என எண்ணுவது ஆசையாகும், ஆசை வளர வளர மனித மனம் மிருகத்தன்மை அடையும் ஆசை மிகும் பொழுது நல்லது தீயது என்பதே தெரியாமல் போய்விடும்.
"ஈசனோடாயினும் ஆசையை அறுமின் - திருமூலர்
இவ்வுலக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இறைவழிபாடு கூடாது என்கிறார் திருமூலர்
பிறரை கெடுத்து தான் வாழ நினைக்க கூடாது இதனால் சமுதாய சீரழிவு ஏற்படும். இத்தகைய ஆசையை ஒழிக்க வேண்டும்.
8, அறுமின் அவலம்: துன்பத்திலிருந்து நீங்க வேண்டும், துன்பத்தில் முழ்கிவிடக் கூடாது. இன்பமும் துன்பமும் காட்டாற்று வெள்ளம் போல் விரைவில் நீங்கிவிடும்.
துன்பப்படுவதால் உடலில் நோய் பெருகும் வாழும் நாள் குறையும், இறைமை என்ற பேரின்ப வெள்ளத்திலிருந்து பிரிந்து வந்த ஒரு துளிதான் நாம். நமக்கு உள்ளும் புறமும் வள்ளலாய் இறைவர் விளங்குகிறார். விரைவில் நலம் பெறுவோம் என்று உறுதியாக நம்பினால் துன்பத்திலிருந்து விடுபடுவது எளிதே ஆகும்.
இதுபோன்ற கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு மட்டுமா பொருந்தும்? உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும், இத்தகைய கருத்துக்கள் சாதி,சமயம்,இனம், மொழி நாடு ஆகியவற்றை கடந்தவையல்லவா?
திருசிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
தென்னாடுடைய சிவனே
நீக்கமற எங்கும் நிறைந்துள்ள ஈசா! உன்னை நான் தென்னாட்டில் சிறப்பாக காண்கிறேன். அத்தகைய உன்னை வணங்குகிறேன் , சகல லோகங்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் பரம சுகத்தைத் தந்தருளும் பரமேசுவரன் உலக ரக்ஷண்யத்துக்காக திருசூலத்தைத் தாங்கி நிற்கும் முக்கண்ணன் - வேத முதல்வன் - வினைதீர்க்கும்தயாபரன் - திருசடைப் பெருமாரான கயிலை மலை வாசனின் பனிமலர்த் திருவடிகளுக்கு அநேக கோடி தண்டம் சமர்ப்பிக்கிறேன். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரம் பொருள் - எல்லாம் அறிந்த கருணை வள்ளல் - தாண்டவம் ஆடிடும் ஆண்டவன் - தண்டைச் சீலம் பணிந்த சேவடிக் கமலங் களைத் தஞ்சம் கிடந்து அநேக கோடி தண்டம் சமர்ப்பிக்கிறேன், மூன்று திருநயனங்கள் - நான்கு திருத் தோள்கள் செளந்திரய வதனம் - நாகாபரணம் - திருவெண்ணிறு பொலியும் திருமேனி - ருத்ராட்ச மாலைகள் துலங்கும் திருத்தோற்றம் பூண்டு விளங்கும் ஸ்ரீசிவசக்தி சொருபனுக்கு சரணம்! சரணம்!!
நமச்சிவாய எனும் ஐந்து எழுத்து மந்திரத்தை இடையறாது தியானித்தால், திருவெண்ணீறு , ருட்ராட்சம் அணிதல் - இவை அனைத்தும் நமக்கு சகல மங்களகளையும் பொங்கச் செய்கின்றன,மங்களம் என்றாலே சிவம் - சிவம் என்றாலே மங்களம், சிவம் என்றாலே அன்பு - அன்பே சிவம், சிவநாமம், சிவ சிந்தனை சிவ வழிபாடு நமக்கு சுகமான வாழ்வைத்தருவதற்கு அருள் செய்கிறது. சிவன் எல்லா உலகங்களுக்கும் முதல்வன் திரிகரணங்களுக்கு எட்டாதவன் திரபுரம் எரித்தவன், அவன் அம்பலத்தாடுபவன், ஆனந்த சொரூபன். சங்கர நாராயணனாக எழுந்தருளி ஹரியும் சிவமும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் எம்பெருமான் " சக்தியும் சிவனும் " ஒன்றே எனும் தத்துவத்தையும் உலகிற்கு உணர்த்துவதற்காகவே அர்த்த நாரீசுவராக தோற்றமளித்தவன்.
எல்லாம் சிவமயம் எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம் ! நான் முகனும் அவனே நாராயணனும் அவனே! சக்தியும் அவனே! சிவனும் அவனே!
மகேஸ்வரியே மகா மாயாசக்தியாக விளங்குகிறாள், மகேசனே மகாதேவனாக விளங்குகிறான், அவள் சங்கரனுக்கு ப்ரியம் ஊட்டும் சிவகாம சுந்தரி! சர்வ பூதங்களுக்கும் ஆதாரமானவள், அவன் பஞ்ச பூதங்களிலும் வியாபித்தவன்! உயிரும் உடலும் இணைந்தது வாழ்க்கை! உயிர் தத்துவம் சிவம்! உடல் தத்துவம் சக்தி! உடல் இல்லையேல் உயிர் இல்லை, இதுவே சிவசக்தி சொரூபத்தின் மெய்ஞான விளக்கம்! அவள் மஹிஷாசுரனை மர்த்தனம் செய்தவள், இவன் பஞ்ச சபையில் நர்த்தனம் புரிபவன், அவள் அலங்கார அம்பிகை! இவன் அபிசேக பிரியன்! ஆடை ஆபரணம் எதுவும் இன்றி பிக்ஷாண்டவராகி முனிவர்தம் பக்தியை பரிசீத்தவன், அவளோ அன்ன பூரணியாக எழுந்தருளி நமக்கு அன்னத்தை அள்ளித்தருபவள், சிவன் அப்பன், அவள் அம்மை, இருவரும் நம்மை எல்லாம் காத்தருளும் அம்மை அப்பன் - அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்! சிவன் மகேஸ்வரன் இவள் மகாமாயை! அவன் மயான பூமியின் சிவமணி - இவள் மனோண்மணி! எட்டு திருத்தலங்களில் சிவபெருமான் ஆணவத்தை அடக்கும் ருத்திரமூர்த்தியாக காட்சி தருகிறார், சக்தியோ அந்த எட்டு திருத்தலங்களில் சிவனுடன் சேர்ந்து அருள் வடிவமான அம்பிகையாக எழுந்தருளி நம்மை காத்து வருகிறாள். திருசடை பெருமான் ஜலந்தராசுரனை கால் கட்டை விரலால் சம்கரித்து தேவர்களைக் காத்த இடம் திருவிற்குடி , இங்கே அம்மன் ஏலவார் குழலியாக எழுந்தருளி சிவசக்தியாக பக்தர்களுக்கு அருளி வருகிறாள், எம்பெருமான் மன்மதனை எரித்த திருக்குறுகை திருத்தலம், அங்கே சம்கார மூர்த்தியின் சக்தியாக ஞானம்பிகை எனும் நாமத்தில் ருத்திரமாகாளியாகஅருட்கோலம் காட்டுகிறாள், இவ்வாறு அங்கிங்கெனாதபடி எங்கும் சிவசக்தி சொரூபமாகவே அருட்காட்சி தருகின்றனர்,
திருச்சிற்றம்பலம்- தென்னாடுடைய சிவனே போற்றி
மேலும் ஆன்மீகத் தேடல்களுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
நீக்கமற எங்கும் நிறைந்துள்ள ஈசா! உன்னை நான் தென்னாட்டில் சிறப்பாக காண்கிறேன். அத்தகைய உன்னை வணங்குகிறேன் , சகல லோகங்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் பரம சுகத்தைத் தந்தருளும் பரமேசுவரன் உலக ரக்ஷண்யத்துக்காக திருசூலத்தைத் தாங்கி நிற்கும் முக்கண்ணன் - வேத முதல்வன் - வினைதீர்க்கும்தயாபரன் - திருசடைப் பெருமாரான கயிலை மலை வாசனின் பனிமலர்த் திருவடிகளுக்கு அநேக கோடி தண்டம் சமர்ப்பிக்கிறேன். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரம் பொருள் - எல்லாம் அறிந்த கருணை வள்ளல் - தாண்டவம் ஆடிடும் ஆண்டவன் - தண்டைச் சீலம் பணிந்த சேவடிக் கமலங் களைத் தஞ்சம் கிடந்து அநேக கோடி தண்டம் சமர்ப்பிக்கிறேன், மூன்று திருநயனங்கள் - நான்கு திருத் தோள்கள் செளந்திரய வதனம் - நாகாபரணம் - திருவெண்ணிறு பொலியும் திருமேனி - ருத்ராட்ச மாலைகள் துலங்கும் திருத்தோற்றம் பூண்டு விளங்கும் ஸ்ரீசிவசக்தி சொருபனுக்கு சரணம்! சரணம்!!
நமச்சிவாய எனும் ஐந்து எழுத்து மந்திரத்தை இடையறாது தியானித்தால், திருவெண்ணீறு , ருட்ராட்சம் அணிதல் - இவை அனைத்தும் நமக்கு சகல மங்களகளையும் பொங்கச் செய்கின்றன,மங்களம் என்றாலே சிவம் - சிவம் என்றாலே மங்களம், சிவம் என்றாலே அன்பு - அன்பே சிவம், சிவநாமம், சிவ சிந்தனை சிவ வழிபாடு நமக்கு சுகமான வாழ்வைத்தருவதற்கு அருள் செய்கிறது. சிவன் எல்லா உலகங்களுக்கும் முதல்வன் திரிகரணங்களுக்கு எட்டாதவன் திரபுரம் எரித்தவன், அவன் அம்பலத்தாடுபவன், ஆனந்த சொரூபன். சங்கர நாராயணனாக எழுந்தருளி ஹரியும் சிவமும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் எம்பெருமான் " சக்தியும் சிவனும் " ஒன்றே எனும் தத்துவத்தையும் உலகிற்கு உணர்த்துவதற்காகவே அர்த்த நாரீசுவராக தோற்றமளித்தவன்.
எல்லாம் சிவமயம் எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம் ! நான் முகனும் அவனே நாராயணனும் அவனே! சக்தியும் அவனே! சிவனும் அவனே!
மகேஸ்வரியே மகா மாயாசக்தியாக விளங்குகிறாள், மகேசனே மகாதேவனாக விளங்குகிறான், அவள் சங்கரனுக்கு ப்ரியம் ஊட்டும் சிவகாம சுந்தரி! சர்வ பூதங்களுக்கும் ஆதாரமானவள், அவன் பஞ்ச பூதங்களிலும் வியாபித்தவன்! உயிரும் உடலும் இணைந்தது வாழ்க்கை! உயிர் தத்துவம் சிவம்! உடல் தத்துவம் சக்தி! உடல் இல்லையேல் உயிர் இல்லை, இதுவே சிவசக்தி சொரூபத்தின் மெய்ஞான விளக்கம்! அவள் மஹிஷாசுரனை மர்த்தனம் செய்தவள், இவன் பஞ்ச சபையில் நர்த்தனம் புரிபவன், அவள் அலங்கார அம்பிகை! இவன் அபிசேக பிரியன்! ஆடை ஆபரணம் எதுவும் இன்றி பிக்ஷாண்டவராகி முனிவர்தம் பக்தியை பரிசீத்தவன், அவளோ அன்ன பூரணியாக எழுந்தருளி நமக்கு அன்னத்தை அள்ளித்தருபவள், சிவன் அப்பன், அவள் அம்மை, இருவரும் நம்மை எல்லாம் காத்தருளும் அம்மை அப்பன் - அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்! சிவன் மகேஸ்வரன் இவள் மகாமாயை! அவன் மயான பூமியின் சிவமணி - இவள் மனோண்மணி! எட்டு திருத்தலங்களில் சிவபெருமான் ஆணவத்தை அடக்கும் ருத்திரமூர்த்தியாக காட்சி தருகிறார், சக்தியோ அந்த எட்டு திருத்தலங்களில் சிவனுடன் சேர்ந்து அருள் வடிவமான அம்பிகையாக எழுந்தருளி நம்மை காத்து வருகிறாள். திருசடை பெருமான் ஜலந்தராசுரனை கால் கட்டை விரலால் சம்கரித்து தேவர்களைக் காத்த இடம் திருவிற்குடி , இங்கே அம்மன் ஏலவார் குழலியாக எழுந்தருளி சிவசக்தியாக பக்தர்களுக்கு அருளி வருகிறாள், எம்பெருமான் மன்மதனை எரித்த திருக்குறுகை திருத்தலம், அங்கே சம்கார மூர்த்தியின் சக்தியாக ஞானம்பிகை எனும் நாமத்தில் ருத்திரமாகாளியாகஅருட்கோலம் காட்டுகிறாள், இவ்வாறு அங்கிங்கெனாதபடி எங்கும் சிவசக்தி சொரூபமாகவே அருட்காட்சி தருகின்றனர்,
திருச்சிற்றம்பலம்- தென்னாடுடைய சிவனே போற்றி
மேலும் ஆன்மீகத் தேடல்களுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
தமிழ் வேதத்தில் "நலம் பெறும் வழி "
நலம் தரும் பஞ்சாசரத்தினை அனுதினமும் ஐம்பொறிகளாலும் உந்தச் செய்து வந்தாலே நாளும் நாமும் நலம்பெறுவது நிச்சயமே, " சிவன் அவன் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே" அவன் திருத்தாழ் வணங்க முடியும், காலையில் எழுந்தவுடன் நமது அடிப்படை அனுதினமும் செய்கின்ற பணிகளை செய்யும் போதே, அவனை மெய் என்னும் மனத்தால் நினைத்து, பூக்ககை கொண்டு பொன்னடிகளை தவறாமல் போற்றியும், கண்ணால் அவன் திருமேனியினை கண்டு களிப்புற்று, வாயினால் அவனது நாமத்தை (சிவாயநம ) பாடியும், செவிகளால் மற்றவர்கள் அவன் புகழைப்பாடுவதைக் கேட்டும், நாளும் நம்மையறியாமலே அனிச்சச் செயலாக செய்ய பழகிக் கொண்டோமானால் " அவன் அருளாலே அவன் தாள் வணங்கி " இப்பிறப்பின் பயனை முழுவதுமாக அடையலாம், நம் மெய் என்னும் உடம்பை வளர்க்க தினமும் உழைக்கிறோம், உண்கிறோம், அது போன்றே இதனையும் நமது கடமையில் ஒன்றாக கொள்ளவேண்டும், சிவ பெருமானாரை நம்முடைய மனத்தில் இருத்தி தியானிக்க வேண்டும், அப்படி செய்து வந்தால் அவருடைய திருவருள் நம் மீது விழும், தாகம் வந்தால் தண்ணீர் பருகிறோம், வெயிலில் வந்தால் மரத்தின் நிழலை நோக்கிறோம், இது இயல்பாகவே நம்மை மறந்து செயல்படுவது, அதுபோல் துன்பம் வரும்போது அவன் அருளை பெற அவனிடம் அடைக்கலம் அடைதல் வேண்டும், " தேடி சென்று திருந்தடி ஏத்துமின் நாடி வந்தவர் நம்மையும்ஆட்கொள்வார்" என்கிறார் அப்பர் பெருமானார்,
"நாடும் நகரமும் நல்திருக்போயிலும்
தேடித் திரிந்து சிவபெருமான் என்று
பாடுமின் பாடிப்பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே. " திருமந்திரம்
இந்த பாடல்களை நன்கு சிந்தித்தால் உண்மை விளங்கும், நம் தேவைக்கு ஏற்றபடி சிந்தனையை ஓடவிடக் கூடாது, பொருள் சம்பாதிப்பதில் இப்படி நாம் இருப்பதில்லையே, இறைவழிபாடு என்று சொல்லும் போது அதற்கு நேரம் இல்லை என கூறி உதாசீனப் படுத்துகிறோம், உண்ணும் உணவிற்கும், தேடும் பொருளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நாம் நம்மை இயக்கும் இறைவனை நினைத்து மனம் உருகுவதில்லை, ஆக்கைகே ( உணவு) தேடி அலைந்துத் திரிந்தோமானால் முடிவில் காக்கைக்கே ( உணவு) யாகிக் கழிய வேண்டியிருக்கும்,
"மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
என்கந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசேர!
,,,,,,, ஓம் நமசிவாய ஓம் ------- சிவவாக்கியர் சித்தர் பாடல்
மேலே கண்ட பாடல் வரிகளின் படி வெண்கல பாத்திரத்திற்கும் , மண் பாத்திரத்திற்கும் உள்ள மரியாதை பாதுகாப்பு எண்சான் உடம்பாகிய இந்த பாத்திரத்திற்கு உயிர் எனும் அதிலுள்ள பொருள் விலகிவிட்டால் நாறமென்றும் , அந்த பிணத்தை சற்றும் வைத்திராது உடனே அப்புறப்படுத்த முயல்கிறோம்,
இந்த மனித வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது தான், இதை மாற்ற முடியாதுதான், இருப்பினும் இறைவருடைய திருநாமத்தை சொல்லிக் கொண்டே துன்பங்களை தாங்கிக் கொண்டு இறைவழிபாடும் நம் அன்றாட செயல்முறைகளில் ஒன்றாக கொண்டு செயல்பட வேண்டும்,
எனவே நித்தமும் நாம் நம் ஐம்புலன்காளால் சிந்தித்து, சித்தத்தை சிவன்பால் வைத்து, சேவை செய்து நாளும் வழிபாடு செய்வதுதான் நலம் பெறும் வழியாகும்,
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீக செய்திகளுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
நலம் தரும் பஞ்சாசரத்தினை அனுதினமும் ஐம்பொறிகளாலும் உந்தச் செய்து வந்தாலே நாளும் நாமும் நலம்பெறுவது நிச்சயமே, " சிவன் அவன் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே" அவன் திருத்தாழ் வணங்க முடியும், காலையில் எழுந்தவுடன் நமது அடிப்படை அனுதினமும் செய்கின்ற பணிகளை செய்யும் போதே, அவனை மெய் என்னும் மனத்தால் நினைத்து, பூக்ககை கொண்டு பொன்னடிகளை தவறாமல் போற்றியும், கண்ணால் அவன் திருமேனியினை கண்டு களிப்புற்று, வாயினால் அவனது நாமத்தை (சிவாயநம ) பாடியும், செவிகளால் மற்றவர்கள் அவன் புகழைப்பாடுவதைக் கேட்டும், நாளும் நம்மையறியாமலே அனிச்சச் செயலாக செய்ய பழகிக் கொண்டோமானால் " அவன் அருளாலே அவன் தாள் வணங்கி " இப்பிறப்பின் பயனை முழுவதுமாக அடையலாம், நம் மெய் என்னும் உடம்பை வளர்க்க தினமும் உழைக்கிறோம், உண்கிறோம், அது போன்றே இதனையும் நமது கடமையில் ஒன்றாக கொள்ளவேண்டும், சிவ பெருமானாரை நம்முடைய மனத்தில் இருத்தி தியானிக்க வேண்டும், அப்படி செய்து வந்தால் அவருடைய திருவருள் நம் மீது விழும், தாகம் வந்தால் தண்ணீர் பருகிறோம், வெயிலில் வந்தால் மரத்தின் நிழலை நோக்கிறோம், இது இயல்பாகவே நம்மை மறந்து செயல்படுவது, அதுபோல் துன்பம் வரும்போது அவன் அருளை பெற அவனிடம் அடைக்கலம் அடைதல் வேண்டும், " தேடி சென்று திருந்தடி ஏத்துமின் நாடி வந்தவர் நம்மையும்ஆட்கொள்வார்" என்கிறார் அப்பர் பெருமானார்,
"நாடும் நகரமும் நல்திருக்போயிலும்
தேடித் திரிந்து சிவபெருமான் என்று
பாடுமின் பாடிப்பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே. " திருமந்திரம்
இந்த பாடல்களை நன்கு சிந்தித்தால் உண்மை விளங்கும், நம் தேவைக்கு ஏற்றபடி சிந்தனையை ஓடவிடக் கூடாது, பொருள் சம்பாதிப்பதில் இப்படி நாம் இருப்பதில்லையே, இறைவழிபாடு என்று சொல்லும் போது அதற்கு நேரம் இல்லை என கூறி உதாசீனப் படுத்துகிறோம், உண்ணும் உணவிற்கும், தேடும் பொருளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நாம் நம்மை இயக்கும் இறைவனை நினைத்து மனம் உருகுவதில்லை, ஆக்கைகே ( உணவு) தேடி அலைந்துத் திரிந்தோமானால் முடிவில் காக்கைக்கே ( உணவு) யாகிக் கழிய வேண்டியிருக்கும்,
"மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
என்கந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசேர!
,,,,,,, ஓம் நமசிவாய ஓம் ------- சிவவாக்கியர் சித்தர் பாடல்
மேலே கண்ட பாடல் வரிகளின் படி வெண்கல பாத்திரத்திற்கும் , மண் பாத்திரத்திற்கும் உள்ள மரியாதை பாதுகாப்பு எண்சான் உடம்பாகிய இந்த பாத்திரத்திற்கு உயிர் எனும் அதிலுள்ள பொருள் விலகிவிட்டால் நாறமென்றும் , அந்த பிணத்தை சற்றும் வைத்திராது உடனே அப்புறப்படுத்த முயல்கிறோம்,
இந்த மனித வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது தான், இதை மாற்ற முடியாதுதான், இருப்பினும் இறைவருடைய திருநாமத்தை சொல்லிக் கொண்டே துன்பங்களை தாங்கிக் கொண்டு இறைவழிபாடும் நம் அன்றாட செயல்முறைகளில் ஒன்றாக கொண்டு செயல்பட வேண்டும்,
எனவே நித்தமும் நாம் நம் ஐம்புலன்காளால் சிந்தித்து, சித்தத்தை சிவன்பால் வைத்து, சேவை செய்து நாளும் வழிபாடு செய்வதுதான் நலம் பெறும் வழியாகும்,
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீக செய்திகளுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருமுறைகளில் வாழ்வியல் - வாழும் வழி
திருநாவுக்கரசு சுவாமிகள் நாமெல்லாம் கடைத்தேறுவதற்கு ஓர் உபாயம் கூறியுள்ளார், மனிதப் பிறப்பெடுத்து வாழ்வதற்கு மட்டுமல்லை. இனிப் பிறவாமையை பெறுவதற்கே ஆகும், இந்த நோக்கமே தெரியாமல் மிகப்பலர் வாழ்ந்து வருகின்றனர்,
மெய்யுள்ளே விளக்கை யேற்றி வேண்டள வுயரத் தூண்டி
உண்வதோர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சாலச்
செய்வது ஒன்றறிய மாட்டேன் திருப்புகலூர னீரே, - நாவுக்கரசர் பதிகம் ,த,வே, 4
திருப்புகலூரில் எழுந்தருளியுள்ள இறைவரே ! "உடம்பினுள்ளே விளக்கை ( அருள் என்னும் விளக்கு) ஏற்றி வேண்டும்அளவிற்கு அவ்விளக்கினை தூண்டி ( அருள்மயமாதல்) பிறவாமையைப் பெறலாம் என்று முயல் கின்றேன், ஆனால் மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து பொறிகளை உடம்பில் வைத்துள்ளீர், ஐம்பொறிகளாகிய அவர்கள் மிக வலிமை உடையவர்களாக இருக்கிறார்கள், என்ன செய்வது என்று புரியவில்லை " என்கிறார்,
இதனை ஓர் உதராணத்தின் மூலம் தெளியலாம் உடம்பு என்பது வீடு, இவ்வீட்டிற்கு மெய், வாய், கண், மூக்கு , செவி எனப்படும் ஐந்து சன்னல்கள் உள்ளன, உலக ஆசை என்னும் காற்று ஐந்து பொறிகளின் வழியே மனம் என்னும் அறையில் ஏற்றப்பட்டுள்ள "அருள்" என்னும் விளக்கை தொடர்ந்து எரிய விடாமல் செய்கின்றது, நான் எப்படி நலம் பெறுவது, என்று திருப்புகலூர் பெருமானாகிய தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும்,
பசி, தாகம், இச்சை, பயம் ஆகியவற்றால் பிற உயிர்கள் துன்படுவதைக் கண்ணால் கண்ட பொழுதும், காதால் கேட்ட பொழுதும், நம் உள்ளத்தால் உண்டாகும் இரக்கம், அல்லது கருணையைத் தான் அருள் என்கிறோம்,
நான், எனது என்னும் பற்றினால் மனம் கல்லாக இருக்குமானால், அருள் உணர்வு அல்லது இரக்க குணம் தோன்றாது, அருள் உணர்வை அல்லது இரக்க குணத்தைத்தான் அருள் விளக்கு என்கின்றார், பட்டினத்து அடிகள், இக்குணம் உடையவர்களே சிவபெருமானாருடைய திருவருளைப் பெற முடியும் என்கின்றனர், இறையருள் பெற்ற சிவஞானியர்கள்,
"ஈரநெஞ்சினர் காண்பர் இணையடி - திருமூலர்
"அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல்" - திருக்குறள்
"அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை " - குறள்
அருள் கண் இல்லார்க்கு அரும் பொருள் தோன்றா - திருமூலர்
அருள் , இரக்கம், ஈரம், கருணை, பரிவு , தயவு, உருக்கம், ஆகிய சொற்கள் ஒரே பொருளில் கையாளப்பட்டு வருவதை நாம் அறியலாம்,
அருள் உணர்வு அல்லது இரக்க குணம் நம் மனத்தில் தோன்றும் பல நேரங்களில் ஆசையின் காரணமாக இக்குணம் வளர்ச்சியடைவதில்லை.
பிற உயிர்கள் பல காரணங்களால் துன்பப்படுகின்றன என்று கண்ணால் பார்த்த பொழுதும், காதால் கேட்ட பொழுதும் நம் உள்ளத்தில் தயவு அல்லது கருணை ஏற்படுபதைத்தான் " உள்ளம் உருகுதல் " அகம் குழைதல் என்கிறோம்.
உருகிய தங்கத்தில் கல்பதியும், உருகிய வெண்ணெயிலிருந்து வாசனை வெளிப்படும், உள்ளம் உருகினால் இறைவருடைய திருவடி பதியும்,
" நஞ்சுண்ணப் பொலிந்த மிடற்றினார்
உள்ளம் உருகில் உடனாவார்," -- ஞான சம்பந்தர் த,வே, 2, பதிகம் 111
தான் கெட்டாலும் பிறர் வாழ வேண்டும் என்று எண்ணும் நிலைதான் "அருள்" உடையவர்களின் தன்மை, ஆசையுடையவர்கட்கு இந்த அருள் உடையவராகத் திகழும் நிலை அமைவதில்லை.
ஆசை என்னும் பெருஙகாற்று மனத்திற்குள் நுழைவதற்குரிய வாயில்கள்தான் ஐம்பொறிகள், இவற்றை அடக்கினால் ஆசை என்னும் காற்று உள்ளே நுழைய முடியாது, இதற்கு வழிதான் என் என்று காண்போம்,
1, நம்முடைய ஐந்து பொறி புலன்களை வெல்ல வேண்டும், அல்லது நல்வழியில் செலுத்த வேண்டும், என்றால் புலன்களை வென்ற சான்றோர்களுடன் மட்டுமே பழக வேண்டும் என்கிறார் நாவுக்கரசர்
2, பதினோராம் திருமுறையில் பட்டினத்தடிகள் கூறியுள்ளதைக் காண்போம்,
கருமுதல் தொடங்கி பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனும்
தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறன்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அருள்நனி சுரக்கும் பிரள விடங்க நின்
செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற
அமையாக் காட்சி இமையக்
கொழுந்தையும்உடனே கொண்டிங்கு
எழுந்தருளத் தகும் எம்பெருமானே, - திருக்கழுமலை மும்மணிக்கோவை
நமது மனம் எனும் அறையில் காலங்காலமாக உள்ள குப்பைகளான ஆசை, கோபம், பொய், பொறாமை, களவு, முதலியனவற்றை நீக்க வேண்டும்,
மெய் வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிப்புலங்களை அவற்றின் வழியே செல்லவிடாது நல்லனவற்றில் செலுத்த வேண்டும்,
மனம் எனும் அறையை அன்பு எனும் சாணம் கொண்டு மெழுக வேண்டும், அன்பு தான் அல்லாத தன்மையாகும், அதாவது சுயநலமில்லாமையே அன்புடைடயவர்களின் இயல்பாகும், அருள் அல்லது இரக்கம் எனும் விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும்,
கொடுக்க கூடிய மனம் உண்டானால் கொடுக்கக்கூடிய வாய்ப்பை இறைவர் அளிப்பார்
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ்வேதம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருநாவுக்கரசு சுவாமிகள் நாமெல்லாம் கடைத்தேறுவதற்கு ஓர் உபாயம் கூறியுள்ளார், மனிதப் பிறப்பெடுத்து வாழ்வதற்கு மட்டுமல்லை. இனிப் பிறவாமையை பெறுவதற்கே ஆகும், இந்த நோக்கமே தெரியாமல் மிகப்பலர் வாழ்ந்து வருகின்றனர்,
மெய்யுள்ளே விளக்கை யேற்றி வேண்டள வுயரத் தூண்டி
உண்வதோர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சாலச்
செய்வது ஒன்றறிய மாட்டேன் திருப்புகலூர னீரே, - நாவுக்கரசர் பதிகம் ,த,வே, 4
திருப்புகலூரில் எழுந்தருளியுள்ள இறைவரே ! "உடம்பினுள்ளே விளக்கை ( அருள் என்னும் விளக்கு) ஏற்றி வேண்டும்அளவிற்கு அவ்விளக்கினை தூண்டி ( அருள்மயமாதல்) பிறவாமையைப் பெறலாம் என்று முயல் கின்றேன், ஆனால் மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து பொறிகளை உடம்பில் வைத்துள்ளீர், ஐம்பொறிகளாகிய அவர்கள் மிக வலிமை உடையவர்களாக இருக்கிறார்கள், என்ன செய்வது என்று புரியவில்லை " என்கிறார்,
இதனை ஓர் உதராணத்தின் மூலம் தெளியலாம் உடம்பு என்பது வீடு, இவ்வீட்டிற்கு மெய், வாய், கண், மூக்கு , செவி எனப்படும் ஐந்து சன்னல்கள் உள்ளன, உலக ஆசை என்னும் காற்று ஐந்து பொறிகளின் வழியே மனம் என்னும் அறையில் ஏற்றப்பட்டுள்ள "அருள்" என்னும் விளக்கை தொடர்ந்து எரிய விடாமல் செய்கின்றது, நான் எப்படி நலம் பெறுவது, என்று திருப்புகலூர் பெருமானாகிய தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும்,
பசி, தாகம், இச்சை, பயம் ஆகியவற்றால் பிற உயிர்கள் துன்படுவதைக் கண்ணால் கண்ட பொழுதும், காதால் கேட்ட பொழுதும், நம் உள்ளத்தால் உண்டாகும் இரக்கம், அல்லது கருணையைத் தான் அருள் என்கிறோம்,
நான், எனது என்னும் பற்றினால் மனம் கல்லாக இருக்குமானால், அருள் உணர்வு அல்லது இரக்க குணம் தோன்றாது, அருள் உணர்வை அல்லது இரக்க குணத்தைத்தான் அருள் விளக்கு என்கின்றார், பட்டினத்து அடிகள், இக்குணம் உடையவர்களே சிவபெருமானாருடைய திருவருளைப் பெற முடியும் என்கின்றனர், இறையருள் பெற்ற சிவஞானியர்கள்,
"ஈரநெஞ்சினர் காண்பர் இணையடி - திருமூலர்
"அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல்" - திருக்குறள்
"அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை " - குறள்
அருள் கண் இல்லார்க்கு அரும் பொருள் தோன்றா - திருமூலர்
அருள் , இரக்கம், ஈரம், கருணை, பரிவு , தயவு, உருக்கம், ஆகிய சொற்கள் ஒரே பொருளில் கையாளப்பட்டு வருவதை நாம் அறியலாம்,
அருள் உணர்வு அல்லது இரக்க குணம் நம் மனத்தில் தோன்றும் பல நேரங்களில் ஆசையின் காரணமாக இக்குணம் வளர்ச்சியடைவதில்லை.
பிற உயிர்கள் பல காரணங்களால் துன்பப்படுகின்றன என்று கண்ணால் பார்த்த பொழுதும், காதால் கேட்ட பொழுதும் நம் உள்ளத்தில் தயவு அல்லது கருணை ஏற்படுபதைத்தான் " உள்ளம் உருகுதல் " அகம் குழைதல் என்கிறோம்.
உருகிய தங்கத்தில் கல்பதியும், உருகிய வெண்ணெயிலிருந்து வாசனை வெளிப்படும், உள்ளம் உருகினால் இறைவருடைய திருவடி பதியும்,
" நஞ்சுண்ணப் பொலிந்த மிடற்றினார்
உள்ளம் உருகில் உடனாவார்," -- ஞான சம்பந்தர் த,வே, 2, பதிகம் 111
தான் கெட்டாலும் பிறர் வாழ வேண்டும் என்று எண்ணும் நிலைதான் "அருள்" உடையவர்களின் தன்மை, ஆசையுடையவர்கட்கு இந்த அருள் உடையவராகத் திகழும் நிலை அமைவதில்லை.
ஆசை என்னும் பெருஙகாற்று மனத்திற்குள் நுழைவதற்குரிய வாயில்கள்தான் ஐம்பொறிகள், இவற்றை அடக்கினால் ஆசை என்னும் காற்று உள்ளே நுழைய முடியாது, இதற்கு வழிதான் என் என்று காண்போம்,
1, நம்முடைய ஐந்து பொறி புலன்களை வெல்ல வேண்டும், அல்லது நல்வழியில் செலுத்த வேண்டும், என்றால் புலன்களை வென்ற சான்றோர்களுடன் மட்டுமே பழக வேண்டும் என்கிறார் நாவுக்கரசர்
2, பதினோராம் திருமுறையில் பட்டினத்தடிகள் கூறியுள்ளதைக் காண்போம்,
கருமுதல் தொடங்கி பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனும்
தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறன்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அருள்நனி சுரக்கும் பிரள விடங்க நின்
செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற
அமையாக் காட்சி இமையக்
கொழுந்தையும்உடனே கொண்டிங்கு
எழுந்தருளத் தகும் எம்பெருமானே, - திருக்கழுமலை மும்மணிக்கோவை
நமது மனம் எனும் அறையில் காலங்காலமாக உள்ள குப்பைகளான ஆசை, கோபம், பொய், பொறாமை, களவு, முதலியனவற்றை நீக்க வேண்டும்,
மெய் வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிப்புலங்களை அவற்றின் வழியே செல்லவிடாது நல்லனவற்றில் செலுத்த வேண்டும்,
மனம் எனும் அறையை அன்பு எனும் சாணம் கொண்டு மெழுக வேண்டும், அன்பு தான் அல்லாத தன்மையாகும், அதாவது சுயநலமில்லாமையே அன்புடைடயவர்களின் இயல்பாகும், அருள் அல்லது இரக்கம் எனும் விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும்,
கொடுக்க கூடிய மனம் உண்டானால் கொடுக்கக்கூடிய வாய்ப்பை இறைவர் அளிப்பார்
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ்வேதம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
சிவபெருமானாருடைய எளிவந்த தன்மை
சிவபெருமானாரின் அருட் செயல்களை யெல்லாம் இயம்பி கொண்டே இருந்தால் அவனுடைய பெருமைகள் சொல்லில் அடங்கா. அவர் புகழை கூற நாம் இருக்கும் நாட்களும் போதா. அவனுடைய அரிய பெரிய செயல்களில் அவருக்கென்ற எளிவந்த தன்மையினை இங்கே காணலாம்
தற்காலத்தில் ஒருவரிடம் உள்ள தங்கத்தை , தங்க நகைகளை வைத்தே அவருடைய உயர்வை நிர்ணயிக்கின்றனர், தங்கக் கட்டிகளை வைத்திருப்பவர்களுக்கு ஊரில் செல்வாக்கும், பெருமதிப்பும் ஏற்படுகின்றன. ஆனால் அந்த பொன்னை வைத்திருப்பவரால் பொன்னுக்கு ( தங்கத்துக்கு ) எந்தப் பயனும் இல்லை. இது உலக மக்கள் யாவருக்கும் தெரிந்ததே ஆகும். இந்த அரிய கருத்தை கூறும் அருமையிலும் அருமையான பாடலைக் காண்போம்.
பொன்னால் பிரயோசனம் பொன் படைத் தாற்குண்டு பொன் படைத்தோன்
தன்னால் பிரயோசனம் பொன்னுக்கு அங்கு ஏதுண்டு அத்தன்மையைப் போல்
உன்னால் பிரயோசனம் வேணதெல்லாம் உண்டு உனைப் பணியும்
உன்னால் பிரயோசனம் ஏதுண்டு காளத்தி ஈச்சரனே, பட்டினத்தார் பாடல்
இறைவர் தங்கக் கட்டி போன்றவர் , அவரால் அவரை வணங்கும் நமக்கு - பக்தர்களுக்கு முக்தி ( பிறவா நெறி) கிடைக்கும், நம்மால் இறைவருக்கு ஆக வேண்டியது ஏதுமில்லை.
இந்த கருத்தை திருவாசக் பாடல் ஒன்றிலும் காணலாம்,
தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றது ஒன்று என்பால்
சிந்தையே கோவில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை யுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே , தமிழ் வேதம் திருமுறை 8
சிவத்திடமிருந்து நாம் பெறுவது பேரானந்தம் பெருவாழ்வு, நம்மிடமிருந்து சிவம் பெறுவது ஏதுமில்லை, பக்தரால் பரமனுக்கு ஆவது ஏதுமில்லை,
திருமாலும், நான்முகனும் தேடியும் காணமுடியாத அருமைப்பாடு உடையவர் சிவபரம் பெருமானாவர், அவ்வளவு பெரியவரான அவர், மிகச் சிறியவனாகிய என்மனம் புகுந்தீர், இத்தகைய தங்களின் எளிவந்த தன்மையை என்றும் நான் மறவேன், கங்கை கொண்ட சோளேச்சரத்தானே, என்று கண்ணீர் மல்க பாடியுள்ளார் கருவூர் தேவர், ஒன்பதாவது பன்னிரு திருமறையில் இப்பாடலை பலகாலம் படித்து நலம் பெறலாம்,
அன்னமாய் விசும்பு பறந்து அயன்தேட அங்ஙனே பெரியநீ சிறிய
என்னை ஆள் விரும்பி என்மனம் புகுந்த எளிமையை என்றும் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நாற்பெருந் தடம்தோள்
கன்னலே தேனே அமுதே கங்கை கொண்ட சோளேச்சரத்தானே, - கருவூர் தேவர் திருஇசைப்பா
சிவபெருமானருடைய எளிவந்த தன்மையை மற்றும்ஓர் செயலின் வழியிலும் காணலாம்.
"ஐயாறு அதனில் சைவனாகியும் " தமிழ் வேதம் - 8
திருவையாற்றில் ஐயாறப்பருக்கு நாளும் பூஜை செய்கின்ற ஆதிசைவக் குடும்பங்கள் இருபத்து நான்கு இருந்தன. அவர்களுக்குள் ஒருவர் மனைவியையும் சிறுவனான மகனையும் கோவில் பூசை முறைக்கும், அதன் வருவாய்க்கும் உரியவர்களாக்கி வைத்துவிட்டு காசியாத்திரை போனார் ஒரு சைவர், சில மாதங்கள் ஆகியும் திரும்பவில்லை. இதனை கண்ட மற்றவர்கள் அவர் உரிமையையும் அதற்குரிய வருவாயையும் பங்கிட்டுக் கொண்டனர், இதனால் வாடிய காசி சென்ற ஆதிசைவருடைய மனைவியும் மகனும் ஐயாறப்பரிடம் விண்ணப்பித்து அழுது புலம்பினர். மறுநாள் காசி சென்ற அந்த ஆதி சைவர் கங்கைக் குடத்துடன் திரும்பி வந்தார். தம்முடைய உரிமையை பெற்று ஆலய பூசை முறையை செய்து வந்தார், வருவாயை வீட்டிற்கு அனுப்பி விட்டு தனியே மடத்தில் தங்கியிருந்தார், சில நாட்கள் கழித்து இவரைப் போன்ற ஒருவர் வந்தார், வீட்டில் உள்ளவர்களை நலம் விசாரித்தார், மனைவியும் மகனும் சுற்றத்தாரும் யாதும் யறியாது திகைத்தனர். " நீங்கள் முன்பே வநள்து, ஆலய பூசையை செய்து பொருளை எங்களுக்கு அனுப்பி வைத்து விட்டு மடத்தில் தங்கியிருந்தீரே, இன்றுதான் வந்தவர் போல் பேசுகின்றீரே என்றனர்,
ஆலயத்திற்க மூவரும் சென்று பார்த்த பொழுது முன் பூசை செய்தவர் அங்கு இல்லை. இப்போதுதான் இவர்கட்கு புரிந்தது, இறைவரே ஆதிசைவராக வந்து தம்மை தாமே அருச்சித்துள்ளார் என்பது. அன்புடன் விண்ணப்பம் செய்த ஆதிசைவருடைய மனைவி மகன் பொருட்டு இறைவர் ஆதிசைவராக வந்த எளிமையை என்னென்று சொல்வது, கருணையே வடிவானவர் அல்லவா இறைவர், இன்றும் இந்த நிகழ்வு திருவையாற்றில் சித்திரைத் திருவிழாவில் ஐந்தாம் நாளன்று " ஆத்ம பூசை " தன்னைத்தானே அருச்சிப்பது என்று நடைபெறுவதைக் காணலாம்,
தென்னாடுடைய சிவனே போற்றி ! என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!!
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத்தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
சிவபெருமானாரின் அருட் செயல்களை யெல்லாம் இயம்பி கொண்டே இருந்தால் அவனுடைய பெருமைகள் சொல்லில் அடங்கா. அவர் புகழை கூற நாம் இருக்கும் நாட்களும் போதா. அவனுடைய அரிய பெரிய செயல்களில் அவருக்கென்ற எளிவந்த தன்மையினை இங்கே காணலாம்
தற்காலத்தில் ஒருவரிடம் உள்ள தங்கத்தை , தங்க நகைகளை வைத்தே அவருடைய உயர்வை நிர்ணயிக்கின்றனர், தங்கக் கட்டிகளை வைத்திருப்பவர்களுக்கு ஊரில் செல்வாக்கும், பெருமதிப்பும் ஏற்படுகின்றன. ஆனால் அந்த பொன்னை வைத்திருப்பவரால் பொன்னுக்கு ( தங்கத்துக்கு ) எந்தப் பயனும் இல்லை. இது உலக மக்கள் யாவருக்கும் தெரிந்ததே ஆகும். இந்த அரிய கருத்தை கூறும் அருமையிலும் அருமையான பாடலைக் காண்போம்.
பொன்னால் பிரயோசனம் பொன் படைத் தாற்குண்டு பொன் படைத்தோன்
தன்னால் பிரயோசனம் பொன்னுக்கு அங்கு ஏதுண்டு அத்தன்மையைப் போல்
உன்னால் பிரயோசனம் வேணதெல்லாம் உண்டு உனைப் பணியும்
உன்னால் பிரயோசனம் ஏதுண்டு காளத்தி ஈச்சரனே, பட்டினத்தார் பாடல்
இறைவர் தங்கக் கட்டி போன்றவர் , அவரால் அவரை வணங்கும் நமக்கு - பக்தர்களுக்கு முக்தி ( பிறவா நெறி) கிடைக்கும், நம்மால் இறைவருக்கு ஆக வேண்டியது ஏதுமில்லை.
இந்த கருத்தை திருவாசக் பாடல் ஒன்றிலும் காணலாம்,
தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றது ஒன்று என்பால்
சிந்தையே கோவில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை யுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே , தமிழ் வேதம் திருமுறை 8
சிவத்திடமிருந்து நாம் பெறுவது பேரானந்தம் பெருவாழ்வு, நம்மிடமிருந்து சிவம் பெறுவது ஏதுமில்லை, பக்தரால் பரமனுக்கு ஆவது ஏதுமில்லை,
திருமாலும், நான்முகனும் தேடியும் காணமுடியாத அருமைப்பாடு உடையவர் சிவபரம் பெருமானாவர், அவ்வளவு பெரியவரான அவர், மிகச் சிறியவனாகிய என்மனம் புகுந்தீர், இத்தகைய தங்களின் எளிவந்த தன்மையை என்றும் நான் மறவேன், கங்கை கொண்ட சோளேச்சரத்தானே, என்று கண்ணீர் மல்க பாடியுள்ளார் கருவூர் தேவர், ஒன்பதாவது பன்னிரு திருமறையில் இப்பாடலை பலகாலம் படித்து நலம் பெறலாம்,
அன்னமாய் விசும்பு பறந்து அயன்தேட அங்ஙனே பெரியநீ சிறிய
என்னை ஆள் விரும்பி என்மனம் புகுந்த எளிமையை என்றும் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நாற்பெருந் தடம்தோள்
கன்னலே தேனே அமுதே கங்கை கொண்ட சோளேச்சரத்தானே, - கருவூர் தேவர் திருஇசைப்பா
சிவபெருமானருடைய எளிவந்த தன்மையை மற்றும்ஓர் செயலின் வழியிலும் காணலாம்.
"ஐயாறு அதனில் சைவனாகியும் " தமிழ் வேதம் - 8
திருவையாற்றில் ஐயாறப்பருக்கு நாளும் பூஜை செய்கின்ற ஆதிசைவக் குடும்பங்கள் இருபத்து நான்கு இருந்தன. அவர்களுக்குள் ஒருவர் மனைவியையும் சிறுவனான மகனையும் கோவில் பூசை முறைக்கும், அதன் வருவாய்க்கும் உரியவர்களாக்கி வைத்துவிட்டு காசியாத்திரை போனார் ஒரு சைவர், சில மாதங்கள் ஆகியும் திரும்பவில்லை. இதனை கண்ட மற்றவர்கள் அவர் உரிமையையும் அதற்குரிய வருவாயையும் பங்கிட்டுக் கொண்டனர், இதனால் வாடிய காசி சென்ற ஆதிசைவருடைய மனைவியும் மகனும் ஐயாறப்பரிடம் விண்ணப்பித்து அழுது புலம்பினர். மறுநாள் காசி சென்ற அந்த ஆதி சைவர் கங்கைக் குடத்துடன் திரும்பி வந்தார். தம்முடைய உரிமையை பெற்று ஆலய பூசை முறையை செய்து வந்தார், வருவாயை வீட்டிற்கு அனுப்பி விட்டு தனியே மடத்தில் தங்கியிருந்தார், சில நாட்கள் கழித்து இவரைப் போன்ற ஒருவர் வந்தார், வீட்டில் உள்ளவர்களை நலம் விசாரித்தார், மனைவியும் மகனும் சுற்றத்தாரும் யாதும் யறியாது திகைத்தனர். " நீங்கள் முன்பே வநள்து, ஆலய பூசையை செய்து பொருளை எங்களுக்கு அனுப்பி வைத்து விட்டு மடத்தில் தங்கியிருந்தீரே, இன்றுதான் வந்தவர் போல் பேசுகின்றீரே என்றனர்,
ஆலயத்திற்க மூவரும் சென்று பார்த்த பொழுது முன் பூசை செய்தவர் அங்கு இல்லை. இப்போதுதான் இவர்கட்கு புரிந்தது, இறைவரே ஆதிசைவராக வந்து தம்மை தாமே அருச்சித்துள்ளார் என்பது. அன்புடன் விண்ணப்பம் செய்த ஆதிசைவருடைய மனைவி மகன் பொருட்டு இறைவர் ஆதிசைவராக வந்த எளிமையை என்னென்று சொல்வது, கருணையே வடிவானவர் அல்லவா இறைவர், இன்றும் இந்த நிகழ்வு திருவையாற்றில் சித்திரைத் திருவிழாவில் ஐந்தாம் நாளன்று " ஆத்ம பூசை " தன்னைத்தானே அருச்சிப்பது என்று நடைபெறுவதைக் காணலாம்,
தென்னாடுடைய சிவனே போற்றி ! என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!!
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத்தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
காரைக்காலம்மையாரின் அறிவார்ந்த சிந்தனைகள்,
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் , மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்கள் தமிழகத்தில் கொண்டு வரப்போகம் பக்தி மார்க்கத்திற்கு அல்லது சைவத்தின் மறுமலர்ச்சிக்கு முன்னோடியாக வித்திட்டவர் காரைக்கால் அம்மையாரே ஆவார்,காலத்தால் முற்பட்டவர் அம்மையார் அவர்கள், அதனால் இவருடைய பதிகங்கள் மூத்த திருப்பதியங்கள் என போற்றப்படுகின்றன. மறைந்து போன தமிழ் இசைக்கு முதன் முதலில் உயிர் தருமருந்தாய் அமைந்தவை, அம்மையாருடைய மூத்த திருப்பதியங்கள்,
புனிதவதியார் என்னும் இயற்பெயருடன் வாழ்ந்த அம்மையாருக்கு சிவபெருமானார்அருளியவற்றை காண்போம்,
1) இறைவரே அடியவராக வந்து அம்மையாரிடம் உணவு அருந்தியவர்
2). இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தருளினார்
3. கணங்களில் ஒன்றாகும் பேய் வடிவை அருளினார்
4, அம்மையார் கேட்டவரங்களை அருளி அம்மையே என அழைத்தருளினார்
5, பதியங்களுக்கு முதன்முதலில் பண் அமைத்து பாடல்களை பதிகமாக அமைத்தவர்.
6, மூவர் முதலிகள் எனப் போற்றப்படும் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர். இந்த மூவருக்கும் தெளிவான வழிகாட்டியவர்,
அம்மையார் " வேதத்திற்கு முற்பட்டவர்" சிவபெருமானார் என்று பாடினார், வேதத்திற்கு மூலமானவர்அவர்என்றும் வேத்ப் பெருளே சிவபெருமானார் தான் என்றும் அறுதியிட்டு சொன்னவர் அம்மையார்,
"வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்கு ஆதியனை" - திரு இரட்டை மணிமாலை
கடவுள் மனம் வாக்கிற்கு எட்டாத இடத்தில் இருப்பதாக கூறினார், ஆனால்அம்மையார் " நினைப்பவர்மனத்தில் நிறைந்து விளங்குபவர்" என்று பாடினார்.
மூன்றாம் நூற்றாண்டிலேயே சைவ வளர்ச்சிக்கு அம்மையார் விதைத்த நல்வித்துக்ளாவன,
1,தன்னை முழுவதுமாக இறைவனிடம் ஓப்படைத்தல்
" யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்நெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக்
கைம்மா உரிப்போர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக்கு ஆளாயினேன், அற்புத திருஅந்தாதி
2, எந்நிலையிலும் சிவபெருமானிடம் முழு அன்பு செலுத்துதல்
"இடர்களையா ரேனும் எமக்கு இரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடர் உருவில்
அன்பறாது என்னெஞ் சவர்க்கு - அற்புத அந்தாதி
வரும் துன்பங்களை நீக்க வில்லை என்றாலும், நற்கதி அருளவில்லை என்றாலும், இரக்கம் காட்டவில்லை என்றாலும், என்னுடைய அன்பு எப்போதுமு சிவபெருமானருக்கே உரியதாகும்,
3, இறையன்பில் உறுதி வேண்டும் எனல்:
ஒன்றே நினைத்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றே என் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றே காண்
கங்கையான் திங்கட் கதிர்முடிான் பொங்கொளிசேர்
அங்கையாற்கு ஆளாம் அது, - அற்புத திருஅந்தாதி
ஒரு நெறிய மனம் வைத்துணர்தல் என்பார்சம்பந்தர், இதைத்தான் மூன்றாம் நூற்றாண்டில் அம்மையார் வாழ்ந்து காட்டி முழக்கமிட்டார்,
4, இருவினையையும் போக்கி கொள்ளுதல்:
சிவபெருமானாருடைய திருவடிகளைச் சார்ந்து இருவினைகளையும் போக்கி கொள்ள வேண்டும், இதனால் காலன் கையில் அகப்படாமல் இன்ப உலகு அடையலாம் என்றார்,
" காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம் " அற்புத அந்தாதி
முப்புரம் எரித்த சிவபெருமானாருடைய திருவடிகளை சார்ந்து இருவினைகளையும் போக்கி ெகொண்டேன், இனிமேல் என்னிடம் வரமாட்டான் , நரகம் புகுதலும் இனி இல்லையாயிற்று.
5, பிறப்பை அறுக்க முயற்சித்தல் வேண்டும்:
மானிடப்பிறப்பு எடுத்துள்ள தன் நோக்கமே இனி பிறவாமைப் பெறுவதற்குத்தான், பிறப்பும் இறப்பும் இல்லாத சிவபரம் பொருள் ஒன்றே நம் பிறவியை அறுக்கும் என்று தெளிந்து, அப்பெருமானாரை வாழ்த்தி வணங்கி பிறவா நெறி அடைதல் வேண்டும்,
ஈசன் அவன் அல்லாது இல்லை என நினைந்து
கூசி மனத்தகத்து கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத்து என்றும்
பிறவாமை காக்கும் பிரான், - திருஇரட்டை மணிமாலை
அம்மையார அடிபணிந்து நலம் பல பெறுவோம்
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ்வேதம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் , மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்கள் தமிழகத்தில் கொண்டு வரப்போகம் பக்தி மார்க்கத்திற்கு அல்லது சைவத்தின் மறுமலர்ச்சிக்கு முன்னோடியாக வித்திட்டவர் காரைக்கால் அம்மையாரே ஆவார்,காலத்தால் முற்பட்டவர் அம்மையார் அவர்கள், அதனால் இவருடைய பதிகங்கள் மூத்த திருப்பதியங்கள் என போற்றப்படுகின்றன. மறைந்து போன தமிழ் இசைக்கு முதன் முதலில் உயிர் தருமருந்தாய் அமைந்தவை, அம்மையாருடைய மூத்த திருப்பதியங்கள்,
புனிதவதியார் என்னும் இயற்பெயருடன் வாழ்ந்த அம்மையாருக்கு சிவபெருமானார்அருளியவற்றை காண்போம்,
1) இறைவரே அடியவராக வந்து அம்மையாரிடம் உணவு அருந்தியவர்
2). இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தருளினார்
3. கணங்களில் ஒன்றாகும் பேய் வடிவை அருளினார்
4, அம்மையார் கேட்டவரங்களை அருளி அம்மையே என அழைத்தருளினார்
5, பதியங்களுக்கு முதன்முதலில் பண் அமைத்து பாடல்களை பதிகமாக அமைத்தவர்.
6, மூவர் முதலிகள் எனப் போற்றப்படும் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர். இந்த மூவருக்கும் தெளிவான வழிகாட்டியவர்,
அம்மையார் " வேதத்திற்கு முற்பட்டவர்" சிவபெருமானார் என்று பாடினார், வேதத்திற்கு மூலமானவர்அவர்என்றும் வேத்ப் பெருளே சிவபெருமானார் தான் என்றும் அறுதியிட்டு சொன்னவர் அம்மையார்,
"வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்கு ஆதியனை" - திரு இரட்டை மணிமாலை
கடவுள் மனம் வாக்கிற்கு எட்டாத இடத்தில் இருப்பதாக கூறினார், ஆனால்அம்மையார் " நினைப்பவர்மனத்தில் நிறைந்து விளங்குபவர்" என்று பாடினார்.
மூன்றாம் நூற்றாண்டிலேயே சைவ வளர்ச்சிக்கு அம்மையார் விதைத்த நல்வித்துக்ளாவன,
1,தன்னை முழுவதுமாக இறைவனிடம் ஓப்படைத்தல்
" யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்நெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக்
கைம்மா உரிப்போர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக்கு ஆளாயினேன், அற்புத திருஅந்தாதி
2, எந்நிலையிலும் சிவபெருமானிடம் முழு அன்பு செலுத்துதல்
"இடர்களையா ரேனும் எமக்கு இரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடர் உருவில்
அன்பறாது என்னெஞ் சவர்க்கு - அற்புத அந்தாதி
வரும் துன்பங்களை நீக்க வில்லை என்றாலும், நற்கதி அருளவில்லை என்றாலும், இரக்கம் காட்டவில்லை என்றாலும், என்னுடைய அன்பு எப்போதுமு சிவபெருமானருக்கே உரியதாகும்,
3, இறையன்பில் உறுதி வேண்டும் எனல்:
ஒன்றே நினைத்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றே என் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றே காண்
கங்கையான் திங்கட் கதிர்முடிான் பொங்கொளிசேர்
அங்கையாற்கு ஆளாம் அது, - அற்புத திருஅந்தாதி
ஒரு நெறிய மனம் வைத்துணர்தல் என்பார்சம்பந்தர், இதைத்தான் மூன்றாம் நூற்றாண்டில் அம்மையார் வாழ்ந்து காட்டி முழக்கமிட்டார்,
4, இருவினையையும் போக்கி கொள்ளுதல்:
சிவபெருமானாருடைய திருவடிகளைச் சார்ந்து இருவினைகளையும் போக்கி கொள்ள வேண்டும், இதனால் காலன் கையில் அகப்படாமல் இன்ப உலகு அடையலாம் என்றார்,
" காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம் " அற்புத அந்தாதி
முப்புரம் எரித்த சிவபெருமானாருடைய திருவடிகளை சார்ந்து இருவினைகளையும் போக்கி ெகொண்டேன், இனிமேல் என்னிடம் வரமாட்டான் , நரகம் புகுதலும் இனி இல்லையாயிற்று.
5, பிறப்பை அறுக்க முயற்சித்தல் வேண்டும்:
மானிடப்பிறப்பு எடுத்துள்ள தன் நோக்கமே இனி பிறவாமைப் பெறுவதற்குத்தான், பிறப்பும் இறப்பும் இல்லாத சிவபரம் பொருள் ஒன்றே நம் பிறவியை அறுக்கும் என்று தெளிந்து, அப்பெருமானாரை வாழ்த்தி வணங்கி பிறவா நெறி அடைதல் வேண்டும்,
ஈசன் அவன் அல்லாது இல்லை என நினைந்து
கூசி மனத்தகத்து கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத்து என்றும்
பிறவாமை காக்கும் பிரான், - திருஇரட்டை மணிமாலை
அம்மையார அடிபணிந்து நலம் பல பெறுவோம்
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ்வேதம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
http://poomalai-karthicraja.blogspot.in/
பன்னிரு திருமறைகள் பற்றிய சிறு விளக்கம்
பண் என்பது பாடலின் ஒலி. `பருந்தும் நிழலும் போலப் பாடலும் பண்ணும்' என்பது பண்டையோர் எடுத்துக் காட்டுரை. ஆகவே பண் என்பது பாடல் வகைகளுக்கும் அவற்றின் சீர் அமைப்புக் கும் ஏற்ப அமைவது. ஆதலால் திருப்பாடல்களைச் சீர் முதலிய யாப் பிலக்கண அமைதி கருதி ஒருங்கு தொகுத்த பண்முறை தொன்று தொட்டு வருவதாயிற்று. இந்தப்பண் முறையமைப்பை ஒட்டியே இப் பதிப்பு வெளிவருகிறது.
தோத்திரங்களில் சிறந்தன எவை?
ஏதோ ஒவ்வொருகால் ஒன்றிய மனத்தோடு ஒரு மனிதன் புலமை நிலைமையினின்று புகன்றவற்றைக்காட்டிலும், உலகத்தைப் பண்படுத்துவதற்கென்றே திருவருள் வயத்தால் அவதரித்து, சிந்தையைச் சிவமாக்கி, திருவருளோடு வளர்ந்து, சென்ற சென்ற இட மெல்லாம் திருவருளைக்கண்டு, அது உள்நின்று உணர்த்த உரைக்கப் பெற்ற தோத்திரங்களே மிகமிக உயர்ந்தது என்பதில் ஐயமுண்டோ! ஆதலால், "எனதுரை தனதுரையாக" வந்த தோத்திரங்களாய்ச் சிறந் தன தேவார திருவாசகமாகிய பன்னிரு திருமுறைகளே. அவற்றுள் தேவாரம் என்ற சிறப்புப் பெயருக்குரியன முதல் ஏழு திருமுறைகள். அவற்றுள் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப்பெருமான் அருளிச்செய்தவை.
திருஞானசம்பந்தப்பெருமான் அறிவாற் சிவனேயென்பது திண்ணம். அதிலும் முதிர்ந்து விளைந்த சிவபுண்ணிய மேலீட்டால் இளமையிலேயே சிவஞானம் கைவரப்பெற்ற செம்மல். ஆதலால், ஆண்டில் இளைஞரான இவர் திருவாயிலிருந்து தோன்றி முதிர்ந்து விளைந்த சுவையமுதம் முதன் மூன்று திருமுறைகள். அதிலும் திரு வருட்பராசத்தி சிவஞானத்தின்னமுதம் குழைத்தருளி `உண் அடிசில்' என ஊட்ட, உண்டவாய் புலர்வதற்கு முன்னே சிவஞானத்தோடு ஒட்டி வந்த பெருமையையுடையது `தோடு' என்ற பாடலை முதற்கண் கொண்டுள்ள முதல் திருமுறை.
பொதுவாகத் திருமுறைப் பாகுபாட்டில் பண்முறையெனவும் தலமுறையெனவும் இருமுறை உண்டு. அவற்றுள் பண்முறையாவது பண் ஒற்றுமைபற்றிப் பாடல்களை வரிசைப்படுத்தியது. தலமுறை யாவது கோயில் முதலாகத் தலங்களின் முறைபற்றிக் கோக்கப் பெற்றது.
தோத்திரங்களில் சிறந்தன எவை?
ஏதோ ஒவ்வொருகால் ஒன்றிய மனத்தோடு ஒரு மனிதன் புலமை நிலைமையினின்று புகன்றவற்றைக்காட்டிலும், உலகத்தைப் பண்படுத்துவதற்கென்றே திருவருள் வயத்தால் அவதரித்து, சிந்தையைச் சிவமாக்கி, திருவருளோடு வளர்ந்து, சென்ற சென்ற இட மெல்லாம் திருவருளைக்கண்டு, அது உள்நின்று உணர்த்த உரைக்கப் பெற்ற தோத்திரங்களே மிகமிக உயர்ந்தது என்பதில் ஐயமுண்டோ! ஆதலால், "எனதுரை தனதுரையாக" வந்த தோத்திரங்களாய்ச் சிறந் தன தேவார திருவாசகமாகிய பன்னிரு திருமுறைகளே. அவற்றுள் தேவாரம் என்ற சிறப்புப் பெயருக்குரியன முதல் ஏழு திருமுறைகள். அவற்றுள் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப்பெருமான் அருளிச்செய்தவை.
திருஞானசம்பந்தப்பெருமான் அறிவாற் சிவனேயென்பது திண்ணம். அதிலும் முதிர்ந்து விளைந்த சிவபுண்ணிய மேலீட்டால் இளமையிலேயே சிவஞானம் கைவரப்பெற்ற செம்மல். ஆதலால், ஆண்டில் இளைஞரான இவர் திருவாயிலிருந்து தோன்றி முதிர்ந்து விளைந்த சுவையமுதம் முதன் மூன்று திருமுறைகள். அதிலும் திரு வருட்பராசத்தி சிவஞானத்தின்னமுதம் குழைத்தருளி `உண் அடிசில்' என ஊட்ட, உண்டவாய் புலர்வதற்கு முன்னே சிவஞானத்தோடு ஒட்டி வந்த பெருமையையுடையது `தோடு' என்ற பாடலை முதற்கண் கொண்டுள்ள முதல் திருமுறை.
பொதுவாகத் திருமுறைப் பாகுபாட்டில் பண்முறையெனவும் தலமுறையெனவும் இருமுறை உண்டு. அவற்றுள் பண்முறையாவது பண் ஒற்றுமைபற்றிப் பாடல்களை வரிசைப்படுத்தியது. தலமுறை யாவது கோயில் முதலாகத் தலங்களின் முறைபற்றிக் கோக்கப் பெற்றது.
பன்னிரு திருமுறையில் முதலாவது வரும் பாடல் "தோடுடைய " என்று துவங்கினார் திருஞானசம்பந்த பிள்ளயார், இதன்பால் சேக்கிழார் பெருமான் விளக்கம்
தோடுடையசெவியன் என்பது முதலாக உள்ளங்கவர்ந்தகள்வனுடைய சிறப்பியல்புகள் தெரிவிக்கப்பெறுகின்றன. பிள்ளையாருடைய அழுகைக் குரல் சென்று பரந்து திருமுலைப்பால் அருளச் செய்தது திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார். உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக, பாடல் பரமனார் திருச்செவியில் சென்று சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது, `பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து` என்ற சேக்கிழார் வாக்கால் தெரியலாகும். தோடுடையசெவி என்றதால் இடப்பாகத்துச் செவி என்பது குறிக்கப்பெறுகின்றது. கருணைக்கேற்றது, தாய்தழீஇய இடப்பக்கமாதலின், அதனை முற்கூறினார். `தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத்தேசிகன் பேரருள் ஆகும்` என்பதால் இது ஞானதேசிகனது திருவருட்டிறத்தை விளக்குவதாகும். சொரூபசிவம் மூவகை ஆன்மாக்களுக்கும் மூவகையால் அநுக்கிரகித்து மும்மலங்களையும் போக்கி அருளாரமுதத்தை உண்பித்தருளும் முறையில், சகலான்மாக்களுக்குப் படர்க்கையில் தோன்றிப்புரியும் குருவருளைக் குறிப்பதாகுமென்று `குரு அருளும்` (அகத்தியர் தேவாரத் திரட்டு) என்ற பாடலும் குறிக்கிறது.
மூன்றுவயதுக் குழந்தையாகிய ஞானசம்பந்தப்பிள்ளையார் தீவிரதர அன்புகொண்டு சன்மார்க்க நெறியாகிய நாயக நாயகித் தன்மையில் எடுத்த எடுப்பிலேயே ஈடுபடுகின்றார். உமையொருபாகனாக ஒரு பெண்ணோடு இருந்த பயில்வால் என்னுள்ளங்கவர்கின்றார் என நயந்தோன்றக் கூறியவாறு. விடையேறி-தாம் கண்ட காட்சி இடபாரூடராதலின் அதனைக் குறித்தபடி. தூவெண்மதி-தூய்மையான வெண்ணிறம் பொருந்திய மதி. மதிக்குத் தூய்மை களங்கமின்மை, இருள் ஒளியைச் சாராதவாறு போலக் களங்கம் இறைவனையும், அவனருள் பெற்றாரையும் சாராது. தூய்மை மனத்திலும் வெண்மை புறத்திலும் நிகழ்வது ஆதலின், இங்கே குறிப்பிடும் மதி நாம் காணும் சந்திரன் போன்று பிராகிருத சந்திரன் அல்லன் என்பது தெளியத்தக்கது. அன்றியும் ஒரு கலைப் பிறையாதலின் களங்கத்திற்கு இடமில்லை என்பதுமாம். இறைவன் சுடலைப் பொடி பூசுதல்: சர்வசங்கார காலத்து எல்லாவுலகமும் தத்தங் காரணத்துள் முறையே ஒடுங்க-காரணங்கள் யாவும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப் பெறும்போது நிகழ்வது. மகாசங்காரமாவது, நிவர்த்தியாதி பஞ்ச கலைகளிலும் அடங்கிய எல்லாப் புவனங்களையும் சங்கரிக்கின்ற நிலை. அப்போதுதான் எல்லாம் சுடலைக் காடாகும்.
உள்ளங்கவர்தலாவது அவனையன்றி உளங்கள் அறியாவாறு ஆட்கொள்ளுதல். ஏடு-இதழ். மலரான்-பிரமன். பிரமன் வழிபாடு செய்த தலமாதலின் இறைவற்குப் பிரமபுரீசர் என்பதும் தலத்திற்குப் பிரமபுரம் என்பதும் பெயராயிற்று. பிரமாபுரம் எனவே பிரமன் வழிபட்ட தலம் என்பது விளங்குதலின் மலரான் என்பது பிரமனைக் குறியாது என்றும், இந்நாயனாரே முற்காலத்து ஏடுடைய மலரால் பூசித்த காரணம் பற்றி இங்ஙனம் கூறினார் என்றும் சதாசிவச் செட்டியாரவர்கள் கருதினார்கள். பீடு-பெருமை. மேவிய-தாமே விரும்பி எழுந்தருளியுள்ள. இறைவன் நித்யசுதந்திரன் ஆதலின் இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான்-பெருமான் என்பதன் திரிபு. கள்வன் பெருமானாகிய இவன் அன்றே எனக் கூட்டுக. ஏறி, பூசி என்பன பெயர்ச்சொற்கள். வினையெச்சமாக்கி, கவர்கள்வன் என்ற வினைத்தொகையின் நிலைமொழியோடு முடிப்பாரும் உண்டு.
இத் திருப்பாடலுக்கு உரை எழுதிய கயப்பாக்கம் திரு.சதாசிவச்செட்டியார் அவர்கள் `விடையேறி` என்பது நித்யத் தன்மையை வேண்டிய அறக்கடவுளை வெள்விடையாகப் படைத்து ஊர்தியாகக் கொண்டதால் சிருஷ்டியும், `மதிசூடி` என்பது சந்திரனுக்கு அபயம் தந்து திருமுடியில் ஏற்றிக் காத்ததால் திதியும், `பொடிபூசி` என்பது சர்வசங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால் சங்காரமும், `கள்வன்` என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும் அவைகள் வினைப்போகங்களை நுகர ஒளித்து நிற்பதால் திரோபவமும், `அருள்செய்த` என்பது அனைவருக்கும் அருள் செய்யும் அநுக்கிரகமும் ஆகிய ஐந்தொழிலையும் விளக்கும் குறிப்பு என்பார்கள்.
ஸ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் அவர்கள், `தோடுடைய செவியன்` முதலாயின இறைவனது எண்குணங்களாகிய சிறப்பு இயல்புகளை உணர்த்துவன என்றும், `பிரமாபுரம்` `விடையேறி` முதலியன இறைவனது தசாங்கங்களைக் குறிப்பால் உணர்த்தி நிற்பன என்றும், `விடையேறி` `பொடிபூசி` `உள்ளங்கவர்கள்வன்` என்பன முறையே இறைவனுடைய மூன்று திருமேனிகளாகிய உருவம் அருஉருவம் அருவம் என்ற மூன்றையும் குறித்து நிற்பன என்றும், எழுதியுள்ளார்கள். சேக்கிழார் சுவாமிகள் `மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை` என்பதால் பிரணவத்தின் முதலாகிய ஓங்காரத்தைச் சிவசக்தியின் உண்மைச்சொரூபமாகிய தகரவித்தையின் அடையாளமாகிய `த்` என்பதோடு சேர்த்து `தோ` என்று தொடங்கியதாகக் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டாம் திருமுறையில் `உலகெலாம்` என்று முடிவதனையும் இதனோடு சேர்த்துத் திருமுறை முழுவதுமே வேத மூலமாகிய பிரணவத்துள் அடங்கியது என்பது குறிப்பு.
தேவாரத்திற்கும் வேதத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த, வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ்வேதம் தந்த இவர்கள், தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோ தயாத் என்ற காயத்திரி மந்திரத்தின் முதலெழுத்தாகிய தகரத்தின் மீது பிரணவத்தின் முதலெழுத்தாகிய ஓகாரத்தைச் சேர்த்துத் தொடங்கியிருப்பது அறிந்து இன்புறற்குரியது.
குருவருள்: `தோடுடைய செவியன்` என்றமையால் அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்பதை முதலில் உணர்த்தி, அதனால் ஒருதெய்வ வழிபாட்டை நிலைநிறுத்துகிறார் ஞானசம்பந்தர். தோடுடைய செவியே `ஓம்` என்ற பிரணவ சொரூபமாய் உள்ளதையும் காட்டி அருளுகிறார்.
`ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம்` என்பது பிரமன் பூசித்தமைக்கு இரங்கிய பெருமான் அருள் செய்ததையே குறிக்கும். இதை வலியுறுத்துவார் போன்று `சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலங்கொள் கோயில்` எனப் பிள்ளையார் மேகராகக் குறிஞ்சிப் பண் பாடலிலும் விளக்கியுள்ளார். இதனால் `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த` என்பது ஞானசம்பந்தர் ஏடுடைய மலரால் தான் வழிபட்டு அருள்பெற்றதாகக் கூறல் முறையாகாது என்பதை உணரலாம்
திருச்சிற்றம்பலம் / ஓம் சிவசிவ ஓம்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
சுந்தரர் பெருமானார், குருபூஜை
சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சமயக்குறவர் நால்வர்களில் பெரியபுராணத்தின் கதாநாயகன் என்றும் இளைஞர் என்றும் வர்ணிக்கப்பட்ட சுந்தரர் ஒரு சிவலோகத்தில் சிவத்தொண்டராக இருந்து அவதார பருசராக இப்பூலகில் அவதரித்து இைறவனை அடையும் மார்க்கமான சகமார்க்கமாக சிவனை நண்பனாகக் கொண்டு அவரிடம் தான் வேண்டும் போதெல்லாம் வேண்டியவன பெற்று சிவனருள் பெற்றதை யாரும் அறிேவாம், ஆனாலும் அவரை குருவாகவும் அவருக்கு நண்பனாகவும் அடியாராகவும், இருந்து அவருடனே முக்தி பெற்ற இரண்டு நாயன்மார்களின் சிறு குறிப்பும் இத்துடன் விவரித்துள்ளேன்.
பெருமிழலைக்குறும்ப நாயனார்,
*****************************
மிழலைநாட்டிலே பெருமிழலை என்னும் ஊரிலே, சிவபத்தி அடியார் பத்திகளிற் சிறந்த பெருமிழலைக்குறும்ப நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்களைக் காணுந்தோறும் விரைந்தெதீர்கொண்டு வணங்கி, அவர்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்பவர். அவர்களை நாடோறுந் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுப்பவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பெருமையை அறிந்து அவருடைய திருவடிகளை மனம் வாக்குக் காயங்களினாலே சிந்தித்துத் துதித்து வணங்குதலே பரமசிவனுடைய திருவடிகளை அடைதற்கு உரிய நெறியென்று அப்படிச் செய்து வந்தார். அதனால் அவர் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமகாசித்திகளையும் அடைந்தார். அடைந்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்து வந்தார்.
இப்படி நிகழுங்காலத்திலே, திருவஞ்சைக்களத்திற் சென்று திருப்பதிகம்பாடுஞ் சுந்தரமூர்த்திநாயனாருக்குப் பரமசிவனுடைய திருவருளினாலே உத்தரகைலாசத்தை அடையும் வாழ்வு கிடைப்பதைத் தம்முடைய ஊரிலிருந்து கொண்டே யோகப் பிரத்தியக்ஷத்தால் அறிந்து; "சுந்தரமூர்த்திநாயனார் உத்தர கைலாசத்தை நாளைக்கு அடைய நான் பிரிந்து இங்கே வாழ மாட்டேன்" என்று நினைந்து, "இன்றைக்கு யோகத்தினாலே சிவபிரானுடைய திருவடியை அடைவேன்" என்று துணிந்து, யோகமுயற்சியினாலே பிரமரந்திரந்திறப்ப உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.
கழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார்
**********************************************
மலைநாட்டிலே, கொடுங்கோளூரிலே, சேரர்குடியிலே பெருமாக் கோதையாரென்றும் பெயரையுடைய ஒரு சற்புத்திரர் சைவநெறி வாழும்படி அவதரித்தார். , சிவபெருமானுடைய திருவடியை அடைதல் வேண்டுமெனக்கருதி, இராஜபுத்திரருக்குரிய தொழில்களைச் செய்தலின்றி, திருவஞ்சைக்களமென்னுஞ் சிவஸ்தலத்தை அடைந்து, "பரமசிவன் சுவதந்திரர், நாம் பரதந்திரர்" என்று உணர்ந்து, சிவாதீனமாய் நின்று, தினந்தோறும் பிராம முகூர்த்தத்தில் எழுந்து, ஸ்நானம்பண்ணி அநுட்டானஞ் செய்து கொண்டு, திருநந்தனவனம் வைத்தல், பூக்கள் பறித்தல், திருமாலை கட்டல், திருவலகிடல், திருமெழுக்கிடல், திருப்பாட்டுப்பாடல் முதலிய த் திருத்தொண்டுகளைச் செய்வாராயினார்.
இப்படி நிகழுங் காலத்திலே, செங்கோற்பொறையன் என்னுஞ் சேரமகாராஜனுக்கு இது நித்தியம் இது அநித்தியம் என்கின்ற பகுத்தறிவும், அநித்தியமாகிய இம்மை மறுமை யின்பங்களின் வெறுப்பும், பிறவித்துன்பங்களும், அவன் செய்த புண்ணிய பலத்தினாலே தோன்றின. அவை தோன்றவே, நித்தியமாகிய மோக்ஷத்திலே ஆசை உண்டாயிற்று. அதனால் அவன் பிறவிக்குக் காரணமாகிய வீண் முயற்சிகளை விட்டு, கோக்ஷத்திற்குக் காரணமாகிய யோக முயற்சியைச் செய்யவேண்டுமென்று தெளிந்து, அரசியற்றுதலினின்று நீங்கி, தவஞ்செய்யும் பொருட்டுத் தபோவனத்தை அடைந்தான்.
மந்திரிமார்கள் சிலநாள் ஆலோசித்துத் தெளிந்து, திருவஞ்சைக்களத்திலே திருத்தொண்டுசெய்து கொண்டிருக்கின்ற அச்சேரர் மரபிற்கு முதல்வராகிய பெருமாக்கோதை யாரிடத்திலேபோய், அவரை வணங்கி நின்று, "இம்மலைநாட்டை நீரே முடிசூடி அரசியற்றல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்ய; பெருமாக்கோதையார் "இவர்கள் வார்த்தை இன்பமயாகிய திருத்தொண்டுக்கு இடையூறாயிருக்கின்றது. சிவபத்தியிலே சிறிதும் வழுவாது அரசியற்றுதற்குத் திருவருள் உளதாயின், இதனை எம்பெருமானுக்கு விண்ணப்பஞ்செய்து அறிவேன்" என்று ஆலயத்தினுள்ளே பிரவேசித்து, சிவபெருமானை வணங்கி விண்ணப்பஞ்செய்து, அவருடைய திருவருளினாலே அவரிடத்தே வைத்த பத்திவழுவாது அரசியற்றுஞ் சத்தியையும், யாரும் யாவும் கழறினவைகளனைத்தையும் அறியும் அறிவையும், பாசமில்லாத மகாபராகிரமத்தையும் பெருங் கொடையையும், அரசருக்கு உரியபடை வாகனமுதலிய வெல்லாவற்றையும் கைவரப் பெற்று, நமஸ்கரித்துக்கொண்டு, புறத்தணைந்து, மந்திரிமார்களுடைய வேண்டுகோளுக்கு உடன்பட்டார். மந்திரிமார்கள் பெருங்களிப்புடையர்களாகி, அவரை நமஸ்கரித்தார்கள்.
கழறிற்றறிவாராகிய அப்பெருமாக்கோதையார், ஆன்மார்க்களெல்லாம் உய்யும் பொருட்டுச் சுபதினத்திலே சுபமுகூர்த்தத்திலே முடி சூடி, சிவாலயத்தை வலஞ்செய்து, சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து, யானை மேற்கொண்டு, கொற்றக்குடையும் வெண்சாமரமும் உரியவர்கள் தாங்க, மகா அலங்காரத்தோடு நகரிவலஞ் செய்தார். செய்யும்பொழுது, ஒருவண்ணான் தோளிலே உவர்ப்பொதி சுமந்துகொண்டு தமக்கு முன்னே வரக்கண்டு, அவனுடைய சரீரம் மழையினாலே கரைந்த உவர் ஊறப்பெற்று வெளுத்திருத்தலால், விபூதியை உத்தூளனஞ் செய்த சிவனடியாரது திருவேடம்போலுதலை உணர்ந்து, அந்த க்ஷணத்திலேதானே யானையினின்றும் இறங்கி பேராசையோடு விரைந்துசென்று, கைதொழுதார். அது கண்டவுடனே அவ்வண்ணான் மனங்கலங்கி, அவரை விழுந்து நமஸ்கரித்து, "அடியேனை யார் என்றுகொண்டது? அடியேன் அடிவண்ணான்" என்று சொல்ல; சேரமான் பெருமாணாயனாரும் "அடியேன் அடிச்சேரன். தேவரீர் திருநீற்றுவேடத்தை நினைப்பித்தீர். வருந்தாதே போம்" என்று சொல்லியருளினார். மந்திரிமார்கண் முதலாயினோரெல்லாரும் சேரமான்பெருமாணாயனாருடைய சங்கமபத்தி மிகுதியைக் கண்டு, ஆச்சரியமடைந்து, சிரசின்மேலே அஞ்சலி செய்து தோத்திரம் பண்ணினார்கள். சேரமான் பெருமாணாயனார் யானைமேலேறி, நகரியை வலங்கொண்டு மாளிகை வாயிலிலே புகுந்து, யானையினின்றும் இறங்கி மண்டபத்தை அடைந்து, இரத்தினசிங்காசனத்திலேறி, வெண்கொற்றக் குடைநிழற்ற, வெண்சாமரம் வீச, அரசர்கள் மலர்தூவி வணங்கித் துதிக்க, வீற்றிருந்தருளினார். இங்ஙனமிருந்து, மனுநீதிநெறியை நடத்தி, எண்ணிறந்த அரசர்கள் திறைகொணர அகத்தும் புறத்தும் பகையை அறுத்து, சைவ சமயம் அபிவிருத்தி யாகும்படி அரசியற்றுவாராயினார்.
இப்படி நிகழுங்காலத்திலே, பாண்டிநாட்டிலே மதுரையில் எழுந்தருளியிருக்குஞ் சோமசுந்தரக்கடவுள் தம்மை அன்பினோடும் இசைப்பாட்டினாலே துதிக்கின்ற பாணபத்திரருக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடுத்தருளுதற்குத் திருவுளங்கொண்டு, இரவில் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "உனக்குப்பொன் இரத்தினம் பட்டாடை முதலியவைகளெல்லாவற்றையும் நீ வேண்டியபடி குறைவின்றித் தரும்பொருட்டு, நம்மேல் எப்பொழுதும் அன்புடையனாகிய சேரனுக்கு ஓலை தருவோம் தாழ்க்காமற்போய் வா" என்று அருளிச் செய்து,
"மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பானிற வரிச்சிற
கன்னம் பயில்பொழி லால வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்முப் படியெனப் பாவலர்க்
குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க
பண்பா லியாழ்பயில் பாண பத்திரன்
றன்போ லென்பா லன்பன் றன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே"
என்னுந் திருப்பாசுரத்தை வரைந்த திருமுகத்தைக் கொடுத்தருளினார்.
பாணபத்திரர் அத்திருமுகத்தைத் தலைமேற்கொண்டு, அப்பொழுதே புறப்பட்டு, மலைநாட்டிற்சென்று, கொடுங்கோளுரை அடைந்து, மாளிகைக்கு முன்வந்து, சேரமான் பெருமாணாயனாருக்கு அறிவித்தார். உடனே அவர் சிரசின் மேலே கைகுவித்து, மிகுந்த அன்பினோடுங் கண்ணீர் சொரிய எழுந்து மாளிகைக்குப் புறத்தில் வந்து, பாணபத்திரரைப் பல முறை வணங்கி, "சுவாமி! தேவரீர் அடியேனை ஒருபொருளென மதித்துத் திருமுகங் கொண்டு வந்தீரே" என்றார். அப்பொழுது பாணபத்திரர் சிவபிரானுடைய திருமுகத்தைக் கையிலே கொடுத்து வணங்க, சேரமான்பெருமாணாயனார் அதனை முடிமேற்கொண்டு கூத்தாடி, மொழி குழற, ஆன்ந்தவருவி சொரிய, பரவசராய்ப் பூமியிலே பலமுறை விழுந்தார். திருமுகத்தைப் பலதரம் வணங்கி, அதனை வாசித்து, திருவருளைத் துதித்து; மாளிகையினுள்ளே புகுந்து, மந்திரிமார்களை நோக்கி, "நம்முடைய குல மாளிகையில் இருக்கின்ற பண்டாரமுழுதையும் பொதி செய்து ஆளின்மேல் ஏற்றிக் கொண்டு வாருங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க; அவர்கள் ஏற்றிக் கொண்டுவந்து வணங்கினார்கள். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்கு அந்தத் தனங்களை வெவ்வேறாகக் காட்டி, "சுவாமீ! தேவரீர் இவைகளையும் யானை குதிரை தேர் காலாள் என்னுஞ் சதுரங்கங்களையும் அடியேனுடைய அரசையுங் கைக்கொண்டருளும்" என்று சொல்ல, பாணபத்திரர் தமக்குச் சேரமான்பெருமாணாயனார் தந்த தனங்களெல்லாவற்றையுங் கண்டு, மனமகிழ்ந்து, அதிசயித்து, அவரைநோக்கி, "சுவாமீ! அடியேன் எனக்கு வேண்டுவனவற்றை மாத்திரங்கொள்ளும் பொருட்டே சிவாஞ்ஞை அரசையும் அரசுறுப்பையும் தேவரீரே கைக்கொண்டருளும்" என்று சொல்லி வணங்கினார். சேரமான்பெருமாணாயனாரும் சிவாஞ்ஞையை மறுத்தற்கு அஞ்சி, அதற்கு உடன்பட்டார் பாணபத்திரர்தனங்களெல்லாவற்றையும் யானை குதிரை உள்ளிட்டனவற்றுள் வேண்டுவனவற்றையுங்கொண்டு, ஓர் யானைமேல் ஏறிக்கொண்டுபோனார். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்குப் பின் கண்ணீர் சொரிய, கைதொழுது கொண்டு செல்ல, பாணபத்திரர் நகர்ப்புறத்தில் அவரிடத்திலே விடைபெற்றுக்கொண்டு போய், மதுரையை அடைந்தார்.
சேரமான்பெருமாணாயனார், ஒருநாள் முன்போலப் பூஜாந்தத்திலே சபாநாயகருடைய திருச்சிலம்பொலி தமக்குக் கேளாதொழிய, மனமயங்கி, 'அடியேன் யாது பிழை செய்தேனோ" என்று பொருமி "இனி இந்தத் தேகத்தினால் அடையும் பேரின்பம் யாது" என்று உடைவாளை உருவித் தமது மார்பிலே நாட்ட, சபாநாயகர் விரைந்து திருச்சிலம்பொலியைக் கேட்பித்தார். உடனே நாயனார் உடைவாளை அகற்றி நமஸ்காரம் பண்ணித் தோத்திரஞ்செய்து, "எம்பெருமானே! அத்திருவருளை முன் செய்யாதொழிந்தது என்னை" என்றார். அப்பொழுது சபாநாயகர் சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்தி நாயனாரை நினைப்பிக்கும் பொருட்டு, எதிர் நின்றருளாது, "வன்றொண்டனாகிய சுந்தரன் கனகசபையின் கண்ணே நமது ஆனந்த நிருத்தத்தை வந்து வணங்கிப் பதிகம் பாடுதலால், நாம் நின்று அதனைக் கேட்டு வரத்தாழ்த்தோம்" என்னுந்திருவாக்கை அருளிச் செய்தார். சேரமான்பெருமாணாயனார் "அடியார்களுக்கு இவர் அருளுங்கருணை இருந்தவாறு என்னை" என்று வியந்து கனகசபையை வணங்கி வன்றொண்டரையும் தரிசித்தல் வேண்டும் என்று விரும்பி, சுபதினத்திலே திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளியிருக்கும் கடவுளை வணங்கிக் கொண்டு, சேனைகளோடு புறப்பட்டுப்போய்ச் சிதம்பரத்தை அடைந்து, கனகசபையிலே திருநிருத்தஞ்செய்தருளும் சபாநாயகரை வணங்கி, சிவானந்தக்கடலுள் அமிழ்த்தி, பொன்வண்ணத்தந்தாதி பாடியருளினார். சபாநாயகர் அதற்குப் பரிசிலாகத் தமது குஞ்சிதபாதத்தினது திருச்சிலம்பின் ஓசையை எதிரே கேட்பித்தார். சேரமான்பெருமாணாயனார் காலந்தோறும் சபாநாயகரைத் தரிசனஞ் செய்து கொண்டு அத்திருப்பதியில் இருந்தார்.
சிலநாளாயினபின், சுந்தரமூர்த்திநாயனாரைத் தரிசித்து வணங்குதற்கு விரும்பிப் புறப்பட்டு, இடையில் உள்ள சிவஸ்தலங்களை வணங்கிக்கொண்டு, திருவாரூரை அடைந்து, தம்மை எதிர்கொண்ட சுந்தரமூர்த்திநாயனாரை நமஸ்கரித்து, அவரோடு திருக்கோயிற்சென்று, வன்மீகநாதரை வணங்கி, திருமும்மணிக்கோவைபாடி, பரவையார் வீட்டிலே போய், சுந்தரமூர்த்திநாயனாரோடும் இருந்தார். சிலதினஞ் சென்றபின், சுந்தரமூர்த்திநாயனாரோடும் திருவாரூரை அகன்று, வேதாரணியத்தை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து, திருவந்தாதி பாடினார். அதன்பின் பாண்டிநாட்டிற் சென்று, அங்குள்ள மதுரை முதலாகிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு, சுந்தரமூர்த்திநாயனாரோடுந் திருவாரூருக்குத் திரும்பிவந்து, அவரோடுஞ் சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார். பலநாட்சென்றபின், சுந்தரமூர்த்திநாயனாரைத் தம்முடைய ஊருக்கு வரும்படி பிரார்த்தித்து, அழைத்துக் கொண்டு சென்று, தம்முடைய கொடுங்கோளுரை அடைந்து, அவரோடும் இருந்தார். ஒருநாள் சுந்தரமூர்த்திநாயனார் வன்மீகநாதரை நினைத்து உருகி, திருவாருருக்குப் போம்படி எழுந்துசெல்ல; சேரமான்பெருமாணாயனார் பிரிவாற்றாதவராகி, எழுந்து அவரைப் பின்றொடர்ந்து, போகாதபடி தடுத்து, அதற்கு அவர் உடன்படாமை கண்டு, மந்திரிகளைக் கொண்டு தம்முடைய திருமாளிகையில் உள்ள பண்டாரமுழுதையும் பொதிசெய்து ஆட்களின்மேலே ஏற்றுவித்து, சுந்தரமூர்த்திநாயனாருக்கு முன் செல்லும்படி அனுப்பி, அந்நாயனாரை விழுந்து நமஸ்கரித்தார். சுந்தரமூர்த்திநாயனார் சேரமான்பெருமாணாயனாரைத் தழுவி, விடைகொடுத்துச் சென்று, திருவாரூரை அடைந்தார். சுந்தரமூர்த்திநாயனாரிடத்திலே விடைபெற்ற சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனார் மறவாத சிந்தையோடு, கொடுங்கோளுரிலே அரசு செய்து கொண்டிருந்தார்.
நெடுநாளாயினபின், சுந்தரமூர்த்திநாயனார் பின்னுங் கொடுங்கோளூருக்கு வந்து, சேரமான்பெருமாணாயனாரோடும் எழுந்தருளியிருந்தார். பலநாளாயினபின், ஒருநாள் சேரமான்பெருமாணாயனாரோடும் எழுந்தருளியிருந்தார். பலநாளாயினபின், ஒருநாள் சேரமான்பெருமாணாயனார் ஸ்நானம் பண்ணும்பொழுது, சுந்தரமூர்த்திநாயனார் திருக்கைலாசத்துக்குப் போய், சுவாமிதரிசனஞ்செய்து, திருக்கைலாசத்தினின்றும் சிவபெருமானால் அனுப்பப்பட்ட வெள்ளையானையின்மேல் ஏறி, தம்முடைய தோழராகிய சேரமான்பெருமாணாயனாரை நினைத்துக்கொண்டு சென்றார். சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனாருடைய செயலை அறிந்து, அந்தக்ஷணத்தில் அருகிலே நின்ற ஓர் குதிரையில் ஏறிக்கொண்டு திருவஞ்சைக்களத்துக்குப்போய் வெள்ளையானையின் மேற்கொண்டு ஆகாயத்திற் செல்லுஞ் சுந்தரமூர்த்திநாயனாரை கண்டு, தாம் ஏறிய குதிரையின் செவியிலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதியருளினார். உடனே அந்தக் குதிரையானது ஆகாயத்திலே பாய்ந்து சுந்தரமூர்த்திநாயனாருடைய வெள்ளையானையை அடைந்து, அதனை வலஞ்செய்து அதற்கு முன்னாகச் சென்றது. சேரமான்பெருமாணாயனாருடைய படைவீரர்கள் குதிரையிற்செல்லும் அந்நாயனாரைத் தங்கள் கண்ணுக்குப் புலப்படும் எல்லை வரைக்கும் ஆகாயத்திலே கண்டு, பின் காணாமையால், மிகுந்த திடபத்தியினாலே உருவிய உடைவாட்களினால் தங்கள் தங்கள் தேகத்தை வீழ்த்தி, வீரயாக்கையைப் பெற்றுப்போய், சேரமான்பெருமாணாயனாருக்கு முற்பட்டு, அவரைச் சேவித்துக் கொண்டு சென்றார்கள். சேரமான்பெருமாணாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரும், திருக்கைலாசத்தின் தெற்குவாயிலுக்கு முன் போனவுடனே, குதிரையினின்றும் யானையினின்றும் இறங்கி, பலவாயில்களையும் கடந்து, திருவணுக்கன்றிரு வாயிலை அடைந்தார்கள். அங்கே சேரமான்பெருமாணாயனார் தடைப்பட்டு நிற்க; சுந்தரமூர்த்திநாயனார் உள்ளே போய்ச் சிவசந்நிதானத்திலே விழுந்துநமஸ்கரித்து எழுந்து, ஸ்தோத்திரம்பண்ணி, "சுவாமீ! தேவரீருடைய திருவடிகளை அடையும் பொருட்டுச் சேரமான்பெருமான் திருவணுக்கன்றிருவாயிலின் புறத்திலே வந்து நிற்கின்றார்" என்று விண்ணப்பஞ்செய்தார். பரமசிவன் சேரமான்பெருமாணாயனாரை உள்ளே அழைப்பிக்க; அவர் விரைந்து வந்து சந்நிதானத்திலே நமஸ்கரித்துத் தோத்திரம்பண்ணினார். பரமசிவன் திருமுறுவல்செய்து, "இங்கே நாம் அழையாதிருக்க, நீ வந்ததென்னன" என்று அருளி செய்ய, சேரமான்பெருமாணாயனார் அஞ்சலி செய்து நின்று, "சுவாமீ! சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து அவர் ஏறிய வெள்ளையானைக்குமுன் அவரைச் சேவித்துக்கொண்டு வந்தேன். தேவரீர் பொழிகின்ற பெருங்கருணைவெள்ளம் முன்கொண்டு புகுதலால், திருமுன்பு வரப்பெற்றேன். இனி ஒரு விண்ணப்பம் உண்டு, அரிபிரமேந்திராதிதேவர்களாலும் முனிவர்களாலும் வேதங்களாலும் துதிக்கப்படுதற்கு அரிய பெருமையையுடைய தேவரீர்மேல் அன்பினாலே தேவரீரது திருவருள்கொண்டு திருவுலாப்பாடினேன். அதனைத் தேவரீர் திருச்செவி சாத்தல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்தார். அப்பொழுது சிவபெருமான் "சேரனே! அவ்வுலாவைச் சொல்லு" என்று திருவாய்மலர்ந்தருள; சேரமான்பெருமாணாயனாரும் அதனைக் கேட்பித்தார். சிவபெருமான் அதற்கு அருள்செய்து, "நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு" என்று திருவாய்மலர்ந்தருளினார். சேரமான்பெருமாணாயனார் சிவகணநாதராகிச் சுவாமியைச் சேவிப்பாராயினார். அவர் அருளிச்செய்த திருக்கைலாயஞானவுலாவைத் திருக்கைலாசகிரியிலே அன்று கேட்ட மாசாத்தரானவர் அதனைத்தரித்து, தமிழ்நாட்டிலே உள்ள திருப்பிடவூரிலே, வெளிப்படச்சொல்லி, பூமியிலே விளங்கும் பொருட்டு நாட்டியருளினார்.
திருச்சிற்றம்பலம்
சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சமயக்குறவர் நால்வர்களில் பெரியபுராணத்தின் கதாநாயகன் என்றும் இளைஞர் என்றும் வர்ணிக்கப்பட்ட சுந்தரர் ஒரு சிவலோகத்தில் சிவத்தொண்டராக இருந்து அவதார பருசராக இப்பூலகில் அவதரித்து இைறவனை அடையும் மார்க்கமான சகமார்க்கமாக சிவனை நண்பனாகக் கொண்டு அவரிடம் தான் வேண்டும் போதெல்லாம் வேண்டியவன பெற்று சிவனருள் பெற்றதை யாரும் அறிேவாம், ஆனாலும் அவரை குருவாகவும் அவருக்கு நண்பனாகவும் அடியாராகவும், இருந்து அவருடனே முக்தி பெற்ற இரண்டு நாயன்மார்களின் சிறு குறிப்பும் இத்துடன் விவரித்துள்ளேன்.
பெருமிழலைக்குறும்ப நாயனார்,
*****************************
மிழலைநாட்டிலே பெருமிழலை என்னும் ஊரிலே, சிவபத்தி அடியார் பத்திகளிற் சிறந்த பெருமிழலைக்குறும்ப நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்களைக் காணுந்தோறும் விரைந்தெதீர்கொண்டு வணங்கி, அவர்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்பவர். அவர்களை நாடோறுந் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுப்பவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பெருமையை அறிந்து அவருடைய திருவடிகளை மனம் வாக்குக் காயங்களினாலே சிந்தித்துத் துதித்து வணங்குதலே பரமசிவனுடைய திருவடிகளை அடைதற்கு உரிய நெறியென்று அப்படிச் செய்து வந்தார். அதனால் அவர் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமகாசித்திகளையும் அடைந்தார். அடைந்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்து வந்தார்.
இப்படி நிகழுங்காலத்திலே, திருவஞ்சைக்களத்திற் சென்று திருப்பதிகம்பாடுஞ் சுந்தரமூர்த்திநாயனாருக்குப் பரமசிவனுடைய திருவருளினாலே உத்தரகைலாசத்தை அடையும் வாழ்வு கிடைப்பதைத் தம்முடைய ஊரிலிருந்து கொண்டே யோகப் பிரத்தியக்ஷத்தால் அறிந்து; "சுந்தரமூர்த்திநாயனார் உத்தர கைலாசத்தை நாளைக்கு அடைய நான் பிரிந்து இங்கே வாழ மாட்டேன்" என்று நினைந்து, "இன்றைக்கு யோகத்தினாலே சிவபிரானுடைய திருவடியை அடைவேன்" என்று துணிந்து, யோகமுயற்சியினாலே பிரமரந்திரந்திறப்ப உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.
கழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார்
**********************************************
மலைநாட்டிலே, கொடுங்கோளூரிலே, சேரர்குடியிலே பெருமாக் கோதையாரென்றும் பெயரையுடைய ஒரு சற்புத்திரர் சைவநெறி வாழும்படி அவதரித்தார். , சிவபெருமானுடைய திருவடியை அடைதல் வேண்டுமெனக்கருதி, இராஜபுத்திரருக்குரிய தொழில்களைச் செய்தலின்றி, திருவஞ்சைக்களமென்னுஞ் சிவஸ்தலத்தை அடைந்து, "பரமசிவன் சுவதந்திரர், நாம் பரதந்திரர்" என்று உணர்ந்து, சிவாதீனமாய் நின்று, தினந்தோறும் பிராம முகூர்த்தத்தில் எழுந்து, ஸ்நானம்பண்ணி அநுட்டானஞ் செய்து கொண்டு, திருநந்தனவனம் வைத்தல், பூக்கள் பறித்தல், திருமாலை கட்டல், திருவலகிடல், திருமெழுக்கிடல், திருப்பாட்டுப்பாடல் முதலிய த் திருத்தொண்டுகளைச் செய்வாராயினார்.
இப்படி நிகழுங் காலத்திலே, செங்கோற்பொறையன் என்னுஞ் சேரமகாராஜனுக்கு இது நித்தியம் இது அநித்தியம் என்கின்ற பகுத்தறிவும், அநித்தியமாகிய இம்மை மறுமை யின்பங்களின் வெறுப்பும், பிறவித்துன்பங்களும், அவன் செய்த புண்ணிய பலத்தினாலே தோன்றின. அவை தோன்றவே, நித்தியமாகிய மோக்ஷத்திலே ஆசை உண்டாயிற்று. அதனால் அவன் பிறவிக்குக் காரணமாகிய வீண் முயற்சிகளை விட்டு, கோக்ஷத்திற்குக் காரணமாகிய யோக முயற்சியைச் செய்யவேண்டுமென்று தெளிந்து, அரசியற்றுதலினின்று நீங்கி, தவஞ்செய்யும் பொருட்டுத் தபோவனத்தை அடைந்தான்.
மந்திரிமார்கள் சிலநாள் ஆலோசித்துத் தெளிந்து, திருவஞ்சைக்களத்திலே திருத்தொண்டுசெய்து கொண்டிருக்கின்ற அச்சேரர் மரபிற்கு முதல்வராகிய பெருமாக்கோதை யாரிடத்திலேபோய், அவரை வணங்கி நின்று, "இம்மலைநாட்டை நீரே முடிசூடி அரசியற்றல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்ய; பெருமாக்கோதையார் "இவர்கள் வார்த்தை இன்பமயாகிய திருத்தொண்டுக்கு இடையூறாயிருக்கின்றது. சிவபத்தியிலே சிறிதும் வழுவாது அரசியற்றுதற்குத் திருவருள் உளதாயின், இதனை எம்பெருமானுக்கு விண்ணப்பஞ்செய்து அறிவேன்" என்று ஆலயத்தினுள்ளே பிரவேசித்து, சிவபெருமானை வணங்கி விண்ணப்பஞ்செய்து, அவருடைய திருவருளினாலே அவரிடத்தே வைத்த பத்திவழுவாது அரசியற்றுஞ் சத்தியையும், யாரும் யாவும் கழறினவைகளனைத்தையும் அறியும் அறிவையும், பாசமில்லாத மகாபராகிரமத்தையும் பெருங் கொடையையும், அரசருக்கு உரியபடை வாகனமுதலிய வெல்லாவற்றையும் கைவரப் பெற்று, நமஸ்கரித்துக்கொண்டு, புறத்தணைந்து, மந்திரிமார்களுடைய வேண்டுகோளுக்கு உடன்பட்டார். மந்திரிமார்கள் பெருங்களிப்புடையர்களாகி, அவரை நமஸ்கரித்தார்கள்.
கழறிற்றறிவாராகிய அப்பெருமாக்கோதையார், ஆன்மார்க்களெல்லாம் உய்யும் பொருட்டுச் சுபதினத்திலே சுபமுகூர்த்தத்திலே முடி சூடி, சிவாலயத்தை வலஞ்செய்து, சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து, யானை மேற்கொண்டு, கொற்றக்குடையும் வெண்சாமரமும் உரியவர்கள் தாங்க, மகா அலங்காரத்தோடு நகரிவலஞ் செய்தார். செய்யும்பொழுது, ஒருவண்ணான் தோளிலே உவர்ப்பொதி சுமந்துகொண்டு தமக்கு முன்னே வரக்கண்டு, அவனுடைய சரீரம் மழையினாலே கரைந்த உவர் ஊறப்பெற்று வெளுத்திருத்தலால், விபூதியை உத்தூளனஞ் செய்த சிவனடியாரது திருவேடம்போலுதலை உணர்ந்து, அந்த க்ஷணத்திலேதானே யானையினின்றும் இறங்கி பேராசையோடு விரைந்துசென்று, கைதொழுதார். அது கண்டவுடனே அவ்வண்ணான் மனங்கலங்கி, அவரை விழுந்து நமஸ்கரித்து, "அடியேனை யார் என்றுகொண்டது? அடியேன் அடிவண்ணான்" என்று சொல்ல; சேரமான் பெருமாணாயனாரும் "அடியேன் அடிச்சேரன். தேவரீர் திருநீற்றுவேடத்தை நினைப்பித்தீர். வருந்தாதே போம்" என்று சொல்லியருளினார். மந்திரிமார்கண் முதலாயினோரெல்லாரும் சேரமான்பெருமாணாயனாருடைய சங்கமபத்தி மிகுதியைக் கண்டு, ஆச்சரியமடைந்து, சிரசின்மேலே அஞ்சலி செய்து தோத்திரம் பண்ணினார்கள். சேரமான் பெருமாணாயனார் யானைமேலேறி, நகரியை வலங்கொண்டு மாளிகை வாயிலிலே புகுந்து, யானையினின்றும் இறங்கி மண்டபத்தை அடைந்து, இரத்தினசிங்காசனத்திலேறி, வெண்கொற்றக் குடைநிழற்ற, வெண்சாமரம் வீச, அரசர்கள் மலர்தூவி வணங்கித் துதிக்க, வீற்றிருந்தருளினார். இங்ஙனமிருந்து, மனுநீதிநெறியை நடத்தி, எண்ணிறந்த அரசர்கள் திறைகொணர அகத்தும் புறத்தும் பகையை அறுத்து, சைவ சமயம் அபிவிருத்தி யாகும்படி அரசியற்றுவாராயினார்.
இப்படி நிகழுங்காலத்திலே, பாண்டிநாட்டிலே மதுரையில் எழுந்தருளியிருக்குஞ் சோமசுந்தரக்கடவுள் தம்மை அன்பினோடும் இசைப்பாட்டினாலே துதிக்கின்ற பாணபத்திரருக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடுத்தருளுதற்குத் திருவுளங்கொண்டு, இரவில் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "உனக்குப்பொன் இரத்தினம் பட்டாடை முதலியவைகளெல்லாவற்றையும் நீ வேண்டியபடி குறைவின்றித் தரும்பொருட்டு, நம்மேல் எப்பொழுதும் அன்புடையனாகிய சேரனுக்கு ஓலை தருவோம் தாழ்க்காமற்போய் வா" என்று அருளிச் செய்து,
"மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பானிற வரிச்சிற
கன்னம் பயில்பொழி லால வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்முப் படியெனப் பாவலர்க்
குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க
பண்பா லியாழ்பயில் பாண பத்திரன்
றன்போ லென்பா லன்பன் றன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே"
என்னுந் திருப்பாசுரத்தை வரைந்த திருமுகத்தைக் கொடுத்தருளினார்.
பாணபத்திரர் அத்திருமுகத்தைத் தலைமேற்கொண்டு, அப்பொழுதே புறப்பட்டு, மலைநாட்டிற்சென்று, கொடுங்கோளுரை அடைந்து, மாளிகைக்கு முன்வந்து, சேரமான் பெருமாணாயனாருக்கு அறிவித்தார். உடனே அவர் சிரசின் மேலே கைகுவித்து, மிகுந்த அன்பினோடுங் கண்ணீர் சொரிய எழுந்து மாளிகைக்குப் புறத்தில் வந்து, பாணபத்திரரைப் பல முறை வணங்கி, "சுவாமி! தேவரீர் அடியேனை ஒருபொருளென மதித்துத் திருமுகங் கொண்டு வந்தீரே" என்றார். அப்பொழுது பாணபத்திரர் சிவபிரானுடைய திருமுகத்தைக் கையிலே கொடுத்து வணங்க, சேரமான்பெருமாணாயனார் அதனை முடிமேற்கொண்டு கூத்தாடி, மொழி குழற, ஆன்ந்தவருவி சொரிய, பரவசராய்ப் பூமியிலே பலமுறை விழுந்தார். திருமுகத்தைப் பலதரம் வணங்கி, அதனை வாசித்து, திருவருளைத் துதித்து; மாளிகையினுள்ளே புகுந்து, மந்திரிமார்களை நோக்கி, "நம்முடைய குல மாளிகையில் இருக்கின்ற பண்டாரமுழுதையும் பொதி செய்து ஆளின்மேல் ஏற்றிக் கொண்டு வாருங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க; அவர்கள் ஏற்றிக் கொண்டுவந்து வணங்கினார்கள். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்கு அந்தத் தனங்களை வெவ்வேறாகக் காட்டி, "சுவாமீ! தேவரீர் இவைகளையும் யானை குதிரை தேர் காலாள் என்னுஞ் சதுரங்கங்களையும் அடியேனுடைய அரசையுங் கைக்கொண்டருளும்" என்று சொல்ல, பாணபத்திரர் தமக்குச் சேரமான்பெருமாணாயனார் தந்த தனங்களெல்லாவற்றையுங் கண்டு, மனமகிழ்ந்து, அதிசயித்து, அவரைநோக்கி, "சுவாமீ! அடியேன் எனக்கு வேண்டுவனவற்றை மாத்திரங்கொள்ளும் பொருட்டே சிவாஞ்ஞை அரசையும் அரசுறுப்பையும் தேவரீரே கைக்கொண்டருளும்" என்று சொல்லி வணங்கினார். சேரமான்பெருமாணாயனாரும் சிவாஞ்ஞையை மறுத்தற்கு அஞ்சி, அதற்கு உடன்பட்டார் பாணபத்திரர்தனங்களெல்லாவற்றையும் யானை குதிரை உள்ளிட்டனவற்றுள் வேண்டுவனவற்றையுங்கொண்டு, ஓர் யானைமேல் ஏறிக்கொண்டுபோனார். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்குப் பின் கண்ணீர் சொரிய, கைதொழுது கொண்டு செல்ல, பாணபத்திரர் நகர்ப்புறத்தில் அவரிடத்திலே விடைபெற்றுக்கொண்டு போய், மதுரையை அடைந்தார்.
சேரமான்பெருமாணாயனார், ஒருநாள் முன்போலப் பூஜாந்தத்திலே சபாநாயகருடைய திருச்சிலம்பொலி தமக்குக் கேளாதொழிய, மனமயங்கி, 'அடியேன் யாது பிழை செய்தேனோ" என்று பொருமி "இனி இந்தத் தேகத்தினால் அடையும் பேரின்பம் யாது" என்று உடைவாளை உருவித் தமது மார்பிலே நாட்ட, சபாநாயகர் விரைந்து திருச்சிலம்பொலியைக் கேட்பித்தார். உடனே நாயனார் உடைவாளை அகற்றி நமஸ்காரம் பண்ணித் தோத்திரஞ்செய்து, "எம்பெருமானே! அத்திருவருளை முன் செய்யாதொழிந்தது என்னை" என்றார். அப்பொழுது சபாநாயகர் சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்தி நாயனாரை நினைப்பிக்கும் பொருட்டு, எதிர் நின்றருளாது, "வன்றொண்டனாகிய சுந்தரன் கனகசபையின் கண்ணே நமது ஆனந்த நிருத்தத்தை வந்து வணங்கிப் பதிகம் பாடுதலால், நாம் நின்று அதனைக் கேட்டு வரத்தாழ்த்தோம்" என்னுந்திருவாக்கை அருளிச் செய்தார். சேரமான்பெருமாணாயனார் "அடியார்களுக்கு இவர் அருளுங்கருணை இருந்தவாறு என்னை" என்று வியந்து கனகசபையை வணங்கி வன்றொண்டரையும் தரிசித்தல் வேண்டும் என்று விரும்பி, சுபதினத்திலே திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளியிருக்கும் கடவுளை வணங்கிக் கொண்டு, சேனைகளோடு புறப்பட்டுப்போய்ச் சிதம்பரத்தை அடைந்து, கனகசபையிலே திருநிருத்தஞ்செய்தருளும் சபாநாயகரை வணங்கி, சிவானந்தக்கடலுள் அமிழ்த்தி, பொன்வண்ணத்தந்தாதி பாடியருளினார். சபாநாயகர் அதற்குப் பரிசிலாகத் தமது குஞ்சிதபாதத்தினது திருச்சிலம்பின் ஓசையை எதிரே கேட்பித்தார். சேரமான்பெருமாணாயனார் காலந்தோறும் சபாநாயகரைத் தரிசனஞ் செய்து கொண்டு அத்திருப்பதியில் இருந்தார்.
சிலநாளாயினபின், சுந்தரமூர்த்திநாயனாரைத் தரிசித்து வணங்குதற்கு விரும்பிப் புறப்பட்டு, இடையில் உள்ள சிவஸ்தலங்களை வணங்கிக்கொண்டு, திருவாரூரை அடைந்து, தம்மை எதிர்கொண்ட சுந்தரமூர்த்திநாயனாரை நமஸ்கரித்து, அவரோடு திருக்கோயிற்சென்று, வன்மீகநாதரை வணங்கி, திருமும்மணிக்கோவைபாடி, பரவையார் வீட்டிலே போய், சுந்தரமூர்த்திநாயனாரோடும் இருந்தார். சிலதினஞ் சென்றபின், சுந்தரமூர்த்திநாயனாரோடும் திருவாரூரை அகன்று, வேதாரணியத்தை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து, திருவந்தாதி பாடினார். அதன்பின் பாண்டிநாட்டிற் சென்று, அங்குள்ள மதுரை முதலாகிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு, சுந்தரமூர்த்திநாயனாரோடுந் திருவாரூருக்குத் திரும்பிவந்து, அவரோடுஞ் சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார். பலநாட்சென்றபின், சுந்தரமூர்த்திநாயனாரைத் தம்முடைய ஊருக்கு வரும்படி பிரார்த்தித்து, அழைத்துக் கொண்டு சென்று, தம்முடைய கொடுங்கோளுரை அடைந்து, அவரோடும் இருந்தார். ஒருநாள் சுந்தரமூர்த்திநாயனார் வன்மீகநாதரை நினைத்து உருகி, திருவாருருக்குப் போம்படி எழுந்துசெல்ல; சேரமான்பெருமாணாயனார் பிரிவாற்றாதவராகி, எழுந்து அவரைப் பின்றொடர்ந்து, போகாதபடி தடுத்து, அதற்கு அவர் உடன்படாமை கண்டு, மந்திரிகளைக் கொண்டு தம்முடைய திருமாளிகையில் உள்ள பண்டாரமுழுதையும் பொதிசெய்து ஆட்களின்மேலே ஏற்றுவித்து, சுந்தரமூர்த்திநாயனாருக்கு முன் செல்லும்படி அனுப்பி, அந்நாயனாரை விழுந்து நமஸ்கரித்தார். சுந்தரமூர்த்திநாயனார் சேரமான்பெருமாணாயனாரைத் தழுவி, விடைகொடுத்துச் சென்று, திருவாரூரை அடைந்தார். சுந்தரமூர்த்திநாயனாரிடத்திலே விடைபெற்ற சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனார் மறவாத சிந்தையோடு, கொடுங்கோளுரிலே அரசு செய்து கொண்டிருந்தார்.
நெடுநாளாயினபின், சுந்தரமூர்த்திநாயனார் பின்னுங் கொடுங்கோளூருக்கு வந்து, சேரமான்பெருமாணாயனாரோடும் எழுந்தருளியிருந்தார். பலநாளாயினபின், ஒருநாள் சேரமான்பெருமாணாயனாரோடும் எழுந்தருளியிருந்தார். பலநாளாயினபின், ஒருநாள் சேரமான்பெருமாணாயனார் ஸ்நானம் பண்ணும்பொழுது, சுந்தரமூர்த்திநாயனார் திருக்கைலாசத்துக்குப் போய், சுவாமிதரிசனஞ்செய்து, திருக்கைலாசத்தினின்றும் சிவபெருமானால் அனுப்பப்பட்ட வெள்ளையானையின்மேல் ஏறி, தம்முடைய தோழராகிய சேரமான்பெருமாணாயனாரை நினைத்துக்கொண்டு சென்றார். சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனாருடைய செயலை அறிந்து, அந்தக்ஷணத்தில் அருகிலே நின்ற ஓர் குதிரையில் ஏறிக்கொண்டு திருவஞ்சைக்களத்துக்குப்போய் வெள்ளையானையின் மேற்கொண்டு ஆகாயத்திற் செல்லுஞ் சுந்தரமூர்த்திநாயனாரை கண்டு, தாம் ஏறிய குதிரையின் செவியிலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதியருளினார். உடனே அந்தக் குதிரையானது ஆகாயத்திலே பாய்ந்து சுந்தரமூர்த்திநாயனாருடைய வெள்ளையானையை அடைந்து, அதனை வலஞ்செய்து அதற்கு முன்னாகச் சென்றது. சேரமான்பெருமாணாயனாருடைய படைவீரர்கள் குதிரையிற்செல்லும் அந்நாயனாரைத் தங்கள் கண்ணுக்குப் புலப்படும் எல்லை வரைக்கும் ஆகாயத்திலே கண்டு, பின் காணாமையால், மிகுந்த திடபத்தியினாலே உருவிய உடைவாட்களினால் தங்கள் தங்கள் தேகத்தை வீழ்த்தி, வீரயாக்கையைப் பெற்றுப்போய், சேரமான்பெருமாணாயனாருக்கு முற்பட்டு, அவரைச் சேவித்துக் கொண்டு சென்றார்கள். சேரமான்பெருமாணாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரும், திருக்கைலாசத்தின் தெற்குவாயிலுக்கு முன் போனவுடனே, குதிரையினின்றும் யானையினின்றும் இறங்கி, பலவாயில்களையும் கடந்து, திருவணுக்கன்றிரு வாயிலை அடைந்தார்கள். அங்கே சேரமான்பெருமாணாயனார் தடைப்பட்டு நிற்க; சுந்தரமூர்த்திநாயனார் உள்ளே போய்ச் சிவசந்நிதானத்திலே விழுந்துநமஸ்கரித்து எழுந்து, ஸ்தோத்திரம்பண்ணி, "சுவாமீ! தேவரீருடைய திருவடிகளை அடையும் பொருட்டுச் சேரமான்பெருமான் திருவணுக்கன்றிருவாயிலின் புறத்திலே வந்து நிற்கின்றார்" என்று விண்ணப்பஞ்செய்தார். பரமசிவன் சேரமான்பெருமாணாயனாரை உள்ளே அழைப்பிக்க; அவர் விரைந்து வந்து சந்நிதானத்திலே நமஸ்கரித்துத் தோத்திரம்பண்ணினார். பரமசிவன் திருமுறுவல்செய்து, "இங்கே நாம் அழையாதிருக்க, நீ வந்ததென்னன" என்று அருளி செய்ய, சேரமான்பெருமாணாயனார் அஞ்சலி செய்து நின்று, "சுவாமீ! சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து அவர் ஏறிய வெள்ளையானைக்குமுன் அவரைச் சேவித்துக்கொண்டு வந்தேன். தேவரீர் பொழிகின்ற பெருங்கருணைவெள்ளம் முன்கொண்டு புகுதலால், திருமுன்பு வரப்பெற்றேன். இனி ஒரு விண்ணப்பம் உண்டு, அரிபிரமேந்திராதிதேவர்களாலும் முனிவர்களாலும் வேதங்களாலும் துதிக்கப்படுதற்கு அரிய பெருமையையுடைய தேவரீர்மேல் அன்பினாலே தேவரீரது திருவருள்கொண்டு திருவுலாப்பாடினேன். அதனைத் தேவரீர் திருச்செவி சாத்தல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்தார். அப்பொழுது சிவபெருமான் "சேரனே! அவ்வுலாவைச் சொல்லு" என்று திருவாய்மலர்ந்தருள; சேரமான்பெருமாணாயனாரும் அதனைக் கேட்பித்தார். சிவபெருமான் அதற்கு அருள்செய்து, "நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு" என்று திருவாய்மலர்ந்தருளினார். சேரமான்பெருமாணாயனார் சிவகணநாதராகிச் சுவாமியைச் சேவிப்பாராயினார். அவர் அருளிச்செய்த திருக்கைலாயஞானவுலாவைத் திருக்கைலாசகிரியிலே அன்று கேட்ட மாசாத்தரானவர் அதனைத்தரித்து, தமிழ்நாட்டிலே உள்ள திருப்பிடவூரிலே, வெளிப்படச்சொல்லி, பூமியிலே விளங்கும் பொருட்டு நாட்டியருளினார்.
திருச்சிற்றம்பலம்
http://vpoompalani05.wordpress.com/2014/07/29
திருப்புகழ் தோன்றிய வரலாறு
அருணகிரிநாதர் உலகை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்காகத் திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து
குதித்தபோது அவரைத் தன்செங்கையில் ஏந்தித் தன் கருணைத் திருப்பாதங்களைக் காட்டி ஆட்கொண்டான் முருகன்.
நினைக்க முத்தி அருளும் திருவண்ணாமலையில் அருணகிரிநாத சுவாமிகள்முருகப்பெருமானிடம் “சும்மா இரு சொல்லற” என்ற மௌன மந்திரோபதேசம் பெற்று நிர்விகற்ப சமாதியில் வீற்றிருக்க, முருகன் மயில் மிசைத்தோன்றி, “உலகம் உய்யத் திருப்புகழ் பாடுதி” என்றருள் புரிய அருணகிரியார் மறைகளாலும் சாற்றுதற்கரிய தேவரீரது புகழை “ஏடெழுதா முழு ஏழையாகிய” சிறியேன் எங்ஙனம் பாடுவேன் என்றும், “நாக்கைநீட்டு” என்று வேலின் நுனியால் “ஓம்” எனும் மந்திரத்தை எழுதினார்.சேந்தமிழ்ப் பரமாசாரியனாம் செவ்சேட்பெருமான தனது “ஞானமூறு செங்கனிவாய்” மலர்ந்து செந்தமிழால் “முத்தைத்தரு” என்று அடியெடுத்துக் கொடுக்கவே கடல் மடைதிறந்த வெள்ளம் போலத் திருப்புகழைப் பாடினார். முருகவேள் “வயலூருக்குவா” என்றருள் புரிய அருணகிரியார் வயலூர்சென்று பொய்யாக்கணபதி சந்நிதியில் நின்று “கைத்தலம் நிறைகனி” என்ற திருப்புகழைப்பாடினார். முருகன் கனவிலும் நனவிலும் அடிக்கடி தரிசனந்தந்தருள் புரிந்ததும் தெய்வீகம் பொருந்திய திருத்தலமானபடியாலும் வயலூரையும் திருப்புகழில் இடையிடையே பாடினார்.முருகன் திருவடிபட்டு அனுக்கிரகம் பெற்ற ஒப்பற்ற பாமாலைதான் தித்திக்கும் திருப்புகழ்.
கந்தவேளின் திருவடிகள் மூன்று இடங்களிற்பட்டன.மயில்மீது, தேவர்தலைமீது, மூன்றாவது திருப்புகழ் ஏட்டில் எத்தனையோ சிறப்புக்கள் மிக்கதிருப்புகழை இடையறாது அன்புடன் ஓதினால் முருகன் நம் வயப்படுவான். திருப்புகழை ஓத ஆசைப்பட்டாலே போதும் எத்துணைப் பாவங்கள் புரிந்தாரேனும் பாவநாசகனாகிய குமரக்கடவுள் தரிசனையுண்டாகுமேல் பாவங்கள் முழுவதும் நீங்கித் தூயவராவார். திருப்புகழின் சந்தத்திற்கு இணையான ஒன்று எந்த மொழிஇலக்கியத்திலுமில்லை. விந்தையான சந்தம் கொண்டு சிந்தைகவர்வது.சங்கத்தமிழின் தலைமைப்புலவனாம் குமரவேளைச் சந்தத்தமிழிற் பாடித் திருப்புகழ் ஆக்கியவர் அருணகிரிநாதர். நம் பிறவிப் பந்தம்களைய வல்ல சங்கத்தமிழ்நூல் “திருப்புகழ்”
பேரின்பப் பெருவெள்ளம் அது. படிப்போரைப் பக்தி வெள்ளத்தில் திக்குமுக்காடச் செய்யும் தெய்வீகத்தேனே அருணகிரியின் இலக்கியம். முருகன் திருவருளை வேண்டிச் “சந்தக்கடல் என்று கூறுமளவில் பல ஆயிரம் பாமாலைகளை முருகன் திருவடிகளிற் சூட்டி மகிழ்ந்தார் அருணகிரிநாதர். இன்று நமக்குக் கிடைப்பவை 1328 திருப்புகழ்ப் பாடல்களே.ஆறுபடைவீடுகள் கதிர்காமம் மற்றும் அநேக தலங்களிற் கோயில் கொண்டிருக்கும் எம் பெருமானைப் பாடியுள்ளார். உலகமெலாம் உய்வுபெறும் பொருட்டு ஞானப்பெருவெளியில் அருவரதம் தாண்டவஞ்செய்யும் நடனசபாபதிகளிக்க அவர்முன் குழந்தைக் குமரவேள் திருநடனம் புரிவர். தண்டையும் அழகிய வெண்டையும், கிண்கிணியும், சதங்கையும் இனிய ஒலியுடைய வீரக்கழலும், சிலம்பும் இனிது ஒலிக்கச் சிவபிரானது திருமுன் அன்பான இனிய நடனம் புரிந்து மிக்க மகிழ்ச்சியடைந்து நின்ற அன்புபோல, அடியேனும் அத்திரு நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியடையுமாறு கடப்பமலர்மாலையும் அழகிய மணிமகுடங்களும் தாமரைமலர் போன்ற சிவந்த திருக்கரங்களும் ஒளிவீசும் வேலாயுதமும், கருணைபுரிகின்ற திருக்கண்களும், ஆறு திருமுகங்களும், சந்திரகிரணம் போன்ற குளிர்ந்த ஒளியும் அடியேனது கண்கள் குளிரத்தோன்றி அருள்புரியாயோ என அருணகிரியார் வேண்ட அவருக்குக் கந்தவேளின் திரு நடன தரினம் கிடைத்தது.
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்
முருகா…… உன் வேல் தடுக்கும்!
பூவை செங்குட்டுவன் எழுதிய அற்புதமான பாடல் வரிகள் இவை. கௌரி கல்யாணம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.
திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிமையாகச் சொல்ல முடியுமா என்று நம்மையும் சிந்திக்க வைக்கும் வரிகள் இவை.
திருப்புகழுக்கு அப்படி என்ன பெருமை? அதைப் புரிந்து கொள்ள சிலபல தகவல்களை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழுக்குக் கிடைத்த அற்புத மாமணி அருணகிரிநாதர். முருகன் திருவருளால் அருணகிரியின் வாக்கில் வந்த பாடல்கள்தான் திருப்புகழ் என்று தொகுக்கப்பட்டன. திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.
பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றிய பனிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே
குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும்,
கடம்ப மலர் மாலையையும்,
கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித் துளைத்த வேலையும்,
எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும்,
அருள் தருகின்ற சிற்றடிகளையும்,
பன்னிரண்டு தோள்களையும்,
இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில்திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே!
ஆக.. இந்தப் பாட்டில் இருந்து தெரிவது என்ன? திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ் என்ற சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.
திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலையில் எழுதி வைக்கவில்லை. அவர் பாடிய கோயில்களில் இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.
திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. முருகன் அருளால் பாடினார். அதாவது முருகன் அருணகிரியைப் பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு.
அப்படிப்பட்ட திருப்புகழ் பாடல்களை அருணகிரியே ரசித்திருக்கிறார். கேட்டவர்கள் ரசித்ததையும் கண்டிருக்கிறார்.
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக மறவேனே
அடியவர்களுக்கு அருளும் இறைவனே
ஆடும் மயில் ஏறி விளையாடும் குகனே
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
ஆகிய திசைகளில் உள்ள அன்பர்கள் எல்லாரும்
அற்புதம் அற்புதம் என்று ரசித்து ஓதுகின்ற
அழகு கவிநயமும் சந்தநயமும் மிகுந்து இருக்கும்
திருப்புகழை கொஞ்சமாவது நானும்
சொல்லும் படி செய்து உலகில் பரவுவதற்கு
வகை செய்த உன்னருளை மறக்க மாட்டேன் முருகனே!
இந்த வரிகளிலும் அருணகிரி முருகனுக்கு நன்றி கூறுகிறார். திருப்புகழ் என்ற பெயர் நிலைபெறும் வகையில் இந்தப் பாடலிலும் இடம் பெறுகிறது.
சரி. திருப்புகழ் பாடல்களிலேயே முதலில் பாடப்பட்டது எந்தப் பாடல் என்று தெரியுமா? எங்கு பாடப்பட்டது என்று தெரியுமா?
”முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற பாடல்தான் முதலில் பாடப்பட்டது. பாடப்பட்ட இடம் திருவண்ணாமலை கோயில்.
திருப்புகழ் பாடு என்று முருகன் பணித்த பின் “என்ன பாடுவது எப்படிப் பாடுவது” என்று புரியாமல் தவித்த அருணகிரிக்கு “முத்து முத்தாகப் பாடு” என்று முருகனே எடுத்துக் கொடுக்க பாடப்பட்டதுதான் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழ்.
இதில் முத்து என்பது அருணகிரியைப் பெற்ற அன்னை என்றொரு கருத்தும் உண்டு.
திரைப்படங்களிலும் திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக அருணகிரிநாதர் திரைப்படத்தில் மூன்று திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன.
1. முத்தைத் தரு பத்தித் திருநகை
2. பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
3. தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும்
அதற்குப் பல ஆண்டுகள் கழித்து இறையருட் கலைச்செல்வர் இயக்கத்தில் வெளிவந்த “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்தில் ”பாதிமதி நதி போது மணிசடை” என்ற திருவேரகத்(சுவாமிமலை) திருப்புகழ் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்தது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் “ஏறுமயில் ஏறிவிளையாடும்” என்ற திருப்புகழ் ”தம்பி பொண்டாட்டி” என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.
நாமும் திருப்புகழை ஓதி முருகனருளால் நல்லறிவும் நல்லருளும் பெற்று வளமோடு வாழ்வோம்
திருப்புகழ் தோன்றிய வரலாறு
அருணகிரிநாதர் உலகை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்காகத் திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து
குதித்தபோது அவரைத் தன்செங்கையில் ஏந்தித் தன் கருணைத் திருப்பாதங்களைக் காட்டி ஆட்கொண்டான் முருகன்.
நினைக்க முத்தி அருளும் திருவண்ணாமலையில் அருணகிரிநாத சுவாமிகள்முருகப்பெருமானிடம் “சும்மா இரு சொல்லற” என்ற மௌன மந்திரோபதேசம் பெற்று நிர்விகற்ப சமாதியில் வீற்றிருக்க, முருகன் மயில் மிசைத்தோன்றி, “உலகம் உய்யத் திருப்புகழ் பாடுதி” என்றருள் புரிய அருணகிரியார் மறைகளாலும் சாற்றுதற்கரிய தேவரீரது புகழை “ஏடெழுதா முழு ஏழையாகிய” சிறியேன் எங்ஙனம் பாடுவேன் என்றும், “நாக்கைநீட்டு” என்று வேலின் நுனியால் “ஓம்” எனும் மந்திரத்தை எழுதினார்.சேந்தமிழ்ப் பரமாசாரியனாம் செவ்சேட்பெருமான தனது “ஞானமூறு செங்கனிவாய்” மலர்ந்து செந்தமிழால் “முத்தைத்தரு” என்று அடியெடுத்துக் கொடுக்கவே கடல் மடைதிறந்த வெள்ளம் போலத் திருப்புகழைப் பாடினார். முருகவேள் “வயலூருக்குவா” என்றருள் புரிய அருணகிரியார் வயலூர்சென்று பொய்யாக்கணபதி சந்நிதியில் நின்று “கைத்தலம் நிறைகனி” என்ற திருப்புகழைப்பாடினார். முருகன் கனவிலும் நனவிலும் அடிக்கடி தரிசனந்தந்தருள் புரிந்ததும் தெய்வீகம் பொருந்திய திருத்தலமானபடியாலும் வயலூரையும் திருப்புகழில் இடையிடையே பாடினார்.முருகன் திருவடிபட்டு அனுக்கிரகம் பெற்ற ஒப்பற்ற பாமாலைதான் தித்திக்கும் திருப்புகழ்.
கந்தவேளின் திருவடிகள் மூன்று இடங்களிற்பட்டன.மயில்மீது, தேவர்தலைமீது, மூன்றாவது திருப்புகழ் ஏட்டில் எத்தனையோ சிறப்புக்கள் மிக்கதிருப்புகழை இடையறாது அன்புடன் ஓதினால் முருகன் நம் வயப்படுவான். திருப்புகழை ஓத ஆசைப்பட்டாலே போதும் எத்துணைப் பாவங்கள் புரிந்தாரேனும் பாவநாசகனாகிய குமரக்கடவுள் தரிசனையுண்டாகுமேல் பாவங்கள் முழுவதும் நீங்கித் தூயவராவார். திருப்புகழின் சந்தத்திற்கு இணையான ஒன்று எந்த மொழிஇலக்கியத்திலுமில்லை. விந்தையான சந்தம் கொண்டு சிந்தைகவர்வது.சங்கத்தமிழின் தலைமைப்புலவனாம் குமரவேளைச் சந்தத்தமிழிற் பாடித் திருப்புகழ் ஆக்கியவர் அருணகிரிநாதர். நம் பிறவிப் பந்தம்களைய வல்ல சங்கத்தமிழ்நூல் “திருப்புகழ்”
பேரின்பப் பெருவெள்ளம் அது. படிப்போரைப் பக்தி வெள்ளத்தில் திக்குமுக்காடச் செய்யும் தெய்வீகத்தேனே அருணகிரியின் இலக்கியம். முருகன் திருவருளை வேண்டிச் “சந்தக்கடல் என்று கூறுமளவில் பல ஆயிரம் பாமாலைகளை முருகன் திருவடிகளிற் சூட்டி மகிழ்ந்தார் அருணகிரிநாதர். இன்று நமக்குக் கிடைப்பவை 1328 திருப்புகழ்ப் பாடல்களே.ஆறுபடைவீடுகள் கதிர்காமம் மற்றும் அநேக தலங்களிற் கோயில் கொண்டிருக்கும் எம் பெருமானைப் பாடியுள்ளார். உலகமெலாம் உய்வுபெறும் பொருட்டு ஞானப்பெருவெளியில் அருவரதம் தாண்டவஞ்செய்யும் நடனசபாபதிகளிக்க அவர்முன் குழந்தைக் குமரவேள் திருநடனம் புரிவர். தண்டையும் அழகிய வெண்டையும், கிண்கிணியும், சதங்கையும் இனிய ஒலியுடைய வீரக்கழலும், சிலம்பும் இனிது ஒலிக்கச் சிவபிரானது திருமுன் அன்பான இனிய நடனம் புரிந்து மிக்க மகிழ்ச்சியடைந்து நின்ற அன்புபோல, அடியேனும் அத்திரு நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியடையுமாறு கடப்பமலர்மாலையும் அழகிய மணிமகுடங்களும் தாமரைமலர் போன்ற சிவந்த திருக்கரங்களும் ஒளிவீசும் வேலாயுதமும், கருணைபுரிகின்ற திருக்கண்களும், ஆறு திருமுகங்களும், சந்திரகிரணம் போன்ற குளிர்ந்த ஒளியும் அடியேனது கண்கள் குளிரத்தோன்றி அருள்புரியாயோ என அருணகிரியார் வேண்ட அவருக்குக் கந்தவேளின் திரு நடன தரினம் கிடைத்தது.
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்
முருகா…… உன் வேல் தடுக்கும்!
பூவை செங்குட்டுவன் எழுதிய அற்புதமான பாடல் வரிகள் இவை. கௌரி கல்யாணம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.
திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிமையாகச் சொல்ல முடியுமா என்று நம்மையும் சிந்திக்க வைக்கும் வரிகள் இவை.
திருப்புகழுக்கு அப்படி என்ன பெருமை? அதைப் புரிந்து கொள்ள சிலபல தகவல்களை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழுக்குக் கிடைத்த அற்புத மாமணி அருணகிரிநாதர். முருகன் திருவருளால் அருணகிரியின் வாக்கில் வந்த பாடல்கள்தான் திருப்புகழ் என்று தொகுக்கப்பட்டன. திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.
பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றிய பனிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே
குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும்,
கடம்ப மலர் மாலையையும்,
கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித் துளைத்த வேலையும்,
எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும்,
அருள் தருகின்ற சிற்றடிகளையும்,
பன்னிரண்டு தோள்களையும்,
இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில்திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே!
ஆக.. இந்தப் பாட்டில் இருந்து தெரிவது என்ன? திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ் என்ற சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.
திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலையில் எழுதி வைக்கவில்லை. அவர் பாடிய கோயில்களில் இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.
திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. முருகன் அருளால் பாடினார். அதாவது முருகன் அருணகிரியைப் பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு.
அப்படிப்பட்ட திருப்புகழ் பாடல்களை அருணகிரியே ரசித்திருக்கிறார். கேட்டவர்கள் ரசித்ததையும் கண்டிருக்கிறார்.
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக மறவேனே
அடியவர்களுக்கு அருளும் இறைவனே
ஆடும் மயில் ஏறி விளையாடும் குகனே
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
ஆகிய திசைகளில் உள்ள அன்பர்கள் எல்லாரும்
அற்புதம் அற்புதம் என்று ரசித்து ஓதுகின்ற
அழகு கவிநயமும் சந்தநயமும் மிகுந்து இருக்கும்
திருப்புகழை கொஞ்சமாவது நானும்
சொல்லும் படி செய்து உலகில் பரவுவதற்கு
வகை செய்த உன்னருளை மறக்க மாட்டேன் முருகனே!
இந்த வரிகளிலும் அருணகிரி முருகனுக்கு நன்றி கூறுகிறார். திருப்புகழ் என்ற பெயர் நிலைபெறும் வகையில் இந்தப் பாடலிலும் இடம் பெறுகிறது.
சரி. திருப்புகழ் பாடல்களிலேயே முதலில் பாடப்பட்டது எந்தப் பாடல் என்று தெரியுமா? எங்கு பாடப்பட்டது என்று தெரியுமா?
”முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற பாடல்தான் முதலில் பாடப்பட்டது. பாடப்பட்ட இடம் திருவண்ணாமலை கோயில்.
திருப்புகழ் பாடு என்று முருகன் பணித்த பின் “என்ன பாடுவது எப்படிப் பாடுவது” என்று புரியாமல் தவித்த அருணகிரிக்கு “முத்து முத்தாகப் பாடு” என்று முருகனே எடுத்துக் கொடுக்க பாடப்பட்டதுதான் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழ்.
இதில் முத்து என்பது அருணகிரியைப் பெற்ற அன்னை என்றொரு கருத்தும் உண்டு.
திரைப்படங்களிலும் திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக அருணகிரிநாதர் திரைப்படத்தில் மூன்று திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன.
1. முத்தைத் தரு பத்தித் திருநகை
2. பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
3. தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும்
அதற்குப் பல ஆண்டுகள் கழித்து இறையருட் கலைச்செல்வர் இயக்கத்தில் வெளிவந்த “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்தில் ”பாதிமதி நதி போது மணிசடை” என்ற திருவேரகத்(சுவாமிமலை) திருப்புகழ் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்தது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் “ஏறுமயில் ஏறிவிளையாடும்” என்ற திருப்புகழ் ”தம்பி பொண்டாட்டி” என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.
நாமும் திருப்புகழை ஓதி முருகனருளால் நல்லறிவும் நல்லருளும் பெற்று வளமோடு வாழ்வோம்
கழுகுமலை ஆடி அமாவாசை கிரிவலம்
(26,7,2014)
ஆன்மீக கடல், ஆன்மீகஅரசு வாசகவர் வட்டம் மூலம் இந்த கழுகுமலை கிரிவலம் ஒரு ஆன்மீகப் பயிற்சிக்காக ஆன்மீகஅரசு வலதைள நம் குருநாதர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு 26,7,2014 அன்று சுமார் 200 ஆன்மீக அடியாளர்கள் கலந்து கொண்டனர் இந்த சச்சங்கம நிகழ்வு மிக சிறப்பாகவே நடைபெற்றது,
பொதுவாக அமாவாசை என்றால் எல்லாம் வல்ல பரம்பொருளான , அருட்பெரும் ஜோதியின் வடிவான லிங்கேஸ்வரயை நினைவும், நம் மூதாதையர்களான பித்திருக்களை நினைந்து வணங்கி, அவர்களுக்கு விரதம் இருந்து ஆண்டுக்கொரு முறை திதி கொடுப்பது என்பது இந்து சமய மறபாக தொன்று தொட்டு இருந்துவருகிறது, அதிலும் வருடாந்திர பித்திரு திதி இந்த ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும், புரட்டாசி மாதத்தில்வரும் மகளாய அமாவாசை, மற்றும் தைமாதம் வரும் தை அமாவாசை ஆகிய தினங்கள் மிகவும் சிறப்பு பெற்றதாகும், இந்த நாட்களில் எல்லா சிவாலங்களிலும் சிற்ப்பு பெற்றதாயினும், ஆடி அமாவாசை என்றால் நமக்கு நினைக்கு வருவது சதுரகிரியும், மகளாய அமாவாசை என்றால், அம்பை பாபநாசமும், தை அமாவாசை என்றால் ராமேஸ்வரமும் முக்கியத்துவம் பெற்ற தலங்களாகவும், இந்த நாட்களில் இந்த தலங்களில் பக்தர்கள் கூட்டம் கணக்கில் அடங்காது என்பது சிவபக்தர்கள் யாவரும்அறிவர்.
இந்த முக்கியத்துவம் பெற்ற மேற்கண்ட அமாவாசை நாட்களில் நம்முன்னோர்களாகிய - பித்திருக்களுக்கு ஆண்டுக்கொரு முறை திதி கொடுப்பது என்பது யாவரும் அறிந்ததே,இந்துக்களின் ஒரு மறக்க முடியாத - மறக்கக் கூடாத செயலாக இது கருதப்பட்டு வருகிறது, இதனை ஒவ்வொரும் தனித்தனியாக புரோகிதர்கள் கொண்டு செய்ய முடியாதவர்களுக்கு, புண்ணிய தீர்த்த முள்ள சிவாலங்கள், புண்ணிய நதிக்கரைகள், மற்றும் புண்ணிய ஸ்தல கடற்கரைகள் ஆகிய இடங்களில் கூட்டம் கூட்டமாக செய்வதை நாம் காணலாம், இந்நிகழ்வின் தொடர்பாக நம் ஆன்மீக கடல், மற்றும், ஆன்மீக அரசு வலைத்தள நம் குருநாதர் அவர்களின் நல்லெண்ண முயற்சியால் , ஆன்மீககடல், ஆன்மீகஅரசு வலைத்தள வாசகர்வட்டார ஆன்மீ தொண்டர்களுக்காக இந்த சித்தர்கள் வாழும் கழுகமலையில் ஒரு ஆன்மீக சச்சங்க நிகழ்ச்சியும், சித்தர் ஈஸ்வரபட்டர் அவர்கள் நினைவாக அன்னதான நிகழ்வும் நடத்துவதென நோக்கில் கழுகுமலை ஊராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது, இதில் நம் குருநாதர், பித்திருக்களுக்கு திதி கொடுப்பதன் அவசியத்தையும், அதனால் விளையும், நன்மையும, செய்யமுடியாத பட்சத்தில் ஏற்படும் தீங்குகளையும் தெளிபட விளக்கினார்,
இல்லங்களில் மங்கையர் திருவிளக்கு தீபம் ஏற்றுவது பற்றிய ஆன்மீக விளக்கங்களை அருளினார், அன்னார் விளக்கிய தெளிவுரைகள்
விளக்கின் அமைப்பு:
1, 8 அடுக்கு கொண்ட சுமார் 3 அடி உயரம் உள்ள விளக்கு - தாம் உட்கார்ந்து விளக்கு ஏற்றி வழிபடும் போது அவர்களி கண்இமைக்கு சமமாக தீபம் ஒளி அமைய வேண்டும்
2, ஐந்து முகம் கொண்டது மிகச்சிறப்பு - 4 முகம் கொண்ட விளக்குதான் இருந்தாலும் பயன்படுத்தலாம்,
3, தீபம் கிழக்கு திசையை நோக்கி எறிய விட வேண்டும்
4, தீபம் ஏற்றும் நேரம் : சூரிய உதயத்திற்கு முன் காலை 6 மணிக்குள் அல்லது சூரியன் அஸ்தமத்திற்கு பின் அதாவது மாலை 6 மணிக்கு பின்
5, குத்து விளக்கின் அடி குமிழ் பாகத்தில் காந்தம் பிடிக்காத சில்லவர் குங்கும் இட்ட குங்கும பாத்திரம்
6, குத்து விளக்கின் அடியில் மாம் பலகை தான் வைக்க வேண்டும் தாம்பூலத்தட்டு அல்லது வேறு தட்டு வைக்கக் கூடாது கூடிய வரை மாம்பலகையில் தான் விள்க்கு வைக்க வேண்டும்,
7, குத்து விளக்கை கழட்டி சுத்தம் செய்தல் வெள்ளிக்கிழமை கூடாது - ஒவ்வொரு வியாழக்கிழமையன்றே செய்து விடுவது சிறந்தது
8, தீப எண்ணெய் நல்ல எண்ணெய் பயன்படுத்தலாம், இருப்பினும் தீப வழிபாடு சிறக்க உங்கள் இல்லம் தெய்வீக மனம் பெற தங்களின் வேண்டுதல் நிறைவேற குருநாதரின் ஆராட்சியால் தயார்செய்த மூலிகை எண்ணெய் மிகமிக ஏற்படுடையது, தங்கள் எண்ண வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும்
இவ்வாறு குத்து விளக்கு தங்கள் தங்கள் இல்லங்களில் மங்கையர் தீபவழிபாடு செய்து சுத்தம செய்யும் நாளில் நாம் குத்துவிளக்கிற்கு அடியில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து திலகமிட்டுக் கொண்டால் அஸ்ட லட்சுமியின் கடாச்சகம் இந்த இல்லத்திற்கே கிடைக்கும் என்றார்
பின் சச்சங்க நிகழ்வு முடிந்தவுடன் " ஓம் சிவசிவ ஓம், ஓம் சிவசக்தி ஓம் " என்ற சிவ கோசத்துடன் கழுகுமலை கிரிவலம் புறப்பட்டது, கிரிவலப்பாதையில் உள்ள அருள்மிகு மிளகாய் வத்தல் சித்தர் ஜீவசமாதியில் குருபூசையும், அச் சித்தரிடம் அவரவர்கள் வேண்டுதல் வேண்டி கூட்டு பிராத்தனையும் நடந்தது. பின் கிரிவலப்பாதையில் ஈசான முலையான ஓர் இடத்தில் குருநாதர் ஏற்பாட்டின் படி பித்திருக்களுக்கான திதி கொடுப்பதற்கு ஓம் சிவசிவ ஓம் என்று கூறி எள்ளும் தண்ணீர் இறைத்து திதி எல்லோராலும் செய்யப்பட்டது,, பின் கிரிவலம் முடித்து, அருள்மிகு கழுகாசல மூர்த்தியின் வழிபாடும், பின் ஈஸ்வர பட்டர் நினைவாக அன்னதானமும் சிறப்புடன் நடந்து முடிவுற்றது, இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமான ஆன்மீக அடியார்கள், தொண்டர்கள் குருநாதரின் வலைதள வாசக அன்பர்கள் (followers) கலந்து கொண்டனர்
திருச்சிற்றம்பலம் - ஓம் சிவசிவ ஓம்
மேலும் சில ஆன்மீக தகவல்கள் தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
(26,7,2014)
ஆன்மீக கடல், ஆன்மீகஅரசு வாசகவர் வட்டம் மூலம் இந்த கழுகுமலை கிரிவலம் ஒரு ஆன்மீகப் பயிற்சிக்காக ஆன்மீகஅரசு வலதைள நம் குருநாதர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு 26,7,2014 அன்று சுமார் 200 ஆன்மீக அடியாளர்கள் கலந்து கொண்டனர் இந்த சச்சங்கம நிகழ்வு மிக சிறப்பாகவே நடைபெற்றது,
பொதுவாக அமாவாசை என்றால் எல்லாம் வல்ல பரம்பொருளான , அருட்பெரும் ஜோதியின் வடிவான லிங்கேஸ்வரயை நினைவும், நம் மூதாதையர்களான பித்திருக்களை நினைந்து வணங்கி, அவர்களுக்கு விரதம் இருந்து ஆண்டுக்கொரு முறை திதி கொடுப்பது என்பது இந்து சமய மறபாக தொன்று தொட்டு இருந்துவருகிறது, அதிலும் வருடாந்திர பித்திரு திதி இந்த ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும், புரட்டாசி மாதத்தில்வரும் மகளாய அமாவாசை, மற்றும் தைமாதம் வரும் தை அமாவாசை ஆகிய தினங்கள் மிகவும் சிறப்பு பெற்றதாகும், இந்த நாட்களில் எல்லா சிவாலங்களிலும் சிற்ப்பு பெற்றதாயினும், ஆடி அமாவாசை என்றால் நமக்கு நினைக்கு வருவது சதுரகிரியும், மகளாய அமாவாசை என்றால், அம்பை பாபநாசமும், தை அமாவாசை என்றால் ராமேஸ்வரமும் முக்கியத்துவம் பெற்ற தலங்களாகவும், இந்த நாட்களில் இந்த தலங்களில் பக்தர்கள் கூட்டம் கணக்கில் அடங்காது என்பது சிவபக்தர்கள் யாவரும்அறிவர்.
இந்த முக்கியத்துவம் பெற்ற மேற்கண்ட அமாவாசை நாட்களில் நம்முன்னோர்களாகிய - பித்திருக்களுக்கு ஆண்டுக்கொரு முறை திதி கொடுப்பது என்பது யாவரும் அறிந்ததே,இந்துக்களின் ஒரு மறக்க முடியாத - மறக்கக் கூடாத செயலாக இது கருதப்பட்டு வருகிறது, இதனை ஒவ்வொரும் தனித்தனியாக புரோகிதர்கள் கொண்டு செய்ய முடியாதவர்களுக்கு, புண்ணிய தீர்த்த முள்ள சிவாலங்கள், புண்ணிய நதிக்கரைகள், மற்றும் புண்ணிய ஸ்தல கடற்கரைகள் ஆகிய இடங்களில் கூட்டம் கூட்டமாக செய்வதை நாம் காணலாம், இந்நிகழ்வின் தொடர்பாக நம் ஆன்மீக கடல், மற்றும், ஆன்மீக அரசு வலைத்தள நம் குருநாதர் அவர்களின் நல்லெண்ண முயற்சியால் , ஆன்மீககடல், ஆன்மீகஅரசு வலைத்தள வாசகர்வட்டார ஆன்மீ தொண்டர்களுக்காக இந்த சித்தர்கள் வாழும் கழுகமலையில் ஒரு ஆன்மீக சச்சங்க நிகழ்ச்சியும், சித்தர் ஈஸ்வரபட்டர் அவர்கள் நினைவாக அன்னதான நிகழ்வும் நடத்துவதென நோக்கில் கழுகுமலை ஊராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது, இதில் நம் குருநாதர், பித்திருக்களுக்கு திதி கொடுப்பதன் அவசியத்தையும், அதனால் விளையும், நன்மையும, செய்யமுடியாத பட்சத்தில் ஏற்படும் தீங்குகளையும் தெளிபட விளக்கினார்,
இல்லங்களில் மங்கையர் திருவிளக்கு தீபம் ஏற்றுவது பற்றிய ஆன்மீக விளக்கங்களை அருளினார், அன்னார் விளக்கிய தெளிவுரைகள்
விளக்கின் அமைப்பு:
1, 8 அடுக்கு கொண்ட சுமார் 3 அடி உயரம் உள்ள விளக்கு - தாம் உட்கார்ந்து விளக்கு ஏற்றி வழிபடும் போது அவர்களி கண்இமைக்கு சமமாக தீபம் ஒளி அமைய வேண்டும்
2, ஐந்து முகம் கொண்டது மிகச்சிறப்பு - 4 முகம் கொண்ட விளக்குதான் இருந்தாலும் பயன்படுத்தலாம்,
3, தீபம் கிழக்கு திசையை நோக்கி எறிய விட வேண்டும்
4, தீபம் ஏற்றும் நேரம் : சூரிய உதயத்திற்கு முன் காலை 6 மணிக்குள் அல்லது சூரியன் அஸ்தமத்திற்கு பின் அதாவது மாலை 6 மணிக்கு பின்
5, குத்து விளக்கின் அடி குமிழ் பாகத்தில் காந்தம் பிடிக்காத சில்லவர் குங்கும் இட்ட குங்கும பாத்திரம்
6, குத்து விளக்கின் அடியில் மாம் பலகை தான் வைக்க வேண்டும் தாம்பூலத்தட்டு அல்லது வேறு தட்டு வைக்கக் கூடாது கூடிய வரை மாம்பலகையில் தான் விள்க்கு வைக்க வேண்டும்,
7, குத்து விளக்கை கழட்டி சுத்தம் செய்தல் வெள்ளிக்கிழமை கூடாது - ஒவ்வொரு வியாழக்கிழமையன்றே செய்து விடுவது சிறந்தது
8, தீப எண்ணெய் நல்ல எண்ணெய் பயன்படுத்தலாம், இருப்பினும் தீப வழிபாடு சிறக்க உங்கள் இல்லம் தெய்வீக மனம் பெற தங்களின் வேண்டுதல் நிறைவேற குருநாதரின் ஆராட்சியால் தயார்செய்த மூலிகை எண்ணெய் மிகமிக ஏற்படுடையது, தங்கள் எண்ண வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும்
இவ்வாறு குத்து விளக்கு தங்கள் தங்கள் இல்லங்களில் மங்கையர் தீபவழிபாடு செய்து சுத்தம செய்யும் நாளில் நாம் குத்துவிளக்கிற்கு அடியில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து திலகமிட்டுக் கொண்டால் அஸ்ட லட்சுமியின் கடாச்சகம் இந்த இல்லத்திற்கே கிடைக்கும் என்றார்
பின் சச்சங்க நிகழ்வு முடிந்தவுடன் " ஓம் சிவசிவ ஓம், ஓம் சிவசக்தி ஓம் " என்ற சிவ கோசத்துடன் கழுகுமலை கிரிவலம் புறப்பட்டது, கிரிவலப்பாதையில் உள்ள அருள்மிகு மிளகாய் வத்தல் சித்தர் ஜீவசமாதியில் குருபூசையும், அச் சித்தரிடம் அவரவர்கள் வேண்டுதல் வேண்டி கூட்டு பிராத்தனையும் நடந்தது. பின் கிரிவலப்பாதையில் ஈசான முலையான ஓர் இடத்தில் குருநாதர் ஏற்பாட்டின் படி பித்திருக்களுக்கான திதி கொடுப்பதற்கு ஓம் சிவசிவ ஓம் என்று கூறி எள்ளும் தண்ணீர் இறைத்து திதி எல்லோராலும் செய்யப்பட்டது,, பின் கிரிவலம் முடித்து, அருள்மிகு கழுகாசல மூர்த்தியின் வழிபாடும், பின் ஈஸ்வர பட்டர் நினைவாக அன்னதானமும் சிறப்புடன் நடந்து முடிவுற்றது, இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமான ஆன்மீக அடியார்கள், தொண்டர்கள் குருநாதரின் வலைதள வாசக அன்பர்கள் (followers) கலந்து கொண்டனர்
திருச்சிற்றம்பலம் - ஓம் சிவசிவ ஓம்
மேலும் சில ஆன்மீக தகவல்கள் தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
தமிழ் வேதங்களில் வாழ்வியல்- முதற் பணி ( காலைக்கடன்)
உலகில் எண்ணாயிரம் கோடி சீவராசிக்ள உள்ளன என்கிறார்கள், அவற்றுள் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளவன் மனிதன். இறைவர் நமக்கு இந்த அருமையான உடல், நல்ல மனம், புத்தி, முதலிய கரணங்களை அளித்துள்ளார், அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது, என அவ்வையார் அன்றே பாடியுள்ளார், எனவே பிறத்ததற்கரிய பிறப்பு மானிட பிறப்பு.
பார்ப்பதற்குக் கண்களையும், கேட்பதற்கு செவிகளையும், உழைப்பதற்கு கை,கால் உடம்பையும், பேசுவதற்கு வாய், நல்ல அறிவு ஆகியவற்றை அளித்துள்ளார், இத்துடன் அமையாது, குடிப்பதற்கு தண்ணீர், சுவாசிக்க காற்று, உண்பதற்கு கனிகள், காய்கள், ஒளிக்கு சூரியன், சந்திரன், ஆகியவற்றையும் நமக்காக படைத்துள்ளார்,
ஒரு பொருளைப் பார்க்கும் போது அப்பொருளை செய்தவர் ஒருவர் இருக்க வேண்டும், இதைப்போல இந்த உலகைப் பார்க்கும் போது அந்த உலகம் நியதியாக இயங்குவதை காணும் பொழுதும் இதற்கு மூலகாரணமாக ஒருவர் இருக்க வேண்டும், என்ற நினைக்க வேண்டும்.
சூரியன் காலை 6 மணிக்கு உதிக்கிறான், மாலை 6 மணிக்கு மறைகிறான்,தாவரங்கள் குறிப்பிட்ட காலத்தில் பூக்கின்றன, மனிதனுக்காக உணவைத்தருகின்றன, நாம் விடும் அசுத்தக்காற்றை அது சுவாசித்து நமக்கு வேண்டிய பிராண காற்றை அவை வெளியிடுகின்றன, குறிப்பிட்ட காலங்களில் காய்கனிகள் உண்டாகின்றன, இந்த நிகழ்வுகளை எந்த அரசாங்கமோ எந்த வரன்முறையே பின்பற்றப்படுவதில்லை, உலகம் ஒரு நியதியில் இயங்குவதிலிருந்தே ஒரு மாபெரும் சக்தி உள்ளது என்பதை அறிவுடையர் உணர்வர்.
அந்த பேராற்றல் உடையவரைத்தான் கடவுள் என்கிறோம், இவ்வளவு நலன்கள் நமக்கு அளித்துள்ள இறைவன் வணங்கவேண்டிய கடன் - கடமை - நமக்குள்ளது, இதைத்தான் காலைக்கடன் - முதற்கடமை என்கிறார்கள் சான்றோர், வடமொழியில் சந்தியா வந்தனம் என்றார்கள்.
காலையில் எழும் பொழுதே மனம் மொழி மெய்களால் இறைவனை வழிபாடு செய்வது தான் நம் கடனை தீர்க்கும் வழியாகும், தற்காலத்தில் காலக்கடன் என்பதற்கு பொருள் தவறாக கொண்டுள்ளார்கள்.
மேலை விதியே விளையின் பயனே விரவார் பரமூன்று எரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக்கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. தமிழ் வேதம் -7
காலையில் ஒவ்வொருவரும் நாளும் தவறாது செய்ய வேண்டியது சிவவழிபாடு ஆகும், இந்த காலைக்கடனை நம் முன்னோர்கள் தவறாது செய்து வந்துள்ளார்கள்.
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சம்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனை
சூழ்ந்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடங்காலமே. - நாவுக்கரசர்
முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின்
அந்தி வாயொளி யான்தன் அண்ணாமலை
சிந்தியா எழுவார் வினை தீர்ந்திடும்
கந்த மாமலர் சூடும் கருத்தனே. திருநாவுக்கரசர் தமிழ் வேதம் 5
காலையில் எழும் பொழுதே கடவுளை வணங்குவது தான் நம்முடைய கடனைத் தீர்க்கும் வழியாகும்,இந்தக் கடனை தீர்ப்பவர்க்கு வினைகள் யாவும் தீர்ந்து ஒழியும் என்கிறார் கடவுளைக்கண்ட நாவுக்கரசர்
உலகியல் வாழ்விற்கு தெய்வ வழிபாடு வேண்டாம் என்பது, முள் நிறைந்த காட்டிலே நடந்து போகும் ஒருவன் சூரியனின் வெளிச்சம் வேண்டாம் என்பது போலாகும்,
தண்ணீர் படகை செலுத்துபவனுக்கு துடுப்பு அவசியமாகும், துடுப்பு இல்லாமல் படகை ஓட்ட முடியாது, துடுப்பு இல்லாமல் படகில் பயணம் செய்வது என்பது அறியாமையே ஆகும், இதைப்போல இறைவன் வழிபாடு இல்லாதவன் வாழ்க்கைத் துடுப்பு இல்லாத படகிற்கு ஒப்பாகும்,
நன்று நாள்தொறும் நம்வினை போயறும்
என்றம் இன்பம் தழைக்க இருக்கலாம்
சென்றுநீர் திருவேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே. அப்பர்
நாள்தோறும் இறைவரை வழிபட்டால் வாழ்வில் இன்பம் தழைக்க இனிதே வாழலாம், என்பது அப்பர்பெருமான் அனுபவ அறிவுரையாகும், எனவே காலையில் எழுந்தவுடன் சிவனை வழிபட்டு சிவானந்தம் பெறுவோம்,
திருசிற்றம்பலம் - ஓம் நமசிவாயம்
நன்றி தமிழ் வேதம்
மேலும் ஆன்மீக தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
உலகில் எண்ணாயிரம் கோடி சீவராசிக்ள உள்ளன என்கிறார்கள், அவற்றுள் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளவன் மனிதன். இறைவர் நமக்கு இந்த அருமையான உடல், நல்ல மனம், புத்தி, முதலிய கரணங்களை அளித்துள்ளார், அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது, என அவ்வையார் அன்றே பாடியுள்ளார், எனவே பிறத்ததற்கரிய பிறப்பு மானிட பிறப்பு.
பார்ப்பதற்குக் கண்களையும், கேட்பதற்கு செவிகளையும், உழைப்பதற்கு கை,கால் உடம்பையும், பேசுவதற்கு வாய், நல்ல அறிவு ஆகியவற்றை அளித்துள்ளார், இத்துடன் அமையாது, குடிப்பதற்கு தண்ணீர், சுவாசிக்க காற்று, உண்பதற்கு கனிகள், காய்கள், ஒளிக்கு சூரியன், சந்திரன், ஆகியவற்றையும் நமக்காக படைத்துள்ளார்,
ஒரு பொருளைப் பார்க்கும் போது அப்பொருளை செய்தவர் ஒருவர் இருக்க வேண்டும், இதைப்போல இந்த உலகைப் பார்க்கும் போது அந்த உலகம் நியதியாக இயங்குவதை காணும் பொழுதும் இதற்கு மூலகாரணமாக ஒருவர் இருக்க வேண்டும், என்ற நினைக்க வேண்டும்.
சூரியன் காலை 6 மணிக்கு உதிக்கிறான், மாலை 6 மணிக்கு மறைகிறான்,தாவரங்கள் குறிப்பிட்ட காலத்தில் பூக்கின்றன, மனிதனுக்காக உணவைத்தருகின்றன, நாம் விடும் அசுத்தக்காற்றை அது சுவாசித்து நமக்கு வேண்டிய பிராண காற்றை அவை வெளியிடுகின்றன, குறிப்பிட்ட காலங்களில் காய்கனிகள் உண்டாகின்றன, இந்த நிகழ்வுகளை எந்த அரசாங்கமோ எந்த வரன்முறையே பின்பற்றப்படுவதில்லை, உலகம் ஒரு நியதியில் இயங்குவதிலிருந்தே ஒரு மாபெரும் சக்தி உள்ளது என்பதை அறிவுடையர் உணர்வர்.
அந்த பேராற்றல் உடையவரைத்தான் கடவுள் என்கிறோம், இவ்வளவு நலன்கள் நமக்கு அளித்துள்ள இறைவன் வணங்கவேண்டிய கடன் - கடமை - நமக்குள்ளது, இதைத்தான் காலைக்கடன் - முதற்கடமை என்கிறார்கள் சான்றோர், வடமொழியில் சந்தியா வந்தனம் என்றார்கள்.
காலையில் எழும் பொழுதே மனம் மொழி மெய்களால் இறைவனை வழிபாடு செய்வது தான் நம் கடனை தீர்க்கும் வழியாகும், தற்காலத்தில் காலக்கடன் என்பதற்கு பொருள் தவறாக கொண்டுள்ளார்கள்.
மேலை விதியே விளையின் பயனே விரவார் பரமூன்று எரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக்கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. தமிழ் வேதம் -7
காலையில் ஒவ்வொருவரும் நாளும் தவறாது செய்ய வேண்டியது சிவவழிபாடு ஆகும், இந்த காலைக்கடனை நம் முன்னோர்கள் தவறாது செய்து வந்துள்ளார்கள்.
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சம்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனை
சூழ்ந்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடங்காலமே. - நாவுக்கரசர்
முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின்
அந்தி வாயொளி யான்தன் அண்ணாமலை
சிந்தியா எழுவார் வினை தீர்ந்திடும்
கந்த மாமலர் சூடும் கருத்தனே. திருநாவுக்கரசர் தமிழ் வேதம் 5
காலையில் எழும் பொழுதே கடவுளை வணங்குவது தான் நம்முடைய கடனைத் தீர்க்கும் வழியாகும்,இந்தக் கடனை தீர்ப்பவர்க்கு வினைகள் யாவும் தீர்ந்து ஒழியும் என்கிறார் கடவுளைக்கண்ட நாவுக்கரசர்
உலகியல் வாழ்விற்கு தெய்வ வழிபாடு வேண்டாம் என்பது, முள் நிறைந்த காட்டிலே நடந்து போகும் ஒருவன் சூரியனின் வெளிச்சம் வேண்டாம் என்பது போலாகும்,
தண்ணீர் படகை செலுத்துபவனுக்கு துடுப்பு அவசியமாகும், துடுப்பு இல்லாமல் படகை ஓட்ட முடியாது, துடுப்பு இல்லாமல் படகில் பயணம் செய்வது என்பது அறியாமையே ஆகும், இதைப்போல இறைவன் வழிபாடு இல்லாதவன் வாழ்க்கைத் துடுப்பு இல்லாத படகிற்கு ஒப்பாகும்,
நன்று நாள்தொறும் நம்வினை போயறும்
என்றம் இன்பம் தழைக்க இருக்கலாம்
சென்றுநீர் திருவேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே. அப்பர்
நாள்தோறும் இறைவரை வழிபட்டால் வாழ்வில் இன்பம் தழைக்க இனிதே வாழலாம், என்பது அப்பர்பெருமான் அனுபவ அறிவுரையாகும், எனவே காலையில் எழுந்தவுடன் சிவனை வழிபட்டு சிவானந்தம் பெறுவோம்,
திருசிற்றம்பலம் - ஓம் நமசிவாயம்
நன்றி தமிழ் வேதம்
மேலும் ஆன்மீக தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 30
யாதுமாகி நின்றவன்
சிவன்எங்கும் இருக்கிறான், அவனை நாம் காணவில்லை , எதிலும் இருக்கிறான் நாம் அறிவதில்லை. அவன் எப்போதும் இருக்கிறான் ஆனாலும் அவனை உணரும் முயற்சி நம்மிடம் இல்லை.திருமூலர் கூறுவார்: மனமென்றும் தேரேறிச் சென்று அந்த மாயனைப் பாருங்கள், அவன் புறக்கண்ணுக்கு புல்படுவதில்லை. உங்கள் சரீரத்திற்கண் அவன் விளங்குகின்றான். அடியார்கள் உள்ளந்தோறம் விளங்கி நிற்கும் அந்த பேரறிவாளனை நான் போற்றி வழிபடுகிறேன், என்று அவனது திருநாமத்தை சிந்தித்திருக்கும் மனம் ஆசைகளை விட்டு விலகிவிடும்,
நாமமோ ராயிரம் ஓதுமின் நாதனை
ஏமமோ ராயிரத் துள்ளே இசைவீர்கள்
ஓமமோ ராயிரம் ஓதவல் லாரவர்
காமமோ ராயிரம் கண்டொழிந் தாரே. என்கிறது திருமந்திரம்
ஆயிரம் திருநாமங்களால் சிவனை போற்றி வழிபடுங்கள், அதனால் ஒராயிரம் வகை சுகங்கள் அடையலாம், நீங்கள் சிரசின்மீது மனதை நிறுத்தி, ஞானசாதனையில் ஈடுபட்டால் ஆயிரமாயிரம் ஆசைகளும் நீங்கிப்போகும், இது பாடலின் கருத்து.
நீரின் தன்மையை அது தெளிவாக இருக்கம் நிலையில் தான் அறியமுடியும், கலங்கிய நீரில் சேறு கலந்திருக்கும், உங்கள் மனம் சரீரமயமான எண்ணத்தில் கலங்கியிருக்கும் போது உங்களால் எப்படி இறைவனின் இயல்வை அறிய முடியும்? குளத்து நீரை முகந்து குடத்தில் வைத்து தெளியச் செய்வதால் குடித்தற்காகும், சிந்தை தெளிவுற்றால் சீவனும் சிவனாகலாம், என்கிறது மந்திரம் பாடல்: மண்ணில் கலங்கிய நீர்போல் மனிதர்கள்.............
உள்ளங்கை நெல்லிக்கனி என்பார்கள் பிரத்யடச உண்மைக்கு நிருபணம் தேவைப்படாது. உண்மைத் தவமுடையாரின் உள்ளத்தில் சிவன் விளங்குவான், அவன் தூயவன் தூயநெறியை நமக்கு காட்டுவிப்பான், எனவேதான் அந்த தேவதேவனை நான் விரும்பினேன் அவனிடம் பொருந்தி உலகின் ஆசாபாசங்களைக் கடந்து சென்றேன் என்கிறார் சித்தர்.
தன்னை வழிபடுகிறவரின் தீயகுணத்தையும், தீய செயல்களையும் அவன் ஒழித்து கட்டுகிறான். அவனுடைய திருவடிகளே வீரர்கள் போய் சேரும் சொர்க்கம். சிவன் வாழ்வளிக்கும் ஐந்தெழுத்தில் விளங்கியிருப்பவன், அவனே உலகத்து உயிராகவும், நிலமாகவும், நீள்விசும்பிடை காற்றாகவும், கதிராகவும், மதியாகவும், ஆதியாகவும் அக்னியாகவும் உள்ளான். தன்னை புகலிடமாய் கொண்டவரை அவன் தாங்கி நிற்கிறான். உலகின் தனிப்பெருந் தலைவனாகிய பெருமான் ஆன்மாக்களின் பக்குவகத்திற்கேற்ப ஆட்கொள்கிறான்.
உலகம் ஏழுமம் அவனால் படைக்கப்பட்டது, அவற்றை கடந்து நிற்கும் பெருமையும் அவனுக்குண்டு தன் அடியார்கள் செல்லும் நெறியில் தானும் உடன் செல்வான். தூலத்திலும், சூக்குமத்திலும், சிவன் நிறைந்து விளங்குகின்றான், அவன் ஆதாரமாகிய உடலாகவும், அவன் ஆதாரம் கடந்த நாதமாகவும், நாத்தின் முடிவாகவும் (நாதாந்தம்) இருக்கிறான். அவனே உயிராகவும், உயிருக்கு வேறான அகண்ட வடிவமாகவும், இருக்கிறான், அவன்தான் தூலத்தையும் சூக்குமத்தையும் பொருத்தி இணைக்கும் பிராணசக்தி. ஆக்கப்பட்ட யாவும் அவனிடமிருந்தே தோன்றின, அவன் எல்லாமாகி நிற்பினும் உலகத்தாரால் காணப்ட தோன்றுபவன் அல்லன். அவன் தத்துவங்களின் தலைவன் அத்தனை தத்துவங்களும் தத்துவ விருத்தியேயாகும்.
அவன் புறக்கண்ணுக்கு புலப்படாதவன், என்பதால் இல்லை என்றாகி விடாது. நெகிழ்ந்துருகும் அன்பரிடம் அவன் விளங்கித் தோன்றுவான். அவன் மிகப் பழைமையானவன், பரிசுத்தன், நடுக்கமோ, குற்றமோ இல்லாதவன். உள்ளப்பண்போடு அவன்பால் அன்பு கொண்டவர்க்கு அவன் வெளிப்பட்டு அருள் புரிகிறான். அவனே ஆனந்தமாகவும், ஆனந்தத்தை அளிப்பவனாகவும், ஆனந்தில் திளைப்பவனாகவும் இருக்கிறான்,
அவன் எல்லப் புவனங்களிலும் நிறைந்த புண்ணியமூர்த்தி, பாமரிடத்தே அறியாமை என்கிற இருளிலும், ஞானியரிடத்தே ஞானக் கதிரொளியாகவும் அவன் உறைகின்றான். " எம்பெருமான் ஏழு உலகங்களையும் ( (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், கனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம் ) தாங்கி நிற்கும் வல்லமை கொண்டவன், அணுவை காட்டிலும் நுட்பமான தன்மையும், அவனுக்குண்டு, எட்டு திக்கிலும் உள்ள மலைகளுக்கெல்லாம் ஒப்பானது அவனுடைய வலிமை .அகன்ற கடலினும் பெரிது அவன் கொண்ட ஆற்றல். அவரவரின் தவத்திற்கேகற்ப அவன் அறியப்படுகிறான். துன்பக்கடலில் அழுந்தித் துயர்படுவோர்கள் உள்ளொளியாம் சிவத்தை கண்டு கரைசேரலாம்,
சிவஞானயரின் உணர்வும், உயிரும் சிவன், பொருட்களால் உண்டாகிற அறிவும், அறியப்படுகிற பொருளும் அவன் , எங்கும் பரவியிருப்பவன் இதயத்தில் இருப்பதும் உண்மை, ஆனால் எண்ணத்தில் அவனை அகப்படுத்தமுடியாது.
விண்ண வனாய் உலகேழுக்கும் மேல்உளன்
மண்ண வனாய் வலம சூழ்கடல் ஏழுக்கும்
தணண வனாய் அதுதன்மையின் நிற்பதோர்
கணணவன் ஆகிக் கலந்து நின்றானே. என்கிறது திருமந்திரம்
அவனே வானம, அவனே பூமி, மேலும் கீழும் வியாபித்திருப்பவன் அவன், ஏழு உலகங்களுக்கும் அப்பால் உள்ளவன், கடல்களுக்குக் குளிர்ச்சியை தருபவன், வானின் இயல்பும் நிலத்ததின் இயல்பும் அவனுடையது,
அவனே உயிர்க் கூட்டம், அவனே உயிரினங்களைச் செலுத்துவமு, அவனைத் தலைவன் என்று சிவஞானியர் போற்றுவதில் என்ன வியப்பு
சீவரின் உடம்பில் உயிர்
அண்ட ஆகாயத்தில் பிராணசக்தி
விரிந்த கதிர்களை உடைதிங்கள்
விழிகளில் விளங்கும் சிவம்...... என்று யாதும் அவனே.
அண்ட பாதாளங்களள் அவனுடையவை
எட்டுதிக்கிலும் இருப்பது அவன்தான்
அவனே அறிவின் வடிவம்
தொலைவில் இருப்பதும், அண்மையில் இருப்பதும் அவனே
அவன் மாறுபாடற்றவன்
உயிர்களுக்கு இன்பம் செய்பவன்
தத்துவங்களாகவும், தத்துவங்கள் கடந்தும் காணப்படுபவன்
எங்கும் அவனே அவனே சிவம்,
அன்பே சிவமாகவும் சிவமே அன்பாகவும் அமைந்தவன்,
அவனே ஞானத்தலைவனாகவும், ஓமத்தலைவனாகவும் ஒளித்தலைவனாகவும் அமைந்தவன்
திருச்சிற்றம்பலம் .... ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
யாதுமாகி நின்றவன்
சிவன்எங்கும் இருக்கிறான், அவனை நாம் காணவில்லை , எதிலும் இருக்கிறான் நாம் அறிவதில்லை. அவன் எப்போதும் இருக்கிறான் ஆனாலும் அவனை உணரும் முயற்சி நம்மிடம் இல்லை.திருமூலர் கூறுவார்: மனமென்றும் தேரேறிச் சென்று அந்த மாயனைப் பாருங்கள், அவன் புறக்கண்ணுக்கு புல்படுவதில்லை. உங்கள் சரீரத்திற்கண் அவன் விளங்குகின்றான். அடியார்கள் உள்ளந்தோறம் விளங்கி நிற்கும் அந்த பேரறிவாளனை நான் போற்றி வழிபடுகிறேன், என்று அவனது திருநாமத்தை சிந்தித்திருக்கும் மனம் ஆசைகளை விட்டு விலகிவிடும்,
நாமமோ ராயிரம் ஓதுமின் நாதனை
ஏமமோ ராயிரத் துள்ளே இசைவீர்கள்
ஓமமோ ராயிரம் ஓதவல் லாரவர்
காமமோ ராயிரம் கண்டொழிந் தாரே. என்கிறது திருமந்திரம்
ஆயிரம் திருநாமங்களால் சிவனை போற்றி வழிபடுங்கள், அதனால் ஒராயிரம் வகை சுகங்கள் அடையலாம், நீங்கள் சிரசின்மீது மனதை நிறுத்தி, ஞானசாதனையில் ஈடுபட்டால் ஆயிரமாயிரம் ஆசைகளும் நீங்கிப்போகும், இது பாடலின் கருத்து.
நீரின் தன்மையை அது தெளிவாக இருக்கம் நிலையில் தான் அறியமுடியும், கலங்கிய நீரில் சேறு கலந்திருக்கும், உங்கள் மனம் சரீரமயமான எண்ணத்தில் கலங்கியிருக்கும் போது உங்களால் எப்படி இறைவனின் இயல்வை அறிய முடியும்? குளத்து நீரை முகந்து குடத்தில் வைத்து தெளியச் செய்வதால் குடித்தற்காகும், சிந்தை தெளிவுற்றால் சீவனும் சிவனாகலாம், என்கிறது மந்திரம் பாடல்: மண்ணில் கலங்கிய நீர்போல் மனிதர்கள்.............
உள்ளங்கை நெல்லிக்கனி என்பார்கள் பிரத்யடச உண்மைக்கு நிருபணம் தேவைப்படாது. உண்மைத் தவமுடையாரின் உள்ளத்தில் சிவன் விளங்குவான், அவன் தூயவன் தூயநெறியை நமக்கு காட்டுவிப்பான், எனவேதான் அந்த தேவதேவனை நான் விரும்பினேன் அவனிடம் பொருந்தி உலகின் ஆசாபாசங்களைக் கடந்து சென்றேன் என்கிறார் சித்தர்.
தன்னை வழிபடுகிறவரின் தீயகுணத்தையும், தீய செயல்களையும் அவன் ஒழித்து கட்டுகிறான். அவனுடைய திருவடிகளே வீரர்கள் போய் சேரும் சொர்க்கம். சிவன் வாழ்வளிக்கும் ஐந்தெழுத்தில் விளங்கியிருப்பவன், அவனே உலகத்து உயிராகவும், நிலமாகவும், நீள்விசும்பிடை காற்றாகவும், கதிராகவும், மதியாகவும், ஆதியாகவும் அக்னியாகவும் உள்ளான். தன்னை புகலிடமாய் கொண்டவரை அவன் தாங்கி நிற்கிறான். உலகின் தனிப்பெருந் தலைவனாகிய பெருமான் ஆன்மாக்களின் பக்குவகத்திற்கேற்ப ஆட்கொள்கிறான்.
உலகம் ஏழுமம் அவனால் படைக்கப்பட்டது, அவற்றை கடந்து நிற்கும் பெருமையும் அவனுக்குண்டு தன் அடியார்கள் செல்லும் நெறியில் தானும் உடன் செல்வான். தூலத்திலும், சூக்குமத்திலும், சிவன் நிறைந்து விளங்குகின்றான், அவன் ஆதாரமாகிய உடலாகவும், அவன் ஆதாரம் கடந்த நாதமாகவும், நாத்தின் முடிவாகவும் (நாதாந்தம்) இருக்கிறான். அவனே உயிராகவும், உயிருக்கு வேறான அகண்ட வடிவமாகவும், இருக்கிறான், அவன்தான் தூலத்தையும் சூக்குமத்தையும் பொருத்தி இணைக்கும் பிராணசக்தி. ஆக்கப்பட்ட யாவும் அவனிடமிருந்தே தோன்றின, அவன் எல்லாமாகி நிற்பினும் உலகத்தாரால் காணப்ட தோன்றுபவன் அல்லன். அவன் தத்துவங்களின் தலைவன் அத்தனை தத்துவங்களும் தத்துவ விருத்தியேயாகும்.
அவன் புறக்கண்ணுக்கு புலப்படாதவன், என்பதால் இல்லை என்றாகி விடாது. நெகிழ்ந்துருகும் அன்பரிடம் அவன் விளங்கித் தோன்றுவான். அவன் மிகப் பழைமையானவன், பரிசுத்தன், நடுக்கமோ, குற்றமோ இல்லாதவன். உள்ளப்பண்போடு அவன்பால் அன்பு கொண்டவர்க்கு அவன் வெளிப்பட்டு அருள் புரிகிறான். அவனே ஆனந்தமாகவும், ஆனந்தத்தை அளிப்பவனாகவும், ஆனந்தில் திளைப்பவனாகவும் இருக்கிறான்,
அவன் எல்லப் புவனங்களிலும் நிறைந்த புண்ணியமூர்த்தி, பாமரிடத்தே அறியாமை என்கிற இருளிலும், ஞானியரிடத்தே ஞானக் கதிரொளியாகவும் அவன் உறைகின்றான். " எம்பெருமான் ஏழு உலகங்களையும் ( (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், கனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம் ) தாங்கி நிற்கும் வல்லமை கொண்டவன், அணுவை காட்டிலும் நுட்பமான தன்மையும், அவனுக்குண்டு, எட்டு திக்கிலும் உள்ள மலைகளுக்கெல்லாம் ஒப்பானது அவனுடைய வலிமை .அகன்ற கடலினும் பெரிது அவன் கொண்ட ஆற்றல். அவரவரின் தவத்திற்கேகற்ப அவன் அறியப்படுகிறான். துன்பக்கடலில் அழுந்தித் துயர்படுவோர்கள் உள்ளொளியாம் சிவத்தை கண்டு கரைசேரலாம்,
சிவஞானயரின் உணர்வும், உயிரும் சிவன், பொருட்களால் உண்டாகிற அறிவும், அறியப்படுகிற பொருளும் அவன் , எங்கும் பரவியிருப்பவன் இதயத்தில் இருப்பதும் உண்மை, ஆனால் எண்ணத்தில் அவனை அகப்படுத்தமுடியாது.
விண்ண வனாய் உலகேழுக்கும் மேல்உளன்
மண்ண வனாய் வலம சூழ்கடல் ஏழுக்கும்
தணண வனாய் அதுதன்மையின் நிற்பதோர்
கணணவன் ஆகிக் கலந்து நின்றானே. என்கிறது திருமந்திரம்
அவனே வானம, அவனே பூமி, மேலும் கீழும் வியாபித்திருப்பவன் அவன், ஏழு உலகங்களுக்கும் அப்பால் உள்ளவன், கடல்களுக்குக் குளிர்ச்சியை தருபவன், வானின் இயல்பும் நிலத்ததின் இயல்பும் அவனுடையது,
அவனே உயிர்க் கூட்டம், அவனே உயிரினங்களைச் செலுத்துவமு, அவனைத் தலைவன் என்று சிவஞானியர் போற்றுவதில் என்ன வியப்பு
சீவரின் உடம்பில் உயிர்
அண்ட ஆகாயத்தில் பிராணசக்தி
விரிந்த கதிர்களை உடைதிங்கள்
விழிகளில் விளங்கும் சிவம்...... என்று யாதும் அவனே.
அண்ட பாதாளங்களள் அவனுடையவை
எட்டுதிக்கிலும் இருப்பது அவன்தான்
அவனே அறிவின் வடிவம்
தொலைவில் இருப்பதும், அண்மையில் இருப்பதும் அவனே
அவன் மாறுபாடற்றவன்
உயிர்களுக்கு இன்பம் செய்பவன்
தத்துவங்களாகவும், தத்துவங்கள் கடந்தும் காணப்படுபவன்
எங்கும் அவனே அவனே சிவம்,
அன்பே சிவமாகவும் சிவமே அன்பாகவும் அமைந்தவன்,
அவனே ஞானத்தலைவனாகவும், ஓமத்தலைவனாகவும் ஒளித்தலைவனாகவும் அமைந்தவன்
திருச்சிற்றம்பலம் .... ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 29
ஒளியாய், ஒளிப்பயனாய்........
ஒளிமயமானவன் இறைவன் என்கிறார்கள்.
ஒளி என்கிற சொல்லுகுகு அறிவு, சுவாலை, நெருப்பு, ஜோதி, சூரியன்,சந்திரன் , தெளிவி, புகழ், கண்மணி என்ற அநேக பொருளுண்டு, அத்மையும் இறைவனுக்குப் பொருந்தும்,
அவன் - அறிவாளிஇ அன்பொளி, அழகொளி, சூரியன், சந்திரன், என்கிற முச்சுடர்க்கும் அவனே மூல ஒளி,
ஆன்ம ஒளியை அறிகின்ற மனம் அவ்வொளியில் தோய்ந்திட சிவன் விளங்குவான் என்கிறார் திருமூலர், உள்ளிருக்கும் பேரோளியை உணர்ந்தவர் உலகெங்கும் சென்றுவரும் ஆற்றலைப் பெறுவார், ( வள்ளாலார் இந்த அற்புத ஆற்றலைப் பெற்றவர்) ஆன்ம சோதியில் பொருந்திருத்தலால் அவருக்க உள்ளேயும் வெளியேயும் இருளில்லை. ஈசன் ஒரு மின்னல் கீற்றுப் போல் ஆன்மாவில் ஒளிர்கிறான், அவன் பிராணரூபமாய் விளங்கி உடலுக்கம் உள்ளத்துக்கும் ஆற்றலைத் தருவான்,
உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
உள்ளம் விட்டு ஓரடி நீங்காஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே!
இறைவன நமது மனமண்டலத்தில் பேரோளி வடிவில் இருப்பவன், ஒருபோதும் நம் மனதை விட்டு நீங்காதிருக்கிறான். இத்தகையவனை அகந்தை, ஊழ்விணை, மாயை, காரணமாய் நாம் காணத் தவறிவிடுகிறோம்,
தன்னையறிவது ஞானம்
அறியாதிருப்பது அஞ்ஞானம்
அறியாமை காரணமாய் ஆன்மா இருளில் மூழ்கிக் கிடக்கும், ஆனால் இறை வழிபாட்டின் மூலம் அந்த இருள் நீங்கி அது ஒளிபெறும், சூரிய, சந்திரனை கண்காளாய் கொண்டவன் அக்கினியை அவனது மூன்றாவது கண்ணாகக் கொண்டவன் ( நெற்றிக்கண்)
விண்வெளியும், மனிதமனமும் அவனால் ஒளிபெறுகின்றன, பேரோளியாய் விளங்குகிறது சிவம்.
சிவனை வழிபடுவதன் மூலம் ஒளியை பெருக்கி சிவத்திடம் ஒன்றுங்கள் என்கிறார் திருமூலர்
திருசிற்றம்பலம் - ஒம் நமசிவாயம்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
ஒளியாய், ஒளிப்பயனாய்........
ஒளிமயமானவன் இறைவன் என்கிறார்கள்.
ஒளி என்கிற சொல்லுகுகு அறிவு, சுவாலை, நெருப்பு, ஜோதி, சூரியன்,சந்திரன் , தெளிவி, புகழ், கண்மணி என்ற அநேக பொருளுண்டு, அத்மையும் இறைவனுக்குப் பொருந்தும்,
அவன் - அறிவாளிஇ அன்பொளி, அழகொளி, சூரியன், சந்திரன், என்கிற முச்சுடர்க்கும் அவனே மூல ஒளி,
ஆன்ம ஒளியை அறிகின்ற மனம் அவ்வொளியில் தோய்ந்திட சிவன் விளங்குவான் என்கிறார் திருமூலர், உள்ளிருக்கும் பேரோளியை உணர்ந்தவர் உலகெங்கும் சென்றுவரும் ஆற்றலைப் பெறுவார், ( வள்ளாலார் இந்த அற்புத ஆற்றலைப் பெற்றவர்) ஆன்ம சோதியில் பொருந்திருத்தலால் அவருக்க உள்ளேயும் வெளியேயும் இருளில்லை. ஈசன் ஒரு மின்னல் கீற்றுப் போல் ஆன்மாவில் ஒளிர்கிறான், அவன் பிராணரூபமாய் விளங்கி உடலுக்கம் உள்ளத்துக்கும் ஆற்றலைத் தருவான்,
உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
உள்ளம் விட்டு ஓரடி நீங்காஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே!
இறைவன நமது மனமண்டலத்தில் பேரோளி வடிவில் இருப்பவன், ஒருபோதும் நம் மனதை விட்டு நீங்காதிருக்கிறான். இத்தகையவனை அகந்தை, ஊழ்விணை, மாயை, காரணமாய் நாம் காணத் தவறிவிடுகிறோம்,
தன்னையறிவது ஞானம்
அறியாதிருப்பது அஞ்ஞானம்
அறியாமை காரணமாய் ஆன்மா இருளில் மூழ்கிக் கிடக்கும், ஆனால் இறை வழிபாட்டின் மூலம் அந்த இருள் நீங்கி அது ஒளிபெறும், சூரிய, சந்திரனை கண்காளாய் கொண்டவன் அக்கினியை அவனது மூன்றாவது கண்ணாகக் கொண்டவன் ( நெற்றிக்கண்)
விண்வெளியும், மனிதமனமும் அவனால் ஒளிபெறுகின்றன, பேரோளியாய் விளங்குகிறது சிவம்.
சிவனை வழிபடுவதன் மூலம் ஒளியை பெருக்கி சிவத்திடம் ஒன்றுங்கள் என்கிறார் திருமூலர்
திருசிற்றம்பலம் - ஒம் நமசிவாயம்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 28
ஞானி யார்?
யார் தெய்வத்தில் வாழ்கிறாரோ, பேரின்பத்தை அனுபவிக்கிறாரோ, அவரே ஞானி.
ஆனவம் , தன்னலம், தற்பெருமை, விருப்பு , வெறுப்பு, காமம், சினம், பேராசை, இவற்றில் இருந்து விலக முடிந்தவர் ஞானி.
கருணை, பொறுமை, அறிவுணர்வு, பிரபஞ்ச அன்பு, மனதின் சமநிலை, கொண்டவர் ஞானி.
ஞானியரின் ஆற்றலும், அருளாளரின் பெருந்தன்மையும், அத்தகையது. காலம் என்கிற மணற்பரப்பில் தங்கள் காலடிகளை அவர்கள் பதித்து சென்றார்கள். ஆன்மா, சார்ந்த தேடல் உள்ளவர்கள் உண்மையும், நம்பிக்கையும், கொண்டவராய் அந்த சுவடுகளைப் பின்பற்றி செல்கிறார்கள். ஞானிகள் இனம் மொழி எல்லை கடந்தவர்கள், அவர்கள் தொடங்கி வைத்த ஆன்மீக நீரோட்டம் காலவெளியைக் கடந்து செல்கிறது. ஆனால் அமைதியையும் ஞானத்தையும் பெறுதற்கான வேட்கை மக்களிடம் இருக்கிறதா? தங்கள் வாழ்க்கையையும், ஒழுக்கத்தையும், எதிர்காலத்தையும், மேம்படுத்தவே ஞானிகள் ஒளிவிளக்கேந்தி வருகிறார்கள், என்பதை மக்கள் உணரவேண்டும். அவர்களின் அன்பை பெற முடிந்தவர்கள் பாக்கியவான்கள்,
ஞானம் என்பது உருவாக்கப்பட்டதல்ல. சட்டென்று உதயமாவது அல்ல, அது தேடிப் பெறுவதல்ல தானாக வருவது. ஆன்மா சிவத்தன்மை பெறும் தன்னை அறிகிறபோது . இதனை திருமூலர் கீழ்கண்ட பாடல் வாயிலாக கூறுகிறார், பாடல்: நான் என்றும் தான் என்றும் நாடினேன்.............
" நான்வேறு, சிவன் வேறு, என்று எண்ணியிருந்தேன், என்னை தன்னில் அடக்கியவன் (இறைவன்) நான் என்றும் தான் என்றும் இரண்டு பொருட்கள் இல்லை, என்றுைரைத்தான் அவன். அப்போது என்னுடைய நான் அற்றுப் போனதை உணர்ந்தேன், என்கிறார்,
இறைவனின் பேராற்றலை, பெருங்கருணையை உணர்ந்தவராயிருங்கள், அவனுடைய நிறம், என்ன, வடிவம் என்ன, எது என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிராதீர்கள், உனக்கு கெடுதல் நேரிட்டாலும், அவருடைய நன்மையில் அக்கறை காட்டு இதுவே சிவன் பாற்கடல் அமுதை தேவர்கட்கு வழங்கி நஞ்சினை தானே விழுங்கி உலகிற்கு அறிவித்த நன்னெறி, நெறியில் நிற்பார்க்கு ஞானத்தை குறைவின்றி அளிப்பான் இறைவன், பாடல்: மிக்கர் அழுதுண்ண, நஞ்சுண்டமேலவன்..........
தான் உடலல்ல, அறிபவன் என்பதை ஆன்மா உணர்கின்ற போது அது சிவமான தன்மை பெற்றுவிடுகிறது. அருள்வழி நின்று தன்னை காண்பார்க்கு சிவன் தானே வெளிப்படுகின்றான். அன்புமிக்கவர்க்கு நீண்ட ஆயுளை அளிப்பதோடு அவனே உற்ற துணையாகின்றான்.
பூவில் இருந்து அதன் நிறத்தை யும் வாசத்தையும் வேறாய் பிரிக்க முடியுமா? அவ்விதப் பிணைப்பு சிவனுக்கும் சீவனுக்கும் அமைகிறபோது சீவனுக்கு போரானந்தம் கிட்டுகிறத. மெஞ்ஞான விளைவாகும் ஆனந்தம் அதுவே பரமானந்தம். சிவன் உங்கள் உள்ளத்தில் பதிய வேண்டுமானால் அவனை மன நெகிழ்ச்சியோடு வணங்குங்கள். பாடல்களால் துதியுங்கள், என்கிறார் சித்தர. தத்துவ்ஙகள் விட்டு, மல வாதனைகள் நீங்கி அவத்தைகள் கடந்து உண்மையான ஞான ஆனந்தத்தில் திளைக்க வேண்டும்.
ஞானியின் செயல்:
புலத்தின் தன்மை அறிந்து, மெய்ப்பொருளை உணர்ந்த ஞானிகள் கர்ம சட்டத்தை உடைத்தெறிவதில்லை, தங்களுடைய ஊழ்வினைகளை அவர்கள் அனுபவித்தே கழிப்பார்கள், சஞ்சித கர்மத்தை தீர்ப்பதோடு தற்போதைய பிறவியில் புதிய கர்மங்கள் ஏற்படாதவாறும் தடுத்து க் கொள்வர், பாடல்: தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்..................
மனம் , வாக்கு காயம் என்னும் முக்கரணங்களும் வினைகளும் பற்றிட மூலகாரணமாய் இருக்கும், ஆனால் அந்த முக்கரணங்களை உலகியலில் இருந்து விலக்கி, சிவனிடம் செலுத்ததினால் வினைகள் பற்றாது. ஞானிகள் கரணவகையில் செயல்படாதிருந்து வினைகளை வலக்குவர். பாடல்: மனவாக்கு காயத்தால் வல்வினை மூளும்.............
காண்கிற எதுவும் பரமாத்மாவாகி விடுகிறபோது ஞானம் முழுமை பெறும், எவர் உள்ளபடி அறிகிறாரோ, அவர் அடைகிறார் ஞானம்,
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
ஞானி யார்?
யார் தெய்வத்தில் வாழ்கிறாரோ, பேரின்பத்தை அனுபவிக்கிறாரோ, அவரே ஞானி.
ஆனவம் , தன்னலம், தற்பெருமை, விருப்பு , வெறுப்பு, காமம், சினம், பேராசை, இவற்றில் இருந்து விலக முடிந்தவர் ஞானி.
கருணை, பொறுமை, அறிவுணர்வு, பிரபஞ்ச அன்பு, மனதின் சமநிலை, கொண்டவர் ஞானி.
ஞானியரின் ஆற்றலும், அருளாளரின் பெருந்தன்மையும், அத்தகையது. காலம் என்கிற மணற்பரப்பில் தங்கள் காலடிகளை அவர்கள் பதித்து சென்றார்கள். ஆன்மா, சார்ந்த தேடல் உள்ளவர்கள் உண்மையும், நம்பிக்கையும், கொண்டவராய் அந்த சுவடுகளைப் பின்பற்றி செல்கிறார்கள். ஞானிகள் இனம் மொழி எல்லை கடந்தவர்கள், அவர்கள் தொடங்கி வைத்த ஆன்மீக நீரோட்டம் காலவெளியைக் கடந்து செல்கிறது. ஆனால் அமைதியையும் ஞானத்தையும் பெறுதற்கான வேட்கை மக்களிடம் இருக்கிறதா? தங்கள் வாழ்க்கையையும், ஒழுக்கத்தையும், எதிர்காலத்தையும், மேம்படுத்தவே ஞானிகள் ஒளிவிளக்கேந்தி வருகிறார்கள், என்பதை மக்கள் உணரவேண்டும். அவர்களின் அன்பை பெற முடிந்தவர்கள் பாக்கியவான்கள்,
ஞானம் என்பது உருவாக்கப்பட்டதல்ல. சட்டென்று உதயமாவது அல்ல, அது தேடிப் பெறுவதல்ல தானாக வருவது. ஆன்மா சிவத்தன்மை பெறும் தன்னை அறிகிறபோது . இதனை திருமூலர் கீழ்கண்ட பாடல் வாயிலாக கூறுகிறார், பாடல்: நான் என்றும் தான் என்றும் நாடினேன்.............
" நான்வேறு, சிவன் வேறு, என்று எண்ணியிருந்தேன், என்னை தன்னில் அடக்கியவன் (இறைவன்) நான் என்றும் தான் என்றும் இரண்டு பொருட்கள் இல்லை, என்றுைரைத்தான் அவன். அப்போது என்னுடைய நான் அற்றுப் போனதை உணர்ந்தேன், என்கிறார்,
இறைவனின் பேராற்றலை, பெருங்கருணையை உணர்ந்தவராயிருங்கள், அவனுடைய நிறம், என்ன, வடிவம் என்ன, எது என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிராதீர்கள், உனக்கு கெடுதல் நேரிட்டாலும், அவருடைய நன்மையில் அக்கறை காட்டு இதுவே சிவன் பாற்கடல் அமுதை தேவர்கட்கு வழங்கி நஞ்சினை தானே விழுங்கி உலகிற்கு அறிவித்த நன்னெறி, நெறியில் நிற்பார்க்கு ஞானத்தை குறைவின்றி அளிப்பான் இறைவன், பாடல்: மிக்கர் அழுதுண்ண, நஞ்சுண்டமேலவன்..........
தான் உடலல்ல, அறிபவன் என்பதை ஆன்மா உணர்கின்ற போது அது சிவமான தன்மை பெற்றுவிடுகிறது. அருள்வழி நின்று தன்னை காண்பார்க்கு சிவன் தானே வெளிப்படுகின்றான். அன்புமிக்கவர்க்கு நீண்ட ஆயுளை அளிப்பதோடு அவனே உற்ற துணையாகின்றான்.
பூவில் இருந்து அதன் நிறத்தை யும் வாசத்தையும் வேறாய் பிரிக்க முடியுமா? அவ்விதப் பிணைப்பு சிவனுக்கும் சீவனுக்கும் அமைகிறபோது சீவனுக்கு போரானந்தம் கிட்டுகிறத. மெஞ்ஞான விளைவாகும் ஆனந்தம் அதுவே பரமானந்தம். சிவன் உங்கள் உள்ளத்தில் பதிய வேண்டுமானால் அவனை மன நெகிழ்ச்சியோடு வணங்குங்கள். பாடல்களால் துதியுங்கள், என்கிறார் சித்தர. தத்துவ்ஙகள் விட்டு, மல வாதனைகள் நீங்கி அவத்தைகள் கடந்து உண்மையான ஞான ஆனந்தத்தில் திளைக்க வேண்டும்.
ஞானியின் செயல்:
புலத்தின் தன்மை அறிந்து, மெய்ப்பொருளை உணர்ந்த ஞானிகள் கர்ம சட்டத்தை உடைத்தெறிவதில்லை, தங்களுடைய ஊழ்வினைகளை அவர்கள் அனுபவித்தே கழிப்பார்கள், சஞ்சித கர்மத்தை தீர்ப்பதோடு தற்போதைய பிறவியில் புதிய கர்மங்கள் ஏற்படாதவாறும் தடுத்து க் கொள்வர், பாடல்: தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்..................
மனம் , வாக்கு காயம் என்னும் முக்கரணங்களும் வினைகளும் பற்றிட மூலகாரணமாய் இருக்கும், ஆனால் அந்த முக்கரணங்களை உலகியலில் இருந்து விலக்கி, சிவனிடம் செலுத்ததினால் வினைகள் பற்றாது. ஞானிகள் கரணவகையில் செயல்படாதிருந்து வினைகளை வலக்குவர். பாடல்: மனவாக்கு காயத்தால் வல்வினை மூளும்.............
காண்கிற எதுவும் பரமாத்மாவாகி விடுகிறபோது ஞானம் முழுமை பெறும், எவர் உள்ளபடி அறிகிறாரோ, அவர் அடைகிறார் ஞானம்,
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருமூலர் திருமந்திரம் / உபதேசம் 27
வாய்மை என்னும் மெய்பொருள்
எது உண்மை என்பதை அறிய எது பொய் என்பதும் தெரிந்திருக்கவேண்டும். பொய் பொருளை நீக்கித்தான் மெய்ப்பொருளை சேர முடியும்.திருமூலர் இதன் பொருட்டு கூறுகிறார்; உங்கள் மனதின் முக்குற்றங்களையும் அருள் உபதேசங்களால் நீக்கி கொள்ளு்ங்கள், தியானம் , இருண்டு கிடக்கும் உள்ளத்தை ஒளிவிட்டு பிரகாசிக்க செய்யும்.
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்றன்னைப்
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந் தின்பம் விளைத்திடும் மெய்யர்க்கே.
எவ்வகையிலும் வாய்மையையே பற்றி நிற்பாரோடே அளவளாவுபவன் சிவன். எவ்வகையிலும் பொய்யைப் பற்றி நிற்பவர்க்குத் தனது இருப்பையும் புலப்படுத்தாதவன் அவன். தாம் உய்தி பெறற்பொருட்டு பெறற்பொருட்டு அவனையே சார்தலால், அத்தகைய வாய்மையாளருக்கு அவன் பேரொடுக்கத்தைச் செய்பவனாக இருந்து, நிலையான இன்பத்தை எல்லையின்றி விளையுமாறு செய்வன்.
மக்கள் எதை அறிய வேண்டுேமா அதை அறிவதில்லை, அதனால் அடைய வேண்டியதை அடையமுடியாமல் போகிறது, உலகியல் சார்ந்த போக்கு பேரறிவுப் பொருளான சிவத்தை அறிய முற்படுவதில்லை,
தானே உலகின் தலைவன் எனத்தகும்
தானே உலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்
வானே பொழிமழை மாமறை கூர்ந்திடும்
ஊனே உருகிய உள்ளம்ஒன் றாகுமே.
சிவபெருமான் ஒருவனே உலகங்கட்கெல்லாம் முழு முதல் தலைவனும், மெய்ப்பொருளும் ஆவன். அறம் முதலிய உறுதிப்பொருள்களை உணர்த்தும் மறைகளின் வழியே அவைகள் நிலைபெறற் பொருட்டு வானம் மழைபொழியவும் கருணை கூர்வன். இவற்றை உணர்ந்து ஊனும் உருகும்படி எந்த உள்ளம் அன்பினால் உருகுகின்றதோ அந்த உள்ளம் அவனோடு சேர்ந்து ஒன்றாகும்.
சிவத்தை அறிந்து திருவடியுணர்வு கைவரப்பெற்றவர் உலகிற்கே தலைமையேற்கும் தகுதியுடையவராவர், சிவதத்துவமருளும் திறன் கொண்டவராயிருப்பர், அத்தைகயவரகளால் தான் உலகின் மழைவளம் தொடர்கிறது, இது பாடலின் உட்கருத்து
சிவன் உள்ளத்தில் கள்ளமின்றி ேபரன்பு கொள்ளும் பேரிடம் உயிர்கலந்து நிற்பான், பொய்யான பொருள்களை விரும்புவோர் தம்மளவிலும் பொய்யர் என்பதால் அவரகளை சென்றடைய கூசுவான் அவன். உடற்பற்றையும், உலகப் பற்றயையும் விட்டவர்க்கு தஞ்சம் அளிக்கிறான் சிவன். அவன் வேத முதல்வன் மூலதாரத்தில் நிைல பெற்றவன் சகஸ்ரதளத்தில் அவன் சீவனுடன்
வேறுபாடின்றி விளங்குவான், நீங்கள் ஈேடற விரும்பினால் அவனை உணர்வால் போற்றி வழிபடுங்கள்
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்றன்னைப்
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந் தின்பம் விளைத்திடும் மெய்யர்க்கே.
எவ்வகையிலும் வாய்மையையே பற்றி நிற்பாரோடே அளவளாவுபவன் சிவன். எவ்வகையிலும் பொய்யைப் பற்றி நிற்பவர்க்குத் தனது இருப்பையும் புலப்படுத்தாதவன் அவன். தாம் உய்தி பெறற்பொருட்டு பெறற்பொருட்டு அவனையே சார்தலால், அத்தகைய வாய்மையாளருக்கு அவன் பேரொடுக்கத்தைச் செய்பவனாக இருந்து, நிலையான இன்பத்தை எல்லையின்றி விளையுமாறு செய்வன்.
வாய்மை என்னும் மெய்பொருள்
எது உண்மை என்பதை அறிய எது பொய் என்பதும் தெரிந்திருக்கவேண்டும். பொய் பொருளை நீக்கித்தான் மெய்ப்பொருளை சேர முடியும்.திருமூலர் இதன் பொருட்டு கூறுகிறார்; உங்கள் மனதின் முக்குற்றங்களையும் அருள் உபதேசங்களால் நீக்கி கொள்ளு்ங்கள், தியானம் , இருண்டு கிடக்கும் உள்ளத்தை ஒளிவிட்டு பிரகாசிக்க செய்யும்.
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்றன்னைப்
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந் தின்பம் விளைத்திடும் மெய்யர்க்கே.
எவ்வகையிலும் வாய்மையையே பற்றி நிற்பாரோடே அளவளாவுபவன் சிவன். எவ்வகையிலும் பொய்யைப் பற்றி நிற்பவர்க்குத் தனது இருப்பையும் புலப்படுத்தாதவன் அவன். தாம் உய்தி பெறற்பொருட்டு பெறற்பொருட்டு அவனையே சார்தலால், அத்தகைய வாய்மையாளருக்கு அவன் பேரொடுக்கத்தைச் செய்பவனாக இருந்து, நிலையான இன்பத்தை எல்லையின்றி விளையுமாறு செய்வன்.
மக்கள் எதை அறிய வேண்டுேமா அதை அறிவதில்லை, அதனால் அடைய வேண்டியதை அடையமுடியாமல் போகிறது, உலகியல் சார்ந்த போக்கு பேரறிவுப் பொருளான சிவத்தை அறிய முற்படுவதில்லை,
தானே உலகின் தலைவன் எனத்தகும்
தானே உலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்
வானே பொழிமழை மாமறை கூர்ந்திடும்
ஊனே உருகிய உள்ளம்ஒன் றாகுமே.
சிவபெருமான் ஒருவனே உலகங்கட்கெல்லாம் முழு முதல் தலைவனும், மெய்ப்பொருளும் ஆவன். அறம் முதலிய உறுதிப்பொருள்களை உணர்த்தும் மறைகளின் வழியே அவைகள் நிலைபெறற் பொருட்டு வானம் மழைபொழியவும் கருணை கூர்வன். இவற்றை உணர்ந்து ஊனும் உருகும்படி எந்த உள்ளம் அன்பினால் உருகுகின்றதோ அந்த உள்ளம் அவனோடு சேர்ந்து ஒன்றாகும்.
சிவத்தை அறிந்து திருவடியுணர்வு கைவரப்பெற்றவர் உலகிற்கே தலைமையேற்கும் தகுதியுடையவராவர், சிவதத்துவமருளும் திறன் கொண்டவராயிருப்பர், அத்தைகயவரகளால் தான் உலகின் மழைவளம் தொடர்கிறது, இது பாடலின் உட்கருத்து
சிவன் உள்ளத்தில் கள்ளமின்றி ேபரன்பு கொள்ளும் பேரிடம் உயிர்கலந்து நிற்பான், பொய்யான பொருள்களை விரும்புவோர் தம்மளவிலும் பொய்யர் என்பதால் அவரகளை சென்றடைய கூசுவான் அவன். உடற்பற்றையும், உலகப் பற்றயையும் விட்டவர்க்கு தஞ்சம் அளிக்கிறான் சிவன். அவன் வேத முதல்வன் மூலதாரத்தில் நிைல பெற்றவன் சகஸ்ரதளத்தில் அவன் சீவனுடன்
வேறுபாடின்றி விளங்குவான், நீங்கள் ஈேடற விரும்பினால் அவனை உணர்வால் போற்றி வழிபடுங்கள்
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்றன்னைப்
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந் தின்பம் விளைத்திடும் மெய்யர்க்கே.
எவ்வகையிலும் வாய்மையையே பற்றி நிற்பாரோடே அளவளாவுபவன் சிவன். எவ்வகையிலும் பொய்யைப் பற்றி நிற்பவர்க்குத் தனது இருப்பையும் புலப்படுத்தாதவன் அவன். தாம் உய்தி பெறற்பொருட்டு பெறற்பொருட்டு அவனையே சார்தலால், அத்தகைய வாய்மையாளருக்கு அவன் பேரொடுக்கத்தைச் செய்பவனாக இருந்து, நிலையான இன்பத்தை எல்லையின்றி விளையுமாறு செய்வன்.
திரு ஐந்தெழுத்தின் மகிமை
" வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பிள்ளை நாள்தொறம்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி உகப்பனஅஞ்செழுத்துமே. திரு ஞான சம்பந்தர்
அரிய நடனத்தை ஆடும் பெருமானார் விரும்பும் திருஐந்தெழுத்தினை விரும்பி / செபிப்பவர் / ஓதுபவர்களின் பிறப்பும் இறப்பும் இல்லாமல் போகும். இப்பிறவியில் வரக்கூடிய துன்பங்கள் அகன்றுவிடும், வேண்டிய செல்வங்களை அளித்துக்காப்பார் இறைவர்.
கடவுளை கண்ட திருஞான சம்பந்த பெருமானார் கூறுவதை தான்நாம் இறைவர் கூறியதாகவே கொள்ளவேண்டும். அறிவு கொண்டு இவற்றைச் ெசான்னாரில்லை. இறைவர் உள் நின்றுணர்த்த இவற்றை கூறினார்.
மிக எளிய வழி "சிவாயநம " எனும் திருஐந்தெழுத்தினை ஓதுவது என்பது , நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லலாம். பிரயாணம் செய்யும் பொழுதெல்லாம் சொல்லலாம். பணம் காசு செலவு ெசய்ய வேண்டியதில்லை. இதைவிட எளிய வழிைய யார் சொல்லமுடியும்? திருஐந்தெழுத்தினை ஓதி, துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் பெறுவோமாக.
திருச்சிற்றம்பலம்
நன்றி; தமிழ் வேதம்
" வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பிள்ளை நாள்தொறம்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி உகப்பனஅஞ்செழுத்துமே. திரு ஞான சம்பந்தர்
அரிய நடனத்தை ஆடும் பெருமானார் விரும்பும் திருஐந்தெழுத்தினை விரும்பி / செபிப்பவர் / ஓதுபவர்களின் பிறப்பும் இறப்பும் இல்லாமல் போகும். இப்பிறவியில் வரக்கூடிய துன்பங்கள் அகன்றுவிடும், வேண்டிய செல்வங்களை அளித்துக்காப்பார் இறைவர்.
கடவுளை கண்ட திருஞான சம்பந்த பெருமானார் கூறுவதை தான்நாம் இறைவர் கூறியதாகவே கொள்ளவேண்டும். அறிவு கொண்டு இவற்றைச் ெசான்னாரில்லை. இறைவர் உள் நின்றுணர்த்த இவற்றை கூறினார்.
மிக எளிய வழி "சிவாயநம " எனும் திருஐந்தெழுத்தினை ஓதுவது என்பது , நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லலாம். பிரயாணம் செய்யும் பொழுதெல்லாம் சொல்லலாம். பணம் காசு செலவு ெசய்ய வேண்டியதில்லை. இதைவிட எளிய வழிைய யார் சொல்லமுடியும்? திருஐந்தெழுத்தினை ஓதி, துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் பெறுவோமாக.
திருச்சிற்றம்பலம்
நன்றி; தமிழ் வேதம்
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 26
மோன நிலையில் சீவனும் சிவனும் ஒன்றுதல்
சாத்வீகக் குணத்திலொன்று மவுனம் , மவுனத்தில் ஒடுங்கும் நிலை மோன நிலை சமாதி . சிவநிலையில் பொருந்தியவர்கள் இருந்த இடத்திலேயே உலகத்தை அறியும் திறனை பெறுகிறார்கள். எப்போதும் சிவத்துடன் தொடர்புடையவர்க்கு ஏது கவலை? குரு உணர்த்துவதை சீடன் உணர்ந்தபோது தன் சுய அனுபவத்தில் அவன் சிவத்தை காண்கிறான். பாடல் : உணர்வுடையார்கட்கு உலகமுந்தோன்றும்...................
மோனத் தவத்திருப்பவர் இங்கு மீளப் பிறப்பதில்லை, அடுத்தவர்க்கு அருள்புரியும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. சிவசக்தியோடு பொருந்திய நிலையில் உலகை மறந்தாலும் தன்னறிவுடன் இருப்பார்கள். பாடல் : மறப்பது வாய்நின்ற மாய நன்னாடன் ...............................
கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர், என்பார்கள், நீங்கள் உணர்வதை அப்படியே வெளிப்படுத்த முடியாது. காட்சி அனுபவத்தை அதிலும் இறைக் காட்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மெய்யுணர்வு மெய்யின்பம்.
முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமா றெங்ஙனனே.
உண்மையான சிவானந்தம் புறத்தேயுள்ள கண்களால் காணப்படுவதல்லை. அது அறிவுக்கண் கொண்டு அகவுணர்வில் காண்பது . தாயானவள் தன் கணவனோடு பெற்ற இன்பத்தை தன் மகள் கேட்கிறாள் என்பதற்காக எப்படி வாய்விட்டு சொல்லமுடியும்? முடியாது. அதுபோல் சிவானந்தம் என்பது அவரவரும் தமது சொந்த அனுபவத்தில் அறிய வேண்டியது.
நீரில் கரைந்த உப்பும் நீராகிவிடுகிறது, சீவன் சிவனாவதும் அப்படித்தான், தன்னை போலவே மனிதன் ஆன்மாவையும் தகுதியுடையதாக்கி விடுகிறது சிவம்.பாலப்பருவத்துப் பெண் பதிென்ட்டு கடந்தும் மடந்தை யாகிறாள். பக்குவம் இன்னொரு கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. சீவனும் அதுபோல் உலகானுபவம் பெற்ற நிலையில் அவனுடைய பக்குவம் காரணமாய் சிவன் சீவனிடம் விள்ங்கி நிற்கும். நான் அடைந்த ஆன்ம அனுபவத்தால் என்கு சமாதி பயிற்சியும், தேவரயற்றதாயிற்று. என்னை விட்டு மாயை நீங்கியதால் சிவம் என்கிற பேரொளியில் என்னால் மூழ்க முடிந்தது.
சிவக்கதிரவனை எனது அறிவால் நான் கண்டு கொண்டேன் அவனுடன் ஒன்றானேன். மோன சமாதியின் விளைவாக என் உடல் பற்று அகன்றது. பொருள் பற்றும் உடலின் வேட்ையுயம் நீங்கின, உயிர் மீதிருந்த ஆசையும் கெட்டது, மோனசமாதி என்பது சிவசிந்தனையாக இருப்பதின்றி வேறேனன? என்கிறார் திருமூலர்.
ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் சிவசக்தி
ஒன்றி நின்றுள்ளே உணர்நதேன் உணர்வினை
ஒன்றி நின்றேபல ஊழிகண்டேனே.
மோனநிலை தவத்திலிருந்து சீவனும் சிவனும் இணைந்து கொள்ளும் நிலையை நான் அறிந்தேன், என்குள் விளங்கும் இறைவனுடன் பொருந்தி எண்ணற்ற யுகங்களை நான் கண்டேன் என்கிறார் சித்தர்.
ஓம் நமசிவாயம் -- திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீக தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
மோன நிலையில் சீவனும் சிவனும் ஒன்றுதல்
சாத்வீகக் குணத்திலொன்று மவுனம் , மவுனத்தில் ஒடுங்கும் நிலை மோன நிலை சமாதி . சிவநிலையில் பொருந்தியவர்கள் இருந்த இடத்திலேயே உலகத்தை அறியும் திறனை பெறுகிறார்கள். எப்போதும் சிவத்துடன் தொடர்புடையவர்க்கு ஏது கவலை? குரு உணர்த்துவதை சீடன் உணர்ந்தபோது தன் சுய அனுபவத்தில் அவன் சிவத்தை காண்கிறான். பாடல் : உணர்வுடையார்கட்கு உலகமுந்தோன்றும்...................
மோனத் தவத்திருப்பவர் இங்கு மீளப் பிறப்பதில்லை, அடுத்தவர்க்கு அருள்புரியும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. சிவசக்தியோடு பொருந்திய நிலையில் உலகை மறந்தாலும் தன்னறிவுடன் இருப்பார்கள். பாடல் : மறப்பது வாய்நின்ற மாய நன்னாடன் ...............................
கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர், என்பார்கள், நீங்கள் உணர்வதை அப்படியே வெளிப்படுத்த முடியாது. காட்சி அனுபவத்தை அதிலும் இறைக் காட்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மெய்யுணர்வு மெய்யின்பம்.
முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமா றெங்ஙனனே.
உண்மையான சிவானந்தம் புறத்தேயுள்ள கண்களால் காணப்படுவதல்லை. அது அறிவுக்கண் கொண்டு அகவுணர்வில் காண்பது . தாயானவள் தன் கணவனோடு பெற்ற இன்பத்தை தன் மகள் கேட்கிறாள் என்பதற்காக எப்படி வாய்விட்டு சொல்லமுடியும்? முடியாது. அதுபோல் சிவானந்தம் என்பது அவரவரும் தமது சொந்த அனுபவத்தில் அறிய வேண்டியது.
நீரில் கரைந்த உப்பும் நீராகிவிடுகிறது, சீவன் சிவனாவதும் அப்படித்தான், தன்னை போலவே மனிதன் ஆன்மாவையும் தகுதியுடையதாக்கி விடுகிறது சிவம்.பாலப்பருவத்துப் பெண் பதிென்ட்டு கடந்தும் மடந்தை யாகிறாள். பக்குவம் இன்னொரு கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. சீவனும் அதுபோல் உலகானுபவம் பெற்ற நிலையில் அவனுடைய பக்குவம் காரணமாய் சிவன் சீவனிடம் விள்ங்கி நிற்கும். நான் அடைந்த ஆன்ம அனுபவத்தால் என்கு சமாதி பயிற்சியும், தேவரயற்றதாயிற்று. என்னை விட்டு மாயை நீங்கியதால் சிவம் என்கிற பேரொளியில் என்னால் மூழ்க முடிந்தது.
சிவக்கதிரவனை எனது அறிவால் நான் கண்டு கொண்டேன் அவனுடன் ஒன்றானேன். மோன சமாதியின் விளைவாக என் உடல் பற்று அகன்றது. பொருள் பற்றும் உடலின் வேட்ையுயம் நீங்கின, உயிர் மீதிருந்த ஆசையும் கெட்டது, மோனசமாதி என்பது சிவசிந்தனையாக இருப்பதின்றி வேறேனன? என்கிறார் திருமூலர்.
ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் சிவசக்தி
ஒன்றி நின்றுள்ளே உணர்நதேன் உணர்வினை
ஒன்றி நின்றேபல ஊழிகண்டேனே.
மோனநிலை தவத்திலிருந்து சீவனும் சிவனும் இணைந்து கொள்ளும் நிலையை நான் அறிந்தேன், என்குள் விளங்கும் இறைவனுடன் பொருந்தி எண்ணற்ற யுகங்களை நான் கண்டேன் என்கிறார் சித்தர்.
ஓம் நமசிவாயம் -- திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீக தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 24
ஆசையை விடுங்கள்
ஆசை காட்டாறு மாதிரி கரை மீறிப் போகும் திசை மாறிப் போகும். காட்டாற்றின் பேரிச்சலில் தேவகானம் அழங்கிவிடம் மனம் அமைதிக் குலையும்,
மக்கள் மீது வைக்கும் பாசத்தை பொருள்கள் மீது கொள்ளும் ஆசையை விடுங்கள். இறைவனின் இருப்பை உணர அதுவே எளிதான வழி என்கிறது திருமந்திரம். ஆசையை விட்டால் இறைவனை அடையலாம், பிறவாதிருக்கும் பேறுண்டு.
அற்றவர் என்பார் அவஅற்றார் மற்றறையார்
அற்றதாக அற்றது இலர் - குறள்
பிறவி அற்றவர்என்று சொல்லப்படுபவர் ஆசையை ஒழித்தவரே , சிலவற்றின்மீது மட்டும் ஆசையை விட்ட வாராயின் , அவற்றால் சில துன்பங்கள் ஒழிந்தனவே யன்றி முதிருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 26
மோன நிலையில் சீவனும் சிவனும் ஒன்றுதல்
சாத்வீகக் குணத்திலொன்று மவுனம் , மவுனத்தில் ஒடுங்கும் நிலை மோன நிலை சமாதி . சிவநிலையில் பொருந்தியவர்கள் இருந்த இடத்திலேயே உலகத்தை அறியும் திறனை பெறுகிறார்கள். எப்போதும் சிவத்துடன் தொடர்புடையவர்க்கு ஏது கவலை? குரு உணர்த்துவதை சீடன் உணர்ந்தபோது தன் சுய அனுபவத்தில் அவன் சிவத்தை காண்கிறான். பாடல் : உணர்வுடையார்கட்கு உலகமுந்தோன்றும்...................
மோனத் தவத்திருப்பவர் இங்கு மீளப் பிறப்பதில்லை, அடுத்தவர்க்கு அருள்புரியும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. சிவசக்தியோடு பொருந்திய நிலையில் உலகை மறந்தாலும் தன்னறிவுடன் இருப்பார்கள். பாடல் : மறப்பது வாய்நின்ற மாய நன்னாடன் ...............................
கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர், என்பார்கள், நீங்கள் உணர்வதை அப்படியே வெளிப்படுத்த முடியாது. காட்சி அனுபவத்தை அதிலும் இறைக் காட்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மெய்யுணர்வு மெய்யின்பம்.
முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமா றெங்ஙனனே.
உண்மையான சிவானந்தம் புறத்தேயுள்ள கண்களால் காணப்படுவதல்லை. அது அறிவுக்கண் கொண்டு அகவுணர்வில் காண்பது . தாயானவள் தன் கணவனோடு பெற்ற இன்பத்தை தன் மகள் கேட்கிறாள் என்பதற்காக எப்படி வாய்விட்டு சொல்லமுடியும்? முடியாது. அதுபோல் சிவானந்தம் என்பது அவரவரும் தமது சொந்த அனுபவத்தில் அறிய வேண்டியது.
நீரில் கரைந்த உப்பும் நீராகிவிடுகிறது, சீவன் சிவனாவதும் அப்படித்தான், தன்னை போலவே மனிதன் ஆன்மாவையும் தகுதியுடையதாக்கி விடுகிறது சிவம்.பாலப்பருவத்துப் பெண் பதிென்ட்டு கடந்தும் மடந்தை யாகிறாள். பக்குவம் இன்னொரு கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. சீவனும் அதுபோல் உலகானுபவம் பெற்ற நிலையில் அவனுடைய பக்குவம் காரணமாய் சிவன் சீவனிடம் விள்ங்கி நிற்கும். நான் அடைந்த ஆன்ம அனுபவத்தால் என்கு சமாதி பயிற்சியும், தேவரயற்றதாயிற்று. என்னை விட்டு மாயை நீங்கியதால் சிவம் என்கிற பேரொளியில் என்னால் மூழ்க முடிந்தது.
சிவக்கதிரவனை எனது அறிவால் நான் கண்டு கொண்டேன் அவனுடன் ஒன்றானேன். மோன சமாதியின் விளைவாக என் உடல் பற்று அகன்றது. பொருள் பற்றும் உடலின் வேட்ையுயம் நீங்கின, உயிர் மீதிருந்த ஆசையும் கெட்டது, மோனசமாதி என்பது சிவசிந்தனையாக இருப்பதின்றி வேறேனன? என்கிறார் திருமூலர்.
ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் சிவசக்தி
ஒன்றி நின்றுள்ளே உணர்நதேன் உணர்வினை
ஒன்றி நின்றேபல ஊழிகண்டேனே.
மோனநிலை தவத்திலிருந்து சீவனும் சிவனும் இணைந்து கொள்ளும் நிலையை நான் அறிந்தேன், என்குள் விளங்கும் இறைவனுடன் பொருந்தி எண்ணற்ற யுகங்களை நான் கண்டேன் என்கிறார் சித்தர்.
ஓம் நமசிவாயம் -- திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீக தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
ற்றிலும் துன்பம் ஒழிந்தவர்ஆகார் என்கிறார் வள்ளுவர் எனவே ஆசையை அறவே அற்றவர்தான் பிறவியற்ற பேரின்பம் பெறுவர்,
சிவபெருமான் மாடத்திலோ, கூடத்திலோ இருப்பவனல்லன், ஆலயத்திலோ, வேடம் கொண்டவரிடமோ அவன் இருப்பதில்லை, ஆனால் ஆசையே அடம்பிடித்து உங்கள் மனதில் இடம் பிடிக்கும், இதனால் வாழ்வில் துன்பங்கள்தான் வந்து சேரும், அந்த ஆசை என்னும் நச்சு இருக்கும் இடத்தில் இறைவன் குடிகொள்வதில்லை எனவே ஆசையை விடுங்கள், இறைவன் அஙகே ( மனத்தில் ) வந்தமர்வான் என்கிறார் திருமூலர்.
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பஙகள்
ஆசை விடவிட ஆனந்தமாமே
உங்களுக்குள் ஆசையே இல்லை என்கிற நிலையை உருவாக்குங்கள், அந்த மேலோனின் மீதும் ஆசை வைக்க வேண்டாம், ஆசைக்கு இடமளித்தால் அது மேலும் வளர்ந்து கொண்டே போகும். துன்பங்களும் அடுக்கடுக்காய் வந்து சேரும், ஆசையை விட்டால் ஆனந்தம் உண்டு, இது பாடலின் பொருள்.
ஆசையை விட்ட மனம், மழையில் கழுவிவிட்ட உடம்பு மாதிரி சில்லென்று சுகமாயிருக்கும், புத்துணர்வு பெற்று குதியாட்டம் போடும், ஆசையை விட்டால் சித்தியும் கைகூடும், என்கிறார் சித்தர், அது எப்படியோ உண்மையான ஞானத்தை அடைந்தாலே போதும் , எனவே ஞானம் பெற, முக்தியடைய ஆசையை மனத்திலிருந்து அகற்ற வேண்டும்,
திருசிற்றம்பலம் - ஒம் நமசிவாய ஒம்
மேலும் ஆன்மீக தகவலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
ஆசையை விடுங்கள்
ஆசை காட்டாறு மாதிரி கரை மீறிப் போகும் திசை மாறிப் போகும். காட்டாற்றின் பேரிச்சலில் தேவகானம் அழங்கிவிடம் மனம் அமைதிக் குலையும்,
மக்கள் மீது வைக்கும் பாசத்தை பொருள்கள் மீது கொள்ளும் ஆசையை விடுங்கள். இறைவனின் இருப்பை உணர அதுவே எளிதான வழி என்கிறது திருமந்திரம். ஆசையை விட்டால் இறைவனை அடையலாம், பிறவாதிருக்கும் பேறுண்டு.
அற்றவர் என்பார் அவஅற்றார் மற்றறையார்
அற்றதாக அற்றது இலர் - குறள்
பிறவி அற்றவர்என்று சொல்லப்படுபவர் ஆசையை ஒழித்தவரே , சிலவற்றின்மீது மட்டும் ஆசையை விட்ட வாராயின் , அவற்றால் சில துன்பங்கள் ஒழிந்தனவே யன்றி முதிருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 26
மோன நிலையில் சீவனும் சிவனும் ஒன்றுதல்
சாத்வீகக் குணத்திலொன்று மவுனம் , மவுனத்தில் ஒடுங்கும் நிலை மோன நிலை சமாதி . சிவநிலையில் பொருந்தியவர்கள் இருந்த இடத்திலேயே உலகத்தை அறியும் திறனை பெறுகிறார்கள். எப்போதும் சிவத்துடன் தொடர்புடையவர்க்கு ஏது கவலை? குரு உணர்த்துவதை சீடன் உணர்ந்தபோது தன் சுய அனுபவத்தில் அவன் சிவத்தை காண்கிறான். பாடல் : உணர்வுடையார்கட்கு உலகமுந்தோன்றும்...................
மோனத் தவத்திருப்பவர் இங்கு மீளப் பிறப்பதில்லை, அடுத்தவர்க்கு அருள்புரியும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. சிவசக்தியோடு பொருந்திய நிலையில் உலகை மறந்தாலும் தன்னறிவுடன் இருப்பார்கள். பாடல் : மறப்பது வாய்நின்ற மாய நன்னாடன் ...............................
கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர், என்பார்கள், நீங்கள் உணர்வதை அப்படியே வெளிப்படுத்த முடியாது. காட்சி அனுபவத்தை அதிலும் இறைக் காட்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மெய்யுணர்வு மெய்யின்பம்.
முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமா றெங்ஙனனே.
உண்மையான சிவானந்தம் புறத்தேயுள்ள கண்களால் காணப்படுவதல்லை. அது அறிவுக்கண் கொண்டு அகவுணர்வில் காண்பது . தாயானவள் தன் கணவனோடு பெற்ற இன்பத்தை தன் மகள் கேட்கிறாள் என்பதற்காக எப்படி வாய்விட்டு சொல்லமுடியும்? முடியாது. அதுபோல் சிவானந்தம் என்பது அவரவரும் தமது சொந்த அனுபவத்தில் அறிய வேண்டியது.
நீரில் கரைந்த உப்பும் நீராகிவிடுகிறது, சீவன் சிவனாவதும் அப்படித்தான், தன்னை போலவே மனிதன் ஆன்மாவையும் தகுதியுடையதாக்கி விடுகிறது சிவம்.பாலப்பருவத்துப் பெண் பதிென்ட்டு கடந்தும் மடந்தை யாகிறாள். பக்குவம் இன்னொரு கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. சீவனும் அதுபோல் உலகானுபவம் பெற்ற நிலையில் அவனுடைய பக்குவம் காரணமாய் சிவன் சீவனிடம் விள்ங்கி நிற்கும். நான் அடைந்த ஆன்ம அனுபவத்தால் என்கு சமாதி பயிற்சியும், தேவரயற்றதாயிற்று. என்னை விட்டு மாயை நீங்கியதால் சிவம் என்கிற பேரொளியில் என்னால் மூழ்க முடிந்தது.
சிவக்கதிரவனை எனது அறிவால் நான் கண்டு கொண்டேன் அவனுடன் ஒன்றானேன். மோன சமாதியின் விளைவாக என் உடல் பற்று அகன்றது. பொருள் பற்றும் உடலின் வேட்ையுயம் நீங்கின, உயிர் மீதிருந்த ஆசையும் கெட்டது, மோனசமாதி என்பது சிவசிந்தனையாக இருப்பதின்றி வேறேனன? என்கிறார் திருமூலர்.
ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் சிவசக்தி
ஒன்றி நின்றுள்ளே உணர்நதேன் உணர்வினை
ஒன்றி நின்றேபல ஊழிகண்டேனே.
மோனநிலை தவத்திலிருந்து சீவனும் சிவனும் இணைந்து கொள்ளும் நிலையை நான் அறிந்தேன், என்குள் விளங்கும் இறைவனுடன் பொருந்தி எண்ணற்ற யுகங்களை நான் கண்டேன் என்கிறார் சித்தர்.
ஓம் நமசிவாயம் -- திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீக தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
ற்றிலும் துன்பம் ஒழிந்தவர்ஆகார் என்கிறார் வள்ளுவர் எனவே ஆசையை அறவே அற்றவர்தான் பிறவியற்ற பேரின்பம் பெறுவர்,
சிவபெருமான் மாடத்திலோ, கூடத்திலோ இருப்பவனல்லன், ஆலயத்திலோ, வேடம் கொண்டவரிடமோ அவன் இருப்பதில்லை, ஆனால் ஆசையே அடம்பிடித்து உங்கள் மனதில் இடம் பிடிக்கும், இதனால் வாழ்வில் துன்பங்கள்தான் வந்து சேரும், அந்த ஆசை என்னும் நச்சு இருக்கும் இடத்தில் இறைவன் குடிகொள்வதில்லை எனவே ஆசையை விடுங்கள், இறைவன் அஙகே ( மனத்தில் ) வந்தமர்வான் என்கிறார் திருமூலர்.
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பஙகள்
ஆசை விடவிட ஆனந்தமாமே
உங்களுக்குள் ஆசையே இல்லை என்கிற நிலையை உருவாக்குங்கள், அந்த மேலோனின் மீதும் ஆசை வைக்க வேண்டாம், ஆசைக்கு இடமளித்தால் அது மேலும் வளர்ந்து கொண்டே போகும். துன்பங்களும் அடுக்கடுக்காய் வந்து சேரும், ஆசையை விட்டால் ஆனந்தம் உண்டு, இது பாடலின் பொருள்.
ஆசையை விட்ட மனம், மழையில் கழுவிவிட்ட உடம்பு மாதிரி சில்லென்று சுகமாயிருக்கும், புத்துணர்வு பெற்று குதியாட்டம் போடும், ஆசையை விட்டால் சித்தியும் கைகூடும், என்கிறார் சித்தர், அது எப்படியோ உண்மையான ஞானத்தை அடைந்தாலே போதும் , எனவே ஞானம் பெற, முக்தியடைய ஆசையை மனத்திலிருந்து அகற்ற வேண்டும்,
திருசிற்றம்பலம் - ஒம் நமசிவாய ஒம்
மேலும் ஆன்மீக தகவலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருச்சிற்றம்பலம்
நற்றவா! உனை நான் மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே!
திருவாசகம் (Thiruvasagam)
திருச்சிற்றம்பலம்
திருவாசகம்
தேடித் திருவடி வந்து சேர வழிகாட்டுகிறது திருவாசகம் .
சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.
இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது.
திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 656 பாடல்கள் அடங்கியுள்ளன.
இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவைகளைக் களையும் முறைகள், இறையாகிய சிவனைநாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவைகளை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல்,அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல்,அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறைபக்தியாக வடிவெடுத்தல்,இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது. ”திருவாசகம் வேறு, சிவன் வேறு”,என்று எண்ணப்படாமல், சைவர்கள் பலரால் திருவாசக ஏடு வணங்கப்படும் பெருமையினையுடையது. திருவாசகப்பாடல்கள் உருகு உருகிப் பாடப்பெற்றமையால், படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும். “திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது வாக்கு. குருவடிவாகக் காட்சியளித்து, தீட்சை தந்து, மறைந்த சிவனை மீண்டும் பெற நினைந்து, நினைந்து, நனைந்து பாடியவை. அவருடைய அனுபவம், “அழுதால் உன்னைப் பெறலாமே!”
மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு:
1.திருவாசகம்;
2. திருக்கோவையார். ...
சைவ சமயத்துக்குச் சிறப்பாக விளங்குவது யோக ஆகம நெறியே. ஆகும்மாணிக்கவாசகர் பாடல்களில், அவர் சிவாகம நெறிவழி நிற்கும் ஞான யோகி என்பது புலனாகிறது. சிவபுராணத்தின் ஆரம்ப வரிகளிலேயே அவர் “கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க; ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாள் வாழ்க,” என்று ஆகமத்தைச்சிறப்பித்து விடுகிறார்.. வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே இது வள்ளாலார் திருவாசகத்தைப் பற்றி எழுதியது.–தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்.”/கட்டாயம்படியுங்கள் பரப்புங்கள்.
தேனினும் இனிய திருவாசகத்தை நாம் இங்கு எல்லோரும் பாடவேண்டும்-மனிதன் இறைவனுக்குச் சொன்னதுதிருவாசகம்
Sivapuranam Vilakkam
A-மாணிக்கவாசகர் திருவாசகம்-Thiruvasagam
http://www.youtube.com/watch?v=uWBEkIy1NsE
நற்றவா! உனை நான் மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே!
திருவாசகம் (Thiruvasagam)
திருச்சிற்றம்பலம்
திருவாசகம்
தேடித் திருவடி வந்து சேர வழிகாட்டுகிறது திருவாசகம் .
சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.
இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது.
திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 656 பாடல்கள் அடங்கியுள்ளன.
இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவைகளைக் களையும் முறைகள், இறையாகிய சிவனைநாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவைகளை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல்,அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல்,அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறைபக்தியாக வடிவெடுத்தல்,இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது. ”திருவாசகம் வேறு, சிவன் வேறு”,என்று எண்ணப்படாமல், சைவர்கள் பலரால் திருவாசக ஏடு வணங்கப்படும் பெருமையினையுடையது. திருவாசகப்பாடல்கள் உருகு உருகிப் பாடப்பெற்றமையால், படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும். “திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது வாக்கு. குருவடிவாகக் காட்சியளித்து, தீட்சை தந்து, மறைந்த சிவனை மீண்டும் பெற நினைந்து, நினைந்து, நனைந்து பாடியவை. அவருடைய அனுபவம், “அழுதால் உன்னைப் பெறலாமே!”
மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு:
1.திருவாசகம்;
2. திருக்கோவையார். ...
சைவ சமயத்துக்குச் சிறப்பாக விளங்குவது யோக ஆகம நெறியே. ஆகும்மாணிக்கவாசகர் பாடல்களில், அவர் சிவாகம நெறிவழி நிற்கும் ஞான யோகி என்பது புலனாகிறது. சிவபுராணத்தின் ஆரம்ப வரிகளிலேயே அவர் “கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க; ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாள் வாழ்க,” என்று ஆகமத்தைச்சிறப்பித்து விடுகிறார்.. வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே இது வள்ளாலார் திருவாசகத்தைப் பற்றி எழுதியது.–தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்.”/கட்டாயம்படியுங்கள் பரப்புங்கள்.
தேனினும் இனிய திருவாசகத்தை நாம் இங்கு எல்லோரும் பாடவேண்டும்-மனிதன் இறைவனுக்குச் சொன்னதுதிருவாசகம்
Sivapuranam Vilakkam
A-மாணிக்கவாசகர் திருவாசகம்-Thiruvasagam
http://www.youtube.com/watch?v=uWBEkIy1NsE
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 23
புலன்களுக்கு போடணும் கடிவாளம்
புலன்கள் ஐந்து அவை அடைகிற அனுபவங்களுக்கு அளவே இல்லை, அவற்றால் உண்டாகிற விளைவுகளுக்கும் கணக்கே இல்லை.
கண்போன போக்கில் மனம் போகக்கூடாது என்பார்கள், வாயில் வந்ததைப் பேசக்கூடாது காதில் விழுந்ததை நம்பக்கூடாது என்றெல்லாம் பெரியோர்கள் தடைபோட்டு வைத்திருந்தார்கள், அதைத்தான் ஐம்புலனடக்கம் பஞ்சேந்திரிய ஒழுக்கம் என்பது, சாத்துவிகக் குணத்தில் ஒன்று ஐம்புலங்களையும் அடக்கி வைத்தல், ஐம்புலங்களின் நுகர்ச்சியை பஞ்சேந்திரியாநுபவம் என்பர், பொறிகள் ஐந்து அவை கண்,காது, தோல், நாக்கு மூக்கு என்ற புலன்கள் அவற்றின் அறிவாகும் பார்த்தல், கேட்டல், ஸ்பரிசித்தல, ருசித்தல், முகர்தல், (ஒளி,ஒசை, ஊறு, சுவை, நாற்றம்) புலன்களின் இயக்கம் ஒருவனுக்கு நன்மையும் செய்யும தீமையும் செய்யும், அது அவற்றின் செயலைப் பொறுத்தது.
மனிதரின் மாமனிதன் என்ற போற்றப்படுகிறவன் புலன்களை அடக்கியவன்தான் சாதனைகளில் மிகப் பெரிய சாதனை புலனடக்கம், வெற்றிகளில் சிறந்த வெற்றி புலன்களை வெல்வதுதான், " அறிவைப் பயன்படுத்தி பொறிகளை அடக்க வேண்டும், சாப்பாட்டில் ஆசை வைத்தாலும், சம்போகத்தில் ( புணர்ச்சி) பெருவிருப்பு கொண்டாலும் ஆன்ம வெற்றியை அடைய முடியாது" என்கிறார் திருமூல்ர்
விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள், ஆனால் மதியை மறைக்கும் மயக்கத்தை ஏற்படுத்தி அதைச் செயல்படாதவாறு தடுக்கும் விதி, அதனால்தான் விதி வலியது என்கிறார்கள், புலன்கள் செருக்குற்று பாதிப்பை ஏற்படுத்துவதும் அப்படித்தான். புலன் மயக்கம் கூடாது. புலனை வென்றவன் முனிவன், புலன் வழி சென்றவன் சராசரி மனிதன். ஐம்பொறிகளும் துள்ளி குதிக்கும் கன்றுகளாயிருந்தால் கயிற்றால் பிணைத்து அடக்கலாம், அவை மதங்கொண்ட யானைகள் கரும்புத் தோட்டத்தில் புகுந்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். புலன்களின் விருப்பத்தை கட்டுபடுத்த என்ன வழி பொறிகளை தறிகெட்டு போகாமல் காப்பது எப்படி? பிரணவமான திருவைந்தெழுத்தை ஒதியிருப்பதே பாதுகாப்பு என்கிறது திருமந்திரம். பாடல்: ஐந்தில் ஒடுங்கில்.......
பேசாத வார்த்தை உங்களுக்கு அடிமை பேசியவார்த்தைக்கு நீங்கள் அடிமை, என்பார்கள். நிறையப் பேசுவதால் என்ன பயன்? சொற்கள் விளைவுடையவை விளைவறிந்து பேச வேண்டும், பேசிய வார்த்தைகளும் இழந்த காலமும் மீண்டும் பெற முடியாத முத்துக்கள்.
பொறிகளை இயக்குவது மனம் மனந்தான் அவற்றை உந்துகிறது. சிவத்தியானத்தில் மனதை அடக்கினால் இந்திரியங்கள் ( பொறிகள்) அடங்கும், பொறிகள் வழியே மனம் போகாமலிருக்க நல்ல கருத்துடைய நூல்களை கற்க வேண்டும். " தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்பர் பெரியோர், அவை செயலின் விளைவேயாகும், சிவசிந்தையாயிருந்தால் பொறி வழி போகிற நிலையிருக்காது. உடலுக்கு ஒன்பது வாசல் என்றால் மனதுக்கு ஒராயிரம் வாசல், ஒவ்வொரு எண்ணமும் ஒரு வாசல் தான், எந்த வழி போவது என்பதைவிட எந்த வழியிலும் போகாமல் இருப்பதே சிறப்பு. ஞானியரும், யோகியரும் அதைத்தான் செய்கிறார்கள். மனமிறக்க வாயேன் பராபரமே என்பார் தாயுமானவர் " மனவழி சென்று உடலின் இன்பத்தை நாடினால் குற்றங்கள் உண்டாகும், வாழ்க்கை நிம்மதியை இழக்கும், உடலின்பத்தை நாடாதிருந்தால் உள்ளம் சிந்தனையற்று ஆனந்தத்தில் நிலைபெறும். பாடல்: எண்இலி இல்லி உடைத்து அவ்இருட்டடை ............
சகஸகரத்தலத்தில் விளங்கும் சிவனை வணங்கி தறிகெட்டோடும் புனன்களை அறிவால் மீட்டிடுங்கள். பெருமானின் திருமேனியை மனதில் பொருத்தி கொண்டால் பிறிதொன்றில் கவனம் செல்லாது. அப்போது உள்ளத்தில் ஊறும் அமுதத்தை துய்த்திடுங்கள்"
நீங்கள் உலகியல் நாட்டம் கொண்டு பேசுகிறவரை உளளொளி காண இயலாது போகும் சொல்லற்றிரு! சும்மாயிரு! என்பது அதற்கான சொன்ன வார்த்தைகள், அதற்காகத்தான் பொறிகளின் இயல்பை அறிந்தவரே இருளை கடந்து ஒளியை காண்கிறார்கள்.
அதைவிடு, இதைவிடு, என்பது துறவறம், இல்லறத்தான் ஐம்பொறிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் போதும், எதையும் விடுகிற கட்டாயம் இருக்காது, இறைவனை பற்றியிருங்கள். இலலையேல் பற்றகள் உங்களை நாலாபக்கமும் ஐந்து பக்கங்களிலும் (ஐந்து புலன்கள் வழி) கவர்ந்து சென்றுவிடும், எனவே ஐம்புலன் அடக்கம் அருளைத் தரும்
திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஒம்
மேலும் ஆன்மிகத்தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
புலன்களுக்கு போடணும் கடிவாளம்
புலன்கள் ஐந்து அவை அடைகிற அனுபவங்களுக்கு அளவே இல்லை, அவற்றால் உண்டாகிற விளைவுகளுக்கும் கணக்கே இல்லை.
கண்போன போக்கில் மனம் போகக்கூடாது என்பார்கள், வாயில் வந்ததைப் பேசக்கூடாது காதில் விழுந்ததை நம்பக்கூடாது என்றெல்லாம் பெரியோர்கள் தடைபோட்டு வைத்திருந்தார்கள், அதைத்தான் ஐம்புலனடக்கம் பஞ்சேந்திரிய ஒழுக்கம் என்பது, சாத்துவிகக் குணத்தில் ஒன்று ஐம்புலங்களையும் அடக்கி வைத்தல், ஐம்புலங்களின் நுகர்ச்சியை பஞ்சேந்திரியாநுபவம் என்பர், பொறிகள் ஐந்து அவை கண்,காது, தோல், நாக்கு மூக்கு என்ற புலன்கள் அவற்றின் அறிவாகும் பார்த்தல், கேட்டல், ஸ்பரிசித்தல, ருசித்தல், முகர்தல், (ஒளி,ஒசை, ஊறு, சுவை, நாற்றம்) புலன்களின் இயக்கம் ஒருவனுக்கு நன்மையும் செய்யும தீமையும் செய்யும், அது அவற்றின் செயலைப் பொறுத்தது.
மனிதரின் மாமனிதன் என்ற போற்றப்படுகிறவன் புலன்களை அடக்கியவன்தான் சாதனைகளில் மிகப் பெரிய சாதனை புலனடக்கம், வெற்றிகளில் சிறந்த வெற்றி புலன்களை வெல்வதுதான், " அறிவைப் பயன்படுத்தி பொறிகளை அடக்க வேண்டும், சாப்பாட்டில் ஆசை வைத்தாலும், சம்போகத்தில் ( புணர்ச்சி) பெருவிருப்பு கொண்டாலும் ஆன்ம வெற்றியை அடைய முடியாது" என்கிறார் திருமூல்ர்
விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள், ஆனால் மதியை மறைக்கும் மயக்கத்தை ஏற்படுத்தி அதைச் செயல்படாதவாறு தடுக்கும் விதி, அதனால்தான் விதி வலியது என்கிறார்கள், புலன்கள் செருக்குற்று பாதிப்பை ஏற்படுத்துவதும் அப்படித்தான். புலன் மயக்கம் கூடாது. புலனை வென்றவன் முனிவன், புலன் வழி சென்றவன் சராசரி மனிதன். ஐம்பொறிகளும் துள்ளி குதிக்கும் கன்றுகளாயிருந்தால் கயிற்றால் பிணைத்து அடக்கலாம், அவை மதங்கொண்ட யானைகள் கரும்புத் தோட்டத்தில் புகுந்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். புலன்களின் விருப்பத்தை கட்டுபடுத்த என்ன வழி பொறிகளை தறிகெட்டு போகாமல் காப்பது எப்படி? பிரணவமான திருவைந்தெழுத்தை ஒதியிருப்பதே பாதுகாப்பு என்கிறது திருமந்திரம். பாடல்: ஐந்தில் ஒடுங்கில்.......
பேசாத வார்த்தை உங்களுக்கு அடிமை பேசியவார்த்தைக்கு நீங்கள் அடிமை, என்பார்கள். நிறையப் பேசுவதால் என்ன பயன்? சொற்கள் விளைவுடையவை விளைவறிந்து பேச வேண்டும், பேசிய வார்த்தைகளும் இழந்த காலமும் மீண்டும் பெற முடியாத முத்துக்கள்.
பொறிகளை இயக்குவது மனம் மனந்தான் அவற்றை உந்துகிறது. சிவத்தியானத்தில் மனதை அடக்கினால் இந்திரியங்கள் ( பொறிகள்) அடங்கும், பொறிகள் வழியே மனம் போகாமலிருக்க நல்ல கருத்துடைய நூல்களை கற்க வேண்டும். " தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்பர் பெரியோர், அவை செயலின் விளைவேயாகும், சிவசிந்தையாயிருந்தால் பொறி வழி போகிற நிலையிருக்காது. உடலுக்கு ஒன்பது வாசல் என்றால் மனதுக்கு ஒராயிரம் வாசல், ஒவ்வொரு எண்ணமும் ஒரு வாசல் தான், எந்த வழி போவது என்பதைவிட எந்த வழியிலும் போகாமல் இருப்பதே சிறப்பு. ஞானியரும், யோகியரும் அதைத்தான் செய்கிறார்கள். மனமிறக்க வாயேன் பராபரமே என்பார் தாயுமானவர் " மனவழி சென்று உடலின் இன்பத்தை நாடினால் குற்றங்கள் உண்டாகும், வாழ்க்கை நிம்மதியை இழக்கும், உடலின்பத்தை நாடாதிருந்தால் உள்ளம் சிந்தனையற்று ஆனந்தத்தில் நிலைபெறும். பாடல்: எண்இலி இல்லி உடைத்து அவ்இருட்டடை ............
சகஸகரத்தலத்தில் விளங்கும் சிவனை வணங்கி தறிகெட்டோடும் புனன்களை அறிவால் மீட்டிடுங்கள். பெருமானின் திருமேனியை மனதில் பொருத்தி கொண்டால் பிறிதொன்றில் கவனம் செல்லாது. அப்போது உள்ளத்தில் ஊறும் அமுதத்தை துய்த்திடுங்கள்"
நீங்கள் உலகியல் நாட்டம் கொண்டு பேசுகிறவரை உளளொளி காண இயலாது போகும் சொல்லற்றிரு! சும்மாயிரு! என்பது அதற்கான சொன்ன வார்த்தைகள், அதற்காகத்தான் பொறிகளின் இயல்பை அறிந்தவரே இருளை கடந்து ஒளியை காண்கிறார்கள்.
அதைவிடு, இதைவிடு, என்பது துறவறம், இல்லறத்தான் ஐம்பொறிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் போதும், எதையும் விடுகிற கட்டாயம் இருக்காது, இறைவனை பற்றியிருங்கள். இலலையேல் பற்றகள் உங்களை நாலாபக்கமும் ஐந்து பக்கங்களிலும் (ஐந்து புலன்கள் வழி) கவர்ந்து சென்றுவிடும், எனவே ஐம்புலன் அடக்கம் அருளைத் தரும்
திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஒம்
மேலும் ஆன்மிகத்தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
ஞானமே அழிவற்ற பரப்பிரம்மம் அடைய உறைவிடம்
" காந்த ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டுமாதலால், கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை, மனிதனுடைய மனம் இறைவனை நாடியிருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப் போகமாட்டான்" பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்,
ஞானமார்க்கம் அடைய பல ஞானிகளான சித்தர்களும், வேதங்களும் கூறிய நெறிகளைஅவர்களின் சீடர்களுக்கு உபதேசமாக வழங்கியுள்ளனர், அந்த ஞான மொழியே பரம்பொருளாகிய ஞானசொரூபன் அருளியதாகும், பிறவிப் பிணி நீக்கி முக்தி எனும் விடுதலை அடைய காணும் வழிகள் நான்கு உண்டு இந்த மெய்யறிவான ஞான மார்க்கம் கொண்டால் முக்தி எனும் வீடு பேற்றை அடையலாம். ஞானத்தை அறிந்துஅதனை பின்பற்றி இறைவனின் செரூபத்தை அடைந்தவர்கள் படைப்பின் தொடக்கத்தில் மீண்டும் பிறப்பதுமில்லை, பிரளய காலத்தில் துன்புறுவதுமில்லை.இதனையே திருமூலரும் திருமந்திரத்தில் முன்னை செய்த தவத்தால் சிவஞானத்தைப் பெற்று தன் உண்மை உணர்ந்தால் பிறவி அறும் என " முன்னை அறிவினிற் செய்த முதுதவம் ............. " என்ற பாடல் மூலம் விளக்கிறார்,
பலவிதமான அனைத்து பிறப்பிடங்களிலும் எத்தனை உருவங்கள் உடல்கள் கொண்ட பிராணிகள் உண்டாகின்றனவோ அவை எல்லாவற்றிக்கும் பிரகிருதியே பிறப்பிடம் அதாவது கருத்தரிக்கும் தாய் , விதையளிக்கும் தந்தை, அவ்வாறு பிறக்கும் உயிர்களில் அழிவற்ற ஜீவாத்மாவாகிய உடலில் சத்துவ குணம், ரஜோகுணம், தமோகுணம் என்ற பிரகிருதியிலிருந்து உண்டான மூன்று குணங்கள் காணப்படுகின்றன.
ரஜோகுணம்:
விருப்பு வடிவாகிற ரஜோகுணம் ஆசை, பற்று இவற்றால் உண்டாகிறது. அது ஜீவாத்மாவைக் கர்மங்களிலும் கர்மகளின் பயன்களிலும் உள்ள தொடர்பால் கட்டுகிறது. ரஜோ குணம் அதிகமாகும் போது, பேராசை, உலகியல் கர்மங்களில் ஈடுபாடு, தன்னலத்தில் பற்றோடு கூடிய கர்மங்களைத் தொடஙகதல், அமைதியின்மை, உலகியல் நுகர்பொருட்களில் பேராவல் இவையாவும் உண்டாகின்றன.
தமோகுணம்:
உடற்பற்றுடைய எல்லோரையும் மயக்கக்கூடியது. அஞ்ஞானத்திலிருந்து உண்டானதாகும். அது இந்த ஜீவாத்மாவை வீணான செயல்களில் ஈடுபடுவது சோம்பல், தூக்கம் இவற்றை கட்டுகிறது. இந்த தமோகுணம் அதிகமாகும் போது அந்தக்காரணங்களிலும், புலன்களிலும் ஒளியின்மையையும், செய்ய வேண்டிய கடமைகளில் ஈடுபாடின்மை, அசட்டைத்தனம், அதாவது வீண் செயல்களில் ஈடுபாடும், தூக்கம் முதலிய அந்தக்காரணஙகளின் மயக்கமும் உண்டாகின்றன.
சத்துவ குணம்:
இந்த சத்துவ குணம் சுகத்தில் ஈடுபடுகிறது, ரஜோகுணம் செயலில் ஈடுபடுகிறது தமோகுணமோ, ஞானத்தை மறைத்து கவன மின்மையில் அதாவது வீணான செயல்களில் ஈடுபடுகிறது. ரஜோகுணத்தையும் தமோகுணத்தையும் அடக்கி சததுவகுணம் மேலோங்குகிறது. சததுவகுணத்தையும், தமோகுணத்தையும் அடக்கி ரஜோகுணம் மேலோங்குகிறது. அப்படியே சத்துவகுணத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கி, தமோ குணம் மேலோஙகுகிறது.
எப்போது மனிதன் சத்துவகுணம் பெருகி உள்பொழுது இறப்பை அடைகிறானோ, அப்போதே உயர்ந்த செயல்கள் செய்பவர்களுடைய நிர்மலமான சுவர்க்கம் முதலிய புண்ணிய உலங்களை அடைகிறான். ரஜோகுணத்தின் ஆதிக்கத்தில் இறப்பை அடைந்து கர்மங்களில் பற்றுள்ள மனிதர்களிடையே பிறக்கிறான்,, அவ்வாறே தமோகுணம் அதிகமாக இருக்கும் போது இறந்தவன் புழு-பூச்சி, விலங்கு முதலிய அறிவில்லாத பிறவிகளில் பிறக்கிறான்.
சததுவ குணத்திலிருந்து ஞானம் உண்டாகிறது. ரஜோகுணத்திலிருந்து ஐயமின்றிப் பேராசையே உண்டாகிறது. தமோகுணத்திலிருந்து கவனமின்மை மதிமயக்கமும் உண்டாகின்றன. மேலும் அறியாமையும் உண்டாகின்றது.
சத்துவ குணத்தில் நிலைபெற்ற மனிதர்கள் சொர்க்கம் முதிலிய உயர்ந்த லோகங்களை அடைகின்றனர், ரஜோகுணத்தில் நிலைபெற்ற மனிதர்கள் நடுவில் அதாவது மனித உலகிலேயே நிற்கின்றனர். தூக்கம், சோம்பல், வீண்செயல், முதலிய தாழ்ந்த குணங்களில் நிலை பெற்ற தமோச குணம் உடைய மனிதர்கள் புழு, விலங்கு, பறவை முதலிய தாழ்ந்த பிறவிகளையும் நரகத்தையும் அடைகின்றனர். மனித உடல் தோன்றுவதற்கு காரணமான இந்த மூன்று குணங்களையும் கடந்து, பிறப்பு, இறப்பு மூப்பு இவற்றிலிருந்தும், பிற எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு பரமானந்தத்தை அடைகிறான்,
எந்த மனிதன் சத்துவ குணத்தின் செயலான பிரகாசத்தையும், ரஜோகுணத்தின் செயலான செயலூக்கத்தையும் தமோகுணத்தின் செயலான மோகத்தையும் அவை வரும்போது அவற்றை வெறுப்பதில்லையோ விலகும் போது அவற்றை திரும்பவும் பெற விரும்பவதில்லையோ,
எவன் தன் நிலையான ஆத்ம சொரூபத்தில் இடையறாது நிலைத்து நிற்கிறானோ, இன்ப துன்பங்களை சமமாக கருதுவானோ, மண்ணையும் கல்லையும், பொன்னையும், சமமாக மதிப்பானோ, ஞானியோ, வேண்டியது-வேண்டாதது இரண்டடையும் ஒன்றாக நினைப்பானோ, இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் ஒன்றாக கருதுவானோ, பெருமையையும், சிறுமையையும் சமமென நினைப்பாநோ, நண்பர் பகைவர் பக்கலும் சமநோக்குக் கொண்டவனோ, செயல்கள் அனைத்திலும் நான் செய்கிறேன் (தான் கர்த்தர் - நான் என்ற ஆங்காரம்) என்ற மனப்பான்மையை விட்டானோ, அந்த மனிதன் முக்குணங்களையும் கடந்தவன், அந்த முக்குணங்களையும் கடந்து அப்பாற்பட்ட ஞானத்தை அறிந்து பரம்பொருளையே சிந்தித்து சம்சாரசகரத்திலிருந்து விடுபட்டு சித்தியாகிய பரமாத்மாவை அடைவான். மேலும் எவன் வேறு எதிலும் நாட்ட மில்லாமல் ஒன்றிய பக்தியோகத்தினால் அந்த பரம்பொருளை அடைகிறானோ, அவன் இந்த மூன்று குணங்களிலிருந்து முற்றிலுமாக கடந்து சத் சித்தானந்தமான பரமானந்தத்தை அடைய தகுதி பெற்றவன், ஏனெனில் அந்த அழிவற்றதான பரம்பிரம்மத்திற்கும் அமிர்த நிலைக்கும் ( இறவா நிலைக்கும்) எப்போதும் இருக்கக்கூடிய தர்மத்திற்கும் வேறுபாடற்ற ஒரே சீரான ஆனந்தத்திற்கும் உறைவிடமான சத் சித்தானந்தத்தை அடைவான்,
திருசிற்றம்பலம் - ஓம் நமசிவாய நம
மேலும்ஆனமீகத் தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
" காந்த ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டுமாதலால், கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை, மனிதனுடைய மனம் இறைவனை நாடியிருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப் போகமாட்டான்" பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்,
ஞானமார்க்கம் அடைய பல ஞானிகளான சித்தர்களும், வேதங்களும் கூறிய நெறிகளைஅவர்களின் சீடர்களுக்கு உபதேசமாக வழங்கியுள்ளனர், அந்த ஞான மொழியே பரம்பொருளாகிய ஞானசொரூபன் அருளியதாகும், பிறவிப் பிணி நீக்கி முக்தி எனும் விடுதலை அடைய காணும் வழிகள் நான்கு உண்டு இந்த மெய்யறிவான ஞான மார்க்கம் கொண்டால் முக்தி எனும் வீடு பேற்றை அடையலாம். ஞானத்தை அறிந்துஅதனை பின்பற்றி இறைவனின் செரூபத்தை அடைந்தவர்கள் படைப்பின் தொடக்கத்தில் மீண்டும் பிறப்பதுமில்லை, பிரளய காலத்தில் துன்புறுவதுமில்லை.இதனையே திருமூலரும் திருமந்திரத்தில் முன்னை செய்த தவத்தால் சிவஞானத்தைப் பெற்று தன் உண்மை உணர்ந்தால் பிறவி அறும் என " முன்னை அறிவினிற் செய்த முதுதவம் ............. " என்ற பாடல் மூலம் விளக்கிறார்,
பலவிதமான அனைத்து பிறப்பிடங்களிலும் எத்தனை உருவங்கள் உடல்கள் கொண்ட பிராணிகள் உண்டாகின்றனவோ அவை எல்லாவற்றிக்கும் பிரகிருதியே பிறப்பிடம் அதாவது கருத்தரிக்கும் தாய் , விதையளிக்கும் தந்தை, அவ்வாறு பிறக்கும் உயிர்களில் அழிவற்ற ஜீவாத்மாவாகிய உடலில் சத்துவ குணம், ரஜோகுணம், தமோகுணம் என்ற பிரகிருதியிலிருந்து உண்டான மூன்று குணங்கள் காணப்படுகின்றன.
ரஜோகுணம்:
விருப்பு வடிவாகிற ரஜோகுணம் ஆசை, பற்று இவற்றால் உண்டாகிறது. அது ஜீவாத்மாவைக் கர்மங்களிலும் கர்மகளின் பயன்களிலும் உள்ள தொடர்பால் கட்டுகிறது. ரஜோ குணம் அதிகமாகும் போது, பேராசை, உலகியல் கர்மங்களில் ஈடுபாடு, தன்னலத்தில் பற்றோடு கூடிய கர்மங்களைத் தொடஙகதல், அமைதியின்மை, உலகியல் நுகர்பொருட்களில் பேராவல் இவையாவும் உண்டாகின்றன.
தமோகுணம்:
உடற்பற்றுடைய எல்லோரையும் மயக்கக்கூடியது. அஞ்ஞானத்திலிருந்து உண்டானதாகும். அது இந்த ஜீவாத்மாவை வீணான செயல்களில் ஈடுபடுவது சோம்பல், தூக்கம் இவற்றை கட்டுகிறது. இந்த தமோகுணம் அதிகமாகும் போது அந்தக்காரணங்களிலும், புலன்களிலும் ஒளியின்மையையும், செய்ய வேண்டிய கடமைகளில் ஈடுபாடின்மை, அசட்டைத்தனம், அதாவது வீண் செயல்களில் ஈடுபாடும், தூக்கம் முதலிய அந்தக்காரணஙகளின் மயக்கமும் உண்டாகின்றன.
சத்துவ குணம்:
இந்த சத்துவ குணம் சுகத்தில் ஈடுபடுகிறது, ரஜோகுணம் செயலில் ஈடுபடுகிறது தமோகுணமோ, ஞானத்தை மறைத்து கவன மின்மையில் அதாவது வீணான செயல்களில் ஈடுபடுகிறது. ரஜோகுணத்தையும் தமோகுணத்தையும் அடக்கி சததுவகுணம் மேலோங்குகிறது. சததுவகுணத்தையும், தமோகுணத்தையும் அடக்கி ரஜோகுணம் மேலோங்குகிறது. அப்படியே சத்துவகுணத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கி, தமோ குணம் மேலோஙகுகிறது.
எப்போது மனிதன் சத்துவகுணம் பெருகி உள்பொழுது இறப்பை அடைகிறானோ, அப்போதே உயர்ந்த செயல்கள் செய்பவர்களுடைய நிர்மலமான சுவர்க்கம் முதலிய புண்ணிய உலங்களை அடைகிறான். ரஜோகுணத்தின் ஆதிக்கத்தில் இறப்பை அடைந்து கர்மங்களில் பற்றுள்ள மனிதர்களிடையே பிறக்கிறான்,, அவ்வாறே தமோகுணம் அதிகமாக இருக்கும் போது இறந்தவன் புழு-பூச்சி, விலங்கு முதலிய அறிவில்லாத பிறவிகளில் பிறக்கிறான்.
சததுவ குணத்திலிருந்து ஞானம் உண்டாகிறது. ரஜோகுணத்திலிருந்து ஐயமின்றிப் பேராசையே உண்டாகிறது. தமோகுணத்திலிருந்து கவனமின்மை மதிமயக்கமும் உண்டாகின்றன. மேலும் அறியாமையும் உண்டாகின்றது.
சத்துவ குணத்தில் நிலைபெற்ற மனிதர்கள் சொர்க்கம் முதிலிய உயர்ந்த லோகங்களை அடைகின்றனர், ரஜோகுணத்தில் நிலைபெற்ற மனிதர்கள் நடுவில் அதாவது மனித உலகிலேயே நிற்கின்றனர். தூக்கம், சோம்பல், வீண்செயல், முதலிய தாழ்ந்த குணங்களில் நிலை பெற்ற தமோச குணம் உடைய மனிதர்கள் புழு, விலங்கு, பறவை முதலிய தாழ்ந்த பிறவிகளையும் நரகத்தையும் அடைகின்றனர். மனித உடல் தோன்றுவதற்கு காரணமான இந்த மூன்று குணங்களையும் கடந்து, பிறப்பு, இறப்பு மூப்பு இவற்றிலிருந்தும், பிற எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு பரமானந்தத்தை அடைகிறான்,
எந்த மனிதன் சத்துவ குணத்தின் செயலான பிரகாசத்தையும், ரஜோகுணத்தின் செயலான செயலூக்கத்தையும் தமோகுணத்தின் செயலான மோகத்தையும் அவை வரும்போது அவற்றை வெறுப்பதில்லையோ விலகும் போது அவற்றை திரும்பவும் பெற விரும்பவதில்லையோ,
எவன் தன் நிலையான ஆத்ம சொரூபத்தில் இடையறாது நிலைத்து நிற்கிறானோ, இன்ப துன்பங்களை சமமாக கருதுவானோ, மண்ணையும் கல்லையும், பொன்னையும், சமமாக மதிப்பானோ, ஞானியோ, வேண்டியது-வேண்டாதது இரண்டடையும் ஒன்றாக நினைப்பானோ, இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் ஒன்றாக கருதுவானோ, பெருமையையும், சிறுமையையும் சமமென நினைப்பாநோ, நண்பர் பகைவர் பக்கலும் சமநோக்குக் கொண்டவனோ, செயல்கள் அனைத்திலும் நான் செய்கிறேன் (தான் கர்த்தர் - நான் என்ற ஆங்காரம்) என்ற மனப்பான்மையை விட்டானோ, அந்த மனிதன் முக்குணங்களையும் கடந்தவன், அந்த முக்குணங்களையும் கடந்து அப்பாற்பட்ட ஞானத்தை அறிந்து பரம்பொருளையே சிந்தித்து சம்சாரசகரத்திலிருந்து விடுபட்டு சித்தியாகிய பரமாத்மாவை அடைவான். மேலும் எவன் வேறு எதிலும் நாட்ட மில்லாமல் ஒன்றிய பக்தியோகத்தினால் அந்த பரம்பொருளை அடைகிறானோ, அவன் இந்த மூன்று குணங்களிலிருந்து முற்றிலுமாக கடந்து சத் சித்தானந்தமான பரமானந்தத்தை அடைய தகுதி பெற்றவன், ஏனெனில் அந்த அழிவற்றதான பரம்பிரம்மத்திற்கும் அமிர்த நிலைக்கும் ( இறவா நிலைக்கும்) எப்போதும் இருக்கக்கூடிய தர்மத்திற்கும் வேறுபாடற்ற ஒரே சீரான ஆனந்தத்திற்கும் உறைவிடமான சத் சித்தானந்தத்தை அடைவான்,
திருசிற்றம்பலம் - ஓம் நமசிவாய நம
மேலும்ஆனமீகத் தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
குதம்பைச்சித்தர் பாடல்
அழுகணி சித்தரின் என் கண்ணம்மா, அகப்பேய் சித்தரின்
அகப்பேயைப் போன்று குதம்பைச் சித்தரின் பாடல் கண்ணிகளில் ‘குதம்பாய்’
என்ற வார்த்தை ஜாலம் வருகின்றது. இவர் ‘குதம்பை’ என்ற காதணியணிந்த
பெண்ணை முன்னிலைப்படுத்திப் பாடுவதால் இவர் குதம்பைச் சித்தர் என்ற
பெயர் பெற்றார் என்பர்.
பெண் குழந்தை இல்லாத குறைக்கு ஆணாய்ப் பிறந்த இவரைப் பெண்
குழந்தை போல அலங்காரம் செய்து மகிழ்வார்களாம். அப்படி அணிகலன்கள்
அணியும் நிலையில் காதில் குதம்பை என்ற ஆபரணத்தை அணிந்
திருக்கையில் அவ்வளவு அழகாகக் காட்சி தருமாம் அந்தக் குழந்தை.
அதனால் அதனை ‘குதம்பை’ என்ற சிறப்புப் பெயராலேயே அழைக்கத்
தொடங்கினார்களாம்.
இந்தக் கதை இப்படியிருக்க, இவர் இடையர் குலத்தைச் சேர்ந்த
கோபாலர் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்து சித்தர் ஒருவரிடம்
ஞானோ பதேசம் பெற்று மயிலாடுதுறையில் சித்தியடைந்தார் என்ற வரலாறும்
கூறப்படுவதுண்டு.
ஏனைய சித்தர்களைப் போல இவரும் தமது பாடலில் “தன்னையறிய
வேணும் சாராமல் சாரவேணும்” என்ற தத்துவக் கொள்கையைப்
பின்பற்றுகிறார். இராமலிங்க சுவாமிகள்கூட ‘தன்னையறிந்து இன்புறவே’ என்று வெண்ணிலவை நோக்கிப் பாடியதை நோக்க எல்லா ஞானிகளும்
தன்னையறிதலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் என்பது
புலப்படும்.
“தன்னையறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்கு
பின்னாசை யேதுக்கடி - குதம்பாய்
பின்னாசை யேதுக்கடி”
இவர் தம் பாடலில் யோக சித்திகளைப் பற்றிப் பலப்படக் கூறினாலும்
இறைவனையடையும் பக்குவம் பெற்றோர்க்கு இதெல்லாம் தேவையற்ற
வழிமுறைகள் என்றும் காட்டமாகக் கூறுகிறார்.
“ஆதாரமான வடிமுடிகண்டோர்க்கு
வாதாட்ட மேதுக்கடி - குதம்பாய்
வாதாட்ட மேதுக்கடி”
“நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்க ளேதுக்கடி - குதம்பாய்
வாட்டங்க ளேதுக்கடி”.
“முக்கோணந் தன்னில் முளைத்த மெய்ஞ் ஞானிக்கு
சட் கோண மேதுக்கடி”
“சித்திரக் கூடத்தைத் தினந்தினந் காண்போர்க்கு
பத்திர மேதுக்கடி”
என்ற பாடல் வரிகள் குண்டலினி தவத்தைப் பற்றி எடுத்துக்காட்டுவனவாகும்.
முதற்பாடல் மூலாதார யோகத்தையும், இரண்டாம் பாடல் சுழுமுனை
வழியையும், மூன்றாம் பாடல் அநாகத சக்கரத்தையும் நான்காம் பாடல்
சகஸ்ராரம் பெருவெளியையும் குறிப்பால் உணர்த்துவன.
இறைவனாகிய உண்மைப் பொருளைக் கண்டு தெளிந்த மெய்ஞானிகள்
மெய்யாகிய உடலை நீடித்துவாழவைக்கும் காயகற்ப முறைகளை நாடி வீண் பொழுது கழிக்க மாட்டார்கள்
என்று கூறுகின்றார்.
யோக சக்தி படைத்தவர்கள் காலனை வென்றவர்களாவார்கள்.
அவர்களைக் காலன் நெருங்க மாட்டான். நீண்ட நாள் உயிர் வாழும்
தன்மையை அவர்கள் இயல்பாகவே பெற்றிருப்பதால் மரணம் என்பது
அவர்களாகவே நிர்ணயித்துக் கொள்வது. இந்த நிலையில் அட்டாங்க
யோகத்தில் ஒன்றான வேண்டிய வடிவமெடுக்கும் ஈசத்துவம் தேவையில்லை
என்பது குதம்பைச் சித்தரின் கருத்து. இதனை,
“காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி”
என்கிறார்.
காயகற்ப சாதனைகளைச் செய்யாத சித்தர்களே இல்லை என்று கூறுமளவு
பெரும்பாலும் எல்லாச் சித்தர்களும் காயகற்பப் பயிற்சியை மேற்கொண்ட
நிலையில் உண்மை ஞானிகள் காயகற்பந் தேட மாட்டார்கள் என்று
வித்தியாசமாகத் தெரிவிக்கின்றார்.
“மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்”
கடவுளின் உண்மை உணர்ந்த ஞானிகளுக்கு உடலை வளர்க்கும்
காயகற்பங்கள் தேவையில்லை என்பது குதம்பையாரின் தனிக் கருத்தாகும்.
நோயற்ற வாழ்வு வாழும் அவர்களுக்கு யோக சித்திகள் மூலம் உடலை
வலுப்படுத்தும் காயகற்பம் தேவையா என்ற வினாவை எழுப்பிய அவர்
வாசியோகமான பிரணாயமத்தை பின்பற்றும் ஒருவருக்கு யோகம்கூடத்
தேவையில்லை என்ற முடிவுக்கு வருகின்றார்.
“வேகமடக்கி விளங்கு மெய்ஞ்ஞானிக்கு
யோகந் தானேதுக் கடி”
என்று அவர் கேட்பது நியாயமாகத்தானே படுகிறது.
உலகில் அஞ் ஞானம் ஒழிந்திட யார்க்கும்
இலகும் கடவுளை ஏத்தி - நலமார்
குதம்பாய் மெய்ஞ்ஞானம் கூறவே நன்கு
நிதம்பார்த்து நெஞ்சில் நினை.
எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி. 8
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி. 9
ஆவித் துணையாகும் ஆராவ அமுதத்தைச்
சேவித்துக் கொள்வாயடி குதம்பாய்
சேவித்துக் கொள்வாயடி. 10
தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை
மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய்
மாண்டாலும் போற்றிடுவாய்.
இவ்வாறு இறைவனை ஜோதிவடிவாய் காண்பதை மேற்கண்ட பாடல் வரிகளின் மூலம் காணலாம்
உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித்
திருவாகி நின்றது காண் குதம்பாய்
திருவாகி நின்றது காண். 23
நீரும் நெருப்பும் நெடுங்காற்று வானமும்
பாருமாய் நின்றதைக் காண் குதம்பாய்
பாருமாய் நின்றதைக் காண். 24
புவனம் எல்லாங் கணப்போதே அழித்திடச்
சிவனாலே ஆகுமடி குதம்பாய்
சிவனாலே ஆகுமடி. 25
அவன் அசையாவிடின் அணுஅசை யாதுஎன்றல்
புவனத்தில் உண்மையடி குதம்பாய்
புவனத்தில் உண்மையடி.
ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
சோதியாய் நின்றானடி குதம்பாய்
சோதியாய் நின்றானடி.
முத்திநிலை பெறும் வழி
பற்றற நின்றானைப் பற்றறப் பற்றிடக்
கற்றார்க்கு முத்தியடி குதம்பாய்
கற்றார்க்கு முத்தியடி. 52
பந்தத்தை விட்டொளிர் பந்தத்தைப் பற்றினால்
சந்தத முத்தியடி குதம்பாய்
சந்தத முத்தியடி. 53
ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற
ஊமைக்கு முத்தியடி குதம்பாய்
ஊமைக்கு முத்தியடி.
தேகத்தைப் பழித்தல்
பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு
வாசனை ஏதுக்கடி குதம்பாய்
வாசனை ஏதுக்கடி.
காகம் கழுகு களித்துண்ணும் மேனிக்கு
வாகனம் ஏதுக்கடி குதம்பாய்
வாகனம் ஏதுக்கடி.
பரத்தயரைப் பழித்தல்
வளர்ந்து முறுக்காய் வயதில் எழுந்த தனம்
தளர்ந்து விழுந்திடுமே குதம்பாய்
தளர்ந்து விழுந்திடுமே.
மஞ்சு போலாகி வளர்ந்திடும் கூந்தலும்
பஞ்சுபோல் ஆகிடுமே குதம்பாய்
பஞ்சுபோல் ஆகிடுமே.
நலம் நிலைமை
கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன்கோளிவை
பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய்
பாபத்துக்கு ஏதுவடி. 83
கள்ளங்கட் காமம் கொலைகள் கபடங்கள்
பள்ளத்திற் தள்ளுமடி குதம்பாய்
பள்ளத்திற் தள்ளுமடி. 84
பொருளாசை யுள்ளஇப் பூமியில் உள்ளோருக்கு
இருளாம் நரகமடி குதம்பாய்
இருளாம் நரகமடி.
பொய்த்தவ ஒழுக்கத்தைப் பழித்தல்
செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு
எங்காகும் நல்வழியே குதம்பாய்
எங்காகும் நல்வழியே.
வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்குப்
பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய்
பெண்ணாசை ஏதுக்கடி?
நிலையாப்பொருள்
தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
நாடி வருவதுண்டோ? குதம்பாய்
நாடி வருவதுண்டோ? 102
போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
சாம்போது தான்வருமோ? குதம்பாய்
சாம்போது தான்வருமோ?
செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
தங்காது அழியுமடி! குதம்பாய்
தங்காது அழியுமடி!
தன்னோடு செல்பவை
நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால்
செல்வன் நிச்சயமே குதம்பாய்
செல்வன நிச்சயமே. 111
செய்தவம் செய்கொலை செய்தர்மம் தன்னொடும்
எய்த வருவனவே குதம்பாய்
எய்த வருவனவே. 112
முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய
பத்தியும் பின்வருமே குதம்பாய்
பத்தியும் பின்வருமே. 113
ஆசையை ஒழித்தல்
இச்சைப் பிறப்பினை எய்விக்கு என்றது
நிச்சய மாகுமடி குதம்பாய்
நிச்சய மாகுமடி. 114
வல்லமை யாகவே வாஞ்சை ஒழித்திட்டால்
நல்ல துறவாமடி குதம்பாய்
நல்ல துறவாமடி. 115
ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டென்ற
ஓசையைக் கேட்டிலையோ குதம்பாய்
ஓசையைக் கேட்டிலையோ?
தவநிலை கூறல்
காமனை வென்று கடுந்தவஞ் செய்வோர்க்கு
ஏமன் பயப்படுவான் குதம்பாய்
ஏமன் பயப்படுவான். 123
யோகந் தான்வேண்டி உறுதிகொள் யோகிக்கு
மோகந்தான் இல்லையடி குதம்பாய்
மோகந்தான் இல்லையடி.
ஐம்புலன் வென்றே அனைத்தும் துறந்தோர்கள்
சம்புவைக் காண்பாரடி குதம்பாய்
சம்புவைக் காண்பாரடி.
சாதி பேத மின்மை
ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி
வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய்
வீண்சாதி மற்றவெல்லாம்.
சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை என்று
ஓதி உணர்ந் தறிவாய் குதம்பாய்
ஓதி உணர்ந் தறிவாய்.
சமயநிலை கூறல்
பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள்
கற்பனை ஆகுமடி குதம்பாய்
கற்பனை ஆகுமடி.
மந்திரநிலை கூறல்
ஐந்தெழுத்து ஐந்தறைக் கார்ந்திடும் அவ்வாறே
சிந்தையுள் கண்டறி நீ குதம்பாய்
சிந்தையுள் கண்டறி நீ. 157
வாதநிலை கூறல்
ஆறாறு காரமும் நூறுமே சேர்ந்திடில்
வீறான முப்பாமடி குதம்பாய்
வீறான முப்பாமடி. 158
விந்தொடு நாதம் விளங்கத் துலங்கினால்
வந்தது வாதமடி குதம்பாய்
வந்தது வாதமடி.
பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல்
மண்ணாலே இல்லையடி குதம்பாய்
மண்ணாலே இல்லையடி.
வயித்தியங் கூறல்
முப்பிணி தன்னை அறியாத மூடர்கள்
எப்பிணி தீர்ப்பாரடி குதம்பாய்
எப்பிணி தீர்ப்பாரடி. 164
எட்டெட்டும் கட்டி இருக்குமேற் தீயினிற்
விட்டோடும் நோய்கள் எல்லாம் குதம்பாய்
விட்டோடும் நோய்கள் எல்லாம். 165
நாடி ஒருபது நன்காய் அறிந்திடில்
ஓடிவிடும் பிணியே குதம்பாய்
ஓடுவிடும் பிணியே.
தலங்களிவை எனல்
கோயில் பலதேடிக் கும்பிட்ட தால்உனக்கு
ஏயும் பலன் வருமோ? குதம்பாய்
ஏயும் பலன் வருமோ?
அன்பான பத்தர் அகக்கோயில் கர்த்தற்கே
இன்பான கோயிலடி குதம்பாய்
இன்பான கோயிலடி.
காசி ராமேச்சுரம் கால் நோவச் சென்றாலும்
ஈசனைக் காணுவையோ? குதம்பாய்
ஈசனைக் காணுவையோ?
அஞ்ஞானங் கடிதல்
தந்தைதாய் செய்வினை சந்ததிக்கு ஆமென்பார்
சிந்தை தெளிந்திலரே குதம்பாய்
சிந்தை தெளிந்திலரே.
பார்ப்பார் சடங்கு பலனின்று பாரிலே
தீர்ப்பாக எண்ணிடுவாய் குதம்பாய்
தீர்ப்பாக எண்ணிடுவாய்.
மந்திர மூலம் வகுத்தறி யாதார்க்குத்
தந்திரம் ஏதுக்கடி குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி. 213
வாதமென்றே பொய்யை வாயிற் புடைப்போர்க்குச்
சேதம் மிகவருமே குதம்பாய்
வேதம் மிகவருமே.
ஆனந்தம் பொங்கி அறிவோ டிருப்போர்க்கு
ஞானந்தா னேதுக்கடி குதம்பாய்
ஞானந்தா னேதுக்கடி.
திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
அழுகணி சித்தரின் என் கண்ணம்மா, அகப்பேய் சித்தரின்
அகப்பேயைப் போன்று குதம்பைச் சித்தரின் பாடல் கண்ணிகளில் ‘குதம்பாய்’
என்ற வார்த்தை ஜாலம் வருகின்றது. இவர் ‘குதம்பை’ என்ற காதணியணிந்த
பெண்ணை முன்னிலைப்படுத்திப் பாடுவதால் இவர் குதம்பைச் சித்தர் என்ற
பெயர் பெற்றார் என்பர்.
பெண் குழந்தை இல்லாத குறைக்கு ஆணாய்ப் பிறந்த இவரைப் பெண்
குழந்தை போல அலங்காரம் செய்து மகிழ்வார்களாம். அப்படி அணிகலன்கள்
அணியும் நிலையில் காதில் குதம்பை என்ற ஆபரணத்தை அணிந்
திருக்கையில் அவ்வளவு அழகாகக் காட்சி தருமாம் அந்தக் குழந்தை.
அதனால் அதனை ‘குதம்பை’ என்ற சிறப்புப் பெயராலேயே அழைக்கத்
தொடங்கினார்களாம்.
இந்தக் கதை இப்படியிருக்க, இவர் இடையர் குலத்தைச் சேர்ந்த
கோபாலர் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்து சித்தர் ஒருவரிடம்
ஞானோ பதேசம் பெற்று மயிலாடுதுறையில் சித்தியடைந்தார் என்ற வரலாறும்
கூறப்படுவதுண்டு.
ஏனைய சித்தர்களைப் போல இவரும் தமது பாடலில் “தன்னையறிய
வேணும் சாராமல் சாரவேணும்” என்ற தத்துவக் கொள்கையைப்
பின்பற்றுகிறார். இராமலிங்க சுவாமிகள்கூட ‘தன்னையறிந்து இன்புறவே’ என்று வெண்ணிலவை நோக்கிப் பாடியதை நோக்க எல்லா ஞானிகளும்
தன்னையறிதலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் என்பது
புலப்படும்.
“தன்னையறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்கு
பின்னாசை யேதுக்கடி - குதம்பாய்
பின்னாசை யேதுக்கடி”
இவர் தம் பாடலில் யோக சித்திகளைப் பற்றிப் பலப்படக் கூறினாலும்
இறைவனையடையும் பக்குவம் பெற்றோர்க்கு இதெல்லாம் தேவையற்ற
வழிமுறைகள் என்றும் காட்டமாகக் கூறுகிறார்.
“ஆதாரமான வடிமுடிகண்டோர்க்கு
வாதாட்ட மேதுக்கடி - குதம்பாய்
வாதாட்ட மேதுக்கடி”
“நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்க ளேதுக்கடி - குதம்பாய்
வாட்டங்க ளேதுக்கடி”.
“முக்கோணந் தன்னில் முளைத்த மெய்ஞ் ஞானிக்கு
சட் கோண மேதுக்கடி”
“சித்திரக் கூடத்தைத் தினந்தினந் காண்போர்க்கு
பத்திர மேதுக்கடி”
என்ற பாடல் வரிகள் குண்டலினி தவத்தைப் பற்றி எடுத்துக்காட்டுவனவாகும்.
முதற்பாடல் மூலாதார யோகத்தையும், இரண்டாம் பாடல் சுழுமுனை
வழியையும், மூன்றாம் பாடல் அநாகத சக்கரத்தையும் நான்காம் பாடல்
சகஸ்ராரம் பெருவெளியையும் குறிப்பால் உணர்த்துவன.
இறைவனாகிய உண்மைப் பொருளைக் கண்டு தெளிந்த மெய்ஞானிகள்
மெய்யாகிய உடலை நீடித்துவாழவைக்கும் காயகற்ப முறைகளை நாடி வீண் பொழுது கழிக்க மாட்டார்கள்
என்று கூறுகின்றார்.
யோக சக்தி படைத்தவர்கள் காலனை வென்றவர்களாவார்கள்.
அவர்களைக் காலன் நெருங்க மாட்டான். நீண்ட நாள் உயிர் வாழும்
தன்மையை அவர்கள் இயல்பாகவே பெற்றிருப்பதால் மரணம் என்பது
அவர்களாகவே நிர்ணயித்துக் கொள்வது. இந்த நிலையில் அட்டாங்க
யோகத்தில் ஒன்றான வேண்டிய வடிவமெடுக்கும் ஈசத்துவம் தேவையில்லை
என்பது குதம்பைச் சித்தரின் கருத்து. இதனை,
“காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி”
என்கிறார்.
காயகற்ப சாதனைகளைச் செய்யாத சித்தர்களே இல்லை என்று கூறுமளவு
பெரும்பாலும் எல்லாச் சித்தர்களும் காயகற்பப் பயிற்சியை மேற்கொண்ட
நிலையில் உண்மை ஞானிகள் காயகற்பந் தேட மாட்டார்கள் என்று
வித்தியாசமாகத் தெரிவிக்கின்றார்.
“மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்”
கடவுளின் உண்மை உணர்ந்த ஞானிகளுக்கு உடலை வளர்க்கும்
காயகற்பங்கள் தேவையில்லை என்பது குதம்பையாரின் தனிக் கருத்தாகும்.
நோயற்ற வாழ்வு வாழும் அவர்களுக்கு யோக சித்திகள் மூலம் உடலை
வலுப்படுத்தும் காயகற்பம் தேவையா என்ற வினாவை எழுப்பிய அவர்
வாசியோகமான பிரணாயமத்தை பின்பற்றும் ஒருவருக்கு யோகம்கூடத்
தேவையில்லை என்ற முடிவுக்கு வருகின்றார்.
“வேகமடக்கி விளங்கு மெய்ஞ்ஞானிக்கு
யோகந் தானேதுக் கடி”
என்று அவர் கேட்பது நியாயமாகத்தானே படுகிறது.
உலகில் அஞ் ஞானம் ஒழிந்திட யார்க்கும்
இலகும் கடவுளை ஏத்தி - நலமார்
குதம்பாய் மெய்ஞ்ஞானம் கூறவே நன்கு
நிதம்பார்த்து நெஞ்சில் நினை.
எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி. 8
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி. 9
ஆவித் துணையாகும் ஆராவ அமுதத்தைச்
சேவித்துக் கொள்வாயடி குதம்பாய்
சேவித்துக் கொள்வாயடி. 10
தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை
மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய்
மாண்டாலும் போற்றிடுவாய்.
இவ்வாறு இறைவனை ஜோதிவடிவாய் காண்பதை மேற்கண்ட பாடல் வரிகளின் மூலம் காணலாம்
உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித்
திருவாகி நின்றது காண் குதம்பாய்
திருவாகி நின்றது காண். 23
நீரும் நெருப்பும் நெடுங்காற்று வானமும்
பாருமாய் நின்றதைக் காண் குதம்பாய்
பாருமாய் நின்றதைக் காண். 24
புவனம் எல்லாங் கணப்போதே அழித்திடச்
சிவனாலே ஆகுமடி குதம்பாய்
சிவனாலே ஆகுமடி. 25
அவன் அசையாவிடின் அணுஅசை யாதுஎன்றல்
புவனத்தில் உண்மையடி குதம்பாய்
புவனத்தில் உண்மையடி.
ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
சோதியாய் நின்றானடி குதம்பாய்
சோதியாய் நின்றானடி.
முத்திநிலை பெறும் வழி
பற்றற நின்றானைப் பற்றறப் பற்றிடக்
கற்றார்க்கு முத்தியடி குதம்பாய்
கற்றார்க்கு முத்தியடி. 52
பந்தத்தை விட்டொளிர் பந்தத்தைப் பற்றினால்
சந்தத முத்தியடி குதம்பாய்
சந்தத முத்தியடி. 53
ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற
ஊமைக்கு முத்தியடி குதம்பாய்
ஊமைக்கு முத்தியடி.
தேகத்தைப் பழித்தல்
பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு
வாசனை ஏதுக்கடி குதம்பாய்
வாசனை ஏதுக்கடி.
காகம் கழுகு களித்துண்ணும் மேனிக்கு
வாகனம் ஏதுக்கடி குதம்பாய்
வாகனம் ஏதுக்கடி.
பரத்தயரைப் பழித்தல்
வளர்ந்து முறுக்காய் வயதில் எழுந்த தனம்
தளர்ந்து விழுந்திடுமே குதம்பாய்
தளர்ந்து விழுந்திடுமே.
மஞ்சு போலாகி வளர்ந்திடும் கூந்தலும்
பஞ்சுபோல் ஆகிடுமே குதம்பாய்
பஞ்சுபோல் ஆகிடுமே.
நலம் நிலைமை
கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன்கோளிவை
பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய்
பாபத்துக்கு ஏதுவடி. 83
கள்ளங்கட் காமம் கொலைகள் கபடங்கள்
பள்ளத்திற் தள்ளுமடி குதம்பாய்
பள்ளத்திற் தள்ளுமடி. 84
பொருளாசை யுள்ளஇப் பூமியில் உள்ளோருக்கு
இருளாம் நரகமடி குதம்பாய்
இருளாம் நரகமடி.
பொய்த்தவ ஒழுக்கத்தைப் பழித்தல்
செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு
எங்காகும் நல்வழியே குதம்பாய்
எங்காகும் நல்வழியே.
வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்குப்
பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய்
பெண்ணாசை ஏதுக்கடி?
நிலையாப்பொருள்
தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
நாடி வருவதுண்டோ? குதம்பாய்
நாடி வருவதுண்டோ? 102
போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
சாம்போது தான்வருமோ? குதம்பாய்
சாம்போது தான்வருமோ?
செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
தங்காது அழியுமடி! குதம்பாய்
தங்காது அழியுமடி!
தன்னோடு செல்பவை
நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால்
செல்வன் நிச்சயமே குதம்பாய்
செல்வன நிச்சயமே. 111
செய்தவம் செய்கொலை செய்தர்மம் தன்னொடும்
எய்த வருவனவே குதம்பாய்
எய்த வருவனவே. 112
முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய
பத்தியும் பின்வருமே குதம்பாய்
பத்தியும் பின்வருமே. 113
ஆசையை ஒழித்தல்
இச்சைப் பிறப்பினை எய்விக்கு என்றது
நிச்சய மாகுமடி குதம்பாய்
நிச்சய மாகுமடி. 114
வல்லமை யாகவே வாஞ்சை ஒழித்திட்டால்
நல்ல துறவாமடி குதம்பாய்
நல்ல துறவாமடி. 115
ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டென்ற
ஓசையைக் கேட்டிலையோ குதம்பாய்
ஓசையைக் கேட்டிலையோ?
தவநிலை கூறல்
காமனை வென்று கடுந்தவஞ் செய்வோர்க்கு
ஏமன் பயப்படுவான் குதம்பாய்
ஏமன் பயப்படுவான். 123
யோகந் தான்வேண்டி உறுதிகொள் யோகிக்கு
மோகந்தான் இல்லையடி குதம்பாய்
மோகந்தான் இல்லையடி.
ஐம்புலன் வென்றே அனைத்தும் துறந்தோர்கள்
சம்புவைக் காண்பாரடி குதம்பாய்
சம்புவைக் காண்பாரடி.
சாதி பேத மின்மை
ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி
வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய்
வீண்சாதி மற்றவெல்லாம்.
சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை என்று
ஓதி உணர்ந் தறிவாய் குதம்பாய்
ஓதி உணர்ந் தறிவாய்.
சமயநிலை கூறல்
பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள்
கற்பனை ஆகுமடி குதம்பாய்
கற்பனை ஆகுமடி.
மந்திரநிலை கூறல்
ஐந்தெழுத்து ஐந்தறைக் கார்ந்திடும் அவ்வாறே
சிந்தையுள் கண்டறி நீ குதம்பாய்
சிந்தையுள் கண்டறி நீ. 157
வாதநிலை கூறல்
ஆறாறு காரமும் நூறுமே சேர்ந்திடில்
வீறான முப்பாமடி குதம்பாய்
வீறான முப்பாமடி. 158
விந்தொடு நாதம் விளங்கத் துலங்கினால்
வந்தது வாதமடி குதம்பாய்
வந்தது வாதமடி.
பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல்
மண்ணாலே இல்லையடி குதம்பாய்
மண்ணாலே இல்லையடி.
வயித்தியங் கூறல்
முப்பிணி தன்னை அறியாத மூடர்கள்
எப்பிணி தீர்ப்பாரடி குதம்பாய்
எப்பிணி தீர்ப்பாரடி. 164
எட்டெட்டும் கட்டி இருக்குமேற் தீயினிற்
விட்டோடும் நோய்கள் எல்லாம் குதம்பாய்
விட்டோடும் நோய்கள் எல்லாம். 165
நாடி ஒருபது நன்காய் அறிந்திடில்
ஓடிவிடும் பிணியே குதம்பாய்
ஓடுவிடும் பிணியே.
தலங்களிவை எனல்
கோயில் பலதேடிக் கும்பிட்ட தால்உனக்கு
ஏயும் பலன் வருமோ? குதம்பாய்
ஏயும் பலன் வருமோ?
அன்பான பத்தர் அகக்கோயில் கர்த்தற்கே
இன்பான கோயிலடி குதம்பாய்
இன்பான கோயிலடி.
காசி ராமேச்சுரம் கால் நோவச் சென்றாலும்
ஈசனைக் காணுவையோ? குதம்பாய்
ஈசனைக் காணுவையோ?
அஞ்ஞானங் கடிதல்
தந்தைதாய் செய்வினை சந்ததிக்கு ஆமென்பார்
சிந்தை தெளிந்திலரே குதம்பாய்
சிந்தை தெளிந்திலரே.
பார்ப்பார் சடங்கு பலனின்று பாரிலே
தீர்ப்பாக எண்ணிடுவாய் குதம்பாய்
தீர்ப்பாக எண்ணிடுவாய்.
மந்திர மூலம் வகுத்தறி யாதார்க்குத்
தந்திரம் ஏதுக்கடி குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி. 213
வாதமென்றே பொய்யை வாயிற் புடைப்போர்க்குச்
சேதம் மிகவருமே குதம்பாய்
வேதம் மிகவருமே.
ஆனந்தம் பொங்கி அறிவோ டிருப்போர்க்கு
ஞானந்தா னேதுக்கடி குதம்பாய்
ஞானந்தா னேதுக்கடி.
திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
http://poomalai-karthicraja.blogspot.in/திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 22
இறங்கத்தக்க நிலை
மனிதன் தன்னுடைய அழிவை நோக்கி விரைந்து செல்கிறான். தன் வாழ்வை மாற்றும் விதியை அவன் வலிந்தேற்கிறான். " விரும்பியோ விரும்பாமாலோ வினைகள் குவிகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ அந்த வினைகள் அவனை தேடிக் குவிக்கின்றான். மனிதர்கள் வினையை விதைக்கிறார்கள், அவர்களுடைய சரீர நாற்றாங்காலில் அந்த விதைகள் முளைத்து நாற்றுக்களால் தலை நிமிர்கின்றன. பின்பு விளைந்து பலனை அவர்கள் அறுவடை செய்யத்தயார் ஆகிறார்கள். காலம் நில்லாது. அது ஒடிக்கொண்டே இருக்கும்,வாழ்நாள் திடீரென்று முடிந்து விடும். இந்த உண்மையை உணராமல் அவர்கள் வாதிடுகிறார்கள், வாதிட்டு பெறுவது எனன?
நாம் வாழும் குறுகிய காலத்ததிலேயே இறைவனிடத்தில் அன்பால் பொருந்தும் நெறியை அறிந்திருக்க வேண்டும். அன்பால் பொருந்தும் நிலையை அறிந்திருக்க வேண்டும், ஆனால் புரிந்து கொள்ளும் திறனற்றவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள், சரீரத்தை போற்றுவதில் தாங்கள் முழுக்கவனத்தையும் செலுத்துகிறவர்கள் அறிவார்களா? அந்த சரீரம் விறகுக் கட்டைகளுக்கு விருந்தாக போவதை இந்த விறவி நமக்கு இறைவனால் வந்தது ஆனால் அவனை மறக்கின்ற காரியத்தையே நாம் செயது கெ ாண்டு இருக்கிறோம்,இறைவனின் திருவடியைப் போற்றாத காரணத்தால் பெறற்கரிய இன்பங்களை நாம் பெறாமலே போகிறோம்.
குரு காட்டும் வழியில் சென்றால் சிவனை காணக்கூடும், ஆனால் அதற்கெல்லாம் நமக்கு நேரமில்லை, நேர்த்தியற்றவை களை நேர்த்தியானதாய் பேசித்திரவோம், இறைவனின் சிறப்புகளை நாம் எப்போதேனும் எண்ணி பார்த்திருப்ேப்மா? களியாட்டங்களில் காலத்தை வீணடிப்பவர்கள் கண்டடைந்த பலன் எது? சிவபொருமான் தன் அன்பர்களின் மனத்தில் சோதியாய் உணர்ந்தெழுவான். நாம் அவனை திருஐந்தெழுத்தால் தொழுவரவேண்டும். அல்லாவிடில் எதுவும் கட்டுப்பாட்டில் இருக்காது. இரங்கத்தக்க நிலையில் நாம் இருப்பதாய் எண்ணி வருந்துகிறார் திருமூலர்
தென்னாடுடைய சிவனே போற்றி ..... திருசிற்றம்பலம்
மேலும் ஆன்மீகத்தகவலுக்கு
இறங்கத்தக்க நிலை
மனிதன் தன்னுடைய அழிவை நோக்கி விரைந்து செல்கிறான். தன் வாழ்வை மாற்றும் விதியை அவன் வலிந்தேற்கிறான். " விரும்பியோ விரும்பாமாலோ வினைகள் குவிகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ அந்த வினைகள் அவனை தேடிக் குவிக்கின்றான். மனிதர்கள் வினையை விதைக்கிறார்கள், அவர்களுடைய சரீர நாற்றாங்காலில் அந்த விதைகள் முளைத்து நாற்றுக்களால் தலை நிமிர்கின்றன. பின்பு விளைந்து பலனை அவர்கள் அறுவடை செய்யத்தயார் ஆகிறார்கள். காலம் நில்லாது. அது ஒடிக்கொண்டே இருக்கும்,வாழ்நாள் திடீரென்று முடிந்து விடும். இந்த உண்மையை உணராமல் அவர்கள் வாதிடுகிறார்கள், வாதிட்டு பெறுவது எனன?
நாம் வாழும் குறுகிய காலத்ததிலேயே இறைவனிடத்தில் அன்பால் பொருந்தும் நெறியை அறிந்திருக்க வேண்டும். அன்பால் பொருந்தும் நிலையை அறிந்திருக்க வேண்டும், ஆனால் புரிந்து கொள்ளும் திறனற்றவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள், சரீரத்தை போற்றுவதில் தாங்கள் முழுக்கவனத்தையும் செலுத்துகிறவர்கள் அறிவார்களா? அந்த சரீரம் விறகுக் கட்டைகளுக்கு விருந்தாக போவதை இந்த விறவி நமக்கு இறைவனால் வந்தது ஆனால் அவனை மறக்கின்ற காரியத்தையே நாம் செயது கெ ாண்டு இருக்கிறோம்,இறைவனின் திருவடியைப் போற்றாத காரணத்தால் பெறற்கரிய இன்பங்களை நாம் பெறாமலே போகிறோம்.
குரு காட்டும் வழியில் சென்றால் சிவனை காணக்கூடும், ஆனால் அதற்கெல்லாம் நமக்கு நேரமில்லை, நேர்த்தியற்றவை களை நேர்த்தியானதாய் பேசித்திரவோம், இறைவனின் சிறப்புகளை நாம் எப்போதேனும் எண்ணி பார்த்திருப்ேப்மா? களியாட்டங்களில் காலத்தை வீணடிப்பவர்கள் கண்டடைந்த பலன் எது? சிவபொருமான் தன் அன்பர்களின் மனத்தில் சோதியாய் உணர்ந்தெழுவான். நாம் அவனை திருஐந்தெழுத்தால் தொழுவரவேண்டும். அல்லாவிடில் எதுவும் கட்டுப்பாட்டில் இருக்காது. இரங்கத்தக்க நிலையில் நாம் இருப்பதாய் எண்ணி வருந்துகிறார் திருமூலர்
தென்னாடுடைய சிவனே போற்றி ..... திருசிற்றம்பலம்
மேலும் ஆன்மீகத்தகவலுக்கு
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளி என்பது ‘வெட்டவெளி’ அதாவது பிரமம். இந்தச் சித்தர்
பிரபஞ்சத்தை வெட்ட வெளியாகக் கண்டு தம் ஆத்மானுபவத்தைப் பிறரும்
அறிந்து நலம் பெறுவதற்காகப் பாடிய பாடல்கள் கடுவெளிச் சித்தர்
பாடல்களாக நமக்கு அறிமுகமாகின்றன. இவரது இயற்பெயரோ வரலாறோ
தெரியாத நிலையில் இவரது ஜீவசமாதி காஞ்சிபுரத்தில் இருக்கிறது என்ற
செய்தியை மட்டும் போகர் தெரிவிக்கின்றார்.
வானென்ற கடுவெளிச் சித்தர்தானும்
வளமான திருக்காஞ்சிப் பதியிலாச்சு
இந்த ‘திருக்காஞ்சிப்பதி’ என்ற ஊரைப் புதுச்சேரிக் கருகிலுள்ள
‘திருக்காஞ்சி’ என்ற ஊராகக் கருதி அங்குள்ள காசி விசுவநாதர் ஆலயம்
தான் அவர் ஜீவசமாதி கொண்ட தலம் என்று சுட்டுவாருளர். இது
ஆய்வுக்குரியது.
இந்த சித்தரைப் பற்றி அறியாத நிலையில் இவர் பாடிய ‘நந்தவனத்தில்
ஓர் ஆண்டி’ பாடல் தமிழகமெங்கும் வெகுபிரசித்தம்.
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி”
என்ன அருமையான சொல்லாட்சி. இலக்கணம் பிறழாமல் அதே சமயம்
எளிமை கூட்டி பாடலின் வரிகளைக் கொண்டு இவர் பிற்கால சித்தராயிருக்க
வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.
ஏழை ஆண்டி ஒருவன் தினசரி பிச்சையேற்று உண்பவன். தனக்கென்று
ஏதும் வைத்துக்கொள்ளாத அவன் ஒருநாள் நந்தவனமொன்றைக் காண்கிறான்.
என்ன வித விதமான வண்ண மலர்கள். வாசம் மிகுந்த மலர்கள் தனிமையில்
இங்கு அமர்ந்து இயற்கையை ரசிப்பது எவ்வளவு சுகமாக இருக்கிறது. அருகில்
ஒரு சேய்குளம். நிறைந்துதான் இருக்கிறது ஆனாலும் என்ன பயன்? செடி
கொடிகளுக்குத் தேவையான நீர் வானம் மழைப் பொழியும் போது
மட்டுந்தானே கிடைக்கிறது. குளம் நிறைய தண்ணீர் இருந்தாலும் வான்
மழையை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த நந்தவனத்திற்கு
குளத்து நீரை தினசரி ஊற்றினால் எவ்வளவு செழுமையாக இருக்கும்?
ஆண்டியின் கற்பனை அளவுக்கு அதிகமானதுதான். அதனைச்
செயலாக்கிப் பார்த்தால்தான் என்ன? பக்கத்து ஊரில் உள்ள குயவன்
ஒருவனைப் பார்க்கிறான். தனக்குக் குடம் ஒன்று வனைந்து கொடுக்குமாறு
கேட்கிறான்.
குயவன் ஆண்டியை மேலும் கீழுமாகப் பார்க்கிறான். அவனுக்குச்
சிரிப்புதான் வருகிறது.
“ஏன் சிரிக்கிறீர்?”
“நீயோ ஆண்டி, உனக்கெதற்கய்யா தோண்டி?” குயவன் குசும்பாகக்
கேட்டான்.
“உனக்கெதற்கு அந்தக் கதையெல்லாம். தோண்டி கேட்டால் கொடுக்க
வேண்டியதுதானே? எதற்கு தேவையற்ற கேள்வி?”
“சரி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தோண்டி எட்டணா.”
“என்ன தோண்டிக்கு விலையா?”
“ம்,,, பின்னே என்ன இனாமாகவா தருவார்கள். உன்னைப் பார்த்தாலே
வாங்குகிற மூஞ்சில்லை என்றுதான் உனக்கு எதற்கு தோண்டி என்றேன்.”
ஆண்டியின் சுருதி இறங்கி விட்டது. “ஐயா நானோ ஆண்டி, எம்மிடம்
நீர் விலை சொல்வது நியாயமா? ஏதாவது தர்மம் செய்வதாக நினைத்துக்
கொண்டு இந்தத் தோண்டியைத் தரக்கூடாதா?”
ஆண்டியின் பேச்சு குயவன் மனதை இளக்கவில்லை. “போ, போ,
காலையில் வந்து வியாபாரத்தைக் கெடுத்துக் கொண்டு,,,,,,” குயவன் வேறு
வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.
ஆனால் ஆண்டி போகவில்லை. அவன் பார்வையில் படும் இடமாகப்
பார்த்து தூரத்தே அமர்ந்து கொண்டான். தினசரி பிச்சை எடுத்த நேரம்
போக மீதி நேரத்தை அந்த மரத்தடியில் அமர்ந்து குயவன் வியாபாரத்தையே
பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாளில்லை ஒருநாள் மனமிறங்கித் தோண்டி
தர மாட்டானா என்ன?
இப்படியே ஒரு நாளல்ல, ஒருமாதமல்ல, பத்து மாதங்கள் கடந்து
விட்டன. ஆண்டியின் பொறுமை குயவனைக் கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றியது. குயவனும் போனால் போகிறது என்று நன்கு வனைந்த
குடமொன்றை அந்த ஆண்டிக்கு அன்பளிப்பாக வழங்கினான்.
ஆண்டியின் சந்தோஷத்திற்கு அளவேது. ஆகா, இனி என்னைவிட
பணக்காரன் உலகில் யாருமில்லை. இந்த குடத்தைக் கொண்டு குளத்து நீரைச்
செடிகளுக்குப்பாய்ச்சுவேன். செடிகளெல்லாம் நிறைய பூக்களைப் பூக்கும். பூக்களையெல்லாம்
பறித்துக்கொண்டு போய் நல்ல விலைக்கு விற்பேன். எனக்குப் பெரும்
பொருள் சேரும். அந்தப் பொருளைக் கொண்டு பெரிய மடம் ஒன்றைக்
கட்டுவேன். அந்த மடத்தில் நிறைய ஆண்டிகள் தங்குவார்கள்.
ஆண்டி மடம் கட்டினான் கற்பனையில். சரி, கற்பனைக்கு யார் தடை
விதிக்கப் போகிறார்கள்? அரும்பாடுபட்டு வாங்கி வந்த தோண்டியை
அருமையாகப் பாதுகாக்க வேண்டு மல்லவா? தனக்குத் தோண்டி
கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் தலையில் வைத்துக் கொண்டு ஆடாத
ஆட்டமெல்லாம் ஆடிப் பார்த்தான். சந்தோஷத்தில் என்ன செய்கிறோம்
என்று தெரியாமல் அந்தத் தோண்டியைப் பொத்தென்று கீழே போட்டு
உடைத்து விட்டான்.
பத்து மாதங்கள் குயவனிடம் கெஞ்சி வாங்கி வந்த குடம் பத்தே
விநாடிகளில் ‘படார்’. இனியென்ன செய்வது? குயவன் மறுபடியும் ஒரு
தோண்டி தருவானா? கேள்விக்குறியுடன் பரிதாபமாகக் குயவனைப்
பார்க்கிறான் ஆண்டி.
இது சாதாரண ஆண்டி, குயவன், தோண்டி கதையல்ல. மனிதனின்
ஜீவரகசியம். பத்து மாதம் தவமிருந்து கிடைக்கப்பெற்ற உடலை அவன்
போற்றி பாதுகாக்காது அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு வீணே அழித்து
வருகிறானே என்ற அனுதாபத்தில் பாடப்பட்டது.
பத்து மாதங்களாகத் தவம் செய்து பெற்றது மனிதா நீ கூத்தாடிக்
கூத்தாடிப் போட்டு உடைப்பதற்குத்தானோ?
அடப்பாவீ, எவ்வளவு அருமையான சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கிறாய். இந்த
உடல் உள்ள போதே ஆன்மா கடைத்தேற வழி காண வேண்டாமா? என்று
மனிதனை இடித்துரைக்கின்றார் கடுவெளிச் சித்தர்.
தோண்டியை உடைத்த ஆண்டியைப் போல மேற் கொண்டு என்ன
செய்வது என்று நாம் திகைத்திருக்கும் போது தமது அனுபவ உபதேசங்களை
அள்ளி விடுகின்றார் சித்தர்.
“தூடணமாகச் சொல்லாதே”
“ஏடணை மூன்றும் பொல்லாதே”
“நல்லவர் தம்மைத் தள்ளாதே”
“பொல்லாங்குச் சொல்லாதே”
“பொய்மொழி, கோள்கள் பொருத்தமாகக்கூட சொல்லாதே”
“பெண்ணாசைக் கொண்டு அலையாதே”
“மனம் போன போக்கு போகாதே”
“மைவிழியாரைச் சாராதே”
“மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே”
“வைதோரைக் கூட வையாதே - இந்த
வையமுழுதும் பொய்த்தாலும் நீ பொய்யாதே”
“வைய வினைகள் செய்யாதே”
“பாம்பினைப் பற்றி யாட்டாதே - உன்றன்
பத்தினிமார் மகளைப் பழித்துக் காட்டாதே”
“கஞ்சா புகையாதே”
“வெறிகாட்டி மயக்கம்தரும் கள்ளைக் குடிக்காதே”
“மூடனுக்கு அறிவுரைப் புகலாதே”
“கள்ள வேடம் புனையாதே”
“கொள்ளைக் கொள்ள நினையாதே”
என்று செய்யக்கூடாதவற்றையெல்லாம் பட்டியலிடுகின்றார்.
அப்படி இவையெல்லாம் செய்யக்கூடாதது என்றால் செய்யக்கூடியதுதான்
என்ன என்று கேட்பவருக்கு மீண்டும் ஒரு பட்டியலை நீட்டுகின்றார்.“நல்ல
வழிதனை நாடு”
“எந்த நாளும் பரமனை நத்தி தேடு”
“வல்லவர் கூட்டத்திற்கூடு”
“வேத விதிப்படி நில்லு”
“நல்லோர் மேவும் வழியினை வேண்டியே செல்லு”
“சாதக நிலைமையையே சொல்லு”
“பொல்லாத சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு”
“மெய்ஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்டவெளிதனை தேடு”
மனித வாழ்க்கை நிலையில்லாதது என்பதை ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’
பாடல் மூலம் குறிப்பாகச் சொன்ன கடுவெளிச் சித்தர் அந்தக் குறிப்பைப்
புரிந்துகொள்ளாத பக்குவமில்லாத பாமரர்களுக்குப் புரியும்வண்ணம் அதே
கருத்தமைந்த மற்றொரு பாடலையும் பாடுகின்றார்.
“நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார்மீதின் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்”
அழகான வர்ணஜாலங்களுடன் மிதந்து வரும் நீர்க்குமிழியானது காற்று
வேகமாக அடித்தாலோ அல்லது எதன் மீதாவது மோதினாலோ பட்டென்று
உடைந்து தெரிந்து விடும். மனித வாழ்வும் இப்படித்தான் மாட மாளிகை,
ஆள், அம்பு சேனைகளுடன் பெரும் சிறப்புடன் வாழ்ந்தாலும் திடீரென்று
அழிவுற்றுக் காணாமல் போய்விடும். இந்த மாய வித்தையின் இரகசியத்தை
மனிதா நீ அறிந்து அழியும் உலகப் பொருள்களின் மேல் பற்று வைக்காமல்
இருப்பாயாக என்கிறார்.
மேலும் இந்த உலக வாழ்க்கை மட்டுமல்ல, நீகூட நிலையில்லாத ஒரு
பொருள்தான். இந்த உலகம் உனக்குத்தான் சொந்தம் என்று உலகிலுள்ள
பொருட்களைச் சொந்தம் கொண்டாடி சேர்த்து வைக்காதே. இன்று உனக்குச்
சொந்தமான அந்தப் பொருட்களெல்லாம் நாளை வேறொருவருக்குச்
சொந்தமாகும்.
நீ நிரந்தரமானவன் இல்லை. உன்னை உன் உயிரை என்றைக்காயினும்
எமன் கொண்டோடிப் போவான். ஆகையால் பாபஞ் செய்யாதிருப்பாயாக
என்று உபதேசமும் செய்கிறார்.
பாபஞ் செய்யாதிரு மனமே - நாளைக்
கோபஞ் செய்தே யமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ் செய்யாதிரு மனமே
முடிந்த வரை உன் வாழ்க்கையில் யாருக்கும் வயிறெரிந்து சாபமிடாதே.
ஒவ்வொன்றும் விதிப்படிதான் நடக்கும். ஆகையால் உன் வயிற்றெரிச்சல்
அந்த மனிதனைத் துன்பத்திற்காட்படுத்தும் என்பதையும் அறிந்து கோபத்தைக்
கட்டுப்படுத்து என்றும் அறிவுரை கூறுகின்றார்.
“சாபங் கொடுத்திடலாமோ - விதி
தன்னை நம்மாலே தடுத்திட லாமோ
கோபங் தொடுத்திட லாமோ - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ”
கடுவெளிச் சித்தர் பாடல்கள் ஆனந்தக்களிப்பு வகையைச் சார்ந்தது.
மனித வாழ்க்கைக்கு இன்பமும் மகிழ்ச்சியையும் தரும் பாடல்களாதலால்
இவைகளை ஆனந்தக் களிப்பில் பாடினாற் போலும்.
“மெய்ஞானப் பாதையிலேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்தமாம் வழி கூறு”
என்று நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளைத் தெளிவாகத் தம் பாடலில்
எளிய வார்த்தைகளால் கூறியுள்ளார் கடுவெளிச் சித்தர்.
ஆனந்தக்களிப்பு பாடல்கள்
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்.
நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.
நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு.
பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே
இச்சைய துன்னை யாளாதே - சிவன்
இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே.
ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு.
அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவின் அடியினை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி.
கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கியே கட்குடி யாதே
அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி
அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே.
எங்குஞ் சயப்பிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்.
கடுவெளி என்பது ‘வெட்டவெளி’ அதாவது பிரமம். இந்தச் சித்தர்
பிரபஞ்சத்தை வெட்ட வெளியாகக் கண்டு தம் ஆத்மானுபவத்தைப் பிறரும்
அறிந்து நலம் பெறுவதற்காகப் பாடிய பாடல்கள் கடுவெளிச் சித்தர்
பாடல்களாக நமக்கு அறிமுகமாகின்றன. இவரது இயற்பெயரோ வரலாறோ
தெரியாத நிலையில் இவரது ஜீவசமாதி காஞ்சிபுரத்தில் இருக்கிறது என்ற
செய்தியை மட்டும் போகர் தெரிவிக்கின்றார்.
வானென்ற கடுவெளிச் சித்தர்தானும்
வளமான திருக்காஞ்சிப் பதியிலாச்சு
இந்த ‘திருக்காஞ்சிப்பதி’ என்ற ஊரைப் புதுச்சேரிக் கருகிலுள்ள
‘திருக்காஞ்சி’ என்ற ஊராகக் கருதி அங்குள்ள காசி விசுவநாதர் ஆலயம்
தான் அவர் ஜீவசமாதி கொண்ட தலம் என்று சுட்டுவாருளர். இது
ஆய்வுக்குரியது.
இந்த சித்தரைப் பற்றி அறியாத நிலையில் இவர் பாடிய ‘நந்தவனத்தில்
ஓர் ஆண்டி’ பாடல் தமிழகமெங்கும் வெகுபிரசித்தம்.
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி”
என்ன அருமையான சொல்லாட்சி. இலக்கணம் பிறழாமல் அதே சமயம்
எளிமை கூட்டி பாடலின் வரிகளைக் கொண்டு இவர் பிற்கால சித்தராயிருக்க
வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.
ஏழை ஆண்டி ஒருவன் தினசரி பிச்சையேற்று உண்பவன். தனக்கென்று
ஏதும் வைத்துக்கொள்ளாத அவன் ஒருநாள் நந்தவனமொன்றைக் காண்கிறான்.
என்ன வித விதமான வண்ண மலர்கள். வாசம் மிகுந்த மலர்கள் தனிமையில்
இங்கு அமர்ந்து இயற்கையை ரசிப்பது எவ்வளவு சுகமாக இருக்கிறது. அருகில்
ஒரு சேய்குளம். நிறைந்துதான் இருக்கிறது ஆனாலும் என்ன பயன்? செடி
கொடிகளுக்குத் தேவையான நீர் வானம் மழைப் பொழியும் போது
மட்டுந்தானே கிடைக்கிறது. குளம் நிறைய தண்ணீர் இருந்தாலும் வான்
மழையை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த நந்தவனத்திற்கு
குளத்து நீரை தினசரி ஊற்றினால் எவ்வளவு செழுமையாக இருக்கும்?
ஆண்டியின் கற்பனை அளவுக்கு அதிகமானதுதான். அதனைச்
செயலாக்கிப் பார்த்தால்தான் என்ன? பக்கத்து ஊரில் உள்ள குயவன்
ஒருவனைப் பார்க்கிறான். தனக்குக் குடம் ஒன்று வனைந்து கொடுக்குமாறு
கேட்கிறான்.
குயவன் ஆண்டியை மேலும் கீழுமாகப் பார்க்கிறான். அவனுக்குச்
சிரிப்புதான் வருகிறது.
“ஏன் சிரிக்கிறீர்?”
“நீயோ ஆண்டி, உனக்கெதற்கய்யா தோண்டி?” குயவன் குசும்பாகக்
கேட்டான்.
“உனக்கெதற்கு அந்தக் கதையெல்லாம். தோண்டி கேட்டால் கொடுக்க
வேண்டியதுதானே? எதற்கு தேவையற்ற கேள்வி?”
“சரி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தோண்டி எட்டணா.”
“என்ன தோண்டிக்கு விலையா?”
“ம்,,, பின்னே என்ன இனாமாகவா தருவார்கள். உன்னைப் பார்த்தாலே
வாங்குகிற மூஞ்சில்லை என்றுதான் உனக்கு எதற்கு தோண்டி என்றேன்.”
ஆண்டியின் சுருதி இறங்கி விட்டது. “ஐயா நானோ ஆண்டி, எம்மிடம்
நீர் விலை சொல்வது நியாயமா? ஏதாவது தர்மம் செய்வதாக நினைத்துக்
கொண்டு இந்தத் தோண்டியைத் தரக்கூடாதா?”
ஆண்டியின் பேச்சு குயவன் மனதை இளக்கவில்லை. “போ, போ,
காலையில் வந்து வியாபாரத்தைக் கெடுத்துக் கொண்டு,,,,,,” குயவன் வேறு
வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.
ஆனால் ஆண்டி போகவில்லை. அவன் பார்வையில் படும் இடமாகப்
பார்த்து தூரத்தே அமர்ந்து கொண்டான். தினசரி பிச்சை எடுத்த நேரம்
போக மீதி நேரத்தை அந்த மரத்தடியில் அமர்ந்து குயவன் வியாபாரத்தையே
பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாளில்லை ஒருநாள் மனமிறங்கித் தோண்டி
தர மாட்டானா என்ன?
இப்படியே ஒரு நாளல்ல, ஒருமாதமல்ல, பத்து மாதங்கள் கடந்து
விட்டன. ஆண்டியின் பொறுமை குயவனைக் கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றியது. குயவனும் போனால் போகிறது என்று நன்கு வனைந்த
குடமொன்றை அந்த ஆண்டிக்கு அன்பளிப்பாக வழங்கினான்.
ஆண்டியின் சந்தோஷத்திற்கு அளவேது. ஆகா, இனி என்னைவிட
பணக்காரன் உலகில் யாருமில்லை. இந்த குடத்தைக் கொண்டு குளத்து நீரைச்
செடிகளுக்குப்பாய்ச்சுவேன். செடிகளெல்லாம் நிறைய பூக்களைப் பூக்கும். பூக்களையெல்லாம்
பறித்துக்கொண்டு போய் நல்ல விலைக்கு விற்பேன். எனக்குப் பெரும்
பொருள் சேரும். அந்தப் பொருளைக் கொண்டு பெரிய மடம் ஒன்றைக்
கட்டுவேன். அந்த மடத்தில் நிறைய ஆண்டிகள் தங்குவார்கள்.
ஆண்டி மடம் கட்டினான் கற்பனையில். சரி, கற்பனைக்கு யார் தடை
விதிக்கப் போகிறார்கள்? அரும்பாடுபட்டு வாங்கி வந்த தோண்டியை
அருமையாகப் பாதுகாக்க வேண்டு மல்லவா? தனக்குத் தோண்டி
கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் தலையில் வைத்துக் கொண்டு ஆடாத
ஆட்டமெல்லாம் ஆடிப் பார்த்தான். சந்தோஷத்தில் என்ன செய்கிறோம்
என்று தெரியாமல் அந்தத் தோண்டியைப் பொத்தென்று கீழே போட்டு
உடைத்து விட்டான்.
பத்து மாதங்கள் குயவனிடம் கெஞ்சி வாங்கி வந்த குடம் பத்தே
விநாடிகளில் ‘படார்’. இனியென்ன செய்வது? குயவன் மறுபடியும் ஒரு
தோண்டி தருவானா? கேள்விக்குறியுடன் பரிதாபமாகக் குயவனைப்
பார்க்கிறான் ஆண்டி.
இது சாதாரண ஆண்டி, குயவன், தோண்டி கதையல்ல. மனிதனின்
ஜீவரகசியம். பத்து மாதம் தவமிருந்து கிடைக்கப்பெற்ற உடலை அவன்
போற்றி பாதுகாக்காது அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு வீணே அழித்து
வருகிறானே என்ற அனுதாபத்தில் பாடப்பட்டது.
பத்து மாதங்களாகத் தவம் செய்து பெற்றது மனிதா நீ கூத்தாடிக்
கூத்தாடிப் போட்டு உடைப்பதற்குத்தானோ?
அடப்பாவீ, எவ்வளவு அருமையான சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கிறாய். இந்த
உடல் உள்ள போதே ஆன்மா கடைத்தேற வழி காண வேண்டாமா? என்று
மனிதனை இடித்துரைக்கின்றார் கடுவெளிச் சித்தர்.
தோண்டியை உடைத்த ஆண்டியைப் போல மேற் கொண்டு என்ன
செய்வது என்று நாம் திகைத்திருக்கும் போது தமது அனுபவ உபதேசங்களை
அள்ளி விடுகின்றார் சித்தர்.
“தூடணமாகச் சொல்லாதே”
“ஏடணை மூன்றும் பொல்லாதே”
“நல்லவர் தம்மைத் தள்ளாதே”
“பொல்லாங்குச் சொல்லாதே”
“பொய்மொழி, கோள்கள் பொருத்தமாகக்கூட சொல்லாதே”
“பெண்ணாசைக் கொண்டு அலையாதே”
“மனம் போன போக்கு போகாதே”
“மைவிழியாரைச் சாராதே”
“மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே”
“வைதோரைக் கூட வையாதே - இந்த
வையமுழுதும் பொய்த்தாலும் நீ பொய்யாதே”
“வைய வினைகள் செய்யாதே”
“பாம்பினைப் பற்றி யாட்டாதே - உன்றன்
பத்தினிமார் மகளைப் பழித்துக் காட்டாதே”
“கஞ்சா புகையாதே”
“வெறிகாட்டி மயக்கம்தரும் கள்ளைக் குடிக்காதே”
“மூடனுக்கு அறிவுரைப் புகலாதே”
“கள்ள வேடம் புனையாதே”
“கொள்ளைக் கொள்ள நினையாதே”
என்று செய்யக்கூடாதவற்றையெல்லாம் பட்டியலிடுகின்றார்.
அப்படி இவையெல்லாம் செய்யக்கூடாதது என்றால் செய்யக்கூடியதுதான்
என்ன என்று கேட்பவருக்கு மீண்டும் ஒரு பட்டியலை நீட்டுகின்றார்.“நல்ல
வழிதனை நாடு”
“எந்த நாளும் பரமனை நத்தி தேடு”
“வல்லவர் கூட்டத்திற்கூடு”
“வேத விதிப்படி நில்லு”
“நல்லோர் மேவும் வழியினை வேண்டியே செல்லு”
“சாதக நிலைமையையே சொல்லு”
“பொல்லாத சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு”
“மெய்ஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்டவெளிதனை தேடு”
மனித வாழ்க்கை நிலையில்லாதது என்பதை ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’
பாடல் மூலம் குறிப்பாகச் சொன்ன கடுவெளிச் சித்தர் அந்தக் குறிப்பைப்
புரிந்துகொள்ளாத பக்குவமில்லாத பாமரர்களுக்குப் புரியும்வண்ணம் அதே
கருத்தமைந்த மற்றொரு பாடலையும் பாடுகின்றார்.
“நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார்மீதின் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்”
அழகான வர்ணஜாலங்களுடன் மிதந்து வரும் நீர்க்குமிழியானது காற்று
வேகமாக அடித்தாலோ அல்லது எதன் மீதாவது மோதினாலோ பட்டென்று
உடைந்து தெரிந்து விடும். மனித வாழ்வும் இப்படித்தான் மாட மாளிகை,
ஆள், அம்பு சேனைகளுடன் பெரும் சிறப்புடன் வாழ்ந்தாலும் திடீரென்று
அழிவுற்றுக் காணாமல் போய்விடும். இந்த மாய வித்தையின் இரகசியத்தை
மனிதா நீ அறிந்து அழியும் உலகப் பொருள்களின் மேல் பற்று வைக்காமல்
இருப்பாயாக என்கிறார்.
மேலும் இந்த உலக வாழ்க்கை மட்டுமல்ல, நீகூட நிலையில்லாத ஒரு
பொருள்தான். இந்த உலகம் உனக்குத்தான் சொந்தம் என்று உலகிலுள்ள
பொருட்களைச் சொந்தம் கொண்டாடி சேர்த்து வைக்காதே. இன்று உனக்குச்
சொந்தமான அந்தப் பொருட்களெல்லாம் நாளை வேறொருவருக்குச்
சொந்தமாகும்.
நீ நிரந்தரமானவன் இல்லை. உன்னை உன் உயிரை என்றைக்காயினும்
எமன் கொண்டோடிப் போவான். ஆகையால் பாபஞ் செய்யாதிருப்பாயாக
என்று உபதேசமும் செய்கிறார்.
பாபஞ் செய்யாதிரு மனமே - நாளைக்
கோபஞ் செய்தே யமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ் செய்யாதிரு மனமே
முடிந்த வரை உன் வாழ்க்கையில் யாருக்கும் வயிறெரிந்து சாபமிடாதே.
ஒவ்வொன்றும் விதிப்படிதான் நடக்கும். ஆகையால் உன் வயிற்றெரிச்சல்
அந்த மனிதனைத் துன்பத்திற்காட்படுத்தும் என்பதையும் அறிந்து கோபத்தைக்
கட்டுப்படுத்து என்றும் அறிவுரை கூறுகின்றார்.
“சாபங் கொடுத்திடலாமோ - விதி
தன்னை நம்மாலே தடுத்திட லாமோ
கோபங் தொடுத்திட லாமோ - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ”
கடுவெளிச் சித்தர் பாடல்கள் ஆனந்தக்களிப்பு வகையைச் சார்ந்தது.
மனித வாழ்க்கைக்கு இன்பமும் மகிழ்ச்சியையும் தரும் பாடல்களாதலால்
இவைகளை ஆனந்தக் களிப்பில் பாடினாற் போலும்.
“மெய்ஞானப் பாதையிலேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்தமாம் வழி கூறு”
என்று நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளைத் தெளிவாகத் தம் பாடலில்
எளிய வார்த்தைகளால் கூறியுள்ளார் கடுவெளிச் சித்தர்.
ஆனந்தக்களிப்பு பாடல்கள்
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்.
நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.
நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு.
பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே
இச்சைய துன்னை யாளாதே - சிவன்
இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே.
ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு.
அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவின் அடியினை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி.
கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கியே கட்குடி யாதே
அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி
அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே.
எங்குஞ் சயப்பிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்.
திருமூலரும் - திருமந்திரமும் - உபதேசம் 21
கூடா ஓழுக்கம்
சமுதாயத்தின் பார்வை தங்கள் மீது பதிந்திருப்பதை அறியாமலே சில ஆணும் பெண்ணும் தவறு செய்யத் துணிகிறார்கள், எது பண்பாட்டுக்கு பொருந்தாதோ, எதைச் சமூகம் ஏற்காதோ, அது அறநூல்கள் கூறுவதை மீறுகிதோ, அது கூடாவொழுக்கம், தனக்கு உரிமையில்லாத எதிர்பாலினருடன் ஒருவர் கூடிக் களிப்பது கூடாவொழுக்கம் . (திருமந்திரம் ஏழாம் தந்திரத்தில் சொல்லப்பட்டது)
மேற்பார்வை செய்யும் கங்காணியாக இறைவன் இருக்கிறான், அவன் இல்லாத இடமெது? அவனது இருப்பை உணர்ந்த நிலையில் யாருக்கும் வஞ்சகத் தொழிலில் இறங்கத் தோன்றுமோ?
மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் சிறைப்பட்டவர்கள்தாம். காமத்தை எழுப்பும் கன்னியர் கையில் அகப்பட்டவரும் தேவங்களை ஓதுபவரும் , சுயவதை மேற்கொண்டு தவம்புரிவோரும் வெவ்வேறு வகையில் சிறைப்பட்டவர்கள்தாம்.இறைவனின் இயல்புணராத எல்லாருமே ஒவ்வொரு விதத்தில் தளையுண்டு கிடக்கின்றனர். தீவினை காரணமாக ஒருவனுக்கு சிவச்சிந்தை இல்லாமல் போவது . சிற்றின்பத்தில் தனது ஆற்றலை இழந்து கொண்டிருப்பவனால் எப்படி சிவனது ஆற்றலை அறியமுடியும்? என்று கேட்கிறார் திருமூலர்,
தொட்டு தாலி கட்டிய மனைவி வீட்டில் இருக்க, பிறதது மனையாளை விரும்பும் காளையர்கள், நன்கு பழுத்த பலாப்பழத்தின் கனியை உண்ணாமல் ஈச்சம் பழத்தினை உண்ண அதனை பெறுவதற்கு துன்பம் அடைவது போன்றதாம், பாடல் : ஆத்த மனையாள் அகத்தில் இருக்க காத்த மனையாளைக் காமுறும் காளையர்....................
இதுபோன்று இன்னொரு பாடலில் " இலைநல ஆயினும் எட்டி பழுத்தால் குலைநல ஆம்கனி கொண்டுணல் ஆகா..........................
எட்டிப்பழத்தின் அழகிய தோற்றம் கண்டு அதன்மீது விருப்பம் கொளல், அப்பழம் உண்ணத்தக்கது அன்று என்று தெரிந்தும், அதன் மீது மையல் கொளல், முலையாகிய அங்கத்தைக்காட்டி புண்ணகை செய்பவர் மீது மக்கள் நாட்டம் கொண்டு மனத்தை கொடுமைக்கு தம்மை ஆளாக்கி கொள்ளாதருப்பாராக என்கிறார்.
திருக்குறளில் துறவியலில் வருகிறது கூடாவொழுக்கம் பற்றி, வள்ளுவர் இதனை பொருந்தாத தீயவொழுக்கம் என்பார், தவக்கோலத்தில் துறவியாய் இருந்து கொண்டு ஊட்டமிக்க உணவுண்டு மறைவாகப்பெண்ணுடன் உறவாடும் தற்போதைய போலிகளை நம் நினைவுக்கு கொண்டுவரும் பாடல் இது
"நெஞ்சின் துறல்வார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்" என்கிறது குறள்
ஆசைகள் நெஞ்சுக்குள் அப்படியே இருக்க துறந்தாற்போல் நடித்துப் பிறரை மோசம் செய்யும் துறவிகளைப்போல் கொடியவர் இவ்வுலகில் இல்லை
இவர்கள் மனச்சாட்சியை ஒருபக்கமாய் விலக்கிவிட்டோ, அல்லது ஒரேயடியாய் உதறிவிட்டோ குற்றங்கள் செய்வார்கள். கன்னிப் பெண்கயையும், பிறருக்கு உரிமையானவர்களையும் இவர்கள் கற்பழிப்பார்கள், அடுத்தவர் பொருளை அபகரிக்கவும் தேவைப்பட்டால் உயிரையும் எடுக்கவும தயங்கமாட்டார்கள்.
சிலர் தங்களுடைய சுயமையை வெளிப்படையாய் காட்டிவிடுவார்கள், சிலரோ தங்கள் கொடிய தன்மையை மூடிமறைப்பார்கள், யார் நல்லவர் யார் கெடடடவர் என்பதை அவர்களுடைய கோலத்தால் அறியமுடியாது. அவர்களது செயல்வகையாலேயே அறிந்து கொள்ள முடியும்,
கூடாவொழுக்கம் உள்ளவர்கள் தங்கள் புறத்கோலத்தில் கூடுதல் அக்கறை கொண்டிருப்பார்கள், அவர்களுடைய கள்ள வேடத்தை ஒழுங்கற்ற செய்கையை உலகம் அடையாளம் காணாதவரை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டே வருவார்கள். மனத்துக்கண் மாசுள்ள துறவிக்குத்தான் மழித்தலும், நீட்டலும் தேவைப்படும், மனமாசுக்களை அகற்றியவருக்கு கோலங்கள் எதற்கு? அஞ்ஞானத்தில் அழுந்திக் கிடப்பவனால் எப்படி நிலம் நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் சூரியன், சந்திரன் இவற்றுடன் சிவபெருமான் இணைந்திருப்பதை உணரமுடியும்?
ஆசையை தூண்டுகிற சிற்றின்பம், பின் ஆற்றலை குன்றச் செய்துவிடும், சிற்றின்பம் அற்பகாலமே நீடிப்பது இந்த உண்மையை உணர்ந்து அதை விடடொழித்தவனுக்கு எல்லையற்ற பேரின்பத்தை இறைவன் வழங்குகிறான்.
திருசிற்றம்பலம் --- ஓம் நமசிவாயம் ஒம்
மேலும் சில ஆன்மீக தகவல் காண
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
கூடா ஓழுக்கம்
சமுதாயத்தின் பார்வை தங்கள் மீது பதிந்திருப்பதை அறியாமலே சில ஆணும் பெண்ணும் தவறு செய்யத் துணிகிறார்கள், எது பண்பாட்டுக்கு பொருந்தாதோ, எதைச் சமூகம் ஏற்காதோ, அது அறநூல்கள் கூறுவதை மீறுகிதோ, அது கூடாவொழுக்கம், தனக்கு உரிமையில்லாத எதிர்பாலினருடன் ஒருவர் கூடிக் களிப்பது கூடாவொழுக்கம் . (திருமந்திரம் ஏழாம் தந்திரத்தில் சொல்லப்பட்டது)
மேற்பார்வை செய்யும் கங்காணியாக இறைவன் இருக்கிறான், அவன் இல்லாத இடமெது? அவனது இருப்பை உணர்ந்த நிலையில் யாருக்கும் வஞ்சகத் தொழிலில் இறங்கத் தோன்றுமோ?
மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் சிறைப்பட்டவர்கள்தாம். காமத்தை எழுப்பும் கன்னியர் கையில் அகப்பட்டவரும் தேவங்களை ஓதுபவரும் , சுயவதை மேற்கொண்டு தவம்புரிவோரும் வெவ்வேறு வகையில் சிறைப்பட்டவர்கள்தாம்.இறைவனின் இயல்புணராத எல்லாருமே ஒவ்வொரு விதத்தில் தளையுண்டு கிடக்கின்றனர். தீவினை காரணமாக ஒருவனுக்கு சிவச்சிந்தை இல்லாமல் போவது . சிற்றின்பத்தில் தனது ஆற்றலை இழந்து கொண்டிருப்பவனால் எப்படி சிவனது ஆற்றலை அறியமுடியும்? என்று கேட்கிறார் திருமூலர்,
தொட்டு தாலி கட்டிய மனைவி வீட்டில் இருக்க, பிறதது மனையாளை விரும்பும் காளையர்கள், நன்கு பழுத்த பலாப்பழத்தின் கனியை உண்ணாமல் ஈச்சம் பழத்தினை உண்ண அதனை பெறுவதற்கு துன்பம் அடைவது போன்றதாம், பாடல் : ஆத்த மனையாள் அகத்தில் இருக்க காத்த மனையாளைக் காமுறும் காளையர்....................
இதுபோன்று இன்னொரு பாடலில் " இலைநல ஆயினும் எட்டி பழுத்தால் குலைநல ஆம்கனி கொண்டுணல் ஆகா..........................
எட்டிப்பழத்தின் அழகிய தோற்றம் கண்டு அதன்மீது விருப்பம் கொளல், அப்பழம் உண்ணத்தக்கது அன்று என்று தெரிந்தும், அதன் மீது மையல் கொளல், முலையாகிய அங்கத்தைக்காட்டி புண்ணகை செய்பவர் மீது மக்கள் நாட்டம் கொண்டு மனத்தை கொடுமைக்கு தம்மை ஆளாக்கி கொள்ளாதருப்பாராக என்கிறார்.
திருக்குறளில் துறவியலில் வருகிறது கூடாவொழுக்கம் பற்றி, வள்ளுவர் இதனை பொருந்தாத தீயவொழுக்கம் என்பார், தவக்கோலத்தில் துறவியாய் இருந்து கொண்டு ஊட்டமிக்க உணவுண்டு மறைவாகப்பெண்ணுடன் உறவாடும் தற்போதைய போலிகளை நம் நினைவுக்கு கொண்டுவரும் பாடல் இது
"நெஞ்சின் துறல்வார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்" என்கிறது குறள்
ஆசைகள் நெஞ்சுக்குள் அப்படியே இருக்க துறந்தாற்போல் நடித்துப் பிறரை மோசம் செய்யும் துறவிகளைப்போல் கொடியவர் இவ்வுலகில் இல்லை
இவர்கள் மனச்சாட்சியை ஒருபக்கமாய் விலக்கிவிட்டோ, அல்லது ஒரேயடியாய் உதறிவிட்டோ குற்றங்கள் செய்வார்கள். கன்னிப் பெண்கயையும், பிறருக்கு உரிமையானவர்களையும் இவர்கள் கற்பழிப்பார்கள், அடுத்தவர் பொருளை அபகரிக்கவும் தேவைப்பட்டால் உயிரையும் எடுக்கவும தயங்கமாட்டார்கள்.
சிலர் தங்களுடைய சுயமையை வெளிப்படையாய் காட்டிவிடுவார்கள், சிலரோ தங்கள் கொடிய தன்மையை மூடிமறைப்பார்கள், யார் நல்லவர் யார் கெடடடவர் என்பதை அவர்களுடைய கோலத்தால் அறியமுடியாது. அவர்களது செயல்வகையாலேயே அறிந்து கொள்ள முடியும்,
கூடாவொழுக்கம் உள்ளவர்கள் தங்கள் புறத்கோலத்தில் கூடுதல் அக்கறை கொண்டிருப்பார்கள், அவர்களுடைய கள்ள வேடத்தை ஒழுங்கற்ற செய்கையை உலகம் அடையாளம் காணாதவரை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டே வருவார்கள். மனத்துக்கண் மாசுள்ள துறவிக்குத்தான் மழித்தலும், நீட்டலும் தேவைப்படும், மனமாசுக்களை அகற்றியவருக்கு கோலங்கள் எதற்கு? அஞ்ஞானத்தில் அழுந்திக் கிடப்பவனால் எப்படி நிலம் நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் சூரியன், சந்திரன் இவற்றுடன் சிவபெருமான் இணைந்திருப்பதை உணரமுடியும்?
ஆசையை தூண்டுகிற சிற்றின்பம், பின் ஆற்றலை குன்றச் செய்துவிடும், சிற்றின்பம் அற்பகாலமே நீடிப்பது இந்த உண்மையை உணர்ந்து அதை விடடொழித்தவனுக்கு எல்லையற்ற பேரின்பத்தை இறைவன் வழங்குகிறான்.
திருசிற்றம்பலம் --- ஓம் நமசிவாயம் ஒம்
மேலும் சில ஆன்மீக தகவல் காண
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
அழுகணிச் சித்தர் பாடல்
அழுத கண்ணீருடன் காணப்பட்ட சித்தர் அல்லது இவரது பாடல்களைப்
படிக்கும்தோறும் அழுகை உணர்ச்சி உண்டாவதால் ‘அழுகண்’ சித்தர்
எனப்பட்டார் போலும்.
இவர் பாடும்பொழுது எப்பொழுதும் கண்களிலிருந்து நீர் வழிந்து
கொண்டே இருக்கும் என்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாகச் சிலர்
கூறுவர். இவர் நாகப்பட்டினத்தில் சமாதி அடைந்ததாகக் கூறப்படுகின்றது.
இவரது பாடல்கள் ஏறத்தாழ ஒப்பாரிப் பாடல்கள் போலத்
தோன்றினாலும் அப்பாடலின் கருத்துக்களை அனுபவ ஞானிகளால்தான்
விளக்கிங்கொள்ள முடியும்.
இவரது பாடல்களனைத்தும் கண்ணம்மா என்ற பெண்ணை சக்தியின் வடிவமான மனோன்மணி அம்மையை கண்ணம்மா என்று
முன்னிலைப் படுத்துவனவாகவே உள்ளன. பட்டினத்தார், பத்திரகிரியார் போன்றே இவரும் தனது வாழ்நாளில் பட்ட துன்பங்களை முன்னிருத்தியே பாடியுள்ளார,
“ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊத்தைச் சடலம் விட்டே - என் கண்ணம்மா
உன் பாதம் சேரேனே?
இந்த உடம்பு நாற்றம் பிடித்த அழுக்கு உடம்பு. உப்பிருந்த மட்பாண்டம்
போல அளறு பிடித்துக் கரைந்து அழிந்து போகும் உடம்பு. இந்த உடம்பின்
இயல்பை மாற்றி அழியாத உடம்புடன் பிறப்பதற்கான மருந்து எனக்குக்
கிடைக்கவில்லை. அப்படி அழியா உடம்புடன் பிறப்பதற்கு எனக்கு மட்டும் மருந்து கிடைக்குமென்றால் இந்த அழியக்கூடிய ஊத்தைச்
சடலத்தை விட்டொழித்து உன் பாதமே தஞ்சம் என்று வந்து விடுவேனே
என்று யோகத்தின் அவசியத்தைக் குறிப்பிடுகின்றார்.
இப்படிப்பட்ட யோகத்தை பழக முயற்சிக்கின்றார் அழுகண்ணர். யோகம்
பழகப் பழக உடல் கொதிக்கிறது. மூலச்சூடு ஏற்படுகின்றது. அடி வயிறு
வலிக்கிறது. தம்அனுபவத்தைப் பாடல்களில் கொட்டிக் கவிழ்க்கின்றார்.
கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என் வயிறு
நில் என்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை;
நில்லென்று சொல்லி நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல் என்று வந்த நமன் - என் கண்ணம்மா
குடியோடிப் போகாணோ!
யோகம் பயில்வாருக்கு அடிவயிறு சுடும் என்பது புரிகிறது. அது
மூலச்சூடு என்பார்கள். இன்னும் சற்று ஆழ்ந்து நோக்கினால் மூலாதாரத்தில்
உறங்கும் குண்டலிப் பாம்பை எழுப்புவதற்கான அனல் என்பது புரியும்.
எந்தச் செயலையும் ஆரம்பிப்பதுதான் கடினம். பிறகு அது சுலபமாகி விடும்.
யோகத்தைப் பயில ஆரம்பித்த நிலையில்தான் அழுகண்ணருக்கு உடலைக்
கட்டுப்படுத்துவது கடினமாக இருந்ததே ஒழிய யோகம் பயின்றபின் அது
இவர் கட்டுப்பாட்டை விட்டு விலகியே இருந்தது.
உடற்சூட்டின் மூலம் குண்டலினியைக் கிளப்பிய இவர் அதனை
இடையில் நிறுத்தும் வித்தையையும் அறிய விரும்புகின்றார். ஆனால்
முடியவில்லை. அடியில் தோன்றிய அனல் உச்சியில்தான், அதாவது
சகரஸ்தளத்தில்தான் போய் நின்றது. இடையில் ஒவ்வொரு உடற்
சக்கரத்தையும் கடக்கும்போது இன்பமயமான ‘சிறுவலி’ அந்த அனுபவத்தை மீண்டும் அனுபவிக்க அல்லது அதே இடத்தில்
குண்டலினியை நிலைநிறுத்த அவரால் முடியவில்லை.
இங்கு இந்த ஆறாதார குண்டலினி யோகத்தில் கவனிக்கப்படுகின்ற
விஷயமும் ஒன்றிருக்கிறது. மூலாதாரத்திலிருந்து கிளம்பும் குண்டலினி
அக்கினியை இடையில் தடங்கல் செய்தோமானால் யோகம் பயில்கின்றவர்
பித்தாகி உயிர் துறப்பர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தக் கருத்தைத்தான்,
‘நில்லென்று சொல்லி நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல் என்று வந்த நமன்”
என்ற வரிகளில் தெரிவிக்கின்றார்.
இது இப்படியிருக்க இந்த யோக முயற்சிக்கு முன் இளமை மயக்கத்தால்
மனதைக் கட்டுப்படுத்தப், படாத பாடுபட்ட நிலையை
“மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்கு கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
கண்விழிக்க வேகாவோ”
முறைப் பெண்ணாக இருந்தால் என்ன அல்லது மச்சினியாகத்தான்
இருந்தென்ன? இளமைப்பருவத்தில் காமன் கணையினால் படும் துன்பம்
பெரியதல்லவா? அந்தக் காமன் கணைகளெல்லாம் யோகத்திலிருந்த
சிவபெருமான் கண்விழிக்கச் சாம்பரானது போல, யோக தவத்திலிருந்து நான்
கண் விழித்தால் அந்த யோக அனலில் காம உணர்ச்சிகளெல்லாம் வெந்து
சாம்பராகி விடாதா? என்று கண்ணம்மாளைக் கேட்கின்றார்.
குண்டலினி யோகத்தைப் பற்றி மற்றொரு பாடலிலும் குறிப்பிடுகின்றார்.
“உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சிக்கு மேலேறி வானுதிரந்தானெடுத்துக்
கச்சை வடம் புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ - என் கண்ணம்மா
வகை மோசமானேண்டி”
எவ்வளவு அருமையான விளக்கம். உச்சிக்குக் கீழே ஊசி முனை வாசல்
என்று குறிப்பிட்டது சுழுமுனையை உச்சியான மச்சிக்கு மேலே ஏறிய
குண்டலினி அமுத தாரண செய்யும் நிலையை இப்பாடலில் விளக்கம்
செய்கின்றார்.
இவ்வளவு யோக விளக்கம் கூறுமிவர் உஞ்ச விருத்தி செய்தே
காலத்தைக் கழித்தாரென்று கூறப்படுகிறது.
“புல்லரிடத்திற்போய் பொருள் தனக்கு கையேந்தி
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல் - என் கண்ணம்மா
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா!
பொருளெனக்குத் தாராயோ”
பிச்சையெடுப்பது கேவலமானதுதான். ஆனால் அதைவிடக் கேவலம்
அப்படிப் பிச்சை எடுப்பவனிடம் பிச்சை போட மாட்டேன் என்று துரத்துவது
என்ற ஒளவையாரின் கருத்தை இவ்வரிகளில் காட்டித் தன்னைப் பொருள்
தரா புல்லர்களிடம் போய் கையேந்திப் பல்லை மிகக்காட்டிப்
பிச்சையெடுக்காமல் உயிர் வாடுவதற்கு எனக்குப் பொருள் கொடு அம்மா
என்று மனோன்மணித் தாயிடம் (கண்ணம்மாவிடம்) வேண்டுகின்றார்.
படிக்கப் படிக்கப் பரிதாபத்தைத் தூண்டும் இவர் பாடல்கள் சித்தர்
இலக்கியத்தில் மிகப் பிரபலம்.
“பையூரிலேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
பாழாய் முடியாவோ”
இங்கு இவர் ஜனன முறைமை உணர்த்துகின்றார். பையூர் என்பது
கருவறை (கருப்பை) பாழூர் என்பது யோனி; மெய்யூர் என்பது உடல்
என்றும், உண்மை ஞானம் என்றும் இரு பொருள்படும்.
பாழ் என்பது மோட்சம், வீடு பேறு; உடலையே இறைவன் வாழும்
ஆலயமாகக் கருதி யோக நியமங்கள் செய்தீர்களானால் அதுவே கோயிலாகி
இறை தரிசனத்தைக் காட்டும். அந்த நிலையில் யோக நெறியாளர் வெறுத்
தொதுக்கும் பெண்களின் கருப்பையும் உடம்பும் புனிதம் அடைந்து பாழூராக
அதாவது ஆகாய வெளியாக இறைவன் வாழும் கோயிலாக மாறாதா? என்று
நம்மைக் கேள்வி கேட்கின்றார்.
ஆராய்ச்சி உரையைப் படித்த நெஞ்சங்களுக்கு அழுகண்ணார்
பாடலையும் படிக்க ஆவல் வருகின்ற தல்லவா! பாடலைத் தொடருங்கள்.
மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலாப் பதியடியோ குதர்க்கந் தெருநடுவே
சாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
மேலப் பதிதனிலே என் கண்ணம்மா
விளையாட்டைப் பாரேனோ. 1
எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரரைவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகிறாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா
நிலைகடந்து வாடுறண்டி.
முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா
கோலமிட்டுப் பாரேனோ. 3
சம்பா அரிசியடி சாதஞ் சமைத்திருக்க
உண்பாய்நீ என்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துபோ லன்னமிட்டு முப்பழமுஞ் சர்க்கரையுந்
தித்திக்குந் தேனமிர்தம் என் கண்ணம்மா
தின்றுகளைப் பாறேனோ. 4
பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கி
செம்பொற் கலையுடுத்தி சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா
கண்குளிரப் பாரேனோ. 5
எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ. 6
கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்த கூடுவதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா
குடியோடிப் போகானோ. 7
ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச்சடலம்விட்டே என் கண்ணம்மா
உன்பாதஞ் சேரேனோ. 8
வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்
தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா
வாழ்வெனக்கு வாராதோ 9
பையூரி லேயிருந்து பாழூரி லேபிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா
பாழாய் முடியாவோ. 10
மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்கு கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா
கண்விழிக்க வேகாவோ. 11
அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்சந்திரருஞ் சூரியருந் தான்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ. 12
காட்டானை மேலேறி கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலுங்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா
கண்குளிரக் காண்பேனோ. 13
உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரந் தானெடுத்து
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா
வகைமோச மானேண்டி. 14
என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள்
தன்னந் தனியனுமாய்த் தனித்திருக்கல் ஆச்சுதடி
முன்னம் இதுதெரிந்தால் முழுமோசம் போகேனே
இன்னவிதம் என்று என் கண்ணம்மா
எடுத்து உரைக்க லாகாதோ? 33
எல்லாரும் பட்டார்கள் இன்னவிடம் என்றறியேன்
பொல்லாங்கும் போச்சுதடி புலனும் மறந்துதடி
கல்லான என்மனது கரைந்திருக்கு மேயாகில்
எல்லாரும் வந்து என் கண்ணம்மா
எனக்குஏவல் செய்யாரோ. 34
என்னை எனக்கறிய இருவினையும் ஈடழித்துத்
தன்னை அறியுமிடம் தானறிந்து கொண்டேண்டி
தன்னை அறியுமிடம் தானறிந்து கொண்டபின்பு
என்னை அறியாமல் என் கண்ணம்மா
இருந்தேன் ஒருவழியாய். 35
ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோர் அட்சரமும்
சூதானக் கோட்டைஎல்லாம் சுட்டுத் தொலைத்தார்கள்
சூதானக் கோட்டைஎல்லாம் சுட்டுவிட நாளானால்
பாதாள வத்துவெல்லாம் என் கண்ணம்மா
பக்கத்து இருக்காதோ. 36
கடல்நீரின் ஆழமதைக் கண்டுகரை யேறிவந்து
உடலும்உயி ரும்போல ஒத்தே இருந்தோமடி
உடலும்உயி ரும்போல ஒத்தே இருக்கையிலே
திடமா மயக்கம்வந்து என் கண்ணம்மா
சேர்ந்தது என் சொல்லாயோ? 37
கல்லுள் இருந்த கனல்ஒளியைக் காரணமாய்ப்
புல்லுள் இருந்துவந்த பொருளறியக் காணேன்டி
புல்லுள் இருந்த பொருளறியக் காணாட்டால்
வல்லபங்கள் தோணாமல் என் கண்ணம்மா
மயங்கித் தவிக்குறண்டி. 38
பொற்பூவும் வாசனையும் போதம் அறிந்தோர்க்குக்
கற்பூவும் வாசனையும் காணும் கயவருக்கும்
கற்பூவும் வாசனையும் கண்டது உண்டே யாமானால்
பொற்பூவும் வாசனையின் என் கண்ணம்மா
புலன்கள் தெரியவேண்டி. 39
ஆதிமதி என்னும் அதின் விடாய் தான்அடங்கிச்
சோதிவிந்து நாதமெனச் சுக்கிலமாய் நின்றதடி
சோதிவிந்து நாமெனச் சுக்கிலமாய் நின்றாக்கால்
நீதியுடன் பூர்வபட்சம் என் கண்ணம்மா
நிலைதெரிய மாட்டேனோ. 40
ஞானமிது நாற்பதையும் நலமாக வேதெரிய
மோன மயக்கத்தில் முழுதுமே கொட்டிவிட்டேன்;
மோன மயக்கத்தை முழுதும் அறிந்தோர்கள்
ஞானம் அடைவார்கள் என் கண்ணம்மா
நன்மைபெற்று வாழ்வார்கள். 41
இன்னும் பல பாடல்களாக சித்தமருத்துவமாக , வாத கற்பம்
கண்ணிகள் , ஆறாதாரம் மெய்ஞ்ஞானம் ஆகியவை பற்றியும் பாடியுள்ளார்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
அழுத கண்ணீருடன் காணப்பட்ட சித்தர் அல்லது இவரது பாடல்களைப்
படிக்கும்தோறும் அழுகை உணர்ச்சி உண்டாவதால் ‘அழுகண்’ சித்தர்
எனப்பட்டார் போலும்.
இவர் பாடும்பொழுது எப்பொழுதும் கண்களிலிருந்து நீர் வழிந்து
கொண்டே இருக்கும் என்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாகச் சிலர்
கூறுவர். இவர் நாகப்பட்டினத்தில் சமாதி அடைந்ததாகக் கூறப்படுகின்றது.
இவரது பாடல்கள் ஏறத்தாழ ஒப்பாரிப் பாடல்கள் போலத்
தோன்றினாலும் அப்பாடலின் கருத்துக்களை அனுபவ ஞானிகளால்தான்
விளக்கிங்கொள்ள முடியும்.
இவரது பாடல்களனைத்தும் கண்ணம்மா என்ற பெண்ணை சக்தியின் வடிவமான மனோன்மணி அம்மையை கண்ணம்மா என்று
முன்னிலைப் படுத்துவனவாகவே உள்ளன. பட்டினத்தார், பத்திரகிரியார் போன்றே இவரும் தனது வாழ்நாளில் பட்ட துன்பங்களை முன்னிருத்தியே பாடியுள்ளார,
“ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊத்தைச் சடலம் விட்டே - என் கண்ணம்மா
உன் பாதம் சேரேனே?
இந்த உடம்பு நாற்றம் பிடித்த அழுக்கு உடம்பு. உப்பிருந்த மட்பாண்டம்
போல அளறு பிடித்துக் கரைந்து அழிந்து போகும் உடம்பு. இந்த உடம்பின்
இயல்பை மாற்றி அழியாத உடம்புடன் பிறப்பதற்கான மருந்து எனக்குக்
கிடைக்கவில்லை. அப்படி அழியா உடம்புடன் பிறப்பதற்கு எனக்கு மட்டும் மருந்து கிடைக்குமென்றால் இந்த அழியக்கூடிய ஊத்தைச்
சடலத்தை விட்டொழித்து உன் பாதமே தஞ்சம் என்று வந்து விடுவேனே
என்று யோகத்தின் அவசியத்தைக் குறிப்பிடுகின்றார்.
இப்படிப்பட்ட யோகத்தை பழக முயற்சிக்கின்றார் அழுகண்ணர். யோகம்
பழகப் பழக உடல் கொதிக்கிறது. மூலச்சூடு ஏற்படுகின்றது. அடி வயிறு
வலிக்கிறது. தம்அனுபவத்தைப் பாடல்களில் கொட்டிக் கவிழ்க்கின்றார்.
கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என் வயிறு
நில் என்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை;
நில்லென்று சொல்லி நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல் என்று வந்த நமன் - என் கண்ணம்மா
குடியோடிப் போகாணோ!
யோகம் பயில்வாருக்கு அடிவயிறு சுடும் என்பது புரிகிறது. அது
மூலச்சூடு என்பார்கள். இன்னும் சற்று ஆழ்ந்து நோக்கினால் மூலாதாரத்தில்
உறங்கும் குண்டலிப் பாம்பை எழுப்புவதற்கான அனல் என்பது புரியும்.
எந்தச் செயலையும் ஆரம்பிப்பதுதான் கடினம். பிறகு அது சுலபமாகி விடும்.
யோகத்தைப் பயில ஆரம்பித்த நிலையில்தான் அழுகண்ணருக்கு உடலைக்
கட்டுப்படுத்துவது கடினமாக இருந்ததே ஒழிய யோகம் பயின்றபின் அது
இவர் கட்டுப்பாட்டை விட்டு விலகியே இருந்தது.
உடற்சூட்டின் மூலம் குண்டலினியைக் கிளப்பிய இவர் அதனை
இடையில் நிறுத்தும் வித்தையையும் அறிய விரும்புகின்றார். ஆனால்
முடியவில்லை. அடியில் தோன்றிய அனல் உச்சியில்தான், அதாவது
சகரஸ்தளத்தில்தான் போய் நின்றது. இடையில் ஒவ்வொரு உடற்
சக்கரத்தையும் கடக்கும்போது இன்பமயமான ‘சிறுவலி’ அந்த அனுபவத்தை மீண்டும் அனுபவிக்க அல்லது அதே இடத்தில்
குண்டலினியை நிலைநிறுத்த அவரால் முடியவில்லை.
இங்கு இந்த ஆறாதார குண்டலினி யோகத்தில் கவனிக்கப்படுகின்ற
விஷயமும் ஒன்றிருக்கிறது. மூலாதாரத்திலிருந்து கிளம்பும் குண்டலினி
அக்கினியை இடையில் தடங்கல் செய்தோமானால் யோகம் பயில்கின்றவர்
பித்தாகி உயிர் துறப்பர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தக் கருத்தைத்தான்,
‘நில்லென்று சொல்லி நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல் என்று வந்த நமன்”
என்ற வரிகளில் தெரிவிக்கின்றார்.
இது இப்படியிருக்க இந்த யோக முயற்சிக்கு முன் இளமை மயக்கத்தால்
மனதைக் கட்டுப்படுத்தப், படாத பாடுபட்ட நிலையை
“மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்கு கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
கண்விழிக்க வேகாவோ”
முறைப் பெண்ணாக இருந்தால் என்ன அல்லது மச்சினியாகத்தான்
இருந்தென்ன? இளமைப்பருவத்தில் காமன் கணையினால் படும் துன்பம்
பெரியதல்லவா? அந்தக் காமன் கணைகளெல்லாம் யோகத்திலிருந்த
சிவபெருமான் கண்விழிக்கச் சாம்பரானது போல, யோக தவத்திலிருந்து நான்
கண் விழித்தால் அந்த யோக அனலில் காம உணர்ச்சிகளெல்லாம் வெந்து
சாம்பராகி விடாதா? என்று கண்ணம்மாளைக் கேட்கின்றார்.
குண்டலினி யோகத்தைப் பற்றி மற்றொரு பாடலிலும் குறிப்பிடுகின்றார்.
“உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சிக்கு மேலேறி வானுதிரந்தானெடுத்துக்
கச்சை வடம் புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ - என் கண்ணம்மா
வகை மோசமானேண்டி”
எவ்வளவு அருமையான விளக்கம். உச்சிக்குக் கீழே ஊசி முனை வாசல்
என்று குறிப்பிட்டது சுழுமுனையை உச்சியான மச்சிக்கு மேலே ஏறிய
குண்டலினி அமுத தாரண செய்யும் நிலையை இப்பாடலில் விளக்கம்
செய்கின்றார்.
இவ்வளவு யோக விளக்கம் கூறுமிவர் உஞ்ச விருத்தி செய்தே
காலத்தைக் கழித்தாரென்று கூறப்படுகிறது.
“புல்லரிடத்திற்போய் பொருள் தனக்கு கையேந்தி
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல் - என் கண்ணம்மா
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா!
பொருளெனக்குத் தாராயோ”
பிச்சையெடுப்பது கேவலமானதுதான். ஆனால் அதைவிடக் கேவலம்
அப்படிப் பிச்சை எடுப்பவனிடம் பிச்சை போட மாட்டேன் என்று துரத்துவது
என்ற ஒளவையாரின் கருத்தை இவ்வரிகளில் காட்டித் தன்னைப் பொருள்
தரா புல்லர்களிடம் போய் கையேந்திப் பல்லை மிகக்காட்டிப்
பிச்சையெடுக்காமல் உயிர் வாடுவதற்கு எனக்குப் பொருள் கொடு அம்மா
என்று மனோன்மணித் தாயிடம் (கண்ணம்மாவிடம்) வேண்டுகின்றார்.
படிக்கப் படிக்கப் பரிதாபத்தைத் தூண்டும் இவர் பாடல்கள் சித்தர்
இலக்கியத்தில் மிகப் பிரபலம்.
“பையூரிலேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
பாழாய் முடியாவோ”
இங்கு இவர் ஜனன முறைமை உணர்த்துகின்றார். பையூர் என்பது
கருவறை (கருப்பை) பாழூர் என்பது யோனி; மெய்யூர் என்பது உடல்
என்றும், உண்மை ஞானம் என்றும் இரு பொருள்படும்.
பாழ் என்பது மோட்சம், வீடு பேறு; உடலையே இறைவன் வாழும்
ஆலயமாகக் கருதி யோக நியமங்கள் செய்தீர்களானால் அதுவே கோயிலாகி
இறை தரிசனத்தைக் காட்டும். அந்த நிலையில் யோக நெறியாளர் வெறுத்
தொதுக்கும் பெண்களின் கருப்பையும் உடம்பும் புனிதம் அடைந்து பாழூராக
அதாவது ஆகாய வெளியாக இறைவன் வாழும் கோயிலாக மாறாதா? என்று
நம்மைக் கேள்வி கேட்கின்றார்.
ஆராய்ச்சி உரையைப் படித்த நெஞ்சங்களுக்கு அழுகண்ணார்
பாடலையும் படிக்க ஆவல் வருகின்ற தல்லவா! பாடலைத் தொடருங்கள்.
மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலாப் பதியடியோ குதர்க்கந் தெருநடுவே
சாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
மேலப் பதிதனிலே என் கண்ணம்மா
விளையாட்டைப் பாரேனோ. 1
எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரரைவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகிறாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா
நிலைகடந்து வாடுறண்டி.
முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா
கோலமிட்டுப் பாரேனோ. 3
சம்பா அரிசியடி சாதஞ் சமைத்திருக்க
உண்பாய்நீ என்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துபோ லன்னமிட்டு முப்பழமுஞ் சர்க்கரையுந்
தித்திக்குந் தேனமிர்தம் என் கண்ணம்மா
தின்றுகளைப் பாறேனோ. 4
பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கி
செம்பொற் கலையுடுத்தி சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா
கண்குளிரப் பாரேனோ. 5
எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ. 6
கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்த கூடுவதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா
குடியோடிப் போகானோ. 7
ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச்சடலம்விட்டே என் கண்ணம்மா
உன்பாதஞ் சேரேனோ. 8
வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்
தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா
வாழ்வெனக்கு வாராதோ 9
பையூரி லேயிருந்து பாழூரி லேபிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா
பாழாய் முடியாவோ. 10
மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்கு கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா
கண்விழிக்க வேகாவோ. 11
அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்சந்திரருஞ் சூரியருந் தான்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ. 12
காட்டானை மேலேறி கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலுங்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா
கண்குளிரக் காண்பேனோ. 13
உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரந் தானெடுத்து
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா
வகைமோச மானேண்டி. 14
என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள்
தன்னந் தனியனுமாய்த் தனித்திருக்கல் ஆச்சுதடி
முன்னம் இதுதெரிந்தால் முழுமோசம் போகேனே
இன்னவிதம் என்று என் கண்ணம்மா
எடுத்து உரைக்க லாகாதோ? 33
எல்லாரும் பட்டார்கள் இன்னவிடம் என்றறியேன்
பொல்லாங்கும் போச்சுதடி புலனும் மறந்துதடி
கல்லான என்மனது கரைந்திருக்கு மேயாகில்
எல்லாரும் வந்து என் கண்ணம்மா
எனக்குஏவல் செய்யாரோ. 34
என்னை எனக்கறிய இருவினையும் ஈடழித்துத்
தன்னை அறியுமிடம் தானறிந்து கொண்டேண்டி
தன்னை அறியுமிடம் தானறிந்து கொண்டபின்பு
என்னை அறியாமல் என் கண்ணம்மா
இருந்தேன் ஒருவழியாய். 35
ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோர் அட்சரமும்
சூதானக் கோட்டைஎல்லாம் சுட்டுத் தொலைத்தார்கள்
சூதானக் கோட்டைஎல்லாம் சுட்டுவிட நாளானால்
பாதாள வத்துவெல்லாம் என் கண்ணம்மா
பக்கத்து இருக்காதோ. 36
கடல்நீரின் ஆழமதைக் கண்டுகரை யேறிவந்து
உடலும்உயி ரும்போல ஒத்தே இருந்தோமடி
உடலும்உயி ரும்போல ஒத்தே இருக்கையிலே
திடமா மயக்கம்வந்து என் கண்ணம்மா
சேர்ந்தது என் சொல்லாயோ? 37
கல்லுள் இருந்த கனல்ஒளியைக் காரணமாய்ப்
புல்லுள் இருந்துவந்த பொருளறியக் காணேன்டி
புல்லுள் இருந்த பொருளறியக் காணாட்டால்
வல்லபங்கள் தோணாமல் என் கண்ணம்மா
மயங்கித் தவிக்குறண்டி. 38
பொற்பூவும் வாசனையும் போதம் அறிந்தோர்க்குக்
கற்பூவும் வாசனையும் காணும் கயவருக்கும்
கற்பூவும் வாசனையும் கண்டது உண்டே யாமானால்
பொற்பூவும் வாசனையின் என் கண்ணம்மா
புலன்கள் தெரியவேண்டி. 39
ஆதிமதி என்னும் அதின் விடாய் தான்அடங்கிச்
சோதிவிந்து நாதமெனச் சுக்கிலமாய் நின்றதடி
சோதிவிந்து நாமெனச் சுக்கிலமாய் நின்றாக்கால்
நீதியுடன் பூர்வபட்சம் என் கண்ணம்மா
நிலைதெரிய மாட்டேனோ. 40
ஞானமிது நாற்பதையும் நலமாக வேதெரிய
மோன மயக்கத்தில் முழுதுமே கொட்டிவிட்டேன்;
மோன மயக்கத்தை முழுதும் அறிந்தோர்கள்
ஞானம் அடைவார்கள் என் கண்ணம்மா
நன்மைபெற்று வாழ்வார்கள். 41
இன்னும் பல பாடல்களாக சித்தமருத்துவமாக , வாத கற்பம்
கண்ணிகள் , ஆறாதாரம் மெய்ஞ்ஞானம் ஆகியவை பற்றியும் பாடியுள்ளார்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
சிவபெருமானாரின் இறக்கத்தன்மை
சிவபெருமானார் காலத்தைக் கடந்தவர், காலனை (எமனை ) உதைத்தவர், காமனை எரித்தவர், அப்பெருமானார் தேவரும் மூவரும் மற்றும் யாவரும் வணங்குகின்ற தன்மையனர், அயன், மால் ( பிரம்மா,திருமால்) தேவியர் எல்லாராலும் வணங்கப்பெற்றவர், ஆனால் அவர் யாரையும் வணங்காத உயர்வுடையவர், அடியார்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்,
" தன்னால் தொழப்படுவார் யாரும் இல்லாதான் " ........... திருமூலர்
இவ்வளவு அருமைப்பாடுடைய சிவபெருமானார் தம்மை அன்புடன் வழிபடும் அடியவர்கட்கு மிக எளியவராகக் காட்சி அளிப்பவர், அடியார் பொருட்டு அவர் புரியும் செயல்பாடுகள் யாவும் மிக அருமைப்பாடுடையனவாக இருக்கும், அததைத்தான் மாணிக்கவாசகர்
" அருமையில் எளிய அழகே போற்றி " ..... போற்றி திருஅகலில் கூறுகின்றார்,
அப்பெருமானாரின் எளிவந்த செயல்பாடுகளில் சிலவற்றைக் கண்டு மகிழ்வோம்
1, காஞ்சீபுரத்தில் சாக்கிய நாயனார் அன்றாடம் கல்லால் அடித்தார், அதனை மலராக ஏற்று அவருக்கு முத்தி கொடுத்தருளினார்,
2, கண்ணப்பரிடம் காலால் உதைபட்டார்
3, விசயனிடம் வில்லால் அடிபட்டார்
4, பாண்டிய மன்னனிடம் பிரம்பால் அடிபட்டார்,
5,வந்திக் கிழவிக்கு கூலியாளாக வந்து மண் சுமந்தார்
6,மாணிக்கவாசகர் பொருட்டு குதிரை சேவகனாக வந்தார்
7,சுந்தரமூர்த்தி சுவாமிக்கு திருஒற்றியூரிலும், திருவாரூரிலும் காதலுக்காக தூதுபோனார்
8, இடைக்காட்டூர் புலவன் என்பவனுக்காக வேண்டி மதுரையை விட்டு ஒரு நாள் இடம் பெயர்ந்து சென்றார்,
9,மதுரை மன்னன் இராசசேகர பாண்டியன் பொருட்டு கால்மாறி ஆடினார்,
10, பாணபத்திரன் பொருட்டு விறகு விற்கும் ஆளானார்
11, மதுரையில் பாணபத்திரனுக்கு மாணிக்க பலகை அருளினார்
12, மதுரையில் குட்டிகளை ஈன்றுவிட்டு இறந்த தாய் பன்றியின் உருவெடுத்து குட்டிகளுக்கு பாலூட்டினார்
" ஏனக் குருளைக்கு அருளினை போற்றி " திருவாசகம்
13, திருநாவுக்கரசருக்கும், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் பசித்திருந்த பொழுது அவர்கட்கு உணவு கொண்டுவந்து கொடுத்தார்
14, ஞான சம்பந்தருக்கு முத்துப்பந்தல், பல்லக்கு, தாளம் போட பொற்தாளம் கருவி வழங்கினார்
15 தருமிக்கு பொற்கிளி கிடைக்கச் செய்தார்
16, திருமறைக்காட்டில் கருவறையில் அணையும் நிலையிலிருந்த விளக்கின் திரயை அணையாமல் தூண்டிய எலிக்கு மறுபிறவியாக மாவலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செய்தார்,
17, மகாசிவராத்திரி தினத்தன்று வில்வ இலையை பறித்து போட்ட குரங்கிற்கு முசுகுந்த சக்கரவர்த்தியாக மறுபிறவி அளித்தார்
18, ஆனைக்கால் எச்சிலால் நூல்கட்டிய சிலந்திக்கு செங்கட்சோதுனாக பிறக்கச் செய்தார்,
இவ்வாறு " கற்பனை கடந்த கருணையே உருவமாகி " சிவனடியார்கள் மனத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கும் கருணைக்கடலை சிவபொருமானாரை போற்றி வணங்கி நலம் வளம் பெறுவோம்
திருச் சிற்றம்பலம் ஓம் நமசிவாய நம
மேலும் ஆன்மீகதேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
சிவபெருமானார் காலத்தைக் கடந்தவர், காலனை (எமனை ) உதைத்தவர், காமனை எரித்தவர், அப்பெருமானார் தேவரும் மூவரும் மற்றும் யாவரும் வணங்குகின்ற தன்மையனர், அயன், மால் ( பிரம்மா,திருமால்) தேவியர் எல்லாராலும் வணங்கப்பெற்றவர், ஆனால் அவர் யாரையும் வணங்காத உயர்வுடையவர், அடியார்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்,
" தன்னால் தொழப்படுவார் யாரும் இல்லாதான் " ........... திருமூலர்
இவ்வளவு அருமைப்பாடுடைய சிவபெருமானார் தம்மை அன்புடன் வழிபடும் அடியவர்கட்கு மிக எளியவராகக் காட்சி அளிப்பவர், அடியார் பொருட்டு அவர் புரியும் செயல்பாடுகள் யாவும் மிக அருமைப்பாடுடையனவாக இருக்கும், அததைத்தான் மாணிக்கவாசகர்
" அருமையில் எளிய அழகே போற்றி " ..... போற்றி திருஅகலில் கூறுகின்றார்,
அப்பெருமானாரின் எளிவந்த செயல்பாடுகளில் சிலவற்றைக் கண்டு மகிழ்வோம்
1, காஞ்சீபுரத்தில் சாக்கிய நாயனார் அன்றாடம் கல்லால் அடித்தார், அதனை மலராக ஏற்று அவருக்கு முத்தி கொடுத்தருளினார்,
2, கண்ணப்பரிடம் காலால் உதைபட்டார்
3, விசயனிடம் வில்லால் அடிபட்டார்
4, பாண்டிய மன்னனிடம் பிரம்பால் அடிபட்டார்,
5,வந்திக் கிழவிக்கு கூலியாளாக வந்து மண் சுமந்தார்
6,மாணிக்கவாசகர் பொருட்டு குதிரை சேவகனாக வந்தார்
7,சுந்தரமூர்த்தி சுவாமிக்கு திருஒற்றியூரிலும், திருவாரூரிலும் காதலுக்காக தூதுபோனார்
8, இடைக்காட்டூர் புலவன் என்பவனுக்காக வேண்டி மதுரையை விட்டு ஒரு நாள் இடம் பெயர்ந்து சென்றார்,
9,மதுரை மன்னன் இராசசேகர பாண்டியன் பொருட்டு கால்மாறி ஆடினார்,
10, பாணபத்திரன் பொருட்டு விறகு விற்கும் ஆளானார்
11, மதுரையில் பாணபத்திரனுக்கு மாணிக்க பலகை அருளினார்
12, மதுரையில் குட்டிகளை ஈன்றுவிட்டு இறந்த தாய் பன்றியின் உருவெடுத்து குட்டிகளுக்கு பாலூட்டினார்
" ஏனக் குருளைக்கு அருளினை போற்றி " திருவாசகம்
13, திருநாவுக்கரசருக்கும், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் பசித்திருந்த பொழுது அவர்கட்கு உணவு கொண்டுவந்து கொடுத்தார்
14, ஞான சம்பந்தருக்கு முத்துப்பந்தல், பல்லக்கு, தாளம் போட பொற்தாளம் கருவி வழங்கினார்
15 தருமிக்கு பொற்கிளி கிடைக்கச் செய்தார்
16, திருமறைக்காட்டில் கருவறையில் அணையும் நிலையிலிருந்த விளக்கின் திரயை அணையாமல் தூண்டிய எலிக்கு மறுபிறவியாக மாவலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செய்தார்,
17, மகாசிவராத்திரி தினத்தன்று வில்வ இலையை பறித்து போட்ட குரங்கிற்கு முசுகுந்த சக்கரவர்த்தியாக மறுபிறவி அளித்தார்
18, ஆனைக்கால் எச்சிலால் நூல்கட்டிய சிலந்திக்கு செங்கட்சோதுனாக பிறக்கச் செய்தார்,
இவ்வாறு " கற்பனை கடந்த கருணையே உருவமாகி " சிவனடியார்கள் மனத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கும் கருணைக்கடலை சிவபொருமானாரை போற்றி வணங்கி நலம் வளம் பெறுவோம்
திருச் சிற்றம்பலம் ஓம் நமசிவாய நம
மேலும் ஆன்மீகதேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருமூலர் கூறும் அறநெறி
அறிது அறிது மானிடராய் பிறப்பது அரிது அவ்வாறு பிறந்த காலை கூன், குருடு செவிடு, ஊனம் மற்று பிறப்பது அதனினும் அரிது என்கிறார் அவ்வையார், அவ்வாறு கிடத்தற்கரிய மானிட பிறவி எண்ணிய சில நாட்களிலேயே மூப்பு என்பதை அடைகிறது, அக் குறுகிய காலத்தில் பயனுள்ள செயல்களை நாம் செய்யமால் பொருள் சேர்த்தல், பிள்ளை பேறு அைடதல் போன்ற சிற்றின்பங்களிலேயே காலத்ைத வீணாக்குகிறோம், காலையில் உதிக்கிற சூரியன் மாலையில் மறைகின்றது, நம் கண்ணெதிரே கன்று எருதாய் வளர்வதும், புழு பூச்சிகளாக மாறி மடிவதும் நிகழ்கின்றன,நாம் கொண்ட இளமையும் அதுபோல் மறையும் என்பதை உலகோர் உணர்வதில்லை, இதனை திருமூலர்
" கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தேரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியர்உலகோரே.
சூரியன் தோன்றுகிறான், மறைகிறான், இது எதைக்காட்டுகிறது தோன்றிய ஒன்று அழிவுறுகிறது என்பதைக்காட்டுகின்றது. இதனை நேரில் கண்டும் அறியாமல் இருக்கின்றனரே, மற்றும் இளைய கன்றானது இளைமயாகவே இருப்பதில்லையே, அது மூப்பு அடைகிறது, கன்று என்னும் பெயர் மாறி எருது என்னும் பெயைரப் ெபறுகிறது. பிறகு சில நாட்களில் இறந்தும் விடுகிறது. இதனையும் உணர்ந்திலரே, எனவே தோன்றி பொருளுக்கு அழிவு உண்டு என்பதைஅறியாது அரிதற்கரிய மானிடப் பிறவியை வீணே காலம் கழிக்கும் மானிடேரே இருக்கும் காலத்தில் நல்லறம் செய்து பிறவி பிணி நீக்கி பிறவாமை என்னும் பேறு அடைய முயல்வீரே, இதனை அறநெறிச்சாரம் பாடல் ஒன்றின் மூலம் விளக்குவதை இங்கு காணலாம்,
" சென்றநாள் எல்லாம் சிறுவிரல்வைத்து எண்ணலாம்
நின்றநாள் யார்க்கும் உணர்வு அரிது / என்று ஒருவன்
நன்மை புரியாது நாள் உலப்ப விட்டிருக்கும்
புன்ைம பெரிது புறம்."
நம்முடைய வாழ்ககையில் கழிந்துபோன நாட்கள் விரல் விட்டு எண்ணி விடலாம்,ஆனால் நாம் வாழப் போகும் நாட்கள் எவ்வளவு என்று அளவிட யாராலும் முடியாது. இதனைக் கருத்தில் கொண்டு , ஒருவர் தான தருமங்களையும் , நற்செயல்களையும் விரைந்து செய்யாமல் வாழ்நாள் முழுவதும் வீணே கழியுமாறு விட்டிருப்பதால் வருகின்ற துன்பம் பின்னர் அதிகமாகிவிடும். எத்தனைநாள் வாழப் போகின்றோம் என்பது நமக்கு தெரியாது, இதனை இறைவரே அறிவார், எனவே அறச் செயல்களை விரைந்து ெசய்துவிடவேண்டும், நற்செயல்களை நாளை செய்வோம் என்று தள்ளிப்போடக் கூடாது.
அறம்தான் நமக்கு சிறந்த பாதுகாப்பு அரன் ஆகும், முதுமையையும் கொடிய நோயையும் கூற்றுவன் முன்னதாகவே அனுப்பிவிடுவான். பின்னர் வந்து அழித்து விடுவான், அறமே உயிரகளுக்கு சிறந்த பாதுகாப்பு , என்பதை சான்றோர்கள் தங்களின் அனுபவத்தால் கூறியுள்ளதை மனத்தில் கொள்ள வேண்டும் நாம்.
திருச்சிற்றம்பலம் ..... ஓம் நமசிவாய ஓம்
மேலும் பல ஆன்மீக தேடலுக்கு;
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
அறிது அறிது மானிடராய் பிறப்பது அரிது அவ்வாறு பிறந்த காலை கூன், குருடு செவிடு, ஊனம் மற்று பிறப்பது அதனினும் அரிது என்கிறார் அவ்வையார், அவ்வாறு கிடத்தற்கரிய மானிட பிறவி எண்ணிய சில நாட்களிலேயே மூப்பு என்பதை அடைகிறது, அக் குறுகிய காலத்தில் பயனுள்ள செயல்களை நாம் செய்யமால் பொருள் சேர்த்தல், பிள்ளை பேறு அைடதல் போன்ற சிற்றின்பங்களிலேயே காலத்ைத வீணாக்குகிறோம், காலையில் உதிக்கிற சூரியன் மாலையில் மறைகின்றது, நம் கண்ணெதிரே கன்று எருதாய் வளர்வதும், புழு பூச்சிகளாக மாறி மடிவதும் நிகழ்கின்றன,நாம் கொண்ட இளமையும் அதுபோல் மறையும் என்பதை உலகோர் உணர்வதில்லை, இதனை திருமூலர்
" கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தேரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியர்உலகோரே.
சூரியன் தோன்றுகிறான், மறைகிறான், இது எதைக்காட்டுகிறது தோன்றிய ஒன்று அழிவுறுகிறது என்பதைக்காட்டுகின்றது. இதனை நேரில் கண்டும் அறியாமல் இருக்கின்றனரே, மற்றும் இளைய கன்றானது இளைமயாகவே இருப்பதில்லையே, அது மூப்பு அடைகிறது, கன்று என்னும் பெயர் மாறி எருது என்னும் பெயைரப் ெபறுகிறது. பிறகு சில நாட்களில் இறந்தும் விடுகிறது. இதனையும் உணர்ந்திலரே, எனவே தோன்றி பொருளுக்கு அழிவு உண்டு என்பதைஅறியாது அரிதற்கரிய மானிடப் பிறவியை வீணே காலம் கழிக்கும் மானிடேரே இருக்கும் காலத்தில் நல்லறம் செய்து பிறவி பிணி நீக்கி பிறவாமை என்னும் பேறு அடைய முயல்வீரே, இதனை அறநெறிச்சாரம் பாடல் ஒன்றின் மூலம் விளக்குவதை இங்கு காணலாம்,
" சென்றநாள் எல்லாம் சிறுவிரல்வைத்து எண்ணலாம்
நின்றநாள் யார்க்கும் உணர்வு அரிது / என்று ஒருவன்
நன்மை புரியாது நாள் உலப்ப விட்டிருக்கும்
புன்ைம பெரிது புறம்."
நம்முடைய வாழ்ககையில் கழிந்துபோன நாட்கள் விரல் விட்டு எண்ணி விடலாம்,ஆனால் நாம் வாழப் போகும் நாட்கள் எவ்வளவு என்று அளவிட யாராலும் முடியாது. இதனைக் கருத்தில் கொண்டு , ஒருவர் தான தருமங்களையும் , நற்செயல்களையும் விரைந்து செய்யாமல் வாழ்நாள் முழுவதும் வீணே கழியுமாறு விட்டிருப்பதால் வருகின்ற துன்பம் பின்னர் அதிகமாகிவிடும். எத்தனைநாள் வாழப் போகின்றோம் என்பது நமக்கு தெரியாது, இதனை இறைவரே அறிவார், எனவே அறச் செயல்களை விரைந்து ெசய்துவிடவேண்டும், நற்செயல்களை நாளை செய்வோம் என்று தள்ளிப்போடக் கூடாது.
அறம்தான் நமக்கு சிறந்த பாதுகாப்பு அரன் ஆகும், முதுமையையும் கொடிய நோயையும் கூற்றுவன் முன்னதாகவே அனுப்பிவிடுவான். பின்னர் வந்து அழித்து விடுவான், அறமே உயிரகளுக்கு சிறந்த பாதுகாப்பு , என்பதை சான்றோர்கள் தங்களின் அனுபவத்தால் கூறியுள்ளதை மனத்தில் கொள்ள வேண்டும் நாம்.
திருச்சிற்றம்பலம் ..... ஓம் நமசிவாய ஓம்
மேலும் பல ஆன்மீக தேடலுக்கு;
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 20 (அ)
எந்தையும் தாயும் - எந்தையாகிய சிவன்
எந்தையாகிய சிவனிடமிருந்தே தோன்றின சைவமார்க்கங்கள், இந்த மண்ணுலகம் அவனால் தோற்றுவிக்கப்பட்டது. அவன் பேரறிவாளன் அவனுடைய பெருமைகளை யாரும் அளவிட்டு உரைக்க முடியாது. அவன் ஆதிபரம் பொருள் அது என்றும் இது என்றும் ஐயப்பட வேண்டாம், ஆராய்ச்சி வேண்டாம், அவன் தனது அடியார்களின் அன்புக்கு ஆட்பட்டு வெளிப்படுகிறவன். எங்கும் நறைந்த இறைவன,ஒவ்வொர் உயிரின் உள்ளத்திலும் தங்கியிருப்பவன், ஆனாலும் தன் இருப்பை அவன் மறைவாகவே வைக்கிறான், அதனால் உலகோர் அவன் செயல்படும் வகையை அறிந்திருக்கவில்லை.
சிவத்தை காட்டிலும் எங்கும் நிறைந்த மேலான பொருள் இல்லை. ஆன்மாவில் உறையும் சிவத்தை அறிந்து சிவானுபவம் பெறுவதே தவம். இவவுண்மை அறியாது சமயத்துறையில் புகுந்து சிறக்க முயல்வது வீண்முயற்சி என்கிறது திருமந்திரம், பாடல்: சிவம் அல்லது இல்லை அறையே சிவமாம்...............
உலகின் கீழான நெறி சென்று துன்புற்று ஒழுகுவாரும் நல்ல நிலையில் இருந்து அதனை இழந்து வருந்துவோரும் சிவத்தை நினைத்து அருந்தவம் மேற்கொண்டால் இன்னல்கள் நீங்கும், சிவன் அவர்களுக்கு பெரியதகுதியைத் தந்தருள்வான். பாடல்: இருந்தழுவாரும், இயல்பு கெட்டாரும்.................
ஈடேறும் எண்ணம் உங்களுக்கு இருந்தால் ஒப்பில்லா தலைவனை உண்மை நெறியில் ஒழுகும் அடியார்கள் அன்பனை இன்பம் தருகின்ற முதல்வனை வந்தடைவீராக என்கிறார் திருமூலர்,
ஒளிவிடும் மின்னல்போல, சிவபொருமான் யோகக் காட்சியினருக்கு ஒளிவடிவில் வெளிப்படுவான், அந்தணர் இயற்றும் வேள்வித் தீயில் முகங்காட்டுவான், அவன் முழுமுதற் கடவுள், நீங்கள் எவ்வுருவில் நினைத்தாலும் அவ்வண்ணமே காட்சியளிப்பான், பாடல் : மினற்குறிாளனை வேதியர்...................
உடலெருத்த பயன் சிவனை அறிவாதாகும், ஆனால் மக்கள் இதனை உணர்ந்தாரில்லை,ஆகாயத்தை ஆறு ஆதாரங்களில் இயங்க வைத்தான் இறைவன், அவன் தன்னோடு பொருந்திருப்பதை சீவனறியவதே மேலான சமயம். பாடல் : அறியவொண்ணாதவ்வுடம்பின் பயனை...............
இந்த உலகில் நான் வீடுபேற்றை அடைவதற்கு சாதனமாய் அமைந்தது இப்பிறவி. எனக்கு பிறவியளித்து இறைவன் என்னுள் இருந்து வெளிப்பட்டான், அவனைக்கண்டு கொள்வதற்கான ஞானத்தையும் அவன் தந்தான், அடையும் முயற்சியில் என் உள்ளம் என்க்கு துணை நின்றது என்கிறார் சித்தர். பாடல்: பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை................
சீவனுடன் சிவன் பொருந்திருப்பதை பலரும் அறிந்திருக்கவில்லை. உயிர்கள் அறியாத வகையில் அனைத்துயிர்களையும் தன் கருவில் கொண்டவன் சிவன் நான் அதனை அறிந்து கொண்டேன், பாடல்: தரிக்கின்ற பல்லுயிர்க்கெல்லாம் தலைவன்...............
இறைவன் அருளால் என்னுள் அன்பு ஓங்கியது, அந்த அன்பின் வழியே அவன் அன்புருவாய் எழுந்தான், அப்போதே மேல்நோக்கி ஏறிய செவ்வொளி சிரசில் படர்ந்தது. நான் விரும்பிய திருவடி என்உள்ளத்தே நிறைந்தது என்கிறார் திருமூலர், அன்பின் திறம் அத்தகையது பேரறிவு பொருளான அவன் என்கிற சிவம் , சிற்றறிவு பொருளாகிய தான் என்கிற ஆன்மா என இரண்டு உள்ளன. தன்னையும் அவனையும் தன்னொளியில் கண்டு, தான் என்கிற உணர்வை அவன் விளங்கும் சகஷ்கரதளத்துக்கு மாற்றினால் வேறுபாடின்றி நானே அவன் என்கிற நிலை வரும், பாடல் : தான் என்று அவன் என்று இரண்டாகும் தத்துவம்........................
பாதையில் முள் இல்லை, பக்கத்தில் உண்டு, பாதைவிட்டு விலகினால் முள் குத்தும், இறைவன் நல்ல பாதையையும் நெருஞ்சயில் முள்ளையும் பக்கம் பக்கமாய் வைத்தான் நாம்தான் பார்த்து நடக்க வேண்டும், அறவழி தவறினால் துன்பத்தை அனுபவிக்க வேண்டியதிருக்கும். பாடல்: நெறியைப் படைத்தான் நெஞ்சில் படைத்தான்..........
சிவத்திடம் மனது வைத்த பண்பாளர்கள் துன்பங்களில் அஞ்சுவதில்லை. அவர்கள் வேறுபடுத்தி அறியமாட்டார்கள் பாடல்: ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்..........
சிவனது அருள்பெற்றவர் அறிவார், இவ்வுலகம் ஏன் படைக்கப்ட்டது , உடலோடு உயர் எதற்காக இணைக்கப்பட்டது தவத்தின் மேன்மை எத்தகையது என்பதெல்லாம், அவரவர் தவத்தை பொறுத்தே அவன் தெரிவதும், மறைவதும் புறக்கண்ணால் காணமுடியாது போகலாம், அகக்கண்ணால் காண்பது ஆகுந்தானே! உலகமே சிவனது அடையாளம் உலகனைத்தும் சிவனிடம் உள்ளமையால் உலகமே சிவலிங்கமாயிற்று.
சிவன் - உருவம், அருவம், அருவுருவம் என்று மூவகை திருமேனியைக் கொண்டவன், உயிர்களுக்கு குருவாய் தோன்றி அருள்பவன், அவனே சதாசிவமாய் கற்பக்தருவாய் வேண்டுவோருக்கு வேண்டுவன அருள்பவன், சோதிவடிவான இறைவனின் ஒருபாதியில் பராசக்தி விளங்குகிறாள், சிவசக்தி விளையாட்டே இவ்வுலகம் வடிவான சக்தி அறிவான சிவன், இரண்டும் இல்லாமல் உடலுக்குள் உயிர் பொருந்தி நிற்பதில்லை, இந்த மேலோனின் திருவுருவத்தை தெரிந்து அறியாமையால் இதுவரை காலங்கள் வீணில் கழிந்தன. அந்நிலையில் சிவனாகிய தலைவன் குருவாக வந்து காட்டுவித்தனன், ெம்ய்யறிவு துணையாய் கொண்டவரை மேவியிருப்பான் சிவன். பாடல் : தேர்ந்த அறியாமையின் சென்றன காலங்கள்...........
தவத்தின் பயனாய் இருப்பவனை, தவம்செய்வார்க்கு நலம் செய்பவனை கடந்து விளங்கும் தூயவனை நாடுங்கள், அவ்விதம் நாடினால் எண்ணற்ற ஆன்மாக்களில் உங்களை மேம்பட்டவராக்குவான், சிவனது திருவடியை உணர்ந்தவர், உணர வேண்டியது வேறு ஏதுவும்இல்லை. சிவத்தின் விருப்பதிற்கு இணங்க சக்தி செயல்படும், சிவன் முச்சுடர்களையும் ஒரு சுடராக்கி ஒளிரச் செய்கிறான்,
உடலுறவால் வந்த தாயும், தந்தையும் உற்பத்திக்கு காரணம் என்கிற மயக்கத்தை விட வேண்டும், உண்மையான தாயும் தந்தையும் அந்த சிவசக்தியே ஆகும்,
திருமூலர் மேலும் கூறுகிறார், " பெற்ற தாயும் தளந்தையும் தங்கள் காதலுறவில் விளைந்த இவ்வுடல் மீது அன்பு வைத்தனர், உயிரைக் கண்டன்று, ஆனால், சிவனும் சத்தியும், உயிருக்குயிராயினர், நாங்கள் ஒன்றுபட இருந்ததில் அவர்களை நான் உணரமுடிந்தது, என்னை ஒருபோதும் பிரியாத அம்மையையும் அத்தனையும் வணங்கி அவர்களது அருளை பெற்றேன் " என்கிறார்,.
திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஓம்
மேலும் பல ஆன்மீக தேடலுக்கு .....
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
எந்தையும் தாயும் - எந்தையாகிய சிவன்
எந்தையாகிய சிவனிடமிருந்தே தோன்றின சைவமார்க்கங்கள், இந்த மண்ணுலகம் அவனால் தோற்றுவிக்கப்பட்டது. அவன் பேரறிவாளன் அவனுடைய பெருமைகளை யாரும் அளவிட்டு உரைக்க முடியாது. அவன் ஆதிபரம் பொருள் அது என்றும் இது என்றும் ஐயப்பட வேண்டாம், ஆராய்ச்சி வேண்டாம், அவன் தனது அடியார்களின் அன்புக்கு ஆட்பட்டு வெளிப்படுகிறவன். எங்கும் நறைந்த இறைவன,ஒவ்வொர் உயிரின் உள்ளத்திலும் தங்கியிருப்பவன், ஆனாலும் தன் இருப்பை அவன் மறைவாகவே வைக்கிறான், அதனால் உலகோர் அவன் செயல்படும் வகையை அறிந்திருக்கவில்லை.
சிவத்தை காட்டிலும் எங்கும் நிறைந்த மேலான பொருள் இல்லை. ஆன்மாவில் உறையும் சிவத்தை அறிந்து சிவானுபவம் பெறுவதே தவம். இவவுண்மை அறியாது சமயத்துறையில் புகுந்து சிறக்க முயல்வது வீண்முயற்சி என்கிறது திருமந்திரம், பாடல்: சிவம் அல்லது இல்லை அறையே சிவமாம்...............
உலகின் கீழான நெறி சென்று துன்புற்று ஒழுகுவாரும் நல்ல நிலையில் இருந்து அதனை இழந்து வருந்துவோரும் சிவத்தை நினைத்து அருந்தவம் மேற்கொண்டால் இன்னல்கள் நீங்கும், சிவன் அவர்களுக்கு பெரியதகுதியைத் தந்தருள்வான். பாடல்: இருந்தழுவாரும், இயல்பு கெட்டாரும்.................
ஈடேறும் எண்ணம் உங்களுக்கு இருந்தால் ஒப்பில்லா தலைவனை உண்மை நெறியில் ஒழுகும் அடியார்கள் அன்பனை இன்பம் தருகின்ற முதல்வனை வந்தடைவீராக என்கிறார் திருமூலர்,
ஒளிவிடும் மின்னல்போல, சிவபொருமான் யோகக் காட்சியினருக்கு ஒளிவடிவில் வெளிப்படுவான், அந்தணர் இயற்றும் வேள்வித் தீயில் முகங்காட்டுவான், அவன் முழுமுதற் கடவுள், நீங்கள் எவ்வுருவில் நினைத்தாலும் அவ்வண்ணமே காட்சியளிப்பான், பாடல் : மினற்குறிாளனை வேதியர்...................
உடலெருத்த பயன் சிவனை அறிவாதாகும், ஆனால் மக்கள் இதனை உணர்ந்தாரில்லை,ஆகாயத்தை ஆறு ஆதாரங்களில் இயங்க வைத்தான் இறைவன், அவன் தன்னோடு பொருந்திருப்பதை சீவனறியவதே மேலான சமயம். பாடல் : அறியவொண்ணாதவ்வுடம்பின் பயனை...............
இந்த உலகில் நான் வீடுபேற்றை அடைவதற்கு சாதனமாய் அமைந்தது இப்பிறவி. எனக்கு பிறவியளித்து இறைவன் என்னுள் இருந்து வெளிப்பட்டான், அவனைக்கண்டு கொள்வதற்கான ஞானத்தையும் அவன் தந்தான், அடையும் முயற்சியில் என் உள்ளம் என்க்கு துணை நின்றது என்கிறார் சித்தர். பாடல்: பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை................
சீவனுடன் சிவன் பொருந்திருப்பதை பலரும் அறிந்திருக்கவில்லை. உயிர்கள் அறியாத வகையில் அனைத்துயிர்களையும் தன் கருவில் கொண்டவன் சிவன் நான் அதனை அறிந்து கொண்டேன், பாடல்: தரிக்கின்ற பல்லுயிர்க்கெல்லாம் தலைவன்...............
இறைவன் அருளால் என்னுள் அன்பு ஓங்கியது, அந்த அன்பின் வழியே அவன் அன்புருவாய் எழுந்தான், அப்போதே மேல்நோக்கி ஏறிய செவ்வொளி சிரசில் படர்ந்தது. நான் விரும்பிய திருவடி என்உள்ளத்தே நிறைந்தது என்கிறார் திருமூலர், அன்பின் திறம் அத்தகையது பேரறிவு பொருளான அவன் என்கிற சிவம் , சிற்றறிவு பொருளாகிய தான் என்கிற ஆன்மா என இரண்டு உள்ளன. தன்னையும் அவனையும் தன்னொளியில் கண்டு, தான் என்கிற உணர்வை அவன் விளங்கும் சகஷ்கரதளத்துக்கு மாற்றினால் வேறுபாடின்றி நானே அவன் என்கிற நிலை வரும், பாடல் : தான் என்று அவன் என்று இரண்டாகும் தத்துவம்........................
பாதையில் முள் இல்லை, பக்கத்தில் உண்டு, பாதைவிட்டு விலகினால் முள் குத்தும், இறைவன் நல்ல பாதையையும் நெருஞ்சயில் முள்ளையும் பக்கம் பக்கமாய் வைத்தான் நாம்தான் பார்த்து நடக்க வேண்டும், அறவழி தவறினால் துன்பத்தை அனுபவிக்க வேண்டியதிருக்கும். பாடல்: நெறியைப் படைத்தான் நெஞ்சில் படைத்தான்..........
சிவத்திடம் மனது வைத்த பண்பாளர்கள் துன்பங்களில் அஞ்சுவதில்லை. அவர்கள் வேறுபடுத்தி அறியமாட்டார்கள் பாடல்: ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்..........
சிவனது அருள்பெற்றவர் அறிவார், இவ்வுலகம் ஏன் படைக்கப்ட்டது , உடலோடு உயர் எதற்காக இணைக்கப்பட்டது தவத்தின் மேன்மை எத்தகையது என்பதெல்லாம், அவரவர் தவத்தை பொறுத்தே அவன் தெரிவதும், மறைவதும் புறக்கண்ணால் காணமுடியாது போகலாம், அகக்கண்ணால் காண்பது ஆகுந்தானே! உலகமே சிவனது அடையாளம் உலகனைத்தும் சிவனிடம் உள்ளமையால் உலகமே சிவலிங்கமாயிற்று.
சிவன் - உருவம், அருவம், அருவுருவம் என்று மூவகை திருமேனியைக் கொண்டவன், உயிர்களுக்கு குருவாய் தோன்றி அருள்பவன், அவனே சதாசிவமாய் கற்பக்தருவாய் வேண்டுவோருக்கு வேண்டுவன அருள்பவன், சோதிவடிவான இறைவனின் ஒருபாதியில் பராசக்தி விளங்குகிறாள், சிவசக்தி விளையாட்டே இவ்வுலகம் வடிவான சக்தி அறிவான சிவன், இரண்டும் இல்லாமல் உடலுக்குள் உயிர் பொருந்தி நிற்பதில்லை, இந்த மேலோனின் திருவுருவத்தை தெரிந்து அறியாமையால் இதுவரை காலங்கள் வீணில் கழிந்தன. அந்நிலையில் சிவனாகிய தலைவன் குருவாக வந்து காட்டுவித்தனன், ெம்ய்யறிவு துணையாய் கொண்டவரை மேவியிருப்பான் சிவன். பாடல் : தேர்ந்த அறியாமையின் சென்றன காலங்கள்...........
தவத்தின் பயனாய் இருப்பவனை, தவம்செய்வார்க்கு நலம் செய்பவனை கடந்து விளங்கும் தூயவனை நாடுங்கள், அவ்விதம் நாடினால் எண்ணற்ற ஆன்மாக்களில் உங்களை மேம்பட்டவராக்குவான், சிவனது திருவடியை உணர்ந்தவர், உணர வேண்டியது வேறு ஏதுவும்இல்லை. சிவத்தின் விருப்பதிற்கு இணங்க சக்தி செயல்படும், சிவன் முச்சுடர்களையும் ஒரு சுடராக்கி ஒளிரச் செய்கிறான்,
உடலுறவால் வந்த தாயும், தந்தையும் உற்பத்திக்கு காரணம் என்கிற மயக்கத்தை விட வேண்டும், உண்மையான தாயும் தந்தையும் அந்த சிவசக்தியே ஆகும்,
திருமூலர் மேலும் கூறுகிறார், " பெற்ற தாயும் தளந்தையும் தங்கள் காதலுறவில் விளைந்த இவ்வுடல் மீது அன்பு வைத்தனர், உயிரைக் கண்டன்று, ஆனால், சிவனும் சத்தியும், உயிருக்குயிராயினர், நாங்கள் ஒன்றுபட இருந்ததில் அவர்களை நான் உணரமுடிந்தது, என்னை ஒருபோதும் பிரியாத அம்மையையும் அத்தனையும் வணங்கி அவர்களது அருளை பெற்றேன் " என்கிறார்,.
திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஓம்
மேலும் பல ஆன்மீக தேடலுக்கு .....
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 20
எந்தையும் தாயும்
எம் தாய் எல்லையற்ற மகாசக்தி அவளை உபாசனா சவுகரியம் கருதி, அவள் இயற்றும் தொழிலுக்கேற்ப அல்லது அவர்கள் பிரியத்திற்கேற்ப பேதப்படுத்தி வழிபடுகிறார்கள், அவளே திருமகள் , அவளே கலைமகள், மலைமகள், எல்லாம் மும்மண்டலங்களின் தலைவி, என்பதால் அவள் ஈசனுடன் வேறுபடாதிருப்பதால் திரிபுரசுந்தரி, பிரிப்பின்றி விளங்கி ஐந்தொழில் புரிகிறாள்.
திரிபுரையே ஓம் எனற பிரணவத்தின் உள்ளொளியாகவும், மந்திரமாகவும், மூர்த்தியாகவும் அவற்றைக் கடந்தும் விளங்குகிறாள என்கிறார் திருமூலர்,
அவள் பேரழகி, வானவடிவினள், அநேக நிறத்தனள், தன்னைநினைப்பவர் நெஞ்சில் நிலைத்தருப்பவள், மகேசுவரனின் சக்தியாய் கருநிறம் காட்டுவாள், உலகத்தை காக்கும் செவ்வொளி வீசுவாள், அன்புடன் தழுவி அறிவை வழங்குவாள், திரிபுரை - முப்புரநாயகி பேரழகி என்பதால் அவள் சுந்தரி, வானவடிவினள் என்பதால் அந்தரி, நினைப்பவர் நெஞ்சில் நிலைத்திருப்பதால் அவள் மனோன்மணி.
அவளே இராசேசுவரியாய் சிவந்த பட்டுடுத்தி மார்பில் கச்சணிந்து காலில் சிலம்பணிநது மலர் அம்பும்அரும்பு வில்லும் தாங்கி அங்குச பாசத்துடன் கரிய நீல நிற குண்டலத்துடன் காட்சியளிப்பாள், தியானத்தில் வசியமானவள். அன்னை திருபுரை உயிர்கள் ஈடேறவேண்டும் என்பதற்காகவே உயிர்களுடன் கலந்து நிற்பாள், அவள்மாசற்ற அழகு வாய்ந்தவள், ஆதியானவள் ஞானச்சுடர் வீசும் கண்கள் அவளுடையவை. எத்திக்கிலும்இருப்பவற்றை தன்பக்கம் இழுக்கும் ஈர்ப்பு தன்மை கொண்டவள், அவளை சுத்தவித்ததியாதேவி என்பார் சித்தர்கள்.
அவளை யறியா அமரரு மில்லை
அவளன்றி செய்யும் அருந்தவ மில்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகுமாறறியேனே. என்கிறார் திருமூலர்
ஒளிமண்டலமான தேவியை உணராத தேவரில்லை. அவளை முன்னிட்டு கொள்ளாது தவமேதுமில்லை, படைத்தல்,காத்தல், அழித்தல் அருளல், மறைத்தல் என ஐந்தொழில்கள் செய்யும் பிரமனாதி ஐங்கடவுளாரலும் ஆவது ஒன்றுமில்லை. அவளை அறியாது திருவடிப் பேறு காணும் வழியும் இல்லை.
அவள் பரவெளியில் ( வான்கடந்து) விளங்குவது பராசக்தி, எத்தனை வடிவெடுத்தாலும், எத்தனை பெயர் படைத்தாலும், அவளோடு சிவனோடு இணைந்தே செயல்படுபவள், அந்த மகாசக்தியின் திருவுளப்பாங்கில் இயங்குகின்ற அன்ட சராசங்களும் அனைத்து உயிரினங்களும்,
அவளை அறிவ வடிவமாகவும் ஆனந்த வடிவமாகவும் ஞானியர் காண்பர். அவள் யாவற்றையும் தாங்கி நிற்கும் ஆதிபராசக்தி. ஊழிதோறும் புவன்ம் காத்து புண்ணியம் தருபவள் அவளே.
சித்தர்கள் அவளுடைய நடப்பாற்றலுக்காக பரை என்பர் வனப்பாற்றல் கண்டு பராபரை என்பர். அந்த கரணம் நான்கையும் ( மனம்,புத்தி, சித்தி, அகங்காரம்,) செயல்பட செய்வதால் ஸ்ரீவித்யை என்றும், மாறா இளமை கொண்டதால் அவள் வாலை " வாலையடி சித்தருக்குத் தெய்வம்" என்பார்கள்
உச்சிட்ட தளத்தில் விளங்கும் பராசக்தி மனோன்மணியை உள்ளத்துள் நிறுத்தும் வழியை அறிந்தவர் எத்தனைபேர்? நான் பற்றற்றவனாக இருந்தேன், எனது இயல்பு நோக்கி அன்னை எனக்கு பக்குவமளித்து சிவகதி காட்டினாள்,தன் ஒளியில் என்னை ஒன்றாக்கி கொண்டாள் என்கிறார் திருமூலர்
அவள் பிணவத்தி, ஐந்தொழிலுக்கும் தலைவி பச்சை நிறத்தவள், ஐங்கடவுளரும் ( சதாசிவர்,மகேசுவர், உருத்திரர், திருமால், நான்முகன், ) அவளுடைய அம்சம், ஹ்ரீம் என்கிற மந்திர பீஜத்தில் அவள் வீற்றிருக்கிறாள்,என்கிறது இந்த பாடல்
ஒங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்
ஆங்காரி ஆகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத்துள்ளே இனிது இருந்தாளே,
அன்னையை பூசிக்கும் வழிமுறை: வாசமலர்களும் வழிபாடு செய்ததற்கான நறுமணப் பொருட்களும் புதிய ஆடைகளும் , இசை முழக்கமும் திருவைந்தெழுத்து மந்திரமும் கொண்டு செய்யப்படும் பூசையை அவள் விரும்புவாள்,
தையல் நாயகியான தலைவியை பணிந்தால் பிறவிப்பணி அண்டாது,
என்னை இயக்குகின்ற இணையற்ற தலைவி அவள் தன்னை இயக்க ஒருவரில்லாதவள், என்னுடைய ஆணவம், கன்மம், மாயை, அகற்றி என்னை விரும்பத்தக்கவனாய் ஆக்கி வைத்தாள் என்கிறார் கீழ் கண்ட பாடல் மூலம்:
இனியதென் மூலை இருக்கும் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனன் சார்வு படுத்து
நனிபடு வித்து உள்ளம் நாடி நின்றானே.
தனக்கு முற்பட்டதாய் ஒன்றும் இல்லாமையால் அவள் தொன்மையானவள், அனைத்துக்கும் தானே காரணமாக, தன்கொ காரணம் இல்லாதிருப்பவள், ஒளிகளுக்கு மூலமான பேரோளி, இன்பத்தில் பேரின்பம், அவள் அமைதியையும் சிவசிந்தையையும் அருள்பவள், அந்த மங்கல குணமுடைய இறைவி என்னுள் பிரிப்பின்றி விளங்குகிறாள். பாடல்: ஆதி அனாதி, அகாரணி,காரணி.............
படிப்பறிவால் உண்டாகும் அகந்தை நீக்கி பற்றக்களை அகற்றிட, முதல்வியின் செவ்வொளி வீசும் கருணை முகம் நம்முன் விளங்கி நிற்கும் ஆன்மாக்களை பக்குவம் செய்யும், பராசக்தியை தரிசிப்பவர்க்கு முகப்பொலிவு உண்டாகும், நாடாளும் மன்னரும் வசமாகி நிற்பர், நாயகியின் திருவடியை பற்றினால் தெளிவு உண்டு. இன்பமும் துன்பமும் கலந்த நடைமுறை வாழ்வில் நாளும் இன்பமே விளைய நல்லருள் புரிவாள் அவள், காமம், வெகுளி மயக்கம் என்கிற மும்மலங்களை அவளால் நீங்கும் . அவளை வணங்கினால் உள்ளத்தில் மெய்பொருள் விளங்கும், மண்ணிலும் நீரிலும் காற்றிலும், ஒளியிலும் வானிலும் கண்ணின் மணியிலும் உடலிலும் அவளை காணலாம், அவள் வழியிலேயே நாம் செயல் படுகிறோம், சக்தியின் வடிவம் தாய், தாயாயிருப்பது சக்தி.
எங்கும் வியாபித்திருப்பது வானம் அவளே, தானே அனைத்து பொருளாகி தன்னுள் அனைத்தையும் அடக்கியிருப்பவள் அகில அண்டங்களையும் அவளே ஆழ்கிறாள், எனவே யாருக்கும் தாயாக ஆனாள் சக்தி
திருசிற்றம்பல்
மேலும் தகவலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
எந்தையும் தாயும்
எம் தாய் எல்லையற்ற மகாசக்தி அவளை உபாசனா சவுகரியம் கருதி, அவள் இயற்றும் தொழிலுக்கேற்ப அல்லது அவர்கள் பிரியத்திற்கேற்ப பேதப்படுத்தி வழிபடுகிறார்கள், அவளே திருமகள் , அவளே கலைமகள், மலைமகள், எல்லாம் மும்மண்டலங்களின் தலைவி, என்பதால் அவள் ஈசனுடன் வேறுபடாதிருப்பதால் திரிபுரசுந்தரி, பிரிப்பின்றி விளங்கி ஐந்தொழில் புரிகிறாள்.
திரிபுரையே ஓம் எனற பிரணவத்தின் உள்ளொளியாகவும், மந்திரமாகவும், மூர்த்தியாகவும் அவற்றைக் கடந்தும் விளங்குகிறாள என்கிறார் திருமூலர்,
அவள் பேரழகி, வானவடிவினள், அநேக நிறத்தனள், தன்னைநினைப்பவர் நெஞ்சில் நிலைத்தருப்பவள், மகேசுவரனின் சக்தியாய் கருநிறம் காட்டுவாள், உலகத்தை காக்கும் செவ்வொளி வீசுவாள், அன்புடன் தழுவி அறிவை வழங்குவாள், திரிபுரை - முப்புரநாயகி பேரழகி என்பதால் அவள் சுந்தரி, வானவடிவினள் என்பதால் அந்தரி, நினைப்பவர் நெஞ்சில் நிலைத்திருப்பதால் அவள் மனோன்மணி.
அவளே இராசேசுவரியாய் சிவந்த பட்டுடுத்தி மார்பில் கச்சணிந்து காலில் சிலம்பணிநது மலர் அம்பும்அரும்பு வில்லும் தாங்கி அங்குச பாசத்துடன் கரிய நீல நிற குண்டலத்துடன் காட்சியளிப்பாள், தியானத்தில் வசியமானவள். அன்னை திருபுரை உயிர்கள் ஈடேறவேண்டும் என்பதற்காகவே உயிர்களுடன் கலந்து நிற்பாள், அவள்மாசற்ற அழகு வாய்ந்தவள், ஆதியானவள் ஞானச்சுடர் வீசும் கண்கள் அவளுடையவை. எத்திக்கிலும்இருப்பவற்றை தன்பக்கம் இழுக்கும் ஈர்ப்பு தன்மை கொண்டவள், அவளை சுத்தவித்ததியாதேவி என்பார் சித்தர்கள்.
அவளை யறியா அமரரு மில்லை
அவளன்றி செய்யும் அருந்தவ மில்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகுமாறறியேனே. என்கிறார் திருமூலர்
ஒளிமண்டலமான தேவியை உணராத தேவரில்லை. அவளை முன்னிட்டு கொள்ளாது தவமேதுமில்லை, படைத்தல்,காத்தல், அழித்தல் அருளல், மறைத்தல் என ஐந்தொழில்கள் செய்யும் பிரமனாதி ஐங்கடவுளாரலும் ஆவது ஒன்றுமில்லை. அவளை அறியாது திருவடிப் பேறு காணும் வழியும் இல்லை.
அவள் பரவெளியில் ( வான்கடந்து) விளங்குவது பராசக்தி, எத்தனை வடிவெடுத்தாலும், எத்தனை பெயர் படைத்தாலும், அவளோடு சிவனோடு இணைந்தே செயல்படுபவள், அந்த மகாசக்தியின் திருவுளப்பாங்கில் இயங்குகின்ற அன்ட சராசங்களும் அனைத்து உயிரினங்களும்,
அவளை அறிவ வடிவமாகவும் ஆனந்த வடிவமாகவும் ஞானியர் காண்பர். அவள் யாவற்றையும் தாங்கி நிற்கும் ஆதிபராசக்தி. ஊழிதோறும் புவன்ம் காத்து புண்ணியம் தருபவள் அவளே.
சித்தர்கள் அவளுடைய நடப்பாற்றலுக்காக பரை என்பர் வனப்பாற்றல் கண்டு பராபரை என்பர். அந்த கரணம் நான்கையும் ( மனம்,புத்தி, சித்தி, அகங்காரம்,) செயல்பட செய்வதால் ஸ்ரீவித்யை என்றும், மாறா இளமை கொண்டதால் அவள் வாலை " வாலையடி சித்தருக்குத் தெய்வம்" என்பார்கள்
உச்சிட்ட தளத்தில் விளங்கும் பராசக்தி மனோன்மணியை உள்ளத்துள் நிறுத்தும் வழியை அறிந்தவர் எத்தனைபேர்? நான் பற்றற்றவனாக இருந்தேன், எனது இயல்பு நோக்கி அன்னை எனக்கு பக்குவமளித்து சிவகதி காட்டினாள்,தன் ஒளியில் என்னை ஒன்றாக்கி கொண்டாள் என்கிறார் திருமூலர்
அவள் பிணவத்தி, ஐந்தொழிலுக்கும் தலைவி பச்சை நிறத்தவள், ஐங்கடவுளரும் ( சதாசிவர்,மகேசுவர், உருத்திரர், திருமால், நான்முகன், ) அவளுடைய அம்சம், ஹ்ரீம் என்கிற மந்திர பீஜத்தில் அவள் வீற்றிருக்கிறாள்,என்கிறது இந்த பாடல்
ஒங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்
ஆங்காரி ஆகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத்துள்ளே இனிது இருந்தாளே,
அன்னையை பூசிக்கும் வழிமுறை: வாசமலர்களும் வழிபாடு செய்ததற்கான நறுமணப் பொருட்களும் புதிய ஆடைகளும் , இசை முழக்கமும் திருவைந்தெழுத்து மந்திரமும் கொண்டு செய்யப்படும் பூசையை அவள் விரும்புவாள்,
தையல் நாயகியான தலைவியை பணிந்தால் பிறவிப்பணி அண்டாது,
என்னை இயக்குகின்ற இணையற்ற தலைவி அவள் தன்னை இயக்க ஒருவரில்லாதவள், என்னுடைய ஆணவம், கன்மம், மாயை, அகற்றி என்னை விரும்பத்தக்கவனாய் ஆக்கி வைத்தாள் என்கிறார் கீழ் கண்ட பாடல் மூலம்:
இனியதென் மூலை இருக்கும் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனன் சார்வு படுத்து
நனிபடு வித்து உள்ளம் நாடி நின்றானே.
தனக்கு முற்பட்டதாய் ஒன்றும் இல்லாமையால் அவள் தொன்மையானவள், அனைத்துக்கும் தானே காரணமாக, தன்கொ காரணம் இல்லாதிருப்பவள், ஒளிகளுக்கு மூலமான பேரோளி, இன்பத்தில் பேரின்பம், அவள் அமைதியையும் சிவசிந்தையையும் அருள்பவள், அந்த மங்கல குணமுடைய இறைவி என்னுள் பிரிப்பின்றி விளங்குகிறாள். பாடல்: ஆதி அனாதி, அகாரணி,காரணி.............
படிப்பறிவால் உண்டாகும் அகந்தை நீக்கி பற்றக்களை அகற்றிட, முதல்வியின் செவ்வொளி வீசும் கருணை முகம் நம்முன் விளங்கி நிற்கும் ஆன்மாக்களை பக்குவம் செய்யும், பராசக்தியை தரிசிப்பவர்க்கு முகப்பொலிவு உண்டாகும், நாடாளும் மன்னரும் வசமாகி நிற்பர், நாயகியின் திருவடியை பற்றினால் தெளிவு உண்டு. இன்பமும் துன்பமும் கலந்த நடைமுறை வாழ்வில் நாளும் இன்பமே விளைய நல்லருள் புரிவாள் அவள், காமம், வெகுளி மயக்கம் என்கிற மும்மலங்களை அவளால் நீங்கும் . அவளை வணங்கினால் உள்ளத்தில் மெய்பொருள் விளங்கும், மண்ணிலும் நீரிலும் காற்றிலும், ஒளியிலும் வானிலும் கண்ணின் மணியிலும் உடலிலும் அவளை காணலாம், அவள் வழியிலேயே நாம் செயல் படுகிறோம், சக்தியின் வடிவம் தாய், தாயாயிருப்பது சக்தி.
எங்கும் வியாபித்திருப்பது வானம் அவளே, தானே அனைத்து பொருளாகி தன்னுள் அனைத்தையும் அடக்கியிருப்பவள் அகில அண்டங்களையும் அவளே ஆழ்கிறாள், எனவே யாருக்கும் தாயாக ஆனாள் சக்தி
திருசிற்றம்பல்
மேலும் தகவலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
http://vpoompalani05.wordpress.comதிருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 19
தகுதி நிர்ணயம்
தான் பக்குவப்பட்டுவிட்டதாய் நம்புகிறான் சீடன் " உனக்கு இன்னும் பக்கவம் வரவில்லை" என்கிறார் குரு. பக்குவம் என்பது தகுதியாதல் - ஏற்றநிலை அடைதல், தகுதியற்றவன் அபக்குவன். சமையலில் பக்குவம் போல ஆன்மீகத்திலும் அது உண்டு, பக்குவமில்லாத சமையல் உணவுக்கு ஏற்றதல்ல என்பது போல தகுதியற்றவர் ஆன்மீக நிலையை அடையமுடியாது, குருடன் ஒருவன் இன்னொரு குருடனைக் துணையாய் கொண்டால் நிலை தடுமாற குழியில் விழவேண்டும் அவன் பார்வையுள்ள ஒருவனின் பின்னே நடப்பதுதான் பாதுகாப்பு, பக்குவமில்லாத சீடன் அறிவாளி வழங்கும் உண்மையான குருவை தேடிப்போவதில்லை, அறியாமை நிரம்பிய பொய்யரையே குருவாய் கொள்வான் என்கிறது திருமந்திரம்.
பக்குமற்ற சீடனும் பக்குவமில்லாத குருவும் சேர்ந்தால் பாழான இருளில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான், மனம் துடைத்துவிட்ட கண்ணாடியாய் இருக்க வேண்டும், தூசி படிந்த கண்ணாடியில் எதையும் காணமுடியாது. எண்ண மற்றருங்கள், எண்ணங்களைப் பெருக்கி தூசிபடிந்த கண்ணாடி ஆகிவிடாதீர்கள் என்கிறது திருமந்திரம், எண்ணங்களை பெருக்கி கொண்டு போனால் தீமைகள் பெருகும், காமத்தை விரும்புகிறவன் கண்டபடி எண்ணமிடுவான். பாடல் : மனதில் எழுந்தது ஓர் மாயக்கண்ணாடி..................
பக்குவமற்றவன் யார்?
எண்ணுவது ஒன்றாய் சொல்வது பிறிதொன்றாய் , செய்வது வேறொன்றாய் இருப்பவன் அவனிடம் முக்கரணத் தூய்மை இருக்காது, (மனம், வாக்கு, காயம் இவை முக்கரணம் )
பக்குவன் யார்?
சினமயற்று எண்ணமற்று, செயலற்றிருப்பவன், அவன் உண்பதிலும், சுவையறிவதிலும், நாட்டமற்றவன், அவன் தீமை செய்வதில்லை, திருப்தியோ அதிருப்தியோ, அவனுக்கில்லை, அவனிடம் தற்பெருமை கிடையாது,
பக்குவமில்லாதவன் தான் எடுத்தற்கெல்லாம் கோபப்படுவான் எண்ணங்களை பெருக்குவான் செயலில் கருத்தூன்றிருப்பான், பெருந்தீனிப் பிரியன் அவன், நல்லது கெட்டது பாகுபடுத்தி பார்க்கமாட்டான், எதிலும் அதிருப்திக்கு முக்கியத்துவம்அளிப்பான், அவன் சுயதம்பட்ட பேர்வழியாகவும் இருப்பான்,
புறநோக்குடையவர்களே உங்கள் பார்வையை உள்நோக்கி திருப்புங்கள் என்பார் திருமூலர், அவர்கள் உலகியலில் இருந்து விடுபட்டு, உண்மையான பொருளை நாடவேண்டும் என்கிறார், அபக்குவனுக்கு அது சாத்தியமா? முத்தியில் விருப்பம் கொண்டு மும்மலக் குற்றம் ( ஆணவம், கன்மம், மாயை) நீக்கினால் அது சாத்தியமே,
ஞானம் பெறுவதில் மன அறுதியே முதன்மையாய் வேண்டப்படுகிறது, பக்குவம் உள்ளவன் தகுதி உடையவன் , அவன் வேதாகம முறை உணர்ந்து குற்றங்கள் ஏதும் இல்லாத குருவைத் தேடியடைவர், அவர் மூலம் வீடு பேறு பெற தகுதியை அவன் பெறுகிறான்.
அவன் பிறவித் துன்பம் கண்டு அஞ்சுகிறான், அவன் இறைவனின் திருவடியை இடைவிடாது தேடியலையகிறான், உலக வாழ்க்கை அவனுக்கு சலித்து விடுகிறது. இறைவா என் வினைகள் நீக்கி, கவலை போக்கி என்னை உவந்தேற்றி கொள் " என்பதே அவனுடைய வேண்டுதலாக இருக்கும், நல்ல குருவிற்கு உன்னுடைய பொருளையும் உடலையும் ஏன் உயிரையும் கூட காணிக்கையாய் தரலாம் என்கிறார் திருமூலர். பாடல்: கொள்ளினு நல்ல குருவினை கொள்க...................
குரு தன்னுடைய உபதேசத்ததின் மூலம் உங்கள்சிந்தையை தூயதாக்கிறார், ஒளிமயமான இறைவன் அங்கே எழுந்தருள்கிறான், அப்போதே சாதகனின் வினைகள் நீங்கி, இறைவனின் திருவடியில் அவனது சிந்தை தங்குகிறது. அவருடைய அருளுக்கு அவன் பாத்திரமாகி விடுகிறான்,
எது அழியும் பொருள் எது அழியாதிருப்பது என்பதை அறிந்து, சிவசக்தி உவந்தேற்கும்படியாய் தன்னை தயார்படுத்திக் கொள்பவேன நல்ல சீடன், அவனே ஞானமுடையவன், அவன் குருவை வழிபடுவதன் மூலம் இறைவனோடு இணைந்து கொள்கிறான்,, நற்பண்பு, வாய்மை, இரக்கம், நல்லறிவு, பொறுமை குருவினடி, நீக்காமை, மெய்யறிவால் இன்பம் பெறும் உணர்வு சிந்தித்து தெளிதல் , அற்புதம் என்பன பக்குவம் உடையானின் தகுதிகள் ஆகும்,
திருச்சிற்றம்பலம் - ஓம்நமசிவாயம்
மேலும் பல தகவல்கள் காண
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
தகுதி நிர்ணயம்
தான் பக்குவப்பட்டுவிட்டதாய் நம்புகிறான் சீடன் " உனக்கு இன்னும் பக்கவம் வரவில்லை" என்கிறார் குரு. பக்குவம் என்பது தகுதியாதல் - ஏற்றநிலை அடைதல், தகுதியற்றவன் அபக்குவன். சமையலில் பக்குவம் போல ஆன்மீகத்திலும் அது உண்டு, பக்குவமில்லாத சமையல் உணவுக்கு ஏற்றதல்ல என்பது போல தகுதியற்றவர் ஆன்மீக நிலையை அடையமுடியாது, குருடன் ஒருவன் இன்னொரு குருடனைக் துணையாய் கொண்டால் நிலை தடுமாற குழியில் விழவேண்டும் அவன் பார்வையுள்ள ஒருவனின் பின்னே நடப்பதுதான் பாதுகாப்பு, பக்குவமில்லாத சீடன் அறிவாளி வழங்கும் உண்மையான குருவை தேடிப்போவதில்லை, அறியாமை நிரம்பிய பொய்யரையே குருவாய் கொள்வான் என்கிறது திருமந்திரம்.
பக்குமற்ற சீடனும் பக்குவமில்லாத குருவும் சேர்ந்தால் பாழான இருளில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான், மனம் துடைத்துவிட்ட கண்ணாடியாய் இருக்க வேண்டும், தூசி படிந்த கண்ணாடியில் எதையும் காணமுடியாது. எண்ண மற்றருங்கள், எண்ணங்களைப் பெருக்கி தூசிபடிந்த கண்ணாடி ஆகிவிடாதீர்கள் என்கிறது திருமந்திரம், எண்ணங்களை பெருக்கி கொண்டு போனால் தீமைகள் பெருகும், காமத்தை விரும்புகிறவன் கண்டபடி எண்ணமிடுவான். பாடல் : மனதில் எழுந்தது ஓர் மாயக்கண்ணாடி..................
பக்குவமற்றவன் யார்?
எண்ணுவது ஒன்றாய் சொல்வது பிறிதொன்றாய் , செய்வது வேறொன்றாய் இருப்பவன் அவனிடம் முக்கரணத் தூய்மை இருக்காது, (மனம், வாக்கு, காயம் இவை முக்கரணம் )
பக்குவன் யார்?
சினமயற்று எண்ணமற்று, செயலற்றிருப்பவன், அவன் உண்பதிலும், சுவையறிவதிலும், நாட்டமற்றவன், அவன் தீமை செய்வதில்லை, திருப்தியோ அதிருப்தியோ, அவனுக்கில்லை, அவனிடம் தற்பெருமை கிடையாது,
பக்குவமில்லாதவன் தான் எடுத்தற்கெல்லாம் கோபப்படுவான் எண்ணங்களை பெருக்குவான் செயலில் கருத்தூன்றிருப்பான், பெருந்தீனிப் பிரியன் அவன், நல்லது கெட்டது பாகுபடுத்தி பார்க்கமாட்டான், எதிலும் அதிருப்திக்கு முக்கியத்துவம்அளிப்பான், அவன் சுயதம்பட்ட பேர்வழியாகவும் இருப்பான்,
புறநோக்குடையவர்களே உங்கள் பார்வையை உள்நோக்கி திருப்புங்கள் என்பார் திருமூலர், அவர்கள் உலகியலில் இருந்து விடுபட்டு, உண்மையான பொருளை நாடவேண்டும் என்கிறார், அபக்குவனுக்கு அது சாத்தியமா? முத்தியில் விருப்பம் கொண்டு மும்மலக் குற்றம் ( ஆணவம், கன்மம், மாயை) நீக்கினால் அது சாத்தியமே,
ஞானம் பெறுவதில் மன அறுதியே முதன்மையாய் வேண்டப்படுகிறது, பக்குவம் உள்ளவன் தகுதி உடையவன் , அவன் வேதாகம முறை உணர்ந்து குற்றங்கள் ஏதும் இல்லாத குருவைத் தேடியடைவர், அவர் மூலம் வீடு பேறு பெற தகுதியை அவன் பெறுகிறான்.
அவன் பிறவித் துன்பம் கண்டு அஞ்சுகிறான், அவன் இறைவனின் திருவடியை இடைவிடாது தேடியலையகிறான், உலக வாழ்க்கை அவனுக்கு சலித்து விடுகிறது. இறைவா என் வினைகள் நீக்கி, கவலை போக்கி என்னை உவந்தேற்றி கொள் " என்பதே அவனுடைய வேண்டுதலாக இருக்கும், நல்ல குருவிற்கு உன்னுடைய பொருளையும் உடலையும் ஏன் உயிரையும் கூட காணிக்கையாய் தரலாம் என்கிறார் திருமூலர். பாடல்: கொள்ளினு நல்ல குருவினை கொள்க...................
குரு தன்னுடைய உபதேசத்ததின் மூலம் உங்கள்சிந்தையை தூயதாக்கிறார், ஒளிமயமான இறைவன் அங்கே எழுந்தருள்கிறான், அப்போதே சாதகனின் வினைகள் நீங்கி, இறைவனின் திருவடியில் அவனது சிந்தை தங்குகிறது. அவருடைய அருளுக்கு அவன் பாத்திரமாகி விடுகிறான்,
எது அழியும் பொருள் எது அழியாதிருப்பது என்பதை அறிந்து, சிவசக்தி உவந்தேற்கும்படியாய் தன்னை தயார்படுத்திக் கொள்பவேன நல்ல சீடன், அவனே ஞானமுடையவன், அவன் குருவை வழிபடுவதன் மூலம் இறைவனோடு இணைந்து கொள்கிறான்,, நற்பண்பு, வாய்மை, இரக்கம், நல்லறிவு, பொறுமை குருவினடி, நீக்காமை, மெய்யறிவால் இன்பம் பெறும் உணர்வு சிந்தித்து தெளிதல் , அற்புதம் என்பன பக்குவம் உடையானின் தகுதிகள் ஆகும்,
திருச்சிற்றம்பலம் - ஓம்நமசிவாயம்
மேலும் பல தகவல்கள் காண
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
சிந்தனைக்கு சில
துன்பம் அறியாமையால் விளைகின்றது
இன்பம் அறிவினால் விளைகின்றது
அமைதியான மனிநலையே ஞானம் எனப்படுகிறது
நம்மைப் பிறர் குறை கூறுவது நமக்கு பிடிக்கவில்லை
அதைப்போலவே நாம் பிறரை குறை கூறாமலிருக்க வேண்டும்
மலருக்கு நறுமணம் அவசியம் தேவை
கனிக்களுக்கு இனிமை அவசியம் தேவை
மனிதனுக்கு ஒழுக்கம் அவசியம் தேவை
விதையின்றி செடி இல்லை
வேர் இன்றி மரம் இல்லை
பால் இன்றி நெய் இல்லை
வினையின்றி துன்பம் இல்லை
ஒரு புனிதம் நிறைந்த புண்ணிய ஆத்மாவினால்தான் மற்றவரகைள புனித்படுத்த முடியும்
கோபம் வரும்போது அமைதியாக மெதுவாகப்பேசி பழகினால் கோபம் கட்டுப்படுத்தப்படும்
எல்லோரும் சுவர்க்கத்திற்கு போக ஆசைப்படுகிறோம், ஆனால் நரகத்திற்கு போவதற்குரிய செயல்களை எல்லாம் தவறாமல் செய்து கொண்டிருக்கிறோம், / காரணம் நல்லது எது ? தீயது எது என்று தெரியாமல் வாழ்வதுதான்
திருசிற்றம்பலம் ஓம்நமசிவாயம்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
துன்பம் அறியாமையால் விளைகின்றது
இன்பம் அறிவினால் விளைகின்றது
அமைதியான மனிநலையே ஞானம் எனப்படுகிறது
நம்மைப் பிறர் குறை கூறுவது நமக்கு பிடிக்கவில்லை
அதைப்போலவே நாம் பிறரை குறை கூறாமலிருக்க வேண்டும்
மலருக்கு நறுமணம் அவசியம் தேவை
கனிக்களுக்கு இனிமை அவசியம் தேவை
மனிதனுக்கு ஒழுக்கம் அவசியம் தேவை
விதையின்றி செடி இல்லை
வேர் இன்றி மரம் இல்லை
பால் இன்றி நெய் இல்லை
வினையின்றி துன்பம் இல்லை
ஒரு புனிதம் நிறைந்த புண்ணிய ஆத்மாவினால்தான் மற்றவரகைள புனித்படுத்த முடியும்
கோபம் வரும்போது அமைதியாக மெதுவாகப்பேசி பழகினால் கோபம் கட்டுப்படுத்தப்படும்
எல்லோரும் சுவர்க்கத்திற்கு போக ஆசைப்படுகிறோம், ஆனால் நரகத்திற்கு போவதற்குரிய செயல்களை எல்லாம் தவறாமல் செய்து கொண்டிருக்கிறோம், / காரணம் நல்லது எது ? தீயது எது என்று தெரியாமல் வாழ்வதுதான்
திருசிற்றம்பலம் ஓம்நமசிவாயம்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
உண்மையான ஞானிக்கு உடமைகள் இல்லை
உண்மையான ஞானியான ஒருவர் தன் உடமைகளாக தனக்கென்று இரு வேஷ்டிகள் இரு துண்டுகள்,ஒரு பிச்சைப்பாத்திரம், தண்ணீர்வைக்க ஒரு மண்குடம் மட்டும் கொண்டு வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப மழித்தலும், நீட்டலும் இல்லாமல் உலகம் பழிக்கும் எந்த செயல்களையும செய்யாமல் ஒரு ஓலை குடிசையில் வாழ்ந்து வந்தார், அன்றாடம் சிவாலயம் சென்று தூய்மை செய்வார், மலர் பறித்து மாலை தொடுத்து மூன்று வேளையும் ஆலயம் தொழுவார், நண்பகலிலும், இரவிலும் வீடுகளில் யாசித்து உண்பார், தர்ப்பைப் புற்களின் மீது படுத்துறங்குவார், மக்களை ஏமாற்றி திரிவது இவருக்கு தெரியாத கலை,
இவரைக் காண்பதற்கு அண்டைமாநிலத்திலிருந்து மிக ஆடம்பரமாக வாழ்ந்த ஒருவர் வந்தார், அவரை தம் குடிசைக்குள்வரவேற்று அமரச்செய்தார்,தண்ணீர் கொடுத்து உபசரித்தார், நல்ல அறவுரைகளை கூறினார், இந்த குடிசைக் கண்டு வந்தவர், வியப்படைந்து, " இவ்வளவு எளிமையான குடிசையில் பொருட்கள் எதுவும் இல்லையே " என் கேட்டார், அதற்கு ஞானியார் " உங்களிடம் கூட உடமைகள் ஏதும் இல்லையே " என்றார், உடனே அண்டைமாநிலத்திலிருந்து வநதவர் " இங்கே தங்களைக் காண்பதற்காக விருந்தினராக தானே வந்துள்ளேன் , சிறிது நேரத்தில் சென்று விடுவேன் அதனால் எனக்கு பொருட்கள் இங்கே தேவைப்படவில்லை, எனவே நான் எதுவும் என்னுடன் கொண்டுவரவில்லை "என்றார், இதனைக் கேட்ட ஞானியார் " நானும் இந்த உலகில் விருந்தினராகத்தான் வந்திருக்கிறேன், இங்கேயே நிலையாக இருக்கப் போவதில்லை " என்று பதில் அளித்தார்,
இவர்களின் உரையாடலின் உட்கருத்து :
உண்மைத்துறவிகள் உடைமைகள் வைத்துக் கொள்வதில்லை, கோடி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி சொத்து சேர்ப்பவர்கள் போலிவேட தாரிகள் என்பதை நாம் கண்டு கொள்ளவேண்டும், நாம் எதைக் கொண்டு வந்தோம் எது நமது எதை நாம் இறுதியில் கொண்டு செல்லமுடியும்? மேலும் உடைமைகளைத் துறப்பவர்களே உண்மையான துறவிகள் கடமைகளை துறந்து நாட்டிற்கு பாரமாக இருப்பவர் துறவியர் அல்லர், பிறப்பெடுக்கும் அனைவருக்குமே இந்த உலகம் ஒரு சத்திரம் தான், அந்த காலத்தில் கால்நடைப்பயணம் செய்வதுதான் அதிகமாக இருந்தது, அதற்காக வேண்டி அங்கங்கே நடைப்பயணம் செல்வோர் தங்கிச் செல்வதற்கு என்று சத்திரங்கள் எனப்படும் தங்குமிடங்கள் கட்டிவைத்தனர், நடைப்பயணம் மேற்கொள்பவர்கள் அந்த சத்திரத்தில் ஒரிருநாட்கள் தங்கி இருப்பார்கள், பிறகு தங்களின் இருப்பிடத்திற்கு சென்று விடுவார்கள்,
இந்த உலகமும் ஒரு சத்திரம் தான், நாம் சில வருடங்கள் தங்கி இருப்போம், பிறகு இந்த உலகமாகிய சத்திரத்தை விட்டு போகத்தானே வேண்டும், இதைத்தான் அந்த ஞானியார் இந்த உலகத்திற்கு தான் ஒரு விருந்தினர் என்றார், நூற்றாண்டு வாழ்வோம்என்று எண்ணி வாழ்க்கையை எதிர் பார்த்து நடத்த வேண்டாம், ஆனால் மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம், என்று எண்ணி இருக்கும்போதே நற்காரியங்களை மட்டும் விரைந்து செய்துவிட வேண்டும் , இந்த உலகிற்கு நாம் விருந்தினராகவே வந்துள்ளோம் உடைமைகளைச் சேர்ப்பதே தொழிலாக வாழ்ந்து விடக் கூடாது என்பதை மனத்தில் கொண்டு வாழ்வோம், வளமும் நலமும் பெறுவோம்
திருச்சிற்றம்பலம் - தென்னாடுடைய சிவனே போற்றி - ஓம் நம சிவாய ஓம்
நன்றி : தமிழ் வேதம்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
ttp://poompalani.weebly.com
உண்மையான ஞானியான ஒருவர் தன் உடமைகளாக தனக்கென்று இரு வேஷ்டிகள் இரு துண்டுகள்,ஒரு பிச்சைப்பாத்திரம், தண்ணீர்வைக்க ஒரு மண்குடம் மட்டும் கொண்டு வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப மழித்தலும், நீட்டலும் இல்லாமல் உலகம் பழிக்கும் எந்த செயல்களையும செய்யாமல் ஒரு ஓலை குடிசையில் வாழ்ந்து வந்தார், அன்றாடம் சிவாலயம் சென்று தூய்மை செய்வார், மலர் பறித்து மாலை தொடுத்து மூன்று வேளையும் ஆலயம் தொழுவார், நண்பகலிலும், இரவிலும் வீடுகளில் யாசித்து உண்பார், தர்ப்பைப் புற்களின் மீது படுத்துறங்குவார், மக்களை ஏமாற்றி திரிவது இவருக்கு தெரியாத கலை,
இவரைக் காண்பதற்கு அண்டைமாநிலத்திலிருந்து மிக ஆடம்பரமாக வாழ்ந்த ஒருவர் வந்தார், அவரை தம் குடிசைக்குள்வரவேற்று அமரச்செய்தார்,தண்ணீர் கொடுத்து உபசரித்தார், நல்ல அறவுரைகளை கூறினார், இந்த குடிசைக் கண்டு வந்தவர், வியப்படைந்து, " இவ்வளவு எளிமையான குடிசையில் பொருட்கள் எதுவும் இல்லையே " என் கேட்டார், அதற்கு ஞானியார் " உங்களிடம் கூட உடமைகள் ஏதும் இல்லையே " என்றார், உடனே அண்டைமாநிலத்திலிருந்து வநதவர் " இங்கே தங்களைக் காண்பதற்காக விருந்தினராக தானே வந்துள்ளேன் , சிறிது நேரத்தில் சென்று விடுவேன் அதனால் எனக்கு பொருட்கள் இங்கே தேவைப்படவில்லை, எனவே நான் எதுவும் என்னுடன் கொண்டுவரவில்லை "என்றார், இதனைக் கேட்ட ஞானியார் " நானும் இந்த உலகில் விருந்தினராகத்தான் வந்திருக்கிறேன், இங்கேயே நிலையாக இருக்கப் போவதில்லை " என்று பதில் அளித்தார்,
இவர்களின் உரையாடலின் உட்கருத்து :
உண்மைத்துறவிகள் உடைமைகள் வைத்துக் கொள்வதில்லை, கோடி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி சொத்து சேர்ப்பவர்கள் போலிவேட தாரிகள் என்பதை நாம் கண்டு கொள்ளவேண்டும், நாம் எதைக் கொண்டு வந்தோம் எது நமது எதை நாம் இறுதியில் கொண்டு செல்லமுடியும்? மேலும் உடைமைகளைத் துறப்பவர்களே உண்மையான துறவிகள் கடமைகளை துறந்து நாட்டிற்கு பாரமாக இருப்பவர் துறவியர் அல்லர், பிறப்பெடுக்கும் அனைவருக்குமே இந்த உலகம் ஒரு சத்திரம் தான், அந்த காலத்தில் கால்நடைப்பயணம் செய்வதுதான் அதிகமாக இருந்தது, அதற்காக வேண்டி அங்கங்கே நடைப்பயணம் செல்வோர் தங்கிச் செல்வதற்கு என்று சத்திரங்கள் எனப்படும் தங்குமிடங்கள் கட்டிவைத்தனர், நடைப்பயணம் மேற்கொள்பவர்கள் அந்த சத்திரத்தில் ஒரிருநாட்கள் தங்கி இருப்பார்கள், பிறகு தங்களின் இருப்பிடத்திற்கு சென்று விடுவார்கள்,
இந்த உலகமும் ஒரு சத்திரம் தான், நாம் சில வருடங்கள் தங்கி இருப்போம், பிறகு இந்த உலகமாகிய சத்திரத்தை விட்டு போகத்தானே வேண்டும், இதைத்தான் அந்த ஞானியார் இந்த உலகத்திற்கு தான் ஒரு விருந்தினர் என்றார், நூற்றாண்டு வாழ்வோம்என்று எண்ணி வாழ்க்கையை எதிர் பார்த்து நடத்த வேண்டாம், ஆனால் மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம், என்று எண்ணி இருக்கும்போதே நற்காரியங்களை மட்டும் விரைந்து செய்துவிட வேண்டும் , இந்த உலகிற்கு நாம் விருந்தினராகவே வந்துள்ளோம் உடைமைகளைச் சேர்ப்பதே தொழிலாக வாழ்ந்து விடக் கூடாது என்பதை மனத்தில் கொண்டு வாழ்வோம், வளமும் நலமும் பெறுவோம்
திருச்சிற்றம்பலம் - தென்னாடுடைய சிவனே போற்றி - ஓம் நம சிவாய ஓம்
நன்றி : தமிழ் வேதம்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
ttp://poompalani.weebly.com
அகப்பேய்ச் சித்தர் பாடல்
மனமாகிய பேயை வென்ற சித்தர் ஆதலின் இவர் அகப்பேய் சித்தர்
என்றழைக்கப்படுகின்றார். அகம் + பேய் + சித்தர். இந்த அகப்பேய் சித்தர்
பெயர் காலத்தால் சிதைவுற்று ‘அகப்பைச் சித்தர்’ எனவும் கூறுவதுண்டு.
நாயனார் குலத்தைச் சேர்ந்த இவர் இளமையில் துணி வணிகம் செய்து
வாழ்க்கை நடத்தினார். வணிகத்தின் பொருட்டுத் தாம்
செல்லுமிடங்களிலெல்லாம் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கின்றார்.
மேலுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதாகச் சொல்லிக்கொள்ளும்
அவர்கள் உண்மையில் மனதிற்குள் அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களின் துன்பத்திற்குக் காரணம் என்ன என்று யோசிக்க
ஆரம்பித்தார். தன்னலம் கருதாது பிறர் நலன் குறித்துக் கவலைப்படும் அந்த
நல்லவருக்கு ஒரு போதி மரத்தடியில் (ஜோதி மரத்தடியில்) ஞானம் பிறந்தது.
ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசையை வென்றால் இன்பமயமான
நித்திய வாழ்வு வாழலாம் என்று கண்டுகொண்டார். மனமாகிய அகப்பேயை
அடக்கி வெற்றி கண்டார்க்கு சிவமாகிய இறைவன் காட்சி தருவார்.
துன்பமில்லா இன்பநிலையை அடையலாம் என்ற உண்மையைத் தம்
பாடல்களில் பாடி வைத்தார்.
இவர் பாடல்கள் அத்தனையும் தத்துவ முத்துக்கள். பாடல்களையெல்லாம்
படிக்குந்தோறும் அலை பாய்ந்து கொண்டிருக்கும் மனது அடக்கம் காணுகிறது.
ஆசைக்கு இல்லை, இல்லை ஆசையை அடக்குவதற்கு ஒரிரண்டு
பாடல்களை இங்கு ஆய்வு செய்தோமானால் அவர் இறைவனைக்
காணுவதற்குச் சொன்ன தத்துவங்களை முழுவதுமாக உணர்ந்து கொள்ளலாம்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமல்லவா?
இறைவனின் தாளை அடைவதற்கு அவர் கூறும் வழியைக் கேளுங்கள்.
“நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே - அகப்பேய்
நீயொன்றுஞ் சொல்லாதே”
அவனுக்கு இறைவனின் தாளை அடைய வேண்டும் என்பது ஆசை.
அதற்காக என்ன செய்ய வேண்டும்? திருக்குறளைப் படித்துப் பார்
என்கின்றனர் அறிஞர்கள்.
நான் கேட்டது இறைவனை அடைய வழி. நீங்கள் சொல்வதோ இவ்வுலக
வாழ்க்கை வாழ்வதற்கான நெறி. வாழ்பவருக்குச் சொல்லவேண்டிய வழியை
வாழ்ந்து முடித்து விட்டவனிடம் சொல்கிறீரே.
ஐயப்பாடு நியாயம்தான். நீர் வாழ்ந்து முடித்து விட்டீரா? சரி அப்படியே
இருக்கட்டும். நீர் வாழ்ந்து முடித்தவரென்றால் குறளின் நெறிகளிலேயே நீர்
தேடிய வினாவுக்கு விடை கிடைத்திருக்குமே.
புரியவில்லை,,,,,,
இறைவனின் தாளை அடையும் மார்க்கங்களை வள்ளுவரே கடவுள்
வாழ்த்தில் தெரிவித்திருக்கின்றாரே.
கடவுள் வாழ்த்தில் இறைவனை அடையும் மார்க்கமா? திருக்குறள்
அடிகளை அசை போட்டுப் பார்க்கின்றான்.
“கற்றதனா லாய பயனென் கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்”
தூய அறிவு வடிவான கடவுளின் திருவடிகளைத் தொழாதவன் கற்ற
கல்வியினால் ஏதும் பயனில்லை என்கிறார்.
இறைவனின் திருவடிகளைத் தானே தொழச் சொல்கிறது. அதனை
அடையும் மார்க்கம் எதனையும் கூறவில்லையே. அடுத்த குறளுக்குச்
செல்கின்றான்.
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
சரி, ஏற்றுக்கொள்வோம். அந்த மாணடி சேர வழி என்ன?
விருப்பும் வெறுப்பும் இல்லாத ஆண்டவன் திருவடிகளைச்
சேர்ந்தவர்க்குத் துன்பம் என்பது இல்லை.
சரி, தனக்கு ஒப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பற்றியவர் தவிர
மற்றையோரால் பாவக் கடலைக்கடக்க இயலாது.
சரி, எண்குணத்தானின் திருவடிகளை வணங்காதவர்களின் தலை
செயலிழந்த ஐம்பொறிகளைப் போலப் பயனற்றதாகும்.
சரி, இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களால் மட்டுமே
பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க முடியும். மற்றவர்களால் பிறவிக்கடலைக்
கடக்க முடியாது.
எல்லாக் கருத்துக்களும் சரி. அந்த இறைவனின் திருவடியை அடையும்
மார்க்கம்தான் என்ன?
இறைவனின் திருவடிகளின் பெருமைகளை இவ்வளவு நுண்மையாக
உணர்த்திய திருவள்ளுவர் அத்திருவடிகளை அடையும் மார்க்கத்தைச்
சொல்லாமலா இருந்திருப்பார்.
“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்”
ஐம்பொறிகளால் விளையும் ஆசைகளை ஒழித்துக் கடவுளின் உண்மை
நெறியில் நின்றவர் நிலையான பெருவாழ்வு வாழ்வார்கள். அதாவது
நித்தியமான பெருவாழ்வாகிய இறைவனின் தாளை அடைவார்கள்.
திருக்குறளின் கடவுள் வாழ்த்து ஒட்டுமொத்த அதிகார
கருத்துக்களையும் இரண்டே வரிகளில் அடக்கிவிடுகின்றார் நாயனார்.
அதாவது அகப்பேய் சித்தர்
நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய்
நாயகன்றாள் பெறவே
நெஞ்சு மலையாதே - அகப்பேய்
நீயொன்றும் சொல்லாதே”
இறைவனின் தாளை அடையும் மார்க்கத்தைக் கேட்ட அந்த
இளைஞனுக்கு மனம் தன் மனம் போனபடியெல்லாம் யோசனை கூறுகின்றது.
“வானுலக வாழ்க்கையினை நாடி இன்ப வாழ்க்கையை பெண்கள்
இன்பவாழ்க்கையை இழந்தவர்கள் கோடி” என்று மனம் பெண்ணாசையைத்
தூண்டுகிறது. பெண்ணாசையால் முக்தியை அடைய முடியுமோ? இல்லை
என்று மறுக்கிறது இன்னொரு மனம்.
மதுவை மாந்திக் களிப்பதால் இறைவனின் திருவடிகள் காட்சி தருமோ?
அந்த காட்சிதான் இறைமையோ?
வெளி மனத்தின் விளைவுக்கு உன் மனம் இல்லை என்ற பதிலைத்
தருகிறது.
மது, மாது, சூது இவைகள் இறைவனின் தாளை உணர்த்தாவிடில் வேறு
எதுதான் இறைவனின் தாளை அடையும் மார்க்கம். சிந்தித்த உள் மனத்தை
வெளி மனம் அடக்குகிறது. மனமே, நான் சொல்வதைக் கேள். மதுவும்,
மாதுவும், சூதுவும்தான் இறைவனை அடையும் மார்க்கங்கள்.
மனமே (வெளி மனமே) நீ அலையாதே. இவையெல்லாம் நீ
அனுபவிக்கத் துடிக்கும் ஆசைகள். இந்த ஆசைகளெல்லாம் உண்மையான
இன்பத்தை; இறைமையை உனக்கு உணர்த்த மாட்டா. ஆகவே என்னைக்
குழப்பாமல் உண்மையாகவே இறைவனின் தாளைஅடையும் மார்க்கத்தைச்
சொல் என்று மற்றுமொரு வழியை கேட்க,
அப்படியானால் நஞ்சுண்டு இறந்து விடு, நீ நேரே இறைவனைக்
காணலாம்.
என்ன உளறுகிறாய்? இறைவன் அன்பு வடிவானவர். உயிரைப் பலி
கொடுத்துதான் அவரை அடைய முடியுமென்பது வீண் பிதற்றல். மரணம்
என்பது இறைவன் வகுத்தது. அது தானாகத்தான் வரவேண்டுமே ஒழிய
நாமாகத் தேடிச் செல்லக்கூடாது.
“சரி வேண்டாம்; இப்படி செய்யலாமா? என்று இன்னுமொரு மார்க்கத்தை
உபதேசிக்க வருகிறது வெளிமனம்.
என்னவென்று கேட்டு உபயோகமற்ற வெளிமனதின் ஆலோசனைகளைக்
கேட்க உள்மனம் தயாராக இல்லை. “அகப்பேயே, இனி நீயொன்றும்
சொல்லாதே. உண்மை ஞானமார்க்கத்தை நானே உணர்ந்து கொள்கிறேன்”
என்று மனப்போராட்டத்திற்கு முடிவு கட்டுகிறான் அதே இளைஞன்.
இறைவனின் தாளை அடையும் மார்க்கத்தை அவனுக்கு உள் மனம்
உணர்த்தியதா?
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன்அடி சேரா தார்”
இக்குறளுக்கு விளக்கமாக 56வது கண்ணியில்,
“பிறவிதீர வென்றால் - அகப்பேய்
பேதகம் பண்ணாதே
துறவியானவர்கள் - அகப்பேய்
சும்மாவிருப்பார்கள்”
என்று பிறவி தீரும் மார்க்கத்தை உபதேசிக்கிறார் அகப்பேய் சித்தர்.
இறைவனை அடையச் சும்மா இருந்துவிட்டால் போதுமா? வேறு
ஏதேனும் செய்ய வேண்டுமா என்ற உள்மனக் கேள்விக்கு அகப்பேயே,
“தன்னை யறிய வேணும்
சாராமற் சாரவேணும்
என்று விடையளிக்கிறார்.
தன்னையறிவதென்றால் என்ன? நான் என்ற அகந்தையை நீக்க
வேண்டும். நான் என்பது உடலா? உள்ளமா? உடல் என்றால் ஆசைகளை
நீக்க வேண்டும். உயிர் என்றால் அவ்வுடலின் அநித்திய தன்மையை
உணர்ந்து
அடங்க வேண்டும். பஞ்சபூதக் கூறுகளை இந்த உடல் ஒவ்வொன்றுமே
அழியக்கூடியது என்று உணர வேண்டும். அழியக்கூடிய இந்த உடம்பின்
சுகத்திற்காக இன்னொரு உயிரை / உடம்பை வருத்த வேண்டுமா? அப்படி
அந்த உயிர் படும் அவஸ்தைகள் நிரந்தரமல்லவே. அதனால் பாவம், பழிகள்
நிரந்தரமாக அல்லவா நம்மை வந்தடையும். ஆகையால் உன்னை நீ அறிந்து
கொள் என்கிறார் அகப்பேய்.
சரி என்னை நான் உணர்ந்துகொண்டால் மட்டும் பழி பாவங்கள்
செய்யாமலிருந்திடுவேனோ என்று அசட்டுத்தனமாக கேட்கும் மனத்திடம்
அகப்பேயே,
“உன்னை அறிந்தக்கால்
ஒன்றையும் சேராயே”
என்று விடையளித்துத் தன்னையறியும் மார்க்கத்தையும் அகப்பேய்
அறிவிக்கின்றார்.
“உன்னை அறியும் வகைஉள்ளது சொல்வேனே”
என்று கூறி,
சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று யோக மார்க்கங்களை
அறிவிக்கின்றார்.
சரியை என்பது கடவுளைக் கோவிலில் வைத்து வழிபடுதலான நெறி.
கிரியை என்பது கடவுளை ஆகம விதிப்படி வழிபடுதலான நெறி.
யோகம் என்பது சித்தர் வழிபாட்டு நெறி.
இந்த மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினால்
தன்னையறிந்து இறைவனை அறிந்து கொள்ள
முடியுமோ என்ற வினாவுக்குச் சிரிப்பை விடையாகத் தருகின்றார் இந்த
ஞானசித்தர்.
“சரியை ஆகாதே அகப்பேய்
சா லோகங் கண்டாயே
கிரியை செய்தாலும் அகப்பேய்
கிட்டுவது ஒன்றுமில்லை
யோகம் ஆகாதே அகப்பேய்
உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி அகப்பேய்
தேடாது சொன்னேனே”
சரியையாகிய உருவ வழிபாட்டினாலும், கிரியையாகிய ஆசனம் முதலான
உடற்பயிற்சி வழிபாட்டினாலும் போகமாகிய தியான மன வழிபாட்டினாலும்
கூட இறையை இச்சை அற்றவிடத்து இனிதே காணலாம் என்று இறைவனைக்
காணும் வழியைப் போதிக்கிறார். ஞானத்தினால் மட்டுமே இறைவனைக் காண
முடியும் போலும்.
நமக்குப் பிறவி என்பது இறைவன் அளித்தது. புள்ளாய், பூண்டாய்,
புழுவாய், விலங்காய் என்று பிறந்து மாண்டு, பிறந்து மாண்டு பிறவி என்பதே
ஒரு தொடர்கதையாய் இருக்கும் நிலையில் துறவறம் பூண்டு பிச்சை எடுத்து
வாழ்வதால் பிறவி எடுப்பது நின்று விடாது. இச்சையற்றவனிடம் இறை
தரிசனம் காணலாம். அந்த இறை தரிசனமே பிறவிப்பிணியை ஒழிக்க வல்லது
என்று பிறவியை நீக்கும் வழியையும் இறை தரிசன வழியையும் கூறுகின்றார்
அகப்பேய்.
இங்கு இன்னுமொரு வினா எழுகின்றது. பெரிய யோகிமான்களெல்லாம்
‘வாசியோகம்’ பற்றி பிரமாதமாக சொல்கிறார்களே, அப்படி வாசியோகம்
செய்பவர்க்கு
இறைவன் எளிதில் புலப்பட்டு விடுவானோ? என்ற நம் கேள்விக்கு,
“வாசியிலேறிய படி
வான் பொருள் தேடாயோ? அகப்பேய்
வாசியி லேறினாலும்
வாராது சொன்னேனே”
என்று சரியாக விடையளிக்கின்றார்.
அதுமட்டுமல்ல, அறிவு வடிவான கடவுளைக் கண்டவர்கள் மோட்சமும்
வேண்டார்கள். முக்தியும் வேண்டார்கள். தீட்சையும் வேண்டார்கள் என
சிவமே சின்மயமானவர்கள் என்று சிவயோக நிலை குறித்தும் பாடுகின்றார்.
மோட்சம் வேண்டார்கள் அகப்பேய்
முத்தியும் வேண்டார்கள்
தீட்சை வேண்டார்கள் அகப்பேய்
சின்மய மானவர்கள்
பிறவித் துன்பம் தீருவதற்கு வழி தீமைகள் செய்யாமை, செருக்கின்மை
இப்படி உண்மையான அன்பு நெறியே சைவம். அந்த உண்மை சிவத்தை
சாத்திரங்களின் மூலம் காண முடியாது. நமக்குள்ளே கலந்திருக்கும் அந்தச்
சிவத்தை அன்பு நெறியினால் மட்டுமே காண முடியும்.
இதை நான் சும்மா ஒப்புக்காகச் சொல்லவில்லை. உன்மேல்
ஆணையிட்டு உறுதியாகச் சொல்லுகிறேன். நீருடன் உப்பு கலந்திருப்பது
போல உன்னுடனேயே இறைவனாகிய சிவபெருமான் இருக்கின்றார். இதை
ஆராய்ந்து உணர்ந்து ஆனந்தமாக வாழ்வாயாக என்று அகப்பேய் சித்தர்
தம் பாடலில் ஆனந்த வாழ்வதனை உணர்த்துகின்றார்.
ஒப்பனை அல்லவடி - அகப்பேய்
உன் ஆணை சொன்னேனே
அப்புடனுப் பெனவே - அகப்பேய்
ஆராய்ந் திருப்பாயே
மனப்பேயை அடக்கி வென்ற அகப்பேய் சித்தர் திருவையாற்றில்
சித்தியடைந்தார் என்று போகர் குறிப்பிடுகின்றார்.
நஞ்சுண்ண வேண்டாவே அகப்பேய்
நாயகன் தாள்பெறவே
நெஞ்சு மலையாதே அகப்பேய்
நீயொன்றும் சொல்லாதே. 1
பராபர மானதடி அகப்பேய்
பரவையாய் வந்ததடி
தராதல மேழ்புவியும் அகப்பேய்
தானே படைத்ததடி. 2
நாத வேதமடி அகப்பேய்
நன்னடங் கண்டாயோ
பாதஞ் சத்தியடி அகப்பேய்
பரவிந்து நாதமடி 3
விந்து நாதமடி அகப்பேய்
மெய்யாக வந்ததடி
ஐந்து பெரும்பூதம் அகப்பேய்
அதனிட மானதடி 4
நாலு பாதமடி அகப்பேய்
நன்னெறி கண்டாயே
மூல மானதல்லால் அகப்பேய்
முத்தி யல்லவடி. 5
வாக்காதி யைந்தடியோ அகப்பேய்
வந்த வகைகேளாய்
மனமாகிய பேயை வென்ற சித்தர் ஆதலின் இவர் அகப்பேய் சித்தர்
என்றழைக்கப்படுகின்றார். அகம் + பேய் + சித்தர். இந்த அகப்பேய் சித்தர்
பெயர் காலத்தால் சிதைவுற்று ‘அகப்பைச் சித்தர்’ எனவும் கூறுவதுண்டு.
நாயனார் குலத்தைச் சேர்ந்த இவர் இளமையில் துணி வணிகம் செய்து
வாழ்க்கை நடத்தினார். வணிகத்தின் பொருட்டுத் தாம்
செல்லுமிடங்களிலெல்லாம் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கின்றார்.
மேலுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதாகச் சொல்லிக்கொள்ளும்
அவர்கள் உண்மையில் மனதிற்குள் அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களின் துன்பத்திற்குக் காரணம் என்ன என்று யோசிக்க
ஆரம்பித்தார். தன்னலம் கருதாது பிறர் நலன் குறித்துக் கவலைப்படும் அந்த
நல்லவருக்கு ஒரு போதி மரத்தடியில் (ஜோதி மரத்தடியில்) ஞானம் பிறந்தது.
ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசையை வென்றால் இன்பமயமான
நித்திய வாழ்வு வாழலாம் என்று கண்டுகொண்டார். மனமாகிய அகப்பேயை
அடக்கி வெற்றி கண்டார்க்கு சிவமாகிய இறைவன் காட்சி தருவார்.
துன்பமில்லா இன்பநிலையை அடையலாம் என்ற உண்மையைத் தம்
பாடல்களில் பாடி வைத்தார்.
இவர் பாடல்கள் அத்தனையும் தத்துவ முத்துக்கள். பாடல்களையெல்லாம்
படிக்குந்தோறும் அலை பாய்ந்து கொண்டிருக்கும் மனது அடக்கம் காணுகிறது.
ஆசைக்கு இல்லை, இல்லை ஆசையை அடக்குவதற்கு ஒரிரண்டு
பாடல்களை இங்கு ஆய்வு செய்தோமானால் அவர் இறைவனைக்
காணுவதற்குச் சொன்ன தத்துவங்களை முழுவதுமாக உணர்ந்து கொள்ளலாம்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமல்லவா?
இறைவனின் தாளை அடைவதற்கு அவர் கூறும் வழியைக் கேளுங்கள்.
“நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே - அகப்பேய்
நீயொன்றுஞ் சொல்லாதே”
அவனுக்கு இறைவனின் தாளை அடைய வேண்டும் என்பது ஆசை.
அதற்காக என்ன செய்ய வேண்டும்? திருக்குறளைப் படித்துப் பார்
என்கின்றனர் அறிஞர்கள்.
நான் கேட்டது இறைவனை அடைய வழி. நீங்கள் சொல்வதோ இவ்வுலக
வாழ்க்கை வாழ்வதற்கான நெறி. வாழ்பவருக்குச் சொல்லவேண்டிய வழியை
வாழ்ந்து முடித்து விட்டவனிடம் சொல்கிறீரே.
ஐயப்பாடு நியாயம்தான். நீர் வாழ்ந்து முடித்து விட்டீரா? சரி அப்படியே
இருக்கட்டும். நீர் வாழ்ந்து முடித்தவரென்றால் குறளின் நெறிகளிலேயே நீர்
தேடிய வினாவுக்கு விடை கிடைத்திருக்குமே.
புரியவில்லை,,,,,,
இறைவனின் தாளை அடையும் மார்க்கங்களை வள்ளுவரே கடவுள்
வாழ்த்தில் தெரிவித்திருக்கின்றாரே.
கடவுள் வாழ்த்தில் இறைவனை அடையும் மார்க்கமா? திருக்குறள்
அடிகளை அசை போட்டுப் பார்க்கின்றான்.
“கற்றதனா லாய பயனென் கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்”
தூய அறிவு வடிவான கடவுளின் திருவடிகளைத் தொழாதவன் கற்ற
கல்வியினால் ஏதும் பயனில்லை என்கிறார்.
இறைவனின் திருவடிகளைத் தானே தொழச் சொல்கிறது. அதனை
அடையும் மார்க்கம் எதனையும் கூறவில்லையே. அடுத்த குறளுக்குச்
செல்கின்றான்.
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
சரி, ஏற்றுக்கொள்வோம். அந்த மாணடி சேர வழி என்ன?
விருப்பும் வெறுப்பும் இல்லாத ஆண்டவன் திருவடிகளைச்
சேர்ந்தவர்க்குத் துன்பம் என்பது இல்லை.
சரி, தனக்கு ஒப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பற்றியவர் தவிர
மற்றையோரால் பாவக் கடலைக்கடக்க இயலாது.
சரி, எண்குணத்தானின் திருவடிகளை வணங்காதவர்களின் தலை
செயலிழந்த ஐம்பொறிகளைப் போலப் பயனற்றதாகும்.
சரி, இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களால் மட்டுமே
பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க முடியும். மற்றவர்களால் பிறவிக்கடலைக்
கடக்க முடியாது.
எல்லாக் கருத்துக்களும் சரி. அந்த இறைவனின் திருவடியை அடையும்
மார்க்கம்தான் என்ன?
இறைவனின் திருவடிகளின் பெருமைகளை இவ்வளவு நுண்மையாக
உணர்த்திய திருவள்ளுவர் அத்திருவடிகளை அடையும் மார்க்கத்தைச்
சொல்லாமலா இருந்திருப்பார்.
“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்”
ஐம்பொறிகளால் விளையும் ஆசைகளை ஒழித்துக் கடவுளின் உண்மை
நெறியில் நின்றவர் நிலையான பெருவாழ்வு வாழ்வார்கள். அதாவது
நித்தியமான பெருவாழ்வாகிய இறைவனின் தாளை அடைவார்கள்.
திருக்குறளின் கடவுள் வாழ்த்து ஒட்டுமொத்த அதிகார
கருத்துக்களையும் இரண்டே வரிகளில் அடக்கிவிடுகின்றார் நாயனார்.
அதாவது அகப்பேய் சித்தர்
நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய்
நாயகன்றாள் பெறவே
நெஞ்சு மலையாதே - அகப்பேய்
நீயொன்றும் சொல்லாதே”
இறைவனின் தாளை அடையும் மார்க்கத்தைக் கேட்ட அந்த
இளைஞனுக்கு மனம் தன் மனம் போனபடியெல்லாம் யோசனை கூறுகின்றது.
“வானுலக வாழ்க்கையினை நாடி இன்ப வாழ்க்கையை பெண்கள்
இன்பவாழ்க்கையை இழந்தவர்கள் கோடி” என்று மனம் பெண்ணாசையைத்
தூண்டுகிறது. பெண்ணாசையால் முக்தியை அடைய முடியுமோ? இல்லை
என்று மறுக்கிறது இன்னொரு மனம்.
மதுவை மாந்திக் களிப்பதால் இறைவனின் திருவடிகள் காட்சி தருமோ?
அந்த காட்சிதான் இறைமையோ?
வெளி மனத்தின் விளைவுக்கு உன் மனம் இல்லை என்ற பதிலைத்
தருகிறது.
மது, மாது, சூது இவைகள் இறைவனின் தாளை உணர்த்தாவிடில் வேறு
எதுதான் இறைவனின் தாளை அடையும் மார்க்கம். சிந்தித்த உள் மனத்தை
வெளி மனம் அடக்குகிறது. மனமே, நான் சொல்வதைக் கேள். மதுவும்,
மாதுவும், சூதுவும்தான் இறைவனை அடையும் மார்க்கங்கள்.
மனமே (வெளி மனமே) நீ அலையாதே. இவையெல்லாம் நீ
அனுபவிக்கத் துடிக்கும் ஆசைகள். இந்த ஆசைகளெல்லாம் உண்மையான
இன்பத்தை; இறைமையை உனக்கு உணர்த்த மாட்டா. ஆகவே என்னைக்
குழப்பாமல் உண்மையாகவே இறைவனின் தாளைஅடையும் மார்க்கத்தைச்
சொல் என்று மற்றுமொரு வழியை கேட்க,
அப்படியானால் நஞ்சுண்டு இறந்து விடு, நீ நேரே இறைவனைக்
காணலாம்.
என்ன உளறுகிறாய்? இறைவன் அன்பு வடிவானவர். உயிரைப் பலி
கொடுத்துதான் அவரை அடைய முடியுமென்பது வீண் பிதற்றல். மரணம்
என்பது இறைவன் வகுத்தது. அது தானாகத்தான் வரவேண்டுமே ஒழிய
நாமாகத் தேடிச் செல்லக்கூடாது.
“சரி வேண்டாம்; இப்படி செய்யலாமா? என்று இன்னுமொரு மார்க்கத்தை
உபதேசிக்க வருகிறது வெளிமனம்.
என்னவென்று கேட்டு உபயோகமற்ற வெளிமனதின் ஆலோசனைகளைக்
கேட்க உள்மனம் தயாராக இல்லை. “அகப்பேயே, இனி நீயொன்றும்
சொல்லாதே. உண்மை ஞானமார்க்கத்தை நானே உணர்ந்து கொள்கிறேன்”
என்று மனப்போராட்டத்திற்கு முடிவு கட்டுகிறான் அதே இளைஞன்.
இறைவனின் தாளை அடையும் மார்க்கத்தை அவனுக்கு உள் மனம்
உணர்த்தியதா?
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன்அடி சேரா தார்”
இக்குறளுக்கு விளக்கமாக 56வது கண்ணியில்,
“பிறவிதீர வென்றால் - அகப்பேய்
பேதகம் பண்ணாதே
துறவியானவர்கள் - அகப்பேய்
சும்மாவிருப்பார்கள்”
என்று பிறவி தீரும் மார்க்கத்தை உபதேசிக்கிறார் அகப்பேய் சித்தர்.
இறைவனை அடையச் சும்மா இருந்துவிட்டால் போதுமா? வேறு
ஏதேனும் செய்ய வேண்டுமா என்ற உள்மனக் கேள்விக்கு அகப்பேயே,
“தன்னை யறிய வேணும்
சாராமற் சாரவேணும்
என்று விடையளிக்கிறார்.
தன்னையறிவதென்றால் என்ன? நான் என்ற அகந்தையை நீக்க
வேண்டும். நான் என்பது உடலா? உள்ளமா? உடல் என்றால் ஆசைகளை
நீக்க வேண்டும். உயிர் என்றால் அவ்வுடலின் அநித்திய தன்மையை
உணர்ந்து
அடங்க வேண்டும். பஞ்சபூதக் கூறுகளை இந்த உடல் ஒவ்வொன்றுமே
அழியக்கூடியது என்று உணர வேண்டும். அழியக்கூடிய இந்த உடம்பின்
சுகத்திற்காக இன்னொரு உயிரை / உடம்பை வருத்த வேண்டுமா? அப்படி
அந்த உயிர் படும் அவஸ்தைகள் நிரந்தரமல்லவே. அதனால் பாவம், பழிகள்
நிரந்தரமாக அல்லவா நம்மை வந்தடையும். ஆகையால் உன்னை நீ அறிந்து
கொள் என்கிறார் அகப்பேய்.
சரி என்னை நான் உணர்ந்துகொண்டால் மட்டும் பழி பாவங்கள்
செய்யாமலிருந்திடுவேனோ என்று அசட்டுத்தனமாக கேட்கும் மனத்திடம்
அகப்பேயே,
“உன்னை அறிந்தக்கால்
ஒன்றையும் சேராயே”
என்று விடையளித்துத் தன்னையறியும் மார்க்கத்தையும் அகப்பேய்
அறிவிக்கின்றார்.
“உன்னை அறியும் வகைஉள்ளது சொல்வேனே”
என்று கூறி,
சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று யோக மார்க்கங்களை
அறிவிக்கின்றார்.
சரியை என்பது கடவுளைக் கோவிலில் வைத்து வழிபடுதலான நெறி.
கிரியை என்பது கடவுளை ஆகம விதிப்படி வழிபடுதலான நெறி.
யோகம் என்பது சித்தர் வழிபாட்டு நெறி.
இந்த மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினால்
தன்னையறிந்து இறைவனை அறிந்து கொள்ள
முடியுமோ என்ற வினாவுக்குச் சிரிப்பை விடையாகத் தருகின்றார் இந்த
ஞானசித்தர்.
“சரியை ஆகாதே அகப்பேய்
சா லோகங் கண்டாயே
கிரியை செய்தாலும் அகப்பேய்
கிட்டுவது ஒன்றுமில்லை
யோகம் ஆகாதே அகப்பேய்
உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி அகப்பேய்
தேடாது சொன்னேனே”
சரியையாகிய உருவ வழிபாட்டினாலும், கிரியையாகிய ஆசனம் முதலான
உடற்பயிற்சி வழிபாட்டினாலும் போகமாகிய தியான மன வழிபாட்டினாலும்
கூட இறையை இச்சை அற்றவிடத்து இனிதே காணலாம் என்று இறைவனைக்
காணும் வழியைப் போதிக்கிறார். ஞானத்தினால் மட்டுமே இறைவனைக் காண
முடியும் போலும்.
நமக்குப் பிறவி என்பது இறைவன் அளித்தது. புள்ளாய், பூண்டாய்,
புழுவாய், விலங்காய் என்று பிறந்து மாண்டு, பிறந்து மாண்டு பிறவி என்பதே
ஒரு தொடர்கதையாய் இருக்கும் நிலையில் துறவறம் பூண்டு பிச்சை எடுத்து
வாழ்வதால் பிறவி எடுப்பது நின்று விடாது. இச்சையற்றவனிடம் இறை
தரிசனம் காணலாம். அந்த இறை தரிசனமே பிறவிப்பிணியை ஒழிக்க வல்லது
என்று பிறவியை நீக்கும் வழியையும் இறை தரிசன வழியையும் கூறுகின்றார்
அகப்பேய்.
இங்கு இன்னுமொரு வினா எழுகின்றது. பெரிய யோகிமான்களெல்லாம்
‘வாசியோகம்’ பற்றி பிரமாதமாக சொல்கிறார்களே, அப்படி வாசியோகம்
செய்பவர்க்கு
இறைவன் எளிதில் புலப்பட்டு விடுவானோ? என்ற நம் கேள்விக்கு,
“வாசியிலேறிய படி
வான் பொருள் தேடாயோ? அகப்பேய்
வாசியி லேறினாலும்
வாராது சொன்னேனே”
என்று சரியாக விடையளிக்கின்றார்.
அதுமட்டுமல்ல, அறிவு வடிவான கடவுளைக் கண்டவர்கள் மோட்சமும்
வேண்டார்கள். முக்தியும் வேண்டார்கள். தீட்சையும் வேண்டார்கள் என
சிவமே சின்மயமானவர்கள் என்று சிவயோக நிலை குறித்தும் பாடுகின்றார்.
மோட்சம் வேண்டார்கள் அகப்பேய்
முத்தியும் வேண்டார்கள்
தீட்சை வேண்டார்கள் அகப்பேய்
சின்மய மானவர்கள்
பிறவித் துன்பம் தீருவதற்கு வழி தீமைகள் செய்யாமை, செருக்கின்மை
இப்படி உண்மையான அன்பு நெறியே சைவம். அந்த உண்மை சிவத்தை
சாத்திரங்களின் மூலம் காண முடியாது. நமக்குள்ளே கலந்திருக்கும் அந்தச்
சிவத்தை அன்பு நெறியினால் மட்டுமே காண முடியும்.
இதை நான் சும்மா ஒப்புக்காகச் சொல்லவில்லை. உன்மேல்
ஆணையிட்டு உறுதியாகச் சொல்லுகிறேன். நீருடன் உப்பு கலந்திருப்பது
போல உன்னுடனேயே இறைவனாகிய சிவபெருமான் இருக்கின்றார். இதை
ஆராய்ந்து உணர்ந்து ஆனந்தமாக வாழ்வாயாக என்று அகப்பேய் சித்தர்
தம் பாடலில் ஆனந்த வாழ்வதனை உணர்த்துகின்றார்.
ஒப்பனை அல்லவடி - அகப்பேய்
உன் ஆணை சொன்னேனே
அப்புடனுப் பெனவே - அகப்பேய்
ஆராய்ந் திருப்பாயே
மனப்பேயை அடக்கி வென்ற அகப்பேய் சித்தர் திருவையாற்றில்
சித்தியடைந்தார் என்று போகர் குறிப்பிடுகின்றார்.
நஞ்சுண்ண வேண்டாவே அகப்பேய்
நாயகன் தாள்பெறவே
நெஞ்சு மலையாதே அகப்பேய்
நீயொன்றும் சொல்லாதே. 1
பராபர மானதடி அகப்பேய்
பரவையாய் வந்ததடி
தராதல மேழ்புவியும் அகப்பேய்
தானே படைத்ததடி. 2
நாத வேதமடி அகப்பேய்
நன்னடங் கண்டாயோ
பாதஞ் சத்தியடி அகப்பேய்
பரவிந்து நாதமடி 3
விந்து நாதமடி அகப்பேய்
மெய்யாக வந்ததடி
ஐந்து பெரும்பூதம் அகப்பேய்
அதனிட மானதடி 4
நாலு பாதமடி அகப்பேய்
நன்னெறி கண்டாயே
மூல மானதல்லால் அகப்பேய்
முத்தி யல்லவடி. 5
வாக்காதி யைந்தடியோ அகப்பேய்
வந்த வகைகேளாய்
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 18
அண்ணலின் அருளால் ஆகிறவை
சிவனது அருள் சேர்ந்தால்செல்வங்கள் வாய்க்கும், அவனது அருளிருந்தால் நல்ல ஞானம் உண்டாகும், பெருந்தன்மை உண்டாகும், சிவமாம் பெருவாழ்வு உண்டு என்கிறது திருமந்திரம், அண்ணலின் அருள்வேண்டி தலங்கள் தோறும் செலவர் சரியையாளர், ஞானிகளோ தாங்கள் இருக்கிற இடத்திலேயே வழிபாடு செய்து பெரும்பயன் அடைகின்றனர், தங்கள் சரீரத்திலேயே சிவனை அவர்கள் உணர்கின்றனர், நடைமுறை வாழ்வின் நன்மை தீமைகள் நாம் செய்த புண்ணிய பாலங்களின் பலன்கள், வினையாகிய வேரினை அறுத்து தீயவிளைவுகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வர் ஞானிகள்,
"சிவனரு ளாற்சிலர் தேவருமாவர்
சிவனருளாற் சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனருளால் வினை சேரகி லாமை
சிவனருள் கூறில் அச்சிவலோக மாமே, "
சிவனருளால் சிலருக்குத் தேவவடிவம் கிடைக்கிறது சிலருக்கு தெய்வத்தன்மை வாய்க்கிறது, சிலருக்கு வினைகள் சேராது நின்று விடுகின்றன, இது பாடலின் பொருள்
விளக்கின் சுடராய் ஞானம் விளங்குவதும், மண்ணுலகில் ஞானிகளாவதும் விண்ணுலகில் தேவ உருவில் திகழ்வதும் என் அண்ணாலாகிய சிவன் வழங்கிய அருளால் அமைந்தவை என்கிறார் திருமூலர், பாடல்: புண்ணியன் எந்தை புனிதன் இணையடி........
பிறப்புக்களில் மக்கட் பிறப்பும், தெய்வப் பிறப்பும் சிறந்தனவாகலின் அவற்றை அடைதலையே எடுத்துக் கூறினார்.
இதனால், `உயர்வு யாதும் சிவனருள் இன்றி ஆகாது` என்பது கூறும் முகத்தால் ஞானம் அவனருள் இன்றி வாராமை என்கிறார் திருமூலர் மேலும் மற்றொரு பாடலில் அன்பாகிய தேரில்
காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.
`உடம்பு` என்னும் நிலையில்லாத தேரின்மேல் ஏறி, மனமாகிய பாகன் தன் கைவன்மையைப் பொருத்தி, கண்ட இடங்களில் செல்லச் செலுத்துதலினால் வழியறியாது மயங்குகின்ற உயிர்கள் சிறிதே உணர்வு பெற்றுச் சிவன்மேற் செல்லும் அன்பாகிய தேரில் ஏறிச்சென்று அவனது அருளைப்பெற்றால், அங்ஙனம் அதனைப் பெற்றவரது குழாமாகிய தேரின்மேல் ஏறிச் சீவன் சிவனை அடைந்து அவனாய் விடும்.
காயத்தைத் தேராக உருவகிக்கின்றவர் அதன் இயல்பை உணர்த்தவேண்டி அதனை ``மாயத் தேர்`` என்றும் கூறினார். கை, ஆகுபெயர். அன்றி, `கைகூட்டல்` என்பது, கையைப் பொருத்தி ஓட்டுதலாகிய காரியத்தைக் குறித்தது என்றலுமாம். ``உணர்`` என்னும் முதனிலைத் தொழிற் பெயரில் `உணர்வால்` என உருபுவிரிக்க. `உணர்ந்த பொருளிலன்றி அன்பு நிகழாது` என்பதனை உணர்த்த, `உணர்வால் நேயத்தேர் ஏறி` என்றார். உணர்வு சிவனை உணர்தற்கு இருவினையொப்பில் நிகழும் சத்திநிபாதம் காரணமாம். ``நல்லினத்தி னூஉங்கும் துணையில்லை``l என இன்பத்தை எய்துதற்கு நல்லினம் சாதனமாகக் கூறலின், அதனையும் தேராக உருவகித்தார், ``அவன் இவன் ஆமே` என்றதனை, `இவன் அவன் ஆமே` என மாற்றியுரைக்க. இது நிமலன் அருள் பெற்றதன் பயனை விளக்குவதாய் வேறு முடிபாகலின், திணை வழுவும், பால் வழுவும் ஆகாமையறிக.
இதனால், `சிவனருளைப் பெற்றுச் சிவமாவதற்கு முதற்கண் அன்பு வேண்டும்` என்பது கூறப்பட்டது.
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
அண்ணலின் அருளால் ஆகிறவை
சிவனது அருள் சேர்ந்தால்செல்வங்கள் வாய்க்கும், அவனது அருளிருந்தால் நல்ல ஞானம் உண்டாகும், பெருந்தன்மை உண்டாகும், சிவமாம் பெருவாழ்வு உண்டு என்கிறது திருமந்திரம், அண்ணலின் அருள்வேண்டி தலங்கள் தோறும் செலவர் சரியையாளர், ஞானிகளோ தாங்கள் இருக்கிற இடத்திலேயே வழிபாடு செய்து பெரும்பயன் அடைகின்றனர், தங்கள் சரீரத்திலேயே சிவனை அவர்கள் உணர்கின்றனர், நடைமுறை வாழ்வின் நன்மை தீமைகள் நாம் செய்த புண்ணிய பாலங்களின் பலன்கள், வினையாகிய வேரினை அறுத்து தீயவிளைவுகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வர் ஞானிகள்,
"சிவனரு ளாற்சிலர் தேவருமாவர்
சிவனருளாற் சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனருளால் வினை சேரகி லாமை
சிவனருள் கூறில் அச்சிவலோக மாமே, "
சிவனருளால் சிலருக்குத் தேவவடிவம் கிடைக்கிறது சிலருக்கு தெய்வத்தன்மை வாய்க்கிறது, சிலருக்கு வினைகள் சேராது நின்று விடுகின்றன, இது பாடலின் பொருள்
விளக்கின் சுடராய் ஞானம் விளங்குவதும், மண்ணுலகில் ஞானிகளாவதும் விண்ணுலகில் தேவ உருவில் திகழ்வதும் என் அண்ணாலாகிய சிவன் வழங்கிய அருளால் அமைந்தவை என்கிறார் திருமூலர், பாடல்: புண்ணியன் எந்தை புனிதன் இணையடி........
பிறப்புக்களில் மக்கட் பிறப்பும், தெய்வப் பிறப்பும் சிறந்தனவாகலின் அவற்றை அடைதலையே எடுத்துக் கூறினார்.
இதனால், `உயர்வு யாதும் சிவனருள் இன்றி ஆகாது` என்பது கூறும் முகத்தால் ஞானம் அவனருள் இன்றி வாராமை என்கிறார் திருமூலர் மேலும் மற்றொரு பாடலில் அன்பாகிய தேரில்
காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.
`உடம்பு` என்னும் நிலையில்லாத தேரின்மேல் ஏறி, மனமாகிய பாகன் தன் கைவன்மையைப் பொருத்தி, கண்ட இடங்களில் செல்லச் செலுத்துதலினால் வழியறியாது மயங்குகின்ற உயிர்கள் சிறிதே உணர்வு பெற்றுச் சிவன்மேற் செல்லும் அன்பாகிய தேரில் ஏறிச்சென்று அவனது அருளைப்பெற்றால், அங்ஙனம் அதனைப் பெற்றவரது குழாமாகிய தேரின்மேல் ஏறிச் சீவன் சிவனை அடைந்து அவனாய் விடும்.
காயத்தைத் தேராக உருவகிக்கின்றவர் அதன் இயல்பை உணர்த்தவேண்டி அதனை ``மாயத் தேர்`` என்றும் கூறினார். கை, ஆகுபெயர். அன்றி, `கைகூட்டல்` என்பது, கையைப் பொருத்தி ஓட்டுதலாகிய காரியத்தைக் குறித்தது என்றலுமாம். ``உணர்`` என்னும் முதனிலைத் தொழிற் பெயரில் `உணர்வால்` என உருபுவிரிக்க. `உணர்ந்த பொருளிலன்றி அன்பு நிகழாது` என்பதனை உணர்த்த, `உணர்வால் நேயத்தேர் ஏறி` என்றார். உணர்வு சிவனை உணர்தற்கு இருவினையொப்பில் நிகழும் சத்திநிபாதம் காரணமாம். ``நல்லினத்தி னூஉங்கும் துணையில்லை``l என இன்பத்தை எய்துதற்கு நல்லினம் சாதனமாகக் கூறலின், அதனையும் தேராக உருவகித்தார், ``அவன் இவன் ஆமே` என்றதனை, `இவன் அவன் ஆமே` என மாற்றியுரைக்க. இது நிமலன் அருள் பெற்றதன் பயனை விளக்குவதாய் வேறு முடிபாகலின், திணை வழுவும், பால் வழுவும் ஆகாமையறிக.
இதனால், `சிவனருளைப் பெற்றுச் சிவமாவதற்கு முதற்கண் அன்பு வேண்டும்` என்பது கூறப்பட்டது.
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 17
தவத்தின் பயன்
தவம் என்றால் விரதம், மனதின் நற்குணம் மூன்றில் இராசத குணத்தில் ஒன்றாகவும், சாத்துவிக் குணத்து ஒன்றாகவும் இது இடம் பெற்றது இராசதத்தில் கூறப்படும் ஞானத்தையும் ஊக்கத்தையும் உள்ளடக்கியது, சாத்துவிகத்தில் பொறுமையையும் மோனத்தையும் தன்னில் கொண்டது தவம், சாத்திரங்கள் தவத்தை புண்ணியத் தோற்றம் நான்கில் ஒன்றாகவும், குறிப்பிடுகின்றன, தவம், ஒழுக்கம் கொடை, கல்வி இவை புண்ணியத் தோற்றங்கள். தவத்தின் மிக்கார் இயல்பு இவையென திருமந்திரம் கூறும்,
"ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவது இல்லை நமனும் அங்குஇல்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும் பயன் இல்லை பற்றுவிட்டோர்க்கே "
சிவத்திடம் மனதை வைத்த உத்தமர்கள் உலகத் துன்பங்களை கண்டு அஞ்சுவதில்லை, அவர்களுக்கு எமபயம் கிடையாது, அவர்கள் வாழ்வது சிவவாழ்க்கை, அதனால் எவ்விதத் துன்பங்களும் அவர்களை அணுகுவதில்லை, சிவனின் நினைப்பால் அவர்கள் இரவென்றும், பகலென்றும் வேறுபடுத்தி அறிகின்ற நிலையில்லை, பொருளின் மீது ப்ற்றில்லை, என்பதால் அவர்களுக்கு விளைவு பற்றியும் கவலை கிடையாது, தங்கள் பிறப்பின் நோக்கத்தை அறிவதோடு பிறப்பை நீக்கும் வழியையும் வியக்கத்தக்கது, எந்த வொன்றிலும் கவனத்தை சிதறவிடாமல் ஏகாந்தத்தில் இருந்து தங்கள் மனதை அவர்கள் இறைவன்பால் வைத்திருப்பர், இந்திராதி தேவர்களே நேரில் வந்தாலும் தங்கள் மனதை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்,
தவத்தின் தன்மையை அறியவும், தவத்தால் மேன்மை அடையவும் சிவத்தின் அருளை பெற்றிருக்க வேண்டும், தவசீலர்கள் தங்கள் மன உறுதியால் இயைவனை காண்கின்றார்கள், இவர்கள் தவத்தை வாழ்க்கையாய் கொண்டவர்கள், இல்லற ஞானிகள் வாழ்க்கையை தவமாய் கொள்வார்கள்,
திருமூலர் கூறுகிறார் " நீங்கள் சாத்திரங்கள் கற்பதன் மூலம் பெருமையடையப் பார்க்காதீர்கள், ஒரு கணமேனும் புறத்தே திரிந்தலையும் உங்கள் மனத்தை தடுத்து அகத்தே நோககுங்கள், அகமுகப் பார்வை இறைவனின் அருளோடு உங்களை பொருந்தியிருக்க செய்யும் " என்கிறார்,
தவம் என்பது ஞானத்தை அடைவதற்கு முயற்சி சமாதி நிலையடையும் தவமெல்லாம் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லை, மனதை புலன் வழி போகாது தடுத்து நிறுத்தும் ஆற்றல் உடையவர் தனியொரு இடத்தில் இருந்து தவம் செய்யத் தேவையில்லை, பொறிகளை தன்வழிப்படுத்தி ஒடுங்கி இருப்பதே தவம், மனமாகிய உறையில் இருந்து மதியாகிய வாளையுருவி சினம் போன்ற மாயா சக்திகளை வென்று, சிவத்திடம் வேறுபாடின்றி பொருத்த வேண்டும், பொறிகள் ஐந்தினையும் உலக விசயங்களில் போகவிடாது தடுத்து தவத்தினால் சிவஒளி காணவேண்டும், அதுவே சுயஒளியாகும், பாடல் : மனத்திடை நின்ற மதிவான் உருவி............
சித்தத்தில் இடையறாது சிவமந்திரம் ஒதி சிமாகும் தன்மையர்க்கு வேறு எத்தவமும் செய்ய வேண்டியதில்லை, சிவனை எண்ணி சிமாதலே தவத்தின் பயன், பாடல் : சிததம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்.............
எப்போதுமே உயர்ந்ததையும் சிறந்ததையும் உலக பிரதியெடுத்துவிடும்,அசல் எது? போலி எது? என்று உஙகளால் கண்டு பிடிக்க முடியாமல் போகும் ஆன்மீகத்திலும் போலிகள் உண்டு, போலி ஆசாமிகள் போடுவது சிவவேடமும் அல்ல, தவமும் அல்ல, அவ வேடம், அவம் இழிவானது பயனற்றது, எப்போதும் நிலைத்திருப்பது உண்மை, இடம் தெரியாமல் ஒடி ஒளிவது பொய், அசலுக்குள்ள பொலிவு போலிக்கில்லை,
சிறதளவும் ஞானம் இல்லாமல் தவவேடம் பூண்டு தகாத செயல்களைச் செய்பவர்கள் நாட்டில் உண்டு, தங்கள் செயலால் நாளை தலைகுனிவு ஏற்படுமே என்று அவரக்ளமனக்குனிவு கொள்வதில்லை, ஆன்மீக சமுதாயந்தான்அவர்களுக்காக வெட்கி தலைகுனியும, சொர்க்கத்தைப் பற்றி பேசும் போலி ஆசாமிகள் போய் சேருகிற இடம் நரகம்தான் இருக்கும், அற்ப சுகங்களுக்காக ஆைச்ப்பட்டு போடுகிற வேடம் புண்ணியமாகாது, உண்மையான ஞானம் உள்ளவரே தவத்தின் பயனை அடைவர்,
உண்மையான ஞான வேடம் புனைவதில்லை, போலிகள் தவத்திற்குரிய குண்டலம், உருத்திராட்சம், பாதக்குகறடு, யோகதண்டம் சடை, திருநீறு, அவற்றின் தன்மையை அறிந்திருக்கமாட்டார்கள்,போலிகள் தங்கள் நிலையை நிறுவிக் கொள்ள வாதிடுவார்கள், அசலானவர்கள் எதையும் மூடிமறைக்கின்ற நிரூபிக்கின்ற அவசியம் கிடையாது அவர்கள் எப்போதும் மவுனமாகவே இருப்பார்கள், இதனை திருமூலர் " யோகிக்கும், ஞானிக்கும் திருநீறு உத்திராட்சம் சடாமுடி, ஐந்தெழுத்து என்கிற நான்கு புறச்சாதங்கள் தேவையில்லை என்கிறார் பாடல் சிஞானிக்கு சிவயோகிகட்கும் அவமான சாதனமாகாது..............
உண்மை ஞானி நடமாடும்கோயில் தன்பார்வையினாலோ, பரிசத்தாலோ அடுத்தவர்க்கு ஆன்ம பக்குவத்தை அவனால் வழங்க முடியும் - தீட்சத் வழங்க முடியும்
ஆணவத்தை விட வேண்டும் ஆணவத்தால் ஏற்படும்மயக்கத்தை விட்டோழிக்க வேண்டும், செயலற்றிருக்க வேண்டும், மவுனத்தின் சிறப்பை உணர்ந்திருக்க வேண்டும்,அப்போதே நீங்கள்தேடுகிற சிவமாம் இன்பபொருளை அடைய முடியும், என்கிறார் திருமூலர்,
தவத்தின் பயன்
தவம் என்றால் விரதம், மனதின் நற்குணம் மூன்றில் இராசத குணத்தில் ஒன்றாகவும், சாத்துவிக் குணத்து ஒன்றாகவும் இது இடம் பெற்றது இராசதத்தில் கூறப்படும் ஞானத்தையும் ஊக்கத்தையும் உள்ளடக்கியது, சாத்துவிகத்தில் பொறுமையையும் மோனத்தையும் தன்னில் கொண்டது தவம், சாத்திரங்கள் தவத்தை புண்ணியத் தோற்றம் நான்கில் ஒன்றாகவும், குறிப்பிடுகின்றன, தவம், ஒழுக்கம் கொடை, கல்வி இவை புண்ணியத் தோற்றங்கள். தவத்தின் மிக்கார் இயல்பு இவையென திருமந்திரம் கூறும்,
"ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவது இல்லை நமனும் அங்குஇல்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும் பயன் இல்லை பற்றுவிட்டோர்க்கே "
சிவத்திடம் மனதை வைத்த உத்தமர்கள் உலகத் துன்பங்களை கண்டு அஞ்சுவதில்லை, அவர்களுக்கு எமபயம் கிடையாது, அவர்கள் வாழ்வது சிவவாழ்க்கை, அதனால் எவ்விதத் துன்பங்களும் அவர்களை அணுகுவதில்லை, சிவனின் நினைப்பால் அவர்கள் இரவென்றும், பகலென்றும் வேறுபடுத்தி அறிகின்ற நிலையில்லை, பொருளின் மீது ப்ற்றில்லை, என்பதால் அவர்களுக்கு விளைவு பற்றியும் கவலை கிடையாது, தங்கள் பிறப்பின் நோக்கத்தை அறிவதோடு பிறப்பை நீக்கும் வழியையும் வியக்கத்தக்கது, எந்த வொன்றிலும் கவனத்தை சிதறவிடாமல் ஏகாந்தத்தில் இருந்து தங்கள் மனதை அவர்கள் இறைவன்பால் வைத்திருப்பர், இந்திராதி தேவர்களே நேரில் வந்தாலும் தங்கள் மனதை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்,
தவத்தின் தன்மையை அறியவும், தவத்தால் மேன்மை அடையவும் சிவத்தின் அருளை பெற்றிருக்க வேண்டும், தவசீலர்கள் தங்கள் மன உறுதியால் இயைவனை காண்கின்றார்கள், இவர்கள் தவத்தை வாழ்க்கையாய் கொண்டவர்கள், இல்லற ஞானிகள் வாழ்க்கையை தவமாய் கொள்வார்கள்,
திருமூலர் கூறுகிறார் " நீங்கள் சாத்திரங்கள் கற்பதன் மூலம் பெருமையடையப் பார்க்காதீர்கள், ஒரு கணமேனும் புறத்தே திரிந்தலையும் உங்கள் மனத்தை தடுத்து அகத்தே நோககுங்கள், அகமுகப் பார்வை இறைவனின் அருளோடு உங்களை பொருந்தியிருக்க செய்யும் " என்கிறார்,
தவம் என்பது ஞானத்தை அடைவதற்கு முயற்சி சமாதி நிலையடையும் தவமெல்லாம் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லை, மனதை புலன் வழி போகாது தடுத்து நிறுத்தும் ஆற்றல் உடையவர் தனியொரு இடத்தில் இருந்து தவம் செய்யத் தேவையில்லை, பொறிகளை தன்வழிப்படுத்தி ஒடுங்கி இருப்பதே தவம், மனமாகிய உறையில் இருந்து மதியாகிய வாளையுருவி சினம் போன்ற மாயா சக்திகளை வென்று, சிவத்திடம் வேறுபாடின்றி பொருத்த வேண்டும், பொறிகள் ஐந்தினையும் உலக விசயங்களில் போகவிடாது தடுத்து தவத்தினால் சிவஒளி காணவேண்டும், அதுவே சுயஒளியாகும், பாடல் : மனத்திடை நின்ற மதிவான் உருவி............
சித்தத்தில் இடையறாது சிவமந்திரம் ஒதி சிமாகும் தன்மையர்க்கு வேறு எத்தவமும் செய்ய வேண்டியதில்லை, சிவனை எண்ணி சிமாதலே தவத்தின் பயன், பாடல் : சிததம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்.............
எப்போதுமே உயர்ந்ததையும் சிறந்ததையும் உலக பிரதியெடுத்துவிடும்,அசல் எது? போலி எது? என்று உஙகளால் கண்டு பிடிக்க முடியாமல் போகும் ஆன்மீகத்திலும் போலிகள் உண்டு, போலி ஆசாமிகள் போடுவது சிவவேடமும் அல்ல, தவமும் அல்ல, அவ வேடம், அவம் இழிவானது பயனற்றது, எப்போதும் நிலைத்திருப்பது உண்மை, இடம் தெரியாமல் ஒடி ஒளிவது பொய், அசலுக்குள்ள பொலிவு போலிக்கில்லை,
சிறதளவும் ஞானம் இல்லாமல் தவவேடம் பூண்டு தகாத செயல்களைச் செய்பவர்கள் நாட்டில் உண்டு, தங்கள் செயலால் நாளை தலைகுனிவு ஏற்படுமே என்று அவரக்ளமனக்குனிவு கொள்வதில்லை, ஆன்மீக சமுதாயந்தான்அவர்களுக்காக வெட்கி தலைகுனியும, சொர்க்கத்தைப் பற்றி பேசும் போலி ஆசாமிகள் போய் சேருகிற இடம் நரகம்தான் இருக்கும், அற்ப சுகங்களுக்காக ஆைச்ப்பட்டு போடுகிற வேடம் புண்ணியமாகாது, உண்மையான ஞானம் உள்ளவரே தவத்தின் பயனை அடைவர்,
உண்மையான ஞான வேடம் புனைவதில்லை, போலிகள் தவத்திற்குரிய குண்டலம், உருத்திராட்சம், பாதக்குகறடு, யோகதண்டம் சடை, திருநீறு, அவற்றின் தன்மையை அறிந்திருக்கமாட்டார்கள்,போலிகள் தங்கள் நிலையை நிறுவிக் கொள்ள வாதிடுவார்கள், அசலானவர்கள் எதையும் மூடிமறைக்கின்ற நிரூபிக்கின்ற அவசியம் கிடையாது அவர்கள் எப்போதும் மவுனமாகவே இருப்பார்கள், இதனை திருமூலர் " யோகிக்கும், ஞானிக்கும் திருநீறு உத்திராட்சம் சடாமுடி, ஐந்தெழுத்து என்கிற நான்கு புறச்சாதங்கள் தேவையில்லை என்கிறார் பாடல் சிஞானிக்கு சிவயோகிகட்கும் அவமான சாதனமாகாது..............
உண்மை ஞானி நடமாடும்கோயில் தன்பார்வையினாலோ, பரிசத்தாலோ அடுத்தவர்க்கு ஆன்ம பக்குவத்தை அவனால் வழங்க முடியும் - தீட்சத் வழங்க முடியும்
ஆணவத்தை விட வேண்டும் ஆணவத்தால் ஏற்படும்மயக்கத்தை விட்டோழிக்க வேண்டும், செயலற்றிருக்க வேண்டும், மவுனத்தின் சிறப்பை உணர்ந்திருக்க வேண்டும்,அப்போதே நீங்கள்தேடுகிற சிவமாம் இன்பபொருளை அடைய முடியும், என்கிறார் திருமூலர்,
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 16
இறைவனை அடையும் மார்க்கங்கள்
இறைவனுடைய திருவருளை அடைவதற்கு உரிய வழிகள் பற்பல, அவற்றுள் சத்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் எனும் நான்கு அடங்கும், சத்புத்திர மார்க்கம் என்பது இறைவனை தந்தையாக எண்ணி ஆன்மா புத்திரனாக அமைந்து வழிபடும் வழி ஆகும், திருஞானசம்பந்தர் காட்டிய வழிஇதுவே. தாசமார்க்கம் என்பது இறைவனை எசமானனாக் பாவித்து உயிர்கள் பணியாளனாக இருந்து வழிபடும் நெறியாகும், இது திருநாவுக்கரசர் காட்டி வழி, சகமார்க்கம் என்பது இறைவன் தன் சகதோழன் என்று கொண்டு சிவனை வழிபடும் வழியாகும், இது சுந்தரரர் காட்டி வழி, சன்மார்க்கம் என்பது இறைவனை ஞான ஆசிரியனாகக் கொண்டு , ஆனமா சீடனாக இருந்து வழிபடும் வழியாகும், இது மாணிக்கவாசகர் காட்டிய வழி. இறைவழிபாட்டிற்கு ஆன்மா தியான வகையில் சுத்தி செய்து கொள்ளல் தவம் என்பது காடுகள் இருந்து கொண்டு கனிகளைகளை உண்டு வாழ்தல் மட்டுமன்று. இறைவனை தியானம் செய்து, கொண்டு தம்மால் எவ்வுயிருக்கும் தீங்கினை செய்யாது இறைவனை தந்தையாகவோ, ஞான ஆசிரியனாகவோ, எஜமானனாகவோ, நட்பின் - பாசத்தின் மிகுதியால்நண்பனாகவோ கொணடு தன்னை அவனுடன் கொணடு தியானித்திருத்தலே இறையருளை பெறும வழிகள் ஆகும், இதனை திருமந்திரம் ஐநதாம் தந்திரத்தில் சாதகர்கள் உகந்து பற்றக்கூடிய நெறிகள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.
1) சன்மார்க்கம்:
இது ஒளிநெறி எனப்படும் இதனை மகான் இராமலிங்க அடிகள் இறைவனை ஒளிவடிவமாகவே கண்டார், மன எழுச்சிகளுக்கு இடமளிக்காமல் நிலைத்த சித்தத்துடன் சிவயோகத்திருக்க வேண்டும், என்கிறார் திருமூலர்,
சைவப் பெருமைத் தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வச் சிவ நெறி சன்மார்க்கம் சேர்ந்து உய்ய
வையத் துள்ளார்க்கு வகுத்து வைத்தானே.
சைவ நெறியை சிவனே அமைத்து தந்தான் என்கிறது பாடல்.
ஆன்மாக்கள் ஈடேற வேண்டும் என்பதற்காகவே இந்த ஒளிநெறியை இறைவன் ஏற்படுத்தினான் இதுவே தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் என்பது, தன்னுடைய சரீரமல்ல தான் உணர்ந்த ஞானியர் பற்றும் நெறியிது. சிவனது வியாபகத்தை அறியாதவர் மனத் தெளிவு பெறாதவராவர், தெளிவில்லாத காரணத்தால் அவர்கள் சீவனது வியாபகத்தையும அறியமாட்டார்கள், சீவனை அறிந்தாலதான் சிவத்தை அறியமுடியும்,
ஐம்மலங்களாலும் நீங்கப்பெற்ற ஆன்மா சிவம் ஆகும், தன்னிலை மறந்து சிவனாதல் சன்மார்க்கம் பாடல்: தெளிவறியாதார் சிவனை அறியார்...............
ஆணவத்தால் ஏற்படும் தன் முனைப்பும் பாசமும் நீக்கி, முழுமுதற் கடவுளாகிய சிவத்துடன் கூட்டுவிப்பது சன்மார்க்கம், மெய்பொருளுடன் ஒன்றியிருத்ற் கேதுவாய் கனியாத மனத்தை கனிய வைக்கிற மார்க்கமிது, சிவத்தை அறியும் ஞானம் சன்மார்க்கம் என்கிற சாதனம் ஆகும்,
2) சகமார்க்கம்:
இது தோழமை நெறி,, இந்த சாதனம் வீடு பேற்றை யும் சித்தியையும் தருவதாகும், சகமார்க்கத்தில் நிட்டையில் இருப்பார்க்கு அவர்தம் உள்ளத்தில் பரத்த உலகங்கள் காணப்டும், அது போல் உள்ளொளியாகிய பேரோளி தோன்றும், அவ்வொளியில் சிவமும் சக்தியும் உண்டு. சித்தர்கள் விரும்பி மேற்கொள்ளும நெறியிது, சமயக்குறவர்கள் நால்வரில் சுந்தரர் பின்பற்றி இறைவனிடம் அடைந்த வழி, ஆறு ஆதாரங்களையும் திருவருள் துணையால் கண்டு மேல்நோக்குதல் நாடி சுத்திகளாகும், அதனால் அகரம் முதலான பதினாறு கலைகளில் விளங்கும் ஆகாயமும் அதில் விளங்கும் ஒளியும் காணற்காகும், ஆன்மாவின் ஐம்புலங்களும் ஐம்பொறிகளும் புத்தியும்தம்முடைய இயல்பான கீழே இழுக்கும் தனமமையை விட்டு நிற்பதே சகமார்க்கம்,
பொறிகளை அடக்கும் யோகியின் மனதில் சிவன் வந்து பொருந்துவான்,
3) சற்புத்திரமார்க்கம்:
மகன் தந்தைக்கு செய்யும் தொண்டுபோல் பூசனைகள் செய்வது - கிரியை நெறி. சற்புத்திர மார்க்கம் எட்டு உறுப்புகளை கொண்டது அவை:
1, பூசை செய்தல், 2,, பாராயணம் செய்தல், 3. இறைவனை போற்றித் துதித்தல், 4, மந்திரஸ்மரணை, 5, தவ ஒழுக்கம், 6, உண்மை பேசுதல், 7. காமம் குரோதம் கோபம், மோகம் மதம், மாற்சரியம் என்கிற ஆறு பகைகளை நீக்குதல், 8. அன்புடன் அம்ச பாவனை மேற் கொள்ளல் , இவற்றை சற்புத்திரமார்க்கத்தின் இயல்புகள் எனலாம்,
பாடல் : பூசித்தல,, வாசித்தல், போற்றல்..........................
திருமூலர் கூறுகிறார் நான் நின்று தொழுவேன் எம்பிரானை நாளும் தொழுதபடி இருப்பேன் நீங்களும் அவனை மலர் கொண்டு வணங்குங்கள் சிவபெருமான் தன்னை தொழுவார் சிந்தையில் தோன்றி நிற்பார் என்று இந்த பாடலில் கூறுகிறார், பாடல்: நின்று தொழுவன், கிடந்து எம்பிரான் தன்னை.................
4) தாசமார்க்கம்:
திருக்கோவில் சென்று தொணடு செய்யும் நெறி, கோவில்களில் உழவாரப்பணி செய்து முத்தி பெறுதல்
கோயிலில் நல்ல விளக்கினை ஏற்றுதல், பூக்கொய்தல், அன்போடு மெழுகுதல், திருவலகு இடுதல், இறைவனை வாழ்த்துதல், பூசைக்காலங்களில் மணிகளை ஒலிக்க செய்தல், திருமஞ்சன நீர் முதலியன கொணர்தல் இவை தாசமார்க்கப்பணிகள் என்கிறது திருமந்திரம்
தெய்வம் ஒன்றென்றியிருப்பதே இவரகளின் கொள்கை, தங்களுக்கு எதில் பற்று இருக்கிறதோ அதை ம்ட்டுமே இவர்கள் விரும்பி வழிபடுகிறவர்கள்,
சிவன் ஆயிரம் திருநாமம் கூறி வழிபடும் தேவர்கள் பக்கம் திரும்பாமல், தன் திருவடியை சிந்தையில் இருத்தி தன்னை கண்ணெனப் போற்றும் அடியார்க்கு பேரன்புடன் வெளிப்பட்டு அருள்கிறான் என்கிறார் திருமூலர், இறைவனை அன்புடன் இடைவிடாது சிந்தித்திருங்கள் அன்புக்கு ஆட்படுவான் நீலகண்டன்
தென்னாடுடைய சிவனே போற்றி ! என்னாட்டவற்கும் இறைவா போற்றி
திருச்சிற்றமபலம் - ஓம் நமசிவாய ஓம்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
இறைவனை அடையும் மார்க்கங்கள்
இறைவனுடைய திருவருளை அடைவதற்கு உரிய வழிகள் பற்பல, அவற்றுள் சத்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் எனும் நான்கு அடங்கும், சத்புத்திர மார்க்கம் என்பது இறைவனை தந்தையாக எண்ணி ஆன்மா புத்திரனாக அமைந்து வழிபடும் வழி ஆகும், திருஞானசம்பந்தர் காட்டிய வழிஇதுவே. தாசமார்க்கம் என்பது இறைவனை எசமானனாக் பாவித்து உயிர்கள் பணியாளனாக இருந்து வழிபடும் நெறியாகும், இது திருநாவுக்கரசர் காட்டி வழி, சகமார்க்கம் என்பது இறைவன் தன் சகதோழன் என்று கொண்டு சிவனை வழிபடும் வழியாகும், இது சுந்தரரர் காட்டி வழி, சன்மார்க்கம் என்பது இறைவனை ஞான ஆசிரியனாகக் கொண்டு , ஆனமா சீடனாக இருந்து வழிபடும் வழியாகும், இது மாணிக்கவாசகர் காட்டிய வழி. இறைவழிபாட்டிற்கு ஆன்மா தியான வகையில் சுத்தி செய்து கொள்ளல் தவம் என்பது காடுகள் இருந்து கொண்டு கனிகளைகளை உண்டு வாழ்தல் மட்டுமன்று. இறைவனை தியானம் செய்து, கொண்டு தம்மால் எவ்வுயிருக்கும் தீங்கினை செய்யாது இறைவனை தந்தையாகவோ, ஞான ஆசிரியனாகவோ, எஜமானனாகவோ, நட்பின் - பாசத்தின் மிகுதியால்நண்பனாகவோ கொணடு தன்னை அவனுடன் கொணடு தியானித்திருத்தலே இறையருளை பெறும வழிகள் ஆகும், இதனை திருமந்திரம் ஐநதாம் தந்திரத்தில் சாதகர்கள் உகந்து பற்றக்கூடிய நெறிகள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.
1) சன்மார்க்கம்:
இது ஒளிநெறி எனப்படும் இதனை மகான் இராமலிங்க அடிகள் இறைவனை ஒளிவடிவமாகவே கண்டார், மன எழுச்சிகளுக்கு இடமளிக்காமல் நிலைத்த சித்தத்துடன் சிவயோகத்திருக்க வேண்டும், என்கிறார் திருமூலர்,
சைவப் பெருமைத் தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வச் சிவ நெறி சன்மார்க்கம் சேர்ந்து உய்ய
வையத் துள்ளார்க்கு வகுத்து வைத்தானே.
சைவ நெறியை சிவனே அமைத்து தந்தான் என்கிறது பாடல்.
ஆன்மாக்கள் ஈடேற வேண்டும் என்பதற்காகவே இந்த ஒளிநெறியை இறைவன் ஏற்படுத்தினான் இதுவே தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் என்பது, தன்னுடைய சரீரமல்ல தான் உணர்ந்த ஞானியர் பற்றும் நெறியிது. சிவனது வியாபகத்தை அறியாதவர் மனத் தெளிவு பெறாதவராவர், தெளிவில்லாத காரணத்தால் அவர்கள் சீவனது வியாபகத்தையும அறியமாட்டார்கள், சீவனை அறிந்தாலதான் சிவத்தை அறியமுடியும்,
ஐம்மலங்களாலும் நீங்கப்பெற்ற ஆன்மா சிவம் ஆகும், தன்னிலை மறந்து சிவனாதல் சன்மார்க்கம் பாடல்: தெளிவறியாதார் சிவனை அறியார்...............
ஆணவத்தால் ஏற்படும் தன் முனைப்பும் பாசமும் நீக்கி, முழுமுதற் கடவுளாகிய சிவத்துடன் கூட்டுவிப்பது சன்மார்க்கம், மெய்பொருளுடன் ஒன்றியிருத்ற் கேதுவாய் கனியாத மனத்தை கனிய வைக்கிற மார்க்கமிது, சிவத்தை அறியும் ஞானம் சன்மார்க்கம் என்கிற சாதனம் ஆகும்,
2) சகமார்க்கம்:
இது தோழமை நெறி,, இந்த சாதனம் வீடு பேற்றை யும் சித்தியையும் தருவதாகும், சகமார்க்கத்தில் நிட்டையில் இருப்பார்க்கு அவர்தம் உள்ளத்தில் பரத்த உலகங்கள் காணப்டும், அது போல் உள்ளொளியாகிய பேரோளி தோன்றும், அவ்வொளியில் சிவமும் சக்தியும் உண்டு. சித்தர்கள் விரும்பி மேற்கொள்ளும நெறியிது, சமயக்குறவர்கள் நால்வரில் சுந்தரர் பின்பற்றி இறைவனிடம் அடைந்த வழி, ஆறு ஆதாரங்களையும் திருவருள் துணையால் கண்டு மேல்நோக்குதல் நாடி சுத்திகளாகும், அதனால் அகரம் முதலான பதினாறு கலைகளில் விளங்கும் ஆகாயமும் அதில் விளங்கும் ஒளியும் காணற்காகும், ஆன்மாவின் ஐம்புலங்களும் ஐம்பொறிகளும் புத்தியும்தம்முடைய இயல்பான கீழே இழுக்கும் தனமமையை விட்டு நிற்பதே சகமார்க்கம்,
பொறிகளை அடக்கும் யோகியின் மனதில் சிவன் வந்து பொருந்துவான்,
3) சற்புத்திரமார்க்கம்:
மகன் தந்தைக்கு செய்யும் தொண்டுபோல் பூசனைகள் செய்வது - கிரியை நெறி. சற்புத்திர மார்க்கம் எட்டு உறுப்புகளை கொண்டது அவை:
1, பூசை செய்தல், 2,, பாராயணம் செய்தல், 3. இறைவனை போற்றித் துதித்தல், 4, மந்திரஸ்மரணை, 5, தவ ஒழுக்கம், 6, உண்மை பேசுதல், 7. காமம் குரோதம் கோபம், மோகம் மதம், மாற்சரியம் என்கிற ஆறு பகைகளை நீக்குதல், 8. அன்புடன் அம்ச பாவனை மேற் கொள்ளல் , இவற்றை சற்புத்திரமார்க்கத்தின் இயல்புகள் எனலாம்,
பாடல் : பூசித்தல,, வாசித்தல், போற்றல்..........................
திருமூலர் கூறுகிறார் நான் நின்று தொழுவேன் எம்பிரானை நாளும் தொழுதபடி இருப்பேன் நீங்களும் அவனை மலர் கொண்டு வணங்குங்கள் சிவபெருமான் தன்னை தொழுவார் சிந்தையில் தோன்றி நிற்பார் என்று இந்த பாடலில் கூறுகிறார், பாடல்: நின்று தொழுவன், கிடந்து எம்பிரான் தன்னை.................
4) தாசமார்க்கம்:
திருக்கோவில் சென்று தொணடு செய்யும் நெறி, கோவில்களில் உழவாரப்பணி செய்து முத்தி பெறுதல்
கோயிலில் நல்ல விளக்கினை ஏற்றுதல், பூக்கொய்தல், அன்போடு மெழுகுதல், திருவலகு இடுதல், இறைவனை வாழ்த்துதல், பூசைக்காலங்களில் மணிகளை ஒலிக்க செய்தல், திருமஞ்சன நீர் முதலியன கொணர்தல் இவை தாசமார்க்கப்பணிகள் என்கிறது திருமந்திரம்
தெய்வம் ஒன்றென்றியிருப்பதே இவரகளின் கொள்கை, தங்களுக்கு எதில் பற்று இருக்கிறதோ அதை ம்ட்டுமே இவர்கள் விரும்பி வழிபடுகிறவர்கள்,
சிவன் ஆயிரம் திருநாமம் கூறி வழிபடும் தேவர்கள் பக்கம் திரும்பாமல், தன் திருவடியை சிந்தையில் இருத்தி தன்னை கண்ணெனப் போற்றும் அடியார்க்கு பேரன்புடன் வெளிப்பட்டு அருள்கிறான் என்கிறார் திருமூலர், இறைவனை அன்புடன் இடைவிடாது சிந்தித்திருங்கள் அன்புக்கு ஆட்படுவான் நீலகண்டன்
தென்னாடுடைய சிவனே போற்றி ! என்னாட்டவற்கும் இறைவா போற்றி
திருச்சிற்றமபலம் - ஓம் நமசிவாய ஓம்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
மனித மனம்
மனம் மிகவும் அற்புதமான ஒன்று. இதில் என்ற இருக்கிறது? அது எதை நினைக்கிறது?எப்படிச் செயல்படுகிறது? என்பதை யாராலும் கூற முடியாது. மனம் புதிர் போன்றது. மனம் உடையவன் மனிதன். இன்றும் இம் மனித மனத்தை வைத்துப் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நமது முன்னோர்கள் புதிராக விளங்கும் இம்மனித மனத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களைப் பழமொழிகள் வாயிலாகக் கூறியுள்ளனர்.
மனம்-வாழ்வு
வாழ்விற்கு அடிப்படையாகவும், நலத்தையும் தருவது மனம். வாழ்க்கை மனத்தையே சார்ந்துள்ளது. பணம், பொருள், பொன், பதவி ஆகிய அனைத்தும் இருந்தாலுமை், மன நலம் ஒருவருக்கு வாய்க்கவில்லையெனில் வாழ்வு செம்மையாக அமையாது எனலாம். மனம் ஒன்றி வாழ்ந்தால் மட்டுமே வாழ்வு இனிக்கும். இல்லையெனில் துன்பமே.
நம்முன்னோர்கள் மனதைக் குரங்கிற்கு ஒப்பிடுவர். குரங்கு எவ்வாறு ஓரிடத்தில் நிலைத்து நிற்காதோ அதுபோன்று மனம் ஒன்றில் நிலைத்து நிற்காது. மனம் ஒன்றைவிட்டு ஒன்று மாறிக் கொண்டே இருக்கும் தன்மை உடையது.
மனதை நல்வழிப்படுத்தினால் அனைத்துச் செயல்களிலும் வெற்றிபெறலாம். நமது மனம் எதைச் செம்மையாக நினைக்கிறதோ அது நன்றாக நடக்கும். நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும். தீயது நினைத்தால் தீயதே நடக்கும் என்பர்.
நாம் ஒன்றில் வெற்றி பெறவேண்டும் என்று கருதினால் அதனைத் தீவிரமாகக் கருதி மனதை ஒருநிலைப்படுத்திச் செயலில் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபட்டால் எளிதில் வெற்றி பெறலாம். நன்கு திறமையாளனும்கூட மனதில் தன்னால் முடியாது என்று கருதத் தொடங்கினால் அவ்வாறே அவனது செயலும் தோல்வியில் முடிவுறுகிறது. வள்ளுவரும்,
‘‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப
எண்ணியர் திண்ணியராகப் பெறின்.’’
என்று இதனைப் பற்றிக் கூறியிருப்பது நோக்கத்தக்கது.
இத்தகைய அரிய கருத்தையே,
‘‘மனம்போல வாழ்வு”
‘‘எண்ணம்போல் வாழ்க்கை”
என்ற பழமொழிகள் மூலம் நமது முன்னோர்கள் கூறிப்போந்தனர் எனலாம். மனம் எண்ணங்களை எண்ணுகிறது. எண்ணம் செயலாகிறது. செயல் வெற்றியைத் தருகிறது. நமது எண்ணங்கள் தீமைகளைப் பிறருக்கு விளைவிக்காதபோது நமது வாழ்வு சிறக்கும். எண்ணங்கள் தீயதாக இருப்பின் அதுபோன்றே நமது வாழ்வும் அமையும். இதனையே மேற்குறித்த பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன.
மனமும் – மாளிகையும்
மனம் குறுகியதாக இருத்தல் கூடாது. அது நல்ல எண்ணங்களாலும், பெருந்தன்மையாலும், கருணையாலும் நிரப்பப் பெற்றிருக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நல்ல அமைதியான, மகிழ்வான வாழ்வினை வாழ முடியும். மனதில் குறுகிய, கோணல்தன்மையான எண்ணங்கள் விளையுமானால் அது தீரா நோய் போன்ற வாழ்வையே தரும்.
நாம் வாழும் இடம் சிறிதாக இருக்கலாம். வசதிகளின்றியும், விசாலமின்றியும், வளமின்றியுமிருக்கலாம். ஆனால் மனம் நன்றாக இருந்தால், நலமான எண்ணங்களால் நிரப்பப்பட்டிருந்தால் வாழ்வு இனிமையாக இருக்கும்.
ஔவையார் கூறியுள்ள,
‘‘நாடாகொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையாகின்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!’’
என்ற புறநானூற்றுப் பாடலில் இடம் எதுவாக இருந்தாலும் நல்மனமுள்ள மக்கள் வாழ்வதாக இருந்தால் அது நல்ல இடமாக மாறும். வளமுள்ள இடமாக இருந்து தீய மனமுள்ள மனிதர்களாக இருப்பின் அது நரகத்தைப் போன்ற இடமாக இருக்கும். இவற்றையெல்லாம் உணர்ந்த நமது முன்னொர்கள்,
‘‘மனம் கொண்டதே மாளிகை’’
என்ற பழமொழியினைக் கூறி வாழ்க்கையை வளமாக வாழ வேண்டும் என்று வற்புறுத்தினர் எனலாம். மேற்கண்ட கருத்துக்களையெல்லாம் உள்ளடக்கியதாக இப்பழமொழி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மனம் – ஆசை
மனம் ஆசைக்கு அடிமைப்படுதல் கூடாது. ஆசைக்கு அடிமையானால் மனம் துன்புறும். ஆசைக்குட்பட்ட மனம் மேலும் மேலும் ஆசைப்பட்டுக் கொண்டே அடங்காது அலைபாயும். அவ்வாசை போதும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாது. அதனால் மனதை ஆசைக்கு ஆட்பட வைக்காது ஒருநிலைப்படுத்தி வாழ வேண்டும். அவ்வாறு வாழ்கின்றபோது வாழ்வில் அமைதியும் மகிழ்வும் ஏற்படும். இத்தகைய வாழ்வியல் பண்பாட்டை,
‘‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
போதும் என்ற மனப்பான்மை அரிய மருந்தாகும். இத்தகைய மனப்பக்குவம் ஒருவனுக்கு அமைந்துவிட்டால் வாழ்வு வசந்தமயமாகிவிடும் என்பதை தமது அனுபவத்தால் இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் தெளிவுறுத்தியுள்ளனர்.
மனம் – பேச்சு
மனதிற்கும் பேச்சிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. மனம் நினைக்கின்ற நினைவே எண்ணமாகவும், பேச்சாகவும் வெளிப்படுகிறது. மனம் துன்பத்திலோ, குழப்பத்திலோ ஆழ்ந்து விடுமானால் பேச்சில் தெளிவு வராது. உளறலாக மாறும்.
சிலர் மனதில் நினைப்பதைப் பேசாது மறைத்து, வெளியில் வேறொன்றைப் பற்றிப் பேசுவர். அவ்வாறு பேசுவது தவறான ஒன்றாகும். மனதில் குழப்பமின்றித் தெளிவாக மனதில் நினைத்ததைச் சரியானவற்றறைப் பேசுதல் வேண்டும் என்பதை,
‘‘மனசுல ஒன்று வெளியில ஒன்றாகப் பேசக் கூடாது’’
என்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் கூறினர். இப்பழமொழியையே,
‘‘மனதுக்குள்ள ஒண்ணு வாய்க்குள்ள ஒண்ணு வைத்துப் பேசாதே’’
என்றும் வழக்கில் வழங்குவர்.
மனம் – வழி
ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமெனில் அதைப்பற்றி சிந்தனை செய்தல் வேண்டும். மனதிற்குள் அதனைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தால் ஏதேனும் தீர்வு கிடைக்கும். தவறான நெறியில் செல்பவனும் பிறருக்குத் தீமை விளைவிப்பவனும் மனதில் தான் செய்வது சரியா? என்று சிந்தனை செய்தால் அவனுக்குச் சரியான நெறி புலப்படும். அவன் நன்னெறியில் செல்வான். இத்தகைய நன்னெறியை,
‘‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’’
என்ற பழமெழி எடுத்துரைக்கின்றது.
இங்கு குறிப்பிடப்படும், ‘மார்க்கம்’ ‘நல்ல நெறி’ என்று பொருள்படும். நன்னெறியையே மார்க்கம் என்று வழக்கில் கூறுவர். மனம் ஒருநிலையில் இருந்தால் நல்ல நெறி-நல்லவழி புலப்படும். அலைபாயாத மனத்திலேயே நற்சிந்தனை எழும். மனதில் நற்சிந்தனை எழும்போதுதான் நல்வழி புலனாகும். அதனால் மனதை அலைபாயவிடாது ஒருநிலையில் வைத்து நன்னெறியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற பண்பாட்டு நெறியை இப்பழமொழி உள்ளீடாகக் கொண்டுள்ளது நோக்கத்தக்கது.
மன ஆழம் – கடல் ஆழம்
உலகில் மிகவும் ஆழமானது கடல். அத்தகைய கடலின் ஆழத்தை அளந்தறிய பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் வாயிலாக பல கடல்களின் ஆழத்தை மனிதர்கள் கணக்கிட்டுக் கூறியுள்ளனர். ஆனால் பெண்ணின் மன ஆழத்தை யாராலும் அளந்தறிய இயலாது. இதுவரை பெண்ணின் மனதை முழுதும் அறிந்து கொண்டவர்கள் யாருமில்லை எனலாம். இதனை,
‘‘கடல் ஆழத்தைக் கண்டாலும் காணலாம்
பெண்ணோட மன ஆழத்தைக் காண முடியாது’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இப்பழமொழி பெண்ணிற்கு எதிராகக் கூறப்பட்டதோ? என்று கூட எண்ணுவதற்கு இடமுள்ளது. கடல் ஆழம் – பெண்ணின் மன ஆழம் இவற்றில் பெண்ணின் மன ஆழம் கண்டறிய இயலாது என்று கூறுவது பெண்களைக் குறைகூறுவதைப் போன்றுள்ளதாக அமைந்துள்ளது.
நமது முன்னோர்கள் அவ்வாறு கூறியிரப்பார்களா? என்று ஆராய்ந்தால் அவர்கள் உளவியல் அடிப்படையிலேயே இப்பழமொழியைக் கூறியுள்ளனர் என்பது நன்கு புலனாகும். பெண்கள் என்ன கருதுகிறார்கள், எப்படி, எப்போது எவ்வாறு அது மாறும் என்பதைப் புரிந்து கொள்ள இயலாது. ஆண்களைச் சட்டென்று ்சில விஷயங்களைக் கூறி ஒரு கருத்தினை ஏற்றுக் கொள்ள வைத்துவிடலாம். பெண்கள் எந்த ஒரு விஷயத்தையுமோ, அல்லது நபரையுமோ நம்பி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம் என்பதனையே இப்பழமொழி எணர்த்துகிறது. பெண்கள் அராய்ந்து ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவர். அப்படியே வந்தாலும் அது குறித்து எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பர். இவ்வாறு பெண்களின் மனப்பான்மையைத் தெளிவுறுத்தவே உளவியல் ரீதியாக இப்பழமொழியினை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர் எனலாம்.
மனதை நன்னெறியில் செலுத்தி, அலைபாய விடாது ஒருநிலைப்படுத்தி, நல்ல எண்ணங்களை மனதிற்குள் நிரப்பி நன்மை செய்து நல்வாழ்வு வாழ மனம் குறித்த இப்பழமொழிகள் நமக்கு உறுதுணையாக அமைந்திலங்குகின்றன எனலாம்.
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
மனம் மிகவும் அற்புதமான ஒன்று. இதில் என்ற இருக்கிறது? அது எதை நினைக்கிறது?எப்படிச் செயல்படுகிறது? என்பதை யாராலும் கூற முடியாது. மனம் புதிர் போன்றது. மனம் உடையவன் மனிதன். இன்றும் இம் மனித மனத்தை வைத்துப் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நமது முன்னோர்கள் புதிராக விளங்கும் இம்மனித மனத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களைப் பழமொழிகள் வாயிலாகக் கூறியுள்ளனர்.
மனம்-வாழ்வு
வாழ்விற்கு அடிப்படையாகவும், நலத்தையும் தருவது மனம். வாழ்க்கை மனத்தையே சார்ந்துள்ளது. பணம், பொருள், பொன், பதவி ஆகிய அனைத்தும் இருந்தாலுமை், மன நலம் ஒருவருக்கு வாய்க்கவில்லையெனில் வாழ்வு செம்மையாக அமையாது எனலாம். மனம் ஒன்றி வாழ்ந்தால் மட்டுமே வாழ்வு இனிக்கும். இல்லையெனில் துன்பமே.
நம்முன்னோர்கள் மனதைக் குரங்கிற்கு ஒப்பிடுவர். குரங்கு எவ்வாறு ஓரிடத்தில் நிலைத்து நிற்காதோ அதுபோன்று மனம் ஒன்றில் நிலைத்து நிற்காது. மனம் ஒன்றைவிட்டு ஒன்று மாறிக் கொண்டே இருக்கும் தன்மை உடையது.
மனதை நல்வழிப்படுத்தினால் அனைத்துச் செயல்களிலும் வெற்றிபெறலாம். நமது மனம் எதைச் செம்மையாக நினைக்கிறதோ அது நன்றாக நடக்கும். நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும். தீயது நினைத்தால் தீயதே நடக்கும் என்பர்.
நாம் ஒன்றில் வெற்றி பெறவேண்டும் என்று கருதினால் அதனைத் தீவிரமாகக் கருதி மனதை ஒருநிலைப்படுத்திச் செயலில் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபட்டால் எளிதில் வெற்றி பெறலாம். நன்கு திறமையாளனும்கூட மனதில் தன்னால் முடியாது என்று கருதத் தொடங்கினால் அவ்வாறே அவனது செயலும் தோல்வியில் முடிவுறுகிறது. வள்ளுவரும்,
‘‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப
எண்ணியர் திண்ணியராகப் பெறின்.’’
என்று இதனைப் பற்றிக் கூறியிருப்பது நோக்கத்தக்கது.
இத்தகைய அரிய கருத்தையே,
‘‘மனம்போல வாழ்வு”
‘‘எண்ணம்போல் வாழ்க்கை”
என்ற பழமொழிகள் மூலம் நமது முன்னோர்கள் கூறிப்போந்தனர் எனலாம். மனம் எண்ணங்களை எண்ணுகிறது. எண்ணம் செயலாகிறது. செயல் வெற்றியைத் தருகிறது. நமது எண்ணங்கள் தீமைகளைப் பிறருக்கு விளைவிக்காதபோது நமது வாழ்வு சிறக்கும். எண்ணங்கள் தீயதாக இருப்பின் அதுபோன்றே நமது வாழ்வும் அமையும். இதனையே மேற்குறித்த பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன.
மனமும் – மாளிகையும்
மனம் குறுகியதாக இருத்தல் கூடாது. அது நல்ல எண்ணங்களாலும், பெருந்தன்மையாலும், கருணையாலும் நிரப்பப் பெற்றிருக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நல்ல அமைதியான, மகிழ்வான வாழ்வினை வாழ முடியும். மனதில் குறுகிய, கோணல்தன்மையான எண்ணங்கள் விளையுமானால் அது தீரா நோய் போன்ற வாழ்வையே தரும்.
நாம் வாழும் இடம் சிறிதாக இருக்கலாம். வசதிகளின்றியும், விசாலமின்றியும், வளமின்றியுமிருக்கலாம். ஆனால் மனம் நன்றாக இருந்தால், நலமான எண்ணங்களால் நிரப்பப்பட்டிருந்தால் வாழ்வு இனிமையாக இருக்கும்.
ஔவையார் கூறியுள்ள,
‘‘நாடாகொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையாகின்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!’’
என்ற புறநானூற்றுப் பாடலில் இடம் எதுவாக இருந்தாலும் நல்மனமுள்ள மக்கள் வாழ்வதாக இருந்தால் அது நல்ல இடமாக மாறும். வளமுள்ள இடமாக இருந்து தீய மனமுள்ள மனிதர்களாக இருப்பின் அது நரகத்தைப் போன்ற இடமாக இருக்கும். இவற்றையெல்லாம் உணர்ந்த நமது முன்னொர்கள்,
‘‘மனம் கொண்டதே மாளிகை’’
என்ற பழமொழியினைக் கூறி வாழ்க்கையை வளமாக வாழ வேண்டும் என்று வற்புறுத்தினர் எனலாம். மேற்கண்ட கருத்துக்களையெல்லாம் உள்ளடக்கியதாக இப்பழமொழி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மனம் – ஆசை
மனம் ஆசைக்கு அடிமைப்படுதல் கூடாது. ஆசைக்கு அடிமையானால் மனம் துன்புறும். ஆசைக்குட்பட்ட மனம் மேலும் மேலும் ஆசைப்பட்டுக் கொண்டே அடங்காது அலைபாயும். அவ்வாசை போதும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாது. அதனால் மனதை ஆசைக்கு ஆட்பட வைக்காது ஒருநிலைப்படுத்தி வாழ வேண்டும். அவ்வாறு வாழ்கின்றபோது வாழ்வில் அமைதியும் மகிழ்வும் ஏற்படும். இத்தகைய வாழ்வியல் பண்பாட்டை,
‘‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
போதும் என்ற மனப்பான்மை அரிய மருந்தாகும். இத்தகைய மனப்பக்குவம் ஒருவனுக்கு அமைந்துவிட்டால் வாழ்வு வசந்தமயமாகிவிடும் என்பதை தமது அனுபவத்தால் இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் தெளிவுறுத்தியுள்ளனர்.
மனம் – பேச்சு
மனதிற்கும் பேச்சிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. மனம் நினைக்கின்ற நினைவே எண்ணமாகவும், பேச்சாகவும் வெளிப்படுகிறது. மனம் துன்பத்திலோ, குழப்பத்திலோ ஆழ்ந்து விடுமானால் பேச்சில் தெளிவு வராது. உளறலாக மாறும்.
சிலர் மனதில் நினைப்பதைப் பேசாது மறைத்து, வெளியில் வேறொன்றைப் பற்றிப் பேசுவர். அவ்வாறு பேசுவது தவறான ஒன்றாகும். மனதில் குழப்பமின்றித் தெளிவாக மனதில் நினைத்ததைச் சரியானவற்றறைப் பேசுதல் வேண்டும் என்பதை,
‘‘மனசுல ஒன்று வெளியில ஒன்றாகப் பேசக் கூடாது’’
என்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் கூறினர். இப்பழமொழியையே,
‘‘மனதுக்குள்ள ஒண்ணு வாய்க்குள்ள ஒண்ணு வைத்துப் பேசாதே’’
என்றும் வழக்கில் வழங்குவர்.
மனம் – வழி
ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமெனில் அதைப்பற்றி சிந்தனை செய்தல் வேண்டும். மனதிற்குள் அதனைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தால் ஏதேனும் தீர்வு கிடைக்கும். தவறான நெறியில் செல்பவனும் பிறருக்குத் தீமை விளைவிப்பவனும் மனதில் தான் செய்வது சரியா? என்று சிந்தனை செய்தால் அவனுக்குச் சரியான நெறி புலப்படும். அவன் நன்னெறியில் செல்வான். இத்தகைய நன்னெறியை,
‘‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’’
என்ற பழமெழி எடுத்துரைக்கின்றது.
இங்கு குறிப்பிடப்படும், ‘மார்க்கம்’ ‘நல்ல நெறி’ என்று பொருள்படும். நன்னெறியையே மார்க்கம் என்று வழக்கில் கூறுவர். மனம் ஒருநிலையில் இருந்தால் நல்ல நெறி-நல்லவழி புலப்படும். அலைபாயாத மனத்திலேயே நற்சிந்தனை எழும். மனதில் நற்சிந்தனை எழும்போதுதான் நல்வழி புலனாகும். அதனால் மனதை அலைபாயவிடாது ஒருநிலையில் வைத்து நன்னெறியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற பண்பாட்டு நெறியை இப்பழமொழி உள்ளீடாகக் கொண்டுள்ளது நோக்கத்தக்கது.
மன ஆழம் – கடல் ஆழம்
உலகில் மிகவும் ஆழமானது கடல். அத்தகைய கடலின் ஆழத்தை அளந்தறிய பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் வாயிலாக பல கடல்களின் ஆழத்தை மனிதர்கள் கணக்கிட்டுக் கூறியுள்ளனர். ஆனால் பெண்ணின் மன ஆழத்தை யாராலும் அளந்தறிய இயலாது. இதுவரை பெண்ணின் மனதை முழுதும் அறிந்து கொண்டவர்கள் யாருமில்லை எனலாம். இதனை,
‘‘கடல் ஆழத்தைக் கண்டாலும் காணலாம்
பெண்ணோட மன ஆழத்தைக் காண முடியாது’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இப்பழமொழி பெண்ணிற்கு எதிராகக் கூறப்பட்டதோ? என்று கூட எண்ணுவதற்கு இடமுள்ளது. கடல் ஆழம் – பெண்ணின் மன ஆழம் இவற்றில் பெண்ணின் மன ஆழம் கண்டறிய இயலாது என்று கூறுவது பெண்களைக் குறைகூறுவதைப் போன்றுள்ளதாக அமைந்துள்ளது.
நமது முன்னோர்கள் அவ்வாறு கூறியிரப்பார்களா? என்று ஆராய்ந்தால் அவர்கள் உளவியல் அடிப்படையிலேயே இப்பழமொழியைக் கூறியுள்ளனர் என்பது நன்கு புலனாகும். பெண்கள் என்ன கருதுகிறார்கள், எப்படி, எப்போது எவ்வாறு அது மாறும் என்பதைப் புரிந்து கொள்ள இயலாது. ஆண்களைச் சட்டென்று ்சில விஷயங்களைக் கூறி ஒரு கருத்தினை ஏற்றுக் கொள்ள வைத்துவிடலாம். பெண்கள் எந்த ஒரு விஷயத்தையுமோ, அல்லது நபரையுமோ நம்பி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம் என்பதனையே இப்பழமொழி எணர்த்துகிறது. பெண்கள் அராய்ந்து ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவர். அப்படியே வந்தாலும் அது குறித்து எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பர். இவ்வாறு பெண்களின் மனப்பான்மையைத் தெளிவுறுத்தவே உளவியல் ரீதியாக இப்பழமொழியினை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர் எனலாம்.
மனதை நன்னெறியில் செலுத்தி, அலைபாய விடாது ஒருநிலைப்படுத்தி, நல்ல எண்ணங்களை மனதிற்குள் நிரப்பி நன்மை செய்து நல்வாழ்வு வாழ மனம் குறித்த இப்பழமொழிகள் நமக்கு உறுதுணையாக அமைந்திலங்குகின்றன எனலாம்.
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 15
சைவ சாதனங்கள்
சரியை, கிரியை யோகம் ஞானம் இவை இறைவனை அறியவும் அடையவும் உதவும் சாதனங்கள்.
சரிளையாளர்கள் நாடு நகரந்தோறும் கோவில்களைத் தேடிச் சென்று இறைவனை வணங்குவர்,, அந்நிலையில் கோவிலில் வீற்றிருக்கும் இறைவன் அவர்களுடைய நெஞ்சத்தையும் தனது கோயிலாக்கி கொள்வார்.
கிரியை வழியில் நிற்பவர் திருநீறு, ருத்ராட்சம் முதலிய சிவசாதனங்களை அணிந்து சிவவேடம் தாங்கி நிற்பர், இவர் பூசை முறைகளை செய்து வருவர்,
இவ்விரண்டும் புறத்தே வழிபடுமட முறைகள், யோகியரும் ஞானியரும் அகத்தே வழிபடும் முறைகளை பயன்படுத்துவர்.
வண்ண மலர்களையும், சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களையும் சார்த்தி வணங்கினாலும், உடல் பற்றை விட்டு தியானிப்பவர்க்கன்றி,, தேன்போல் இன்பந் தரும் உச்சித் தளத்திருவடியை சேரமுடியாது என்கிறது திருமந்திரம், பாடல்: கானுறு கோடி கடிகமழ் சந்தனம்..............
யோகம் என்பது பொறிகளை அடக்கி, சித்தத்தை பிரமத்தில் நிறுத்துதல் ஆகும், கட்டுந்தறிபோல் உடலை ஆடாது அசையாது இருக்கச் செய்து, காற்று, மழை, மின்னல், இடி, மோதினும் பற்றிய கருத்தில் மாறாது சிவத்தை அறிபவர் சிவமயம் ஆனவர், பாடல் : நெறிவழியே சென்ற நேர்மையுள் ஒன்றி.................
சிவனானவன் தேவர்களுக்கும், திருமால் பிரமனுக்கும் எட்டாத இடத்தில் இருப்பவன், ஆனால் யோகியால் அவனை அடைய முடியும் எப்படி? சொல்கிறார் திருமூலர்
" பூவினற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமனம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
நாவியணைந்த நடுதறியாமே",
பூவினில் பொருந்திய மணம்போல் சீவனுக்குள்ளே சிவமணம் விளந்தது. அசைவற்ற சித்திரம் போல் மனதை சமநிலையில் வைத்து அறியவல்லார்க்கு சிவனை உணர்ந்தறிவது சாத்தியம் இது பாடலின் பொருள்.
ஞானம் என்பது தெளிவு, வீடு பேற்றுக்கான வழி " உலகம் மாயா காரியம் உலகமும் தான் பெற்ற சரீரமும் நிலைபேறுடைய திருவருளால் கிடைத்தன எல்லாம் அவனருள் என்றிருப்பது ஞானம், நெறியுடைய ஞானிக்கு சிரசில் சிந்தையில் அருவி நீர்ச் சலசலப்பு அமைந்திருக்கும், அந்த நீர்த் தொனி பேரருளாளனின் வரவை ஞானிக்கு புலப்படுத்தும் என்கிறது திருமந்திரம் பாடல் : அறிவும், அடக்கமும் அன்பும் உடனே.............
ஞானம் பெற்றவன் நல்வினையினால் உண்டாகும் நற்பயனையும், பாவத்தால் விளையும தீய பயனையும் கடந்து நிற்பான், அவன் மும்மலக் குற்றங்கள்( ஆணவம், கனமம், மாயை, ) அவனே சித்தன், சிவமுத்தன், பாடல் : நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்.............
ஞானத்தில் சிறந்தவனே மாமனிதன் என்கிறார் திருமூலர்
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டிலில்லை
ஞானத்ததின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நாரின்மிக் காரே. "
ஞானமே சிறந்த அறநெறி ஞானத்தைக் கொடுக்காத சமயம் ஏற்றதல்ல ஞானத்ரில் திளைப்பவரே மக்களில் மேலானவர்
திருச்சிற்றம்பலம் - ஒம் நமசிவாயம் ஓம்
மேலும் பல காண:
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
சைவ சாதனங்கள்
சரியை, கிரியை யோகம் ஞானம் இவை இறைவனை அறியவும் அடையவும் உதவும் சாதனங்கள்.
சரிளையாளர்கள் நாடு நகரந்தோறும் கோவில்களைத் தேடிச் சென்று இறைவனை வணங்குவர்,, அந்நிலையில் கோவிலில் வீற்றிருக்கும் இறைவன் அவர்களுடைய நெஞ்சத்தையும் தனது கோயிலாக்கி கொள்வார்.
கிரியை வழியில் நிற்பவர் திருநீறு, ருத்ராட்சம் முதலிய சிவசாதனங்களை அணிந்து சிவவேடம் தாங்கி நிற்பர், இவர் பூசை முறைகளை செய்து வருவர்,
இவ்விரண்டும் புறத்தே வழிபடுமட முறைகள், யோகியரும் ஞானியரும் அகத்தே வழிபடும் முறைகளை பயன்படுத்துவர்.
வண்ண மலர்களையும், சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களையும் சார்த்தி வணங்கினாலும், உடல் பற்றை விட்டு தியானிப்பவர்க்கன்றி,, தேன்போல் இன்பந் தரும் உச்சித் தளத்திருவடியை சேரமுடியாது என்கிறது திருமந்திரம், பாடல்: கானுறு கோடி கடிகமழ் சந்தனம்..............
யோகம் என்பது பொறிகளை அடக்கி, சித்தத்தை பிரமத்தில் நிறுத்துதல் ஆகும், கட்டுந்தறிபோல் உடலை ஆடாது அசையாது இருக்கச் செய்து, காற்று, மழை, மின்னல், இடி, மோதினும் பற்றிய கருத்தில் மாறாது சிவத்தை அறிபவர் சிவமயம் ஆனவர், பாடல் : நெறிவழியே சென்ற நேர்மையுள் ஒன்றி.................
சிவனானவன் தேவர்களுக்கும், திருமால் பிரமனுக்கும் எட்டாத இடத்தில் இருப்பவன், ஆனால் யோகியால் அவனை அடைய முடியும் எப்படி? சொல்கிறார் திருமூலர்
" பூவினற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமனம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
நாவியணைந்த நடுதறியாமே",
பூவினில் பொருந்திய மணம்போல் சீவனுக்குள்ளே சிவமணம் விளந்தது. அசைவற்ற சித்திரம் போல் மனதை சமநிலையில் வைத்து அறியவல்லார்க்கு சிவனை உணர்ந்தறிவது சாத்தியம் இது பாடலின் பொருள்.
ஞானம் என்பது தெளிவு, வீடு பேற்றுக்கான வழி " உலகம் மாயா காரியம் உலகமும் தான் பெற்ற சரீரமும் நிலைபேறுடைய திருவருளால் கிடைத்தன எல்லாம் அவனருள் என்றிருப்பது ஞானம், நெறியுடைய ஞானிக்கு சிரசில் சிந்தையில் அருவி நீர்ச் சலசலப்பு அமைந்திருக்கும், அந்த நீர்த் தொனி பேரருளாளனின் வரவை ஞானிக்கு புலப்படுத்தும் என்கிறது திருமந்திரம் பாடல் : அறிவும், அடக்கமும் அன்பும் உடனே.............
ஞானம் பெற்றவன் நல்வினையினால் உண்டாகும் நற்பயனையும், பாவத்தால் விளையும தீய பயனையும் கடந்து நிற்பான், அவன் மும்மலக் குற்றங்கள்( ஆணவம், கனமம், மாயை, ) அவனே சித்தன், சிவமுத்தன், பாடல் : நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்.............
ஞானத்தில் சிறந்தவனே மாமனிதன் என்கிறார் திருமூலர்
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டிலில்லை
ஞானத்ததின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நாரின்மிக் காரே. "
ஞானமே சிறந்த அறநெறி ஞானத்தைக் கொடுக்காத சமயம் ஏற்றதல்ல ஞானத்ரில் திளைப்பவரே மக்களில் மேலானவர்
திருச்சிற்றம்பலம் - ஒம் நமசிவாயம் ஓம்
மேலும் பல காண:
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 14
தியான வழி - ஞான வழி
தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம்
"தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம்உள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வதெவ்வாறே"
தூங்கும் போது என்ன நிகழ்கின்றன என்று அறியாது இருப்பது போலத் தியான நிலையில் உலக விடயங்களை உணராது இருத்தலின் , அந்நிலையில் ஈடுபட்டிருந்த நிலையை தூங்கும் நிலையாகும், தூங்காமல் தூங்கி சுகம்பெறும் அமைதியான நிலையை தியானம் என்கிறார் திருமூலர், அந்நிலையில் இருப்பவர் இறைவனது இருப்பிடமான சிவலோகத்தையும், சிவனோடு ஒன்றியிருக்கும் யோகநிலையையும் அடைவர், இதனால் அவருக்கு அழியா இன்பத்தையும் பெறுவர் என்கிறார்,
மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம், மகான்கள் இடைவிடாது ஆற்றொழுக்காய் தியானித்து கொண்டிருக்கிறார்கள், தியானத்தில் கிடைக்கிறது ஆத்ம ஞானம், அதுவே மண்ணில் இருந்து விண்ணுக்குப் பாலமாகிறது, அது பொய்யில் இருந்து உண்மைக்கும் இருளில் இருந்து ஒளிக்கும் துன்பத்திலிருந்து இன்பத்திற்கும், குழப்பத்திலிருந்து தெளிவிற்கும், நிம்மதியற்ற நிலையில் இருந்து நிலையான அமைதிக்கும், தீயஒழுக்கத்தில் இருந்து நல்லொழுக்கத்திற்கும் நம்மை நிலைமாற்றம் செய்கிறது, தியானத்தில் ஈடுபடுகிறவர் அமைதியும், ஒருமுகப்படத்திய அறிவும், கவனமும் கொண்டிருக்கவேண்டும்,
நுட்பமான பிரம்மத்தை நுட்பமனத்துடன் அணுகுங்கள், தியாகத்திற்கேற்ற சாத்வீக சூழ்நிலையை தோற்றுவித்துக் கொள்ளுங்கள், தியானத்ததிற்கு உகந்த நேரம் பிரம்ம முகூர்த்த காலை நேரமே உகந்தது, ஏனெனில் அந்நேரம் உங்கள் மனம் தெளிவாகவும், அமைதியாகவும, இருக்கும், பற்றுகளைப போலவே கவலைகளையும் ஒதுக்கியவர்க்கே தியானம் உண்டாகும், மனதை வழிக்கு கொண்டு வருவதற்கு கடுமையான போராட்டங்கள் வேண்டாம், எண்ணங்களை வலுக்கட்டாயமாக விரட்டியடிக்க முடியாது, எண்ணஙகள் தானாக வந்து, தானாகவே போய்விடும், என்று இயல்பாக இருந்து விடுங்கள், தியானப் பயிற்சி பழக்கத்தில் சரியாக அமையும்.
தியானத்தில் பொறுமை அவசியம், அதன் பலனை உடனே எதிர் பார்க்க முடியாது, சிலருக்கு பல ஆண்டுகள் வரைகூட ஆகலாம், பொறுமையுடன் பயிற்சி அவசியம், தியானப்பாதையில் தடைகள் நீங்கும், ஐயங்கள் தீர்வதும் படிப்படியாகவே நிகழும், தியானம் ஒரு யோகம், மோட்ச சாதனம், எண்ணங்களின் ஆற்றல் பெருகவும், நோக்கம் நிறைவேறவும் தியானம் உதவும், தியானம் என்கிற பெருநெருப்பில் தீய சக்திகள் அழிந்துவிடும்,
கீதையில் " தியான யோகத்தில் முன்னேற விரும்புகிறவனுக்கு கர்மம் உபாயமாகிறது, தியான சித்தி அடைந்தவனுக்கு செயலற்று இருப்பது உபாயமாகிறது,"என்கிறது,
மனம், புலன்கள் இவற்றை அடக்கி எதிலும் ஆசையில்லாமல் தனியொருவனாய் தன்னிடத்தில் இருந்து இடைவிடாது மனதை ஒடுக்க வேண்டும்,உள்ளதை உள்ளபடி அறிய ஏகாந்தம் அவசியம், தியானிப்பவர் நாசி முனையில் பார்வையை ஒருமுனைப்படுத்தினால் தடுமாற்றம் தூக்கம் ஏற்படாது, தியானத்தின் போது விருப்பு வெறுப்பு மகிழ்ச்சி துயரம், தீய நினைவுகள் இருக்கக் கூடாது, மனதில் வைராக்கியம் இருக்க வேண்டும், தியானத்தின் மூலம் யோகி தன்னுடைய ஆத்மாவை இறைவனுடன் இணைத்துக் கொண்டு அமைதி அடைகிறான், மிதமாய் உண்டு, மிதமாய உறங்கி, அளவோடு கர்மங்கள் செய்து, விழிப்போடு இருப்பவனுக்கு தியான யோகம் துக்க்ததைப் போக்கும்,
மனதை வசப்படுத்துவது கடினந்தான் ஆனாலல் பயிற்சினாலும், வைராக்கியத்தினாலும், அதை வசப்படுத்த முடியும், என்றார் பரமாத்மா,
தியானம் பற்றி திருமந்திரம்
இறைவனை இடைவிடாது சிந்தித்திருப்பது தியானம்,
சரீரத்தில் அக்கறை காட்டுகிறவர்கள் தங்கள் ஆன்மா குறித்து அக்கறை கொள்வதில்லை, அவர்கள் இறைவனை நினைப்பதில்லை, இறைவன் விளக்கமுறும் சிந்தையிலும், கவனம் வைப்பதில்லை, தியானம் என்பது இறைவனை சிநதித்தருப்பதன்றி வேறேயென்ன என்று கேட்கிறது திருமந்திரம், இதன் பாடல்: ஒரு பொழுதுன்னார் உடலோடுயிரை............
சுழிமுனை தியானம் குறித்து கீழ்கண்ட பாடல்
மனத்து விளக்கினை மான்பட ஏற்றி
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்கும் திரயொக்கத்தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே,
மனத்தில் விளஙகும் ஒளியை மேலே செலுத்தி சினத்து நெருப்பை நீக்குதல் வேண்டும், கருவி கரணங்களை வழிப்படுத்தி தூண்டவும் மனத்துள் விளங்கும் சிவம் மங்காத விளக்காகும்,
ஆயிரமான்ணட யோகத்திருந்தும் காணமுடியாத இறைவன் கண்ணிலும், இதயத்திலும், நிறைந்திருக்கிறான், கண்ணாடியில் உருவத்தை காண்பது போல் உங்கள் தியானத்தில் அவனை எளிதாய் நீங்கள் காணமுடியும் என்கிறார் ததிருமூலர், பாடல்: எண்ணாயிரத்தாண்டு யோகம் இருக்கினும்............
இறைவன் ஒளிவடித்ததிலும், ஒலிவடிவிலும் தன்னை வெளிப்படுத்துவதை தியானிப்பவர் அறியமுடியும், தியானத்தை மேற்கொண்டவர் பத்துவித ஒலிகளை கேட்கிறார் , மணி கடல், யானை, புல்லாங்குழல், மேகம், வண்டு தும்பி, சங்கு, பேரிகை, யாழ் இவற்றின் ஒலிகள், நுட்ப ஒலிகளை அறியும், திறன் தியானத்தில உண்டாகிறது. பாடல் ; மணிகடல் யானை வார்குழல் மேகம்.................
தியானம் செய்யும சாதகர் தனது கண் பார்வையை புருவ மத்தியில் செலுத்திருக்க வேண்டும் என்கிறார் திருமூலர்,
பள்ளி அறையிற் பகலே இருளில்லை
கொள்ளி அறையில் கொளுந்தாமற் காக்கலாம்
ஒள்ளிது அறியில் ஓர்ஓசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே.
சகஸ்கரதளத்தில் விளங்குகறாள் அன்னை, அங்கே பேரோளி தீபம் எப்போதும் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது, ஞானியரும், யோகியரும் அவ்வொளியை காண்பர் பேரின்பத்தை வழங்கும் பேரோளி அனுபவம் தியானத்தில் கிடைக்கும், ஆணவ இருட்டு அதிகரிப்பில் நெஞ்சம் இளைப்புறும், தியானத்தில் ஒளி மண்டலம் மூன்றிலும் பொருந்தி மேற்ெச்ல்ல அந்த இளைப்பு நீங்கும், தாமதம், இராசதம், சாத்துவிகம், என்கிற முக்குண தோசத்தில் உண்டாகும் இருள் தியானத்தில் நீங்கும், உச்சியில் ஒளி காணும்,
திருச்சிற்றம்பலம் - ஓம் நமச்சிவாய ஓம்
மேலும் பலகாண:
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
தியான வழி - ஞான வழி
தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம்
"தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம்உள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வதெவ்வாறே"
தூங்கும் போது என்ன நிகழ்கின்றன என்று அறியாது இருப்பது போலத் தியான நிலையில் உலக விடயங்களை உணராது இருத்தலின் , அந்நிலையில் ஈடுபட்டிருந்த நிலையை தூங்கும் நிலையாகும், தூங்காமல் தூங்கி சுகம்பெறும் அமைதியான நிலையை தியானம் என்கிறார் திருமூலர், அந்நிலையில் இருப்பவர் இறைவனது இருப்பிடமான சிவலோகத்தையும், சிவனோடு ஒன்றியிருக்கும் யோகநிலையையும் அடைவர், இதனால் அவருக்கு அழியா இன்பத்தையும் பெறுவர் என்கிறார்,
மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம், மகான்கள் இடைவிடாது ஆற்றொழுக்காய் தியானித்து கொண்டிருக்கிறார்கள், தியானத்தில் கிடைக்கிறது ஆத்ம ஞானம், அதுவே மண்ணில் இருந்து விண்ணுக்குப் பாலமாகிறது, அது பொய்யில் இருந்து உண்மைக்கும் இருளில் இருந்து ஒளிக்கும் துன்பத்திலிருந்து இன்பத்திற்கும், குழப்பத்திலிருந்து தெளிவிற்கும், நிம்மதியற்ற நிலையில் இருந்து நிலையான அமைதிக்கும், தீயஒழுக்கத்தில் இருந்து நல்லொழுக்கத்திற்கும் நம்மை நிலைமாற்றம் செய்கிறது, தியானத்தில் ஈடுபடுகிறவர் அமைதியும், ஒருமுகப்படத்திய அறிவும், கவனமும் கொண்டிருக்கவேண்டும்,
நுட்பமான பிரம்மத்தை நுட்பமனத்துடன் அணுகுங்கள், தியாகத்திற்கேற்ற சாத்வீக சூழ்நிலையை தோற்றுவித்துக் கொள்ளுங்கள், தியானத்ததிற்கு உகந்த நேரம் பிரம்ம முகூர்த்த காலை நேரமே உகந்தது, ஏனெனில் அந்நேரம் உங்கள் மனம் தெளிவாகவும், அமைதியாகவும, இருக்கும், பற்றுகளைப போலவே கவலைகளையும் ஒதுக்கியவர்க்கே தியானம் உண்டாகும், மனதை வழிக்கு கொண்டு வருவதற்கு கடுமையான போராட்டங்கள் வேண்டாம், எண்ணங்களை வலுக்கட்டாயமாக விரட்டியடிக்க முடியாது, எண்ணஙகள் தானாக வந்து, தானாகவே போய்விடும், என்று இயல்பாக இருந்து விடுங்கள், தியானப் பயிற்சி பழக்கத்தில் சரியாக அமையும்.
தியானத்தில் பொறுமை அவசியம், அதன் பலனை உடனே எதிர் பார்க்க முடியாது, சிலருக்கு பல ஆண்டுகள் வரைகூட ஆகலாம், பொறுமையுடன் பயிற்சி அவசியம், தியானப்பாதையில் தடைகள் நீங்கும், ஐயங்கள் தீர்வதும் படிப்படியாகவே நிகழும், தியானம் ஒரு யோகம், மோட்ச சாதனம், எண்ணங்களின் ஆற்றல் பெருகவும், நோக்கம் நிறைவேறவும் தியானம் உதவும், தியானம் என்கிற பெருநெருப்பில் தீய சக்திகள் அழிந்துவிடும்,
கீதையில் " தியான யோகத்தில் முன்னேற விரும்புகிறவனுக்கு கர்மம் உபாயமாகிறது, தியான சித்தி அடைந்தவனுக்கு செயலற்று இருப்பது உபாயமாகிறது,"என்கிறது,
மனம், புலன்கள் இவற்றை அடக்கி எதிலும் ஆசையில்லாமல் தனியொருவனாய் தன்னிடத்தில் இருந்து இடைவிடாது மனதை ஒடுக்க வேண்டும்,உள்ளதை உள்ளபடி அறிய ஏகாந்தம் அவசியம், தியானிப்பவர் நாசி முனையில் பார்வையை ஒருமுனைப்படுத்தினால் தடுமாற்றம் தூக்கம் ஏற்படாது, தியானத்தின் போது விருப்பு வெறுப்பு மகிழ்ச்சி துயரம், தீய நினைவுகள் இருக்கக் கூடாது, மனதில் வைராக்கியம் இருக்க வேண்டும், தியானத்தின் மூலம் யோகி தன்னுடைய ஆத்மாவை இறைவனுடன் இணைத்துக் கொண்டு அமைதி அடைகிறான், மிதமாய் உண்டு, மிதமாய உறங்கி, அளவோடு கர்மங்கள் செய்து, விழிப்போடு இருப்பவனுக்கு தியான யோகம் துக்க்ததைப் போக்கும்,
மனதை வசப்படுத்துவது கடினந்தான் ஆனாலல் பயிற்சினாலும், வைராக்கியத்தினாலும், அதை வசப்படுத்த முடியும், என்றார் பரமாத்மா,
தியானம் பற்றி திருமந்திரம்
இறைவனை இடைவிடாது சிந்தித்திருப்பது தியானம்,
சரீரத்தில் அக்கறை காட்டுகிறவர்கள் தங்கள் ஆன்மா குறித்து அக்கறை கொள்வதில்லை, அவர்கள் இறைவனை நினைப்பதில்லை, இறைவன் விளக்கமுறும் சிந்தையிலும், கவனம் வைப்பதில்லை, தியானம் என்பது இறைவனை சிநதித்தருப்பதன்றி வேறேயென்ன என்று கேட்கிறது திருமந்திரம், இதன் பாடல்: ஒரு பொழுதுன்னார் உடலோடுயிரை............
சுழிமுனை தியானம் குறித்து கீழ்கண்ட பாடல்
மனத்து விளக்கினை மான்பட ஏற்றி
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்கும் திரயொக்கத்தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே,
மனத்தில் விளஙகும் ஒளியை மேலே செலுத்தி சினத்து நெருப்பை நீக்குதல் வேண்டும், கருவி கரணங்களை வழிப்படுத்தி தூண்டவும் மனத்துள் விளங்கும் சிவம் மங்காத விளக்காகும்,
ஆயிரமான்ணட யோகத்திருந்தும் காணமுடியாத இறைவன் கண்ணிலும், இதயத்திலும், நிறைந்திருக்கிறான், கண்ணாடியில் உருவத்தை காண்பது போல் உங்கள் தியானத்தில் அவனை எளிதாய் நீங்கள் காணமுடியும் என்கிறார் ததிருமூலர், பாடல்: எண்ணாயிரத்தாண்டு யோகம் இருக்கினும்............
இறைவன் ஒளிவடித்ததிலும், ஒலிவடிவிலும் தன்னை வெளிப்படுத்துவதை தியானிப்பவர் அறியமுடியும், தியானத்தை மேற்கொண்டவர் பத்துவித ஒலிகளை கேட்கிறார் , மணி கடல், யானை, புல்லாங்குழல், மேகம், வண்டு தும்பி, சங்கு, பேரிகை, யாழ் இவற்றின் ஒலிகள், நுட்ப ஒலிகளை அறியும், திறன் தியானத்தில உண்டாகிறது. பாடல் ; மணிகடல் யானை வார்குழல் மேகம்.................
தியானம் செய்யும சாதகர் தனது கண் பார்வையை புருவ மத்தியில் செலுத்திருக்க வேண்டும் என்கிறார் திருமூலர்,
பள்ளி அறையிற் பகலே இருளில்லை
கொள்ளி அறையில் கொளுந்தாமற் காக்கலாம்
ஒள்ளிது அறியில் ஓர்ஓசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே.
சகஸ்கரதளத்தில் விளங்குகறாள் அன்னை, அங்கே பேரோளி தீபம் எப்போதும் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது, ஞானியரும், யோகியரும் அவ்வொளியை காண்பர் பேரின்பத்தை வழங்கும் பேரோளி அனுபவம் தியானத்தில் கிடைக்கும், ஆணவ இருட்டு அதிகரிப்பில் நெஞ்சம் இளைப்புறும், தியானத்தில் ஒளி மண்டலம் மூன்றிலும் பொருந்தி மேற்ெச்ல்ல அந்த இளைப்பு நீங்கும், தாமதம், இராசதம், சாத்துவிகம், என்கிற முக்குண தோசத்தில் உண்டாகும் இருள் தியானத்தில் நீங்கும், உச்சியில் ஒளி காணும்,
திருச்சிற்றம்பலம் - ஓம் நமச்சிவாய ஓம்
மேலும் பலகாண:
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
http://vpoompalani05.blogspot.in/
திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 13
பெரியாரைத் துணைகோடல்
நல்லாரோடு இணங்கியிருப்பது நன்மை செய்யும், ஆன்மீகத்தில் முன்னேற விரும்புகிறவர் ஞானம்மிக்கவரைத் துணையாய் கொள்ளவேண்டும்,
அறிவார்அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியாருடன் கூடல் பேரின்பமாமே. என்கிறது மந்திரம்
உண்மையை அறியும் சான்றோர் ஆன்மதத்துவம் வித்தியாதத்துவம் உள்ளிட்ட அநேக தத்துவங்கள் கடந்து சிவதத்துவத்தில் விளங்குவர், நல்ல நெறியில் நிற்பவரேயானாலும் பெரியோருடன் கூடியிருப்பது பேரின்பம்
சிறந்த நூலறிவும் தூய ஒழுக்கமும் உடைய பெரியோரைத் துணையாய் கொள்ளவேண்டும் என்கிறார் வள்ளுவர்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் ---- குறள்
அறத்தின் இயலபை அறிந்து தம்மினும் மேம்பட்ட அறிவுடையார் நட்பை பெறவேண்டும் என்பது இதன் பொருள்
நாலடியார் பாடலொன்றும் இங்கே குறிப்பிடலாம்
பாலோடளாய நீர் பாலகுமல்லாது
நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம் - தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம் நல்ல
பெரியார் பெருமையச் சார்ந்து
பாலுடன் கலந்த நீர் பாலாக தோன்றுமேயல்லாது நீராக தனது நிறம் விளங்கித் தோன்றாது, ஆராய்ந்து பார்க்கின் பெருந்தன்மை மிக்க பெரியோருடன் பொருந்ததி நிற்பின் சிறியவரின் குறைபாடும் வெளிப்பட்டு தோன்றாது பெருமையாகவே விளங்கும், பூவேடு சேர்ந்த நாறும் நறுமணம் பெறும் என்பது போல ஆகும்,
அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியா ருடன் கூடல் பேரின்ப மாமே.
அறிவுடைய பெரியோர், தேவர்க்குத் தலைவ னாகிய சிவபிரானை அடையும் வழிகளை யெல்லாம். ஆராய்ந்து; அவற்றானே அவனை அடைவர். பின்னர் அவனேயாய் நிற்பர், ஆதலின், தாமும் நன்னெறியில் உறைத்துநின்று, பிறரையும் அவ்வாறு நிற்கச்செய்து உலகிற்கு நயம்புரிகின்ற பெரியாருடன் கூடுதலே பேரின்பம் எய்துவதற்கு வழியாகும்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 13
பெரியாரைத் துணைகோடல்
நல்லாரோடு இணங்கியிருப்பது நன்மை செய்யும், ஆன்மீகத்தில் முன்னேற விரும்புகிறவர் ஞானம்மிக்கவரைத் துணையாய் கொள்ளவேண்டும்,
அறிவார்அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியாருடன் கூடல் பேரின்பமாமே. என்கிறது மந்திரம்
உண்மையை அறியும் சான்றோர் ஆன்மதத்துவம் வித்தியாதத்துவம் உள்ளிட்ட அநேக தத்துவங்கள் கடந்து சிவதத்துவத்தில் விளங்குவர், நல்ல நெறியில் நிற்பவரேயானாலும் பெரியோருடன் கூடியிருப்பது பேரின்பம்
சிறந்த நூலறிவும் தூய ஒழுக்கமும் உடைய பெரியோரைத் துணையாய் கொள்ளவேண்டும் என்கிறார் வள்ளுவர்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் ---- குறள்
அறத்தின் இயலபை அறிந்து தம்மினும் மேம்பட்ட அறிவுடையார் நட்பை பெறவேண்டும் என்பது இதன் பொருள்
நாலடியார் பாடலொன்றும் இங்கே குறிப்பிடலாம்
பாலோடளாய நீர் பாலகுமல்லாது
நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம் - தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம் நல்ல
பெரியார் பெருமையச் சார்ந்து
பாலுடன் கலந்த நீர் பாலாக தோன்றுமேயல்லாது நீராக தனது நிறம் விளங்கித் தோன்றாது, ஆராய்ந்து பார்க்கின் பெருந்தன்மை மிக்க பெரியோருடன் பொருந்ததி நிற்பின் சிறியவரின் குறைபாடும் வெளிப்பட்டு தோன்றாது பெருமையாகவே விளங்கும், பூவேடு சேர்ந்த நாறும் நறுமணம் பெறும் என்பது போல ஆகும்,
அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியா ருடன் கூடல் பேரின்ப மாமே.
அறிவுடைய பெரியோர், தேவர்க்குத் தலைவ னாகிய சிவபிரானை அடையும் வழிகளை யெல்லாம். ஆராய்ந்து; அவற்றானே அவனை அடைவர். பின்னர் அவனேயாய் நிற்பர், ஆதலின், தாமும் நன்னெறியில் உறைத்துநின்று, பிறரையும் அவ்வாறு நிற்கச்செய்து உலகிற்கு நயம்புரிகின்ற பெரியாருடன் கூடுதலே பேரின்பம் எய்துவதற்கு வழியாகும்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருமூலரும் திருமந்தும் / உபதேசம் 13 . பெரியோர் இயல்பு
பற்றிநின் றார்நெஞ்சிற் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.
பற்றறாதவர் உள்ளத்தில் பல்லி ஒன்று உள்ளது; அஃது அவரது மூக்கையும், நாக்கையும் பற்றிக்கிடந்து, எந்த நேரமும், எவற்றையேனும் படபடவென்று சொல்லிக்கொண்டிருக்கின்றது. பற்றுக்களைத் துடைத்தவரது உள்ளத்திலோ பெரிய பொறுமை என்னும் நீர் வற்றாது நிறைந்து நிற்கின்றது.
கடுஞ்சொற் பேசுதற்குக் காரணமான வெகுளியை, அடக்கமின்றிப் பலகாலும் படபடத்து ஒலிக்கின்ற பல்லியாக உரு வகித்தார். அது மூக்கையும் நாக்கையும் மூடிக்கிடப்பதாகக் கூறியது, அவை இரண்டுமே எழுத்தொலி புறப்படும் இடமாய் இருத்தல் பற்றி. வெகுளியால் முணுமுணுக்கின்றவர்கட்குப் பேச்சுப் பெரும் பான்மையும் மூக்கின் துணையோடே நிகழ்தல் அறிக `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் முக்குற்றங்களுள் நடுவுநின்ற வெகுளியுளதாயின் ஏனை இரண்டும் நீங்கினவாகா ஆதலின், அவ்விரண்டையும் விட்ட மாகேசுரர் வெகுளியுடையராதல் கூடாது என்பதனை வலியுறுத்தற்கு, வெகுளி, காமமும், மயக்கமும் உடையாரையே பற்றிநின்று கடுஞ் சொற் பிறப்பித்தலை உடன் கூறினார். அதனானே, மாகேசுரர் கடுஞ் சொற் கூறலாகாமையும் பெறப்பட்டது. ஆளுடைய பிள்ளையார் சமணரால் இடப்பட்ட தீயைப் `பாண்டியன்பால் செல்க` என வெஞ் சொற் சொல்லியது` மாகேசுரராய அவர்க்குத் தகுவதோ` என ஐயுறாமைப் பொருட்டன்றே அவர், ``செல்க`` என வாளா கூறாது, ``பையவே செல்க`` எனப் பணித்தமையை எடுத்துக்காட்டி, ``பையவே `` என்றாராயினும் ``செல்க`` என்றது என்னை என்பார்க்கு.
பயிர்வளர்வதற்கு நீர்போலச் சிவபத்தி வளர்வதற்குப் பொறை யுடைமை இன்றியமையாததாதலின் அதனை நீராக உருவகம் செய்தார்.
மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தைவித்திப் பொய்ம்மையாம் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப்பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலியிட்டுச்
செம்மையுள் நிற்பராகில் சிவகதி
விளையு மாறே. -தி.4 ப.76 பா.2
என்று நாவுக்கரசரும் அருளிச்செய்தார்.
இதனால், `மாகேசுரர் பிறர் செய்யும் மிகையைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
வல்வகையால்உம் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யும்
கொல்லையில் நின்று குதிகொள்ளுங் கூத்தனுக்
கெல்லையி லாத இலயமுண்டாமே.
காட்டில் ஆடுகின்ற கூத்தனுக்கு அளவு கடந்த பொறுமையே பொருளாக அமைவது. அதனால், மாகேசுரர்களே, நீவிர் வாழும் இடத்திற்கு உள்ளும், புறம்பும் இயன்ற அளவில் பலவகையாலும் உள்ளத்தைப் பொறுமையோடு இருக்கப் பழக்கிப் பக்குவப்படுத்துங்கள்.
பொருண்மையாவது உளதாந் தன்மையாதலின், பொருளை `உள்ளது` என்றார். இங்ஙனம் அன்றிக் கிடந்தவாறேகொண்டு, `பதம் செய்தால் உம்மிடத்துக் கூத்தனுக்கு எல்லையில்லாத ஒற்றுமை (இரக்கம்) உண்டாகும்` என உரைத்தலும் ஆம். வெகுளியுடைய உள்ளத்தில் அன்பும், அருளும் தோன்றா ஆதலின், அன்பையும், அருளையும் பொருளாக விரும்பும் சிவ பெருமான் அதற்கு முதலாகிய பொறையைப் பொருளாக விரும்புவன்
இவ்வாறு, பொறையுடைமையை விதிக்கவே, அதனடியாகப் பிறக்கும் இன்னா செய்யாமையும் விதிக்கப்பட்டதாம். புலால் உண்ணாமையாகிய இயைபு பற்றி, கொல்லாமை முன்பே விதிக்கப் பட்டது.
உயிர்களின் பக்குவதற்கு ஏற்றபடி உடலும் உள்ளத்திலும் பலவகையாலும் இன்ப துன்பங்களை அனுபவிக்க செய்து இறைவன் அவர்களை பக்குவப்படுத்து கிறான், பொறுமையை கைக்கொள்வது சிறப்பு உடையவர்க்கே இறைவன் திருவடியில் இன்புறுதல் உண்டாகும்,
பொறுமையின் மேன்ைமைய நாலடியார் (பொறையுடமைப் பகுதி ) பாடலி்ல் விளக்கம் கொள்ளலாம்,
அறிவதறிந்தடங்கி அஞ்சுவதஞ்சி
உறுவதுலகுவப்பச் செய்து / பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.
தகுதியான நூல்களை ஐயந்திரபற கற்று அவை கூறும் நல்வழியில் ஒழுகி அஞ்ச வேண்டிய தீயவற்றிக்கு அஞ்சி, தமக்கு பொருத்தமான செயல்களை உலகம் கண்டு மகிழும்படி செய்து தாம்பெற்ற பொருட்களுடன் இனிதே வாழும் தன்ைம யுடையவர் எக்காலத்திலும் துன்பமடைவதில்லை.
திருச்சிற்றம்பலம் / ஒம் நமசிவாயம் ஓம்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
பற்றிநின் றார்நெஞ்சிற் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.
பற்றறாதவர் உள்ளத்தில் பல்லி ஒன்று உள்ளது; அஃது அவரது மூக்கையும், நாக்கையும் பற்றிக்கிடந்து, எந்த நேரமும், எவற்றையேனும் படபடவென்று சொல்லிக்கொண்டிருக்கின்றது. பற்றுக்களைத் துடைத்தவரது உள்ளத்திலோ பெரிய பொறுமை என்னும் நீர் வற்றாது நிறைந்து நிற்கின்றது.
கடுஞ்சொற் பேசுதற்குக் காரணமான வெகுளியை, அடக்கமின்றிப் பலகாலும் படபடத்து ஒலிக்கின்ற பல்லியாக உரு வகித்தார். அது மூக்கையும் நாக்கையும் மூடிக்கிடப்பதாகக் கூறியது, அவை இரண்டுமே எழுத்தொலி புறப்படும் இடமாய் இருத்தல் பற்றி. வெகுளியால் முணுமுணுக்கின்றவர்கட்குப் பேச்சுப் பெரும் பான்மையும் மூக்கின் துணையோடே நிகழ்தல் அறிக `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் முக்குற்றங்களுள் நடுவுநின்ற வெகுளியுளதாயின் ஏனை இரண்டும் நீங்கினவாகா ஆதலின், அவ்விரண்டையும் விட்ட மாகேசுரர் வெகுளியுடையராதல் கூடாது என்பதனை வலியுறுத்தற்கு, வெகுளி, காமமும், மயக்கமும் உடையாரையே பற்றிநின்று கடுஞ் சொற் பிறப்பித்தலை உடன் கூறினார். அதனானே, மாகேசுரர் கடுஞ் சொற் கூறலாகாமையும் பெறப்பட்டது. ஆளுடைய பிள்ளையார் சமணரால் இடப்பட்ட தீயைப் `பாண்டியன்பால் செல்க` என வெஞ் சொற் சொல்லியது` மாகேசுரராய அவர்க்குத் தகுவதோ` என ஐயுறாமைப் பொருட்டன்றே அவர், ``செல்க`` என வாளா கூறாது, ``பையவே செல்க`` எனப் பணித்தமையை எடுத்துக்காட்டி, ``பையவே `` என்றாராயினும் ``செல்க`` என்றது என்னை என்பார்க்கு.
பயிர்வளர்வதற்கு நீர்போலச் சிவபத்தி வளர்வதற்குப் பொறை யுடைமை இன்றியமையாததாதலின் அதனை நீராக உருவகம் செய்தார்.
மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தைவித்திப் பொய்ம்மையாம் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப்பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலியிட்டுச்
செம்மையுள் நிற்பராகில் சிவகதி
விளையு மாறே. -தி.4 ப.76 பா.2
என்று நாவுக்கரசரும் அருளிச்செய்தார்.
இதனால், `மாகேசுரர் பிறர் செய்யும் மிகையைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
வல்வகையால்உம் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யும்
கொல்லையில் நின்று குதிகொள்ளுங் கூத்தனுக்
கெல்லையி லாத இலயமுண்டாமே.
காட்டில் ஆடுகின்ற கூத்தனுக்கு அளவு கடந்த பொறுமையே பொருளாக அமைவது. அதனால், மாகேசுரர்களே, நீவிர் வாழும் இடத்திற்கு உள்ளும், புறம்பும் இயன்ற அளவில் பலவகையாலும் உள்ளத்தைப் பொறுமையோடு இருக்கப் பழக்கிப் பக்குவப்படுத்துங்கள்.
பொருண்மையாவது உளதாந் தன்மையாதலின், பொருளை `உள்ளது` என்றார். இங்ஙனம் அன்றிக் கிடந்தவாறேகொண்டு, `பதம் செய்தால் உம்மிடத்துக் கூத்தனுக்கு எல்லையில்லாத ஒற்றுமை (இரக்கம்) உண்டாகும்` என உரைத்தலும் ஆம். வெகுளியுடைய உள்ளத்தில் அன்பும், அருளும் தோன்றா ஆதலின், அன்பையும், அருளையும் பொருளாக விரும்பும் சிவ பெருமான் அதற்கு முதலாகிய பொறையைப் பொருளாக விரும்புவன்
இவ்வாறு, பொறையுடைமையை விதிக்கவே, அதனடியாகப் பிறக்கும் இன்னா செய்யாமையும் விதிக்கப்பட்டதாம். புலால் உண்ணாமையாகிய இயைபு பற்றி, கொல்லாமை முன்பே விதிக்கப் பட்டது.
உயிர்களின் பக்குவதற்கு ஏற்றபடி உடலும் உள்ளத்திலும் பலவகையாலும் இன்ப துன்பங்களை அனுபவிக்க செய்து இறைவன் அவர்களை பக்குவப்படுத்து கிறான், பொறுமையை கைக்கொள்வது சிறப்பு உடையவர்க்கே இறைவன் திருவடியில் இன்புறுதல் உண்டாகும்,
பொறுமையின் மேன்ைமைய நாலடியார் (பொறையுடமைப் பகுதி ) பாடலி்ல் விளக்கம் கொள்ளலாம்,
அறிவதறிந்தடங்கி அஞ்சுவதஞ்சி
உறுவதுலகுவப்பச் செய்து / பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.
தகுதியான நூல்களை ஐயந்திரபற கற்று அவை கூறும் நல்வழியில் ஒழுகி அஞ்ச வேண்டிய தீயவற்றிக்கு அஞ்சி, தமக்கு பொருத்தமான செயல்களை உலகம் கண்டு மகிழும்படி செய்து தாம்பெற்ற பொருட்களுடன் இனிதே வாழும் தன்ைம யுடையவர் எக்காலத்திலும் துன்பமடைவதில்லை.
திருச்சிற்றம்பலம் / ஒம் நமசிவாயம் ஓம்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு கணமும் தெய்வத்தின் துணையோடு நடைபெறுவதை அன்பர்கள் பலர் தமது அனுபவத்தால் அறிவார்கள்.
எனவேதான் துன்பங்களிருந்தும் அகால மரணங்களிளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும்படி இறைவனை நாம் வேண்டுகிறோம். பொழுது புலர்ந்ததும் நமக்கு இன்னொரு வாழ்நாள் தந்த ஈசனை வாழ்த்தி வணங்க வேண்டும். விடியலில் நீராடி, வெண்ணீற்றை மெய்யில் பூசி, திருக்கோயிலை அடைந்து, அலகிட்டு,மெழுக்கும் இட்டுப்,பூமாலைகள் மற்றும் இண்டை கட்டி அடியிணைக்குச் சார்த்தி, "சங்கரா , நீலகண்டா, சம்புவே, சந்திரசேகரா, கங்காதரா" .... எனப்பல நாமாக்களால் பரவிக் கைகள் தலை மீதுற, கண்களில் நீர்மல்க வழிபடும் அடியார் நெஞ்சத்தைக் கோயிலாகக் கொள்வான் பரமேச்வரன்.
விடியற்காலத்தில் பொய்கையை அடைந்து, அதில் மூழ்கி நீராடுகையில் உன் கழலையே பாடுகின்றோம். நாங்கள் உனக்கு வழிவழியாக அடிமைசெய்யும் குடியில் பிறந்தவர்கள். உன் அருளால் மட்டுமே வாழ்பவர்கள். ஐயனே, தீயினைப் போன்று ஒளிரும் சிவந்த நிறம் கொண்டவனே, சிற்றிடையையும், அழகிய மைதீட்டிய கண்களையும் உடைய பெருமாட்டியின் மணவாளனே. எம்மை ஆட்கொண்டு அருளுவதும் உனக்கு ஒரு விளையாட்டே அன்றோ! நீ என்றுமுதல் எங்களை ஆட்கொண்டாயோ அன்றே எங்கள் ஆவியும் உடலும்,உடைமைகளும் உனக்கே உரியதாகி விட்டன அல்லவா? எனவே எம்மை வருத்தாமலும் தண்டிக்காமலும் எம் பிழைக்கே இரங்கி அப்பிழைகளைப் பொறுத்துக் காப்பாற்றுவாயாக. இவ்வாறு இறைவனிடம் இத் திருவெம்பாவைப் பாடல் நமக்காகப் பரிந்து உரைப்பதுபோலத் தோன்றுகிறது.
"மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல் பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல் போல்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடம்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்."
பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் சிற்றில் பருவத்தில் , மணலால் வீடு (சிற்றில்) கட்டும் சிறார்கள் எவ்வாறு வேண்டுவார்கள் தெரியுமா? " நீ காக்கும் கடவுள் அல்லவா . இம்மணல் வீட்டை உனது பாதங்களால் அழிக்கலாமா? உன்னைத் தவிர எம்மைக் காப்பவர் எவரே? "சிற்றில் சிதையலே" என்று வேண்டுவதாகப் பாடல் அமைந்திருக்கும்.
இறைவனை நினையாமல் பொழுது போக்கி அவனைப் புறக்கணிப்பார்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவதானால் எத்தனை பேர் எஞ்சுவரோ தெரியாது. மழை அவன் தருவது. உணவும் அவன் தந்தது. செல்வமும் அவன் தந்தது. இப்படி எல்லாமே அவன் அருளால் மட்டுமே கிடைத்திருந்தும் நன்றி மறந்தவர்களாய் இருக்கிறோம். ஈச்வரனின் கோபத்திற்குப் பாத்திரர்கள் ஆகிறோம். அவன் கோபப்பட்டாலோ உலகம் தாங்காது. ஆகவே அவனைக் கோபிக்க வேண்டாம் என்று நமஸ்கரித்து வேண்டுகிறது ஸ்ரீ ருத்ரம். அதையே மாணிக்கவாசகரின் திருவாசகமும் " எய்யாமல் காப்பாய்" என்று பிரார்த்திக்கிறது.
எனவேதான் துன்பங்களிருந்தும் அகால மரணங்களிளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும்படி இறைவனை நாம் வேண்டுகிறோம். பொழுது புலர்ந்ததும் நமக்கு இன்னொரு வாழ்நாள் தந்த ஈசனை வாழ்த்தி வணங்க வேண்டும். விடியலில் நீராடி, வெண்ணீற்றை மெய்யில் பூசி, திருக்கோயிலை அடைந்து, அலகிட்டு,மெழுக்கும் இட்டுப்,பூமாலைகள் மற்றும் இண்டை கட்டி அடியிணைக்குச் சார்த்தி, "சங்கரா , நீலகண்டா, சம்புவே, சந்திரசேகரா, கங்காதரா" .... எனப்பல நாமாக்களால் பரவிக் கைகள் தலை மீதுற, கண்களில் நீர்மல்க வழிபடும் அடியார் நெஞ்சத்தைக் கோயிலாகக் கொள்வான் பரமேச்வரன்.
விடியற்காலத்தில் பொய்கையை அடைந்து, அதில் மூழ்கி நீராடுகையில் உன் கழலையே பாடுகின்றோம். நாங்கள் உனக்கு வழிவழியாக அடிமைசெய்யும் குடியில் பிறந்தவர்கள். உன் அருளால் மட்டுமே வாழ்பவர்கள். ஐயனே, தீயினைப் போன்று ஒளிரும் சிவந்த நிறம் கொண்டவனே, சிற்றிடையையும், அழகிய மைதீட்டிய கண்களையும் உடைய பெருமாட்டியின் மணவாளனே. எம்மை ஆட்கொண்டு அருளுவதும் உனக்கு ஒரு விளையாட்டே அன்றோ! நீ என்றுமுதல் எங்களை ஆட்கொண்டாயோ அன்றே எங்கள் ஆவியும் உடலும்,உடைமைகளும் உனக்கே உரியதாகி விட்டன அல்லவா? எனவே எம்மை வருத்தாமலும் தண்டிக்காமலும் எம் பிழைக்கே இரங்கி அப்பிழைகளைப் பொறுத்துக் காப்பாற்றுவாயாக. இவ்வாறு இறைவனிடம் இத் திருவெம்பாவைப் பாடல் நமக்காகப் பரிந்து உரைப்பதுபோலத் தோன்றுகிறது.
"மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல் பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல் போல்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடம்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்."
பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் சிற்றில் பருவத்தில் , மணலால் வீடு (சிற்றில்) கட்டும் சிறார்கள் எவ்வாறு வேண்டுவார்கள் தெரியுமா? " நீ காக்கும் கடவுள் அல்லவா . இம்மணல் வீட்டை உனது பாதங்களால் அழிக்கலாமா? உன்னைத் தவிர எம்மைக் காப்பவர் எவரே? "சிற்றில் சிதையலே" என்று வேண்டுவதாகப் பாடல் அமைந்திருக்கும்.
இறைவனை நினையாமல் பொழுது போக்கி அவனைப் புறக்கணிப்பார்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவதானால் எத்தனை பேர் எஞ்சுவரோ தெரியாது. மழை அவன் தருவது. உணவும் அவன் தந்தது. செல்வமும் அவன் தந்தது. இப்படி எல்லாமே அவன் அருளால் மட்டுமே கிடைத்திருந்தும் நன்றி மறந்தவர்களாய் இருக்கிறோம். ஈச்வரனின் கோபத்திற்குப் பாத்திரர்கள் ஆகிறோம். அவன் கோபப்பட்டாலோ உலகம் தாங்காது. ஆகவே அவனைக் கோபிக்க வேண்டாம் என்று நமஸ்கரித்து வேண்டுகிறது ஸ்ரீ ருத்ரம். அதையே மாணிக்கவாசகரின் திருவாசகமும் " எய்யாமல் காப்பாய்" என்று பிரார்த்திக்கிறது.
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 12
கொடுக்கின்ற மனம் வேண்டும் ( ஈதல்)
ஈதல் இசைபடி வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிருக்கு ............ வள்ளுவர்
ஏழைகளுக்கு வேண்டியதை தருக, அதனால் புகழ் பெருக வாழ்க, அப்புகழை தவிர மக்கள் உயிருக்கு நன்மை தருவது வேறு இல்லை, என்று ஈதல் என்ற மற்றொருவருக்கும் கொடுக்கும் உணர்வே உயர்வு என்கிறார், வள்ளுவர்,
தங்கள் தேவைக்கு உதவுகிறவர்களை மக்கள் வள்ளல் என்று புகழ்கிறார்கள், அந்த வள்ளலுக்குப் பொருளையும் கொடுப்பதற்கான அறச்சிந்தையையும் அமைத்தவன் கடவுளல்லவா! கடவுளை விடவும் கொடுக்கக் கூடியவர் யார்? ஈகை மனப்பான்மைக்கு இறைவனை விடவும் சிறந்த உதாரணம் இருக்க முடியுமா?
புறநானூற்று பாடலில் ஒருபாடல் பாரியும் மாரியும் ஒப்பிட்டு பாடும் கபிலர் என்ற புலவர் " பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவர் புகழ்வர், செந்நாப்புலவர் பாரி ஒருவனும் அல்லன், மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே" கொடுப்பதில் உலகம் சிறக்க பாரிமட்டும் இல்லை மாரியும் உண்டு என்பதை நினைவுறும் கபிலர் ஈகை மனம் மாரி போல பாரிக்கும் உண்டு என்று உவமைப்படுத்துகிறார்,
அன்பும் அறவுணர்வும் நல்லெண்ணமும் உள்ளவரால்தான் அடுத்தவருக்கு ஈயமுடியும் உண்மையில்ஈகை என்பது பிரதிபலலை எதிர்பாராது மற்றவருக்கு பயன்படுகிற விதமாய் நடந்து கொள்வது, தாகத்தில் இருப்பவருக்கு தண்ணீர் அளிப்பதும், துயரத்ததில் இருப்பவருக்கு ஆறுதல் தருவதும் பாதையில் கிடக்கும முள்ளையும கல்லையும் அகற்றி சீர் செய்வதும் நோயுற்ற வருக்கு மருந்து கொடுப்பதும் ஈகையே, தமக்கு ஒருவர் செய்த தீமையை மறந்து மன்னிப்பதும் ஒருவகை ஈகைதான். எல்லோரும் இறைவன் தோற்றம்தான், ஆனால் விழலுக்கு நீரிறைத்தால் நேரமும் பொருளும்ஆற்றலும் வீணாகிவிடும். சமயத்திற்கும், சமுதாய நிறுவனங்களுக்கும் கொடுப்பது நல்லது தான், ஆனால் அவற்றிலும் அசல் எது போலி எது என்ற அடையாளம் காண வேண்டியிருக்கிறது,
ஈதலை தற்பெருமையின்றி, அமைதியாக செய்ய வேண்டும் கொடுப்பதன் மூலம் ஒரு நிறைவான இன்பம் கிடைக்கிறது என்பதற்காகவே கொடுக்க வேண்டும், ஈகையும் எளிமையும் இதயத்தை தூய்மைப்படுத்தும். கிடைத்ததைக் கொண்டு காலம் தள்ளுகிறவர்கள் கொடுப்பதன் மூலம் நல்வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும், கொடுக்கிற மனமே ஒருவரை உயர்த்துகிறது,அது வெற்றியைத் தருகிறது.
கொடு, கொடாமலிரு
பாத்திரமறிந்து தான் கல்வியை தானம்செய்வார்கள் குருமார்கள். பண்பாளரை இனங்கண்டே பொருளை வழங்குவர் அறிவுடைய செல்வர்கள், கொடுக்கத் தகாதவருகுகு கொடுப்பதால் பயனில்லை, கொடுக்கத் தக்கவருக்கு வழங்காமல் இருந்தாலுமு நன்மையில்லை, என்கிறார் திருமூலர், பாத்திரம் , அபாத்திரம் என்று திருமந்திரம் இரண்டாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பாத்திரம் என்றால் தகுதி, அபாத்திரம் தகுதியின்மை, யார் தக்கவர் யார் தகாதவர் என்பதை அறிந்து வழங்கவேண்டும், பாத்தரம் - தக்காருக்கு தகாதலும், அபாத்திரம் - தகாதருக்கு தகுதலும் பாவமே என்கிறது பழமொழி
எவ்வளவு பொருளாயினும் அன்பு மனத்தோடு , மலர்ந்த முக்தோடு கனிந்த மொழியோடு சிவஞானியர்க்கு வழங்கினால் செல்வம் பெருகும், போகமும் திருவடிப்பேறும் வாய்க்கும், தெரிந்தோ தெரியாமலோ அஞ்ஞானிகளுக்கு வழங்கினால் இம்மையிலும பயனில்லை மறுமையிலும் இன்பம் கிட்டாது, பாடல்: திலமத்தனை பொன் சிவஞானிக்கீந்தால் ...........
நல்லார்க்கு ஈவதால் பயனுண்டு என்கிற திருமூலர் அல்லார்க்கு ஈவதால் பயனில்லை என்பதையும் இங்கே தெளிபடுத்துகிறார், நீங்கள் மலட்டு பசுவிற்கு அக்கறையோடு தீவனமிட்டாலும் அதனிடம் பால் கறக்க முடியாது, ஒழுக்கமும் விரதமும் இல்லாதவர்க்கு ஒன்றை கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை,என்கிறது திருமந்திரம் பாடல்: கோல வறட்டைக் குனிந்து குளகிட்டு.....
யோகத்திற்கானவைகளை அறிந்து அன்பு உடையவர்களுக்கே தானம் செய்யவேண்டும், இதனையே வள்ளுவரும் ஈகை என்னும் அதிகாரத்தில் " வறியார்க்கென்று ஈவதே ஈகை, மற்று எல்லாம் குறிஎதிர்ப்பை நீரது உடைத்து " குறள், பொருள் இல்லார்க்கு கொடுப்பதே ஈகை , மற்றையோருக்கு கொடுப்பன எல்லாம் அளவிட்டுக் கொடுத்து திரும்ப வாங்குவதற்கு சமமாகும் என்கிறார்
திருச்சிற்றம்பலம் - ஒம் நமசிவாயம் -
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
பைரவ வழிபாட்டு மகிமை
நேரடியாக மோத முடியாத, மோத விரும்பாத எதிரிகளை – ஒழித்துக் கட்ட , எதிரிகளால் உங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க , எதிரிகள் உங்களை நினைத்தாலே மிரள வைக்க , உங்களுக்கு தேவையான ஆன்ம பலம் அளிக்கும் இறை ரூபம் - ஸ்ரீ காலபைரவர். ஸ்ரீ பைரவ அவதாரம் அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து, சிவ பெருமானிடம் வரம் பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும் துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில் மைதீட்டி,பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம் முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான். இவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர். தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர் பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான் ஸ்ரீபைரவர். அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும் அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட எட்டு பைரவர்களை சக்தியுடன் புறப்பட உத்தரவிட்டார். அதன்படி, 1)அசிதாங்க பைரவர் + பிராம்மி 2)ருரு பைரவர் + மகேஸ்வரி 3)உன்மத்த பைரவர் + வாராஹி 4)குரோதன பைரவர் +வைஷ்ணவி 5)சண்டபைரவர் + கவுமாரி 6)கபால பைரவர் + இந்திராணி 7)பீஷண பைரவர் + சாமுண்டி சம்ஹார பைரவர் + சண்டிகா ஆகியோர் தம்பதி சகிதமாக புறப்பட்டு,அந்தகாசூரனை அழித்து உலகிற்கு ஒளியைக் கொடுத்தனர். இதனால்,தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அனைவரும் தத்தம் ஆயுதங்களை பைரவருக்குக் கொடுத்தனர். பைரவரை வழிபட்டு வெற்றிகள் அடையுங்கள்
நேரடியாக மோத முடியாத, மோத விரும்பாத எதிரிகளை – ஒழித்துக் கட்ட , எதிரிகளால் உங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க , எதிரிகள் உங்களை நினைத்தாலே மிரள வைக்க , உங்களுக்கு தேவையான ஆன்ம பலம் அளிக்கும் இறை ரூபம் - ஸ்ரீ காலபைரவர். ஸ்ரீ பைரவ அவதாரம் அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து, சிவ பெருமானிடம் வரம் பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும் துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில் மைதீட்டி,பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம் முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான். இவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர். தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர் பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான் ஸ்ரீபைரவர். அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும் அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட எட்டு பைரவர்களை சக்தியுடன் புறப்பட உத்தரவிட்டார். அதன்படி, 1)அசிதாங்க பைரவர் + பிராம்மி 2)ருரு பைரவர் + மகேஸ்வரி 3)உன்மத்த பைரவர் + வாராஹி 4)குரோதன பைரவர் +வைஷ்ணவி 5)சண்டபைரவர் + கவுமாரி 6)கபால பைரவர் + இந்திராணி 7)பீஷண பைரவர் + சாமுண்டி சம்ஹார பைரவர் + சண்டிகா ஆகியோர் தம்பதி சகிதமாக புறப்பட்டு,அந்தகாசூரனை அழித்து உலகிற்கு ஒளியைக் கொடுத்தனர். இதனால்,தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அனைவரும் தத்தம் ஆயுதங்களை பைரவருக்குக் கொடுத்தனர். பைரவரை வழிபட்டு வெற்றிகள் அடையுங்கள்
http://vpoompalani05.wordpress.com/2014/06/05
திருமூலர் திருமந்திரம் - உபதேசம் 11
தெய்வ நிந்தை செய்யாதீர்கள்
அனைத்துக்கும் ஆதியானவன் இறைவன், எவ்வகை உயிர்க்கும் அவனே தந்தையும், தாயும் தனக்கு நேரிடும் துன்பங்களுக்குத் தன்னுடைய ஊழ்வினையே காரணம் என்று எண்ணாது தன்னைப் படைத்தவன் மீது சினம் கொள்வர் கீழோர், பரமனை பழித்துரைக்க அவர்கள் தயங்கவதில்லை, "தெய்வநிந்தை தீது பயக்கும்" என்கிறது திருமந்திரம்
தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளிவு உறார் அமரா பதி நாடி
எளியன் என்று ஈசனை நீசர் இகழின்
கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே. ,,, என்பது பாடல்
தனது திருவடியைச் சிந்தையில் தேக்கியவர் உள்ளத்தில் சிறந்து விளங்குகிறான் இறைவன், அவனைத் தொழுது விண்ணவர் முதலானவர் அவனது அருளை பெறுவர், திருவடி உணர்வில்லாதவரோ எளியன் இவனென்று இகழ்ந்துரைப்பர். பூனையிடம் அகப்பட்ட கிளிபோல் அவர்கள் அழிவர்
" அசுர தேவாதியர் அறியாமையால் செருக்குற்று பகைத்துக் கெட்டார்கள், இறைவனை பொய்யாகவும் பகைக்கூடாது. இறைவனிடம் பகை கொண்டவரால் எப்படி அவனை அடைய முடியும்? என்கிறார் திருமூலர். பாடல்: அப்பகையாலே அசுரரும் தேவரும்,,,,,,, )
தங்கள் நெஞ்சிலும், நினைவிலும் மங்கையரைச் சுமந்து அவர்களுடன் ஊடியும் கூடியும் சிற்றின்பத்தில் திளைப்பவர் தவப்பேறில்லாதவர். இறைவனைப் பற்றிய எண்ணம் அவருள் சிறிதும் இருக்காது, காரணம் மெய்யுணர்வு கைவந்த தவத்தோர் உணரும் முறை அவர்களிடம் இல்லாமல் போய்விடுகிறதுதான்,
ஞானியரை நிந்திக்கலாகாது
சிவனைத் தொழுதேத்தும் சிவனடியார்கள் சிவஞானியர் எனப்படுவர். அவர்களை நிந்திப்பவர் நல்வினைப் பகுதி நீங்கி துன்புறுவர். சிவனடியாரை வணங்கி இணக்காமாய் நிற்பவர் தமது தீவினை நீங்கி இன்புறுவர், என்கிறது திருமந்ததிரம் பாடல் : ஞானியை நிந்திப்பவனும் நலனென்றே...........)
சிவஞானியைப் பற்றி நிற்பவர் சிவயோகத்தை அடைவர், சிவனடியாரை இழித்துரைப்பவர் தாழ்ந்த நரகத்தை அடைய வழி செய்து கொண்டவராவர்.
பெரியோரைப் பிழையாமை என்கிற குறள் அததிகாரமும் பெரியோரை இகழ்வது தவறு என்று கூறுகிறது.
"ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்,
உயர்ந்த நோன்புபளை கடைப் பிடித்த அருந்தவர் சீற்றம் கொண்டால் தேவருலகத் தலைவனும் தன் சிறப்புகளை இழந்து கெடுவான் என்பது பொருள்
திருச்சிற்றம்பலம் .... ஓம் நமசிவாயம்
மேலும் பல நாட : காணவும்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருமூலர் திருமந்திரம் - உபதேசம் 11
தெய்வ நிந்தை செய்யாதீர்கள்
அனைத்துக்கும் ஆதியானவன் இறைவன், எவ்வகை உயிர்க்கும் அவனே தந்தையும், தாயும் தனக்கு நேரிடும் துன்பங்களுக்குத் தன்னுடைய ஊழ்வினையே காரணம் என்று எண்ணாது தன்னைப் படைத்தவன் மீது சினம் கொள்வர் கீழோர், பரமனை பழித்துரைக்க அவர்கள் தயங்கவதில்லை, "தெய்வநிந்தை தீது பயக்கும்" என்கிறது திருமந்திரம்
தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளிவு உறார் அமரா பதி நாடி
எளியன் என்று ஈசனை நீசர் இகழின்
கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே. ,,, என்பது பாடல்
தனது திருவடியைச் சிந்தையில் தேக்கியவர் உள்ளத்தில் சிறந்து விளங்குகிறான் இறைவன், அவனைத் தொழுது விண்ணவர் முதலானவர் அவனது அருளை பெறுவர், திருவடி உணர்வில்லாதவரோ எளியன் இவனென்று இகழ்ந்துரைப்பர். பூனையிடம் அகப்பட்ட கிளிபோல் அவர்கள் அழிவர்
" அசுர தேவாதியர் அறியாமையால் செருக்குற்று பகைத்துக் கெட்டார்கள், இறைவனை பொய்யாகவும் பகைக்கூடாது. இறைவனிடம் பகை கொண்டவரால் எப்படி அவனை அடைய முடியும்? என்கிறார் திருமூலர். பாடல்: அப்பகையாலே அசுரரும் தேவரும்,,,,,,, )
தங்கள் நெஞ்சிலும், நினைவிலும் மங்கையரைச் சுமந்து அவர்களுடன் ஊடியும் கூடியும் சிற்றின்பத்தில் திளைப்பவர் தவப்பேறில்லாதவர். இறைவனைப் பற்றிய எண்ணம் அவருள் சிறிதும் இருக்காது, காரணம் மெய்யுணர்வு கைவந்த தவத்தோர் உணரும் முறை அவர்களிடம் இல்லாமல் போய்விடுகிறதுதான்,
ஞானியரை நிந்திக்கலாகாது
சிவனைத் தொழுதேத்தும் சிவனடியார்கள் சிவஞானியர் எனப்படுவர். அவர்களை நிந்திப்பவர் நல்வினைப் பகுதி நீங்கி துன்புறுவர். சிவனடியாரை வணங்கி இணக்காமாய் நிற்பவர் தமது தீவினை நீங்கி இன்புறுவர், என்கிறது திருமந்ததிரம் பாடல் : ஞானியை நிந்திப்பவனும் நலனென்றே...........)
சிவஞானியைப் பற்றி நிற்பவர் சிவயோகத்தை அடைவர், சிவனடியாரை இழித்துரைப்பவர் தாழ்ந்த நரகத்தை அடைய வழி செய்து கொண்டவராவர்.
பெரியோரைப் பிழையாமை என்கிற குறள் அததிகாரமும் பெரியோரை இகழ்வது தவறு என்று கூறுகிறது.
"ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்,
உயர்ந்த நோன்புபளை கடைப் பிடித்த அருந்தவர் சீற்றம் கொண்டால் தேவருலகத் தலைவனும் தன் சிறப்புகளை இழந்து கெடுவான் என்பது பொருள்
திருச்சிற்றம்பலம் .... ஓம் நமசிவாயம்
மேலும் பல நாட : காணவும்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் -5
பிறன்மனை விரும்பாப் பேராண்மை
பேராண்மை என்பது வீரம் பேராண்மை மிக்கவர்கள் அரிய செயல்களை செய்வார்கள், அடுத்தவன் மனைவியை ஏறெடுத்தும் பாராமல், அவளுடைய அழகில் மனதைப் பறிகொடுக்காமல் இருப்பதும் பேராண்மை, ஆண்மைக்கு அழகு வலிமை மட்டும் அல்ல, மனவலிமையும் தான், மனம் சலனமடைந்தாலுமும், சபலப்பட்டாலும், அது நல்லதல்ல. அடுத்தவன் மனைவி மீது ஆசை வைப்பவர் தன் செயலின் விளைவுகளை ஆராய்வதில்லை, அவன் அழகான பெண்டாட்டி வீட்டில் இருக்க, அக்கரைப் பச்சையை நாடி போகிறான், அவனுடைய நிலைகறித்து திருமூலர் கூறுவது
" அவன் முட்டாள தன் வீட்டுத் தோட்டத்தில் காய்த்திருக்கும் பலாப்பழத்தைச் சுவைத்து மகிழாமல் காட்டில் பழுத்த ஈச்சம் பழத்தை பெறத் துன்பப்படுகிறான்,
"ஆத்த மனையாள் அகத்தே இருக்க
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே," என்கிறார்,
காமம் கண்ணை மறைத்து, கருத்தையும் மறக்கிறது, அயலான் மனைவியை விரும்பும் காரியம் அறியாமையால் நிகழ்வது " தன் வீட்டில் கிளிபோல் பெண்டாட்டி இருந்தாலும் குருங்குபோல ைவ்ப்பாட்டி வைத்துள்ளான் என்பது கிராமத்து பழமொழி "தன் செயலின் விளைவறிந்தால் அவன் தவறு செய்யத் துணியமாட்டான், திருமூலர் மேலுமு கூறகிறார், சிலர் இனித்திடும் மாங்கனியை இருட்டறையில் ஒளித்துவிட்டு, தகுதியற்ற புளியங்கனிக்காக மரமேறி உயிர் வருத்தம் கொள்கிறார்கள், அருமையான மனைவி வீட்டில் இருக்க மாற்றான் மனைவியை தேடி செல்பவரின் நிலையிது, கெடுவது இவர் மட்டுமா? இவருடைய குடும்பமுந்தான் என்கிறார், இதற்கான பாடல் : திருத்தி வளர்த்ததோர் தேமாங்கனியை ........................... )
பேராண்மையுடையவன் பெண்ணின் அழகில் பிரமமிப்பதில்லை, அவளிடத்தில் பூவிருக்கும், காயிருக்கும் ,கனியிருக்கும், ஆனால் அவனுடைய கண்களுக்கோ, அவை எட்டிக்காய்தான், அந்தக் காய்கள் பழுத்தாலும் அழகிய நிறத்துடன் கவர்ச்சி காட்டி அழைத்தாலும், அவனுடைய மனம் அவற்றில் ஈடுபடாது, எட்டிப்பழம் உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணும் என்பதை அவன் அறிவான், " ஏ, மனக்குரங்கே நீ அடங்கு "என்ற தன் மனதை கடிந்து கொள்வான்" என்கிறார் திருமூலர், பாடல்: இலைநில ஆயினும் எட்டிப் பழுத்தால் ......................... )
கொழுவிய மார்பகம் படைத்த பெண்ணின் கவர்ச்சியில் அவர்தம் புன்னகையில் மனஉறுதியை இழந்து விடக்கூடாது, அவர்பால் செல்லும் மனதை அடக்கி நன்னெறியில் நடத்தல் வேண்டும் என்கிறது திருமந்திரம் "பிறன்னை நயத்தல் பெருந்தீது " என்பதை வெகு அழகாய் சொல்கிறது நாலடியார்,
" புக்கஇடத் தச்சம் போதருமு போதச்சந்
துய்ககும் இடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறனில் புகல்"
அடுத்தவன் வீட்டிக்குள் நுழையும் போதும் நடுக்கம், அங்கிருந்து வெளியேறும் போதும் நடுக்கம், அயலான் மனைவியை அனுபவிக்கம போதும்அச்சம், ஒவ்வொரு கண்த்திலும் அஞ்சி நடுங்கும் படி இருக்கும் யார் பார்த்திடுவாரோ எங்கே மாட்டிக் கெர்ணடு விடுவோமோ " என்ற கருத்தைக்கூறுகிறது இப்பாடல்
தேவர்களுக்கெல்லாம் தலைவன் தான் இந்திரன் ஆனால் கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசைகொண்டு அறிவிழந்தான், அவன் முனிவர அதிகாலையில் நீராடச் செல்லும் வழக்கத்தை இந்திரன் அறிவான், நடுச்சாமத்தில் சேவலைப்போல் கூவி வஞ்சனையில் ஈடுபட்டு முனிவர் ஆசிரமத்தில் இருந்து வெளிச் சென்றதும் அகலிகையுடன் புணர்ச்சி நடத்துகிறான், ஆனால் அங்கிருந்து வெளியேறு முன் கவுதமரிடம் அகப்பட்டு அவருடைய சாபத்திற்குள்ளாகிறான், அவன் அடைந்த சுகத்தை விட அவனுடைய அச்சம் பெரியது, அவனுக்கு கிடைத்த சாபம் அதைவிட பெரியது,
ஒழுக்த்தில் சிறந்தவரே ஆண்மை மிக்கவர் அவர் காம மயக்த்தில் தனக்கு உரிமையில்லாத பெண்ணுடன் உறவு கொள்ளத் துடிப்பதில்லை, அடுத்தவன் மனைவியை விரும்புவது பேதை யின் செயல் என்கிறார் வள்ளுவர், அது அறத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட காரியம் - பாவம் ஆகும், அவர் அறநெறியில் இருந்து விலகி, பொருளையும் இழக்கிறார், அதைவிட பெரிதான கவுரவத்தையுந்தான், இயல்பான புண்ர்ச்சி யில்உள்ள இன்பமும் அவருக்கு கிடைப்பதில்லை அதனால் தான் -
"அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்" என்கிறது திருக்குறள்
"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு" என்கிறார் வள்ளுவர்
காமத்தை அடக்குதல் பேராண்மை, பிறன்மனை நோக்காமை பிறருக்கு சிறந்த அறமெனலாம், சான்றோருக்கோ அதுவே இயல்பான ஒழுக்கம் என்பது கருத்து இக்கூற்றின் படி பிறன் மனை நோக்கா ஒழுக்கத்தை கடைபிடித்து சான்றோர் ஆகுவோம்.
திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாயம் ஓம்
மேலும் பல காண:
http://poompalani.weebly.com
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
பிறன்மனை விரும்பாப் பேராண்மை
பேராண்மை என்பது வீரம் பேராண்மை மிக்கவர்கள் அரிய செயல்களை செய்வார்கள், அடுத்தவன் மனைவியை ஏறெடுத்தும் பாராமல், அவளுடைய அழகில் மனதைப் பறிகொடுக்காமல் இருப்பதும் பேராண்மை, ஆண்மைக்கு அழகு வலிமை மட்டும் அல்ல, மனவலிமையும் தான், மனம் சலனமடைந்தாலுமும், சபலப்பட்டாலும், அது நல்லதல்ல. அடுத்தவன் மனைவி மீது ஆசை வைப்பவர் தன் செயலின் விளைவுகளை ஆராய்வதில்லை, அவன் அழகான பெண்டாட்டி வீட்டில் இருக்க, அக்கரைப் பச்சையை நாடி போகிறான், அவனுடைய நிலைகறித்து திருமூலர் கூறுவது
" அவன் முட்டாள தன் வீட்டுத் தோட்டத்தில் காய்த்திருக்கும் பலாப்பழத்தைச் சுவைத்து மகிழாமல் காட்டில் பழுத்த ஈச்சம் பழத்தை பெறத் துன்பப்படுகிறான்,
"ஆத்த மனையாள் அகத்தே இருக்க
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே," என்கிறார்,
காமம் கண்ணை மறைத்து, கருத்தையும் மறக்கிறது, அயலான் மனைவியை விரும்பும் காரியம் அறியாமையால் நிகழ்வது " தன் வீட்டில் கிளிபோல் பெண்டாட்டி இருந்தாலும் குருங்குபோல ைவ்ப்பாட்டி வைத்துள்ளான் என்பது கிராமத்து பழமொழி "தன் செயலின் விளைவறிந்தால் அவன் தவறு செய்யத் துணியமாட்டான், திருமூலர் மேலுமு கூறகிறார், சிலர் இனித்திடும் மாங்கனியை இருட்டறையில் ஒளித்துவிட்டு, தகுதியற்ற புளியங்கனிக்காக மரமேறி உயிர் வருத்தம் கொள்கிறார்கள், அருமையான மனைவி வீட்டில் இருக்க மாற்றான் மனைவியை தேடி செல்பவரின் நிலையிது, கெடுவது இவர் மட்டுமா? இவருடைய குடும்பமுந்தான் என்கிறார், இதற்கான பாடல் : திருத்தி வளர்த்ததோர் தேமாங்கனியை ........................... )
பேராண்மையுடையவன் பெண்ணின் அழகில் பிரமமிப்பதில்லை, அவளிடத்தில் பூவிருக்கும், காயிருக்கும் ,கனியிருக்கும், ஆனால் அவனுடைய கண்களுக்கோ, அவை எட்டிக்காய்தான், அந்தக் காய்கள் பழுத்தாலும் அழகிய நிறத்துடன் கவர்ச்சி காட்டி அழைத்தாலும், அவனுடைய மனம் அவற்றில் ஈடுபடாது, எட்டிப்பழம் உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணும் என்பதை அவன் அறிவான், " ஏ, மனக்குரங்கே நீ அடங்கு "என்ற தன் மனதை கடிந்து கொள்வான்" என்கிறார் திருமூலர், பாடல்: இலைநில ஆயினும் எட்டிப் பழுத்தால் ......................... )
கொழுவிய மார்பகம் படைத்த பெண்ணின் கவர்ச்சியில் அவர்தம் புன்னகையில் மனஉறுதியை இழந்து விடக்கூடாது, அவர்பால் செல்லும் மனதை அடக்கி நன்னெறியில் நடத்தல் வேண்டும் என்கிறது திருமந்திரம் "பிறன்னை நயத்தல் பெருந்தீது " என்பதை வெகு அழகாய் சொல்கிறது நாலடியார்,
" புக்கஇடத் தச்சம் போதருமு போதச்சந்
துய்ககும் இடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறனில் புகல்"
அடுத்தவன் வீட்டிக்குள் நுழையும் போதும் நடுக்கம், அங்கிருந்து வெளியேறும் போதும் நடுக்கம், அயலான் மனைவியை அனுபவிக்கம போதும்அச்சம், ஒவ்வொரு கண்த்திலும் அஞ்சி நடுங்கும் படி இருக்கும் யார் பார்த்திடுவாரோ எங்கே மாட்டிக் கெர்ணடு விடுவோமோ " என்ற கருத்தைக்கூறுகிறது இப்பாடல்
தேவர்களுக்கெல்லாம் தலைவன் தான் இந்திரன் ஆனால் கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசைகொண்டு அறிவிழந்தான், அவன் முனிவர அதிகாலையில் நீராடச் செல்லும் வழக்கத்தை இந்திரன் அறிவான், நடுச்சாமத்தில் சேவலைப்போல் கூவி வஞ்சனையில் ஈடுபட்டு முனிவர் ஆசிரமத்தில் இருந்து வெளிச் சென்றதும் அகலிகையுடன் புணர்ச்சி நடத்துகிறான், ஆனால் அங்கிருந்து வெளியேறு முன் கவுதமரிடம் அகப்பட்டு அவருடைய சாபத்திற்குள்ளாகிறான், அவன் அடைந்த சுகத்தை விட அவனுடைய அச்சம் பெரியது, அவனுக்கு கிடைத்த சாபம் அதைவிட பெரியது,
ஒழுக்த்தில் சிறந்தவரே ஆண்மை மிக்கவர் அவர் காம மயக்த்தில் தனக்கு உரிமையில்லாத பெண்ணுடன் உறவு கொள்ளத் துடிப்பதில்லை, அடுத்தவன் மனைவியை விரும்புவது பேதை யின் செயல் என்கிறார் வள்ளுவர், அது அறத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட காரியம் - பாவம் ஆகும், அவர் அறநெறியில் இருந்து விலகி, பொருளையும் இழக்கிறார், அதைவிட பெரிதான கவுரவத்தையுந்தான், இயல்பான புண்ர்ச்சி யில்உள்ள இன்பமும் அவருக்கு கிடைப்பதில்லை அதனால் தான் -
"அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்" என்கிறது திருக்குறள்
"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு" என்கிறார் வள்ளுவர்
காமத்தை அடக்குதல் பேராண்மை, பிறன்மனை நோக்காமை பிறருக்கு சிறந்த அறமெனலாம், சான்றோருக்கோ அதுவே இயல்பான ஒழுக்கம் என்பது கருத்து இக்கூற்றின் படி பிறன் மனை நோக்கா ஒழுக்கத்தை கடைபிடித்து சான்றோர் ஆகுவோம்.
திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாயம் ஓம்
மேலும் பல காண:
http://poompalani.weebly.com
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
திருஐந்தெழுத்தின் மகிமை உடல்நோயும் உயிர்நோயும் தீரும்Standardதிருஐந்தெழுத்தின் மகிமை
உடல்நோயும் உயிர்நோயும் தீரும்
“வருந்தவன்காண் மனமுருகி நினையா தார்க்க
வஞ்சன்காண் அஞ்செழுத்து நனைவார்க்கு என்றும்
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்
வானகமும் மண்ணகமும் மற்றுமாகிப்
பரந்தவன்காண் பட்சைட யெட்டுைடயான் தான்காண்
பங்கயத்தோன் தன்சிரத்ைத யேந்தி யூரூர்
இநந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே.” திருநாவுக்கரசர்
தன்னை மனம் உருகி நினையாதாருக்கு வஞ்சனாய் , அஞ்செழுத்தை விருப்புற்று நினைப்பவர்களுக்கு என்றும் அவர்களுடைய பெரிய பிணிகளைத் தீர்க்கும் மருந்தானவனாய் , தேவருலகும் மண்ணுலகும் மற்ற உலகங்களுமாகப் பரவியவனாய் , நடுச்சடையை விடுத்துத் திசைக்கு ஒன்றாக ஆடும் எட்டுச்சடைகளை உடையவனாய் , பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்தி , ஊர் ஊராகப் பிச்சை எடுத்தவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .
இறைவரை மனம் உருகி நனைக்க வேண்டும் , மனம் உருகி நினைக்காதவர்கள் இறைமையை உணர முடியாது , உலோகங்கள் உருகும் பொழுது அவற்றில் உள்ள மாசுகள் அகலும், அைதப்போல, உள்ளம் உருகினால் மனம் மாசுகள் அகலும், உருகிய தங்கத்தில் கல் பதியுமாறு, உருகிய மனத்தில் இறைவர் பதிவார், இறைவழிபாடு பயனுைடயதாகும்,
இைறவருடைய மேன்மையையும் நம்முடைய கீழ்மையையும் நினைத்தால் உள்ளம் உருகும், இவற்றை கூறும் அரிய தமிழ் வேதப் பாடல்கள் வாய் விட்டு பாடினால் உள்ளம் உருகும், “சிவாயநம” எனும் திருஐந்தெழுத்ைத இடைவிடாது நினைப்பவர்களுைடய நோய்க்கு மருந்தாய் இறைவர் விளங்குவார், உடலுக்கு வரக்கூடிய நோய்களும், உயிருக்கு ஏற்படும் இறப்பாகிய நோயும் திருஐந்தெழுத்ைத ஒதுவதால் ஒழியும், மந்திரங்களில் எல்லாம் மிக உயர்ந்த மளந்திரம் திருஐந்தெழுத்தே ஆகும், ( சிவாயநம) இைடவிடாது சொல்லி நலம் பெறுவோம்
திருசிற்றம்பலம் – ஓம் நமசிவாய ஓம் -
இன்னும் பலகாண
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://vpoompalani05.blogspot.in
உடல்நோயும் உயிர்நோயும் தீரும்
“வருந்தவன்காண் மனமுருகி நினையா தார்க்க
வஞ்சன்காண் அஞ்செழுத்து நனைவார்க்கு என்றும்
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்
வானகமும் மண்ணகமும் மற்றுமாகிப்
பரந்தவன்காண் பட்சைட யெட்டுைடயான் தான்காண்
பங்கயத்தோன் தன்சிரத்ைத யேந்தி யூரூர்
இநந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே.” திருநாவுக்கரசர்
தன்னை மனம் உருகி நினையாதாருக்கு வஞ்சனாய் , அஞ்செழுத்தை விருப்புற்று நினைப்பவர்களுக்கு என்றும் அவர்களுடைய பெரிய பிணிகளைத் தீர்க்கும் மருந்தானவனாய் , தேவருலகும் மண்ணுலகும் மற்ற உலகங்களுமாகப் பரவியவனாய் , நடுச்சடையை விடுத்துத் திசைக்கு ஒன்றாக ஆடும் எட்டுச்சடைகளை உடையவனாய் , பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்தி , ஊர் ஊராகப் பிச்சை எடுத்தவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .
இறைவரை மனம் உருகி நனைக்க வேண்டும் , மனம் உருகி நினைக்காதவர்கள் இறைமையை உணர முடியாது , உலோகங்கள் உருகும் பொழுது அவற்றில் உள்ள மாசுகள் அகலும், அைதப்போல, உள்ளம் உருகினால் மனம் மாசுகள் அகலும், உருகிய தங்கத்தில் கல் பதியுமாறு, உருகிய மனத்தில் இறைவர் பதிவார், இறைவழிபாடு பயனுைடயதாகும்,
இைறவருடைய மேன்மையையும் நம்முடைய கீழ்மையையும் நினைத்தால் உள்ளம் உருகும், இவற்றை கூறும் அரிய தமிழ் வேதப் பாடல்கள் வாய் விட்டு பாடினால் உள்ளம் உருகும், “சிவாயநம” எனும் திருஐந்தெழுத்ைத இடைவிடாது நினைப்பவர்களுைடய நோய்க்கு மருந்தாய் இறைவர் விளங்குவார், உடலுக்கு வரக்கூடிய நோய்களும், உயிருக்கு ஏற்படும் இறப்பாகிய நோயும் திருஐந்தெழுத்ைத ஒதுவதால் ஒழியும், மந்திரங்களில் எல்லாம் மிக உயர்ந்த மளந்திரம் திருஐந்தெழுத்தே ஆகும், ( சிவாயநம) இைடவிடாது சொல்லி நலம் பெறுவோம்
திருசிற்றம்பலம் – ஓம் நமசிவாய ஓம் -
இன்னும் பலகாண
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://vpoompalani05.blogspot.in
“பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் "
ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைவனையே பற்றி நின்றார்கள். சதா சர்வகாலமும் இறைச் சிந்தனையே அவர்கள் உள்ளத்திலிருந்து நீங்காமல் இருந்தது. இமைப்பொ-ழும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று மணிவாசகப் பெருந்தகை கூறுவது உற்று நோக்கத்தக்கது.
மனம், மொழி, மெய்களால் இறைவனை நினைந்து வழிபாடு செய்து, அழகுத் தமிழில் பல்லாயிரக்கணக்கான அருட்பாக்களைப் பாடி இறைவனுக்குக் காணிக்கையாக்கி உள்ளார்கள். இறைவனையே சிக்கெனப் பற்றி நின்றதால் வீடுபேறும் அடைந்தார்கள்.
இறைவனையே பற்றி நிற்க வேண்டும். ஆனால் அது உலகியல் சிந்தனை சிறிதும் உளம் பிடியா வகை, உலகியல் பற்றைவிட்டால்தான் முடியும் என்பதை,
“பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டும்
அது பற்றற்றாலன்றிப் பலியாதால்”
என்ற திருவருட்பா பாடல் மூலம் விளக்குகிறார் வள்ளலார்.
இதையே வள்ளுவப் பெருந்தகையும் இறைவனைப் பற்றினால்தான் உலகப்பற்றை விட முடியும் என்கிறார்.
“பற்றுக பற்று அற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்றுவிடற்கு”
அரிதினும் அரிதாகிய இந்த மானிடப் பிறவியில்தான் வீடுபேறு அடையும் வாய்ப்பை நாம் பெற முடியும்.
நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஓடுகின்றனன் கதிரவன் அவன் பின் ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய் என்கிறார் வள்ளலார்.
அடுத்த கணத்தில் நாம் உயிர் வாழ்வது நிச்சயம் இல்லாமல் இருக்கிறது. இதையே வள்ளல் பெருமான்,
“வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மலக்கூடு என்று அறிஞரெல்லாம் வருந்தக் கேட்டும்” என்று வாழ்க்கை நிலையாமையை நினைத்துக் கவலைப்பட்டுப் பாடுகிறார்.
ஒரு நாள் கடந்துவிட்டால், நாம் நம் இறப்பை நோக்கி ஒரு நாள் நெருங்கியுள்ளோம் என்பதுதான் உண்மை. இதைத்தான் குறள் இப்படிக் கூறுகிறது :
“நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்”
நாம் நம் கண் முன்னால் நம் உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் உலகில் பலர் இறந்து படுவதைப் பார்த்தும் ஒரு சிறிதும் உலகியல் பற்றை நம்மால் விட முடியவில்லை. இதையே வள்ளல் பெருமான் திருவருட்பா – அம்மைத் திருப்பதிகம் பாடலில் இப்படிப் பாடுவதைக் காண்கிறோம்.
“கவவை பெறு கடலுலகில் வைரமலை
ஒத்தவர் கணத்திடை இறத்தல் பலகால்
கண்டுறக் கண்டும், இப்புலை உடலின்
மானம் ஓர் கடு அளவும் விடுவது அறியேன்
எவ்வமுறு சிறியனேன் ஏழைமதி
என்னமதி இன்னமதி என்று உணர்கிலேன்
இந்த மதி கொண்டு நான் எந்த வகை
அழியாத இன்பநிலை கண்டு மகிழ்வேன்”
இந்த மனிதப் பிறவியாகிய நல்ல தருணத்தை நழுவ விட்டுவிட்டால், இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ என்று சொல்ல முடியாது.
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலங்கடத்துவது ஏன் என்று திருவருட்பா பாடலின் வழியே கேட்கிறார் வள்ளலார்.அது மட்டுமன்றி தன்னை இப்படி இருந்தையையும் எனக்கும் கருணை செய்து என் உள்ளத்தே நடமாடும் சித்த சிகாமணியே என்கிறார்
பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
படித்தறியேன் கேட்டறியேன் பக்தியில் பூமாலை
அணிந்தறியேன் மனம் உருகக் கண்களில் நீர் பெரு
அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவாசகமும்
தான் அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
துணிந்தெனக்கும் கருணை செய்த துரைய என் உளத்தே
சுத்தம் நடம் புரிகின்ற சித்தசிகா மணியே ,,, என்று தனக்கும் கருணை செய்த வள்ளலை நன்றிகடன் சொல்லால் நன்றிகடன் செலுத்துகிறார்,
“காலங்கடந்த கடவுளைக் காணற்கு
காலங் கருதுவதேன் நெஞ்சே
காலங்க கருதுவதேன்”
“மற்றறிவோம் எனச் சிறிது தாழ்ந்திருப்பீர் ஆனால் மரணம் எனும் பெரும்பாவி வந்திடுமே, அந்தோ! சற்றும் அதை நும்மாலே தடுக்க முடியாதே, சமரச சன்மார்க்க சங்கத்தவர்களல்லால் அதனை ஏற்றி நின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை கண்டீர்! சத்தியம் ஈதென மொழி கொண்டு உலகீர் பற்றிய பற்றனைத்தினையும் பற்றற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறவீரே” – திருவருட்பா.
ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும், இறைவனுடைய அருளை நாம் அடைய விடாமல் தடுக்கிறது. மலம் அற்றவனாக இறைவன் இருப்பதினால்தான் அவனுக்கு விமலன் என்று பெயர் படுகிறார் போலும்.
ஆணவம், கன்மம், மாயை என்ற மாயையிலிருந்து விடுபடவும், உலகியல் பற்றிலிருந்து விடுபடவும், நாம் நம்மை இறை அடியார்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அடியார்களுடைய கூட்டுறவும், சத்சங்கமும்தான் நம்மை அருள்நிலைக்கு உயர்த்தும்.
“பங்கமடைந்தார் அவையைப் பாராது சாதுக்கள் சங்கமடைந்தாலன்றி சாராதால் என்கிறார் வள்ளலார்.”
ஆகவேதான் தொண்டரோடு கூட்டு கண்டாய் என்று தாயுமானவரும் , சான்றோர் இனத்திரு என்று ஔவைப் பாட்டியும் அறிவுரை கூறியுள்ளார்கள். நல்லோரிணக்கம் வேண்டும் என்கிறார் பட்டினத்து அடிகள்.
இறைவனைக் காட்டிலும் இறைநாமத்திற்கு வல்லமை அதிகம். ஆகவே சதா இறை நாமத்தை உச்சரித்து ஜபம் செய்தும், சத்சங்கத்தைச் சேர்ந்தும், அடியார்களுடைய கூட்டுறவினாலும் சத்விசாரம் செய்தும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தும், இறை அருளைப் பெற வேண்டும்.
“அற்றது பற்றெனில் உற்றது வீடு” அன்பே சிவம். எல்லோரும் இன்புற்று வாழ்க! வளர்க சன்மார்க்கம்!
மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வதற்கு வள்ளலார் புனைந்துரையேன், பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் என்று நம்மை அழைக்கிறார். சத்தியம் செய்து நம்மை அழைக்கும் வள்ளல் பெருமானுக்கு நாம் எப்படி நன்றி செலுத்துவது என்றால், அவர் காட்டிய வழியில், சன்மார்க்க நெறியில் நின்று நம்மை அவரிடம் ஒப்புவித்து நாம் சரண் அடைவதுதான் வழி!
ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைவனையே பற்றி நின்றார்கள். சதா சர்வகாலமும் இறைச் சிந்தனையே அவர்கள் உள்ளத்திலிருந்து நீங்காமல் இருந்தது. இமைப்பொ-ழும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று மணிவாசகப் பெருந்தகை கூறுவது உற்று நோக்கத்தக்கது.
மனம், மொழி, மெய்களால் இறைவனை நினைந்து வழிபாடு செய்து, அழகுத் தமிழில் பல்லாயிரக்கணக்கான அருட்பாக்களைப் பாடி இறைவனுக்குக் காணிக்கையாக்கி உள்ளார்கள். இறைவனையே சிக்கெனப் பற்றி நின்றதால் வீடுபேறும் அடைந்தார்கள்.
இறைவனையே பற்றி நிற்க வேண்டும். ஆனால் அது உலகியல் சிந்தனை சிறிதும் உளம் பிடியா வகை, உலகியல் பற்றைவிட்டால்தான் முடியும் என்பதை,
“பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டும்
அது பற்றற்றாலன்றிப் பலியாதால்”
என்ற திருவருட்பா பாடல் மூலம் விளக்குகிறார் வள்ளலார்.
இதையே வள்ளுவப் பெருந்தகையும் இறைவனைப் பற்றினால்தான் உலகப்பற்றை விட முடியும் என்கிறார்.
“பற்றுக பற்று அற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்றுவிடற்கு”
அரிதினும் அரிதாகிய இந்த மானிடப் பிறவியில்தான் வீடுபேறு அடையும் வாய்ப்பை நாம் பெற முடியும்.
நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஓடுகின்றனன் கதிரவன் அவன் பின் ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய் என்கிறார் வள்ளலார்.
அடுத்த கணத்தில் நாம் உயிர் வாழ்வது நிச்சயம் இல்லாமல் இருக்கிறது. இதையே வள்ளல் பெருமான்,
“வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மலக்கூடு என்று அறிஞரெல்லாம் வருந்தக் கேட்டும்” என்று வாழ்க்கை நிலையாமையை நினைத்துக் கவலைப்பட்டுப் பாடுகிறார்.
ஒரு நாள் கடந்துவிட்டால், நாம் நம் இறப்பை நோக்கி ஒரு நாள் நெருங்கியுள்ளோம் என்பதுதான் உண்மை. இதைத்தான் குறள் இப்படிக் கூறுகிறது :
“நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்”
நாம் நம் கண் முன்னால் நம் உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் உலகில் பலர் இறந்து படுவதைப் பார்த்தும் ஒரு சிறிதும் உலகியல் பற்றை நம்மால் விட முடியவில்லை. இதையே வள்ளல் பெருமான் திருவருட்பா – அம்மைத் திருப்பதிகம் பாடலில் இப்படிப் பாடுவதைக் காண்கிறோம்.
“கவவை பெறு கடலுலகில் வைரமலை
ஒத்தவர் கணத்திடை இறத்தல் பலகால்
கண்டுறக் கண்டும், இப்புலை உடலின்
மானம் ஓர் கடு அளவும் விடுவது அறியேன்
எவ்வமுறு சிறியனேன் ஏழைமதி
என்னமதி இன்னமதி என்று உணர்கிலேன்
இந்த மதி கொண்டு நான் எந்த வகை
அழியாத இன்பநிலை கண்டு மகிழ்வேன்”
இந்த மனிதப் பிறவியாகிய நல்ல தருணத்தை நழுவ விட்டுவிட்டால், இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ என்று சொல்ல முடியாது.
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலங்கடத்துவது ஏன் என்று திருவருட்பா பாடலின் வழியே கேட்கிறார் வள்ளலார்.அது மட்டுமன்றி தன்னை இப்படி இருந்தையையும் எனக்கும் கருணை செய்து என் உள்ளத்தே நடமாடும் சித்த சிகாமணியே என்கிறார்
பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
படித்தறியேன் கேட்டறியேன் பக்தியில் பூமாலை
அணிந்தறியேன் மனம் உருகக் கண்களில் நீர் பெரு
அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவாசகமும்
தான் அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
துணிந்தெனக்கும் கருணை செய்த துரைய என் உளத்தே
சுத்தம் நடம் புரிகின்ற சித்தசிகா மணியே ,,, என்று தனக்கும் கருணை செய்த வள்ளலை நன்றிகடன் சொல்லால் நன்றிகடன் செலுத்துகிறார்,
“காலங்கடந்த கடவுளைக் காணற்கு
காலங் கருதுவதேன் நெஞ்சே
காலங்க கருதுவதேன்”
“மற்றறிவோம் எனச் சிறிது தாழ்ந்திருப்பீர் ஆனால் மரணம் எனும் பெரும்பாவி வந்திடுமே, அந்தோ! சற்றும் அதை நும்மாலே தடுக்க முடியாதே, சமரச சன்மார்க்க சங்கத்தவர்களல்லால் அதனை ஏற்றி நின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை கண்டீர்! சத்தியம் ஈதென மொழி கொண்டு உலகீர் பற்றிய பற்றனைத்தினையும் பற்றற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறவீரே” – திருவருட்பா.
ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும், இறைவனுடைய அருளை நாம் அடைய விடாமல் தடுக்கிறது. மலம் அற்றவனாக இறைவன் இருப்பதினால்தான் அவனுக்கு விமலன் என்று பெயர் படுகிறார் போலும்.
ஆணவம், கன்மம், மாயை என்ற மாயையிலிருந்து விடுபடவும், உலகியல் பற்றிலிருந்து விடுபடவும், நாம் நம்மை இறை அடியார்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அடியார்களுடைய கூட்டுறவும், சத்சங்கமும்தான் நம்மை அருள்நிலைக்கு உயர்த்தும்.
“பங்கமடைந்தார் அவையைப் பாராது சாதுக்கள் சங்கமடைந்தாலன்றி சாராதால் என்கிறார் வள்ளலார்.”
ஆகவேதான் தொண்டரோடு கூட்டு கண்டாய் என்று தாயுமானவரும் , சான்றோர் இனத்திரு என்று ஔவைப் பாட்டியும் அறிவுரை கூறியுள்ளார்கள். நல்லோரிணக்கம் வேண்டும் என்கிறார் பட்டினத்து அடிகள்.
இறைவனைக் காட்டிலும் இறைநாமத்திற்கு வல்லமை அதிகம். ஆகவே சதா இறை நாமத்தை உச்சரித்து ஜபம் செய்தும், சத்சங்கத்தைச் சேர்ந்தும், அடியார்களுடைய கூட்டுறவினாலும் சத்விசாரம் செய்தும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தும், இறை அருளைப் பெற வேண்டும்.
“அற்றது பற்றெனில் உற்றது வீடு” அன்பே சிவம். எல்லோரும் இன்புற்று வாழ்க! வளர்க சன்மார்க்கம்!
மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வதற்கு வள்ளலார் புனைந்துரையேன், பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் என்று நம்மை அழைக்கிறார். சத்தியம் செய்து நம்மை அழைக்கும் வள்ளல் பெருமானுக்கு நாம் எப்படி நன்றி செலுத்துவது என்றால், அவர் காட்டிய வழியில், சன்மார்க்க நெறியில் நின்று நம்மை அவரிடம் ஒப்புவித்து நாம் சரண் அடைவதுதான் வழி!
Click திருஐந்தெழுத்தின் மகிமை உடல்நோயும் உயிர்நோயும் தீரும்
"வருந்தவன்காண் மனமுருகி நினையா தார்க்க
வஞ்சன்காண் அஞ்செழுத்து நனைவார்க்கு என்றும்
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்
வானகமும் மண்ணகமும் மற்றுமாகிப்
பரந்தவன்காண் பட்சைட யெட்டுைடயான் தான்காண்
பங்கயத்தோன் தன்சிரத்ைத யேந்தி யூரூர்
இநந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே." திருநாவுக்கரசர்
தன்னை மனம் உருகி நினையாதாருக்கு வஞ்சனாய் , அஞ்செழுத்தை விருப்புற்று நினைப்பவர்களுக்கு என்றும் அவர்களுடைய பெரிய பிணிகளைத் தீர்க்கும் மருந்தானவனாய் , தேவருலகும் மண்ணுலகும் மற்ற உலகங்களுமாகப் பரவியவனாய் , நடுச்சடையை விடுத்துத் திசைக்கு ஒன்றாக ஆடும் எட்டுச்சடைகளை உடையவனாய் , பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்தி , ஊர் ஊராகப் பிச்சை எடுத்தவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .
இறைவரை மனம் உருகி நனைக்க வேண்டும் , மனம் உருகி நினைக்காதவர்கள் இறைமையை உணர முடியாது , உலோகங்கள் உருகும் பொழுது அவற்றில் உள்ள மாசுகள் அகலும், அைதப்போல, உள்ளம் உருகினால் மனம் மாசுகள் அகலும், உருகிய தங்கத்தில் கல் பதியுமாறு, உருகிய மனத்தில் இறைவர் பதிவார், இறைவழிபாடு பயனுைடயதாகும்,
இைறவருடைய மேன்மையையும் நம்முடைய கீழ்மையையும் நினைத்தால் உள்ளம் உருகும், இவற்றை கூறும் அரிய தமிழ் வேதப் பாடல்கள் வாய் விட்டு பாடினால் உள்ளம் உருகும், "சிவாயநம" எனும் திருஐந்தெழுத்ைத இடைவிடாது நினைப்பவர்களுைடய நோய்க்கு மருந்தாய் இறைவர் விளங்குவார், உடலுக்கு வரக்கூடிய நோய்களும், உயிருக்கு ஏற்படும் இறப்பாகிய நோயும் திருஐந்தெழுத்ைத ஒதுவதால் ஒழியும், மந்திரங்களில் எல்லாம் மிக உயர்ந்த மளந்திரம் திருஐந்தெழுத்தே ஆகும், ( சிவாயநம) இைடவிடாது சொல்லி நலம் பெறுவோம்
திருசிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஓம் -here to edit.
"வருந்தவன்காண் மனமுருகி நினையா தார்க்க
வஞ்சன்காண் அஞ்செழுத்து நனைவார்க்கு என்றும்
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்
வானகமும் மண்ணகமும் மற்றுமாகிப்
பரந்தவன்காண் பட்சைட யெட்டுைடயான் தான்காண்
பங்கயத்தோன் தன்சிரத்ைத யேந்தி யூரூர்
இநந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே." திருநாவுக்கரசர்
தன்னை மனம் உருகி நினையாதாருக்கு வஞ்சனாய் , அஞ்செழுத்தை விருப்புற்று நினைப்பவர்களுக்கு என்றும் அவர்களுடைய பெரிய பிணிகளைத் தீர்க்கும் மருந்தானவனாய் , தேவருலகும் மண்ணுலகும் மற்ற உலகங்களுமாகப் பரவியவனாய் , நடுச்சடையை விடுத்துத் திசைக்கு ஒன்றாக ஆடும் எட்டுச்சடைகளை உடையவனாய் , பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்தி , ஊர் ஊராகப் பிச்சை எடுத்தவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .
இறைவரை மனம் உருகி நனைக்க வேண்டும் , மனம் உருகி நினைக்காதவர்கள் இறைமையை உணர முடியாது , உலோகங்கள் உருகும் பொழுது அவற்றில் உள்ள மாசுகள் அகலும், அைதப்போல, உள்ளம் உருகினால் மனம் மாசுகள் அகலும், உருகிய தங்கத்தில் கல் பதியுமாறு, உருகிய மனத்தில் இறைவர் பதிவார், இறைவழிபாடு பயனுைடயதாகும்,
இைறவருடைய மேன்மையையும் நம்முடைய கீழ்மையையும் நினைத்தால் உள்ளம் உருகும், இவற்றை கூறும் அரிய தமிழ் வேதப் பாடல்கள் வாய் விட்டு பாடினால் உள்ளம் உருகும், "சிவாயநம" எனும் திருஐந்தெழுத்ைத இடைவிடாது நினைப்பவர்களுைடய நோய்க்கு மருந்தாய் இறைவர் விளங்குவார், உடலுக்கு வரக்கூடிய நோய்களும், உயிருக்கு ஏற்படும் இறப்பாகிய நோயும் திருஐந்தெழுத்ைத ஒதுவதால் ஒழியும், மந்திரங்களில் எல்லாம் மிக உயர்ந்த மளந்திரம் திருஐந்தெழுத்தே ஆகும், ( சிவாயநம) இைடவிடாது சொல்லி நலம் பெறுவோம்
திருசிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஓம் -here to edit.
வழிபாடு
வழிபாடு என்பது "வழிப்படுதல்" என்பதன் சுருக்கமாகும். இறைவனை அடையும் வழியில் நாம் சென்று கொண்டு இருக்கிறோம், அவன் வழிப்படுகிறோம் என்று உணரவேண்டும். நம் வழிபாடுகள் மூன்று வகையாகும். முதலாவது நான் என்னும் அகங்காரத்துடன் செய்வது. கோவிலுக்கு என்று ஒன்றை செய்துவிட்டு பின் " உபயம்" என்று தன்பெயரை போடுவதும் தன்னை பெருமைப்படுத்தும் வியாபார நோக்கம் கொண்டதும் இவ்வகைதான், இது நான் செய்தேன் என்ற இறுமாப்பையே காட்டுகிறது. நம் பெயருக்கு நாமே செய்கின்ற அர்ச்சனையும் இதுபோன்றதுதான். இங்கும் நான் என்ற தன்முனைப்போ முன்னிற்கிறது. வழிபடும் போது நான் என்ற எண்ணம் வந்துவிட்டால் அது வழிபாடு அன்று.
ஆனால் நமக்கு வழிபாடு என்கிற நெறியை ஊட்டுகிற முதற்படி இதுதான். நாம் அனைவரும் கடந்து வருகிற பாதையும் இதுதான், ஆனாலும் தவறில்லை.
அடுத்தபடியாக தன்பெயர் வெளிவராது இறைவனை எண்ணி அவனுக்கே என அர்ப்பணித்து இறைவன் பெயரிலேயே நாம் செய்விக்கும் அர்ச்சனை, அபிசேக ஆராதனை மற்றும் தொணடுகள் , இவை பதிபுண்ணியம் இறைநல்வினை எனப்படும். இவை நாம் அனைவரும் பெறக் கூடிய புண்ணியமாகும்.
மூன்றாவதாக, மேனலையாக நாம் என்றும் அவனடிமை என்று அவனுக்கு நம் உடலால் செய்யும் தொண்டுகள், பணிவிடைகள், உழவாரப்பணிகள் , இவை மட்டுமே இறைத்தொண்டு எனப்படும். இதற்கு இணையே இல்லை இவையே உண்மை வழிபாடு இதுவே பக்தி பூர்வமான அருள் வழிபாடாகும்.
கோயிலை வலம்வருவது, சுத்தம் செய்வது, பூத்தொடுத்து அணிவிப்பது, தீபம் ஏற்றுவது, வாயாரப்பாடுவது, கேட்பது, அபிடேக ஆராதனைகளை தானே செய்வது, மனம் நிறைய அவனை எண்ணி பூரிப்பது, மந்திரம் உச்சரிப்பது தியானம், செய்வது, எனும் இவை யனைத்தும் நாம் செய்யக்கூடிய இறைத்தொண்டுகள் ஆகும், அவனை அடைய அவை நல்வழிகள் ஆகும்.
ஆனால் இவற்றில் எதைச் செய்யும்போதும், நான் செய்கிறேன் என்ற ஆணவம் சுயவேண்டுதல் புகுந்துவிடாது செய்யவேண்டும். இதற்கு நம் மனம் பக்குவப்பட வேண்டும். அப்பக்குவம் நம் வாழ்கையில் ஏற்ற இறக்கங்களினாலும் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனத்தாலும் உண்டாகும், அதை வழிபாடு என்னும் இறைத்தொண்டின் வழியில் படிப்படியாகத்தான் பெறமுடியும், இறைத்தொண்டின்(வழிபாட்டின்) வழியில் மட்டுமே நாம்அவனை அடையமுடியும்.
இறைவழிபாட்டில் உழவாரப்பணிக்கு ஈடுஇணை எதுவும் கிடையாது, சைவ நாயன்மார்களில் இறைத்தொண்டில் ஈடுபடாதோர் யாரும்இல்லை, அனைவரும் மேற்கூறிய இறை வழிபாட்டுடன் சிவனடியார்களுக்கு அன்னதானமும் வழங்கிதான் சிறப்பு பெற்றது யாரும் அறிந்ததே.
அன்பே சிவம்
வழிபாடு என்பது "வழிப்படுதல்" என்பதன் சுருக்கமாகும். இறைவனை அடையும் வழியில் நாம் சென்று கொண்டு இருக்கிறோம், அவன் வழிப்படுகிறோம் என்று உணரவேண்டும். நம் வழிபாடுகள் மூன்று வகையாகும். முதலாவது நான் என்னும் அகங்காரத்துடன் செய்வது. கோவிலுக்கு என்று ஒன்றை செய்துவிட்டு பின் " உபயம்" என்று தன்பெயரை போடுவதும் தன்னை பெருமைப்படுத்தும் வியாபார நோக்கம் கொண்டதும் இவ்வகைதான், இது நான் செய்தேன் என்ற இறுமாப்பையே காட்டுகிறது. நம் பெயருக்கு நாமே செய்கின்ற அர்ச்சனையும் இதுபோன்றதுதான். இங்கும் நான் என்ற தன்முனைப்போ முன்னிற்கிறது. வழிபடும் போது நான் என்ற எண்ணம் வந்துவிட்டால் அது வழிபாடு அன்று.
ஆனால் நமக்கு வழிபாடு என்கிற நெறியை ஊட்டுகிற முதற்படி இதுதான். நாம் அனைவரும் கடந்து வருகிற பாதையும் இதுதான், ஆனாலும் தவறில்லை.
அடுத்தபடியாக தன்பெயர் வெளிவராது இறைவனை எண்ணி அவனுக்கே என அர்ப்பணித்து இறைவன் பெயரிலேயே நாம் செய்விக்கும் அர்ச்சனை, அபிசேக ஆராதனை மற்றும் தொணடுகள் , இவை பதிபுண்ணியம் இறைநல்வினை எனப்படும். இவை நாம் அனைவரும் பெறக் கூடிய புண்ணியமாகும்.
மூன்றாவதாக, மேனலையாக நாம் என்றும் அவனடிமை என்று அவனுக்கு நம் உடலால் செய்யும் தொண்டுகள், பணிவிடைகள், உழவாரப்பணிகள் , இவை மட்டுமே இறைத்தொண்டு எனப்படும். இதற்கு இணையே இல்லை இவையே உண்மை வழிபாடு இதுவே பக்தி பூர்வமான அருள் வழிபாடாகும்.
கோயிலை வலம்வருவது, சுத்தம் செய்வது, பூத்தொடுத்து அணிவிப்பது, தீபம் ஏற்றுவது, வாயாரப்பாடுவது, கேட்பது, அபிடேக ஆராதனைகளை தானே செய்வது, மனம் நிறைய அவனை எண்ணி பூரிப்பது, மந்திரம் உச்சரிப்பது தியானம், செய்வது, எனும் இவை யனைத்தும் நாம் செய்யக்கூடிய இறைத்தொண்டுகள் ஆகும், அவனை அடைய அவை நல்வழிகள் ஆகும்.
ஆனால் இவற்றில் எதைச் செய்யும்போதும், நான் செய்கிறேன் என்ற ஆணவம் சுயவேண்டுதல் புகுந்துவிடாது செய்யவேண்டும். இதற்கு நம் மனம் பக்குவப்பட வேண்டும். அப்பக்குவம் நம் வாழ்கையில் ஏற்ற இறக்கங்களினாலும் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனத்தாலும் உண்டாகும், அதை வழிபாடு என்னும் இறைத்தொண்டின் வழியில் படிப்படியாகத்தான் பெறமுடியும், இறைத்தொண்டின்(வழிபாட்டின்) வழியில் மட்டுமே நாம்அவனை அடையமுடியும்.
இறைவழிபாட்டில் உழவாரப்பணிக்கு ஈடுஇணை எதுவும் கிடையாது, சைவ நாயன்மார்களில் இறைத்தொண்டில் ஈடுபடாதோர் யாரும்இல்லை, அனைவரும் மேற்கூறிய இறை வழிபாட்டுடன் சிவனடியார்களுக்கு அன்னதானமும் வழங்கிதான் சிறப்பு பெற்றது யாரும் அறிந்ததே.
அன்பே சிவம்
சும்மா இரு ..... சொல் அற !
நாம் யாரும் நிகழ்காலத்தில் வாழ்வதே கிடையாது. பழைய கால நினைவுகளை அசைபோடுகிறோம் , வருங்கால கனவுகளில் மிதக்கிறோம், நம்மனமும் உடலும் நிகழ்கால செய்கையில் ஒன்றுபடுதோ நிகழ்கால வாழ்வாகும்,அலைபாயும் மனத்தை நிகழ்காலத்திற்கு கொண்டுவருவதில் கடந்த கால, எதிர்கால கனவு நினைவு அலைகளிலிருந்து விடுபட்டால் தான் நம் மனம் முழுவதும் இறைவனிடம் நிலைபெறவும் அவன் அருள் பெறவும் வழிவகுக்கும், நம் மனம் பேசிக் கொண்டே இருக்கும் இயல் புடையது அதற்கு ஓய்வில்லை, அதனாலேயே பழங்கால நினைவுகளும் எதிர்கால கனவுகளும் நமக்கு ஏற்படுகின்றன, நாம் மனம்வழிப் பேச்சை குறைக்க வேண்டும். நம்மனம் அமைதியாக இருக்கும் சூழலை உருவாக்க வேண்டும். அப்போது தான் மனம் பேசாதநிலையை நாம் உணர முடியும்.
நாம் இறைவனது அபிசேக அலங்காரங்களை காணும் போதும் இறை மந்திரங்களை உச்சரிக்கும் போதும் நம்மனம் அதிலேயே ஒன்றியிருக்கும். அப்போது அது பேசுவதை தவிர்த்துவிடும். இதனையே " சிந்தனை நிந்தனுக்கு ஆக்கி" என்கிறார் மாணிக்கவாசகர். நம்மனம் முழுவதும்இறையழகே நிறைந்திருந்தால் மறுபேச்சுக்கே அங்கு இடமில்லை அல்லவா? இப்படி மறு சிந்தனையே எண்ணித் தன்மனத்துள் அவனுக்குக் கோவில் கட்டி குடமுழுக்கும் செய்வித்து முத்தி பெற்றவர் பூசலார் நாயனார்.
பிராணாயாமம், தியானம் செய்பவர்கள் தங்கள் சிந்தனையை மூக்கின் முனியில் அல்லது இதயத் தானத்தில் இருத்தி செய்யும் போது மனஓட்டம் அடங்கும். மனமும் பேசாது ஒடுங்கும்.
இதனைச் " சும்மா இரு சொல் அற " என்கிறார் அருணகிரியார். ஆகவே இறைவனை வணங்கும் போதும் எண்ணும்போதும் தியானிக்கும் போதும் நாம் நம் மன ஓட்டத்தை நிறுத்தலாம். அவ் வழியில் நிகழ்காலத்தில் வாழலாம், இதுவே சும்மா இருந்து மன நிம்மதியுடன் சுகத்தை - பேரின்பத்தை காணலாம்,
நாம் யாரும் நிகழ்காலத்தில் வாழ்வதே கிடையாது. பழைய கால நினைவுகளை அசைபோடுகிறோம் , வருங்கால கனவுகளில் மிதக்கிறோம், நம்மனமும் உடலும் நிகழ்கால செய்கையில் ஒன்றுபடுதோ நிகழ்கால வாழ்வாகும்,அலைபாயும் மனத்தை நிகழ்காலத்திற்கு கொண்டுவருவதில் கடந்த கால, எதிர்கால கனவு நினைவு அலைகளிலிருந்து விடுபட்டால் தான் நம் மனம் முழுவதும் இறைவனிடம் நிலைபெறவும் அவன் அருள் பெறவும் வழிவகுக்கும், நம் மனம் பேசிக் கொண்டே இருக்கும் இயல் புடையது அதற்கு ஓய்வில்லை, அதனாலேயே பழங்கால நினைவுகளும் எதிர்கால கனவுகளும் நமக்கு ஏற்படுகின்றன, நாம் மனம்வழிப் பேச்சை குறைக்க வேண்டும். நம்மனம் அமைதியாக இருக்கும் சூழலை உருவாக்க வேண்டும். அப்போது தான் மனம் பேசாதநிலையை நாம் உணர முடியும்.
நாம் இறைவனது அபிசேக அலங்காரங்களை காணும் போதும் இறை மந்திரங்களை உச்சரிக்கும் போதும் நம்மனம் அதிலேயே ஒன்றியிருக்கும். அப்போது அது பேசுவதை தவிர்த்துவிடும். இதனையே " சிந்தனை நிந்தனுக்கு ஆக்கி" என்கிறார் மாணிக்கவாசகர். நம்மனம் முழுவதும்இறையழகே நிறைந்திருந்தால் மறுபேச்சுக்கே அங்கு இடமில்லை அல்லவா? இப்படி மறு சிந்தனையே எண்ணித் தன்மனத்துள் அவனுக்குக் கோவில் கட்டி குடமுழுக்கும் செய்வித்து முத்தி பெற்றவர் பூசலார் நாயனார்.
பிராணாயாமம், தியானம் செய்பவர்கள் தங்கள் சிந்தனையை மூக்கின் முனியில் அல்லது இதயத் தானத்தில் இருத்தி செய்யும் போது மனஓட்டம் அடங்கும். மனமும் பேசாது ஒடுங்கும்.
இதனைச் " சும்மா இரு சொல் அற " என்கிறார் அருணகிரியார். ஆகவே இறைவனை வணங்கும் போதும் எண்ணும்போதும் தியானிக்கும் போதும் நாம் நம் மன ஓட்டத்தை நிறுத்தலாம். அவ் வழியில் நிகழ்காலத்தில் வாழலாம், இதுவே சும்மா இருந்து மன நிம்மதியுடன் சுகத்தை - பேரின்பத்தை காணலாம்,
தாயுமானவர் சித்தரின் அருள் வேட்கை புலம்கள் சில,:
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாது வேறோன்று அறியேன் பாரபரமே எனும் கொள்கையுடைய தாயுமானவரின் அருள்வேட்கை அளப்பரியதாகும், அற்றில் சில
என்னை மாயையினின்று நீக்கி ஆணவத்தை அறத்து நேரே அறிவு வொளியில் எம்மை சேர்த்து, காலைத்தூக்கி மன்றத்தில் ஆடும் திருவடியை வணங்கும் நாள் எந்நாளோ?
தீமை விளைவதற்கு காரணமான பேராசையாம் புலைத்தொழியல் பின் அறிவு சென்று விடாது திருவருளால் நன்னெறியில் அறிவு சென்று அடையும் நாள் எந்நாளோ?
கண்ணால் கண்டவை நிலையில்லாதவை என்றும் எங்கும் நிறைந்துள்ள சிவமே நிலையானது என்றும் கூறியருளிய சிவ வாக்கியரின் திருவடியை அடையும் நாள் எந்நாளோ?
இளமைப் பருவத்தின் பசுமையான கொங்கைகளால் ஆடவரை மயக்கும் மாதரின் பாழான மயக்கும் நஞ்சு என்று உணர்ந்து வெறுத்து ஒதுக்கி இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாள்?
கச்சினால் கட்டப்பட்டுள்ள முலையையும் கரும்பு சாறு போன்ற இனிய சொல்லையும் உடைய மங்கையர் மயக்கத்தை விட்டு நீங்குவது எந்நாள்?
பெருத்து உயர்ந்து சில நாட்களுக்கு பின் தளர்ந்து தொங்கும் முலைகளையுடைய மங்கையர் மீது படுத்து உறங்கும் காமத்தையுடைய சோம்பலை ஒழிக்கும் நாள் எந்நாள்?
மன்மதனை போன்ற மிக்க காமம் உடையவனை வா என்று சாடைகாட்டி இருண்ட கண்களான வலையில் சிக்கி கொள்ள வைக்கும் மங்ககையர் பெயரை மறந்து இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாள்?
வாய் திறந்து கொஞ்சு மொழி பேசி ஆசை என்ற கள்ளை தம்மிடமிருந்து மொண்டு ஆடவர் ஊட்டும் விலைமாதர் கடைக்கண்ணில் அகப்பட்டு சுழல்விழியினின்று விடுபடுவது எந்நாள்?
கரை வைத்த புடவையின் கொய்சகத்தில் ஆடவரின் உள்ளத்தை எல்லாம் பிணித்து வைத்துக் கொள்ளும் வஞ்சகத்தில் வல்ல மாதர் கட்டினின்று நீங்குவது எந்நாள்?
ஆழ்ந்த கடைப் போன்ற அளவில்லா வஞ்சத்தை உடைய நெஞ்சம் பொருந்திய பயன் இல்லாத மங்கையர் மயக்கத்தினின்று நீக்குவது எந்நாள்?
இவ்வுடல் காரண தத்துவஙகள் முப்பத்தாறும், காரிய தத்துவங்கள் அறுபதும் ஆகிய தொண்ணூற்று ஆறு தத்துவங்கள் என கூறப்பட்டவர் , அவரவர் கன்மத்துக்கு தக்கவாறு தாமாகவே சென்று வாழ்ந்திருப்பது இந்தவுடல் என்ற நாட்டைப் பித்தனான நான், " நான்" என்ற செருக்கு கொண்டு பிதற்றுதல் பிதற்றுதலை ஒழிப்பது எந்நாளோ?
ஆணவம், கன்மம், மாயை, என்னும் மும்மலச் சேற்றினால் உண்டான முழுக் கம்பீர பாகம் என்னும் நரகத்தை போன்ற மலவுடலில் வெறுப்பு அடைவது எந்நாள்?
ஆடவரின் உறுதியான மனம் என்ற பறவை அகபபட்டு கொள்ளும்படி கூந்தலான காட்டில் மலர் மாலையான வலையை வைக்கும் மங்கையரின் தந்திரத்தை கடக்கும் நாள் எந்நாள்?
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாது வேறோன்று அறியேன் பாரபரமே எனும் கொள்கையுடைய தாயுமானவரின் அருள்வேட்கை அளப்பரியதாகும், அற்றில் சில
என்னை மாயையினின்று நீக்கி ஆணவத்தை அறத்து நேரே அறிவு வொளியில் எம்மை சேர்த்து, காலைத்தூக்கி மன்றத்தில் ஆடும் திருவடியை வணங்கும் நாள் எந்நாளோ?
தீமை விளைவதற்கு காரணமான பேராசையாம் புலைத்தொழியல் பின் அறிவு சென்று விடாது திருவருளால் நன்னெறியில் அறிவு சென்று அடையும் நாள் எந்நாளோ?
கண்ணால் கண்டவை நிலையில்லாதவை என்றும் எங்கும் நிறைந்துள்ள சிவமே நிலையானது என்றும் கூறியருளிய சிவ வாக்கியரின் திருவடியை அடையும் நாள் எந்நாளோ?
இளமைப் பருவத்தின் பசுமையான கொங்கைகளால் ஆடவரை மயக்கும் மாதரின் பாழான மயக்கும் நஞ்சு என்று உணர்ந்து வெறுத்து ஒதுக்கி இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாள்?
கச்சினால் கட்டப்பட்டுள்ள முலையையும் கரும்பு சாறு போன்ற இனிய சொல்லையும் உடைய மங்கையர் மயக்கத்தை விட்டு நீங்குவது எந்நாள்?
பெருத்து உயர்ந்து சில நாட்களுக்கு பின் தளர்ந்து தொங்கும் முலைகளையுடைய மங்கையர் மீது படுத்து உறங்கும் காமத்தையுடைய சோம்பலை ஒழிக்கும் நாள் எந்நாள்?
மன்மதனை போன்ற மிக்க காமம் உடையவனை வா என்று சாடைகாட்டி இருண்ட கண்களான வலையில் சிக்கி கொள்ள வைக்கும் மங்ககையர் பெயரை மறந்து இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாள்?
வாய் திறந்து கொஞ்சு மொழி பேசி ஆசை என்ற கள்ளை தம்மிடமிருந்து மொண்டு ஆடவர் ஊட்டும் விலைமாதர் கடைக்கண்ணில் அகப்பட்டு சுழல்விழியினின்று விடுபடுவது எந்நாள்?
கரை வைத்த புடவையின் கொய்சகத்தில் ஆடவரின் உள்ளத்தை எல்லாம் பிணித்து வைத்துக் கொள்ளும் வஞ்சகத்தில் வல்ல மாதர் கட்டினின்று நீங்குவது எந்நாள்?
ஆழ்ந்த கடைப் போன்ற அளவில்லா வஞ்சத்தை உடைய நெஞ்சம் பொருந்திய பயன் இல்லாத மங்கையர் மயக்கத்தினின்று நீக்குவது எந்நாள்?
இவ்வுடல் காரண தத்துவஙகள் முப்பத்தாறும், காரிய தத்துவங்கள் அறுபதும் ஆகிய தொண்ணூற்று ஆறு தத்துவங்கள் என கூறப்பட்டவர் , அவரவர் கன்மத்துக்கு தக்கவாறு தாமாகவே சென்று வாழ்ந்திருப்பது இந்தவுடல் என்ற நாட்டைப் பித்தனான நான், " நான்" என்ற செருக்கு கொண்டு பிதற்றுதல் பிதற்றுதலை ஒழிப்பது எந்நாளோ?
ஆணவம், கன்மம், மாயை, என்னும் மும்மலச் சேற்றினால் உண்டான முழுக் கம்பீர பாகம் என்னும் நரகத்தை போன்ற மலவுடலில் வெறுப்பு அடைவது எந்நாள்?
ஆடவரின் உறுதியான மனம் என்ற பறவை அகபபட்டு கொள்ளும்படி கூந்தலான காட்டில் மலர் மாலையான வலையை வைக்கும் மங்கையரின் தந்திரத்தை கடக்கும் நாள் எந்நாள்?
சித்தர் தாயுமான சுவாமிகளின் இறைவேட்கை
திருச்சியில் கேடியப்ப பிள்ளையின் மைந்தராக இறையருளால் பிறந்த தாயுமானவர் தந்தை காலமானபோது திருச்சி மன்னராக இருந்த விஜயரங்க சொக்கநாத நாயக்க அரசில் கணக்கராகப் பணியமர்த்தப்பட்டார், சிவபிரான போதம் அறிந்த தாயுமானவரால் அரசாங்க கணக்குகளில் ஈடுபாடு கொள்ள முடியவில்லை, சிவநெறிச் சிந்தனையும் சித்தர் ஈடுபாடும் காலாவதியாகும் மனித வாழ்வின் அற்பக் கணக்குளின் கூட்டல் கழித்தலில் இருந்து பலநேரம் தாயுமானவரை ஒதுங்கியிருக்க செய்தன,
அரசு அலுவலோடு இறைப்பணியையும் செய்து வந்தார், மெளனகுரு சுவாமிகளிடம் தன்னை மாணாக்கராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டி தாயுமானவரை சீடராக ஏற்று அவருக்கு யோக ஞான முறைகளையும் உபதேசித்தருளினார். அரண்மனை உத்தியோகத்திலிருந்து நீங்கி விராலிமலைக்கு வந்து நிஸ்டையில் ஆழ்ந்தார் தாயுமானவர். விராலிமலை சித்தர்களின் வாசஸ்தலமாக அந்நாளில் விளங்கி வந்தது. சித்தர் பலரும் தங்கள் சித்திகளுக்கான பயிற்சிக்களமாக அங்கே வாழ்ந்து கொண்டிருந்தபோது சித்தர்களின் தொடர்புகளால் தாயுமானவரும் சித்தரானார்.
இறவாமை பற்றி சாகாக்கலை கண்டறிந்த சித்தர்களின் ரகசியம் பலவற்றை அவர்களின் அனுபவ வெளிப்பாடாக தாயுமானவர் கண்டறிந்தார். ஆன்மா முக்தியடைய உடம்பு அதற்கு ஒரு கருவியாக வந்தது முக்தியடைவது ஆன்மா மட்டுமே என்பதை உணர்ந்தார் தாயுமானவர். மனமடக்க தியான நிலையே மாற்று என உணர்ந்து தாயுமானவரின் மனம் மோகனத்தில் பற்றிக் கொண்டது, வெயிலின் ஒளியிலே காய்ந்த பலகாலம் சிதையாமலிருப்பது போல சூரியப் பிரகாசமான சிவஜோதியில் திளைப்பவரும் உடலும் ஆன்மாவும் ஒருநாளும் அழிவதில்லை, முக்திக்கு வழி அறியாமல் ஐம்புலங்களைக் காத்து வாழ்வதுதான், ஐம்புலங்களின் உணர்வுகளை வழியோடு தெரிந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கற்றுக் கொண்டு விட்டால் இந்த உடலுக்கு இறப்பே இல்லை என்பதை உணர்ந்தார் தாயுமான சித்தர். உணர்வும் நினைவும் நடுங்கிய பின்னர் மனமானது சுத்த சூனியமான பரவெளியில் திளைத்திருக்கும் இந்நிலையில் மனம் செயலாற்று வெறுமையாக இருக்கும், மெய்யுணர்வாக விளங்கும் பரம்பொருளை தரிசிப்பதற்கு இந்த மன வெறுமை நிலையே தேவைப்படுகிறது என்பதை அறிந்து தெரிந்தார். தாயுமானவர் என்றைக்கும் அழியாத சிவராஜயோகம் வேண்டினார். சிவராஜயோகம் என்பது யோகத்தை கருவியாக கொண்டு சிவத்தியானம் சமாதி என்பனவற்றை முயன்று அடைதலாகும்.
அகங்காரம் ஆணவத்தை காட்டிலும் கொடியது இந்த இயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவினிடம் முறையீடு செய்தார். மெய்யறிவு பெறுவதற்கு எவ்வித பயிற்சியும் பெறாமை கருதி வருந்தினார். இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்கினார். மனம் இறைவனின் திருவடியில் இடும் பலியாகவும் அன்பு அபிசேக நீராகவும் உயிர் நைவேத்தியமாகவும் பிராணனையும் அறிவையும் தூபதீபமாகவும் கொண்டு துதிப்பாதாக கூறுகிறார் தாயுமானவர். உடலும் உயிரும் உடைமைகளும் மனிதனுக்கு சொந்தமானவையல்ல அவை இறைவனுக்கு சொந்தமானவை அவனிடம் ஒப்படைக்கப் படவேண்டியவை என்று கூறித் தன்னை சேர்த்து கொள்ளும்படி இறைவனிடம் முறையிடுககிறார் தாயுமானவர். தாயில்லாச் சேய் போல் அலைந்து துன்புற்ற தன்னை தாயைக் காட்டிலும் கருனை காட்டி மீட்கும்படி சிந்தை நைந்துருக இறைவனிடம் முறையிட்டவர் தாயுமானவர். இறப்பதும், பிறப்பதும் ஆன்மாவின் முடிவல்ல. உடல் மாயை அழிக்கூடியது இந்தச் சித்த தத்துவத்தை உணர்ந்து உலகுக்குரைத்தவர் ஞானாசிரியர் தாயுமானவர், எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே
எனும் கொள்கையுடையவர் தாயுமானவர்அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி
அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந் தந்தெய்வம்
எந்தெய்வமென் றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கு முள்ள தெதுஅது கங்குல்பக லறநின்ற
எல்லையுள தெதுஅது கருத்திற் கிசைந்ததுவே கண்டன வெலாமோன
வுருவெளிய தாகவுங் கருதிஅஞ் சலிசெய்குவாம்.
திருச்சியில் கேடியப்ப பிள்ளையின் மைந்தராக இறையருளால் பிறந்த தாயுமானவர் தந்தை காலமானபோது திருச்சி மன்னராக இருந்த விஜயரங்க சொக்கநாத நாயக்க அரசில் கணக்கராகப் பணியமர்த்தப்பட்டார், சிவபிரான போதம் அறிந்த தாயுமானவரால் அரசாங்க கணக்குகளில் ஈடுபாடு கொள்ள முடியவில்லை, சிவநெறிச் சிந்தனையும் சித்தர் ஈடுபாடும் காலாவதியாகும் மனித வாழ்வின் அற்பக் கணக்குளின் கூட்டல் கழித்தலில் இருந்து பலநேரம் தாயுமானவரை ஒதுங்கியிருக்க செய்தன,
அரசு அலுவலோடு இறைப்பணியையும் செய்து வந்தார், மெளனகுரு சுவாமிகளிடம் தன்னை மாணாக்கராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டி தாயுமானவரை சீடராக ஏற்று அவருக்கு யோக ஞான முறைகளையும் உபதேசித்தருளினார். அரண்மனை உத்தியோகத்திலிருந்து நீங்கி விராலிமலைக்கு வந்து நிஸ்டையில் ஆழ்ந்தார் தாயுமானவர். விராலிமலை சித்தர்களின் வாசஸ்தலமாக அந்நாளில் விளங்கி வந்தது. சித்தர் பலரும் தங்கள் சித்திகளுக்கான பயிற்சிக்களமாக அங்கே வாழ்ந்து கொண்டிருந்தபோது சித்தர்களின் தொடர்புகளால் தாயுமானவரும் சித்தரானார்.
இறவாமை பற்றி சாகாக்கலை கண்டறிந்த சித்தர்களின் ரகசியம் பலவற்றை அவர்களின் அனுபவ வெளிப்பாடாக தாயுமானவர் கண்டறிந்தார். ஆன்மா முக்தியடைய உடம்பு அதற்கு ஒரு கருவியாக வந்தது முக்தியடைவது ஆன்மா மட்டுமே என்பதை உணர்ந்தார் தாயுமானவர். மனமடக்க தியான நிலையே மாற்று என உணர்ந்து தாயுமானவரின் மனம் மோகனத்தில் பற்றிக் கொண்டது, வெயிலின் ஒளியிலே காய்ந்த பலகாலம் சிதையாமலிருப்பது போல சூரியப் பிரகாசமான சிவஜோதியில் திளைப்பவரும் உடலும் ஆன்மாவும் ஒருநாளும் அழிவதில்லை, முக்திக்கு வழி அறியாமல் ஐம்புலங்களைக் காத்து வாழ்வதுதான், ஐம்புலங்களின் உணர்வுகளை வழியோடு தெரிந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கற்றுக் கொண்டு விட்டால் இந்த உடலுக்கு இறப்பே இல்லை என்பதை உணர்ந்தார் தாயுமான சித்தர். உணர்வும் நினைவும் நடுங்கிய பின்னர் மனமானது சுத்த சூனியமான பரவெளியில் திளைத்திருக்கும் இந்நிலையில் மனம் செயலாற்று வெறுமையாக இருக்கும், மெய்யுணர்வாக விளங்கும் பரம்பொருளை தரிசிப்பதற்கு இந்த மன வெறுமை நிலையே தேவைப்படுகிறது என்பதை அறிந்து தெரிந்தார். தாயுமானவர் என்றைக்கும் அழியாத சிவராஜயோகம் வேண்டினார். சிவராஜயோகம் என்பது யோகத்தை கருவியாக கொண்டு சிவத்தியானம் சமாதி என்பனவற்றை முயன்று அடைதலாகும்.
அகங்காரம் ஆணவத்தை காட்டிலும் கொடியது இந்த இயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவினிடம் முறையீடு செய்தார். மெய்யறிவு பெறுவதற்கு எவ்வித பயிற்சியும் பெறாமை கருதி வருந்தினார். இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்கினார். மனம் இறைவனின் திருவடியில் இடும் பலியாகவும் அன்பு அபிசேக நீராகவும் உயிர் நைவேத்தியமாகவும் பிராணனையும் அறிவையும் தூபதீபமாகவும் கொண்டு துதிப்பாதாக கூறுகிறார் தாயுமானவர். உடலும் உயிரும் உடைமைகளும் மனிதனுக்கு சொந்தமானவையல்ல அவை இறைவனுக்கு சொந்தமானவை அவனிடம் ஒப்படைக்கப் படவேண்டியவை என்று கூறித் தன்னை சேர்த்து கொள்ளும்படி இறைவனிடம் முறையிடுககிறார் தாயுமானவர். தாயில்லாச் சேய் போல் அலைந்து துன்புற்ற தன்னை தாயைக் காட்டிலும் கருனை காட்டி மீட்கும்படி சிந்தை நைந்துருக இறைவனிடம் முறையிட்டவர் தாயுமானவர். இறப்பதும், பிறப்பதும் ஆன்மாவின் முடிவல்ல. உடல் மாயை அழிக்கூடியது இந்தச் சித்த தத்துவத்தை உணர்ந்து உலகுக்குரைத்தவர் ஞானாசிரியர் தாயுமானவர், எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே
எனும் கொள்கையுடையவர் தாயுமானவர்அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி
அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந் தந்தெய்வம்
எந்தெய்வமென் றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கு முள்ள தெதுஅது கங்குல்பக லறநின்ற
எல்லையுள தெதுஅது கருத்திற் கிசைந்ததுவே கண்டன வெலாமோன
வுருவெளிய தாகவுங் கருதிஅஞ் சலிசெய்குவாம்.
திருவண்ணாமலையின் அர்ப்புதங்கள்!
திருவண்ணாமலை என்று சொன்னாலும் முத்தி, தீப ஜோதியை பார்த்தாலும் முக்தி. கிருதயுகத்தில் இம்மலை அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் ஞானிகள் சித்தர்கள், பார்வையில் மரகத மைலையாகவும், பாமர மக்களுக்கு கல் மலையாகவும், காட்சி தருகிறது, இம்மலையில் ஏராளமான மூலிகைகளும் குகைகளும் உள்ளன, இம்மலை சித்தர்கள் வாழும் சதுரகிரி மற்றும் அகத்தியர் வாழும் பொதிகை மலை, சேர்வராயன் மலைகளை விட மிகவும் சிறப்பு பெற்றது, இம்மலை பல்லாயிரக்கணக்காணவர்களை கவரும் மகத்துவம் பெற்றது, இங்கு ஆயிரக்கணக்கான சித்தர்கள் அருளாளர்கள், மகான்கள் ஞானிகள் ரிசிகள் ஆகியோர்களின் ஜீவ சமாதிகள் உள்ளதால் அவர்களின் ஆத்மாக்கள் இம்மலையிலேயே உலவிவருவதால் அவர்களின் வைப்பிரேசன் என்ற ஈர்ப்புத்தன்மை மக்களை ஆன்மீக வாதிகளை கவர்ந்து ஈர்க்கின்றது. இங்குள்ள அண்ணாமலையாகிய இறைவன் முதன்மையான மூலாதரமாக விளங்கினாலும், அவனையே வேண்டி முத்தி பெற்ற அருளாளர்கள் , சித்தர்கள் இறைவனின் - அண்ணாமலையானின் - செயல்திறனை ஊக்குவித்து மக்களுக்கு நேரிடையாக அருளாசி வழங்குகிறார்கள். எனவே தான் மற்ற சிவதளங்களை விட திருவண்ணாமலை மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. சிவனின் பஞ்ச பூத தலங்களில் இது அக்னி தலமாகும், மற்றவை சிதம்பரம் ஆகாயம், காளகஸ்தி வாயு, திருவானைக்கால் நீர் தலம், காஞ்சி நிலம் இவற்றில் இறைவன் அக்னியாக காட்சி தருகிறார் இங்கு, இம் மலை இமயமலையை விட மிகவும் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இம் மலை ஈசானம் தத்புருஸம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் சிவபெருமானின்ஐந்து திருமுகங்களை நினைவூட்டும் பஞ்சகிரியாக காட்சி ( பஞ்சலிங்கம்) தருகிறது, இக்காட்சியை கிரிவலம் வரும்போது குபேரலிங்கம் தாண்டியவுடன் காணலாம்.
கிரிவலம் வரும் போது கீழ்திசையிலிருந்து பார்த்தால் ஓன்றாக தெரியும் மலையாகவும், சுற்றும் வழியில் இரண்டாகத் தெரியும் மலையின் மேற்கு திசையிலிருந்து பார்த்தால் - கெளதம ஆசிரமத்திற்கு எதிரிலிருந்து பார்த்தால் மூன்று பிரிவாகத் தெரியும், இதை திரிமூர்த்தி தரிசனம் என்று போற்றுவார்கள். இந்த திரிமூர்த்தி தரிசனம் காணும் சாலையோரம் சேசத்திரி சுவாமிகள் தன்னை முழுவதுமாக மண்ணால் மூடிக் கொண்டு தவமிருந்த இடம் உள்ளது. இந்த இடத்தில் மட்டும் மண் கறுப்பு சிவப்பு நிறத்தில் காணப்படும், இஙகிருந்து சற்று நடந்தால் தொடர்ச்சியாக நான்கு மலைகள் போல் காட்சி தரும் வலம் வந்து முடிக்கும் தருவாயில் அதாவது குபேரலிங்கம் தாண்டியவுடன் ஐந்து மலையாக அதாவது பஞ்சலிங்கமாக காணப்படும்.
திருமால் பிரம்மா ஆகியோரின் அகந்தையை நீக்க சிவபெருமான் லிங்கோத்பவராக ஜோதிப் பழம்பாக காட்சி தந்த திருத்தலம் இது. இந்த ஜோதி திருவுருவத்தின் வெம்மை தாங்காமல் தேவர்கள் வருந்தி துன்பப்படவே சிவபெருமான் மலையாகி நின்றதாக புராணங்கள் கூறுகின்றன. இம்மலையில் தவமிருந்த பார்வதி தேவிக்கு சிவபெருமான் தன் உடலில் பாதி இடத்தை அளித்து அர்த்தநாரீஸ்வராக காட்சி கொடுத்த தலமும் இங்கேதான்.இம்மலை உச்சியில் தீபம் ஏற்றி வலம் வந்த சிறப்பினை பார்வதிதேவி பெற்ற நாள் திருக்கார்த்திகை என்கிறது புராணம்,
திருவண்ணாமலை வலம் வருவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம், ஒருமுறை வலம் வரவேண்டுமென்று எண்ணி ஒரடி எடுத்து வைத்தால் ஒரு யாகம் செய்த பலனும், இரண்டடி எடுத்து வைத்தால் ராஜயேக பலனும், புண்ணிய தீர்ததங்களில் நீராடிய பலனும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேக யாகப் பலனுடன் தான தர்மங்கள் பல செய்த பலன்களும் நான்கு அடி எடுத்து வைத்தால் எல்லா யாகப்பலன்களும் கிட்டும் என்று அருணாசலபுராணம் கூறுகிறது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கோவில்களையும், லிங்கங்களையும் தரிசித்தால் பேறுக்ள பல பெறலாம் என புராணம் கூறுகிறது.
கிரிவலப் பாதையில் முதலில் தரிசனம் செய்ய வேண்டியது இந்திர லிங்கமாகும், கிழக்கு திசையில் அருள்புரியும் இந்திர லிங்கத்தை வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
தென்கிழக்கு திசையில் வலது பக்கம் உள்ளது இரண்டாவது லிங்கமான அக்னி லிங்கமாகும் இது தாமரைக்குளம் அருகே அமைந்துள்ளது, இந்த லிங்கத்தை வழிபட்டால் நோய் பயம்
நீங்கும், மூன்றாம் லிங்கமாக தெற்கு திசையில் இருப்பது எம லிங்கம். இந்த லிங்கத்தின் அருகே சிம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடி எம லிங்கத்தை வழிபட எமபயம் நீங்கும்.
தென்மேற்கு திசையில் நான்காம் லிங்கமாக உள்ளது நிருதி லிங்கம், இங்கிருந்து மலையை பார்த்தால் இறைவனும் இறைவியும் இணைந்த தோற்றம் போல் ஒர் அபூர்வ காட்சியை தரிசிக்கலாம். இங்குள்ள தீர்த்தம் சனி தீர்ததம் எனப்படுகிறது இந்த லிங்கத்தை வழிபட சனியின் தாக்கம் குறையும்.
ஐந்தாவது வருண லிங்கம் மேற்கில் உள்ளது. இங்கு வருண தீர்த்தம் உள்ளது. வருண லிங்கத்தை வழிபட்டால் தீராத நோய்கள் நீங்கும் நீரிழிவு தாக்கம் இருந்தால் கட்டுக்குள் அடங்கும்.
ஆறாவதான வாயு லிங்கம் வடமேற்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசித்தால் எதிரிகள் தொல்லை நீங்கும் மூட்டுவலி முழங்கால் வலி நாளடைவில் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
வடதிசையில் உள்ளது ஏழாவதான குபேர லிங்கம் , இந்த லிங்கம் காசுக்களை அர்ப்பணித்து வழிபட்டால் செல்வ செழிப்பு வளரும்,
எட்டாவது லிங்கமான ஈசான லிங்கம் வடக்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தை வழிபட துன்பங்கள் விலகும்.
இந்த அஸ்ட லிங்கங்களுக்கு எதிரில் உள்ள நந்திகள் லிங்கத்தைப் பார்த்த வண்ணம் காட்சி தராமல் மலையை பார்த்த வண்ணம் உள்ளன. திருவண்ணாமலையோ சிவபெருமானாக உள்ளதால் நந்திகளும் மலையை பார்த்த வண்ணம் உள்ளன.
மேலும் கிரிவலப் பாதையில் ஏராளமான கோவில்களும் உள்ளன, விநாயகர் துர்க்கை முதலான ஆலங்களும் உள்ளன வணங்கி பேறு பெற்றுய்யலாம்.
கிரிவலம் வருவோர் திருவண்ணாமலையை மட்டும் வலம் வராமல் அடி அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையையும் சேர்த்து வலம் வரம் வேண்டும் இவ்வாறு வலம் வந்தால் எதிர்பாரரத நல்ல பலன்கள் கிட்டும் என்பதில் யாதொரு ஐயமில்லை,
ஓம அருணாசல ஈஸ்வராய நம!
திருவண்ணாமலை என்று சொன்னாலும் முத்தி, தீப ஜோதியை பார்த்தாலும் முக்தி. கிருதயுகத்தில் இம்மலை அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் ஞானிகள் சித்தர்கள், பார்வையில் மரகத மைலையாகவும், பாமர மக்களுக்கு கல் மலையாகவும், காட்சி தருகிறது, இம்மலையில் ஏராளமான மூலிகைகளும் குகைகளும் உள்ளன, இம்மலை சித்தர்கள் வாழும் சதுரகிரி மற்றும் அகத்தியர் வாழும் பொதிகை மலை, சேர்வராயன் மலைகளை விட மிகவும் சிறப்பு பெற்றது, இம்மலை பல்லாயிரக்கணக்காணவர்களை கவரும் மகத்துவம் பெற்றது, இங்கு ஆயிரக்கணக்கான சித்தர்கள் அருளாளர்கள், மகான்கள் ஞானிகள் ரிசிகள் ஆகியோர்களின் ஜீவ சமாதிகள் உள்ளதால் அவர்களின் ஆத்மாக்கள் இம்மலையிலேயே உலவிவருவதால் அவர்களின் வைப்பிரேசன் என்ற ஈர்ப்புத்தன்மை மக்களை ஆன்மீக வாதிகளை கவர்ந்து ஈர்க்கின்றது. இங்குள்ள அண்ணாமலையாகிய இறைவன் முதன்மையான மூலாதரமாக விளங்கினாலும், அவனையே வேண்டி முத்தி பெற்ற அருளாளர்கள் , சித்தர்கள் இறைவனின் - அண்ணாமலையானின் - செயல்திறனை ஊக்குவித்து மக்களுக்கு நேரிடையாக அருளாசி வழங்குகிறார்கள். எனவே தான் மற்ற சிவதளங்களை விட திருவண்ணாமலை மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. சிவனின் பஞ்ச பூத தலங்களில் இது அக்னி தலமாகும், மற்றவை சிதம்பரம் ஆகாயம், காளகஸ்தி வாயு, திருவானைக்கால் நீர் தலம், காஞ்சி நிலம் இவற்றில் இறைவன் அக்னியாக காட்சி தருகிறார் இங்கு, இம் மலை இமயமலையை விட மிகவும் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இம் மலை ஈசானம் தத்புருஸம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் சிவபெருமானின்ஐந்து திருமுகங்களை நினைவூட்டும் பஞ்சகிரியாக காட்சி ( பஞ்சலிங்கம்) தருகிறது, இக்காட்சியை கிரிவலம் வரும்போது குபேரலிங்கம் தாண்டியவுடன் காணலாம்.
கிரிவலம் வரும் போது கீழ்திசையிலிருந்து பார்த்தால் ஓன்றாக தெரியும் மலையாகவும், சுற்றும் வழியில் இரண்டாகத் தெரியும் மலையின் மேற்கு திசையிலிருந்து பார்த்தால் - கெளதம ஆசிரமத்திற்கு எதிரிலிருந்து பார்த்தால் மூன்று பிரிவாகத் தெரியும், இதை திரிமூர்த்தி தரிசனம் என்று போற்றுவார்கள். இந்த திரிமூர்த்தி தரிசனம் காணும் சாலையோரம் சேசத்திரி சுவாமிகள் தன்னை முழுவதுமாக மண்ணால் மூடிக் கொண்டு தவமிருந்த இடம் உள்ளது. இந்த இடத்தில் மட்டும் மண் கறுப்பு சிவப்பு நிறத்தில் காணப்படும், இஙகிருந்து சற்று நடந்தால் தொடர்ச்சியாக நான்கு மலைகள் போல் காட்சி தரும் வலம் வந்து முடிக்கும் தருவாயில் அதாவது குபேரலிங்கம் தாண்டியவுடன் ஐந்து மலையாக அதாவது பஞ்சலிங்கமாக காணப்படும்.
திருமால் பிரம்மா ஆகியோரின் அகந்தையை நீக்க சிவபெருமான் லிங்கோத்பவராக ஜோதிப் பழம்பாக காட்சி தந்த திருத்தலம் இது. இந்த ஜோதி திருவுருவத்தின் வெம்மை தாங்காமல் தேவர்கள் வருந்தி துன்பப்படவே சிவபெருமான் மலையாகி நின்றதாக புராணங்கள் கூறுகின்றன. இம்மலையில் தவமிருந்த பார்வதி தேவிக்கு சிவபெருமான் தன் உடலில் பாதி இடத்தை அளித்து அர்த்தநாரீஸ்வராக காட்சி கொடுத்த தலமும் இங்கேதான்.இம்மலை உச்சியில் தீபம் ஏற்றி வலம் வந்த சிறப்பினை பார்வதிதேவி பெற்ற நாள் திருக்கார்த்திகை என்கிறது புராணம்,
திருவண்ணாமலை வலம் வருவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம், ஒருமுறை வலம் வரவேண்டுமென்று எண்ணி ஒரடி எடுத்து வைத்தால் ஒரு யாகம் செய்த பலனும், இரண்டடி எடுத்து வைத்தால் ராஜயேக பலனும், புண்ணிய தீர்ததங்களில் நீராடிய பலனும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேக யாகப் பலனுடன் தான தர்மங்கள் பல செய்த பலன்களும் நான்கு அடி எடுத்து வைத்தால் எல்லா யாகப்பலன்களும் கிட்டும் என்று அருணாசலபுராணம் கூறுகிறது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கோவில்களையும், லிங்கங்களையும் தரிசித்தால் பேறுக்ள பல பெறலாம் என புராணம் கூறுகிறது.
கிரிவலப் பாதையில் முதலில் தரிசனம் செய்ய வேண்டியது இந்திர லிங்கமாகும், கிழக்கு திசையில் அருள்புரியும் இந்திர லிங்கத்தை வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
தென்கிழக்கு திசையில் வலது பக்கம் உள்ளது இரண்டாவது லிங்கமான அக்னி லிங்கமாகும் இது தாமரைக்குளம் அருகே அமைந்துள்ளது, இந்த லிங்கத்தை வழிபட்டால் நோய் பயம்
நீங்கும், மூன்றாம் லிங்கமாக தெற்கு திசையில் இருப்பது எம லிங்கம். இந்த லிங்கத்தின் அருகே சிம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடி எம லிங்கத்தை வழிபட எமபயம் நீங்கும்.
தென்மேற்கு திசையில் நான்காம் லிங்கமாக உள்ளது நிருதி லிங்கம், இங்கிருந்து மலையை பார்த்தால் இறைவனும் இறைவியும் இணைந்த தோற்றம் போல் ஒர் அபூர்வ காட்சியை தரிசிக்கலாம். இங்குள்ள தீர்த்தம் சனி தீர்ததம் எனப்படுகிறது இந்த லிங்கத்தை வழிபட சனியின் தாக்கம் குறையும்.
ஐந்தாவது வருண லிங்கம் மேற்கில் உள்ளது. இங்கு வருண தீர்த்தம் உள்ளது. வருண லிங்கத்தை வழிபட்டால் தீராத நோய்கள் நீங்கும் நீரிழிவு தாக்கம் இருந்தால் கட்டுக்குள் அடங்கும்.
ஆறாவதான வாயு லிங்கம் வடமேற்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசித்தால் எதிரிகள் தொல்லை நீங்கும் மூட்டுவலி முழங்கால் வலி நாளடைவில் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
வடதிசையில் உள்ளது ஏழாவதான குபேர லிங்கம் , இந்த லிங்கம் காசுக்களை அர்ப்பணித்து வழிபட்டால் செல்வ செழிப்பு வளரும்,
எட்டாவது லிங்கமான ஈசான லிங்கம் வடக்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தை வழிபட துன்பங்கள் விலகும்.
இந்த அஸ்ட லிங்கங்களுக்கு எதிரில் உள்ள நந்திகள் லிங்கத்தைப் பார்த்த வண்ணம் காட்சி தராமல் மலையை பார்த்த வண்ணம் உள்ளன. திருவண்ணாமலையோ சிவபெருமானாக உள்ளதால் நந்திகளும் மலையை பார்த்த வண்ணம் உள்ளன.
மேலும் கிரிவலப் பாதையில் ஏராளமான கோவில்களும் உள்ளன, விநாயகர் துர்க்கை முதலான ஆலங்களும் உள்ளன வணங்கி பேறு பெற்றுய்யலாம்.
கிரிவலம் வருவோர் திருவண்ணாமலையை மட்டும் வலம் வராமல் அடி அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையையும் சேர்த்து வலம் வரம் வேண்டும் இவ்வாறு வலம் வந்தால் எதிர்பாரரத நல்ல பலன்கள் கிட்டும் என்பதில் யாதொரு ஐயமில்லை,
ஓம அருணாசல ஈஸ்வராய நம!
ஞானசம்பந்தரும் - திருத்தோணியப்பரின் சேய் அன்பும்
இறைவனுடைய திருவருளை அடைவதற்குரிய வழிகள் பற்பல. அவற்றுள் சத்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம், என்னும் நான்கு வழிகள் ஆகும், சத்புத்திர மார்க்கமாவது இறைவனை தாய்தந்தையாக எண்ணி ஆன்மா புத்திரனாக அமைந்து வழிபடும் வழி ஆகும், தாசமார்க்கம் என்பது இறைவனை எசமானாக பாவித்து உயிர்கள் பணியாளர்களாக இருந்து வழிபடும் நெறியாகும், சகமார்க்கம் என்பது இறைவன் தன் தோழன் என்று கொண்டு சிவனை வழிபடும் நெறியாகும். சன்மார்க்கம் என்பது இறைவனை ஞானாசாரியனாகக் கொண்டு ஆன்மா சீடனாக இருந்து வழிபடும் நெறியாகும்,
இந்நெறிகளில் சத்புத்திர மார்க்கம் ஞானசம்பந்தர் காட்டிய வழி, இரண்டாவது தாசமார்க்கம் எசமானாக பாவித்தது திருநாவுக்கரசர் வழிபட்ட நெறியாகும், மூன்றாவதான சகமார்க்கம் என்ற நட்புநெறி சுந்தரர் வழிபாட்டு நெறியாகும்.நான்காவதாக உள்ள சன்மார்க்கம் என்ற சன்மார்க்கம் என்ற இறைவனை (சிவனை) குருவாக ஞானாசிரியனாக வழிபட்டவர் மாணிக்க வாசகர்,சிவபுண்ணிய விளைவால் மூர்த்தி தலம் தீர்த்தங்களை வழிபட இறைவன் குருவாகி எழுந்தருளி அருள் புரியும் நிலையே குருவருள் ஆகும்,
குருவின் திருவுருமாகி எழுந்தருளி அருள் புரியும் சீர்காளியில் கவுணியர் குலத்தில் சிவபாதஇருதயருக்கும் பகவதியம்மையாருக்கும் திருமகனாக சீர்காளிபிள்ளையாராக திருஅவதாரம் செய்தவர்தான் திருஞான சம்பந்த பெருமான், திருவருள் கூட்ட ஒருநாள் நீராட சென்ற தந்தையார்பின் பிள்ளையார் தொடர்ந்து அழுது கொண்டு உடன் தொடர்ந்தார்.சிவபாத இருதயர் குழந்தையைக் குளக்கரையில் நிற்க செய்து பிரிவதற்கு அஞ்சி தந்தையார் , தேவியுடன் திருத்தோணிபுரத்தில் வீற்றிருக்கும் தோணியப்பரை வணங்கி அவர்பால் ஒப்படைத்து நீராட சென்றார். தந்தையார் நீராடிக் கொண்டிருக்கும் பொழுது பிள்ளையார் நீள நனைந்த முன் உணர்வினை நினைக்க அழத்தொடங்கினார். திருத்தோணி சிகரம் பார்த்து " அம்மே ! அப்பா! என்று அழுது அழைத்தருளினார். அக்குழந்தையின் அழுகை கண்டு அக்குழந்தைக்கு அருள் புரிய திருவுளங்கொண்ட இறைவர் தாமும், அம்மையமாய் விடைமேல் எழுந்தருளி வந்து, அக்குழந்தைக்கு துணைமுலைப்பால் ஊட்டிட இறைவியை பணிக்க இறைவியும், சிவஞானத்து இன்னமுதம் எனும் ஞானப்பால் ஊட்டி அருளியபின், கண்மலர் நீர் துடைத்து கையில் பொற்கிண்ணம் அளித்து, அம்மையப்பராகி இருவரும் காட்சிகொடுத்த வண்ணம், இருந்தனர். பிள்ளையாரும், சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானமாகிய உவமையிலாத கலைஞானமும், மெய்ஞானமும் பெற்று சிவஞான சம்பந்தராகி திருஞான சம்பந்தரானார்,
நீராடிவந்த சிவபாத இருதயர் குழந்தை பாலமுதம் அருந்திக் கையில் பொற்கிண்ணத்துடன் நிற்கும் பிள்ளையாரை நோக்கி, " யாரளித்த பால் அடிசில் உண்டாய்? அவரை காட்டுக" எனக் கோபமாக கடிந்தார். சிவஞானம் அருந்திய மகிழ்ச்சியில் திளைத்து நி ற்கும் பிள்ளையாரும், தேவியருடன் எழுந்தருளியிருக்கும் இறைவரை சுட்டிக் காட்டி, "தோடுடைய செவியன் " எனும் திருப்பதிகத்தால் அடையாளங்காட்டி" எம்மை இது செய்த பிரான் இவனன்றே" என பால குமாரன் வயதிலேயே பதிகம் பாடி திருத்தோணியப்பரின் சேய் அன்பு எனும் சத்புத்திர மார்க்கம் கண்டு சிவனாரின் கருனையை பெற்றார்.
தாய் அன்பின் உயர்வையும், தாய்ப்பால் குழந்தைக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் திருஞானசம்பந்தர் திருநள்ளாறு தாயாகிய இறைவியையும் தந்தையாகிய இறைவனையும், வணங்கி திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதன் மூலம் சம்பந்தர் மூர்த்திக்கும் ஆலவாய் சுந்தரருக்கும் உள்ள தாய் சேய்ழ அன்பின் மகத்துவம் விளங்குகிறது, "தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள் ,,,,,," என்ற திருப்பதிகத்தில் தானும் தாய் அன்பையும், தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு ஒரு ஆன்மா பிறவிபெற்று பூமிக்கு வரும்போது அதன் வினைக்கு ஏற்ப இன்பதுன்பம் தன் தாய்பால் வழியாக உலக உயிர்களுக்கு ஊட்டப்படுகிற்து, இந்த அன்பே தாய்தந்தையர்களும் தனது குழந்தைகளிடம் எதிர்பார்க்கின்றனர், இதற்கு ஒப்பாகவே இதன் கருத்து அமைந்து பதிகம் பாடியுள்ளார்,.
சிவனாரின் அன்பு ஞானசம்பந்தர் பால் மேலும் மேலும் வளர்ந்தது, சம்பந்தர் பதிகம் பாடும் போது கைத்தாளம் போடுவது வழக்கம் இதனைக் கண்ட தந்தை அன்பு கொண்ட ஈசன் கைநொகாது இருக்க பொற்றாளம் வழங்கினார், பல தளங்களை அடைந்து தரிசிக்க காலால் நடந்து சென்றதைக்கண்டு மனம் பொறுக்காது ஈசன் அவருக்கு முத்து பல்லாக்கு முத்து சீவிகை ,முத்துக் குடை வழங்கினார், அத்தோடு மட்டுமன்றி அவர் சென்ற இடமெல்லாம் அவருக்கு நேர்ந்த சோதனைகளுக்கு உடனுக்குடன் தோழ்கொடுத்து தந்தையின் அன்பை அவ்வப்போது வெளிப்படுத்தினார். சம்பந்தரும் ஈசன்மேல் தனியாத தந்தை பாசம் கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். திருநாவுக்கரசரோடு கூடியிருந்த காலத்தில் அவருக்கு அப்பர் என்ற திருப்பெயரிட்டு சிறப்பித்தார். திருப்பாச்சிலாச்சிரமத்தில் கொல்லிமழவன் புதல்வியை பற்றிய முயலகன் என்னும் நோயை நீக்கினார். திருக்கொடி மாடச்செங்குன்றூரில் நச்சுக்காய்ச்சலை தவிர்த்து அடியாரைக்காத்தார்.திருவாடுதுறையில் உலக்கிழியாக ஆயிரம் பொன் பெற்றார். திருத்தருமபுரத்தில் யாழ்மூரிப்பதிகம் பாடி அருட்பாடல் கருவியில் அடங்காத சிறப்பை புலப்படுத்தினார். திருமருகலில் பாம்பு கடித்து இறந்த வணிகனை உயிர்த்தெழத் செய்து பெருவாழ்வு நல்கி, அவனையே நம்பியிருந்த திக்கில்லாதவளுக்கு தெய்வத்துணையானார். திருவீழிமமிழலையில் படிக்காசு பெற்று பஞ்சத்தை ஒழித்தார். திருமறைக்காட்டில் கோவில் மூடியிருந்த கதவை பதிகம் பாடி கதவைத்திறந்து மூடுஞ் சீருடைய தாக்கினார். திருமதுரை சென்று மங்கையர்கரசியாரையும், குலச் சிறையாரையும், சிறப்பித்தார். அரசன் வெப்பு நோய் மற்றும் கூன் நீங்க திருநீற்றுப்பதிகம் மற்றும் சமனர்களின் கொட்டத்தை அடக்கி கழுமரமேற்றி சைவ மதம் தழைக்க செய்தார்.. திருவோத்தூரில் ஆன் பனைகளை பெண் பனைகளாக மாற்றினார். மயிலாப்பூரில் கென்றிருந்து பாம்பு கடித்து இறந்த பூம்பாவையின் எலும்பைக் கொண்டு திருப்பதிகம் பாடி உயிருடைய உருவமாக்கி வீட்டையும் காட்டினார். திருநல்லூரில் பெருமணத்தில் நம்பாண்டார் நம்பிகள் திருமகளை மணம் புரியுங்கால் இவளோடு சிவனடி சேர்வன் என்று திருக்கோவிலை உற்று திருப்பதிகம் பாடினார். திருமணம் காணவந்த எல்லாரும் அருள் மணம் புரிந்து அழியா இன்பம் அடைந்தனர். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி பாடிய திருவைந்தெழுத்தின் பெருமையே எல்லா நதபெற காரணமாகுமென பதிகத்தால் உணர்தெி சம்பந்தர் பால் கொண்ட ஈசனின் சேய் அன்பையும் சம்பந்தர் ஈசன் மேல் கொண்ட தாய் தந்தை - பெற்றோர் அன்பையும் சிறப்பிக்க உதாரணமாக விளங்கியவர் திரு ஞானசம்பந்த பெருமான் ,
திருச் சிற்றம்பலம்
இறைவனுடைய திருவருளை அடைவதற்குரிய வழிகள் பற்பல. அவற்றுள் சத்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம், என்னும் நான்கு வழிகள் ஆகும், சத்புத்திர மார்க்கமாவது இறைவனை தாய்தந்தையாக எண்ணி ஆன்மா புத்திரனாக அமைந்து வழிபடும் வழி ஆகும், தாசமார்க்கம் என்பது இறைவனை எசமானாக பாவித்து உயிர்கள் பணியாளர்களாக இருந்து வழிபடும் நெறியாகும், சகமார்க்கம் என்பது இறைவன் தன் தோழன் என்று கொண்டு சிவனை வழிபடும் நெறியாகும். சன்மார்க்கம் என்பது இறைவனை ஞானாசாரியனாகக் கொண்டு ஆன்மா சீடனாக இருந்து வழிபடும் நெறியாகும்,
இந்நெறிகளில் சத்புத்திர மார்க்கம் ஞானசம்பந்தர் காட்டிய வழி, இரண்டாவது தாசமார்க்கம் எசமானாக பாவித்தது திருநாவுக்கரசர் வழிபட்ட நெறியாகும், மூன்றாவதான சகமார்க்கம் என்ற நட்புநெறி சுந்தரர் வழிபாட்டு நெறியாகும்.நான்காவதாக உள்ள சன்மார்க்கம் என்ற சன்மார்க்கம் என்ற இறைவனை (சிவனை) குருவாக ஞானாசிரியனாக வழிபட்டவர் மாணிக்க வாசகர்,சிவபுண்ணிய விளைவால் மூர்த்தி தலம் தீர்த்தங்களை வழிபட இறைவன் குருவாகி எழுந்தருளி அருள் புரியும் நிலையே குருவருள் ஆகும்,
குருவின் திருவுருமாகி எழுந்தருளி அருள் புரியும் சீர்காளியில் கவுணியர் குலத்தில் சிவபாதஇருதயருக்கும் பகவதியம்மையாருக்கும் திருமகனாக சீர்காளிபிள்ளையாராக திருஅவதாரம் செய்தவர்தான் திருஞான சம்பந்த பெருமான், திருவருள் கூட்ட ஒருநாள் நீராட சென்ற தந்தையார்பின் பிள்ளையார் தொடர்ந்து அழுது கொண்டு உடன் தொடர்ந்தார்.சிவபாத இருதயர் குழந்தையைக் குளக்கரையில் நிற்க செய்து பிரிவதற்கு அஞ்சி தந்தையார் , தேவியுடன் திருத்தோணிபுரத்தில் வீற்றிருக்கும் தோணியப்பரை வணங்கி அவர்பால் ஒப்படைத்து நீராட சென்றார். தந்தையார் நீராடிக் கொண்டிருக்கும் பொழுது பிள்ளையார் நீள நனைந்த முன் உணர்வினை நினைக்க அழத்தொடங்கினார். திருத்தோணி சிகரம் பார்த்து " அம்மே ! அப்பா! என்று அழுது அழைத்தருளினார். அக்குழந்தையின் அழுகை கண்டு அக்குழந்தைக்கு அருள் புரிய திருவுளங்கொண்ட இறைவர் தாமும், அம்மையமாய் விடைமேல் எழுந்தருளி வந்து, அக்குழந்தைக்கு துணைமுலைப்பால் ஊட்டிட இறைவியை பணிக்க இறைவியும், சிவஞானத்து இன்னமுதம் எனும் ஞானப்பால் ஊட்டி அருளியபின், கண்மலர் நீர் துடைத்து கையில் பொற்கிண்ணம் அளித்து, அம்மையப்பராகி இருவரும் காட்சிகொடுத்த வண்ணம், இருந்தனர். பிள்ளையாரும், சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானமாகிய உவமையிலாத கலைஞானமும், மெய்ஞானமும் பெற்று சிவஞான சம்பந்தராகி திருஞான சம்பந்தரானார்,
நீராடிவந்த சிவபாத இருதயர் குழந்தை பாலமுதம் அருந்திக் கையில் பொற்கிண்ணத்துடன் நிற்கும் பிள்ளையாரை நோக்கி, " யாரளித்த பால் அடிசில் உண்டாய்? அவரை காட்டுக" எனக் கோபமாக கடிந்தார். சிவஞானம் அருந்திய மகிழ்ச்சியில் திளைத்து நி ற்கும் பிள்ளையாரும், தேவியருடன் எழுந்தருளியிருக்கும் இறைவரை சுட்டிக் காட்டி, "தோடுடைய செவியன் " எனும் திருப்பதிகத்தால் அடையாளங்காட்டி" எம்மை இது செய்த பிரான் இவனன்றே" என பால குமாரன் வயதிலேயே பதிகம் பாடி திருத்தோணியப்பரின் சேய் அன்பு எனும் சத்புத்திர மார்க்கம் கண்டு சிவனாரின் கருனையை பெற்றார்.
தாய் அன்பின் உயர்வையும், தாய்ப்பால் குழந்தைக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் திருஞானசம்பந்தர் திருநள்ளாறு தாயாகிய இறைவியையும் தந்தையாகிய இறைவனையும், வணங்கி திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதன் மூலம் சம்பந்தர் மூர்த்திக்கும் ஆலவாய் சுந்தரருக்கும் உள்ள தாய் சேய்ழ அன்பின் மகத்துவம் விளங்குகிறது, "தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள் ,,,,,," என்ற திருப்பதிகத்தில் தானும் தாய் அன்பையும், தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு ஒரு ஆன்மா பிறவிபெற்று பூமிக்கு வரும்போது அதன் வினைக்கு ஏற்ப இன்பதுன்பம் தன் தாய்பால் வழியாக உலக உயிர்களுக்கு ஊட்டப்படுகிற்து, இந்த அன்பே தாய்தந்தையர்களும் தனது குழந்தைகளிடம் எதிர்பார்க்கின்றனர், இதற்கு ஒப்பாகவே இதன் கருத்து அமைந்து பதிகம் பாடியுள்ளார்,.
சிவனாரின் அன்பு ஞானசம்பந்தர் பால் மேலும் மேலும் வளர்ந்தது, சம்பந்தர் பதிகம் பாடும் போது கைத்தாளம் போடுவது வழக்கம் இதனைக் கண்ட தந்தை அன்பு கொண்ட ஈசன் கைநொகாது இருக்க பொற்றாளம் வழங்கினார், பல தளங்களை அடைந்து தரிசிக்க காலால் நடந்து சென்றதைக்கண்டு மனம் பொறுக்காது ஈசன் அவருக்கு முத்து பல்லாக்கு முத்து சீவிகை ,முத்துக் குடை வழங்கினார், அத்தோடு மட்டுமன்றி அவர் சென்ற இடமெல்லாம் அவருக்கு நேர்ந்த சோதனைகளுக்கு உடனுக்குடன் தோழ்கொடுத்து தந்தையின் அன்பை அவ்வப்போது வெளிப்படுத்தினார். சம்பந்தரும் ஈசன்மேல் தனியாத தந்தை பாசம் கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். திருநாவுக்கரசரோடு கூடியிருந்த காலத்தில் அவருக்கு அப்பர் என்ற திருப்பெயரிட்டு சிறப்பித்தார். திருப்பாச்சிலாச்சிரமத்தில் கொல்லிமழவன் புதல்வியை பற்றிய முயலகன் என்னும் நோயை நீக்கினார். திருக்கொடி மாடச்செங்குன்றூரில் நச்சுக்காய்ச்சலை தவிர்த்து அடியாரைக்காத்தார்.திருவாடுதுறையில் உலக்கிழியாக ஆயிரம் பொன் பெற்றார். திருத்தருமபுரத்தில் யாழ்மூரிப்பதிகம் பாடி அருட்பாடல் கருவியில் அடங்காத சிறப்பை புலப்படுத்தினார். திருமருகலில் பாம்பு கடித்து இறந்த வணிகனை உயிர்த்தெழத் செய்து பெருவாழ்வு நல்கி, அவனையே நம்பியிருந்த திக்கில்லாதவளுக்கு தெய்வத்துணையானார். திருவீழிமமிழலையில் படிக்காசு பெற்று பஞ்சத்தை ஒழித்தார். திருமறைக்காட்டில் கோவில் மூடியிருந்த கதவை பதிகம் பாடி கதவைத்திறந்து மூடுஞ் சீருடைய தாக்கினார். திருமதுரை சென்று மங்கையர்கரசியாரையும், குலச் சிறையாரையும், சிறப்பித்தார். அரசன் வெப்பு நோய் மற்றும் கூன் நீங்க திருநீற்றுப்பதிகம் மற்றும் சமனர்களின் கொட்டத்தை அடக்கி கழுமரமேற்றி சைவ மதம் தழைக்க செய்தார்.. திருவோத்தூரில் ஆன் பனைகளை பெண் பனைகளாக மாற்றினார். மயிலாப்பூரில் கென்றிருந்து பாம்பு கடித்து இறந்த பூம்பாவையின் எலும்பைக் கொண்டு திருப்பதிகம் பாடி உயிருடைய உருவமாக்கி வீட்டையும் காட்டினார். திருநல்லூரில் பெருமணத்தில் நம்பாண்டார் நம்பிகள் திருமகளை மணம் புரியுங்கால் இவளோடு சிவனடி சேர்வன் என்று திருக்கோவிலை உற்று திருப்பதிகம் பாடினார். திருமணம் காணவந்த எல்லாரும் அருள் மணம் புரிந்து அழியா இன்பம் அடைந்தனர். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி பாடிய திருவைந்தெழுத்தின் பெருமையே எல்லா நதபெற காரணமாகுமென பதிகத்தால் உணர்தெி சம்பந்தர் பால் கொண்ட ஈசனின் சேய் அன்பையும் சம்பந்தர் ஈசன் மேல் கொண்ட தாய் தந்தை - பெற்றோர் அன்பையும் சிறப்பிக்க உதாரணமாக விளங்கியவர் திரு ஞானசம்பந்த பெருமான் ,
திருச் சிற்றம்பலம்
தமிழ் வேதம் கூறும் செம்மை சிவகதியும் - சீர்மிகு வேளாண்மையும்
மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெணும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெணும் நீரைப் பாச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெணும் வேலி யிட்டுச்
செம்மமையுள் நிற்ப ராகில்
சிவகதி விளையும் அன்றே, நாவுக்கரசர்
சிவகதியைப் பெறுவது என்று, சிவகதியைப் பெற்ற திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியுள்ள இப்பாடலின் வாய்லாக வேளாண்மையுடன் ஒப்பிட்டு சிவகதி என்னும் மகசூலை பெறுவது(அடைவது) பற்றி தெளிவு கூறுகிறார்,
விவசாயம் செய்யும் ஒரு விவசாயி நல்லவிளைவைப் பெறுவதற்கு
1) முதலில் நிலத்தை உழுது பண்படுத்த வேண்டும்
2) நல்விதை கொண்டு முறைப்படி விதைக்க வேண்டும்
3) பயிர் வளரும் பொழுது உடன் தோன்றும் களையை நீக்க வேண்டும்
4) தடையின்றி நீர் பாச்ச வேண்டும்
5) அன்றாடம் நிலத்தை கவனிக்க வேண்டும்
6) ஆடு,மாடு, பூச்சி நோய் பாதுகாப்பு மற்றும் வேலியிடல் வேண்டும்
7) வேண்டிய உரமிடல் வேண்டும்
8) முடிவில் தக்க பருவத்தில் அறுவடை செய்து நல்ல விளைவை பெறலாம்
சிவகதி எனும் விளைவை பெறுவதற்கும் மேலே கூறியுள்ள செயல்களை செய்யவேண்டும், என்று அகபர் பெருமானும் வேளாண்மையுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார், மனம் எனும் நிலம் பண்படுத்தப்படாமல் தரிசாக இருந்தால் அந்நிலம் யாதொரு பயனுமின்றி கட்டாந்தரையாக பயனற்றதாகிவிடும் எனவே அதனை பக்குவபடுத்த உழவு எவ்வாறு அவசியமோ அதன்படி மனம் என்னும் நிலத்தை (பக்தி) மெய்மை என்ற ஏறுடன் பக்குவபடுத்த வேண்டும்
1) மெய்ம்மையாம் உழவு - மனம் மொழி, மெய்யால் செய்யும்: அ) பசு புண்ணிய செயல்கள், ஆ) பதி புண்ணிய செயல்கள்
மனதால் செய்ய வேண்டிய பசு புண்ணிய செயல்கள்: பிற உயிர்கள் நலம் பெற வேண்டும் என்று மனதால் நினைக்க வேண்டும், (பசு புண்ணியம் - உயிர்களுக்கு உதவுதல்)
மனதால் செய்ய வேண்டிய பதி புண்ணிய செயல்கள் : மனதில் இறைவரின் திருவுருவத்தை நிறுத்தி தியானம் செய்தல், மானசீகமாக திருஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதுதல், (பதி புண்ணியம் - இறைத் தொண்டு)
வாக்கினால் செய்யவேண்டிய பசு புண்ணிய செயல்கள்: வாயினால் அனைவரையும் வாழ்த்துதல், பிறர் நலனுக்காக உரையாடுதல், உண்மையை மட்டும் பேசுதல், மறந்தும் பிறர் மனம் வருந்தும்படி பேசாதிருத்தல்,
வாக்கினால் செய்யும் பதி புண்ணிய செயல்கள்: தமிழ் வேதப் பாடல்களை பாடுதல், இறைவருடைய திருநாமத்தை இடைவிடாது கூறல்
உடலால் செய்யும் பதி புண்ணிய செயல்கள் : சிவாலயத்தை மெழுகுதல், தூய்மை செய்தல் போன்ற உளவாரப்பணிகள் செய்தல் , இறைவருக்கு பூமாலை தொடுத்தல் கால்களால் வலம் வருதல் , கைகளால் வணங்குதல், நெற்றியில் திருநீறு இடுதல் கழுத்தில் ருத்திராட்சம் அணிதல் போன்றன,
உடலால் செய்யவேண்டிய பசு புண்ணிய செயல்கள்: எல்லா உயிர்களுகட்கும் உதவுதல், ஊணவளித்தல், சான்றோர்களையும், அருளாளர்களையும், வணங்குதல், ஏழைஎளியவர்களுக்கு முதியோர்களுக்கு அடியார்களுககு உணவளித்தல், உடலால் செய்யும் உதவிகள்
இப்படி மனம், வாக்கு, உடம்பு ஆகிய மூன்றினாலும்ஆருயிர்த் தொண்டும் இறைத் தொண்டும் செய்து மனத்தை பக்குவமடையச் செய்யவேண்டும், இப்படி செய்யும் பொழுது உண்மையும் நேர்மையும் நமது இரத்தத்தில் ஊறிவிட வேண்டும்,
உண்மைக்காக எதை வேண்டுமானலும் இழக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையிலிருந்து மாறக்கூடாது, இதுதான் மெய்ம்மையாம் உழவு ஆகும்,
2) விரும்பு எனும் வித்து இடுதல் (விதைப்பு): இறைவழிபாட்டில் இச்சை அல்லது விருப்பம் மிகுதல் வேண்டும், (அன்பு, பக்தி, விருப்பம், காதல் மிகுதல்)
" சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் செப்ப நாவமைத்தேன்
வந்தனை செய்ய தலையமைத்தேன் கை தொழவமைத்தேன்
பந்தனை செய்வதற்கு அன்பமைத்தேன் மெய் அரும்பவைத்தேன்
வெந்த வெண்ணீறணி ஈசற்கு இவையான் விதித்தனவே, "
என்று சேரமான் பெருமாள் நாயனார் அருள்பாடல் கருத்துப்படி மனதை சிந்திக்கவும்,நா இறைவரை பாடவும், தலை வணங்கவும், கை தொழவும், அகத்தில் தொழ அன்பையும அமைத்தது தான் விருப்பு என்னும் விதையாகும்,
சம்பந்தர் கருத்துப்படி பழுவாய் பிறந்தாலும் சிவன் திருவடி மறவாதிருக்கும் எண்ணமும், சுந்தரர் கருத்துப்படி, " அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே" என்ற வாறு பேச்சு செயல் எண்ணம் அன்பு எனும் விருப்பு என்பதே நல் வித்தாகும்,
3) பொய்மையாம் களையை நீக்குதல்: பொய்ம்மையை மனதில் வைத்துக் கொண்டு இறைவழிபாடு செய்வபவர்களை இறைவர் எப்போதும் விரும்பார், பொய்யை விட்டவர் மனதில் தான் இறைவர் எழுந்தருளுவார் என்கிறார் திருநாவுக்கரசர்,
பொய்யான வழிபாடு: ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயங்களில் வழிபாடு செய்கிறார்கள் அவர்களில் மிக்பெரும்பாலோர் ஆலயங்களில் ஆண்டவனை வழிபடுவது அவர்மீது உண்டாகும் அன்பினால் அல்ல, வழிபாடுசெய்யும் நோக்கமே வியாபார நோக்கமாக வழிபாடு அமைந்து வருகிறது, குழந்தையில்லாதோர் எனக்கு குழந்தை பாக்கியம் கொடு, பதவி உயர்வு வேண்டுவோர் பதவிஉயர்வு அலலது பதவிகொடு, பொருள் வேண்டுவோர் வியாபாரத்தில் இலாபம் மூலம் பொருள் கொடு என தனக்கு எது வேண்டுமோ அதனை வேண்டி இதைக் கொடுத்தால் உனக்கு அபிசேகம் செய்கிறேன் கோவில் கட்டி தருகிறேன் கும்பாபிசேகம் செய்கிறேன் என்று வேண்டி இறை வழிபாட்டை வியாபாரமாக்குகிறார்கள்,உலக பற்றுக்கள் எல்லாம் விட்டு விட்டு பரம்பொருள் மீதும்ட்டுமே பற்று வைப்பது தான் உண்மையான பக்தி ஆகும், நம்முடைய பற்றுதல் அல்லது அன்பு எல்லாம் பதவி, பணம் பகழ் ஆகியவற்றின் மீதுதான் உள்ளது, இறைவர் மீது உள்ள உண்மையான அன்பினால் நாம் வழிபடுவதில்லை, இறைவர் மீதுள்ள அன்பினால் மட்டுமே நம்உள்ளம் உருக வேண்டும், பரம்பொருளிடம் உலக பொருட்களை கேட்பது பக்தி இல்லை, பரம்பொருளையே (இறைவரையே) விரும்பி கேட்பது தான் பக்தியாகும்
இன்னும் பலர் இவ்வுலக இன்பத்தைப் போலப் பலமடங்கு அதிமான இன்பத்தை அளிக்கும் சொர்க்கத்தை வேண்டி வழிபாடு செய்வார்கள், இதுவும் அறியாமையோ ஆகும்.
இவ்வாறு பொய்ம்மை எனும் களை உண்டாகும் அதனை நீக்க வேண்டும்,மணலை நீக்கினால் நீர் வெளிப்படுவதுபோல் மனதில் பொய்ம்மை என்னும் மணலை நீக்கினால் மெய்ம்மை குடிகொண்டு மனம் தூய்மை அடைந்து சிவம் என்ற ஜோதி வெளிப்படும், வயலில் களை எடுத்தவுடன் பயிர் பத்துயிர் பெற்று செழிப்படைவது போல் மனம் என்ற வயலில் பொய்ம்மை என்ற களை நீங்கியபின் சிவம் என்ற ஜோதி தோன்ற சிறப்படையும்,
4) பொறுமை எனும் நீரைப் பாய்ச்சுதல் : பொய்ம்மை எனும் களையை நீக்கினோம், இனி பொறமை எனும் நீரைப் பாய்ச்சுதல் வேண்டும், மனதில் பொறமை குடிகொள்ள வேண்டும் இதற்கு பொறாமை அகற்ற வேண்டும், பொறாமை நிறைந்த மனதில் பொறுமை இருக்காது, மனதில் அமைதி தோன்ற வேண்டும்,அலையும் மனதை அடக்கினால் அதிலிருந்து ஆன்ம ஒளி பிறக்கும், எனவே பொறுமை மிக மிக அவசியமாகிறது,
5) தகவு எனும் வேலி இடுதல்: உழுது விதை விதைத்து நீர்பாய்ச்சினோம் பயிர் செழித்து வளர்வதற்கு வேலி அவசியமல்லவா? இங்கே சிவகதி எனும் பயிர் விளைவதற்கு தகவு எனும் வேலி நமக்கு அவசியமாகிறது, திருஐந்தொழுத்து (சிவாயநம) , திருநீறு, ருத்திராட்சம் ஆகியவை அணிவது தகவு எனும் வேலியாகும், இராணுவ வீரர்களுக்கு உரிய ஆடையை அணிந்த உடனே வீரவுணர்வு மேலிடுவது போல என்றுணர்க! சிவனடியாரை சிவவேடத்தை சிவமாகவே பாவிக்கும் மனநலை இதனால் உண்டாகும்,
6) தம்மையும் நோக்கிக் காணுதல் : இதனை ஆன்ம தரிசனம் எனலாம். நம்மை நாமே உணர்தல் மகத்தான காரியத்தின் பொருட்டு நாம் இவ்வுலகில் பிறந்தோம் நம் உள்ளே இறைமை குடிகொண்டுள்ளது என்பதை மறவாதிருத்தலாகும். இறைமையன்றி உலகில் வேறு ஏதும் இல்லை என உணர வேண்டும். எல்லாவற்றிலும் இறைமையைக் காணும் மனோ நிலை வேண்டும்.
7) செம்மையுள் நிற்றல்: நன்றே வரினும்தீதே வரினும், இடரினும், தளரினும், அரனடிக்கு அன்பு மாறாத நிலையை உடையராதல் வேண்டும்.
இந்த ஏழும் நம்மால் செய்யக்கூடியவையே முடியாதது ஏதும் இல்லை. உறுதியான மனம்தான் வேண்டும், இப்படி வாழ்ந்தால் சிவகதி சிவாநுபவம் பெறுதல் உறுதியாகும், இதனையே பிறப்பு இறப்பு இல்லா நிலை என்றும் பேரின்பப் பெருவாழ்வு என்றும் கூறுவர். பக்தி எனும் பயிர் வளர்வதற்கு மெய்ம்மை உடையவராய் வாழ்ந்து பொய்ம்மை நீக்கி அன்பு எனும் ஆர்வம் கொண்டு பொறுமையுடையவராய் வாழ்தல் வேண்டும், திருநீறு ருத்திராட்சம், ஐந்தொழுத்து ஆகியவற்றை போற்றி வாழ்வராயின் மனம் செம்மைப்பட்டு சிவகதி என்ற விளைச்சல் கிட்டும். தற்கால வழிபாட்டில் இவற்றிக்கெல்லாம் இடமே இல்லாமையாகி எள்ளுப் பொட்டலம் போடுதல், காகித மாலை நவக்கிரங்களுக்கு அணிவித்தல், வெள்ளை பூசணிக்காய் உடைத்தல் போன்ற வேண்டாத சடங்குகளும், சம்பிரதாயங்களும் தான் பக்தி என்றாகி விட்டது.இனியாவது பரிகாரம் என்ற பெயராலும், நவக்கிரக வழிபாடு என்ற பெயராலும், செய்யும் அர்த்தமற்ற சடங்குகளை விட்டொழுத்து , மனிதனை மாதவ நிலைக்கு கொண்டு செல்லும் தமிழ் வேதங்கள் காட்டும் மேலே கூறியுள்ள உன்னதமான பக்தியைக் கடைப்பிடித்தொழுவோம், நாமும் நலம் பெற்று நாடும் நலம் பெறும்.
திருச்சிற்றம்பலம்
(படித்ததில் பிடித்தது: நன்றி தமிழ் வேதம்)
மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெணும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெணும் நீரைப் பாச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெணும் வேலி யிட்டுச்
செம்மமையுள் நிற்ப ராகில்
சிவகதி விளையும் அன்றே, நாவுக்கரசர்
சிவகதியைப் பெறுவது என்று, சிவகதியைப் பெற்ற திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியுள்ள இப்பாடலின் வாய்லாக வேளாண்மையுடன் ஒப்பிட்டு சிவகதி என்னும் மகசூலை பெறுவது(அடைவது) பற்றி தெளிவு கூறுகிறார்,
விவசாயம் செய்யும் ஒரு விவசாயி நல்லவிளைவைப் பெறுவதற்கு
1) முதலில் நிலத்தை உழுது பண்படுத்த வேண்டும்
2) நல்விதை கொண்டு முறைப்படி விதைக்க வேண்டும்
3) பயிர் வளரும் பொழுது உடன் தோன்றும் களையை நீக்க வேண்டும்
4) தடையின்றி நீர் பாச்ச வேண்டும்
5) அன்றாடம் நிலத்தை கவனிக்க வேண்டும்
6) ஆடு,மாடு, பூச்சி நோய் பாதுகாப்பு மற்றும் வேலியிடல் வேண்டும்
7) வேண்டிய உரமிடல் வேண்டும்
8) முடிவில் தக்க பருவத்தில் அறுவடை செய்து நல்ல விளைவை பெறலாம்
சிவகதி எனும் விளைவை பெறுவதற்கும் மேலே கூறியுள்ள செயல்களை செய்யவேண்டும், என்று அகபர் பெருமானும் வேளாண்மையுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார், மனம் எனும் நிலம் பண்படுத்தப்படாமல் தரிசாக இருந்தால் அந்நிலம் யாதொரு பயனுமின்றி கட்டாந்தரையாக பயனற்றதாகிவிடும் எனவே அதனை பக்குவபடுத்த உழவு எவ்வாறு அவசியமோ அதன்படி மனம் என்னும் நிலத்தை (பக்தி) மெய்மை என்ற ஏறுடன் பக்குவபடுத்த வேண்டும்
1) மெய்ம்மையாம் உழவு - மனம் மொழி, மெய்யால் செய்யும்: அ) பசு புண்ணிய செயல்கள், ஆ) பதி புண்ணிய செயல்கள்
மனதால் செய்ய வேண்டிய பசு புண்ணிய செயல்கள்: பிற உயிர்கள் நலம் பெற வேண்டும் என்று மனதால் நினைக்க வேண்டும், (பசு புண்ணியம் - உயிர்களுக்கு உதவுதல்)
மனதால் செய்ய வேண்டிய பதி புண்ணிய செயல்கள் : மனதில் இறைவரின் திருவுருவத்தை நிறுத்தி தியானம் செய்தல், மானசீகமாக திருஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதுதல், (பதி புண்ணியம் - இறைத் தொண்டு)
வாக்கினால் செய்யவேண்டிய பசு புண்ணிய செயல்கள்: வாயினால் அனைவரையும் வாழ்த்துதல், பிறர் நலனுக்காக உரையாடுதல், உண்மையை மட்டும் பேசுதல், மறந்தும் பிறர் மனம் வருந்தும்படி பேசாதிருத்தல்,
வாக்கினால் செய்யும் பதி புண்ணிய செயல்கள்: தமிழ் வேதப் பாடல்களை பாடுதல், இறைவருடைய திருநாமத்தை இடைவிடாது கூறல்
உடலால் செய்யும் பதி புண்ணிய செயல்கள் : சிவாலயத்தை மெழுகுதல், தூய்மை செய்தல் போன்ற உளவாரப்பணிகள் செய்தல் , இறைவருக்கு பூமாலை தொடுத்தல் கால்களால் வலம் வருதல் , கைகளால் வணங்குதல், நெற்றியில் திருநீறு இடுதல் கழுத்தில் ருத்திராட்சம் அணிதல் போன்றன,
உடலால் செய்யவேண்டிய பசு புண்ணிய செயல்கள்: எல்லா உயிர்களுகட்கும் உதவுதல், ஊணவளித்தல், சான்றோர்களையும், அருளாளர்களையும், வணங்குதல், ஏழைஎளியவர்களுக்கு முதியோர்களுக்கு அடியார்களுககு உணவளித்தல், உடலால் செய்யும் உதவிகள்
இப்படி மனம், வாக்கு, உடம்பு ஆகிய மூன்றினாலும்ஆருயிர்த் தொண்டும் இறைத் தொண்டும் செய்து மனத்தை பக்குவமடையச் செய்யவேண்டும், இப்படி செய்யும் பொழுது உண்மையும் நேர்மையும் நமது இரத்தத்தில் ஊறிவிட வேண்டும்,
உண்மைக்காக எதை வேண்டுமானலும் இழக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையிலிருந்து மாறக்கூடாது, இதுதான் மெய்ம்மையாம் உழவு ஆகும்,
2) விரும்பு எனும் வித்து இடுதல் (விதைப்பு): இறைவழிபாட்டில் இச்சை அல்லது விருப்பம் மிகுதல் வேண்டும், (அன்பு, பக்தி, விருப்பம், காதல் மிகுதல்)
" சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் செப்ப நாவமைத்தேன்
வந்தனை செய்ய தலையமைத்தேன் கை தொழவமைத்தேன்
பந்தனை செய்வதற்கு அன்பமைத்தேன் மெய் அரும்பவைத்தேன்
வெந்த வெண்ணீறணி ஈசற்கு இவையான் விதித்தனவே, "
என்று சேரமான் பெருமாள் நாயனார் அருள்பாடல் கருத்துப்படி மனதை சிந்திக்கவும்,நா இறைவரை பாடவும், தலை வணங்கவும், கை தொழவும், அகத்தில் தொழ அன்பையும அமைத்தது தான் விருப்பு என்னும் விதையாகும்,
சம்பந்தர் கருத்துப்படி பழுவாய் பிறந்தாலும் சிவன் திருவடி மறவாதிருக்கும் எண்ணமும், சுந்தரர் கருத்துப்படி, " அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே" என்ற வாறு பேச்சு செயல் எண்ணம் அன்பு எனும் விருப்பு என்பதே நல் வித்தாகும்,
3) பொய்மையாம் களையை நீக்குதல்: பொய்ம்மையை மனதில் வைத்துக் கொண்டு இறைவழிபாடு செய்வபவர்களை இறைவர் எப்போதும் விரும்பார், பொய்யை விட்டவர் மனதில் தான் இறைவர் எழுந்தருளுவார் என்கிறார் திருநாவுக்கரசர்,
பொய்யான வழிபாடு: ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயங்களில் வழிபாடு செய்கிறார்கள் அவர்களில் மிக்பெரும்பாலோர் ஆலயங்களில் ஆண்டவனை வழிபடுவது அவர்மீது உண்டாகும் அன்பினால் அல்ல, வழிபாடுசெய்யும் நோக்கமே வியாபார நோக்கமாக வழிபாடு அமைந்து வருகிறது, குழந்தையில்லாதோர் எனக்கு குழந்தை பாக்கியம் கொடு, பதவி உயர்வு வேண்டுவோர் பதவிஉயர்வு அலலது பதவிகொடு, பொருள் வேண்டுவோர் வியாபாரத்தில் இலாபம் மூலம் பொருள் கொடு என தனக்கு எது வேண்டுமோ அதனை வேண்டி இதைக் கொடுத்தால் உனக்கு அபிசேகம் செய்கிறேன் கோவில் கட்டி தருகிறேன் கும்பாபிசேகம் செய்கிறேன் என்று வேண்டி இறை வழிபாட்டை வியாபாரமாக்குகிறார்கள்,உலக பற்றுக்கள் எல்லாம் விட்டு விட்டு பரம்பொருள் மீதும்ட்டுமே பற்று வைப்பது தான் உண்மையான பக்தி ஆகும், நம்முடைய பற்றுதல் அல்லது அன்பு எல்லாம் பதவி, பணம் பகழ் ஆகியவற்றின் மீதுதான் உள்ளது, இறைவர் மீது உள்ள உண்மையான அன்பினால் நாம் வழிபடுவதில்லை, இறைவர் மீதுள்ள அன்பினால் மட்டுமே நம்உள்ளம் உருக வேண்டும், பரம்பொருளிடம் உலக பொருட்களை கேட்பது பக்தி இல்லை, பரம்பொருளையே (இறைவரையே) விரும்பி கேட்பது தான் பக்தியாகும்
இன்னும் பலர் இவ்வுலக இன்பத்தைப் போலப் பலமடங்கு அதிமான இன்பத்தை அளிக்கும் சொர்க்கத்தை வேண்டி வழிபாடு செய்வார்கள், இதுவும் அறியாமையோ ஆகும்.
இவ்வாறு பொய்ம்மை எனும் களை உண்டாகும் அதனை நீக்க வேண்டும்,மணலை நீக்கினால் நீர் வெளிப்படுவதுபோல் மனதில் பொய்ம்மை என்னும் மணலை நீக்கினால் மெய்ம்மை குடிகொண்டு மனம் தூய்மை அடைந்து சிவம் என்ற ஜோதி வெளிப்படும், வயலில் களை எடுத்தவுடன் பயிர் பத்துயிர் பெற்று செழிப்படைவது போல் மனம் என்ற வயலில் பொய்ம்மை என்ற களை நீங்கியபின் சிவம் என்ற ஜோதி தோன்ற சிறப்படையும்,
4) பொறுமை எனும் நீரைப் பாய்ச்சுதல் : பொய்ம்மை எனும் களையை நீக்கினோம், இனி பொறமை எனும் நீரைப் பாய்ச்சுதல் வேண்டும், மனதில் பொறமை குடிகொள்ள வேண்டும் இதற்கு பொறாமை அகற்ற வேண்டும், பொறாமை நிறைந்த மனதில் பொறுமை இருக்காது, மனதில் அமைதி தோன்ற வேண்டும்,அலையும் மனதை அடக்கினால் அதிலிருந்து ஆன்ம ஒளி பிறக்கும், எனவே பொறுமை மிக மிக அவசியமாகிறது,
5) தகவு எனும் வேலி இடுதல்: உழுது விதை விதைத்து நீர்பாய்ச்சினோம் பயிர் செழித்து வளர்வதற்கு வேலி அவசியமல்லவா? இங்கே சிவகதி எனும் பயிர் விளைவதற்கு தகவு எனும் வேலி நமக்கு அவசியமாகிறது, திருஐந்தொழுத்து (சிவாயநம) , திருநீறு, ருத்திராட்சம் ஆகியவை அணிவது தகவு எனும் வேலியாகும், இராணுவ வீரர்களுக்கு உரிய ஆடையை அணிந்த உடனே வீரவுணர்வு மேலிடுவது போல என்றுணர்க! சிவனடியாரை சிவவேடத்தை சிவமாகவே பாவிக்கும் மனநலை இதனால் உண்டாகும்,
6) தம்மையும் நோக்கிக் காணுதல் : இதனை ஆன்ம தரிசனம் எனலாம். நம்மை நாமே உணர்தல் மகத்தான காரியத்தின் பொருட்டு நாம் இவ்வுலகில் பிறந்தோம் நம் உள்ளே இறைமை குடிகொண்டுள்ளது என்பதை மறவாதிருத்தலாகும். இறைமையன்றி உலகில் வேறு ஏதும் இல்லை என உணர வேண்டும். எல்லாவற்றிலும் இறைமையைக் காணும் மனோ நிலை வேண்டும்.
7) செம்மையுள் நிற்றல்: நன்றே வரினும்தீதே வரினும், இடரினும், தளரினும், அரனடிக்கு அன்பு மாறாத நிலையை உடையராதல் வேண்டும்.
இந்த ஏழும் நம்மால் செய்யக்கூடியவையே முடியாதது ஏதும் இல்லை. உறுதியான மனம்தான் வேண்டும், இப்படி வாழ்ந்தால் சிவகதி சிவாநுபவம் பெறுதல் உறுதியாகும், இதனையே பிறப்பு இறப்பு இல்லா நிலை என்றும் பேரின்பப் பெருவாழ்வு என்றும் கூறுவர். பக்தி எனும் பயிர் வளர்வதற்கு மெய்ம்மை உடையவராய் வாழ்ந்து பொய்ம்மை நீக்கி அன்பு எனும் ஆர்வம் கொண்டு பொறுமையுடையவராய் வாழ்தல் வேண்டும், திருநீறு ருத்திராட்சம், ஐந்தொழுத்து ஆகியவற்றை போற்றி வாழ்வராயின் மனம் செம்மைப்பட்டு சிவகதி என்ற விளைச்சல் கிட்டும். தற்கால வழிபாட்டில் இவற்றிக்கெல்லாம் இடமே இல்லாமையாகி எள்ளுப் பொட்டலம் போடுதல், காகித மாலை நவக்கிரங்களுக்கு அணிவித்தல், வெள்ளை பூசணிக்காய் உடைத்தல் போன்ற வேண்டாத சடங்குகளும், சம்பிரதாயங்களும் தான் பக்தி என்றாகி விட்டது.இனியாவது பரிகாரம் என்ற பெயராலும், நவக்கிரக வழிபாடு என்ற பெயராலும், செய்யும் அர்த்தமற்ற சடங்குகளை விட்டொழுத்து , மனிதனை மாதவ நிலைக்கு கொண்டு செல்லும் தமிழ் வேதங்கள் காட்டும் மேலே கூறியுள்ள உன்னதமான பக்தியைக் கடைப்பிடித்தொழுவோம், நாமும் நலம் பெற்று நாடும் நலம் பெறும்.
திருச்சிற்றம்பலம்
(படித்ததில் பிடித்தது: நன்றி தமிழ் வேதம்)
திருமந்திரம் / பத்தாம் திருமுறை / சிறு விளக்கம்
அருளாளர்கள் மொழிவன எல்லாம் " மந்திரங்கள் " மந்திரம் என்ற சொல்லுக்குப் பொருள் , நினைப்பவரைக்காப்பது என்பதாம். மந்திரங்களை செபிப்பதுடன் நினைப்பதற்கு ஆற்றல் அதிகம். மந்திரங்களாக விளங்கும் அருள் நூல்களை வழங்கிய பெருமக்களை நிறைமொழி மாந்தர் என்பர். திருஞானசம்பந்தர் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை பகிர்ந்தளித்தார். திருமுறை ஆசிரியர்கள் இருபத்து எழுவருள் ஒருவராகிய திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் பத்தாம் திருமுறையாகிய செந்தமிழ் மந்திரமாகும், இரு மூவாயிரம் பாடல்களாகவும், ஒன்பது தந்திரங்களாகவும் உள்ளடக்கியது.
முதல் தந்திரம் நிலையாமையை பற்றி கூறுவதால் ஞானம் பெற அறம் உணர்த்துகிறது. இரண்டாம் தந்திரம் புராணங்களின் வழியே சிவபராக்கிரமங்களையும் அவர் தம் புகழையும் பேசுகிறது. மூன்றாம் தந்திரம் பெருமானை அடையும் யோக சாதனங்களைக் குறிப்பிடுகிறது. நான்காம் தந்திரம் மந்திர யந்திர வழிபாட்டு முைறகளை விளக்குகிறது. ஐந்தாம் தந்திரம் சைவத்தின் பிரிவுகளையும், சிைய, கிரியை , யோகம், ஞானம் என்னும் நால்வகை நெறிகைளயும், தெளிவிக்கின்றது. ஆறாம் தந்திரம் சிவமே குருவாக நின்று அருள் புரிவதையும் சற்குருகிைடப்பது அவரவர் தவத்தின் பயனாகும் என உணர்த்துகிறது. ஏழாம் தந்திரம் அண்டமும் பிண்டமும் இலிங்க உறருவாய் உள்ளதையும், சிவபூசை குருபூசை குருபூசை செய்யவேண்டிய அவசியத்தையும் அறிவிக்கிறது. எட்டாம் தந்திரம் உயிர் எடுக்கும் உடல்பற்றிய அன்னமயகோசம், பிராணமய கோசம், மனோமயகோசம், விஞ்ஞான மயகோசம், ஆனந்தமயகோசம், பற்றிய விளக்கங்களைகூறுகிறது. ஒன்பதாம் தந்திரம் அகர,உகர மகரமாகிய ஓங்காரப் பிரணவமே எல்லாவற்றிற்கும் மூலம் என்பதையும் தூலபஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம் முதலிய ஐந்தெழுத்து உண்மைகளையும், ஐந்தொழில் நடத்தையும், சிறப்புற விளக்குகிறது. இம்மந்திரம் ஒன்றுதான் திருமந்திரம் எனப்படுகிறது. இதனை நாமும் தினமும் ஓதி உவகை பெறுவோம்
அருளாளர்கள் மொழிவன எல்லாம் " மந்திரங்கள் " மந்திரம் என்ற சொல்லுக்குப் பொருள் , நினைப்பவரைக்காப்பது என்பதாம். மந்திரங்களை செபிப்பதுடன் நினைப்பதற்கு ஆற்றல் அதிகம். மந்திரங்களாக விளங்கும் அருள் நூல்களை வழங்கிய பெருமக்களை நிறைமொழி மாந்தர் என்பர். திருஞானசம்பந்தர் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை பகிர்ந்தளித்தார். திருமுறை ஆசிரியர்கள் இருபத்து எழுவருள் ஒருவராகிய திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் பத்தாம் திருமுறையாகிய செந்தமிழ் மந்திரமாகும், இரு மூவாயிரம் பாடல்களாகவும், ஒன்பது தந்திரங்களாகவும் உள்ளடக்கியது.
முதல் தந்திரம் நிலையாமையை பற்றி கூறுவதால் ஞானம் பெற அறம் உணர்த்துகிறது. இரண்டாம் தந்திரம் புராணங்களின் வழியே சிவபராக்கிரமங்களையும் அவர் தம் புகழையும் பேசுகிறது. மூன்றாம் தந்திரம் பெருமானை அடையும் யோக சாதனங்களைக் குறிப்பிடுகிறது. நான்காம் தந்திரம் மந்திர யந்திர வழிபாட்டு முைறகளை விளக்குகிறது. ஐந்தாம் தந்திரம் சைவத்தின் பிரிவுகளையும், சிைய, கிரியை , யோகம், ஞானம் என்னும் நால்வகை நெறிகைளயும், தெளிவிக்கின்றது. ஆறாம் தந்திரம் சிவமே குருவாக நின்று அருள் புரிவதையும் சற்குருகிைடப்பது அவரவர் தவத்தின் பயனாகும் என உணர்த்துகிறது. ஏழாம் தந்திரம் அண்டமும் பிண்டமும் இலிங்க உறருவாய் உள்ளதையும், சிவபூசை குருபூசை குருபூசை செய்யவேண்டிய அவசியத்தையும் அறிவிக்கிறது. எட்டாம் தந்திரம் உயிர் எடுக்கும் உடல்பற்றிய அன்னமயகோசம், பிராணமய கோசம், மனோமயகோசம், விஞ்ஞான மயகோசம், ஆனந்தமயகோசம், பற்றிய விளக்கங்களைகூறுகிறது. ஒன்பதாம் தந்திரம் அகர,உகர மகரமாகிய ஓங்காரப் பிரணவமே எல்லாவற்றிற்கும் மூலம் என்பதையும் தூலபஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம் முதலிய ஐந்தெழுத்து உண்மைகளையும், ஐந்தொழில் நடத்தையும், சிறப்புற விளக்குகிறது. இம்மந்திரம் ஒன்றுதான் திருமந்திரம் எனப்படுகிறது. இதனை நாமும் தினமும் ஓதி உவகை பெறுவோம்
வேத(தேவ) மந்திரம் என்ற திருமந்திரம்
தேவமொழிகளில் உள்ள ஆகமங்களின் தமிழ் மொழிபெயர்ப்புதான் திருமந்திரம், திருமூலர் அருளிய திருமந்திரம் எத்தனையோ காலம் கடந்து நாம் இன்னும் படிக்கும்படி இருப்பது என்பதே மிகப்பெரிய சான்று, இது இறைவன் கருனையால் இயற்றப்பட்டது.திருமந்திரத்திற்கு மறு மந்திரம் இல்லை என்பர் பெரியவர்கள், அது மகத்தான உண்மை. திருமந்திரம் சைவ சித்தானந்தம், சிவநெறி ஆகியவைகளை கடந்து தமிழ் மொழிக்கு கிடைத்த பொக்கிசம் என்றால் மிகையாகது. திருமூலர் அருளிய பல தத்துவங்களை நாம் தற்போது நடைமுறையில் நமக்கு அருளியது திருமந்திரம் என்று தெரியாமலே இன்றளவும் பயன் படுத்துகிறோம். உதாரணமாக.
" அன்பே சிவம்"
"தத்துவம்சி நீ அதுவானாய்"
" ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
" நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"
" சீவன் (ஆத்மா) சிவனோடு கலத்தல்"
" உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்"
" யார்க்கும் இடுமின் அவர்இவர் என்னன்மின்"
" பசுவுக்கு ஒர் வாய்உைற"
" உண்ணும் போது ஒரு கைப்பிடி" ..... போன்றன.
எம்பெருமான் கருனை பெற யாகமோ, பெருந்தவமோ, சாதாரண மக்களுக்கு தேைவயில்லை, தண்ணீரும், பூவும், பச்சிலை, (வில்வ இைல) போதும் என்கிறது திருமந்திரம், அத்துடன் துணிந்தவர்களுக்கு யோகம், குண்டலினி போன்ற கடுைமயான பயிற்சி முறைகளையும் கூறுகிறது.
இன்றைய அறிவியலில் ஆராய்ந்து அறிந்த உண்ைமகளையும் அன்றே திருமந்திரத்தில் கூற்ப்பட்டுள்ளது. இதயம் இடப்பக்கம் உள்ளது பற்றியும், வயிற்றில் வளரும் கரு ஆணா, பெண்ணா, திருநங்கையா,என்பதையும், கர்ப்பம் தரிப்பது, ஊணமான குழந்தைக்கு காரணம், மற்றும் மனிதனின் முதிர்வு இறப்பின் இரகசியங்களையும் அதன் பிரணய சுவாசத்தின் மூலம் கணக்கிட்டு கூற்படுகிறது.
அறநெறி நல்லொதழுக்கம், பற்றியும், தான சிறப்பு, பிறா் மனை நோக்கா, மது, அைசவ உணவு நெறி, என்பனவும், கொலை, களவு, வட்டி வாங்கல், போன்ற படுபாதக செயல்கள் பற்றியும், அரசனின் கடமை, கோவில் அைமப்பு, அந்தணர் வாழ்வு, ஒழுக்கம், போலிசாமியார் , செல்வ நிைல, மகளிர் ஒழுக்கம், அறம் போன்ற எல்லா மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்து விசயங்களையும் காணலாம்,
திருமூலர் திருமந்திரம் சைவ நெறி, சிவனை அைடதல் என்பன தவிர்த்து, அதாவது ஒரு குறிப்பிட்ட மதத்தினை வலியுறுத்துவது மட்டுமன்றி அவற்றையெல்லாம் கடந்து, பொது மறையான திருக்குறளையும் தாண்டும் அளவிற்கு உலக மக்களுக்கு வாழ்க்கையின் அறநெறி ஒழுக்கம், ஒப்புறவு ஈதல், போன்ற அனைத்தும் உள்ளடக்கி உள்ளது திருமந்திரம்,
திருமூலரின் திருமந்திரத்தை படித்து, அறிந்து, கொள்வார்களாயின், மகாதவம் செய்த புண்ணியமும், ஈசனின் திருவடியை காண அருள் பெற்றவர்களாவார்கள், என்பது அசைக்கமுடியாத உறுதி.
" திரு மூலரின் திருவடி போற்றி"
" திருமந்திரத்தின் மேன்மை போற்றி"
" ஓம் சிவ சிவ ஓம்"
அன்புடன் சிவனடிமை சிவ, வை,பூமாலை, சுந்தரபாண்டியம்.
தேவமொழிகளில் உள்ள ஆகமங்களின் தமிழ் மொழிபெயர்ப்புதான் திருமந்திரம், திருமூலர் அருளிய திருமந்திரம் எத்தனையோ காலம் கடந்து நாம் இன்னும் படிக்கும்படி இருப்பது என்பதே மிகப்பெரிய சான்று, இது இறைவன் கருனையால் இயற்றப்பட்டது.திருமந்திரத்திற்கு மறு மந்திரம் இல்லை என்பர் பெரியவர்கள், அது மகத்தான உண்மை. திருமந்திரம் சைவ சித்தானந்தம், சிவநெறி ஆகியவைகளை கடந்து தமிழ் மொழிக்கு கிடைத்த பொக்கிசம் என்றால் மிகையாகது. திருமூலர் அருளிய பல தத்துவங்களை நாம் தற்போது நடைமுறையில் நமக்கு அருளியது திருமந்திரம் என்று தெரியாமலே இன்றளவும் பயன் படுத்துகிறோம். உதாரணமாக.
" அன்பே சிவம்"
"தத்துவம்சி நீ அதுவானாய்"
" ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
" நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"
" சீவன் (ஆத்மா) சிவனோடு கலத்தல்"
" உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்"
" யார்க்கும் இடுமின் அவர்இவர் என்னன்மின்"
" பசுவுக்கு ஒர் வாய்உைற"
" உண்ணும் போது ஒரு கைப்பிடி" ..... போன்றன.
எம்பெருமான் கருனை பெற யாகமோ, பெருந்தவமோ, சாதாரண மக்களுக்கு தேைவயில்லை, தண்ணீரும், பூவும், பச்சிலை, (வில்வ இைல) போதும் என்கிறது திருமந்திரம், அத்துடன் துணிந்தவர்களுக்கு யோகம், குண்டலினி போன்ற கடுைமயான பயிற்சி முறைகளையும் கூறுகிறது.
இன்றைய அறிவியலில் ஆராய்ந்து அறிந்த உண்ைமகளையும் அன்றே திருமந்திரத்தில் கூற்ப்பட்டுள்ளது. இதயம் இடப்பக்கம் உள்ளது பற்றியும், வயிற்றில் வளரும் கரு ஆணா, பெண்ணா, திருநங்கையா,என்பதையும், கர்ப்பம் தரிப்பது, ஊணமான குழந்தைக்கு காரணம், மற்றும் மனிதனின் முதிர்வு இறப்பின் இரகசியங்களையும் அதன் பிரணய சுவாசத்தின் மூலம் கணக்கிட்டு கூற்படுகிறது.
அறநெறி நல்லொதழுக்கம், பற்றியும், தான சிறப்பு, பிறா் மனை நோக்கா, மது, அைசவ உணவு நெறி, என்பனவும், கொலை, களவு, வட்டி வாங்கல், போன்ற படுபாதக செயல்கள் பற்றியும், அரசனின் கடமை, கோவில் அைமப்பு, அந்தணர் வாழ்வு, ஒழுக்கம், போலிசாமியார் , செல்வ நிைல, மகளிர் ஒழுக்கம், அறம் போன்ற எல்லா மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்து விசயங்களையும் காணலாம்,
திருமூலர் திருமந்திரம் சைவ நெறி, சிவனை அைடதல் என்பன தவிர்த்து, அதாவது ஒரு குறிப்பிட்ட மதத்தினை வலியுறுத்துவது மட்டுமன்றி அவற்றையெல்லாம் கடந்து, பொது மறையான திருக்குறளையும் தாண்டும் அளவிற்கு உலக மக்களுக்கு வாழ்க்கையின் அறநெறி ஒழுக்கம், ஒப்புறவு ஈதல், போன்ற அனைத்தும் உள்ளடக்கி உள்ளது திருமந்திரம்,
திருமூலரின் திருமந்திரத்தை படித்து, அறிந்து, கொள்வார்களாயின், மகாதவம் செய்த புண்ணியமும், ஈசனின் திருவடியை காண அருள் பெற்றவர்களாவார்கள், என்பது அசைக்கமுடியாத உறுதி.
" திரு மூலரின் திருவடி போற்றி"
" திருமந்திரத்தின் மேன்மை போற்றி"
" ஓம் சிவ சிவ ஓம்"
அன்புடன் சிவனடிமை சிவ, வை,பூமாலை, சுந்தரபாண்டியம்.
தமிழ் வேதம் கூறும் செம்மை சிவகதியும் - சீர்மிகு வேளாண்மையும்
மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெணும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெணும் நீரைப் பாச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெணும் வேலி யிட்டுச்
செம்மமையுள் நிற்ப ராகில்
சிவகதி விளையும் அன்றே, நாவுக்கரசர்
சிவகதியைப் பெறுவது என்று, சிவகதியைப் பெற்ற திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியுள்ள இப்பாடலின் வாய்லாக வேளாண்மையுடன் ஒப்பிட்டு சிவகதி என்னும் மகசூலை பெறுவது(அடைவது) பற்றி தெளிவு கூறுகிறார்,
விவசாயம் செய்யும் ஒரு விவசாயி நல்லவிளைவைப் பெறுவதற்கு
1) முதலில் நிலத்தை உழுது பண்படுத்த வேண்டும்
2) நல்விதை கொண்டு முறைப்படி விதைக்க வேண்டும்
3) பயிர் வளரும் பொழுது உடன் தோன்றும் களையை நீக்க வேண்டும்
4) தடையின்றி நீர் பாச்ச வேண்டும்
5) அன்றாடம் நிலத்தை கவனிக்க வேண்டும்
6) ஆடு,மாடு, பூச்சி நோய் பாதுகாப்பு மற்றும் வேலியிடல் வேண்டும்
7) வேண்டிய உரமிடல் வேண்டும்
8) முடிவில் தக்க பருவத்தில் அறுவடை செய்து நல்ல விளைவை பெறலாம்
சிவகதி எனும் விளைவை பெறுவதற்கும் மேலே கூறியுள்ள செயல்களை செய்யவேண்டும், என்று அகபர் பெருமானும் வேளாண்மையுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார், மனம் எனும் நிலம் பண்படுத்தப்படாமல் தரிசாக இருந்தால் அந்நிலம் யாதொரு பயனுமின்றி கட்டாந்தரையாக பயனற்றதாகிவிடும் எனவே அதனை பக்குவபடுத்த உழவு எவ்வாறு அவசியமோ அதன்படி மனம் என்னும் நிலத்தை (பக்தி) மெய்மை என்ற ஏறுடன் பக்குவபடுத்த வேண்டும்
1) மெய்ம்மையாம் உழவு - மனம் மொழி, மெய்யால் செய்யும்: அ) பசு புண்ணிய செயல்கள், ஆ) பதி புண்ணிய செயல்கள்
மனதால் செய்ய வேண்டிய பசு புண்ணிய செயல்கள்: பிற உயிர்கள் நலம் பெற வேண்டும் என்று மனதால் நினைக்க வேண்டும், (பசு புண்ணியம் - உயிர்களுக்கு உதவுதல்)
மனதால் செய்ய வேண்டிய பதி புண்ணிய செயல்கள் : மனதில் இறைவரின் திருவுருவத்தை நிறுத்தி தியானம் செய்தல், மானசீகமாக திருஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதுதல், (பதி புண்ணியம் - இறைத் தொண்டு)
வாக்கினால் செய்யவேண்டிய பசு புண்ணிய செயல்கள்: வாயினால் அனைவரையும் வாழ்த்துதல், பிறர் நலனுக்காக உரையாடுதல், உண்மையை மட்டும் பேசுதல், மறந்தும் பிறர் மனம் வருந்தும்படி பேசாதிருத்தல்,
வாக்கினால் செய்யும் பதி புண்ணிய செயல்கள்: தமிழ் வேதப் பாடல்களை பாடுதல், இறைவருடைய திருநாமத்தை இடைவிடாது கூறல்
உடலால் செய்யும் பதி புண்ணிய செயல்கள் : சிவாலயத்தை மெழுகுதல், தூய்மை செய்தல் போன்ற உளவாரப்பணிகள் செய்தல் , இறைவருக்கு பூமாலை தொடுத்தல் கால்களால் வலம் வருதல் , கைகளால் வணங்குதல், நெற்றியில் திருநீறு இடுதல் கழுத்தில் ருத்திராட்சம் அணிதல் போன்றன,
உடலால் செய்யவேண்டிய பசு புண்ணிய செயல்கள்: எல்லா உயிர்களுகட்கும் உதவுதல், ஊணவளித்தல், சான்றோர்களையும், அருளாளர்களையும், வணங்குதல், ஏழைஎளியவர்களுக்கு முதியோர்களுக்கு அடியார்களுககு உணவளித்தல், உடலால் செய்யும் உதவிகள்
இப்படி மனம், வாக்கு, உடம்பு ஆகிய மூன்றினாலும்ஆருயிர்த் தொண்டும் இறைத் தொண்டும் செய்து மனத்தை பக்குவமடையச் செய்யவேண்டும், இப்படி செய்யும் பொழுது உண்மையும் நேர்மையும் நமது இரத்தத்தில் ஊறிவிட வேண்டும்,
உண்மைக்காக எதை வேண்டுமானலும் இழக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையிலிருந்து மாறக்கூடாது, இதுதான் மெய்ம்மையாம் உழவு ஆகும்,
2) விரும்பு எனும் வித்து இடுதல் (விதைப்பு): இறைவழிபாட்டில் இச்சை அல்லது விருப்பம் மிகுதல் வேண்டும், (அன்பு, பக்தி, விருப்பம், காதல் மிகுதல்)
" சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் செப்ப நாவமைத்தேன்
வந்தனை செய்ய தலையமைத்தேன் கை தொழவமைத்தேன்
பந்தனை செய்வதற்கு அன்பமைத்தேன் மெய் அரும்பவைத்தேன்
வெந்த வெண்ணீறணி ஈசற்கு இவையான் விதித்தனவே, "
என்று சேரமான் பெருமாள் நாயனார் அருள்பாடல் கருத்துப்படி மனதை சிந்திக்கவும்,நா இறைவரை பாடவும், தலை வணங்கவும், கை தொழவும், அகத்தில் தொழ அன்பையும அமைத்தது தான் விருப்பு என்னும் விதையாகும்,
சம்பந்தர் கருத்துப்படி பழுவாய் பிறந்தாலும் சிவன் திருவடி மறவாதிருக்கும் எண்ணமும், சுந்தரர் கருத்துப்படி, " அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே" என்ற வாறு பேச்சு செயல் எண்ணம் அன்பு எனும் விருப்பு என்பதே நல் வித்தாகும்,
3) பொய்மையாம் களையை நீக்குதல்: பொய்ம்மையை மனதில் வைத்துக் கொண்டு இறைவழிபாடு செய்வபவர்களை இறைவர் எப்போதும் விரும்பார், பொய்யை விட்டவர் மனதில் தான் இறைவர் எழுந்தருளுவார் என்கிறார் திருநாவுக்கரசர்,
பொய்யான வழிபாடு: ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயங்களில் வழிபாடு செய்கிறார்கள் அவர்களில் மிக்பெரும்பாலோர் ஆலயங்களில் ஆண்டவனை வழிபடுவது அவர்மீது உண்டாகும் அன்பினால் அல்ல, வழிபாடுசெய்யும் நோக்கமே வியாபார நோக்கமாக வழிபாடு அமைந்து வருகிறது, குழந்தையில்லாதோர் எனக்கு குழந்தை பாக்கியம் கொடு, பதவி உயர்வு வேண்டுவோர் பதவிஉயர்வு அலலது பதவிகொடு, பொருள் வேண்டுவோர் வியாபாரத்தில் இலாபம் மூலம் பொருள் கொடு என தனக்கு எது வேண்டுமோ அதனை வேண்டி இதைக் கொடுத்தால் உனக்கு அபிசேகம் செய்கிறேன் கோவில் கட்டி தருகிறேன் கும்பாபிசேகம் செய்கிறேன் என்று வேண்டி இறை வழிபாட்டை வியாபாரமாக்குகிறார்கள்,உலக பற்றுக்கள் எல்லாம் விட்டு விட்டு பரம்பொருள் மீதும்ட்டுமே பற்று வைப்பது தான் உண்மையான பக்தி ஆகும், நம்முடைய பற்றுதல் அல்லது அன்பு எல்லாம் பதவி, பணம் பகழ் ஆகியவற்றின் மீதுதான் உள்ளது, இறைவர் மீது உள்ள உண்மையான அன்பினால் நாம் வழிபடுவதில்லை, இறைவர் மீதுள்ள அன்பினால் மட்டுமே நம்உள்ளம் உருக வேண்டும், பரம்பொருளிடம் உலக பொருட்களை கேட்பது பக்தி இல்லை, பரம்பொருளையே (இறைவரையே) விரும்பி கேட்பது தான் பக்தியாகும்
இன்னும் பலர் இவ்வுலக இன்பத்தைப் போலப் பலமடங்கு அதிமான இன்பத்தை அளிக்கும் சொர்க்கத்தை வேண்டி வழிபாடு செய்வார்கள், இதுவும் அறியாமையோ ஆகும்.
இவ்வாறு பொய்ம்மை எனும் களை உண்டாகும் அதனை நீக்க வேண்டும்,மணலை நீக்கினால் நீர் வெளிப்படுவதுபோல் மனதில் பொய்ம்மை என்னும் மணலை நீக்கினால் மெய்ம்மை குடிகொண்டு மனம் தூய்மை அடைந்து சிவம் என்ற ஜோதி வெளிப்படும், வயலில் களை எடுத்தவுடன் பயிர் பத்துயிர் பெற்று செழிப்படைவது போல் மனம் என்ற வயலில் பொய்ம்மை என்ற களை நீங்கியபின் சிவம் என்ற ஜோதி தோன்ற சிறப்படையும்,
4) பொறுமை எனும் நீரைப் பாய்ச்சுதல் : பொய்ம்மை எனும் களையை நீக்கினோம், இனி பொறமை எனும் நீரைப் பாய்ச்சுதல் வேண்டும், மனதில் பொறமை குடிகொள்ள வேண்டும் இதற்கு பொறாமை அகற்ற வேண்டும், பொறாமை நிறைந்த மனதில் பொறுமை இருக்காது, மனதில் அமைதி தோன்ற வேண்டும்,அலையும் மனதை அடக்கினால் அதிலிருந்து ஆன்ம ஒளி பிறக்கும், எனவே பொறுமை மிக மிக அவசியமாகிறது,
5) தகவு எனும் வேலி இடுதல்: உழுது விதை விதைத்து நீர்பாய்ச்சினோம் பயிர் செழித்து வளர்வதற்கு வேலி அவசியமல்லவா? இங்கே சிவகதி எனும் பயிர் விளைவதற்கு தகவு எனும் வேலி நமக்கு அவசியமாகிறது, திருஐந்தொழுத்து (சிவாயநம) , திருநீறு, ருத்திராட்சம் ஆகியவை அணிவது தகவு எனும் வேலியாகும், இராணுவ வீரர்களுக்கு உரிய ஆடையை அணிந்த உடனே வீரவுணர்வு மேலிடுவது போல என்றுணர்க! சிவனடியாரை சிவவேடத்தை சிவமாகவே பாவிக்கும் மனநலை இதனால் உண்டாகும்,
6) தம்மையும் நோக்கிக் காணுதல் : இதனை ஆன்ம தரிசனம் எனலாம். நம்மை நாமே உணர்தல் மகத்தான காரியத்தின் பொருட்டு நாம் இவ்வுலகில் பிறந்தோம் நம் உள்ளே இறைமை குடிகொண்டுள்ளது என்பதை மறவாதிருத்தலாகும். இறைமையன்றி உலகில் வேறு ஏதும் இல்லை என உணர வேண்டும். எல்லாவற்றிலும் இறைமையைக் காணும் மனோ நிலை வேண்டும்.
7) செம்மையுள் நிற்றல்: நன்றே வரினும்தீதே வரினும், இடரினும், தளரினும், அரனடிக்கு அன்பு மாறாத நிலையை உடையராதல் வேண்டும்.
இந்த ஏழும் நம்மால் செய்யக்கூடியவையே முடியாதது ஏதும் இல்லை. உறுதியான மனம்தான் வேண்டும், இப்படி வாழ்ந்தால் சிவகதி சிவாநுபவம் பெறுதல் உறுதியாகும், இதனையே பிறப்பு இறப்பு இல்லா நிலை என்றும் பேரின்பப் பெருவாழ்வு என்றும் கூறுவர். பக்தி எனும் பயிர் வளர்வதற்கு மெய்ம்மை உடையவராய் வாழ்ந்து பொய்ம்மை நீக்கி அன்பு எனும் ஆர்வம் கொண்டு பொறுமையுடையவராய் வாழ்தல் வேண்டும், திருநீறு ருத்திராட்சம், ஐந்தொழுத்து ஆகியவற்றை போற்றி வாழ்வராயின் மனம் செம்மைப்பட்டு சிவகதி என்ற விளைச்சல் கிட்டும். தற்கால வழிபாட்டில் இவற்றிக்கெல்லாம் இடமே இல்லாமையாகி எள்ளுப் பொட்டலம் போடுதல், காகித மாலை நவக்கிரங்களுக்கு அணிவித்தல், வெள்ளை பூசணிக்காய் உடைத்தல் போன்ற வேண்டாத சடங்குகளும், சம்பிரதாயங்களும் தான் பக்தி என்றாகி விட்டது.இனியாவது பரிகாரம் என்ற பெயராலும், நவக்கிரக வழிபாடு என்ற பெயராலும், செய்யும் அர்த்தமற்ற சடங்குகளை விட்டொழுத்து , மனிதனை மாதவ நிலைக்கு கொண்டு செல்லும் தமிழ் வேதங்கள் காட்டும் மேலே கூறியுள்ள உன்னதமான பக்தியைக் கடைப்பிடித்தொழுவோம், நாமும் நலம் பெற்று நாடும் நலம் பெறும்.
திருச்சிற்றம்பலம்
(படித்ததில் பிடித்தது: நன்றி தமிழ் வேதம்)
மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெணும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெணும் நீரைப் பாச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெணும் வேலி யிட்டுச்
செம்மமையுள் நிற்ப ராகில்
சிவகதி விளையும் அன்றே, நாவுக்கரசர்
சிவகதியைப் பெறுவது என்று, சிவகதியைப் பெற்ற திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியுள்ள இப்பாடலின் வாய்லாக வேளாண்மையுடன் ஒப்பிட்டு சிவகதி என்னும் மகசூலை பெறுவது(அடைவது) பற்றி தெளிவு கூறுகிறார்,
விவசாயம் செய்யும் ஒரு விவசாயி நல்லவிளைவைப் பெறுவதற்கு
1) முதலில் நிலத்தை உழுது பண்படுத்த வேண்டும்
2) நல்விதை கொண்டு முறைப்படி விதைக்க வேண்டும்
3) பயிர் வளரும் பொழுது உடன் தோன்றும் களையை நீக்க வேண்டும்
4) தடையின்றி நீர் பாச்ச வேண்டும்
5) அன்றாடம் நிலத்தை கவனிக்க வேண்டும்
6) ஆடு,மாடு, பூச்சி நோய் பாதுகாப்பு மற்றும் வேலியிடல் வேண்டும்
7) வேண்டிய உரமிடல் வேண்டும்
8) முடிவில் தக்க பருவத்தில் அறுவடை செய்து நல்ல விளைவை பெறலாம்
சிவகதி எனும் விளைவை பெறுவதற்கும் மேலே கூறியுள்ள செயல்களை செய்யவேண்டும், என்று அகபர் பெருமானும் வேளாண்மையுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார், மனம் எனும் நிலம் பண்படுத்தப்படாமல் தரிசாக இருந்தால் அந்நிலம் யாதொரு பயனுமின்றி கட்டாந்தரையாக பயனற்றதாகிவிடும் எனவே அதனை பக்குவபடுத்த உழவு எவ்வாறு அவசியமோ அதன்படி மனம் என்னும் நிலத்தை (பக்தி) மெய்மை என்ற ஏறுடன் பக்குவபடுத்த வேண்டும்
1) மெய்ம்மையாம் உழவு - மனம் மொழி, மெய்யால் செய்யும்: அ) பசு புண்ணிய செயல்கள், ஆ) பதி புண்ணிய செயல்கள்
மனதால் செய்ய வேண்டிய பசு புண்ணிய செயல்கள்: பிற உயிர்கள் நலம் பெற வேண்டும் என்று மனதால் நினைக்க வேண்டும், (பசு புண்ணியம் - உயிர்களுக்கு உதவுதல்)
மனதால் செய்ய வேண்டிய பதி புண்ணிய செயல்கள் : மனதில் இறைவரின் திருவுருவத்தை நிறுத்தி தியானம் செய்தல், மானசீகமாக திருஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதுதல், (பதி புண்ணியம் - இறைத் தொண்டு)
வாக்கினால் செய்யவேண்டிய பசு புண்ணிய செயல்கள்: வாயினால் அனைவரையும் வாழ்த்துதல், பிறர் நலனுக்காக உரையாடுதல், உண்மையை மட்டும் பேசுதல், மறந்தும் பிறர் மனம் வருந்தும்படி பேசாதிருத்தல்,
வாக்கினால் செய்யும் பதி புண்ணிய செயல்கள்: தமிழ் வேதப் பாடல்களை பாடுதல், இறைவருடைய திருநாமத்தை இடைவிடாது கூறல்
உடலால் செய்யும் பதி புண்ணிய செயல்கள் : சிவாலயத்தை மெழுகுதல், தூய்மை செய்தல் போன்ற உளவாரப்பணிகள் செய்தல் , இறைவருக்கு பூமாலை தொடுத்தல் கால்களால் வலம் வருதல் , கைகளால் வணங்குதல், நெற்றியில் திருநீறு இடுதல் கழுத்தில் ருத்திராட்சம் அணிதல் போன்றன,
உடலால் செய்யவேண்டிய பசு புண்ணிய செயல்கள்: எல்லா உயிர்களுகட்கும் உதவுதல், ஊணவளித்தல், சான்றோர்களையும், அருளாளர்களையும், வணங்குதல், ஏழைஎளியவர்களுக்கு முதியோர்களுக்கு அடியார்களுககு உணவளித்தல், உடலால் செய்யும் உதவிகள்
இப்படி மனம், வாக்கு, உடம்பு ஆகிய மூன்றினாலும்ஆருயிர்த் தொண்டும் இறைத் தொண்டும் செய்து மனத்தை பக்குவமடையச் செய்யவேண்டும், இப்படி செய்யும் பொழுது உண்மையும் நேர்மையும் நமது இரத்தத்தில் ஊறிவிட வேண்டும்,
உண்மைக்காக எதை வேண்டுமானலும் இழக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையிலிருந்து மாறக்கூடாது, இதுதான் மெய்ம்மையாம் உழவு ஆகும்,
2) விரும்பு எனும் வித்து இடுதல் (விதைப்பு): இறைவழிபாட்டில் இச்சை அல்லது விருப்பம் மிகுதல் வேண்டும், (அன்பு, பக்தி, விருப்பம், காதல் மிகுதல்)
" சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் செப்ப நாவமைத்தேன்
வந்தனை செய்ய தலையமைத்தேன் கை தொழவமைத்தேன்
பந்தனை செய்வதற்கு அன்பமைத்தேன் மெய் அரும்பவைத்தேன்
வெந்த வெண்ணீறணி ஈசற்கு இவையான் விதித்தனவே, "
என்று சேரமான் பெருமாள் நாயனார் அருள்பாடல் கருத்துப்படி மனதை சிந்திக்கவும்,நா இறைவரை பாடவும், தலை வணங்கவும், கை தொழவும், அகத்தில் தொழ அன்பையும அமைத்தது தான் விருப்பு என்னும் விதையாகும்,
சம்பந்தர் கருத்துப்படி பழுவாய் பிறந்தாலும் சிவன் திருவடி மறவாதிருக்கும் எண்ணமும், சுந்தரர் கருத்துப்படி, " அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே" என்ற வாறு பேச்சு செயல் எண்ணம் அன்பு எனும் விருப்பு என்பதே நல் வித்தாகும்,
3) பொய்மையாம் களையை நீக்குதல்: பொய்ம்மையை மனதில் வைத்துக் கொண்டு இறைவழிபாடு செய்வபவர்களை இறைவர் எப்போதும் விரும்பார், பொய்யை விட்டவர் மனதில் தான் இறைவர் எழுந்தருளுவார் என்கிறார் திருநாவுக்கரசர்,
பொய்யான வழிபாடு: ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயங்களில் வழிபாடு செய்கிறார்கள் அவர்களில் மிக்பெரும்பாலோர் ஆலயங்களில் ஆண்டவனை வழிபடுவது அவர்மீது உண்டாகும் அன்பினால் அல்ல, வழிபாடுசெய்யும் நோக்கமே வியாபார நோக்கமாக வழிபாடு அமைந்து வருகிறது, குழந்தையில்லாதோர் எனக்கு குழந்தை பாக்கியம் கொடு, பதவி உயர்வு வேண்டுவோர் பதவிஉயர்வு அலலது பதவிகொடு, பொருள் வேண்டுவோர் வியாபாரத்தில் இலாபம் மூலம் பொருள் கொடு என தனக்கு எது வேண்டுமோ அதனை வேண்டி இதைக் கொடுத்தால் உனக்கு அபிசேகம் செய்கிறேன் கோவில் கட்டி தருகிறேன் கும்பாபிசேகம் செய்கிறேன் என்று வேண்டி இறை வழிபாட்டை வியாபாரமாக்குகிறார்கள்,உலக பற்றுக்கள் எல்லாம் விட்டு விட்டு பரம்பொருள் மீதும்ட்டுமே பற்று வைப்பது தான் உண்மையான பக்தி ஆகும், நம்முடைய பற்றுதல் அல்லது அன்பு எல்லாம் பதவி, பணம் பகழ் ஆகியவற்றின் மீதுதான் உள்ளது, இறைவர் மீது உள்ள உண்மையான அன்பினால் நாம் வழிபடுவதில்லை, இறைவர் மீதுள்ள அன்பினால் மட்டுமே நம்உள்ளம் உருக வேண்டும், பரம்பொருளிடம் உலக பொருட்களை கேட்பது பக்தி இல்லை, பரம்பொருளையே (இறைவரையே) விரும்பி கேட்பது தான் பக்தியாகும்
இன்னும் பலர் இவ்வுலக இன்பத்தைப் போலப் பலமடங்கு அதிமான இன்பத்தை அளிக்கும் சொர்க்கத்தை வேண்டி வழிபாடு செய்வார்கள், இதுவும் அறியாமையோ ஆகும்.
இவ்வாறு பொய்ம்மை எனும் களை உண்டாகும் அதனை நீக்க வேண்டும்,மணலை நீக்கினால் நீர் வெளிப்படுவதுபோல் மனதில் பொய்ம்மை என்னும் மணலை நீக்கினால் மெய்ம்மை குடிகொண்டு மனம் தூய்மை அடைந்து சிவம் என்ற ஜோதி வெளிப்படும், வயலில் களை எடுத்தவுடன் பயிர் பத்துயிர் பெற்று செழிப்படைவது போல் மனம் என்ற வயலில் பொய்ம்மை என்ற களை நீங்கியபின் சிவம் என்ற ஜோதி தோன்ற சிறப்படையும்,
4) பொறுமை எனும் நீரைப் பாய்ச்சுதல் : பொய்ம்மை எனும் களையை நீக்கினோம், இனி பொறமை எனும் நீரைப் பாய்ச்சுதல் வேண்டும், மனதில் பொறமை குடிகொள்ள வேண்டும் இதற்கு பொறாமை அகற்ற வேண்டும், பொறாமை நிறைந்த மனதில் பொறுமை இருக்காது, மனதில் அமைதி தோன்ற வேண்டும்,அலையும் மனதை அடக்கினால் அதிலிருந்து ஆன்ம ஒளி பிறக்கும், எனவே பொறுமை மிக மிக அவசியமாகிறது,
5) தகவு எனும் வேலி இடுதல்: உழுது விதை விதைத்து நீர்பாய்ச்சினோம் பயிர் செழித்து வளர்வதற்கு வேலி அவசியமல்லவா? இங்கே சிவகதி எனும் பயிர் விளைவதற்கு தகவு எனும் வேலி நமக்கு அவசியமாகிறது, திருஐந்தொழுத்து (சிவாயநம) , திருநீறு, ருத்திராட்சம் ஆகியவை அணிவது தகவு எனும் வேலியாகும், இராணுவ வீரர்களுக்கு உரிய ஆடையை அணிந்த உடனே வீரவுணர்வு மேலிடுவது போல என்றுணர்க! சிவனடியாரை சிவவேடத்தை சிவமாகவே பாவிக்கும் மனநலை இதனால் உண்டாகும்,
6) தம்மையும் நோக்கிக் காணுதல் : இதனை ஆன்ம தரிசனம் எனலாம். நம்மை நாமே உணர்தல் மகத்தான காரியத்தின் பொருட்டு நாம் இவ்வுலகில் பிறந்தோம் நம் உள்ளே இறைமை குடிகொண்டுள்ளது என்பதை மறவாதிருத்தலாகும். இறைமையன்றி உலகில் வேறு ஏதும் இல்லை என உணர வேண்டும். எல்லாவற்றிலும் இறைமையைக் காணும் மனோ நிலை வேண்டும்.
7) செம்மையுள் நிற்றல்: நன்றே வரினும்தீதே வரினும், இடரினும், தளரினும், அரனடிக்கு அன்பு மாறாத நிலையை உடையராதல் வேண்டும்.
இந்த ஏழும் நம்மால் செய்யக்கூடியவையே முடியாதது ஏதும் இல்லை. உறுதியான மனம்தான் வேண்டும், இப்படி வாழ்ந்தால் சிவகதி சிவாநுபவம் பெறுதல் உறுதியாகும், இதனையே பிறப்பு இறப்பு இல்லா நிலை என்றும் பேரின்பப் பெருவாழ்வு என்றும் கூறுவர். பக்தி எனும் பயிர் வளர்வதற்கு மெய்ம்மை உடையவராய் வாழ்ந்து பொய்ம்மை நீக்கி அன்பு எனும் ஆர்வம் கொண்டு பொறுமையுடையவராய் வாழ்தல் வேண்டும், திருநீறு ருத்திராட்சம், ஐந்தொழுத்து ஆகியவற்றை போற்றி வாழ்வராயின் மனம் செம்மைப்பட்டு சிவகதி என்ற விளைச்சல் கிட்டும். தற்கால வழிபாட்டில் இவற்றிக்கெல்லாம் இடமே இல்லாமையாகி எள்ளுப் பொட்டலம் போடுதல், காகித மாலை நவக்கிரங்களுக்கு அணிவித்தல், வெள்ளை பூசணிக்காய் உடைத்தல் போன்ற வேண்டாத சடங்குகளும், சம்பிரதாயங்களும் தான் பக்தி என்றாகி விட்டது.இனியாவது பரிகாரம் என்ற பெயராலும், நவக்கிரக வழிபாடு என்ற பெயராலும், செய்யும் அர்த்தமற்ற சடங்குகளை விட்டொழுத்து , மனிதனை மாதவ நிலைக்கு கொண்டு செல்லும் தமிழ் வேதங்கள் காட்டும் மேலே கூறியுள்ள உன்னதமான பக்தியைக் கடைப்பிடித்தொழுவோம், நாமும் நலம் பெற்று நாடும் நலம் பெறும்.
திருச்சிற்றம்பலம்
(படித்ததில் பிடித்தது: நன்றி தமிழ் வேதம்)
http://youtu.be/frbw0ona0KA
sathguru2
பஞ்ச பூதக் கோவில்கள்
சிறப்புமிகு ஐம்பெரும் பூதங்களையும் அவற்றின் தன்மைகளையும் சிறப்புகளையும் நாம் அறிவோம் இந்த ஐம்பெரும் பூதங்களின் தன்மையின் அடிப்படையில் ஆலங்கள் அமைத்துள்ளனர் நம் முன்னோர்கள்
சிவலிங்கம் அகண்டமானது பிருதிவி ( மண்), அப்பு (நீர்), தேயு ( நெருப்பு) , வாயு ,ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களிலும் பரந்து விளங்குவதே சிவலிங்கம் ஆகும், இவ்வுண்மையை மக்கட்கு உணர்த்தும் பொருட்டு ஐம்பெரும் பூதங்களின் அடிப்படையில் ஐந்து தலங்களை அமைத்தனர், அவையாவன காஞ்சிபுரம், திருவாரூர் (மண்) , திருவானைக்கால் (நீர்) திருவண்ணாமலை (நெருப்பு), காளகஸ்தி (காற்று -வாயு) சிதம்பரம் ( வானம்) ஆகும், இவை அனைத்தும் தமிழ்நாட்டின் வடபகுதியில் அமைந்த ஆலங்கள் ஆகும், இவை போன்ற தென்பாண்டி நாட்டிலும் பஞ்ச பூதக் கோவில்கள் அமைந்துள்ளன, அவை
சங்கரன்கோவில் - (மண்)
தாருகாபுரம் - நீர்
கரிவலம்வந்தநல்லூர் - நெருப்பு
தென்மலை ( காற்று) இவை அனைத்துமே சிவன் கோவில்கள் ஆகும்
சங்கரன்கோவில் ( மண் - பிருதிவி)
இறைவன் : சங்கரலிங்கர்
இறைவி : கோமதி அம்பாள்
உயிர்கள் தோன்றுவதும் மறைவதும் மண்ணில்தான், மனிதன் நல்லவனாவதும் தீயவனாவதும் இம்மண்ணில்தான். இத்தகு மண்ணின் சிறப்பை உயர்த்த மண் தத்துவத்தில் கோவில்கள் அமைந்துள்ளன, இத்தத்துவத்திற்கிணங்க அமைந்ததுதான் சங்கரன்கோவில் என்ற சஙகரநயினர்கோவில் ஆகும், சங்கரரும், நாராயணரும் வேறுவேறு அல்லர், இருவரும் ஒருவரே என்பதை தேவிக்கு உணர்த்த மேற்கொண்ட வடிவமே சங்கரநாராயணர் வடிவம் ஆகும், இங்கு இறைவர் சிவன் பாதியாகவும், திருமால்(நாராயணன் ) பாதி உடம்பாகவும் மக்கட்கு காட்சி அளிக்கின்றனர், பாண்டிநாட்டின் அரசனான உக்கிரன் என்ற அரசனால் பாண்டியநாட்டின் தென்பகுதியில் அசிரீரி வாக்கு கேட்டு அம்மன்னன் புன்னவனக்காடாக இருந்தஇந்த இடத்தில் சிவாலயம் அமைத்து, அதற்கு ராஜகோபரமும், இறைவன் இறைவிக்கு தனித்தனி தேர்களும் உருவாக்கினான், இக்கோவிலில் ஒருநாள் தங்கினால் மோட்சம் அடைவர் என்றும் முற்பிறப்பு பாவம் நீங்கும் என்றும் மூன்று நாட்கள் தங்கினால் மறுபிறவி பாவங்களும் நீங்கும், இறைவியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன் - விஷ்ணுவுடன் கூடியிருக்கும திருக்கோலத்தினை காட்டியருள வேண்டிக்கொண்டதன் பேரில் கோமதியம்மாள் பொதிகைமலை அருகில் ஒரிடத்தில் புண்னைமர வடிவில் தவமிருக்க வேண்டியதிற்கிணங்க ஆடித்தவசு கோலம் பூண்டு கடுந்தவம் புரிந்ததால் இறைவிக்கு சங்கரநாராயணனாக காட்சி அளித்து மறுபடியும் சிவ உருவத்தில் காட்சி அளிக்க வேண்டியதன் பெயரில் சங்கரலிங்கமாவும் காட்சி அளித்தார், இக்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவாகும் இவ்விழா ஆடித்திங்கள் பெளர்ணமியன்று நடைபெறும், இத்துடன் இங்கு சிறப்பாக நடைபெறும் விழா வசந்த உற்சவ திருவிழாவும் சிறப்பு பெறறது,
தாருகாபுரம் - (நீர் - அப்பு)
இறைவன் : மத்தியஸ்தநாதர், பிணக்கறுத்த பெருமான்
இறைவி : அகிலாண்ட ஈஸ்வரி
நீர் தத்துவத்தை உணர்த்தும் இத்திருக்கோவில் வாசுதேவநல்லூர் என்னும் ஊருக்கு தென்கிழக்கே சுமார் 6 கி,மீ. தூரத்தில் அமைந்துள்ளது,இங்குள்ள சிவலிங்கத்தின் அடியில் நீர் ஊற்று இருந்ததாகவும், அதனைக்கொண்டே இறைவனை திருமஞ்சன நீராட்டல் செய்தனர்என்றும் கூறப்படுகிறது, ஆனால் மீண்டும்மீண்டும் அந்நீரை திரும்ப திரும்ப பயன்படுத்துவது தகாது என அவ்வூற்றினை கல்கொண்டு மூடி விட்டனர், ஆயினும் இன்றும் இங்குள்ள கருவறை சுவர்கள் நீர்ப்பிடிப்புடனே தோன்றுகின்றன,இங்குள்ள தீர்த்தத்தில் கெளதமர், சனகாதியர் ,வசிட்டர், வால்மீகி அகத்தியர் போன்ற முனியவர்கள் தவம் புரிந்துள்ளனர் மூர்த்திகளில் மிகச் சிறப்புடையது அப்புலிங்கம் ஆகும்,
மத்தியஸ்தர்
தென்னிந்தியாவை ஆட்சி செய்த சேர,சோழ பாண்டியர் நில வேட்கையால் ஒரு காலத்தில் மாறுபட்டனர் ஒருவருக்கொருவர் போரிட்டனர், அதைக் கண்ட இறைவன் இவர்களுக்குள் உடன்பாடு ஏற்படுத்த எண்ணி அகத்தியர் வடிவில் வந்து சேர நாடு, சோழநாடு, பாண்டியநாடு, எல்லைப்பகுதியினை வரையறுத்துக் கொடுத்து மத்தியஸ்தம் கொடுத்து பிணக்கினை தீர்த்தருளினார் இவ்வாலயம் தாருகாபுரத்திலிருந்து மேற்கே சமார் அரை கி,மீ, தூரத்தில் உள்ளது, இறைவர் பிணக்கறத்த பெருமாள் என்றும் காரணப்பெயர்களால் அழைக்கப்படுகிறது, இறைவி அகிலாணட ஈஸ்வரி தல விருட்சம் மா மரம் ஆகும், இது பழமைவாய்ந்த நில வருவாய் தவிர வேறு வருவாய் இல்லாத காரணத்தால் இக்கோவில் இன்னும் அபிவிருத்தி அடையவில்லை, இருகால பூசை மட்டுமே செய்யப்பட்டு வருகிறது,
கரிவலம்வந்த நல்லூர் - (நெருப்பு)
இறைவன் : பால்வண்ண நாதர்
இறைவி : ஒப்பணையம்மாள்
இக்கோவில் திருவண்ணாமலைக்கு நிகரானது, தென்பாண்டி நாட்டில் நிட்சேபநதி கிருபாநதி எனத்தெய்வத் திருநாமம் பெற்ற ஆறுகள் பாய்வதும் அரி, பரமன், தேவர், அகத்தியா, நாரதர், வசிட்டர் முதலியோர்களால் வழிபடப்பட்டதும், சிவபெருமான் நித்திய தாண்டவம் புரிய அம்பலமாகக் கொண்டதும் ஆன தலம் கரிவலம்வந்த நல்லூர் ஆகும, தென்பாண்டிய நாட்டில் இந்நகரில் ஆண்டு வந்த வரதுங்க பாண்டியன் என்பான் தனக்கு பத்திர பாக்கியம்இல்லாமை கண்டு மனம் மிக வருந்தினான், அப்பொழுது இறைவன் அவன் கனவில் தோன்றி மனக்கவலையை நீக்கும்படியும் தாமே அந்தியக்காலத்தில் அவனுக்கு செய்யவேண்டிய தகனக்கிரியைகளைச் செய்து முக்தி தருவதாக கூறி அதன்படி மன்னன் பால சந்நியாசியை ஞானாசிரியராகக் கொண்டு இல்லற ஞானியாய் விளங்கி , ஐந்தெழுத்து மந்திரத்தை உசசரித்து நிட்டை புரியலானான், அரசன் சோதியிற்கலந்தான் அப்போது அரசனுக்கு பிதுர்காரியம் செய்ய ஒருவரும் இல்லாத நிலை அறிந்து செய்வதறியாது திகைத்து நின்றனர், அப்போது பாலவண்ண நாதர் வயதோகிய பரம்மச்சாரி வேடத்தில் வந்து ஈமக்கிரிகளைச் செய்து மூன்று நாள் காரியமும் முடித்து கோவிலுள்ள கர்ப்ப கிரகத்திற்கு சென்று சிவலிங்கத்துடன் கலந்தார்,
இக்கோவில் சூரியன் பூசை புரிந்த இடம், அக்கினி பாவம் நீங்கப்பெற்ற இடம், அகத்தியர் பூசித்த தலம் போன்ற பெருமையுடையது, இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, இலங்கேசுவரர் ஆலயமும் உள்ளது, தல மரம் களாமரம், இங்கு காவடி திருவிழா மற்றும் அறுபத்துமூன்று நாயன்மார்கள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது,
தேவதானம் ( வானம்)
இறைவன் : நச்சாடைத் தவிர்த்தவர்
இறைவி : தவம் பெற்ற நாயகி
இத்தலம் சிதம்பரத்திற்கு நிகரானது, இறைவன் நச்சாடை தவிர்த்தவர், இறைவி தவம் பெற்ற நாயகி, இங்குள்ள சுவாமியை வேண்டி அம்பாள் தவம் புரிந்த இடம், திருக்கண்ணீஸ்வரரை வணங்கினால் முக்தி கிட்டும், பாண்டி சோழ மன்னர்களின் போர் நிகழ்வில் பாண்டியன் இறைவனை வேண்ட சோழன் தனது இரு கண்களையும் இழக்கவே, பின் சோழன் வேண்ட கண்பார்வை வழங்கி அருளினார், சோழன் பாண்டியனை வெல்லக்கருதிய போது அவனுடைய நச்சாடையை தவிர்த்து பாண்டியனை காத்தருளினார், ஐம்பூதக் கோவில்களில் இங்கு மட்டுமே கொடிமரத்ததின்கீழ் பெரிய ஆமை வடிவம் உள்ளது,சிவலிங்கம் மிக சிறியதாக அமைந்துள்ளது, இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது ,இக்கோவிலுக்கு சமீபத்தில் தான் அஸ்டபந்தன கும்பாபிசகம் நடைபெற்றது,
தெனமலை - வாயு
இறைவன் : திரிபுர நாதர்
இறைவி : சிவபரிபூரணி
இத்தலம் வாயுத்தலமாகும் காளகஸ்திக்கு நிகரனாது, இது கரிவலம் வந்த நல்லூருக்கு வடக்கே 5 கி,மீ, தூரத்தில் உள்ளது, இக்கோவில் மட்டும் கிழக்குக்கு மாறாக மேற்கு நோக்கி அமைந்துள்ளது, இங்கு அம்மன் சந்நிதி வாயில் தான் பிரதான வாயிலாக உள்ளது, முதலில் திரிபுரநாதரை வணங்கி பின் அம்பாள் சிவபரிபூரணியை வணங்க செல்ல வேண்டும், இங்குள்ள லிங்கமும் மாறுபட்டு காணப்படுகிறது, இங்குள்ள அகத்தியர்
பீடத்தை வணங்கினால் தடைபெற்ற திருமணம் நடைபெறும் குழந்தை பேறு கிட்டும் பேறு பெற்றது,
ஐம்பூதக் கோவில்களின் சிறப்பு:
ஐம்பூதக்கோவில்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு பெற்றுவிளங்குகிறது, மகாசிவராத்திரி அன்று இவ்வைந்து கோவில்களுக்கும் சென்று வந்தால் அனைத்து நன்மைகளும் கிட்டும்
ஒம் சிவ சிவ ஓம் - திருச்சிற்றம்பலம்
வை.பூமாலை சுந்தரபாண்டியம்
பெரிய புராணத்தில் சுந்தரரும் தோழமையும்
இளமைக்கே உரிய பண்புகள் பொருந்திய இளையரே சுந்தரரே பாட்டுடைத்தலைவனாக கொண்டது பெரிய புராணம், இது ஒரு பக்தி நூல்- அன்பு நூல் அன்பையே இறைவனாகக் கண்டார்கள் இந்துக்கள், அன்பின் நிறையுருவமாக இறைவனை சிவமாக கண்டார்கள் சைவர்கள், அன்பும் சிவமும் ஒன்றே - அன்பே சிவம் - என்கிறார் திருமூலர், அந்த அன்பின் நிறைவுருவமாக இறைவனை அன்பால் ஆராதித்த 63 நாயன்மார்களின் வரலாற்றை எடுத்துக் கூறும் ஓர் அன்பு காவியம் தான் பெரியபுராணம், இதில் கூறும் 63 பேரும் அன்பு வழி நின்ற சிவனடியார்கள், அந்த அன்பு கனிந்து முற்றி, பழுத்து - பக்தி -அன்பாக பர்ணமித்தருக்கிறது, இளமை காலத்தில் ஏற்பட்ட சோதனைகளை சாதனைகளாக மாற்றிவதை அடியார்களின் வாழ்வில் காணமுடிகிறது, சம்பந்தரின் இளமை துணிந்து நின்று சமண மதத்தை எதிர்த்து சைவத்தை பாண்டிய நாட்டில் தழைக்க செய்தது,
பாட்டுடைத்தலைவனான சுந்தரரின் வாழ்ககையில் தன்னை கையாயத்தில் பரமனிடம் வேண்டிக்கொண்டதிற்கிணங்க ஆதிசிவன் பரமனும் இப்பூவுலகில் முதிய அந்தணர் வேடங்கொண்டு மணக்கோலத்திலிருந்த சுந்தரரிடம் நீ எனக்கு அடிமை என்று வழக்கு தொடுத்து சுந்தரரை ஆட்கொள்ள எண்ணிய பரமன் திருமணத்தை நிறத்தியோடு தன்னுடன் வழக்கு தொடுத்து அடிமைப்படுத்திய பரமனை தன்னுடைய செந்தமிழ் தோத்திர பாடல் களினால் பாடி அன்பு செலுத்தியதால் அந்த பரமனே சுந்தரரை தோழனாக ஏற்றுக்கொண்டார், நட்பின் மிகுதியால் தான் வேண்டுவன குறித்து வேண்டியும், துன்பம் வருங்கால் இடர் கலையார் என்றும் நீர் வாழ்ந்து போதிரே! என்று தயங்காமல் - கூறும் வன்தொண்டராக காண்கிறார்,
இறைவழிபாடானது வெறும் பூசித்தல், வாசித்தல், போற்றி பாடுதல், செபித்தல், ஆசையற்ற நல் தவம் மேற்கொளல் வாய்மை, அழுக்கின்மை ஆகியவற்றோடு வழிபட்டால் மற்றும் போதாது இறைவனை திருமூலர் கூற்றின்படி இறைவின் திருவருளை பெற பல வழிகள் உள்ளன, அவற்றுள் 1, சர்புத்திர மார்க்கம், - இறைவனை தந்தையாகவும் ஆன்மாவை புத்திரனாகவும் பாவித்து வழிபடுதல் - இது சம்பந்தர் வழி
2, தாச மார்க்கம் - இறைவனை ஏஜமானனகவும், உயிர்கள் பணியாளர்களாகவும் இருந்து வழிபடுதல் - இது நாவுக்கரசர் வழி
3. சக மார்க்கம் - இறைவனை தோழனாகக் கொண்டு வழிபடுதல் - இது சுந்தரர் வழி
4, - சன்மார்க்கம் - இறைவனை ஞானி - குருவாக கொண்டு ஆத்மா வை சீடனாக கொண்டு வழிபடுதல் - இது மாணிக்கவாசகர் வழி
மேற்கண்ட வழிமுறைகளில் சுந்தரர் இறைவனை சமமார்க்கமான வழிமுறையில் உற்ற உயிர் தோழனாகவே கொண்டு அன்பின் வழியாக பக்தி கொண்டு, தனக்கு வேண்டுவனே கூறித்து வேண்டும் போதெல்லாம் வேண்டியும், வேண்டியனவற்றை பெற்றும், வழிபட்ட முறைகள் உற்ற நட்பிற்கு இலக்கணமாக அமைந்தது, தன்னை தடுத்தாட்கொள்வதற்காகவே வந்த அந்தணர் உருவிலான பரமனை நோக்கி தேவரீர்! பிராமண வடிவங் கொண்டு தமயேனை வழக்கினால் வெல்லுவதற்கு எழுந்தருளி வந்தமை அறியாத சிறியேனுக்கு பழைய அறிவைத் தந்து உலக வாழ்க்கையில் மயங்காமல் உய்யும்படி செய்தருளிய கடவுளே! அடியேன் உமது அநந்த குணங்களை எதையறியேன்? என்ன சொல்லி பாடுவேன்? என கேட்க அதன் பொருட்டு சிவனாரும் நீர் என்னை பித்தனென்று சொன்னயே எனவே பித்தனென்றே பாடுக! என்று சொல்லியருளியவுடன் சுந்தரரும் பித்தா பிறைசூடி பெருமானே என்று பாடியருளினார்,
பின் பல புண்ணிய யாத்திரியை மேற்கொண்டு விட்டு பரமனின் வேண்டுகோளின்படி திருவாரூர் வந்தடைந்தார், அவ்வண்ணம் திருவாரூரிலே குடிகொண்ட வன்மீகநாதர் தன் பக்தர்களிடம் நம்பியாரூரான் என் அழைப்பிற்கிணங்க இங்கு வருகின்றார் நீங்கள் அவனை எதிர் கொள்வீர் என பணிக்கிறார், இங்கு இறைவன் தனது பக்தன் தன்னை காண வந்தாலும் , இறைவர் சுந்தரரை தோழனாகவே கொண்டு தான் வரவேற்கும் முகமாக செயல் படுவதோடு வன்மீகநாதருடைய திருவருளினாலே நாம் உனக்கு தோழரானோம் என்று சுந்தரருககு கேட்கும்படியான அசிரீரி வாக்காகவே தெளிவாக்குகிறார், இதன் தன்மையாலேயே அன்றுமுதல் அடியார்கள் எல்லோரும் சுந்தரரை - தம்பிரான் தோழர் - என்று சொல்லிக் கொள்ளலானர் இறைவரும் பக்தரும், மனதால் கொண்ட அன்பின் மிகுதியால் வெளிப்படையாகவே தோழமை ஆகிவிட்டனர்,
இத்தருவாயில் கைலங்கிரியில் பார்வதி தேவியாரின் சேடியர்களில் ஒருவரான கமலினி என்ற மங்கை , பரவையாராக அவதரித்து பருவமங்கையராக, திருக்கோவிலியே தினசரி தரிசனம் பண்ணிவரும் பொழுது சுந்தரரும் பரவையாரும் எதிர் கொள்கின்றனர் இருவரும் முற்பிறவி அன்பு - காதல்- தொடர்பினால் காதல் வசப்படுகின்றனர் பரவையார் மேல் காதல் கொண்ட சுந்தரர் தனது காதலை வன்மீகநாதரிடம் பரவையாரை எனக்கு மணமுடித்து வைக்க வேண்டினார் அதன்படி தன் நண்பர் சுந்தரரின் வேண்டுகோளை ஏற்று தன் தொண்டர்கள் மூலம் மணமுடித்துவைத்து நட்பினை மிகைப்படுத்துகின்றனர் தோழர்கள்
சுந்தரரின் காதலுக்கு தோள் கொடுத்த பரமன் - வன்மீகநாதர் பொருளாதார உதவிக்கும் உடன்படுகிறார், பரவையார் பங்குனி உத்திர திருவிழாவிற்கு சுந்தரரிடம் பணம் கேட்க, சுந்தரர் யாது செய்வதென அறியாது, சிவலாயங்கள் தோறும் பதிகம் பாடி வரும் காலத்தில் ஒரு திருக்கோவிலிலி துயில் கொள்ளும் போது தனக்கு தலையணையாக வைத்திருநத செங்கள் பொற்கற்களாக மாறியது இறைவன் அருளால் பெற்றது கண்டு மனம் மகிழ்கிறார், பரமன்பால் கொண்ட தோழமையால் தான் நொந்து உருகி வேண்டியதன் பலனாக நண்பரான பரமன் தனக்க பொற்கற்களை கொடுத்து பொருளுதவினார், அதுமட்டுமன்றி பின் திருமுதுகுன்றம் சென்று பதிகம் பாடி பன்னீராயிரம் பொன் பெற்று இதனை இறைவர் கூற்றுப்படி மணிமுத்த நதியிலிட்டு திருவாரூர் குளத்தில் போய் எடுத்துக் கொள் என்றபடி திருவாரூர் சென்று குளத்தில் தேடினார் நதியில் போட்டுவிட்டு குளத்தில் தேடினால் கிடைக்குமா? என்று ஏளன கோபம் கொண்டார் இருப்பினும் சுந்தரர் மனம் தளராது நண்பர் - இறைவரை வேண்டி மனமுறுகி பதிகம் பாடியதன் மூலம் பன்னீராயிரம் பொன்னும் கிடைக்கப் பெற்றார்,
பின் திருவொற்றியூர் சென்று சுவாமி தரிசனம் செய்யுங்காலத்தில் கைலங்கிரியில் அனிந்திதை என்ற மங்கை இங்கு சங்கிலியாராக தோன்றி, சுவாமிக்கு மலர் பணிவிடை செய்யும் வேளையில் சுந்தரர் சங்கிலியாரைக் கண்டார் சங்கிலியாரும் சுந்தரரின் ேம்ல் காதல் கொண்டார், இருவரும் சில சபதங்களுடன் மணமுடிக்கப்பெற்றனர் மணமுடித்து சிலகாலம் சங்கிலியாருடன் வாழ்ந்து வரும் காலத்தில் திருவாரூர் வன்மீகநாதர் சுவாமிகளை இவ்வளவு காலம் மறந்திருந்ததை நினைத்து மனமுருகி திருவாரூர் செல்ல முனைகையில் தனது சபத்தை மீறியமையால் சுந்தரர் கண்களை இழந்தார், இத்துடன் கொடிய நோய்களுடனும் அல்லல்கள் பல பட்டார், அப்போது தன் தோழர் வன்மீக நாதரை வேணடி என்னை மன்னித்து எனக்கு கண் தருவாயோ ! நீரோ முக்கண் கொண்டுள்ளீர் எனக்கு ஒரு கண்ணாவது தர உமக்கு மனம் வரவில்லையோ என தோழமையுணர்வுடன் கண்டிப்பது போன்று வேண்டினார் தோழன் அருளால் பார்வை கிடைத்தது,பின் பரவையாரை காண துடிக்கிறார் பரவையாரோ சுந்தரர் சங்கிலியாருடன் வாழந்ததையால் சுந்தரரை கணவராக ஏற்க மறுக்கிறார், எனவே சுந்தரர் தனது தோழனான பரமனை பரவையாரிடம் சென்று தன்னை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காக பரவையாரிடம் தூதுவனாக செல்ல வேண்டுகிறார் தூது சென்றுவந்த பரமனும் பரவையார் தங்களை ஏற்க மறுக்கிறார் என்று கூறியவுடன் பரமனிடம் நானே சங்கிலியாரை ஊரறிய முறைப்படி மணம் முடித்துக்கொண்டவன் நீர் உமாதேவியாருடன் கங்கையை சடையில் மறைத்து வைத்திருக்கிறீர் இப்படி இருக்க நான் என்ன தவறிழைத்தேன் ஏன் என்னை பரவையாருடன் சேர்தது வைக்க முடியவில்லை என நண்பரோடு வாதம் செய்து அழுது புலம்பி தோழமையின் மிகுதியால் இருவரையும் பரமனே சேர்த்து வைக்கிறார், இவ்வாறு சகமார்க்கமாக இறைவனிடம் சுந்தரர் அன்புகொண்டு சுகவாழ்வு பெற்று முக்தியடைகிறார்,
இத்துடன் நட்பு பரமனிடம் இருந்தோடு இன்றி சேரமான் நாயனரையும் பரமன் மூலம் நட்பாகி இருவரும் பல புண்ணிய தலங்களுக்கு சென்று பின் தான் முக்தியடையும் காலத்தில் கைலியங்கிரியில் தன் நண்பரையும் சேர்த்து கைலாசம் சேர உதவினார், இதுவும் சுந்தரரின் தோழமை பாங்கிற்கு முத்தாய்ப்பாக அமைகிறது,
திருசிற்றம்பலம்
பெரிய புராணத்தில் சுந்தரரும் தோழமையும்
சிவ மந்திரம்
தெய்வ வழிபாடுகள் ஒன்பது வகையாக பிரிக்கப்பட்டுள்ளன, அவையாவன
கேட்டல், சொல்லுதல், நினைத்தல், பாதசேவை,கோவில் வழிபாடு, பிரர்த்தித்தல், பணிதல், நட்புகொளல், சமர்ப்பணம் செய்தல்
இதில் கேட்டல், சொல்லுதல் நினைத்தல், ஆகியவற்றிக்கு தோத்திரப்பாடல் தான் முதன்மை பெறுகிறது, தோத்திரங்கள் மூலம் தான் வழிபாட்டிற்கு ஆதாரமாக அமைந்தது தான் தேவார – திருமந்திர பாடல்கள் கொண்ட பன்னிரு திருமுறை ஆகியன,
இந்த தோத்திர பாடல்களை சுருக்கி இறைவனை வேண்டுவதற்கு குறுகியசொற்களால் உறுவேற்றி ஆராய்ந்து கொண்டு வரப்பட்டவைகள் தான் மந்திர சுலோகங்கள் மற்றும் மந்திரங்கள் அனைத்தும்,இவை மந்திரங்களை உருவேற்றி மனித உடம்பில் மின் காந்த சக்தியை கூட்டிக் கொள்ளவேண்டும்
மந்திரங்களில் பிரதானமானது ” ஓம்” என்ற பிரணவ மந்திரம், இது எல்லா நாம வழிகளிலும் சேர்த்து பிரணவ ஒலியை எழுப்ப சேர்க்கப்படுகிறது,உலகம்முழுவதும்சுற்றி வரும் நாமம்
ஓம் நமச்சிவாய, ஓம் நாமோ நாராயணா, ஒம் சக்தி, ஓம் குரு தேவ, என எல்லா சைவ, வைஸ்னவ நாம வழிகளில் பிராத்தனைக்காகவும் சேர்க்கபடுகிறது, இந்த ஓம் பிரண மந்திரத்தை சிவ மந்திரங்கள் உருவாக்கப்பட்டன, இந்த மந்திரங்களை ஒவ்வொரு சித்தர் பெருமக்களும் அவரரவர் ஆராய்ச்சிக்கு ஏற்ற சிவ மந்திரங்களை உருவாக்கியுள்ளனர், அகத்தியர், கஜபுஜண்டர் ஆகியோர் நமச்சியவாய மந்திரங்களை வெவ்வேறுகோணங்களில் ஆராய்ந்து தீர்க்கம் பெற்றனர்,அவைகளில பிரதானவானவை ஓம் நம சிவாய!ஓம் சிவய நம! போன்றவை ஓம் சிவ சிவ ஓம்! ஓம் என்பது சிவத்தையும் ரீம் என்பதற்கு சக்தியை இணைப்பதற்கு ஓம் ரீம் இணைத்து வேண்டிய செயலுக்கான மந்திர சொற்களை உருவேற்றினர்
இதில் அகத்தியர் மகிரிஷி ஒவ்வொரு செயலுக்கும் தனிதனி மந்திரம் கண்டுள்ளார் அவை எட்டு வகையாவன :
1)மோக சக்தி பெற – மோகன மந்திரம் : ஓம் ரீம் மோகய! மோகய!
2)வசிகம் செய்ய – வசிகமந்திரம் : ஓம் ரீம் வசி!வசி!
3) மனதை ஒருநிலைப்படுத்த – கெட்ட ஆவிகளைவிரட்ட – ஓம் ரீம் சம்பைய! சம்பைய!
4) ஆக்ஸ்யம் – பிரிந்தவர் ஒன்று சேர நம்னை வெறுத்தவர் வெறுப்புணர்வு மாற: ஓம் ரீம் ஆகஸ்ய !ஆகஸ்ய !
5) உச்சாடனம் நோய் கள் தீர – சுக வாழ்விற்கு : ஓம் ரீம் உச்சாடய! உச்சாடய!
6) வேதனம்: ஓம் ரீம் சேர்ந்தவர்கள் பிரிப்பதற்கு
7) செளபாக்கியம் பெற: ஓம் ரீம் சிவசிவ!
8) தெய்வ அருள் பெற ஓம் சிவ சிவ ஓம்!
மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஒரு லட்சம்தடவை உருவேற்றி ஜெபிக்க வேண்டும் மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் இந்தமந்திரம் நன்கு செயல்பட சைவ உணவினை நன்று
தெய்வ வழிபாடுகள் ஒன்பது வகையாக பிரிக்கப்பட்டுள்ளன, அவையாவன
கேட்டல், சொல்லுதல், நினைத்தல், பாதசேவை,கோவில் வழிபாடு, பிரர்த்தித்தல், பணிதல், நட்புகொளல், சமர்ப்பணம் செய்தல்
இதில் கேட்டல், சொல்லுதல் நினைத்தல், ஆகியவற்றிக்கு தோத்திரப்பாடல் தான் முதன்மை பெறுகிறது, தோத்திரங்கள் மூலம் தான் வழிபாட்டிற்கு ஆதாரமாக அமைந்தது தான் தேவார – திருமந்திர பாடல்கள் கொண்ட பன்னிரு திருமுறை ஆகியன,
இந்த தோத்திர பாடல்களை சுருக்கி இறைவனை வேண்டுவதற்கு குறுகியசொற்களால் உறுவேற்றி ஆராய்ந்து கொண்டு வரப்பட்டவைகள் தான் மந்திர சுலோகங்கள் மற்றும் மந்திரங்கள் அனைத்தும்,இவை மந்திரங்களை உருவேற்றி மனித உடம்பில் மின் காந்த சக்தியை கூட்டிக் கொள்ளவேண்டும்
மந்திரங்களில் பிரதானமானது ” ஓம்” என்ற பிரணவ மந்திரம், இது எல்லா நாம வழிகளிலும் சேர்த்து பிரணவ ஒலியை எழுப்ப சேர்க்கப்படுகிறது,உலகம்முழுவதும்சுற்றி வரும் நாமம்
ஓம் நமச்சிவாய, ஓம் நாமோ நாராயணா, ஒம் சக்தி, ஓம் குரு தேவ, என எல்லா சைவ, வைஸ்னவ நாம வழிகளில் பிராத்தனைக்காகவும் சேர்க்கபடுகிறது, இந்த ஓம் பிரண மந்திரத்தை சிவ மந்திரங்கள் உருவாக்கப்பட்டன, இந்த மந்திரங்களை ஒவ்வொரு சித்தர் பெருமக்களும் அவரரவர் ஆராய்ச்சிக்கு ஏற்ற சிவ மந்திரங்களை உருவாக்கியுள்ளனர், அகத்தியர், கஜபுஜண்டர் ஆகியோர் நமச்சியவாய மந்திரங்களை வெவ்வேறுகோணங்களில் ஆராய்ந்து தீர்க்கம் பெற்றனர்,அவைகளில பிரதானவானவை ஓம் நம சிவாய!ஓம் சிவய நம! போன்றவை ஓம் சிவ சிவ ஓம்! ஓம் என்பது சிவத்தையும் ரீம் என்பதற்கு சக்தியை இணைப்பதற்கு ஓம் ரீம் இணைத்து வேண்டிய செயலுக்கான மந்திர சொற்களை உருவேற்றினர்
இதில் அகத்தியர் மகிரிஷி ஒவ்வொரு செயலுக்கும் தனிதனி மந்திரம் கண்டுள்ளார் அவை எட்டு வகையாவன :
1)மோக சக்தி பெற – மோகன மந்திரம் : ஓம் ரீம் மோகய! மோகய!
2)வசிகம் செய்ய – வசிகமந்திரம் : ஓம் ரீம் வசி!வசி!
3) மனதை ஒருநிலைப்படுத்த – கெட்ட ஆவிகளைவிரட்ட – ஓம் ரீம் சம்பைய! சம்பைய!
4) ஆக்ஸ்யம் – பிரிந்தவர் ஒன்று சேர நம்னை வெறுத்தவர் வெறுப்புணர்வு மாற: ஓம் ரீம் ஆகஸ்ய !ஆகஸ்ய !
5) உச்சாடனம் நோய் கள் தீர – சுக வாழ்விற்கு : ஓம் ரீம் உச்சாடய! உச்சாடய!
6) வேதனம்: ஓம் ரீம் சேர்ந்தவர்கள் பிரிப்பதற்கு
7) செளபாக்கியம் பெற: ஓம் ரீம் சிவசிவ!
8) தெய்வ அருள் பெற ஓம் சிவ சிவ ஓம்!
மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஒரு லட்சம்தடவை உருவேற்றி ஜெபிக்க வேண்டும் மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் இந்தமந்திரம் நன்கு செயல்பட சைவ உணவினை நன்று
முப்பெரும் தேவியரே
முப்பெரும் தேவியரே
ஆடி மாதம் உனக்கன்றோ
ஆலயம் தோறும் உனது விழா
ஆடித் தவசிருந்து ஆதிமூலனை
ஆட்கொண்ட நாயகியே
நவராத்திரி நல்விழாவில்
நவ(9) நாளன்று உனக்கு பூசை
களிப்புடன் கல்வி கேள்விதனை
கனிவுடனே தந்திடுவாயே
நங்கையர் போற்றும் நிலமகளே
நாரா யணனை மணந்தவளே
எங்கும் நிறைநது இருப்பவளே
என்குறை நீக்கி அருள்வாயே
வை.பூமாலை. சுந்தரபாண்டியம்
சத்குரு சோமப்பர் சுவாமி ஜீவசாதி
இந்து மரபியலில் ஜீவ சமாதியின் முக்கியத்துவம் தெளிவாக வரையறுத்து கூறப்பட்டுள்ளது,எல்லா சமய, மதத்தினற்கும் பொதுவான நிலை ஆகும், ஞானத்தின் உச்ச நிலை எய்திய ஒருவரை ஜீவ சமாதி என்கிறோம் ஞானியரின் ஜீவசமாதியில் ஒரு விளக்கேற்றி வைத்து மனதை ஒருமுகப் படுத்தி தியானத்தில் அமர்ந்திருந்தால் அவர்களின் அருளுக்கு பாத்தியமாக முடியும், ஜீவ சமாதிகள் அருளாளர்களினால் போற்றிப் பாதுகாப்புடனும் சிறப்புடனும் நடத்தப்பட்டு வரப்படும், ஒரு உயிர் ஒட்டமுள்ள ஜீவசமாதியே மதுரை காகபுஜண்டர் - கூடல்மலை - மலையில் அமைந்துள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சீடாரான அதன் அறக்கட்டளையுடன் இணைந்து பாமரிக்கப்பட்டு வரும் ஒரு ஜீவ சமாதிதான் சித்தர் சோமப்பர் சுவாமி சமாதி,
சத்குரு சோமப்பர் சுவாமிகள் காலங்காலமாக காடுமேடெல்லாம் நடந்து,கடந்து உரண்டு திரண்டு கட்டிக்குளம் சூட்டுக்கோல் சித்தர் மாயாண்டி சுவாமிகளால் அடையாளம் காணப்பட்டு அவரிடம் வந்து சேர்ந்தார், பின் அன்னாரின் முக்கிய சீடாராகி சித்தர் மாயாண்டி சுவாமிகளின் ஆன்மீக பணிகளில் தானும் பங்கு கொண்டு அவர் தொடரும் பணிகளையும், அவர் விட்டு சென்ற பணிகளையும் அன்னாரின் ஆன்மீக கனவுகளையும் நிறைவேற்றி வைக்க் உறுதுணையாக இருந்தவர்,எங்கேயோ ஞானியாக சுற்றித்திரிந்த சோமப்பா சுவாமிகளை திருக்கூடல் மலைக்கு வரவழைத்ததே சித்தர் மாயாண்டி சுவாமிகள் தான், சோமப்பரை அடையாளம் கண்டு கொண்ட மாயாண்டி சுவாமிகள் தன் உபசீடர்களிடம் சோமப்பா சுவாமிகளை இவர் மிகப் பெரிய சித்த பருசர் என்று அறிமுகம் செய்து வைத்து, தன்னை எவ்வாறு பேணுகிறீகர்களோ அவ்வாறே அவரையும் கவனிக்க வேண்டுமேன பணித்தார்,சோமப்பாவைக் காணும் போதெல்லாம், மனம் இளகி அவருடன் உரையாடுவார் குருஜி, சோமப்பா சுவாமிகளும்,மாயாண்டி சுவாமிகளும் ஒரே காலத்தில் திருக்கூடல் மலையில் இருந்து ஆன்மீகப் பணிகளை ஆற்றி பக்தர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்தனர், மாயாண்டி சுவாமிகள் காலத்திற்கு பிறகு அவர் விட்ட பணிகளை சோமப்பர் தொடர்ந்து செய்து வந்தார், உயர் அந்தஸ்தில் உள்ள சிலர் அவரை கவரும் பொருட்டு சுய எண்ணங்கள் கொண்டோரைக் கண்டால் அவருக்கு பிடிக்காது அன்னார் கொண்டுவந்த பொருட்களை எட்டி உதைத்துவிடுவார், ஆனாலும் தன்னிடம் பக்திகொண்ட அன்பர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்தும், அன்னாருக்கு வரும் சாபக்கேடு மற்றும் துன்பங்களை முன்கூட்டியே மறைமுக வார்த்தைகளால் கூறிவிடுவார்,
மாயாண்டி சுவாமிகளைப் போலவே தானும் திருச்சமாதி ஆகும் தினத்தையும் நேரத்தையும் முன்கூட்டியே சொல்லி விட்டுத்தான் சமாதி ஆனார், ஆயிரக்கண்க்கான பக்தர்கள் கூடி இருக்க இவரது திருச்சமாதி நிகழ்வு நடந்தது, சோமப்பா சுவாமிகள் 1968ம் ஆண்டு ஆனி மாதம் மிருகசீரிட நட்சத்திரத்தில் ஆயிரக்கணக்கான அன்பர்கள் முன்னிலையில் சமாதியடைந்தார், அந்நாளிலேயே இன்றளவும் அன்னருக்கு குருபூசை சிறப்பாக நடைபெற்று வருகிறது, அமாவாசை மற்றும் பிரதோச பூசைகளும் அன்னார் சமாதியில் நடந்து வருகிறது,
தூய உள்ளமும் நற்சிந்தனையும் இருப்பவர்களை இன்றைக்கும் சோமப்பா தன் ஜீவ சமாதிக்கு வரவழைத்து அருள் புரிகிறார், சித்தர்களை தரிசிப்பதில் ஆர்வம் உள்ள ஒவ்வொரும் அவசியம் தரிசிக்கவேண்டிய திருச்சமாதி இது, அமைதியான சுற்று சூழல் கொண்ட இயற்கையான அமைவிடம்,
இருப்பிடம்: மதுரையில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் மலையின் எதிரில் அமைந்துள்ள திருக்கூடல மலை என்ற காகபுசண்டர் மலை தியாகராஜர் பொறியியல் கல்லூரி செல்லும் வழியில சூட்டுகோல் மயாண்டி ஜீவ சமாதி அடுத்து மலையில் ஏறும் வழியில் சோமப்பா சமாதி அமைந்துள்ளது,
நன்றி அருள்மிகு சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கையேடு. சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம், மதுரை 05
மேலும் விபரம்: Web; www. soottukkole.org.
இந்து மரபியலில் ஜீவ சமாதியின் முக்கியத்துவம் தெளிவாக வரையறுத்து கூறப்பட்டுள்ளது,எல்லா சமய, மதத்தினற்கும் பொதுவான நிலை ஆகும், ஞானத்தின் உச்ச நிலை எய்திய ஒருவரை ஜீவ சமாதி என்கிறோம் ஞானியரின் ஜீவசமாதியில் ஒரு விளக்கேற்றி வைத்து மனதை ஒருமுகப் படுத்தி தியானத்தில் அமர்ந்திருந்தால் அவர்களின் அருளுக்கு பாத்தியமாக முடியும், ஜீவ சமாதிகள் அருளாளர்களினால் போற்றிப் பாதுகாப்புடனும் சிறப்புடனும் நடத்தப்பட்டு வரப்படும், ஒரு உயிர் ஒட்டமுள்ள ஜீவசமாதியே மதுரை காகபுஜண்டர் - கூடல்மலை - மலையில் அமைந்துள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சீடாரான அதன் அறக்கட்டளையுடன் இணைந்து பாமரிக்கப்பட்டு வரும் ஒரு ஜீவ சமாதிதான் சித்தர் சோமப்பர் சுவாமி சமாதி,
சத்குரு சோமப்பர் சுவாமிகள் காலங்காலமாக காடுமேடெல்லாம் நடந்து,கடந்து உரண்டு திரண்டு கட்டிக்குளம் சூட்டுக்கோல் சித்தர் மாயாண்டி சுவாமிகளால் அடையாளம் காணப்பட்டு அவரிடம் வந்து சேர்ந்தார், பின் அன்னாரின் முக்கிய சீடாராகி சித்தர் மாயாண்டி சுவாமிகளின் ஆன்மீக பணிகளில் தானும் பங்கு கொண்டு அவர் தொடரும் பணிகளையும், அவர் விட்டு சென்ற பணிகளையும் அன்னாரின் ஆன்மீக கனவுகளையும் நிறைவேற்றி வைக்க் உறுதுணையாக இருந்தவர்,எங்கேயோ ஞானியாக சுற்றித்திரிந்த சோமப்பா சுவாமிகளை திருக்கூடல் மலைக்கு வரவழைத்ததே சித்தர் மாயாண்டி சுவாமிகள் தான், சோமப்பரை அடையாளம் கண்டு கொண்ட மாயாண்டி சுவாமிகள் தன் உபசீடர்களிடம் சோமப்பா சுவாமிகளை இவர் மிகப் பெரிய சித்த பருசர் என்று அறிமுகம் செய்து வைத்து, தன்னை எவ்வாறு பேணுகிறீகர்களோ அவ்வாறே அவரையும் கவனிக்க வேண்டுமேன பணித்தார்,சோமப்பாவைக் காணும் போதெல்லாம், மனம் இளகி அவருடன் உரையாடுவார் குருஜி, சோமப்பா சுவாமிகளும்,மாயாண்டி சுவாமிகளும் ஒரே காலத்தில் திருக்கூடல் மலையில் இருந்து ஆன்மீகப் பணிகளை ஆற்றி பக்தர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்தனர், மாயாண்டி சுவாமிகள் காலத்திற்கு பிறகு அவர் விட்ட பணிகளை சோமப்பர் தொடர்ந்து செய்து வந்தார், உயர் அந்தஸ்தில் உள்ள சிலர் அவரை கவரும் பொருட்டு சுய எண்ணங்கள் கொண்டோரைக் கண்டால் அவருக்கு பிடிக்காது அன்னார் கொண்டுவந்த பொருட்களை எட்டி உதைத்துவிடுவார், ஆனாலும் தன்னிடம் பக்திகொண்ட அன்பர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்தும், அன்னாருக்கு வரும் சாபக்கேடு மற்றும் துன்பங்களை முன்கூட்டியே மறைமுக வார்த்தைகளால் கூறிவிடுவார்,
மாயாண்டி சுவாமிகளைப் போலவே தானும் திருச்சமாதி ஆகும் தினத்தையும் நேரத்தையும் முன்கூட்டியே சொல்லி விட்டுத்தான் சமாதி ஆனார், ஆயிரக்கண்க்கான பக்தர்கள் கூடி இருக்க இவரது திருச்சமாதி நிகழ்வு நடந்தது, சோமப்பா சுவாமிகள் 1968ம் ஆண்டு ஆனி மாதம் மிருகசீரிட நட்சத்திரத்தில் ஆயிரக்கணக்கான அன்பர்கள் முன்னிலையில் சமாதியடைந்தார், அந்நாளிலேயே இன்றளவும் அன்னருக்கு குருபூசை சிறப்பாக நடைபெற்று வருகிறது, அமாவாசை மற்றும் பிரதோச பூசைகளும் அன்னார் சமாதியில் நடந்து வருகிறது,
தூய உள்ளமும் நற்சிந்தனையும் இருப்பவர்களை இன்றைக்கும் சோமப்பா தன் ஜீவ சமாதிக்கு வரவழைத்து அருள் புரிகிறார், சித்தர்களை தரிசிப்பதில் ஆர்வம் உள்ள ஒவ்வொரும் அவசியம் தரிசிக்கவேண்டிய திருச்சமாதி இது, அமைதியான சுற்று சூழல் கொண்ட இயற்கையான அமைவிடம்,
இருப்பிடம்: மதுரையில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் மலையின் எதிரில் அமைந்துள்ள திருக்கூடல மலை என்ற காகபுசண்டர் மலை தியாகராஜர் பொறியியல் கல்லூரி செல்லும் வழியில சூட்டுகோல் மயாண்டி ஜீவ சமாதி அடுத்து மலையில் ஏறும் வழியில் சோமப்பா சமாதி அமைந்துள்ளது,
நன்றி அருள்மிகு சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கையேடு. சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம், மதுரை 05
மேலும் விபரம்: Web; www. soottukkole.org.
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி.
சித்தர்களை அறிவோம்: மகா சித்தர்
கட்டிக்குளம் ஸ்ரீ சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்
காகபுசுண்டர் மலை (திருக்கூடல்மலை)
திருப்பரங்குன்றம், மதுரை......
மதுரைக்கு அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் ஒரு மகத்துவம் உண்டு. பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவராகவும், காலங்களைக் கடந்து வாழ்ந்து வந்தவருமான காகபுசுண்டரின் (காகபுஜண்டர் என்றும் சொல்லப்படுவதுண்டு) பெயரிலேயே இங்கு ஒரு மலை அமைந்துள்ளது. ஆம்! அந்த மலையை காகபுசுண்டர் மலை என்றும் புசுண்டர் மலை என்றும் ஆன்மிக அன்பர்கள் தொன்றுதொட்டு அழைத்து வருகிறார்கள். மதுரையின் பெயரைத் தாங்கி, திருக்கூடல்மலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 300 அடி உயரம் கொண்டது இந்த மலை.
இந்த காகபுசுண்டர் மலையில் அடிவாரத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதி திருக்கோயிலும், மலைக்குச் செல்லும் வழியில் மாயாண்டி சுவாமிகளின் சீடரான சோமப்பா சுவாமிகளின் திருச்சமாதியும் அமைந்துள்ளது. தவிர வேலம்மாள், இருளப்பக் கோனார், மூக்கையா சுவாமிகள் இப்படி சுமார் பத்துக்கும் மேற்பட்ட சமாதிகள் இந்த காகபுசுண்டர் மலைப் பகுதியில் அமைந்துள்ளன.
இந்த மலையின் புராணப் பெருமைகளை உணர்ந்த கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், இதைத் தன் தவப் பணிக்குத் தேர்ந்தெடுத்து இங்கே அமர்ந்தார். ‘காகபுசுண்டர் மலை, பழநிமலையைப் போன்றது’ என்றே மாயாண்டி சுவாமிகள் அடிக்கடி குறிப்பிடுவாராம். ‘குன்றக்குடியில் வெள்ளி ரதம் ஓடுவது போல் காகபுசுண்டர் மலையிலும் வெள்ளி ரதம் ஓடப் போகுது’ என்று சுவாமிகள் தன் காலத்தில் பக்தர்களிடம் அடிக்கடி கூறி வந்தாராம். சுவாமிகளின் திருவாக்கு மெய்யாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது அவரது பக்தர்களின் நம்பிக்கை. காகபுசுண்டர்மலையில் - என்னென்ன திருப்பணிகள் நடக்க வேண்டும் என்று மாயாண்டி சுவாமிகள் திட்டமிட்டாரோ, அவை அனைத்தும் இப்போது மெள்ள மெள்ளப் பூர்த்தி ஆகி வருகின்றன.
மாயாண்டி சுவாமிகள் ஜீவ சமாதி திருக்கோயிலையும், காகபுசுண்டர் மலையையும் தற்போது நிர்வகித்து வருகிறது ‘சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம்’. இதன் செயலாளராக இருந்து வருபவர் இரா. தட்சிணாமூர்த்தி. மாயாண்டி சுவாமிகளுடன் உடன் இருந்து அவர் இட்ட திருப்பணிகளை எல்லாம் செய்து முடித்த இருளப்பக் கோனாரின் கொள்ளுப் பேரன் இவர்.
மலைக்கு மேல் ஸ்ரீதண்டாயுதபாணி ஸ்வாமி ஆலயம் கல் திருப்பணியாக நடந்து வருகிறது. மலை மேல் நடந்து செல்வதற்குப் படிகள் அமைத்திருக்கிறோம். விரைவில் கும்பாபிஷேகம் காண இருக்கிறது இந்த தண்டபாணி திருக்கோயில். மலை ஏறும்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய ஸ்ரீநிவாசப் பெருமாள், ஆஞ்சநேயர் ஆகிய திருச்சந்நிதிகளைத் தரிசிக்கலாம். மலை உச்சியில் தனிச் சந்நிதியில் கோலாகலமாக வீற்றிருக்கிறார் ஸ்ரீதண்டபாணி. தவிர ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமீனாட்சி- சுந்தரேஸ்வரர், பள்ளிகொண்ட பெருமாள் ஆகியோருக்கும் இங்கே சந்நிதிகள் உண்டு. இதை எல்லாம் செய்வது நாங்கள்தான் என்றால், அது உண்மை அல்ல. சுவாமிகள் எங்களுடன் இருந்து ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றிக் கொள்கிறார் என்றே சொல்ல வேண்டும்” என்றார் அடக்கத்தோடு.
எங்கே இருக்கிறது காகபுசுண்டர் மலை?
சோமசுந்தரப் பெருமானும் அன்னை மீனாட்சியும் அருளும் மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை. திருப்பரங்குன்றத்துக்குள் வந்து விட்டால், மலை மேல் இருக்கும் ஸ்ரீதண்டபாணி பெருமான் திருக்கோயிலை எங்கிருந்து வேண்டுமானாலும், காண முடியும். தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் இருந்து சுமார் பத்து நிமிட நடை தூரம். காகபுசுண்டர் மலை உச்சியில் ஸ்ரீதண்டபாணியைத் தரிசிக்கச் சென்றால், அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்தில் பூஜைக்கான மணி ஓசை ஒலிப்பதைத் துல்லியமாகக் கேட்க முடிகிறது. ஆனந்தமான சூழல். ரம்மியமான காட்சிகள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் அனைத்துக் கோபுரங்களையும், காகபுசுண்டர் மலையின் உச்சியில் இருந்து தரிசிக்க முடியும்.
மதுரையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கிறது திருப்பாச்சேத்தி. இங்கிருந்து தென்புறம் சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கட்டிக்குளம். பல ஞானியர் இங்கே சமாதி கொண்டுள்ளனர். அந்தக் காலத்தில் - அதாவது போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் நடையாத்திரையாக ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களும் ஆன்மிக அன்பர்களும் தங்கிச் செல்வதற்கு திருமடங்கள் கட்டிக்குளத்தில் இருந்தன. உணவருந்தவும், ஓய்வெடுக்கவும் இந்தத் திருமடங்களை சாதுக்களும் யாத்ரீகர்களும் பயன்படுத்தி வந்தனர்.
கட்டிக்குளத்தில் அப்போது இருந்து வந்தவர் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் எனும் சித்த புருஷர். இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும், தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு இந்த சூட்டுக்கோல் அவரது சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும், அதன் பின் அவரது சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்த சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.
மாயாண்டி சுவாமிகளின் அவதா-ரத்துக்கு வருவோம். கட்டிக்குளத்தில் குப்பமுத்து வேளாளர் - கூத்தாயி அம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். மண்பாண்டம் செய்வது இவர்கள் தொழில். தவிர, உள்ளூரில் இருந்த ஐயனார் கோயிலில் பூசாரியாகவும் இருந்தார் குப்பமுத்து. சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் பக்தர்களாக இருந்தனர் இந்தத் தம்பதியர். அவ்வப்போது சுவாமிகளின் தரிசனம் பெற்று வந்தனர். ஒரு முறை ராமலிங்க சுவாமிகளிடம் திருவருட் பிரசாதம் பெற்ற பாக்கியத்தால், கூத்தாயி அம்மாளுக்கு காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரன்று (1858 ஜூலை) ஆண் குழந்தை பிறந்தது. அகிலத்தையே ஆளப் பிறந்த அந்த மகவுக்கு ‘மாயாண்டி’ எனப் பெயரிட்டனர். இளம் வயதிலேயே இறை ஞானம் கிடைக்கப் பெற்றது மாயாண்டிக்கு. பெற்றோரும் இதை உணரும் சம்பவம் ஒன்றும் விரைவிலேயே நடந்தது.
தான் பூஜை செய்யும் உள்ளூர் ஐயனார் கோயிலுக்கு சிறுவனான மாயாண்டியையும் கூட்டிச் செல்வது குப்பமுத்துவின் வழக்கம். அப்படி ஒரு நாள் கூட்டிச் சென்றபோது மகனை வெளிக் கூடத்தில் அமர்த்தி வைத்து விட்டு, ஐயனார் பூஜைக்காகக் கருவறைக்குள் சென்றார் குப்பமுத்து. ஐயனாரின் திருமந்திரங்களைச் சொல்லி அவருக்கு அபிஷேக ஆராதனைகளை முடித்து விட்டு வியர்வை சொட்ட வெளியே வந்த குப்பமுத்து அதிர்ந்தார். அவர் கண்ட காட்சி பதற வைத்தது.
குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில், “ஐயனாரப்பா... எம் மகனைக் காப்பாத்து” என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம். தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. ‘மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது’ என்பதை அப்போது உணர்ந்து கொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர்.
பள்ளிப் படிப்பு ஒரு பக்கம்; ஆன்மிகத் தேடல் மறுபக்கம் என இருந்தார் மாயாண்டி. தன் வீட்டில் இருந்த பரம்பரைச் சொத்தான வைத்தியச் சுவடிகளையும், சித்தர் நூல் தொகுதிகளையும் தூசி தட்டி எடுத்துப் படித்தார். வியந்தார். அவ்வப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று அதிகாலை பூஜையையும், அர்த்தஜாம பூஜையையும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டார் மாயாண்டி.
இந்தக் காலத்தில் பெற்றோரின் வற்புறுத்தலால், புளியங்குடியைச் சேர்ந்த மீனாட்சி எனும் உறவுக்காரப் பெண்மணி, இவருக்கு மனைவியாக வாய்த்தாள். இல்லற வாழ்க்கையில் ஒரு மகனும் மகளும் உண்டு. ஒரு முறை பழநி யாத்திரைக்குச் செல்லக் கையில் பணம் இல்லாததால், மனைவி அணிந்திருந்த தங்க ஆபரணங்களை விற்று, யாத்திரையை மேற்கொண்டார். மாயாண்டியின் ஆன்மிகத் தேடுதல்களுக்கு எந்தத் தடையும் போட்டதில்லை அவரது மனைவி. தவிர, தன் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களுக்கு அவ்வப்போது உணவளித்தும் மகிழ்ந்தார் மாயாண்டி.
மாயாண்டி சுவாமிகளை இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பி இருக்கிறான் என்பது, அவனுக்கு மட்டும்தானே தெரியும்?! இல்லறத்திலேயே இவன் இருந்து விட்டால், எதிர்கால சமுதாயத்துக்கு என்ன பயனை செய்து விட முடியும்? மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டான். விளைவு - இல்லறம் இனிக்கவில்லை. தவத்திலும் யோகத்திலும் காலத்தை ஓட்டினார். சிட்டாய்ப் பறக்க விரும்பினார். தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார். அதற்கு முன் தீட்சை பெற வேண்டுமே! உபதேசம் செய்வதற்கு ஒரு குரு வேண்டுமே! இந்த வேளையில்தான் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள் என்பவர், கட்டிக்குளம் வந்தார்.
அவரைச் சந்தித்துத் தன்னை சீடனாக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். செல்லப்ப சுவாமிகளும் மாயாண்டியை அரவணைத்து அவருக்கு உபதேசம் செய்து வைத்தார். துறவறத்துக்கான திறவுகோல் கிடைத்தாகி விட்டது. ஆனால், இல்லறத்தில் இருக்கும் மனைவி மற்றும் பெற்றோர் ஆகியோர் இந்த முடிவுக்கு உடன்படுவார்களா? இல்லையே! துறவறம் ஏற்று வீட்டை விட்டுப் புறப்படும் முடிவில் இருந்த மாயாண்டியை எவ்வளவோ தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள் பெற்றோரும், மனைவியும். ஆனால், மாயாண்டி சுவாமிகள் மசியவில்லை. தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து, கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார். சித்தமெல்லாம் சிவ மயம்!
கன்யாகுமரி, கோட்டாறு, சுசீந்திரம், பொதியமலை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், உத்தரகோசமங்கை உட்பட பல திருத்தலங்களைத் தரிசித்தார். ஆங்காங்கே சமாதி நிலையில் கூடினார். மதுரை மீனாட்சி அம்மனும், திருப்பரங்குன்ற முருகனும் அவரை ஈர்த்தனர். இறுதியாக, அவர் வந்து சேர்ந்தது திருக்கூடல்மலை எனப்படும் காகபுசுண்டர் மலைக்கு. இந்த மலையில் உலவும் சித்தர்களோடு கலந்து பேசினார். அரூப நிலையில் இருக்கும் சித்தர்களும் மாயாண்டி சுவாமிகளுக்கு ஆசி வழங்கினர். காகபுசுண்டர் மலையைத் தன் நிரந்தர வாசஸ்தலமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவருக்குள் ஒரு அருள் வாக்கு எழுந்தது.
சௌமிய வருடம் பங்குனி மாதம் சஷ்டி தினத்தன்று இரவு ஒன்பது மணிக்கு விளாச்சேரி பெரியசாமி சிவாச்சார்யர், விராட்டிப்பத்து பொன்னையா சுவாமிகள் மற்றும் சில அடியார்களோடு திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்றார். தரிசனம் செய்தார். அன்றைய இரவுப் பொழுதை சரவணப் பொய்கையில் கழிக்க விரும்பினார். ஈசான்ய மூலையில் உள்ள படித்துறையில் தங்கி, விடிந்ததும் முருகப் பெருமானை தியானித்து குளத்தில் மூழ்கினார். மண் எடுத்தார். அதை ஒரு சிவலிங்கமாகப் பிடித்து, காகபுசுண்டர் மலையின் மேல் பக்கம் தான் தங்கும் குகையில் பிரதிஷ்டை செய்தார்.
காகபுசுண்டர் மலை அன்றைய தினத்தில் இருந்து மேலும் புனிதத்தைப் பெற்றது. மாயாண்டி சுவாமிகள் ஸித்து விளையாட்டுகள் துவங்கின.
தரிசனம் செய்ய வாருங்கள்!தலம்: திருப்பரங்குன்றம் காகபுசுண்டர் மலை எனும் திருக்கூடல்மலை.
சிறப்பு: கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி.
எங்கே இருக்கிறது?: மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை.
எப்படிப் போவது?: மதுரையில் அமைந்திருக்கும் பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து திருப்பரங்குன்றத்துக்குப் பேருந்து வசதி அடிக்கடி உண்டு. திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு, அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால், காகபுசுண்டர் மலை வந்து விடும்
சித்தர்களை அறிவோம்: மகா சித்தர்
கட்டிக்குளம் ஸ்ரீ சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்
காகபுசுண்டர் மலை (திருக்கூடல்மலை)
திருப்பரங்குன்றம், மதுரை......
மதுரைக்கு அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் ஒரு மகத்துவம் உண்டு. பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவராகவும், காலங்களைக் கடந்து வாழ்ந்து வந்தவருமான காகபுசுண்டரின் (காகபுஜண்டர் என்றும் சொல்லப்படுவதுண்டு) பெயரிலேயே இங்கு ஒரு மலை அமைந்துள்ளது. ஆம்! அந்த மலையை காகபுசுண்டர் மலை என்றும் புசுண்டர் மலை என்றும் ஆன்மிக அன்பர்கள் தொன்றுதொட்டு அழைத்து வருகிறார்கள். மதுரையின் பெயரைத் தாங்கி, திருக்கூடல்மலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 300 அடி உயரம் கொண்டது இந்த மலை.
இந்த காகபுசுண்டர் மலையில் அடிவாரத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதி திருக்கோயிலும், மலைக்குச் செல்லும் வழியில் மாயாண்டி சுவாமிகளின் சீடரான சோமப்பா சுவாமிகளின் திருச்சமாதியும் அமைந்துள்ளது. தவிர வேலம்மாள், இருளப்பக் கோனார், மூக்கையா சுவாமிகள் இப்படி சுமார் பத்துக்கும் மேற்பட்ட சமாதிகள் இந்த காகபுசுண்டர் மலைப் பகுதியில் அமைந்துள்ளன.
இந்த மலையின் புராணப் பெருமைகளை உணர்ந்த கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், இதைத் தன் தவப் பணிக்குத் தேர்ந்தெடுத்து இங்கே அமர்ந்தார். ‘காகபுசுண்டர் மலை, பழநிமலையைப் போன்றது’ என்றே மாயாண்டி சுவாமிகள் அடிக்கடி குறிப்பிடுவாராம். ‘குன்றக்குடியில் வெள்ளி ரதம் ஓடுவது போல் காகபுசுண்டர் மலையிலும் வெள்ளி ரதம் ஓடப் போகுது’ என்று சுவாமிகள் தன் காலத்தில் பக்தர்களிடம் அடிக்கடி கூறி வந்தாராம். சுவாமிகளின் திருவாக்கு மெய்யாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது அவரது பக்தர்களின் நம்பிக்கை. காகபுசுண்டர்மலையில் - என்னென்ன திருப்பணிகள் நடக்க வேண்டும் என்று மாயாண்டி சுவாமிகள் திட்டமிட்டாரோ, அவை அனைத்தும் இப்போது மெள்ள மெள்ளப் பூர்த்தி ஆகி வருகின்றன.
மாயாண்டி சுவாமிகள் ஜீவ சமாதி திருக்கோயிலையும், காகபுசுண்டர் மலையையும் தற்போது நிர்வகித்து வருகிறது ‘சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம்’. இதன் செயலாளராக இருந்து வருபவர் இரா. தட்சிணாமூர்த்தி. மாயாண்டி சுவாமிகளுடன் உடன் இருந்து அவர் இட்ட திருப்பணிகளை எல்லாம் செய்து முடித்த இருளப்பக் கோனாரின் கொள்ளுப் பேரன் இவர்.
மலைக்கு மேல் ஸ்ரீதண்டாயுதபாணி ஸ்வாமி ஆலயம் கல் திருப்பணியாக நடந்து வருகிறது. மலை மேல் நடந்து செல்வதற்குப் படிகள் அமைத்திருக்கிறோம். விரைவில் கும்பாபிஷேகம் காண இருக்கிறது இந்த தண்டபாணி திருக்கோயில். மலை ஏறும்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய ஸ்ரீநிவாசப் பெருமாள், ஆஞ்சநேயர் ஆகிய திருச்சந்நிதிகளைத் தரிசிக்கலாம். மலை உச்சியில் தனிச் சந்நிதியில் கோலாகலமாக வீற்றிருக்கிறார் ஸ்ரீதண்டபாணி. தவிர ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமீனாட்சி- சுந்தரேஸ்வரர், பள்ளிகொண்ட பெருமாள் ஆகியோருக்கும் இங்கே சந்நிதிகள் உண்டு. இதை எல்லாம் செய்வது நாங்கள்தான் என்றால், அது உண்மை அல்ல. சுவாமிகள் எங்களுடன் இருந்து ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றிக் கொள்கிறார் என்றே சொல்ல வேண்டும்” என்றார் அடக்கத்தோடு.
எங்கே இருக்கிறது காகபுசுண்டர் மலை?
சோமசுந்தரப் பெருமானும் அன்னை மீனாட்சியும் அருளும் மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை. திருப்பரங்குன்றத்துக்குள் வந்து விட்டால், மலை மேல் இருக்கும் ஸ்ரீதண்டபாணி பெருமான் திருக்கோயிலை எங்கிருந்து வேண்டுமானாலும், காண முடியும். தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் இருந்து சுமார் பத்து நிமிட நடை தூரம். காகபுசுண்டர் மலை உச்சியில் ஸ்ரீதண்டபாணியைத் தரிசிக்கச் சென்றால், அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்தில் பூஜைக்கான மணி ஓசை ஒலிப்பதைத் துல்லியமாகக் கேட்க முடிகிறது. ஆனந்தமான சூழல். ரம்மியமான காட்சிகள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் அனைத்துக் கோபுரங்களையும், காகபுசுண்டர் மலையின் உச்சியில் இருந்து தரிசிக்க முடியும்.
மதுரையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கிறது திருப்பாச்சேத்தி. இங்கிருந்து தென்புறம் சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கட்டிக்குளம். பல ஞானியர் இங்கே சமாதி கொண்டுள்ளனர். அந்தக் காலத்தில் - அதாவது போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் நடையாத்திரையாக ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களும் ஆன்மிக அன்பர்களும் தங்கிச் செல்வதற்கு திருமடங்கள் கட்டிக்குளத்தில் இருந்தன. உணவருந்தவும், ஓய்வெடுக்கவும் இந்தத் திருமடங்களை சாதுக்களும் யாத்ரீகர்களும் பயன்படுத்தி வந்தனர்.
கட்டிக்குளத்தில் அப்போது இருந்து வந்தவர் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் எனும் சித்த புருஷர். இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும், தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு இந்த சூட்டுக்கோல் அவரது சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும், அதன் பின் அவரது சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்த சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.
மாயாண்டி சுவாமிகளின் அவதா-ரத்துக்கு வருவோம். கட்டிக்குளத்தில் குப்பமுத்து வேளாளர் - கூத்தாயி அம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். மண்பாண்டம் செய்வது இவர்கள் தொழில். தவிர, உள்ளூரில் இருந்த ஐயனார் கோயிலில் பூசாரியாகவும் இருந்தார் குப்பமுத்து. சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் பக்தர்களாக இருந்தனர் இந்தத் தம்பதியர். அவ்வப்போது சுவாமிகளின் தரிசனம் பெற்று வந்தனர். ஒரு முறை ராமலிங்க சுவாமிகளிடம் திருவருட் பிரசாதம் பெற்ற பாக்கியத்தால், கூத்தாயி அம்மாளுக்கு காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரன்று (1858 ஜூலை) ஆண் குழந்தை பிறந்தது. அகிலத்தையே ஆளப் பிறந்த அந்த மகவுக்கு ‘மாயாண்டி’ எனப் பெயரிட்டனர். இளம் வயதிலேயே இறை ஞானம் கிடைக்கப் பெற்றது மாயாண்டிக்கு. பெற்றோரும் இதை உணரும் சம்பவம் ஒன்றும் விரைவிலேயே நடந்தது.
தான் பூஜை செய்யும் உள்ளூர் ஐயனார் கோயிலுக்கு சிறுவனான மாயாண்டியையும் கூட்டிச் செல்வது குப்பமுத்துவின் வழக்கம். அப்படி ஒரு நாள் கூட்டிச் சென்றபோது மகனை வெளிக் கூடத்தில் அமர்த்தி வைத்து விட்டு, ஐயனார் பூஜைக்காகக் கருவறைக்குள் சென்றார் குப்பமுத்து. ஐயனாரின் திருமந்திரங்களைச் சொல்லி அவருக்கு அபிஷேக ஆராதனைகளை முடித்து விட்டு வியர்வை சொட்ட வெளியே வந்த குப்பமுத்து அதிர்ந்தார். அவர் கண்ட காட்சி பதற வைத்தது.
குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில், “ஐயனாரப்பா... எம் மகனைக் காப்பாத்து” என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம். தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. ‘மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது’ என்பதை அப்போது உணர்ந்து கொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர்.
பள்ளிப் படிப்பு ஒரு பக்கம்; ஆன்மிகத் தேடல் மறுபக்கம் என இருந்தார் மாயாண்டி. தன் வீட்டில் இருந்த பரம்பரைச் சொத்தான வைத்தியச் சுவடிகளையும், சித்தர் நூல் தொகுதிகளையும் தூசி தட்டி எடுத்துப் படித்தார். வியந்தார். அவ்வப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று அதிகாலை பூஜையையும், அர்த்தஜாம பூஜையையும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டார் மாயாண்டி.
இந்தக் காலத்தில் பெற்றோரின் வற்புறுத்தலால், புளியங்குடியைச் சேர்ந்த மீனாட்சி எனும் உறவுக்காரப் பெண்மணி, இவருக்கு மனைவியாக வாய்த்தாள். இல்லற வாழ்க்கையில் ஒரு மகனும் மகளும் உண்டு. ஒரு முறை பழநி யாத்திரைக்குச் செல்லக் கையில் பணம் இல்லாததால், மனைவி அணிந்திருந்த தங்க ஆபரணங்களை விற்று, யாத்திரையை மேற்கொண்டார். மாயாண்டியின் ஆன்மிகத் தேடுதல்களுக்கு எந்தத் தடையும் போட்டதில்லை அவரது மனைவி. தவிர, தன் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களுக்கு அவ்வப்போது உணவளித்தும் மகிழ்ந்தார் மாயாண்டி.
மாயாண்டி சுவாமிகளை இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பி இருக்கிறான் என்பது, அவனுக்கு மட்டும்தானே தெரியும்?! இல்லறத்திலேயே இவன் இருந்து விட்டால், எதிர்கால சமுதாயத்துக்கு என்ன பயனை செய்து விட முடியும்? மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டான். விளைவு - இல்லறம் இனிக்கவில்லை. தவத்திலும் யோகத்திலும் காலத்தை ஓட்டினார். சிட்டாய்ப் பறக்க விரும்பினார். தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார். அதற்கு முன் தீட்சை பெற வேண்டுமே! உபதேசம் செய்வதற்கு ஒரு குரு வேண்டுமே! இந்த வேளையில்தான் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள் என்பவர், கட்டிக்குளம் வந்தார்.
அவரைச் சந்தித்துத் தன்னை சீடனாக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். செல்லப்ப சுவாமிகளும் மாயாண்டியை அரவணைத்து அவருக்கு உபதேசம் செய்து வைத்தார். துறவறத்துக்கான திறவுகோல் கிடைத்தாகி விட்டது. ஆனால், இல்லறத்தில் இருக்கும் மனைவி மற்றும் பெற்றோர் ஆகியோர் இந்த முடிவுக்கு உடன்படுவார்களா? இல்லையே! துறவறம் ஏற்று வீட்டை விட்டுப் புறப்படும் முடிவில் இருந்த மாயாண்டியை எவ்வளவோ தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள் பெற்றோரும், மனைவியும். ஆனால், மாயாண்டி சுவாமிகள் மசியவில்லை. தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து, கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார். சித்தமெல்லாம் சிவ மயம்!
கன்யாகுமரி, கோட்டாறு, சுசீந்திரம், பொதியமலை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், உத்தரகோசமங்கை உட்பட பல திருத்தலங்களைத் தரிசித்தார். ஆங்காங்கே சமாதி நிலையில் கூடினார். மதுரை மீனாட்சி அம்மனும், திருப்பரங்குன்ற முருகனும் அவரை ஈர்த்தனர். இறுதியாக, அவர் வந்து சேர்ந்தது திருக்கூடல்மலை எனப்படும் காகபுசுண்டர் மலைக்கு. இந்த மலையில் உலவும் சித்தர்களோடு கலந்து பேசினார். அரூப நிலையில் இருக்கும் சித்தர்களும் மாயாண்டி சுவாமிகளுக்கு ஆசி வழங்கினர். காகபுசுண்டர் மலையைத் தன் நிரந்தர வாசஸ்தலமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவருக்குள் ஒரு அருள் வாக்கு எழுந்தது.
சௌமிய வருடம் பங்குனி மாதம் சஷ்டி தினத்தன்று இரவு ஒன்பது மணிக்கு விளாச்சேரி பெரியசாமி சிவாச்சார்யர், விராட்டிப்பத்து பொன்னையா சுவாமிகள் மற்றும் சில அடியார்களோடு திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்றார். தரிசனம் செய்தார். அன்றைய இரவுப் பொழுதை சரவணப் பொய்கையில் கழிக்க விரும்பினார். ஈசான்ய மூலையில் உள்ள படித்துறையில் தங்கி, விடிந்ததும் முருகப் பெருமானை தியானித்து குளத்தில் மூழ்கினார். மண் எடுத்தார். அதை ஒரு சிவலிங்கமாகப் பிடித்து, காகபுசுண்டர் மலையின் மேல் பக்கம் தான் தங்கும் குகையில் பிரதிஷ்டை செய்தார்.
காகபுசுண்டர் மலை அன்றைய தினத்தில் இருந்து மேலும் புனிதத்தைப் பெற்றது. மாயாண்டி சுவாமிகள் ஸித்து விளையாட்டுகள் துவங்கின.
தரிசனம் செய்ய வாருங்கள்!தலம்: திருப்பரங்குன்றம் காகபுசுண்டர் மலை எனும் திருக்கூடல்மலை.
சிறப்பு: கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி.
எங்கே இருக்கிறது?: மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை.
எப்படிப் போவது?: மதுரையில் அமைந்திருக்கும் பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து திருப்பரங்குன்றத்துக்குப் பேருந்து வசதி அடிக்கடி உண்டு. திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு, அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால், காகபுசுண்டர் மலை வந்து விடும்
வாழ்த்துவோம் ! வணங்குவோம்!!
சுந்தரபாணடியம் பிடிஒ கருப்பசாமி-பார்வதி தம்பதியரின் சதாபிசேக விழா
விருதுநகர் மாவட்டம் -ஸ்ரீவில்லிபத்தூர் வட்டம் சுந்தரபாண்டியம் மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்களில். சுந்தரபாண்டியம் சாலியர் மூக வம்சா வழியில் முதல் பட்டதாரி ஆகி தான் பெற்ற கல்வியின் பயனை கற்றறிவு இல்லாதவ்ர்கள் எல்லோரும் பய்ன்பட வேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டு. தான் பெற்ற வறுமை. க்ஸ்டங்களை வரும் சந்ததியர்களும் வம்சாவழியினிர்களும் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில் தன்க்கு கிைட்த்த வாய்ப்பு தனது திறமை. பொருள் உதவி கள் வழங்கி, இன்றுவரை தன்னால் இயன்ற அளவில் முடியாது என்று மறுக்காத நிலையில், ஆடம்பரமற்ற உதவிகள் செய்து, அதனால் முன்னேறிய குடும்பங்களை கண்டு தானும் மகிந்து, இன்று 80 அகவை கடந்து சதாபிஷேக விழா காணும் " சுந்தரபாண்டியம் பட்டியாவீட்டு பிடிஒ கருப்பசாமி " என்ற புகழோடு சுந்தரபாண்டியத்திற்கு பெருமை சேர்த்து, ஏழுர் சாலியர் குலத்தில் ஆண்டிபட்டி என்றால் சடையாண்டி, ஸ்ரீவி என்றால் தரகனார் மற்றும் பிஏ கோவிநத்ன், புனல்வேலி என்றால் கிருஷ்ணமூப்பர்,சத்திரபட்டி என்றால் பண்ணையார் என்பது போல் சுந்தரபாண்டியம் என்றால் பிடிஒ கருப்பசாமி என்ற அளவிற்கு சுந்தரபாண்டியத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த இம்மண்ணின் மைந்தர் உயர்திரு க,கருப்பசாமி - உமையாள்பார்வதி தம்பதியரின் 80 அகவை தாண்டி சதாபிஷே விஷா காணும் இம்மண்ணின் மைந்தரிடம் 3,6,2013 அன்று சுந்தரபாண்டியம் சாலியர் சமுதாய திருமண மண்டபத்தில் நடைபெறும் சதாபிஷேக விழாவில் நாமும் கலந்து அன்னாரை வாழ்த்தி , வணங்கி ஆசி பெறுவோம்,
இன்று 80 அகவை தாண்டி சதாபிஷேகம் காணும் மதிப்பிற்குரிய பெரியவர் திரு,பிடிஒ கருப்பசாமி அவர்களின் நற்குண்ங்களை இந்நாளில் நினைவுகொள்வது அன்னாரின் பெருமை சேர்ப்பதாகும், இளம் வயதில் மிகவும் ஏழை-வறுமை படிப்பறிவற்ற குடும்பத்தில் தோன்றியதால் தான் பெற்ற வறுமை, படிப்பறிவின்மை என்பது தங்களின் சந்ததியர்களுக்கு அறவே இருக்கக் கூடாது என அன்றே முழு முயற்சி,தன்னம்பிக்கை விடாமுயற்சி போன்ற எண்ணங்களின் சிந்தனையுடன் பேராடி சுந்தரபாண்டியம் நெசவாளர் - சாலியர் மக்களின் முத்லபட்டதாரியாகி,அரசுப்பணியில் சேர்ந்து, வெற்றி கண்டு தன் வறுமைக்கும், படிப்பறிவற்ற தனது குடும்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார், இளம் பருவத்தில் தொட்கக கல்வி கூட பள்ளி மூலம் தொடர முடியாத சூழ்நிலையில் தனியார் ஆசிரியர் ஒருவர் மூலம் இஎஸ்எல்சி என்ற 8வகுப்பு அரசு தேர்வு எழுதி அதன் பின் ஸ்ரீவி, சிஎம்எஸ் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பயின்று இன்டர் மிடிேய்ட மதுரை தியாகராஜா கல்லூரியில பயின்று பின் அங்கேயே பிஏ பட்டம் பெற்றார்,இவ்வாறு பள்ளி வாழ்க்கை தொடர இதுதான் வழி என வழிகாட்டல் வழியின்றி தானே தனக் கென்று வழிசெய்து தாய் தந்தையரின் குறைந்த வருவாய் பொருளாதார நிலையில் படிப்பதற்கென்று சரியான ஒளிவிளக்கோ இடவசதியோ இல்லாத சூழலில் அன்றைய வசதி கொண்ட தெறகுகீழ்த்தெருவிலுள்ள அழகு மூப்பனார் அவர்களின் வீட்டு மேல் மாடி வரண்டாவில் சிறிய மண்ணெண்ணை சிமினி விளக்குடன் தனது படிப்பு காலத்தை கழித்து வெற்றி கண்டார், அன்னார் கல்லூரி வாழ்க்கையில் இருந்த போதும் எளிய உடை எல்லோரிடமும் அன்பாக பழகும் தன்மை தனது வயதிற்கு குறைந்தவர்கள் பள்ளி படிப்பை முடிகக கையாளும - வழிகாட்டல் முயற்சி என்பது அன்றிலிருந்து இன்றுவரை மாறா தன்மை கொண்டது,
அன்னாரின் உயர்ந்த பண்புகளை சீரிய நல்வழிகளையும் பெற அவர் குருவாகவும், நான் சிஷ்யனாகவும் அடைய இரண்டு வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது,அதை இன்றளவும் என்னால் மறக்கமுடியாது. அதில் ஒன்று நான் சுந்தரபாணடியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 5வது படிவம் (அதாவது 10ம்வகுப்பு)படிக்கும் போது எங்கள் பள்ளியில் எஙக்ள வகுப்பிற்கு ஆங்கிலப்பாடம் நடத்தும் துணை ஆசிரியராக பணியாற்றிய போது, அவரிடம் பயிலும் மாணவனாக இருந்த பெருமை எனக்கு சேரும், அன்னார் அன்றைய நாளில் பாடம் நடத்திய விதம் எல்லோரையும் ஆங்கிலப் பாடத்தின் மேல் கொண்ட பயம் விலகியது, 2வது முறையாக அன்னார் பஞ்சாயத்து யுனியன் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய காலத்தில் அன்னார் காரியபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகராக இருந்த போது நான் அங்கு வேளாண்மை பண்டகசாலையில் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றிய காலத்தில் அன்னரின் நிர்வாக கட்டுபாட்டில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து, அன்னார் காரியபட்டியில் பிடிஒ வாக பணியாற்றிய போது அன்னார் அருப்புககோட்டை கோட்டத்திற்கே கோட்ட வளர்ச்சி அலுவலராக நியமனம் செய்யப்பட்டார், பின் நானும் அக்கோட்டத்தில் அருப்புக்கோட்டையில் உதவி விதை அலுவலராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்து,அன்னார் உயர் அலுவலராக பணியாற்றிய போது சக பணியாளர்களிடம் தன் க்டடுப்பாட்டில் உள்ள பணியாள்ர்களிடமும் எப்போதும் அன்புடனும் அரவணைப்புபடனும் நேர்மை, காந்திய கொள்கையான சத்திய சமதர்ம கடமை உணர்வுடன் பணியாற்றிய சிறப்பு அன்னாரின் புகழுக்கு பெருமை சேர்ததது, அவர் சென்று பணியாற்றி ய இடமெல்லாம் சீரும் சிறப்பும் பெற்றவர்
" ஊருனி நீர்நிறைத் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு,
என்ற வள்ளுவர் வாக்கினுக்கிணங்க அன்னார் தான் பெற்ற கல்வி பயன் சுந்தரபாண்டியம் சாலிய வம்ச வழியினரும் அடைய வேண்டுெம்ன்ற தனியாத தாகத்தால் எங்கள் தெருவிலுள்ள இளம் வயதினரை அவர் கல்விக்காக வழிகாட்டிய நிகழ்வுகள் எங்களால் மற்கக முடியாது, அவரவர் வசதிக்கேற்ப என்ன படிப்பு எங்கு படிக்கலாம் என்ற வழிகாட்டும் தூண்டிதல் அன்னாருக்கேஉயரிய பண்பாக அமைந்தது, அதும்ட்டுமன்றி தன்னால் முடிந்த பொருள் உதவிகளும்செய்து அன்பு காட்டியுள்ளார், எஙக்கள் பகுதியில் வாசகசாலையுடன் இணைந்த பொது மண்டபம் கட்ட ஆலோசனை பெற அன்னாரிடம் சென்ற போது அன்னார் குடும்பமே தானே முன்வந்து மண்டபத்திற்காக பெரும் தொகை வழங்கி அன்னாரின் தாய்தந்தையரின் நினைவாக மண்டபம் கட்ட உதவி செய்தது அவருடைய ஈகை குணத்தை தெள்ளத தெளிவாக காட்டும்,
அது ம்டடுமன்றி அன்னார் இன்று வரை பணியாற்றும் கலசலிங்கம் பல்கலையில் உயர் கல்விக்காக செல்லும் ஏழை எளிய விபரமற்ற மாணவர்களுக்கு உகந்த துறையினை எடுத்துக் கூறி படிப்பதற்கும் கல்வி வள்ளல் அவர்களிடம் அறிமுகப்படுத்தியும்,குறைந்த நன்கொடையில் சேர்த்து அவர்களை சிறந்த பட்டதாரிகளாக ஆக்கிய பெருமை அவருக்கேசேரும், மேலும் உடலால், உழைப்பால் இயலாதருக்கு வயதான முதியோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை இன்றளவும் செய்து வருகிறார், நெசவு தொழில் நலிவடைந்த போது கல்வி தந்தையிடம் நேரிடையாக கூறி பல்கலை கல்லூரிகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளார்
அய்யா அவர்கள் சிறந்த பகுத்தறிவு சிந்தனையாளர் எழுத்தாசியர் தன்னை கொண்டவர், அன்னார் தன் இளமைப்பருவத்திலேயே எழுத்தாளாராக இருந்தவர் தன்னுடைய மைத்துனர் ஆா,வி,பி, கரிகாலன் அவர்கள் நடத்திய திரைமுழக்கம் என்ற திங்கள் இதழில் எழுதிய பெருமை படைத்தவர், அன்னார் இன்றளவும் இதனை தொடர்ந்து வருகிறார் நம் கல்வி வள்ளலின் சாலியர் குரலில் இன்றளவும் அன்னாரின் சிற்ந்த க்டடுரைகளை காணலாம்,அப்பணி இனறும் தொடர்கிறது, அதும்ட்டுமன்றி பெரியாரின் முற்போக்கு சிந்தனையாளர், சுயமரியாதை சிந்தனையில் மிகுந்த நாட்டம் உள்ளவர் தன்னுடைய திருமணத்தை அக்காலத்திலேயே ஆன்மீக முறைப்படி நடப்பதை தவிர்த்து புரோகிதர்,ஒதுவார்கள் இல்லாமல் கட்டிமேளம் சடங்கு சாஸ்திர முறைகள் இல்லாமல் பேராசிரியர் தலைமையில்,பெரியோர்கள் முன்னிலையில் மேடை நிகழ்ச்சியாக மணமக்கள் மாலை மாற்றும் முறையில் திருமணத்தை நடத்தி சீர்திருத்த முறை கல்யாணமாக ஆக்கி சீர்திருத்த சிந்தனையாளர், முற்போக்கு கருத்தில் தீவிர சிந்தனை இருந்தாலும் ஊர் நடைமுறை பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப தெய்வீக காரியங்களுக்கும் மரியாதை கொடுப்பவர், கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்க்ல் தெய்வீக நிகழ்வுகளில் ஊரார் உறறார் மனம் சுழியாது அதற்கேற்ப பங்கு கொள்ளும் தன்மை கொண்டவர்,
பொது வாழ்வு மற்றுமன்றி தனது சொந்த வாழ்விலும் தனது வாரிசுகளை வளமுடன் வாழச் செய்தவர்,
"தந்தை மகற்காட்டும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச செயல்" என்ற வள்ளுவன் வாக்கிணங்க தனது புதல்வர்கள் புதல்விகளை நன் முறையில் ஏனையோருக்கு எடுத்துக்காட்டாக விளங்கச் செய்தவர்,
அதற்கொப்ப அன்னர் புதல்வ மக்களும்
" மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவண்தந்தை
என்றோற்றான் கொல் " என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க அன்னாரின் மக்களும் இன்று கல்வி தொழில் பதவிகளில் உயர்ந்து குன்றின்மேல்இட்ட தீபமாக திகழ்கின்றனர், எனவே அன்னார் தற்போதும் எந்த கவலையும் இன்றி சேவை மனபான்மையில பணியுடன் அமாந்த பணியை இன்னும் செய்து கொண்டு சிற்ப்புடன் வாழ்ந்து வருகிறார், அன்னார் இன்னும் நுாறு அகவை தாண்டி நூற்றாண்டு விழா கொண்டாடும் வாய்ப்பினை அளிக்க ஆண்டவனை வேண்டி நாமும் அன்னாரிடம் ஆசிபெற்று நாமும் சிறக்க, அவரும் சிறக்க ஆசி பெறுவோம்,
இவண்: வை, பூமாலை சுந்தரபாண்டியம்
Kasiga in Zee school at Hosur Dancing entertainment of annul day of the school
என்னை பற்றி
நான் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துர் வட்டத்திலுள்ள சுந்தரபாண்டியம் கிரமத்தை செர்ந்தவன் நான் ஒரு ஓய்வு வடைந்த அரசு பணியாளர். நான் எங்கள் சமுதாய மகாராஜா பள்ளியின் செயலாளராக பணிபுரிந்துள்ளேன்.
நான் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துர் வட்டத்திலுள்ள சுந்தரபாண்டியம் கிரமத்தை செர்ந்தவன் நான் ஒரு ஓய்வு வடைந்த அரசு பணியாளர். நான் எங்கள் சமுதாய மகாராஜா பள்ளியின் செயலாளராக பணிபுரிந்துள்ளேன்.
Myself Slideshow: Vpoompalani’s trip to Coimbatore, Tamil Nadu, India was created by TripAdvisor. See another Coimbatore slideshow. Create a free slideshow with music from your travel photos. |
Powered by Calendar Labs May 6, 2012 Slideshow: Vpoompalani’s trip from Coimbatore, Tamil Nadu, India to srivilliputtur (near Loutolim, Goa) was created by TripAdvisor. See another Loutolim slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker. |
Anba sivam
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே,
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே,
Om Namsiyaya
பொன்னோர் மேனியனே புலித்தோலை அரைக் கசைந்து
மின்னார் செஞ்சடைமேல் மிளர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னை உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
மின்னார் செஞ்சடைமேல் மிளர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னை உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
Om Namsiyaya
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே,
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே,
ஆலயம்
தை
Alayam
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை
ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபடும் போது, முதலில் நாம் இருகரங்களையும் தலைமேல் குவித்து கோபுரங்களை தரிசிக்க வேண்டும். உள்ளே சென்று கணங்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்கி, காரிய வெற்றிக்கு கை கொடுத்து உதவும் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். அதன் பிறகு நந்தி தேவரிடம் சென்று அவரை வணங்கி சிவபெருமானையும் உமா தேவியையும் வணங்க அனுமதி பெற வேண்டும், உமா மகேஷ்வரை வழிபட்டு பிரகாரம் சுற்றி வருவது நல்லது,
அப்படி பிரகாரஙகள் சுற்று வருவர். சிலர் ஒன்று முதல் 9 தடவைகள் கூட சுற்றுவது உண்டு, சுற்றும் போது வலங்கொண்டு தான் சுற்ற வேண்டும். மேலும் கொடி மரம் அருகில் சென்று அதன் வலது பக்கத்தில் விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டும் பலிபீடத்தின் அருகில் நின்று நம்மிடம் உள்ள ஆறு வகையான தீய குணங்களை பலிகொடுத்ததாக உறுதி செய்து கொள்ள வேண்டும், அவை காம,குரோத,லோப,மோக,மத, மாத்சரியம் என்பன ஆகும்.
விநாயகருக்கு முன் தேங்காய் உடைப்பதன் மூலம் நமது சிரமங்கள் எல்லாம் சிதறுகாய் உடைவதைப் போல் விநாயகரின் அருளால் துன்பஙகள் அகன்று விருப்பங்கள் நிறைவேறும். இறைவனை வழிபடுவதைப் போல் மூலஸ்தான மூர்த்திகளையும் வணங்க வேண்டும், தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும், பின் முருகப்பெருமானையும் அவரது துணைவியார்களையும் பின் நடராஜர் உமையாள் - சிவகாமி- வழிபட வேண்டும், துயரங்களை போக்கி தெம்பும் தைரியமும் அளிப்பவளான அன்னை துர்க்கா தேவியையும், பின் தடைகளை போக்கும் பைரவரையும், சண்டிகேஸ்வரையும், பின் நவக்கிரங்களையும் அதற்குரிய காயத்திரி மந்திரத்தை கூறி வழிபடலாம், முடிந்த வரை இறை நாமத்தை உச்சரிப்பதே சாலச் சிறந்தது . அதே போல் தட்சணாமூர்த்தியை - அதாவது குருவை நேராக நின்றும் சனி பகவானை சாய்வாக நின்றும் கும்பிடவேண்டும் என்று முன்னோர்களின் தெய்வ வாக்கு, கல்வி செல்வம் வழங்கும் சரஸ்வதி தேவியையும், செல்வம் பொழிய லட்சுமி தேவியையும் தேவிமந்திரங்களை கூறி வழிபடவேண்டும், ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டினால் அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும் என்பது ஆன்றோரின் அருள்வாக்கு, ஆலயம் தொழிவது சாலவும் நன்று என்ற அவ்வையின் அருள் வாக்கு,
அப்படி பிரகாரஙகள் சுற்று வருவர். சிலர் ஒன்று முதல் 9 தடவைகள் கூட சுற்றுவது உண்டு, சுற்றும் போது வலங்கொண்டு தான் சுற்ற வேண்டும். மேலும் கொடி மரம் அருகில் சென்று அதன் வலது பக்கத்தில் விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டும் பலிபீடத்தின் அருகில் நின்று நம்மிடம் உள்ள ஆறு வகையான தீய குணங்களை பலிகொடுத்ததாக உறுதி செய்து கொள்ள வேண்டும், அவை காம,குரோத,லோப,மோக,மத, மாத்சரியம் என்பன ஆகும்.
விநாயகருக்கு முன் தேங்காய் உடைப்பதன் மூலம் நமது சிரமங்கள் எல்லாம் சிதறுகாய் உடைவதைப் போல் விநாயகரின் அருளால் துன்பஙகள் அகன்று விருப்பங்கள் நிறைவேறும். இறைவனை வழிபடுவதைப் போல் மூலஸ்தான மூர்த்திகளையும் வணங்க வேண்டும், தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும், பின் முருகப்பெருமானையும் அவரது துணைவியார்களையும் பின் நடராஜர் உமையாள் - சிவகாமி- வழிபட வேண்டும், துயரங்களை போக்கி தெம்பும் தைரியமும் அளிப்பவளான அன்னை துர்க்கா தேவியையும், பின் தடைகளை போக்கும் பைரவரையும், சண்டிகேஸ்வரையும், பின் நவக்கிரங்களையும் அதற்குரிய காயத்திரி மந்திரத்தை கூறி வழிபடலாம், முடிந்த வரை இறை நாமத்தை உச்சரிப்பதே சாலச் சிறந்தது . அதே போல் தட்சணாமூர்த்தியை - அதாவது குருவை நேராக நின்றும் சனி பகவானை சாய்வாக நின்றும் கும்பிடவேண்டும் என்று முன்னோர்களின் தெய்வ வாக்கு, கல்வி செல்வம் வழங்கும் சரஸ்வதி தேவியையும், செல்வம் பொழிய லட்சுமி தேவியையும் தேவிமந்திரங்களை கூறி வழிபடவேண்டும், ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டினால் அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும் என்பது ஆன்றோரின் அருள்வாக்கு, ஆலயம் தொழிவது சாலவும் நன்று என்ற அவ்வையின் அருள் வாக்கு,
Om Namsivayam
விநாயகர் அருள் பெற
இன்பமாயது அறாது இடை ஓங்கவும்
துன்பமாவது தூரத்துள் நீங்கவும்
அன்பின் ஈன்ற ஓர் ஆனையைப் போற்றுவாம்
- சாந்தலிங்கப் பெருமாள்
குருவருள் பெற
எல்லாம் உடையான் குருவாகி ஈங்குஎமது
அல்லால் அறுத்தான் என்றுஉந்தீபற
அவன் தாள் தொழுவாம் என்று உந்தீபற
- சாந்தலிங்கப் பெருமாள்
சிவன் அருள் பெற
பூழியர் கோன் வெய்பொழித்த புகலியர் கோள் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி
அம்மையின் அருள் பெற
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய் வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குடிலாள் அபிராமி கடைக்கண்களே!
அபிராமிப்பட்டர் அபிராமி அந்தாதி
கல்வியும் ஞானமும் பெற
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நான் அறிவுஇச்சையும்
நமச்சிவாயவே நாதவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே!
தேவாரம்
நோய் தீர்ந்தருள
பேரா யிரம்பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாரா செல்வம் வருவிப் பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்ள் தீயெழுத்தின் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே!
தேவாரம்
குறை நீங்கி செல்வம் பெருக,
பொன்னும் மெய்பொருளுந் தருவானைப்
போகமுந் திருவும் புணர்ப்பானைப்
பின்னை யென்பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாந் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையனென் றறியொண்ணா
எம்மானை யெளிவந்தபிரானை
அன்னம் வைக்கும் வயற்பழனத்
தணியாரூரானை மறக்கலுமாமே,
சுந்தரர் தேவராம்
நல்ல மணவாழ்க்கை அமைய
சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள் உள்மெலிவே
சம்பந்தர் தேவாரம்
குழந்தை செல்வம் பெற
பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளநிறைவு
ஆயினவே வரம் பெறுவர் ஐயற வேண்டா ஒன்றும்
வேயன தோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய் வினையார் அவர் தம்மைத்தோயாவாம் தீ வினையே
சம்பந்தர் தேவாரம்
நவகோள் நன்மையே நல்க
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல்
அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனிபாம் புஇரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே!
சம்பந்தர் தேவாரம்
வழக்கு பகை வெல்ல
வளைந்து வில்லு விளைந்தது பூசல்
உளைத்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வென்தவா றுஉந்தீபற
தேவாரம்
எல்லாம் சிவன் செயல்
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இசைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை
குன்றாத உணர்வுடையார் குணமிக்கார் தொண்டராம் குணத்தாரே!
சேக்கிழார்
திருச்சிற்றம்பலம்
பக்தி :-
பக்தி என்பது உறவல்லாத ஒன்றின் மேல் செலுத்தும் மரியாதையுடன் அன்புடன் செலுத்தும் பாச உணர்வே பக்தி , அன்பின் மிகுதியே பக்தி அன்பின் வழியது பக்தி அன்பின் வழியிலே ஆண்டவனை ஆட்கொள்ளுவது பக்தி , எனவே தாயுமானவரும் அன்பே சிவம் என்கிறார் பக்தியின் உச்ச நிலையில் ஆசை மோகத்தை பற்றற்று விடுதல் பக்தியின் சிறப்பு,ஆசைகள் மூலம் பாசம் பக்தியை பெற்று வேண்டற்ற ஆசைகளை விட்டோலிப்பதே பக்தியின் உச்சம், பக்தியின் உச்சத்திலே ஒருவன் நிம்மதி யடைகிறான். இதன் பொருட்டே வான்புகழ் வள்ளுவரும்
" யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
இதன் பொருள்: எந்த பொருளிலிருந்து பற்று நீங்கியவான இருக்கிறானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை, என்கிறார். மேலும் இன்னொரு குறளில்
" பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்ற விடற்கு"
இதன் பொருள் : பற்றில்லாதவனாகிய கடவுளை பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். உள்ள பற்றுக்களை விட்டோழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும். என்கிறார்,
அன்பின் வழியதே பக்தி . பக்தியே - அன்பு - அன்பே - சிவம். இறைவனிடம் கொள்ளும் அன்பே பற்றற்ற நிலையை உருவாக்கும் எனவே ஞானிகளும் யோகிகளும் அத்தனையும் பற்றற்ற நிலையிலேயே இறைவனிடம் முக்தி பெற்றுள்ளது நம் வரலாறு கூறும் பக்தி நேறியாகும்,பக்தி மூலம் தான் அன்பு பெருக்கெடுக்கிறது, எனவே வள்ளாளார் பெருமான் அன்பே சிவம் என்கிறார். பக்தியை அடிப்படையாக கொண்டு இறைவனை அடைய முயற்சிக்கும் செயல்பாடுகளே தியானம், யோகம் போற்றிபாடுதல் மந்திரங்கள் கொண்டு செயல்படும் முறைகளும் வழிபாடு முறையில் அடங்கும், இதில் தியானம் - தியானத்தின் மூலம் மனிதன் தன் மனதை ஒருநிலைப்படுத்தி மனத்தினை இறைவான்பால் செலுத்தி அவனுடைய புகழை இன்னிசையால் பாடி அழுவது பக்தியின் உச்சகட்டமே, இறைவன்பால் அன்பு கொள்ள பக்தி, தியானம், வழிபாடு, என்பவற்றில் தியானமும் முக்கிய அம்சமாக உள்ளது, யோகி பரமகம்சரும், விவேகானந்தரும், அன்னை சாரதா தேவியும் தியானத்தின் மூலம் இறைவனை நேசித்து இறைவான்பால் அன்புசெலுத்தியது யாவரும் அறிந்ததே. தியானத்திலிருந்து வந்ததுதான் யோகா, யோகா மூலம் மனதை ஒருநிலைப்படுத்தவும், உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சியாகவும் கையாளப்படுகிறது, ஆன்மீகத்திற்கு ஆத்ம யோக தியானத்திற்கு அடுத்து தானமும் இறைவழிபாட்டிற்கு முக்கியமாக அமைகிறது, அன்பின் வழியேதே தான தர்மமும் தர்மத்தின் வழியே அன்பும் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் வந்ததுதான் 63 நாயன்மார்களின் சரித்திரம், இந்த சிவத் தொண்டர்கள் அனைவரும் சிவத் தொண்டோடு அடியார்களுக்கு அன்பு செலுத்துவதிலும் அடியார்களுக்கு வேண்டியதான தர்மங்கள் செய்வதிலும் தங்களுடைய உயிர் பொருள் ஆவி மற்றும் தனது வாரிசுகளின் உயிரையும் கொடுக்க தயங்காது சிவத்தொண்டு செய்துவந்தனர், இதன் மூலம் அன்பு தர்மம் நன்கு தெளிவாகிறது, தன்னுயிர் ஈந்து பிற உயிர் பேணுதல் சிவ தத்துவம் வலிமையாக உணர்த்துகிறது,இந்த தானம் தான் இன்றைக்கும் மனித நேயமாக மாறிவளர்ந்து வருகிறது,இதன் அடிப்படையில்தான் கண்தானம், குருதி தானம், பூமிதானம் மற்றும் இன்றைய மதிய உணவு திட்டம் இலவச அரிசி திட்டம் வீட்டு மனை திட்டம் எல்லாம் மனித நேச உணர்வுகளே, எனவே பக்திக்கு தான தர்மம் தியானம் யோக எல்லாமே அடிப்படையாக உள்ளது,
வழிபாடு:- நம் ஆன்றோர் மனிதனின் உணர்வுகளை நான்கு வகையாக பிரித்துள்ளனர், அவை 1. தூக்கம் 2. இச்சை உணர்வு 3. பசி உணர்வு 4. அச்ச உணர்வு, இவைகளில் முன் மூன்று உணர்வுகளின் போது இறைவன் எண்ணம் வருவதில்லை. 4வது ஆகிய அச்ச உணர்வு ஏற்படும் போது தான் இறைவனின் சிந்தனையும் வழிபாடும் உண்டாகிறது.வழிபாடு என்பது அச்ச உணர்வில் ஏற்படுகிறது. சமயக்குறவர்களில் ஒருவரான நாவுக்கரசரும் தனது தீராத வயிற்று வலி (சூலை நோய்) காரணமாக எம்பெருமானிடம் தனது வலியை நீக்க வேண்டி அழுது வேண்டுவதோடு எவ்வாறேல்லாம் வழிபாடு செய்ய வேண்டும் என்பதையும் பாடலோடு கூறுகிறார். எனவே வழிபாடு என்பது அச்ச உணர்வில் ஏற்படுகிறது, கடவுள் வழிபாடு என்பது பற்றற்ற நிலையினைக் காண ஒரு பயிற்சி முறை, உண்மையான வழிபாடு என்பது சடங்குகள் மட்டுமன்று, கடவுள் நெறியில் தம்மை வழிப்படுத்திக் கொள்ளுதல் என்பதாகும். அதாவது குற்றங்களினின்றும் விலகி நிறை பெற முயற்சி செய்தல்; துன்பத்திற்குரிய காரணத்திலிருந்து விலகி இன்பத்தின் களங்களை அடைதல்; ஆகியன கடவுள் வழிபாட்டின் உயிர்க் கொள்கைகள், இதை நாம் எளிதில் பெற இயலாது, இவற்றைப் பெறுவதற்கு நாம் செய்யும் முயற்சிகளே வழிபாட்டுச் சடங்குகள், பிராத்தனை அல்லது வழிபாடு என்பது இறைவனை மகிழ்விப்பதன்று, நமது வேண்டுதலை வேண்டி இறைவனிடம் முறையிடுதல் வேண்டும். உயிர்கள் தம் குறைகளை - குற்றங்களை அறிந்து அவற்றினின்றும் விடுதலை பெற நிறைநலம் பெற எண்ணி எண்ணி அழுவதே வழி பாடு " எண்ணத்தின் வழியே மனிதன் வாழ்வு" என்று உளநூல் தத்துவமும் உடன்படுகிறது, மாணிக்கவாசகர் உயிரின் குறை நிலையினையும், கடவுளின் நிறை நிலையினையும் ஒப்பு நோக்கிக் சிந்தனை செய்யத் தூண்டுகின்றார், குற்றங்களினின்று நீங்கி நிறை நலம் பெற வழி நடத்துகின்றார். மகாகவி டென்னிசனும் " பரம்பொருளை நோக்கி உயிர்கள் அழும் அழுகையே வழிபாடு" என்கிறார், ஆக வழிபாட்டால் உயிர்கள் குற்றங்களினின்று விடுதலை பெறுகின்றன; பகைமை அகல்கிறது. அன்பு சூழ்கிறது, அவ்வழி மனம் குளிர்கிறது, அதனால் நாமும் மழை வேண்டி வழிபாடு செய்யும்போது, வாழிபாட்டின் மூலம் காற்று மண்டலம் குளிர்ச்சி அடைகிறது, வான் புயலை நீர்த்திவலைளாக மாற்றும் குளிர்ந்த காற்றுக் கிடைக்கிறது, மழை பொழிகிறது,இதுவே தத்துவம் ஆகவே, வழிபாடு என்பது உயிரை வளர்க்கும் நெறி உயிரைத் தூய்மைப்படுத்தும் நெறி. மேலும் திருநாவுக்கரசர் இறைவனின் வழிபாட்டு முறைகளையும் தன் பாடல்களோடும் தன் துன்பங்களை கூறும் முறையிலேயே வழிபாட்டு முறைகளையும் விளக்கி கூறுகிறார்,
" சலம்பூ வோடு தூபம் மறந்தறியேன், தமிழோசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன், உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யில் பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே!
இப்பாடலில் சலம்பூ வோடு ஒற்iw தூபம் ஏற்றுதல் வாழ்த்தி பாடுதல் என்பதனையும், மற்றும்ஒரு பாடல் மூலம் தூய காவிரி நன்னீர் கெர்ண்டு நன்னீராட்டல் குங்குமம் மற்றும் நறுமண பொருட்கள் ஏத்துதல், தோத்திரங்கள் பாடுதல் நறுமண மாலைகள் சாற்றுதல் போன்றவைகளை செய்யத்தவறி விட்டேன் என்று வழிபாட்டு முறைகளையும் கூறுகின்றார்,
_இறைவழிபாடு> வள்ளலாரின் புகழ் பெற்ற பாடல்கள்!
_
வள்ளலாரின் புகழ் பெற்ற பாடல்கள்!
அன்பெனும் பிடியுள் அகப்படும்மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புருவாம் பர சிவமே!
பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம்அருட்பெருஞ்ஜோதி
காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
இன்புறு சித்திகள் எல்லாம் புரிகவென்று
அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி
நான் அந்தம் இல்லா நலம்பெற எனக்கே
ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ்ஜோதி
அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைய நினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே
அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்ஜோதியைப் பெற்றெ அகங்களித்தல்வேண்டும்
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவேதருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல்அணிந் தருளே
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியாது இருக்க வேண்டும்
மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
மறவாது இருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தளமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே
வள்ளற் பெருமாளின் திருநெறிகள்
1. கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்க.
2. எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்க.
3. சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைக் கொள்ளாதீர்கள்.
4. சிறு தெய்வ வழிபாட்டினையும், பலியிடுவ தன்னையும் விலக்குக.
5. புலால் உண்ணற்க எவ்வுயிரையும் கொலை செய்யற்க.
6. பசித்தாரது பசியைப் போக்குதலே உண்மை வழிபாடாகக் கொள்க.
7. இறந்தவர்களைத் தகனம் செய்யாது புதைத்திடுக.
8. இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம, நித்திய, ஜீவகாருண்ய ஒழுக்கங்களைப் பின்பற்றுக.
9. உண்மை அன்பால் கடவுளை வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண்க.
10. உயிர்க்குலமே கடவுள் வாழும் ஆலயமாகக் கருதி உயிர்கட்கு இரங்கி இதம்புரிக.
வள்ளலாரின் புகழ் பெற்ற பாடல்கள்!
அன்பெனும் பிடியுள் அகப்படும்மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புருவாம் பர சிவமே!
பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம்அருட்பெருஞ்ஜோதி
காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
இன்புறு சித்திகள் எல்லாம் புரிகவென்று
அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி
நான் அந்தம் இல்லா நலம்பெற எனக்கே
ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ்ஜோதி
அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைய நினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே
அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்ஜோதியைப் பெற்றெ அகங்களித்தல்வேண்டும்
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவேதருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல்அணிந் தருளே
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியாது இருக்க வேண்டும்
மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
மறவாது இருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தளமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே
வள்ளற் பெருமாளின் திருநெறிகள்
1. கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்க.
2. எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்க.
3. சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைக் கொள்ளாதீர்கள்.
4. சிறு தெய்வ வழிபாட்டினையும், பலியிடுவ தன்னையும் விலக்குக.
5. புலால் உண்ணற்க எவ்வுயிரையும் கொலை செய்யற்க.
6. பசித்தாரது பசியைப் போக்குதலே உண்மை வழிபாடாகக் கொள்க.
7. இறந்தவர்களைத் தகனம் செய்யாது புதைத்திடுக.
8. இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம, நித்திய, ஜீவகாருண்ய ஒழுக்கங்களைப் பின்பற்றுக.
9. உண்மை அன்பால் கடவுளை வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண்க.
10. உயிர்க்குலமே கடவுள் வாழும் ஆலயமாகக் கருதி உயிர்கட்கு இரங்கி இதம்புரிக.
அருள்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருனை அருள் பெருஞ்ஜோதி!
நான் கண்ட மகான் வள்ளலார் இராமலிங்க அடிகளார்
வள்ளல் என்றாலே வாரி வழங்கும் கொடைத் தன்மையையும், அன்பின் நெகிழ்ச்சியையும் குறிக்கும், ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் வயிற்றுப் பசிக்கு அன்னம் வழங்வதோடு அல்லாமல் ஞானப் பசிக்கு ஆன்மிகத்தையும் ஊட்டி மக்களிடம் ஜீவகாருண்ய கருத்துக்களை வழங்கிய மகான் தான் வடலூர் வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளார்
எல்லா உயிர்களிடத்தும் பாரபட்ச அன்பை காட்டிய அன்னை தெரசா போலும், ஏழை எளிய மக்களுக்காக பூமிதானம் பெற்று உழைத்து உண்டு மகிழ பூமிதான இயக்கத்தின் பெருந்தகை அண்ணல் வினேபா பாபுஜி போல் சாதிமத பேதமின்றி எல்லா இனத்தவருக்கும் பசி என்னும் கொடு நோயை போக்கிட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை ஏற்படுத்தி , புண்ணியங்களில் எல்லாம் சிறந்த புண்ணியமான பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது என்ற கொள்கைக்கு ஏற்ப இராமலிங்க அடிகளார் அன்னதானச்சாலை ஒன்றை வடலூரில் அமைத்து மக்கள் வழங்கும் பொருளுதவியைக் கொண்டு சாதிமத இன பாகுபாடு இன்றி மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடரச் செய்தவர் வள்ளல் இராமலிங்க அடிகளார்,
அன்பின் வெளிப்பாடு கருணையின் வெளிப்பாடு தூய வெண்மை நிறமாகக் கொண்டதால் வள்ளலார் என்றும் தூய வெண்மையானஆடையினையே அணிந்து வந்து அமைதியையும் கருணை உணர்வையும் வெளிப்படுத்தினார், வள்ளலார் பசிப்பிணியை அகற்றியோடு அல்லாமல் தூய தமிழால் எளிய தமிழில் வெண்பாக்கள் மூலம் ஆன்மிக கருத்துக்களையும் மக்களிடம் புகட்டினார் கடவுள் ஒருவரே கடவுளை உண்மையான அன்புடன் ஒளிவடிவில் வழிபடவேண்டும் இறைவனை ஒளி வடிவமாக போற்றி வழிபட வழிகாட்டியவர், சத்திய தருமச் சாலைக்கு அருகில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்னும் எண்கோண வடிவிலான ஒர் ஒளித் திருக்கோவில் அமைத்து கடவுளை ஒளிச் சுடராக வழிபட செய்தவர், சாதி மதம் இனம் மொழி தேசம் என்ற வேறுபாடுகளை கடந்து அனைவரும் பிராத்தனை செய்ய வழிகோல் அமைத்தார், இதில் மையத்தில் கடவுளை ஜோதி வடிவில் பிரதிஸ்டை செய்து வள்ளலார் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்தார் அது அணையாத தீபமாக இன்றுவரை பராமரிக்கப்பட்டு கடவுளே ஜோதிமயமாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது,
மக்களிடம் தீப விளக்கை தொடர்ந்து வழிபட்டு வரச் செய்து தெய்வ பாவனையை இந்த தீபத்தில் கண்டு ஆராதியுங்கள் நான் இப்போது இந்த உடம்பில் உள்ள நான் இனி அன்பு செய்யும் எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என செய்தி அளித்தார் அன்னார் கூற்றின்படியே வள்ளலார் 1874ம் வருடம் தைமாதம் 19ம் தேதி புனர் பூச நட்சத்திரத்தன்று இரவு 12 மணிக்கு சித்தி வளாகத் திருமாளிகை அறைக்குள் புகுந்து மறைந்தார்,அன்றுமுதல் வள்ளலார் உருவமாக நமது கண்களுக்கு தோன்றாமல் அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிகொண்டுள்ளார்.
மேலும் அன்னை தெரசாவின் கொள்கையின் வடிவாக உருவான செஞ்சுலுவை சங்கத்தின் கொள்கைகளை வள்ளல் இராமலிங்கஅடிகள் அவர்களின் வாய்லாக தெள்ளத்தெளிவாக தோன்றுகிறது,
இயலாதவருக்கு உதவுதல்,
நரபலி தவிர்த்தல்
புலால் உண்ணாமை
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்
போன்ற சிறந்த குணங்களையே வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வாழ்ந்து ஆன்மிகத்திலும் சிறந்த கருத்துக்களை, எளிய தமிழில் இயற்றிய ஆன்மிகக் கவிஞர் ஆவார், இவர் தன்னுடைய திருவருட்பாவில் அரிய மூலிகைகளையும் மருத்துவ முறைகளையும் எழுதியிருக்கிறார்,அதில் சில மூலிகைகளும் அவற்றால் நமக்கு கிடைக்கும் பயன்களும் பற்றி தினத்தந்தி ஆன்மிக மலரில் வெளியிட்ட விபரத்தையும் இத்துடன் இணைத்துளளேன் படித்து பயன்பெறுங்கள், வள்ளல் அடிகளார் தேசத்தந்தை காந்தியடிகள் அன்பின மறுபிறவி அன்னை தெரசா பூமிதான ஜோதி வினேபாஜி போன்று நம் தமிழ் இனத்திற்கு பெருமை சேர்த்த வள்ளல் பெருமான் போல் நாமும் வாழ முயன்று அன்னாரின் புகழுக்கு உறுதுணை செய்வோம்,
அருட் பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி!
நான் கண்ட மகான் வள்ளலார் இராமலிங்க அடிகளார்
வள்ளல் என்றாலே வாரி வழங்கும் கொடைத் தன்மையையும், அன்பின் நெகிழ்ச்சியையும் குறிக்கும், ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் வயிற்றுப் பசிக்கு அன்னம் வழங்வதோடு அல்லாமல் ஞானப் பசிக்கு ஆன்மிகத்தையும் ஊட்டி மக்களிடம் ஜீவகாருண்ய கருத்துக்களை வழங்கிய மகான் தான் வடலூர் வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளார்
எல்லா உயிர்களிடத்தும் பாரபட்ச அன்பை காட்டிய அன்னை தெரசா போலும், ஏழை எளிய மக்களுக்காக பூமிதானம் பெற்று உழைத்து உண்டு மகிழ பூமிதான இயக்கத்தின் பெருந்தகை அண்ணல் வினேபா பாபுஜி போல் சாதிமத பேதமின்றி எல்லா இனத்தவருக்கும் பசி என்னும் கொடு நோயை போக்கிட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை ஏற்படுத்தி , புண்ணியங்களில் எல்லாம் சிறந்த புண்ணியமான பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது என்ற கொள்கைக்கு ஏற்ப இராமலிங்க அடிகளார் அன்னதானச்சாலை ஒன்றை வடலூரில் அமைத்து மக்கள் வழங்கும் பொருளுதவியைக் கொண்டு சாதிமத இன பாகுபாடு இன்றி மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடரச் செய்தவர் வள்ளல் இராமலிங்க அடிகளார்,
அன்பின் வெளிப்பாடு கருணையின் வெளிப்பாடு தூய வெண்மை நிறமாகக் கொண்டதால் வள்ளலார் என்றும் தூய வெண்மையானஆடையினையே அணிந்து வந்து அமைதியையும் கருணை உணர்வையும் வெளிப்படுத்தினார், வள்ளலார் பசிப்பிணியை அகற்றியோடு அல்லாமல் தூய தமிழால் எளிய தமிழில் வெண்பாக்கள் மூலம் ஆன்மிக கருத்துக்களையும் மக்களிடம் புகட்டினார் கடவுள் ஒருவரே கடவுளை உண்மையான அன்புடன் ஒளிவடிவில் வழிபடவேண்டும் இறைவனை ஒளி வடிவமாக போற்றி வழிபட வழிகாட்டியவர், சத்திய தருமச் சாலைக்கு அருகில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்னும் எண்கோண வடிவிலான ஒர் ஒளித் திருக்கோவில் அமைத்து கடவுளை ஒளிச் சுடராக வழிபட செய்தவர், சாதி மதம் இனம் மொழி தேசம் என்ற வேறுபாடுகளை கடந்து அனைவரும் பிராத்தனை செய்ய வழிகோல் அமைத்தார், இதில் மையத்தில் கடவுளை ஜோதி வடிவில் பிரதிஸ்டை செய்து வள்ளலார் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்தார் அது அணையாத தீபமாக இன்றுவரை பராமரிக்கப்பட்டு கடவுளே ஜோதிமயமாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது,
மக்களிடம் தீப விளக்கை தொடர்ந்து வழிபட்டு வரச் செய்து தெய்வ பாவனையை இந்த தீபத்தில் கண்டு ஆராதியுங்கள் நான் இப்போது இந்த உடம்பில் உள்ள நான் இனி அன்பு செய்யும் எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என செய்தி அளித்தார் அன்னார் கூற்றின்படியே வள்ளலார் 1874ம் வருடம் தைமாதம் 19ம் தேதி புனர் பூச நட்சத்திரத்தன்று இரவு 12 மணிக்கு சித்தி வளாகத் திருமாளிகை அறைக்குள் புகுந்து மறைந்தார்,அன்றுமுதல் வள்ளலார் உருவமாக நமது கண்களுக்கு தோன்றாமல் அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிகொண்டுள்ளார்.
மேலும் அன்னை தெரசாவின் கொள்கையின் வடிவாக உருவான செஞ்சுலுவை சங்கத்தின் கொள்கைகளை வள்ளல் இராமலிங்கஅடிகள் அவர்களின் வாய்லாக தெள்ளத்தெளிவாக தோன்றுகிறது,
இயலாதவருக்கு உதவுதல்,
நரபலி தவிர்த்தல்
புலால் உண்ணாமை
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்
போன்ற சிறந்த குணங்களையே வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வாழ்ந்து ஆன்மிகத்திலும் சிறந்த கருத்துக்களை, எளிய தமிழில் இயற்றிய ஆன்மிகக் கவிஞர் ஆவார், இவர் தன்னுடைய திருவருட்பாவில் அரிய மூலிகைகளையும் மருத்துவ முறைகளையும் எழுதியிருக்கிறார்,அதில் சில மூலிகைகளும் அவற்றால் நமக்கு கிடைக்கும் பயன்களும் பற்றி தினத்தந்தி ஆன்மிக மலரில் வெளியிட்ட விபரத்தையும் இத்துடன் இணைத்துளளேன் படித்து பயன்பெறுங்கள், வள்ளல் அடிகளார் தேசத்தந்தை காந்தியடிகள் அன்பின மறுபிறவி அன்னை தெரசா பூமிதான ஜோதி வினேபாஜி போன்று நம் தமிழ் இனத்திற்கு பெருமை சேர்த்த வள்ளல் பெருமான் போல் நாமும் வாழ முயன்று அன்னாரின் புகழுக்கு உறுதுணை செய்வோம்,
அருட் பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி!
வள்ளற் பெருமானின் திருநெறிகள்
1) கடவுள் ஒருவரே- அவரே அருட்பெருஞ்ஜோதி
2) எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே
3) சாதி சமய மத இன தேச வேறுபாடுகளை காணற்க
4) தெய்வ வழிபாட்டிற்காக உயிர் பலி இடுவதை விலக்கு
5) புலால் உண்ணற்க - எவ்வுயிரையும் கொலை செய்யற்க
6) பசித்தாரது பசியைப் போக்குதலே உண்மையான ஆன்மீக வழிபாடு
7)இறந்தவர்களை தகனம் செய்யாது புதைத்திடுக
8)இந்திரிய கரண ஜீவ ஆன்ம நித்திய ஜீவகாருண்ய ஒழுக்கத்தினை கடைபிடிக்க
9) உண்மை அன்பால் கடவுள் வழிபாடு செய்க
10)உயிர்குலமே கடவுள் விளங்கும் ஆலயம்
1) கடவுள் ஒருவரே- அவரே அருட்பெருஞ்ஜோதி
2) எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே
3) சாதி சமய மத இன தேச வேறுபாடுகளை காணற்க
4) தெய்வ வழிபாட்டிற்காக உயிர் பலி இடுவதை விலக்கு
5) புலால் உண்ணற்க - எவ்வுயிரையும் கொலை செய்யற்க
6) பசித்தாரது பசியைப் போக்குதலே உண்மையான ஆன்மீக வழிபாடு
7)இறந்தவர்களை தகனம் செய்யாது புதைத்திடுக
8)இந்திரிய கரண ஜீவ ஆன்ம நித்திய ஜீவகாருண்ய ஒழுக்கத்தினை கடைபிடிக்க
9) உண்மை அன்பால் கடவுள் வழிபாடு செய்க
10)உயிர்குலமே கடவுள் விளங்கும் ஆலயம்
Click to set custom HTML
தியானம்
மெடிடேஷன் குரு - தியானம் தமிழில்.
தியானம்
தூக்கத்ன் பொழுது நம்ம அறியாமல் நாம் தியானத்தில் ஈடுபடுகிறோம்.
தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது.
உறக்கத்தின் பொழுத குறைந்த அளவுதான் பிரபஞ்ச சக்தியைப் பெறமுடிகிது.
தியானத்தில் ஈடுபடும் போழுது அபரிதமான சக்தியைப் பெறமுடியும்.
இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பல மடங்கு விரிவடையச் சேய்கிறது.
நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவைத் திறக்கவும் விரிவடையச் செய்யவும் இது உதவுகிறது.
தியானத்தின் மூலம் நமக்கு கிடைக்கபெறும் அதீதமான சந்தி நம்மை சங்தோஷப்படுத்தும்.
நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவொம். மேலும் பல சிகரங்களைத் தோடச்செய்யும்.
தியானம் என்பது ஒரு பயணம்.
தியானத்தின் போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம்.
மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு
அறிவாற்றலிலிருந்து நமக்குள்
பின்பு அதையும்க தாண்டி
Meditation
"தியானம்" மேற்கொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யோசிப்ப்து போன்ற செயல்களையும்.
"தியானம்" செய்யும் முறையை நாம் தெரிந்து கொள்ளலாம்.
தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.
எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம்.
நமக்கு சௌகரியமான முறையில்.
அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம்.
தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம்.
வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள்.
இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள்.
கண்களை மேதுவாக மூடுங்கள்.
அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள்.
உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.
மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.
கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.
கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.
மந்திர்ங்களை ஒதும பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது.
ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.
நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.
மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு.
மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.
மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன.
நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.
மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும்.
கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம்.
இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும்.
மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது.
காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது.
மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும்.
நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது.
இதுதான் முக்கியம்.
இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி.
எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள்.
கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.
எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.
இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.
சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.
அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.
இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும்.
இந்நிலையில்
ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.
எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.
இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம்.
இதுதான் தியான நிலை.
இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.
தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும்.
பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும்.
இதைத் தேய்வீக வடிவம் என்றும் கூறலாம்
Click to set custom HTML
தியானம்
மெடிடேஷன் குரு - தியானம் தமிழில்.
தியானம்
தூக்கத்ன் பொழுது நம்ம அறியாமல் நாம் தியானத்தில் ஈடுபடுகிறோம்.
தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது.
உறக்கத்தின் பொழுத குறைந்த அளவுதான் பிரபஞ்ச சக்தியைப் பெறமுடிகிது.
தியானத்தில் ஈடுபடும் போழுது அபரிதமான சக்தியைப் பெறமுடியும்.
இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பல மடங்கு விரிவடையச் சேய்கிறது.
நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவைத் திறக்கவும் விரிவடையச் செய்யவும் இது உதவுகிறது.
தியானத்தின் மூலம் நமக்கு கிடைக்கபெறும் அதீதமான சந்தி நம்மை சங்தோஷப்படுத்தும்.
நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவொம். மேலும் பல சிகரங்களைத் தோடச்செய்யும்.
தியானம் என்பது ஒரு பயணம்.
தியானத்தின் போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம்.
மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு
அறிவாற்றலிலிருந்து நமக்குள்
பின்பு அதையும்க தாண்டி
Meditation
"தியானம்" மேற்கொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யோசிப்ப்து போன்ற செயல்களையும்.
"தியானம்" செய்யும் முறையை நாம் தெரிந்து கொள்ளலாம்.
தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.
எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம்.
நமக்கு சௌகரியமான முறையில்.
அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம்.
தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம்.
வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள்.
இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள்.
கண்களை மேதுவாக மூடுங்கள்.
அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள்.
உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.
மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.
கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.
கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.
மந்திர்ங்களை ஒதும பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது.
ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.
நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.
மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு.
மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.
மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன.
நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.
மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும்.
கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம்.
இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும்.
மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது.
காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது.
மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும்.
நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது.
இதுதான் முக்கியம்.
இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி.
எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள்.
கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.
எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.
இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.
சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.
அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.
இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும்.
இந்நிலையில்
ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.
எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.
இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம்.
இதுதான் தியான நிலை.
இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.
தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும்.
பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும்.
இதைத் தேய்வீக வடிவம் என்றும் கூறலாம்
ஸ்ரீமத் பகவத் கீதையில் தியான யோகம்
1) கர்மத்தின் பலனை சாராது தனக்கு விதிக்கப்பட்ட கடமையை மட்டுமே செய்வன் துறவி, அவனே யோகி. வேள்வித் தீ வளர்க்காமல் இருப்பவனோ செயலை புறக்கணிப்பவனோ யோகி ஆகான்
2) எதனை சந்நியாசம் என்கிறார்களோ அதுவே யோகம் ஆசைகளை துறக்காதவன் ஒருபோதும் யோகி ஆகமாட்டான்
3) தியான யோகத்தில் முன்னேற முனிவனுக்கு கர்மம் உபாயமாகிறது, தியான சித்தியடைந்தவனுக்கோ செயலற்றிருப்பது உபாயமாகிறது,
4) ஒருவன் எப்பொழுது மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு இந்திரியப் பொருட்களிலும் கர்மத்திலும் பற்றுதலின்றி இருக்கின்றானோ அப்போது பூரண யோக நிலையை அடைந்து விட்டான் என்று சொல்லப்படுகிறது,
5) உன்னை நீயே உயர்த்திக் கொள். நீ உன்னை ஒருபோதும் தாழ்த்திக் கொள்ளாதே, உன் மனமே உனது நண்பன் . உன் மனமே உனது பகைவன்.
6) எவனொருவன் தன் மனதை ஜெயித்து விட்டானோ அவனுக்கு அனுடைய மனமே நண்பனாகச் செயல்படுகின்றது. மனதை வெல்லாதவனுக்கு மனம் எப்போதும் பகைவன் போல் செயல்பட்டு கேடு விளைவிக்கின்றது,
7) தன்னை வென்று பேரமைதியில் நிலைபெற்று குளிர் வெப்பம் சுகம் துக்கம் மானம், அவமானம் இவற்றில் சமநிலை பெற்றவனிடம் பரமாத்மா ஒளிர்கின்றது.
8) சாஸ்திர அறிவிலும், அனுபவ அறிவிலும் திருப்தி கொண்டவனாய் அசைவுகளுக்கு அப்பாற்பட்டு புலன்களை ஜயித்து திருப்தி கொண்டவனாய் அசைவுகளுக்கு அப்பாற்பட்டு புலன்களை ஜெயித்து கல்லையும் மண்ணையும் பொன்னையும் ஒன்றுபோல் காணும் யோகியே, யோக நிலையுற்றான் எனப்படுவான்.
9) தனிமையான இடத்தில் அமர்ந்து மனதையும் உடலையும் , வசப்படுத்தியவனாய் ஆசையும் தேவைகளும் அற்று யோகியானவன் எப்போதும் மனதை பரம்பொருளில் லயிக்கச் செய்தல் வேண்டும்.
10) சுத்தமான இடத்திலும், சமமான இடத்திலும் துணி, மான்தோல், தர்ப்பை இவற்றின் மீது தன்கோர் உறுதியான ஆஸனம் அமைத்துக் கொண்டு மனதை ஒருநிலையில் குவிய வைத்தல் வேண்டும்
1) கர்மத்தின் பலனை சாராது தனக்கு விதிக்கப்பட்ட கடமையை மட்டுமே செய்வன் துறவி, அவனே யோகி. வேள்வித் தீ வளர்க்காமல் இருப்பவனோ செயலை புறக்கணிப்பவனோ யோகி ஆகான்
2) எதனை சந்நியாசம் என்கிறார்களோ அதுவே யோகம் ஆசைகளை துறக்காதவன் ஒருபோதும் யோகி ஆகமாட்டான்
3) தியான யோகத்தில் முன்னேற முனிவனுக்கு கர்மம் உபாயமாகிறது, தியான சித்தியடைந்தவனுக்கோ செயலற்றிருப்பது உபாயமாகிறது,
4) ஒருவன் எப்பொழுது மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு இந்திரியப் பொருட்களிலும் கர்மத்திலும் பற்றுதலின்றி இருக்கின்றானோ அப்போது பூரண யோக நிலையை அடைந்து விட்டான் என்று சொல்லப்படுகிறது,
5) உன்னை நீயே உயர்த்திக் கொள். நீ உன்னை ஒருபோதும் தாழ்த்திக் கொள்ளாதே, உன் மனமே உனது நண்பன் . உன் மனமே உனது பகைவன்.
6) எவனொருவன் தன் மனதை ஜெயித்து விட்டானோ அவனுக்கு அனுடைய மனமே நண்பனாகச் செயல்படுகின்றது. மனதை வெல்லாதவனுக்கு மனம் எப்போதும் பகைவன் போல் செயல்பட்டு கேடு விளைவிக்கின்றது,
7) தன்னை வென்று பேரமைதியில் நிலைபெற்று குளிர் வெப்பம் சுகம் துக்கம் மானம், அவமானம் இவற்றில் சமநிலை பெற்றவனிடம் பரமாத்மா ஒளிர்கின்றது.
8) சாஸ்திர அறிவிலும், அனுபவ அறிவிலும் திருப்தி கொண்டவனாய் அசைவுகளுக்கு அப்பாற்பட்டு புலன்களை ஜயித்து திருப்தி கொண்டவனாய் அசைவுகளுக்கு அப்பாற்பட்டு புலன்களை ஜெயித்து கல்லையும் மண்ணையும் பொன்னையும் ஒன்றுபோல் காணும் யோகியே, யோக நிலையுற்றான் எனப்படுவான்.
9) தனிமையான இடத்தில் அமர்ந்து மனதையும் உடலையும் , வசப்படுத்தியவனாய் ஆசையும் தேவைகளும் அற்று யோகியானவன் எப்போதும் மனதை பரம்பொருளில் லயிக்கச் செய்தல் வேண்டும்.
10) சுத்தமான இடத்திலும், சமமான இடத்திலும் துணி, மான்தோல், தர்ப்பை இவற்றின் மீது தன்கோர் உறுதியான ஆஸனம் அமைத்துக் கொண்டு மனதை ஒருநிலையில் குவிய வைத்தல் வேண்டும்
தவயோகம் - தவமும் - யோகமும்
தியானத்தின் அங்கங்கள்தான் தவமும் யோகமும். ஜோதி வடிவான சிவத்தை அடைய மேற்கொள்ளும் வழிபாட்டு முறைகளே தியானம்,தவம் யோகம்.தியானத்தின் போது அபரீதமான சக்தியை பெற முடியும், தியானத்தின் மூலம் நமது ஆறாவது அறவின் கதவை திறக்கவும், விரிவடையும் செய்து ஆத்மாவின் பேரோளியை பெற தியானம் என்னும் திறவுகோல் உதவுகிறது, தியானத்தின் முதிர்ச்சியில் எண்ண அலைகள் குறையும், சுவாசத்தின் அளவு குறையும்,நம் புருவங்களுக்கிடையே ஒரு ஜோதி ஒளி தென்படும், இந் நிலையில் சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது, இந்நிலையில் தான் ரிஷிகள் தவத்தின் உச்ச நிலையைப் பெற்று ஒளியின் பிளம்பான சிவத்தை அடைந்து - முக்தி நிலை பெற்றார்கள், இந்த நிலையின் அடிப்படையான தியானத்தின் தொடர் நிலைகள்:
முதல் நிலை: அடிப்படை நிலை - ஆன்மிக அறிவு உண்டாகும் நிலை - தியானத்தின் பயிற்சி நிலை எனலாம்
இரண்டாம் நிலை: உடலில சக்ரா நிலை - உடலில் சக்தி மையமாக செயல்படுகின்றன - ஆத்ம சக்தி வளர்தல்
மூன்றாம் நிலை: ஒளி (ஜோதி) நிலை - இந்நிலையில் 7 நிலைகள் உண்டு என்கின்றனர் யோகிகள். ஆத்மா வாயில் திறக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு, உயர்நிலை அடைகிறது, இதனால் அன்பு, அமைதி, ஆரோக்கியம் நேரிடையாக உண்டாகிறது.
நான்காவது நிலை: அறிவொளி - யோக நிலை - முதிர்வு - முக்தி நிலை எனலாம்- இந்நிலையில் உடல், மனம், அறிவாற்றல், ஆகியவை விழிப்புணர்ச்சி எல்லையை அடைகிறது, நம் ஜீவ ஒளி - பேரோளியுடன் ஒன்றிணைந்து பேரோளியாக மாறுகிறது, இது வே ஆன்மீகத்தின் உச்ச நிலை, இதுவே யோகா ஆன்மீகம் ஒன்றிய ஐக்கிய நிலையாக ஆகிறது, தவ நிலையின் உச்சியில் யோகம் சிவத்துடன் ஒன்றி ஐக்கியமாகிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த தவத்ததினை பின்கண்டவாறும் சிறப்புகளுடன் மூன்று வகையாக பிரித்துள்ளனர் ஆன்றோர்கள். மூவகை தவங்களாவன:
1) மானசம் - மனதால் செய்யும் தவம்.
2) வாசிகம் - வாயினால் செய்யும் தவம்.
3) காயிகம் - உடம்பால் செய்யும் தவம்
மானசம்: உயிர்களிடத்தில் அன்பு, தான தருமங்களில் விருப்பம் கொள்ளுதல், பிறர் செய்த தீமையைப் பொறுத்தல், உண்மையில் நாட்டம் கொள்ளுதல், சிவத்தைச் சிந்தித்தல், புலங்களை அடக்குதல், உலகம் நலமாக இருக்க வேண்டுதல்
வாசிகம்: உண்மை பேசுதல், தீய சொற்களையும் கடுஞ் சொற்களையும் பேசாதிருத்தல் ஐந்தெழுத்து (சிவாய நம) ஓதுதல், தோத்திரப் பாடல்கள் பாடுதல், நீதிகளை எடுத்துரைத்தல், நல்லனவற்றையே பேசுதல், திருமுறைப்பாடல்கள் மந்திர ஆற்றல் வாய்ந்தவை, அப்பாடல்களை வாய்விட்டுப் படிக்க ேவ்ண்டும், அவ்வாறு படிக்கும் பொழுது உண்டாகும் ஒலி அலைகள் நம்மை சுற்றிலும் ஒரு பாதுகாப்புச் சுவர் போல் அமையும்,
காயிகம்:சிவபெருமானாரைப் பூசித்தல், ஆலயம் வலம் வருதல், ஆலயத்தை தூய்மை செய்தல், சிவத்தலயாத்திரை செல்லுதல், மலர்மாலை தொடுத்தல், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல், பிராணிகளுக்கு உதவுதல், சான்றோர்களையும், பெற்றோர்களையும் வணங்குதல். இத்தகைய நல்லனவற்றை அன்றாடம் செய்வதும் உண்மையான தவம் ஆகும் என்றும், போலி வேடம் கொண்டு காவி தரித்துக்கொண்டு உலகமக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது தவமன்று,
யோகம்:
தவத்தின் உச்சி யோகம். யோகம் என்றால் ஒன்றுதல் என்று பொருள், ஜீவன் , சிவத்துடன் ஒன்றுவது யோகம் எனப்படுகிறது, யோகம் என்பதனை அகவழிபாட்டு முறைமூலம் தொடங்கி தவயோகத்தை பெறுதல் வேண்டும். வழிபாடு என்பது அகவழிபாடு, புறவழிபாடு என இரண்டாக பிரிக்கப்படுகிறது, கடவுளை தன்னின்றும், பிரியாத தன்மை கொண்டு வழிபடுவது அகவழிபாடு, கடவுளை தன்னின்று வேறுபடுத்தி வழிபடுவது புறவழிபாடு, ஒவ்வொருவரின் உடம்பில் உள்ள உயிரே சிவம்- ஆத்மாவே சிவம் - உடம்பே கோவில் . எனவே நம் உடம்பில் இருக்கும் ஆத்மா என்ற ஜீவ ஒளியான சிவத்தை அகவழிபாடாக வழிபடுதல் வேண்டும் புற வழிபாட்டின் நோக்கமே அகவழிபாட்டை அடைவதுதான், நாம் புறவழிபாட்டோடு நின்று விடுகிறோம், புறவழிபாட்டுடன் ஒன்றி அகவழிபாட்டின் மூலம் சிவம் என்ற ஜீவ ஒளியை தியானம் தவம் யோகம் என்ற வகையில் ஐக்கியமாகி ஒன்றிடுவோம்.
தியானத்தின் அங்கங்கள்தான் தவமும் யோகமும். ஜோதி வடிவான சிவத்தை அடைய மேற்கொள்ளும் வழிபாட்டு முறைகளே தியானம்,தவம் யோகம்.தியானத்தின் போது அபரீதமான சக்தியை பெற முடியும், தியானத்தின் மூலம் நமது ஆறாவது அறவின் கதவை திறக்கவும், விரிவடையும் செய்து ஆத்மாவின் பேரோளியை பெற தியானம் என்னும் திறவுகோல் உதவுகிறது, தியானத்தின் முதிர்ச்சியில் எண்ண அலைகள் குறையும், சுவாசத்தின் அளவு குறையும்,நம் புருவங்களுக்கிடையே ஒரு ஜோதி ஒளி தென்படும், இந் நிலையில் சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது, இந்நிலையில் தான் ரிஷிகள் தவத்தின் உச்ச நிலையைப் பெற்று ஒளியின் பிளம்பான சிவத்தை அடைந்து - முக்தி நிலை பெற்றார்கள், இந்த நிலையின் அடிப்படையான தியானத்தின் தொடர் நிலைகள்:
முதல் நிலை: அடிப்படை நிலை - ஆன்மிக அறிவு உண்டாகும் நிலை - தியானத்தின் பயிற்சி நிலை எனலாம்
இரண்டாம் நிலை: உடலில சக்ரா நிலை - உடலில் சக்தி மையமாக செயல்படுகின்றன - ஆத்ம சக்தி வளர்தல்
மூன்றாம் நிலை: ஒளி (ஜோதி) நிலை - இந்நிலையில் 7 நிலைகள் உண்டு என்கின்றனர் யோகிகள். ஆத்மா வாயில் திறக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு, உயர்நிலை அடைகிறது, இதனால் அன்பு, அமைதி, ஆரோக்கியம் நேரிடையாக உண்டாகிறது.
நான்காவது நிலை: அறிவொளி - யோக நிலை - முதிர்வு - முக்தி நிலை எனலாம்- இந்நிலையில் உடல், மனம், அறிவாற்றல், ஆகியவை விழிப்புணர்ச்சி எல்லையை அடைகிறது, நம் ஜீவ ஒளி - பேரோளியுடன் ஒன்றிணைந்து பேரோளியாக மாறுகிறது, இது வே ஆன்மீகத்தின் உச்ச நிலை, இதுவே யோகா ஆன்மீகம் ஒன்றிய ஐக்கிய நிலையாக ஆகிறது, தவ நிலையின் உச்சியில் யோகம் சிவத்துடன் ஒன்றி ஐக்கியமாகிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த தவத்ததினை பின்கண்டவாறும் சிறப்புகளுடன் மூன்று வகையாக பிரித்துள்ளனர் ஆன்றோர்கள். மூவகை தவங்களாவன:
1) மானசம் - மனதால் செய்யும் தவம்.
2) வாசிகம் - வாயினால் செய்யும் தவம்.
3) காயிகம் - உடம்பால் செய்யும் தவம்
மானசம்: உயிர்களிடத்தில் அன்பு, தான தருமங்களில் விருப்பம் கொள்ளுதல், பிறர் செய்த தீமையைப் பொறுத்தல், உண்மையில் நாட்டம் கொள்ளுதல், சிவத்தைச் சிந்தித்தல், புலங்களை அடக்குதல், உலகம் நலமாக இருக்க வேண்டுதல்
வாசிகம்: உண்மை பேசுதல், தீய சொற்களையும் கடுஞ் சொற்களையும் பேசாதிருத்தல் ஐந்தெழுத்து (சிவாய நம) ஓதுதல், தோத்திரப் பாடல்கள் பாடுதல், நீதிகளை எடுத்துரைத்தல், நல்லனவற்றையே பேசுதல், திருமுறைப்பாடல்கள் மந்திர ஆற்றல் வாய்ந்தவை, அப்பாடல்களை வாய்விட்டுப் படிக்க ேவ்ண்டும், அவ்வாறு படிக்கும் பொழுது உண்டாகும் ஒலி அலைகள் நம்மை சுற்றிலும் ஒரு பாதுகாப்புச் சுவர் போல் அமையும்,
காயிகம்:சிவபெருமானாரைப் பூசித்தல், ஆலயம் வலம் வருதல், ஆலயத்தை தூய்மை செய்தல், சிவத்தலயாத்திரை செல்லுதல், மலர்மாலை தொடுத்தல், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல், பிராணிகளுக்கு உதவுதல், சான்றோர்களையும், பெற்றோர்களையும் வணங்குதல். இத்தகைய நல்லனவற்றை அன்றாடம் செய்வதும் உண்மையான தவம் ஆகும் என்றும், போலி வேடம் கொண்டு காவி தரித்துக்கொண்டு உலகமக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது தவமன்று,
யோகம்:
தவத்தின் உச்சி யோகம். யோகம் என்றால் ஒன்றுதல் என்று பொருள், ஜீவன் , சிவத்துடன் ஒன்றுவது யோகம் எனப்படுகிறது, யோகம் என்பதனை அகவழிபாட்டு முறைமூலம் தொடங்கி தவயோகத்தை பெறுதல் வேண்டும். வழிபாடு என்பது அகவழிபாடு, புறவழிபாடு என இரண்டாக பிரிக்கப்படுகிறது, கடவுளை தன்னின்றும், பிரியாத தன்மை கொண்டு வழிபடுவது அகவழிபாடு, கடவுளை தன்னின்று வேறுபடுத்தி வழிபடுவது புறவழிபாடு, ஒவ்வொருவரின் உடம்பில் உள்ள உயிரே சிவம்- ஆத்மாவே சிவம் - உடம்பே கோவில் . எனவே நம் உடம்பில் இருக்கும் ஆத்மா என்ற ஜீவ ஒளியான சிவத்தை அகவழிபாடாக வழிபடுதல் வேண்டும் புற வழிபாட்டின் நோக்கமே அகவழிபாட்டை அடைவதுதான், நாம் புறவழிபாட்டோடு நின்று விடுகிறோம், புறவழிபாட்டுடன் ஒன்றி அகவழிபாட்டின் மூலம் சிவம் என்ற ஜீவ ஒளியை தியானம் தவம் யோகம் என்ற வகையில் ஐக்கியமாகி ஒன்றிடுவோம்.
ஸ்ரீபகவத் கீதையில் தியான யோகம் - தொடர்ச்சி
ஸ்ரீபகவத் கீதையில் தியான யோகம் பற்றி வழங்கப்பட்ட நெறிமுறைகளும் அதன்பயன்களும்
1) புத்தியால் அறியப்படுவதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய, பேரின்பத்தை எங்கு காணப்படுமோ, அந்நிலை அறிந்த பின் இவன் உண்மையிலிருந்து வழுவுவதில்லை
2) எந்த ஒரு பேரின்ப நிலையை அடைந்த பிறகு , அதைவிட அடைவதற்கு மேலான பேரின்பம் வேறொன்றும் இல்லை என எண்ணுகிறானோ, அப்பேரின்பத்தில் நிலைத்த பிறகு மிகப்பெரிய துக்கம் வந்தாலும் கலங்குவதில்லை
3) எண்ணங்களுக்கு ஆதாரமாக இருக்கும் ஆசைகள் அனைத்தையும் துறந்து மனதால் இந்திரியக் கூட்டத்தை எல்லா பக்கங்களிலும் வசப்படுத்தும்
4) உறுதி பூண்ட மதியால் மனதைமெதுவாக பரமாத்மாவில் பொருத்திய பின் வேறு எதைப் பற்றியும் சிந்தித்தல் கூடாது,
5) எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவின் வசம் அழைத்துச் செல்க
6) தியானத்தால் மனம் சாந்தமாகி ரஜோ குணம் அமைதி பெற்று, மாசு நீங்கி பிரம்மமேயாகி இந்த யோகிக்கு மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது,
7) யோக நிலையில் பாபங்கள் நீங்கப் பெற்று ஆத்மாவில் நிலைபெற்று பிரம்ம சம்பந்தத்தால் உண்டாகும் உன்னதமான சுகம் எளிதில் கிடைக்கிறது
8) யோத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயர்களிடத்தும் தானிருப்பதையும் தன்னுள் எல்லா உயிர்களும் இருப்பதையும் காண்கிறான்,
9) எவனொருவன் தன்னை பரமாத்மாவிலும், பரமாத்மாவில் தன்னையும் காண்கிறானோ அவனை விட்டு பரமாத்மா ஒருபோதும் விலகுவதில்லை, அவனும் அதனை விட்டு விலகுவதில்லை
10) இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்ம சமத்துவம் மற்றும் சமப்பார்வை பெற்றவன் பரமயோகியாகக் கருதப்படுவான்
தொடரும்,,,,,,,,,,,,,
ஸ்ரீ பகவத் கீதையில் தியான யோகம், தொடர்ச்சி
1)தியானத்தில் மனைத் கட்டுப்படுவத்து கடினம்,அது சலனமுடையது,ஐயமில்லை,ஆனால்பழக்கத்தாலும், பற்றின்மையாலும் கட்டி விடலாம்
2)சுயக்கட்டுபாடு இல்லாதவனுக்கு யோகம் அரிதென்று, ஆனால் கட்டுபாட்டுடன் இருப்பவனுக்கு முயற்சியால் அடைய வழி உண்டு
3) நம்பிக்ைகயுடையவன் முயற்சியுள்ளவன் யோகத்தினின்று ஒருபொழுதும் தோற்று்ப்போவது இல்லை,
4)யோகத்தில் தவறியவன் புண்ணியம் செய்வோரின் உலங்களை அடைந்து அங்கு கணக்கில்லா வருடங்கள் வாழ்ந்து தூய்மையுைடய செல்வந்தர்கள் வீட்டில் பிறக்கிறான்
5)யோகியனவன் யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான்,இவ்வுலகில் இதுபோன்ற பிறவிகிைடப்பது அரிது,
6)அவ்வாறு பிறப்பவன் பூர்வ ஜன்மபுத்திைய பெறுகிறான், அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி ெசய்கிறான்
7)தனது பழைய பழக்கத்தால் தன் வசமின்றி யோகப்பாதையில் ஈர்க்கப்படுகிறான், யோகத்ைத பயில ேவண்டுமென்ற ஆவலினால் அவன் வேகத்ைதயும்கடந்து செல்கிறான்
8) ஊக்கத்தோடு முயன்று, மனதை தன் வசப்படுத்தி பாவம் நீஙக பெற்ற யோகியானவன் அப்ேபாது பல பிறவிகளில் ெபற்ற பக்குவத்தால் மேலான நிலையை அைடகிறான்
9) தவஞ்செய்ேவாைரக்காட்டிலும் யோகி சிறந்தவன்,ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருத்ப்படுகிறான்,கருமிகளிலும் அவன் சிறந்தோன்,
10) எவனொருவன் பரமாத்மாவில் நம்பிக்கை கொண்டு ேபாற்றுகிறானோ அவன் மிக மேலான யோகியாவான்
ஆழ் மனதின் அற்புத சக்திகள்
ஆழ் மனதின் அற்புத சக்திகள்
நீங்கள் ஒரு தொழிலைச் செய்ய எண்ணும் போது என்ன மனப்பாண்மையில் ஈடுபடுகிறீர்களோ, அதற்கேற்ப உங்கள் செயல் வெற்றி - தோல்வியை அடைகிறது, வெற்றி மனப்பான்மையுடன் செயல் பட்டால் வெற்றியும், தோல்வி மானப்பான்மையுடன் தன்னம்பிக்கையற்று செயல்பட்டால் தோல்வியையும் அடைகிறீர்கள், ஆகவே வெற்றியும், தோல்வியும் உங்கள் மனப்பான்மையிலிருந்து உருவெடுக்கிறது,
மன்ப்பான்மை என்பது, உங்கள் உள்ளத்தில் தொடர்ந்து நிலைபெறும் சிந்தனைதான் மனப்பான்மையாக மாறுகிறது, வெற்றி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் மனச்சித்திரங்களே வெற்றி சிந்தனை , இது மீண்டும் மீண்டும் பதிவாகும் போது வெற்றி மனப்பான்மையாகமாறுகிறது, நீங்கள் விரும்பினால் மனச்சித்திரத்தை மாற்றி ஆழ் மனம் (இதனை சமயோசித அறிவாகக் கொள்ளலாம்) கட்டளை உஙகளுக்கு கைகொடுக்கும், ஆழ்மனக் கட்டளை மூலமும், மனச்சித்திரங்கள் மூலமும் வெற்றி மனோபாவத்தை உருவாக்கிட முடியும், நீங்கள் ஆழ்மனச்சக்தியை பெருக்கி கொண்டால் உழைப்பில் பத்தில் ஒருபங்கு குறைந்தாலும், விளைவு பத்து மடங்காக உயர்ந்திட முடியும், கடும் உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பதை ஆழ்மனத்திற்கு ஈடு இணை இல்லை என்ற புது பழமொழியை புரிந்து கொள்ளலாம்,
ஆழ்மனதை ஒரு தேவதை என்றே கூறலாம், அது ஆற்றல் மிக்க தேவதை, உங்களுக்கு விசுவாசமான தேவதை. நீங்கள் கேட்பதை பெற்றுத தரும் சக்தி உண்டு,ஆக அது தேவதையோ, அரக்கனோ என்பது நீங்கள் கொடுக்கும் கட்டளையைப் பொருத்தது. உங்கள் கட்டளையின் எண்ணம் முறன்பாடானால் கிடைப்பதும் முறன்பாடாகவே அமையும், உங்களின் ஆழ்மனச்சக்தி பெருகி விட்டால் நீங்கள் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும். இதன் கருத்தை கொண்டே ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு
" Positive thinking always ever success
Nagative thinking always never success"
எவராயினும், எந்நிலையிலும், ஆழ்மனக்கட்டளையை நம்பிககையோடு கொடுத்து அடையப்போகிறோம் என்னும் விசுவாசத்தை வளர்த்து நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும். வேண்டியதை விரும்பியபடியே பெற முடியும். ஒரு குறிக்கோளுக்கான கட்டளையை மட்டும் தேர்வு செய்து கொள்ள வேண்டும், மற்ற விருப்பு வெறுப்பு ஆசைகளை விலக்கி வைத்துவிட்டு, உறங்குவதற்கு முன் படுக்கையில் சம்மனமிட்டு - தியானத்திற்கு அமர்வது போன்று - சுவாசத்தில் ஆழ்மனதை முழுவதையும் கவனத்தில் குவித்தால் எண்ண அலைகள் அடங்கும், நீங்கள் தேர்ந்தெடுத்த ஆழ்மனக்கட்டளையை உணர்ச்சியுடன் , ஒலி நயத்துடன், உதட்டசைவுடன் உருவேற்றுக. உங்கள் குறிக்கோள் நிறைவேறி விட்டது போன்ற நிலையை மனச்சித்திரமாக கற்பனையில் காண்க. இதனை உறங்குவதற்கு முன்பும், உறங்கி எழுந்த பின்னும் தினமும் 30 நிமிடங்கள் கட்டளை கொடுத்தால், உங்கள் ஆழ்மனம் அற்புதமாக செயல்பட தொடங்கிவிடும். ஆழ்மனம் என்பது ஐம்புலங்களால் அறிய இயலாது ஆனால் அதன் விளைவை ஐம்புலங்களால் அறிய முடியும், நிறைவேற போகிறது என்ற நம்பிக்கையுடன் கட்டளை கொடுங்கள். அப்போது ஆழ்மனத்தின் அற்புத சக்தி வெளிப்படும்.
ஆழ்மனக்கட்டளையை குறிக்கேளுக்கும். தேவைக்கு தக்கபடி நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். உருவாக்கிய கட்டளைகளை உங்களை சுயகருத்தேற்றம் செய்யும் போது வெற்றி உங்களை அடையும். நம் வாழ்க்கை என்பது நம்எண்ணத்தால் உருவாக்கப்படுகிறது. எண்ணத்திற்கேற்ப வாழ்க்கை. எண்ணம் என்பது தொடர்மன சித்திரமே. எணணம் - செயல் ஆகிறது, செயல் - பழக்கம் ஆகிறது, பழக்கம் - வழக்கமாகிறது. வழக்கம் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. ஆழ்மனக்கட்டளை , மனச்சித்திரம் இவ்விரு உத்திகளையும் ஒரே சமயத்தில் தொடர்ந்து பயன்படுத்தும்போது உங்கள் மனோசக்தி பெருக்கம் அடைகிறது. சிந்தனையிலிருந்து - செயல் பிறக்கிறது. மனத்தின் எண்ணமே செயலுக்கு ஊக்கம் . எண்ணம் திண்ணம் பெறும்போது நிைன்த்ததை அடைய வெற்றியாக முடிகிறது.
ஆழ்மனக்கட்டளையும. மனச்சித்திரமும் சேர்ந்தது தியானம் - தியானம் தவம் எனப்படுகிறது. தவ வலிமையால் நம் முன்னோர்கள் நம்ப வியலாத அற்புதமான சாதனைகளை செய்ததனர் என்பதை நாம் அறிவோம். ஆழ்மன கட்டளை கொடுக்கும்போதே அதற்கேற்ப மனச்சித்திரம் வரைவதன் மூலம் நீங்கள் அற்புதங்களை நிகழ்த்துபவராக மாறிவிடுகிறீர்கள். உங்களின் நீண்டகால குறிக்கோள்களான தியானம் செய்யும் போது உங்களது நம்பிக்கை ஒரு மந்திர சக்தியாகவே பெருக்கெடுக்கிறது. எனவே ஆழ்மன சிந்தனை - தியானம் மூலம் வெற்றி நிச்சயம்
நீங்கள் ஒரு தொழிலைச் செய்ய எண்ணும் போது என்ன மனப்பாண்மையில் ஈடுபடுகிறீர்களோ, அதற்கேற்ப உங்கள் செயல் வெற்றி - தோல்வியை அடைகிறது, வெற்றி மனப்பான்மையுடன் செயல் பட்டால் வெற்றியும், தோல்வி மானப்பான்மையுடன் தன்னம்பிக்கையற்று செயல்பட்டால் தோல்வியையும் அடைகிறீர்கள், ஆகவே வெற்றியும், தோல்வியும் உங்கள் மனப்பான்மையிலிருந்து உருவெடுக்கிறது,
மன்ப்பான்மை என்பது, உங்கள் உள்ளத்தில் தொடர்ந்து நிலைபெறும் சிந்தனைதான் மனப்பான்மையாக மாறுகிறது, வெற்றி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் மனச்சித்திரங்களே வெற்றி சிந்தனை , இது மீண்டும் மீண்டும் பதிவாகும் போது வெற்றி மனப்பான்மையாகமாறுகிறது, நீங்கள் விரும்பினால் மனச்சித்திரத்தை மாற்றி ஆழ் மனம் (இதனை சமயோசித அறிவாகக் கொள்ளலாம்) கட்டளை உஙகளுக்கு கைகொடுக்கும், ஆழ்மனக் கட்டளை மூலமும், மனச்சித்திரங்கள் மூலமும் வெற்றி மனோபாவத்தை உருவாக்கிட முடியும், நீங்கள் ஆழ்மனச்சக்தியை பெருக்கி கொண்டால் உழைப்பில் பத்தில் ஒருபங்கு குறைந்தாலும், விளைவு பத்து மடங்காக உயர்ந்திட முடியும், கடும் உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பதை ஆழ்மனத்திற்கு ஈடு இணை இல்லை என்ற புது பழமொழியை புரிந்து கொள்ளலாம்,
ஆழ்மனதை ஒரு தேவதை என்றே கூறலாம், அது ஆற்றல் மிக்க தேவதை, உங்களுக்கு விசுவாசமான தேவதை. நீங்கள் கேட்பதை பெற்றுத தரும் சக்தி உண்டு,ஆக அது தேவதையோ, அரக்கனோ என்பது நீங்கள் கொடுக்கும் கட்டளையைப் பொருத்தது. உங்கள் கட்டளையின் எண்ணம் முறன்பாடானால் கிடைப்பதும் முறன்பாடாகவே அமையும், உங்களின் ஆழ்மனச்சக்தி பெருகி விட்டால் நீங்கள் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும். இதன் கருத்தை கொண்டே ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு
" Positive thinking always ever success
Nagative thinking always never success"
எவராயினும், எந்நிலையிலும், ஆழ்மனக்கட்டளையை நம்பிககையோடு கொடுத்து அடையப்போகிறோம் என்னும் விசுவாசத்தை வளர்த்து நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும். வேண்டியதை விரும்பியபடியே பெற முடியும். ஒரு குறிக்கோளுக்கான கட்டளையை மட்டும் தேர்வு செய்து கொள்ள வேண்டும், மற்ற விருப்பு வெறுப்பு ஆசைகளை விலக்கி வைத்துவிட்டு, உறங்குவதற்கு முன் படுக்கையில் சம்மனமிட்டு - தியானத்திற்கு அமர்வது போன்று - சுவாசத்தில் ஆழ்மனதை முழுவதையும் கவனத்தில் குவித்தால் எண்ண அலைகள் அடங்கும், நீங்கள் தேர்ந்தெடுத்த ஆழ்மனக்கட்டளையை உணர்ச்சியுடன் , ஒலி நயத்துடன், உதட்டசைவுடன் உருவேற்றுக. உங்கள் குறிக்கோள் நிறைவேறி விட்டது போன்ற நிலையை மனச்சித்திரமாக கற்பனையில் காண்க. இதனை உறங்குவதற்கு முன்பும், உறங்கி எழுந்த பின்னும் தினமும் 30 நிமிடங்கள் கட்டளை கொடுத்தால், உங்கள் ஆழ்மனம் அற்புதமாக செயல்பட தொடங்கிவிடும். ஆழ்மனம் என்பது ஐம்புலங்களால் அறிய இயலாது ஆனால் அதன் விளைவை ஐம்புலங்களால் அறிய முடியும், நிறைவேற போகிறது என்ற நம்பிக்கையுடன் கட்டளை கொடுங்கள். அப்போது ஆழ்மனத்தின் அற்புத சக்தி வெளிப்படும்.
ஆழ்மனக்கட்டளையை குறிக்கேளுக்கும். தேவைக்கு தக்கபடி நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். உருவாக்கிய கட்டளைகளை உங்களை சுயகருத்தேற்றம் செய்யும் போது வெற்றி உங்களை அடையும். நம் வாழ்க்கை என்பது நம்எண்ணத்தால் உருவாக்கப்படுகிறது. எண்ணத்திற்கேற்ப வாழ்க்கை. எண்ணம் என்பது தொடர்மன சித்திரமே. எணணம் - செயல் ஆகிறது, செயல் - பழக்கம் ஆகிறது, பழக்கம் - வழக்கமாகிறது. வழக்கம் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. ஆழ்மனக்கட்டளை , மனச்சித்திரம் இவ்விரு உத்திகளையும் ஒரே சமயத்தில் தொடர்ந்து பயன்படுத்தும்போது உங்கள் மனோசக்தி பெருக்கம் அடைகிறது. சிந்தனையிலிருந்து - செயல் பிறக்கிறது. மனத்தின் எண்ணமே செயலுக்கு ஊக்கம் . எண்ணம் திண்ணம் பெறும்போது நிைன்த்ததை அடைய வெற்றியாக முடிகிறது.
ஆழ்மனக்கட்டளையும. மனச்சித்திரமும் சேர்ந்தது தியானம் - தியானம் தவம் எனப்படுகிறது. தவ வலிமையால் நம் முன்னோர்கள் நம்ப வியலாத அற்புதமான சாதனைகளை செய்ததனர் என்பதை நாம் அறிவோம். ஆழ்மன கட்டளை கொடுக்கும்போதே அதற்கேற்ப மனச்சித்திரம் வரைவதன் மூலம் நீங்கள் அற்புதங்களை நிகழ்த்துபவராக மாறிவிடுகிறீர்கள். உங்களின் நீண்டகால குறிக்கோள்களான தியானம் செய்யும் போது உங்களது நம்பிக்கை ஒரு மந்திர சக்தியாகவே பெருக்கெடுக்கிறது. எனவே ஆழ்மன சிந்தனை - தியானம் மூலம் வெற்றி நிச்சயம்
ஆழ் மனதின் அற்புதங்கள் - 2
ஆழ் மனதின் அற்புதங்கள் - 2
ஆழ் மன சிந்தனைக்கு அதன் வெற்றிக்கு அடிப்படையாக அமைவது குறிக்கோளுடன் சேர்ந்த எண்ணமும் முக்கியத்துவம் பெறுகிறது, குறிக்கோளின் வலுவினை விளக்க கீழ்கண்ட எடுத்துக்காட்டு உதாரணமாக அமைகிறது, ஒரு தடவை அமெரிக்க ஜனதிபதி ஜான்கென்னடி ஒரு பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் சகசமான முறையில் உறையாடும் போது ஒரு மாணவனைப் பார்த்து புன்னகையுடன் - உன் எதிர்காலம் என்ன? - என்று கேட்டார் உடனே அவன் பளீரென்று இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும் இது தான் என் லட்சியம் என்றான், உடனே ஜனதிபதியும் நன்று என்று வாழ்த்தி சென்றார், அந்த பள்ளி மாணவனின் லட்சியம் - குறிக்கோள் - எண்ணம் ஜனதிபதியாகவேண்டுமென்ற உயர்ந்தஆழ்மன சிந்தனை அவனை அமெரிக்க ஜனதிபதியாகவே ஆக்கியது, அது வேறுயாருமல்ல ..... அவன்தான் புகழ்பெற்ற பில்கிளிண்டன் எனவே தீர்ககமான தீர்மாணமே புகழின் உச்சிக்கும் தான் நினைத்த செயலுக்கு கால்கோளாக அமைகிறது,மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழியும் இதனையே விளக்கிறது.
எண்ணமே திண்ணமாகி அதுவே மனத்திரையில் ஆழமாக பதிந்து நம் எண்ண உணர்வுகளே - இந்தபிரபஞ்மென்ற வாயுமண்டலத்தில் எலக்ட்ரானிக் - அலைவரிசைகள் போல நம் மூளைியின் அலை வரிசைகளினால் தூண்டப்பட்டு அது வே செயலாக மாறுகிறது. ஒருவரின் எண்ணங்கள் முற்பிறவியில் தான் எதன்பால் மிகுந்த அன்பு செலுத்தி அதனையே சர்வ சதா காலமும் எண்ணிக்கொண்டவனின் எண்ணங்களே அடுத்த பிறவியில் அதுவாகவே பிறப்பான் என்பது மூததையர்கள் கண்ட உண்மை இதனையே விஜய் டிவி மகான்கள் என்ற நிகழ்ச்சியில் மான - மீன் கதையாக ஒரு ஆச்சாரியார் விளக்குவது ஒளிபரப்பட்டது, அதில் ஒரு மகா முனிவர் கடுமையாக தவங்கள் பெற்று காட்டில் தனியாக ஒரு ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வரும்போது அதிகாலையில் அருவியில் நீராட சென்றுள்ளார் அப்போது அவர் பார்வையில் அருவியின் அருகிலுள்ள சுனையில் நிறைமாத மான் ஒன்று நீர் அருந்திக் கொண்டிருந்தது இதனை ஒரு சிறுத்தை பார்த்து விட்டது அதனைக் கண்ட மான் உடனே உயிர் பதறி பாறையின் இடுக்குக்ள வழியாக தாவித்தாவி சென்றது, இதன் வேகத்திலும் பயத்திலும் தன் குட்டியை ஈன்றுவிட்டது பின்னும் ஓடும் போது தாய்மானை சிறுத்தை கடித்து உணவாக்கி விட்டது, இந்த நிகழ்வை கண்டு கொண்டிருந்த முனிவர் அனாதையாக உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் குட்டி மானை தானே எடுத்து வந்து ஆசிரமத்தில் வைத்து வளர்த்து வந்தார், தானே நேரிடையாக உணவழித்து அதனுடன் தன் வாழ்நாள் முழுவதும் அதனுடனயே கழித்து வந்தார், மான் வளர்ச்சி பெற்றது, முதிர்ச்சி பெற்ற முனிவரோ நமக்கு பின் இந்த மானின் கதி என்ன? என்பது பற்றி கவலையிலேயே தன் உயிர் பிரிந்தது, அன்னாரின் ஆழ்மனம் அந்த மான் மீதே இருந்ததால் அடுத்த பிறவியில் மானாகவே பிறந்தார் என கதையை சிந்தனையின் வழியே செயல் என்று கதையை முடித்தார், இது போன்று மீன் கதையை கூறுகையில் யோக ஆசனநிலை - தவ நிலை என்ற அடிப்படையில் ஒரு முனிவர் தன் ஆழ்மனதை உள்ளடக்கி நீருக்கு அடியில் தவம் செய்து கொண்டிருந்தார், அப்போது அவரின் எண்ண அலைகள் தனது ஞான உலகிலிருந்து பிரிந்து சுற்றுப்புறத்தின் பால் கவனம் ஈர்க்கப்பட்டது. அப்போது தனது உடலை சுற்றி ஒரு மீனின் சந்ததிகள் சுமார் ஆயிரக்கணக்கான மீன்கள் உணவை தேடுவதும், சந்தோசமாக அங்குமிங்கும் கூட்டமாக அலைவதைப் பார்த்து அந்த நிலை வாழ்க்கையின் பால் மனம் ஈர்க்கப்பட்டார். உடனே தான் செய்த தவத்தை விட்டுவிட்டு திருமணம் செய்யவேண்டுமென்ற எண்ணம் கொண்டு தான் பெற்ற தவ வலுமையால் இளமை உருவம் கொண்டு ஒரு மன்னனின் பெண்களான சுமார் 100 பேரை மனமுடித்து இல்லரத்தில் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து தான் எண்ணம் கொண்ட மீன் குஞ்சுகள் போல் சுமார் ஆயிரக்கணக்கான வம்சா வாரிசுகளை பெற்றார், எனவே இந்த தவ முனியின் எண்ணமும் சிந்தனையும் ஆழ்மன சிந்தனையின் செயலாகவே வெற்றி கண்டது. என்று விளக்கமளித்தார் ஆச்சாரியார்,
எனவே ஆழ்மனதின் சிந்தனைகள் குறிக்கோள்களாகவும்,குறிக்கோள்கள் சிந்தனை படலங்களாகவும் அதுவே காந்த அலைகளாகவும் மாறி உண்மை நிகழ்வுகளாகவே அமைய வழி செய்கிறது. எந்த காரியமும் என்னால் முடியும் அது நடந்தே தீரும் என நம்பிக்கை உண்டு என்று மீீண்டும் மீண்டும் கூறி ஆழ்மனதை திடப்படுத்தினால் அதுவே மந்திர சக்தியாக மாறி அற்புதமாக மாற்றிக் காட்டுகிறது, இந்த முன்னேற்ற பாதையில் பயணிக்க குறுக்கீடுகளாக மூன்று எதிரிகளை சந்திக்கலாம், அதில் ஒன்று உங்களது எதிர்மறையான சிந்தனைகள் - நன்மையையோ நோக்கி பயணிககையில் நன்மையான பயன்கள் எவ்வாறு உருவாகிறதோ அது போலவே உங்களின் எதிர்மறை ஆழ்மனச்சிந்தனையால் எதிர்மறை விளைவுகளையும் சந்திக்க முடியும், எனவே இதனை முறியடிப்பது உங்கள் சிந்தனையில்தான் உள்ளது. இதற்கு அடுத்தாற்போல் - அவ நம்பிக்கை - பொதுவாக மனிதர்கள் அவநம்பிக்கையில் - நம்பிக்கையுடையவர்களாகவும், நம்பிக்கையில் அவநம்பிக்கை யுடையவர்களாகவும் வாழ்கின்றனர், எனவே அவர்களின் தோல்விக்கு இதுவும் காரணமாகிறது. அடுத்து முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது - தன்பயம் - தன்பயம், மனிதன் உயர்ந்த குறிக்கோள் கொள்ளாமல் இருப்பதற்கும் பெரிய காரியங்கள் செய்யாமற் போவதற்கும் காரணம் அவன் உள்ளத்தில் புதைந்திருக்கும் அச்சமே. மற்றவர்களின் விமர்சனத்தால் நம் அச்ச உணர்வு மிகப்படுகிறது. இதுவே ஆழ்மன சிந்தனைக்கு தடைகல்லாகவும், உஙகள் மனக்கவலைக்கு ஆஸ்திவாரமாகவும் செயல்படுகிறது.
இநத தடைகள் எல்லாம் மீறி எதனையும் என்னால் சாதிக்க முடியும் இறைவன் கருணை மிக்கவன் நாம் விரும்பியதை நிச்சயம் குறைவற்று கொடுப்பார் எனக்கு இறைவன் தந்த வலிமை இருக்கிறது என்ற உங்கள் கருத்தை ஆழ்மனக் கட்டளையாக கொடுத்து கொண்டே மனச்சித்திரத்தை ஒடவிட்டு நீங்கள் வணங்கும் இறைவனிடம் உங்கள் கனவை நிறைவேற்ற விண்ணப்பம் செய்யுங்கள். இரவில் உறங்குவதற்கு முன், படுக்கையில் அமர்ந்தவாறே கண்களை மூடி கவனத்தை உங்கள் மூச்சில் குவியுங்கள் சில நொடிகளில் உங்கள் எணண அலைகள் அடங்கி கவனம் ஒரிடத்தில் குவியும் இதுவே தியான நிலைக்கு வந்துவிட்டிர்கள் இந்நிலையில் எவ்வளவுக் கெவ்வளவு உணர்ச்சியோடு நிறைவேற போகிறது என்ற நம்பிக்கையோடு கட்டளை கொடுக்கிறீர்களே அவ்வளவு விரைவில் உங்களுக்கு தேவையான அறிவு,திறமை,ஆற்றல், வசதி, வாய்ப்பு முதலீடு போன்ற அனைத்தும் உங்களை தேடி வரும்
அன்பன்
வை,பூமாலை
சுந்தரபாண்டியம்
ஆழ் மன சிந்தனைக்கு அதன் வெற்றிக்கு அடிப்படையாக அமைவது குறிக்கோளுடன் சேர்ந்த எண்ணமும் முக்கியத்துவம் பெறுகிறது, குறிக்கோளின் வலுவினை விளக்க கீழ்கண்ட எடுத்துக்காட்டு உதாரணமாக அமைகிறது, ஒரு தடவை அமெரிக்க ஜனதிபதி ஜான்கென்னடி ஒரு பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் சகசமான முறையில் உறையாடும் போது ஒரு மாணவனைப் பார்த்து புன்னகையுடன் - உன் எதிர்காலம் என்ன? - என்று கேட்டார் உடனே அவன் பளீரென்று இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும் இது தான் என் லட்சியம் என்றான், உடனே ஜனதிபதியும் நன்று என்று வாழ்த்தி சென்றார், அந்த பள்ளி மாணவனின் லட்சியம் - குறிக்கோள் - எண்ணம் ஜனதிபதியாகவேண்டுமென்ற உயர்ந்தஆழ்மன சிந்தனை அவனை அமெரிக்க ஜனதிபதியாகவே ஆக்கியது, அது வேறுயாருமல்ல ..... அவன்தான் புகழ்பெற்ற பில்கிளிண்டன் எனவே தீர்ககமான தீர்மாணமே புகழின் உச்சிக்கும் தான் நினைத்த செயலுக்கு கால்கோளாக அமைகிறது,மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழியும் இதனையே விளக்கிறது.
எண்ணமே திண்ணமாகி அதுவே மனத்திரையில் ஆழமாக பதிந்து நம் எண்ண உணர்வுகளே - இந்தபிரபஞ்மென்ற வாயுமண்டலத்தில் எலக்ட்ரானிக் - அலைவரிசைகள் போல நம் மூளைியின் அலை வரிசைகளினால் தூண்டப்பட்டு அது வே செயலாக மாறுகிறது. ஒருவரின் எண்ணங்கள் முற்பிறவியில் தான் எதன்பால் மிகுந்த அன்பு செலுத்தி அதனையே சர்வ சதா காலமும் எண்ணிக்கொண்டவனின் எண்ணங்களே அடுத்த பிறவியில் அதுவாகவே பிறப்பான் என்பது மூததையர்கள் கண்ட உண்மை இதனையே விஜய் டிவி மகான்கள் என்ற நிகழ்ச்சியில் மான - மீன் கதையாக ஒரு ஆச்சாரியார் விளக்குவது ஒளிபரப்பட்டது, அதில் ஒரு மகா முனிவர் கடுமையாக தவங்கள் பெற்று காட்டில் தனியாக ஒரு ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வரும்போது அதிகாலையில் அருவியில் நீராட சென்றுள்ளார் அப்போது அவர் பார்வையில் அருவியின் அருகிலுள்ள சுனையில் நிறைமாத மான் ஒன்று நீர் அருந்திக் கொண்டிருந்தது இதனை ஒரு சிறுத்தை பார்த்து விட்டது அதனைக் கண்ட மான் உடனே உயிர் பதறி பாறையின் இடுக்குக்ள வழியாக தாவித்தாவி சென்றது, இதன் வேகத்திலும் பயத்திலும் தன் குட்டியை ஈன்றுவிட்டது பின்னும் ஓடும் போது தாய்மானை சிறுத்தை கடித்து உணவாக்கி விட்டது, இந்த நிகழ்வை கண்டு கொண்டிருந்த முனிவர் அனாதையாக உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் குட்டி மானை தானே எடுத்து வந்து ஆசிரமத்தில் வைத்து வளர்த்து வந்தார், தானே நேரிடையாக உணவழித்து அதனுடன் தன் வாழ்நாள் முழுவதும் அதனுடனயே கழித்து வந்தார், மான் வளர்ச்சி பெற்றது, முதிர்ச்சி பெற்ற முனிவரோ நமக்கு பின் இந்த மானின் கதி என்ன? என்பது பற்றி கவலையிலேயே தன் உயிர் பிரிந்தது, அன்னாரின் ஆழ்மனம் அந்த மான் மீதே இருந்ததால் அடுத்த பிறவியில் மானாகவே பிறந்தார் என கதையை சிந்தனையின் வழியே செயல் என்று கதையை முடித்தார், இது போன்று மீன் கதையை கூறுகையில் யோக ஆசனநிலை - தவ நிலை என்ற அடிப்படையில் ஒரு முனிவர் தன் ஆழ்மனதை உள்ளடக்கி நீருக்கு அடியில் தவம் செய்து கொண்டிருந்தார், அப்போது அவரின் எண்ண அலைகள் தனது ஞான உலகிலிருந்து பிரிந்து சுற்றுப்புறத்தின் பால் கவனம் ஈர்க்கப்பட்டது. அப்போது தனது உடலை சுற்றி ஒரு மீனின் சந்ததிகள் சுமார் ஆயிரக்கணக்கான மீன்கள் உணவை தேடுவதும், சந்தோசமாக அங்குமிங்கும் கூட்டமாக அலைவதைப் பார்த்து அந்த நிலை வாழ்க்கையின் பால் மனம் ஈர்க்கப்பட்டார். உடனே தான் செய்த தவத்தை விட்டுவிட்டு திருமணம் செய்யவேண்டுமென்ற எண்ணம் கொண்டு தான் பெற்ற தவ வலுமையால் இளமை உருவம் கொண்டு ஒரு மன்னனின் பெண்களான சுமார் 100 பேரை மனமுடித்து இல்லரத்தில் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து தான் எண்ணம் கொண்ட மீன் குஞ்சுகள் போல் சுமார் ஆயிரக்கணக்கான வம்சா வாரிசுகளை பெற்றார், எனவே இந்த தவ முனியின் எண்ணமும் சிந்தனையும் ஆழ்மன சிந்தனையின் செயலாகவே வெற்றி கண்டது. என்று விளக்கமளித்தார் ஆச்சாரியார்,
எனவே ஆழ்மனதின் சிந்தனைகள் குறிக்கோள்களாகவும்,குறிக்கோள்கள் சிந்தனை படலங்களாகவும் அதுவே காந்த அலைகளாகவும் மாறி உண்மை நிகழ்வுகளாகவே அமைய வழி செய்கிறது. எந்த காரியமும் என்னால் முடியும் அது நடந்தே தீரும் என நம்பிக்கை உண்டு என்று மீீண்டும் மீண்டும் கூறி ஆழ்மனதை திடப்படுத்தினால் அதுவே மந்திர சக்தியாக மாறி அற்புதமாக மாற்றிக் காட்டுகிறது, இந்த முன்னேற்ற பாதையில் பயணிக்க குறுக்கீடுகளாக மூன்று எதிரிகளை சந்திக்கலாம், அதில் ஒன்று உங்களது எதிர்மறையான சிந்தனைகள் - நன்மையையோ நோக்கி பயணிககையில் நன்மையான பயன்கள் எவ்வாறு உருவாகிறதோ அது போலவே உங்களின் எதிர்மறை ஆழ்மனச்சிந்தனையால் எதிர்மறை விளைவுகளையும் சந்திக்க முடியும், எனவே இதனை முறியடிப்பது உங்கள் சிந்தனையில்தான் உள்ளது. இதற்கு அடுத்தாற்போல் - அவ நம்பிக்கை - பொதுவாக மனிதர்கள் அவநம்பிக்கையில் - நம்பிக்கையுடையவர்களாகவும், நம்பிக்கையில் அவநம்பிக்கை யுடையவர்களாகவும் வாழ்கின்றனர், எனவே அவர்களின் தோல்விக்கு இதுவும் காரணமாகிறது. அடுத்து முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது - தன்பயம் - தன்பயம், மனிதன் உயர்ந்த குறிக்கோள் கொள்ளாமல் இருப்பதற்கும் பெரிய காரியங்கள் செய்யாமற் போவதற்கும் காரணம் அவன் உள்ளத்தில் புதைந்திருக்கும் அச்சமே. மற்றவர்களின் விமர்சனத்தால் நம் அச்ச உணர்வு மிகப்படுகிறது. இதுவே ஆழ்மன சிந்தனைக்கு தடைகல்லாகவும், உஙகள் மனக்கவலைக்கு ஆஸ்திவாரமாகவும் செயல்படுகிறது.
இநத தடைகள் எல்லாம் மீறி எதனையும் என்னால் சாதிக்க முடியும் இறைவன் கருணை மிக்கவன் நாம் விரும்பியதை நிச்சயம் குறைவற்று கொடுப்பார் எனக்கு இறைவன் தந்த வலிமை இருக்கிறது என்ற உங்கள் கருத்தை ஆழ்மனக் கட்டளையாக கொடுத்து கொண்டே மனச்சித்திரத்தை ஒடவிட்டு நீங்கள் வணங்கும் இறைவனிடம் உங்கள் கனவை நிறைவேற்ற விண்ணப்பம் செய்யுங்கள். இரவில் உறங்குவதற்கு முன், படுக்கையில் அமர்ந்தவாறே கண்களை மூடி கவனத்தை உங்கள் மூச்சில் குவியுங்கள் சில நொடிகளில் உங்கள் எணண அலைகள் அடங்கி கவனம் ஒரிடத்தில் குவியும் இதுவே தியான நிலைக்கு வந்துவிட்டிர்கள் இந்நிலையில் எவ்வளவுக் கெவ்வளவு உணர்ச்சியோடு நிறைவேற போகிறது என்ற நம்பிக்கையோடு கட்டளை கொடுக்கிறீர்களே அவ்வளவு விரைவில் உங்களுக்கு தேவையான அறிவு,திறமை,ஆற்றல், வசதி, வாய்ப்பு முதலீடு போன்ற அனைத்தும் உங்களை தேடி வரும்
அன்பன்
வை,பூமாலை
சுந்தரபாண்டியம்
உ
ஓம் மகா கணபதியே ஹ!
விநாயகர் சதுர்த்தி
இந்து மத சடங்குகளில் நாம் எந்த ஒரு காரித்தை தொடங்கினாலும் முதலில் விநாயகரை வணங்கிவிட்டு விநாகர் துதி பாடல்கள் ஓதித்தான் தொடங்குவது நமது இந்துமத வழிமுறையாகும், ஏன் எந்த ஒரு எழுத்தொரு ஏட்டிலும் எழுதும் முதல் எழுத்து பிள்ளையார் சுழி ("உ")போட்டுத்தான் எழுத்து பதிவினை தொடங்குவதும், மத சடங்குகள் யாகங்கள் செய்யும் போது பிள்ளையார் சிலை அல்லது மஞ்சள், கழிமண் அல்லது பசுஞ்சாணம் இவற்றினால் பிள்ளையார் பிடித்து, அதன் மேல் அருகம் புல் சொருகி அதனையே விநாயகராக்கி வேத மந்திரங்கள் ஒலித்துதான் வேலையை - யாகங்களை - சமய வழி பாடுகளை தொடங்குவது நமது இந்து முறை வழிமுறையாகும், இது மட்டுமல்லாது காட்சிக்க எளியவனாய் எங்கும் பார்க்கும் நோக்கும் இடங்களில் குளக்கரைகள் அரசமரம் வேப்பமர அடிவாரங்கள் முச்சந்திகள் என பார்க்கும் இடமெல்லாம் பிள்ளையார் கோவிலாகத்தான் காணப்படும், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முழுமுதற்கடவுளான விநாயகர் பிறந்த தினமே விநாயகர் சதுர்த்தியாக உலகம் முழுவதுமுள்ள இந்துக்களால் மிக விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது,
சதுர்த்தி விரத வரலாறு.
நான் முகனின் கொட்டாவியில் பிறந்த சிந்தூரணை சம்காரஞ் செய்ய கஜாணன மூர்த்தியாய் அவதாரம் செய்த நாள் ஆவணி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தி இந்நாளில் சிவபெருமானும் உமாதேவியாரும் அக்கடவுளைப் பூசித்தனால் இவ்வுலகில் யாவரும் ஆண்டுதோறும் இந்நாளில் விநாகய சதுர்த்தி விரத மேற் கொள்ளப் பட்டு அந்நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் பெயர் காரணம்.
தன்னை வணங்கிணவர்க்கு விக்கினத்தை நீக்குவோனும், அவ்வாறு வணங்காதவர்க்கு விக்கினத்தை தருபவரும், தனக்கு மேல் நாயகரில்லாதவரும் ஆதலால் இப்பெயர் வந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது.
விநாயகரை பிள்ளையார் என்று கூறினாலும், இவரை பல பெயர் கொண்டு தங்களுக்கு ஏற்ப நற்செயல்கள் புரிந்த காரணத்தாலும், செல்லப் பெயராகவும் பற்பல நாமங்களில் அழைக்கப் பட்டு வழிபடுகின்றனர். சிந்தாமணி விநாயகர். வக்ர துண்ட விநாயகர், கலாதார், பாலசந்திரன், கபில விநாயகர், சமுகர், கஜானன், தூமகேது, உண்டுவிநாயகர், சித்தி விநிாயகர், ஆழக்கரிசி விநாயகர், வல்லப விநாயகர், வழிவிடுவிநாயகர் என பல பெயர்களால் அழைக்கப் படுபவர்.
விநாயகர் திருவிளையாடல்
இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தி முனிவரிடம் இருந்த கமண்டல நீரை காக உருவம் கொண்டு கவித்து, தென்னாட்டில் காவேரி நதியாக பாயச்செய்தும் சீர்காழியில் உள்ள நந்தவனத்தை செழிக்க செய்தும், திருவிளையாடல் புரிந்தார், விநாயகர் அகத்தியரின் கமண்டலத்தை கவித்ததால் கோபம் கொண்ட அகத்தியர் அவரை தலையில் கொட்ட முயன்றபோது அவரின் கைக்கு தப்பித்து தரிசனம் கொடுத்தவர் விநாயகர்,
பிள்ளையார் வழிபாட்டிற்கென சில அம்சங்கள்
சிதறு தோங்காய் போடுதல், நெற்றியில் குட்டிக் கொள்தல், தோப்புக்கரணம் போடுதல் ஆகியவை எத்தெய்வத்திற்கும் இல்லாத வழிமுறை வழிபாடாகும்
மற்ற சுவாமிகளை தரிசனம் செய்வதென்றால் அதற்காக காலம் பார்த்து குளித்து முழுகி அர்ச்சனை சாமான்கள் வாங்கி கோவிலுக்குப்போய் பிரகாரம் சுற்றி வரும்போது முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு சுவாமி சன்னதிகளை தூரத்திலிருந்தே தரிசிப்போம் ஆனால் விநாயகர் கோவில் விநாயகர் சன்னதியில் மட்டுமே பக்கத்தில் நின்று தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். அத்தோடு இல்லாமல் காண்போருக்கு எளியவராய் செல்லும் வழிகளிலெல்லாமும், முச்சந்தி அரச-வேப்பமரத்தடியிலும் குளத்தங்களைகளிலும், நாம் நினைக்கும் இடமெல்லாம் பிள்ளையார் இருப்பார் ,அவரை பார்த்த மாத்திரத்ததில் கைகூப்பி விட்டு, நெற்றியில்- தலையில்- குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு விட்டு நடையை கட்டிவிடுகிறோம். இதிலேயே நமக்கு சொல்லத் தெரியாத ஒரு நிமமதி சந்தோசம் கிடைக்கிறது.
பிள்ளையாரை நினைக்கும்போது அவ்வையாரையும் நாம் சேர்த்து நினைத்தால் இரட்டிப்பு அநுக்கிரகம் கிடைக்கும். விநாயகர் அகவல் பாடி நாம் எளிய தமிழில் வணங்க அகவல் தந்தவர் அவ்வையார் . அவ்வையின் அகவலில் மகிழ்ந்த விநாயகர் அவரை தம் துதிக்கையினால் தூக்கி ஏந்தி கயிலையில் சிவபெருமான் முன்னிலையில் ஆதியுலா அரங்கேற்றம் செய்ய எழுந்தருளும் சேரமான் பெருமான் ஸ்ரீசுந்தரர் ஆகியோர் செல்லும் முன்பே அங்கு கொண்டு சேர்த்த பெருமை விநாயகருக்கே சாரும்.
விநாயகர் பற்றிய துதிப்பாடல்கள்
வேத மந்திரம்,
சுக்லம் பரதம் விஷ்னும சசிவர்ணம் சதுர்பஜம்
ப்ரசன்ன வதனம் த்யோயேத் ஸ்வவிக்னோப சாந்தயே
காயத்திரி மந்திரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்திப் பிரசோயாத்
திருமந்திரம்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்திரன் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றிகின்றேனே! - திரு மூலர்
கபிலர்
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை - கபிலர்
ஒளவையார்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ்மூன்றும் தா -அவ்வையார்
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக் கொண்டு
துபபார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு - அவ்வையார்
கல்லுருவ ஞானக் கனிவே கரிமுகமே
தொல்லுலகத் துன்பந்தீர் தூயவ - இல்லமெலாம்
குழும் கலைதேர் தொழிழே அருளன்பு
வாழும் கருணை வழி! - விணமணி
பிள்ளையார் நோன்பு
இந்து மத வழிபாட்டில் தென்தமிழ்நாட்டிலும் வடநாட்டிலும் பிள்ளையார் நோன்பு வெகு சிற்ப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, பிள்ளையார் நோன்பு முறை சமூகம் முழுவதிலும் ஒரே அமைப்பில் இருப்பதால் நோன்பு நாள் மாலையில் விநாயகப் பெருமானது திரு உருவத்தை வீட்டில் புனிதமான இடத்தில் எழுந்தருளுவித்து நிவேதனத்திற்காக எள்,நெல் முதலியனவும், பொரி பணிகாரம் அப்பம் வெல்லப்பாகு கடலைஉருண்டை முதலியனவும் ஆசாரத்துடன் நிவேதித்து ஆவாரம் பூவால் செண்டு கட்டி தாமரை இழை தூபம் ஏற்றி வாழைப்பழம் கனிவகைகள் வைத்தும் தேங்காய் மற்றும் தூப தீப வகைகளுடன் சுவாமி முன் வைத்து தோத்திரங்கள் ஓதி வணங்கிய பின் சுவாமிக்கு படைத்த நிவேத்தியங்களை உண்டு நோண்பை முடிப்பர்
வை.பூமாலை
சுந்தரபாண்டியம்
ஓம் மகா கணபதியே ஹ!
விநாயகர் சதுர்த்தி
இந்து மத சடங்குகளில் நாம் எந்த ஒரு காரித்தை தொடங்கினாலும் முதலில் விநாயகரை வணங்கிவிட்டு விநாகர் துதி பாடல்கள் ஓதித்தான் தொடங்குவது நமது இந்துமத வழிமுறையாகும், ஏன் எந்த ஒரு எழுத்தொரு ஏட்டிலும் எழுதும் முதல் எழுத்து பிள்ளையார் சுழி ("உ")போட்டுத்தான் எழுத்து பதிவினை தொடங்குவதும், மத சடங்குகள் யாகங்கள் செய்யும் போது பிள்ளையார் சிலை அல்லது மஞ்சள், கழிமண் அல்லது பசுஞ்சாணம் இவற்றினால் பிள்ளையார் பிடித்து, அதன் மேல் அருகம் புல் சொருகி அதனையே விநாயகராக்கி வேத மந்திரங்கள் ஒலித்துதான் வேலையை - யாகங்களை - சமய வழி பாடுகளை தொடங்குவது நமது இந்து முறை வழிமுறையாகும், இது மட்டுமல்லாது காட்சிக்க எளியவனாய் எங்கும் பார்க்கும் நோக்கும் இடங்களில் குளக்கரைகள் அரசமரம் வேப்பமர அடிவாரங்கள் முச்சந்திகள் என பார்க்கும் இடமெல்லாம் பிள்ளையார் கோவிலாகத்தான் காணப்படும், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முழுமுதற்கடவுளான விநாயகர் பிறந்த தினமே விநாயகர் சதுர்த்தியாக உலகம் முழுவதுமுள்ள இந்துக்களால் மிக விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது,
சதுர்த்தி விரத வரலாறு.
நான் முகனின் கொட்டாவியில் பிறந்த சிந்தூரணை சம்காரஞ் செய்ய கஜாணன மூர்த்தியாய் அவதாரம் செய்த நாள் ஆவணி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தி இந்நாளில் சிவபெருமானும் உமாதேவியாரும் அக்கடவுளைப் பூசித்தனால் இவ்வுலகில் யாவரும் ஆண்டுதோறும் இந்நாளில் விநாகய சதுர்த்தி விரத மேற் கொள்ளப் பட்டு அந்நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் பெயர் காரணம்.
தன்னை வணங்கிணவர்க்கு விக்கினத்தை நீக்குவோனும், அவ்வாறு வணங்காதவர்க்கு விக்கினத்தை தருபவரும், தனக்கு மேல் நாயகரில்லாதவரும் ஆதலால் இப்பெயர் வந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது.
விநாயகரை பிள்ளையார் என்று கூறினாலும், இவரை பல பெயர் கொண்டு தங்களுக்கு ஏற்ப நற்செயல்கள் புரிந்த காரணத்தாலும், செல்லப் பெயராகவும் பற்பல நாமங்களில் அழைக்கப் பட்டு வழிபடுகின்றனர். சிந்தாமணி விநாயகர். வக்ர துண்ட விநாயகர், கலாதார், பாலசந்திரன், கபில விநாயகர், சமுகர், கஜானன், தூமகேது, உண்டுவிநாயகர், சித்தி விநிாயகர், ஆழக்கரிசி விநாயகர், வல்லப விநாயகர், வழிவிடுவிநாயகர் என பல பெயர்களால் அழைக்கப் படுபவர்.
விநாயகர் திருவிளையாடல்
இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தி முனிவரிடம் இருந்த கமண்டல நீரை காக உருவம் கொண்டு கவித்து, தென்னாட்டில் காவேரி நதியாக பாயச்செய்தும் சீர்காழியில் உள்ள நந்தவனத்தை செழிக்க செய்தும், திருவிளையாடல் புரிந்தார், விநாயகர் அகத்தியரின் கமண்டலத்தை கவித்ததால் கோபம் கொண்ட அகத்தியர் அவரை தலையில் கொட்ட முயன்றபோது அவரின் கைக்கு தப்பித்து தரிசனம் கொடுத்தவர் விநாயகர்,
பிள்ளையார் வழிபாட்டிற்கென சில அம்சங்கள்
சிதறு தோங்காய் போடுதல், நெற்றியில் குட்டிக் கொள்தல், தோப்புக்கரணம் போடுதல் ஆகியவை எத்தெய்வத்திற்கும் இல்லாத வழிமுறை வழிபாடாகும்
மற்ற சுவாமிகளை தரிசனம் செய்வதென்றால் அதற்காக காலம் பார்த்து குளித்து முழுகி அர்ச்சனை சாமான்கள் வாங்கி கோவிலுக்குப்போய் பிரகாரம் சுற்றி வரும்போது முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு சுவாமி சன்னதிகளை தூரத்திலிருந்தே தரிசிப்போம் ஆனால் விநாயகர் கோவில் விநாயகர் சன்னதியில் மட்டுமே பக்கத்தில் நின்று தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். அத்தோடு இல்லாமல் காண்போருக்கு எளியவராய் செல்லும் வழிகளிலெல்லாமும், முச்சந்தி அரச-வேப்பமரத்தடியிலும் குளத்தங்களைகளிலும், நாம் நினைக்கும் இடமெல்லாம் பிள்ளையார் இருப்பார் ,அவரை பார்த்த மாத்திரத்ததில் கைகூப்பி விட்டு, நெற்றியில்- தலையில்- குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு விட்டு நடையை கட்டிவிடுகிறோம். இதிலேயே நமக்கு சொல்லத் தெரியாத ஒரு நிமமதி சந்தோசம் கிடைக்கிறது.
பிள்ளையாரை நினைக்கும்போது அவ்வையாரையும் நாம் சேர்த்து நினைத்தால் இரட்டிப்பு அநுக்கிரகம் கிடைக்கும். விநாயகர் அகவல் பாடி நாம் எளிய தமிழில் வணங்க அகவல் தந்தவர் அவ்வையார் . அவ்வையின் அகவலில் மகிழ்ந்த விநாயகர் அவரை தம் துதிக்கையினால் தூக்கி ஏந்தி கயிலையில் சிவபெருமான் முன்னிலையில் ஆதியுலா அரங்கேற்றம் செய்ய எழுந்தருளும் சேரமான் பெருமான் ஸ்ரீசுந்தரர் ஆகியோர் செல்லும் முன்பே அங்கு கொண்டு சேர்த்த பெருமை விநாயகருக்கே சாரும்.
விநாயகர் பற்றிய துதிப்பாடல்கள்
வேத மந்திரம்,
சுக்லம் பரதம் விஷ்னும சசிவர்ணம் சதுர்பஜம்
ப்ரசன்ன வதனம் த்யோயேத் ஸ்வவிக்னோப சாந்தயே
காயத்திரி மந்திரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்திப் பிரசோயாத்
திருமந்திரம்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்திரன் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றிகின்றேனே! - திரு மூலர்
கபிலர்
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை - கபிலர்
ஒளவையார்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ்மூன்றும் தா -அவ்வையார்
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக் கொண்டு
துபபார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு - அவ்வையார்
கல்லுருவ ஞானக் கனிவே கரிமுகமே
தொல்லுலகத் துன்பந்தீர் தூயவ - இல்லமெலாம்
குழும் கலைதேர் தொழிழே அருளன்பு
வாழும் கருணை வழி! - விணமணி
பிள்ளையார் நோன்பு
இந்து மத வழிபாட்டில் தென்தமிழ்நாட்டிலும் வடநாட்டிலும் பிள்ளையார் நோன்பு வெகு சிற்ப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, பிள்ளையார் நோன்பு முறை சமூகம் முழுவதிலும் ஒரே அமைப்பில் இருப்பதால் நோன்பு நாள் மாலையில் விநாயகப் பெருமானது திரு உருவத்தை வீட்டில் புனிதமான இடத்தில் எழுந்தருளுவித்து நிவேதனத்திற்காக எள்,நெல் முதலியனவும், பொரி பணிகாரம் அப்பம் வெல்லப்பாகு கடலைஉருண்டை முதலியனவும் ஆசாரத்துடன் நிவேதித்து ஆவாரம் பூவால் செண்டு கட்டி தாமரை இழை தூபம் ஏற்றி வாழைப்பழம் கனிவகைகள் வைத்தும் தேங்காய் மற்றும் தூப தீப வகைகளுடன் சுவாமி முன் வைத்து தோத்திரங்கள் ஓதி வணங்கிய பின் சுவாமிக்கு படைத்த நிவேத்தியங்களை உண்டு நோண்பை முடிப்பர்
வை.பூமாலை
சுந்தரபாண்டியம்
ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
தங்களின் வாழ்க்கையில் சனி திசையால் படும் கஷ்டங்களை நிவர்த்தி செய்து அதன் தாகத்தை குறைக்க தேய்பிறை அஸ்டமி சனிக்கிழமைகளில் கால பைரவருக்கு முறைப்படி பூஜை செய்து தங்களின் கஷ்டங்களில் குறைத்து நிவாரணம் பெற வேண்டுகிறோம், இதில் கண்ட செய்தி துளியின் மூலம்அருள்மிகு வைகுண்டமூர்த்தி அய்யனார் கோவிலில் கால பைரவருக்கு பரிகார பூஜை செய்து மூலம் பயன் பெற அன்புடன் வேண்டுகிறோம்
அன்புடன்,
வை, பூமாலை சுந்தரபாண்டியம்
தங்களின் வாழ்க்கையில் சனி திசையால் படும் கஷ்டங்களை நிவர்த்தி செய்து அதன் தாகத்தை குறைக்க தேய்பிறை அஸ்டமி சனிக்கிழமைகளில் கால பைரவருக்கு முறைப்படி பூஜை செய்து தங்களின் கஷ்டங்களில் குறைத்து நிவாரணம் பெற வேண்டுகிறோம், இதில் கண்ட செய்தி துளியின் மூலம்அருள்மிகு வைகுண்டமூர்த்தி அய்யனார் கோவிலில் கால பைரவருக்கு பரிகார பூஜை செய்து மூலம் பயன் பெற அன்புடன் வேண்டுகிறோம்
அன்புடன்,
வை, பூமாலை சுந்தரபாண்டியம்
திருப்பள்ளியெழுச்சி (சிவன்)
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே!
புலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 1
அருணண்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ, நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிறை அருள்பதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லே! பள்ளி எழுந்தரு ளாயே! 2
கூவின பூங்குயில்; கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளியொளி உதயத்து
ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழல் தாளிணை காட்டாய்!
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்!
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 3
இன்னிசை வீணையர், யாழினர், ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர், ஒருபால்;
தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 4
பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம் உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக் கும்அரி யாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 5
பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்
மைப்பறு கண்ணியர்; மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா!
செப்புறு கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
இப்பிறப்பு அறுத்துஎமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 6
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு; இவன்அவன்; எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்சூழ் திருஉத்தர கோச
மங்கையுள் ளாய்! திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்;
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 7
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்?
பந்தணை விரலியும் நீயும்நின் னடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே!
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தே! பள்ளி எழுந்தரு ளாயே! 8
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளே!உன் தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!
வண்திருப் பெருந்துறை யாய்! வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
கடலமு தே! கரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்! உல குக்குயி ரானாய்!
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 9
புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் னலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்!
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. 10
காஞ்சி காமகோடி மகான் மகா சுவாமிகளின் சொற்பொழிவுகளிடமிருந்து எடுக்கப்பட்ட ஆன்மீக பொன்மொழிகள்,
1) சாஸ்திரங்களைத் தெளிவாக அறிந்து அதன்படி மக்களை வழிநடத்தி அதை அஞுசரிப்பவர்தான் ஆசார்யார்
2) சாஸ்திரம் மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் அவர் வித்வான்தான்
3) சாஸ்திரம் மட்டடும் தெரிந்தால் அவர் - வித்வான்.
சாஸ்திரம் அஞுபவிப்பவர் - ஞானி
சாஸ்திரம் உபதேசம் செய்பவர் - பிரசாரகர்
4) முதலில் அழகாகத் தோன்யதுதான் அப்புறம் உபத்திரமாக போகிறது
5) அவரவர்கள் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் செளக்கியம்
6) பரமாத்மாவிடம் நம்மையறியாமல் சித்தத்தை சேர்ப்பதுதான் பக்தி
7) உண்மை என்பது அறிவுதான் என்றால் அறிகிற அந்த சக்தியே உண்மை - அதுவே சத்தியம்
8) ஆசைகளை அடக்கி, மாயையை உடைத்தெறி
9) நிறைநது நின்ற ஒன்றை தெரிந்து விட்டால் நிறைந்து போகிறது.
10) சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீட்சண்யம் இருக்கும்
11) மனத்தை அடக்கி, நிலைநிறுத்தி ஈசனிடம் சேர்ப்பது பிராணாயமம் , தியானம் நிஷ்னம் - இதை சொல்வது யோக பாதம்
12) மனத்தை வெற்றி கொண்டவர் உலகத்தை வெற்றி கொள்வான். அந்த வெற்றிக்கு உதவுவது ஞானம்
13) ஈசனை தவிர வேறு பொருள் இல்லை என்ற அனுபவம் வந்து விட்டால் ஆசைக்கு இடமில்லை
14) தினமும் கொஞ்ச நேரமாவது சிவ நாமம் சொன்னால் எல்லா சேமமும் கிடைக்கும்
15) பிறக்கு உதவி செய்யும் போது, இருவரும் மனநிறைவு பெறுவர்
16) நல்ல எண்ணங்கள் இருந்தால் நல்ல செயல்கள் தானாகப் பெருகும்
17) பரோபகாரம் எதுவும் செய்யாத நாளெல்லாம் நாம் இருந்தும் செத்த நாளே
18) அன்பில்லா வாழ்கை வீண் வியர்த்தம்
19) சாந்தம் வந்தால் எல்லா பற்றும் போய்வடும்
20) அழிவில்லாத கடவுடளிடம் செலுத்தும் அன்புக்க அழவேது?
21, நிறை வேறாத ஆசைகளின் இரண்டு உருவங்கள் தான் துக்கமும், கோபமும்
22. நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக் கொண்டு பிறருக்கு உபதேசம் செய்தால் அது பிரயோசனப்படாது.
23. கல்விக்கு இரண்டு அம்சங்கள் உண்டு ஒன்று- குருபக்தி, மற்றொன்று விநயம்
24. தாய், தந்தை , குரு இம்மூவரிடமும் அசையா பக்தி கொண்டால் மேன்மை தரும்.
25. மான, அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டை செய்தல் வேண்டும்
26. எக்காலத்திலும், எவ்விஷயத்திலும் திருப்தியை ஏற்படுத்தக் கூடிய தானம் - ஞான தானம்
27.உபகாரம் செய்தால் நமக்கு சித்திக்கிற சித்த சுத்தியே பிரயோசனம்
28. கீர்த்தனம் என்றால் பகவான் புகழைப் பாடுவது
29. வழிபாடு தனியாகச் செய்வதைவிட கூட்டு வழிபாட்டில் உற்சாகம் இருக்கிறது.
30. வாக்கு, மனம், சரீரம், மூன்றும் ஒருவருக்கு சத்தியத்திலே நிலைதது விட்டால் அவர் சொல்வதெல்லாம் சத்தியமாகி விடும்.
31, பக்தியுடன் மனசை கடந்து விட்டால் ஞானம்
32. "தான்" என்பதே இல்லையேல் ஒருவன் பரமாத்வே ஆகிவிடுகிறான் அதுதான் அத்வைதம்
33. சேக்கிழார் ரொம்ப அழகாக வேதத்தை ஒரு பெரிய நதியாகவும் அதிலே சைவம் வைஷ்ணவம் முதலிய சம்பிரதாயங்களை பல படித்துறைகளாகவும் சொல்லியிருக்கிறார்.
34. வியாதியை போக்க - வைத்தியன். யாகம் வாங்க - பணக்காரன். துக்கம், பிறவிப்பிணி நீக்க - பரமேஸ்வரன்
35. நாம் செய்கின்ற காரியங்களை சுத்தமாக சித்த சுத்தியோடு தர்மமான முறையில் செய்ய ஈஸ்வர பக்தி வேண்டும்
36. சேராததை முடித்து வைப்பது எதுவோ அதுதான் மாயை, எது இன்னதென்று சொல்ல முடியாததே அதுதான் மாயை
37. பரன் என்றால் பெரியவர் பரம புருஷன் என்றால் பெரிய ஆள் - பெரிய ஆள் என்பதே பெருமாள் என்றானது.
38. பிறப்பு என்பது காமனால் உண்டாகிறது. இறப்பு என்பது காலனால் உண்டாகிறது.
39. பிறவி என்று எடுத்துவிட்டால் ஆனந்தம் எப்போதோ கொஞ்சம்தான் ஆனால் துக்கம்தான் அதிகமாக இருக்கிறது.
40, அழியாத வஸ்துவினிடத்தில் பரியம் வைத்தால் அந்த பரியம் அழியாமல் இருக்கும்
41. ஒன்றை ஆராய்ந்து ஒன்றை அறிகிற ஒன்றை செய்கிற, சக்தி யெல்லாம் ஈஸ்வர சக்தியிலிருந்து பிரகாசிக்கின்றன.
42. குருவினடத்திலே அபசாரம் பண்ணி விட்டு ஈஸ்வரவனிடத்தில் போனால் ஒன்றும் நடக்காது.
43. தெய்வ பக்தி, குருபக்தி ஆகிய இரண்டும் ஒவ்வொருவருக்கும் அவசியம்
44. விஞ்ஞான அறிவின் மூலம் வெளியில் இருக்கிற எத்தனையோ பூதங்களை அடக்கும் நாம் நம்மை ஆட்டி வைக்கும் மனம் என்னும் பூதத்தை அடக்க முடியவில்லை.
45, கஷ்டத்தையோ, துக்கத்தையோ, காமத்தையோ தெரிந்து கொள்ள அறிவு சக்தி இல்லையெனில் வாழ்வில் பிரயோசனம் இல்லை
46. புறக்கண்ணால் பார்க்க முடியாததை எல்லாம் அகக் கண்ணால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பார்த்து விடலாம்,
47. தவறுகளுக்கு எல்லாம் பிராயசித்தமாக இருப்பது காயத்ரி ஜபம்
48. ஓர் அழகியை பார்த்தால் காமம் வரும் துஷ்டனை நினைத்தால் கோபம் வரும் பரமனை நினைத்தால் மனசு சுத்தமாகும்
49. மனசு அடங்கினால் சுவாசம் அடங்கி உள் உணர்ச்சிக்கு ஏற்றபடி வெளிக் காரியங்கள் நடப்பதை பார்க்கலாம்
50.பக்தி வர வேண்டுமானால் சாந்தம் வரவேண்டும், சத்தியம் வரவேண்டுமானால் சிவச் சின்னங்களை அணிய வேண்டும்
51விதிப்படி மூச்சை வெளியே விடுவதானலும் உள்ளே அடக்குவதனாலும் அமைதி பெறும்
52 தயை (ஈகை) உள்ள இருதயமே வெளியில் தெரியும் அழகு
53 நாக்கை சுத்தமாக்க சிவநாமம். இருதயத்தை சுத்தமாக்க - சிவபக்தி - தியானம்
54 சிவ என்ற இரண்டு எழுத்தை சொன்னாலே பாவம் விலகும்
55 பஸ்மம், ருத்திராட்சம், வில்வம் ஸ்படிகம் ,லிங்கம் , பஞ்சாட்சரம் ஆகியஐந்தும் சிவ சின்னங்கள
56 மூச்சி இல்லாமல் மனிதன் இல்லை வேதம் இல்லாமல் ஈசுவரன் இல்லை
57ஞானம் என்ற நெருப்பினாலே உலகங்களை எல்லாம் எரித்து விடலாம் சிவம் தான் மிஞ்சும்
58 காரியங்களுடைய காரணத்தை தேடிக் கொண்டு போனால் கடைசியில் கிடைப்பது மெய்யான பொருள்
59 நாம் எத்தனையோ காரியங்களை செய்து வருகிறோம், ஆனால் நாம் செய்கிறோம் என்ற அகம்பாவம் நமக்கு வரக்கூடாது
60 நமக்கு அகம்பாவம் இல்லை என நினைத்தாலேயே அகம்பாவம் இல்லாத உயர்ந்த குணத்திலிருந்தே அகம்பாவம் வந்து விடுகிறது
61 உண்மை என்பது வெண்மை அந்த வெண்மை என்பது நீறு அந்த திருநீறு தான் ஆண்டவன்
62 உண்மை பொருளை பூசிக் கொண்டால் உண்மை பொருளின் நினைவு வரும் அதனால்தான் நீறு பூச சொல்கிறது சைவம்
63 சித்தம் என்ற நிலைக் கண்ணாடி மூலம் பரம்பொருள் என்ற உண்மை வஸ்துவை பார்க்கவேண்டும்
64 நல்லது - காரணம் இல்லாத அருள். கஷ்டம் - காரணத்துக்காக ஏற்படும் அருள்
65 உண்மையிலேயே நம்முடைய கெட்ட குணம் எவ்வளவு நல்ல குணம் எவ்வளவு என்று பிரித்துப் பார்த்தால் கெட்ட குணமே மலைபோல் இருக்கும்
66ஒரு முகப்படுத்த சித்தம் ஆடாமல் இருக்க வேண்டும் கெட்ட எண்ணம் என்ற அழுக்கு படிந்திருந்தால் ஒன்றும் தெரியாது
67 தினமும் படுக்கும் முன் அன்று நாம் செய்த தப்பை குறித்துக் கொண்டு நாளை முதல் பண்ணாமல் இருக்க பகவானை பிராத்திக்க வேண்டும்
68 நாம் பண்ணின பாவத்திற்காக அழுது கொண்டிராமல் அந்தமாதிரி புத்தியைஇனி கொடுக்கவேண்டாம் என பிராத்திப்பது நமது கடமை
69 ஆண்டவன்தான் இந்த உலகத்திற்கு எல்லாம் மேலான காரணம் அவன் ஒருவனே உண்மை பொருள்
70 வாழ்வில் ஆனந்தம் வேண்டுமென்றால் உண்மையான அந்த பொருளுக்காகத்தான் வாழ வேண்டும்
71 இந்த பொய்யான உடம்பிற்கு மெய் என்று பெயர் பெயராவது மெய் என்று இருக்கட்டும் இந்த உடம்பிற்கு
72 ஒரே தெய்வத்தை பல ரூபத்தில் வழிபடுவது பல தெய்வங்கள் இருப்பதாக என்னுவதாகாது
73 அன்டை வீட்டுக்காரனை சகோதரானாக நினை
74 விரோதியை ந்ண்பனாக நினை
75 உன்னிடம் மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறாயோ அப்படியே மற்றவர்களிடமும் நீயும் இரு
76 சாப்பிடுகிறவனை விட சாப்பாடு போட்டவனுக்குத்தான் அதிக ஆனந்தம் இருக்கிறது
77 மந்திரங்கள் எல்லாவற்றிக்கும் மூலமாக இருப்பது பிரணவம்
78 திரு நீறும் திருமண்ணும் ஒரே தத்துவத்தைதான் காட்டுகின்றன
79 நமக்கு சரீரம் தான், உயிர் தெரியவில்லை, அதனால் தான் சரீரத்திற்கு மெய் என்று பெயர் வைத்தார்கள்
80 நமக்கு தெரியாமல் இருக்கின்ற உயிர் போய் விட்டதனால் அப்பவும் இந்த மெய் (உடம்பு) ஒன்றுக்கும் பிரயோசனமற்றபெர்ய்யாகி விடுகிறது
81 பக்தி பண்ணுவதற்கு பலன் பக்தியால் கிடைக்கிற மன நிறைவுதான்
82 சுக துக்கங்களில் சலனமடையாமல் தானும் மற்றவர்களையும் ஆனந்தமாக இருக்க செய்வது தான் யோகம்
83 சித்த சுத்தி மோட்சத்திலேயே கொண்டு போய் சேர்க்கும்
84 தனது என்ற விருப்பு வெறுப்பில்லாமல் சாஸ்திரத்திற்கு கட்டுபடுவது முக்கியம்
85 ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது
86 நம் கோபம் எதிராளியை மாற்றாது அவனுக்கும் நம்மிடம் கோபத்தை உண்டாக்குவதுதான் அதன் பலன்
87 ஒருவன் தப்புப் பண்ணிகிறான் என்றால் கோபம் கொள்கிறோமே அப்படியானால் நாம் தப்பு பண்ணாதவர்களா?
88 அன்பினாலேயே பிறரை மாற்றுவது தான் நமக்கு பெருமை அதுதான் நிலைத்து நிற்கும்
89 நாம் தப்பே செய்யவில்லை யென்றால் அன்பு மயமாகி விடுவோம்
90 நம் கோபத்தினால் நமக்கே தான் தீங்கு செய்து கொள்கிறோம்
91 அன்பு நமக்கு ஆனந்தம் எதிராளிக்கும் ஆனந்தம்
92 ஆசை என்று அலைந்தால் சாந்தி என்பதே ஒருநாளும் இல்லை
93 துக்கம் உன்னிடம் ஒட்டாமல் பிரிந்து தள்ளிவிட்டால் அதுவே யோகம்
94 கானல் நீர் போன்றதே உலக மாயையும்
95 ஆசைக்கும் துவேசத்துக்கும் காரணம் அகங்காரம் அது தொலைந்தால் எந்தக் காரியத்திலும் உயர்வு தாழ்வு தெரியாது
96 நமக்கு அது வேண்டும் இதுவேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிறவரையில் நாம் தரித்ததிரர்கள் தான்
97 எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே நமக்கு பிரமானம்
98 தியானம் பண்ணாமல் வெறும் பூசை மட்டும் செய்தால் மதத்தை வளர்க்க முடியாது
99 துக்கம், கோபம் இவற்றோடு உயிர் பிரிந்தால் அதே தன்மையோடே ஜனனம் வரும்
100 ஜன்னம் எடுத்தது ஜன்மத்தை போக்கிக் கொள்ளத்தான்,
101 மூச்சு இல்லாமல் மனிதன்இல்லை சேதம் இல்லாமல் ஈஸ்வரன் இல்லை
1) சாஸ்திரங்களைத் தெளிவாக அறிந்து அதன்படி மக்களை வழிநடத்தி அதை அஞுசரிப்பவர்தான் ஆசார்யார்
2) சாஸ்திரம் மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் அவர் வித்வான்தான்
3) சாஸ்திரம் மட்டடும் தெரிந்தால் அவர் - வித்வான்.
சாஸ்திரம் அஞுபவிப்பவர் - ஞானி
சாஸ்திரம் உபதேசம் செய்பவர் - பிரசாரகர்
4) முதலில் அழகாகத் தோன்யதுதான் அப்புறம் உபத்திரமாக போகிறது
5) அவரவர்கள் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் செளக்கியம்
6) பரமாத்மாவிடம் நம்மையறியாமல் சித்தத்தை சேர்ப்பதுதான் பக்தி
7) உண்மை என்பது அறிவுதான் என்றால் அறிகிற அந்த சக்தியே உண்மை - அதுவே சத்தியம்
8) ஆசைகளை அடக்கி, மாயையை உடைத்தெறி
9) நிறைநது நின்ற ஒன்றை தெரிந்து விட்டால் நிறைந்து போகிறது.
10) சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீட்சண்யம் இருக்கும்
11) மனத்தை அடக்கி, நிலைநிறுத்தி ஈசனிடம் சேர்ப்பது பிராணாயமம் , தியானம் நிஷ்னம் - இதை சொல்வது யோக பாதம்
12) மனத்தை வெற்றி கொண்டவர் உலகத்தை வெற்றி கொள்வான். அந்த வெற்றிக்கு உதவுவது ஞானம்
13) ஈசனை தவிர வேறு பொருள் இல்லை என்ற அனுபவம் வந்து விட்டால் ஆசைக்கு இடமில்லை
14) தினமும் கொஞ்ச நேரமாவது சிவ நாமம் சொன்னால் எல்லா சேமமும் கிடைக்கும்
15) பிறக்கு உதவி செய்யும் போது, இருவரும் மனநிறைவு பெறுவர்
16) நல்ல எண்ணங்கள் இருந்தால் நல்ல செயல்கள் தானாகப் பெருகும்
17) பரோபகாரம் எதுவும் செய்யாத நாளெல்லாம் நாம் இருந்தும் செத்த நாளே
18) அன்பில்லா வாழ்கை வீண் வியர்த்தம்
19) சாந்தம் வந்தால் எல்லா பற்றும் போய்வடும்
20) அழிவில்லாத கடவுடளிடம் செலுத்தும் அன்புக்க அழவேது?
21, நிறை வேறாத ஆசைகளின் இரண்டு உருவங்கள் தான் துக்கமும், கோபமும்
22. நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக் கொண்டு பிறருக்கு உபதேசம் செய்தால் அது பிரயோசனப்படாது.
23. கல்விக்கு இரண்டு அம்சங்கள் உண்டு ஒன்று- குருபக்தி, மற்றொன்று விநயம்
24. தாய், தந்தை , குரு இம்மூவரிடமும் அசையா பக்தி கொண்டால் மேன்மை தரும்.
25. மான, அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டை செய்தல் வேண்டும்
26. எக்காலத்திலும், எவ்விஷயத்திலும் திருப்தியை ஏற்படுத்தக் கூடிய தானம் - ஞான தானம்
27.உபகாரம் செய்தால் நமக்கு சித்திக்கிற சித்த சுத்தியே பிரயோசனம்
28. கீர்த்தனம் என்றால் பகவான் புகழைப் பாடுவது
29. வழிபாடு தனியாகச் செய்வதைவிட கூட்டு வழிபாட்டில் உற்சாகம் இருக்கிறது.
30. வாக்கு, மனம், சரீரம், மூன்றும் ஒருவருக்கு சத்தியத்திலே நிலைதது விட்டால் அவர் சொல்வதெல்லாம் சத்தியமாகி விடும்.
31, பக்தியுடன் மனசை கடந்து விட்டால் ஞானம்
32. "தான்" என்பதே இல்லையேல் ஒருவன் பரமாத்வே ஆகிவிடுகிறான் அதுதான் அத்வைதம்
33. சேக்கிழார் ரொம்ப அழகாக வேதத்தை ஒரு பெரிய நதியாகவும் அதிலே சைவம் வைஷ்ணவம் முதலிய சம்பிரதாயங்களை பல படித்துறைகளாகவும் சொல்லியிருக்கிறார்.
34. வியாதியை போக்க - வைத்தியன். யாகம் வாங்க - பணக்காரன். துக்கம், பிறவிப்பிணி நீக்க - பரமேஸ்வரன்
35. நாம் செய்கின்ற காரியங்களை சுத்தமாக சித்த சுத்தியோடு தர்மமான முறையில் செய்ய ஈஸ்வர பக்தி வேண்டும்
36. சேராததை முடித்து வைப்பது எதுவோ அதுதான் மாயை, எது இன்னதென்று சொல்ல முடியாததே அதுதான் மாயை
37. பரன் என்றால் பெரியவர் பரம புருஷன் என்றால் பெரிய ஆள் - பெரிய ஆள் என்பதே பெருமாள் என்றானது.
38. பிறப்பு என்பது காமனால் உண்டாகிறது. இறப்பு என்பது காலனால் உண்டாகிறது.
39. பிறவி என்று எடுத்துவிட்டால் ஆனந்தம் எப்போதோ கொஞ்சம்தான் ஆனால் துக்கம்தான் அதிகமாக இருக்கிறது.
40, அழியாத வஸ்துவினிடத்தில் பரியம் வைத்தால் அந்த பரியம் அழியாமல் இருக்கும்
41. ஒன்றை ஆராய்ந்து ஒன்றை அறிகிற ஒன்றை செய்கிற, சக்தி யெல்லாம் ஈஸ்வர சக்தியிலிருந்து பிரகாசிக்கின்றன.
42. குருவினடத்திலே அபசாரம் பண்ணி விட்டு ஈஸ்வரவனிடத்தில் போனால் ஒன்றும் நடக்காது.
43. தெய்வ பக்தி, குருபக்தி ஆகிய இரண்டும் ஒவ்வொருவருக்கும் அவசியம்
44. விஞ்ஞான அறிவின் மூலம் வெளியில் இருக்கிற எத்தனையோ பூதங்களை அடக்கும் நாம் நம்மை ஆட்டி வைக்கும் மனம் என்னும் பூதத்தை அடக்க முடியவில்லை.
45, கஷ்டத்தையோ, துக்கத்தையோ, காமத்தையோ தெரிந்து கொள்ள அறிவு சக்தி இல்லையெனில் வாழ்வில் பிரயோசனம் இல்லை
46. புறக்கண்ணால் பார்க்க முடியாததை எல்லாம் அகக் கண்ணால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பார்த்து விடலாம்,
47. தவறுகளுக்கு எல்லாம் பிராயசித்தமாக இருப்பது காயத்ரி ஜபம்
48. ஓர் அழகியை பார்த்தால் காமம் வரும் துஷ்டனை நினைத்தால் கோபம் வரும் பரமனை நினைத்தால் மனசு சுத்தமாகும்
49. மனசு அடங்கினால் சுவாசம் அடங்கி உள் உணர்ச்சிக்கு ஏற்றபடி வெளிக் காரியங்கள் நடப்பதை பார்க்கலாம்
50.பக்தி வர வேண்டுமானால் சாந்தம் வரவேண்டும், சத்தியம் வரவேண்டுமானால் சிவச் சின்னங்களை அணிய வேண்டும்
51விதிப்படி மூச்சை வெளியே விடுவதானலும் உள்ளே அடக்குவதனாலும் அமைதி பெறும்
52 தயை (ஈகை) உள்ள இருதயமே வெளியில் தெரியும் அழகு
53 நாக்கை சுத்தமாக்க சிவநாமம். இருதயத்தை சுத்தமாக்க - சிவபக்தி - தியானம்
54 சிவ என்ற இரண்டு எழுத்தை சொன்னாலே பாவம் விலகும்
55 பஸ்மம், ருத்திராட்சம், வில்வம் ஸ்படிகம் ,லிங்கம் , பஞ்சாட்சரம் ஆகியஐந்தும் சிவ சின்னங்கள
56 மூச்சி இல்லாமல் மனிதன் இல்லை வேதம் இல்லாமல் ஈசுவரன் இல்லை
57ஞானம் என்ற நெருப்பினாலே உலகங்களை எல்லாம் எரித்து விடலாம் சிவம் தான் மிஞ்சும்
58 காரியங்களுடைய காரணத்தை தேடிக் கொண்டு போனால் கடைசியில் கிடைப்பது மெய்யான பொருள்
59 நாம் எத்தனையோ காரியங்களை செய்து வருகிறோம், ஆனால் நாம் செய்கிறோம் என்ற அகம்பாவம் நமக்கு வரக்கூடாது
60 நமக்கு அகம்பாவம் இல்லை என நினைத்தாலேயே அகம்பாவம் இல்லாத உயர்ந்த குணத்திலிருந்தே அகம்பாவம் வந்து விடுகிறது
61 உண்மை என்பது வெண்மை அந்த வெண்மை என்பது நீறு அந்த திருநீறு தான் ஆண்டவன்
62 உண்மை பொருளை பூசிக் கொண்டால் உண்மை பொருளின் நினைவு வரும் அதனால்தான் நீறு பூச சொல்கிறது சைவம்
63 சித்தம் என்ற நிலைக் கண்ணாடி மூலம் பரம்பொருள் என்ற உண்மை வஸ்துவை பார்க்கவேண்டும்
64 நல்லது - காரணம் இல்லாத அருள். கஷ்டம் - காரணத்துக்காக ஏற்படும் அருள்
65 உண்மையிலேயே நம்முடைய கெட்ட குணம் எவ்வளவு நல்ல குணம் எவ்வளவு என்று பிரித்துப் பார்த்தால் கெட்ட குணமே மலைபோல் இருக்கும்
66ஒரு முகப்படுத்த சித்தம் ஆடாமல் இருக்க வேண்டும் கெட்ட எண்ணம் என்ற அழுக்கு படிந்திருந்தால் ஒன்றும் தெரியாது
67 தினமும் படுக்கும் முன் அன்று நாம் செய்த தப்பை குறித்துக் கொண்டு நாளை முதல் பண்ணாமல் இருக்க பகவானை பிராத்திக்க வேண்டும்
68 நாம் பண்ணின பாவத்திற்காக அழுது கொண்டிராமல் அந்தமாதிரி புத்தியைஇனி கொடுக்கவேண்டாம் என பிராத்திப்பது நமது கடமை
69 ஆண்டவன்தான் இந்த உலகத்திற்கு எல்லாம் மேலான காரணம் அவன் ஒருவனே உண்மை பொருள்
70 வாழ்வில் ஆனந்தம் வேண்டுமென்றால் உண்மையான அந்த பொருளுக்காகத்தான் வாழ வேண்டும்
71 இந்த பொய்யான உடம்பிற்கு மெய் என்று பெயர் பெயராவது மெய் என்று இருக்கட்டும் இந்த உடம்பிற்கு
72 ஒரே தெய்வத்தை பல ரூபத்தில் வழிபடுவது பல தெய்வங்கள் இருப்பதாக என்னுவதாகாது
73 அன்டை வீட்டுக்காரனை சகோதரானாக நினை
74 விரோதியை ந்ண்பனாக நினை
75 உன்னிடம் மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறாயோ அப்படியே மற்றவர்களிடமும் நீயும் இரு
76 சாப்பிடுகிறவனை விட சாப்பாடு போட்டவனுக்குத்தான் அதிக ஆனந்தம் இருக்கிறது
77 மந்திரங்கள் எல்லாவற்றிக்கும் மூலமாக இருப்பது பிரணவம்
78 திரு நீறும் திருமண்ணும் ஒரே தத்துவத்தைதான் காட்டுகின்றன
79 நமக்கு சரீரம் தான், உயிர் தெரியவில்லை, அதனால் தான் சரீரத்திற்கு மெய் என்று பெயர் வைத்தார்கள்
80 நமக்கு தெரியாமல் இருக்கின்ற உயிர் போய் விட்டதனால் அப்பவும் இந்த மெய் (உடம்பு) ஒன்றுக்கும் பிரயோசனமற்றபெர்ய்யாகி விடுகிறது
81 பக்தி பண்ணுவதற்கு பலன் பக்தியால் கிடைக்கிற மன நிறைவுதான்
82 சுக துக்கங்களில் சலனமடையாமல் தானும் மற்றவர்களையும் ஆனந்தமாக இருக்க செய்வது தான் யோகம்
83 சித்த சுத்தி மோட்சத்திலேயே கொண்டு போய் சேர்க்கும்
84 தனது என்ற விருப்பு வெறுப்பில்லாமல் சாஸ்திரத்திற்கு கட்டுபடுவது முக்கியம்
85 ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது
86 நம் கோபம் எதிராளியை மாற்றாது அவனுக்கும் நம்மிடம் கோபத்தை உண்டாக்குவதுதான் அதன் பலன்
87 ஒருவன் தப்புப் பண்ணிகிறான் என்றால் கோபம் கொள்கிறோமே அப்படியானால் நாம் தப்பு பண்ணாதவர்களா?
88 அன்பினாலேயே பிறரை மாற்றுவது தான் நமக்கு பெருமை அதுதான் நிலைத்து நிற்கும்
89 நாம் தப்பே செய்யவில்லை யென்றால் அன்பு மயமாகி விடுவோம்
90 நம் கோபத்தினால் நமக்கே தான் தீங்கு செய்து கொள்கிறோம்
91 அன்பு நமக்கு ஆனந்தம் எதிராளிக்கும் ஆனந்தம்
92 ஆசை என்று அலைந்தால் சாந்தி என்பதே ஒருநாளும் இல்லை
93 துக்கம் உன்னிடம் ஒட்டாமல் பிரிந்து தள்ளிவிட்டால் அதுவே யோகம்
94 கானல் நீர் போன்றதே உலக மாயையும்
95 ஆசைக்கும் துவேசத்துக்கும் காரணம் அகங்காரம் அது தொலைந்தால் எந்தக் காரியத்திலும் உயர்வு தாழ்வு தெரியாது
96 நமக்கு அது வேண்டும் இதுவேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிறவரையில் நாம் தரித்ததிரர்கள் தான்
97 எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே நமக்கு பிரமானம்
98 தியானம் பண்ணாமல் வெறும் பூசை மட்டும் செய்தால் மதத்தை வளர்க்க முடியாது
99 துக்கம், கோபம் இவற்றோடு உயிர் பிரிந்தால் அதே தன்மையோடே ஜனனம் வரும்
100 ஜன்னம் எடுத்தது ஜன்மத்தை போக்கிக் கொள்ளத்தான்,
101 மூச்சு இல்லாமல் மனிதன்இல்லை சேதம் இல்லாமல் ஈஸ்வரன் இல்லை
திருப்பள்ளியெழுச்சி (சிவன்)
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே!
புலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 1
அருணண்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ, நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிறை அருள்பதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லே! பள்ளி எழுந்தரு ளாயே! 2
கூவின பூங்குயில்; கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளியொளி உதயத்து
ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழல் தாளிணை காட்டாய்!
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்!
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 3
இன்னிசை வீணையர், யாழினர், ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர், ஒருபால்;
தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 4
பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம் உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக் கும்அரி யாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 5
பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்
மைப்பறு கண்ணியர்; மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா!
செப்புறு கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
இப்பிறப்பு அறுத்துஎமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 6
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு; இவன்அவன்; எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்சூழ் திருஉத்தர கோச
மங்கையுள் ளாய்! திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்;
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 7
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்?
பந்தணை விரலியும் நீயும்நின் னடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே!
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தே! பள்ளி எழுந்தரு ளாயே! 8
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளே!உன் தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!
வண்திருப் பெருந்துறை யாய்! வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
கடலமு தே! கரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்! உல குக்குயி ரானாய்!
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 9
புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் னலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்!
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. 10
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே!
புலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 1
அருணண்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ, நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிறை அருள்பதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லே! பள்ளி எழுந்தரு ளாயே! 2
கூவின பூங்குயில்; கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளியொளி உதயத்து
ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழல் தாளிணை காட்டாய்!
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்!
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 3
இன்னிசை வீணையர், யாழினர், ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர், ஒருபால்;
தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 4
பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம் உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக் கும்அரி யாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 5
பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்
மைப்பறு கண்ணியர்; மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா!
செப்புறு கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
இப்பிறப்பு அறுத்துஎமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 6
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு; இவன்அவன்; எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்சூழ் திருஉத்தர கோச
மங்கையுள் ளாய்! திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்;
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 7
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்?
பந்தணை விரலியும் நீயும்நின் னடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே!
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தே! பள்ளி எழுந்தரு ளாயே! 8
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளே!உன் தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!
வண்திருப் பெருந்துறை யாய்! வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
கடலமு தே! கரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்! உல குக்குயி ரானாய்!
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 9
புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் னலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்!
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. 10
திருமறைகள் கூறும் தோத்திர வழிபாட்டின் முக்கியத்துவம்
நாம் ஆண்டவனை வழிபாடு செய்யும் போது, என்னதான் ஆகம விதிப்படியும், அபிசேக ஆராதனைகள் செய்தாலும், ஆண்டவன் புகழ் போற்றியும், தோத்திரங்கள் கூறியும், மந்திரங்கள் கூறி வழிபடும் முறைக்கு ஒப்பாகாது, எனவேதான் தோத்திரப் பாடல்களும், மந்ததிர ஜபங்கள் கொண்டு வழிபாட்டு முறைகளில் முக்கிய பங்கு வைக்கின்றன,
செம்மையாகக் கொண்ட திருநின்ற திருநாவுக்கரசு சுவாமிகள் தனது தீரா சூலை நோய் - வயிற்று வலியைப் போக்கஇறைவனிடம் வேண்டும் போது சலம்போடு பூ மறந்தறியேன் , தமிழோடு இசைபாட மறந்தறியேன் என்ற கூற்று நாம் சற்று உற்று நோக்க வேண்டிய வரிகளாகும். இறைவனை வாயார தோத்திரங்களால் பாடி தோத்திரங்களால் இறைவனை பூசிப்பதை நன்கு விளக்குகிறது, சொல்லும் பொருளுமாய் இருந்தார் தாமே தோத்திரமும் சாஸ்திரமும் ஆனார்தாமே என்று திருத்தாண்டவர் மூலம் திருவரங்கப்பாமாலைப் பாடலில் இறை வழிபாட்டிற்கு இசையுடன் கூடிய தோத்திரப்பாடல்களின் முக்கியத்துவத்தை காணலாம். தோத்திரங்கள் யாவும் சிவனாரின் திருவாக்கியமாகும் எனது உறை தனது உறையாகும் என திருஞான சம்பந்தரின் கூற்றிலும் காணலாம். சுரிதங்களால் துதித்து தோத்திரங்களால் பாடி வழிபாடு எவ்வாறு செய்ய வேண்டுமென்று திருமூலரின் திருமறை ஒருபாடலில்வழிபாடு எவ்வாறு செய்யவேண்டும் என்றும், வாய் தோத்திரம் சொல்லுமே என்று அருள்பாலிக்கிறார், வழிபாட்டில் புரியும் சடங்கு சாஸ்திர சம்பிரதாயங்கள் யாவும் நுட்பமான தத்துவ பொருளாக காட்டுகின்றன. தோத்திரங்கள் எந்த மொழியிலும் இருக்கலாம் ஆனாலும் செம்மொழி தமிழ் மொழியோடு வடமொழியோடு இருப்பதே சிறப்பாகும் என்றும் வழிபாடும் மேன்மை பெரும் என்கிறார், வழிபாட்டில் என்னதான் ஆகம விதிப்படி அபிசேக ஆராதணைகள் செய்தாலும், இறைவனை வாயாரப்பாடி சுரிதங்களால் துதித்து தோத்திரங்களால் போற்றி பாடுவதற்கு ஈடாகுமா? தோத்திரங்கள் பற்றி ஞான நூல்களும் தோத்திரங்களை சுட்டிக்காட்டுகின்றன. இன்றைய நாளில் ஆலங்களில் மெல்லிசை பாடல்கள் மூலம் ஒலிக்க செய்து வழிபாட்டில் பெருமை சேர்த்தாலும், அவை எல்லாம் அழகு வானில் வின்மீன்களாக தோன்றினாலும், ஆலங்களில் நால்வர்களின் தேவார திருமறை தோத்திரப்பாடல் ஒலிக்கு ஈடாகுமா? அவைகள் அழகுவானில் தோன்றும் முழு நிறைமதிக்கு ஒப்பாகுமே என்பது தான் உண்மை. அதிலும் நால்வர்கள் பாடிய தேவார திருமறைகள் யாவும் தோத்திரத்திற் கென்றே தனி சிறப்புடையவைகளாகும். தேவாரப்பாடல்கள் யாவும் சொல்லுக்கு சொல் வரிக்கு வரி பாடலுக்கு பாடல் பதியத்திற்கு பதியம் அமையும் ஏணிப்படிகளாகும்,மொழிக்கு மொழி தித்திப்பு ஊட்டுவன, தேவராத்தின் தேன் தமிழ் பாடல்கள் பெருமானை தன்பால் ஈர்த்து சிவனடியார்களை ஆட்கொள்ளச் செய்த பெருமை தேவாரப்பதியங்களுக்கே சேரும், தேவாரப்பாடல்கள், இறைவனை துதிக்கும் தோத்திரப்பாடல்கள் மட்டுமன்று, அல்லல் போக்கும் அருமருந்து, அதுவே திருமருந்து, அதனால் அல்லல் போகும்,அறம் பெருகும், நம்மை பிடித்த பிசாசுகள் விலகும், இறையருள் பெருகும், இப்பாடல்கள் தான் ஆலங்கள் தோறும் ஒலிக்க வேண்டுவனவாகும், ஏன் வீடுகள் தோறும், மற்றும் மடலாயங்கள் தோறும் ஒலிக்க தகுதியுடையன, இத்தனை பெருமை கொண்ட தோத்தரப்பாடல்களான தேவார திருமறைகளை பாடிய அருளாளர்களை நாம் போற்றி புகழ வேண்டாமா? இத்திருமறைகளை நமக்கு பெரிய புராணமாக தொகுத்து தந்த சேக்கிழார் பிராணையும் நாம் நினைவு கொள்ள வேண்டாமா? தேவார திருமறை பாடல்களை எங்கும் ஒலிக்க செய்தும், தோத்திரங்கள் பாடியும் இறையருள் பெறுவோம்,
அன்புடன் வை.பூமாலை சுந்தரபாண்டியம்
திருமந்திரத்தில் ஒரு மந்திரம்
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறிதத்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே - திருமந்திரம் - 2883
(பசு) மேய்ப்பார் இல்லாததினால் கட்டுபாடின்றி திரிந்த பசுக்கள் மேய்ப்பான் கிடைத்துவிட்டால் , அவைகள் அடங்கி நல்ல முறையில் பாலைத் தருவது போல,
(பார்ப்பான்) - ஆன்மா அடங்கியுள்ள (பாற்பசு) ஐம்புலங்களைக் கொண்ட அகத்தினை , ஐம்புலங்களையும் அடக்கி வென்ற சரியான குருவின் (மேய்ப்பான்) அறிவுரைகளைக் கொண்டு வெறி கொண்டு , கட்டுப்பாடின்றி திரியும் மனத்தினை நல்வழி படுத்தினால் அடங்கிய ஐம்பொறிகளும் சிவ புண்ணியத்தை நமக்கு தரும் - என்று கூறுகின்றார் திருமூலர்
குருவின் துணையுடன் தான் ஐம்புலங்களை அடக்கி சிவ புண்ணியத்தை அடையமுடியும்
அரியமாணிக்கவல்லி கோவில்
ஏழுர் சாலியர் சமூக பட்டைய கோவில் என்று அழைக்கப்படும் அரியமாணிக்கவல்லி கோவில் பற்றிய அறிந்தும் அறியாததும், தெரிந்தும் தெரியததுமான சில விசயங்கள்
தற்போது சென்ற 2012 நவம்பர் 13 அன்றைய தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திதாள்கள் மூலம் வெளிவந்த ஏழுர் சாலிய சமூகத்தாரர்களின் வம்சாவழி கோவிலான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மேலத்திருமாணிக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலத்தைச் சேர்ந்த அருள்மிகு அரியமாணிக்கவல்லி தற்போது ஏழுர் சாலிய இனமக்களால் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி நாளொரு மேனியும் அவ்வலகத்திற்கு சென்று வழிபாடுகள் நடத்தி வருகின்ற சூழ்நிலை மிக பரபரப்பை ஏற்படுத்தி சிற்ப்படைந்தும் வருகிறது, இக் கோவிலைப்பற்றி தெரிந்தும் தெரியாத- அறிந்தும் அறியாத சில வரலாற்று செய்திகளை காணலாம்.
மதுரைமாவட்டம் மேலத் திருமாணிக்கம் என்ற கிராமம் சதுரகிரி மலையின் வடக்கப்பக்க அடிவாரத்தில் சேர மன்னர்களால் கட்டப்பட்ட நேர்த்தியான ஆகம விதிகளின்படி 234 பாடல் பெற்ற திருத்தலங்களைப்போலவே அமைக்கப் பெற்ற சிவத்தலமாகும், இங்குள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார், இக் கோவில் அமைப்பு சிறயதாக இருந்தாலும் மூன்று சுற்று பிரகாரங்களுடன் பெரியசிவத்தலங்களின் அமைப்பை பெற்று சிறப்புற்று இருந்து வந்துள்ளது, பாண்டியமன்னார்களால் இக்கோவில் பராமரிப்பு செய்து பேணி பாதுகாப்பு பெற்று வந்துள்ளது, காலப்போக்கில் சற்று சிதைவுடைந்த நிலையில் அறநிலைத்துறையினால் மராமத்து செய்யப்பட்டு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தின் துணைக்கோவிலாகவே செயல்பட்டு வருகிறது, நித்திய அன்னதானமும் நடைபெற்று வருகிறது, எல்லாக் கோவில்களிலும் காணப்படும் சித்தர்களின் சமாதியும் இக்கோவிலிலும் ஒரு சித்தர் சமாதி நிலை அடைந்த வரலாற்றுடன் ஆதிமூர்த்தி ஐயர் என்ற சித்தர் சமாதியும் உள்ளது, இக்கோவிலுக்கு திருஞானசம்பந்தர் வருகைதந்ததாகவும் இச்சமாதி இருக்கும் இடத்தில் வாந்தி எடுத்தாகவும் வரலாற்று செய்திகளாக கூறப்படுகின்றது, இக்கோவிலின் வெளிப்புறத்தில் இதன் துணைக்கோவிலாக அரியமாணிக்கவல்லி அம்மன் அமைந்துள்ளது, இது மேலத்திருமாணிக்க கிராமத்தின் கிராம தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் இவ் அம்மனை நெசவு தொழில் செய்யும் ஏழூர் சமூகத்தாரோடு தேவாங்க செட்டியார்களும் தற்போது வழிபட்டு வருவதாக கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது, மொத்தத்தில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வீக அருளை அள்ளித்தரும் அம்மனை அதன் கம்பீரத்தோற்றத்தினையும் கண்டு வணங்கி அம்மன் அருள் பெறுவோம்
அன்பன் சு,வை.பூமாலை சுந்தரபாண்டியம்
தற்போது சென்ற 2012 நவம்பர் 13 அன்றைய தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திதாள்கள் மூலம் வெளிவந்த ஏழுர் சாலிய சமூகத்தாரர்களின் வம்சாவழி கோவிலான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மேலத்திருமாணிக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலத்தைச் சேர்ந்த அருள்மிகு அரியமாணிக்கவல்லி தற்போது ஏழுர் சாலிய இனமக்களால் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி நாளொரு மேனியும் அவ்வலகத்திற்கு சென்று வழிபாடுகள் நடத்தி வருகின்ற சூழ்நிலை மிக பரபரப்பை ஏற்படுத்தி சிற்ப்படைந்தும் வருகிறது, இக் கோவிலைப்பற்றி தெரிந்தும் தெரியாத- அறிந்தும் அறியாத சில வரலாற்று செய்திகளை காணலாம்.
மதுரைமாவட்டம் மேலத் திருமாணிக்கம் என்ற கிராமம் சதுரகிரி மலையின் வடக்கப்பக்க அடிவாரத்தில் சேர மன்னர்களால் கட்டப்பட்ட நேர்த்தியான ஆகம விதிகளின்படி 234 பாடல் பெற்ற திருத்தலங்களைப்போலவே அமைக்கப் பெற்ற சிவத்தலமாகும், இங்குள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார், இக் கோவில் அமைப்பு சிறயதாக இருந்தாலும் மூன்று சுற்று பிரகாரங்களுடன் பெரியசிவத்தலங்களின் அமைப்பை பெற்று சிறப்புற்று இருந்து வந்துள்ளது, பாண்டியமன்னார்களால் இக்கோவில் பராமரிப்பு செய்து பேணி பாதுகாப்பு பெற்று வந்துள்ளது, காலப்போக்கில் சற்று சிதைவுடைந்த நிலையில் அறநிலைத்துறையினால் மராமத்து செய்யப்பட்டு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தின் துணைக்கோவிலாகவே செயல்பட்டு வருகிறது, நித்திய அன்னதானமும் நடைபெற்று வருகிறது, எல்லாக் கோவில்களிலும் காணப்படும் சித்தர்களின் சமாதியும் இக்கோவிலிலும் ஒரு சித்தர் சமாதி நிலை அடைந்த வரலாற்றுடன் ஆதிமூர்த்தி ஐயர் என்ற சித்தர் சமாதியும் உள்ளது, இக்கோவிலுக்கு திருஞானசம்பந்தர் வருகைதந்ததாகவும் இச்சமாதி இருக்கும் இடத்தில் வாந்தி எடுத்தாகவும் வரலாற்று செய்திகளாக கூறப்படுகின்றது, இக்கோவிலின் வெளிப்புறத்தில் இதன் துணைக்கோவிலாக அரியமாணிக்கவல்லி அம்மன் அமைந்துள்ளது, இது மேலத்திருமாணிக்க கிராமத்தின் கிராம தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் இவ் அம்மனை நெசவு தொழில் செய்யும் ஏழூர் சமூகத்தாரோடு தேவாங்க செட்டியார்களும் தற்போது வழிபட்டு வருவதாக கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது, மொத்தத்தில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வீக அருளை அள்ளித்தரும் அம்மனை அதன் கம்பீரத்தோற்றத்தினையும் கண்டு வணங்கி அம்மன் அருள் பெறுவோம்
அன்பன் சு,வை.பூமாலை சுந்தரபாண்டியம்
ஜீவ சமாதி - ஸ்ரீமாதவானந்தா ஜீவ ஐக்கிய வரலாறு
ஞானபிதா சிவானந்த பரமஹம்ஸர் ...... சித்த சமாஜ ஸ்தாபகர் அவர்கள் தமது ஊர்த்துவதியின் மூலம் பெறப்பட்ட சித்த வித்தையினைஉலகில் உள்ள மக்கள் அனைவரும் சாந்தியும், சமாதனமும் அடையும் பொருட்டு, எல்லோரும்வாரி வழங்கினார்கள்,அப்படிப்பட்ட நல்வித்தில் முளைத்து, ஞானத்தை அடைந்துவரும் ஞானபிதாவிடம்ஆனந்தா பட்டம் பெற்ற பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான சித்த சிவராஜயோகி ஸ்ரீமாதவானந்தா கேரளா மாநிலம் ஆலப்பிழை கொடுங்கலூரில் பிறந்தார், என்று தெரியவருகிறது, இமயமலைச் சாரல்களில் பலகாலம் தவம் புரிந்து, தமது இறுதிக்காலத்தில் தாம் சமாதியாக வேண்டுமென்ற உள்ளுணர்வு ஏற்பட அதற்கு ஏற்ற இடம் பாம்புகோவில் சந்தையைஅடுத்த வெள்ள மடத்து விநாயகர் கோவில் அருகில் தான் என்பதை உணர்ந்தார். சித்த சிவராஜயோகிமாதவானந்தா பாம்புகோவில்சந்தையை அடுத்த வெள்ளை மடத்து விநாயகர் கோவிலுக்கு 6-2-1964ம் தேதி வந்துசேர்ந்தார். விநாயகர் கோவில் அர்ச்சகரிடம் தாம் இன்னும் நான்கு நாட்களில் சமாதி அடையப்போவதாகக் கூறி, அதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய சொன்னபோது, அதை நம்பமறுத்த அர்ச்சகரின் கடந்த கால நிகழ்வுகளை எடுத்துக்கூறி அவரை நம்ப வைத்தார், பின், சுவாமிகள் குறிப்பிட்ட அதே இடத்தில் அதே நேரத்தில் 10-2-1964ல் பத்மாசனத்தில் அமர்ந்து மகாசமாதி அடைந்தார்கள், அருகிலுள்ள கிராம மக்கள் அனைவரும், சுவாமி சொன்னபடி சமாதி வைத்தார்கள். பிரம்ம ஸ்ரீ மாதவானந்தா அவர்கள் கூறியபடியே கருடன் பறந்து வந்து, சுற்றிக் கொண்டிருந்தது, அன்ன ஆகாரமமின்றி இருந்து மூன்றாம் நாள் சமாதி அடை, அது சுவாமிகளின் அருகிலேயே சமாதி வைக்கப்பட்டது, சில நாட்களுக்கு பிறகு சுவாமி சங்காரானந்தா அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வந்து சமாதியை மீண்டும் தோண்டிய போது, அவரின் உடல் சிதையாமல் பொன்னிறமாக ஒளிர்ந்தது. பின் சமாதியை சுற்றி கல்லினால் கட்டிடம் கட்டி 1969 அக்டோபர் மாதம் 13ம் தேதி உயர்திரு ஸ்ரீ கிருஷ்ணரெட்டி ஹைகோர்ட் ஜட்ஜ் அவர்கள் தலைமையில் ஐந்தருவி தவத்திரு சங்கரானந்தா சுவாமி அவர்களால் திருப்பணி செய்து , அவ் ஜீவ சமாதியில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று கூட்டு ஜெபமும் அன்னதானமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஜீவ சமாதி பிரம்ம வழிபாட்டு முறைகளையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இங்கு தியானம் என்பதற்கு ஜபம் என்றும் மூச்சுபயிற்சிதான் பிதானம் என்றும் ஜபம் செய்பவர்கள் மேலாடை அணியலாகாது என்றும் சிவ மந்திரங்கள் ஒதுவது தவிர்க்கப்படுகிறது, மேலும் சைவ ஜீவ சமாதிகளில் லிங்கம் பிரதிஷ்டைக்கு பதில் பிரம்ம குமாரிகள் சபை போன்று சமாதியில் தாமரை மலர் பீடம் அமைக்கப்பட்டுள்ளது, ஓம் என்ற ஒலிக்கோ அல்லது சிவ நாமங்களுக்கோ இடம் இல்லை, மேலும் முற்றிலும் இது ஒரு பிரம்ம ஞான சபையைச் சேர்ந்த ஜீவ சமாதியாகும்
ஞானபிதா சிவானந்த பரமஹம்ஸர் ...... சித்த சமாஜ ஸ்தாபகர் அவர்கள் தமது ஊர்த்துவதியின் மூலம் பெறப்பட்ட சித்த வித்தையினைஉலகில் உள்ள மக்கள் அனைவரும் சாந்தியும், சமாதனமும் அடையும் பொருட்டு, எல்லோரும்வாரி வழங்கினார்கள்,அப்படிப்பட்ட நல்வித்தில் முளைத்து, ஞானத்தை அடைந்துவரும் ஞானபிதாவிடம்ஆனந்தா பட்டம் பெற்ற பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான சித்த சிவராஜயோகி ஸ்ரீமாதவானந்தா கேரளா மாநிலம் ஆலப்பிழை கொடுங்கலூரில் பிறந்தார், என்று தெரியவருகிறது, இமயமலைச் சாரல்களில் பலகாலம் தவம் புரிந்து, தமது இறுதிக்காலத்தில் தாம் சமாதியாக வேண்டுமென்ற உள்ளுணர்வு ஏற்பட அதற்கு ஏற்ற இடம் பாம்புகோவில் சந்தையைஅடுத்த வெள்ள மடத்து விநாயகர் கோவில் அருகில் தான் என்பதை உணர்ந்தார். சித்த சிவராஜயோகிமாதவானந்தா பாம்புகோவில்சந்தையை அடுத்த வெள்ளை மடத்து விநாயகர் கோவிலுக்கு 6-2-1964ம் தேதி வந்துசேர்ந்தார். விநாயகர் கோவில் அர்ச்சகரிடம் தாம் இன்னும் நான்கு நாட்களில் சமாதி அடையப்போவதாகக் கூறி, அதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய சொன்னபோது, அதை நம்பமறுத்த அர்ச்சகரின் கடந்த கால நிகழ்வுகளை எடுத்துக்கூறி அவரை நம்ப வைத்தார், பின், சுவாமிகள் குறிப்பிட்ட அதே இடத்தில் அதே நேரத்தில் 10-2-1964ல் பத்மாசனத்தில் அமர்ந்து மகாசமாதி அடைந்தார்கள், அருகிலுள்ள கிராம மக்கள் அனைவரும், சுவாமி சொன்னபடி சமாதி வைத்தார்கள். பிரம்ம ஸ்ரீ மாதவானந்தா அவர்கள் கூறியபடியே கருடன் பறந்து வந்து, சுற்றிக் கொண்டிருந்தது, அன்ன ஆகாரமமின்றி இருந்து மூன்றாம் நாள் சமாதி அடை, அது சுவாமிகளின் அருகிலேயே சமாதி வைக்கப்பட்டது, சில நாட்களுக்கு பிறகு சுவாமி சங்காரானந்தா அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வந்து சமாதியை மீண்டும் தோண்டிய போது, அவரின் உடல் சிதையாமல் பொன்னிறமாக ஒளிர்ந்தது. பின் சமாதியை சுற்றி கல்லினால் கட்டிடம் கட்டி 1969 அக்டோபர் மாதம் 13ம் தேதி உயர்திரு ஸ்ரீ கிருஷ்ணரெட்டி ஹைகோர்ட் ஜட்ஜ் அவர்கள் தலைமையில் ஐந்தருவி தவத்திரு சங்கரானந்தா சுவாமி அவர்களால் திருப்பணி செய்து , அவ் ஜீவ சமாதியில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று கூட்டு ஜெபமும் அன்னதானமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஜீவ சமாதி பிரம்ம வழிபாட்டு முறைகளையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இங்கு தியானம் என்பதற்கு ஜபம் என்றும் மூச்சுபயிற்சிதான் பிதானம் என்றும் ஜபம் செய்பவர்கள் மேலாடை அணியலாகாது என்றும் சிவ மந்திரங்கள் ஒதுவது தவிர்க்கப்படுகிறது, மேலும் சைவ ஜீவ சமாதிகளில் லிங்கம் பிரதிஷ்டைக்கு பதில் பிரம்ம குமாரிகள் சபை போன்று சமாதியில் தாமரை மலர் பீடம் அமைக்கப்பட்டுள்ளது, ஓம் என்ற ஒலிக்கோ அல்லது சிவ நாமங்களுக்கோ இடம் இல்லை, மேலும் முற்றிலும் இது ஒரு பிரம்ம ஞான சபையைச் சேர்ந்த ஜீவ சமாதியாகும்
வழிபாடு:
இறைவழிபாடு இரு வகையாக ஆன்மீக வாளர்கள் பிரித்துள்ளார்கள். அவை 1) புற வழிபாடு 2) அகவழிபாடு. என்பன
கடவுளைத் தன்னின்றும் வேறுபடுத்தி வழிபடுவது புறவழிபாடு.
கடவுடளை தன்னின்றும் பிரியாத தன்மை கொண்டு வழிபடுவது அகவழிபாடு
நம் உடலில் உயிர் இருப்பது போல, இயற்கையில் இறைமை கலந்துள்ளது.இயற்கையைக் கடந்தும் உள்ளது.
நம் உடலில் உயிர் இருக்கிறது. அதைக் காணமுடியாது. காணமுடியாத காரணத்தால் உயிர் இல்லை என்று சொல்ல முடியாது. உயிர் இருப்பதால் உடல் இயங்குகிறது.எனவே காணமுடியாத உயிரை காணக்கூடிய உடலைக்கொண்டு உணர்கிறோம். உடலை தவிர்த்து உயிரைக் காணமுடியாது.
இதைப்போல இயற்கை உடல் போன்றது, கடவுள் இயற்கைக்கு உயிர் போன்றவர். உடலாகிய இயற்கையைக் கொண்டு உயிராகிய கடவுள் உணர்தல் வேண்டும். கடவுளை அல்லது இயற்கையை உணர்த்தும் ஆற்றல் இயற்கைக்கு உண்டு. இறைமையை உணர்வதற்கு அதன் உடலாக விளங்கும் இயற்கையை பற்ற வேண்டும். இயற்கைையுடன் ஒன்ற வேண்டும். இயற்கையின் வாயிலாக அதன் உயிராக உள்ள கடவுளை வழிபட வேண்டும்.
கடவுள் எல்லாவற்றையும் கடந்தவர். இயற்கையை உடலாக தாங்கும் மற்றொரு நிலையும் கொண்டது இறைவருடைய அருளாகும்.இதனையே புறவழிபாடு என்கின்றனர் ஆன்மீக சான்றோர்கள்.
கடவுளை தன்னின்று பிரியாத தன்மை கொண்டு வழிபடும் அகவழிபாட்டினை எடுத்துக் காட்ட மாணிக்க வாசகரும் தனது சிவபுராண பாடலில் இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ! எனக் கூறியுள்ளார்.
திருநின்ற பெருமான் திருநாவுக்கரசரும் தனது பாடலில் நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்தறியேன் என்கிறார்.
புறவழிபாட்டில் தொடங்கி அகவழிபாட்டிற்குச் செல்லவேண்டும். புறவழிபாட்டின் நோக்கமே அகவழிபாட்டை அடைவதுதான். நாம் புறவழிபாட்டிலேயே நின்றுவிடுகிறோம்.
அகவழிபாட்டிற்கு யோகம் என்று பெயர். யோகம் என்றால் ஒன்றுதல் என்று பொருள். சீவன் சிவத்துடன் ஒன்றுவது யோகம் எனப்படுகிறது.
இறைமையின் உடலாக விளங்கும் இயற்கையை மாசுபடுத்துவது பெருங்குற்றம் என்பதை நாம் உணர வேண்டும், இயற்கைக்கு துணை போவது புண்ணியமே ஆகும். இயற்கையும் இறைமையை இவ்வாறு உணர்த்தப்டுகிறது. இயற்கை வளம் காப்போம் இறையருள் பெறுவோம்
இறைவழிபாடு இரு வகையாக ஆன்மீக வாளர்கள் பிரித்துள்ளார்கள். அவை 1) புற வழிபாடு 2) அகவழிபாடு. என்பன
கடவுளைத் தன்னின்றும் வேறுபடுத்தி வழிபடுவது புறவழிபாடு.
கடவுடளை தன்னின்றும் பிரியாத தன்மை கொண்டு வழிபடுவது அகவழிபாடு
நம் உடலில் உயிர் இருப்பது போல, இயற்கையில் இறைமை கலந்துள்ளது.இயற்கையைக் கடந்தும் உள்ளது.
நம் உடலில் உயிர் இருக்கிறது. அதைக் காணமுடியாது. காணமுடியாத காரணத்தால் உயிர் இல்லை என்று சொல்ல முடியாது. உயிர் இருப்பதால் உடல் இயங்குகிறது.எனவே காணமுடியாத உயிரை காணக்கூடிய உடலைக்கொண்டு உணர்கிறோம். உடலை தவிர்த்து உயிரைக் காணமுடியாது.
இதைப்போல இயற்கை உடல் போன்றது, கடவுள் இயற்கைக்கு உயிர் போன்றவர். உடலாகிய இயற்கையைக் கொண்டு உயிராகிய கடவுள் உணர்தல் வேண்டும். கடவுளை அல்லது இயற்கையை உணர்த்தும் ஆற்றல் இயற்கைக்கு உண்டு. இறைமையை உணர்வதற்கு அதன் உடலாக விளங்கும் இயற்கையை பற்ற வேண்டும். இயற்கைையுடன் ஒன்ற வேண்டும். இயற்கையின் வாயிலாக அதன் உயிராக உள்ள கடவுளை வழிபட வேண்டும்.
கடவுள் எல்லாவற்றையும் கடந்தவர். இயற்கையை உடலாக தாங்கும் மற்றொரு நிலையும் கொண்டது இறைவருடைய அருளாகும்.இதனையே புறவழிபாடு என்கின்றனர் ஆன்மீக சான்றோர்கள்.
கடவுளை தன்னின்று பிரியாத தன்மை கொண்டு வழிபடும் அகவழிபாட்டினை எடுத்துக் காட்ட மாணிக்க வாசகரும் தனது சிவபுராண பாடலில் இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ! எனக் கூறியுள்ளார்.
திருநின்ற பெருமான் திருநாவுக்கரசரும் தனது பாடலில் நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்தறியேன் என்கிறார்.
புறவழிபாட்டில் தொடங்கி அகவழிபாட்டிற்குச் செல்லவேண்டும். புறவழிபாட்டின் நோக்கமே அகவழிபாட்டை அடைவதுதான். நாம் புறவழிபாட்டிலேயே நின்றுவிடுகிறோம்.
அகவழிபாட்டிற்கு யோகம் என்று பெயர். யோகம் என்றால் ஒன்றுதல் என்று பொருள். சீவன் சிவத்துடன் ஒன்றுவது யோகம் எனப்படுகிறது.
இறைமையின் உடலாக விளங்கும் இயற்கையை மாசுபடுத்துவது பெருங்குற்றம் என்பதை நாம் உணர வேண்டும், இயற்கைக்கு துணை போவது புண்ணியமே ஆகும். இயற்கையும் இறைமையை இவ்வாறு உணர்த்தப்டுகிறது. இயற்கை வளம் காப்போம் இறையருள் பெறுவோம்
திரு நீரு
மங்கல மங்கையருக்கு அழகு - நெற்றியில் குங்குமம்
ஆன்மீக அழகனுக்க அழகு - நெற்றியில் திருநீரு
சிவ அடையாளம் திருநீரு, உத்திராட்சம், சடைமுடி. இதில் சைவ மதத்தின் முதன்மை அடையாளமாக முன்னிருப்பது திரு நீரு.
வேதத்தில் உள்ளது - நீரு.வெந்துயிர் நீக்குவது - நீரு. போதம் தருவது - நீரு. புண்ணியமாவது - நீரு, முக்தி தருவது - நீரு. முனிவர் அணிவது நீரு. சத்தியமாவது - நீரு. தத்துவ மாவது - நீரு. பரவ இனியது - நீரு. பக்தி தருவது - நீரு. சக்தி தருவது - நீரு. கீர்த்தி தருவது நீரு. காண இனியது - நீரு. பெருமை கொடுப்பது, மானம் தருவது, பூச இனியது, மதியைதருவது, புண்ணியமாவது, ஆசை கெடுபபது, பேசஇனியது, தேசம் புக்ழ்வது, அவலம் கெடுப்பது, பாவம் தொைல்ப்பது, வேதம் புகழ்வது -நீரு, இதுபோன்ற திரு நீருன் பெருமையை நால்வர் திருநீற்று பதிகத்தின் மூலம் இதன் தனி சிறப்பை விள்க்குகிறது,
சிவன் - பித்தன் - அக்னியாக இருப்பதால் அக்னியின் முதிர்ச்சி சாம்பல் எனவே அக்னி சொருபவமான சிவனுக்கு சாம்பல் கொண்ட விபூதியே பிரசாதமாக வழங்க்படுகிறது, திருஞான சம்பந்தர் கூற்றின்படி காடுடைய சுடலை பொடி பூசி உள்ளம் கவர் கள்வன்- சுடுகாட்டுசாம்பலை உடலில் பூசியவர் என்கிறார்
விஷ்ணு - வாதம் - நீர் வடிவம் - திருபாற்கடலில் பள்ளிகொண்டவர் எனவே வாதம் - நீர் கொண்ட தீர்த்தம் பிரசாதமாக வழங்க்ப்படுகிறது.
இதன்படி சைவத்ததின் - சிவத்தின் முன்னின்ற அடையாளமான திரு நீரு எவ்வாறு தயாரித்து பிரசாதமாக வழங்கப்படுகிறது என்பதை மிஸ்டிக் செல்வம்ஐயா தனது விபூதி பிரயோகம் என்ற ஆன்மீக சொற்பொழிவு மூலம் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
விபூதிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது பசுஞ்சாணம், கோமாதா என்று தெய்வமாக கொண்டாடும் பசுஞ் சாணத்திலிருந்து தான் சாம்பல் தயாரிக்கப்படுகிறது. இதற்காக கோவில்களில் பேணப்படும் கோசாலை ஆதாரவற்ற பசுமாடுகள் பராமரிக்கப்படும் இடம்- இங்குள்ள பசுஞ்சாணத்தின் மூலம் சாணம்சேகரித்து அதனை உருண்ட கவலங்களாக உருட்டி நெருப்பிட்டு சாம்பல் பஸ்பமாக கொள்ளப்படுகிறது, இந்த சாம்பல்பஸ்பம் 2 கிலோ. இவற்றுடன் கீழ்கண்ட படிகாரங்கள் சமவிகதத்தில் சேர்த்து கலவை செய்யப்படுகிறது,
சேர்க்கப்படும் படிகாரங்கள் :
படிகார பஸ்பம் , குங்குலிய பஸ்பம், சங்கு பஸ்பம், ஆமை ஓடு பஸ்பம், பவள பஸ்பம், சிரா பஸ்பம், சிரஞசி பஸ்பம், முத்து சிப்பிபஸ்பம், நத்தை ஒடு பஸ்பம், ஆகிய பஸபங்கள் ஒவ்வொன்றும் சரியாக 2 கிராம் வீதம் கலந்து ஒரு அகன்ற தாம்பாளத்தட்டில் நன்றாக கலந்து அதற்கு ஓம் சிவ சிவ ஓம் என்ற மந்திர உருவேற்றி பின் ஏதேனும்ஒரு சிவன் கோவிலில் விபூதி அபிசேகம் செய்து இந்த மந்திர விபூதியை தயார் செய்து பயன்படுத்தலாம்
இருப்பு வைத்தல்: இதனை சுத்தமான ஈரமற்ற பட்டர் பேப்பர் அல்லது காந்தமில்லாத பாத்திரம் அல்லது பட்டு துணி கொணட பை இவற்றில சேமித்து வைக்கலாம், இதனைபிரசாதமாக அனுப்ப வேணடுமெனில் பூவரசு இலையில் மடித்து அனுப்பவது மிகுந்த சக்தியை யும் பாதுகாப்பையையும் தரவல்லது, இன்னும் சில சிவலாய்ங்களில் இது போன்றுதான் விபூதி பிரசாதம் அனுப்பப்படுகிறது,
அணிதல்:
திரு நீரை பெருவிரல், ஆள்காட்டி விரல் நடுவிரல் ஆகியமூன்று விரல்களால் எடுத்து , வாழ்த்து பெறுவோருக்கு பூசுவதனால் பெருவிரலால் பூச வேண்டும் தனக்கு தானே பூசி வேண்டுமெனில் நீரில் கொழைத்து பட்டையாக நெற்றியில் பூசிக் கொள்ள வேண்டும் விபூதியைஉடலில் எங்கு வேண்டுமாலும் யார் வேண்டுமானலும் பூசிக் கொள்ளலாம், தற்போதும் பிணிகண்டவர்கள் விபூதியை மந்திரித்து பிணி கண்ட இடங்களில் பூசிக் கொள்வதைகாணலாம், திரு நீரு பூசும் போது கீழே சிதறாமல் முகம்ஆகாயத்தை பார்த்து கொண்டு ஓம் சிவ சிவ ஓம் என்று மந்திரம் ஜெபித்துக்கொண்டுபூசினால் நம்மை பிடித்த பிசாசுக்ளவிலகும் பிணகள் அகலும்,நற்பலன் கிடைக்கும், மந்திர விபூதியை இளம் குழந்தைகளுக்கு தவிர்ப்பதுநன்று, ஏனெனின் மந்திர விபூதியின் சக்தி அதிகம் குழந்தைகள் தாங்காது,
நன்றி ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு அன்றாரின் விபூதி பிரயோகம் என்ற ஆன்மீக சொற்பொழிவு ஒலிபேழை மூலம் விபரம் சேகரிக்கப்பட்டது,
மங்கல மங்கையருக்கு அழகு - நெற்றியில் குங்குமம்
ஆன்மீக அழகனுக்க அழகு - நெற்றியில் திருநீரு
சிவ அடையாளம் திருநீரு, உத்திராட்சம், சடைமுடி. இதில் சைவ மதத்தின் முதன்மை அடையாளமாக முன்னிருப்பது திரு நீரு.
வேதத்தில் உள்ளது - நீரு.வெந்துயிர் நீக்குவது - நீரு. போதம் தருவது - நீரு. புண்ணியமாவது - நீரு, முக்தி தருவது - நீரு. முனிவர் அணிவது நீரு. சத்தியமாவது - நீரு. தத்துவ மாவது - நீரு. பரவ இனியது - நீரு. பக்தி தருவது - நீரு. சக்தி தருவது - நீரு. கீர்த்தி தருவது நீரு. காண இனியது - நீரு. பெருமை கொடுப்பது, மானம் தருவது, பூச இனியது, மதியைதருவது, புண்ணியமாவது, ஆசை கெடுபபது, பேசஇனியது, தேசம் புக்ழ்வது, அவலம் கெடுப்பது, பாவம் தொைல்ப்பது, வேதம் புகழ்வது -நீரு, இதுபோன்ற திரு நீருன் பெருமையை நால்வர் திருநீற்று பதிகத்தின் மூலம் இதன் தனி சிறப்பை விள்க்குகிறது,
சிவன் - பித்தன் - அக்னியாக இருப்பதால் அக்னியின் முதிர்ச்சி சாம்பல் எனவே அக்னி சொருபவமான சிவனுக்கு சாம்பல் கொண்ட விபூதியே பிரசாதமாக வழங்க்படுகிறது, திருஞான சம்பந்தர் கூற்றின்படி காடுடைய சுடலை பொடி பூசி உள்ளம் கவர் கள்வன்- சுடுகாட்டுசாம்பலை உடலில் பூசியவர் என்கிறார்
விஷ்ணு - வாதம் - நீர் வடிவம் - திருபாற்கடலில் பள்ளிகொண்டவர் எனவே வாதம் - நீர் கொண்ட தீர்த்தம் பிரசாதமாக வழங்க்ப்படுகிறது.
இதன்படி சைவத்ததின் - சிவத்தின் முன்னின்ற அடையாளமான திரு நீரு எவ்வாறு தயாரித்து பிரசாதமாக வழங்கப்படுகிறது என்பதை மிஸ்டிக் செல்வம்ஐயா தனது விபூதி பிரயோகம் என்ற ஆன்மீக சொற்பொழிவு மூலம் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
விபூதிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது பசுஞ்சாணம், கோமாதா என்று தெய்வமாக கொண்டாடும் பசுஞ் சாணத்திலிருந்து தான் சாம்பல் தயாரிக்கப்படுகிறது. இதற்காக கோவில்களில் பேணப்படும் கோசாலை ஆதாரவற்ற பசுமாடுகள் பராமரிக்கப்படும் இடம்- இங்குள்ள பசுஞ்சாணத்தின் மூலம் சாணம்சேகரித்து அதனை உருண்ட கவலங்களாக உருட்டி நெருப்பிட்டு சாம்பல் பஸ்பமாக கொள்ளப்படுகிறது, இந்த சாம்பல்பஸ்பம் 2 கிலோ. இவற்றுடன் கீழ்கண்ட படிகாரங்கள் சமவிகதத்தில் சேர்த்து கலவை செய்யப்படுகிறது,
சேர்க்கப்படும் படிகாரங்கள் :
படிகார பஸ்பம் , குங்குலிய பஸ்பம், சங்கு பஸ்பம், ஆமை ஓடு பஸ்பம், பவள பஸ்பம், சிரா பஸ்பம், சிரஞசி பஸ்பம், முத்து சிப்பிபஸ்பம், நத்தை ஒடு பஸ்பம், ஆகிய பஸபங்கள் ஒவ்வொன்றும் சரியாக 2 கிராம் வீதம் கலந்து ஒரு அகன்ற தாம்பாளத்தட்டில் நன்றாக கலந்து அதற்கு ஓம் சிவ சிவ ஓம் என்ற மந்திர உருவேற்றி பின் ஏதேனும்ஒரு சிவன் கோவிலில் விபூதி அபிசேகம் செய்து இந்த மந்திர விபூதியை தயார் செய்து பயன்படுத்தலாம்
இருப்பு வைத்தல்: இதனை சுத்தமான ஈரமற்ற பட்டர் பேப்பர் அல்லது காந்தமில்லாத பாத்திரம் அல்லது பட்டு துணி கொணட பை இவற்றில சேமித்து வைக்கலாம், இதனைபிரசாதமாக அனுப்ப வேணடுமெனில் பூவரசு இலையில் மடித்து அனுப்பவது மிகுந்த சக்தியை யும் பாதுகாப்பையையும் தரவல்லது, இன்னும் சில சிவலாய்ங்களில் இது போன்றுதான் விபூதி பிரசாதம் அனுப்பப்படுகிறது,
அணிதல்:
திரு நீரை பெருவிரல், ஆள்காட்டி விரல் நடுவிரல் ஆகியமூன்று விரல்களால் எடுத்து , வாழ்த்து பெறுவோருக்கு பூசுவதனால் பெருவிரலால் பூச வேண்டும் தனக்கு தானே பூசி வேண்டுமெனில் நீரில் கொழைத்து பட்டையாக நெற்றியில் பூசிக் கொள்ள வேண்டும் விபூதியைஉடலில் எங்கு வேண்டுமாலும் யார் வேண்டுமானலும் பூசிக் கொள்ளலாம், தற்போதும் பிணிகண்டவர்கள் விபூதியை மந்திரித்து பிணி கண்ட இடங்களில் பூசிக் கொள்வதைகாணலாம், திரு நீரு பூசும் போது கீழே சிதறாமல் முகம்ஆகாயத்தை பார்த்து கொண்டு ஓம் சிவ சிவ ஓம் என்று மந்திரம் ஜெபித்துக்கொண்டுபூசினால் நம்மை பிடித்த பிசாசுக்ளவிலகும் பிணகள் அகலும்,நற்பலன் கிடைக்கும், மந்திர விபூதியை இளம் குழந்தைகளுக்கு தவிர்ப்பதுநன்று, ஏனெனின் மந்திர விபூதியின் சக்தி அதிகம் குழந்தைகள் தாங்காது,
நன்றி ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு அன்றாரின் விபூதி பிரயோகம் என்ற ஆன்மீக சொற்பொழிவு ஒலிபேழை மூலம் விபரம் சேகரிக்கப்பட்டது,
சிவ மந்திரம்
தெய்வ வழிபாடுகள் ஒன்பது வகையாக பிரிக்கப்பட்டுள்ளன, அவையாவன
கேட்டல், சொல்லுதல், நினைத்தல், பாதசேவை,கோவில் வழிபாடு, பிரர்த்தித்தல், பணிதல், நட்புகொளல், சமர்ப்பணம் செய்தல்
இதில் கேட்டல், சொல்லுதல் நினைத்தல், ஆகியவற்றிக்கு தோத்திரப்பாடல் தான் முதன்மை பெறுகிறது, தோத்திரங்கள் மூலம் தான் வழிபாட்டிற்கு ஆதாரமாக அமைந்தது தான் தேவார - திருமந்திர பாடல்கள் கொண்ட பன்னிரு திருமுறை ஆகியன,
இந்த தோத்திர பாடல்களை சுருக்கி இறைவனை வேண்டுவதற்கு குறுகியசொற்களால் உறுவேற்றி ஆராய்ந்து கொண்டு வரப்பட்டவைகள் தான் மந்திர சுலோகங்கள் மற்றும் மந்திரங்கள் அனைத்தும்,இவை மந்திரங்களை உருவேற்றி மனித உடம்பில் மின் காந்த சக்தியை கூட்டிக் கொள்ளவேண்டும்
மந்திரங்களில் பிரதானமானது " ஓம்" என்ற பிரணவ மந்திரம், இது எல்லா நாம வழிகளிலும் சேர்த்து பிரணவ ஒலியை எழுப்ப சேர்க்கப்படுகிறது,உலகம்முழுவதும்சுற்றி வரும் நாமம்
ஓம் நமச்சிவாய, ஓம் நாமோ நாராயணா, ஒம் சக்தி, ஓம் குரு தேவ, என எல்லா சைவ, வைஸ்னவ நாம வழிகளில் பிராத்தனைக்காகவும் சேர்க்கபடுகிறது, இந்த ஓம் பிரண மந்திரத்தை சிவ மந்திரங்கள் உருவாக்கப்பட்டன, இந்த மந்திரங்களை ஒவ்வொரு சித்தர் பெருமக்களும் அவரரவர் ஆராய்ச்சிக்கு ஏற்ற சிவ மந்திரங்களை உருவாக்கியுள்ளனர், அகத்தியர், கஜபுஜண்டர் ஆகியோர் நமச்சியவாய மந்திரங்களை வெவ்வேறுகோணங்களில் ஆராய்ந்து தீர்க்கம் பெற்றனர்,அவைகளில பிரதானவானவை ஓம் நம சிவாய!ஓம் சிவய நம! போன்றவை ஓம் சிவ சிவ ஓம்! ஓம் என்பது சிவத்தையும் ரீம் என்பதற்கு சக்தியை இணைப்பதற்கு ஓம் ரீம் இணைத்து வேண்டிய செயலுக்கான மந்திர சொற்களை உருவேற்றினர்
இதில் அகத்தியர் மகிரிஷி ஒவ்வொரு செயலுக்கும் தனிதனி மந்திரம் கண்டுள்ளார் அவை எட்டு வகையாவன :
1)மோக சக்தி பெற - மோகன மந்திரம் : ஓம் ரீம் மோகய! மோகய!
2)வசிகம் செய்ய - வசிகமந்திரம் : ஓம் ரீம் வசி!வசி!
3) மனதை ஒருநிலைப்படுத்த - கெட்ட ஆவிகளைவிரட்ட - ஓம் ரீம் சம்பைய! சம்பைய!
4) ஆக்ஸ்யம் - பிரிந்தவர் ஒன்று சேர நம்னை வெறுத்தவர் வெறுப்புணர்வு மாற: ஓம் ரீம் ஆகஸ்ய !ஆகஸ்ய !
5) உச்சாடனம் நோய் கள் தீர - சுக வாழ்விற்கு : ஓம் ரீம் உச்சாடய! உச்சாடய!
6) வேதனம்: ஓம் ரீம் சேர்ந்தவர்கள் பிரிப்பதற்கு
7) செளபாக்கியம் பெற: ஓம் ரீம் சிவசிவ!
8) தெய்வ அருள் பெற ஓம் சிவ சிவ ஓம்!
மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஒரு லட்சம்தடவை உருவேற்றி ஜெபிக்க வேண்டும் மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் இந்தமந்திரம் நன்கு செயல்பட சைவ உணவினை நன்று
தெய்வ வழிபாடுகள் ஒன்பது வகையாக பிரிக்கப்பட்டுள்ளன, அவையாவன
கேட்டல், சொல்லுதல், நினைத்தல், பாதசேவை,கோவில் வழிபாடு, பிரர்த்தித்தல், பணிதல், நட்புகொளல், சமர்ப்பணம் செய்தல்
இதில் கேட்டல், சொல்லுதல் நினைத்தல், ஆகியவற்றிக்கு தோத்திரப்பாடல் தான் முதன்மை பெறுகிறது, தோத்திரங்கள் மூலம் தான் வழிபாட்டிற்கு ஆதாரமாக அமைந்தது தான் தேவார - திருமந்திர பாடல்கள் கொண்ட பன்னிரு திருமுறை ஆகியன,
இந்த தோத்திர பாடல்களை சுருக்கி இறைவனை வேண்டுவதற்கு குறுகியசொற்களால் உறுவேற்றி ஆராய்ந்து கொண்டு வரப்பட்டவைகள் தான் மந்திர சுலோகங்கள் மற்றும் மந்திரங்கள் அனைத்தும்,இவை மந்திரங்களை உருவேற்றி மனித உடம்பில் மின் காந்த சக்தியை கூட்டிக் கொள்ளவேண்டும்
மந்திரங்களில் பிரதானமானது " ஓம்" என்ற பிரணவ மந்திரம், இது எல்லா நாம வழிகளிலும் சேர்த்து பிரணவ ஒலியை எழுப்ப சேர்க்கப்படுகிறது,உலகம்முழுவதும்சுற்றி வரும் நாமம்
ஓம் நமச்சிவாய, ஓம் நாமோ நாராயணா, ஒம் சக்தி, ஓம் குரு தேவ, என எல்லா சைவ, வைஸ்னவ நாம வழிகளில் பிராத்தனைக்காகவும் சேர்க்கபடுகிறது, இந்த ஓம் பிரண மந்திரத்தை சிவ மந்திரங்கள் உருவாக்கப்பட்டன, இந்த மந்திரங்களை ஒவ்வொரு சித்தர் பெருமக்களும் அவரரவர் ஆராய்ச்சிக்கு ஏற்ற சிவ மந்திரங்களை உருவாக்கியுள்ளனர், அகத்தியர், கஜபுஜண்டர் ஆகியோர் நமச்சியவாய மந்திரங்களை வெவ்வேறுகோணங்களில் ஆராய்ந்து தீர்க்கம் பெற்றனர்,அவைகளில பிரதானவானவை ஓம் நம சிவாய!ஓம் சிவய நம! போன்றவை ஓம் சிவ சிவ ஓம்! ஓம் என்பது சிவத்தையும் ரீம் என்பதற்கு சக்தியை இணைப்பதற்கு ஓம் ரீம் இணைத்து வேண்டிய செயலுக்கான மந்திர சொற்களை உருவேற்றினர்
இதில் அகத்தியர் மகிரிஷி ஒவ்வொரு செயலுக்கும் தனிதனி மந்திரம் கண்டுள்ளார் அவை எட்டு வகையாவன :
1)மோக சக்தி பெற - மோகன மந்திரம் : ஓம் ரீம் மோகய! மோகய!
2)வசிகம் செய்ய - வசிகமந்திரம் : ஓம் ரீம் வசி!வசி!
3) மனதை ஒருநிலைப்படுத்த - கெட்ட ஆவிகளைவிரட்ட - ஓம் ரீம் சம்பைய! சம்பைய!
4) ஆக்ஸ்யம் - பிரிந்தவர் ஒன்று சேர நம்னை வெறுத்தவர் வெறுப்புணர்வு மாற: ஓம் ரீம் ஆகஸ்ய !ஆகஸ்ய !
5) உச்சாடனம் நோய் கள் தீர - சுக வாழ்விற்கு : ஓம் ரீம் உச்சாடய! உச்சாடய!
6) வேதனம்: ஓம் ரீம் சேர்ந்தவர்கள் பிரிப்பதற்கு
7) செளபாக்கியம் பெற: ஓம் ரீம் சிவசிவ!
8) தெய்வ அருள் பெற ஓம் சிவ சிவ ஓம்!
மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஒரு லட்சம்தடவை உருவேற்றி ஜெபிக்க வேண்டும் மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் இந்தமந்திரம் நன்கு செயல்பட சைவ உணவினை நன்று
தினமும் ஒரு திருமந்திரம்
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளர்ங்கரிது
அண்ணல் அறைந்த அறிவறியாவிடின்
எண்ணலி கோடியும் நீர்மேல் எழத்தே
இறைவன் ஆகமங்களை அருளிச் செய்தது அவனது பேரருள் காரணத்தால் ஆகும்
இத்தகைய சைவ ஆகமத்தின் உட்பொருளைத் தேவலோகத்தில் உள்ள தேவர்களும் அறிவர்
அண்ணலாம் சிவபெருமான் கூறியுள்ள சிவாகமத்தின் மெய்பொருள் உணரவில்லை எனில், இந்த
எண்ணற்ற பலவாகிய ஆகமங்கள் நீர் மேல் எழுத்துப்போல் பயன் தராமல் போகும்
வை, பூமாலை சுந்தரபாண்டியம்
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளர்ங்கரிது
அண்ணல் அறைந்த அறிவறியாவிடின்
எண்ணலி கோடியும் நீர்மேல் எழத்தே
இறைவன் ஆகமங்களை அருளிச் செய்தது அவனது பேரருள் காரணத்தால் ஆகும்
இத்தகைய சைவ ஆகமத்தின் உட்பொருளைத் தேவலோகத்தில் உள்ள தேவர்களும் அறிவர்
அண்ணலாம் சிவபெருமான் கூறியுள்ள சிவாகமத்தின் மெய்பொருள் உணரவில்லை எனில், இந்த
எண்ணற்ற பலவாகிய ஆகமங்கள் நீர் மேல் எழுத்துப்போல் பயன் தராமல் போகும்
வை, பூமாலை சுந்தரபாண்டியம்
திருநீறு தரும் பெருமை
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் ஏற்றனை
ந்ந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே - திருமூலர்
புலியோர்கோன் வெப்பொழித்த புகழியோர்கோன் கலல் போற்றி
ஆழிமிசை கல்மிதப்பில் அமைந்தபிரான் அடிபோற்றி
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலை திருவாதவூர் திருத்தாள் போற்றி - நால்வர் போற்றி
உலககெலாம் உணர்ந்தோற் கரியவன்
நிலவு லாகிய நீர்மலி வேணியன்
அலகில ஜோதியன் அம்பலத்தாடுவான்
மலர்சிலம்படி வாழ்த்தி வணங்கிடுவோம் - பெரியபுராணம் சேக்கிழார்
திருச்சிற்றம்பலம்
உலகலாவிய சமயங்களில் மிகவும் தொண்மைவாய்ந்தது இந்து சமயம் அதில் முதன்மையானது சைவமும் ஆகும், சைவமும் சிவமும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டிருப்பது, சைவம் இல்லையேல் சிவம் இல்லை, இந்த சைவத்தின் முக்கிய ஆதார அடையாளமாக திகழ்பவை மூன்று அவை - 1) திருநீறு, 2) திரு ருத்திராட்சம், 3) திரு சடாமுடி
இதில் திருநீறு என்பது எல்லோராலும் எளிதல் அணியக்கூடியது, அடுத்தது திரு ருத்திராட்சம் இது சற்று பக்குவம் அடைந்தவர்கள் மற்றும் சைவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள் மட்டும் அணிவதுண்டு, மூன்றாவதாக உள்ள சடைமுடி என்பது சைவத்தில் மிக பக்கவம் அடைந்தவர்கள் மற்றும் சித்தி யோக நிலையில் உள்ளவர்கள், மற்றும் துறவறம் பரிந்தவர்கள் தான் இதனை தரித்துள்ளனர்
எனவே இது சிவயோக சித்தர்கள் ஞானிகள் மற்றும் எதிலும் பற்றற்ற நிலையில் உள்ளவர்கள் தான் இதனை கொண்டுள்ளனர்
எனவே சைவத்தில் யாவராலும் எளிதில் அணியக்கூடியதும் எல்லோராலும் ஏற்று தினமும் புத்தம் புதியதாய் அணியக்கூடியதும் , திரு நீறு மட்டுமே, ஆடவருக்கு அழகு நெற்றியில் திருநீறு - மங்கையர்க்கு அழகு நெற்றியில் குங்கமும் ஆகும்
இதனையே சுந்தரமூர்த்தி நாயனாரும் திருத்தொண்டத்தொகையிலும் மும்மையால் உலகயாண்ட மூர்த்திக்கும் அடிமை என்பதால் இந்த மூன்று அடையாளங்களுக்குள்ள பெருமை நன்கு விளங்கும், சைவ சமயத்தில் ஆண்டவனை துதிக்க தோத்திரப்பாடல்களால் தோத்திரம் செய்து வழிபாடுசெய்தல் என்பது முக்கியமானதாகும், இந்த தோத்திரபாடல்கள் தான் நம் நால்வர் தந்த தேவராம் திருவாசகம் திருமந்திரம் அடங்கிய பன்னிரண்டு திருமுறைகளாகும், இவற்றை முழுவதுமாக எல்லோராலும் பாட இயலாத நிலையில் இதனை சுருக்கி பஞ்சாட்சர மந்திரங்களால் இறைவனை துதிக்கப்படுகிறார்கள்,இதில் ஐந்தெழுத்து சிவமந்திரமான (ஒம்) நமசிவாய என்ற மந்திரமாகும், ஒம் என்பது பிரணவமந்திரமும் நமசிவாய என்பது சிவமந்திரமும் ஆகும், நமசிவய என்ற சிவமந்திரத்தில் தோன்றியது ஐந்து பஞ்சாட்சர மந்திரங்கள் நமசிவய, சிவயநம, யநமசிவ, மசிவயந,யநமசிவ,
நமசிவய என்பது சூல பஞ்சார மந்திரம், சிவயநம என்பது சூட்சம மந்திரம், சிவசிவ என்பது அதி சூட்சம மந்திரம், இதில் எல்லாராலும் எளிதில் பயன்படுத்த தக்ககது சிவசிவ மந்திரமாகும் இதில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைச்சேர்த்து ஒம் சிவசிவ ஓம் என்ற மந்திரம் ஒலித்து தோத்திரம் சொல்வது மிக்க நன்று, ஆகவே இறைவழிபாட்டில் தோத்திர மந்திரம் ஓதல், திருநீறு அணிதல் என்பன சைவத்தின் முக்கிய முதன்மை அடையாளமாக அமையும்,இந்த திருநீறு அணிதலில் திருநீரு பற்றி அதன் முக்கியத்துவத்திற்கும் அதன் பலன்கள் குறித்து திருஞான சம்பந்தர் பெருமான் அதற்கென ஒரு தனி பதிகமே பாடி திருநீருக்கு பெருமை சேர்த்துள்ளர்,ஞானசம்பந்தருக்கும் திருநீருக்கும் அவர் இளம்பருவத்திலிருந்தே அதன் பெருமை சிறப்படைந்துள்ளதை அவர்தம் வரலாற்று வழிமுறைகள் மூலம் அறியலாம், ஞானசம்பந்தர் சிறு கைக்குழந்தையாக இருந்தபோது அன்னாரின் தாயார் ஞான சம்பந்தருக்கு திருநீரு கொண்டு காப்புகட்டி தொல்லையிலிருந்து நீக்கம் பெற்றது அன்றார் கூறிய கூற்றின் வழியே அறியலாம், சிறுவயதில் சில நேரங்களில்
பீீரிட்டு அழவதுண்டாம் ஆனால் உடனே அழகை நிறத்திவிடுமாம்,அண்ட அயலார் வீட்டில் உள்ளவர்கள் எங்கள் குழந்தைகள் யாவரும் அழும் போது அழுகை நிறத்தாமல் அழும் போது உங்கள் குழந்தைமட்டும் இதுமாதிரி இல்லாமல்உங்கள் குழந்தை மட்டும் இரவில் அழதாலும் உடனே நிறுத்திவிடுவதைக்கண்ட அண்டை அயலார் உங்கள் குழந்தைம்ட்டும் இரவில் அழதாலும் உடனே நிறுத்திவிடுகிறதே அதற்கு காரணம் யாது ? ஏதேனும் தாயத்து கட்டியுள்ளீர்களா? அல்லது மந்திரம் செய்துள்ளீர்களா? அல்து யாதனும் கயறு கட்டியுள்ளீர்களா?என்று வினவினார்களாம் அதற்கு பகவதியம்மையார் நான் எனது குழந்தைக்கு திருநீறு காப்பு அணிந்துள்ளேன் எனவேதான் குழந்தை அழதாலும் உடனே நிறுத்திவிடும் என்று திருநீற்றின் பெருமையினை அன்றே சிறப்பித்துள்ளார்கள்.
இதனையே சேக்கிழார் அவர்களும் தனது பெரிய புராணத்தில் திருநீறு காப்பு என்று பதிவுசெய்துள்ளார்,
திரு நீறு காப்பு பெருமை
மற்றொரு வேளையில் திருஞானசம்பந்தர் சிவபெருமானிடம் முத்துக்களால் ஆன முத்துபல்லாக்கு, முத்துசிவிகை, முத்துஆபரணங்கள் பெற்று திருவாரூக்கு வருகை தந்தபோது, அங்குள்ள பெண்கள் எல்லாம் அவரை வரவேற்க நிறைகுடம் மணிவிளக்கு, மஞ்சள் குங்குமம் போன்ற மங்கல பொருட்களைக் கொண்டு வரவேற்க வந்தபோது, ஒரு பெண்மணி மட்டும் ஒரு தட்டில் நீறு கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்தார்களாம் அவர் வேர் யாரும் அல்ல அன்னாரின் தாயரார் திலகவதியம்மார் தானாம், அப்போதும் ஞானசம்பந்தருக்கு திருநீறு மூலம் காப்பு கட்டு திருநீற்றின் பெருமையை பதிவு செய்தது வரலாறு கூறும்,
திருநீறு மந்திரமான பெருமை
பாண்டியமன்னன் வெப்பு நோய் நீக்கி மருந்தாகிய பெருமை
ஒருசமயம் பாண்டியநாட்டில் சமணமதம் வேரூன்றி சைவமதம் அழிந்துவரும் தருணத்தில்,சைவமதத்தினர் திருநீரு அணிந்தவர்களைக்கண்டாலே சமணர்கள் கண்டுமுட்டி என்றும் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கும் சமயத்தில்,இதனை மாற்றி சைவமதத்தை மறுபடியும் புத்துயிர் ஊட்ட சைவமத்தில் மாறா பற்றுடையவரான அந்நாட்டு அரசியார் மஙகையர்கரசியார் ஞானசம்பந்தரை பாண்டியநாட்டிற்கு வரவழைக்க ஏற்பாடு செய்தார், அதன் பொருட்டு ஞானசம்பந்தரும் பாண்டியநாட்டிற்கு புறப்பட்டு வந்தார், மதுரையம்பதியிலுள்ள ஒரு சிவமடலாயத்தில் தங்கியிருந்தார், இதையறிந்த சமணமதத்துறவிகள் ஞானசம்பந்தரை ஊரைவிட்டு விரட்டும் எண்ணத்தில் மந்திரங்கள் ஏவியும், பல இன்னாத வேளைகள் செய்தும் துண்பப்படுத்தினர், ஆனால் அவர்கள் ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் சிவபஞசத்திற்கு முன் பலிதம் ஆகவில்லை, எனவே சமணமத்தினர் வேறு வழியின்றி ஞானசம்பந்தர் தங்கியிருந்த சிவமடத்திற்கு தீ யிட்டனர், இதனால் அவருடன் இருந்த சிவனடிகள் பெரிதும் வெப்பு மிகுதியால் துண்புற்றனர் உடனே ஞானசம்பந்தரும் சிவமடத்திற்கு தீ யிட்டவர்களை விட்டுவிட்டு இதனையெல்லாம் கண்டுகொள்ளாதிருக்கும் மன்னர்தானே காரணம் என தாங்கள் படும் இந்த வெப்பின் கொடுமையை மன்னன் அனுபவிக்க வேண்டுமென மன்னனுக்கு வெப்புநோய் வர மந்திரம் ஏவினார், இதனால் மன்னன் அச்சனம் முதல் வெப்பு நோயால் துடிதுடித்தான் சமண அடியார்களை வரவழைத்து இதற்கு தீர்வு வேண்டினான், சமன துறவிகள் மன்னன் வெப்பு நோய் தீர மந்திர ஜபங்களை ஒதினர் ஆனால் யாதாலும் மன்னனின் வெப்பு நோய் பலிதம் ஆகவில்லை, உடனே மன்னனின் துணைவியார் மங்கையரசி மன்னனிடம் ஞானசம்பந்தர் என்ற சைவ சிவனடியார் வந்துள்ளார் அவரை அழைத்து இந் நோய்க்கு தீர்வுகாணலாம் என்று மன்னனிடம் வேண்டினார், மன்னரும் ஞானசம்பந்தரின் பெயரை கூறய உடனே தனக்கு நோய் தீர அறிகுறி தோன்றியது, எனவே ஞான சம்பந்தரை அரண்மனைக்கு வரவழைக்க உத்தரவிட்டார் இதனை சமணதுறவிகள் மிக எதிர்ப்பு தெரிவித்தனர், இருப்பினும் மன்னர் இதற்கு உடன்படாமல் வரவழைத்தார், ஞானசம்பந்தரும் வந்தார், மன்னனின் வெப்பு நோய்க்கு மருந்தாக திருநீறு பூச எண்ணினார் அப்போது மன்னரும் சமண மத்தினை சேர்ந்தவராகையால் சமணமத்தினர் திருநீரு பூச அனுமதிக்க வில்லை, எனவே மன்னர் எனது வெப்பு நோய் தீர வலபக்கம் சைவமதத்தின் மூலம் ஞானசம்பந்தரும், இடதுபக்கத்தினை சமண மததுறவிகள் மூலம் தீர்வு செய்ய வேண்டினார், சமண மத்தினரால் யாதும் செய்ய முடியவில்லை மன்னரின் வெப்பு நோயின் துன்பம் குறையவில்லை எனவே ஞானசம்பந்தரை வேண்டினார், உடனே சமணமதத்தினரால் திருநீறு பூச மறுக்கப்பட்டதால் உடனே மடப்பள்ளியிலுள்ள சாம்பலை பயன்படுத்தலாமா?என்று வினவ சமணமதத்தினர் அதற்கு சம்மதம் தெரிவிக்க உடனே மடப்பள்ளி சாம்பல கொண்டுவரப்பட்டு அந்த சாம்பலுக்கு திருநீற்று பதியம் பாடி சாம்பலுக்கு உரு ஏற்றி அந்த சாம்பலான திருநீற்றை மன்னனின் வலப்பக்கம் பூசினார், உடனே மன்னனின் வெப்பு நோய் வலப்பக்கம் பரிபூரண நிவாரணம் அடைந்தது, மன்னன் துன்பத்திலிருந்து விடுதை பெற்று, இடப்பக்கமும் திருநீறு பூச வேண்டி திருநீறு இடப்பக்கமும் அணிந்து முழு நிவாரணம் பெற்றான், இதிலிருந்து திருநீறு நோய் நீக்கும் மருந்தாக பெருமை கொண்டது, சமண சமயத்திற்கு சைவமத்திற்கு நடந்த போரட்டத்தில் வெற்றியும் கண்டது, ஞான சம்பந்தரின் திருநீற்று பதிகத்தின் மூலம் திருதரும் பெருமையினை காணலாம்,
மந்திரமாவது நீறு, வானவர் மேவது நீறு,
சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு,
தந்திரமாவது நீறு, சமயத்தில் உள்ளது நீறு,
வேத்தில் உள்ளது நீறு, வெந்துயர் நீக்குவது நீறு
போகம் தருவது நீறு, புண்ணியமாவது நீறு
ஒத தகுவது நீறு. உண்மை உள்ளது நீறு,
முக்தி தருவது நீறு, முனிவர் அணிவது நீறு,
சத்தியமாவது நீறு, கற்றோர் புகழ்வது நீறு
பக்தி தருவது நீறு, பரவ இனியது நீறு.
காண இனியது நீறு, கவினை தருவது நீறு,
பேணி அணிவருக்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு,
புண்ணியமாவது நீறு, மதியை தருவது நீறு
இவ்வாறு திருஞானசம்பந்தர் திருநீற்றின் பெருமையை சிறப்பித்துள்ளார்
திருநீரு அணிந்தால் சிவத்தின் அடிமை என்றும் திரு நீரே சிவமாக உள்ளதாக பெருமை பெருவது நீறு
பாம்பாட்டி சித்தர் பாம்பன் சுவாமிகள் மூலம் பெருமை
திருநீற்றின் பெருமையினை சிவத்திரு சித்தர் பாம்பன் சுவாமிகள் மூலம் பெருமையை அறியலாம், ஒருமுறை பாம்பாட்டி சித்தர் பாம்பன் சுவாமிகளின் குழந்தை இரவில இடைவிடாது அழுது கொண்டே இருப்பதை கண்ட அன்னாரின் துணைவியார் பாம்பன் சுவாமிகளிடம் தாங்கள்தான் முருக பக்தர்தானே இக்குழந்தை அழுவதை நிறத்த திருநீறு அணிய வேண்டினார் அதற்கு பாம்பன் சுவாமிகள் உடன்படவில்லை எனவே குழந்தையின் அழுகையும் தீரவில்லை இதனால் இருவரும் வேதனையுடன் இருக்கும் பட்சத்தில் சுவாமிகள் வெளியில் சென்ற சற்று நேரத்தில் ஒரு சிவனடியார் திடீரென வீட்டிற்கு வந்து ஏன் குழந்தை அழுதுகொண்டே உள்ளது ஏதேனும் உபயம் செய்ய வேண்டியதுதானே என்று வினவி விட்டு குழந்தை கொண்டு வருங்கள் நான் திருநீறு இடுகிறேன் என்று கூறி குழந்தைக்கு தான் கொண்டு வந்த திருநீற்றை குழந்தைக்கு அணிவித்துவிட்டு சென்று விட்டார், குழந்தையின் அழுகையும் நின்றுவிட்டது, அதன் பிறகு பாம்பன் சுவாமிகள் குழந்தையின் அழகை நின்றதை அறிந்து துணைவியாரிடம் காரணம் பற்றி வினவினார், அதற்கு துணைவியார் தாங்கள் திருநீறு இட மறுத்து சென்றபின் ஒரு சிவனடியார் வந்தார் குழந்தை அழுவதை கண்டு திருநீறு அணிவித்து சென்றார், குழந்தையின் அழுகையும் நின்றுவிட்டது என்றார், உடனே வந்து சென்ற சிவனடியார் யார் என்று அங்குமிங்கும் தேடினார் காணது கண்டு வியப்புற்று தான் திருநீறு பூச மறுத்தமையால் தனது முருகபெருமானே சிவனடியாராக வந்து திருநீறு அணிவித்து சென்றுள்ளார் என வியப்புற்றார், இதிலிருந்து குழந்தையின் அழுகைக்காக திருநீராக மருந்தாக முருகனே அணிவித்து சென்றது திரு நீறும் பெருமைபெற்றது, அறியலாம்
நாயன்மார்கள் மூலம் பெறுமை பெற்றது
திருநீறு அணிதல் என்பது எல்லா சிவனடியார்கள் எல்லாம் கையாண்டனர் என்றாலும் நெற்றிலில் பூசும் - பூசப்பட்ட திருநீறுக்காகவே தன் உயிர் நீத்த நாயன்மார்களை பார்க்கலாம், அதில ஒருவர் ஏனாதிநாத நாயனார் அன்னார் திருநீறு மேற் பக்தி மிகுதியால் திருநீறு அணிந்த சிவனடிகள்களை கண்டவுடன் சிவனையே கண்டதாகக் கொண்டு அன்னாருக்காக தனது உடல் பொருள் ஆவி தனது தன்மானம் என எதையும் தந்த உயிரை விட்டவர், சிவ சின்னமாகிய விபூதியை மெய்யன்போடு தரிப்பவர் சிவபதம் அடைவர் இதனை திருமூலர் தனது திருமந்திரத்தில் திருநீறு அணிந்திட எல்லாவினைகளும் தீர்ந்து சிவனடி சேர்வர் என்று " கங்காளன் பூசுங் கவிசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வாரே " என்ற பாடல் மூலம் திருநீற்றின் மகிமையை விளக்கிறார், இதன்படி நெற்றியில் பூசும் திருநீற்றின் மீது மிக பக்தி கொண்ட ஏனாதிநாத நாயினார் வாள் வித்தை பயிற்சி நடத்தும் தொழிலை கொண்டவர், இவரின் வளர்ச்சி பொறாமை கொண்ட இவர் ஒத்த தொழில் புரிந்த அதிசூரன் என்பான் இவர் மீது பொறாமை கொண்டு அவருடன் போர் செய்யக் கருதி கூட்டத்தோடும், தனியாகவும் இவருடன் பலமுறை போர் செய்து தோல்வியுற்றான் இருப்பினும் அவனது தனியாத எப்படியாவது போரிட்டு வஞ்சனையில் வெல்ல உபாயம் செய்தான், ஏனாதி நாயனார் விபூதியின் மேல் கொண்ட அபிரித பக்தியும் மரியாதையும் கொண்ட பண்பையும் விபூதி அணிந்தவரை எத்தருணத்திலும் எப்போதும் எந்த வித துன்பமும் செய்யமாட்டார் என்ற அரிய குணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவரை தனியே போர் புரிய அழைத்தான் அவ்வாறே நாயனாரும் போர் புரிய சம்மதித்து யுத்தத்ததிற்கு ஆயத்தமாகி போர்களத்தில தயார் நிலைியில் இருந்தார், அப்போது வஞ்ச எண்ணங் கொண்ட அதிசூரன் தான் ஒரு பழத்த சிவனடியார் போல் நெற்றி நிறைய திருநீற்றை அணிந்து கொண்டு நாயனாருடன் போர் புரிய தனது வாளை எடுத்து போரிட தொடங்கினான், அப்போது எதிரியின் நெற்றியை கண்ட ஏனாதி நாயனார் உடனே திருநீர் அணிந்த சிவபெருமானே தன் எதிரில் இருப்பதாக கொண்டு தன்னிடம் இருந்த ஆயுதங்களை கீழே வீசி எறிந்து விட்டு நிராயுதபானியாக நின்றார் உடனே அதிசூரன் அவரை தன் வாளால் பதம் பார்த்து தனது வஞ்சகத்தை தீர்த்துக் கொண்டான்,இவ்வாறு விபூதியின் மேல் கொண்ட அதிபக்தியால் தனது உயிரையே விட்டவர்
மற்றொரு நாயனார் மெய்பொருள் நாயனாராகும், இவர் மீது பொறாமை கொண்ட எதிரி நாட்டு அரசன் நாயனாரை வஞ்சகத்தால் கொல்ல நினைத்து திருநீறு அணிந்து சிவ உருவத்தில் வந்து அவருடைய அரன்மனைக்கே வந்து மறைமுகமாக சிவசாதனங்களை கொண்டுவருவதுபோல் அரண்மைன்க்கு வந்து நாயனாரின் படுக்கை அறையிலேயே நாயனாருக்க ஆத்ம உபதேசம் செய்வதாகக் கூறி தன்னுடை ஆயுதத்தால் மன்னரை - நாயன்ாரை கொண்டு விட்டான், நாயனார் தனது உயிர் போகும நிலையிலும் தன்னை கொலை செய்த எதிரியான போலி சிவனடியாரை சிவ வேடம் அணிந்து திருநீறு பூசியுள்ள காரணத்தால் அவரை எந்த வித தொந்தரவு செய்யக் கூடாது என்றும் அவருக்கு சரியான பாதுகாப்பு வழங்கி அன்னரை ஊர் எல்லை வர பாதுகாப்புடன் வெளியேற ஆனையிட்டு சிவ அடையாளத்திற்காக உயிரையும் துறந்து எதிரிக்கு பாதுகாப்பு வழங்கி திருநீற்றுக்கு பெருமை சேர்த்தவர் மெய்பொருள் நாயினார்
வாரியார் சுவாமிகள் திறுநீறு பெருமை கூறியது
வாரியார் சுவாமிகள் ஒருசமயம் ஆன்மிக சொற்பொழிவிற்காக வெளியூர் சென்றுவிட்டு மீழ் பயணத்திற்காக ஒரு புகைவண்டி நிலையத்தில் இழைப்பாரிக் கொண்டு இருந்தபோது அவரை கடந்து சென்ற மாணவ செல்வங்கள் சிலர் அன்னாரை கேலி செய்யும் நோக்கில் சுவாமிகளை பார்த்து தாங்கள் ஏன் உடல் முழுவதும் வெள்ளையடித்துள்ளீர்கள் என கிண்டலாக கேட்க அதற்கு வாரியார் சுவாமிகள் சற்றும் கோபம் கொள்ளாமல் சிவன் இருக்கும் வீட்டிற்கு தானப்பா வெள்ளையடிக்க வேண்டும் கட்டை மண் சுவருக்கு யாரப்பா வெள்ளையடிப்பார்கள் என் உடலின் உள்ளே சிவன் இருக்கிறான் அவன் குடியிருக்கும் இந்த உடல் துாய்மை பெற வெள்ளையடித்துள்ளேன் என்று மாணவர்களுக்கு அன்புடனே உபதேசபாணியில் பதில் அளித்ததைக் கண்ட மாணவர்கள் வெக்கத்தால் கூனிகுறுகி உடனே தங்களின் தவறுக்கு மன்னிப்பு வேண்டிக் கொண்டதோடு அவரிடமே திருநீறும் பூசி சென்று அன்றுமுதல் அவர்களும் தினமும் திருநீறு பூசி மகிழ்ந்துள்ளனர்
உண்மை தருவது - இடர்களைவது நீறு
ஒருமுறை தண்டபாணி தேசிகர் என்ற சிவனாடியார் கேரள மாநிலத்தில் ஆன்மிக தளங்கள் சென்றுவரும் தருணத்தில் ஒருநாள் அந்தி மறையும் போது அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்லும் முகத்தான் கடல்நீர் பின்வாங்கும் காலங்கரை நீரை கடந்து கோவிலுக்கு செல்ல படகு மூலம் செல்ல சென்ற போது அந்நீர் பரப்பை கடக்க உள்ள நபர்களுடன் தானும் படகில் ஏறிவிட்டார், ஏறிபின்தான் தெரிந்தது படகு ஒட்டுபவர் சரியான நிதானத்தில் இல்லாது படகை ஏறுக்குமாறு செலுத்தி சென்றது கண்டனர், எல்லோரும் பதைபதைத்து கொண்டிருந்த நேரத்தில் மேலும் சோதனை ஏற்பட்டது, படகில் சிறு துவாரத்தின் வழியாக நீர் கசிந்து படகில் நீர் பெருகிக் கொண்டிருந்தது எல்லோரும் பதைபதைத்து முனகலோடு இருந்தனர், தண்டபானி தேசிகரும் இன்றும் சலகண்டம் தான் இன்று உயிர் பிழைப்பது மறுபிறப்புதான் என்று எண்ணி தான் செல்லவிருக்கும் முருகனை உள்ளமுறுக வேண்டினார் உடனே தனது மனத்தில் ஒரு அசிரீ வாக்குபோல் திருநீற்றுக்கோவில் நான் இருக்கிறேன் பயம் வேண்டாம் என்ற யாரே கூறவது போல் உணர்வு ஏற்பட்டது, உடனே படகில் அதன் விளைவாக யாரோ ஒருவர் படகோட்டியை படகை இவ்வாறு செலுத்து இப்படிப்போ, அப்படிப்போ என்று ஒருவர் அதட்டிக் கொண்டிருந்தார் படகோட்டியும் சரியான திசையில் படகை செலுத்திக் கொண்டிருந்தார் மற்றவர்களும் படகில் கசிந்த நீரை கோப்பைகளின் மூலம வாரி வெளியேற்றிக் கொண்டிருந்தனர் ஒருவழியாக படகும் கரையை சேர்நத்து எல்லோரும் கரை வந்ததற்கு நிம்மதி பெருமூச்சிட்டுவிட்டனர், தண்டபாணி தேசிகரும் கரைவந்தமைக்கு முருகனுககு நன்றி தெரிவிக்கும் முறையாக திருநீற்றை எடுத்து பூச நினைத்த போதுதான் அந்த அசிரீ வாக்கு திருநீற்று கோவில் தான் இருப்பதாக கூறியது நினைவு வந்தது, எனவே திருநீரே ஆண்டவன் குடியிருக்கும் கோவிலாக நம் துயர் துடைக்கும் ஆலயமாக பயன்பட்டது கண்டு பெருமை கொண்டார்,வழிக்கு துணையாக இடர்களையும் ஆயுதமாக திருநீறு விளங்குகிறது,
அருணகிரி நாதர் பெருமை சேர்த்தது
அருணகிரிநாதர் ஒருநாள் திருவண்ணாமலையில் பெருமானை தரிசிக்க சென்ற போது கோவில் மூலஸ்தானத்தில் சுவாமியை வணங்கிவிட்டு பிரசாதமாக திருநீறு பெறுவதற்காக சுற்றுமுற்றும் பார்த்தவுடன் ஒரு ஆச்சாரியார் திடீரென வந்து திருநீறுவழங்கி சென்றார் திருநீரை அணிந்து விட்டு ஆச்சாரியாருக்கு நன்றி சொல்லும் விதமாக சுற்று பார்த்தபோது தனக்கு பிரசாத திருநீறு வழங்கிய ஆச்சாரியார் அங்குஇல்லை பின் சன்னதியை விட்டு திரும்பும் தருணத்தில் எதிரே அந்த ஆச்சாரியார் வேகமாக வந்து கொண்டிருந்தார் அவரை கண்டவுடன் அருணகிரியார் அவருக்கு திருநீறு வழங்கியதற்கு நன்றியை கூறினார் ஆனால் உடனே அந்த ஆச்சாரியார் நான் இப்போதுதானே வருகிறேன், தங்களுக்கு திருநீறு வழங்குவதற்காகத்தானே விரைந்து வந்து கொண்டிருக்கிறேன் ஆனால் தாங்கள் திரும்பிவிட்டீர்கள் என்ற கூற்றை கேட்டவுடன் அருணகிரியாருக்கு ஒன்றும் புரியவில்லை அப்படியானால் தன்ககு திருநீறு வழங்கியது யார்? என் பொருட்டு அண்ணாமலையார் தான் வழங்கினாரா? என்ற ஆச்சிரியத்தோடு திரும்பினார், இதிலிருந்து அண்ணாமலையாரே அருணகிரியாருக்கு திருநீறு வழங்கப்பெற்று சிறப்பு பெற்றது இதனால் அருணகிரிநாதர் திருநீரை வைத்தே பாடல்கள் பாடி அண்ணாமலையாரை அழைத்து சிறப்பித்தார்
செல்வம் தருவது
திருநீறு அணிவதால் செல்வம் கிடைக்கும் ஒரு ஏழை நெசவாளிக்கு திருநீறு அணிவதன் பயனை எடுத்துரைக்கும் முகமாக வாரியார் சொற்பொழிவு மூலம் ஒரு அடைந்த நிகழ்வு மூலம் அறியலாம், கடினமான உழைப்பே பிரதானமாக கொண்ட ஒரு நெசவாளி திருநீறு அணிவதோ தெய்வபக்தியோ இல்லாதவருக்கு அவர் துணைவியார் ஆன்மீக நெறிகளிலும் திருநீறு அணிவதிலும் மிக விரும்பம் கொண்டவர் தன் கணவரே இதற்கு எதிர்மறையானவர் இதன் பொருட்டு அவரை சைவநெறியில் கொண்டுவர முயன்று விரக்தியடைந்த நேரத்தில் ஒரு சித்தி பெற்ற சிவனடியாரை கண்டு இதற்கு வழிவேண்டினார் அவரும் தனது கணவரை தான் திருநீரு அணியாவிட்டாலும் தினமும் ஒரு திருநீறு அணிந்த சிவபக்தரை கண்டபின்தான் உணவு என்று கூறி அதன்படி செய் என்று கூறனார் அந்த அம்மையாரும் தன் கணவனிடம் இவ்வாறே கூறனார் அவரும் இதற்கு சம்மதித்து தன் வீட்டுககு அருகாமையில் உள்ள ஒரு சிவ பக்தரை அடையாளம் கண்டு கொண்டார் அன்னார் தினமும் மூக்கு பொடிபோடும் பழக்கம் உள்ளவரும் அந்த பொடியும் இவரிடமே பெறும் தன்மையுடையவர் எனவே இவருக்கு தினமும் அவரை உணவு உண்ணும் முன்பாக மூக்குபொடி பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார் இதன்படி இவருடைய பழக்கவழக்கங்கள் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது ஒருநாள் அந்த திருநீறு அணிந்த சிவபக்தர் வெகு நேரம் ஆகியும் வரவில்லை இவருக்கோ பசி அதிகமாயிற்று உடனே தானே அவருடை வீட்டிற்கு அவரை தேடிச் சென்றார், அவர் தனது தோட்டத்தில் சிறிய வேலையாக தோட்டத்தில் ஒரு குழி தோண்டிக்கொண்டிருந்தார் அப்போது அக்குழியில் ஒரு புதையல் இருப்பதை கண்டு வியப்புற்று பயத்துடன் புதையலை எடுத்துக் கொண்டிருந்தவேளையில் இவர் சிவபக்தரின் திருநீறு அணிந்த நெற்றியை சற்று தொலைவிலேயே பார்த்தவுடன் பார்த்துவிட்டேன் பார்த்துவிட்டேன் என்று கத்திக்கொண்டே ஒட ஆரம்பித்தார், அவரே தான் கண்ட புதையலைத்தான் பார்த்து விட்டார் என எண்ணி பதைபதைத்துக் கொண்டு அவரை பின் தொடர்ந்து ஒடி ஐயா பார்ததது தான் பார்த்தீர்கள் தயவுசெய்து பார்த்ததை யாரிடமும் கூறவிடாதீர்கள் உங்களுக்கும் பார்த்த புதையலில் பாதி பங்கு தருகிறேன் என்றார், இந்தநெசவாளிக்கோ திருநீறு நெற்றியை தினமும் பார்த்ததற்கே பாதி புதையல் பரிசு கிடைத்துவிட்டதே என மிக மகிழ்ச்சி கொண்டார் பார்த்தர்கே செல்வம் என்றால் இந்த திருநீரை தினமும் அணிந்தால் இன்னும் செல்வம் கூடுமே என்று மகிழ்ந்து அன்றிலிருந்து தினமும் திருநீறு அணிய ஆரம்பித்தார்
திருமந்திரத்தில் திருநீற்றின் பெருமை
திருமூலர் தனது திருமந்திரத்தில் திருநீற்றின் பெமையை தனது மந்திரத்தில் கூறியது
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழவரேயாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வாரே
எலும்புகளை அணியும் இறைவன் பூசிக்கொள்வதும், உடலுக்கு கவசமாக விளங்கும் திருநீற்றை
சிறிதும் தடையில்லாது உடலில் பூசிமகிழ்ந்தால் தீவினைகள் நீங்கும் மோட்சம் இன்பம் அடைய
வழி உண்டாகும் இறைவனது அழகிய திருவடிகளை அடையலாம்
இந்த மருத்துவ குணங்கள் கொண்ட திருநீறை யாரும் ஆகம விதிப்படி தயார் செய்து பயன் பெறலாம்,
திருநீறு தயாரிக்கும் முறை
2 கிலோ சாம்பல் கிடைக்கும் அளவிற்கான பசுஞ்சாணம், பசுஞ்சாணம் கீழே விழாமல் எடுத்து வரட்டியாக்கி பஸ்பமாக்கி சாம்பலாக்கி கொண்டு சலித்து 2கிலோ எடுத்துக் கொள்ளவேண்டும் இவற்றுடன் பஸ்பமாக்கிய - படிகாரம் 10கிராம், குங்கிலியம் ,சங்குபஸ்பம்,
ஆமைஒடு, பவளம்,சிராபஸ்பம், கிரஞ்சி பஸ்பம், முத்துசிப்பி, நத்தை ஒடு, ( எல்லாம் பஸ்பமாக்கியது 10கிராம்) வீதம் கலந்து ஒன்றாக்கி பித்தளை தாமபளத்தில் பரப்பி ஒம் சிவசிவ ஒம் ஒதி மண் குடுவைகளில் சேித்து வைத்துக்கொள்ளலாம் ,ஆலயத்தில் சுவாமிக்கு அபிசேகத்திற்ககு கொடுத்து அபிசேகம் செய்தும் சேமித்து வைத்துக்கொள்ளவும், இவ்வாறு தயார் செய்த மந்திர விபூதி எல்லாவற்றிக்கு சிறநதது,
திருநீறு மருத்துவ குணமுடையது
திரு நீறை நெற்றியில் நீரில் குழைத்து பூசினால் கபாலத்திலுள்ள நீர் குறைந்து கபால நீரால் வரும் வியாதிகள் தீரும் என்பது இன்றளவிலும் கண்ட உண்மை, வாதநோய் உள்ளவர்களுக்கு உடலில் பூசி வாதநோய் குணமடைவதை காணலாம், திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு சூன்ம வயிற்று வலிக்கு அவரின் தமக்கையார் வயிற்றில் திருநீற்றை பூசி குணமடைந்த வரலாறு பெரியபுராணத்தில் காணலாம்
இவ்வாறு திருநீற்றின் பெருமையை புராண காலம் தொட்டு இன்றுவரை அதன் சிறப்பு பெருமைகளை இன்றளவும் காணலாம்
எனவே தோத்திரங்கள் ஓதி திருநீறு அணிந்து பெருவாழ்வு பெறுவோம்,
அன்புடன்
சிவ, வை, பூமாலை சுந்தரபாண்டியம்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் ஏற்றனை
ந்ந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே - திருமூலர்
புலியோர்கோன் வெப்பொழித்த புகழியோர்கோன் கலல் போற்றி
ஆழிமிசை கல்மிதப்பில் அமைந்தபிரான் அடிபோற்றி
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலை திருவாதவூர் திருத்தாள் போற்றி - நால்வர் போற்றி
உலககெலாம் உணர்ந்தோற் கரியவன்
நிலவு லாகிய நீர்மலி வேணியன்
அலகில ஜோதியன் அம்பலத்தாடுவான்
மலர்சிலம்படி வாழ்த்தி வணங்கிடுவோம் - பெரியபுராணம் சேக்கிழார்
திருச்சிற்றம்பலம்
உலகலாவிய சமயங்களில் மிகவும் தொண்மைவாய்ந்தது இந்து சமயம் அதில் முதன்மையானது சைவமும் ஆகும், சைவமும் சிவமும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டிருப்பது, சைவம் இல்லையேல் சிவம் இல்லை, இந்த சைவத்தின் முக்கிய ஆதார அடையாளமாக திகழ்பவை மூன்று அவை - 1) திருநீறு, 2) திரு ருத்திராட்சம், 3) திரு சடாமுடி
இதில் திருநீறு என்பது எல்லோராலும் எளிதல் அணியக்கூடியது, அடுத்தது திரு ருத்திராட்சம் இது சற்று பக்குவம் அடைந்தவர்கள் மற்றும் சைவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள் மட்டும் அணிவதுண்டு, மூன்றாவதாக உள்ள சடைமுடி என்பது சைவத்தில் மிக பக்கவம் அடைந்தவர்கள் மற்றும் சித்தி யோக நிலையில் உள்ளவர்கள், மற்றும் துறவறம் பரிந்தவர்கள் தான் இதனை தரித்துள்ளனர்
எனவே இது சிவயோக சித்தர்கள் ஞானிகள் மற்றும் எதிலும் பற்றற்ற நிலையில் உள்ளவர்கள் தான் இதனை கொண்டுள்ளனர்
எனவே சைவத்தில் யாவராலும் எளிதில் அணியக்கூடியதும் எல்லோராலும் ஏற்று தினமும் புத்தம் புதியதாய் அணியக்கூடியதும் , திரு நீறு மட்டுமே, ஆடவருக்கு அழகு நெற்றியில் திருநீறு - மங்கையர்க்கு அழகு நெற்றியில் குங்கமும் ஆகும்
இதனையே சுந்தரமூர்த்தி நாயனாரும் திருத்தொண்டத்தொகையிலும் மும்மையால் உலகயாண்ட மூர்த்திக்கும் அடிமை என்பதால் இந்த மூன்று அடையாளங்களுக்குள்ள பெருமை நன்கு விளங்கும், சைவ சமயத்தில் ஆண்டவனை துதிக்க தோத்திரப்பாடல்களால் தோத்திரம் செய்து வழிபாடுசெய்தல் என்பது முக்கியமானதாகும், இந்த தோத்திரபாடல்கள் தான் நம் நால்வர் தந்த தேவராம் திருவாசகம் திருமந்திரம் அடங்கிய பன்னிரண்டு திருமுறைகளாகும், இவற்றை முழுவதுமாக எல்லோராலும் பாட இயலாத நிலையில் இதனை சுருக்கி பஞ்சாட்சர மந்திரங்களால் இறைவனை துதிக்கப்படுகிறார்கள்,இதில் ஐந்தெழுத்து சிவமந்திரமான (ஒம்) நமசிவாய என்ற மந்திரமாகும், ஒம் என்பது பிரணவமந்திரமும் நமசிவாய என்பது சிவமந்திரமும் ஆகும், நமசிவய என்ற சிவமந்திரத்தில் தோன்றியது ஐந்து பஞ்சாட்சர மந்திரங்கள் நமசிவய, சிவயநம, யநமசிவ, மசிவயந,யநமசிவ,
நமசிவய என்பது சூல பஞ்சார மந்திரம், சிவயநம என்பது சூட்சம மந்திரம், சிவசிவ என்பது அதி சூட்சம மந்திரம், இதில் எல்லாராலும் எளிதில் பயன்படுத்த தக்ககது சிவசிவ மந்திரமாகும் இதில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைச்சேர்த்து ஒம் சிவசிவ ஓம் என்ற மந்திரம் ஒலித்து தோத்திரம் சொல்வது மிக்க நன்று, ஆகவே இறைவழிபாட்டில் தோத்திர மந்திரம் ஓதல், திருநீறு அணிதல் என்பன சைவத்தின் முக்கிய முதன்மை அடையாளமாக அமையும்,இந்த திருநீறு அணிதலில் திருநீரு பற்றி அதன் முக்கியத்துவத்திற்கும் அதன் பலன்கள் குறித்து திருஞான சம்பந்தர் பெருமான் அதற்கென ஒரு தனி பதிகமே பாடி திருநீருக்கு பெருமை சேர்த்துள்ளர்,ஞானசம்பந்தருக்கும் திருநீருக்கும் அவர் இளம்பருவத்திலிருந்தே அதன் பெருமை சிறப்படைந்துள்ளதை அவர்தம் வரலாற்று வழிமுறைகள் மூலம் அறியலாம், ஞானசம்பந்தர் சிறு கைக்குழந்தையாக இருந்தபோது அன்னாரின் தாயார் ஞான சம்பந்தருக்கு திருநீரு கொண்டு காப்புகட்டி தொல்லையிலிருந்து நீக்கம் பெற்றது அன்றார் கூறிய கூற்றின் வழியே அறியலாம், சிறுவயதில் சில நேரங்களில்
பீீரிட்டு அழவதுண்டாம் ஆனால் உடனே அழகை நிறத்திவிடுமாம்,அண்ட அயலார் வீட்டில் உள்ளவர்கள் எங்கள் குழந்தைகள் யாவரும் அழும் போது அழுகை நிறத்தாமல் அழும் போது உங்கள் குழந்தைமட்டும் இதுமாதிரி இல்லாமல்உங்கள் குழந்தை மட்டும் இரவில் அழதாலும் உடனே நிறுத்திவிடுவதைக்கண்ட அண்டை அயலார் உங்கள் குழந்தைம்ட்டும் இரவில் அழதாலும் உடனே நிறுத்திவிடுகிறதே அதற்கு காரணம் யாது ? ஏதேனும் தாயத்து கட்டியுள்ளீர்களா? அல்லது மந்திரம் செய்துள்ளீர்களா? அல்து யாதனும் கயறு கட்டியுள்ளீர்களா?என்று வினவினார்களாம் அதற்கு பகவதியம்மையார் நான் எனது குழந்தைக்கு திருநீறு காப்பு அணிந்துள்ளேன் எனவேதான் குழந்தை அழதாலும் உடனே நிறுத்திவிடும் என்று திருநீற்றின் பெருமையினை அன்றே சிறப்பித்துள்ளார்கள்.
இதனையே சேக்கிழார் அவர்களும் தனது பெரிய புராணத்தில் திருநீறு காப்பு என்று பதிவுசெய்துள்ளார்,
திரு நீறு காப்பு பெருமை
மற்றொரு வேளையில் திருஞானசம்பந்தர் சிவபெருமானிடம் முத்துக்களால் ஆன முத்துபல்லாக்கு, முத்துசிவிகை, முத்துஆபரணங்கள் பெற்று திருவாரூக்கு வருகை தந்தபோது, அங்குள்ள பெண்கள் எல்லாம் அவரை வரவேற்க நிறைகுடம் மணிவிளக்கு, மஞ்சள் குங்குமம் போன்ற மங்கல பொருட்களைக் கொண்டு வரவேற்க வந்தபோது, ஒரு பெண்மணி மட்டும் ஒரு தட்டில் நீறு கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்தார்களாம் அவர் வேர் யாரும் அல்ல அன்னாரின் தாயரார் திலகவதியம்மார் தானாம், அப்போதும் ஞானசம்பந்தருக்கு திருநீறு மூலம் காப்பு கட்டு திருநீற்றின் பெருமையை பதிவு செய்தது வரலாறு கூறும்,
திருநீறு மந்திரமான பெருமை
பாண்டியமன்னன் வெப்பு நோய் நீக்கி மருந்தாகிய பெருமை
ஒருசமயம் பாண்டியநாட்டில் சமணமதம் வேரூன்றி சைவமதம் அழிந்துவரும் தருணத்தில்,சைவமதத்தினர் திருநீரு அணிந்தவர்களைக்கண்டாலே சமணர்கள் கண்டுமுட்டி என்றும் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கும் சமயத்தில்,இதனை மாற்றி சைவமதத்தை மறுபடியும் புத்துயிர் ஊட்ட சைவமத்தில் மாறா பற்றுடையவரான அந்நாட்டு அரசியார் மஙகையர்கரசியார் ஞானசம்பந்தரை பாண்டியநாட்டிற்கு வரவழைக்க ஏற்பாடு செய்தார், அதன் பொருட்டு ஞானசம்பந்தரும் பாண்டியநாட்டிற்கு புறப்பட்டு வந்தார், மதுரையம்பதியிலுள்ள ஒரு சிவமடலாயத்தில் தங்கியிருந்தார், இதையறிந்த சமணமதத்துறவிகள் ஞானசம்பந்தரை ஊரைவிட்டு விரட்டும் எண்ணத்தில் மந்திரங்கள் ஏவியும், பல இன்னாத வேளைகள் செய்தும் துண்பப்படுத்தினர், ஆனால் அவர்கள் ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் சிவபஞசத்திற்கு முன் பலிதம் ஆகவில்லை, எனவே சமணமத்தினர் வேறு வழியின்றி ஞானசம்பந்தர் தங்கியிருந்த சிவமடத்திற்கு தீ யிட்டனர், இதனால் அவருடன் இருந்த சிவனடிகள் பெரிதும் வெப்பு மிகுதியால் துண்புற்றனர் உடனே ஞானசம்பந்தரும் சிவமடத்திற்கு தீ யிட்டவர்களை விட்டுவிட்டு இதனையெல்லாம் கண்டுகொள்ளாதிருக்கும் மன்னர்தானே காரணம் என தாங்கள் படும் இந்த வெப்பின் கொடுமையை மன்னன் அனுபவிக்க வேண்டுமென மன்னனுக்கு வெப்புநோய் வர மந்திரம் ஏவினார், இதனால் மன்னன் அச்சனம் முதல் வெப்பு நோயால் துடிதுடித்தான் சமண அடியார்களை வரவழைத்து இதற்கு தீர்வு வேண்டினான், சமன துறவிகள் மன்னன் வெப்பு நோய் தீர மந்திர ஜபங்களை ஒதினர் ஆனால் யாதாலும் மன்னனின் வெப்பு நோய் பலிதம் ஆகவில்லை, உடனே மன்னனின் துணைவியார் மங்கையரசி மன்னனிடம் ஞானசம்பந்தர் என்ற சைவ சிவனடியார் வந்துள்ளார் அவரை அழைத்து இந் நோய்க்கு தீர்வுகாணலாம் என்று மன்னனிடம் வேண்டினார், மன்னரும் ஞானசம்பந்தரின் பெயரை கூறய உடனே தனக்கு நோய் தீர அறிகுறி தோன்றியது, எனவே ஞான சம்பந்தரை அரண்மனைக்கு வரவழைக்க உத்தரவிட்டார் இதனை சமணதுறவிகள் மிக எதிர்ப்பு தெரிவித்தனர், இருப்பினும் மன்னர் இதற்கு உடன்படாமல் வரவழைத்தார், ஞானசம்பந்தரும் வந்தார், மன்னனின் வெப்பு நோய்க்கு மருந்தாக திருநீறு பூச எண்ணினார் அப்போது மன்னரும் சமண மத்தினை சேர்ந்தவராகையால் சமணமத்தினர் திருநீரு பூச அனுமதிக்க வில்லை, எனவே மன்னர் எனது வெப்பு நோய் தீர வலபக்கம் சைவமதத்தின் மூலம் ஞானசம்பந்தரும், இடதுபக்கத்தினை சமண மததுறவிகள் மூலம் தீர்வு செய்ய வேண்டினார், சமண மத்தினரால் யாதும் செய்ய முடியவில்லை மன்னரின் வெப்பு நோயின் துன்பம் குறையவில்லை எனவே ஞானசம்பந்தரை வேண்டினார், உடனே சமணமதத்தினரால் திருநீறு பூச மறுக்கப்பட்டதால் உடனே மடப்பள்ளியிலுள்ள சாம்பலை பயன்படுத்தலாமா?என்று வினவ சமணமதத்தினர் அதற்கு சம்மதம் தெரிவிக்க உடனே மடப்பள்ளி சாம்பல கொண்டுவரப்பட்டு அந்த சாம்பலுக்கு திருநீற்று பதியம் பாடி சாம்பலுக்கு உரு ஏற்றி அந்த சாம்பலான திருநீற்றை மன்னனின் வலப்பக்கம் பூசினார், உடனே மன்னனின் வெப்பு நோய் வலப்பக்கம் பரிபூரண நிவாரணம் அடைந்தது, மன்னன் துன்பத்திலிருந்து விடுதை பெற்று, இடப்பக்கமும் திருநீறு பூச வேண்டி திருநீறு இடப்பக்கமும் அணிந்து முழு நிவாரணம் பெற்றான், இதிலிருந்து திருநீறு நோய் நீக்கும் மருந்தாக பெருமை கொண்டது, சமண சமயத்திற்கு சைவமத்திற்கு நடந்த போரட்டத்தில் வெற்றியும் கண்டது, ஞான சம்பந்தரின் திருநீற்று பதிகத்தின் மூலம் திருதரும் பெருமையினை காணலாம்,
மந்திரமாவது நீறு, வானவர் மேவது நீறு,
சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு,
தந்திரமாவது நீறு, சமயத்தில் உள்ளது நீறு,
வேத்தில் உள்ளது நீறு, வெந்துயர் நீக்குவது நீறு
போகம் தருவது நீறு, புண்ணியமாவது நீறு
ஒத தகுவது நீறு. உண்மை உள்ளது நீறு,
முக்தி தருவது நீறு, முனிவர் அணிவது நீறு,
சத்தியமாவது நீறு, கற்றோர் புகழ்வது நீறு
பக்தி தருவது நீறு, பரவ இனியது நீறு.
காண இனியது நீறு, கவினை தருவது நீறு,
பேணி அணிவருக்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு,
புண்ணியமாவது நீறு, மதியை தருவது நீறு
இவ்வாறு திருஞானசம்பந்தர் திருநீற்றின் பெருமையை சிறப்பித்துள்ளார்
திருநீரு அணிந்தால் சிவத்தின் அடிமை என்றும் திரு நீரே சிவமாக உள்ளதாக பெருமை பெருவது நீறு
பாம்பாட்டி சித்தர் பாம்பன் சுவாமிகள் மூலம் பெருமை
திருநீற்றின் பெருமையினை சிவத்திரு சித்தர் பாம்பன் சுவாமிகள் மூலம் பெருமையை அறியலாம், ஒருமுறை பாம்பாட்டி சித்தர் பாம்பன் சுவாமிகளின் குழந்தை இரவில இடைவிடாது அழுது கொண்டே இருப்பதை கண்ட அன்னாரின் துணைவியார் பாம்பன் சுவாமிகளிடம் தாங்கள்தான் முருக பக்தர்தானே இக்குழந்தை அழுவதை நிறத்த திருநீறு அணிய வேண்டினார் அதற்கு பாம்பன் சுவாமிகள் உடன்படவில்லை எனவே குழந்தையின் அழுகையும் தீரவில்லை இதனால் இருவரும் வேதனையுடன் இருக்கும் பட்சத்தில் சுவாமிகள் வெளியில் சென்ற சற்று நேரத்தில் ஒரு சிவனடியார் திடீரென வீட்டிற்கு வந்து ஏன் குழந்தை அழுதுகொண்டே உள்ளது ஏதேனும் உபயம் செய்ய வேண்டியதுதானே என்று வினவி விட்டு குழந்தை கொண்டு வருங்கள் நான் திருநீறு இடுகிறேன் என்று கூறி குழந்தைக்கு தான் கொண்டு வந்த திருநீற்றை குழந்தைக்கு அணிவித்துவிட்டு சென்று விட்டார், குழந்தையின் அழுகையும் நின்றுவிட்டது, அதன் பிறகு பாம்பன் சுவாமிகள் குழந்தையின் அழகை நின்றதை அறிந்து துணைவியாரிடம் காரணம் பற்றி வினவினார், அதற்கு துணைவியார் தாங்கள் திருநீறு இட மறுத்து சென்றபின் ஒரு சிவனடியார் வந்தார் குழந்தை அழுவதை கண்டு திருநீறு அணிவித்து சென்றார், குழந்தையின் அழுகையும் நின்றுவிட்டது என்றார், உடனே வந்து சென்ற சிவனடியார் யார் என்று அங்குமிங்கும் தேடினார் காணது கண்டு வியப்புற்று தான் திருநீறு பூச மறுத்தமையால் தனது முருகபெருமானே சிவனடியாராக வந்து திருநீறு அணிவித்து சென்றுள்ளார் என வியப்புற்றார், இதிலிருந்து குழந்தையின் அழுகைக்காக திருநீராக மருந்தாக முருகனே அணிவித்து சென்றது திரு நீறும் பெருமைபெற்றது, அறியலாம்
நாயன்மார்கள் மூலம் பெறுமை பெற்றது
திருநீறு அணிதல் என்பது எல்லா சிவனடியார்கள் எல்லாம் கையாண்டனர் என்றாலும் நெற்றிலில் பூசும் - பூசப்பட்ட திருநீறுக்காகவே தன் உயிர் நீத்த நாயன்மார்களை பார்க்கலாம், அதில ஒருவர் ஏனாதிநாத நாயனார் அன்னார் திருநீறு மேற் பக்தி மிகுதியால் திருநீறு அணிந்த சிவனடிகள்களை கண்டவுடன் சிவனையே கண்டதாகக் கொண்டு அன்னாருக்காக தனது உடல் பொருள் ஆவி தனது தன்மானம் என எதையும் தந்த உயிரை விட்டவர், சிவ சின்னமாகிய விபூதியை மெய்யன்போடு தரிப்பவர் சிவபதம் அடைவர் இதனை திருமூலர் தனது திருமந்திரத்தில் திருநீறு அணிந்திட எல்லாவினைகளும் தீர்ந்து சிவனடி சேர்வர் என்று " கங்காளன் பூசுங் கவிசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வாரே " என்ற பாடல் மூலம் திருநீற்றின் மகிமையை விளக்கிறார், இதன்படி நெற்றியில் பூசும் திருநீற்றின் மீது மிக பக்தி கொண்ட ஏனாதிநாத நாயினார் வாள் வித்தை பயிற்சி நடத்தும் தொழிலை கொண்டவர், இவரின் வளர்ச்சி பொறாமை கொண்ட இவர் ஒத்த தொழில் புரிந்த அதிசூரன் என்பான் இவர் மீது பொறாமை கொண்டு அவருடன் போர் செய்யக் கருதி கூட்டத்தோடும், தனியாகவும் இவருடன் பலமுறை போர் செய்து தோல்வியுற்றான் இருப்பினும் அவனது தனியாத எப்படியாவது போரிட்டு வஞ்சனையில் வெல்ல உபாயம் செய்தான், ஏனாதி நாயனார் விபூதியின் மேல் கொண்ட அபிரித பக்தியும் மரியாதையும் கொண்ட பண்பையும் விபூதி அணிந்தவரை எத்தருணத்திலும் எப்போதும் எந்த வித துன்பமும் செய்யமாட்டார் என்ற அரிய குணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவரை தனியே போர் புரிய அழைத்தான் அவ்வாறே நாயனாரும் போர் புரிய சம்மதித்து யுத்தத்ததிற்கு ஆயத்தமாகி போர்களத்தில தயார் நிலைியில் இருந்தார், அப்போது வஞ்ச எண்ணங் கொண்ட அதிசூரன் தான் ஒரு பழத்த சிவனடியார் போல் நெற்றி நிறைய திருநீற்றை அணிந்து கொண்டு நாயனாருடன் போர் புரிய தனது வாளை எடுத்து போரிட தொடங்கினான், அப்போது எதிரியின் நெற்றியை கண்ட ஏனாதி நாயனார் உடனே திருநீர் அணிந்த சிவபெருமானே தன் எதிரில் இருப்பதாக கொண்டு தன்னிடம் இருந்த ஆயுதங்களை கீழே வீசி எறிந்து விட்டு நிராயுதபானியாக நின்றார் உடனே அதிசூரன் அவரை தன் வாளால் பதம் பார்த்து தனது வஞ்சகத்தை தீர்த்துக் கொண்டான்,இவ்வாறு விபூதியின் மேல் கொண்ட அதிபக்தியால் தனது உயிரையே விட்டவர்
மற்றொரு நாயனார் மெய்பொருள் நாயனாராகும், இவர் மீது பொறாமை கொண்ட எதிரி நாட்டு அரசன் நாயனாரை வஞ்சகத்தால் கொல்ல நினைத்து திருநீறு அணிந்து சிவ உருவத்தில் வந்து அவருடைய அரன்மனைக்கே வந்து மறைமுகமாக சிவசாதனங்களை கொண்டுவருவதுபோல் அரண்மைன்க்கு வந்து நாயனாரின் படுக்கை அறையிலேயே நாயனாருக்க ஆத்ம உபதேசம் செய்வதாகக் கூறி தன்னுடை ஆயுதத்தால் மன்னரை - நாயன்ாரை கொண்டு விட்டான், நாயனார் தனது உயிர் போகும நிலையிலும் தன்னை கொலை செய்த எதிரியான போலி சிவனடியாரை சிவ வேடம் அணிந்து திருநீறு பூசியுள்ள காரணத்தால் அவரை எந்த வித தொந்தரவு செய்யக் கூடாது என்றும் அவருக்கு சரியான பாதுகாப்பு வழங்கி அன்னரை ஊர் எல்லை வர பாதுகாப்புடன் வெளியேற ஆனையிட்டு சிவ அடையாளத்திற்காக உயிரையும் துறந்து எதிரிக்கு பாதுகாப்பு வழங்கி திருநீற்றுக்கு பெருமை சேர்த்தவர் மெய்பொருள் நாயினார்
வாரியார் சுவாமிகள் திறுநீறு பெருமை கூறியது
வாரியார் சுவாமிகள் ஒருசமயம் ஆன்மிக சொற்பொழிவிற்காக வெளியூர் சென்றுவிட்டு மீழ் பயணத்திற்காக ஒரு புகைவண்டி நிலையத்தில் இழைப்பாரிக் கொண்டு இருந்தபோது அவரை கடந்து சென்ற மாணவ செல்வங்கள் சிலர் அன்னாரை கேலி செய்யும் நோக்கில் சுவாமிகளை பார்த்து தாங்கள் ஏன் உடல் முழுவதும் வெள்ளையடித்துள்ளீர்கள் என கிண்டலாக கேட்க அதற்கு வாரியார் சுவாமிகள் சற்றும் கோபம் கொள்ளாமல் சிவன் இருக்கும் வீட்டிற்கு தானப்பா வெள்ளையடிக்க வேண்டும் கட்டை மண் சுவருக்கு யாரப்பா வெள்ளையடிப்பார்கள் என் உடலின் உள்ளே சிவன் இருக்கிறான் அவன் குடியிருக்கும் இந்த உடல் துாய்மை பெற வெள்ளையடித்துள்ளேன் என்று மாணவர்களுக்கு அன்புடனே உபதேசபாணியில் பதில் அளித்ததைக் கண்ட மாணவர்கள் வெக்கத்தால் கூனிகுறுகி உடனே தங்களின் தவறுக்கு மன்னிப்பு வேண்டிக் கொண்டதோடு அவரிடமே திருநீறும் பூசி சென்று அன்றுமுதல் அவர்களும் தினமும் திருநீறு பூசி மகிழ்ந்துள்ளனர்
உண்மை தருவது - இடர்களைவது நீறு
ஒருமுறை தண்டபாணி தேசிகர் என்ற சிவனாடியார் கேரள மாநிலத்தில் ஆன்மிக தளங்கள் சென்றுவரும் தருணத்தில் ஒருநாள் அந்தி மறையும் போது அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்லும் முகத்தான் கடல்நீர் பின்வாங்கும் காலங்கரை நீரை கடந்து கோவிலுக்கு செல்ல படகு மூலம் செல்ல சென்ற போது அந்நீர் பரப்பை கடக்க உள்ள நபர்களுடன் தானும் படகில் ஏறிவிட்டார், ஏறிபின்தான் தெரிந்தது படகு ஒட்டுபவர் சரியான நிதானத்தில் இல்லாது படகை ஏறுக்குமாறு செலுத்தி சென்றது கண்டனர், எல்லோரும் பதைபதைத்து கொண்டிருந்த நேரத்தில் மேலும் சோதனை ஏற்பட்டது, படகில் சிறு துவாரத்தின் வழியாக நீர் கசிந்து படகில் நீர் பெருகிக் கொண்டிருந்தது எல்லோரும் பதைபதைத்து முனகலோடு இருந்தனர், தண்டபானி தேசிகரும் இன்றும் சலகண்டம் தான் இன்று உயிர் பிழைப்பது மறுபிறப்புதான் என்று எண்ணி தான் செல்லவிருக்கும் முருகனை உள்ளமுறுக வேண்டினார் உடனே தனது மனத்தில் ஒரு அசிரீ வாக்குபோல் திருநீற்றுக்கோவில் நான் இருக்கிறேன் பயம் வேண்டாம் என்ற யாரே கூறவது போல் உணர்வு ஏற்பட்டது, உடனே படகில் அதன் விளைவாக யாரோ ஒருவர் படகோட்டியை படகை இவ்வாறு செலுத்து இப்படிப்போ, அப்படிப்போ என்று ஒருவர் அதட்டிக் கொண்டிருந்தார் படகோட்டியும் சரியான திசையில் படகை செலுத்திக் கொண்டிருந்தார் மற்றவர்களும் படகில் கசிந்த நீரை கோப்பைகளின் மூலம வாரி வெளியேற்றிக் கொண்டிருந்தனர் ஒருவழியாக படகும் கரையை சேர்நத்து எல்லோரும் கரை வந்ததற்கு நிம்மதி பெருமூச்சிட்டுவிட்டனர், தண்டபாணி தேசிகரும் கரைவந்தமைக்கு முருகனுககு நன்றி தெரிவிக்கும் முறையாக திருநீற்றை எடுத்து பூச நினைத்த போதுதான் அந்த அசிரீ வாக்கு திருநீற்று கோவில் தான் இருப்பதாக கூறியது நினைவு வந்தது, எனவே திருநீரே ஆண்டவன் குடியிருக்கும் கோவிலாக நம் துயர் துடைக்கும் ஆலயமாக பயன்பட்டது கண்டு பெருமை கொண்டார்,வழிக்கு துணையாக இடர்களையும் ஆயுதமாக திருநீறு விளங்குகிறது,
அருணகிரி நாதர் பெருமை சேர்த்தது
அருணகிரிநாதர் ஒருநாள் திருவண்ணாமலையில் பெருமானை தரிசிக்க சென்ற போது கோவில் மூலஸ்தானத்தில் சுவாமியை வணங்கிவிட்டு பிரசாதமாக திருநீறு பெறுவதற்காக சுற்றுமுற்றும் பார்த்தவுடன் ஒரு ஆச்சாரியார் திடீரென வந்து திருநீறுவழங்கி சென்றார் திருநீரை அணிந்து விட்டு ஆச்சாரியாருக்கு நன்றி சொல்லும் விதமாக சுற்று பார்த்தபோது தனக்கு பிரசாத திருநீறு வழங்கிய ஆச்சாரியார் அங்குஇல்லை பின் சன்னதியை விட்டு திரும்பும் தருணத்தில் எதிரே அந்த ஆச்சாரியார் வேகமாக வந்து கொண்டிருந்தார் அவரை கண்டவுடன் அருணகிரியார் அவருக்கு திருநீறு வழங்கியதற்கு நன்றியை கூறினார் ஆனால் உடனே அந்த ஆச்சாரியார் நான் இப்போதுதானே வருகிறேன், தங்களுக்கு திருநீறு வழங்குவதற்காகத்தானே விரைந்து வந்து கொண்டிருக்கிறேன் ஆனால் தாங்கள் திரும்பிவிட்டீர்கள் என்ற கூற்றை கேட்டவுடன் அருணகிரியாருக்கு ஒன்றும் புரியவில்லை அப்படியானால் தன்ககு திருநீறு வழங்கியது யார்? என் பொருட்டு அண்ணாமலையார் தான் வழங்கினாரா? என்ற ஆச்சிரியத்தோடு திரும்பினார், இதிலிருந்து அண்ணாமலையாரே அருணகிரியாருக்கு திருநீறு வழங்கப்பெற்று சிறப்பு பெற்றது இதனால் அருணகிரிநாதர் திருநீரை வைத்தே பாடல்கள் பாடி அண்ணாமலையாரை அழைத்து சிறப்பித்தார்
செல்வம் தருவது
திருநீறு அணிவதால் செல்வம் கிடைக்கும் ஒரு ஏழை நெசவாளிக்கு திருநீறு அணிவதன் பயனை எடுத்துரைக்கும் முகமாக வாரியார் சொற்பொழிவு மூலம் ஒரு அடைந்த நிகழ்வு மூலம் அறியலாம், கடினமான உழைப்பே பிரதானமாக கொண்ட ஒரு நெசவாளி திருநீறு அணிவதோ தெய்வபக்தியோ இல்லாதவருக்கு அவர் துணைவியார் ஆன்மீக நெறிகளிலும் திருநீறு அணிவதிலும் மிக விரும்பம் கொண்டவர் தன் கணவரே இதற்கு எதிர்மறையானவர் இதன் பொருட்டு அவரை சைவநெறியில் கொண்டுவர முயன்று விரக்தியடைந்த நேரத்தில் ஒரு சித்தி பெற்ற சிவனடியாரை கண்டு இதற்கு வழிவேண்டினார் அவரும் தனது கணவரை தான் திருநீரு அணியாவிட்டாலும் தினமும் ஒரு திருநீறு அணிந்த சிவபக்தரை கண்டபின்தான் உணவு என்று கூறி அதன்படி செய் என்று கூறனார் அந்த அம்மையாரும் தன் கணவனிடம் இவ்வாறே கூறனார் அவரும் இதற்கு சம்மதித்து தன் வீட்டுககு அருகாமையில் உள்ள ஒரு சிவ பக்தரை அடையாளம் கண்டு கொண்டார் அன்னார் தினமும் மூக்கு பொடிபோடும் பழக்கம் உள்ளவரும் அந்த பொடியும் இவரிடமே பெறும் தன்மையுடையவர் எனவே இவருக்கு தினமும் அவரை உணவு உண்ணும் முன்பாக மூக்குபொடி பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார் இதன்படி இவருடைய பழக்கவழக்கங்கள் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது ஒருநாள் அந்த திருநீறு அணிந்த சிவபக்தர் வெகு நேரம் ஆகியும் வரவில்லை இவருக்கோ பசி அதிகமாயிற்று உடனே தானே அவருடை வீட்டிற்கு அவரை தேடிச் சென்றார், அவர் தனது தோட்டத்தில் சிறிய வேலையாக தோட்டத்தில் ஒரு குழி தோண்டிக்கொண்டிருந்தார் அப்போது அக்குழியில் ஒரு புதையல் இருப்பதை கண்டு வியப்புற்று பயத்துடன் புதையலை எடுத்துக் கொண்டிருந்தவேளையில் இவர் சிவபக்தரின் திருநீறு அணிந்த நெற்றியை சற்று தொலைவிலேயே பார்த்தவுடன் பார்த்துவிட்டேன் பார்த்துவிட்டேன் என்று கத்திக்கொண்டே ஒட ஆரம்பித்தார், அவரே தான் கண்ட புதையலைத்தான் பார்த்து விட்டார் என எண்ணி பதைபதைத்துக் கொண்டு அவரை பின் தொடர்ந்து ஒடி ஐயா பார்ததது தான் பார்த்தீர்கள் தயவுசெய்து பார்த்ததை யாரிடமும் கூறவிடாதீர்கள் உங்களுக்கும் பார்த்த புதையலில் பாதி பங்கு தருகிறேன் என்றார், இந்தநெசவாளிக்கோ திருநீறு நெற்றியை தினமும் பார்த்ததற்கே பாதி புதையல் பரிசு கிடைத்துவிட்டதே என மிக மகிழ்ச்சி கொண்டார் பார்த்தர்கே செல்வம் என்றால் இந்த திருநீரை தினமும் அணிந்தால் இன்னும் செல்வம் கூடுமே என்று மகிழ்ந்து அன்றிலிருந்து தினமும் திருநீறு அணிய ஆரம்பித்தார்
திருமந்திரத்தில் திருநீற்றின் பெருமை
திருமூலர் தனது திருமந்திரத்தில் திருநீற்றின் பெமையை தனது மந்திரத்தில் கூறியது
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழவரேயாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வாரே
எலும்புகளை அணியும் இறைவன் பூசிக்கொள்வதும், உடலுக்கு கவசமாக விளங்கும் திருநீற்றை
சிறிதும் தடையில்லாது உடலில் பூசிமகிழ்ந்தால் தீவினைகள் நீங்கும் மோட்சம் இன்பம் அடைய
வழி உண்டாகும் இறைவனது அழகிய திருவடிகளை அடையலாம்
இந்த மருத்துவ குணங்கள் கொண்ட திருநீறை யாரும் ஆகம விதிப்படி தயார் செய்து பயன் பெறலாம்,
திருநீறு தயாரிக்கும் முறை
2 கிலோ சாம்பல் கிடைக்கும் அளவிற்கான பசுஞ்சாணம், பசுஞ்சாணம் கீழே விழாமல் எடுத்து வரட்டியாக்கி பஸ்பமாக்கி சாம்பலாக்கி கொண்டு சலித்து 2கிலோ எடுத்துக் கொள்ளவேண்டும் இவற்றுடன் பஸ்பமாக்கிய - படிகாரம் 10கிராம், குங்கிலியம் ,சங்குபஸ்பம்,
ஆமைஒடு, பவளம்,சிராபஸ்பம், கிரஞ்சி பஸ்பம், முத்துசிப்பி, நத்தை ஒடு, ( எல்லாம் பஸ்பமாக்கியது 10கிராம்) வீதம் கலந்து ஒன்றாக்கி பித்தளை தாமபளத்தில் பரப்பி ஒம் சிவசிவ ஒம் ஒதி மண் குடுவைகளில் சேித்து வைத்துக்கொள்ளலாம் ,ஆலயத்தில் சுவாமிக்கு அபிசேகத்திற்ககு கொடுத்து அபிசேகம் செய்தும் சேமித்து வைத்துக்கொள்ளவும், இவ்வாறு தயார் செய்த மந்திர விபூதி எல்லாவற்றிக்கு சிறநதது,
திருநீறு மருத்துவ குணமுடையது
திரு நீறை நெற்றியில் நீரில் குழைத்து பூசினால் கபாலத்திலுள்ள நீர் குறைந்து கபால நீரால் வரும் வியாதிகள் தீரும் என்பது இன்றளவிலும் கண்ட உண்மை, வாதநோய் உள்ளவர்களுக்கு உடலில் பூசி வாதநோய் குணமடைவதை காணலாம், திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு சூன்ம வயிற்று வலிக்கு அவரின் தமக்கையார் வயிற்றில் திருநீற்றை பூசி குணமடைந்த வரலாறு பெரியபுராணத்தில் காணலாம்
இவ்வாறு திருநீற்றின் பெருமையை புராண காலம் தொட்டு இன்றுவரை அதன் சிறப்பு பெருமைகளை இன்றளவும் காணலாம்
எனவே தோத்திரங்கள் ஓதி திருநீறு அணிந்து பெருவாழ்வு பெறுவோம்,
அன்புடன்
சிவ, வை, பூமாலை சுந்தரபாண்டியம்